27 May 2020

பொதிகை மலை


வடநாட்டிற்கு இமயமலை போன்றது தென்னகத்திற்கு பொதிகை மலை. இது மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும்.தாமிரபரணி தோன்றுவதும் பொதிகை மலையில் தான். அகத்தியர் வாழ்ந்ததும் இந்த மலையில் என்கின்றனர். அகத்தியர் மலை, மலையம்,தென்மலை, தொன்மலை, தமிழ்மலை, செம்மலை, சிவன்மலை என பல பெயர்களில் அறியப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிகரம் தொட்டபெட்டாவிற்கு அடுத்தது பொதிகைமலை. அகத்தியருக்கு முருகன் தமிழ் கற்றுக்கொடுத்த மலையும் இதுவே.
இந்த மலையின் ஒரு பகுதி திருநெல்வேலி மாவட்டத்தையும் மற்றொரு பகுதி கேரளா நாட்டையும் சேர்ந்தது. பாண்டிய சேரநாட்டின் எல்கையாகும்.
சித்திர மாதத்தில் மக்கள் இந்த மலையில் பயணம் ஏற்படுகின்றனர்.
பல வகை மூலிகைச்செடிகள்,தேக்கு, கோங்கு , வேங்கை போன்ற மரங்கள், யானை, புலி, கடுவன் , சிங்கவால் குரங்குகள் கரடி போன்ற மிருகங்கள் உண்டு.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6200 அடி உயரத்தில் உள்ள மலை இது.
பழங்குடி மக்களான குறவர்கள், காணிக்காரர்கள், பளியர்களும் இங்கு வாழ்கின்றனர்.
அதே போல் பல சித்தர்கள் வாழ்கின்றனர். கோயில்கள், கோட்டைகள் , அணைகள், நீர் வீழ்ச்சிகள் இங்கு உண்டு. பல நதிகள் இங்கிருந்தே உற்பத்தியாகிறது.
பொதிகை மலையில் ஓராண்டுக்கு 200 மைல் பரப்பளவில் 300 அங்குலம் மழை பெய்வதால் தான் திருநெல்வேலி, துத்துக்குடி பகுதிகள் எப்போதும் வளமையாக உள்ளது.
வருடம் ஒரு முறை, எங்கள் மாணவர்களுடன்; தாமிரபரணி நதிமேல் அக்கறை கொண்ட எழுத்தாளர், ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சியின் கவனத்தை உலக அளவில் திருப்பிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசர் வழி காட்டுதலில் பொதிகை மலையூடாக பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
Agasthiyar Falls, Tirunelveli.
பொதிகை மலை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ளது.
வருடம் முழுதும் விழும் நீர் வீழ்ச்சி அகத்தியர் அருவி இங்கு தான் உள்ளது.
இந்த இடத்தில் தான் அகத்திய முனிவருக்கு முருகன் தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார். இங்கு அகத்தியர் மற்றும் முருகபெருமானின்கோயிலும் உண்டு.
இந்த மலையை பற்றி வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட்டுள்ளது.
இந்த மலை பாண்டிய நாட்டின் மேற்கு எல்லையாகவும் சேரநாட்டின் கிழக்கு எல்லையாகவும் இருந்துள்ளது.
பொதிக மலையை செம்மலை என்று அழைக்கின்றனர். இந்த மலையில் தோன்றும் தாமிரபரணி ஆறு செவ்வாறு என்றும் அழைக்கின்றனர்.

பாண்டியன் கோட்டை- பாபநாசத்தில் உள்ளது மேலணை. இந்த அணை கட்டும் முன் இருந்த நீலகண்டகசத்தை பற்றிய சுவாரசியமான ஆனால் சோகமான ஒரு கதை உண்டு.
பாண்டிய மன்னர் ஒருவர் எதிரிகளிடம் இருந்து தப்பித்து போய் இங்கு கோட்டை அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். அவரின் மந்திரி தான் நீலகண்டன். எதிரிகள் உங்களை சுற்றி கொண்டுள்ளார்கள் என்றுள்ளான் மந்திரி. மன்னர் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க தானே தன் தலையை கொய்து தன் உயிரை மாய்த்து கொண்டாராம். மன்னருக்கு கொடுத்த தகவல் தவறு என பின்னீடு புரிந்து கொண்ட மந்திரி இந்த கசத்தில் விழுந்து உயிர் விட்டுள்ளார். அதனால் இந்த கசத்தை நீலகண்ட கசம் என அழைக்கின்றனர்.

ஒரு சமூகத்தின், இயற்கையின் பாதுகாப்பு இளைஞர்களிடம் எட்டவைப்பதே கல்வியாளர்களின் கடமை.

கிளாடீஸ் ட்யூஷன் டீச்சர் வீடு!

கிளாடீஸ் ட்யூஷன் டீச்சர் வீடு!
நேற்றைய பொழுதுகளை பலதும் மறந்திருப்பேன், இருந்தாலும் நான்கு வயது ட்யூஷன் வகுப்பு நினைவுகள் பலதும் அழியாதே என்னிடம் உண்டு.
அப்படியான பல நினைவுகளை தருவது தான் இந்த தெருவு குடிநீர் பைப்பும், அதன் பின் இருக்கும் கிளாடிஸ் டீச்சர் வீடும்.
மெலிந்து உயரமான எப்போதும் இருமிக்கொண்டிருக்கும் டீச்சருடைய கணவர், ஷேர்லிச் சேச்சி, ஷிபு அண்ணா, ஜெய்ம்ஸ் சார் , உயரமான அழகான எப்போதும் சிரித்த முகத்துடனுள்ள மேரி டீச்சர், துணி தைத்து கொண்டிருக்கும், குடை பிடித்து நடக்கும் டீச்சரின் தங்கை, அந்த வீட்டில் ஒரு வாகன விபத்தை தொடர்ந்து நெடு நாளாக படுக்கையில் கிடந்த தங்கச்சன் சேட்டன் , சட்டையும் முண்டும் அணிந்து கோழிகளை பராமரிக்கும் இவர்களுடைய அம்மா , வல்யம்மச்சி( பாட்டி).
எங்க ஊரில் அப்போதிருந்த ஒரே ஒரு ட்யூஷன் பள்ளி இது தான். சொல்லப்போனால் எங்கள் பள்ளியை விட கட்டுக்கோப்பாக வகுப்புகள் நடந்தது இங்கு தான். நான் என் வீட்டில் இருந்ததை விட இந்த வீட்டில் வளர்ந்ததுதான் நிறைய பொழுதுகள்.
மேக்கப் போட்டு, அழகான உடுப்புகள் உடுப்பித்து, கல் ஸ்லேட்டும்( பலகையும்), குச்சியுடன் காலை 10 மணிக்குள்ளாக கடையிலுள்ள உதவியாளர் பையன்களுடன் அனுப்பி விடுவார்கள்.
காலை தமிழ் படிக்க வேண்டும், மதியம் முதல் மாலை வரை மலையாளம். மாலை என்னை அழைத்து போக பையன்கள் வருவார்கள். அதற்குள் மதியமே நான், டீச்சர் தலை தப்பி வீடு வந்து சேர்ந்திடுவேன்.
வீட்டு கதவு அரைக்கதவு. அந்த கதவை திறக்கும் உயரவுமில்லை , வலுவுமில்லை.
அம்மா என்னை கண்டதும் எப்படி வந்தாய் , ஏன் தனியாய் வந்தாய்,என திட்ட ஆரம்பிப்பார்கள்.
கதவை திறக்காதே.... கடை பசங்களிடம் இவளை வகுப்பில் கொண்டு விடு என்று கட்டளை பிறக்கும்.
நானும் போக விருப்பமில்லை, தூக்கம் வருது,வயிற்று வலி என்ற சகல வித்தைகளையும் துணைக்கு அழைத்து போராடினாலும் அம்மாவின் மனம் இறங்காது.
சோம்பேரி, பொய் பேசாதே, வீட்டில் இருந்து என்ன செய்ய போறாய், இந்த சின்னப் பிள்ளைகளுடன் வம்பு சண்டை பிடிக்க தானே? போய் படி என்பார்.
கண்ணீர் மாலை மாலையாக விழும். கடைசி ஆயுதத்தை எடுப்பேன். 'போண்டா' வாங்கி தந்தால் பள்ளிக்கு போறேன்.
உடனே போண்டாய் வாங்கி தந்து , கையில் மிட்டாயும் சொருகி அனுப்பி விடுவார்கள்.
நாலு மணி எப்போது வரும் என காத்திருப்பேன். வீடு போய் சேர.
என் வீட்டில் பொறுப்பான மூத்த பிள்ளை,ட்யூஷன் வீட்டில் தான் நான் செல்லப்பிள்ளை !. டீச்சர் வீட்டில் உப்பிலிட்ட நெல்லிக்காய், மாங்காய் தின்ற ஞாபகம் உண்டு.
ஒருக்கா மாங்காய் பங்கு தருகையில் எனக்கு குறைத்து தந்தார்கள் என்று கையிலிருந்த ஸ்லேட்டை வைத்து அடுத்தவன் மண்டையில் ஒரு அடி. ஏன் அடித்தாய்? என விசாரித்து தண்டனையாக கூட்டத்தில் இருந்து தனித்து இருத்தி வைக்கப்பட்டேன். அங்கிருந்து அழுததும் நினைவிலுள்ளது.
தமிழ் குட்டி என்பதால் சத்ததில் தான் சண்டை இடுவதும் ஏன் கதைப்பதும் கூட. உள் அறையில் இருந்து தங்கச்சன் சேட்டன் என் பெயரை அழைத்தும் கப்- சிப் ஆகிடுவது வழமை.....
இந்த படி வழியே ஏறிச் சென்றால் என் துவக்கப் பள்ளியை அடைந்து விடலாம்.
இப்போதும்; அன்றைய என் நண்பர்கள் சபீர் ,
Abbas Abbas
, ராஜன், பஃமீஜா, பிந்து, லதா, ஜெயா நினைவிற்கு வருகின்றனர்.
ഗ്ലാഡിസ് ട്യൂഷൻ ടീച്ചർ വീട് !
ഞാൻ ഇന്നലെത്തെ കാര്യം പലതു മറക്കും, പക്ഷേ നാല് വയസുള്ളപ്പോലുള്ള ട്യൂഷൻ ക്ലാസിന്റെ നിരവധി ഓർമ്മകളുണ്ട് എനിക്ക്.
തെരുവ് കുടിവെള്ള പൈപ്പും പിന് ഭാഗത്തുള്ള ഗ്ലാഡിസ് ടീച്ചറുടെ വീടും ആണ്.
മെലിഞ്ഞതും എപ്പോഴും ചുമക്കുന്നതുമായ ടീച്ചറുടെ ഭർത്താവ്, ഷേർളി ചേച്ചി , ഷിബു ചേട്ടൻ , ജെയിംസ് സർ, ഉയരവും സുന്ദരവുമായ പുഞ്ചിരിക്കുന്ന മുഖംമുള്ള മേരി ടീച്ചർ, വസ്ത്രം തുന്നുന്ന , കുടയുമായി നടക്കുന്ന ടീച്ചറുടെ സഹോദരി, വീട്ടിൽ ഒരു വാഹനാപകടത്തെ തുടർന്ന് കിടക്കയിൽ കിടക്കുന്നു തങ്കച്ചൻ ചേട്ടൻ, കോഴികളെ വളർത്തുന്ന ആ വീട്ടിലെ , അമ്മ, വാല്യമ്മച്ചി (മുത്തശ്ശി).
ഞങ്ങളുടെ പട്ടണത്തിലെ ഏക ട്യൂഷൻ സ്കൂൾ ഇതാണ്. വാസ്തവത്തിൽ, ഞങ്ങളുടെ സ്കൂളിനേക്കാൾ കൂടുതൽ അച്ചടക്കമുള്ള ക്ലാസുകൾ ഇവിടെയുണ്ടായിരുന്നു . എന്റെ വീട്ടിലേക്കാൾ കൂടുതൽ സമയം ഞാൻ ഈ വീട്ടിൽ വളർന്നു.
ഒരുങ്ങി കെട്ടി , മനോഹരമായ വസ്ത്രം ധരിച്ചു , കല്ല് സ്ലേറ്റ് (ബോർഡ്) എം കല്ല് പെന്സിലുമായ് കടയിലെ ജോലിക്കാരായ ചേട്ടന്മാരോടൊത്തു രാവിലെ 10 ന് മുൻപേ ക്ലാസിൽ എത്തും .
രാവിലെ തമിഴ്, ഉച്ച മുതൽ വൈകുന്നേരം വരെ മലയാളം പഠിക്കുകയായിരുന്നു പതിവ് . കടയിലെ ജോലിക്കാരായ ചേട്ടൻ വൈകുന്നേരം എന്നെ വിളിച്ചു കൊണ്ടു പോകാൻ വരും. ഉച്ചകഴിഞ്ഞ് ഞാൻ ടീച്ചറുടെ കണ്ണും വെട്ടിച്ചു വീട്ടിലെത്തും.
വീട്ടു വാതിൽ അരക്കതവ് ആണ് . ആ വാതിൽ തുറകാനുള്ള ഉയരമോ ശേഷിയോ ഇല്ലാ. അമ്മ എന്നെ കാണുപ്പോൾ തന്നെ , നീ എങ്ങനെ വന്നു, എന്തിനാണ് ഒറ്റയ്ക്ക് വന്നത്, ഇന്നിങ്ക്നേ വഴക്കു പറയാൻ തുടങ്ങും, വാതിൽ തുറക്കാതെ തന്നേ കട ചേട്ടൻമാറോടു 'ഇവളെ കൊണ്ടു വിടൂ' എന്ന് ആവശ്യയപ്പടും.
ഞാൻ പോകില്ലാ, ഉറക്കാം വരുന്നു, വയറു വേദന എന്ന പല പല നുണ കഥകളുടെ അകമ്പടിയാണ് പിന്നീട് . പക്ഷേ അമ്മ സമ്മതിക്കില്ലാ.
മടിച്ചി, നുണ പറയരുത്, നീ വീട്ടിൽ നിന്ന് എന്തുചെയ്യും?
കണ്ണുനീർ ധാര ധാരയായി വീഴുന്നു. ഞാൻ അവസാന ആയുധം എടുക്കും. നിങ്ങൾ 'പോണ്ട' വാങ്ങി തരുമെങ്കിൽ , സ്കൂളിൽ പോകാം .
ഉടൻ പോണ്ടാ വാങ്കി തന്നു, മിഠായി കൈയിൽ വച്ച് അയക്കും.
.
ഞാൻ പിന്നീട് ആ നാല് മണികായ് കാത്തിരിപ്പാണ് . വീട്ടിൽ ചുമതലയുള്ള മൂത്ത കുട്ടി, ഞാൻ ട്യൂഷൻ സ്‌കൂളിൽ ഇഷ്ട മകളാണ്
ട്യൂഷൻ വീട്ടിൽ ഉപ്പിട്ട നെല്ലിക്കയും മാങ്ങയും ടീച്ചരിൽ നിന്ന് വാങ്ങിച്ചു കഴിച്ചത് ഓർമ്മിക്കുന്നു.
ഒരിക്കേ എനിക്ക് ഉപ്പിലിട്ട മാങ്ങ തരാൻ കളിപ്പിച്ചതിനാൽ സ്ലേറ്റ്ട്ടു കൊണ്ട് ഒറ്റ അടി. . നീ എന്തിനാണ് അടിച്ചത്? എന്ന് ചോദിച്ചു ശിക്ഷയായി എന്നെ കൂട്ടത്തിൽ നിന്ന് മാറ്റി നിർത്തി. അവിടെ നിന്ന് കരഞ്ഞതും ഞാൻ ഓർക്കുന്നു.
ശബ്ദത്തിൽ സംസാരിക്കുകയും വഴക്കു കൂടുകയും ചെയ്യുന്നതിന് . അകത്തെ മുറിയിൽ നിന്ന് തങ്കച്ചൻ ചേട്ടൻ എന്റെ പേര് വിളിക്കുന്നതും
പിന്നെ പേടിച്ചു മിണ്ടാതിരിക്കും.
ഈ പടികളിലൂടെ കയറി ചെന്നാൽ എന്റെ പ്രാഥമിക വിദ്യാലയത്തിൽ എത്താൻ കഴിയും.ഇപ്പോൾ; അന്നത്തെ എന്റെ സുഹൃത്തുക്കൾ സഫീർ, അബ്ബാസ് അബ്ബാസ്, രാജൻ, ഫാമിജ, ബിന്ദു, ലത, ജയ എന്നിവരെ ഓർക്കുകയാണ്. .

ஜார் அரச குடும்பம்

If I die or you desert me, you will lose your son and your crown within six months.- Rasputin.
ரஷியாவிற்கு சைபீரியாவில் இருந்து ரஸ்புடின் வராதிருந்தால் மன்னரின் மகனுக்கு ஹீமோபீலியா என்ற நோய் இல்லாதிருந்தால் 300 வருட ஜார் மன்னரை போல்ஷிவிக் படைகள் கொன்றிருக்க இயலுமா? முதல் கம்யூனிஸ்ட் தேசமாக மாறியிருக்கத் தான் செய்யுமா?
ஜார் அரச குடும்ப கொலையில் லெனினுடைய நேரடி தொடர்பு கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் குடும்பத்துடன் கொல்ல அனுமதித்திருக்க மாட்டார் என்ற ஊகவும் உண்டு‌ இருந்தாலும் லெனின் பற்றிய ரஷிய அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு அவர் பயங்கரவாதத்தை பயண்படுத்தினவர் , பொய் சொல்ல மிகவும் திறமையானவர், பெரும்பான்மை மனநிலையை உருவாக்க தெரிந்தவர், அவருக்கான ஒரு நன்றியுள்ள குழுவை கட்டமைக்க தெரிந்திருந்தார்.
உண்மையில் ரஷியாவில் ஒரு மக்கள் போர் ( civil war) மூண்டதை விரும்பாதவர். ஒரு கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் அதன் மூலம் ஒரு அச்சத்தை ராஜ பரம்பரைக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டுமே ஸ்டாலினுக்கு இருந்தது.
எதற்கு கிளர்ச்சியை ஏற்படுத்த
வேண்டும்? 300 வருஜார் ராஜ குடும்பத்திற்கும் அவருக்குமான பகை தான் என்ன?
தற்போதைய ஜார் மன்னரின் தாத்தாவின் கொலை வழக்கில் கைதாகி 1881 ல் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட Ulyanove குடும்பத்தை சேர்ந்த லெனினுடைய சகோதரன் அலெக்ஸ்சாண்டரில் இருந்து வர வேண்டும் வரலாறு.
ஜார் மன்னர் இறந்ததும் அவர் மகன் நிக்காளோஸ் III பதவிக்கு வந்தார். தனது 49 வது வயதில் சிறுநீரகப் பிரச்சினையால் இறந்து விட்டார். அடுத்து தந்தை வழி பதவி நிக்கோளஸ் II க்கு கிடைக்கிறது. அவர் அரசியல் அறிவில் பூஜ்ஜியமாக இருந்துள்ளார். ஜப்பானிடம் தோல்வியுற்றது மக்களின் நம்பிக்கையை இழக்க காரணமாகிறது.
நாலு மகள்கள் இருக்க ஐந்தாவதாக பிறந்த மகன் அலெக்ஸி ஹீமோபீலியா என்ற நோயுடன் மல்லிடுகிறார். இந்த காலயளவில் தான் ரஸ்புடின் அரண்மனை குடும்பத்திற்கு அறிமுகம் ஆகிறார். எப்படி என்று தெரியாது சிறுவனை குணப்படுத்தினார் அதுவே உண்மை.
தாயாரான மகாராணிக்கு மகன் சுகம் பெற்றதால் ரஸ்புடின் மேல் அளவு கடந்த மரியாதை அன்பு வருகிறது. இது மற்றைய ராஜகுடும்ப உறுப்பினர்களுக்கு கண்டபடி பேச வழிவைக்கிறது.
ஒரு கட்டத்தில் ராணிக்கும் மாந்திரீக சாமியாருக்கும் உறவு என்ற பரப்புதல் ராஜகுடும்பம் மேல் மக்களுக்கு இருந்த மரியாதையை இழக்க செய்கிறது. ( இந்தியாவில் நேரு குடும்பத்தை குறிப்பிட்ட அரசியல் கட்சி அவமதிப்பது அவதூறு பரப்புவது போல).
சாமியார் ஜெர்மனி தரகர் என்பது வர செய்திகள் பரவுகிறது. 1916 ல் சாமியார் அரச குடும்ப ஆட்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்.
மக்கள் புரட்சியில் ஆளும் தற்காலிக அதிகார அரசும் மன்னரும் ஒரு பக்கம், படையும் மக்களும் எதிர்பக்கம்.
வெளிநாட்டு பயணத்தில் இருந்த ஸ்டாலின் ஓடோடி வருகிறார்.
மன்னர் குடும்பத்தை பாதுகாப்பதாக கூறியே ஆறு மாதங்களுக்கு மேலாக மாஸ்கோவில் இருந்து பல மைல்கள் பயணிக்க வைத்து பல வீடுகளிலாக தங்க வைக்கின்றனர்.
கடைசி நாள் 1917 வருகிறது. உங்களுக்கு பாதுகாப்பு என்று கூறி, மேல் மாடியில் இருந்தும் கீழ் மாடிக்கு வர வைத்து வரிசையாக நிற்க வைத்து சுட்டு கொல்கின்றனர்.
மன்னரின் உறவினர்கள் இங்கிலாந்து , ஜெர்மெனி ராஜகுடும்பத்தில் இருந்தனர்.
பல வருடங்கள் அவர் கொல்லப்பட்டதையே பலரும் நம்பவில்லை . பின்பு அவர்கள் உடலை புதைத்திருந்த சுரங்கத்தில் இருந்து எடுத்து மரியாதையாக புதைக்கின்றனர். அதிலும் மன்னரின் மகன், மரியா என்ற மகளுடைய உடல் கிடைத்ததாக தகவல்கள் இல்லை.
அப்படியாக ஒரு conspiracy theory இந்த ஆட்சி மாற்றத்தில் பெரிதும் பங்கு பெற்றது. இத்துடன் 300 வருட ஜார் மன்னராட்சி முடிவிற்கு வந்தது. உலகின் முதல் கம்யூனிஸ்ட் தேசம் உருவாகிறது.
1917 ல் ஆட்சியை பிடித்த ஸ்டாலினும் 1924 ல் நோய்வாய்பட்டு இறந்து விட்டார். அடுத்து தான் கொடும் கோலன் ஜோசப் ஸ்டாலின் ஆட்சி மலருகிறது.
இந்த நூற்றாண்டில் மக்கள் உயிரை பறித்த, பல மில்லியன் மரணங்களுக்கு காரணமான மாவோ, ஹிட்லர், ஜோசஃப் ஸ்டாலின் பற்றி பின்னொரு பதிவில் காண்போம்.

ஆண்- பெண் குடிகாரர்கள்

கொரோனா காலத்தில் மக்களுக்கு அரிசி கிடைக்கிறதா இல்லையா என்பதை விட டாஸ்மாக் திறப்பார்களா இல்லையா என்பதை உற்று நோக்கி கொண்டிருந்தனர்.
டாஸ்மாக்கை அடைக்க வேண்டும் என்பது குடிகாரர்கள் செத்து போய் விடக்கூடாது என்பதை விட கொரோனா இடரில் அரசை முடக்கும் ஒரு வார்த்தையாகவும் முன்வைக்கப்பட்டது. ஒரு நாள் வியாபாரம் 180 கோடி என்பது அதன் மார்க்கட் நிலையும் கண்டு உணர்ந்தோம்.
குழந்தைகள் பிறந்த நாள் துவங்கி கல்யாணம், தேர்வில் வெற்றி , வேலை உயர்வு என எல்லா நிகழச்சிகளிலும்
மதுவும் விருந்தாக ஊற்றப்படுகிறது .
இதன் பயண்பாடு என்பதை உடல் பராமரிப்பு, ஆரோக்கியம், மனிதனின் தோற்றப் பொலிவையும் முன்நிறுத்தி விழிப்புணர்வு கொடுத்தால் இளம் தலைமுறையாவது தப்பிக்கும்.
இன்றைய தினம் , 10 ஆம் வகுப்பு மாணவன் துவங்கி பல்லு போன கிழவன் வரை குடிக்கிறார்கள் என்பதே உண்மை.
மதமோ,கலையோ, கலாச்சாரமோ, கல்வியோ எதுவும் கட்டுப்படுத்த இயலா வண்ணம் மது பழக்கம் பெருகி விட்டது.
மதுபானங்களால் என்ன தீமை என்னவென்று தெரியாதவர்களா? குடிக்கிறார்கள் அதுவுமில்லை.
மதுவால் உடல் நீர் சத்து குறைந்து
கிட்னி,
லிவர்,
ஈரல்,
பான்கிரியாஸ்,
நரம்பு மண்டலம்,
செமிப்பு தன்மை
உடல் இயக்கம்,
உளவியல்
என எல்லா வகையிலும் பாதிக்கப்படுவார்கள். மேலும் உடலுக்கும் மூளைக்குமான தொடர்பாடல் தடை , பல வகை கேன்சருக்கு காரணம் என தெரிந்தே குடிக்கிறார்கள்.
மதுக்கடையை மூடுவது சாத்தியமா என்றால்; மது தயாரிப்பில் தரம் பேணுக , விற்பதில் ஐரோப்பிய நாடுகளில் என்பது போன்று வயது நோக்கி கொடுக்குக, அளவை குறைத்து, விலையை கூட்டுதல் மட்டுமே சாத்தியம்.
இன்று குடிப்பது என்பது கர்வத்தின், பணக்காரத்தனத்தின், சமூக அங்கீகாரத்தின் , நாகரிகத்தின், பாகமாக விளம்பரம் ஊடாக இளம் தலைமுறை தலையிலும் புகுத்தியுள்ளார்கள்.
இளம் தலைமுறைக்கு புரிதல் தருவது மட்டுமே தீர்வாகலாம்.
அவ்வகையில் அதன் அளவு சார்ந்து தெரிவிப்பது காலத்தின் அவசியமாகும்.
ஒரு ஆணின் ஒரு நாளைய குடி அளவாக " 1 ட்ரிங்( 1 drink) என்கிறார்கள்.
ஒரு ட்ரிங்
12 அவுன்ஸ் பீர்
5 அவுன்ஸ் வைன்
ஒன்றரை அவுன்ஸ் ஸ்பிரிட்( விஸ்கி, ஜின்)
ஒரு அவுன்ஸ் என்பது 14 மில்லி.
இன்றைய ஆண்கள் ஒரு நேரம் குறைந்தது 500 மிலி குடிப்பதாக அறிகிறோம். 21 மி.லிக்கும் 500 மி.லி க்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் போன்றதே.
குடியின் காரணமாக ஏதேதோ சொல்கிறார்கள். மனச்சோர்வாம், கெத்தாம், சமூக நிர்பந்தமாம், பலர் ஐரோப்பியா நாட்டை பின்பற்றுவதாக சொல்கிறார்கள். ஐரோப்பியா காலநிலை தான் என்ன? -மைனஸ் () டிகிரிக்கு மேல் இங்கு + 35 டிகிரிக்கு மேல்.
குடியை குடிகார்கள் தானாக நிறுத்த வேண்டும். கொரோனா நேரம் மிகவும் சிக்கலான நேரம் குடிகாரர்களை விடுத்து வாழ வேண்டிய குழந்தைகள், ஏழை தொழிலாளர்களை நினைத்து உதவுவோம்.


ஆண்கள் குடியை பற்றி எழுதிவிட்டு பெண்கள் குடியை பற்றி எழுதாவிடில் சமத்துவம் இல்லை என்றாகி விடும்.
பெண்கள் குடியை ஒழுக்க, நெறிகளுடன் பலர் பார்த்து தடுக்க பார்க்கையில் விற்பனையாளர்கள் கவரவத்தின், பெண் ஆளுமையின் , சுதந்திரத்தின்,ஆண் சமத்துவத்தின், துணிவின் தன்னம்பிக்கையின், அடையாளமாக பார்க்கிறோம் என க்கூறி மோமி டைம்ஔட், மாட் ஹவுஸ் வைஃப் போன்ற செல்ல பெயருகளில் லேபல் செய்து சந்தைப்படுத்துதலை பெருக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
18 வயதிற்கு கீழ் உள்ள பெண் பிள்ளைகள் குடிக்கும் படி இனிப்பு பீர், சிவப்பு வைன் போன்றவை சின்ன சின்ன பெட்டிக்கடையில் கூட வாங்கும் படி வசதி செய்து கொடுத்துள்ளனர்.
அதிக அளவு குடியால் ஆண்களுக்கு என்னன்ன பிரச்சினை வருமோ, அதே பிரச்சினைகள் ஒரு படி மேலே பெண்களை பாதிக்கும். காரணம் ஆண்களை விட தண்ணீர் சத்து குறைந்தது பெண்கள் உடல்வாகு. அதனால் குடிக்குகையில் ஆண்களை விட உடல் நீர் சத்து குறைந்து இருப்பதால் கறக்கம் மயக்கம் என பாதிப்பு அதிமாகவே பாதிக்கும் .
ஒவ்வொரு 96 நிமிடத்திற்கு ஒராள் குடியால் சாகிறதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தலைநகரம் தில்லியில் மட்டும் 15 லட்சம் பெண் குடிகாரிகள் உண்டாம். இதில் பெருவாரி பெண்கள் ஒரே நேரம் 5 டிரிங்ஸ் எடுப்பவர்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதில் 5000 வழக்கு பதிவாயுள்ளது.
20 சதவீதம் பெண்கள் சமூக நிர்பந்தம், 44 சதவீதம் தங்கள் விருப்பத்தால், 42 சதவீதம் தொழில் நிமித்தமாக,53 சதவீதம் தங்கள் உணர்வு தேவையால் எனக்கூறுகிறது சர்வே.
ஆக மொத்தம் தேசத்தில் 57 சதவீதம் ஆண் குடிகாரர்கள் ஒன்றால் 28 சதவீதம் பெண் குடிகாரிகள்.
குடியில் குடிக்கும் அளவு தான் பிரதானம். ஒரு நாள் ஒரு டிரிங்க் அதுவே கணக்கு எனக்கூறுகிறது ஆரோக்கிய த்துறை.
பெண்கள் குடிப்பதால் ஆண்களை போன்றே கேன்சர்,லிவர், கிட்னி , மூளை பாதிப்பபிற்கு ஆளாகுவார்கள்.
அதையும் கடந்து
குழந்தைகளை போன்று பாலியலாக துன்புறுத்தும் சூழலில் எதிர்க்க வலுவற்று போக வாய்ப்பு.
பெண்கள் மூளை ஆண்கள் மூளையை விட சென்சிட்டிவ் என்பதால் பாதிப்பும் அதிகம்.
பெண்கள் குடியையும் நோயாக கணக்கிலெடுத்து உளவியல் சிகித்சைக்கு, கவுன்சிலிங் கொடுக்க வேண்டியதும் அவசியம்.
கலாச்சாரம் நெறியோடு இணைத்து பார்ப்பது அறிவீனம்.
இதை உடல் ஆரோக்கியத்துடன் இணைத்து பார்ப்பதே அவசியம்..