28 Apr 2019

சலூன்

க. வீரபாண்டியன் எழுதிய, யாவரும் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தின் ஊடாக டிசம்பர் 2018 ல் வெளிவந்த புத்தகமாகும் " சலூன்".
ஆனந்த் என்ற அரசு அதிகாரி வேலை விடையமாக விமானத்தில் காதரின் என்ற தோழியுடன் பயணிப்பதில் இருந்து துவங்குகிறது கதையாடல்.
கதையாளர் தான் சந்தித்த, சொந்த ஊர் சலூன்க்கடைக்காரர்கள் மட்டுமல்ல பயணத்தில் சந்தித்து பழகிய வட இந்திய முடிதிருத்துதவர்களைப் பற்றியும் சொல்லியுள்ளார்.
சலூன்காரர்களின் வரலாற்று கதைகள், ஜாதி அடிப்படையில் அவர்கள் எதிர் கொண்ட கீழ்மையான பார்வை, சலூன்காரர்களின் வரலாற்று பூர்வமான திறமைகள், அவர்களுக்குள் நடந்த தொழில் போட்டிகள், முத்தைய்யா தாத்தாவின் மரணம், நவீனகாலத்தில் மனிதர்கள் தங்கள் அலங்கார தேவைக்கேற்ப, சலூன் கடைகளை தவிர்த்து கார்ப்பரேட்டுகளின் பியூட்டி பார்லர்கள் நாடும் கால மாற்றம் என சுவாரசியமாக எழுதியுள்ளார்.
மரியாதக்குறிய மருத்துவ தொழில் சார்ந்து இயங்கிய ஒரு இனம், முடி திருத்தும் நிலைக்கு தள்ளிவிடப்பட்ட சமூக அரசியல், பற்றி எழுதப்பட்டதே இக்கதை.
புத்தகம் பற்றிய விமர்சனம்:
ஒரு இனத்தின் தோல்வியை அல்லது விளிம்பு நிலை வாழ்க்கையை பற்றி குறிப்பிடும் போது அந்த பிரச்சினைக்கான தீர்வையும் தேடித்தருவது எழுத்தாளரின் கடமையாக மாறுகிறது. தன்னை சூழலுக்கு ஏற்ப மாற்றி எப்படி வலுப்படுத்தி கொள்வது என்ற வழியையும் விளக்கியிருக்க வேண்டும்.
சமூக வளர்ச்சிக்கு; எதிர்மறையான கருத்து புரட்சி கோஷங்களை விட ஆக்கபூர்வமான நம்பிக்கை ஊட்டும் நேர்மறையான கருத்துக்களே சமூக வளர்ச்சிக்கும் சுமூகமான மனித உறவிற்கும் உதவும் .
உயிரும் சதையுமான விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வு போராட்டத்திலூடாக வாசகர்களையும் அழைத்து சென்றுள்ளார் என்பது எழுத்தாளரின் சிறப்பாகும்
சக இனக்குழுக்களின், பல சடங்குகளில் பார்பர்களுடைய இடம் இன்றிமையாததது. அதையும் விளக்கியிருக்கலாம்.
அச்சமூகத்தில் இருந்து படித்து வெளியேறி, இன்று உலகநாடுகளின் திட்டங்களில் வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ள கதை சொல்லும் கதாப்பாத்திரம், புரக்கணிக்க மக்களுக்காக என்ன செய்தார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?
அண்ணா என்று அழைத்தேன், சாப்பாடு வாங்கி கொடுத்தேன், உடனிருந்து உண்டேன் என தன் தாராள மனதை வெளிப்படுத்தும் ஆனந்த என்ற கதாப்பாத்திரம் இந்த இனத்தின் வரும்தலைமுறைக்காக அவர்கள் முன்னேற்றத்திற்காக. என்னன்ன திட்டங்கள் உள்ளது செயல்வடிவத்தில்? என்ற கேள்வி வாசகர் மனதில் எழுவதையும் மறுக்கல் ஆகாது.

இரக்கம் கொள்வது மட்டுமே சிறந்த மானிடமா? என சிந்திக்க வைத்தது இப்புத்தகம்.
முடி திருத்துகிறவர்கள் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் அல்ல, பணவசதியற்ற வேறு இனமக்களும் பார்பர் பணியில் உள்ளனர் என அறிகின்றோம் . அவ்வகையில் இது இன/ஜாதிப்பிரச்சினை மட்டுமல்ல வருமானம் சார்ந்த வாழ்க்கை பிரச்சினையும் கூட.
புத்தகம் அனுப்பி வாசிக்க பாசத்துடன் கட்டளையிட்ட பாசமிகு அப்பா N. Rathna vel https://www.facebook.com/n.rathna.vel நன்றி மகிழ்ச்சிகள்.