Showing posts with label வாழ்கை. Show all posts
Showing posts with label வாழ்கை. Show all posts

27 May 2020

கிளாடீஸ் ட்யூஷன் டீச்சர் வீடு!

கிளாடீஸ் ட்யூஷன் டீச்சர் வீடு!
நேற்றைய பொழுதுகளை பலதும் மறந்திருப்பேன், இருந்தாலும் நான்கு வயது ட்யூஷன் வகுப்பு நினைவுகள் பலதும் அழியாதே என்னிடம் உண்டு.
அப்படியான பல நினைவுகளை தருவது தான் இந்த தெருவு குடிநீர் பைப்பும், அதன் பின் இருக்கும் கிளாடிஸ் டீச்சர் வீடும்.
மெலிந்து உயரமான எப்போதும் இருமிக்கொண்டிருக்கும் டீச்சருடைய கணவர், ஷேர்லிச் சேச்சி, ஷிபு அண்ணா, ஜெய்ம்ஸ் சார் , உயரமான அழகான எப்போதும் சிரித்த முகத்துடனுள்ள மேரி டீச்சர், துணி தைத்து கொண்டிருக்கும், குடை பிடித்து நடக்கும் டீச்சரின் தங்கை, அந்த வீட்டில் ஒரு வாகன விபத்தை தொடர்ந்து நெடு நாளாக படுக்கையில் கிடந்த தங்கச்சன் சேட்டன் , சட்டையும் முண்டும் அணிந்து கோழிகளை பராமரிக்கும் இவர்களுடைய அம்மா , வல்யம்மச்சி( பாட்டி).
எங்க ஊரில் அப்போதிருந்த ஒரே ஒரு ட்யூஷன் பள்ளி இது தான். சொல்லப்போனால் எங்கள் பள்ளியை விட கட்டுக்கோப்பாக வகுப்புகள் நடந்தது இங்கு தான். நான் என் வீட்டில் இருந்ததை விட இந்த வீட்டில் வளர்ந்ததுதான் நிறைய பொழுதுகள்.
மேக்கப் போட்டு, அழகான உடுப்புகள் உடுப்பித்து, கல் ஸ்லேட்டும்( பலகையும்), குச்சியுடன் காலை 10 மணிக்குள்ளாக கடையிலுள்ள உதவியாளர் பையன்களுடன் அனுப்பி விடுவார்கள்.
காலை தமிழ் படிக்க வேண்டும், மதியம் முதல் மாலை வரை மலையாளம். மாலை என்னை அழைத்து போக பையன்கள் வருவார்கள். அதற்குள் மதியமே நான், டீச்சர் தலை தப்பி வீடு வந்து சேர்ந்திடுவேன்.
வீட்டு கதவு அரைக்கதவு. அந்த கதவை திறக்கும் உயரவுமில்லை , வலுவுமில்லை.
அம்மா என்னை கண்டதும் எப்படி வந்தாய் , ஏன் தனியாய் வந்தாய்,என திட்ட ஆரம்பிப்பார்கள்.
கதவை திறக்காதே.... கடை பசங்களிடம் இவளை வகுப்பில் கொண்டு விடு என்று கட்டளை பிறக்கும்.
நானும் போக விருப்பமில்லை, தூக்கம் வருது,வயிற்று வலி என்ற சகல வித்தைகளையும் துணைக்கு அழைத்து போராடினாலும் அம்மாவின் மனம் இறங்காது.
சோம்பேரி, பொய் பேசாதே, வீட்டில் இருந்து என்ன செய்ய போறாய், இந்த சின்னப் பிள்ளைகளுடன் வம்பு சண்டை பிடிக்க தானே? போய் படி என்பார்.
கண்ணீர் மாலை மாலையாக விழும். கடைசி ஆயுதத்தை எடுப்பேன். 'போண்டா' வாங்கி தந்தால் பள்ளிக்கு போறேன்.
உடனே போண்டாய் வாங்கி தந்து , கையில் மிட்டாயும் சொருகி அனுப்பி விடுவார்கள்.
நாலு மணி எப்போது வரும் என காத்திருப்பேன். வீடு போய் சேர.
என் வீட்டில் பொறுப்பான மூத்த பிள்ளை,ட்யூஷன் வீட்டில் தான் நான் செல்லப்பிள்ளை !. டீச்சர் வீட்டில் உப்பிலிட்ட நெல்லிக்காய், மாங்காய் தின்ற ஞாபகம் உண்டு.
ஒருக்கா மாங்காய் பங்கு தருகையில் எனக்கு குறைத்து தந்தார்கள் என்று கையிலிருந்த ஸ்லேட்டை வைத்து அடுத்தவன் மண்டையில் ஒரு அடி. ஏன் அடித்தாய்? என விசாரித்து தண்டனையாக கூட்டத்தில் இருந்து தனித்து இருத்தி வைக்கப்பட்டேன். அங்கிருந்து அழுததும் நினைவிலுள்ளது.
தமிழ் குட்டி என்பதால் சத்ததில் தான் சண்டை இடுவதும் ஏன் கதைப்பதும் கூட. உள் அறையில் இருந்து தங்கச்சன் சேட்டன் என் பெயரை அழைத்தும் கப்- சிப் ஆகிடுவது வழமை.....
இந்த படி வழியே ஏறிச் சென்றால் என் துவக்கப் பள்ளியை அடைந்து விடலாம்.
இப்போதும்; அன்றைய என் நண்பர்கள் சபீர் ,
Abbas Abbas
, ராஜன், பஃமீஜா, பிந்து, லதா, ஜெயா நினைவிற்கு வருகின்றனர்.
ഗ്ലാഡിസ് ട്യൂഷൻ ടീച്ചർ വീട് !
ഞാൻ ഇന്നലെത്തെ കാര്യം പലതു മറക്കും, പക്ഷേ നാല് വയസുള്ളപ്പോലുള്ള ട്യൂഷൻ ക്ലാസിന്റെ നിരവധി ഓർമ്മകളുണ്ട് എനിക്ക്.
തെരുവ് കുടിവെള്ള പൈപ്പും പിന് ഭാഗത്തുള്ള ഗ്ലാഡിസ് ടീച്ചറുടെ വീടും ആണ്.
മെലിഞ്ഞതും എപ്പോഴും ചുമക്കുന്നതുമായ ടീച്ചറുടെ ഭർത്താവ്, ഷേർളി ചേച്ചി , ഷിബു ചേട്ടൻ , ജെയിംസ് സർ, ഉയരവും സുന്ദരവുമായ പുഞ്ചിരിക്കുന്ന മുഖംമുള്ള മേരി ടീച്ചർ, വസ്ത്രം തുന്നുന്ന , കുടയുമായി നടക്കുന്ന ടീച്ചറുടെ സഹോദരി, വീട്ടിൽ ഒരു വാഹനാപകടത്തെ തുടർന്ന് കിടക്കയിൽ കിടക്കുന്നു തങ്കച്ചൻ ചേട്ടൻ, കോഴികളെ വളർത്തുന്ന ആ വീട്ടിലെ , അമ്മ, വാല്യമ്മച്ചി (മുത്തശ്ശി).
ഞങ്ങളുടെ പട്ടണത്തിലെ ഏക ട്യൂഷൻ സ്കൂൾ ഇതാണ്. വാസ്തവത്തിൽ, ഞങ്ങളുടെ സ്കൂളിനേക്കാൾ കൂടുതൽ അച്ചടക്കമുള്ള ക്ലാസുകൾ ഇവിടെയുണ്ടായിരുന്നു . എന്റെ വീട്ടിലേക്കാൾ കൂടുതൽ സമയം ഞാൻ ഈ വീട്ടിൽ വളർന്നു.
ഒരുങ്ങി കെട്ടി , മനോഹരമായ വസ്ത്രം ധരിച്ചു , കല്ല് സ്ലേറ്റ് (ബോർഡ്) എം കല്ല് പെന്സിലുമായ് കടയിലെ ജോലിക്കാരായ ചേട്ടന്മാരോടൊത്തു രാവിലെ 10 ന് മുൻപേ ക്ലാസിൽ എത്തും .
രാവിലെ തമിഴ്, ഉച്ച മുതൽ വൈകുന്നേരം വരെ മലയാളം പഠിക്കുകയായിരുന്നു പതിവ് . കടയിലെ ജോലിക്കാരായ ചേട്ടൻ വൈകുന്നേരം എന്നെ വിളിച്ചു കൊണ്ടു പോകാൻ വരും. ഉച്ചകഴിഞ്ഞ് ഞാൻ ടീച്ചറുടെ കണ്ണും വെട്ടിച്ചു വീട്ടിലെത്തും.
വീട്ടു വാതിൽ അരക്കതവ് ആണ് . ആ വാതിൽ തുറകാനുള്ള ഉയരമോ ശേഷിയോ ഇല്ലാ. അമ്മ എന്നെ കാണുപ്പോൾ തന്നെ , നീ എങ്ങനെ വന്നു, എന്തിനാണ് ഒറ്റയ്ക്ക് വന്നത്, ഇന്നിങ്ക്നേ വഴക്കു പറയാൻ തുടങ്ങും, വാതിൽ തുറക്കാതെ തന്നേ കട ചേട്ടൻമാറോടു 'ഇവളെ കൊണ്ടു വിടൂ' എന്ന് ആവശ്യയപ്പടും.
ഞാൻ പോകില്ലാ, ഉറക്കാം വരുന്നു, വയറു വേദന എന്ന പല പല നുണ കഥകളുടെ അകമ്പടിയാണ് പിന്നീട് . പക്ഷേ അമ്മ സമ്മതിക്കില്ലാ.
മടിച്ചി, നുണ പറയരുത്, നീ വീട്ടിൽ നിന്ന് എന്തുചെയ്യും?
കണ്ണുനീർ ധാര ധാരയായി വീഴുന്നു. ഞാൻ അവസാന ആയുധം എടുക്കും. നിങ്ങൾ 'പോണ്ട' വാങ്ങി തരുമെങ്കിൽ , സ്കൂളിൽ പോകാം .
ഉടൻ പോണ്ടാ വാങ്കി തന്നു, മിഠായി കൈയിൽ വച്ച് അയക്കും.
.
ഞാൻ പിന്നീട് ആ നാല് മണികായ് കാത്തിരിപ്പാണ് . വീട്ടിൽ ചുമതലയുള്ള മൂത്ത കുട്ടി, ഞാൻ ട്യൂഷൻ സ്‌കൂളിൽ ഇഷ്ട മകളാണ്
ട്യൂഷൻ വീട്ടിൽ ഉപ്പിട്ട നെല്ലിക്കയും മാങ്ങയും ടീച്ചരിൽ നിന്ന് വാങ്ങിച്ചു കഴിച്ചത് ഓർമ്മിക്കുന്നു.
ഒരിക്കേ എനിക്ക് ഉപ്പിലിട്ട മാങ്ങ തരാൻ കളിപ്പിച്ചതിനാൽ സ്ലേറ്റ്ട്ടു കൊണ്ട് ഒറ്റ അടി. . നീ എന്തിനാണ് അടിച്ചത്? എന്ന് ചോദിച്ചു ശിക്ഷയായി എന്നെ കൂട്ടത്തിൽ നിന്ന് മാറ്റി നിർത്തി. അവിടെ നിന്ന് കരഞ്ഞതും ഞാൻ ഓർക്കുന്നു.
ശബ്ദത്തിൽ സംസാരിക്കുകയും വഴക്കു കൂടുകയും ചെയ്യുന്നതിന് . അകത്തെ മുറിയിൽ നിന്ന് തങ്കച്ചൻ ചേട്ടൻ എന്റെ പേര് വിളിക്കുന്നതും
പിന്നെ പേടിച്ചു മിണ്ടാതിരിക്കും.
ഈ പടികളിലൂടെ കയറി ചെന്നാൽ എന്റെ പ്രാഥമിക വിദ്യാലയത്തിൽ എത്താൻ കഴിയും.ഇപ്പോൾ; അന്നത്തെ എന്റെ സുഹൃത്തുക്കൾ സഫീർ, അബ്ബാസ് അബ്ബാസ്, രാജൻ, ഫാമിജ, ബിന്ദു, ലത, ജയ എന്നിവരെ ഓർക്കുകയാണ്. .

20 Apr 2020

சங்கம்புழா சிருஷ்டிகள்

சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை என்ற கவிஞரை நினைத்துமே துயர் தொற்றி கொண்டாலும், அவருடைய கவிதைகள் ஒரு தாலாட்டும் சங்கீதம் போல நம்மை பின் தொடர்கிறது. நம் கவலைகளில் தேற்றும் இசையாக வருகிறது. உயிரோட்டமான அவருடைய வார்த்தைகள், ஆதரவாக, ஸ்நேகமாக நம்மை பின் தொடர்கிறது.
சங்கம்புழாயின் கவிதைகளுக்கு பின்புலமாக ஒலிக்கும் இசை, கேரளா திருவாதிரைக்களிக்கு பாடப்படும் நாடடுப்புற இசையாகும். தொட்டிலில், என்னை பாட்டுபாடி உறக்கிய நல்லம்மா - என் பாட்டியில் இருந்து தான் கவிதை ஞானம் கிடைத்தது எனக்கூறுகிறார்.
இவருடைய குடும்பம் இடைப்பள்ளியில் பெயர் பெற்ற பணக்காரக் குடும்பம். பணம் போனதும், புகழும் பெருமையும் சேர்ந்தே போய் விட்டது. கடைசியில் மிஞ்சினது அப்பா நோக்கிய வக்கீல் குமஸ்தா வேலை மட்டுமே. சங்கம்புழையின் 10 வது வயதில் அப்பா இறந்ததும் இவருடைய வாழ்க்கை தனிமையில் தள்ளப்பட்டு விட்டது.
ஒரே வீட்டில் இரு பெண்கள் அம்மா , பாட்டி கண்காணிப்பில் வளர்ந்த ஒரே ஒரு குழந்தை இவர். இவர்களுடைய தலையிடல் பலபோதும் தனது இயல்பான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக இருந்தது.ஒருக்கா இவர் பொது கூட்டத்திற்கு போகக்கூடாது என்று இவருடைய அம்மா இவருக்கு இருந்த ஒரே வெள்ளை வேட்டியை ஒளித்து வைத்து விட்டாராம். இவர் துண்டை உடுத்து கொண்டு கூட்டத்திற்கு போய் பங்கு பெற்றுள்ளார்.
கட்டுப்பாடுகள் தான் மீறவும் வைத்தது கவியை. சங்கம்புழா இயல்பாகவே கனவு ஜீவி. 10 வயதினிலே கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்.
உள்ளூரில், இடைப்பள்ளி ராகவனும் சேர்ந்து இலக்கியப்பணி, பேச்சு என இலக்கியம் வளர்கின்றனர். உள்ளூர் ஷெல்லியும் கீட்ஸுமாக அறியப்பட்டவர்கள்.
கவியின் படிப்பு, கடினமான வறுமை மற்றும் இலக்கியப்பணியால் தடை பட்டது. வேலைக்கு போய் பணத்தை சேகரிப்பார். படிப்பை தொடர்வார், படிப்பை விடுவார் வேலைக்கு போய் பணம் ஈட்டுவார். இப்படி தான் கவியின் வாழ்க்கை போய் கொண்டிருந்தது.
காலம் ஓடுகிறது. துன்பங்கள் தனியா வருவது இல்லை தானே! காதல் உருவத்தில், பெண்களும் வந்து போய் கொண்டு இருக்கின்றனர். ஒரு பெண் உருகி நோக்கினால் நாலு வரியில் ஒரு கவிதையாவது எழுதிக்கொடுக்காது பின் வாங்குவதில்லை. பல பெண்கள் இவர் கடைக்கண் பார்வைக்கு ஏங்கியதாகவும் , இவருடைய கடிதம் பல பெண்கள் கைகளில் இன்றும் உண்டு என்கின்றனர்.
12 ஆம் வகுப்பு மகாராஜாஸ் கல்லூரியில் முடித்து விட்டு, கல்லூரி படிப்பிற்கு திருவனந்தபுரம் வந்து சேர்கிறார். கல்லூரியில் சேரும் போதே இவருக்கு 23 வயது ஆகி விட்டது. அந்நேரம் இரண்டு கவிதைத்தொகுப்பு வெளியிட்டு விட்டார். கல்லூரியில் முதல் வருடம் மலையாளம் மொழி பாடத்திற்கு இவருடைய கவிதைத்தொகுப்பும் இவருக்கு படிக்க இருந்துள்ளது‌.
கல்லூரியில் சேரும் போது ஒரு பேராசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் சேர்ந்திருந்தாலும் அங்கும் இவரை ' உள்ளூர்' என்ற பேராசிரியர் வடிவில் துரத்தியது துன்பம். மற்று மாணவர்கள் இவர் கவிதையை படித்து 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் போது கவிக்கு 40 க்கு மேல் மதிப்பெண் கிடைக்காதாம். கவி மலையாள இலக்கண தேர்விலும் வெற்றியடையவில்லை.
அந்த நேரம் இவருக்கு ஒரு காதலும் இருந்துள்ளது. இது இவர் தாயாருக்கு பிடிக்கவில்லை. குடும்பப்பாங்கான ஸ்ரீ தேவியை கண்டு பிடித்து திருமணவும் முடித்து வைத்து விட்டனர்.
கவிக்கு, மறுபடியும் கல்லூரிக்கு போக இயலாத சூழல். கல்லூரிக்கு போவதை நிறுத்தி விட்டார். தனது 27 வது வயதில் மூன்றாம் தரத்தில் பட்டம் பெற்றாலும் "பேராசிரியர்" ஆகும் தகுதியை இழந்ததால்,பேராசிரியர் ஆகும் ஆசையை மூட்டை கட்டி வைக்க வேண்டியதாக போச்சு.
பிழைப்பிற்கு தனியார் டுயுட்டோரியல் கல்லூரியில் கற்பிக்கிறார், பின்பு ராணுவத்தில் கணக்கராக சேருகிறார்.

அப்போது இவருடைய கவிதையின் ரசிகை, ஒரு மருத்துவரின் மனைவியின் நட்பு கிடைக்கிறது. அந்த பெண்மணி இவரை சட்டம் படிக்க திருவனந்தபுரம் செல்லக் கூறுகிறார்.
இதற்குள் இரண்டு மகன் இரண்டு மகள் என நாலு குழந்தைகள்.
சில சூழலால் சட்டப்படிப்பையும் இடையில் நிறுத்தி சொந்த ஊர் வந்து சேருகிறார். முதலில் டைபாய்டு அதை தொடர்ந்து காசநோய் பிடித்து கொள்கிறது. 37 வது வயதில் விடை பெற்று விட்டார்.
இவருடைய பாதையை பின் தொடர்ந்து, மலையாள கவிதை உலகில் பாஸ்கரன், வயலார், வைலோப்பிள்ளி போன்றவர்கள் வந்தாலும், இன்னும் இவரை தாண்டி ஒரு கவிஞரும் கேரள மண்ணில் பிறக்கவில்லை.
நெஞ்சை உருக்கும் கவலை, பிரிவு, காதல் துயர் , வறுமை , இயற்கை, என இவர் எழுதின கவிதைகள் காலத்தை கடந்து வாசிப்பவர்களுக்கு இதமான உணர்வையும் ஆறுதலையும் தருகிறது.
ஒரு மயில் ஆடும் நடனம் போல, இதயத்தோடு அணைத்து சேர்த்து வைத்து பாடுவது போல உணர்வுகளை தந்து சங்கம்புழை கேரள மண்ணின் அடையாளமாக இப்போதும் எப்போதும் உள்ளார்.
ஒரு பெண்மையின் நளினம் கொண்ட மென்மையான வார்த்தைகளும் தாலாட்டு பாடும் பாட்டியின் குழைவும், பாசவும் கேரளாவின் நாட்டு பாடல்களின் மெட்டுகளுடன் கேட்பவர்களை மயக்கி தன்னகத்திற்குள் வைத்து கொள்கிறது இவருடைய கவிதைகள்.
தனது நண்பன் இடப்பள்ளி ராகவன் பிள்ளை , 27 வது வயதில் செய்து கொண்ட தற்கொலை ' ரமணன்' என்ற 'Master Piece' கவிதையை உருவாக்க வழி செய்தது.
நண்பனின் நினைவாக அன்றைய தினம் எழுதிய கவிதை இதுவே.

########₹₹₹#######
ஆதரவற்ற உன் எரிந்த மனதுமாக நீ மறைந்தாய்
இனி கேட்க இயலாது மென்மையான மெல்லிய குரல்கள்
இன்றுவரை மலர்தோப்பில்
நாம் சேர்ந்து பறந்து பாடி
இப்படியென்னை
இங்குதனித்து விட்டுவிட்டு நீ
ஐயோ பறந்து ஒளிந்தாய்?
____----________________
നിരാശ്രയാം നിൻ നീറും മനസ്സുമായ് നീ മറഞ്ഞു
കേൾക്കുകയില്ലിനിമേൽ നിന്റെ നേർത്തുനേർത്തുള്ള കളകളങ്ങൾ
ഇന്നോളമീ മലർത്തോപ്പിൽ നമ്മളൊന്നിച്ചു ചേർന്ന് പറന്നു പാടി
ഇന്നിളമെന്നെ തനിച്ചുവിട്ടിട്ടെങ്ങുനീ അയ്യോ പറന്നൊളിച്ചു?
---------+_____----------------
O blessed nightingale You have vanished with your scourging despair
Your songs of melancholy sweetness Alas! will not be heard again
Were we not like two chirping little birds singing in tuneful harmony?
Where have you gone leaving me all alone?
#######₹₹#####

"ஏதோ தீவிரமான உறவின் தோய்ந்து போன ஏமாற்ற உணர்வுதானே சிருஷ்டி"... ......இல்லை என்றால் இப்படியெல்லாம் வர்ணஜாலமிக்க மென் சிறகுகளால் பறக்கவே முடியாது , நிச்சயமாக"....(தூவானம் ஆ . மாதவன்

16 Apr 2020

சங்கப்புழா கிருஷ்ணபிள்ளா மலையாள மொழி 'மகாகவி' !

சங்கப்புழா கிருஷ்ணபிள்ளா மலையாள மொழிக் கவிதை உலகில் 'மகாகவி' என்று அறியப்படுகிறவர். கானகந்தர்வன், மக்கள் கவிஞர், ஜனரஞ்சக கவிஞர்,காதல் கவிஞர் என பல பெயர்களில் அன்பாக அழைத்தனர் கேரள மக்கள்.
கேரளாவின் ஷெல்லி என அறியப்பட்ட கவிஞர் சங்கம்புழாவிற்கு இடைசசேரியில் ஒரு நூலகம் , பூங்கா அமைத்து இன்றும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றனர் .இன்று வாசிக்கையிலும் கவிஞரின் கவிதைகள் வீணையில் இதமாக மீட்கப்படும் குரலாக ஆறுதலாக, காதலாக, இயற்கையாக, பறைவையாக, பூக்களாக நம்முடன் பயணிக்கிறார்.

இன்றைய தினம் நோய்க்கு மருந்தற்று , 1 மீட்டர் இடவெளியில். பயத்தோடு தள்ளி நின்று நோக்கும் கொரோனா நோயின் இடத்தில் 1948 காலயளவில் காச நோய் இந்தியாவில் இருந்துள்ளது. அந்த கொடூர நோயின் பிடியில் சங்கம்புழா அன்று இருந்தார்.

பல பெண்களின் இதயத்தில் எந்த நிபந்தனையும் அற்று இடம் பிடித்திருந்த கவிக்கு தேய்ந்து மறைந்து கொண்டிருக்கும் உடலும் , வீங்கி போன தலையும் கவிதைகள் எழுதின நீண்ட கைவிரல்கள் மட்டுமே மிஞ்சியதாம்.

இனி மருத்துவம் இல்லை என்ற நிலையில் தனது பெரிய வீட்டின், தெக்கு மூலையில் ஒரு ஓலைக்குடில் அமைத்து தலைமாட்டில் சாராயக் குப்பியுடன், தன் குறை வயது ஜாதகத்தை நினைத்து பயந்து கொண்டு தனிமையாக கிடக்கிறார்.

மனைவிக்கு வருத்தம்; கவிஞர் தனித்து வீட்டிற்கு வெளியே இருப்பதில், நமது பிள்ளைகளுக்கு இந்த நோய் பிடித்து விடக்கூடாது, தனித்து இருந்து கொள்ளுகிறேன் என்கிறார். வெறும் 27 வயது தான் மனைவிக்கு .

அன்றைய மாத்ருபூமி பத்திரிக்கையில் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாது தனது கடைசி நாட்களை கழிக்கிறார் கவிஞர் என்ற செய்தி வருகிறது. வெளிநாட்டு மலையாளிகள் அன்றைய நாள் 1949 ல்1000 ரூபாய் அனுப்பி விடுகின்றனர். தபால்க்காரர் கொண்டு கொடுக்கையில் எனக்கு யாருடைய தயவும் வேண்டாம் என்றுக்கூறி திருப்பி கொடுத்து விட்டார்.

சங்கம்புழாவின் நண்பரை தேடி செல்கிறார் மனைவி. நீங்கள் உங்கள் நண்பரிடம் பணத்தை ஏற்று கொள்ள செல்லுங்கள், வீட்டில் மருந்து வாங்கக்கூட பணம் இல்லை என்று அழுகிறார். நண்பர் வந்து சங்கப்புழையை தேற்றுகிறார், வாழ்க்கையை விரளப்படுத்தி விட்டேன் எனக்கூறி , அடுத்த நாள் பணத்தை பெற்று கொள்கிறார்.
உடனே திருச்சூர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்கின்றனர், அடுத்த இரண்டு நாட்களில் இறந்து போகிறார்.
எத்தனை பேருக்கோ ஆறுதல் கொடுத்த அவருடைய கவிதை வார்த்தைகள் மனைவிக்கு ஆறுதல் கொடுக்கவில்லை.
கையில் அன்று மூன்று குழந்தைகள். மூத்த மகனுக்கு 10 வயது இளைய மகளுக்கு ஒரு வயது.



எத்தனையோ பெண்கள் மனதில் ஆசைநாயகனாக, இன்னும் பல பெண்களின் காதலனாக இருந்த சங்கம்ப்புழா மனைவிக்கு எந்த நிறைவும் தரவில்லை.

தன்னுடைய முதல் பெண்ணுக்கு வரன் தேடிய போது "ராணுவ வீரனாக இருந்தாலும் பரவாயில்லை ஒருபோதும் ஒரு இலக்கியவாதியாக இருக்க கூடாது" என்ற நிபந்தனையில் இருந்துள்ளார்.
1985 ஆம் ஆண்டு மகா கவியின் 78 வது பிறந்த நாள் தினத்தை கொண்டாடும் அவசரத்தில் கேரள அரசு இருக்க தனது 45 ஆவது வயதில் 24 வயது மகன், 19 வயது மகள் மற்றும் 50 வயது கண்வருடன் சாப்பாட்டில் விஷம் கலந்து முதல் மகள் அஜிதா தற்கொலை செய்து கொண்டார்.
வறுமை அவரை கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கி , யாரும், உதவ இயலாத அளவிற்கு நொறுக்கி விட்டது. வீட்டில் இருந்த அண்டா, குண்டா பொருட்களையும் விற்று நாட்களை கடத்தியாச்சு.
கடக்காரர்கள் இனி பொருள் தர இயலாது என்று திருப்பி அனுப்புகின்றனர். வட்டிக்கு கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து திட்ட ஆரம்பிகிறார்கள்.
யாரிடமாவது உதவி கிடைக்காதா என்று சொந்த வீட்டிற்கு போகிறார். அங்கும் கொடுத்து உதவும் நிலையில் யாரும் இல்லை. பக்கத்து வீட்டு பாட்டி 20 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த 20 ரூபாய்க்கு கடைசியாக விஷம் வாங்கி வருகிறார் தன் வீட்டிற்கு.
அஜிதா, பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கும், சாந்தமான எளிமையான, அன்பான பெண்மணி. அந்த வீட்டில் அவர் எழுதி பிரசுரிக்காத இரண்டு நாவல் கிடந்ததாம்.
யாருடனும் வருத்தம் இல்லை. என்னால் என் வறுமையை தாங்க இயலவில்லை. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட என் மகன் நினைவில் இருந்து என்னால் மீளவும் இயலவில்லை. என் மகன் நினைவாக வளர்த்த நாய் செத்ததும் என்னை வேட்டையாடுகிறது. இனி நாங்கள் வாழ தகுதியற்றவள்.
கணவருக்கு ஒரு கடிதம்! உங்களுடைய குடியால், வறுமையும் அவமானவும் என்னை பின் தொடர்கிறது. நாங்கள் விஷம் கலந்த சோறுண்டு, எங்கள் மகனிடம் போகிறோம். உங்களுக்கு விருப்பம் எனில் எங்களுடன் வரலாம் என்று எழுதி வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டார்.
இரவு முழுக்குடியுடன் வந்து சேர்ந்த 50 வயது கணவர், எல்லோரும் செத்துக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அவரும் மீதம் இருந்து சோற்றை உண்டு மரித்து போனார்.
சங்கம்புழையின் மாஸ்டர் பீஸ் 'ரமணன்' என்ற கவிதை! அந்த கவிதையை இப்போது வாசித்தாலும் வார்த்தைகளால் வருடும் கவிதை.
தன்னுடைய உயிர் நண்பன், இடப்பள்ளி ராகவன்  காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட போது விலாப காவியமாக எழுதினது . அதில் தானும் தன் நண்பனும் ஆடு மேய்க்க போவது போல் புனைவு செய்து அக்கவிதையை எழுதியிருப்பார். மரணத்தை அக்குவேர் ஆணிவேராக ஆழ்ந்து ஆராய்ந்து, அழுது, தத்துவார்த்தமாக எழுதின அழகியலான படைப்பு. அதில் நட்பு, காதல், மோகம், ஏமாற்றம் என எல்லாம் கலந்து; நண்பா ஒரு பெண்ணுக்காக உன் உயிரை விட்டு விட்டயே என்று வருந்தியிருப்பார். இந்த கவிதை 1930 ல் வெளிவந்தது. ஒரு லட்சம் பிரதிகள் விற்றழிக்கப்பட்டுள்ளது.இதை வாசித்த கல்லூரி மாணவிகள் , பெண்கள் நாங்கள் ஒரு போதும் காதலித்து ஏமாற்ற மாட்டோம் என கடிதம் எழுதியிருந்தார்களாம். அப்படியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின கவிதை.
இவருடைய கவிதையின் சிறப்பே சம்ஸ்கிருதம் மற்றும் மணிப்பிரவாள மலையாள வார்த்தைகள் கலராத; திராவிட மலையாளச் சொற்கள் தாங்கிய கவிதைகள். அவருடைய கவிதைகளை உருவிடாத ஒரு மலையாளி கூட இருக்க மாட்டார்கள்.
மரணத்தை வெறுத்தவர், அதிலும் தற்கொலை மரணத்தை அறவே வெறுத்தவர். ஆனால் அவரை மரணம் பின் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. தனது 10 வது வயதில் தன் தகப்பனார், பின்பு தான் முதன்முதலில் ஆசைப்பட்ட முறைப்பெண் அவளுடைய 10 வது வயதில் மரித்தது. கவியுமே தனது மரணத்தை வலுக்கட்டாயமாக ஏற்று கொண்டவர். விதி யாரை விட்டது.
பிற்பாடு கவிஞரின் மனைவி ஸ்ரீதேவி வயதாகி 2002லும் 2004 ல் மகன் வாகன விபத்திலும் மரித்து விட மிஞ்சினது இளைய மகள் மட்டுமே. இளைய மகள் குறிப்பிடுகிறார்; தனது அம்மா எந்த பிள்ளையும் எழுத்துலகிற்கு வருவதை விரும்பவில்லை. இருந்தும் சங்கப்புழா மகன் இரு புத்தகம் வெளியிட்டுள்ளாராம்.
கவிஞரின் மனைவி .......இனியாவது
"திருமணம் என்பது ஒரு சூதாட்டம், அதில் மனிதர்கள் வெறும் பகடைக்காய்கள் என நம்புவாரா?
வாழ்க்கையே ஒரு நாடகம் என்கிற போது திருமணம் சூதாட்டமாக இருப்பது தானே இயல்பு ?

1 Nov 2016

நவம் 2- நினைவு தினம்

கடந்த வருடம் இதே நவம். அது ஒரு ஞாயிறு. மதியம் சாப்பிட்டு முடித்து விட்டு நாம் நாலு பேரும் ஏதோ ஒரு பொழுது போக்கில் இருந்தோம். திடீர் என நீங்கள் கூறினீர்கள். நாளை கல்லறை திருவிழா. எனக்கு நாளை வேலை உண்டு  நாகர்கோயில் போகவேண்டும். இன்று நாசரேத் வா.. எங்க அப்பாவிற்கு    மாலை போட்டு வந்து விடலாம் என்றீர்கள். நானோ நாளை போகலாமே என்று கூறி கொண்டே உங்கள் விருப்பம் கருதி உங்களுடன் மனம் இல்லாமலே  வந்தேன்.. 

ஆழ்வர்ட்டிரு நகரி வந்ததும் இரண்டு மாலை வாங்கி வரக்கூறி வ்ண்டியை நிறுத்தினீர்கள். இரண்டா என்றேன். சித்தப்பா பக்கத்துலா இருக்காருல்லே... மூன்று வருடம் அவருதானே வளர்த்தார் என்று  என் முகத்தை உற்று நோக்கி கொண்டே சிரித்தீர்கள், 

இரண்டு பூ மாலை வாங்கியாச்சு. நேர உங்க வீட்டிற்கு வந்தீர்கள். உங்க அம்மா ”பாபு எனக்கு கல்லறை என்றாலே பயம் . அதான் அப்பா கல்லறைக்கு நான் போகவே இல்லை என்றார்”.  சரி எங்களுடன் வாங்க என்று கூறி அழைத்து வந்தீர்கள். அந்த கல்லறையின் சாவி கொத்து பக்கத்தில் குடியிருக்கும் ஒரு ஏழை பெண்ணிடம் இருந்தது .   உங்க அம்மா கைய்யில் கொடுத்து ஒரு மாலையை போட வைத்தீர்கள், இன்னொரு மாலையை உங்க சித்தப்பாவிற்கு நீங்களே போட்டீங்க,.

உங்க அம்மாவிற்கு பதிந்து வைத்துள்ள கல்லறையை காட்டினீர்கள். 2500 ரூபாய் விலை கொடுத்ததாக சொன்னீர்கள்.  உங்க அம்மா  பாபு இவ்வளவு தான் இடமா? அதன் மேல் நெடுகையும் குறுகையுமாக நடந்து கொண்டே கேட்டார்கள்எ.  ஒரு பக்கம் உங்க மேல கோபமா தான் இருந்தது. எதற்கு இன்று மாலையை வாங்கி அவசரமா வரணும் /? கல்லறைக்கு ஒரு  போது வர விரும்பாத, பயப்படும்  தாயை ஏன் அழைத்து வர வேண்டும் என்றிருந்தது. 

எப்போதும் போல என் மவுனத்தின் துணையுன் நின்று கொண்டிருந்தே. எனக்கு எப்போதும் உங்க வீட்டு வாசல்ப்படி மிதித்ததும் இரத்தம் உறைந்து இமைய மலை  பனியை போல் மாறி விடும். வானத்தை நோக்கி கொண்டு உங்க வீட்டு திண்ணையில் போட்டிருக்கும் எனக்கான சோபாவில் இருந்து அவதானித்து கொண்டிருந்தேன், உங்க அம்மா உங்க பக்கத்து வீட்டில் மூன்று மரணம் நடந்ததாகவும், அதில் இரண்டு பேர் இளைஞர்கள் என்றும் ஒருவர் கான்சரில் இறந்தார் 30 வயது தான் பாபு என திகில் ஊட்டும் கதைகளை கதைத்து கொண்டிருந்தார். இன்னும் வயதான கட்டைகள் காத்திருக்கு என அந்த தெருவுகளை எல்லாம் அடையாளம் கூறி கொண்டிருந்தார். எனக்கு எதுவும் மனதிற்கு உகப்பாகவில்லை.  கிடைத்த வடையை சாப்பிட்டு விட்டு நம் வீடு வந்து சேரத்தான் மனம் எத்தனித்து கொண்டிருந்தது. 

உங்க வீட்டு சந்து தெருவை கடந்து லூக் மருத்துவ மனை வந்ததும் ”ஜோ உனக்கு பன்னீர் ரோஜாச்செடி வேண்டும் என்றாயே. ஒரு நர்ஸ் இங்கு செடி விற்கின்றார். அவர் மருமகன் என் வகுப்பு தோழன். அவர் மகள் என் உறவு சகோதனின் வகுப்பு தோழி” என சில கதைகளை கதைத்து கொண்டு அந்த வீட்டு வந்து சேர்ந்தோம். அந்த அம்மா பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு பக்கம் செயலிழந்த நிலையில் இருந்தாலும் அவர் அந்த செடிகளை பராமரிக்கும் விதம் ஆச்சரியம் ஊட்டியது.  நான் ஆசைப்பட்ட பன்னீர் ரோஸ் அத்துடன் நெல்லி, ஒரு சப்போட்டாவும் என் தலையில் அழகாக கட்டி விட்டார். செடியை கண்டால் எனக்கு குடிகாரர்களுக்கு டாஸ்மார்க்கு பார்ப்பது மாதிரி என்பது தெரிந்ததால் எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை நீங்கள். எப்படியோ தொட்டிகளை வண்டியில் ஏற்றி என்னையும் எல்லகையை விட்டு நகத்தி கொண்டு வந்து விட்டீர்கள். அந்த ரோஸ் இன்று பூத்திருந்தது நம் வீட்டில். 

காலையில் 6 மணி முதல் அதன் அருகில் உங்களை நினைத்து கொண்டே இருந்தேன். என் வீழ்ச்சியை உங்க தோளிலும் உங்கள் வீழ்ச்சியும் என் இதயத்திலுமாக வைத்து கடத்திய காலம் நொடியில் முடிந்து விட்டது. ஆனாலும் இது போன்ற நினைவுகள் என்னை   மீழ   வைக்கின்றது அத்தான். நம்ம வாழ்க்கையில் நாம் சாதித்தது எல்லாம் நம் அன்பும் நேசவும் மட்டும் தான். எல்லா நிலையிலும் நீங்கள் என்னையும், நான் உங்களையும் சார்ந்து இருந்து விட்டு  என்னை மட்டும் தனியே  உங்களை தேட வைத்து     கண்ணா  மூச்சி     விளையாடுதீங்க அத்தான். 


உங்களை சுற்றி எல்லோரும் மகிழ்ச்சியா  இருக்கனும் என்று நினைத்தீர்கள். அதற்காகத்தான் என்னை இங்கை அழ வைத்து விட்டு மறைந்து விட்டிர்கள். கடந்த வாரம் காமத்தின் வாழ்வும் மரணவும் என்ற புத்தகம் வாசித்து கொண்டிருந்தேன், மனிதனுக்கு மரணமே இல்லை. ஒரு உருவகத்தில் இருந்து இன்னொரு உருவகத்திற்கான மாற்றம் மட்டுமே என சில தத்துவங்கள் கூறுகின்றன. ஆமாம் நீங்க மகிழ்ச்சியா கண்டம் விட்டு கண்டம் பயணித்து கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் எச்சங்கள் அடங்கிய  அந்த கல்லறை என்னை நீங்கள் ஏமாற்ற மட்டும் தான். நாளை பாருங்கள் அதன் பக்கத்தில் நிற்கும் போது என் அத்தானே இதற்குள் பூட்டி விட்டார்களே என நான் அழ மாட்டேன். நீங்க சந்தோஷமா பயணித்து கொண்டு இருக்கின்றீர்கள்   இந்த அண்ட வெளியில் . என்னையும் பிள்ளைகளையும் நீங்க  தனித்து விட்டது  தான் எங்களால் மன்னிக்க முடிய வில்லை அத்தான். ஒவ்வொரு நொடியும் எங்க மனம் உங்களை தேடி கொண்டே இருக்கின்றது.

நம் வாழ்க்கையே பயணங்களாக தான் நிரப்பியிருந்தோம். அந்த பயண வேளையில் மட்டும் தான் நாம் நாலு பேரும் ஒன்றாக மகிழ்ந்தோம். உங்களுக்கும் சுயநலம் இருக்கு அத்தான் இப்படி தனியா உங்க பயணத்தை தேடி போயிட்டீங்களே. எப்படியோ நீங்க எப்பவும் போல மகிழ்ச்சியா இருக்கனும். எனக்கு எவ்வொரு தினவும் ஒவ்வொரு நிகழ்வும் துயர் தருவது தான். இருந்தாலும் அந்த நீங்க எங்களூக்காக விட்டு போன நல்ல நினைவுகளுடன் நாங்களும் பயணிப்போம், ஓகேவா!