31 Dec 2012

பாலியல் குற்றத்தில் இந்தியா மூன்றாம் இடத்தை கைப்பற்றியது!!!!



பாலியல்-அரசியல் நாடகம்பாலியல் துன்புறுத்தலில் அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்காவுக்கு முதல், அடுத்த இடம் கொடுத்து விட்டு இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பெண்ணை தேவி தெய்வம்  என ஒரு புறம் பூஜித்து கொண்டு கொலை பாலியல் துன்புறுத்தலிலும் விட்டு வைப்பதில்லை. இதில் ஒரு வரலாறே இந்தியாவுக்கு உண்டு. அதன் முன் கற்பழிப்பு அல்லது பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

கற்பழிப்பு அல்லது பாலியல் துன்புறுத்தல் என்ற சொல்லாடல் விருப்பம் இல்லாத ஒரு பெண்ணிடம் உடல் நீதியாக உறவு வைத்து கொள்ள ஆண் வன்முறையாக துணிவதையே குறிக்கின்றது. களவாணுதல், தூக்கி  செல்லுதல், கடத்துதல் என்ற அர்த்தமுள்ள இந்த சொல்(rape) லாற்றின் மொழியில் இருந்தே வந்துள்ளது. மனைவியின் விருப்பத்திற்கு மீறி உறவு வைத்து கொள்ள கணவர் துணிந்தாலும் பாலியல் அத்து மீறல் என்ற தண்டனைக்கு உள்ளாகுகின்றனர் என்பதையும் நாம் அறிய வேண்டும்.

இந்த சமூக அமைப்பு ஆகட்டும் யார் இந்த குற்ற செயலில் ஏற்படுகின்றனர், எதனால் என்று பார்க்க தவறி விடுகின்றது . உணர்ச்சி வேகத்தால் இந்த சமூக நோயின் அடி வேரை வெட்டி எரிக்க தவறுகின்றனர்.  ஒவ்வொரு நிகழ்வு நடக்கும் போதும் போராட்டம், வருத்தம், கோபம் என நின்று விடுகின்றது.
பெண்கள் மேலுள்ள ஆண்களின் ஆதிக்க சிந்தனையே இதன் காரணம் என பெண்ணியல் சிந்தனையாளர்கள் கொதித்து எழுகின்றனர். ஆனால் அதுமட்டுமா காரணம்? இதில் சமூக, குடும்ப, கலாச்சார பாதிப்பு உண்டு என்று விளங்க வேண்டும். இந்தியா போன்ற ஊழல் நாட்டில் பாலியல் துன்புறுத்தல் என்பதும் தவிற்க இயலாத குற்றமாக மாறியுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது.  30 சதவீதம் மக்கள் செல்வ செழிப்பிலும் மீதமுள்ள 70 சகவீதமக்கள் வறுமை துன்பத்திலும் வாழும் போது, சமூக கட்டுப்பாடு  மேல் நம்பிக்கை அற்று ஒரு வித பொறாமை இயலாமைக்கு தள்ளப்படுகின்றனர் பெருவாரி மக்கள். கற்பழிப்பு குற்றவாளிகளை நோக்கினால் தாய் தகப்பன் அற்று தகப்பனுடன் நல்ல உறவற்று வளரும் நபர்களாகவே உள்ளனர். இவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்குவதும் இவர்களை விட நல்ல நிலையில் வாழும் மக்களையே. கோயம்பத்தூர் 10 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொன்ற வாகன ஓட்டுனரின் பின்புலன் பொறாமையும் தனிநபர் ஒழுக்க இல்லாய்மையுமே.
தனிநபர் ஒழுக்கம் பற்றி சிந்தனையில்லாத நாட்டும்மக்களே நாம். அமெரிக்கா இத்தாலி போன்ற நாட்டில் தங்களை ஆள்பவர்கள் தனி நபர் ஒழுக்கத்தில் தவறக்கூடாது என உறுதியாக உள்ளனர். சொந்த மனைவியை தவிர்து தகாத உறவுகள் வைத்து கொள்பவர்கள் அதிகாரத்தில் நிலை கொள்வது கடினமே. அதுவே கிலிண்டனை விரும்பிய மக்கள், துக்கி எறியவும் தயங்கவில்லை. சர்கோஸிஸ் மக்கள் வெறுப்பை பெற்றதும் இதனால் தான். ஆனால் நம் நாட்டின் சட்ட சபை நிலை என்ன. சட்ட சபை உறுப்பினரே குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்கின்றனர், தற்கொலைக்கு காரணமாக இருக்கின்றனர். விசாரணை இல்லாமலே பல வழக்குகள் முடக்கப்படுகின்றது. 162 குற்றவாளிகள் சட்டமற்ற உறுப்பினர்களாக கொண்ட நாட்டில் அறம் எங்கு நிலைக்க வாய்ப்பு உள்ளது!

இந்தியா- பாக் பிரிவினை நேரம் மட்டும் 1 லட்சம் பெண்கள் மனபங்கப்படுத்த பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் ராணுவத்தால் ஆயிரத்திற்கு மேல் பெண்கள் கற்பழிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  குனன் போஷ்போரா என்ற கிராமத்தில் புகுந்த இந்திய ராணுவம் 30ல் இருந்து 100 பெண்களை 13க்கும் 70 வயதுக்கிற்கு உள்பட்ட பெண்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

 ஜாதிய சிந்தனையால் ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. 10 மிலியனுக்கு மேல் பெண்கள் இதுவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்றனர் சமூக ஆராய்ச்சியாளர்கள். பாலியலாக துன்புறுத்தப்படும் பெண்கள் 90% தலிதுகள் என்று மட்டுமல்ல 85% பெண்கள் வயதுக்கு வராத சிறுமிகள் என்ற அதிற்சி உண்மையும் நோக்க வேண்டியுள்ளது. பழன்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை கேட்க போன பெண்கள் இன்னும் கொடூமையாக துன்புறுத்தப்பட்டதை ஊடகம் வழியாக கண்டோம். எல்லா மாநிலங்களிலிலும் போட்டி போட்டு கொண்டு பெண்கள் மேல் பாலியல் பலாத்காரம் நடந்தியுள்ளது.  இதில் ஏற்பட்டவர்கள் பொறுக்கிகள், காவாளி பசங்கள், குற்ற பின்னணியுள்ளவர்கள்  மட்டுமல்ல காவல்த்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், என எல்லா அந்தஸ்தில் உள்ளவர்களும் இடம் பிடிக்கின்றனர்.

Photo: புனிதா போன்ற ஏழைக் குழந்தைகள் கொடூரமாக பாலியல் சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கெல்லாம் ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.  மத்திய வர்க்க இழப்புகளும், பணக்காரர்களும் கொல்லப்படும் போது மட்டுமே அதை பரபரபாக்கி செய்தியாக்குகின்றன ஊடகங்கள். மெழுவர்த்தி ஏந்தும் தகுதி வேண்டுமெனில் பிறப்பால் இக்குழந்தைகள் பண்ணைகளாக பிறக்க வேண்டும் போல.கற்பழிப்பு என்றதும் பெண்கள் உடை பாதுகாப்பில்லாது தனியாக பயணிப்பது என்ற முட்டு காரணம் சொல்லப்படுகின்றது. ஆனால் மேற்கு வங்காளத்தில் கணவருடன் வேலை முடித்து வந்த பெண்ணின் கணவரின் வாயில் ஆசிட்டை ஊற்றி காயப்படுத்தி விட்டு அப்பெண்ணை பக்கத்திலுள்ள புதரில் இழுத்து சென்று பாலியலாக துன்புறுத்தி கொன்ற சமூகம் நம்முடையது. 1973 ல் மருத்துவ மனையில் வேலை நோக்கிய அருணா ஷான்பாங்கு என்ற பெண் அந்த மருத்துவமனை வார்டு வேலையாளால்  பாதிக்கப்பட்டு இன்றும் வாழும் இரத்த சாட்சியாக இருந்து வருவதையும்; கருணை கொலை கொடுங்கள் என அவருடைய தோழி எழுத்தாளர் பிங்கி வழக்கு தொடுத்ததையும் நாம் அறிவோம். புனிதா என்ற சிறுமியை கொன்றவர் போதை பழக்கத்தில் வாழ்பவனும், கூடா உறவுகளை ஏற்படுத்த விளைந்த கொடூர குற்றவாளி!  அவன் குற்றம் நிகழ்த்தும் போதும் போலிஸ் தேடும் குற்றவாளி பட்டியலில் தான் இருந்துள்ளான். இவனை போன்றோருக்கு மனித மூளையின் செயல்பாட்டிலுள்ள குறைபாடு இருந்திருக்கும். அவனுக்கு இரையான குழந்தை காலையில் எழுந்து ½ மைல் பள்ளிக்கு நடந்து வந்து இரயில் பயணப்பட்டு கல்வி கற்று வந்த ஏழை விதவை பெண்ணின் மகள். இவனுடைய அந்நேர மிருகம் எதையும் சிந்திக்காது அக்ககுழந்தையை பலி வாங்கியது. அவன் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் காவல்த்துறை தண்டனை சரியான விதத்தில் கொடுத்திருந்தால் அவனுக்கு ஒரு குழந்தையின் உயிரை எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.
பெண்கள் உளவியல் ஆராய்ச்சி செய்தவர்கள் கூற்றுப்படி தான் பாலியலாக தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் தான் வாழ் நாள் முழுதும் பெண்கள் வாழ்கின்றார்கள். ஆண் உளவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்னவென்றால் ஆண் அடிப்படையாகவே வேட்டையாடும் வேட்கை கொண்டவன். பெண்ணிடம் ஒரு பாலியலாக மகிழ்ச்சியூட்டும்  சக்தி உள்ளதாக தப்பிதமான கணக்குடனே வாழ்கின்றான். அவனுக்கு என்ற வாய்ப்பு கிடைக்கும் போது வேட்டையாட மறுப்பதில்லை. இந்த இடத்தில் தான் அவனுடைய வளர்ப்பு பரம்பரை மரபணு, அறம் சார்ந்த சிந்தனை மனிதனா அல்லது மிருகமா என்ற கேள்விக்கு விடை கொடுக்கின்றது.
பாலியல் துன்புறுத்தல்லால் ஒரு பெண் கொள்ளும் துயரை அவன் விளங்குவதில்லை. கேடான பாடத்தால் இதில் பெண்ணும் மகிழ்ச்சி கொள்கின்றாள் என்ற சிந்தனையே மேல் ஓங்கி நிற்கின்றது. சமீபத்தில் கேரளாவில் 16 வயது சிறுவன் 12 வயது சிறுமியை பாலியலாக துன்புறுத்தி கொலை செய்து விட்டான். போலிஸ் விசாரித்த போது தன் தகப்பன் தினம் காணும் நீலப்படங்களை இவனும் தந்தைக்கு தெரியாது நோக்கி வந்துள்ளான். இதுவே இவனை இக்கொடிய செயல் செய்ய தூண்டியுள்ளது. வேறு ஒரு இளைஞனாகட்டும் வெளிப்புறமாக மிகவும் நல்லவன். ஆனால் முதல் பிரசவத்திற்கு வந்த நண்பன் தங்கையே  இரவில் வீட்டு கதகை  கடற்பறையால் உடைத்து உட்புகுந்து அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தது மட்டுமல்லாது அவனை தடுத்த வயதான தாயையும் கொன்று சென்றான்.  இவன் ஒரு பெரும் பணக்கார தமிழ் மனிதனின் மலையாள கள்ளக்காதலியின் மகன். தகப்பன் பெயர் சொல்ல இயலாது வளந்தவனுடைய  மூளை ஒரு கட்டத்தில் மிருமாக மாறுகின்றது.

பல ஆண்கள் பாலியலாக திருப்தியான வாழ்கை வாழ்வதில்லை என ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர். தற்போதைய சமூக சூழலும் காரணமாகின்றது. அடிப்படையாக சமூகமாக கூட்டமாக வாழ்ந்தவன் வேலை விசயமகாவும் வாழ்வாதாரம் தேடி குடும்பத்தை விட்டு பிரிந்து தனிமையில் வாழ்கின்றான், போதிய கவனிப்பற்று வாழ உந்தப்படுகின்றான். மேலும் குடும்பங்கள், குடும்ப உறவுகள் சிதந்ததும் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதையும் கடந்து உலகமயமாக்கல் என்ற பெயரில் பெரும்வாரியான மக்கள் தங்கள் வாழும் உரிமையை இழக்குகின்றனர், கல்வி மறுக்கப்படுகின்ரனர், பெற்றோர் புரக்கணிப்பும் சேர்ந்து அனாதர்களாக வளர்கின்றனர்.

30 Dec 2012

டெல்லி மாணவி மரணமும் சில அரசியல் நாடகமும்!



டிசம்பர் 16 துவங்கிய ஆற்பாட்டம் அழுகை இன்றைய மரணத்துடன் தொடர்கின்றது. பார்லிமென்றில் விவாதத்திற்க்கு வந்து, பெண் எம்பிகளை கண்ணீர் கடலில் ஆழ்த்திய சம்பவம். பலரை தூக்கு தண்டனை மட்டுமே தீர்வு என சொல்லவைத்த சம்பவம். ஒரு காவல்த்துறை அதிகாரியின் மரணத்திற்க்கு காரணமான சம்பவம்.  டில்லி  என்ன புண்ணிய பூமியா இதற்க்கு முன் கற்பழிப்பு நிகழவே இல்லையா?  டில்லியின் உண்மை நிலையை நோக்கினால் அதிரவைக்கும் தகவல் தான் கிடைக்கும்.

டெல்லி சம்பவத்தில் பள்ளிக்கு ஓடும் பெயர்பலகை இல்லாத வாகனத்தில் கல்லூரி மாணவி தானாக ஏறினாரா ஏற்றப்பட்டாரா என சிந்திக்க வேண்டியுள்ளது.     இந்த நாட்டில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் இந்த ஒரு கற்பழிப்பை ஊடகம் துணை கொண்டு எடுத்து செய்தியாக்குவதும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் அதே வாரத்தில் திருநெல்வேலி பக்கம் 12 வயது பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் மரணத்தையோ, அல்லது     தமிழகத்தில் சிதம்பரத்தில் நடந்த கூட்ட பாலியல் வல்லுறவை பற்றியோ செய்தியாக்காத மற்மவும் காண வேண்டியுள்ளது.                                    



 பெண்கள் சார்ந்த  மானபங்கம்,கடத்தல் போன்ற குற்றங்களுக்கு முதல் இடத்தில் இருப்பது இந்தியாவில் டெல்லி தான். அதை தொடர்ந்தே மும்பை, போபால், பூனையை, ஜெய்பால், மகாரஷ்டா உள்ளது. நமது நாட்டில் 20நிமிடத்திற்க்கு  ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றாளாம். பெண்கள் பலவிதமான அவமானத்திற்கு உள்ளாகுவது 26 நிமிடத்திற்க்கு ஒரு சம்பவம் என தரவு கூறுகின்றது.

கற்பழிப்புக்கு முதல் இடத்தில் நிற்கும் அமெரிக்காவில் 93,934 வழக்குகள் பதிவாகும் போது இந்தியாவில் 18,359 வழக்குகள் மட்டுமே பதிவாகின்றது என்றதும் நம் நாட்டில் கற்பழிப்பு குறைவு என்பதல்ல. சட்டத்தால் நீதி கிடைக்கும் என நம்புவர்கள், தனக்கு நடந்த அநீதியை எதிர் கொள்ள துணிபவர்கள் இவ்வளவு பேர் மட்டுமே என்று தான் எடுத்து கொள்ளவேண்டும். தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் 45 ஆயிரத்திற்க்கு மேல் வழக்கு பதிவாகும் போது ஜெர்மனியில் 8,133உம் தாய்லான்றில் 5060 வழக்குகள் பதிவாகி வரிசை வருகின்றது. சுருங்க சொன்னால் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், படிப்பறிவான  நாடுகள் என்ற பாகுபாடில்லாது பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவதில் எல்லா நாடுகள் நிலையும் மோசமாகத் தான் உள்ளது என காண்கின்றோம்.

இந்தியாவை எடுத்து கொண்டாலும் கற்பழிப்பு வழக்குகளில் டெல்லிதான் முதலிடம் என்றால் மத்தியபிரதேசம் அதை பின் தொடர்ந்து கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் வங்காளம், ராஜஸ்தான், என பின் தொடர்கின்றது.  கல்வி அறிவில் முதலிடத்தில் இருக்கும் கேரளாவும் 7 வது இடைத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் குடும்ப நலனை கருதி பாதிக்கப்பட்ட நபரின் வாழ்கையை கருதி 80 % வழக்குகள் மறைக்கப்படும் சூழலே உள்ளது.

இந்தியாவில் இந்திய பெண்கள் மட்டுமா கற்பழிப்பு மானபங்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்? வெளிநாட்டு சுற்றுலா பெண்களும் இலக்காகியுள்ளனர்! அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அந்நாட்டு அரசாங்கம்பெண்கள் தனியாக பயணம் செய்ய உகுந்த நாடல்ல இந்தியா’ என தன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. ரஷியா நாட்டிலாகட்டும் இந்திய கடலோர பிரதேசம் பாதுகாப்பற்றது சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளது. கோவா, தாஜ்மஹால் போன்ற பிரதான இடங்களில் கூட ஜப்பான், இங்கிலாந்து, ரஷியா வெளிநாட்டு சுற்றுலா பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர்.

கற்பழிப்பு என்றதும் காவல்துறை அதிகாரிகள் கூட பெண்கள்  அணியும் உடை, உதட்டு சாயத்தை குறை கூறுகின்றனர்.  நீதிக்காக போராடும் பெண்கள் உடையையும் தோற்றத்தையும் கேலி பேசும் அரசியல்வாதிகள் குவிந்த நாடு இது. இன்னும் சுவாரசியமான ஆனால் வேதனையான விடையம் தங்கள் ஆசியில் பெண்கள் மானபங்கப்படுத்தும் போது ஊமையாக இருந்த விகே. சிங் போன்ற ராணுவ அதிகாரிகளுக்கு நீதி நியாயம் இப்போது உதிப்பது தான். இந்தியாவில் பெண்கள் பாதிப்படைய காரணமாக இருக்கும் அதிகார வர்கம் அரசியல் வர்கம் முதலை கண்ணீர் வடிப்பதை காண்பது தான் கண்ணீர் வர வைக்கின்றது.  பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகுவது எதனால் நடக்கின்றது நடந்தது என ஆழமாக படிக்காது சிந்திக்காது தூக்கு தண்டனை கொடுப்பதால் எல்லாம் தீர்வாகி விடும் என பலர் கருத்திடுவது இன்னும் வருத்தத்தையை வரவைக்கின்றது.  இந்தியாவில் ஆட்டோ சங்கர், ரங்காபில்லா,  போன்றோர் கடத்தல், கற்பழிப்புக்கு தான் துக்கிலிடப்பட்டுள்ளனர். ஏன் கோயம்பத்தூர் பள்ளி மாணவி சம்பவத்தில் என்கவுண்டரும் நடந்துள்ளது. இருந்தும்  கற்பழிப்பு கொலை மேலும் நடக்காது இல்லை, குறையவும் இல்லை.

இந்த குற்றச்செயலில் காரணம், தாக்கம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் இவ்விவாதம் செல்லும் பாதை தான் மனிதனை கற்காலம் செல்ல வைக்கும் போல் உள்ளது.  சில அரசியல்வாதிகள் குழந்தை-திருமணத்தை வரவேற்றுள்ளனர். இந்தியாவில் இப்போதும் 40% பெண் குழந்தைகள் 16 வயதிற்க்கு  முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.  மேலும் 8 மாநிலத்தில் சேர்ந்த 50% மேல் குழந்தைகள்  18 வயது ஆகும் முன்னே திருமணம் செய்து      கொடுக்கப்படுகின்றனர்.

ஹரியானவை சேர்ந்த ஒரு அரசியல்வாதி சாப்பாட்டு முறையே காரணம், பீஸா பர்கர் தான் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு ஆதாரமான வாழ்கை முறை என்று எச்சரிக்கின்றனர். இறைச்சி கோழி  விரைவாக வளர யூரியா, போஸ்பரஸ் போட்டு வளர்ப்பதும் மனித குண நலன் மாற காரணமாகின்றது என கூறப்படுகின்றது. விரைவில் முதுமை அடையும் குழந்தைகள் மனநிலையை பற்றியும் நோக்க சொல்லியுள்ளனர்.   
கற்பழிப்பு போன்ற குற்றங்கள் காரணம் என்ன எப்படி பெண்கள் தப்பிப்பது என்ற தகவல் அடுத்த பதிவில்.                                                                                                                         

20 Dec 2012

ஒரு புத்தகம் கதை!

ஒய்யாரமா மேஜை விளிம்பில் சாய்ந்து நின்று கொண்டு ஒரு விமர்சனம் பெறப்பட்டேன். நான் எழுதிய புத்தத்தில் வார்த்தைகள் கண்ணியமாக பயண்படுத்தவில்லை என்று! எல்லோரையும் புரியவைக்க நான் உலகமகா குரு அல்ல என்றாலும் கூட சும்மா அவல் மென்று   சாப்பிடுவது மாதிரி பேசுவது தான் சிரிப்பாக இருந்தது.                                                                                                                                                இதுவெல்லாம் பொறாமை ஜுவாலை என தள்ளி விட்டாலும் என் புத்தகம் பற்றி சரியான புரிதல் எனக்கு கிடைத்துள்ளது அதை உங்களுடன் பகிரும் போது இன்னும் தன்னம்பிக்கையுடன் கதைப்பேன். நான் ஒரு எழுத்து பின்புலனுள்ள குடும்பத்தில் இருந்து வரவில்லை, என் மூலதனம் என் சிந்தனைகள், எண்ணங்கள், என் சில அனுபவங்கள், அதை பகிரும்  துணிவும், உண்மையின் மேலுள்ள தீராத பற்றும் தான்.  8 வயதில் இருந்தே எழுத்து என்னுடன் தான் உள்ளது ஆனால் அது எல்லாம் தேவையற்றது என எரிக்கப்பட்டது கிழிக்கப்பட்டது தான் உண்மை. பின்பு என் முதுகலை படிப்பு ஊடகம் சார்ந்தது என்றதும் நான் கற்ற உத்தியை கையாளும் முயற்சியில் ஒரு புத்தகம் வந்துள்ளது.  எனக்கு பின்புலமாக விளங்கும் என் கணவர் நான் விரும்பும் போல் சுதந்திரமாக எழுத அனுமதிக்கின்றார், என் நண்பர்கள் உதவுகின்றனர் இதனால் மட்டுமே புத்தக உலகத்தில் என் புத்தகவும் இடம் பிடித்து விட்டது.  நான் கன்னிமார நூலகம் இன்னும் சென்று விடவில்லை என்றாலும்  என் புத்தகம் கன்னிமாரா நூலகத்தில் இடம் பிடித்துள்ளது என்பதே மகிழ்ச்சி தானே.                                                                                         நான் எழுதிய புத்தகம் நான் கண்ட நிகழ்வுகள், சூழல்கள் என இருந்தால் கூட என் வாழ்கை சரிதமல்ல.  சம்பவங்களை இயல்பாக எழுத முற்பட்ட போது என் வாழ்கை சரிதமாக சிலருக்கு படுகிறது என்றால் இவர்கள் இன்னும் வாழ்கை சரிதம் வாசிக்கவில்லை என்பதே பொருள்.  நான் இப்புத்தகம் எழுதிய போது ஒரு காலத்தை சில சாதாரண மனிதர்களை பதியவேண்டும் என்று மட்டுமே எண்ணினேன். என் கதைகளில் சாதாரண மக்கள் கொண்ட போராட்ட வாழ்கையை சித்திரிகரிக்கவே முயன்றேன். பல பெண் தோழிகள் எனக்கு தொலைபேசி ஊடாகவும் மின் அஞ்சல் வழியாகவும் கருத்தை தெரிவித்திருந்தனர்.  ஒரு விமர்சகை  எல்லா கதையிலும் நான் என்ற கதாபாத்திரம் உண்டு என்று வருந்துவதாக சொல்லியிருந்தார். நான் தேடும் வெளிச்சங்கள் என்ற தலைப்பு உள்வாங்கி எழுதிய போது நான் என்ற கதாபாத்திரம் தவிற்க இயலாது ஆகி விட்டது.                                                                         இப்புத்தகத்திற்க்கு ஆக்கபூர்வமான விமர்சனம் பெறும் நோக்குடன் கல்லூரி பேராசிரியர்கள்,ஊடகவியாளர்கள், நண்பர்கள் கைகளில் என் சொந்த செலவில் எட்ட வைத்துள்ளேன். உழைப்புக்கு விலை கிடைக்காத தொழில் எழுத்து என்று தோன்றினாலும் முதல் படி சறுக்காததில் நான் மகிழ்வேன். லண்டனில் 30 புத்தகம், நார்வே 25 புத்தகம் சென்றுள்ளது என்பதும் மகிழ்ச்சியே.  ஒரு புத்தகத்தின் விலையில் மூன்று மடங்கு செலவானது அதை வெளிநாடுகளில் எட்ட செய்ய.  இருப்பினும் நண்பர்கள் அன்பு வேண்டுதலுக்கு இணங்க என்னால் இயன்ற மட்டும் நண்பர்கள் உதவி கொண்டும் விரும்பியவர்கள் கைகளில் சேர வைத்து விட்டேன். சிலர் புத்தகத்தின் செலவை அனுப்பி உற்சாகப்படுத்திய போது  சிலர் புத்தகம் பற்றிய விமர்சனத்துடன் என்னை மெருவேற்றியுள்ளனர்.                                                 எழுதுவதும் ஒரு கலை தான்.  எழுத ஒரு கரு உருவாகுவதும் எழுத்தாளன் உரிமை, விருப்பம் என்பதையும் கடந்து ஒரு படைப்பாளியின் வாழ்கையில் இருந்து பெறப்படும்  அனுபவத்தில் இருந்து  பெறும் உன்றுதல் என்றே சொல்ல இயலும்.  அந்த உற்றுதல் ஒரு சமூக அக்கறை, நலன் சார்ந்து சிறப்பாக அமைகின்றது.                                                                                                                               இது போன்ற வாசகர்களின் விமர்சங்களையே நான்  எடுத்து கொள்கின்றேன் இதுவே எனக்கும் பலமாகவும் அமைகின்றது.  I'm Savithri Mohanaruban. Subi gave me your book (short stories) when I met her in Chennai.I love my mother tongue.I'm a fan of Tamil lanuage but I don't go deep in to it as Subi does. So with some some hesitation -I took the book.
While on the flight back home to Singapore I was looking for something to read and found your book in my handbag.
The rest is history!. I really enjoyed it .It was very interesting,easy to read,we written and very true to life. Infact I couldn't keep the book down. So the end result is I finshed reading the book in one go!.By the end of the flight I was ready to pass on the book to my friends in singapore to read!
You can see I have never wirtten a "Review " on any books in my life!!??. As I've enjoyed reading your book-that too your maiden effort- I thought I should pen few of my thoughts/ feeling (mine is just a drop in the ocean as i'm sure you would have received many acclaims) to encourage you to write books full of more wonderful scenarios in the future.
Wishing you the very best for futre ventures.
Best wishes
Savithri.
உங்கள் இலகுத் தமிழ் நடையும் கதைகள் சொல்லும் விதமும் பக்கத்தில் இருந்து கதை சொல்லுவது போன்ற உணர்வைத் தருகிறது.


வலைப்பதிவர் நண்பர் சுரேஷ்.                                                                                                                                  ஜோஸபின் என்னிடம் நான் தேடும் வெளிச்சங்கள் என்கின்ற தொகுப்பைத் தன் கன்னி முயற்சி என்று அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சோகம், காதல் என எழுதுவார்கள், இல்லை சிகப்புச் சிந்தனையுடையவர்களாக இருப்பின் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று ஒட்டு மொத்த ஆண்களின் சட்டையை பிடித்து உலுக்குவார்கள்…இரண்டும் இல்லையெனில் கடுகுத் துவையல், அரிசிக் கஞ்சி என்று சமையல் புத்தகங்களும்... மென் சோகக் கவிதையும் வடிப்பார்கள்.


இதில் எந்த வகையும் இல்லாமல் தன் மனம் போன பாதையில் ஒரு கதைச் சொல்லும் பாணியில் எந்த விதமான அலங்கார வார்த்தைகளைச் சேர்க்காமலும் பக்கத்து வீட்டு அக்கா மின்சாரமில்லாத பொழுதுகளில் குழந்தைகளுடன் வாசல்ப் படியில் அமர்ந்து ஏதோ ஏதோ சம்பவங்களை, ஏமாற்றங்களைக் கதைப்பதைப் போல் உள்ளது.


ஒரு பார்வை – செல்வி ஷங்கர்

 கதைகளைப் படிக்கின்ற போது சமுதாயம் உணர்ந்தது போலவே நிகழ்வாக்கி எழுத்துகள் செல்வது ஆசிரியரின் ச்முதாய்ப் பார்வையைக் காட்டுகிறது.

 கருத்து நடையும் எழுத்து நடையும் மொழி நடையும் உணர்வோட்டச் சிந்தனையும் சமுதாயக் கருத்தும் இயறகையும் முட்டி மோதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது..
                                                                                              சிவசுதன் -சிலோண்
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ,
1) சொந்த வீடு .
2) என் பூந்தோட்டம் சொல்லும் கதை .
3) என்னைச் சிலுவையில் அறைந்த பைத்தியம் .
4) நினைவுகளின் சக்தி .

இந்தக் கதைகள் அனைத்தும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன . அது தான் உங்கள் எழுத்தில் உள்ள வல்லமை என்பேன் . சலிப்பே வராமல் படித்த ஒரு சில புத்தகங்களில் உங்களுடைய படைப்பும் ஒன்று .அத்துடன் என்னைக் கடந்து சென்ற சொந்தங்கள் மற்றும் நட்புக்களை ஒரு தடவை மீட்டுப் பார்க்கச் செய்துவிட்டீர்கள் . என் குழந்தைப் பருவத்திற்கு ஒரு தடவை என் எண்ணங்கள் சென்று வந்தன . வரும் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள ஒரு தன்னம்பிக்கையும் இனம் தெரியாத இன்பத்தையும் தருகிறது .


கவிஞர் வைகறை வைகறை                                                          
சமீபத்தில் ஜெ.பி.ஜோஸபின் பாபா அவர்கள் எழுதிய "நான் தேடும் வெளிச்சங்கள்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன்!
ஆண்டவனைப் பாடுதலைத் தாண்டி, ஆள்பவனைப் பாடுவதைக் கடந்து, தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அழகு பார்த்து வந்த இலக்கியத்தில் இன்று சாமானிய மக்களைக் குறித்து எழுதப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது!

"நான் தேடும் வெளிச்சங்கள்" முழுவதும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையே பேசப்படுகிறது! அதுவும் அவர்களின் மொழிநடையிலேயே பேசப்படுகிறது!
வியாபாரப் பண்டிகை எனும் அடைமொழி கொடுக்கப் பட்ட தீபாவளி குறித்த 'தீ வலி" கதை...; சொந்த வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தின் வழியைக் கூறும் "சொந்தவீடு" கதை...என கதைகள் அனைத்தும் சராசரி வாழ்விலிருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது!  கதையாசிரியர் ஜோஸபின் பாபா அவர்களின் மொழிநடை அருமையாக இருக்கிறது!  கிளைக் கதைகளை அருமையாக வெளிப்படுத்துகிறார்!  அதே சமயம் மையக்கதையை இன்னும் வலுவாக அமைத்தால் மேலும் சிறப்பாக அமையும்!!                                                                                                                                 இரண்டு புத்தகங்களின் ஆசிரியரான எச்.பீர்முஹமத்                                                                  
நான் தேடும் வெளிச்சங்கள்: தமிழின் புதிய சிறுகதை எழுத்தாளரான ஜோஸ்பின் பாபாவின் முதல் சிறுகதை தொகுப்பு இது. இத்தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. எதார்த்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கதைளே பெரும்பாலும் என்றாலும் அதனூடே வாழ்வின் வியசனம் வெளிப்படுகிறது. சக மனிதன் அன்றாட வாழ்வில் கடந்து போகும் நிகழ்வுகள், வினைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் தேர்ந்த கதையாக வடிவம் பெறுகின்றன. அது சி

லசமயங்களில் நினைவின் நதியாக, சுவாரசிய, மெச்சத்தக்க உணர்வுகளை நமக்குள் அதிகம் சாத்தியப்படுத்தும். இதிலுள்ள என்னுயிர் தோழன், வீடு, சேரநாட்டு அரண்மனையில் ஒரு நாள், என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம், நினைவுகளில் சக்தி போன்ற கதைகள் அவற்றைத்தான் வெளிப்படுத்துகின்றன. தமிழில் நவீன, பின்நவீன கதை முயற்சிகள், எழுத்தாக்கங்கள் எல்லாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டன என்றாலும், இன்னும் இதுமாதிரியான எதார்த்த எழுத்துக்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கதை வடிவத்திற்கான புனைவு (Fiction)என்பது இதிலுள்ள குறைபாடு என்றாலும் ஜோஸ்பின் பாபாவின் கதைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த தொகுப்பில் அணிந்துரை என்ற பெயரில் அதிக பக்கங்கள் வீணடிக்கபட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஒருவருக்கு முதலாவதாக வரும் தொகுப்பில் இது தவிர்க்க இயலாது என்றாலும் சில சமயங்களில் தவிர்க்க முடிந்ததே. நான் தேடும் வெளிச்சங்கள் அதன் தொடர்ந்த பயணத்தில் இன்னும் அதிக தூரம் பாய்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.

8 Dec 2012

நித்திரைப் பயணங்கள்! கவிஞர் மு.ஆ. பீர்ஒலி

கோயம்பத்தூர் புத்தக வெளியீடு விழாவில் சந்தித்து புத்தகவும் பெற்று கொண்டேன். பெற்ற புத்தகம் ஒரு நண்பர் வாங்கி விட சுபி அக்கா வந்த போது மறுபடியும் ஒரு புத்தகம் கேட்டு வாங்கி  பல முறை வாசித்து விட்டேன்.  இருந்தும்  கருத்து எழுத  தயக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது.  இன்று மறுபடியும் சகோதரை சந்தித்த போது என் பொறுபற்றத்தனத்தை நினைத்து வருந்தி தைரியம் வரவழைத்து கொண்டு என் கருத்தை பகிர்கின்றேன்.

ஒரு நல்ல படைப்பு என்பது படைபாளியின் சிந்தனையில் இருந்து, தான் அடைந்த பாதிப்பு,  அனுபவத்திலிருந்தே  பிறக்கும். அவ்வகையில் கவிஞரின் சிந்தனையின் அடிநாததில் இருந்து புறப்பட்ட இக்கவிதை தொகுப்பு சுவாரசியம் மட்டுமல்ல நமக்கும் சில உணர்வுகளையும் இட்டு செல்கின்றது.  ஒவ்வொரு முறை  புத்தகம் வாசிக்கும் தோறும் பொருட்கள் மேலும் மேலும் விளங்கி கொண்டே இருந்தது.  வார்த்தை கையாடலில் ஒரு கவனம், கவுரவம், பொறுமை, மற்றும்  ஒரு ஸ்ருதி சேர்ந்து கலந்து  இருப்பது வாசிப்பவனின் மனதை தொட்டு செல்கின்றது.

"மலரின் பயணம்" என்ற முதல் கவிதையின் ஊடாக ஒளியை தேடியுள்ள பயணத்தை கவிஞர்   துவங்குகின்றார். ஆனால் வாழ்கையில் கண்டதோ பொய் முகங்கள்! இதனால் மனம் கசந்து விம்மலுகளுடன்  அடுத்த கவிதை ஊடாக உண்மையை தேடி தன்  பயணத்தை தொடர்கின்றார். தன் பல கவிதை வழியாக நம்பிக்கையுடன் பொய் முகமற்றவரை தேடி கொண்டே இருக்கின்றார்.
"நிறமாறிக் கொண்டிருக்கும் 
திரைச் சீலை
பொய்முகம்
விடுபட்ட நிலவு
இன்னமும் தேடுகின்றேன்" 
இதனிடையில் கவிஞருக்கு கவிதையாக ஒரு தேவதை வருகின்றார்.  ஆனால் விதவை பெண் போல் என உவமைப்படுத்தி நடக்காது போன விருப்பத்தை, வாழ்வில் எதிர் கொண்ட  ஏமாற்றத்தை மனத்துயரை கோடிட்டு காட்டுகின்றார் கவிஞர்!



"அல்லி இதழால் அவளுக்கு இசைத்திடடி" என்ற கவிதை ஊடாக காதல் தோல்வியில் தவழும் ஒரு இளம் மனிதனின் மன உளச்சலை  புடம் இட்டு காட்டுகின்றார்.  இதமான வார்த்தைகளுடன் ஆனால் கனத்த ஒரு சூழலை இட்டு செல்கின்றது இக்கவிதை.

தியானங்கள் தொடர்கின்றன என்ற கவிதையினூடாக பெரும் மழைக்கு பின்பு அமைதி ததும்பும் வானத்தை போல்  முற்றும் துறந்த மனநிலையை ஞான நிலையை வெளிப்படுத்துகின்றார்.  ஆனால் அடுத்த இரு கவிதைகளில்  தான் தொலைத்த, அரும்பும் போதே நுள்ளைப்பட்ட காதலை நினைத்து வெந்து உருகி ஒரு குழந்தையின் மனம் கொண்டு ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
"உன்னை நேசித்த பொழுது 
 ன்னையே நேசித்தேன்".

"என்னையே வெறுத்தேன் 
உன்னை நேசித்ததால்"

"எங்கோ 
தொலைதூரத்தில்
இராப் பிச்சைக்காரனின்
ஈனக் கதறல்கள்"

"மலர்கிறது" என ஒரு கவிதை அழகிய தென்றல் வீசி அருமையான சொல்லாடலுடன் நம்மை அழைத்து செல்கின்றது. இது போன்ற கவிதைகளை விவரித்து சொல்லுவதை கேட்பதை விட வாசித்து அனுபவிக்கும் சுகம் அலாதியானது என்று மட்டுமே சொல்ல இயலும். இக்கவிதை வாசிப்பின் முடிவில் நாமும் நம்மை அறியாது மலர்ந்து சென்றிருப்போம் .

அடுத்து வருவது ஒரு பெரும் துக்கத்தின், ஏமாற்றத்தின், பிரிவின் தாக்கத்தை வெளிப்படுத்தும் கவிதை. இதை வாசிக்கும் போது  ஒரு வித உளைவியல் மனதாக்கங்கள் நம்மையை தாக்குவதை கண்டு உணராது இருக்க இயலவில்லை. நித்திரையில் நாம் கண்ட சில கனவுகளுடன்  பயணிப்பது போன்று தான் உள்ளது. 

எங்கு சென்றிட்டாய்? என்ற கவிதை காதலியின் பிரிவால்-ஏக்கத்தால் மூர்ச்சையாகிப் போன காதலனின் மனநிலையுடன்  82 வரிகளை ஒரே மூச்சில் உருவிட வைத்துள்ளார். அடுத்த கவிதையில் நிதானமான மனநிலையுடன் காதலியை தோழியாக பாவித்து தன் மனதையையும் தோழியேயும் தேற்றும் தாலாட்டாக உள்ளது. 

அழுது புரண்டு வெறி கொண்டு அழுது புரண்ட காதலன்,   உண்மையை கிரகித்தவராக நிஜங்களில் நிம்மதி கொண்டு    மனநிறைவுடன் புது உறவில் லயிப்பதை அடுத்து ஓரிரு கவிதைகளில்  அரங்கேற்றிகயுள்ளதை நாமும் ஆசுவாசமான ரசிக்க இயலும். இனியுள்ள கவிதைகளில் கணவன் மனைவியின் உறவின் பாரம்மியமான நிலையை, உன்னதமான தருணங்களை அழகிய சொல்லாடல்கள் கொண்டு விளக்குகின்றார். அமைதியான நதி போல் வாழ்க்கை  செல்வதை காணலாம்.  காதல் விரகத்தில் இருந்து காதலில் விழும் சூழலை, அதாவது பழம் நழுவி பாலில் விழுவதை காண இயலும்(பக்கம் 43).
சின்னஞ் சிறு மலரின் 
செம்மை வனப்பு கண்டு
செயலற்று.. 
சொக்கி விட்டேன்.
நித்திரை விழிகள் என்ற கவிதை சமூக நிலையை விளிம்பு நிலை மனிதனின்  கதையை சொல்கின்றது. காதல் மனைவி குழந்தை என அழகிய குடும்பத்தில் வறுமையால் உடலை விலைபேச வேண்டி வந்த அபலைப்பெண்ணின் நிலையை கவிதையான வடித்து செல்கின்றார் கவிஞர். இந்த கவிதைகளில் சுயபச்சாதாபம், சுயவருத்தம், என சுயத்தில் உழலும் கவிஞர் சமூகத்தை கரிசனையுடன் உற்று நோக்கும் நிலையை காணலாம்(பக்கம்:48). பிரிவையும் நம்பிக்கையோடு தேடும் மனதுடன் கவிஞர் கவிதை படைத்துள்ளார்(உதயத்தை தேடி...),வயிற்று பசியோடு அலையும் பிச்சைக்காரிகளையும் உணவாக்கும் கேடுகெட்ட சமூகத்தை அருவருப்புடன் நோக்கும் கவிஞர், வறுமையால் ஒரே போல்  துன்பத்தில் உழலும்  தாயும் சேயையும் அறிமுகப்படுத்துகின்றார். வேலியே பலபொழுதும் பயிறை மேயும் நிலையும் உணர்த்தும்  வழியாக தன்னில் இருந்து முழுதுமாக சமூக போராளியாக உருமாறுவதை காணலாம்.

தொடரும் ஜென்மபந்தம் .... என்ற கவிதையில் மறுபடியும் காதலியை தேடியலையும் ஆத்மாவை உணர்த்துகின்றார். 'ஒரு மனிதனின் தேடல்' என்ற கவிதை  தனித்து நிற்கும் பனைமரம் போன்ற தனிமையுடன் மனிதனை ஒப்பிட்டு மறுபடியும் தேடல்களுடன் பயணம் ஆரம்பித்து விட்டார் கவிஞர். கவிஞரின் அடுத்த புத்தகத்தில் நாம் சங்கமிப்பதுடன் கவிஞரின் தேடலில் விடையில் நாமும் சென்றடையுவோம். 

இப்படியாக ஒரு ஆழ்ந்த நித்திரையில் காணும் கனவு போல் பல கவிதைகள் நம்மை இதமாக தாலாட்டி, ஆழமான சிந்தனைக் கனவுகளுடன் பயணிக்க வைக்கின்றது. இந்த உலகத்தின் கபடு பொய்மையை கண்டு கலங்கும் கவிஞர் நம்மையும் கலக்கமடைய செய்து  விடை தேட பணிந்து தேடல்களுடன் விடை தருகின்றார். 

சாலமன் பாப்பையா, பேரா ஞானசம்பந்தன் போன்றோர் முன்னுரை வாழ்த்துரை வழங்கியிருப்பது புத்தகத்திற்கு இன்னும் பலம் சேர்க்கின்றது.
கவிஞரின் உரையும் ஒரு ஓடும் நதி போன்று வாழ்கை தத்துவம், இறை நம்பிக்கை ஊடாக ஒரு இனிமையான கீதமாகத்தான் உள்ளது. அட்டைப்படத்தில் காணும் பச்சை நிறம் கனவுகளில் வனைப்பான பயணங்களை சொல்கின்றதா என வாசிப்பவர்கள் சொல்ல வேண்டும். ஒரு நல்ல கவிதை புத்தகத்தை வாசித்த மகிழ்ச்சியுடன் எளிதில் மறையாத உணர்வுகளுடன் நீங்களும் பயணிப்பீர்கள் என துணிவுடன் கூறலாம்.

எளிமையின் இருப்பிடவும் பண்பின் இலக்கணமும், சகோரத்துவத்தின் பிரதியாம் சகோதரை புத்தக விழாவில் சந்தித்ததும் நான் அவருடைய சொந்த சகோதரியாக  நேசிக்கப்படுவதும்  இறைவனின் கொடைதான் என்ற நிறைவுடன் சகோதரின் புத்தகத்தை என் பார்வையில் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி கூறி இப்பதிவை உங்கள் முன் படைக்கின்றேன். நீங்களும் வாங்கி வாசித்து கவிதையை அனுபவிக்க வேண்டுகின்றேன்.