9 May 2021

ஜோஜி - மலையாள மொழி திரைப்படம்,

 ஜோஜி 2021 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி குற்ற நாடகப் திரைப்படமாகும்,

இது திலீஷ் போத்தன் இயக்கத்தில் மற்றும் சியாம் புஷ்கரன் திரைக்கதையுடன் வெளிவந்துள்ளது. பஹத் பாசில் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த கதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் மக்பத் நாடகத்திலிருந்து ஈர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடிக்கிறார். பாபுராஜ், ஷம்மி திலகன், உன்னிமாயா பிரசாத் ஆகியோர் மற்றைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பல இந்தியக் குடும்பங்களில் நடக்கும் ஒரு கதை. கோட்டயம் அருகிலுள்ள பல ஏக்கர் நிலபுலங்களுள்ள உழைப்பாளியான 74 வயது அப்பா, அவருடைய மூன்று மகன்கள் அடங்கிய குடும்பம். முதல் மகன் விவாகரத்தாகி தனது பதின்ம வயது மகனுடன் தந்தைக்கு உதவும் விவசாயியாக வாழ்கிறார்.
இரண்டாவது மகன் வியாபரத்தில் கவனம் செலுத்துகிறார்.
மூன்றாவது மகன் பொறியியல் படிப்பை இடைவழியில் விட்ட ஒரு தாந்தோன்றி. எல்லாருடனும் கனிவாக பேசுகிறான்,உதவுகிறான். ஆனால் சொத்தை பங்கு வைக்க தந்தை விரும்பவில்லை என்ற கோபத்தில் உடல் நலமற்ற நிலையில் இருந்து தேறிவரும் தந்தையை கொலை செய்கிறான். இந்த கொலையை கண்டிபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் தனது மூத்த சகோதரனையும் கொலை செய்கிறான். இத்தனை குற்றச்செயலகளுக்கும் உடந்தையாக அண்ணிக்காரி அமைதியாக வீட்டிலுள்ளார்.
தான் செய்த கொலைகள் வெளியே தெரிந்து விட்ட சூழலில் தற்கொலை செய்துகொள்ள துணிகிறான். ஆனால் காப்பாற்றப்பட்டுள்ளான்.
இந்த கதையின் பின்புலனாக கேரளா கிறிஸ்தவக் குடும்பம் எடுக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் மிகவும் நுணுக்கமாக ஒவ்வொரு காட்சிகள் ஊடாக கதை சொல்கின்றனர்.
மனிதன் வாழ்க்கையில் தவறுகள் பெருக பெருக கடவுளை இறுக பற்றி கொள்வது போல் நடிப்பதை அந்த வீட்டு பெண் பைபிளை எடுக்கும் காட்சியூடாக விளக்குகிறார். மாமனார் எப்போது சாகுவார் என்று காத்துக்கிடக்கும் மருமகள், இறந்ததும் பெட்டிமுன் கவலையுடன் இருப்பதும், பூவைத்து பெட்டியை அலங்கரிப்பதும் முரண்பட்ட மனிதர்களின் இரு முகத்தை விளக்குகின்றனர். ஒரு வீட்டில் புகிரும் பெண்கள், புகுந்த வீடுகளின் நிலையை எவ்விதம் தாக்கம் செலுத்துகின்றனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
படித்த பட்டம் பெற்ற மனிதர்களின் சிந்தனை செயல்பாடுகள் உழைப்பையும் சுயகவுரவத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்த நிலையில் தனது தந்தையின் சொத்தை நம்பி நகர்த்தும் நிலையை சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பாதிரியார்கள் செலுத்தும் நேர்மறை - எதிர்மறை தாக்கத்தை பற்றியும் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கிரிமினல் குணம் கொண்ட ஜோஜி என்ற கதாப்பத்திரத்தில் நடிக்க எடுத்த துணிவு, பகத் பாஸிலுக்கு, தன் நடிப்பு மேல் இருக்கும் தன்னம்பிக்கை சார்ந்தது ஆகும். சிறப்பாகவும் நடித்துள்ளார்.
ஒரு குற்றப்பின்னணி படத்திற்கான விருவிருப்பு இல்லாது இருப்பது ஒரு குறைபாடாகும். காட்சிகள் திரையில் வரும் முன்பே கதையின் போக்கு விளங்குவது ஆர்வத்தைகுறைக்கிறதுு.
மற்றபடி நல்ல கதை, காட்சியமைப்பு, காட்சித் தொகுப்பு. ஒவ்வொரு நடிகரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாகவே செய்கின்றனர். இசையும் குறிப்பிட்ட படியில்லை என்றாலும் நல்லமே.
May be an image of 7 people, beard and text that says "AMAZON ORIGINAL MOVI JOJI DILEESH POTHAN SYAM PUSHKARAN BHAVANA STUD WATCH NOW prime video"
Natarajan Ponnambalam, Gnanaprakasam Gerald and 7 others
1 comment
Like
Comment
Share

7 May 2021

ஷீலா / மா. ஆனந்த ஷீலா- Wild Wild Country!

 


இன்றும் ஓயாது அடிப்பது ஓஷோ அலை!

தற்போது நாம் காணும் எல்லா மத கார்ப்பரேட் சாமியார்களின் பிதாமகன் தான் இந்த ஓஷோ.
இந்திய கலாச்சார தாக்கத்தால் மக்கள் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டும், நம்பிக்கொண்டும், கட்டுண்டு கிடக்கும் வேளையில் தனித்து இருப்பதை பற்றி, ,தானாக , தனக்காக இருக்க வேண்டியதின் அவசியத்தை அறிவுறுத்தி பிரபலமானவர் ஓஷோ.
உள்ளூர் வெளியூர் என பல லட்சம் மனிதர்கள் தன்னை சூழ்ந்து இருந்தாலும் பெண்களை தனக்கு மிகவும் பொறுப்பானவர்களாக வைத்திருப்பது ஓஷோவின் பாணி.
அப்படி ஓஷோவின் தனிச் செயலாளராக இயங்கிய ஷீலா / மா. ஆனந்த ஷீலாவை பற்றி Maclain Way Chapman Way இயக்கத்தில் Wild Wild Country! ஒரு ஆவணப்படம் வந்துள்ளது.
ஷீலா வெளிநாட்டில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கும் வேளையில் மார்க் என்பவருடன் வாழ்கிறார். அந்த நபருக்கு தீரா நோய். அந்த நபரையும் அழைத்துக்கொண்டு பூனே வந்து சேர்கிறார். பிற்காலம் சின்மயா என்ற பெயர் மாற்றப்பட்ட மார்க் ஆஸ்ரமஹ்த்தில் இறந்து விடுகிறார்.
அப்போது தான் ஷீலா தன் துயரில் இருந்து வெளிவர ஓஷோவின் ஆசிரமத்தில் வேலைகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்.
ஷீலாவின் வாக்குப்படி தனக்கு பக்தியிலோ , தியானத்திலோ ஈடுபாடில்லை. ஓஷோவை காதலித்தேன். அந்த காதல் உடல் சார்ந்ததும் அல்ல. ஓஷோவின் கண்ணை நோக்கிக் கொண்டே வாழ விரும்பினேன் என்கிறார்.
அப்படி இருக்கயில் தான் ஓஷோவிற்கு இந்தியாவில் தனது ஆஸ்ரமம் அமைக்க இந்திராகாந்தியின் அனுமதி தேவைப்படுகிறது. செக்ஸ் சாமியார் என்று அறியப்பட்டிருந்த ஓஷோ ஒரு ஆஸ்ரமம் அமைப்பதை இந்திராகாந்தி அரசு முற்றிலும் தடை செய்கிறது.

அப்போது தான் ஷீலாவின் இருப்பு ஆரம்பிக்கிறது. தனக்கு அனுமதி தந்தால் தான் அமெரிக்காவில் ஆஸ்ரமம் நிறுவ செயlபடுவதாாக சொல்கிறார். அதே போன்றே ஒரீகன் என்ற இடத்தில் ஆஸ்ரமம் அமைக்கின்றனர். வரண்ட பாலைவனம் மாதிரி இருந்த ஒரு இடத்தை ஒரு நகரத்தின் எல்லா வசதிகளும் கொண்ட எழில்மிகு இடமாக உருவாக்கி விட்டனர். தங்களுக்கு என ஆயுததாரிகள், தங்கள் குழந்தைகளுக்கு பாடசாலைகள், தேனீர் கடைகள், மேலும் உலகம் முழுக்க இருந்து மக்கள் கூடும் கொண்டாடும் ஓஷோ தலமாக உருவாகுகிறது.
இத்தருணத்தில் ஒரீகன் அரசிற்கே அச்சம் வருகிறது. இவர்கள் நடவடிக்கை குழப்பத்தை விளைவிக்கிறது. ஆஸ்ரமத்தை அச்சுறுத்த ஆரம்பிக்கின்றனர். தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்களை குவிக்க ஆரம்பிக்கிறார் ஓஷோவின் காரியதரிசியான ஷீலா. ஓஷோவையும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா ஒரீகன் ஆஸ்ரமத்தில் இறக்குமதி செய்கிறார் ஷீலா.
ஆஸிரமத்தின் புகழ் ஹாலிவுட் வரை எட்டிவிட்டது. ஹாலிவுட் ஆசாமிகள் வர ஆரம்பித்ததும் பணம் , கைகடிகாரம், விலை உயர்ந்த கார்கள் அத்துடன் மயக்கு மருந்தும் வரத் துவங்குகிறது.
பெரிய இடத்து ஆட்கள் வர வர ஓஷோ உன்மத்த நிலைக்கு வந்து விட்டார். தன் காரியதர்சியான ஷீலாவை மாற்றி விட்டு அங்கு ஒரு திரைப்படத்துறையை சேர்ந்த god father movie யின் தயாரிப்பாளரான பெண்னை பணியில் அமர்த்துகிறார்.
அப்பெண்ணின் காதலன் தேவ்ராஜ் ஓஷோவை கொலை செய்யதிட்டம் தீட்டினதை அறிந்து கொள்கிறார் ஷீலா. அதை தடுக்கும் முயற்சியில், இன்னும் சில பெண் சாமியார்களையும் இணைத்து செயல்படுகிறார்.
ஓஷோவோ பேசும் தத்துவ அளவு புத்திசாலியாக இல்லை வாழ்க்கையில். மற்றவர்களை கணிப்பதில் முழு மடையர் மட்டுமல்ல, ஒரு கற்பனைவாதியாகவும் இருக்கிறார்.

ஷீலா சோர்ந்து போய் விட்டார். இனி தன்னுடைய செயல்பாடுகளுக்கு இங்கு இடம் இல்லை என விளங்குகிறது. இங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார். தன் காதலனை இழந்ததுமில்லாது, தான் நேசித்த அதிகாரத்தையும் ஒரே நேரம் இழக்கிறார். 13 பேருடன் ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறார்.
இப்போது தான் , ஓஷோவில் காதல் அதன் கடைநிலை எதிர்பக்கமான வெறுப்பை, குரோதத்தை அடைகிறது. ஓஷோவிற்கு காதலியின் மேல் இருந்த அப்பழுக்கற்ற அன்பு, நம்பிக்கை பொறாமை மற்றும், வெறுப்பை எட்டுகிறது. இப்போது தான் ஓஷோ எழுதிய விடயங்களுக்கும், அவர் நேரடியாக பிரச்சினைகளை எதிர்கொண்ட போது கையாண்ட விதத்திற்குமான வித்தியாசம் அறியும் போது அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம்.
எந்த அரசு, அதன் காவல்த்துறை இவர்களை அழிக்க திட்டமிட்டார்களோ, எந்த அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஷீலா போராடினாரோ; அவர்களிடமே ஓஷோ சரணடைகிறார். தனது காரியதர்சி சட்டத்திற்கு புறம்பாக செயல்களில் ஏற்பட்டதாகவும், தன்னுடைய பணத்தை திருடி சென்றதாகவும் வழக்கு தொடர்கிறார்.
அரசிற்கு கொண்டாட்டம். விசாரணை ஷீலாவை நோக்கி நகர்வதை விட அவர்களை ஆசிரம செயல்பாடுகளை நோக்கி நகர்கிறது.
முதலில் ஓஷோவை கைது செய்யுகின்றனர்.அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுகிறேன் என்ற உறுதி வாங்கிக்கொண்டு வெளிநாட்டில் கிடைத்த கார்களை விற்று தண்டம் கட்டியதும் விடுதலை செய்கின்றனர். ஓஷோ, பூனேயிலுள்ள தனது பழைய ஆசிரமம் வந்து அடைகிறார்.
ஆசிரமவாசிகளையும் அரசு அந்த இடத்தை விட்டு கலைத்து வெளியேற்றுகிறது ஒரீகன் அரசு. அடுத்து ஷீலாவையும் கைது செய்கிறது. மூன்று வருடம் சிறைத்தண்டனை பெறுகிறார். அவரையும் அமெரிக்காவில் தங்கக் கூடாது என்ற கண்டிப்பில் விடுதலை செய்கின்றனர்.
ஷீலா தற்போதும் ஓஷோவில் நேசமாக இருக்கிறார். ஓஷோவின் தாக்கத்தால் தான் தற்போதும் வாழ்வதாகவும்; தான், உடல் நலமற்றோருக்காக ஒரு இல்லம் நடத்துவதாக கூறுகிறார்.
ஓஷோ, சாதாரண ஆண்கள் போலவே ஷீலா தன்னை விட்டு போனதும் விபச்சாரி என்கிறார், தான் தன்னுடைய காரியதரிசியை காதலிக்கவில்லை என்கிறார். ஷீலா தண்டிக்கப்பட வேண்டும் அல்லது தன் ஆட்களால் கொல்லப்படுவார் என்கிறார்.
ஷீலா தனது குரு ஓஷோவிற்கு எது நடக்கக்கூடாது என பயந்தாரோ அப்படியே ஓஷோவின் மரணம் மர்மத்தில் முடிந்தது.
இன்றும் ஓஷோ தெய்வீக புருஷனாக பலரால் போற்றப்படும் போது அந்த தெய்வீகத்தில் காதலை தேடின சாதாரணப் பெண் வாழ்க்கை முழுதும் ஊடகக்காரர்களால் வேட்டையாடப்பட்டு குற்றவாளி என்ற முத்திரையுடன் வாழ்கிறார்.
ஓஷோவை போல் ஷீலா கொல்லப்படவில்லை. தன் அறிவால், தன் ஆளுமையால், ஆற்றலால் இன்றும் வாழ்ந்து வருகிறார்.
கதை தீரும் போது குரோதத்தின் உச்சம் சென்ற சாமியார் ஓஷோவை விட உண்மையான காதலால் வெற்ற ஷீலா தான் மனதில் நிழலாடுகிறார்