Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

3 Jul 2025

"சட்டத்திற்கு பார்வையில்லை, நாம் அதன் வலுவான கண்கள் ஆக வேண்டும்" "The law doesn't see, and we have to be its strong eyes .F. V அருள் IG

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வாழையடி பூர்வீகமாக கொண்ட   

F. V அருள் (பிரெடெரிக் விக்டர் அருள்)  1917 நவம்பர் 24 அன்று யாங்கூனில் (ரங்கூன்) பர்மாவில் பிறந்தார்.  

In 1970, Frederick Victor Arul, also called as F.V.Arul IPS became the first Indian to serve the interpol as the vice president of Asia.— at Tamilnadu Police Museum.

  

யோலா மற்றும் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரிகளில் படித்த இவர்  பிரிட்டிஷ் ஆட்சி காலம் 1942 ஆம் ஆண்டு இந்திய போலீசில் தேர்ச்சி பெற்றார்.    F.V அருள் ஹாக்கி விளையாட்டு வீர ராகவும் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

 

1968 மே 31 முதல் 1971 மே 6 வரை மத்திய விசாரணை பணியகத்தின் (CBI) இயக்குநராக பணியாற்றியுள்ளார்.  CBI-யில் பணியாற்றும் காலத்திலேயே, இவர் இண்டர்போல் அமைப்பின் செயற்குழுவில் ஆசியாவிற்கான துணைத் தலைவராக பதவி வகித்து, அந்த உலக அமைப்பில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியராகவும் இருந்தார்

1973 முதல் 1976 வரை  மாநில காவல்துறையில் கடைசி இன்ஸ்பெக்டர் ஜெனரல் IG  பதவியை வகித்தவர். 1976-ல் அவரின் ஓய்வுவிற்கு  பிறகு, அப் பதவி டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (DGP) என மாற்றப்பட்டது.

பிரெடெரிக் விக்டர் அருளின் போலிஸ்  காவல் பணிகள் குறித்த அவரின் அறிவு அளவிட முடியாதது. அவருடைய கொள்கைகள்  ஆளும் அரசியல் வசதிக்கேற்ப அமையவில்லை, அரசியல்  விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் அவரிடம் இருந்தது.

அவர் சிலருக்கு 'விருப்பமானவர்' என்று சொல்லப்படும் வகையிலோ சலுகைகள் நாடுபவர்களுக்கு அவர் எளிதில் அணுகக்கூடியவராக இல்லாமல் இருந்தார். அருளின் வாழ்க்கை இந்திய காவல் துறையினருக்கு ஒரு பேருதாரணம் ஆகும்.

 

சிறந்த உடற்தகுதி, நீண்டநேர திடமான பணி, தூய்மையான வாழ்க்கைமுறை ஆகியவற்றால் அவர் தனக்கென ஒரு முத்திரை பதித்திருந்தார். 1956ல் சென்னை துறைமுக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 1965ல் ஆங்கில எதிர்ப்பு இயக்கம் போன்ற நிகழ்வுகளை அவர் தைரியமாக கையாண்டார்.  சட்ட ஒழுங்கு காவலாளி ஆக செயல்பட்டுள்ளார்


இரண்டு முக்கிய வழக்குகள் அருளுடன் நெருக்கமாக தொடர்புடையவை
யாக இருந்தன

1. 1950
களில் நடந்த நியூயார்க் காடன் சூதாட்டம்: மதராசில் ஒரு கும்பல் காடன் விலைகள் அடிப்படையில் சூதாடி, போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து பாதுகாப்பு பெற்றனர். அருள் விசாரணை செய்து பலரை குற்றவாளிகளாள் என  நிரூபித்தார்.

2. 1959
ல் கோயம்புத்தூரில் நடந்த ரூ.100 கள்ளநோட்டு வழக்கு: சுமார் ஒருவர் – கோயம்புத்தூரின் துணியதொழில் முதலாளி கிருஷ்ணன் – பணச் சிக்கல்களை சமாளிக்க கள்ளநோட்டுகள் அச்சடிக்க திட்டமிட்டதாக அவர் கண்டுபிடித்தார். நேரடி விசாரணைகள், சாட்சிகள் என்று மிகவும்  காத்திரமான எச்சரிக்கையுடன் விசாரணையை  மேற்கொண்டவர்.


இந்த வெற்றிகள் அவரை 1968-ல் CBI இயக்குராக உயர்த்தின.
அங்கு 3 ஆண்டுகள் பணியாற்றியபின், Interpol-இன் செயற்குழுவில் ஆசியாவுக்கான துணைத் தலைவராக (Vice-President) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆனார். அவரது அறிவும், பண்பும், மற்றும் சர்வதேச குற்றவியல் விசாரணைத் துறையில் நிபுணத்துவமும் பெரும் மதிப்பை பெற்றன.


Interpol  செயலாளர் ரேமண்ட் கெண்டல் இவரை பற்றி உருக்கமாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.

”தொழில்நுட்பம் இன்று வளர்ந்திருந்தாலும், அவரது தொழில் நிபுணத்துவம் என்றும் நினைவில் இருக்கும்." அருளுடன் எனது முதல் சந்திப்பு 1965ல், IPS பயிற்சியை முடித்தபின் சென்னை காவல் தலைமையகத்தில் நடந்தது. அவர் நேரத்தையும், வார்த்தையையும் வீணாக்காதவர். அடக்கம் மற்றும் ஆளுமையுடன் பேசுவார்.  மாவட்ட காவல் பணிக்கேற்றவர் நான் இல்லை என உணர்ந்ததும், நேரடியாக டெல்லிக்கு, உளவுத்துறை பணிக்கு என்னை அனுப்பிவைத்தார்”.


அருள் பேசுவதில் குறைவாக இருந்தாலும் ஒரு போலிஸ் அதிகாரியாக  செயலில் ஆளுமை கொண்டவராக இருந்துள்ளார்.  இயற்கையே நின்று ‘இது தான் ஒரு மனிதன்’ என்று சொல்வது போல்.”  அவரின் வாழ்வு மேன்மையாகவும், இயற்கையின் அனைத்து கூறுகளும் ஒன்றாகச் சேர்ந்ததுபோல் இருந்துள்ளது.

இந்திய காவல்த் துறையில் நேர்மை கொண்டவராக பெயர் பெற்றவர் எப். வி. அருள். இந்தியாவின் மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) தலைவராக இருந்த காலத்திலும், அதற்கு முன்னர் அவர் கொண்டிருந்த  பணிக்காலத்திலும், பல முக்கிய விசாரணைகளில் அவரது பங்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவருடன் பணியாற்றியவர்கள், அவர் மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு செயல்படுத்துபவராக இருந்தார் என்கின்றனர்.  நீதிக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அவர் வழிநடத்திய முக்கியமான விசாரணைகளில் தெளிவாக இருந்தது என்கின்றனர்.  எப்போதும் நேர்மையானவராக இருந்த எப். வி. அருள், "சட்டத்திற்கு பார்வையில்லை, நாம் அதன் வலுவான கண்கள் ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகள், எவருக்கும் பயமின்றி, தைரியமாக நியாயத்தை நிலைநாட்ட அவருக்கு இருந்த உறுதியைக் காட்டுகின்றன.

தனிப்பட்ட விசாரணைகளைத் தவிர, CBI-யின் தலைவராக இருந்தபோது அவர் புதிய புலனாய்வு முறைகளை உருவாக்கவும், மற்றும் முறையான பணிச்சூழலை வளர்க்கவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்.


எஃப். வி. அருள்  சிக்கலான  தருணங்களில் கூட  மிகவும் விரைவாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்துள்ளார்.  அவருடைய வேலையின்  அடிப்படைத் தன்மைகளாக நேர்மைக்கும்  நியாயத்திற்கு உறுதி அளித்துள்ளார். பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்ச்சியாக நல்ல  தொடர்பாடலுடனும் இருந்துள்ளார்.


அவரது பணியின் பாங்கு  மிகுந்த ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.  மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) முன்னாள் இயக்குநராக இருந்தபோது, இந்தியாவின் சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் விசாரணை முறைகளில் பெரிதும் முன்னேற்றம் காணப்பட்டு இருந்துள்ளது.

 

 

" Mr F.V. Arul, IP, Director CBI and Mr. E.L. Stracey, IP, Chief of Tamil Nadu Police, Prof Dr P. Chandra Sekhara


துறைக்கு செய்த பங்களிப்பு

மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) முன்னாள் இயக்குநராக இருந்தபோது, இந்தியாவின் சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் விசாரணை முறைகளில் பெரிதும் முன்னேற்றம் காணப்பட்டது. அவரது பதவிக்காலத்தில்  CBI-யின் விசாரணைத் திட்டங்கள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

அவர் அனைத்து நிலைகளிலும் ஊழலை எதிர்க்கும் தனது அர்ப்பணிப்பு காரணமாக, பல முக்கிய வழக்குகள் வெற்றிகரமாக நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டன. அவரது தலைமையின்போது, CBI-யில் நேர்மை மற்றும் நியாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, அது காவல் அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

மேலும், புலனாய்வு முறைகளை மேம்படுத்த அவர் வலியுறுத்தினார். அதில் நவீன தொழில்நுட்பங்களும், நீதிக்கான விஞ்ஞானம் (forensic science) பற்றிய ஆதரவும் அடங்கும். இந்தியாவிற்குள் மட்டுமல்லாது, உலகளாவிய பாதுகாப்புத் துறைகளுடனான ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் பணி அவரால் முன்னெடுக்கப்பட்டது.

இதேபோல், CBI அதிகாரிகளின் பயிற்சி முறைகளையும் மேம்படுத்தினார். சிக்கலான குற்றங்களை எதிர்கொள்ள தேவையான திறன்கள் மற்றும் அறிவைப் பெறும்படி அதிகாரிகளை தயார்படுத்தும் பணியும் இவர் வழிநடத்தினார்.

 

மத்திய புலனாய்வு இயக்கத்தின் இயக்குநராக இருந்த போது, விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் வழியாக நியாயத்தை நிலைநாட்ட அவரால் முக்கிய பங்களிப்பு செய்யப்பட்டது. இது சட்ட அமைப்பை வலுப்படுத்தவும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநாட்டவும் உதவின

 

இவருடைய மனைவி எவி தாமசின் மகள் ஆவார்.  மைக்கேல் என்ற ஒரு மகன் மற்றும் டேவிட் என்ற பேரன் உண்டு. கிறிஸ்தவ நாடார் இனத்தில் பிறந்து ஒரு போலிஸ் அதிகாரியாக பெயர் பெற்று விளங்கியவர்.  

இதே இனத்தில் தற்போது உள்ளவர்கள் போலிஸ் அதிகாரிகளாக மக்கள் விரோத செயல்களுக்கு பெயர் எடுத்து மக்களின் வெறுப்பிற்கும் இனதுவேஷத்திற்கு காரணமாகும்  போது இவரை போன்ற போலிஸ் அதிகாரிகளை வரலாற்றில் பதிவது அவசியம் ஆகிறது.

இவர் 2006 ஆம் ஆண்டு மறைந்தார். ஆனால் இன்றும் மக்கள் மனதில் உள்ள போலிஸ் அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


1 Nov 2024

தேசிய தலைவர் கெ. காமராசர்

 


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, தமிழக மக்களின் அரசியல் விடுதலையை நோக்கி பயணித்த போது கேரளத் தமிழர்களில் பிரச்சினையை வெறும் சமூகப்பிரச்சினை என்பதாக பார்த்தனர். கேரளத் தமிழர்களின் பிரச்சினையை பற்றி உரையாட கேரளத் தமிழர்களின், குறிப்பாக நாடார்களின் நலனை காப்பாற்ற 1945 ஆம் ஆண்டு டிராவன்கூர் தமிழக காங்கிரஸ் அமைப்பு துவங்கப்பட்டது.

1938 முதற்கொண்டு மலையாள ஆட்சியாளர்களால் ஆளப்படட கேரளாவில் தமிழர்களின் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. பல வகையில் பாகுபாடாக நடத்தப்பட்டனர். குறிப்பாக நாடார்கள் வாழ்க்கை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது. டிராவன்கூர் தமிழர் காங்கிரஸ் கூட்டமைப்பில் நாடார்கள் ஆதிக்கம் இருந்தாலும் டி எஸ் ராமசாமி பிள்ளை போன்ற பிள்ளை இனத்தவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் வர்க்கத்தில் இருந்த நாயர்கள் நில உரிமையாளர்களாகவும் நாடார்கள் வெறும் குடியேற்றக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் என்பதால் பல அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தனர்.

தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில்; அன்றைய கேரளா முதலமைச்சர் பட்டம் தானம் பிள்ளையால் ஜெயில் குற்றவாளிகள் அடக்கம் மலையாளிகளுக்கு இலவச இடம் கொடுத்து குடியமத்தினார் என்ற குற்ற சாட்டும் உண்டு.

பெருவாரி தமிழர்கள் வாழும் பகுதியில் அலுவலக மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்து இருந்தனர். ஜூலை 1, 1949 ஆம் ஆண்டு மலையாளம் மொழி பேசும் மக்கள் இருந்த பகுதிகளை டிவான்கூருடன் இணைத்தனர். மைனாரிட்டிகளாக தமிழர்கள் மாறும் சூழலுடன் தங்கள் உரிமைகளை இழக்கும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.


வழக்கறினர் நேசமணி நாடார், டிராவன்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பின் தலைவராக பொறுப்பு ஏற்றதுடன் தமிழ் மக்கள் போராட்டம் உற்சாகம் பெற்றது. கேரளத் தமிழர்களின் உரிமைகளை பெற்று எடுக்கும் அமைப்பு என பிரகடனம் செய்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பின் தலைவராக கே. காமராஜ் அவர்கள் இருந்ததால் தமிழர்கள் பிரச்சினையை சரியாக புரிந்து உரிமைகள் பெற்றுத் தர துணைப்புரிவார் என நம்பிக்கை கொண்டனர் தமிழ் மக்கள். அதினால் நாகர்கோயிலில் நடந்த கூட்டத்தில் உரையாற்ற காமராசரை அழைத்தும் இருந்தனர்.
டிராவன்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு, தங்கள் அமைப்பு உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு பணி சார்ந்து கேரளா அரசை அணுகிய போது நேசமணியை தென் இந்திய திருச் சபையில் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்வதாக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் மக்களின் போராடும் வலுவை குறைக்கும், என்பதால் கேரளா அரசின் தந்திரமான போக்கை கண்டு நேவசமணி அரசின் வேண்டுகோளை புரக்கணித்து விட்டார்.
டிவான்கூர் தமிழர் காங்கிரஸ் அமைப்பு தலைவர்களுக்கும், கேரளா காங்கிரஸ் அரசிற்கும் இருந்த முரண்பாட்டை காமராசர் தீத்து வைப்பார் என நாடார்கள் நம்பினார்கள். ஆனால் அது சாத்தியப்பட வில்லை. ஆனால் சட்ட மன்ற தேர்தலில் 18 க்கு 14 இருக்கை பெற்று நேசமணி வலுவான எதிர் தலைவராக உருவாகி இருந்தார்.
ஜூலை 1949, நத்தானியேல் போன்ற நாடார் தலைமைகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது. காமராசார் நாடார் ஆக இருப்பதால் நாடார்களுக்கு உதவும் விதம் சமரசம் பேசுவார் , தீர்வை எட்ட வைப்பார் என்ற மக்கள் ஆசை நடைபெறவில்லை. காமராசர் தன்னை நாடார்கள் இனத் தலைவர் என முன் நிறுத்த விரும்பவில்லை. ஒரு தேசிய உணர்வு கொண்ட காங்கிரஸ் தலைவராகவே செயல்பட்டார் . அவரால் எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்க இயலவில்லை.
நாடார்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலே 1952 ல் பொது தேர்தலும் வந்து சேர்ந்தது. நேசமணி , ஆர் பொன்னப்பா நாடார் மற்றும் வில்லியம் போன்றவர்கள் தேர்வாகினர். கட்சியின் தலைவராக சிதம்பநாதன் நாடார் தேர்வானர். ஆனால் நாடார்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் சிதம்பரநாதன் நாடார் கேரளா காங்கிரஸ் மந்திரி சபையில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ஆனால் அந்த ஆட்சியை கலைத்ததால் அதிகார பூர்வமாக காமராசரால் நாடார்களுக்கு தீர்வு கொடுக்க இயலவில்லை. 1953 ல் தமிழ்நாடு முதல் அமைச்சராக காமராசர் வந்த போது கேரளா காங்கிரஸ் முதல்வராக இருந்த படடம் தாணு பிள்ளை; காமராசர் தமிழர்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பார் என எண்ணினார். 1954ல் படடம் தாணு பிள்ளை மறுபடியும் காங்கிரஸ் முதல் அமைச்சராக தேர்வாகி வந்த போது நேசமணி தலைமை கொண்ட TTNC இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தது.
1. தமிழர்கள் வாழும் பகுதியில் தமிழ் மொழி அலுவலக மொழியாக இருக்க வேண்டும். அதே போல்
2. தமிழர்கள் பெறுவாரி வசிக்கும் பகுதிகள் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும்.
காவலர்களின் தடையையும் மீறி நேசமணி மற்றும் சிதம்பரநாதன் இருவரும் மூணார் மக்களிடம் சென்று உரையாடினர். மேலும் உண்ணாவிரதம் இருக்க துணிந்த ராமசாமிபிள்ளை போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். கடுமைவாதியான ஆ. குஞ்சன் நாடார் 11 ஆகஸ்ட் 1954 அன்று தமிழர்களின் விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு விடுத்தார்.இதனால் புதுக்கடை, மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் கேரளா போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. அடுத்த நாள் குஞ்சன் நாடார் கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் வில்லியம் கைதானர். 16 ஆம் தேதி தாணுலிங்க நாடார் கைது செய்யப்பட்டார்.
21 ஆம் தேதி நேசமணி நாடார் நேருவை தில்லியில் சென்று சந்தித்து, காங்கிரஸ் தலைவர்கள் குஞ்சன் நாடார் போன்றவர்கள், கேரளா காங்கிரஸ் காவலர்களால் மோசமாக நடத்தப்படுவதை பற்றி முறையிட்டார்.
25 மே 1954 அன்று தோவாளை, அகஸ்திிஸ்வரம், கல்குளம், விளவன்கோடு , செங்கோட்டை பகுதி, பீர்மேடு , தேவிகுளம், சித்தூர் போன்ற 9 தாலுக்களை தமிழ்நாட்டுடன் இணைக்க காமராசு கோரிக்கை விடுத்து இருந்தார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்க உள்ள சூழலை ஆராய ; 1953 ல் இந்திய அரசு நியமித்த கமீஷனில் பெய்ஃசல் அலி தலைவராகவும் H.N கன்ழ்ரு, கே. எம் பணிக்கர் நாயர் போன்றவர்கள் உறுப்பினர்கள் ஆகவும் இருந்தனர். இந்த கமீஷனின் பரிந்துரைப்படி தோவளை, கல்குளம், விளவன்கோடு, செங்கோட்டையின் பகுதி, அகஸ்திஸ்வரம் தமிழகத்துடன் இணைக்க தீர்வானது.

காமராசர் முதல் அமைச்சார் ஆக இருந்தும் பீர்மேடு, தேவிகுளம், சித்தூர், நெய்யாற்றின்கரா பகுதிகளை தமிழகம் இழந்தது. இதற்காக இதுவரை காமராசரை சிலர் குற்றம் சாட்டுக்கிறனர்.
குஞ்சன் நாடார் பீர்மேடு, தேவிகுளம் போன்ற பகுதிகள் எக்காரணம் கொண்டு இழக்க கூடாது என்பதில் காமராசர் உறுதி பூண்டு இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் சில பகுதிகள் இணைவதால் அல்லது விட்டு போவதால் பெரிய மாற்றம் நிகழப் போவது இல்லை என்ற கருத்தை காமராசர் கொண்டு இருந்தார்.
காமரசரின் அரசியல் வெற்றி நாடார்களால் நிகழவில்லை . அதே போன்று காமராசர் , நாடார்களுக்கு எந்த பலனும் பெற்று தர இயலவில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். காரணம் காமராசர், தன் இனம் சார்ந்த அக்கறையை விட தேசிய நலன் காப்பது என்ற கருத்தை முக்கியமாக கொண்டு இருந்தார். தமிழகம் , பீர்மேடு மற்றும் தேவிகுளம் இழக்க காமராசரின் தேசிய கொள்கை காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சில பேனர் கட்சிகள் காமராசரை நாடார் இனத்தலவராக கட்டமைக்க முயன்று வருகின்றனர். காமராசர் என்றும் இனவாதத்தை எதிர்ப்பவராகவே இருந்துள்ளார். அதுவும் சொந்த இனம் என்ற கருத்தாக்கதை அறவே வெறுத்தவர். தலைவர் என்பவர்கள் எல்லாருக்கும் முக்கியமாக நலிந்தவர்களுக்கு ஆக செயல்பட்டவர். மதம், இன உணர்வுகளுக்கு அப்பற்பட்டு மக்கள் செவையை மட்டுமெ முன் நிறுத்தி தேசிய நலனில் அக்கறை கொண்டவர். எல்லா மக்களுக்காக தலைவரை நாடார் தலைவர் என்ற கொட்டிலுக்குள் அடைத்துப் போட சில விஷக் கிருமிகள் முயல்வதை கண்டு வருகிறோம். அவ நிச்சயமாக கண்டிக்க வேண்டியது.
ஆனால் நில அமைப்பை வைத்து கண் கொண்டாலும், தமிழகத்தோடு இணைந்து இருந்தாலும் அப்பகுதி நிலை, இன்றைய மாஞ்சோலை எஸ்டேட் நிலையாகத் தான் இருந்து இருக்கும். காமராசர் ஆட்சிக்கு பின் வந்த திராவிட கட்சிகளால் நாகர்கோயில் இயற்கை வளம் மலைகள் கொள்ளை போகும் நிலையை கண்கூடாக கண்டு வருகிறோம். மேலும் கேரளாவின் அன்னியசலாவணி மற்றும் வருமானம் எஸ்டேட்டுகளை நம்பி இருப்பதை தான் காண்கிறோம்.

27 May 2020

தாமிரபரணி நாகரீகம்


தாமிரபரணி நாகரீகம் 10,000 ஆண்டுக்கு முந்தையது. உலக நாகரிகத்தின் தொட்டில். உலக நாகரீகம் ஆற்றம்கரையில் வளர்ந்தது போல தமிழர் நாகரீகம் வளர்ந்தது தாமிரபரணிக்கரையில் என்கின்றனர்.
இலங்கைக்கும் திருநெல்வேலி தாமிரபரணிக்கும் உறவு இருப்பதாக கதை சொல்கிறது.
குமரி கண்டம் இருந்த போது தமிழ்நாடும் இலங்கையும் ஒன்றாக இருந்துள்ளது. அந்த காலத்தில் இலங்கை வரை அன்றைய தாமிரபருணி ஓடியதாம். அசோகர் காலத்து கல்வெட்டில் இலங்கையை குறிக்கும் வண்ணம் தாமிரபரணி என்ற பெயர் உள்ளதாம். தாமிரபரணி இலங்கையில் ஓடியதாக மார்கண்டேய புராணவும் கூறுகிறது.
மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை இலங்கை தீவு புத்த பிக்குக்களால் தம்பர பன்னி என அழைக்கப்பட்டதாம்.
(அழகான தீவு என்ற அர்த்ததில் லங்கா ஒன்றும் அழைத்துள்ளனர். சங்கு என்பதற்கு மற்றொரு பொருளும் சிலோன் என்கிறார் கால்டுவெல்).
தம்பா பன்னி என்ற பெயரை தாம்ரபரணி என இலங்கையில் குடியேறிய விஜயன் குழுவினர் அழைத்ததாக மகாவம்சத்தில் குறிப்பிட்டு உள்ளதாக சொல்கின்றனர்.
கி.பி80 ல் இலங்கையின் பெயர் தாப்ரோபணி என்கிறார் பெரிப்ளூஸ்.
இந்த குடியிருப்பு சிலோன் மேற்குக் கடற்கரையிலுள்ள புட்லம் என்ற உஊரின் அருகே உள்ளது என்பது தெரிகிறது.
இது எங்க ஊர் முக்கிய ஆறு தாமிரபரணி கூடுதுறைக்கு எதிரே அமைந்துள்ளதாம்.
விஜயன் வீரர்கள் பாண்டியர்களுடன் திருமண உறவு ஏற்படுத்தி இருந்ததாகவும் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள சில இனங்களுக்கு சிங்கள தொடர்பை நினைவுப்படுத்தும் மறபுகளும் பெயர்களும் உண்டு என்கின்றார் கால்டுவெல்.
இவர்களால் தான் இந்த நதிக்கு தாமிரபரணி என்ற பெயர் வந்திருக்க வேண்டும் என்கின்றனர்.
தாலமியில் காலத்தில் இந்த ஆற்றை கிரேக்கர்கர்கள் சோலன் என குறிப்பிட்டுள்ளனர். அதே நேரம் கிரேக்கர்கள் சிலோனை தப்ராபன்னி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கும் முன்னைய மகாபாரதத்தில் தாமிரபரணி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தில் மகாநதி எனக்குறிப்பிட்டுள்ளனர்.
தாமிரபரணியை தமிழ் நூல்கள் பொருநை எனக்கூறுகிறது.
( இந்த சில குறிப்புகள் இப்புத்தகத்திலும் காணலாம்Book The Vijayan Legend and The Aryan Myth - Gunasekaram S.J பக்கம் 26-27, 40 )

12 May 2015

கேரளா- மலையக தமிழர்கள் வரலாறு!

12 ஆம் நூற்றாண்டில் ஓர் இரவு, பாண்டிய மன்னர்  மாணவிக்ரமா தன் மக்ககளும்  சோள மன்னனை துரத்தி அடித்து விரட்டிய மகிழ்ச்சியில் விருந்துண்டு அயந்து தூங்கி கொண்டிருக்கின்றனர்.   சோள மன்னரிடம் பெரும் தொகையை லஞ்சமாக  பெற்ற  படை அதிகாரி விஸ்வராத நாயக்கன்,  நடு இரவில் கோட்டையின் கதவை திறந்து விடுகின்றான். கோட்டைக்குள் புகுந்த சோள படை கண்ணில் கண்ட பாண்டிய மக்களை கொன்று வீழ்ந்த்துகின்றனர்.  விழித்து கொண்ட மந்திரி தன் மன்னரையும் குடும்பத்தாரையும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை வழியாக  மேற்கு தொடர்ச்சி மலை ஊடாக அவருடைய தாய் வழி உறவினர்களான சேரநாட்டுக்கு தப்பித்து செல்ல உதவுகின்றார். அரசன் கொடும்- காடு மலைகள் வழியாக பயணித்து இடுக்கி அங்கமாலி(அகமலையை) வந்தடைகின்றார்.   அங்கிந்தவர் தன் குடும்பம் பரிவாரங்களுடன் கேரளாவிலுள்ள திருச்சூர் அருகிலுள்ள குன்னம்குளம் என்ற இடத்தில் ( வன்னேரியில்) தங்கி இருக்கும் போது  பாண்டிய நாட்டை சேர்ந்த கம்பம்,  உத்தம பாளையம், கூடலூரை சேர்ந்த குறும் மன்னர்கள்  தங்கள் மன்னன் சேரநாட்டில் தஞ்சம் புரிந்ததை அறிந்து  பாண்டிய நாட்டிற்கு வருகை தரக் கூறுகின்றனர்.  மனம் உடைந்த நிலையில் இருந்த மன்னன் அங்கு இறந்து போகின்றார்.                                                                              


 மன்னர் பாண்டிய நாட்டிற்கு வர மறுத்து விட்டாலும் விருந்தினர் நாட்டில் இருக்க மனம் இல்லாத  மூத்த மகனான குலசேகரன் பாண்டிய நாட்டின் பகுதியான கூடலூற்றில் வசித்து வருகின்றார்அந்நேரம் சேர நாட்டு மன்னர் பூஞ்சார் (பூனையார்) பகுதியை விற்க போவதாக தகவல் கிடைக்கின்றது.  பூஞ்சார் என்பது கூடலூருக்கு எதிரையுள்ள  நிலப்பரப்பான  கம்பம்உத்தமபாளையம் உள்ளிட்ட  தமிழக பகுதிகள்  தற்போது கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதியான தேவிகுளம்பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ஆகும்.  தன்னிடமிருந்த பொன் மற்றும் மதிப்புமிக்க கற்களை விலையாக கொடுத்து பூஞ்சார் பகுதியை வாங்குகின்றார்கூடலூருக்கு அருகில் உள்ள குமுளி சேரர்களின் தலைநகரமாக சங்க காலத்தில்  இருந்துள்ளது.அது குழுமூர் என்று  அழைக்கப்பட்டது . 



1756-ம் ஆண்டு     வேணாடு   அரசன்   பல சிறு அரசுகளை ஒன்று சேர்த்து திருவிதாங்கூர் அரசினை  உருவாக்குகிறான்அதன்பிறகு 1866ம் ஆண்டு  திருவிதாங்கூர் அரசு 2000 மூட்டைகள் நெல்லினை தொடர்ந்து நிரந்தரமாக ஆண்டுதோறும் பூஞ்சார் அரசுக்கு  கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி  தனது ஆளுகைக்குட் பட்டிருந்த ஏலமலைகள்    என்று அறியப்பட்ட பகுதியை திருவிதாங்கூர் அரசிற்கு கொடுத்துவிட்டது..இக்காலத்தில்தான்திருவிதாங்கூர் அரசில் வழக்குரைஞராக பணியாற்றிய ஜான் டேனியல் மன்றோ என்பவன் பூஞ்சார் நிலப்பரப்பினை பார்வையிட்டுஅவை தேயிலைதோட்டங்கள் அமைக்க வாய்ப்பான இடம் என்று தெரிந்து கொண்டு பூஞ்சார் அரசுடன்   1877ல்ஒரு ஒப்பந்தம் செய்து  ரூ. 5000மறுபயனாக கொடுத்தும் ஆண்டு குத்தகைத் தொகை ரூ. 3000 கொடுக்க சம்மதித்தும் அஞ்சுநாடு என்று அறியப்பட்ட பகுதியை  குத்தகைக்குப் பெறுகிறான்.   ஆங்கிலேய அதிகாரி குத்தகைக்கு பெற்ற நிலத்தில் தோட்டங்களை அமைப்பதற்கு பூஞ்சார் அரசுக்கு கட்டுப்பட்ட அஞ்சுநாட்டின் பழங்குடி தமிழ் குறுநில மன்னன் கண்ணன்தேவர்  உதவிகின்றார்.  தங்களுக்கு தோட்டங்கள் அமைக்க உதவிய அந்த குறுநில மன்னனை நினைவு கூர்ந்து அவனது பெயரினை தங்களது நிறுவனத்திற்கு சூட்டியுள்ளனர்.மேற்சொன்ன நிலத்தினை ஜேம்ஸ் பின்லே  கம்பெனி லிட் என்ற நிறுவனம் விலைக்கு வாங்குகிறது  1983 முதல் டாடா நிறுவனம் பின்லே நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கி டாடா தேயிலை நிறுவனம் என்ற பெயரில் அத்தேயிலைத் தோட்டங்களை நடத்தி வருகிறது
    இங்கு பளியர்புலையர்மன்னன்முத்துவான்ஊராளிமலை அரையன்,                  உள்ளாடன் முத்துவான்(பூஞ்சார் மன்னருடன் மதுரையை விட்டு வெளியேறும் போது மீனாட்சியம்மன்சுந்தரேசுவரர் சிலைகளை தூக்கி  சுமந்தவர்கள்)என்ற பழங்குடி மக்கள் தொன்மை காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர் தங்கள் பாண்டியர் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மன்னர்   என்ற பழங்குடியினர்இன்றும் தங்களுக்குள் ஒரு மன்னரை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர்   


அடுத்துகம்பம்உத்தமபாளையம் மற்றும் போடி வட்டங்கள் மற்றும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சென்று அப்பகுதியில் குடியேற்றங்கள்   அமைத்து வாழ்ந்து வரும் தமிழர்கள் மற்றொரு பிரிவினர்  உண்டு.  அவர்கள்தான் அங்கு ஏலம்மிளகு போன்ற பயிர்களை சாகுபடி   செய்வதற்கான தோட்டங்களை உருவாக்கியவர்கள்.























அடுத்தபிரிவினர்  ஆங்கிலேய தேயிலை நிறுவனங்கள் தேயிலைத் தோட்டங்களைஅமைப்பதற்குதிருநெல்வேலிசெங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட தேயிலைத் தோட்டத் தமிழர்கள் ஆவர். இவர்களுடன் வியாபார காரணங்கள் மற்றும் தேயிலை தோட்ட அதிகாரிகள் கட்டிட பணியாளர்கள் என்ற தமிழக மக்களும் சேர்ந்துள்ளனர்.

திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழர் பெரும்பான்மையினராக வாழ்ந்த 9 வட்டங்களில் தோவாலைஅகஸ்திஸ்வரம்கல்குளம்விளவங்கோடுநெய்யாற்றின்கரை தென்பகுதிநெடுவங்காடு கீழ்பகுதிசெங்கோட்டைஉள்ளிட்ட வட்டங்களுடன் பூஞ்சார் அரசின் பகுதியாக இருந்த தேவிகுளம்பீர்மேடு ஆகிய இரு வட்டங்களும் அடங்கும்.

சுதந்திர இந்தியா மொழிவாரியாக மாநில எல்லைகளை பிரித்த போதுஅங்கு வசித்த தேயிலைத் தோட்ட தமிழர் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினர்களையும் வந்துசெல்லும் மக்கள் என்று கூறி அமைக்கப்படவிருந்த கேரள மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதிகள் எதுவும் இருக்கவில்லை என்பதால் அந்த அரசின் வருமானத்திற்கு பெருமளவில் தேயிலை உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்கள் நிரம்பிய பகுதிகளாக தேவிகுளம்- பீர்மேடு பகுதி இருந்ததால்அவை கேரள அரசிற்கு வருமானம் அளிப்பதற்கு தேவைப்படுவதாக கருதி கேராளாவுடன் இணைத்தது. தற்போதைய அரசியல் காரணங்களால் வஞ்சிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகி இருக்கும்  தமிழர்களும் ஆவர் இவர். 
http://keetru.com/index.php/component/content/article?id=18048..http://en.wikipedia.org/wiki/Poonjar#cite_note-2