Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts

22 Jun 2020

கத்திரிக்காய்

வீட்டருகில் வரும் கத்திரிக்காய் கிலோ 10 ரூபாய், வெண்டைக்காய் கால் கிலோ 10 ரூபாய், எலுமிச்சை கால் கிலோ 30 ரூபாய் வாங்கி விட்டு 100 கொடுத்தேன். காய்கறி வியாபாரி தன்னிடம் சில்லறை இல்லை நாளை மீதம் 50 ரூபாயை தருகிறேன் என்றார். அடுத்த நாள் காலையில் காய் கறி வாங்கக்க 50 ரூபாயை நினைவுப்படுத்தினால் உங்களுக்கு நான் தர வேண்டியது இல்லை. அந்த வீட்டு அம்மாவிற்கு தான் கொடுக்க இருந்தது என்றார்.
பயங்கர ஏமாற்றமாகி போய் விட்டது.
நான் என் கோபத்தைக் காட்டிக்கொள்ளாது, இல்லை நீங்கள் நினைவுப்படுத்தி பாருங்கோ, நீங்கள் 50 ரூபாய் தர வேண்டியுள்ளது என்றதும் இல்லை, எனக்கு நல்ல நினைவு உண்டு நீங்கள் நினைவுப்படுத்துங்கள் என்றார்.
நான் அன்றைய காய்கறி பணத்தை கொடுத்து விட்டு வீட்டிற்குள் வந்து, மகனாரிடம் 50 ரூபாய் ஏமாந்து விட்டேன் எனக்கூறி என் சோகத்தை தீர்த்துக்கொண்டேன்.
இன்று காலையில் கத்திரிக்கடைக்காரர் மன்னித்துக்கொள்ளுங்கள் . எனக்கு நினைவு வந்து விட்டது எனக்கூறி 50 ரூபாய்க்கு இன்று காய்கறிகள் தந்து விட்டார்.
...........இது படிக்காதவர்கள் உலகம். நினைவு வந்ததும் தங்களது தவறை உணர்ந்து சமரசப்பட்டுக் கொள்கின்றனர்.
இதே போன்று பணம் சம்பந்தமாக, படித்த மேதாவிகளிடம் பேணவேண்டிய சில இடபாடுகளில் எவ்வளவு எளிதா,எந்த கூச்சமும் இல்லாது நம்மை ஏமாற்ற துணிகின்றனர்.
இப்போதெல்லாம் கல்வி கற்றவன் , படித்து பதவிகளில் உள்ளவர்கள் என்றாலே தன்னுடன் ஆயிரம் திருடர்களையும், பதினாயிரம் நம்பிக்கை துரோகங்களையும் வைத்து கொண்டு தான் அலைகின்றனர்.
No photo description available.
Naren K Narendran, Subi Narendran and 78 others
32 comments
2 shares
Like
Comment
Share

சுபி அக்கா மல்லிகைச் செடி


நேற்று, சுபி அக்கா அனுப்பி தந்தார்கள் ஒரு மல்லிகைச்செடி படத்தை. பின்பு உற்சாகமாகி விட்டேன். செடியை கண்ட மகிழ்ச்சியில் நடை போனேன் , என் கல்லூரித் தோழியை கண்டேன், மகிழ்ச்சியாக துங்க போனேன்
இந்தச் செடிககும் எனக்குமான தொடர்பு 22 வருட கால பழக்கம். பூப்போன்ற மனதுடன் புதுப் பெண்ணாக, மனமெல்லாம் ஆசையுடன் மாமியார் வீடு புகுந்த காலம்.
நினைத்தது போல என்னை காத்துக் கிடக்கவில்லை மாமியார் வீட்டு வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள், விசர்கள்.... ஆனால் என்னை ஒவ்வொரு நாளும் புத்துணர்வாக வைத்தது இந்த மல்லிகைச் செடி தான்.
அது ஒரு காடு,கொடும் வனம். பல மாதங்கள் மழை, பனி தான். யார் நட்டு வைத்த மல்லிகையோ வீட்டு வேலியாக இந்த மல்லியை மூங்கில் கம்புகளால் கட்டி, நல்ல பலமான செடி வேலியாக வைத்திருந்தனர்.
பல மாதங்கள் பூக்கும். அதன் வாசனை ஆகா .....மறக்கவே ஏலாது. வசந்தகாலம் என எழுதிவைத்தது போல் ஊரே பூக்களை பார்த்து பார்த்து போகும்படி இருந்தது..
எனக்கு செடியில் பூவைப் பார்க்கதான் ஆசை. ஆனால் சில எளிய பெண்கள் வந்து "இந்த அம்மாவிற்கு பூக்கள் பிடிக்காது " எனக்கூறி பறித்து செல்வார்கள்.
யாராரோ பறித்து செல்கிறார்களே என்ற ஆதங்கத்தில், நானும் பறித்து பூக் கட்டினாலும்,ஒழுங்காக பூ கட்ட தெரியாததால் பூ நழுவி கீழை விழும் . வாழை நாரு வைத்து, துணி நூல் வைத்தும் கட்டிப்பார்த்தாச்சு. பூவைப் பறித்து ஊசி நூலால் கொருத்தாலும் ஐய்யோ.... அதன் காம்பு என்ன வேதனைப்பட்டிருக்கும் என அதையும் விட்டு விட்டேன்.
அதன் பின் வட்டப்பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, பூக்களை அதில் மெதக்கவிட்டு அழகு பார்த்துக்கொண்டு இருந்தேன்.
காலவும் ஓடினது. அந்த ஊரை விட்டு வெளியேற முடிவெடுத்தோம். இயற்கை, மலை, மழை , அருவிகள், என ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த ஊரை விட்டு விரட்டியது உலக மயமாக்கல். 2002 தூத்துக்குடி வந்து சேர்ந்தோம். பனியில் இருந்து தீயில் போட்டது மாதிரி ஆகி விட்டது அடுத்த வாழ்க்கை.
350 கிலோ மீட்டர் பயணித்து தெரியாத ஊர் வந்து சேர்ந்த போது மகனுடன் எடுத்து வந்தது இந்த மல்லிகைச்செடியையும் தான்.
பின்பு 8 வருடத்தில் 12 வாடகை வீடு மாறியிருப்போம். சில வீடுகளில் உப்பு தண்ணீர், சில வீடுகளில் செடி வைக்க இடமில்லை, சில வீடுகளில் செடி வைக்க அனுமதி இல்லை. இருந்தும் இந்தச் செடியும் எங்களுடனே பயணித்தது.
சொந்த வீடு வந்த பின்பு அதற்கும் நிலையான ஒரு இடம் கிடைத்தது. வீட்டுப்பிராணிகள் போன்றே செடிக்கும், அதை வளர்க்கும் மனிதர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு . சில வருடங்களாக நான் செடியை கவனிக்கவில்லை. பின்பு மறுபடியும் இணைந்துள்ளோம்.
சுபி அக்கா என்னிடம் பெற்றுக் கொள்ளும் ஒரே பொருள் செடி மட்டுமே. அப்படித்தான் இந்த செடியில் இரு கம்புகளை வெட்டி கொடுத்திருந்தேன். 7500 கி.மீ பயணம் செய்து லண்டனை அடைந்தது.
இந்த வெயில் பழகின செடி லண்டனில் வளருமா , பூக்குமா என பல அச்சப்பாடுகள் இருந்தாலும்; அக்கா பூவில்லாத செடியை கூட தனது அன்பால் பூக்க வைத்து விடுவார்கள்.
நேற்று முதல் பூவுடன் செடியின் படத்தை அனுப்பியிருந்தார்கள்.
அக்கா கை பட்டதும் செடி அதன் அழகிலும், நளினத்திலும் பூத்து நிற்பதை கண்டதும் மகிழ்ச்சிக்கு மட்டில்லை.
என் உலகம், பூக்களால் , இலைகளால் நிரம்ப ஆசைப்பட்ட உலகம்.
அக்காவை பற்றி கூறினால் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த கொரோனாக் காலத்தில் , எங்கள் இருவருக்கும் விடுமுறை என்பதால் வாரம் ஒரு முறை கதைக்க இயல்கிறது.
செடிகளை பற்றி,செடி வளர்ப்பை பற்றிக்கதைக்கிறோம். அக்காவின் ரோஜா பூந்தோட்டம் முன் ஊட்டி, மைசூர் ரோஜா தோட்டங்கள் அருகே வர இயலாது. "அக்கா, நீங்கள் இலை இல்லா பூக்களுக்காக என்ன மேஜிக் செய்கிறீர்கள் என்பேன்.
ஒவ்வொரு காலசூழலுக்கு இணங்க செடிகளை இடம் மாறி வைப்பது , செடிகளை வெட்டிக்கவனிப்பது, அக்காவை மாதிரி யாராலும் நேசிக்க இயலாது.
தமிழகம் வந்தாலும் நாங்கள் விரும்பிச்செல்லும் இடம் பூந்தோட்டங்களும் தான்.
அக்கா வீட்டில் பூத்த மல்லியை நினைத்து பூரித்து பூரித்து இன்னும் நிறைய எழுதலாம். செடி தரும் மகிழ்ச்சி அதிவல்லது‌.
Naren K Narendran, Gladwin Moses and 80 others
22 comments
1 share
Like
Comment
Share

28 Feb 2016

கண்ணீர் அஞ்சலி...








Sundara Vandhiya Tevan R's photo.




























சிவ மேனகை


விழிநீர் சுரந்து விடை இல்லா வினாக்களோடு
எழுதும் ஓர் கண்ணீர் அஞ்சலி ,,,,,,,
உறவுகளை தாண்டி எங்கள் உணர்வுகளுக்குள் வாழ்ந்தவர்
தொலை தூரத்தில் இருந்தும் உதவும் ஒரு உண்மை நட்பு
இன்று உணர்விழந்து எங்களை பிரிந்து சென்று விட்டார்
காலமும் காலனும் எங்கள் அன்பு ஜொசபீன் அக்காவுடன்
கதறி கதறி அழ எங்களை வைத்துவிட்டு - எங்கள்
பாபாவை பிரிந்தது என்றுமே தாங்க முடியாத துயரம்,,,,
உள்ளத்தில் இடியாய் விழுந்த ஒரு துயர செய்தி
கன்னத்தில் நீரை வழிந்தோட செய்த ஒரு வருந்தும் செய்தி
என்னென்று சொல்வது ஏங்கித்தவிக்கும் அக்காவுக்கு ஆறுதல்
பக்கத்தில் இருந்து பாசத்தை பொழிந்தவர் ,சட்டென்று
துக்கத்தில் விட்டுவிட்டு பிரிந்த துயரத்தை எப்படி தாங்குவா
பிள்ளைகள் கல்வியில் வளர்வில் முழுமூச்சாய் இருந்தவர்
இனி இல்லைஎன்று எண்ணும்பொழுது தாங்க முடியுமா துயரத்தை
துடியாய் துடித்து அழுகுரல் எழுப்பும் பாலன்களை இனி
வாழ்வில் சுமக்கும் தந்தை எப்போது வருவார் என்ற ஏக்கம்
நெஞ்சில் எழும் அத்தனை கேள்விகளுக்கும்
ஆழ்ந்துயில் கொண்ட பாபா அண்ணன் இனி வருவாரா ,,,
அவர் நினைவுகளே எங்களுடன் என்றென்றும் கூடவரும்
அவர் பசுமையான நினைவுகளே என்றென்றும் கூட வரும் ,,,,,
அவரது ஆத்மா இறைவன் திரு நிழலில் சாந்திபெற வேண்டும் என
வேண்டி பிரார்த்தித்து கண்ணீர் பூக்களை பாதத்தில் தூவி
மானசீகமாய் வணங்கி விடைபெறுகின்றோம் ,,,,,,
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ,,,,,,,
இங்கனம் கண்ணீர் பூக்களை தூவும்
பாபா அண்ணாவின் இழப்பினால் துயரில் தவிக்கும் சிவேமனகை குடுப்பமும் ஜொசபீன் அக்காவின் புலம்பெயர் முகநூல் உறவுகளும் ,,,,,,,

பாசமிகு.செல்வபாபா சவரிதாஸ் நெல்லையில் நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். பாபா கம்பீரமும்,கருணையும் ஒருங்கே பெற்ற சிறந்த மனிதர். நான் சில மாதங்களுக்கு முன்பு தூய சேவியர் கல்லூரியில் சிறப்புரையாற்றச் சென்றிருந்த பொழுது, நான் தங்கியிருந்த விடுதிக்கே வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் கலந்துரையாடினார்.[அந் நிகழ்ச்சிக்கு ஜோஸ்பின் தான் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது] 
''எவ்வளவு படித்திருந்தாலும் என் மனைவிக்கு ஒன்னும் தெரியாது,அவ மண்ணு' என்று சொல்லி மகிழும் ஆண்களுக்கு மத்தியில் தன் மனைவியின் அறிவு விசாலமடையவும், அது சமூகத்திற்கு பயன்படவும் ஊன்றுகோலாக இருந்தவர். மனைவியை அழகுப்படுத்தி பார்க்கின்ற கணவர்கள் மத்தியில் மனைவியின் ஆளுமையை வளர்த்தெடுத்து அழகு பார்த்த அற்புத மனிதர்.அவரின் இழப்பு அவர் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல மனித நேயமிக்க எல்லோருக்குமான இழப்பாகும்.சகோதிரி ஜோஸ்பின் மீண்டெழுந்து பாபாவின் விருப்பப்படி மீண்டும் அதே கம்பீரத்தோடு பயணிப்பதே அவருக்குச் செலுத்துகின்ற ஒரே அஞ்சலி.நானும்,தம்பி நெல்லை அப்துல் ஜாபரும் அவரின் இல்லத்திற்கே சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தோம்.




நான் இந்த செய்தியை பார்த்து அதிர்ந்தே போனேன்.
வார்த்தைகள் வரவில்லை.
நான் சகோதரி ஜோசப்பினுடன் தொலைபேசியில் அதிகம் பேசியிருக்கிறேன். ஒருமுறை அவர் கணவருடனும் பேசியிருக்கிறேன். இந்தியா வரும் போது ஒருமுறை வாருங்கள் என்று கூட சொன்னார். நினைத்து பார்த்தால் கடினமாக இருக்கிறது. குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் ஒருவனாக இணைந்து கொள்கிறேன். பாபாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.வார்த்தைகள் வரவில்லை.


Subi Narendran 




 சொல்ல முடியாத அளவு சோகத்தோடு இதனைத் தெரிவிக்கிறேன். அன்பு மனைவி ஜோவையும், சாம், ஜெரி என்ற இரண்டு மகன்களையும் தவிக்க விட்டு மறைந்து விட்டார். மிகவும் அன்பான கணவனும் தகப்பனும் ஆவார். பாபாவின் அன்பை வார்த்தையால் சொல்ல முடியாது. மூச்சுக்கு மூச்சு அக்கா அக்கா என்று சொல்லும் குரல் என் செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
பாபாவின் ஆன்ம சாந்திக் காகப் பிராத்திக்கிறேன். ஜோவுக்கும் குழந்தைகளுக்கும் இந்தக் கஷ்ட வேளையில் கடவுள் துணை இருக்க வேண்டும்.





Our family friend Baba (Selvababa) from Thirunelveli, South India passed away today morning in an accident. My heart felt condolences to their family & friends. May his soul rest in peace. He will be in my thought & heart always


Muthalankurichi Kamarasu 

எனது அன்பு சகோதரிக்கு நடந்த சோகத்தினால்இரண்டு நாள் வேறு வேலையே செய்ய முடியவில்லை
அன்பு சகோதரி ஜோஸ்பின் பாபா. சேவியர்கல்லூரி பேராசிரியர். எனது மகன் அபிஷ்விக்னேஷ்க்கு முதலாமாண்டு பொறுப்பாளர். ஒரு நாள் நான் எழுதிய நெல்லை ஜமீன்கள் நூலுடன் கல்லூரி வகுப்புக்குள் நுழைய, அதன் நூலாசிரியர் நான் தான் என்று என் மகன் மூலம் தெரிய, என்னை சந்திக்க தனது கணவர் பாபாவுடன்செய்துங்கநல்லூரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.
வந்தவர்கள் எனது குடும்ப நண்பர்களாவே மாறிவிட்டார்கள்.
ஏதோ என்னுடன் பிறந்து வளர்ந்தவர் போலவே எங்கள் குடும்ப உறவினராகி விட்டார்கள்.
பாபாவும் நல்ல சுறுசுறுப்பானவர். ஆடிட்டர். எனது புத்தகங்களை படித்து கருத்து சொல்லும் வாசகர். கடந்த 20.11.2015 அன்று நெல்லை மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்னுடைய புத்தக வெளியிட்டு விழாவிற்கு தனது அலுவல் இடையில் வந்து வாழ்த்து கூறி. என்னை கௌரவ படுத்தினார்.
பாபா தனது மனைவி ஜோஸ்பின் உயர்வுக்காக பாடுபடுபவர். சகோதரி ஜோஸ்பின் போட்டோ கிராபிக் ஆசைக்காக அவர் நெல்லை வீக்லி கிளப்புடன் மனைவினை அழைத்துக்கொண்டு அனைத்து இடங்களிலும் சென்று சுற்றி வந்தவர். சொல்லப்போனால் அந்த கிளப்பை எனக்கு அறிமுகம் செய்ததே பாபா தான்.
சகோதரி தனது சிறுகதை தொகுப்பு நூலில் அடிக்கடி அத்தான் என்றவொரு கதாபத்திரத்தில் பாபாவை சித்தரிப்பார். அந்த அத்தான் அவரது கணவர்தான் என்பதை படித்து முடிந்தவுடன் அறிந்து விடலாம். முக நூல் மூலமாக மிகப்பெரிய எழுத்தாளர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டவர் சகோதரி. அவருக்கு பக்கபலனாக இருந்து உதவி புரிந்தவர் அவரது கணபர் பாபா. இருவரும் இணைப்பிரியாத தோழர்கள்.
நம்பவே முடியவில்லை. நேற்று காலை 8 மணிக்கு கே.டி.சி.நகர் விபத்தில் பாபா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்ற செய்தியை நான் பத்திரிக்கை நண்பர்கள் வாயிலாக கேட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. நானும், நண்பர் பரமசிவனும் பாளை மேட்டுதிடல் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு அவரின் உறவினர்களை விட நண்பர்கள் அதிகம் பேரை கண்டேன். என் குடும்பத்தில் பழகியது போலவே நண்பர்கள் பல குடும்பங்களில் குடும்பநண்பராகவே பழகி இருக்கிறார் பாபா.
வழக்கு பதிவு செய்ய நெல்லை சந்திப்பு டிராபிக் காவல் நிலையத்தில் மகன் உள்ளார் என்று தகவல் கிடைத்தது. அங்கு சென்றோம். பாபா£வின் மனைவி சகோதரி கணவரும் தூத்துக்குடி துணை தாசில்தாருமான பிரபாகரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். அவர்களின் மூத்த மகன் பிளஸ் டூ மாணவன் அவரோடு இருந்தான்.
அவனும் தகப்பனார் போல நல்ல நண்பர்கள் வைத்திருந்தான். அவனின் பள்ளி மாணவ தோழர்கள் அனைவரும் அவனின் தோளோடு தோளாகவே நின்று அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அனைத்து பணிகளையும் முடித்து மாலை 3 மணிஅளவில் போஸ்ட் மார்ட்டம் முடித்து அனுப்பினார்கள். பிரபாகரன் சாருக்கு உதவியாக அது வரை கூடவே இருந்தேன்.


எப்போதும் அத்தான், அத்தான் என்று அவரோடு நின்று புன்சிரிப்போடு வரும் சகோதரி ஜோஸ்மின், இன்று தனியாக பாபா உடலை பார்த்து கதறி அழும் காட்சியை பார்க்க வேண்டுமா...? என்னால் முடியவில்லை. எனவே அவர் வீட்டுக்-கு செல்ல எனக்கு மனம் வரவில்லை.
நானும் சராசரி மனிதன் தானே. 25 வருடமாக பகுதி நேர நிருபராக பல விபத்துகளையும் உடலையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு மனதுக்கு பிடித்து, என்னோடு வாழ்ந்த பாபாவின் உடலை என்னாலே பார்க்க முடியவில்லை. என் அன்பு சகோதரி எப்படி பார்க்க போகிறாரோ...
அப்படியே வீட்டுக்கு வந்து விட்டேன். "ஆண்டவனே.. என் சகோதரிக்கு ஆறுதல் தா... ஆதரவு தா.."
இரண்டு பையனும், இந்த மண்ணுலகில் சிறந்தவர்களாக விளங்க அருள் புரிவாயாக.. அவர்களுக்கு நல்ல கல்வி வேண்டும்.
ஆண்டவனிடம் பிராத்தனை செய்வோம்
கண்ணீர் அஞ்சலி...
Srikandarajah கங்கைமகன்'s photo.
































திரு பாபா அவர்களது அகால மரணச் செய்தி கேட்டு ஆறாத்துயர் அடைந்தோம் பிறப்பும் இறப்பும் நிட்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அகால மரணம் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கின்றது. மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இடையில் விட்டு இறையடி சேர்ந்தது அவரது குடும்பத்திற்குப் பேரிழப்பாகும். திருமதி பாபா அவர்களுக்கும், அவர்களது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆண்டவன் வாழ்க்கையில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து நிறைவாக வாழவைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம்.




இன்று நண்பர் பாபா மரணித்துவிட்டார் என்ற தகவல் அறிந்து அதிர்ந்துபோனோம். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை. 
ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நூற்றுக் கணக்கான நட்புகளைத் தேடிக் கொண்டவர்கள் நண்பர் பாபாவும், ஜோசபினும்.
நட்பு பேணுவதிலும், முகமலர்ச்சியோடு உபசரிப்பதிலும் எம்மைத் தம் வசமாக்கிக் கொண்ட அழகிய குடும்பம். இவர்களது அன்பான அழைப்பின் பேரில் தமிழகம் சென்று நட்புக் கொண்டாடிய நண்பர்கள் பலர். ஈழத்திலிருந்து தமிழகம் செல்லும் நண்பர்களுக்கு தன்நலம் கருதாமல் பணிகள் செய்து தருவதில் எப்போதும் முன்நிற்பார்கள்.
தமிழகம் செல்லும் நமது பல நண்பர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பதில் இவர்களது குடும்பம் சலித்ததேயில்லை. இந்தப் பேரிழப்பு எமது நண்பர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோழி ஜோசபினுக்கு ஆறுதல் சொல்லும் பலம் எமக்கு உண்மையில் இல்லைத்தான்.
நண்பரின் இழப்பால் துயருறும் தோழி ஜோசபினுக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பர் பாபாவுக்கு எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியும்.



இன்று பாபா இறந்தது கேள்விப்பட்டு அழுகை வந்தது ... ஜோசெப்பின் இலங்கைத் தமிழர்கள் பலரை அண்ணாமார்களாகக் கொண்டு மிக அன்பாக பழகுவார் . அவரின் கணவரின் அன்பால் உபசரிப்பால் உச்சி குளிர்ந்தவர் பலர் .. இன்று அவரின் கணவர் பாபா இறந்தது மிகவும் கவலையும் அழுகையும் தருகிறது ..முகப்புத்த நட்பில் மிகவும் பிடித்தவர் ... அவர்கள் இருவருடனும் சில தடவைகள் தான் இணையங்களுடாகக் கதைத்தேன் ..எப்பொழுதும் குடுமபத்துடன் இந்தியாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுவார்கல் ..இந்தக் கோடை விடுமுறை செல்லலாம் என்றும் எண்ணினேன் .... இப்படிநடந்து விட்டதே அவரின் இழப்பால் துயருரும் மனைவி பிள்ளைகளுக்கும் , உறவுகளுக்கும், என்போன்ற நட்புகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.








Kumar Sankaralingam Really unfortunate to hear this bad news,such a wonderful person, My heartfelt condolences to the family, may God give courage to come-out of this sudden lose. May his soul RIP.

ூற்றுக் கணக்கான நட்புகளைத் தேடிக் கொண்டவர்கள் நண்பர் பாபாவும், ஜோசபினும்.
நட்பு பேணுவதிலும், முகமலர்ச்சியோடு உபசரிப்பதிலும் எம்மைத் தம் வசமாக்கிக் கொண்ட அழகிய குடும்பம். இவர்களது அன்பான அழைப்பின் பேரில் தமிழகம் சென்று நட்புக் கொண்டாடிய நண்பர்கள் பலர். ஈழத்திலிருந்து தமிழகம் செல்லும் நண்பர்களுக்கு தன்நலம் கருதாமல் பணிகள் செய்து தருவதில் எப்போதும் முன்நிற்பார்கள்.
தமிழகம் செல்லும் நமது பல நண்பர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பதில் இவர்களது குடும்பம் சலித்ததேயில்லை. இந்தப் பேரிழப்பு எமது நண்பர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோழி ஜோசபினுக்கு ஆறுதல் சொல்லும் பலம் எமக்கு உண்மையில் இல்லைத்தான்.
நண்பரின் இழப்பால் துயருறும் தோழி ஜோசபினுக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பர் பாபாவுக்கு எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியும்.