Showing posts with label series. Show all posts
Showing posts with label series. Show all posts

10 Jun 2020

ஜெப்ரே எப்ஸ்டேன் Jeffrey Epstein

ஜெப்ரே எப்ஸ்டேன், மைனர் பெண்களை வைத்து , பாலியல் தொழில் செய்தார் என 2003 ல் தண்டனை பெற்று 13 மாதம் ஜெயிலில் இருந்தவர்.
பிற்பாடு எந்த தண்டனையும் பெறாது மறுபடியும் பெரும் தலைகளுடன் சுற்றி வந்தவர். பல கல்வி நிலையங்களுக்கு, உதவும் நிறுவனங்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்தவர்.
மறுபடியும் 2017 ல் அந்த கேஸ் தூசி தட்டி எடுக்கப்பட, 2019 ஆகஸ்தில் வழக்கின் தீர்ப்பு எதிர் பார்த்து இருக்கையில், சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை நாலு பகுதிகளாக சீரிசாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவதானிக்குகையில் பாதிக்கப்பட்ட யாரும் முன் வந்து வழக்கு பதியவில்லை.
ஒரு சந்தேகத்தின் பெயரில் ஒரு தாய், தன் மகள் இன்ன பகுதிக்கு எப்போதும் போகிறாள் என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்க காவல்த்துறை வழக்கை விசாரிக்கிறது.
அந்த விசாரணயில் அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ் என பல நாடுகளுக்கு குற்றம் விரிவடைய கிளின்டன், ட்ரம்ப், இங்கிலாந்து இளவரசர் ஆன்ட்ரூ , பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் ,வழக்கறிஞர்கள் உண்டு என்றதும், போன வேகத்தில் வழக்கு கிடப்பில் ஆகி விடுகிறது.
ஒரு சிலந்தி வலை போன்று ஒரு பெண் மூலம் பல பெண்களை வலையில் வீழ்த்துவது. வெளிநாட்டில் படிப்பு , வேலை வாங்கித் தருகிறேன் என ஆசை காட்டி வீழ்த்துவது நடந்துள்ளது. 200 டாலர் பணத்திற்காக பல பெண்கள் தங்கள் தோழிகளுடன் பகுதி நேர வேலையாகவே இதில் ஈடுபட்டுள்ளனர்.
14-17 வயது பெண் பிள்ளைகளை பயண்படுத்தி விட்டு கருவேப்பிலை போன்று சொல்லப்பட்ட எந்த உதவியும் செய்யாது பிற்பாடுள்ள வாழ்க்கையில் ஒரு அழுத்தம் தரும் கண்காணிப்பில் வாழ விடப்பட்டுள்ளனர்.
வறுமையான சூழலிலுள்ள பிள்ளைகள், பெற்றோர் கவனிப்பற்ற பிள்ளைகள்,வாழ்க்கையில் எப்படியேனும் உயர்ந்த இடத்தை குறுகிய காலத்தில் அடைய ஆர்வம் கொண்ட பிள்ளைகள், பண ஆசை/ தேவை உள்ள பிள்ளைகளாக தேடிக்கண்டு பிடித்துள்ளனர். இதில் ஒரு போலிஸ் அதிகாரியின் பெண்ணும் பாதிப்படைந்திருப்பாள். அவளுடைய 20 க்கு மேற்பட்ட நண்பிகளையும் அறிமுகப்படுத்தி கொடுத்துள்ளாள்.
ஆடம்பர பயணங்கள், ஆடம்பர பங்களாக்களில் குடியிருப்பு என ஆடம்பர வாழ்க்கையில் இன்பம் கண்ட பிள்ளைகள் தங்களுக்கான புரிந்துணர்வு கொண்ட வயதை அடைந்ததும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக எண்ணி மனம் உடைகின்றனர்.
தாங்கள் பெரும் ஆபத்தான வலை பின்னலில் மாட்டுப்பட்டதாக உணருகிறார்கள்.
குறைந்த பட்சம் கிடைக்கும் என நினைத்த கல்வியோ , வாய்ப்புகளோ கிடைக்கவில்லை என்றதும் தங்களுக்குள் ஒடுங்கி, குடிக்கும் மயக்கு மருந்திற்கும் அடிமையாகி மேலும் வாழ்க்கை துயருக்குள் நகர்கிறது.
தங்களை பயண்படுத்தியவர்கள், அதிகார பண பலமுள்ளவர்கள். அவர்களை தங்களால் எதுவும் செய்ய இயலாது என்ற ஏமாற்றம், சமூகத்தில் கிடைக்காத போன மதிப்பு , சாதாரண அமைதியான வாழ்க்கையும் இழக்கின்றனர்.
ஐரோப்பிய நாடோ ஆசிய நாடோ பாதிக்கப்பட்ட பெண்ணையே அவலமாக பார்க்கும் நிலையே உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளாது, பாலியில் குற்றவாளிகளை காப்பாற்ற நாடுகளின் உயர் பதவியில் இருப்பவர்களே குற்றவாளிகளுக்கு உதவுகின்றனர்.
இந்த பெண் வணிகத்தின் சூத்திர தாரையாக இருப்பதும் முதன்மை குற்றவாளியின் பெண் தோழி ஒருவரே. அவரோ பெரும் பத்திரிக்கை நிறுவன குடும்த்திலுள்ளவர், இங்கிலாந்து இளவரசரிடம் நட்பு பாராட்டக்குறியவர்.
1996 களில் ஆரம்பித்த குற்றம் 2018 வரை தொடர இயல்கிறது. 2019 ல் அவர் தண்டிக்கப்படுவதும் அடுத்த இருவருடத்தில் அமெரிக்கா அதிபர் எலக்ஷன் மனதில் வைத்தே நகர்த்தப்பட்டது. பெண்களுக்கான பாதுகாப்போ உரிமை மீட்டலோ அல்ல.
குற்றவாளி கடைசி வரை தன் குற்றத்தில் வருந்ததாது தான் ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் சேர்த்து வைத்திருக்கும் பல்லாயிரம் மிலியன் சொத்துக்களுக்கு பங்கம் வரக்கூடாது என்ற நிலையில் தற்கொலை செய்து கொள்ளப்படுகிறார் அல்லது பல தலைவர்களை காப்பாற்ற கொல்லப்படுகிறார்.
தற்போது வயது வந்தவர்களாக, தாங்கள் அறியாப்பருவத்தில் எப்படியாக பாலியலாக சுரண்பட்டோம் என்ற குற்ற உணர்விலும், துயரிலும் பெண்கள் வாழ உந்தப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பெண்களில் 20 பேர்கள் மட்டுமே தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்திற்காக வாதிட முன் வந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
நமது நாட்டில் போல காதல் என்ற பெயரில் வழக்கை திசை திருத்தாது அதன் வியாபார அடிவேரை கண்டு பிடித்த அரசு சட்டத்திட்டம் மெச்சப்பட வேண்டியது.
உலகில் பழைமையான தொழிலான பாலியல் தொழிலில், அறியாத பருவத்தில் பல பல ரூபத்தில் நட்பியாக, உதவுவராக வரும் யாராலோ பெண் பிள்ளைகள் மாட்டுப்படுவதை சொல்லிய அருமையான ஆவணப்படம்.
பீடோபீலியா நோயாளிகள் எல்லா நாடுகளிலும் இருக்கையில், பெண் பிள்ளைகள் தங்களை காப்பாற்றி கொள்ள சில சமூக அறிவும் தேவையுள்ளது.
இது போன்ற சீரியல் உலகின் இன்னொரு முகத்தை படிப்பிக்க பெண் உலகிற்கு உதவும்.
இந்தியாவில் வருடத்திற்கு 15 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். 54 சதவீதம் பெண்கள் 46 சதவீதம் ஆண்கள். 18 வயதிற்கு கீழுள்ள பெண்ணிடம் பாலியல் தொடர்பு கூடாது என வரையறுத்துள்ளது ஐரோப்பிய நாடுகள்.
இந்தியாவில் அந்த வயதை 16 என குறைத்துள்ளனர். 16 வயதிற்கு கீழுள்ள பெண்ணை பாலியல் தேவைக்கு பயண்படுத்துவதே இந்தியாவில் குற்றம்!