Showing posts with label Men-ஆண்கள். Show all posts
Showing posts with label Men-ஆண்கள். Show all posts

19 Nov 2025

ஆண்கள் தினம் நவம்பர் 19

ஆண்கள் யார் ? மனிதவியல் நிபுணர்கள் , தனிப்பட்ட வரையறைகள், அனுபவங்கள், கருத்துக்களையும் தாண்டி, உலகத்தின் பல பகுதிகளில் மற்றும் வரலாற்றின் பல கட்டங்களில் உள்ள சமூகங்களில் உள்ள ஆண்கள் தன்மைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆண்களைப் பற்றிய விவாதங்களும் கருத்தாக்கங்களும் மற்றும் பாலினம் குறித்த ஆய்வுகளில் anthropology வழங்கிய பங்களிப்பு முக்கியமானவை. ஆண்கள் மற்றும் ஆண்மை குறித்து பயன்படுத்தப்படும் மொழிகளிலும் anthropology சிறப்பு கவனம் செலுத்தியது. ‘toxic’, ‘dominant’, ‘traditional’, ‘alpha’ போன்ற சொற்கள் மூலவும் வகைப்படுத்தி இருந்தனர்.

ஆண்மையின் கருத்தாக்கம் வரலாறுகளும் பண்பாடுகளும் மாறுவதன் அடிப்படையில் தொடர்ந்து மாற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறது.
பழமையான இலக்கியங்கள் கிமு 3000 காலத்தைச் சேர்ந்தவை. அவற்றில், ஆண்களிடம் உள்ள நேரடியான எதிர்பார்ப்புகள், , கடவுள்கள், மன்னர்களிள், வீரர்களிள், புராணக் கதைகளிலும் சட்டங்களில் உருவாக்கப்பட்ட ஆண்மையின் மாதிரிகளில் தெளிவாகக் காணப்படுகின்றன.


கிமு 1000-இல் எழுதப்பட்ட எபிரேய வேதத்தில், மன்னர் தாவீது மறைவதற்கு முன்னர் தனது மகன் சாலொமோனிடம் கூறுகிறார் துணிவாக இரு, ஒரு ஆணாக
இரு.”
டாசிட்டஸ், தனது (கி.பி. 98) ஜெர்மானியா என்ற நூலில், அர்மீனியசை (Arminius) ஆண்மையின் உயரிய வடிவாகக் அவரது மனைவி துஸ்நெல்டாவை ரோமர் தளபதி ஜெர்மானிக்கஸ் கடத்திச் சென்றபின், அர்மீனியசின் ஆண்மை என்பது அவளை காப்பாற்றி கொண்டு வருவதில் இருந்தது என காட்டுகிறார்.

விக்டோரியன் காலத்தில், ஆண்மையின் கருத்து பழைய வீரத்திலிருந்து விலகியது.
வரலாற்றாசிரியர் ஜெஃப்ரி ரிச்சர்ட்ஸ், ஐரோப்பாவின் நடுக்கால “ஆண்மை” கிறித்தவத் தரிசனமும் கலந்ததாகக் கூறுகிறார் . தைரியம், பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை, ஆகியவை முக்கிய பண்புகளாக இருந்தன.
டேவிட் ரோசன் கருத்துப்படி ஆண்மை என்பது“ஆணை பெண்களிடமிருந்தும், பிற ஆண்களிடமிருந்தும், உணர்ச்சிகளிலிருந்தும், குடும்ப வாழ்க்கையிலிருந்தும் விலகச் செய்யும் ஒன்று.”பெண்களுடன் தொடர்புடைய பண்புகளை மறுப்பதே ஆண்மையுடன் தொடர்புடைய மற்றொரு அம்சமாகவும் கருதப்படுகிறது.
அராபுக் கலாச்சாரத்தில், ஹாதிம் அல்-தாயி ஒரு முழுமையான ஆண்மையின் வடிவமாகக் கருதப்படுகிறார். அவர் தனது குதிரையும் ஆயுதங்களையும் தவிர, தனது சொத்துக்களை எல்லாம் கொடுத்து விடுகிறவர்.

1831-ல் தத்துவஞானி தாமஸ் கார்லைல் எழுதினார்: “ஆண்மையின் பழைய கருத்து சிதைந்துவிட்டது; புதியது இன்னும் நமக்கு தெளிவாகத் தெரியவில்லை. இருட்டில் ஒவ்வொருவரும் வேறு வேறு உருவங்களைப் தேடுகிறார்கள், வெர்டெரிசம், பைரனிசம், ப்ரம்மெலிசம் ஒன்று பின் ஒன்றாக வருகிறது.”
19ஆம் நூற்றாண்டில் குத்துச்சண்டை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஒரு தொழில்முறை விளையாட்டாக வளர்ச்சி பெற்றது. அதில் ஆண்மை என்பதை உடல் வலிமை மற்றும் தாக்குதல் தன்மைகள் வலியுறுத்தப்பட்டன. குத்துச்சண்டை அந்தக் காலத்தில் “உண்மையான ஆணின் கலை” எனக் கருதப்பட்டது.
நம் ஊரில் இதே இடத்தில் களரி வீரர்களை கணக்கில் கொள்ளலாம்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மேற்கத்திய நாடுகளில் சாதாரண குடும்ப அமைப்பு இவ்வாறு இருந்தது:
தந்தை வெளியே சென்று வேலை செய்து வருமானத்தைப் பெறுவது (ஆண் பங்கு) தாய் வீட்டு வேலைகள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பராமரிப்பு (பெண் பங்கு) பெண்கள் ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டு குடும்ப வருமானத்தை உயர்த்தியிருந்தாலும், ஆண்களின் அடையாளம் பெரும்பாலும் வேலை மற்றும் பொருளாதார பங்களிப்பு என்ற கருத்தைச் சுற்றியே இருந்தது.

1974-ல், ஆர்ஹ். கூல்ட் ஒரு ஆண் குடும்பத்திற்குச் செய்யும் பொருளாதாரப் பங்களிப்பின் அளவைப் பொறுத்தே பெரும்பாலும் ஆண்மையை (masculinity) மதிப்பிடப்படுகின்றனர் என்கிறார். .

20ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அதிகமாக மதிக்கப்பட்ட ஆண்மையின் வடிவமைப்பு சுயாதீனமானதோடு, பாலியல் ரீதியாக தன்னம்பிக்கை உடையவனாகவும், விளையாட்டுத் திறன் கொண்டவனாகவும் “ஆண்” என்று கருதப்படும் பொதுவான அடையாளங்களாக இருந்தன.
2008ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி, ஆண்கள் நல்ல உடல்நலம், அமைதியான குடும்ப வாழ்க்கை, மனைவியோ துணையோ உடைய நல்ல உறவு ஆகியவற்றுக்கு, பெண்களிடம் வெற்றிப் பெறுவதையும் விட அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர்.

தற்கொலை குறித்து நடைபெறும் மனிதவளவியல் ஆய்வுகளிலும் இதே போன்ற வாதங்கள் பொருந்துகின்றன. உலகளவில் பெண்களை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமான ஆண்கள் தற்கொலை செய்கின்றனர், ஆனால் தற்கொலை செய்ய முயற்சிப்பது அதிகமாக பெண்கள்தான். எனவே, ஆண்களின் தற்கொலையை மனிதவளவியலில் பல கோணங்களில் இருந்து பகுப்பாய்வு செய்கின்றனர்; குறிப்பாக வன்முறை மற்றும் ஆண்மை என்பவை முக்கிய வடிகட்டிகளாக உள்ளன.

கடந்த நாற்பது ஆண்டுகளில் தற்கொலை குறித்துப் எழுதப்பட்ட பெரும்பாலான கல்வி ஆய்வுகள் மனநல மருத்துவம், உளவியல் மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளிலிருந்து வந்தவையாகும், மேலும் அவை பெரும்பாலும் கடுமையான மனச்சோர்வு அனுபவிக்கும் தனிநபர்களை முன்னிறுத்துகின்றன. ஆதிக்கம் , மேலும் குடும்பத்தைக் கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட குடியேற்ற ஆண்களில் காணப்படும் தற்கொலைப் பாங்குகள் போன்றவை
ஆனால் மனிதவளவியலாளர்கள் சமூக காரணிகளைக் கவனத்தில் கொள்கின்றனர் .
சில்வேயா சாரா கனெட்டோ (2017) கண்டுபிடித்ததன்படி, வாழ்க்கையில் தெளிவான குறிக்கோள் குறைந்துவிட்டால் ‘வளைவில்லாத சமாளிப்பு’ (rigidity in coping) மற்றும் புதிய ‘சுயத்தை’ (sense of self) உருவாக்க முடியாத நிலை போன்றவை அமெரிக்காவின் வெள்ளை இன, நடுத்தர வர்க்க, ஓய்வு பெற்ற ஆண்களிடையே தற்கொலை அதிகரிக்கக் காரணமான சமூகச் செயலிகளாக இருக்கக்கூடும் என்கின்றனர்
மேலும் சமூக கலாச்சார காரணிகளே ஆண்களின் வன்முறையான நடத்தைக்கு மிகப் பெரிய காரணங்களாக விளக்கப்படுகின்றன.

இந்தியாவில் ஆண்மை பற்றிய பகுப்பாய்வு (Deconstructing Masculinity in India)
இந்திய ஆண்மை பல வரலாற்றுச் சூழல்களின் தாக்கத்தில் உருவானது.


இந்துக் புராணங்களில், ஆண்மையின் கருத்து இன்னும் நுட்பமானது.
பாரம்பரியமான வலிமை, தைரியம் ஆகியவற்றுடன், கருணை, ஞானம், மனக்கட்டுப்பாடு, சமச்சீரான அணுகுமுறை ஆகியவையும் அடங்கும். சிவன் தவமும் பேராற்றலும் கொண்டவர்; ஆனால் அதே நேரத்தில் அன்பு, படைப்பு, சமநிலை ஆகியவற்றையும் வெளிப்படுத்துகிறவர். விஷ்ணு உலகைப் பாதுகாக்கும் கடமையும் கொண்ட தர்மத்தின் மாதிரி. இங்கே “ஆதர்சமான ஆண்” என்பது தன்னைக் கட்டுப்படுத்துபவர், தர்மத்தை காக்குபவர், பாதுகாவலர், குடும்பத்துக்கு முன்னேற்றம் அளிப்பவர் என்று வரையறுக்கப்படுகிறது.

உதாரணமாக, பகவத்கீதை ஆண்மையின் முக்கிய பண்புகளாக கடமை (தர்மம்), சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றை வலியுறுத்துகிறது (Chakraborty, 2011). இவை அனைத்தும் பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஆண்மைக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்து மதம் கடமை, சுய கட்டுப்பாடு, பற்றின்மை ஆகியவற்றை ஆண்மையின் முக்கிய அம்சங்களாகக் காண்கிறது. இதற்கான உருவகமாக இராமரை குறிப்பிபடுகின்னர். இஸ்லாம் தைரியம், தாராளம், குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாப்பது ஆகியவற்றை ஆண்மையின் முக்கிய பண்புகளாகக் கருதுகிறது;

முகலாய காலம் (1526–1756) முகலாய ஆட்சிக்காலத்தில் அரச அரண்மனைப் பாரம்பரிய அன்பு, வீரியம், தாராளம் போன்றவை ஆண்மையின் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டன. அக்பர் பேரரசரின் ஆட்சியிலும் இது தெளிவாகத் தெரியிறது (Richards, 1993). நபி முகம்மது அவர்களின் வாழ்க்கை இதற்கு உதாரணம் (Schimmel, 1985). இம்மதக் கருத்துகள் இந்திய ஆண்மையை ஆழமாகப் பாதிக்கின்றன. இந்து ஆண்கள் கடமையை நிறைவேற்றும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முஸ்லிம் ஆண்களை தைரியமும் தாராளமும் கொண்டவர்களாகப் பார்க்கப்பட்டது (Osella & Osella, 2006).


மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ காலம் (1757–1947) இதில் முக்கிய பங்காற்றின. பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஒழுக்கம், விவேகம், முன்னேற்றம் போன்ற மேற்கு மதிப்பீடுகள் இந்திய பண்பாட்டுடன் கலந்ததால் புதிய மற்றும் சிக்கலான ஆண்மைக் கருத்துக்கள் உருவானது (Chatterjee, 1993).


தற்போதைய இந்திய பண்பாட்டில் ஆண்மையின் கலாசார வடிவங்கள்

திரைப்படங்கள், கிரிக்கெட், ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகள் ஆகியவற்றின் மூலம். தைரியம், நம்பிக்கை, காதல் ஆகிய பண்புகளைக் கொண்ட ஆண் கதாபாத்திரங்கள் அடிக்கடி காட்சிப்படுத்தப்பட்டன.

பின்பு விளையாட்டு முக்கியமாக கிரிக்கெட் இந்தியர்களின் தேசிய பெருமையையும் ஆண்மையையும் இணைக்கும் விளையாட்டாக மாறினது. சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் கொண்ட ஆண்மைக் கோட்பாடுகளுக்கான மாதிரிகளாகச் பார்க்கப்படுகின்றனர் (Appadurai, 1996).

காலப்போக்கில் சினிமாவின் ஆண்மைக் காட்சி மாறிவருகிறது. பாரம்பரிய வீரர்கள் இருந்து அதிக உணர்ச்சி வெளிப்படுத்தும் மென்மையான கதாபாத்திரங்களாக மாறியுள்ளன. சினிமாவின் தாக்கம் நகரங்களில் மட்டுமல்ல; செயற்கைக்கோள் தொலைக்காட்சி மற்றும் கைபேசிகள் மூலமாக கிராமங்களிலும் பரவியுள்ளது. இதன் மூலம் ஆண்மை மற்றும் நுகர்வோர் பண்பாட்டின் தொடர்பு மேலும் வலுப்பெறுகிறது.
இந்திய தொலைக்காட்சி தொடர்களும் ஆண்களை உணர்ச்சி வாய்ந்தவர்களாகவும் உறவு மையப்படுத்தப்பட்டவர்களாகவும் காட்சிப்படுத்தி ஆண்மையின் புதிய வரையறைகளை முன்வைக்கின்றன.

குடும்ப அமைப்பும் உறவுகளும் இந்திய ஆண்மையில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. தந்தை மையக் குடும்பங்களில் ஆண்கள் அதிகாரம் கொண்டவர்களாகக் கருதப்பட்டிருந்தனர். ஆனால் நகரமயமாதலும் நவீனமாதலும் இந்த அமைப்பை வெகு அதிகமாக மாற்றியது. பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு அதிகரிப்பதும் ஆணாதிக்கம் கொண்ட கட்டமைப்புகளை சவாலில் ஆழ்த்துகிறது. கூட்டு குடும்பங்கள் குறைந்து, கணவன்–மனைவி சமத்துவம் மற்றும் அதிக உணர்ச்சி பகிர்வு உருவாகிறது.

நகரப் பகுதிகளில் வாழும் நவீன ஆண்கள் விருப்பம், சுயநிறைவு, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பண்புகளை ஏற்றுக்கொண்டாலும் பாரம்பரிய ஆண்மைக் கட்டுப்பாடுகள் இன்னும் நிலைத்து நிற்கின்றன.


சமூக ஊடகங்களின் வளர்ச்சி இந்திய ஆண்மையை பெரிதும் மாற்றியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ஆண்கள் வலிமை, ஸ்டைல், நகைச்சுவை போன்றவற்றை முன்னிறுத்தி ஆன்லைன் உருவங்களை உருவாக்குகின்றனர். ஆனால் சமூக ஊடகம் விஷ ஆண்மை, பெண் விரோதம் போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது. இது ஆண்களின் பதட்டங்களையும் ஆசைகளையும் பிரதிபலித்தன.

மனநலமும் ஆண்மையுடன் ஆழமாக இணைந்துள்ளது. ஆனால் பாரம்பரிய ஆண்மை உணர்ச்சி வெளிப்பாட்டைத் தடுக்கிறது. எப்போதும் வலிமையானவராக இருக்க வேண்டும் என்ற அழுத்தம் மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது எனினும், மனநல விழிப்புணர்வு ஆண்களுக்கு உதவி கேட்கவும் பாரம்பரிய எண்ணங்களை சவாலில் ஆழ்த்தவும் வாய்ப்பு அளிக்கிறது.
குடும்பத்தின் கண்ணியமும் சமூக நிலையும் அடிப்படையாக கொண்டு ஆண்களின் செயல்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்த தரநிலைகளில் இருந்து விலகுவது ஆண்களுக்கு அவமானமாக கருதப்படுகிறது. மரியாதை மற்றும் அவமானம் என்ற இரு கருத்துகளும் இன்றைய ஆண்மையுடன் தொடர்புடையவை மேலும் சிக்கலாக்குபவை.


ஆகவே, இந்திய ஆண்மை ஒரு ஒற்றை கருத்துமல்ல; அது வரலாறு, பண்பாடு, மதம், ஊடகம், உலகமயமாக்கல், சமூக–அரசியல் சூழல் ஆகியவற்றின் கலவையாகும். வலிமை, மரியாதை, கடமை, அதிகாரம் போன்ற பாரம்பரிய ஆண்மைக் கோட்பாடுகள் இன்னும் நிலைத்திருந்தாலும் உணர்ச்சி வெளிப்பாடு, சமத்துவம், சிந்தனை போன்ற புதிய மதிப்புகளுடன் மோதிக்கொண்டும் இணைந்தும் இந்திய ஆண்மை வளர்ந்து வருகிறது.

முகலாய–பிரிட்டிஷ் தாக்கத்துடன் கூடிய இடைக்கால கருத்துக்களும் மத அடிப்படையிலான நடைமுறைகளும் ஆண்மையை உருவாக்கியும் சவாலில் ஆழ்த்தியும் வருகின்றன.


19 Nov 2011

நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!



ஒவ்வொரு 9 நொடிப் பொழுதிற்கும் ஒரு பெண் துண்புறுத்தப்படுகின்றாள்.   உலக பெண் தரவும் சொல்லும் செய்தி   தினம் 3 ல் ஒரு பெண் கணவனால் அல்லது தன் காதலனால் கொல்லப்படுகின்றனர்.  ஐரோப்பியா நாடுகளிலும்   4 ல் ஒரு பெண் பாதிக்கப்படுகின்றார். ஆப்பிரிக்கா நாடுகளில் தான் பெண்கள் மிகவும் மோசமான நிலையில் நடத்தப்படுகின்றனர்.  பாகிஸ்தானில் 90% என்பது இந்தியாவில் 70%  பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிகின்றது.  பிலிப்பைன் மற்றும் பராக்குவே நாட்டில் மட்டுமே 10 % குறைவான பெண்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிந்துள்ளது. 

ஒவ்வொரு 6 மணி நேரத்தில் ஒரு இளம் பெண் எரித்து அல்லது அடித்து அல்லது தற்கொலை செய்து கொல்லப்படும் அளவிற்கு பெண்கள் மேல் கொள்ளும் வன்முறை இந்தியாவில் பெருகி பலுகி உள்ளது.  இந்த சூழலில் தான் இந்தியாவில் ‘குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம்’   இந்திய அரசால் இயற்றப்பட்டது.   சட்டத்தால் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசில் நோக்கம்!  ஆனால் உண்மை நிலவரம் என்ன என்றால் பல குடும்பங்கள் அழிந்துள்ளது என்று மட்டுமல்ல பெண்கள் வாழ்க்கையும் ஆண்கள் குடும்பவும் அழிக்கப்பட்டுள்ளது என்பதே ஆகும்.

 மை நேஷன்(My Nation) போன்ற அமைப்புகள் இப்போது  ஆண்கள் சார்பாக போர் கொடி பிடித்துள்ளது.  பெண்கள் வடிக்கும் கண்ணீரை கண்டு சட்டம் இயற்றிய இந்திய அரசு, ஆண்களின் வாழும் உரிமையை கண்டு கொள்ளவில்லை என்பதாகும் அவர்களின் குற்றச்சாட்டு! ஆண்களின் கூற்றுப்படி  பொருளாதாரம் 32%,  உளவியல்(22%),  பாலியல்(19.8) என  பல  வழிகளில் பெண்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர், துன்புறுத்துகின்றனர் என்பதாகும்.  திருமணமான ஆண்களின் நிலை இன்னும் கொடியதாகவே உள்ளது.   ஒவ்வொரு 8 நொடிகளிலும் ஒரு ஆண் மரணத்தின் பிடியில் சிக்க வைக்கப்படுகின்றார்.  திருமணமான பெண்களை (28%) விட ஆண்களே(52%)  தற்கொலைக்கு இலக்காகுன்றனர் என்பதும் நடுங்க வைக்கும்  உண்மை ஆகும்!  இச் சட்டத்தின் பாதகங்களை கணக்கிலெடுத்து மறு பரிசீலனை செய்ய ஆண்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.  மேலும் இந்த சட்டம் இயற்றும் முன் அரசு தேவையான ஆய்வு மேற் கொள்ளாததும் பெரும் குறையாகவே உள்ளது.  ஓட்டுக்கு என குடும்பம் என்ற கோயில்களை உடைத்து சமூகத்தை ஒரு சாக்கடையாக மாற்ற மட்டுமே இது போன்ற சட்டங்கள் உதவும் என்ற கருத்தும் மேல் ஓங்கி நிற்கின்றது.

இந்திய சமூக பார்வையில் ஆண்கள் தங்கள் துயரை வெளியில் சொல்வதோ, அழுவதோ ஆண்மைக்கு இழுக்காக கருதுவதால், தங்கள் மனக்குறைகளை பகிரவும், சிக்கல்களை தீர்க்கவும் வழியில்லாது தவிக்குகின்றனர்.   கடந்த 2001-2005 காலையளவில் 1 மிலியனுக்கு அதிகமான ஆண்கள் வேலை இழந்ததும்  பல பிரச்னைகளுக்கு வழி வகுக்குத்துள்ளது.  பெண்களால்; ஆண்கள் மிகவும் கீழ்த் தரமாக திட்டு வாங்குவதும், நேரத்திற்கு உணவூ கிடைக்காதும், படுக்கை அறையில் புரக்கணிக்கப்பட்டும், தங்கள் குழந்தைகளை கணவர்களுக்கு எதிராக திருப்பி விடுவது மட்டுமல்லாது கணவனின் பெற்றோர்களையும் அனாதை விடுதி அல்லது நடுத் தெருவில் கொண்டு விடுவது வழியாக துன்புறுத்துகின்றனர் என்று சமூக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.  கேவலமான வார்த்தையால் கணவர்களை திட்டுவதில் முன் நிற்பது இந்திய பெண்கள் தானாம்!

இந்தியாவில், இந்த சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதல் கேஸ் நெல்லையை சேர்ந்த ஜோசப்- மேரி என்ற தம்பதிகளுடையது என்பதே இன்னும் கூடுதலான தகவல்.  மேரி என்ற ஒரு அரசு பள்ளி ஆசிரியை அரசு அலுவலகத்தில் பியூனாக வேலை செய்து வரும் கணவர் ஜோசப், தன்னை கம்பு-குடையால் அடித்தார் என்று கேஸ் பதியப் பட்டது.  வேலை இழந்து, கோர்ட்டு- கேஸ் தொல்லையால் உழன்று ஒரு நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்டதுடன் கேஸ் முடிந்துள்ளது!!  சமூக நிலையில் ‘குடும்பம்’ என்ற அமைப்புக்கு பெரிய இடம் கொடுக்கும் தமிழ் சமூகம், மேலும் அன்பை பற்றி உலகுக்கு சொல்லிய யேசுநாதரின் பெற்றோர் பெயர் கொண்ட கிருஸ்தவ தம்பதிகள் என்பதும் இன்னும் வருந்த தக்க செய்தி ஆகும்.

குடும்பத்தில் சண்டை வருவது தவிற்க இயலாத விடயம் ஆகி விட்டது.  இரு வேறுபட்ட சமூக சூழலில் இருந்து வந்த இரு நபர்கள், சங்கமித்து ஒரு குடும்பமாக மாறும் போது பல முரண்கள் எழுவது சகஜமே.  ஆனால் அதை கையாள தெரிந்துருப்பது என்பதே அறிவுள்ள மனிதனின்  சிறப்பு.   

சமரசம், தீர்வு காணல் என்பதில் ஆண் பெண் சம அளவு  பங்கு உண்டு என்றிருந்தால் கூட பெண்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது.  உறவுகள் என்பது மனங்கள் சம்பந்தமானது இதில் சட்டம் கொண்டு இயக்கப்படும் மனம் வளமான வாழ்வுக்கு உதவாது.  வழக்காளர்களுக்கு வழக்குகளை கொடுக்கலாம் அவர்களுக்கு வாழ்வு கொடுக்கலாம் ஆனால் தம்பதிகளுக்கு மனக் கசப்பு அதிகரிக்குமே தவிற சுமூகமான வாழ்க்கைக்கு உதவுவது இல்லை. தன் குடும்பத்தை போலிஸிடம் காட்டி கொடுத்த பெண்ணை /ஆணை பின்பு அந்த குடும்பம் மனதால் ஏற்று கொள்வது அரிதான விடயமே.  ஆனால் இதை புரியாது பல பெண்கள் சிறு சண்டைக்கு கூட போலிஸ் உதவி நாடுவது தங்கள் குடும்ப மாண்பை கெடுக்க மட்டுமே உதவும்.

சமூக கட்டமைப்பில் ஆக்கபூர்வமான செயல் ஆக்கத்திற்க்கு பெரிதும் பங்காற்ற வேண்டிய ஊடகம் கூட தன் வருமானம்- விளம்பரம் நோக்கு கொண்டு பல நிகழ்ச்சிகளில் கணவர்-மனைவி உறவை கொச்சைப்படுத்தும்படியான நிகழ்ச்சி நடத்துகின்றனர். நாலு சுவருக்குள், தங்கள் குடும்பத்திற்க்குள் சமரசம் செய்து கொள்ள வேண்டிய பிரச்சனையை கோபி நாத் போன்றவர்களிடம் பகிர்ந்து குரங்கிடம் கிடைத்த பூமாலையாக கணவர் மனைவி உறவை திரித்து காட்டுகின்றனர். அதே போல் பல சீரியல்கள்; கற்று கொடுப்பதே எப்படி அழுவது, கொடூரமாக முகத்தை வைத்து கொண்டு திட்டுவது, கண்ணை உருட்டி பயமுறுத்துவது, வஞ்சமாக திட்டமிடுவது போன்றவை ஆகும். சினிமா, பத்திரிக்கை போன்றவற்றிலும் வரும் காமடிகள்  பலதும் கணவன் மனைவி உறவு அலங்கோலமாக சித்தரிகரிப்பதாகவே உள்ளது. இதனால் குடும்பம் உன்னதமான கணவர்-மனைவி உறவு சார்ந்து மனதில் ஒரு கேலியான கீழ்த்தரமான எண்ண அலைகள் பதியப்படுகின்றது.  இதில் சினிமா, சீரியலில் காண்பது போன்று கற்பனைக்கு இடம் இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும்.  திருமணம் என்பது  உடல் சார்ந்த உறவு என்பதை விட மனம் சார்ந்த உறவு என்று புரிதல் வரும் போது அலுப்பு மாறி வாழ்க்கையுடன் ஒன்றிப்பு வந்து விடுகின்றது.

மேலும் பிரச்சனை கையாள ஆண்களை விட பெண்களிடமே ஆற்றல், வலிமை உள்ளது.  இதில் படிப்பு,  திறமை என்பதை விட பெண்ணின் நேக்கு போக்கான பண்பே கை கொடுக்கும். இன்றைய படித்த பெண்கள் மூளையை விட நாவுக்கே அதிகம் வேலை கொடுக்கின்றனர்.  கணவன் வீட்டில் புகுந்த பெண்கள் தங்கள் உரிமையை பற்றி பேசும் அளவுக்கு கடமையை பற்றி எண்ணுவதில்லை.  

முதல் ஒரு வருடம் தான் சார்ந்திருக்க வேண்டிய குடும்பத்தை ஆழமாக அவதானிப்பதை விடுத்து முதல் ஒரு வருடத்திற்க்குள் அந்த வீட்டிலுள்ள அனைவரிடவும் சண்டை பிடித்து ஒதுங்கி விடுகின்றார்கள்.  ஒரு சமூகத்தின் மூக்கனாம் கயிறு பெண்ணிடமே உள்ளது. அச் சமூகத்தை ஆக்கத்திற்க்கும் அழிவுக்கும் கொண்டு செல்வது தன்னால் மட்டுமே என்று புரிந்து கொள்ளும் போது அச்சமூகம் சிக்கலில் இருந்து விடுபடுகின்றது.

தந்தையாகவும், கணவராகவும், மகனாகவும் பல அவதாரங்களில் நம் உயிரோடு கலந்திருக்கும் ஆண்களில் பாதுகாப்பு  நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்ந்து ஆண்கள் மாண்பை காப்போம் நம் அழகிய உலகை மீட்போம்!!!


இன்று நவம்-19 ஆண்கள் தினம்.  அனைத்து  ஆண் உறவுகள், தோழர்கள், ஆண் நண்பர்கள், ஆண் ஆசிரியர்கள் அனைவருக்கும்  என் இதயம் கனிந்த ஆண்கள் தின வாழ்த்துக்கள்!

19 Sept 2010

சில ஆண்கள்..........

நேற்று   எனது கணவரும் நானும் ஒரு மடிக்கணிணியின் தரத்தை சோதனை செய்து கொண்டிருந்தோம்.  புகைப்படங்கள், காணொளிகள்., பாட்டுக்கள் என கணிணி முழுக்க ஒரே கலவரமாக இருந்தது.  சில ஆலயங்களின் படங்கள் அருமையாக இருந்ததால்  எங்களுக்கு தேவயானவயே சுருட்டி கொண்டிருந்தோம்.  முதல் சில ஆல்பங்களில் அவர் ஆசை மனைவி, குழந்தை என குடும்பபடங்களாக ஓடி கொண்டிருந்தது. நான் சொல்ல வரும் நபர் கோட் சூட்டுடம் மிகவும் பவ்வியமாக  மனைவி,குடும்பத்துடுடன் காட்சி கொடுத்து கொண்டிருந்தார்.  போக  போக சாயம் வெளுப்பது போல அவருடைய பணியிடத்திலுள்ள சில புகைப்படங்கள் அவரே புடமிட்டு காட்டியது.  அப்படியே அம்பியாக காட்சியளித்தவர் ரோமியோ-வாக மாறிகொண்டிருந்தார். 

 அவரும் அவருடைய நண்பருகளும் கப்பலில் வேலை செய்வார்கள் போலும். கப்பலில் உள் அமைப்பை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தவர் அப்படியே சாப்பாடு  ,பிராந்தி பார் என கேமரவே வைத்து சிவதாண்டம் ஆடி கொண்டிருந்தார்.  ஒரு கட்டத்தில் பார் பெண்ணெயும் சுத்தி சுத்தி படம் எடுக்க ஆரம்ப்பித்து விட்டனர்.  அப்பெண்ணை  ஒவ்வொரு ஒருவராக சர்க்கசில் போன்று தூக்கி போட்டு விளையாடுகின்றனர்.  என் பார்வை அவர், அவரின் மனைவியுடன் நிற்க்கும் படங்கள் பக்கம் சென்றது.  மனைவி பூச்சூடி நகையணிந்து பட்டு சேலையணிந்து, பார்க்க துடிக்கும் ஆண் மனம் ஏன் அடுத்த பெண்களை இவ்வாறாக காண தோன்றுகின்றது .  இன்னும் வெறு விதமாக நினைக்க தோன்றியது. அவருடைய மனைவியும் கணவர் தான் மிகவும்  தாராளமாக மனதுடன் நடந்து கொள்கின்றாரே  நாமும்  மற்று ஆண்களுடன் தாராளமாக  நடந்து கொள்ளலாம் என எண்ணினால் விட்டு தான் வைப்பார்களா?

சமீபத்தில் ஒரு பெண் அலைபேசியில் அதிக நேரம் கதைத்து கொண்டிருந்தாள் என்ற காரணத்திற்க்காக மிகவும் கொடூரமாக எரித்து கொல்லபட்டார்.  அதிலும் பெரும் சோகம் இச்செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை தர்மமான எழுத்தாகும்.  அப்பெண் அலைபேசியில் பேசுவதை நிற்த்தும்  படி அவளுடைய கணவர் பணிந்ததாகவும் அவள் பணியாததால் தன் குடும்பத்தில் மானம் கப்பல் ஏறிவிடுமோ என நினைத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாராம்.  ஒரு வேளை இவருடைய நேரத்தை இன்னும்  அதிகமாக மனைவிக்காக  செலவிட்டிருந்தால் அலைபேசியில் கதைப்பதை குறைத்து குடும்பத்துடன் ஐக்கியமாகி இருப்பாள்.  அதிலும் ஒத்து வரவில்லை என்றால் அவளின் விருப்படி அவளின் வாழ்க்கையை அமைத்து கொடுத்து இவரும் நலமாக வாழ்ந்திருக்கலாம். ஓர் கொலை  ஒரு பிரச்சைனக்கு தீர்வாகுமா. ?அதுவும் இரு குழந்தயின் தாய் அப்பெண்?


அதே போன்று சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒரு பெரும்  மதிப்பிற்க்குரியவரின் வீட்டில் பணி செய்து கொண்டிருந்தார். அவர் சமீபகாலமாக அவர் வீட்டிற்க்கு  போவதில்லை. விசாரித்தபோது சின்ன அம்மை வந்துவிட்டதாகவும் அவர்கள் வீட்டில் வர வேண்டாம் என சொல்லி விட்டதாகவும் கூறினார். நான் அவரிடம் பணம் உதவி கிடத்திருக்கும் அல்லவா என விசாரித்தேன்.  அந்த நபர் அரை லட்சத்திற்க்கும் மேல் சம்பளம்  வாங்கும் நபர், அப்பெண் ஒரு இளம் விதவை, மேலும் 1,3 வகுப்பில் படிக்கும் குழைந்தைகளும்  உள்ளனர். அக்குழந்தைகளும் சின்னம்மையால் பாதிக்க பட்டிருந்தனர் அச்சமயம். அப்பெண்  கூறிய சில விஷயங்கள் மிகவும் கொடியதாக இருந்தது. அப்பெரியவரின் மனைவிக்கு இவரின் நடைவடிக்கையை கண்காணித்து  கொண்டுயிருப்பதாம் வேலை.  இப்பெண்  தமது எண்ணமாக இருக்கலாம் என வெளிக்காட்டாமல் வேலை பார்த்து வந்தாராம்.  அப்பெரும்  மனிதர் ஒரு நாள் இப்பணிப்பெண்ணை அழைத்து, என் மனைவி  சந்தேகபடுகின்றாள்; உன்னை ஒன்றும் கூறமாட்டாள், நீ போன பின்பு என்னை திட்டுவாள்.  ஆகயால் என்னை கண்டாலும் காணாதது போல் நடந்து கொள் என அறிவுரை கூறினாராம்.  என்ன கொடுமை பாருங்கள்.  தன் தாலி கட்டின மனைவியிடம் உரையாடி தன் நிலையை வெளிப்படுத்த தைரியம் இல்லாது அவ் ஏழை பெண்ணை மேலும் மன உளச்சலுக்குள் உள்ளாக்கியுள்ளார்.  தன் மனைவி செய்வது தப்பு என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கி மனைவியிடம் காட்டும் கரிசனை மற்று பெண்கள் என்பதால் இளக்காரமா? மேலும் கணவனை சந்தேக கண்ணோடு பார்க்கும் பெண்களுக்கு தன் வேலைசெய்ய பணிபெண்கள் தான் அமர்த்த வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.


இவ்விதமாக குடும்ப சூழல், ஏழ்மை என பல காரணங்களுக்காக வீட்டு படி தாண்டி பணிக்கும் வரும் பெண்கள் இவ்விதமான கொடியவர்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.


நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்ந்தபோதும் இச்சூழலே உணந்தேன். பெண்களை மேலாளர் அந்தஸ்த்தில் உள்ள ஆண்கள் படுத்தும் பாடு சொல்லி ஆகாது.  நான் ஒரு போதும் பசி கொடுமை என்ற காரணத்திற்க்காக பணிக்கு செல்லும் சூழல் இல்லாததால் மேலாளகர்களிடம் பல முறை சண்டையிடுள்ளேன்.  மேலாளர்கள் பேச்சு மிகவும் கீழ்த்தரமானதாக இருக்கும்.  தன் மனைவியிடம் கை கட்டி பணிந்து போகும் பல ஆண்கள், அவர்கள் வேலையிடங்களில் அபலை பெண்களை இவர்கள் அடிமை போன்று நடந்துகின்றனர்.


  வேலையிடங்களில் என்று மட்டுமல்ல கல்வி கற்க்கும் இடங்களில் கூட இச்சூழலே!  ஒரு இளம் விரிவுரையாளர் எங்கள் துறையில் இருந்தார். நான் 10 வருடம் கடந்து கல்வி கற்க்கும் நோக்கத்துடன் சென்றதால் இளம்பேராசிரியர்கள் என்னை விட இளையவர்களாகவே இருந்தனர். அதில் ஒருவர் என்னை எங்கு கண்டாலும் கேலி பண்ணுவதையே பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.  திருமணத்திற்கு  பின்பு உங்களை போன்றோர்  படிப்பதால் எங்கள் பாட ப்பிரிவுக்கை மதிப்பு குறைவு என அலுத்துகொள்வார்.  துறை சார்ந்த மாணவர் கூடுகை நடைபெறும் போதும் என்னை வம்புக்கு இழுக்காது இருப்பது கிடையாது. நம் மத்தியில் இருக்கும் ஜோசபின் நம்மில் வயதில் மூத்தவர் அவரின் அறிவுரையை நாம் கேட்போம்...... என ஆரம்பிப்பார்! ஒரு முறை இச்செயலை பற்றி என் பேராசிரியரிடம் முறையிட்ட போது சில ஆசிரியர்களுக்கு சில மாணவர்களை சகித்து கொள்ள முடியாது ஆகயால் நீ படிப்பு என உன் லட்சியத்தை நோக்கி செல் தேவையற்ற கூட்டத்திற்க்கு பங்கு பெற  வேண்டாம் என கட்டளையிட்டார். அதன் பின் அவ்விளம் விரிவுறையாளரின் பேச்சிலிருந்து தப்பித்து கொண்டோம் என எண்ணிகொண்டேன்.  ஆனால் அந்த ஆசிரியரோ ஒரு நிகழ்ச்சிக்கு பணம் முழுவதுமாக கொடுக்க வில்லை என கூறி எனது தேர்வு சீட்டை வைத்துகொண்டு, தேற்வு எழுதும் கால் மணிநேரத்திற்க்கு முன்பு அந்த ஆள் என்னை என்னவெல்லாம் பேசவேண்டுமென்று நினைத்தாரோ அவ்வாறாக திட்டினார்.  அதில் ஒரு வார்த்தை “நீ என்ன பெரிய இவ்வளோ”,  கேட்டதும் நான் எதிர் பார்க்காதளவு என் பெண்மை சினம் கொண்டு  எழுந்தது.  நானும் பதில் அதே நாணயத்தில் கொடுத்திருந்தும்  ஒரு மாத காலம் மன உளர்ச்சலுக்கு ஆளானேன்.
 இவ்விதம்மாக பெண்கள் பலவிதத்தில் பலரால் சூரையாரைப்படுகின்றனர்.  அவ்விதம் மனபோங்குள்ள  ஆண்களை திருத்தவே முடியாது.  பெண்கள் தான் வளர்க்கும் மகன்களை செம்மையாக, மற்றவர்களை பெண் -ஆண் பேதமின்றி மதிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்.  அது கூட சாத்தியமா என தெரியவில்லை. தாய்மார்கள் கூட தன் மகன் அடாவடியாய் பேசுவதை ரசிக்கும் சூழல் இன்று காணப்படுகின்றது.