5 Dec 2023

என் ஜோசப் தாத்தா வீடு!

 தாத்தா வீட்டில் ஒரு வேட்டை தோக்கு இருந்தது. அது சுவரில் மாட்டிக் கிடக்கும். தாத்தா ஓர் ஜீப்பும் வைத்து இருந்தார். தாத்தா பொரையார் நாடார் காலம் மூணார் வந்து,  அங்கு இருந்து பீர்மேடு சென்றவர். 

அதனால் எங்கள் தோட்டத்தில் பழங்கள். வைத்து சாராயம் காச்சும் வித்தையும் அறிந்து வைத்து இருந்தார். என் தாத்தாவின் அண்ணன் ஆசிரியராக இருந்தும், தாத்தா நான்கு வயது இருக்கையில் பெற்றோர் இறந்த நிலையில் சகோதரர்கள் பராமரிப்பில் வளர்க்கப் பட்டவர். ஒரு சகோதரி மட்டும் இருந்தார் என கேள்வி பட்டுள்ளேன். 

ஆங்கிக்கன் சபையை சேர்ந்த தாத்தாவால் குடும்பக் கட்டுப்பாட்டில் ஒதுங்கி இருக்க இயலவில்லை. அவருக்கான ஒரு உலகம் எஸ்டேட் தோட்டங்களில் இருந்தது. 

எ.வி.டி எஸ்டேட்   குமஸ்தாவாக இருந்த  இடையன் குடியை சேர்ந்த A.V தாமஸ் எஸ்டேட் முதலாளியாக  உருவாகி வரும் காலம் . தாத்தா பக்க பலமாக இருந்ததால் எஸ்டேட்டில் தாத்தாவிற்கு 25 ஏக்கர் நிலம் எஸ்டேட் வீடுகளுடன் சேர்ந்து ஒரு வரிசையான வீடும் கிடைத்ததது. 


அந்த வீட்டில் பிறந்த மகன் வழி முதல் பேத்தி ( பெரியப்பா காதல் திருமணம் என்பதால் பெரியப்பா பிள்ளைகள் அந்த வீட்டில் பிறக்க வில்லை.) என்பதால் எனக்கு ஒரு தனி இடம் இருந்தது. 


என் தம்பி பிறந்த போது மறுபடியும் அந்த வீட்டில் விடப்பட்டேன் . அப்போதே சாந்தா சித்தி எனக்கு பால் சேர்க்காத டீ தந்தார் என்று ஆட்சி செய்யும் அளவிற்கு குட்டி அதிகாரம் எனக்குள்  இருந்தது.

எங்கள் குடும்பத்தில் ரசல் சித்தப்பா மனிதர்களோடு இயங்கி, உதவிகள் செய்து  பழகுபவராக இருந்தார். அதனால் சித்தபாப்பவை சுற்றி ஒரு பெரும்  ஆண் பெண் பட்டாளம் இருந்தது.

என் அப்பா தன் கதையை மட்டும் பார்த்து அப்போதே வேலையில் காத்திரமாக இருந்தார். சொத்துக்கள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

ரசல் சித்தப்பா அறையில் இருக்கும் கட்டிலில் நான் உறங்கிய நினைவு உண்டு. காலை விழித்து சன்னல் வழி பார்த்தால் வாழை மரம் குலைத்து நிற்பது காணலாம். பக்கத்தில் ஒரு எட்வட்  ரோஜா செடியும் உண்டு. சித்தப்பாவை தேடி ஆண் பெண்கள் காலையில் வந்து விடுவார்கள். மாட்டு பண்ணை வைத்து இருந்ததால் காலையில் மாட்டில் பால் எடுக்கும். வேலையில் மும்முரமாக பணியாட்களும் இரண்டு சித்தப்பாவும் கிளம்பி விடுவார்கள். 

சித்தப்பாக்கள் அந்த பாலை கேன்களில் நிறைத்து டவுனுக்கு கொண்டு போய் கொடுத்து வருவார்கள்.   அப்போது என் சித்தியுடன் தோட்டத்தில் இருந்து பப்பா பழம் தின்று கொண்டு இருப்பேன். 


எல்லா பண்டிகைகளுக்கும் பெரியப்பா சித்தப்பா அத்தை சில போது மாமி பிள்ளைகளுடன் தாத்தா வீட்டில் தான் கொண்டாடினோம். குழந்தைகள் எங்களை சுதந்திரமாக. விளையாட பேச அனுமதித்தவர். என் அப்பாவிடம் கிடைக்காதே துரைகள் என்ற விளியுடன் உள்ள நேசத்தை  தாத்தாவால் பெற்று வளர்ந்தேன். என் அப்பாவிடம் பேசாத கதைகள் ரசல் சித்தப்பாவுடன் பேச இயன்றது. 


தாத்தா மதியம் டவுனில் இருந்து வரும் போது எனக்கு பிடித்த போண்டா வாங்கி கொண்டு வருவார். தாத்தா ,பாட்டி கதை பேசிக்கொண்டு இருக்க நான் அருகில் இருந்து விளையாடிக் கொண்டு தின்றுக் கொண்டு இருப்பேன். 

என் பாட்டி நெய்யூரை சேர்ந்த ஒரு ஆங்கிலிக்கன்  சபை  பாஸ்டர் மகள் அவருக்கு உலகம் வெத்தலை செல்லம் . அவர் பேசும் மொழி வெற்றிலை இடிக்கும் இசை தான். பொதுவாக யாருடனும் பேசாது இருப்பவர். அவர் வெளியே கிளம்பும் போது சுருக்கு பை போன்ற ஒரு பையை கையில் தொங்க போட்டு மெதுவாக நடந்து செல்வார் , மெதுவாக பேசுவார். வயதான பின்பு கொஞ்சம் கழுத்து ஆடும் படி இருந்தது. 

என்னமோ என் குழந்தை பருவத்தில் என்னை கவர்ந்தது ரசல் சித்தப்பாவும் தாத்தாவும் தான். . தாத்தா தனது 90 வயதில் இறக்கும் வரை என்னிடம் அன்பு பாராட்டி கொண்டு இருந்தவர். எனக்காக காட்டு இறச்சிகள், கின்னி கோழி முட்டைகள் சமைத்து தந்துள்ளார்.  வீட்டில் உதவி செய்ய பணி பெண்கள் இருந்தனர்.  பாட்டி பொதுவாக மந்தமாக எந்த வேலையும் செய்யாது வெற்றிலை செல்லம் மற்றும் பைபிள் உடன் கழித்தவர். அவரை நோக்க ஊரில் இருந்து வரும் அவர் சகோதரி பிள்ளைகளை கண்டால் வழக்கத்திற்கு மீறி கொஞ்சம் முகத்தில் மகிழ்ச்சியை காட்டுவார். பாட்டியின் இளைய தம்பியும் தனது அக்காளை பார்க்க வந்து கொண்டு இருந்தவர். அன்பாக துரைகளே என்று அழைத்துக் கொண்டு எனக்கு காட்டு இறச்சிகளை சிறிய பாத்திரத்தில் எடுத்து வருவதை வழக்கமாக வைத்து இருந்தார். நான் ஒரு ஆஸ்துமா நோயாளி என்பதால் கரிமந்தி இறச்சியை,  தாத்தா பிரத்தியேகமாக எடுத்து வருவார். 

கடைசியில் தாத்தா ஒரு பக்க வாதத்தால் சரியும் வரை என்னிடம் அன்பு பாராட்டினவர். என் திருமணம் நிச்சயமான சில மாதங்களில் இறந்தார் என் கணவர் குடும்பம் கன்னம்குளம் என்பது அழங்கம்பாறையை சேர்ந்த தாத்தாவிற்கு உவப்பாக இருக்கவில்லை. தன் கருத்தை என் அப்பாவிடம் சொல்லவும் தயங்கவில்லை. 

கிழக்கு உதிக்கும் ஒற்றை நச்சத்தரத்தை தாத்தாவாக கண்டு.வைத்து   இருந்தேன். பின்பு பெரியப்பா சித்தப்பா, அப்பா, அத்தான்  என வானில் நிறைய நட்சித்திரங்கள் உதிக்க துவங்கிய பின் நான் நச்சத்திரங்களை பார்ப்பதையே நிறுத்திக் கொண்டேன்.