27 May 2020

ஆண்- பெண் குடிகாரர்கள்

கொரோனா காலத்தில் மக்களுக்கு அரிசி கிடைக்கிறதா இல்லையா என்பதை விட டாஸ்மாக் திறப்பார்களா இல்லையா என்பதை உற்று நோக்கி கொண்டிருந்தனர்.
டாஸ்மாக்கை அடைக்க வேண்டும் என்பது குடிகாரர்கள் செத்து போய் விடக்கூடாது என்பதை விட கொரோனா இடரில் அரசை முடக்கும் ஒரு வார்த்தையாகவும் முன்வைக்கப்பட்டது. ஒரு நாள் வியாபாரம் 180 கோடி என்பது அதன் மார்க்கட் நிலையும் கண்டு உணர்ந்தோம்.
குழந்தைகள் பிறந்த நாள் துவங்கி கல்யாணம், தேர்வில் வெற்றி , வேலை உயர்வு என எல்லா நிகழச்சிகளிலும்
மதுவும் விருந்தாக ஊற்றப்படுகிறது .
இதன் பயண்பாடு என்பதை உடல் பராமரிப்பு, ஆரோக்கியம், மனிதனின் தோற்றப் பொலிவையும் முன்நிறுத்தி விழிப்புணர்வு கொடுத்தால் இளம் தலைமுறையாவது தப்பிக்கும்.
இன்றைய தினம் , 10 ஆம் வகுப்பு மாணவன் துவங்கி பல்லு போன கிழவன் வரை குடிக்கிறார்கள் என்பதே உண்மை.
மதமோ,கலையோ, கலாச்சாரமோ, கல்வியோ எதுவும் கட்டுப்படுத்த இயலா வண்ணம் மது பழக்கம் பெருகி விட்டது.
மதுபானங்களால் என்ன தீமை என்னவென்று தெரியாதவர்களா? குடிக்கிறார்கள் அதுவுமில்லை.
மதுவால் உடல் நீர் சத்து குறைந்து
கிட்னி,
லிவர்,
ஈரல்,
பான்கிரியாஸ்,
நரம்பு மண்டலம்,
செமிப்பு தன்மை
உடல் இயக்கம்,
உளவியல்
என எல்லா வகையிலும் பாதிக்கப்படுவார்கள். மேலும் உடலுக்கும் மூளைக்குமான தொடர்பாடல் தடை , பல வகை கேன்சருக்கு காரணம் என தெரிந்தே குடிக்கிறார்கள்.
மதுக்கடையை மூடுவது சாத்தியமா என்றால்; மது தயாரிப்பில் தரம் பேணுக , விற்பதில் ஐரோப்பிய நாடுகளில் என்பது போன்று வயது நோக்கி கொடுக்குக, அளவை குறைத்து, விலையை கூட்டுதல் மட்டுமே சாத்தியம்.
இன்று குடிப்பது என்பது கர்வத்தின், பணக்காரத்தனத்தின், சமூக அங்கீகாரத்தின் , நாகரிகத்தின், பாகமாக விளம்பரம் ஊடாக இளம் தலைமுறை தலையிலும் புகுத்தியுள்ளார்கள்.
இளம் தலைமுறைக்கு புரிதல் தருவது மட்டுமே தீர்வாகலாம்.
அவ்வகையில் அதன் அளவு சார்ந்து தெரிவிப்பது காலத்தின் அவசியமாகும்.
ஒரு ஆணின் ஒரு நாளைய குடி அளவாக " 1 ட்ரிங்( 1 drink) என்கிறார்கள்.
ஒரு ட்ரிங்
12 அவுன்ஸ் பீர்
5 அவுன்ஸ் வைன்
ஒன்றரை அவுன்ஸ் ஸ்பிரிட்( விஸ்கி, ஜின்)
ஒரு அவுன்ஸ் என்பது 14 மில்லி.
இன்றைய ஆண்கள் ஒரு நேரம் குறைந்தது 500 மிலி குடிப்பதாக அறிகிறோம். 21 மி.லிக்கும் 500 மி.லி க்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் போன்றதே.
குடியின் காரணமாக ஏதேதோ சொல்கிறார்கள். மனச்சோர்வாம், கெத்தாம், சமூக நிர்பந்தமாம், பலர் ஐரோப்பியா நாட்டை பின்பற்றுவதாக சொல்கிறார்கள். ஐரோப்பியா காலநிலை தான் என்ன? -மைனஸ் () டிகிரிக்கு மேல் இங்கு + 35 டிகிரிக்கு மேல்.
குடியை குடிகார்கள் தானாக நிறுத்த வேண்டும். கொரோனா நேரம் மிகவும் சிக்கலான நேரம் குடிகாரர்களை விடுத்து வாழ வேண்டிய குழந்தைகள், ஏழை தொழிலாளர்களை நினைத்து உதவுவோம்.


ஆண்கள் குடியை பற்றி எழுதிவிட்டு பெண்கள் குடியை பற்றி எழுதாவிடில் சமத்துவம் இல்லை என்றாகி விடும்.
பெண்கள் குடியை ஒழுக்க, நெறிகளுடன் பலர் பார்த்து தடுக்க பார்க்கையில் விற்பனையாளர்கள் கவரவத்தின், பெண் ஆளுமையின் , சுதந்திரத்தின்,ஆண் சமத்துவத்தின், துணிவின் தன்னம்பிக்கையின், அடையாளமாக பார்க்கிறோம் என க்கூறி மோமி டைம்ஔட், மாட் ஹவுஸ் வைஃப் போன்ற செல்ல பெயருகளில் லேபல் செய்து சந்தைப்படுத்துதலை பெருக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
18 வயதிற்கு கீழ் உள்ள பெண் பிள்ளைகள் குடிக்கும் படி இனிப்பு பீர், சிவப்பு வைன் போன்றவை சின்ன சின்ன பெட்டிக்கடையில் கூட வாங்கும் படி வசதி செய்து கொடுத்துள்ளனர்.
அதிக அளவு குடியால் ஆண்களுக்கு என்னன்ன பிரச்சினை வருமோ, அதே பிரச்சினைகள் ஒரு படி மேலே பெண்களை பாதிக்கும். காரணம் ஆண்களை விட தண்ணீர் சத்து குறைந்தது பெண்கள் உடல்வாகு. அதனால் குடிக்குகையில் ஆண்களை விட உடல் நீர் சத்து குறைந்து இருப்பதால் கறக்கம் மயக்கம் என பாதிப்பு அதிமாகவே பாதிக்கும் .
ஒவ்வொரு 96 நிமிடத்திற்கு ஒராள் குடியால் சாகிறதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தலைநகரம் தில்லியில் மட்டும் 15 லட்சம் பெண் குடிகாரிகள் உண்டாம். இதில் பெருவாரி பெண்கள் ஒரே நேரம் 5 டிரிங்ஸ் எடுப்பவர்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதில் 5000 வழக்கு பதிவாயுள்ளது.
20 சதவீதம் பெண்கள் சமூக நிர்பந்தம், 44 சதவீதம் தங்கள் விருப்பத்தால், 42 சதவீதம் தொழில் நிமித்தமாக,53 சதவீதம் தங்கள் உணர்வு தேவையால் எனக்கூறுகிறது சர்வே.
ஆக மொத்தம் தேசத்தில் 57 சதவீதம் ஆண் குடிகாரர்கள் ஒன்றால் 28 சதவீதம் பெண் குடிகாரிகள்.
குடியில் குடிக்கும் அளவு தான் பிரதானம். ஒரு நாள் ஒரு டிரிங்க் அதுவே கணக்கு எனக்கூறுகிறது ஆரோக்கிய த்துறை.
பெண்கள் குடிப்பதால் ஆண்களை போன்றே கேன்சர்,லிவர், கிட்னி , மூளை பாதிப்பபிற்கு ஆளாகுவார்கள்.
அதையும் கடந்து
குழந்தைகளை போன்று பாலியலாக துன்புறுத்தும் சூழலில் எதிர்க்க வலுவற்று போக வாய்ப்பு.
பெண்கள் மூளை ஆண்கள் மூளையை விட சென்சிட்டிவ் என்பதால் பாதிப்பும் அதிகம்.
பெண்கள் குடியையும் நோயாக கணக்கிலெடுத்து உளவியல் சிகித்சைக்கு, கவுன்சிலிங் கொடுக்க வேண்டியதும் அவசியம்.
கலாச்சாரம் நெறியோடு இணைத்து பார்ப்பது அறிவீனம்.
இதை உடல் ஆரோக்கியத்துடன் இணைத்து பார்ப்பதே அவசியம்..

0 Comments:

Post a Comment