Showing posts with label புத்தக அறிமுகம்- Book review. Show all posts
Showing posts with label புத்தக அறிமுகம்- Book review. Show all posts

13 Feb 2026

எமிலியும் , சுபாஷ் மற்றும் அவர்களின் காதல் பிரபஞ்சம்

 

பேராசிரியர் டி.கே. சோமசேகரன் பிள்ளை எழுதிய "எமிலியும் , சுபாஷ் மற்றும் அவர்களின் காதல் பிரபஞ்சம்" என்ற புத்தகம்.அக்டோபர் 2024 ல் வெளியிடப்பட்டுள்ளது. நேதாஜியின் ஆத்ம தோழியும் , மனைவியுமான எமிலியின்  ஆஸ்திரியா வியன்னாவில் வாழ்ந்தாலும்  சுபாஷ் சந்திரபோஸை உரிமை கொண்டாட முடியாமல் வாழ்ந்த  வலியின் வாழ்க்கையைப் பற்றி அறியும் முயற்சியாகும் இப்புத்தகம்.


சுபாஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த புரட்சியாளர்,  புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர். இந்தியா மக்கள்  சுதந்திரத்தை விலைக்கு வாங்கக்கூடாது, போராடி வெல்ல   வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் சுதந்திர போராட்டக்களத்தில் செயல்பட்டவர். 


பேராசிரியர் டி.கே. சோமசேகரன் தனது புத்தகத்தின் மூலம் ஒரு சிறந்த புரட்சியாளரின் அறியப்படாத பக்கமான அவருடைய  காதல் வாழ்க்கைக்கு அழைத்து செல்கிறார். இதன் மூலம், இந்த வரலாற்று ஆசிரியர் தனது நிபுணத்துவத்துடன் நடத்திய ஆராய்ச்சிகளும் , அடைந்த தகவல்களும்   இந்த புத்தகத்தின் முக்கிய அம்சங்களாகும், இது  ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு கொடுக்கிறது. 



காதல் மிகவும் அழகானது, ஏனென்றால் அது இதயத்திலிருந்து வருகிறது. அது ஒரு வகையான அக்கறையும் கூட.  அன்பும் காதலும் ஒன்றாக மலர்ந்த சுபாஷ் சந்திர போஸ் மற்றும் எமிலியின்  திருமண வாழ்க்கையை பகிர்வதாக உள்ளது இப்புத்தகம். 


எமிலி ஷெங்கல் ஆஸ்திரியாவின் தலைநகரம் வியன்னாவில்  1910 ஆம் ஆண்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். எமிலியும் சுபாஷாவும் முதன்முதலில் 1934 ஆம் ஆண்டு வியன்னாவில் வைத்து சந்தித்தனர்.  


சந்திர போஸ் 1934 ஐரோப்பாவில்  இருந்து நாடுகடத்தப்பட்டபோது, ​​அவர் "இந்திய போராட்டம்" என்ற புத்தகத்தை எழுதத் தொடங்கினார். சுபாஷுக்கு தட்டச்சு செய்யக்கூடிய மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஒரு செயலாளர் ஆக பணியில் அமந்தவர் தான் எமிலி ஷெங்கல் . பிற்பாடு அவர்கள் ஆஸ்திரியாவில் உள்ள ஒரு அழகான கிராமமான பேட்ஹாஸில்  வைத்து டிசம்பர் 26, 1937 அன்று திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் உள்ளது. 



நேதாஜிக்கு  எமிலிக்கு தனது முதல் கடிதம் நவம்பர் 1934 இல் ரோமில் இருந்து அனுப்பி உள்ளார். பிற்பாடு சுபாஷ் தனது பயணங்களின் போதும் எமிலிக்கு கடிதங்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். 1934 முதல் 1942 வரை காலகட்டத்தில்  சுபாஷ் 162 கடிதங்களை எமிலிக்கு அனுப்பி உள்ளார்.


சுபாஷ் இவ்வாறு  எழுதுகிறார்,  உங்களுக்கு எழுத நான் சிறிது காலமாக மிகவும் பதட்டமாக இருக்கிறேன். உங்கள் மீது எனக்குள்ள அபரிமிதமான அன்பை அளவிடுவதும் அதைப் பற்றி எழுதுவதும் எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களைப் பற்றி எப்படி நினைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் என் எண்ணங்களில் இருக்கிறீர்கள். என் வாழ்க்கையில் நான் உங்களைப் பற்றி நினைக்காத ஒரு நாள் கூட இல்லை. நீங்கள் தொலைவில் இருந்தாலும், உங்கள் இருப்பை நான் எப்போதும் உணர்கிறேன். உங்களைப் போல நேசிக்க இந்த உலகில் வேறு யாரும் இல்லை. நீங்கள் இல்லாத நேரத்தில், நான் பல நாட்களாக கடுமையான தனிமையை உணர்ந்திருக்கிறேன்.\


ஜனவரி 4, 1938 அன்று, சுபாஷ் எழுதியுள்ளார்: "நான் ஒரு குழுவாக இரவும் பகலும் கடினமாக உழைத்தாலும், நான் எப்போதும் தனிமையின் சிறையில் இருக்கிறேன்."


சுபாஷ் 1941 இல் ஜெர்மனிக்கு வந்தார், 1942 வரை, அவரும் எமிலியும் கிழக்கு பெர்லினில் உள்ள சோஃபின் சென்ட்ரல் சென்ட்ரிசிட்டியில் உள்ள அவர்களின் வீட்டில் ஒரு குடும்பமாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அவர்களின் மகள் அனிதா 1942 நவம்பர் 29 அன்று வியன்னாவில்  பிறந்துள்ளார்.

டிசம்பர் 1942 இல், சுபாஷ் தனது அன்பு மகளைப் பார்க்க வந்துள்ளார். பிப்ரவரி 8, 1943 அன்று, ஜெர்மனியிலிருந்து கடல் பயணம் தொடங்கியது. அதன் பிறகு, எமிலியும் சுபாஷும் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை



சிலர், குறிப்பாக வங்காளிகள், சுபாஷின் காதலையும் திருமணத்தையும் ஏற்றுக்கொள்ள தயங்கினர். 1947 ஜூன் 22 அன்று, டாக்டர் அகமது, சுபாஷுக்கு  எமிலிக்குமான உறவின் சான்றுகள் இருப்பதாகவும், அவர்களுக்கு நான்கரை வயதுடைய ஒரு மகள் இருப்பதாகவும், அந்தக் குழந்தை தோற்றத்தில் சுபாஷைப் போலவே இருப்பதாகவும் குறிப்பிட்ட தகவல்களைக் நேருவுக்கு அனுப்பினார். ஜவஹர்லால் நேரு கிடைத்த தகவலை உடனே சர்தார் வல்லபாய் படேலிடம் தெரிவித்து, இந்த விஷயத்தை மேலும் விசாரிக்க தனது நம்பகமான நண்பர் நாதலால் பரிக்ஷாவை நியமிக்கிறார்.   

ஆனால் சுபாஷின் சகோதரர் சரத் போஸ் இந்த திருமணச் செய்தியைப் புறக்கணித்தது மட்டுமல்லாது, திருமணச் செய்தியை நம்பவில்லை என்றார். அதுமட்டுமின்றி, நாதலாலை தகவல்கள் சேகரிக்க  தனது அனுமதி இல்லாது அனுப்பியது  தவறான நடவடிக்கை என்றும், எச்சரித்தார்.



ஆனால் எமிலி மற்றும் வனிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பரீத்தை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்து படேலுக்கு ஏற்கனவே ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 1951 ஆம் ஆண்டு சுபாஷின் திருமணம் தொடர்பான சர்ச்சைகள் நாடு முழுவதும் பரவின. 



தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுபாஷின் வாழ்க்கையே  தனது வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கும் என்றும், அதை ஒரு மதிப்பாக நிலைநிறுத்துவேன் என்றும் சுபாஷ் முடிவு செய்ததை குறிப்பிட்டு சுபாஷின் நண்பர்கள் ஹேமந்த் குமார்  மற்றும் சுபாஷின் சகோதரர்களுக்கு சுபாஷ் திருமணம் முடித்துள்ளார் என்று ஏற்பதற்கு கடினமாக இருந்தது. 24 வயது இளைஞன் சுபாஷுக்கு எழுதிய கடிதத்தில், பிரம்மசரிய கொள்கையே தனது உலகக் கண்ணோட்டத்திற்கு அடிப்படை மதிப்பாக இருக்கும் என்று தெளிவாகக் கூறி உள்ளார். அவ்ரின் கொள்கையான  ஒருபோதும் மது அருந்தாதே, இரவு விடுதிகளுக்குச் செல்லாதே, ஒரு பெண்ணுடன் நடனமாடாதே, இந்த மூன்று விஷயங்களை அவருடைய நண்பர்கள் ஆன  திலீப் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பின்பற்றியுள்ளனர். 


ஆங்கிலப் பெண்களை காதல் செய்து இந்தியாவின் செல்வத்தையும், அதிக திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வீணாக்க வேண்டாம் என்று சுபாஷ் இந்திய மாணவர்களை எச்சரித்ததாகவும், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்கான திறன்களைப் பெற இங்கிலாந்து வந்ததாகவும் திலீப் கூறியுள்ளார்.சுபாஷின் ஆளுமை உருவாக்கத்தில் சிறு வயதிலிருந்தே ஆன்மீகம் ஒரு முக்கிய சக்தியாக இருந்துள்ளது . இந்திய இளைஞர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் குறிப்பிடத்தக்க ஒன்றைச் சொன்னார்: நமது சகோதரிகள் சமூகத்தில் அனைத்து சுதந்திரத்துடனும் பணியாற்றும் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு பெண்ணையும், செயல் அல்லது வேறுவிதமாகவோ துன்புறுத்தவோ அல்லது சித்திரவதை செய்யவோ துணிபவர்களைக் கைது செய்து, அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். .

1972 அன்று வீக்லியில் வெளியிடப்பட்ட, ஷரத்தின் மருமகள் கிருஷ்ணபோஸ் எழுதிய ஒரு கட்டுரையில், எமிலி சுபாஷின் திருமணம் நடந்த ஆண்டு 1942 என்றும், திருமணம்  இந்து சடங்குகளின்படி நடந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.





1960 சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா இந்தியா வந்தார். 1960 இல் அனிதா இந்தியா வந்தபோது, ​​நேதாஜியின் சகோதரர்கள் பலர் இறந்துவிட்டனர். உயிருடன் இருந்த நேதாஜியின் சகோதரர்களில் ஒருவரான  சுரேஷ் போஸ்,  சுபாஷ் சந்திர போஸின் மகளின் இந்திய வருகையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனா டெல்லியில் பிரதமர் நேரு தன்னுடன்  தங்குமாறு அனிதாவை அழைத்தார். அனிதா அழைப்பை ஏற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அனிதாவை இளம் ராஜீவ் காந்தி வரவேற்று அழைத்து வந்துள்ளார். 


"எனது முதல் காதலும், எனது அன்பும் என் நாட்டிற்கானவையே என்று சுபாச் தனது மனைவி எமிலிக்கு எழுதினது வருத்ததை தந்தாலும் எமிலி ஒரு தேசியவாதியை போராளியை இணையாக பெற்றதில் பெருமை கொள்கிறார். சுபாஷில் விடுதலைப்போராட்ட வாழ்க்கைக்கு எங்கும் தடையாகவோ, சுபாஷை தனக்கான ஒருவராக மட்டும் இருக்க ஒரு போதும் எமிலி கேட்டுக் கொள்ளவும் இல்லை. எமிலி அவர்கள் காந்தர்வ முறையில் திருமணம் செய்து கொண்டதை சொல்ல  தயங்கவில்லை, சோர்வடையவில்லை, வாதிடமில்லை. இலட்சிய அரசியலின் உருவகமாக இருந்த சுபாஷின் வாழ்க்கையின் நோக்கம் இந்தியாவின் சுதந்திரத்திற்காக மட்டுமே என்பதை எமிலி சரியாகவே  அறிந்திருந்தார். 


நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நெருங்கிய தோழியாக துணைவியாக இருந்த  அவர் ஒரு துணிச்சலான பெண்மணி ஆகவும், சிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரருக்கு புரட்சிகர உற்சாகத்தை ஊட்டியவராகவும்  "எனது அன்பு முழுவதும் என் இந்தியாவுக்காகவே" என்று கூறிய நேதாஜிக்கு உத்வேகமாகவும் இருந்துள்ளார். சுபாஷின் ஜப்பானில் இருக்கும் பஸ்மம் இந்தியா கொண்டு வரவேண்டும் என்பது அவருடைய வேண்டுதலாக இருந்தது. நரசிம்ஹ அமைச்சரவை முயன்றாராலும் கடைசி நேரம் அது இயலாது போனதில் எமிலி சங்கல் மிகவும் வருந்தி உள்ளார். 




சுபாஷும் நாடு மேல் தான் என் முதல் அன்பு என்று சொல்லியிருந்தாலும் இவர்கள் திருமணம் பற்றி 1942 ல் சகோதரனுக்கு கடிதம் ஊடாக தெரிவித்து உள்ளார். தங்கள் சகோதரனின் அடையாளம் ஒரு தனி மனித பிரம்மசரிய போராளியாக இருக்க வேண்டும் என்பது அவரது சகோதரர்கள் குடும்பத்தினர் விருப்பமாகவும் இருந்து உள்ளது.

 


அதை தனது வாழ்க்கையால் நிரூபித்தும் ஆஸ்திரியாவில் ஒரு இந்திய பண்பாட்டு ஈர்ப்பிலே சுபாஷின் ஈர்ப்பில் வாழ்ந்து வந்த எமிலி மார்ச்சு 1996 இல் மறைந்தார்.


9 Jan 2026

ஒரு சங்கீர்த்தனம் போல

 

ஒரு சங்கீர்த்தனம் போல

The Gambler எனப் புகழ்பெற்றதாக மாறிய படைப்பின் கைப்பிரதியை ஒப்படைக்க தஸ்தயேவ்ஸ்கிக்குக் கணக்கிட்ட சில நாட்களே மீதமிருந்த காலகட்டத்தில். காலக்கெடுத்தைக் கடக்க முடியாவிட்டால், அவரது பதிப்பாளர் ஸ்டெல்லோவ்ஸ்கி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பார் என்ற அச்சம் அவரை வாட்டுகிறது. அந்த மனஅழுத்தத்தில், எழுதுவதற்கே அவர் போராடுகிறார். அக்டோபர் 15ஆம் தேதி, குறுக்கெழுத்து (ஸ்டெனோகிராபி) உதவிக்கு ஒரு ஆள் உதவி தேவை என நண்பருக்கு தஸ்தயேவ்ஸ்கி வேண்டுகிறார். நண்பரான பேராசிரியர் அவரது சிறந்த மாணவியான அன்னா கிரிகோர்யேவ்னா ஸ்னிட்கினா என்ற இளம் பெண்ணை பரிந்துரைக்கிறார்.

இருபது வயதான அன்னா, உயர்நிலைப் பள்ளி முடித்த உடனே தன் உழைப்பின் மூலம் பொருளாதார சுயநிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கெழுத்தைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெற்றிருந்தவள்.

சமீபத்தில் மறைந்த அவளது தந்தையின் மிக விருப்பமான எழுத்தாளர் ஆவார் தஸ்தயேவ்ஸ்கி; அவருடைய கதைகளை வாசித்தபடியே அவள் வளர்ந்தவள் . அவரை நேரில் சந்திப்பதோடு மட்டுமல்லாமல், அவரது பணியில் உதவப் போகிறேன் என்ற எண்ணமே அவளை மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது. இந்த வாய்ப்பு கிடைத்ததும் அவள் பேரானந்தமடைந்து அடுத்த நாளே எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் வீட்டை அடைகிறார்.
,

அடுத்த இருபத்தி ஐந்து நாட்களுக்குப் , அன்னா தினமும் மதியம் பன்னிரண்டு மணிக்கு தஸ்தயேவ்ஸ்கியின் வீட்டிற்கு வந்து மாலை நான்கு மணி வரை தட்டாச்சு செய்து கொடுக்கிறாள். அவர்களின் தேநீர் மற்றும் சிறிய உரையாடல்களுக்கான இடைவெளிகளுடன் வேலை தொடர்கிறது .

அவளது வேலையிலுள்ள ஈடுபாடு, எடுத்த வேலையை முடிக்கும் அவளுடைய தீவிரமான முயற்சி, அவளின் புரிதல் கொண்ட ஆழமான அன்பால், அவரின் மேலுள்ள புரிதலால் தஸ்தயேவ்ஸ்கியின் மிக இருண்ட மனநிலைகளையும் அகற்றி, பிடிவாதமான எண்ணங்களில் இருந்து தன்னை விடுவிப்பதை உணரும் போது அவர் மனமார அவளை மதிக்க ஆரம்பித்திருந்தார்.
அவளோ, அவரது கனிவு, அவளுக்குக் காட்டிய மரியாதை, பாராட்டின நட்பால் ஈர்க்கப்பட்டு ஆகியவற்றால் மனம் நெகிழ்ந்து போகிறாள்.

ஆனால் அவர்கள் இருவரும் ஆழமான இந்த பரஸ்பர அன்பும் மதிப்பும், எதிர்காலத்தில் புகழ்பெறும் ஒரு மகத்தான காதலின் விதையாக மாறப்போகிறது என்பதை, அப்போது இருவரும் உணர்ந்திருக்கவில்லை.


“ஒருவரை நாம் ஏன் நேசிக்கிறோம்?
‘யாரையாவது அல்லது எதையாவது நேசிக்க வேண்டும் என்பது , வாழ்க்கைக்கு அவசியமா?’
“ஆன்மீகத் தனிமையின் துயரத்தை மறக்கவே நாம் நேசிக்கிறோம்.”
“ஆன்மீகத் தனிமையா?”
“ஆம். ஆன்மீகத் தனிமை. அது தரும் துயரத்தை அதனால் உருவாகும் வலியை தாங்கக்கூடிய வலிமை தருகிறது என்பதால் தான் நாம் நேசிக்கிறோம். அந்த வலியைத் தாங்கவே மனிதர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

மனிதர்கள் எப்போதும் தோல்வியிலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறவர்கள்.

ஆன்மீகத் தனிமையில் இருந்து தான் துன்பம், இன்பம் இரண்டும் தோன்றுகிறதா?”
“ஆம். துன்பம், இன்பம் இரண்டுமே ஆன்மீகத் தனிமையிலிருந்து தான் தோன்றுகின்றன. இன்பம் என்பது துன்பத்தின் மற்றொரு வடிவம் மட்டுமே. அவை பிரிக்க முடியாதவை. அதுதான் உண்மை.”
அப்படியானால், ஆன்மீகத் தனிமை தான் படைப்பை இயக்குகிறதா?
. தொடக்கத்தில், கடவுள் பூமியைப் பார்த்தபோது அது வெறுமையாகவும் உருவமற்றதாகவும் இருந்தது. அவர் தனக்குள்ளும் அதே வெறுமையை உணர்ந்தார். அந்த உள்ளார்ந்த வெற்றிடத்தைத்தான் நாம் ஆன்மீகத் தனிமை என்கிறோம்.
கடவுள் ஏன் வானத்தையும், பூமியையும், ஒளியையும், நீரையும், மனிதர்களையும், பிற உயிரினங்களையும் படைத்தார்?
ஆன்மீகத் தனிமையின் காரணமாகத்தான்அதைப் போக்குவதற்காக தான்.”
மனிதர்கள் அந்தத் தனிமையை மறக்க பல வழிகளில் முயன்றார்கள்.
சிலர் பிரார்த்தனை மூலம் தேடினார்கள்.
சிலர் சேவையின் மூலம்.
சிலர் கலை மூலம்.
சிலர் காதல் மூலம்.
சிலர் அறிவின் மூலம்.
ஆனால் இவற்றில் எதுவுமே அதை உண்மையாக அழிக்கவில்லை. ஆன்மீகத் தனிமை ஒருபோதும் மறைவதில்லை. அது வடிவத்தை மட்டுமே மாற்றிக்கொள்கிறது.
மதம் அதை விளக்க முயன்றது.
தத்துவம் அதை விவரிக்க முயன்றது.
அறிவியல் அதை அளவிட முயன்றது.
கலை அதை வெளிப்படுத்த முயன்றது.
ஆயினும் எதனாலும் அதை அழிக்க முடியவில்லை.
அந்தத் தனிமை மனித ஆன்மாவின் ஆழத்தில் மறைந்தே இருக்கிறது.
படைப்பே அந்தத் தனிமையிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு முயற்சிதான்.

வாழ்க்கை என்பது அதை மறப்பதற்கான ஒரு முடிவற்ற போராட்டம். அதனால்தான் காதல், போர், கலை, நம்பிக்கை, மற்றும் கடவுள் கூட ஒரே மூலத்திலிருந்து பிறக்கிறார்கள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பிறகு, அன்னா கேட்டாள்
“அப்படியானால், கடவுளும் துன்பப்படுகிறாரா?”
“இல்லை, அவர் துன்பப்படுவதில்லை. ஆனால் தான் தனியாக இருக்கக்கூடாது என்பதற்காக, துன்பப்படக்கூடிய உயிரினங்களை அவர் படைத்தார்.”
“அப்படியானால் இந்த பிரபஞ்சம் முழுவதும் கடவுளின் தனிமையின் நீட்சி தானா?”
“ஆம். நாம் அவருடைய தனிமையில் இருந்து பிறந்தவர்கள். அந்தத் தனிமையில் இருந்துதான் துக்கமும் மகிழ்ச்சியும் எழுகின்றன.
படைப்பு என்று நாம் அழைப்பது அந்தத் தனிமையின் எதிரொலியைத் தவிர வேறில்லை.”


அதற்குள் அவர்கள் மடாலயத்திற்கு அருகில் வந்து சேர்ந்தார்கள்.
அன்னா உள்ளே சென்று பிரார்த்தனை செய்தார். தஸ்தயேவ்ஸ்கி (Dostoevsky) வெளியே ஓரிடத்தில், ஒரு ஆலமரத்தின் அடியில் காத்து நின்றார்.
பலிபீடத்திற்கு அருகில் வந்து நின்று பிரார்த்தனை செய்ய அன்னா அவரை அழைத்தார்.
தஸ்தயேவ்ஸ்கி அதைத் தவிர்த்து விட்டார்.

பிரார்த்தனை முடிந்து வெளியே வந்தபோது அன்னா கேட்டார்:
“ஏன் பிரார்த்தனை செய்ய வரவில்லை?”

தஸ்தயேவ்ஸ்கி கூறினார்: பிரார்த்தனை செய்யும்போது அவர் தனியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு கூட்டுப் பிரார்த்தனையில் எனக்கு எந்த ஒரு மன ஒருமைப்பாடும் கிடைக்காது.
அப்படி கூட்டமாக தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்யும் பழக்கமும் எனக்கு இல்லை. பிரார்த்தனை எல்லாம் சொந்த இதயத்திற்குள் தான் இருக்கிறது.
அல்லது தேவாலயத்திற்குச் செல்லும்போது அங்கே யாரும், பாதிரியார் கூட இருக்கக்கூடாது. . கடவுளுக்கும் தனக்கும் இடையில் மற்றொருவரின் இருப்பு சிரமத்தை உண்டாக்கும். நான் அப்படி முறையாக தேவாலயத்திற்குச் செல்லவோ பிரார்த்தனை செய்யவோ மாட்டேன்.”
“அப்போ, முன்பு ஒரு நாள் புனித மாதாவின் தேவாலயத்திற்குப் போனதாகச் சொன்னீர்களே?”
“அப்போது அப்படித் தோன்றியது. அங்கே அவ்வளவு அழகான ஒரு சிற்பம் இருக்கிறது. அதைப் பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாளைய ஆசையாக இருந்தது.”
“இல்லை, பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாததாலோ?”
சொந்த இதயம் தான் முக்கியம். தேவாலயத்தில் பிசாசை ஆட்சி செய்ய விடுபவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்வதால் என்ன பயன்?
கடவுளுக்கு இந்த ஏமாற்றுவேலை புரியாது என்று நினைக்கிறார்களா? இதையெல்லாம் சொன்னாலும், ஒரு தத்துவம் என்ற நிலையில் எனக்கு பிரார்த்தனை பிடிக்கும்.

நவம்பர் 10ஆம் தேதி அன்னாவின் உதவியுடன், தஸ்தயேவ்ஸ்கி வெறும் இருபத்தாறு நாட்களில் ஒரு முழு நாவலை அவர் முடித்திருந்தார். அவர் அன்னாவின் கையைப் பிடித்து குலுக்கி, முன்பே கூறியிருந்தது போல 50 ரூபிள்களை வழங்கி, மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.

அடுத்த நாள், தஸ்தயேவ்ஸ்கியின் நாற்பத்தைந்தாவது பிறந்தநாள். நாவலை பதிப்பகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். இந்த இரட்டை நிகழ்வையும் கொண்டாடும் விதமாக ஒரு உணவகத்தில் சிறப்பு விருந்து அளிக்க அவர் தீர்மானித்தார். அன்னாவையும் அழைத்தார். அவள் இதற்கு முன்பு ஒருபோதும் உணவகத்தில் உணவருந்தியதில்லை; அதனால் மிகுந்த பதற்றத்தில் செல்லாமல் திரும்பி விடலாமென்று கூட நினைத்தாள். ஆனால் இறுதியில் சென்றாள் அந்த மாலை முழுவதும் தஸ்தயேவ்ஸ்கி அவள்மீது அன்பும் மரியாதையும் பொழிந்தார்.
ஆனால் அந்தப் பெரும் சாதனையின் கொண்டாட்டம் முடிய துவங்கும் போது , அன்னாவுடன் கொண்டிருந்த அந்த இணைப்பு தான் தனது வாழ்க்கையின் ஒளியாக மாறிவிட்டதை அவர் திடீரென உணர்ந்தார்; இனி அவளை ஒருபோதும் பார்க்க முடியாமல் போகுமோ என்ற எண்ணம் அவரை ஆழமாக வேதனைப்படுத்தியது. அன்னாவுக்கும் அதேபோல், வழக்கமான உற்சாகம் மறைந்து, சொல்ல முடியாத ஒரு வெறுமை மனதை அழுத்த, அவள் சோகமும் ஆனந்தமற்றவளுமாக மாறினாள்.
கடைசியில் 20 வயதான அன்னாவும் 45 வயதான தஸ்தயேவ்ஸ்கிyஉம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். தோல்வியில் துவண்டு போயிருந்த தஸ்தயேவ்ஸ்கி அடுத்த 7 வருடங்களில் சூதாட்டம் என்ற பிடியில் இருந்து விலகி எழுத்தில் தன் கவனத்தை செலுத்தி வெற்றியாளராக மாறுகிறார். அவருடைய மரணம் வரை அவர்கள் காதல் வாழ்க்கை நான்கு குழந்தைகளுடன் ஜொலித்தது .

ஒரு எழுத்து என்பது வாசகர்களுக்கு தரும் உணர்வு அதுவே இந்த நாவலின் பலம் வெற்றி.. அதன் பின்னர் தஸ்தயேவ்ஸ்கி மற்றும் அன்னா இடையே உருவாகும் நெருங்கிய உறவையே இந்த நூல் மையமாகக் கொண்டு விரிகிறது. அவர்களுடைய உறவைப் பற்றித் தெரிந்துள்ள வரலாற்றுத் தகவல்களுக்கு மேலாக, அந்த பிணைப்பின் ஆழத்தையும் மனித உணர்வுகளையும் இந்நூல் மேலும் செறிவூட்டிக் காட்டுகிறது.எங்கும் மிகயும் இல்லை. எல்லாம் இயல்பாக ஒரு அருவி போல, ஒரு நீர்சாலில் அருகில் இருந்து பூக்கும் பூக்களை போல நமது இதயத்தையும் பூரிப்படைய செய்கிறார் எழுத்தாளர்.

அன்பு என்பதின் எல்லா பொருளும் அடங்கிய அன்பு என்பது சகிப்பது , மதிப்பது, புரிந்து கொள்வது எதையும் எதிர்பார்க்காதது, முக்கியமாக ஒரு மனிதனை வெற்றிக்கு இட்டு செல்வது ஒருவனின் இருள் கொண்ட உலகில் இருந்து நம்பிக்கையின் வாழ்க்கைக்கு முக்கியமாக பொறுப்பாக வாழ்க்கையை அணுகும் மந்திரம் என இக்காதல் கதை செல்கிறது. ஒரு இடத்தில் கூட உன்னை காதலிக்கிறேன் நேசிக்கிறேன் என ஒரு உரையாடல்கள் இல்லை என்றாலும் ஒரு இசை போல ஒரு இதமான தென்றல் போல ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் தழுவி சென்ற விவிலியத்தில் உள்ள கடவுளை போற்றி பாடும் சங்கீதம் போல கதை முடிகிறது.

பெரும்படவம் ஸ்ரீதரனின் இந்த நாவல் 1993ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவல், மலையாள வெளியீட்டு உலகில் சாதனைகளை முறியடித்தது. 2 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, 100க்கும் மேற்பட்ட பதிப்புகளை எட்டியது. வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது என்ற கருத்தை இது முற்றிலும் தவறானது என்று நிரூபித்தது.
தமிழ் மற்றும் மலையாள மொழியில்
“ஒரு சங்கீர்த்தனம் போல” என்ற தலைப்பில் வந்தது. அதன் பொருள் “ஒரு புனிதப் பாடல் போல” அல்லது “ஒரு கீதம் போன்றது” என்பதாகும்..
இந்த நாவல் ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, அரபி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பும் பல புத்தக விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது;
இந்த நாவல் ஒரு பண்பாட்டுச் சாகசமாக மாறியது. மலையாள வாசகர்களை ரஷ்ய இலக்கியத்துடனும், இணைத்ததும் அல்லாமல் அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் போன்ற பாரம்பரிய கருப்பொருள்களுடனும் இணைத்த ஒரு முக்கியமான படைப்பாக இது விளங்கியது.
பெரும்படவம் ஸ்ரீதரன் (பிறப்பு: 12 பிப்ரவரி 1938) கேரளாவைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் கேரள சாகித்ய அக்காதமியின் முன்னாள் தலைவர். பல நாவல்கள் மற்றும் குறுநாவல்களை எழுதியுள்ளார்.
அவரது மிகவும் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான “ஒரு சங்கீர்த்தனம் போல” (1993) என்ற படைப்புக்காக, 1996ஆம் ஆண்டுக்கான வயலார் விருது பெற்றது.
அஷ்டபதி என்ற நாவலுக்காக கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்றுள்ளார்.
மேலும், 2006ஆம் ஆண்டு நாராயணம் என்ற நாவலுக்காக மலையாளத்தூர் விருது வழங்கப்பட்டது.

11 Dec 2025

கம்பிளி கண்டத்தை கல்பரணிகள்! Malayalam Book

மலையாள மொழியில் பேராசியர் பாபு ஆபிரகாம் எழுத்தில் மாத்ருபூமி பதிப்பகம் ஊடாக வெளியான நினைவுத் தொகுப்பு ஆகும் "கம்பிளி கண்டத்தை கல்பரணிகள்". ( கம்பிளிகண்டம் ஊர் பெயர், கல்பரணி என்பது ஜாடி - கர்த்தர் தனது தாயின் பரிந்துரையால் செய்த அற்புதம் நிகழ்வின் (metaphor) உருவகம் ஆகும். ) ஏப்ரில் 2025 ல் வெளியான இப்புத்தகம் தனது 50 வது பதிப்பை காணப் போகிறது.

நினைவுக் குறிப்பு என்ற உருவத்தில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாக சம்பவங்களை கொண்டு, எளிய மொழியில், நேர்மையான பார்வையுடன் , கேரளாவில் நிலைகொள்ளும் கிறிஸ்த கத்தோலிக்க சபையின் குடும்பங்கள் மேலுள்ள ஆதிக்கம் பொறுப்பின்மையை பேசும் ஆக்கபூர்வமான ஒரு படைப்பாக வந்துள்ளது. வாசிக்கும் நேயர்களுக்கு ஒரு புதினம் போன்ற சுவாரசியமும் உணர்வுபூர்வமாக மனித துன்பங்களை காணும் ஈர நெஞ்சத்தையும் அத்துடன் பெரிய ஒரு அமைப்பிடம் நெஞ்சுரத்துடன் கேள்வியும் கேட்டுள்ளார் ஆசிரியர்.

இடுக்கி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் பேராசிரியராக பணி செய்து வருகிறார்.

இந்த புத்தகம் ஒரு பேராசிரியரில் கடந்த கால வறுமையான குழந்தைப் பருவத்தை மட்டும் சொல்வது அல்ல, இடுக்கி என்ற மாவட்டத்தின் நிலப்பரப்பு, அதன் வாழ்வியல், அங்கு கிடைக்கும் கல்வி , அங்குள்ள வீடுகள் முக்கியமாக கத்தோலிக்க சபையை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பங்களின் நிலையை, மனிதர்கள் குறிப்பாக தனது தாய் மேரி, குடிகாரனான தகப்பன், மூன்று சகோதரிகள் அடங்கிய தன்னுடைய குடும்பம் வாழ்ந்த ஒரு கால கட்டத்தை பதிந்துள்ளார்.

கேரளத்தில் இடுக்கி மாவட்ட வாழ்வியல் என்பது , மிகவும் பின் தங்கின வனப்பகுதி என்பதால் மலங்காட்டுகாரர்கள் , நாகரீகம் அற்றவர்கள் என்ற அடையாளத்தோடு அடையாளப்படுத்தப்படுகிறது. பழங்குடியை தவிற அத்தனை பேரும் குடியேறிகள் என்பதால் இனம் மொழி ஆதிக்க வரலாறு எதுவும் இல்லாது இயற்கையோடு போராடி வாழும் சூழலுள்ள மக்கள் வாழும் பகுதி என்பதாகும்.


ஏலக்கா குருமிளகு, தேயிலை என விலையுள்ள பன்னாட்டு பொருட்கள் விவசாயம் செய்து அரசிற்கு பன்னாட்டு ஏற்றுமதி வருமானம் தரும் பகுதி மக்களின் வாழ்வியல் ஏழ்மையிலும் இயற்கையோடு போராடும் சவால் நிறைந்தது என்பதைத்தான் இப்புத்தகம் மறுபடியும் நினைவுப்படுத்துகிறது. அவசரத்திற்கு அருகில் மருத்துவ மனை இல்லை, பள்ளிகள் கல்லூரிகள் இல்லை. உழைப்பு உழைப்பு என்று வாழும் ஒரு அரசியலும் கண்டு கொள்ளாத மக்கள் வாழ்ந்த பகுதியில் இருந்த ஒரு மனிதன் தனது நேரடியாக கண்டு உணர்ந்ததை எழுதிய புத்தகம் என்பதால் மிகவும் முக்கியம் பெறுகிறது.
இங்கு வாழும் கிறிஸ்தவ மக்களின் ஒரே ஒரு அடைக்கலம், இவர்களின் உள்ளூர் பஞ்சாயத்து தலைமை, குடும்பங்களை கண்காணிக்கும் கங்காணிகள் என இருப்பவர்கள் கட்டமைப்பு ரீதியாக சபைகள் தான். ஒவ்வொரு மலையிலும் சிலுவை வைத்து இடம் பிடித்து பங்களா கட்டி குடியிருக்கும் கிறிஸ்தவ சபைகளின் அதிபதிகளான மேய்பர்கள் குழு மேய்ப்பர்களே கதி என இருக்கும் வெகுளி ஆட்டு குட்டிகளின் வாழ்க்கைக்கு செலுத்த வேண்டிய செலுத்திய தாக்கம் எத்தகையது என இப்புத்தகம் விவரிக்கிறது.

என்ன மழையோ பனியோ அவர்கள் காலையில் உயிரோடு இருந்தால் கோயிலுக்கு போய் சாமியார் வைக்கும் பலியில் பங்கு பெற்று, பல்லுகள் அடிக்கும் குளிரில் வீடு வந்து பின்பு பள்ளிகளுக்கு பல மைல்கள் நடந்து சென்று கல்வி கற்று வரும் அங்கைய தலைமுறையை பிரதினித்துவப்படுத்தும் கதையாளர் பாபுவும் தினம் 15 கி.மீ நடந்து போய் கல்வி கற்று வந்தவர் என அறியலாம்.

இவர் அப்பா ஒரு குடிகாரர் சீிட்டு விளையாட்டுக்காரர் என்பதால் , இவருடைய மூன்று சகோதரிகள் அடங்கிய குடும்பத்தின் பொறுப்பு தாயின் தலையில் விழுகிறது.


கல்யாணம் முடிந்த பின் தன் பெற்றோர்களும், கணவன் குடும்பவும் கண்டு கொள்ளாத நிலையில் தன் உழைப்பால் நான்கு பிள்ளைகளுக்கும் சாப்பாடு கல்வி கொடுக்க போராடி வாழ்ந்து வருகிறார். இதனிடையில் பாபுவின் அப்பா உள்ளூர் வங்கியில் வாங்கின 1500 ரூ கடனை திருப்பி கொடுக்க வழியில்லாது இருக்க பாபுவிற்கு 5 வயது இருக்கும் போது ஓடிப் போனவர் நோயாளியாகி 12 வருடம் கடந்து வரும் போது, தகப்பனை ஏற்க பிள்ளைகள் தயங்கும் போதும் தாய், எப்படி இருந்தாலும் உங்களை தந்தவர் என்று சொல்லி ஏற்று கொள்கிறார்.

அடுத்தும் வீடு அணைந்த பாபுவின் தந்தை பீடியும் குடியுமாக மனைவியை அடித்தும் உதைத்தும் வாழ்க்கையை பொறுப்பற்ற வகையில் கடத்த ,பாபுவின் தாய் சில பெண்களையும் தன்னுடன் இணைத்து சுமடு தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

பொறுப்பற்ற நிலையில் இருக்கும் குடும்பத் தலைவனை திருத்தாத குடும்பம் பாபுவின் அம்மாவிற்கு அறிவுரை சொல்ல வருகிறது.
நீ தனியாக இருப்பது நல்லது அல்ல, சுமடு வேலை செய்வது தங்கள் குடும்பத்திற்கு பெருமை உள்ள விடயம் அல்ல, அதனால் தாய் வீட்டில் போய் இருக்க சொல்கின்றனர். அந்த அறிவுரையை , பாபுவின் இரு சித்தப்பாக்கள், மாமா, இரு தாத்தாக்கள் இருக்க பஞ்சாயத்தை கிறிஸ்தவர்களின் நீதிபதி பங்கு பாதிரி பாபுவின் தாய் தனது தகப்பனார் வீட்டில் இருக்க சொன்னதும் இனி மேரிமாதா மாதிரி அமைதியாக இருந்தால் பிள்ளைகளை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என எண்ணிய பாபுவின் தாய் , கத்தியை எடுத்து எல்லாரையும் மிரட்டி கடவுள் குடும்பத்தை சேர்த்து வைக்கத் தான் சொன்னார். இப்படி பிரிக்க சொல்லவில்லை எனக்கூறி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு உடைந்த வீட்டில் மிகவும் கடினமான சூழலில் வசிக்க ஆரம்பிக்கிறார்.

பிள்ளைகளை பிரிய ஒரு போதும் ஏற்று கொள்ளாத பாபுவின் தாய் மேரி ஒரு கட்டத்தில் வறுமையின் உச்சத்தில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள போகிற இடமும் வருகிறது. தனது முதல் மகளின் அறிவுரையின் பெயரில் பிள்ளைகளை கொலை செய்ய மனம் இல்லாது வீடு திரும்புகிறார்.
இதே தாய் மிகவும் இக்கட்டான சூழலில் ஒரு மகளை தன்னுடன் வைத்துக் கொண்டு மற்று மூன்று பிள்ளைகளையும் கிறிஸ்தவ அனாத ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறார். அங்கு பிள்ளைகள், விடுதியின் மலம் வரை சுமக்கும் கொடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பிள்ளைகள் நிலையை கண்ட தாய் சாப்பாடு கொடுக்க இயலாவிடிலும் பரவாயில்லை தன்னுடன் தன் பிள்ளைகள் வளரட்டும் என அழைத்து வருகிறார்.

இத்தனைக்கும் மத்தியில் மூுத்த அக்கா 10 வகுப்பு முடிக்கிறார், இரண்டாம் அக்கா செவிலியர் படிப்பு படித்து வருகிறாள். பாபு தனது உயர் பள்ளி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றாலும் கல்லூூரியில் சேர பணம் இல்லாது தத்தளிக்கிறார்.

யாரோ பரிந்துரைத்ததின் பெயரில் பெரிய மேய்ப்பர் பிஷப்பிடம் கல்லூரி படிப்பிற்கு உதவி கேட்டு செல்கிறார். அவரோ நீ படித்து என்ன செய்ய போகிறாய் , படித்து முடித்தாலும் வேலை பெற கைலஞ்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறி ஒரு பாத்திரம் சாப்பாடு மட்டும் கொடுத்து திருப்பி அனுப்பி விடுகிறார்.

இந்நிலையில் மார்த்தோமா சபை உதவியால் பட்டப்படிப்பு முடித்து, தில்லியில் முதுகலை பட்டமும் பெற்று பிரான்சில் முனைவர் பட்டம் பெற்று ஆசிரியராக உள்ளார்.

தற்போது இவருடைய முதல் சகோதரி மடத்தில் சேர்ந்து இத்தாலி யில் துறைவியாக வாழ்கிறார், இரு சகோதரிகள் ஐரோப்பிய நாட்டில் குடிபெயர்ந்து வாழ்கின்றனர்.

இவருடைய தாய்மேரி, பாபு முதுகலைப்பட்டம் படித்து வரும் காலயளவில் கேன்சர் நோய் தாக்கி இறந்து விடுகிறார்.

தனது தாயின் 25 வது வருட நினைவில் நினைவுத் தொகுப்பாக இப்புத்தகம் வெளி வந்துள்ளது. பணம் இல்லை என்ற காரணத்தால் தன் மானம் மறந்து நின்ற நாட்கள் எழுத்தாளரை இப்போதும் வேட்டையாடுகிறது. அனாதை ஆசிரமத்தில் பாலியல் துன்புறுத்தல்களை தனது தோழன் அனுபவித்ததை அதிர்ச்சியுடன் நினைவு கூர்கிறார். பாபுவின் 16 களில் ஒருவனின் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பித்து உணவக்கடையில் பணியில் இருந்த , அங்கிருந்தவனின் பாலியல் சுரண்டலில் இருந்து தப்பித்து ஓடினது , பாதிரியாராக படிக்க போன கல்விகூடம் செமினாரியில் கண்ட பாலியல் மனப்பிறழ்வு கொண்ட பாதிரிகள்.

அப்படி அப்படி குடிகார தந்தைக்கு பிறந்த ஒரு மகன் தன் தாய் சகோதிரியுடன் கடந்து போன கொடூிர காலத்தின் நினைவுகளை ஒரு புத்தகமாக பதிந்துள்ளார். பாபுவின் அனுபத்தோடு நமது அனுபங்களும் எங்கோ கடந்து வருகிறது என்பது தான் இப்புத்தகத்தின் வெற்றி. எளிய மனிதர்களின் உணர்வை சொல்லிய புத்தகம் என்று மட்டுமல்ல ஒரு எழுத்தாளரின் உணர்வை சரியான அளவில் வாசகர்களிடம் கடத்தி உள்ளார் என்பதும் இப்புத்தகத்தின் பலம். தான் கடந்து வந்த வாழ்க்கை அனுபவங்களில் சந்தித்த நல்லதும் கெட்டதுமான மனிதர்கள் பற்றி குறிப்பிடுகிறார்.
மனித குலம் சக மனிதனோடு இருக்க வேண்டிய கரிசனையை சொல்லியதுடன் இன்றைய இளம் தலைமுறைக்கும் பல அரிய கருத்துங்கள் அவர்கள் வாழ்வியலை ஊக்கப்படுத்தும் படி உள்ளது. மேலும் இன்றைய தினம் பல தாய்கள் பிள்லைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்வதை செய்திகளில் கேட்கிறோம். அப்படியான தாய்களுக்கு பாபுவின் தாயார் மேரியின் வாழ்க்கை ஒரு விளக்காக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அத்துடன் பொதுவாக சொல்லாமல் கிறிஸ்தவ மக்கள் கடந்து போகும் , அவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் பாதிரிகள் சபை அமைப்பு எவ்விதம் உதவி இருக்க வேண்டும் என்றும் சபைகளை சிந்திக்க வைத்துள்ளார்.

எளிய மனிதர்களின் குறிப்பாக இடுக்கி போன்ற நலிந்த மாவட்டங்களில் மலைக்கு மலை சபை நிறுவி வைத்து இருக்கும் பாதிரிகள் ஏழை குடும்பங்களை உதவ இல்லை என்று மட்டுமல்ல பல போது எளிய தாய்களுக்கு பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதையும் இக்கதையில் கடந்து போகும் போது காணலாம்.

கிறிச்தவர்களின் வாழ்க்கையை முற்றும் தாக்கம் செலுத்தும் கிறிஸ்தவ ஆலயம் ,பங்கு தந்தை அரண்மனையில் இருக்கும் பிஷப் போன்றப்வர்கள் ஒவ்வொரு நிலையிலும் எவ்வித தாக்கம் கிறிஸ்தவ குடும்பங்களில் தனி நபர் வாழ்க்கையுல் தாக்கம் செலுத்துகின்றனர் என குறிப்பிட்டு உள்ளார்.

பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக பெரிய மேய்ப்பர் அரண்மனையில் கூனி குறுகி நின்றது, பங்குபாதிரி வீட்டில் அடுக்களை வேலைக்காக நின்றது, ஏற்கனவே வறுமையாலும் தகப்பனின் துணையற்று வளரும் பிள்ளைகள் மேலுள்ள உள்ளூர் பங்கு தந்தை , ஆலைய அமைப்பின் இளக்காரம் இவையும் பகிர்ந்துள்ளார்.


இப்புத்தகம் பாபு என்ற சிறுவனின் கடந்த கால வறுமையை நினைத்து வாசகர்கள் இப்போது அழ வைக்க அல்ல, தற்போதும் அது போன்ற சூழலில் இருப்பவர்களுக்கு கிறிஸ்தவர்கள் எவ்வித அன்பையும் பரிவையும் கொடுக்க வேண்டும் என நினைவுப்படுத்துகிறது. முக்கியமாக, கர்த்தரின் ஆட்டுக்குட்டிகளை மேய்க்கும் மேய்பர்கள், பாதிரியார்கள் அடங்கிய சபையின் கடைமை பொறுப்பு என்னவாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க வைக்கிறது.
அத்துடன் சொந்த சகோதரன், சகோதரி குடும்பம் துன்பப் படும் போது அன்பையே அடிப்படையாக வாழும் குடும்ப உறுப்பினர்களின் கடின இதயம், மேலும் அவர்களை எகத்தாளத்தோடு நடத்தும் விதமும் சொல்லப்பட்டு உள்ளது.


பாபு எழுதினது அவருடைய குடும்ப கதை மட்டுமல்ல ,
அவருடைய அம்மாவின் தனிப்பட்ட கதையுமல்ல
இன்றும் கேரளாவில் கிறிஸ்தவ பெண்கள் வாழ வழியில்லாமல் தனது பெண் குழந்தைகளுடன், தற்கொலை செய்து வருகிறதை செய்திகளில் வாசிக்கிறோம். அப்படியான பெண்களுக்காக தான் தன் தைரியமான தாயின் கதையை எழுதி உள்ளார்.இப்புத்தகம் ஒரு சமூகத்தின் குறிப்பாக மலையோர கிறிஸ்தவர்களின் , கிறிஸ்தவர்களின் எண்ணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சபையின் கதையும் கூட.
இப்புத்தகத்தில் சோகத்தின் இழப்பின் வறுமையின் அவமானத்தின் குரலுடன் பாதிரி aமைப்பை கேள்வி கேட்கும் பாலவனத்தில் நடந்த யோவானின் ஒரு உரிமை குரலும் பாபு ஆபிரகாமின் எழுத்தில் காணலாம்.


"Kambili Kandathe Kalbharanigal,"
a memoir written in Malayalam by Professor Babu Abraham and published by Mathrubhumi Publications, is an exceptional work. (Kambilikandathil is the name of a village; Kalparani refers to a "jar"—a metaphor based on Jesus's miracle performed in response to His mother's petition.) The book was released in April 2025 and is now in its 50th edition. Born in the Idukki district, the author is now a professor in France.

This book, written in the form of personal recollections, uses real-world situations to portray life in the most truthful way possible. It investigates the dominance and irresponsibility of Christian Catholic Church families in Kerala, using simple language and an honest perspective. It offers readers the emotional involvement of a novel, depicting personal suffering with genuine empathy while bravely confronting the actions of a strong organization.


This book is more than just the author's destitute childhood and youth; it also paints a realistic picture of Idukki's environment, lifestyle, schooling, housing, and the circumstances of many Christian Catholic families. It depicts the difficult times that Babu's mother, Mary, his alcoholic father, and his three sisters faced.

Life in Idukki, a mostly underdeveloped forest region, has long been associated with the misconception that its residents are backward and uncivilized. Except for the indigenous people, the majority of residents are migrants with no history of linguistic or ethnic domination, living in an environment where existence is dependent on combating nature itself.

Despite growing globally valued export crops such as cardamom, pepper, and tea, which generate export cash for the government, the people of this region remain impoverished and continually battle nature. With no close hospitals, limited access to schools and universities, and little political attention, their lives are defined by hard work. This book is a striking reminder of those truths.

For the Christians of these hills, the Church is their sole refuge, the local admin, the authority in charge of families, and the guardian. Each hill capped with a cross, and each enormous home occupied by church leaders represents the clergy's vast influence. The book looks into how this power affects the lives of the vulnerable "sheep" in their care.

Whether it's raining or cold, peasants go to Mass early in the morning, come home shivering in the harsh cold & winds, and walk miles to school. Babu, a representative of the generation, would walk 15 km every day to learn.

His father, who was addicted to alcohol and gambling, delegated all tasks to the mother. After marriage, her parents and her husband's family abandoned her, but she worked tirelessly to feed and educate her four children. When Babu was five, his father fled the area after failing to repay a ₹1500 loan from a local bank. After 12 years of wandering, he came home unwell. Even then, the children were hesitant to embrace him, but the mother said, "Whatever he is, he is your father," and cared for him.

After he returned, the father continued drinking, smoking, and beating his wife. To support the family, the mother worked alongside other women as a load carrier.

She eventually considered suicide with her children because she was so depressed by poverty. However, her eldest daughter dissuaded her. When family and local authorities tried to advise her, stating it was not respectable for her to work as a worker and that she should return to her parental home, the Church's parish priest, acting as a judge, echoed this. But, knowing that a subservient Mary would lose her children, she got a knife, threatened them all, and refused to give them up. She moved into a house in bad condition and started again.

In a difficult time, she sent three of her children to a Christian orphanage while keeping one with her. In the home, the youngsters were forced to perform humiliating activities, including cleaning human excrement. Seeing their anguish, she returned them home, unwilling to let poverty divide them.

Meanwhile, the eldest sister finished Class 10, while the second studied nursing. Babu, although receiving the greatest grades in high school, was unable to afford college. On counsel, he asked the bishop for assistance. The bishop dismissed him, adding, "Even if you study, you'll need a bribe to get a job," and handed him a plate of food before sending him out.

Later, with assistance from the Marthoma Church, he completed his degree, received a master's degree in Delhi, sought a PhD in France, and became a professor.

His eldest sister is a nun in Italy, while the other two have settled in Europe.
His mother, Mary, died from cancer while he was obtaining his master's degree.

This book was created to commemorate his mother's 25th death anniversary. The shame of being helpless due to poverty continues to plague him. He recalls with horror the sexual torture suffered by a buddy at the orphanage. He almost evaded sexual exploitation by a hotel employee he worked with. He describes the ethically depraved priests he met while in seminary.

Thus, the son of an alcoholic father has documented the difficult years he and his family faced. The book resonates because our own experiences cross with his.

This is more than just one man's narrative; it is a writer's sincere truth, delivered to readers with amazing clarity. He talks about both beneficial and evil people he met, reminding humanity of the compassion we owe one another. It also serves as an inspiration to future generations, teaching principles shaped by adversity.

In today's society, where women frequently kill their children and themselves in despair, Mary's narrative serves as a message of courage. Without directly saying so, the book encourages Christian families and the Church to consider how they should support the vulnerable.

It also reveals how, in neglected places such as Idukki, churches placed on hilltops fail to aid the impoverished and, at times, endanger vulnerable women and mothers. The Church, parish priests, and bishops have great power over Christian families, influencing every aspect of their lives.

Babu describes how he once stood slumped at the Bishop's mansion, appealing for assistance, as well as working in the parish priest's kitchen, all due to poverty and a lack of parental support. The arrogance and indifference of church structures are heavily reflected on the pages.

Finally, this tale refrains from provoking readers to lament the impoverishment of young Babu. Instead, it encourages Christians to love and care for those who continue to suffer in similar circumstances. Above all, it encourages Church leaders, the shepherds of Christ's flock, to consider their roles and obligations.

It also highlights the hardness of heart that may be found among families that refuse to help their own suffering while treating them cruelly.

Babu has written more than only his family's or his mother's story. It also tells the experience of Christian women in Kerala who, out of helplessness, opt to die alongside their daughters.
He writes for them.

This book tells the story of a community, particularly of hill-country Christians, and a church that has influence over people's lives.

Through the voice of sadness, loss, poverty, humiliation, and justified questioning of Church power, Babu Abraham's writing echoes John the Baptist's moral cry in the wilderness.


10 Aug 2025

நாடார் வரலாறு கறுப்பா…? காவியா?.....


 முதல் பதிப்பாக  2019 ல் வெளி வந்த ”நாடார் வரலாறு கறுப்பா…? காவியா?” என்ற புத்தகத்தின்  ஐந்தாம் பதிப்பு 2021 ல் வெளியாகி உள்ளது.இப்புத்தகத்தின் ஆசிரியர் தி. லஜபதி ராய் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊரில் பிறந்தவர். தற்போது மெட்ராஸ் உயர் நீதிமன்ற,  மதுரை கிளையில் வழக்கறிஞராக பயிற்சி செய்கிறார்

 

இப்புத்தகம் ஊடாக நாடார்கள் வரலாற்றில் நடந்த மிக முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள், நாடார் தலைவர்களின் சமூக பங்களிப்பு, நாடார்களின் கல்வி பண்பாட்டு வழிபாடு சார்ந்த விடயங்கள், நாடார் இனத்தில் நடந்த மதமாற்றம் குறித்து மிகவும் தெளிவாக பதிந்து உள்ளார். வரலாற்று பூர்வமான ஆக்கபூர்வமான தகவல்கள் தெளிவாக பதிந்துள்ளார்.

 

இரண்டாம் பகுதியில் நாடார்கள் பற்றிய 1899ஆம் ஆண்டு வாக்கிலுள்ள ஆங்கிலேய மிஷினறி ஆய்வாளர்களின் தரவுகளை மேற்கோளாக காட்டி சில சம்வங்களை தொகுக்குகிறார்.  

 

18-19 நூற்றாண்டில் தோள் ஆடை அணியும் உரிமை இருந்த அகஸ்தீஸ்வரம் குமரசுவாமி நாகமணி மார்தாண்டன் நாடார் மற்றும் சுப்ரமணி நாகமணி மார்தாண்டன் நாடார் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

1855ஆம் ஆண்டு கழுகுமலை ஊரின் மையப்பகுதியியான தோடி தெருக்களில் நாடார்கள் ஊர்வலம் செல்லக்கூடாது என்பதால் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மாறினர் என்ற தகவல் அறிகிறோம்.. தேர்த்திருவிழாவின் போது நடைபெற கலவரத்தில் ஏழு நாடார்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான எட்டயாபுரம் ஜமீனின் பார்ப்பன மேலாளரும் அவரது அடியாட்களும் நாடார்களால் கொல்லப்பட்டனர் என்று அறியத்தருகிறார். 1899ல் இந்து ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்க இஸ்லாம் மதத்தை தழுவிகின்றனர் நாடார் இனத்தவர்.

 

சிவகாசி கலவரத்திற்கு காரணமானவர்கள் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் மறவர் சமூகத்தினரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

 

அடுத்த பகுதியில் குமுதி ஆலய நுழைவு முயற்சி பற்றி குறிப்பு உள்ளது. கோயிலுக்குள் அத்து மீறி நுழைந்த நாடார்கள் 2500 ரூபாய் திரு.பாஸ்கர சேதுபதிக்கு வழங்க பணிக்கப்படுகின்றனர்.  அத்துடன் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் நாடார்கள் தங்களுக்கு என தனிக் கோயில்களைக் கட்டிக் கொள்ளட்டும் அல்லது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றட்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார் ஆட்சியர். ஆனால் இந்த ஒப்பந்தத்தை பாஸ்கர சேதுபதி ஏற்றுக் கொள்ளவில்லை.  இந்த வழக்குகளை நடத்த நாடார்கள் 42 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. இந்த காலயளவில் தான் பாஸ்கர் சேதுபதி இந்து மதத்தின் பெருமையை சிக்காகோ எடுத்துச்சொல்ல 1893 ல் விவேகானந்தருக்கு பொருளுதவியும் செய்து இருக்கிறார். இந்த வழக்கில் பாஸ்கர் சேதுபதி சார்பாக 38பார்ப்பன சாட்சிகளும் நாடார்கள் சார்பில் 23 பார்ப்பன  சாட்சிகளும் சான்றளித்துள்ளனர்.

 

கமுதி கோயில் நுழைவிற்கு 42 வருடங்களுக்கு பின் 1939 ல் மதுரை  மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு நிகழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 

1925 ஆம் ஆண்டு நடந்த வைக்கம் போராட்டம் அதில்  பெரியாரின் பங்கு பற்றி குறிப்பிட்டு உள்ளார்

எட்டாவது பக்கத்தில் சாணார்கள் நாடார்களாக மாறிய நிகழ்வு என்ற பகுதியில், சாணார்கள் திருவாங்கூர் என்ற பகுதியில் மட்டும் சாணார்களாக பதியப்பட்டத்தை குறிப்பிடுகிறார். அடுத்த பகுதியில் தோழ் சீலை போராட்டம் பகுதியில் 1855 ஆம் ஆண்டு நாடார் பெண்கள் சீலை அணியும் உரிமையை பெறுகிறதை குறிப்பிடுகிறார். 1864 ஆம் ஆண்டு மற்றைய பெண்களும் சீலை அணியும் உரிமை பெறுகின்றனர். கிறிஸ்தவ மதமாற்றமும் அக்காலகட்டம் நிகழ்ந்ததை குறிப்பிடுகிறார்.

 

சுதந்திர இந்தியாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பட்டியல் இனத்தபவர் தேர்வானதை குறிப்பிட்டு உள்ளார்.

 

டபிள்யூ .பிஏ .சௌந்தர பாண்டியன் பணிகளை பட்டியலிட்டுள்ளார். முக்கியமாக தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரை பதிந்துள்ளார்.

1980 ல் கிறிச்தவ மற்றும் இந்து நாடார்களுக்குள் நடந்த கலவரம், 1981 ல் நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம். அதில் பாதிக்கப்பாட்ட கிறிச்தவ கத்தோலிக்க மீனவர்கள் மற்றும் இந்து  நாடார்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

 

தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இன்று நாடார்கள் திரள்வதாக குற்றம் சாட்டுகிறார்.  நாஞ்சில் நாடன் கூறிய ஜாதிதூய்மைவாதத்தில் ஒப்புறவாகுகிறார்  ஆசிரியர் லஜபதிராய்.

 

கிறிஸ்தவ பணியாளர்கள் பணம் தொண்டு வந்தாக குறிப்பிடுகிறார். 16 வது பகுதியில் கறுப்பா காவியா என்ற கேள்வியுடன் நாடார்கள் இந்து முன்னனியில் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறார் எழுத்தாளர்.

 

 

அடுத்த சில பக்கங்களில் கால்டுவெல் போன்ற வெளிநாட்டினர் பரப்பின பல அவதூறுகளை- நாடார்களின் பரம்பரத் தொழில் பனையேறுவது, பேய்கள் வழிபாட்டில் இருந்தனர், சாணார்கள் போன்ற வார்த்தை பிரோயங்களை ஆசிரியரும் நிறுவுகிறார். மட்டுமல்ல பிற்போக்குத் தனமான மாட்டுச்சாண காலகட்டத்திற்கு போகும் என்று இரு முறை குறிப்பிட்டு கண்டிக்கவும் செய்கிறார் எழுத்தாளர்.

 

இன்றைய காலசூழலில் நாடார்கள் எதிர்கொள்ளும் பிரச்ச்சினைகளை குறிப்பிடாது, நாடார்கள்  யாருடன் சேர்ந்து அரசியல் செய்ய  வேண்டும் என்பதில் தனது எழுத்து ஊடாக பரப்புரை செய்கிறார் எழுத்தாளர்.. நாடார்கள் பரம்பரத்தொழில் என்பதை பனையோடு நிறுத்தும் ஆசிரியரின் தேவை கேள்விக்கு உட்படுத்த வேண்டியது.

 

.

 

பிஷப் கால்டுவெல்லை குறிப்பிடும் புத்தக ஆசிரியர் கால்டுவெல் இப்புத்தகம் வெளியிட்டது வழியாக எதிர்கொண்ட விடயங்களை சொல்வில்லை என்று மட்டுமல்ல, நாடார்களால் கோடைக்கனாலுக்கு விரட்டப்பட்டு அங்கையே இறந்தார் என்ற செய்தியை பகிரவில்லை.

 

 முதல் பகுதியில் சில புகழ் பெற்ற நாடார்களை அறிமுகப்படுத்துகிறார். அதில் சிலர் படம் தவிர்த்து இருக்கலாம். கலப்பு ஆட்களை நாடார் என கொண்டு வந்ததும் அரசியலாகத்தான் தெரிகிறது. எந்த ஜாதிக்குள்ளும் வர விரும்பாத திராவிட கட்சி ஆட்களையும் ஜாதிக்குள் புகுத்துவது தகுமா என்ற கேள்வி எழுகிறது .

 

நாடார்களில் கள்ளிறக்கிறவர்கள் குறிக்கும் வார்த்தைகளை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்; 8,9 10, 11 நூற்றாண்டுகளில்  பயன்படுத்திய வார்த்தைகளை சான்றுகளாக  வரிசைப்படுத்துகிறார். சான்றோர் போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது  கேள்வி எழுப்புகிறது.

நாடார்களில் கள்ளிறக்கிறவர்கள் குறிக்கும் வார்த்தைகளை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்; 8,9 10, 11 நூற்றாண்டுகளில்  பயன்படுத்திய வார்த்தைகளை சான்றுகளாக  வரிசைப்படுத்துகிறார். சான்றோர் போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது  கேள்வி எழுப்புகிறது. வெள்ளைத்தேவன் கொலையுண்ட போது எழுதப்பட்ட நாட்டுப்புறப்பாடல்களில் நாடார்கள் என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது.

 

 

நாடார், கிராமணி, சாணார் போன்ற வார்த்தைகள் உருவானதற்கான காரணங்கள் குறித்த உறுதியான தகவல்கள் இல்லை என்று கூறி எளிதாக கடக்கிறார்.

 

1903 ஆம் ஆண்டில் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில்; சாணார்கள் தாழ்ந்த ஜாதியினர் என்பதால், மரக்கட்டையில் பிணைக்கலாம் என்ற தீர்ப்பை எடுத்து கூறி நாடார்கள் தாழ்ந்தவர்கள் தான் என்று நிறுவ முயல்கிறார் எழுத்தாளர். ஐரோப்பியர்களின் ஜாதி ரீதியான தீர்ப்பை  ஒரு சான்றாக எடுத்துக் கொள்வது நெருடலாகத்தான் உள்ளது. தென்னிந்தியாவின் ஆன்மீகப் போராளியான 1809-1851 காலயளவில் வாழ்ந்த அய்யா வைகுண்டர் பற்றொறி சில குறிப்புகள் உள்ளன.இந்து நாடார்கள் மதம் மாறும் அவலமான  சமூக நிலையை மாற்ற அய்யா வைகுண்டர் பாடுபாட்டார் என்று மட்டுமல்ல, கிறிஸ்த மதமாற்றத்தை எதிர்த்தார் என்ற தகவலை மறைத்து விட்டார் ஆசிரியர்.

 


வடக்கன் குளத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் சூழல் அதிர்ச்சியை தருகிறது வாசிப்பவர்களுக்கு. சனாதன இந்துக்கள் அடக்கு முறையில் இருந்து வெளியேறின இந்து நாடார்கள் கிறிஸ்தவர்கள் ஆன போது 1752 ல் கட்டிய ஆலையத்தில் தென்பகுதி சூத்திர ஜாதியினருக்கும் அமரவும் வடபகுதி நாடார் உட்பட பட்டியில் இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டதுடன் நடுவே சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. 1910 ஆம் ஆண்டு யேசு சபை பாதிரியார் கௌசானல் அவர்கள் பிரிவினைச் சுவரை இடித்தெறிந்து சமூகநீதி பக்கம் நின்ற சபையை குறிப்பிடும் எழுத்தாளர், நடுச்சுவர் கட்ட அனுமதித்த  வெளிநாட்டு கிறிஸ்தவ ஆலய தலைமையை பற்றி சொல்லாது விட்டுள்ளார்.

முக்கியமாக வெள்ளைக்கார மிஷினரிகளில் தர்ஸ்டன், சாமுவேல் பட்டீர், ஜெ. சார்க்  போன்றோரின் ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்ட ஆர்வம் கொள்கிறார் என்பதை கவனிக்கலாம். நாடார்கள், தங்களை  சாணார்கள் என்று அழைக்கப்படுவதை விரும்பமாட்டார்கள் என அறிந்தே வைத்துள்ளார் தாஸ்டன்.

 

முன் அட்டை கமுதி ஆலய நுழைவு காட்சி,  பின் அட்டையில் நங்கேலி முலவரி சார்ந்த சித்திரம். நங்கேலி வரலாறு ஒரு புனைவு என்று நிரூபிக்கப்பட்டதை வரலாற்று ஆசிரியர் கண்டு கொள்ளாது தனது பின் அட்டையாக வைத்ததை தவிர்த்து இருக்க வேண்டும்.

 

ஒரு சிறப்பான வரலாற்று எழுத்தாக ஆரம்பித்த புத்தகம்  பரப்புரை எழுத்தாக முடிவு பெற்றது  இப்புத்தகத்தின் பெரும் குறை தான்.