Showing posts with label film reviw திரை விமர்சனம். Show all posts
Showing posts with label film reviw திரை விமர்சனம். Show all posts

18 Jan 2026

எக்கோ ஒரு மர்ம த்ரில்லர் மலையாள திரைப்படம்.

 


எக்கோ ஒரு மர்ம த்ரில்லர் மலையாள திரைப்படமாகும்.

இப்படத்தை தின்ஜித் அய்யத்தன் இயக்கியுள்ளார், பாகுல் ரமேஷ் திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.ஆர்.கே. ஜெயராம் 'ஆராத்யா (Aaradyaa Studios) ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாகும். இப்படத்தில் சந்தீப் பிரதீப், வினீத், நரேன், பினு பப்பு மற்றும் பியானா மோமின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2025 ஏப்ரலில் தொடங்கி, ஜூன் நடுப்பகுதியில் நிறைவடைந்தது. படப்பிடிப்பு பெரும்பாலும் கேரளாவின் மூடுபனி சூழ்ந்த இடுக்கி மாவட்டம் பீர்மேடு மற்றும் வாகமண் பகுதி உட்படும் இயற்கை சூழ்ந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நாய்கள், குறிப்பாக இந்தியாவின் சொந்த இனமான தமிழ்நாட்டை சேர்ந்த கோம்பை (Kombai) நாய்கள் , கதையை நகர்த்தும் முக்கியமான பாத்திரங்களாகவே இடம்பெற்றுள்ளன.
திரைப்படம் நம்ப முடியாத கதை சொல்லல் (unreliable narrative), நேர்மறையற்ற (non-linear) கதை அமைப்பு, மற்றும் ஒலி–சுற்றுச்சூழல் மீது கொண்ட கவனம் ஆகியவற்றை பயன்படுத்தி, பார்வையாளர்களை ஆழமாக இழுத்துச் செல்லும் அனுபவத்தை உருவாக்கி உள்ளது.
இந்த திரைப்படம், சுற்றுச்சூழல், த்ரில்லர் பின்னணியில், நாய்களின் யஜமானோடுள்ள விசுவாசம், புத்திசாலித்தனம், தங்களது பகுதியை பாதுகாக்கும் இயல்பு ஆகியவற்றை கதைப்பின்னலாக கொண்டு கதையை நடத்தும் விதம் விருவிருப்பானது.
காணாமல் ஆன குரியச்சனை தேடும் பயணம், மனிதன்–விலங்கு உறவு , சிக்கலான கடந்த காலத் துரோகம், மற்றும் பரஸ்பர இணைப்புகள் ஆகியவற்றை மெதுவாக காட்சியூடாக வெளிப்படுத்துகிறது
நாய்களை பாதுகாப்பிற்காகவும் அதே நேரத்தில் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம் என்ற படத்தின் மையக் கருத்தையும் உட்படுத்தி உள்ளனர்
எளிமையான ஒரு கதை தான். . . காணாமல் போன நாய் வளர்ப்பாளர் குரியனின் மலேஷியா மனைவி ம்லாத்தி, தனது பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தி, குரியச்சனை மலைப்பகுதிகளில் எங்கோ சிறைபிடித்து வைத்திருக்கிறாள் என்ற கதை முடிவை, பார்வையாளர்களுக்கு எல்லாவற்றையும் நேரடியாக சொல்லாமல் சிந்திக்க வைக்கும் விதமாக பார்வையாளர்களிடமே கொடுத்துள்ளனர்.
நாய் பயிற்சியாளர் ஜிஜேஷ் எஸ் (Jijesh S) ஒன்பது கோம்பை நாய்களையும் ஒரு ஹஸ்கி நாயையும் பயிற்சி அளித்து, திரைப்படப் படப்பிடிப்பு தளத்தின் அறிமுகமற்ற சூழலில் நாய்களை நடிக்க தயார்படுத்தியுள்ளார். , அவற்றின் நடிப்பு திரைப்படத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Eko (2025) என்ற திரைப்படத்தின் தலைப்பு “Eko” என்பது “எதிரொலி (echo)” அல்லது “முதல் குழந்தை” என்ற அர்த்தங்களை கொண்டது. மனிதர்களின் செயல்களின் எதிரொலி, அடிப்படை உறவுப் பிணைப்புகள் போன்ற கருப்பொருள்களை இது பிரதிபலிக்கிறது.
இதில் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களும் சேர்ந்து, மறைந்த கடந்தகாலத்தின் நீட்சியான உண்மைகளை மெதுவாக ஒன்றிணைக்க முயல்கிறார்கள்.


எக்கோபெமினிசம் (Ecofeminism) என்பது பெண்களின் ஒடுக்குமுறையும் இயற்கையின் ஆதிக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று வாதிடும் ஒரு கோட்பாடும் இயக்கமும் ஆகும்.
ஆணாதிக்க அமைப்புகள் பெண்களையும் இயற்கையையும் கட்டுப்படுத்த வேண்டிய வளங்களாக பார்க்கின்றன; கலாச்சார ரீதியாக உருவாக்கப்பட்ட வனவிலங்குகளின் ஒடுக்குமுறையும் பெண்களின் ஒடுக்குமுறையும் இடையிலான ஒப்பீடுகளின் அரசியல் விளைவுகளை ஆராய்கின்றன. பெண்களையும் இயற்கையையும் சொத்தாகக் காண்பது, கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாக ஆண்களையும், இயற்கையின் பாதுகாவலர்களாக பெண்களையும் கருதுவது, பெண்களை ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவது போல மனிதர்கள் இயற்கையை ஆதிக்கம் செலுத்துவது ஆகியவை அடங்கும்.
ஈகோபெமினிசம், பெண்களுக்கும் இயற்கைக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இதுவும் இத்திரைப்படத்தில் காணலாம். ஒரு பெண்ணின் கணவனை சட்டசிக்கலில் சிக்க வைத்து , அவளை காப்பாற்றுவது போல சிறைப்படுத்தி வைத்து அவளுக்கு அன்பு பாராட்டி வந்தாலும் அதன் முடிவு அவளின் கட்டுபாட்டில் அந்த மனிதனின் வாழ்க்கை சிறப்படுகிறது என்பதாக முடித்துள்ளது தனித்துவமாகுகிறது .
கதாநாயக பிம்பம் தேவையற்ற பாடல் ஆடல் இல்லாமல், கவர்ச்சி பெண்கள் என்ற மாயாசாலம் எதுவும் இல்லாது சுவாரசியமான கதை , சிறப்பான திரைக்கதை ஊடாக சிறப்பான ஒரு திரைப்படம் தரலாம் என நிரூபித்து உள்ளனர்.
இப்படம் 2025 நவம்பர் 21 வெளியானது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் என இருதரப்பிலிருந்தும் பெரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
₹5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் ₹50 கோடிக்கும் மேல் வசூல் செய்து வணிக ரீதியான பெரும் வெற்றியைப் பெற்றது.
பாகுல் ரமேஷின் 'விலங்கு முத்தொகுப்பின்' (Animal Trilogy) மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியாக 'எகோ' திரைப்படம் அமைகிறது. இந்தத் தொடரின் முந்தைய படங்கள்: கிஷ்கிந்தா காண்டம் (Kishkindha Kaandam - 2024) கேரளா க்ரைம் ஃபைல்ஸ் 2 (Kerala Crime Files 2 - 2025)
தமிழகத்தின் கோம்பை நாய்கள் என்று அறியப்படுவையின் பூர்வீகம் மலேஷியா என்று கட்டமைக்கும் போதும் தமிழக கோம்பை நாய் வரலாற்றை குறிப்பிடாமல் கதை முடிக்கப்பட்டது எதனால் என்ற கேள்வியும் மனதில் தங்குகிது,
#

எக்கோபெமினிசம்
Eco Faminism!
பெண்களும் இயற்கையும் ஒன்று. இயற்கைக்கு கொடுப்பது போன்ற மரியாதை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை எக்கோ பெமினிசம் வலியுறுத்துகிறது
இரு அன்னிய ஆண்களை வீட்டுக்கு அழைத்து வருகிறான் கணவன், தன் மனைவியை மகள் போல நேசிக்கிறேன் என்கிறான் வந்தவர்களிடம்.
ஏன் மனைவியை மனைவியாக நேசிக்க கூடாதா என்கிறான் வந்தவன்.
வந்தவன் இருவரும் இப்பெண்னை கடத்தி கொண்டு போக மோகம் வருகிறது. முதலில் நுட்பமாக உன் கணவனுக்கு உன்னை விட அவன் தொழில் மேல் தான் விருப்பம் என்று கூறி அவள் கணவன் மேல் வெறுப்பை உருவாக்குகின்றனர்.
அவளை போராடி காப்பாற்றுவது போல அவளுக்கு இயல்பாகவே அமைத்து வைத்து இருந்த பாதுகாப்பை உடைத்து அவன் பகுதிக்கு கொண்டு வந்து அவனுக்கு மட்டும் என்று சிறைப்படுத்துகிறான். அதை தெரிந்து கொள்ளும்போது அவள் வயோதிகத்தையும் அடைகிறாள். .
அவளை காப்பாற்றுவது போல சிறைப்படுத்தி வைத்து இரு மகன்களையும் கொடுத்து அங்கும் அவளை தனது தனித்த அன்பு அன்பு போல பாராட்டி வந்ததும் அவளைச் சிறப்படுத்தவே என்று அறிந்த போது அவள் கவலை கொள்கிறாள்.
முடிவு அவளின் கட்டுபாட்டில் அந்த மனிதனின் வாழ்க்கை முழுதும் சிறப்படுகிறது என்பதாக முடித்துள்ளது
மலையாளம் திரைப்படம் எடுக்க இளைஞர்கள் மேனக்கெடுகின்றனர் . சினிமா என்ற கலைத் தன்மையை சரியான வகையில் பயன்படுத்துகின்றனர். காட்சி ஊடகமான சினிமா காட்சிகள் ஊடவே பார்வையாளர்களில் சேர்க்கின்றனர். உரையாடல்கள் மிகவும் குறைவாக பயன்படுத்துகின்றனர்.
ஒரே பெண் கதாப்பாத்திரம் கதை அத்தனை விருவிருப்பாக நகத்தும் உத்தி தெரிந்து வைத்துள்ளனர்.
எக்கோ.பெமினிசக் கருத்தை மிகவும் நுட்பமாக கதையில் வைத்துள்ளனர்.தங்களது சுய லாபங்களுக்காக இயற்கையும் இயற்கை வழங்களையும் அழிப்பது போல பெண்களை அழிப்பதற்கும் தயங்குவது இல்லை.
இயற்கை தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வருவது போலவே பெண்களுக்கு அன்பு ஆதரவு விடுதலை கொடுப்பதாக தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க துணியும் ஆண்கள் இயற்கையின் சீற்றம் போன்றே அதே இயற்கையால் அழிகின்றனர்.
இந்த ஆண்கள் யார் என்றால் நாயர்களாக பாதுகாவலர்களாக அதிகாரிகளாக பாவலாகாட்டும் ஆண்களே.

27 Jul 2025

Silenced" (கொரியப் பெயர்: "도가니" – Dogani)

 

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கொரிய திரைப்படமான "Silenced" (கொரியப் பெயர்: "도가니" – Dogani) .

காங் இன்-ஹோ (Kang In-ho) என்பவர் ஜா-ஏ அகாடமி (Ja-ae Academy) எனும் சிறப்பு தேவைகள் கொண்ட  குழந்தைகளுக்கான பள்ளியில் கலை ஆசிரியராகப் பணியேற்க,  வட ஜியோல்லா மாகாணத்தில் அமைந்துள்ள முஜின் நகரம் செல்கிறார். 

பள்ளியில் வந்து சேர்ந்ததும், அவர் பள்ளித் தலைமையாசிரியர் லீ காங்-சொக் மற்றும் அவரின் இரட்டை சகோதரரான நிர்வாகத் தலைவர் லீ காங்-பொக் ஆகியோரை சந்திக்கிறார்.அது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் பள்ளி. 


தனது புதிய மாணவர்களுக்கு கலை கற்பிப்பதில் உற்சாகம் கொண்டிருந்த #இன்-ஹோ, அந்த மாணவர்கள் தன்னை ஒதுக்கி, விலகிச் செல்வதை கவனிக்கிறார். இருப்பினும், அவர் மாணவர்களிடம் அக்கறையுடன் நடந்து கொள்கிறார். 


சிறிது காலத்திற்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை பகிர   தொடங்குகிறார்கள்.  அப்போது, இன்-ஹோ ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை அறிகிறார் –பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரால்.அந்த பள்ளியின் மாணவர்கள் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளனர்,   இன்-ஹோ, பள்ளியில் நடைபெறும் இந்த கொடுமைகளை வெளிக்கொணரத் தீர்மானிக்கிறார். இதற்காக மனித உரிமை போராளி #சோ யூ-ஜின் (Seo Yoo-jin) உடன் இணைந்து செயல்படுகிறார். 


ஆனால்,  பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமல்லாமல், போலீசார், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகம்கூட இந்த கொடுமைகளை மூடிமறைக்க ஒன்றிணைந்துள்ளனர் என அவர்கள் விரைவில் உணர்கிறார்கள் –

இன்-ஹோ தன் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். ஆனாலும், அவர் முஜின் நகரத்தில் தங்கி, அந்தக் குழந்தைகளுக்கான நீதி கோரி போராடத் தொடர்கிறார்.


வழக்கறிஞர், குற்றவாளிகளுக்காக "முந்தைய பதவியின் சிறப்புரிமைகளை" (Jeon-gwan ye-u) பயன்படுத்துகிறார்.  குற்றவாளிகள் நேரடியாக பொய் பேசுகிறார்கள், லஞ்சம் கொடுத்து சலுகை தண்டனை பெற்று விடுகிறார்கள். 


தண்டனை வழங்கப்படுவதற்கு முந்தைய இரவில், லீ சகோதரர்கள் மற்றும் பாலியல் வன்முறை செய்த ஆசிரியரான பார்க் போ-ஹ்யூன் (Park Bo-hyun) ஆகியோர், தங்களது வழக்கறிஞருடன் மகிழ்ச்சியாக சிரித்து பேசி கொண்டாடுகிறார்கள்.

################################################################################

#திரைப்படத்தால் சமூக மாற்றம்


இலக்கியமும் திரைப்படமும் கொண்டிருக்கும் சக்தி விவரிக்க முடியாதது. அவை நம் சிந்தனைகளை மாற்றி, சமூகத்தையே மாற்றும் திறன் கொண்டவை. அதனால்தான் ஒரு சிறந்த இலக்கியம் அல்லது திரைப்படம் என்பதை நாம் ஒரு மதிப்புமிக்க பண்பாட்டு உரையாகவும், முக்கியமான சமூக ஆவணமாகவும் கருக்கிறோம். “The Crucible” போன்ற நாவல்களையும், “Silenced” போன்ற திரைப்படங்களையும் தொடர்ந்து காணக்கூடிய நிலை இருக்க வேண்டும், அப்படி இருந்தால் நாம் நல்ல மனிதர்களாகவும், நல்ல சமுதாயத்தில் வாழக்கூடியவர்களாகவும் மாற முடியும். இந்தப் படம் வெளியான பிறகு நீதிமன்ற தீர்ப்புகளின் மென்மையான தன்மையை எதிர்த்து பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். 


#குவாஞ்சு இன்ஹ்வா பள்ளியின் ஆறு ஆசிரியர்களில் நால்வருக்கு கல்வித்துறை கடுமையான தண்டனை பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும், குற்றத்திற்கான வரம்புச் சட்டம் (Statute of Limitations) காரணமாக அவர்கள் தண்டனையின்றி தப்பியதுடன், பின்னர் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.  அவர்களில் இரண்டு பேர் மட்டுமே எட்டு சிறுமிகளை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


#உண்மை சம்பவம் கதை

முன்னாள் ஆசிரியர் கிம் யோங்-இல் (வயது 71)  1964 ஆம் ஆண்டில் நடந்த இக்குற்றத்தால்  இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறினார். அதன்பின், துணைத் தலைமையாசிரியரால் அடிக்கப்பட்டு, வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக விலகச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.


#படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குள், #2011 நவம்பரில் குவாஞ்சு நகராட்சி அந்த பள்ளியை அதிகாரப்பூர்வமாக மூடிவிட்டது.


2012 ஜூலையில், குவாஞ்சு மாவட்ட நீதிமன்றம் #அந்தப் பள்ளியின் 63 வயதான முன்னாள் நிர்வாகியை, 2005 ஏப்ரலில் 18 வயது மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், குற்றம் நடந்ததை சாட்சியமாகப் பார்த்த 17 வயது மாணவியை உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது (இருவரும் தற்கொலை செய்ய முயற்சித்தனர் என்ற தகவலும் உண்டு. குற்றவாளி கிம் என்ற பெயரால் அடையாளம் காணப்பட்டவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு 10 ஆண்டுகள் #மின் கண்காணிப்பு காலணி அணிய உத்தரவிடப்பட்டது.


மேலும்,  மிகவும் பலவீனமானவர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க புதிய #சட்ட மசோதாக்களை சட்டமன்ற உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தினர்.  2011 ஆம் ஆண்டு, கொரிய தேசிய சட்டமன்றம், இந்தப் படத்தின் கொரிய பெயரை அடிப்படையாகக் கொண்டு #“டோகானி சட்டம்” (Dogani Law) என்ற பெயரில் ஒரு முக்கிய #சட்டத்தை இயற்றியது. 


இச்சட்டம் 13 வயதிற்குள் உள்ள குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அதற்கான குற்றவரம்புச் சட்டத்தை (Statute of Limitations) நீக்குகிறது. மேலும், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது பாலியல் வன்முறைக்கு வாழ்நாள் சிறை வரையில் அதிகபட்ச தண்டனையை வழங்குகிறது. அதேபோல், “தனது மாற்றுத்திறன் காரணமாக எதிர்க்க முடியாத நிலை” என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற பிரிவையும் ஒழித்தது.


இத்திரைப்படம் பல விருதுகளை வென்றது. இந்தக் கோரிய திரைப்படத்தின் பன்னாட்டு தலைப்பு "Silenced" ஆகும்.

2011 நவம்பர் 4ஆம் தேதி, இந்த திரைப்படம் கீழ்க்கண்ட அமெரிக்க மற்றும் கனடிய ,லாஸ் ஏஞ்சல்ஸ், சான் ஹோசே, ஹண்டிங்க்டன் பீச், நியூ ஜெர்சி, பிலடெல்பியா, அட்லாண்டா, டல்லாஸ், சிகாகோ, சீட்டில், போர்ட்லாண்ட், லாஸ் வேகாஸ், டொராண்டோ மற்றும் வான்கூவர். நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது: 

இந்த படம் வெளியான பிறகு The Wall Street Journal, The Economist, மற்றும் The New York Times போன்ற புகழ்பெற்ற பத்திரிகைகளால் விமர்சிக்கப்பட்டது. 

2019 ஆம் ஆண்டு, இந்த திரைப்படம் Netflix தளத்தில் வெளியிடப்பட்டது.

#################

இயக்குனர் கருத்து!


இத் திரைப்படம் குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மீண்டும் உயிர்ப்பிக்கிறது  2000 முதல் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சிறப்புக் குழந்தைகளுக்காக இயங்கிய ஒரு சிறப்புப் பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து வெளிவந்ததற்கு ஆறாண்டுகளாகியும், அவை இன்னும் தீர்க்கப்படாமல் இருவந்தன. இது சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கி இருந்தது.

#2009 ஆம் ஆண்டு, #எழுத்தாளர் கொங் ஜி-யங், இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை வெளியிட்டார். அது அந்த வழக்கில் மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்தது. இப்போது, அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட புதிய திரைப்படம் மீண்டும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.


#திரைப்பட இயக்குநர் ஹ்வாங் டொங்-ஹ்யோக், இது குறித்து கூறுகையில்: "இந்த படம் விவாதத்தையும் கவனத்தையும் தூண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் இத்தனை விரைவாகவும் வெடித்துவிடும் நான் நினைக்கவில்லை. "படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தை பாலியல் வன்முறை, காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளின் ஊழல் தொடர்புகள், அதிகாரிகளின் புறக்கணிப்பு இவை கட்டுக்கதையல்ல. இவை நாள்தோறும் செய்திகளில் நாம் காண்பவை."

"இந்த சமூக அநியாயங்களை மக்கள் மீண்டும் மீண்டும் கேட்கும்போது அவர்களிடம் ஏற்படும் வெறுப்பு மற்றும் கோபம் இந்தப் படத்தின் மூலம் வெடித்து விட்டது." எனக் கூறி இருந்தார்


இத் திரைப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதில் காணப்படும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையின் தோராயமான காட்சிகள், மற்றும் மிகவும் மனமுடைந்த முடிவு ஆகியவை காரணமாக, இது ஒரு மனச்சோர்வூட்டும் படம் என்று கூறப்பட்டது.

பலரும் இயக்குநரிடம் முடிவை மாற்றி, நாயகர்கள் வழக்கில் வெல்வதை போன்று காட்டும்படி கேட்டனர். ஏனெனில் மக்கள் சந்தோஷமான முடிவுகளை விரும்புகிறார்கள். ஆனால் இயக்குநர் சம்மதிக்கவில்லை

 

"நான் ஒரு உணர்ச்சி தூண்டும் படம் எடுக்கவில்லை; உண்மையைச் சொல்ல விரும்பினேன்." இது மக்களுக்கு அனுகூலமற்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத் தான் இப்படிச் செய்தேன். இரண்டு விஷயங்களை நினைத்தேன் — ஒன்று, இந்தச் சம்பவம் உலகத்திற்கு தெரியவேண்டும்; இரண்டாவது, இந்த வழக்கு எப்படிக் குழைப்ப பட்டது என்பதிலிருந்து, சமூகத்தின் கட்டமைப்பின் குறைபாடுகளை வெளிக்கொணர வேண்டும்." இந்த வழக்கால்   பாதிக்கப்பட்டோருக்காக போராடும் குழுவினர், இந்தப் படம் உண்மையை முழுமையாக வெளிக்கொணரவில்லை என்றும் கூறினர்:


"எழுத்தாளர் கொங் ஜி-யங் என்னிடம் சொன்னார், நாவலில் அவரால் உண்மையில் நடந்தவற்றில் மூன்றில் ஒரு பங்கையே மட்டும் எழுத முடிந்தது. என் படம், அந்த நூலில் இருந்த அனைத்தையும் கூட கையாள இயலவில்லை," என இயக்குநர் கூறினார்.


இயக்குனர் ஹ்வாங் #சூல் தேசிய பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைப் பட்டம் பெற்றவர் :"மாணவராக இருந்தபோதே சமூகப் பிரச்சனைகளில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், நிறைய போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளதே படங்களை எடுக்க ஆரம்பித்ததற்குக் காரணம் என்கிறார்.  இந்த தீர்க்கப்படாத சமூக பிரச்சனைகள் மீது இருந்த நிராசை தான்." இப்படம் என்கிறார்.


"ஒரு படம் மூலம் சமூகத்தை மாற்ற முடியாது. ஆனால் இந்தப் படம் வெளிவந்து ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்தால், திரைப்படங்கள் சமூகத்தை நேர்மறையாக பாதிக்கக்கூடிய சக்தி உள்ளன என்று  நாம்  எண்ணிக் கொள்ளலாம்."என்கிறார்.


"இந்த வழக்கை மீண்டும் திறந்து குற்றவாளிகளை மறுபடியும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க முடியாது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு வேதனைப்பட்டனர் என்பதைக் காட்டலாம்;  ஏனெனில் அவர்கள் இன்னும் மன்னிப்பே கேட்கவில்லை என்கிறார்.

17 Jul 2025

நரிவேட்டை சில அரசியல் மனித உரிமை கேள்விகள் !

திரைப்படத்தின் தலைப்பு நரி வேட்டை என்று வைத்துள்ளனர். நரவேட்டை /நரநாயாட்டு -மனிதவேட்டை என்று தானே வந்து இருக்க வேண்டும். நரி என்பது நரியாக குறிப்பிட்டால் இந்த அரசியல் அதிகாரத்தை நரிகள் வேட்டையாடுகின்றனர் என்று குறிப்பிடுகிறார் என புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

 'நரிவேட்டை’ கேரளாவில் 20 வருடங்களுக்கு முன்பு 2003ஆம் ஆண்டு நடைபெற்ற  வயநாடு, முத்தங்கா என்ற இடத்தில் நடந்த பழங்குடி (ஆதிவாசிகளின்) மக்களின் சொந்த நிலம் வேண்டி செய்த   போராட்டம் அதை தொடர்ந்து போலிஸ், அரசின் கட்டளைக்கு அடங்கி அம்மக்களை மனிதமற்ற முறையில் ஒடுக்கியதை பற்றிய உண்மை சம்பவத்தை ஆதாரமாக கொண்டு எடுக்கப்பட்ட  திரைப்படம் ஆகும்.  இத் திரைப்படம் தற்போது கேரளா முழுவதும் வெளியிட்டு  விமர்சன பாராட்டுகளை பெற்றுக்கொண்டு வருகிறது.


முத்தங்கா போராட்டம் நடந்த போது, 2003ஆம் ஆண்டு பிப்ரவரியில்,  பத்தாம் வகுப்பு மாணவராக இருந்த இயக்குனர்,  பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதே சம்பவத்தை ஆதாரமாக கொண்டு இயக்கியுள்ளார்.   “போலீசார் 18 முறை துப்பாக்கிச் சூடு நடத்தின இக்கலவரத்தில் ஒரு போலிசும், ஒரு பழங்குடி இளைஞனும் கொல்லப்பட்டதாக அரசு கணக்கு இருந்தாலும் நான்கு பழங்குடி இனத்தினரின் மரணம்,  பலர் துன்புறுத்தப்பட்டு காயப்பட காரணமான கலவரம் இது. 
 
முத்தங்கா சம்பவத்தின் கைரளி தொலைக்காட்சி  கேமெராமேன் ஷாஜி மரத்தில் ஏறி ரகசியமாக எடுத்த சுமார் ஆறு நிமிடத்து முப்பது வினாடி காட்சிகள் மட்டுமே  பதிவாகியுள்ளது.  


மூன்று மணி நேர பீதி, நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மை மற்றும் அதன் கலை வடிவம், இவற்றின் கலவையாக உருவானது ‘நரிவேட்டை திரைப்படம். அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உண்மை சம்பவங்களையும் புனைவையும் கலந்துரைத்த சினிமா நடையில், ஒரு பரபரப்பான மையக்கருத்து இத்திரைப்படத்துன் ஊடாக பேசப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக சிந்திக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு திரைப்பயணம். ஆவணப்படமல்ல இது ஒரு புனைவு படைப்பு என்பதினால்   சில விஷயங்களை விட்டு விட்டு, சிலவற்றைச் சேர்த்தே எழுதியுள்ளோம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை எழுதும்போது, படைப்பாற்றலான கற்பனையும் இயல்பாகவே கலந்திருக்கும்.” என்ற தகவலை இதன் இயக்குநர் அனுராஜ் மனோஹர் பகிர்ந்துள்ளார்.   

முத்தங்கா போராட்டம், பழங்குடியின மக்களுக்கு நில உரிமையை கோரி ஆதிவாசி கோத்ர மகா சபா (AGMS) நடத்தியது. அந்தப் போராட்டம் துரதிருஷ்டவசமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதற்குள் சென்றது. “பல ஊடகவியலாளர்களும், தனியார் விசாரணைகளும் பல ஆண்டுகள் முயற்சி செய்தாலும், உண்மையில் என்ன நடந்தது என்பதை உறுதியாக கண்டறிய முடியவில்லை. போராட்டக்காரர்கள், எதிர்ப்பாளர்கள் – எல்லோருக்கும் தங்கள் தனித்துவமான பக்கவாதக் கதைகள் இருந்தன. அதனால் படம் முழு உண்மையைவே இருக்க முடியாது என்றும் படக்குழுவினர்  குறிப்பிட்டு உள்ளனர்

திரைக்கதை எழுதியவர் அபின் ஜோசப். விருவிருப்பான திரைக்கதையாக உள்ளது.  தமிழ் நாட்டைச் சேர்ந்த விஜய் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.  கேரளா இயற்கை காட்சிகளுடன் போராட்ட களமும்  அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இழந்த நிலத்தை  மீட்கும் போராட்டத்தில் கொட்டப்பட்ட ரத்தத்திற்குமான உணர்வுகளை சரியாகவே  காட்சிப்படுத்தியுள்ளனர்.   ஒரு திரைப்படத்தின் உள்ளார்ந்த உணர்வுடன் கூடிய இசையை  ஜேக்ஸ் பிஜாய்  கொடுத்துள்ளார். 'நரவேட்டை சினிமாவின்  வெற்றிக்கு  ஒரு முக்கிய காரணம் இசை எனலாம்.

“மலையாள சினிமாவும்  வணிக வெற்றிக்கு என ஓடிக்கொண்டு இருக்கிற இக்கால சூழலில், மலையாள சினிமாவின் இயல்பான பாணியான கலைத்துவத்துடன் அரசியலை பேசுவது, அரசியல் பின்புலம் கொண்ட கதைகளுடன் கலைத்துவமாக  மக்களிடம் அரசியல் உரையாடல் நடந்துள்ளது பாராட்டுதலுக்குறியது.  முக்கியமாக கேரளா போலிஸ் நிலை, உயர் அதிகாரிகள் மத்திய படை அரசியல்வாதிகளின் கூட்டு எவ்விதம் எளிய மக்களை ஒடுக்கியுள்ளது என இப்படத்தில் காணலாம்.   இளம் இயக்குனர்கள்,  பழைய மலையாள  இயக்குனர் வரலாற்றிலிருந்தே ஊக்கம்கொண்டு வந்துள்ளனர் என்பதும் பெரிமைக்குறிய விடயமே . 

முத்தங்கா போராட்ட குழுவுடன் போராட்டம் துவங்கி 40 நாட்களுக்கு பின்பு தான் முதலமைச்சர் பேச முன் வந்தார். பழங்குடிகளின் உரிமையை ஆதரித்த, கேரளா அரசின் பூமி பகுந்தளிக்கலில் நிகழ்ந்த ஊழலின் எதிரொலி தான் இக்கலவரம் என்று அன்றைய இடதுசாரி தலைவி கவுரிஅம்மா சொல்லியிருந்தார். முத்தங்கா நிலத்தை தனியாருக்கு சுற்றுலா வளர்ச்சிக்காக கொடுக்கும் ஒரு நோக்கமும் அரசிற்கு இருந்தது என்கின்றனர்.   காங்கிரஸ் கட்சியின் , ஏ.கே ஆண்டணியின் ஆட்சியில் நிகழ்ந்த,   20 வருடங்கள் ஆன நிலையில்   எளிய பழம்குடி மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்த போராடிய மக்களை ஒடுக்க  அரசு கைகொண்ட நரித்தனம் பற்றி பேசிய திரைப்படம் இது. நரிவேட்டை’ திரைப்படம், மறக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத உண்மைகளை இளைய தலைமுறைக்கும், கடந்த தலைமுறைக்கும் நினைவூட்டி உள்ளது.  அப்போதைய ஊடகத்தல் ஆந்திரா நக்சல்கள் ஈழப்புலிகள் இந்த போராட்ட குழுவினருடன் கலந்து உள்ளனர் என ஊடகவியாளர்களை வைத்து எழுதியும் தவறான செய்தியையும் பரவவிட்டனர்.  .

 

“முத்தங்கா போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கீதானந்தன் போன்றவர்கள், படத்தில் தங்களை காட்டியிருப்பதை பற்றி விமர்சனங்கள் முன்வைத்துள்ளனர். இருப்பினும் இது பொதுவாக மக்களிடையே விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.  கூடுதல் உண்மைகளை வெளிவரவும் இத்திரைப்படம் காரணமாகலாம். பழங்குடிகளின் உரிமை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு வரலாம். இவர்களுக்கான நிலம் மற்றும் உரிமைகள் பெறா வண்ணம் இவர்களின் மதமாற்றத்திற்கு உற்சாகப்படுத்துவதும் அரசின் உள்நோக்கம் கொண்ட செயலாகும். 


ஆர்யா சலீம் பழங்குடி தலைவியாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார், மேலும் பழங்குடி மக்களில் போராளியாக சி. கே. ஜனுவை நினைவூட்டியதற்காக  சிறப்பு பாராட்டுக்குரியவர். 


திரைப்படத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள வர்கீஸ் பீட்டர் என்னும் கதாபாத்திரம், உண்மையைச் சொல்ல முயலும் ஒரு இளைஞனின் உருவகமாக உள்ளது. நிஜத்தில்  இதுவரை உண்மையைச் சொல்ல யாரும் தைரியமாக முன்வரவில்லை என்பதே உண்மை.


டோவினோ தாமஸின்,  வர்கீஸ் பீட்டர் என்ற கதாப்பாத்திரப் பெயர் போலிஸால் கொலை செய்யப்பட்ட வயநாட்டை செர்ந்த வர்கீஸ் என்ற உண்மை நக்சலையும் நினைவுப்படுத்தியது. வர்கீஸ் ஒரு ஏழைத்தாயின் மகன். நன்றாக படித்து பட்டதாரியான இளைஞன். தான் விரும்பும் அரசு வேலைக்கு வர வேண்டும் என ஆசை கொண்டு பல அரசுத் தேர்வுகள் எழுதி வரும் இளைஞர். இந்நிலையில் போலிஸ் வேலைக்கு தேர்வு ஆகிறான். ஆனால் பிடிக்காத போலிஸ் வேலையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவனுடைய வாழ்க்கை சூழல் உந்துகிறது. காதலி வங்கியில் பணி செய்து வரும் சூழலில் அவளை திருமணம் முடிக்க இந்த வேலையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.  முதல் பணி இடமாகவே ஆதிவாசி போராட்ட களம் அமைகிறது. அங்கு தனது நண்பன் போலிஸ் பஷீர் கொல்லப்படுகிறார். அந்த மரணம் ஆதிவாசிகள் செய்தது என சந்தேகப்பட்டாலும் அதன் உண்மையை கண்டு பிடிக்கும் போது அதிற்சிக்கு உள்ளாகிறான். போலிஸ்காரர்கள் மிகவும் நம்பின மிகவும் மதித்த தமிழன்  உயர் அதிகாரி தான் இதன் பின்னால் என அறிந்து கொள்கிறான். இயக்குனர் சேரன் உயர் தமிழ் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். (எப்போதும் போல மலையாள திரையுலகின் தமிழ் இனம் மேலுள்ள வன்மமாகவும் தெரிகிறது இப்பாத்திரப்படைப்பு. கேரளாவில் ஏற்கனவே லக்‌ஷ்மணா, ஜயராம் படிக்கல் போன்ற கொடும் போலிஸ் அதிகாரிகள் இருக்கும் போது தமிழன் போலிஸ் உயர் அதிகாரியை கொடிய, வில்லத்தனம் பிடித்த கொடும் கோலன் அதிகாரியாக காட்டினது நெருடலாகத்தான் உள்ளது. சேரன் உயரமும் போலிஸ் அதிகாரியாக நடிக்க போதவில்லை என்றே தோன்றினது. ஆனால் வில்லனாக சிறப்பாக நடித்து இருந்தார் என்பதையும் மறுக்க இயலாது.)  



பிற்பாடு வர்கீஸால் போலிஸ்காரர்களால்  ஆதிவாசிகள் மேல் செய்த வன்முறையை மறைத்து போலிஸ் அதிகாரியாக தொடர மனம் அனுமதிக்கவில்லை.  நடந்த உண்மையை நீதிமன்றத்திற்கு எட்ட வைக்கிறார். கொடும்கோலனான போலிஸ் அதிகாரி நீதி விசாரணைக்கு உள்படுத்தபடுவதுடன் கதை முடிகிறது. வேடனின் பாட்டை கடைசி பாடலாக சேர்த்துள்ளனர். பெரும் போராட்டத்தை பற்றி சொல்லிய கதையில் ஜானு போன்ற பழங்குடி பெண் தலைமை தாங்கிய,  இந்திய அரசின் அரசியல்மைப்பு மீறலை,  தங்கள் உரிமையை தேசிய சர்வதேச அளவிற்கு கொண்டு சென்ற கதாப்பாத்திரங்களை கண்டு கடைசியில் வேடன் பாடல் அப்படி பெரிய தாக்கத்தை உணர்வு ரீதியாக ஏற்படுத்தவில்லை. உண்மையான போராட்டங்களை வேடன் போன்ற கலைஞர்களின் வேடத்திற்குள் ஒளித்து வைக்கும் தற்கால அரசியல் சூழ்சியை மட்டுமே நினைவுப்படுத்தியது.  1.3 சதவீதம் வரும் பழங்குடி மக்களின் உரிமை பற்றி எந்த அரசிற்கும் அக்கறை இல்லை. தற்கால பிரணாய் அரசு இது போன்ற போராட்டம் வராது இருக்க வேடன் போன்ற வேடம் போடும் பாடகர்களை  மக்களிடம் கடத்தி போராட்டத்தை பாடல் கஞ்சா பாவனை என மடை மாற்றி விடுவதில் வெற்றியும் கண்டுள்ளனர். 





பாதேரி (வயநாடு) அருகே நடத்தப்பட்ட சில பிரமாண்ட காட்சிகளில், 1800-க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் பங்கேற்றுள்ளனர். ”சினிமா ஒரு கலையும் , ஆனால் அதே சமயம் ஒரு தொழிலும் ஆக இருக்கையில் இது போன்ற திரைப்படங்கள் பெரும் நம்பிக்கையை தருகிறது. 



 அரசியல் கேள்விகளை நமது திரைப்படங்கள் எடுத்து உரைப்பது மகிழ்ச்சிக்குரியது. அந்த அர்த்தத்தில், ‘நரிவெட்ட’ ஒரு தைரியமான, தீவிரமான முயற்சி. சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்ல, சவால் விடுக்கும் ஒரு மீடியம் ஆகவும் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், புதிய தலைமுறையை சிந்திக்க வைக்கும் இப்படைப்பு காலந்தோறும் நமக்குத் தேவை.

1 Jul 2025

தி சில்ட்ரன்ஸ் டிரெயின் (The Children's Train)

 ட்ரெயின் ஆஃப் சில்ட்ரன் திரைப்படத்தை ட்ரெனோ டீ பாம்பினி மற்றும்  கிறிஸ்டினா கொமென்சினி இணைந்து எழுதி,  கிறிஸ்டினா கொமென்சினி  இயக்கி உள்ளார்.  இது வயோலா ஆர்டோனின்  2019 ஆம் ஆண்டு  வெளியான நாவலை அடிப்படையாகக்  கொண்டது.  தற்போது திரைப்படமாக நெட்ஃபிக்ஸ் தளத்தில் உலகளவில் கிடைக்கிறது.

 

தாய்மை,  தாய்க்கும் மகனுக்குமான  உறவு, அவர்களில் உருவாகும் மோதல் இவையை மையமாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. wஆட்டின் வறுமை, குடும்ப நிலை  குழந்தைகளின் குணநலத்தை எவ்விதம் நிர்ணயிக்கிறது என ஆராய்கிறது  இச்சினிமா. போர் காரணத்தால் வறுமையில் ஆன நிலத்திலுள்ள பெண்களின் உரிமைகள்  மற்றும்  அவர்ள் எதிர்கொள்ளும்   பிரச்சினைகளில்   பற்றி சொல்லும்  படமாகும்  இது .

 

ஆண்டு 1946, போரினால் பேரழிவிற்குள்ளான நேபிள்ஸிலில்  குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானர்.  பசியால் எலிகளை  உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டனர். , கொடுமையான  இச்சூழலில் இருந்து குழந்தைகளை மீட்கும் விதம், கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதியான இத்தாலிய பெண்கள் சங்கம் ஊடாக  ஒரு சமூகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.   இந்தத் திட்டத்தின் ஊடாக  தெற்கு இத்தாலியில் உள்ள  70,000 ஏழைக் குழந்தைகளை வடக்கில் உள்ள பணக்கார குடும்பங்களுடன் குளிர்காலத்தைக் கழிக்க அங்கு அவர்கள் வரவேற்கப்பட்டு, உணவளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு,  சில காலம் கழிந்து  தங்கள் சொந்த  வீடுகளுக்குத் திரும்பும் நம்பிக்கையுடன் வளர்கின்றனர். அமெரிகோவும் இச்சிறுவர்களில் ஒருவன்.

 


அவது உயிரியல் தாய், பல சிரமங்கள் இருந்தபோதிலும், அவனைத் தானே வளர்க்க முயற்சிக்கிறாள்,  ஆனால் தன்னால் வறுமையற்ற வாழ்க்கை வழங்க முடியாத நிலைய்யில்  தனது மகனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னொரு ஊருக்கு அனுப்பவும்  ஒப்புக்கொள்கிறாள். அங்கு அவனுக்கு ஒரு அன்பான தாய் , வளர்ப்பு தாயின் சகோதரர் குடும்பம் கிடைக்கிறது.

  வளர்ப்புத் தாய் ஆரம்பத்தில் "தாய்மை" பாத்திரத்தை தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாள், ஆனால் இறுதியில் அவரது வாழ்க்கையை மாற்றும் குழந்தையாக அமெரியாவுடன்  ஒரு ஆழமான பிணைப்பு உருவாகுகிறது. வளர்ப்பு மகனை பிரிய மனமில்லாது திரும்ப அனுப்புகிறாள்.

 


மறுபடியும் சொந்த தாயுடன் வாழும் சூழல் வந்தாலும் தாய்க்கும் மகனுக்குமான உறவு மிகவும் தொலைவாகி விடுகிறது. தனது தாய் தான் ஒரு இசைக் கலைஞனாக இருப்பதை தடை செய்ததும் தன்னை ஒரு குழந்தை தொழிலாளியாக வேலைக்கு அனுப்பியதும் அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. குறிப்பாக தனது இசைக்கருவி வயலினை தாய் விற்று விட்டார் என அறிந்தும்  அவளை மிகவும் வெறுக்கிறான்.  தப்பித்து மறுபடியும் வளர்ப்பு தாயிடம் சேர்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.

 

வறுமை குழந்தைகளின் குணத்தில் வருவிக்கும் மாற்றத்தை மிகவும் தெளிவாக சொல்கிறது இப்படம். எலிக்கு கூட வண்ணம் பூசி விற்று பணம் ஈட்டும் இடத்தை எட்டுகிறது குழந்தை வாழ்க்கை. மற்றொரு நிலைப்பகுதிக்கு  இடம் பெயரும் போது அவர்களுக்கு உருவாகும் அடையாளச் சிக்கல், மற்றவர்கள் தங்களை துன்புறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் தொடர்ந்து பயணிக்கிறது.  

 

தனது தந்தை  அமெரிகோவின் மேல் கொள்ளும் பாசத்தைப் பார்த்து பொறாமைப்படும் லூசியோவுடன் முதலில் அமெரிகோ மோதலில் ஈடுபடுகிறான். பிற்பாடு நண்பர்களாக இணைகின்றனர்.

 

அல்சைடின் குடும்பத்தினர் அமெரிகோவை அடுப்பில் ரொட்டி சுட அழைக்கும்போது, ​​அவர்கள் தன்னை அடுப்பில் வைத்து  சமைக்க போகிறார்கள் என்று அஞ்சுகிறான். பிற்பாடு நம்பிக்கை கொண்டு அக்குடும்பத்துடன் மகிழ்ச்சியில் வாழ ஆரம்பிக்கிறான்.  அவனது வளர்ப்பு தாய்  கோதுமை அறுவடையின் முடிவில் வீட்டிற்குச் செல்வதாக உறுதியளிப்பது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுக்கிறது.  


 

உங்கள் கருணை தேவை இல்லை என ஒரு பெண் குழந்தை வளர்ப்பு பெற்றோரிடம் சொல்வதும்,  எங்களை  உங்கள் இரக்கத்தால் தான் தத்து எடுத்து வளர்க்கிறீர்களா என்று கேட்பதும் மிகவும் முக்கிய பகுதி. தன்மானமுள்ள குழந்தைகள் இரக்கம், கருணையை விட  மனித நேயம், மனித உரிமையே விரும்புகின்றனர் எனச் சொல்லும் திரைப்படம் இது.

 

அமெரிகோ பள்ளியில் படிக்கிறார், அங்கு அவன் தெற்கத்தியன் என்பதால்  கேலிக்கு உள்ளாகிறான், அதே நேரத்தில் லூசியோவால் பாதுகாக்கப்படுகிறான்.  ஒரு மே தின விழாவில், லூசியோ தனது தாயைப் பற்றி கேலி செய்தான் என்பதாl  அமெரிகோ, இதனால் அமெரிகோ லூசியோவுடன் மல்லுக்கட்டி சண்டையிடுகிறான், இந்நிலையில் தனது வலர்ப்பு தாயை தேடி வரும் போது ஆணாதிக்கவாதியான சக ஊழியரால் டெர்னா தாக்கப்படுவதைக் ண்டு கலங்குகிறான். தனது தாய் என்றால் திரும்ப அடித்து இருப்பாள் என்று தைரியம் சொல்கிறான்.

 

1994 ஆம் ஆண்டில், தற்போது வெற்றிகரமான வயலின் கலைஞராக இருக்கும் ஒரு வயது வந்த அமெரிகோவுக்கு தனது தாய் அன்டோனியெட்டாவின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. சொந்த ஊர் நேபிள்ஸுக்கு வந்த அவர், தனது பழைய வயலின் தனது வீட்டில் இருப்பதை  கண்டுபிடித்து, வளர்ப்பு தாயிடம் போக அனுமதித்த தாயை எண்ணி கண்ணீர் விடுகிறான்.


இதில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகார்களூம் சிறப்புற தத்துவரூபமாக நடித்துள்ளனர்.  
இந்தப் படம் அக்டோபர் 20, 2024 அன்று 19வது ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  இது டிசம்பர் 4, 2024 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியிடுள்ளது.