போர்த்துகீசியர்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கி, தெற்கே முனை (Cape of Good Hope) வழியாக இந்தியா வந்தடைந்தனர் .
இந்தச் செயற்பாடு 1415 ஆம் ஆண்டில் மொராக்கோவின் செட்டா நகரை கைப்பற்றியதன் மூலம் தொடங்கியது. 1420-களிலும் 1430-களிலும் போர்த்துகீசியர்கள் மடெய்ரா மற்றும் அசோர் தீவுகளில் குடியேற்றம் செய்ய ஆரம்பித்தனர். 1434-இல் ஆபத்தான கேப் போஜடார் முனையைச் சுற்றிப் பயணம் சென்றனர். 1480-களில் முன்னேற்றம் அடைந்து, 1488-இல் பார்தலோமியு டயாஸ் முனையைச் சுற்றிச் சென்று கொண்டு இருந்தனர். அதன் பின் சிறிது காலம் அமைதியாக இருந்தனர்.
அரசர் உடனடியாக வாணிபத்தையும் எதிர்கால கடற்பயணங்களையும் ஊக்குவிப்பதற்காக லிஸ்பனில் பெருமளவிலான பொது நிர்வாகப் பணிகளை ஆரம்பித்தார். இரண்டாவது கடற்பயணத்திற்கான பயணம் கப்ரால் தலைமையில் வேகப்படுத்தப்பட்டன; அவர் 1500 மார்ச் மாதத்தில் 13 பெரிய கப்பல்கள் மற்றும் 1200 பேருடன் புறப்பட்டார்.
லிஸ்பனின் புறநகரப் பகுதியில், இந்தியாவிற்குச் செல்லும் கப்பல்கள் புறப்பட்ட டாகஸ் நதிக்கரையில் 1499 இறுதியில் மிகப்பெரிய ஜெரோனிமோஸ் மடாலய கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த மடாலயம் பூரணமாக முடிவடைய 50 ஆண்டுகள் எடுத்தது என்பது பயணத்திn நம்பிக்கையும் ஆனந்தமும் தெளிவாகக் தெருவிக்கின்றன . அந்த மடாலயம் எழுப்பப்பட்ட பகுதி பெலெம் (பெத்லகேம்) என அழைக்கப்பட வேண்டிம் என அறிவிக்கப்பட்டது. அங்கேயே போர்த்துகீசிய பேரரசு பிறந்ததாகக் கருதப்பட்டது.
வரலாற்றாசிரியர்கள் நீண்ட காலமாகவே இந்தக் கடற்பயணங்களின் காரணங்களைப் பற்றி விவாதித்து வருகின்றனர். மேற்கிந்திய ஆப்பிரிக்கக் கரையை அடைய போர்த்துகீசியர்கள் கிட்டத்தட்ட நூற்றாண்டுக்காலம் செலவிட்டுள்ளனர். மேலும் இந்தப் பயணத்தை வேறு எந்த ஐரோப்பிய சக்தியும் அல்லாமல் போர்த்துகீசியர்கள்தான் மேற்கொண்டுள்ளார்கள்.
இதற்கு பதில் என ஒரு சம்பவத்தை குறிப்பிடுகின்றனர். காலிக்கட்டில் வாஸ்கோ ட காமாவின் குழுவில் ஒருவரிடம்
"உங்களை இங்கு கொண்டு வந்தது என்ன?" என்று கேட்கப்பட்டபோது
அவர் அளித்த பதில்
“நாங்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் மசாலாவைத் தேடிவந்தோம்.”
போர்த்துகீசிய அரசர்கள் செய்த பெரும்பாலான செயல்களையும் “இறைவனைச் சேவிப்பதற்கும் தமக்கே லாபம் சம்பாதிப்பதற்குமானதாகவே இருக்கிறது என விளக்கி உள்ளனர்.
போர்த்துகலின் மிகப்பெரிய கவிஞரான லூயிஸ் டி காமோயிஸ் தனது தேசியக் காவியமான லூசியாட்ஸ் படைப்பில் இதையே கூறுகிறார்:
"முன்பு எவரும் கடந்து செல்லாத பெருங்கடலை நாம் கடந்தோம், இந்தஸைத் தேடுவதற்காக. எங்கள் நோக்கம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதே." (வில்லியம் சி. அட்கின்சன் மொழிபெயர்ப்பு, The Lusiads, பெங்குவின், 1952, பக்.166).
வரலாற்று எழுதுதல் எப்போதும் அந்நேரத்தின் தேவைகளையும் மனோபாவத்தையும் பிரதிபலிக்கிறது. அதனால் தான் 1955 முதல் 1985 வரை போர்த்துகீசிய கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் பொருளாதார நோக்கங்களால் நடத்தப்பட்டதாகவே விளக்கப்பட்டன.
எனினும் சில அம்சங்கள் தெளிவாகத் தெரிகின்றன. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசிய விரிவாக்கத்தின் முக்கிய காரணம் உணவுத் தேடலாகும், ஏனெனில் போர்த்துகல் எப்போதும் தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை கொண்ட நாடாக இருந்தது. இதனால் அசோர் Portugal Azores மற்றும் மடெய்ரா தீவுகளில் Madeira Island குடியேறினர். அங்கு தானியமும் சர்க்கரையும் மிக விரைவாகப் விவசாயம் செய்யப்பட்டது. அதேபோல் வட ஆப்பிரிக்காவில் போர்த்துகீசியக் குடியிருப்புகளில் பெருமளவில் தானிய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. மேலும் புதிய மீன்பிடித் தளங்களைத் தேடுதல் என்பதிலும் வெற்றி கண்டனர். இது அவர்கள் உணவு தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை; கடற்படை பயிற்சிக்கும் பெரிதும் உதவியது. அரசியல் கட்டாயங்களும் இருந்தன.
போர்த்துகலிலும் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் நிலப்பிரபுக்களின் வருவாய் குறைந்து கொண்டிருந்தது. “ஃபீயூடலிசத்தின் நெருக்கடியிலிருந்து” வெளியேறும் ஒரு வழியாகக் அதிகாரத்தில் குறைவாகப் பிறந்தவர்கள், இளைய மகன்கள், உரிமையிழந்த அரசுவாசிகள் போன்றோருக்கு அட்லாண்டிக் தீவுகளில் நிலம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு அங்கு சாம்ராஜ்ய மகிமை, வீர பட்டங்கள் போன்றவற்றைப் பெறும் வாய்ப்பும் கிடைத்தது.
வணிகம் வளர வளர தங்கத்தின் தேவையும் உருவானது. 1450-களிலிருந்து மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து பெருமளவில் தங்கம் கொண்டு வந்தனர். சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியபோது தொழிலாளர்களின் தேவையும் அதிகரித்தது. மேற்கு ஆப்பிரிக்கா அடிமைகளின் முக்கிய ஆதாரமாக மாறியது. 1443-க்குப் பிறகு இவர்கள் அட்லாண்டிக் தீவுகளுக்கும் போர்த்துகலுக்கும்கூட பெருமளவில் கொண்டு வரப்பட்டனர்.
16ஆம் நூற்றாண்டு போர்த்துகீசிய பேரரசின் முக்கிய அடையாளமாக தேவையாக மசாலா மாறியது. 1470-களுக்கு முன் ஆசிய மசாலாவைத் தேடிப் பயணிக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை, ஏனெனில் அக்கால ஐரோப்பா பாரம்பரிய வழியான சிவப்பு கடல் வழியே அலெக்சாண்ட்ரியா, அங்கிருந்து வெனிஸ் வரையிலான வணிகப் பாதை மிகவும் சுலபமாக திற்ந்து விடப்பட்டு இருந்தது.
15ஆம் நூற்றாண்டில் போர்த்துகல் சிறியதும் வறியதுமான நாடாக இருந்தது. ஆனால் மக்கள் தொகை ஒரு மில்லியனுக்கும் குறைவாக இருந்ததால், கிராமப்புற மக்கள் எளிதாக நகரங்களில் குடியேறினர். இந்த நகர இடம்பெயர்வு நிலத்தில் இருந்த அரசவாசிகளின் (nobles) அதிகாரத்தை மேலும் பலவீனப்படுத்தியது.
வேலைக்காரர்களின் பற்றாக்குறையே அல்லாமல், போர்த்துகலை 1385 முதல் 1580 வரை ஆட்சி செய்த அவிஸ் order-of-avis அரச குடும்பத்துடன் ஒப்பிடுகையில் உண்மையில், அரசவாசிகள் பின்தங்கிய நிலையிலும் சிக்கிக் கொண்டனர்.
1385 ஆண்டில் போர்த்துகீசிய மன்னன், கஸ்டீலியர்களின் தாக்குதலை வெற்றி கொண்டார், இதன்மூலம் புதிய வம்சத்தை நிறுவினார். பெரும்பாலான அரசவாசிகள் வெளிநாட்டவர்களின் பக்கம் நின்றதால், அவர்கள் தங்களின் தவறான தேர்வுக்காகத் தூக்கிலிடப்பட்டனர் அல்லது துரத்தப்பட்டனர். இதனால் போர்த்துகீசிய அரசவாசிகள் அரசருக்கு கீழ்ப்படிய வேண்டிய தவிர்க்க முடியாத சூழலிலும் நெருக்கடியை எதிர்கொண்டனர். இந்த அடக்குமுறையை 1484 இல் அவர்கள் வலுவாக உணர்ந்தனர்; அப்போது மிகப் பெரிய அரசவாசியான பிரகன்சா டியூக், துரோக குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார். எனவே விரிவாக்கமும், புதிய நிலங்களும், புதிய மகிமைப் பாதைகளும் இயற்கையாகவே அவர்களுக்கு ஈர்ப்பாக இருந்தன.
டி. ஜோவான் I (1385–1433) என்பவரின் இளைய மகனான “நாவிகேட்டர்” இளவரசர் ஹென்றி என்ற உருவம் நீண்ட காலமாகவே ஆதிக்கம் செலுத்தி வந்தது. செவுட்டாவில் வீரப் பட்டம் பெற்றார். தனது வாழ்நாளை முழுவதும் முஸ்லீம்களை ஒடுக்கும் “சிலுவைப் போர்” என்பதை கண்டுபிடிப்பதற்கு செலவிட்டார் என்று கூறப்படுகிறது. நாட்டின் தென்மேற்குத் தூரமான சாக்ரெசில், அவர் ஒரு கடற்படை மற்றும் வழிகாட்டுநர் பள்ளியை நிறுவி, மேற்கிந்திய ஆப்பிரிக்கக் கரைக்கு மீண்டும் மீண்டும் பயணங்களுக்கு அனுப்பினார். அவர்களின் படகுகளின் பறக்கும் திரைகளில் சிலுவையின் சின்னம் கண்ணுக்குத் தெரியாமல் மறையும் வரை அவர் கவனித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் அந்த இளவரசர் பெரிதாகக் கற்றவர் அல்ல; மேலும் அவர் வழிகாட்டிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் “பள்ளி” ஒன்றைத் தொடங்கவில்லை என்பதையும் குறிப்பிடு கின்றனர்.. எனினும் அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களைப் போலவே அவருக்கும் போர்த்துகலில் பெரிய நிலங்களும் பொருளாதார நலன்களும் இருந்தன சோப்புத் தயாரிப்பில் அவர் ஒரே உரிமையைப் பெற்றிருந்தார் பயணங்களுக்கு அவர் அளித்த ஆதரவின் பின்னணியில் மத அல்லது ஆன்மீகக் கூறுகள் இருந்திருக்கலாம்; ஆனால் தங்கம், அடிமைகள் போன்றவற்றின் இறக்குமதியிலிருந்து அவர் மிகுந்த லாபம் பெற்றார். இங்கேயும், பொருளாதார நோக்க ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
எதுவாக இருந்தாலும், இளவரசர் ஹென்றியின் நடவடிக்கைகள் ம்ற்றும் கண்டுபிடிப்புகளில் அரசின் மையப் பங்கு uண்டு என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றன: . போர்த்துகீசியர்கள் வணிகர்கள் போன்றோர்களுக்கு பணமும் கப்பல்களையும் வழங்கியிருந்தாலும், வழிநடத்தல் மற்றும் உந்துதல் பெரும்பாலும் அரசிலிருந்துதான் வந்துள்ளது. இந்த உந்துதல், 1460 இல் இளவரசர் ஹென்றி இறந்தபிறகு, மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அந்த நேரத்தில் போர்த்துகீசியர்கள் தங்கள் நிலையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கக்கூடியதாக இருந்தது. அட்லாண்டிக் தீவுகள் விளைச்சல்களை வழங்கிக் கொண்டிருந்தன; ஆப்பிரிக்க வர்த்தகம் செழித்து வந்தது.
ஆப்பிரிக்காவின் தென்புற முனை இன்னும் எட்டாக்கனியாகவே இருந்தது. புதிய அரசரான ஜோவான் II (1481–95) ஊக்கப்படுத்துதல் தெற்குத் திசையில் மேலும் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது.
1469 ஆம் ஆண்டு துவங்கியே வணிகர்களுக்கு பரந்த அளவிலான சலுகை வழங்கப்பட்டு வந்துள்ளது. தங்கம் மற்றும் அடிமை வர்த்தகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கான தனியுரிமைக்குப் பதிலாக, மேற்கிந்திய ம்ற்றும் ஆப்பிரிக்கக் கரையை ஆராய்ந்து கண்டுபிடிக்க ஆண்டுக்கு 100 லீக்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வணிகரின் லாபத் தேடலும், அரசின் விரிவாக்கத் திட்டங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இருந்தன. போர்த்துகீசிய கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்தையும் வெற்றியையும் விளக்குவதற்காக வரலாற்றாசிரியர்கள் பல துணை காரணிகளையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஐரோப்பாவின் தென்மேற்குத் தூரத்தில் போர்த்துகல் அமைந்திருப்பதால் சிறிய அளவில் மட்டுமே முன்னுரிமை கிடைத்திருக்கலாம். போர்த்துகல் கிட்டத்தட்ட 15ஆம் நூற்றாண்டு வரை அமைதியாக இருந்தது; அதன் சக்திகளை விரிவாக்கத்திற்குச் செலுத்த முடிந்தது. ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் போலவே, கண்டுபிடிப்பு, வெளிநாடு பயணம் ஆகிய எண்ணங்கள் பொதுவாகப் பரவலாக செலுத்த பட்டன; சில போர்த்துகீசியர்களுக்கு கடலோடிகளாக இருந்த பாரம்பரியமும் இருந்தது; அது கடற்கரை மீன்பிடி மற்றும் வட அட்லாண்டிக்கிலும் கூட மிகுந்த தூரம் செல்லும் கடலோட்ட அனுபவத்திலிருந்து வந்தது.
ஆனால் கடலோடிகளின் இனமாகக் கருத இயலாது பெரும்பாலான போர்த்துகீசியர்கள் கடலைப் பற்றிய எந்த அறிவும் இல்லாத விவசாயிகளே. 1415 ஆம் ஆண்டு செஉட்டாவைப் பிடிக்கச் சென்ற போர்த்துகீசியக் கப்பற்படைக்கு, ஜிப்ரால்டர் நீரிணையை கடப்பதிலேயே பெரிய சிரமம் ஏற்பட்டது. அதுவே அப்போது அவர்களுடைய கடல் வழிகாட்டும் திறமையின் நிலையைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. ஆனால் விரைவில் அது மாறியது. போர்த்துகீசியர்கள் கப்பல்களிலும் வழிகாட்டும் நுட்பங்களிலும் சோதனைகள் செய்து, அவற்றை மேம்படுத்தி, அறியாத கடல்களில் தெற்கே ஆழமாகச் செல்லக்கூடியதாக மாற்றினர்.
15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை போர்த்துகீசியர்கள் சிறிய, சதுரப்பறக்கை கொண்ட, மத்தியதரைக் கடலின் வணிகக் கப்பல்களுக்கு ஒத்த கப்பல்களையே பயன்படுத்தினர். இவை காற்றோட்டத்தோடு செல்ல ஏற்றதாக இருந்தாலும், எதிர்மறை காற்றைச் சந்தித்து போர்த்துகலுக்கு திரும்புவதில் சிரமப்பட்டன.
1440ஆம் ஆண்டு காலத்தில் கரவேல் (Caravel) எனப்படும் கப்பலின் முழுமையான வடிவமைப்பே மிக முக்கியமான முன்னேற்றமாக இருந்தது. இக்கப்பல்களில் பொருத்தப்பட்டிருந்த முக்கோண (lateen) பறக்கைகள் அரபு முறையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை. இதன் நன்மை என்னவென்றால், கப்பல்கள் காற்றைச் சந்தித்தே முன்னேற முடிந்தது; காற்றின் திசையுடன் பயணிக்கவும் முடிந்தது. உண்மையில், 15ஆம் நூற்றாண்டில் மேற்கிந்திய ஆப்பிரிக்கக் கடற்கரை அருகிலும், 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்குக் கரையோரத்திலும், கப்பல்கள் முதலில் சதுரப்பறக்கைகளுடன் (favourable wind-க்கு) பயணித்துள்ளனர், பின்னர் எதிர் காற்றைச் சந்திக்கும்போது lateen அல்லது இரண்டையும் இணைத்த வடிவில் மாற்றிப் பயன்படுத்தப்பட்டன.
வழிகாட்டும் திறமைகளிலும் போர்த்துகீசியர்கள் முன்னேற்றம் கண்டனர்; இது அவர்களுக்கு நிலத்தைத் விட்டு தொலைவில் கடலோடச் செய்ய முடிந்தது. 1456-இல் அவர்கள் குவாட்ரன்ட் (quadrant) எனப்படும் கருவியைப் பயன்படுத்தி நட்சத்திர உயரத்தை அளந்து, அதன்படி அகலாங்கை கணக்கிடத் தொடங்கினர். 1480-களில் சூரியக் கணக்கீடுகளும் மேம்பட்ட அட்டவணைகளும் அவர்கள் அகலாங்கை கணக்கிடும் திறனை மேலும் மேம்படுத்தின. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய வழிகாட்டுதல் பல சமயங்களில் முற்றிலும் வெற்றி—தோல்வி அடிப்படையில் இருந்தது. பல அனுபவமிக்க பழைய கடலோடிகள் புதிய கருவிகளைப் புறக்கணித்து, காற்றின் தன்மை, அலைகள், கடலோட்டத்தின் இயல்பு ஆகிய தங்களின் அனுபவங்களை மட்டுமே நம்பி வழி கண்டறிந்தனர்.
உண்மையில், “மதமே காரணமாகக் கூறப்பட்டாலும், தங்கமே உண்மையான நோக்கம்” என்பதுதானா? அல்லது “செல்வத் தேடலே கண்டுபிடிப்பை உருவாக்கியது. அதன் வெளிப்படையாக அது ஆன்மாக்களுக்கான ஒரு சிலுவைப் போராகக் கூறப்பட்டது; ஆனால் போர்த்துகீசியர்கள் தேவாலயங்களை அமைக்கவில்லை; அதற்குப் பதிலாக...” அவர்கள் பாரக்கூன்களில் (அடிமைகளை அடைத்து வைக்கும் கூடங்களில்) அடிமைகளை வைக்காமல், ஆன்மாவுகளை அடிமையாக்காமல் மதமாற்றம் செய்திருந்தால், அவர்கள் உண்மையாக மதபரப்புதலில் இருந்தார்கள் என்று நம்பப்பட்டிருக்கலாம். ஆனால், மிஷனரி வேலை அடிமை கடத்தலுக்கு அரை நூற்றாண்டுக்குப் பிறகே வந்தது.
இன்னொரு பார்வையில் கண்டால் 15ஆம் நூற்றாண்டின் மக்களுக்கு மதம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து பார்க்கும் வழக்கமில்லை போர்த்துகீசிய அரசர்களுக்கு “இறைவனைச் சேவித்தல்” மற்றும் “தமக்கே லாபம் சம்பாதித்தல்” ஒன்றோடொன்று முரணானவை என்று இருக்கவில்லை.
1565 ஆம் ஆண்டு, மன்னர் டி. செபாஸ்டியன், கோவாவில் இருந்த வைஸ்ராயை இந்தோனேஷியாவின் அம்போன் தீவில் கிறிஸ்தவத்தை ஊக்குவிக்கும்படி அறிவுறுத்தினார். ஏனெனில், “இது அந்த நாட்டை பாதுகாப்பதற்கான முக்கியமான வழியாகவும், அங்கிருந்து கிடைக்கும் லாபங்களை அதிகரிக்கக் காரணமாகவும் இருக்கும்” என்று நம்பினார் எனவே, பொருளாதார நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது கூட, இந்தக் கடிதத்தில் வெளிப்பட்டிருக்கும் இறைவன் (God), அரசாட்சி (Caesar), செல்வம் (Mammon) ஆகிய மூன்றின் சிக்கலான இணைப்பை கண்டு உணரலாம் .
போர்த்துகீசியக் கண்டுபிடிப்புகளைப் பற்றி ஆடம் ஸ்மித்தின் கூற்றுப்படி “அமெரிக்காவின் கண்டுபிடிப்பும், தொடுப்பு முனை (Cape of Good Hope) மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு சென்ற பாதையின் கண்டுபிடிப்பும், மனித குலத்தின் வரலாற்றில் பதிவான மிகப்பெரிய, மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள் ஆகும். என்கிறார்.
1487–1500 காலப்பகுதியில் நடந்த போர்த்துகீசியர்களின் கடல்சார் சாதனைகளுக்கு மரியாதை செலுத்த வேண்டி உள்ளது. வாஸ்கோ ட காமா தனது இரண்டு வருட 1497–99 கடற்பயணத்தில் இரண்டு முறை தொடர்ந்து 90 நாட்கள் நிலம் தெரியாமல் கடலில் பயணித்து உள்ளார். 1500 இல் கப்ரால், ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு பிரேசிலை கண்டுபிடித்தார், பின்னர் ஆப்பிரிக்காவையும் கடந்து ஆசியாவிற்குச் சென்றார்.
இந்தப் பயணங்களை முற்றிலும் புதிதானவையாகவும், தனித்துவமிக்கவையாகவும் பார்க்கக் இயலாது. ஏனெனில், போர்த்துகீசியர்களும் மற்ற ஐரோப்பியர்களும் பல நூற்றாண்டுகளாகவே வணிகம் செய்தும், ஆராய்ச்சிப் பயணங்களையும், நீண்ட கடல்பயணங்களையும் மேற்கொண்டு வந்தனர். அதற்கு முன் ரோமப் பேரரசின் உச்சகட்டத்தில் அதன் வணிகர்கள் அரேபியக் கடலில் பரவலாக வணிகம் செய்தனர். பின்னர் மார்கோ போலோ போன்ற ஐரோப்பியர்கள் நிலம் வழியாகவும் கடல் வழியாகவும் மிக நீண்ட தூரங்கள் பயணித்தனர். நோர்ஸ்மென் மற்றும் வைகிங்குகள் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வட அமெரிக்காவில்கூட குடியேற்றம் செய்தனர்.