Showing posts with label Culture. Show all posts
Showing posts with label Culture. Show all posts

2 Nov 2024

நாடார் - நீதிக் கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம்


பிராமண ஆதிக்கம் பலரை காங்கிரசில் இருந்து வெளியேற வைத்தது. சௌந்திர பாண்டியன் மற்றும் வி.வி ராமசுவாமியால் ‘ தென் இந்திய சுதந்திர அமைப்பு’ துவங்கப்பட்டது. பிற்காலம் இது நீதிகட்சியாக உருமாறினது.

ஆங்கிலேயர்களுடன் இருந்த நட்புறவுடன் நீதிக்கட்சிக்கும் 1920 ல் தங்கள் ஆதரவு கரத்தை நீட்டியது நாடார் மகாஜன சங்கம். வடக்கு திருநெல்வேலி, ராம்நாடு மற்றும் மதுரை போன்ற பகுதியில் உள்ள நாடார்கள் நீதிக்கட்சிக்கு தக்கள் ஆதரவை தெரிவித்த போது திருநெல்வேலியில் நாடார் சங்கம், வெள்ளாளர்களின் ஆதிக்கத்தில் இருந்த நீதி கட்சி பக்கம் வர விரும்பவில்லை. வணிகர்கள் ஆன நாடார்கள் அதிகமாக வரி விதித்த ஆங்கிலேய அரசை எதிர்க்கும் விதம் காங்கிரஸ் கட்சிக்கு சேரவே விரும்பினர். ஆனால் அரசு வேலை, மிஷினறிகள் தயவை பெற்ற கிறிஸ்தவ மதம் தழுவிய நாடார்கள் ஆங்கிலேய அரசு மேல் நம்பிக்கை கொண்டு இருந்தனர்.
அதனால் நீதிக் கட்சியில் இருந்தவர்கள் சமூக சமுத்துவம் சுயமரியாதை கோயில் நுழைவு என மும்முரமாக இருந்த போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எஸ்.டி ஆதித்தன் மற்றும் கெ.டி கோசல்ராம் போன்றவர்கள் அரசியல் பயணத்தில் வேகமாக முன்னேறினர்.
நீதிக் கட்சியின் பரப்புரை 1930 துவங்கி 1936 வரை மிகவும் வேகமாக இருந்தது. சௌந்தர பாண்டியன் , வி.வி ராமசாமி, எம்.எஸ். பி செந்தில்குமர நாடார் மற்றும் உத்தண்டன் பணிகள் நிமித்தம் விருது நகர் பகுதியில் நீதிக் கட்சி வலு பெற்றது.
வி.வி ராமசுவாமி விருதுநகர் நகரசபையின் 1931 துவங்கி 1938 வரை தலைவர் ஆக இருந்தார். 1935 மார்ச்சு 31 ஆம் தேதி தென் இந்திய சுதந்திர அமைப்பு விருதுநகரில் ஒரு கூட்டம் நடத்தின போது நீதிக் கட்சி முன்னின்று நடத்தியது. அக்கூட்டத்தில் வைத்து நீதிக் கட்சி அரசியல் செயல்பாடுகளிலும் சமூகப்பணி சார்ந்த பணியில் சுயமரியாதை இயக்கம் இ.வி ராமசாமி நாய்க்கர் தலைமையில் தொடர வேண்டும் என்று வி.வி ராமசுவாமி பரிந்துரைத்தார். இதே கூட்டம் பல இடங்களில் நடைபெற்றது.
1935 ல் அருப்புக் கோட்டையில் விவி ராமசுவாமி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வைத்து மாத இதழான ’ விடுதலையை ‘ தினப்பத்திரிக்கையாக மாற்ற பரிந்துரைத்தனர்.
1936 ல் திருச்சியில் வைத்து பழனிச் சாமி பிள்ளை வீட்டில் நடைபெற்றது.
1944 ல் சேலத்தில் நீதிக் கட்சி இ.வி ராமசாமி மற்றும் சி என் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது, அந்த கூட்டத்தில் வைத்து தான் திராவிட கழகம் என பெயர் மாற்றம் பெற்றது.
வி.வி ராமசாமியும் சௌந்திரராஜன் இந்த பெயர் மாற்றத்தில் ஒப்புறவு ஆகவில்லை. ஆங்கிலேயர்கள் கொடுத்த பதவியில் இருந்து அனைவரையும் ராஜினாமை செய்ய இ.வி ராமசாமி சொன்னதுடன் ஆங்கிலேயர்கள் கொடுத்த மரியாதை பெயர்களையும் தவிர்க கூறினார். ஆனால் விவி ராமசுவாமி தனக்கு கிடைத்த ராவு பகதூர் என்ற மரியாதை பெயரை களையவில்லை. மேலும் விருதுநகர் நகரசபையின் தலைவர் என்ற பதவியை துறக்கவில்லை.
அதே போன்று சௌந்தர பாண்டியன் மதுரை மாவட்ட அமைப்பின் தலைவர் பதவியில் இருந்தும் விலகவில்லை. ஆனால் திராவிட கழகத்தில் இருந்து விலகியதுடன் நாடார் நீதி கட்சியை சேர்ந்து இருந்தவர்கள் ‘ சுயமரியாதை லீக்’ என்ற அமைப்பை துவங்கினர். அதன் தலைவர்களாக சௌந்தர பாண்டியன் விவி ராமசுவாமி திருமங்கலம் சவுந்தர பாண்டியன் தூத்துக்குடி எம்.எஸ் சிவசாமி போன்றோர் தலைவர்களாக ஆரம்பித்தனர். ஆனால் அந்த அமைப்பு நீடித்து இருக்கவில்லை.
1952 வரை விருதுநகர் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தது. காமராசர் முதலமைச்சர் ஆன பின்பு தான் காங்கிரசில் சேர ஆரம்பித்தனர்.
சுயமரியாதை இயக்கம் சவுந்தர பாண்டியன் மற்றும் விவி ராமசுவாமியால் 1925 ல் துவங்கப்பட்டது. ஜாதியற்ற சமூகம் அனைவரும் ஆலயம் நுழைதல் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது.
1929 ல் செங்கல்பட்டில் நடந்த முதல் கூட்டத்திற்கு சௌந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அனைவரும் தங்கள் பெயருடன் இருக்கும் ஜாதி அடையாளத்தை களைய வேண்டும் என முடிவு எடுத்து இருந்தனர்.
1929 ல் எ.வி ராமசாமி தலைமையில் திருநெல்வேலியில் வைத்து நடத்தப்பட்டது.
ஈரோட்டில் 1930 லும் நடந்தேறியது.



அடுத்த சுயமரியாதை கூட்டம் இ.வி ராமசாமி தலைமையில் விருது நகரில் வைத்து நடத்த முடிவெடுத்து இருந்தனர்.
நாடார்கள் தங்களுக்கு தானே ஏமாற்றிக்கொள்ளும் இயக்கம் சுயமரியாதை இயக்கம் என்று இந்து பத்திரிக்கை எழுதியது.
1939 ல் அனைவரும் ஆலயம் செல்லும் விதம் ஆலயங்கள் திறக்கப்பட்டு இருந்தது.
தங்களுடைய சமூக வளர்ச்சிக்கு நீதி கட்சி உதவ வில்லை என பல நாடார்கள் நீதிக் கட்சியில் இருந்து விலகி பெருவாரி நாடார்கள் காங்கிரசுடன் தேசிய காங்கிரசில் பணியாற்ற ஆரம்பித்தனர். தேசிய காங்கிரசிற்கு வலு சேர்க்கும் விதம் தேசிய நாடார் கூட்டமைப்பு 1940 களில் துவங்கி இருந்தனர்.
பிராமண பூஜாரிகளை தங்கள் திருமணம் நடத்தி வைக்க அனுமதிப்பது இல்லை என முடிவுடன் இன்னொரு பக்கம் சுயமரியாதை கட்சி கொள்கையும் வளர்ந்தது. குருக்களை வைத்து செய்யும் பல ஆசாரங்களை நாடார்கள் தவிர்க ஆரம்பித்தனர்.
25 ஜூன் 1933 ல் திருப்புவனத்தில் சௌந்தர பாண்டியன் மற்று வி,வி ராமசுவாமி தலைமையில் முதல் விதவை மறுமணம் பாலம்மாள் மற்றும் ரத்தினம் திருமணம் நடந்தது. 1967 ல் சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கியது . காங்கிரஸ் முன்னெடுத்த ஆலய நுழைவு சட்ட வரையரைக்கு நாடார்கள் 50 வருடங்களாக ஏற்பட்டு இருந்த போராட்டம் உருதுணையானது.


வைக்கம் போராட்டத்தில் சிலோண் நாடார் இளைஞர்களும் பங்கு பெற்றதாக குறிப்பிடுகின்றனர்.
பக்கம் 169 முதல்182 the history of the nadars prof. c Sarada Hardgrave L

1 Nov 2024

கமுதி கலவரம் 1898

 கமுதி கலவரம் 1898

சட்டம் XX- 1863 ப்படி கோயில்களை பராமரிக்கும் பணியை தனியாருக்கு அல்லது அமைப்புகளுக்கு கொடுக்கும் முடிவை ஆங்கிலேய அரசு எடுத்தது. தஞ்சாவூர் பகுதியில் பொறையார் நாடார்களால் கோயில் நிற்வாகத்தின் பொறுப்பை ஏற்க இயன்றது. ஆனால் தென் தமிழகம் திருநெல்வேலி , விருதுநகர் சங்கரன்கோயில், சாத்தூர், மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அவ்வகை சமூக சூழல் இருக்கவில்லை.
தென் பகுதியில் இந்து நாடார்கள் கிறிஸ்தவம் தழுவ இதுவும் ஒரு காரணமாக மாறினது. 1899 ல் திண்டுக்கல், மற்றும் 1901 விருதுநகரில் கிறிஸ்தவ மதமாற்றத்தை லட்சியமாக கொண்டு கிறிஸ்தவ பங்குகள் உருவாக ஆரம்பித்தது. ராம்நாடு மற்றும் மதுரையில் கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக சூழல் நிலவியது.
திருச்செந்தூர் கோயிலில் நுழைந்தனர் என்ற காரணம் கூறி பிராமணர்கள் மற்றும் வெள்ளார்கள் ஏழு நாடார்களுக்கு எதிராக ஒரு வழக்கை 1872 ல் தொடுத்தனர். அப்போதைய நீதிபதி எ.டி அருண்டெயில், கோயில் கொடிமரம் வரை வண்ணார், மறவர், வன்னியர் மற்றும் நாசுவர் செல்லலாம் என்றால் நாடார்களும் அதுவரை செல்லலாம். நாடார்கள் சென்றதனால் மட்டுமே அசுத்தமாகாது என்று கூறி ஏழு நாடார்களையும் விடுதலை செய்தார். (Wide Appendix XXV)
இரண்டு வருடம் கடந்த நிலையில் 1874 ல் மூக்க நாடார் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார் எனக்கூறி அவர் கழுத்தை பிடித்து வெளியேற்றினர் கோயில் நிர்வாகிகள்.
1876 ல் அதே மாதிரி திருதங்கள் கோயிலில் நுழைந்தற்காக தண்டம் கட்ட வைக்கப்பட்டனர் நாடார்கள். இன்னிலையில் அருப்புக்கோட்டை நாடார்கள் 1877 ல் தங்களுக்கான அமுதலிங்கேஸ்வர் கோயிலை கட்டி வந்தனர். ஆனால் கோயில் கட்டுவதற்கு எதிராக ராம்நாடு ஜமீந்தார் 1893 ல் மானமதுரை வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து கோயில் வேலையை நிறுத்தி வைத்தார். அதன்பின் 1896 ல் அதே ராம்நாடு ஜமீன்கள் கோயில் பணியை தொடரவும் அனுமதித்தனர்.
இதன் மத்தியில் இருளப்பன் நாடார் ஆறு பேருடன் சேர்ந்து காவடி எடுத்து கமுதியில் உள்ள மீனாக்‌ஷி சுந்தர்ரேஸ்வர் கோயிலுக்குள் நுழைந்து கோயில் பிரசாதம் கேட்க பூஜாரிகள் கொடுக்க மறுக்க அவர்களே எடுத்து கொண்டார்கள். மேலும் கோயிலின் கற்பகிரகத்தில் பிரவேசித்து சாமியை தொட்டு கும்பிட்டார் என்ற குற்றசாட்டு எழுந்தது. இவர்கள் தொட்டதால் கோயிலின் பரிசுத்தம் கெட்டு விட்டதாக கூறினர் மறவர்கள். மூன்று வேளை நடக்கும் பூஜை நிறுத்தி வைக்கப்பட்டு, கோயிலை சுத்தப்படுத்தும் பூஜையும் செய்தனர். கோயிலின் மதிப்பை கெடுத்து விட்டார்கள் என்ற காரணம் கூறி ராமநாதபுரம் மன்னர் இழப்பீடாக 2508 ரூபாயும், மரியாதையை கெடுத்ததற்காக 1500 ரூபாயும், கோயிலை சுத்தப்படுத்த 1000 ரூபாய் என்ற கணக்கில் நாடார்கள் பணம் செலுத்த வேண்டும் என்று பணிக்கப்பட்டது. விசாரணை 140 சாக்‌ஷிகளிடம் மேற்கொண்டனர். விசாரணை முடிவில் 121 பக்கம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிற்பாடு இதை தொடர்ந்து நடந்த கமுதி கலவரத்தில் -1898 இருபக்க இன மக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் இரண்டு போலிஸ்காரர்களும் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திற்கு பின் நாடார்கள் தங்கள் மத உரிமையை விட வணிக பலன் பற்றி சிந்தித்து உணர்ந்து செயலாற்ற ஆரம்பித்தனர்.

நாடார்கள்

 கல்லிடைக்குறிச்சி கல்வெட்டில் இருந்து அறிவது 11-13 ஆம் நூற்றாண்டு வாக்கில் நாடார்க்ள் சேர பாண்டிய நாட்டில் அதிகாரிகள் , படைத் தளபதிகள் மற்றும் கணக்கர்களாக இருந்துள்ளனர்.

பாண்டிய மன்னர்கள் தயவில் தென்காசி பக்கம் குடியேறி உள்ளனர்.பாண்டிய மன்னர்கள் வீழ்ச்சிக்கு பிறகு அரச அதிகார வர்கத்தில் இருந்த நாடார்கள் நிலத்தாரர்களாக சுருங்கியது. பாண்டிய ஆட்சியில் நாடார்கள் படைகளை தலைமை தாங்குகிறவர்களாகவும் இருந்துள்ளனர். கயத்தாரில் விஜயநகர பேரரசின் படைத் தலைவர் விஸ்வநாத நாயக்காவுடன் நடந்த போரில் பஞ்ச திருவாசூதி நாடார்கள் பாண்டிய மன்னர்களுக்காக போரிட்டதாகவும் அந்த போரில் தோன்ற பாண்டியர்களுடன் தெற்கை நோக்கி நகர்ந்தனர். இந்த காலயளவில் முதலியார் மற்றும் பிள்ளைமார் இனத்தின் உதவியுடன் நாடார்களை நசுக்கினார் நாயக்கர்கள். நிறைய பேர் கொல்லப் பட்டனர், அடிமைகளாக விற்க பட்டனர். காயல்பட்டினத்தை சேர்ந்த 800 நாடார்கள் மற்றும் கீழக்கரை சீர்ந்த 100 நாடார்களை நடுக் கடலில் தள்ள இஸ்லாமியர்களிடம் கையளிக்கப்பட்டனர். அதில் சிலர் இஸ்லாம் மதம் தழுவி தங்கள் உயிரை காப்பாற்றி கொண்டனர். சிலர் உயிர் பயத்தில் வரண்ட பகுதிக்கு குடி பெயர்ந்தனர். ராமநாதபுரத்தில் குமர வீர மார்த்தாண்ட நாடார் தலைமையில் போராட துணிந்தாலும் ஒடுக்கப்படடனர்.
17 ஆம் நுுற்றாண்டு கடைசியில் சிவகாசியில் இருத்து சில குழு நாடார்கள் திருவனந்த புரம் பக்கம் நகர்ந்தனர். அங்கு வாழை தென்னை விவசாயத்தில் இறங்கினார். சிலர் ஆர்காட் மற்றும் சேலம் பக்கம் தப்பி சென்றனர். அங்கு நாடார் என்ற அடையாளத்தை மறைத்து அங்குள்ள பெருவாரி மக்கள் இனத்தில் செட்டி , கிராமாணி போன்ற அடையாளத்துடன் வாழ முடிவெடுத்தனர்.
தெலுங்கு ஆட்சியாளர்களை பயந்து இன்னும் சிலர் திருசெந்தூர் பக்கம் தேரிக்காடுகளில் அடைக்கலாம் அடைந்தனர். அங்கிருந்த சாணார்கள் இனத்துடன் கலந்து பனை தொழில்கள் மற்றும் கள் வியாபாரத்தில் பிழைத்தனர்.
பிற்பாடு தேரிக்காட்டு பக்கம் இருந்து விருதுநகர் பக்கமும் குடியேறினர். அஞ்சுபத்து நாடார், சித்தன் விளை நாடார், போன்ற அடையாளப் பெயர்களில் வாழ்ந்தனர்.
முத்து கிருஷ்ணபுரம் என்ற காட்டுப்பகுதியில் குதிரை மொழி தேரிப்பக்கம் கிடைத்த 1561 மற்றும் 1639 ஆகள்ண்டு கல்வெட்டுகளில் ஆதிச்ச நாடான், கோவிந்த பணிக்கர் நாடான்,வீரப்ப நாடான், தீத்தியப்ப நாடான், பிச்சை நாடான், அய்யாக்குட்டி நாடான், திக்கெல்லாம்கட்டி நாடான்,நினைத்தடுமுட்டி நாடான், அவதைக்குத்தவை நாடான் குத்தியுண்ட நாடான் போன்ற பெயர்கள் பொறிக்கப்படடுள்ளது.
எலுக்கரை நாடான்கள்
காயாமொழி பக்கம் குடியேறி உள்ளனர். இவர்கள் இதே பகுதியில் இருந்த ஆதித்த நாடார்களிடம் நல்லுறவு பேணவில்லை.
குமுதி, மதுரை,தென்காசி மற்றும் விருதுநகரில் வேம்பார் அய்யனாரை கும்பிடும் வெற்றி நாடங்குளம் நாடார்கள் பரவி உள்ளனர்.
16 ஆம் நூற்றான்டில் தென்காசி பக்கம் இருந்து ஏரல், எப்போதும்வென்றான் பகுதிக்கு குடியேறி உள்ளனர்.
திறமையான வில்லாளி வித்தகர்களாக இருந்த எழுதண்டிக்கரைக்காரர்கள் குறும்பூர் பக்கம் குடியேறி உள்ளனர். இவர்கள் குறும்பூர் நாடார்கள் என்ற பெயரில் குமுதி, அருப்புக்கோட்டை சிவகாசி பக்கம் குடிபெயர்ந்து உள்ளனர்.
11-12 ஆம் நூற்றாண்டில் ஆதித்த நல்லூர் பகுதி சோழர் வசம் இருந்த போது ஆதித்த நாடான் படையில் உயர் பதவியில் இருந்துள்ளார்.சோழர்கள் காலத்தில் தான் ஆதிச்சநல்லூர் என்ற பெயரும் உருவாகி உள்ளது என்கின்றனர். பிற்பாடு 1552-64 களில் பாண்டியர்கள் ஆதிக்கத்தில் வந்த போது ஆதித்த நாடான், கோவிந்த நாடான் போன்ற குடிகள் வருமான வரித் துறையில் முக்கிய இடத்தில் தொடர்ந்து உள்ளது. பிற்காலம் வடுக ஆட்சியாளர்கள் வசம் ஆன போது அவர்களுடனும் இணைந்து பதவிகளில் இருந்துள்ளனர் ஆதித்த நாடான் குடிகள்.ஆட்காட் நவாப் ஆட்சியிலும் வரி வசுுலிப்பாளர்களாக தொடர்ந்தனர். பிற்பாடு ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் ஆதித்த நாடான்கள் தங்கள் அதிகார பிடியை தளர்த்தவில்லை. கிறிஸ்தவம் 18 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவ மத மாற்ற அலையிலும் சிக்கி கொள்ளாது அதிகார நிழலில் இருந்தனர் என்பது முக்கியமானது.

23 Oct 2024

நாடார்களின் இயல்பான உழைக்கும் வாழ்க்கை!

 நாய்க்கர் மன்னர் ஆட்சியில் ஒடுங்கி போன நாடார் இனம், கட்டபொம்மன் ஆட்சியிலும் பல துன்பங்களை சந்தித்தது. தேச-காவல் வரி கொடுக்க மறுத்த காரணத்தால் கட்ட,பொம்மன் ஆட்கள் வாழ்வாதாரமான பனை மரங்களை வெட்டி சாய்த்தனர் மேலும் 1780 ல் ஆதித்தன் நாடாருக்கு எதிராக கட்டபொம்மன் நிலை கொண்டார். இப்படி இருந்த நாடார்கள் நிலையில்; ஆங்கிலேயர்கள் வரவோடு, நல்ல வியாபார காலம் பிறக்க ஆரம்பித்தது. ஆங்கிலேயர்கள் உருவாக்கின நல்ல சாலைகள், பொருட்கள் கொண்டு சென்று வணிகத்தில் ஏற்பட நாடார்களுக்கு உருதுணையானது. அதுவரை வழி கள்ளர்களை பயந்து வணிகம் செய்து வந்த நாடார்கள் பேட்டைகள் அமைத்து தங்கள் வணிகத்தை பெருக்கினர். 1716 ஆம் ஆண்டு வாக்கில் 2000 காளை வண்டிகள் புகையில்லை கருப்பட்டி, பருத்தி போன்ற பொருட்கள் கொண்டு செல்ல ஈடுபடுத்தி உள்ளனர். குமுதி போன்ற இடங்களில் நாடார்கள் மட்டுப்பாவு வீடுகள் அமைத்து வசித்து வந்ததையும் குறிப்பிகின்றனர் ஆய்வாளர்கள். சேலம் கோயம்பத்தூர் என பல் வேறு ஊர்களுக்கு கருப்பட்டி வியாபாரம் செய்யும் வாய்ப்பு பெருகியது.

சின்னன் தோப்பில் இருந்து 1830 ல் பொறையார் ஊருக்கு குடியேறின நாடார் மேற்கொண்ட சாராய வியாபாரம் பக்கத்தது மாநிலம் நோக்கியும் விரிவடைந்தது. ஆங்கிலேயர்களுக்கு கடம் கொடுக்கும் அளவிற்கு வளமாகினர். டானிஷ் அரண்மனையை விலைக்கு வாங்கும் அளவிற்கு வளர்ந்தனர்.
அந்த காலயளவில் நாசரேத் தலையிடமாக கருப்பாட்டி வியாபாரத்தில் முன்னில் இருந்தது.
உறவின்முறை, மூலமாக பல பகுதியில் குடியிருக்கும் நாடார்கள் இனத்தால் இணைப்பை உருவாக்கி ஒரு குறிப்பிடட பணத்தை, நெல் அல்லது தானியம்,( மகிமை) ஒவ்வொரு நாடார் வியாபாரிகளிடம் இருந்து தருவித்து நாடார் இனத்தில் நலிந்தவர்களுக்கு உதவும் படி உடை உணவு கொடுக்கவும் பயன்படுத்தினர். இந்த மகிமை என்ற பணத்தால் குளம், கல்யாண மண்டபம் போன்றவை கட்டி சுயசார்பாக வாழவும் திருவிழாக்கள் கொண்டாடவும் பயன்படுத்தி வந்தனர். 24 கிராம த்தை சேர்ந்த நாடார்களை இணைத்து ஒரு உறவின்முறை என்ற அமைப்பை உருவாக்கி இனத்தால் இணைந்து உதவிகள் செய்து வாழ்ந்தனர். உறவின்முறை என்ற திட்டத்தின் ஊடாக , மதுரை விருதுநகர் அருப்புக் கோட்டை நகர்களை இணைத்து பணி செய்யும் விதம் 1813 ல் ஒரு கட்டிடமும் வாங்கினார்.
வணிக நாடார்கள் ஆங்கிலேய அதிகார வர்க்கத்துடன் இணைந்து வியாபாரத்தில் வளர்ந்தனர் .

இன்னொரு பகுதி மதமாற்றம் மிஷினரிகள் அறிமுகம் என தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வேகத்தில் இருந்தனர்.
நாடார்கள் எந்த சூழலிலும் தங்கள் உழைப்பு , ஒற்றுமை ஊடாக ஒரு மேம்பட்ட சிந்தனையுடன் முன்னேறினர். விடாமுயற்சி, சுயமரியாதைக்கு முக்கியம் கொடுத்தனர். தங்களை பாண்டிய சோழ, சேர ராஜவம்ச கதைகளுடன் இணைத்துக் கொண்டு முன்னேறும் மனநிலையை உருவாக்கி கொண்டனர்.

இவர்களின் இயல்பான சுய மரியாதையை உடைக்கும் விதம் கருணை இரக்கம் உதவி என்ற பெயரில் கால்டுவேல் போன்ற மிஷனறிகள் இவர்கள் வரலாற்றை எழுதி பிதுக்கப்பட்டோம் , ஒடுக்கப்பட்டோம், ஏழைகள், பண்பற்றவர்கள், முரடர்கள். நாடார் இன பெண்கள் மந்த புத்திகள், ஐரோப்பிய நாட்டு கறுப்பினத்தை விட கீழ்மையானவர்கள் என்ற அடையாளத்தை உருவாக்கினார். பிற்பாடு இதை பற்றி கேள்வி எழுந்த போது மதமாற்றியவர்கள் நிலையை இவ்விதம் சொல்லி ஐரோப்பியர்களிடம் இருந்து பண உதவி பெறவே இவ்வாறு கால்டுவெல் கட்டமைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
அருமைநாயகம் போன்ற மதமாறிய கிறிஸ்தவ நாடார்கள் போர் குணம் கொண்டு கால்டுவெல் போன்ற மிஷினறி வரலாற்று ஆய்வாளர் எழுத்தை எதிர்த்தனர்..

கல்வியும் வேண்டும் என்ற நோக்கில் முதல் ஷத்திரியா வித்யா சாலை 1889 ல் நாடார்களால் ஆரம்பிக்கப்பட்டது. நாடார் இனத்தின் தனித்துவமான அடையாளம் சிதைக்க மதமாற்றவும் ஒரு காரணம் என்பதை பிற்பாடுள்ள கிறிஸ்தவ நாடார்கள் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆனால் சில துருப்பிடித்த அரசு பரப்புரை எழுத்தாணிகள், கால்டுவேல் பரப்பிய கருத்தை நாடார்கள் மேல் வைத்து நாடார்களின் இயல்பான உழைக்கும் வாழ்க்கை, மன உறுதி , சுய கர்வத்தை சிதைக்க பார்க்கிறது.
தாங்கள் பண்பற்றவர்கள் முரட்டாள்கள். மிஷினறிகள் வராவிடில் காட்டு வாசிகளாக இருந்து இருப்போம் என நம்ப வைக்க பார்க்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் தான் வியாபாரம் செுய்ய வெளியூர் போயினர் என்ற கட்டுக்கதைகளை அவிழ்து விடுகின்றனர்.
பொதுவாக நாடார் இனம் இந்த பொய் பிரசாரத்தை கண்டு கொள்ளாது தங்கள் உழைப்பில், பிழைப்பில் ஆழ்ந்து வாழ்கின்றனர். ஆனால் சுயநலம் பிடித்த புகழ் வெளிச்சத்தை நாடும் சிலர் இது போன்ற ஆணிகளுக்கு குண்டூசி வேலையும் பார்த்து வருகின்றனர்.
எந்த இனவும் எப்போதும் உயரத்திலும் கீழையும் இல்லை. வரலாற்று சக்கிரம் உயரத்திலும் பள்ளத்திலும் வாழ வைக்கும். கடக்க வைக்கும்.
.
ஆனால் நான் சட்டை அணியவில்லை, மிஷினறி தான் அணிவித்தார்கள் , மிஷினறி தான் கல்வி தந்தார்கள், பிதுக்கப்பட்டோம், ஒதுக்கப்பட்டோம் என்ற அடிமை மனநிலையில் கிடந்தால் முன்னேற்றம் இருக்காது. மற்றவர்களை குற்றம் சொல்லி ஏமாற்றி பிழைக்க வேண்டியது தான். . மன அளவில் அடிமைப்படுத்துவது செயல்களை முடக்குவது அது ஆளும் வர்க்கம் செய்யும் நயம். அவ்வகையில் நாடார்களின் அடிமை மனநிலையை வளர்க்க இன்றைய கிறிஸ்தவமும் துணை போகிறதா என சந்தேகம் கொள்ள வைக்கிறது சில பரப்புரைகள்.
வெள்ளைக்காரன் இந்தியாவை வியாபாரம் செய்து கொள்ளையடிக்க வந்தது போலவே மிஷனரிகள் இங்கு வந்தது மதம் மாற்றவே. அதற்கு இங்கைய பண்பாட்டு தளத்தை மதம் என்ற அடையாளத்தால் பிரிக்க வேண்டும் உடைக்க வேண்டும், மதமாற்றத்தையும் கடந்து சில மிஷனரிகள் மக்கள் பணியில் இருந்தனர் என்பதற்கு சாட்சியம் மர்காஸிஸ் ஐயர், ரேனிஸ் ஐயர் போன்றவர்கள் தான். இவர்கள் பெயர்கள் கொண்டாடுவதை விட நாடார்கள் ஈழத்தில் இருந்து வந்தனர் என்று பண்ட்பாடு- ஜாதி கதை எழுதின கால்டுவெல்லுக்கு முக்கிய பங்கு கொடுக்கும் போது தமிழர்கள் சிந்திக்க வேண்டியது மன, உள்ள வலுவை கொள்கைகளால் உடைக்க பார்க்கின்றனர் இங்கைய அரசியல். அதற்கு துணை போகும் பொய் எழுத்தாணிகள்.
x

The Tinnevelly Shannars என்ற கால்டுவெல் புத்தகம் !

 The Tinnevelly Shannars என்ற கால்டுவெல் புத்தகம் 1849 ல் வெளியானது. சம்ஸ்கிருதம், ஹீப்ரு, லத்தீன் மொழி அறிந்த அருமைநாயகம் (நாடார்) (சட்டாம் பிள்ளை) நாசரேத் பள்ளி முதன்மை ஆசிரியராக அமர்த்தப்படிருந்தவர். பள்ளியில் கற்பித்து கொண்டு இருந்த பல்லர் இன ஆசிரியர் உடன் முரண் கொள்கிறார். அந்த சண்டையில் அருமை நாயகத்தை 1850 ல் பள்ளியில் இருந்து Caemmerer வெளியேற்றுகிறார். இதில் வெகுண்ட மன நிலையில் இருந்த அருமை நாயகம் சென்னையில் வைத்து பிஷப் கால்டுவெல் கையேட்டு பிரதி தின்னவேலி ஷானார் கண்டு மிஷனரிகளின் நாடார் மக்கள் மேலுள்ள காள்ப்புணவு கொண்ட மன நிலை கண்டு மிஷனரிகளுக்கு ஏதிராக திரும்புகிறார். நாடார்கள் சார்ந்து வரலாற்றை விளக்கும் 40 புத்தகங்கள் எழுதி உள்ளார். மிஷனரிகள் எதிர்ப்பால் திருமணம் முடிக்க தடை இருந்த உறவுக்கார பெண்ணை பின்பு மணந்தார். ஏக ரட்சகர் சபை என்ற இந்து- கிறிஸ்தவ சபையை உருவாக்கினார்.

ஜாதிய நோக்கில் மக்களை பிரிப்பதும் கருத்தை உருவாக்குவதையும் கருத்தில் கொண்டு மிஷனரிகளை எதிர்க்கும் நிலைக்கு சில கிறிஸ்தவ நாடார்கள் சென்றனர். முக்கியமாக இங்கிலாந்து பிரதமர் Gladstone ,க்கு தங்கள் கோரிக்கையை அனுப்பினர்.
செந்திநாதர் ஐயரை பயன்படுத்தி நாடார்களுக்கு வேட்டியே கட்ட தெரியாது என்றும் கால்டுவெல் தான் முன்னேற்றினார் என கதைகள் எழுதினர். செந்நிநாதனுக்கு செருப்படி என்று ஞானமுத்து நாடார் பதில் பிரதி அனுப்பினார். ஷானார்கள் ஷத்திரியர்களா? என்ற ஐயர் கேள்விகளுக்கும் பதில் கொடுத்தனர்.
தமிழ் இனத்தில் அதிகம் மதம் மாறினவர்கள் நாடார்கள் ஆனது எப்படி என கேள்வி எழுந்த போது நாய்க்கர் ஆட்சியாளர்களால் தங்கள் தொழிலுக்கு, சமூக நிலைக்கு பிரச்சினை வந்த போது மதம் மாறினர்
சாணா வரியில் இருந்து தப்பிக்க மதம் மாறினர்.
மேலும் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பேட்டைகள்( 1750) தங்கள் வியாபாரத்தை பெருக்க வாய்ப்பு கிடைத்தது.
மேரி பிரகாசம் என்ற ஆய்வாளர் கருத்துப் படி அடிப்படையில் சிறு தெய்வங்களில் நம்பிக்கை வைத்து இருந்த நாடார்கள் மதம், பக்தி என்பதை விட சுயமரியாதை பாதுகாப்பு, சாணாவரி போன்றவற்றில் இருந்து தப்பிக்கவே மதம் மாறினர் என்கிறார். ஆனால் கால்டுவெல் கருத்து ஏழைகள் தங்கள் வறுமையில், அடிமைத்தனத்தில் இருந்து தப்பிக்க மதம் மாறினர் என்கிறார்.
மதம் மாறினவர்கள் பல அச்சுறுத்தலுக்கு உள்ளானர்கள். இவர்கள் ஊருக்கு ஒதுக்குபுறம் தங்களுக்கு என தெருவுகள் அமைத்து தடிக்காரர்களை காவலுக்கு அமத்தி ஊர்களை உருவாகினர். அப்படி உருவான முதல் கிருஸ்வ ஊர் தான் முதலூர்.
நாடார்கள் தங்கள் இன அடையாளத்தை களைய வேண்டும் என்று 1898 ல் மெட்ராஸ் பிஷப் கட்டளை பிறப்பித்தார். மார்காசிஸ் ஐயர் போன்ற மக்கள் சேவையில் அக்கறை கொண்ட மிஷனரிகளுக்கு மக்கள் தங்கள் இனம் அடையாளத்தை பேணுவதில் எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை. கால்டு வெல் இனம், குணம் என அரசியல் செய்து மத மாற்றத்தில் கருத்தாக இருந்த போது இளம் மருத்துவரான மார்காசிஸ் ஐயர் மக்கள் சேவையில் கவனமாக இருந்தார். அவர் தான் இரயிவே நிலையம் நாசரேத்க்கு வர காரணமாக இருந்தவர். இன்றைய அப்பகுதி வளர்ச்சிக்கு மார்காசிஸ் ஐயராகத் தான் இருக்க முடியும்.

மார்காசிஸ் ஐயருக்கு பல வழியில் தொல்லை கொடுத்தவர் கால்டுவெல் பிஷப்.


இது இப்படி இருக்க தற்போதையை வரலாற்று ஆணிகள் அருமைநாயகம் கல்யாணம் செய்ய சபை மாறினதாகவும் கால்டுவேல் எழுதின ஜாதி வன்ம புத்தகத்தை அறிவு களஞ்சியம் என்றும் எழுதி வருகின்றனர். இப்புத்தகம் ஆங்கிலேய அரசால் தடை செய்யப் பட்டு இருந்தது சில காலம்.



9 Oct 2022

இரண்டாம் பாண்டிய தலைநகரம், தென்காஞ்சி திருநெல்வேலி!

 


இரண்டாம் பாண்டிய தலைநகரம் திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில், சென்னைக்கு தெற்கே அறுநூற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 'திருநெல்வேலி' என்ற வார்த்தையின் பொருள் புனித நெல் வேலி என்பதாகும்

பாண்டியர் தலைநகராக மதுரை இருந்ததால், நாயக்கர்கள் காலத்தில் அவர்களின் தென் தலைநகராக திருநெல்வேலி விளங்கியது.
ஆற்காடு நவாப்பினால் 1801 ஆம் ஆண்டு திருநெல்வேலி கையகப்படுத்தப்பட்ட போது" திருநெல்வேலிச் சீமை" என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு ஆங்கிலேயர்கள் தின்னவெல்லி என்று பெயரிட்டனர்.
மாணிக்கவாசகரால் தென் பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்ட, திருநெல்வேலி நகரத்திலிருந்து 1912 ஆம் ஆண்டு வரை நூறு கல்வெட்டுகள் நகலெடுக்கப்பட்டுள்ளன
தேவார மூவர்களால் பாடப்பட்ட பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களில் ஒன்றாகும் திருநெல்வேலி .
முதலில் நெல்லின் ஊர் என்ற அர்த்தத்தில் சாலியூர் என அழைக்கப்பட்டது. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் திருநெல்வேலியை "தென்பொருணை புனைநாடு" என்று குறிப்பிடுகிறார். மனோன்மணியம் நாடகத்தில் சுந்தரம்பிள்ளை திருநெல்வேலியை "பீடுயர் நெல்லை" என்று குறிப்பிட்டு உள்ளார்.
திருநெல்வேலியைப் பற்றிய குறிப்புகள் உள்ள ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாடல்கள் உள்ளன.
திருஞானசம்பந்தர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிற்குவருகை தந்துள்ளார்.
திருநெல்வேலியைக் குறிக்கும் மற்ற சுருக்கமான பெயர்கள் நெல்லை, நெல்லையம்பதி மற்றும் நெல்லையம்பலம் போன்றவை ஆகும்.



திருநெல்வேலியை தென்காஞ்சி என்றும் அழைக்கின்றனர். திருநெல்வேலியின் முந்தைய பெயர் "வேணுவனம்" என்று ஸ்தலபுராணம் கூறுகிறது. வேணுவனநாதர் கோயிலை மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர் ’ நின்ற சீர்நெடுமாறன் இக்கோயில் கட்டினான் என்பது வரலாறு.
களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவார் இவர். கடுங்கோன். கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டார்.
அவரை தொடர்ந்து அவனி சூளாமணி கி.பி.600 முதல் - 625 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னராவார். அவனி சூளாமணியின் மகனான செழியன்சேந்தன் 620 முதல் 642 வரை ஆட்சி செய்துள்ளார். அதன் பின் அவருடைய மகன் அரிகேசரிமரவர்மன் 641 முதல் 670 வரை பாண்டிய மன்னராக அரியணை ஏறினார்.
இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்ற பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளார். 640 ஆம் ஆண்டளவில்.பி. 640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றுள்ளார். சைவ துறவியான திருஞானசம்பந்தர் இவருடைய சமகாலத்தவர் ஆவார். அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி வந்திருந்தாலும் திருஞானசம்பந்தரால் சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார். வீரவநல்லூருக்கு அருகில் அமைந்திருக்கும் கிராமம் இவரால் அரிகேசரிநல்லூர் எனப் பெயரிடப்பட்டது.
நெல்லையப்பர் கோயில் சுவர்களில் பிற்காலச் சோழர்கள் மற்றும், பிற்காலப் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன.நெல்லையப்பர் கோயிலில் உள்ள சிறிய சன்னதியின் மேற்குச் சுவர் மற்றும் மூலமஹாலிங்கர் சன்னதியின் மேற்குச் சுவரில் காணப்பட்டும் வீரபாண்டியரின் (கி.பி.961) கல்வெட்டு திருநெல்வேலியை கீழ்வேம்புநாடு என்று குறிப்பிடுகிறது.
பாண்டிய நாடு சோழர்களின் கீழ் ஆட்சிக்கு வந்த போது கி.பி 991 முதல் ராஜராஜ வளநாடு என அறியப்பட்டது. கி.பி 1012 இல் ராஜராஜ மண்டலமாக பெயர் மாற்றப்பட்டது. 1022 முதல் ராஜராஜபாண்டியநாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நாடு இரண்டாக வல்லநாடு, மற்றும் முடிகொண்டசோழ வளநாடு என்று பிரிக்கப்பட்டு உள்ளது. வல்லநாடு பகுதி தற்போது திருநெல்வேலி மாவட்டம் ஆக உள்ளது. வளநாடு பல நாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டு விட்டது.
பிற்கால பாண்டிய பேரரசு முதல் விஜயநகர காலம் வரை நிர்வாக அமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளும் மாற்றம் பெற்றுக் கொண்டே இருந்தன.

வேணாட்டை ஆட்சி செய்த ரவிவர்மன் திருநெல்வேலியில் சதுர்வேதிமங்கலத்தை நிறுவி உள்ளார். நெல்லையப்பர் கோயிலில் பூஜைகள் செய்யும் விதம் ,அக்ரஹாரம் நிறுவி பிராமணர்களை குடியமர்த்தி இருந்துள்ளனர்.


மதுரை விஸ்வநாத நாயக்கர் (1529 – 1564) காலத்தில் தென் மாகாணத்தின் தலைமையகம் திருநெல்வேலி ஆனது.
மதுரா கையெழுத்துப் பிரதிப்படி மதுரை விஸ்வநாத நாயக்கரின் தளவாய் ஆக இருந்த அரியநாதமுதலியார் தான் திருநெல்வேலி சீமை(நகரம்) உருவாவதற்கு காரணமாக இருந்தவர்.
ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801 இல் ஆங்கிலேயர்கள் கையகப்படுத்தினர்.
மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நெல்லையப்பர், மற்றும் காந்திமதி அம்மன் கோயிலைச் சுற்றி திருநெல்வேலி வளர்ந்து வந்துள்ளது

திராவிடக் கோவில்களின் கட்டுமானம் - நெல்லையப்பர் கோயில் ஓர் பார்வை !


இந்தியாவின் கோயில்களின் - கட்டிடக்கலைப் மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது.      அவை  நாகரா, வேசரா மற்றும் திராவிட கட்டிடக்கலை ஆகும். இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது. தென் பகுதிகளில் திராவிட பாணி கட்டிடக்கலை பின்பற்றப்பட்டது.  திராவிட கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது









திராவிட கோயில் கட்டிடக் கலைகளின் சிறப்பம்சம் ஆக கருதப்படுவது  கருவறையுடன் கட்டப்படும் கோயில்கள்,  அதன் செறிவான வளையங்கள் கொண்ட சுற்றுப் பாதைகள்(பிரதக்ஷிண பாதைகள்) மற்றும், நீண்டு செல்லும் தாழ்வாரங்கள்,  கோவில் குளம்(தெப்பக்குளம்), திறந்த வெளிகள் (நந்தவனம்) போன்றவை கும்.



ஆலய கட்டிட அமைப்பு என்பது, நிகழ்த்தப்படும்  சடங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.  மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும் இதில் உள்ளடங்கும்.


கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன.


நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர மேடு கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை.



நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர் ஆட்சியாளர்கள் உருவங்கள்  உள்ளன.


கிழக்கு தாழ்வாரத்தில் நந்தி, பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது..

கி.பி 1155 இல் கட்டப்பட்டது நந்தியும், கொடிமரமும். நந்திமண்டபத்திற்கு அருகில் சூரியதேவர் உருவம் நிறுவப்பட்டுள்ளது.


நந்திமண்டபத்திற்கு அடுத்தபடியாக வேணுவனநாதர் கோவிலின் தெற்கு மாடவீதியில்; நான்கு சைவ  சிற்பங்களின் திருவுருவங்கள் உள்ளன. சந்தனாச்சாரியார், சப்தமாதாக்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள், பொல்லாப் பிள்ளையாரும், கைலாசபர்வதத்தை கையிலேந்திய படி  ராவணனும் உள்ளனர்



பள்ளிகொண்டபெருமாள் சன்னதி

ராஜராஜ பள்ளிகொண்ட பெருமாள் சுயம்புலிங்கம் தெற்கு திசையில் சாய்ந்த நிலையில் கட்டப்பட்டு உள்ளதுஇதன் வாயிலில் வலம்புரிப்பிள்ளையார், சந்திரசேகரர் மற்றும் தட்சிணாமூர்த்தி, பிக்ஷாந்தர் வேடத்தில் சிவபெருமான், சண்டேஸ்வரர் ஆகியோரின் உருவங்களும் காணப்படுகின்றன.


மேலும் தொடர்ந்தால்,  இந்த கோவிலின் மூலவிக்கிரகம் என்று கூறப்படும் பிட்லிங்கம் அல்லது திருமூல நாதர் உருவங்களை காணலாம்.

ஊஞ்சல் விழா



இந்த அம்பாள் கோயிலின் மற்றொரு அழகிய அமைப்பு திருகல்யாணமண்டபம் அல்லது திருமண மண்டபம் ஆகும்இது 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்டது ஐப்பசி மாதத்தில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் திருக்கல்யாணத்திற்குப் பிறகு கொண்டாடப்படுவது  ஊஞ்சல் விழா.  எனவே இந்த மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் தீவிர பக்தரான சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையின் அன்பளிப்பாகும்



ஊஞ்சல் மண்டபத்திற்கு வடக்கே புனிதமான தொட்டி, அதன் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன. இக்கோயிலில் கருமன் குளம் என்ற மற்றொரு குளம் உள்ளது. பெரும்பாலான திராவிடக் கோவில்கள் போன்றே நெல்லையப்பர் கோயிலிலும் இரண்டு கோவில் குளங்கள் (தெப்பக்குளம்) உள்ளன. இவை தேவையான சடங்குகளுக்கு பயன்படுத்துகின்றனர்.  முக்கியமாக  காற்றின் திசையில் உள்ள  தெப்பக்குளம், லேசான காற்றை உருவாக்கி உள்ளூர் காலநிலையை மிதப்படுத்தி  மேம்படுத்தி வைத்துள்ளது. கோயில் தெப்பக்குளங்கள் வற்றாதவை மட்டுமல்ல  பல்வேறு தாவரங்களுக்கு  அடைக்கலம் கொடுக்கும் படி உள்ளது.  மேலும் மழைநீர் சேகரிப்புக்கும் பயன்படுகிறது.


அற்புதமான இசைக் குறிப்பு மூலம் 

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இசைத் தூண்கள் மணிமண்டபத்தில் உள்ளன. ஒற்றைக்கல் ஒத்ததிர்வு அமைப்பில் செதுக்கப்பட்ட இசைத் தூண்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இந்த இடத்தை நடனம் ஆடுவதற்கு நடனக் கலைஞர் அல்லது தேவதாசிகள் பயன்படுத்தி உள்ளனர். மணிமண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாற்பத்தெட்டு தூண்களின் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நடனம் ஆடும் தேவதாசியின் உருவம் உண்டு. இந்த மண்டபம் திறந்த வெளி நடன அரங்கத்துடன் அமைந்துள்ளனர்.





சங்கிலி மண்டபம்
இருவரும் இணைபிரியா தம்பதிகள் என்றாலும்  சுதந்திரமானவர்கள்        என்பதற்கு இணங்க நெல்லையப்பர் மற்றும் அம்மனுக்கு வெவ்வேறு சன்னதிக வளாகத்தில் உள்ளன.   இவையை சங்கிலி மண்டபம் இணைக்கிறது

திருமலைநாயக்கர் காலத்தில் கி.பி.1647ல் திருநெல்வேலியின் ஆளுநரும் சிறந்த சிவபக்தருமான வடமலையப்பப்பிள்ளை இந்த மண்டபத்தை கட்டினார்.  சங்கிலி மண்டபம் தூண்களின் மீது யாழிகளின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளதுபச்சை வடிவேல் காசிவிஸ்வநாதர், அனுமன், அர்ஜுனன் மற்றும் பீமன் வைத்துள்ளனர். 

குமரன் கோயில் சங்கிலி மண்டபத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.


சோமவர மண்டபம் அல்லது நவராத்திரி மண்டபம்.

 நவராத்திரி மற்றும் கார்த்திகை மாதங்களில் சோம வார திருவிழா கொண்டாடப்படுகிறது. கல்லாலால் ஆன பீம்களூம்  ரதி, குறவம் மற்றும் குறத்தி பிரதிகள் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கே வன்னியடிசத்தனாரின் உருவங்கள் மற்றும் பைரவரும், மற்றும் யாகம் செய்யும் திருத்தலமும் காணப்படுகின்றன. வீரபத்திரன், அர்ஜுனன், கர்ணன், விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரின் சிற்பங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தோற்றத்தை உருவாக்குகின்றன



கோவில் வண்டி வீதிகள்.

திராவிட கட்டிடக்கலைப்படி, வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது .நெல்லையப்பர் கோயிலின் மற்றொரு சிறப்பு, ஒளி வரும் சாளரங்களின் அமைப்பாகும்.  தேவைப்படும் இடங்களில்  தெளிவான சாளரங்கள் வழங்கப்பட்டுள்ளன. திறந்த நடைபாதைகள், உட்புற இடைவெளிகளில் ஒளி ஊடுருவ அனுமதிக்கிறது.  கோவிலின் மையப்பகுதியான  கற்பகிரகத்தின் அமைப்பு  சூரிய கதிர்வீச்சின் தீவிரத்தை வடிகட்டி குறைந்த ஒளியை மட்டுமே  நுழைய அனுமதிக்கும் முறையில்  உள்ளது.





ஒரு பக்கத்தில் தோட்ட இடைவெளிகளில் திறக்கும் ஜன்னல்கள் மற்றும் மறுபுறம் கோவில் குளங்கள். கருவறையைச் சுற்றிலும் நிரம்பிய நடைபாதைகள், நடன அரங்கம் (தாமிரசபை) என கலைப்படைப்பின் உச்சமாகும் நெல்லையப்பர் கோயில்.


பொது இடங்கள் கோயில் வளாகம் மொத்த பரப்பளவில் 72% கட்டப்பட்ட இடங்கள் மற்றும் 28% திறந்தவெளிகள் ஆகும். இவை திறந்தவெளிகள் தோட்ட இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மலர்கள் இந்தத் தோட்டத்தின் மண்டபத்தின் மறுபுறம் நன்கு பராமரிக்கப்பட்ட இன்பத் தோட்டத்தில் இருந்து பெருகின்றனர்இந்தத் தோட்டத்தை வடிவமைத்தவர் திருவேங்கட கிருஷ்ண முதலியார்



1756 இல் நூறு தூண்களுடன் கூடிய சதுர வசந்தமண்டபம் இதன் நடுவில் கட்டப்படுகிறது. இந்த வசந்த மண்டபத்தில் நீர் சொட்டும் சிவபெருமானின் திருவுருவங்கள், அகஸ்திய முனிவர் மற்றைய முனிவர்கள் உள்ளது சிறந்து விளங்கும்  கட்டிடக் கலைஞரின் பணித் திறனின்  எடுத்துக்காட்டுகள் ஆகும்

 

கோவில் யானை வடக்கு மாடவீதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது