Showing posts with label அரசியல்-Politics. Show all posts
Showing posts with label அரசியல்-Politics. Show all posts

3 Jun 2018

தலைவர்கள் திரையில் இல்லை!


மைசூர் மாநிலம் பெங்களூரில் மராத்திய குடும்பத்தில் டிசம்பர் 12, 1950 ல் பிறந்த வர் சிவஜி ராவ்.  தனது நண்பர் ராஜ் பகதூர் உதவியுடன் இரண்டு ஆண்டுகள்(1973 ல்)சென்னை திரைப்பட நிறுவனத்தில் பயில்கின்றார்.

கே.பாலசந்தரின் , அபூர்வ ராகங்கள் மூலம் 1975 ல் தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அறிமுகமாகின்றார். 
அபூர்வ ராகங்கள், , கதா சங்கமா, அந்துலெனி கதா, மூன்று முடிச்சு,அவர்கள், 16 வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி ,திருப்புமுனை, முள்ளும் மலரும் , ஆறிலிருந்து அறுபது வரை அலாவுதினும் அற்புத விளக்கும், தர்ம யுத்தம் , புலி, நினைத்தாலே இனிக்கும் , ப்ரியா, அம்மா எவரிக்கின அம்மா, பில்லா, ஜானி ,முரட்டு காளை, நெற்றிக்கண் , தில்லு முள்ளு ,போக்கிரி ராஜா மற்றும் தனிகாட்டு ராஜா , கானூன்(1983) , நான் மகான் அல்ல படம் , அன்புள்ள ரஜினிகாந்த், நல்லவனுக்கு நல்லவன் , ஸ்ரீ ராகவேந்திரா , நான் சிகப்பு மனிதன், படிக்காதவன் மிஸ்டர் பரத் , வேலைக்காரன் குரு சிஷ்யன், மற்றும் தர்மத்தின் ,புளூட் ஸ்டோன் என்ற ஆங்கில படம், ராஜாதி ராஜா, சிவா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை மற்றும் அதிசய பிறவி ,பணக்காரன் , ஹம், தளபதி, அண்ணாமலை,  மன்னன்  ,  வள்ளி , வீரா, பாட்ஷா,முத்து , அருணாசலம், படையப்பா, சந்திரமுகி குசேலன், எந்திரன் என இவருடைய திரைப்பட பெயர்களே இவர் படத்தை பற்றி கதைகள் சொல்லின. 
.
2011 ஆம் ஆண்டு தனது குருவான கே.பாலசந்தர் கேட்டு கொண்டதின் பேரில் தனது புகை பழக்கத்தை விட்ட ரஜனி, 2012 வருடம் பாபா படத்தின் வெற்றிக்கு என  பீடி, மது குடிப்பது போல்  நடித்து பாட்டாளி மக்கள் கட்சியின் விமர்சனத்திற்கு உள்ளானார்.  
சுவாமி சச்சிதானந்தா, ராகவேந்திர சுவாமி, மகாவீர் பாபாஜி, மற்றும் ரமண மகரிஷிஎன பல சாமிகள்   ரஜினியின் சாமிகள்களாக உண்டு . சினிமாத்துறையில் இவருடைய வருமானம் உயர உயர தன் படத்திற்கு தானே திரை வசங்கள் எழுதி கொடுக்கும் நிலையை எட்டினார். அத்துடன் தனது சினிமவில் அரசியல் வசங்கள் பேசத்துவங்கினார்.. இதனால் அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு வளர துவங்கியது. இவர் உருவ பலகைக்கு பால் ஊற்றும் ரசிக குஞ்சுகள் எல்லாம் தங்கலூம் அரசியலுக்கு வந்தது போலவும் ரஜனி முதலமச்சர் ஆனால் தாங்களும் மந்திரியாகி விடலாம் என கனவு காண ஆரம்பித்தனர். அவர்கள் கனவை வலரச்செய்ய நான் வருவேன் , அது ஆண்வன் கையில் உள்ளது , போர் வந்தால் வருவேன், சிஸ்டம் சரியில்லை என தனது பொன்னான அரசியல் முத்துக்களை உதிர்க்க ஆரம்பித்தார் ரஜனி.

அரசிய விமர்சகர் , எழுத்தாளர் சோ.ராமசாமி போன்றவர்கள் ரஜனியின் சிளை அரசியல் ஆசைக்கு தண்ணீர் ஃபிட்டு வளர்க்க உதவினர்.    இந்த ஊக்கத்தால் 1995 இல், இந்திய தேசிய காங்கிரஸுக்கு  ஆதரவு அளித்தார்.  1996 ல், காங்கிரஸ் கட்சி அதிமுக உடன்- கூட்டணி வைத்ததும் தனது ஆதரவை  தி.மு.க கூட்டணிக்கு அளித்தார். இப்போது ஆன்மீக அரசியல் பேசி வருகின்றார். ஆன்மீகம் என்றால் இமயமலை செல்வது சாமியார்களை சந்தித்து ஆசி பெறுவது பின்பு மலை இறங்கினதும் நடித்து பணம் ஈட்டுவது தன் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு கூட ஊதியம் கொடுக்காது இருப்பது, நாய்க்கு எலும்பு போடுவது போல் சின்ன காசை போட்டு  அரசியல் ஊடாக நிறைய சம்பாதிக்க இருப்பவர் தான் ரஜனி. 
ரஜனியின் தாரளகுணம் சென்னை வெள்ளத்தில் என பல சம்பவங்களில் கண்டது தான். இவரை போன்ற ஆன்மீக நடிகர்கள் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தும் தமிழ் சினிமா அடிப்படை கலைஞர்களின் அடிப்படை பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. சமூக பணியை செய்யாது அரசியல் என்ற பெயரில் சமூகத்தை ஆட்டிபடைக்க நிலைக்கும் ரஜனியின் ஆன்மீக அரசியல் ஆராயப்பட வேண்டியது. படம் வெளியிடும் முன் அரசியல் பேசுவதும் படம் வெளியானதும் இமைய மலை போய் வருவதும் என ரஜனி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

ரஜனி சினிமாவில் இடம் பிடித்ததே  பீடி சுற்றி போடுமதல், கழுத்தில்  துண்டை எடுத்து ஸ்டைலாக எறிதல், தொப்பி, கலர் கண்ணாடி அணிதல், பெண்களை அவமதிக்கும் பெண்களை ஏளனம் செய்யும் ஆண் கதாப்பாத்திரமாக வந்து அடிமட்ட ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் இந்த ரஜனி.
அந்தைய நாட்களில் ஒரு சினிமாவில் கதாநாயகன் கதாப்பாத்திரத்திற்கு என சில நியதிகள், ஒழுக்கம், அறம் இருந்தன. ரஜனி குடிகாரனாகவும் போக்கிரியாகவும் , ஏழை வீட்டு வேலைக்காரனாக இருந்து பணக்காரப்பிள்ளையை கல்யாணம் முடிப்பது, மாமியாரிடம் சண்டை போடுவது, முதலாளி அம்மாவை கன்னத்தில் அடிப்பது என  சில பல வெத்து புரச்சியால் அடிமட்ட   இளைஞசர்களுக்கு ஹீரோ ஆனார். 

அந்நேரம் வரை பெண்களை வாம்மா, தாயே, என  மரியாதையுடன் அழைத்த  கதாநாயகர்கள் மத்தியில்; பெண்களை போடி, வாடி என அழைப்பது, பெண்களை அடங்கி போகனும்,  நல்ல பெண்ணுன்னா இப்படி தான், கெட்டவளை அழிக்கனும்  என்ற சில பொன் மொழிகள் எல்லாம் கூறி பெண் என்றாலே ஆணுக்கு அடங்கி வாழ வேண்டியவள், தன்னை கற்பழித்த கொடியவனை கூட கல்யாணம் பண்ணி அவனுக்கு சேவை செய்து வாழ்ந்து மடிய வேண்டிய அபலை, அம்மா என்றாலே தியாகம் என பல பல ஏமாற்று தன்மானமற்ற கொள்கைகளை பரப்பியவர் இந்த ரஜனி.  ரஜனி கதாப்பாத்திரம் போல்  பெண்களை அவதூறு செய்த கதாப்பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் இருந்ததும் இல்லை இனி இருக்க போவதும் இல்லை. அவருடைய படத்தில் பெண்கள் ஆண்களுக்கான கேளிக்கையாகவே கொச்சையான சீனுகளால் கதாவசங்களால் வடிவமைத்திருப்பார்கள். எப்போதும் ஒரு கதாப்பாத்திரம் காம இச்சையுடன் ரஜனி பின் பாய்ந்து ஓடி கொண்டே இருக்கும்.
புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு காரணமான பீடியை தமிழகத்தை விட்டு போகாது இருக்கிறது என்றால் அதன் காரணம் இந்த ரஜனி ஸ்டைல் பீடி குடி தான்.
ரஜனியின் படத்தை கவனித்தால் வாழ்க்கையை போராட்டமாகவும் தன்னை எதிர்ப்பவனை எதிர்த்து தேவை என்றால் கொலையும் செய்து வெற்றி பெறுபவனகா காட்டியிருப்பார். அடங்காதை என மக்கள் நரம்புகளை புடைக்க செய்து சூப்பர் ஸ்டார் என்ற பதவியை தக்க வைத்தவர். 
இப்படியான ரஜனியின் மாயை உலகம் பழைய தலைமுறையுடன் ஓய்ந்து விட்டது. 91 ல் ஏன் 2001 அரசியலுக்கு வந்திருந்தால் கூட கொஞ்ச நஞ்சம் காலம் அரசியலில் இருந்திருப்பார். அவரை ஏற்க ஒரு கூட்டம் காத்திருந்திருக்கும்.  67 வயதில் தற்போதைய சமூக சூழலை பற்றி முற்றிலும் புரிதல் இல்லாதவர் கார்ப்பரேட் சன்னியாஸியல் தமிழகத்திற்கும் ஒன்றும் நன்மை விளையப்போவதில்லை. பெரியார் போன்ற அறிவாளிகள் சமூக புரச்சியாளர்களின் கொள்கை கருத்து மறந்து போகவே செய்யும். 

நித்தியானந்தாவிடம் ஆசி பெற்ற ரஜனி நித்தியானந்தாவால் பெண்கள் சீரளிகப்படுவதும் மைனர் குழந்தைகள் கூட அவர் பிடியில் சிக்குண்டு இருப்பதை கண்டிக்காதவர். 

ரஜனி ’தான்’ என்ற மாய உலகத்தில் வாழ்ந்தவர். நடிப்பில் கூட 67 வயது ஆன பின்பும் 27 வயது பெண்ணுடன் ஜோடி சேரும் கதை தான் தேர்வு செய்கிறார். அமிதாப்! ஏன், அவர்களுக்கு பின் வந்த அமீர்கான், சல்மான்கான் போற்றோர் கூட தங்கள் வயதிற்கான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டனர்.  ரஜனி இன்னும் ராமாராவ் எம்ஜிஆர் காலத்தில் வாழ்வது காலத்தின் கொடுமை.

கடந்த சில வருடங்களாக தமிழகம் புயல் வெள்ளம் , ஜல்லிகட்டு , தூத்துக்குடி போராட்டம், தண்ணீர் பஞ்சம், நீட் , அனிதா மரணம்,  அரசியல்வாதிகளில் ஊழல், என பல பிரச்சினையை கடந்து போகிறது.  ஆசிபா கலையான போது கூட வாய் திற்க்காதவர். ஒன்றுக்குமே வாய் திறக்காத ரஜனி மக்களுக்கு அறிவுரை மட்டும் வழங்க வந்தது எந்த வகையில் ஞாயம்.

ஆகையால் ரஜனி தியானம், மனைவி குழந்தைகள்,  பேரக்குழந்தைகள் போயஸ் கார்டன், சுகமான வாழ்க்கை என இருந்து விட்டால் அவருக்கு நல்லது. அவரால் ஒரு இளைஞனின் கேள்வியைக்கூட எதிர் கொள்ள இயலவில்லை. அரசியலில் மிளிர, புரட்சியாளனாக நடிக்கவாவது தெரியனும். குறைந்தப்ட்ச  மனித நேயமாவது இருக்க வேண்டும்.  உங்கள் சாணக்கியத்தனம் காலாவதியாகி விட்டது. 
காலாவை காண வேண்டும்.  ரஜனியில் திரை புரட்சி வசனவும் இயல்பு வாழ்க்கையிலுள்ள கார்ப்பரேட் வசனங்களையும் நிதானமாக அவதானிக்க வேண்டும்.
அரசியல் தெரியாதவன் குறிப்பாக தமிழ்நாட்டு பண்பாடு தெரியாதவர்கள், சாதாரண மக்களின் பிரச்சினைகள் தெரியாதவர்கள் அரசியலுக்கு வருவது ஆபத்து. நடிப்பை தொழிலாக கொண்டோர் அரசியலையும் நடிப்பு களமாக மாற்றி விடுவர். அவர்கள் வீராவேச பேச்சில் நாட்டு நடப்பு இருக்காது , வாழ்க்கை இருக்காது வெறும் நடிப்பும், பகிட்டும் மிஞ்சின ஊழலும் அதீதமான ஆசையும் தான் இருக்கும். தமிழர்கள் தனது தலைவர்களை திரையில் தேடாது சமூகத்தில் தான் வாழும், தன்னுடன் வாழும் உயிரும் சதையுமான மனிதனில் மனிதத்தில் தேட வேண்டும்...... 


30 Mar 2011

ஏமாற்றும் விண்வெளி அரசியல்!!!!




மனிதனின் விண்வெளிப் பயணம் தொடர்பான கனவுகள் பற்றிய கதைகள் இதிகாச நூல்கள் ராமாயணம், மகாபாரதம் காலம் தொட்டே துவங்கியுள்ளது.  இவையில் விண்கல-பயணம் பற்றிய கற்பனைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.


ஆயிரம் இரவுகள்’ என்ற அரேபிய நூலிலும் விண்கலம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.  10 வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய கதாசிரியர் “மூங்கில் வெட்டி” என்ற நாவலில் விண்வெளி பயணத்தை குறித்து கற்பனையாக எழுதியுள்ளார்.  இதில் இருந்து விண்வெளி மீது மனிதனின் கற்பனைகளும் ஆசையும் எக்காலவும் இருந்துள்ளதை காணலாம்.


முதலில் எலி, நாய் , தவளை போன்ற விலங்குகளையே அனுப்பி ஆராய்ச்சி செய்துள்ளனர்.  விண்வெளிக்கு முதலில் கால் பதித்தவர்கள் ஆம்ச்ட்ராங், ஆல்ரிடின்,  யூரிகிரிகோரி என்ற மனிதர்கள் தான் என்று நமக்கு  சொல்லி தரப்பட்டாலும் உண்மையில் கால்வைத்து நமது முன்னோர் இனமான ஆல்பிரட்-6 என்ற குரங்கு தான்!


தற்போது சீனா, ஜப்பான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளும் விண்வெளி பயணத்திற்க்கு போட்டி போட்டு கொண்டு தயாராகி கொண்டிருக்கின்றது.  28 மிலியன் கட்டிவிட்டால் ரஷ்யா ஏற்பாடு செய்து தரும் விண்வெளி பயணத்திற்க்கு சில பயிர்ச்சியுடன் பயணம் மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது.                                                                                                             
                                                                                                     விண்வெளி பயணம் மீது, அரசு - விஞ்ஞானிகளின் வார்த்தைகளில் நம்பி  மனிதன் இந்த அளவு பேராவல் கொண்டிருந்தாலும் இப்பயணம் உண்மையில் இனிமையானது அல்ல என்பது தான் நிஜம்!  விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தி பூஜியம் என்பதால் மனிதனால் பூமியில் என்பது போல இயங்குவது கடினமே.  காற்றடைத்த பலூணை போன்று மிதக்க தான் முடியும்.  உடல் எடை, விண்வெளியில் குறைவதால் விண்வெளிக்கு ஏற்ப அங்கு வாழ கற்று கொள்ள வேண்டும்.  மேலும் நிம்மதியான குளியலுக்கு கூட வழியற்று பஞ்சு குளியல் தான். கழிவறை பிரச்சனை தான் மிகவும் கொடியது பிரத்யேக தொழில் நுட்பத்துடன் கூடிய கழிவறையே பயண்படுத்த இயலும்!! விண்வெளி பயணிகள் சுகாதார பிரச்சனையால் தான் பெரிதும் துன்புறுகின்றனர் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.


விண்வெளியில் ஆல்பா, காஸ்மிக் போன்ற அதி சக்தி வாய்ந்த கதிர் வீச்சுகளால் புற்று நோய் தாக்க வாய்ப்பு உள்ளது. “அப்பல்லோ” விண்கலத்தில் பயணித்தவர்கள் பளிச்சிடும் ஒளி கண் திரையை ஊடுருவி சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். விண்வெளிப் பயணம் மற்றும் ஆராய்ச்சியை மெச்சும்படியான  சாதனையாக கருதுவதற்க்கு  இல்லை  என்றே நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் ரிச்சார்டு, ஃபெயின்மேன் போன்றோர் தெரிவித்துள்ளனர்.    
பல விண்வெளிப் பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தது.  இதில் 1986 ல் நடந்த சாலஞ்சர் விண்வெளி பயணத்தின் தோல்வியை  தழுவி “சாலன்ஜர்” என்ற திரைப் படத்தில் விண்வெளி அரசியல் பற்றி கதைத்துள்ளனர்.  7 விண்வெளி வீரர்களுடன் புறப்பட்ட விண்கலம் தொடர்பியல் மற்றும் தொழில்நுட்ப கோளாரால் அட்லாண்டிக் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. இதில் ஒரு பயணியாக பள்ளி ஆசிரியை கிருஸ்டாமாக் ஆலிஃப்  இருந்ததால் நாசா, பள்ளி மாணவர்களுக்கு  என (45%) நேரடி ஒளிபரப்பு தயார் செய்யபட்டிருந்தது.  இதே போல் 2003 ல் இந்திய விண்வெளி பயணி கல்பனா சாவ்லாவின் பயணவும் துயரில் முடிந்தது.


விண்வெளி பயணிகளின் வாழ்க்கை கூட விண்வெளி பயணத்திற்க்கு பின்பு இனிதாக இருந்திருக்க வில்லை.   பலருடைய மரணம் இயற்கை அல்லாது  மர்மமாகவே இருந்துள்ளது.   நாடுகள் கொண்டுள்ள போட்டியில் மனிதர்களின் நிம்மதியை பாழாக்குவதுடன் நாட்டின் வளத்தையும் விண்வெளிப் பயணம் என்ற பெயரில் சுரண்டுகின்றனர் என்பதை தான் கவலை கொள்ள வேண்டிய செய்தி!!!


கொலம்பிய விண்கல விபத்து,  கத்ரீனா பேரழிவு, இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின்பு அமெரிக்க மக்கள்  விண்வெளி ஆராய்ச்சிக்காக செலவழிக்கப்படும் மிகப்பெரிய டாலர்களை பற்றி கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ரஷ்யா, தாங்கள் தான் விண்வெளிக்கு முதல் விண்கலத்தை அனுப்பியுள்ளோம் என்று தற்பெருமை கொண்டாலும் உலக தெருவோரக் குழந்தைகளின் பெரும் பகுதி ரஷ்யா குழந்தைகள் என்று எண்ணி வெட்கி தலைய் குனியத் தான்  வேண்டியுள்ளது.


நமது இந்தியாவை எடுத்து கொண்டால் உலக நாடுகளின் குப்பை கூடம், உலகநாடுகளால் தடைசெய்யப்பட்ட பூச்சிகொல்லிகளுக்கு அறிமுகம் கொடுப்பவர்கள், ரஷ்யாவில் மூடும் அணு ஆலைகளுக்கு திறப்புவிழா கொண்டாடுபவர்கள் என்று கோமாளி அரசியல் கொண்டது என்பதால் என்னவோ; பணக்கார நாடுகள் கூட விண்வெளியை பற்றி பெரிதாக மதிப்பிடாது இருக்க  துணியும் போது இவர்கள் பள்ளி-கல்லூரி தோறும் அப்துள் கலாம் போற்ற அறிவு ஜீவிகள் வழியே மக்கள் மத்தியில் விண்வெளி ஆசையை விதைத்து வருகின்றனர்.  70% ஏழைகள் கொண்ட இந்தியாவில் விண்வெளி மோகம் அதிகரித்து வருகின்றது என்பதே கவலைக்குரிய செய்தியே.  கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் கூட தர இயலாத சூழலில் விண்வெளி ஆராய்ச்சிக்கு என 6 மில்லியயன் ஒதுக்கியுள்ளது கண்டிக்க தக்கது.  இந்திய விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்க்கு மொத்தம் 12 ஆயிரத்து  400 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. பிரதமரின் நேர் கட்டுபாடில் இருக்கும் இத்துறையின் நிலவரம் சமீபகாலமாக ஊடகம் வழி 4G ஊழல் என்ற பெயரில் வெளிவர ஆரம்பித்துள்ளது. பிரதமரும் "எனக்கு ஒன்றும் தெரியாது தான் எல்லாம் நடைபெறுகின்றது என்று திருவாய் மலந்துள்ளார்.


 1969 ல் இருந்து விண்வெளியை பற்றி ஆராய்ந்து வரும் இந்திய விஞ்ஞானிகளால் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை மக்களுக்கு முன்கூட்டி எடுத்து கூறி உயிர் உடைமைகளை  காப்பாற்ற இயலவில்லயே என்ற மக்களின் எதிர்ப்பு குரலை கேட்டும் கேட்காதது போல் தான் இயங்குகின்றது நம் ராக்ஷச அரசு.


மக்கள் வசிக்க தகுந்த நீர், நில இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கும் பூமியை பேணாது  வாழ்வாதாரமற்ற சந்திர, செவ்வாய் கிரங்கள் மேல்  ஆராய்ச்சி என்ற பெயரில் கொள்ளும் அர்த்தமற்ற பற்றை  விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொள்ளும் அரசியல் அதிகார வர்கத்தில்  பகல் கொள்ளையை என்னவென்று சொல்வது?     

6 Feb 2011

குடியரசு தலைவர் உரை!


 என் அருமை குடிமக்களே 62 வது குடியரசு தினத்தில் உங்கள் அனைவருடன் கதைக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நாட்களில் மட்டுமே பேச அனுமதி கிடைக்கின்றது. ஆகயால் மனம் திறந்து உங்களிடம் பேச வந்துள்ளேன். என் உதவியாளர்  My fellow citizen என்ற தலைப்பில் எழுதி  தந்த உரையே குப்பையில் போட்டு விட்டு, மழலை பள்ளி மாணவர் போல் பார்த்து வாசிக்க கூடாது என்ற உறுதியில்  உங்கள் முகம் நோக்கி பேச வேண்டும் என வந்துள்ளேன்.


 நம் நாடு சுதந்திரம் அடைந்து வல்லரசு ஆக போகின்றேம் என்று பீற்றி கொண்டாலும் 80 % மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தான் உள்ளார்கள் என எண்ணும் போது கவலையாக தான் உள்ளது. 2008 ல் நான் பேச வந்த போது விட ஊழல், லஞ்சம் பெருகியுள்ளதை அறிவேன். மத்திய அரசு, மாநில அரசு என பாகுபாடு இல்லாது “ஊழலே எங்கள் கொள்கை” என  தலைவர்களும், அரசு அதிகாரிகளும் களம் இறங்கி இருப்பதை எண்ணி வருந்துகின்றேன். ஸ்பெக்ரம் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி ஊழல், ஆசிய விளையாட்டு ஊழல் என எங்கு பார்த்தாலும் ஊழல் என்பதை என்னால் ஜீர்னித்து கொள்ளவே இயலவில்லை.  நான் கூட 3 படை அதிகாரிகள், என் குடும்பத்தார்கள் என  கோயில் குளம் போய் வந்தும் பலன் இல்லையே என எண்ணும் போது என்னையே வருந்தி கொள்கின்றேன். ஆகையால் பணி ஓய்வுக்கு பின்பு கிடைக்கும் மாதம் 50 ஆயிரம் ஓய்வு ஊதியம்  வேண்டாம் என சொல்லி விட்டேன்.


அரசியல் அமைப்பு சட்டம், நாட்டு நலன், ஒருமைப்பாடு என்ற பெயரில் மக்களின் கருத்து சுதந்திரதை நெரிப்பதை நிர்த்தி கொள்ள வேண்டும்!  ‘மக்கள் கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் ஊடகங்கள் நடத்தும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளை புரக்கணிக்குமாறும் கேட்டு கொள்கின்றேன். மக்கள் துன்பத்திற்க்குள்ளாகும்  விலைவாசி ஏற்றம், கள்ள சந்தையால் வெங்காயம் விலை கூடியது பற்றி விவாதிக்காது கணவர் மனைவிக்குள் சண்டை மூட்டி விடுவதும், தனி குடும்பமா கூட்டு  குடும்பமா என குடும்பத்தை பிரிப்பதும் சொட்ட தலை வழுக்க தலை என பேசி மக்களை அவமானப்படுத்துவதும், கல்லூரி மாணவி மாணவர்களை  படிப்பு, வேலை விடுத்து ஆக்கம் கெட்ட கேழ்வி கேட்டு குழப்பி கொண்டிருக்கும்  கோபி நாத் தலைமையில் கச்சேரி நடத்துபவர்களை அந்தமானுக்கு கடத்த சட்டம் தீட்ட வேண்டும்.


மேலும் மானாட மயிலாட என்ற ஆட்டத்தை குடும்பத்துடன்  பார்த்து ஜொள்ளுவிடும் தமிழக கலாச்சாரம்  பற்றி ஆராயவும் உத்தரவு இட்டுள்ளேன்.  நடந்து என்ன, குற்றம் என்ற பெயரில் பேய் கதைகள் பரப்பும் சேனலுகளையும் ஒழிக்க திட்டம் இட்டுள்ளேன். பழைய அரச சபையிலுள்ள கவிஞசர்கள் போல் புகழ்மாலை- கவிஞசர் வாலி போன்றோரை  பேணாவை  இல்லாத காட்டில் கடத்தவேண்டும்! இந்த வருடம் தமன்னா அனுஷ்காவுக்கு கொடுத்த கலைமாமணி விருதுவிலும் ஊழல் உள்ளதாக  கேள்வி பட்டதால் விசாரணை  நடத்த திட்டம் இட்டுள்ளேன். மச்சான் நடிகை நமிதாவுக்கு அடுத்த வருட   விருது புக் செய்த்தாகவும் கேள்விப்பட்டேன்.


அடிப்படை தேவையை நிவர்த்தி செய்ய வக்கில்லாத அரசு ஏன் விண் வெளிக்கு  ராக்கட் செலுத்தி பணத்தை கரியாக்குகின்றது என்ற கேள்வி என்னில் எழாதில்லை. கடை வீதியிலும் வீட்டு முற்றத்திலும் ஓடும் சாக்கடையை சுத்தம் செய்ய வழியற்ற நமக்கு நிலாவில் வசிக்க ஆசை  வரலாமா? நிறைய கேள்வி கேட்க துவங்கினால் என் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்ற எச்சரிக்கை என்னை மௌனிக்க செய்கின்றது. 


மேலும் தமிழக பெண்களை சுய உதவி குழு என்ற பெயரில் வட்டி முதலாளிகளாகவும் பெண் தாதாக்களாகவும் உருவாக்குவதாகவும் செய்தி வந்துள்ளது. சீட் கிடைத்தால் இந்திய ஒருமைப்பாடு, இல்லை என்றால் தனி நாடு கோரிக்கை என பண்பற்ற  அரசியல் நடத்தி வரும் அரசியல்வாதிகள், மக்களுக்கு 1 ரூபாய்க்கு மோசமான அரிசி 80 ரூபாய்க்கு வெங்காயம் என ஏமாற்று அரசியல்  நடத்துவதும், செம்மொழி என  கூறி கொண்டே தமிழை சென்னை தமிழ், அமெரிக்க தமிழ் என தமிழை அழிப்பதும் தெரிந்ததே!


இருப்பினும் இந்த கொடிய செயல்களுக்கு முடிவுகட்டுவது உங்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில் நான் வகிப்பது வெறும் அலங்காரப் பதவி தான் என்பது உங்கள் யாவருக்கும் தெரிந்ததே.  


போராளிகள் என்ற பெயரில் நம் அண்டை நாட்டவரான ஈழ தமிழர்களை கொல்ல வழி சொல்லி கொடுத்த நாம், நம்  சொந்த மக்களான ஏழைகளை நக்சல்கள் என கூறி பழி தீர்த்து கொள்வதை என்னால் ஏற்று கொள்ள இயலவில்லை.
 
நம் நாட்டை, டாடா, ரிலயன்ஸ் போன்ற பணம் முதலைகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். முதன்மையாக முதுகு தண்டுவடம் அற்ற உபதேசி- பிரதமரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.  நாட்டு பற்ற அற்ற சோனியா ராகுலிடம் நம்பிக்கை கொள்ள வேண்டாம்.  ஒருவன் ஒரு முறையே தேர்தலில் போட்டியிட முடியும் என சட்டம் திருத்தவேண்டும். பள்ளி கல்லூரிகளை பொது உடமையாக்குவோம்.

வீட்டுக்கு வீடு செடி நட உற்சாகப்படுத்த வேண்டும். பச்சை புரட்சி என கூறி மண்ணையும் மக்களையும் கான்சர் போன்ற கொடிய நோய் தாக்க காரணம் இனி ஆகலாகது. குடிசை இல்லாத நாட்டை உருவாக்குவோம் எனக் கூறி குடிசை மக்களை ஊரை விட்டு துரத்தும் அவலத்தையும் களைய வேண்டும்.


நம் நாடு தன் நிறைவு அடைந்து விட்டது வல்லரசு ஆகி விட்டது என என்னால் பொய் சொல்ல இயலாது . சுதந்திரமான இந்திய, குடியரசு இந்தியா என்ற பெயரில் நம் நாட்டில் நிகழும் கொடிய செயல்கள் ஒழிந்து உண்மையான மக்களாட்சி மலரட்டும் என்று ஆசி கூறி விடை பெறுகின்றேன். எகிப்து போன்று மக்கள் புரட்சி வெடிக்கும் முன் பதவியை விலக வேண்டும் என்ற ஆசையுடன் உங்களிடம் விடை பெற்று கொள்கின்றேன்.
ஜெய் ஹிந்த்!!!!!!! 

7 Nov 2010

ஒபாமா வந்துட்டாங்கய்யா!! வந்துட்டாங்க!

ஒபாமா  அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிளம்ப ஹெலிகாப்ரரை நோக்கி நடக்க துவங்கியதில் இருந்து ஆங்கிலம் ஹிந்தி ஊடகங்கள் ஒபாமாவின் வருகையை பற்றி கதைக்க ஆரம்பித்து விட்டனர்.  ஒபாமா இந்தியா வருவதில்  என்ன லாபம் எதற்க்கு வருகிறார் அவர் கையெழுத்து இடும் திட்டங்கள் ஏது என  அலசி கொண்டிருந்தனர்.  மலையாள சேனல் கொஞ்சம் முன் சென்று அவர் வருவது வியாபர நோக்கத்திற்க்கே எனவும்,  மேலும் 3000 தொழில் வல்லுனர்கள் மற்றும் 30 கார் அணிவகுப்பு, மக்லேனின் கூற்று என பின்னி விலாசி கொண்டிருந்தனர்.   நம் தமிழ் சேனலில் செய்தியுடன் முடித்து கொண்டனர்.  அங்குள்ள சேனலில்  ஒபாமாவின் வருகையை பற்றி காரசாரமான விவாதம் நடை பெறும் போது நம் ஆட்கள் சரவெடி சரவணனுடன்  விவாதித்து  கொண்டிருந்தனர் இப்படியாக அவர் அவ்ருடைய ஆசிரியரை எந்த பட்ட பெயர் வைத்து அழைத்தார், பள்ளிக்கு மட்டம் போட்டாரா என!

ஒபாமா வரும் போது    தரப்படும் பரபரப்பான செய்தியின் போக்கு நமது அரசு தலைவர்கள் வெளிநாடு செல்லும் போது  "இவர் இந்த தேசத்திற்க்கு சென்றுள்ளார், திரும்ப இன்று வருகின்றார்  என்றதுடன் முடித்து கொள்கின்றனர்.  நமது தலைவர்கள் இதே போன்று ஒரு திட்டத்துடன்  அன்னிய நாட்டுக்கு சென்று வந்தார்களா எனவும் தெரியவில்லை.
பிரதிமா பாட்டில் கணவர், உறைவினர்கள், படைத் தளபதிகளுடன் கோயிலுகளுக்கு சென்று வந்த செய்தி தான் சித்திரத்துடன் பார்வையில் அடிபட்டது.  பிரதமர் சென்ற போது கூட மகள் மருமகன் மனைவியுடன் சென்று வந்ததை காண முடிந்தது.  மேலும் மேற்கு அயிரோப்பிய நாடுகளுக்கு பிரதமர், ஜனாதிபதி போன்றவர்களும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு துணை ஜனாதிபதியை அனுப்புவதாகவும் தெரிகின்றது. எம் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தர சென்றுள்ளேன் என யாரும் சூளுரைத்து சென்றதாக ஒரு போதும் கண்டிருக்க வில்லை.

 எது எப்படியோ எனக்கு  ஒபாமா மற்றும் அவருடைய மனைவி ஹெலிகாப்ரில் ஏறுவதை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். கைகளை வீசி கொண்டு இரண்டு பெயரும் அழகாக தாவி ஏறி  கொண்டிருந்தனர். மனம் விட்டு சிரிக்கின்றனர் பேசுகின்றனர் நம் தலைவர்களின் பிளாஸ்டிக் சிரிப்பு, கீழ் விழி பார்வை போன்று அல்லாது; ஒரு வேளை தள்ளு வண்டி, ரோபோ போன்ற தலைவர்களை கண்ட கழைப்பாக இருக்குமோ எனவும் தெரியவில்லை!
 மகாராஷ்டா அமைச்சர்கள் வரவேற்ப்பை அழகாக பெற்று கொண்ட அவர்கள் அவர்கள் நாட்டு அதிகாரிகளே கண்டுடன் அவர்கள் கலாச்சாரப் படி கட்டி தழுவி அன்பை பகிர்ந்து கொண்டு  அதிக நேரம் பேசி கொண்டிருந்தனர்.  இத்தருணத்தில் நமது தலைவர்கள் இலங்கை சென்று நம் சகோதரர்களே கண்டு சென்று வந்த  காட்சிகள் உங்கள் மன கண்ணில் கொண்டு வர வேண்டுகின்றேன்.

பின்பு பள்ளி, கல்லூரி மாணவர்களே சந்திக்கின்றார். பெரிய அரசியல் செய்திகள் மும்பை சவேரியார் கல்லூரி மாணவர்களிடம் பேசி உள்ளார். அதிலும் ஒரு மாணவி வடிவேலு அண்ணே கேட்பது போல் ஒரு கேழ்வியும் கேட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டை ஏன் தீவிரவாத நாடு என அறிவிக்க வில்லை என?  அதை தீவிரவாத நாடாக ஆக்குவதே நம் இந்தியாவும் அமெரிக்காவும் தான்  என தெரியாதோ,  என்னவோ? எல்லாம் பள்ளிப் பாட  அரசியல் தான். பாப்பாவுக்கு   போபால் பற்றியெல்லாம் ஏன் சொல்லி கொடுக்கவில்லை என தெரிய வில்லை?  மேலும் ஹெட்லி விஷயத்தை  மறைந்து விட்டாரே, அமைச்சர் சிதம்பரத்திற்க்காவது பயனுள்ளதாக இருந்திருக்கும்!  அமெரிக்கா நாட்டு அதிபரிடம் கேழ்வி கேட்க ஊடகவியாளர்கள், சமூக ஆவலர்கள் என யாரையும் நம்பாது  மும்பை மாணவிகளிடம் பணியை கொடுத்து விட்டார்கள் அதன் மர்மவும் தெரியவில்லை.

  நான் இந்தியாவின் கலாச்சாரத்தை, இயற்கை அழகை காண செல்கின்றேன், என பொய் சொல்லாது,  போத்திகீஸ்காரர்கள், கிழக்கி இந்திய ஈஸ்ட்டு இந்தியன் கம்பனி போல இந்தியா நாட்டிற்க்கு  வியாபார நோக்கத்திற்க்காவே வந்திருக்கின்றேன்  என தைரியமாக சொல்லி வந்திருக்கும் ஒபாமா அவர்களே  வருக வருக!!! உங்களே போன்ற உண்மை பேசும் தலைவர்களே எங்களுக்கும் தேவை.

இன்னும் ஒரு செய்தி, அவுட் சோர்சிங் (வெளி நாட்டு பணி -BPO) என்பது நம்மவர்களே கொண்டு இங்கிருந்தே குறைந்த ஊதியத்தில்  அங்குள்ள வேலையை செய்ய வைப்பதே.  நமது அமைச்சர்களின் பணியையும் இம்முறையில் அமெரிக்கர்களால் அவுட் சோர்சிங் என்ற முறையில்  எடுத்து கொண்டால் நாம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கலாமோ? அவர்களுக்கும் வேலை வாய்ப்பும் கிட்டும்!

1 Nov 2010

அருந்ததிராய் உங்களுக்கு என் வந்தனம்!


சமீபத்தில் இணையம் மற்றும் வெகுசன ஊடகம் வழியாக மிகவும் புகழபட்டவர், அலச பட்டவர் மட்டுமல்ல கடுமையாக குற்றம் சாட்டபட்டவரும் அருந்ததிராயே!  இந்தியாவின் ஒற்றுமைக்கு அருந்ததியால் பெரும் பாதிப்பு வருவது போல் மாய தோற்றம் உருவாக்குகின்றனர். சமீபத்தில் ஒருவர் விமர்சிக்கயில் அருந்ததிராய் அறிவாற்றலுள்ளவர் அல்ல என்றும் மேலும் இவர் ஒரு மேல் தட்டு கிருஸ்தவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 
என்னுடைய ஆதங்கம் அவர் எந்த அளவு கோல் கொண்டு அருந்ததியின் அறிவாற்றலை அளந்தார் என்பதே; அல்லது பெண் என்றவுடன் இவ்வாறு கூறுகின்றாரா எனவும் தெரியவில்லை.   அருந்ததியின் அம்மா மேரி ராய்http://en.wikipedia.org/wiki/Mary_Roy கேரளா பெண் எழுத்தாளர்களில் பிரபலமான ஒருவர்.  அவர் மிகச்சிறந்த பள்ளிக்கூடம் ஒன்றும் நடத்துகின்றார் கோட்டயம் என்ற இடத்தில். கோட்டயம் http://en.wikipedia.org/wiki/Kottayam
கேரளாவில் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் கொண்ட இடம். கலாச்சாரமான மக்கள் அடைங்கிய பகுதியே இது. கேரளா, தலைநகரம் (திருவனந்தபுரம்) மக்களை விட பண்பாக பழக தெரிந்தவர்கள், அழகான மலையாளம் பேசுபவர்கள், மற்று மாநிலத்தவர்கள், சிறப்பாக தமிழர்களை மதிக்கும் பண்பு கொண்ட மக்கள் வசிக்கும் இடம்.  அருந்ததியின் அம்மா சிறியன் கத்தோலிக்கர் சமூக அமைப்பை சேர்ந்தவர்கள்.  கேரளாவின் கல்வி, சமூக, அரசியல் மற்றும்  ஊடக மாற்றங்களுக்கு பெரும் அளவு பங்களித்தவர்கள்  இச்சமூகத்தில் உள்ளனர்.http://en.wikipedia.org/wiki/Saint_Thomas_Christians
அவருடைய அம்மா அறுபதுகளிலே பங்களாதேஷ் நாட்டவரை திருமணம் செய்தவர்!  அவர் பெண்களுக்கும் பெற்றோரின் சொத்தில் பங்கு உள்ளது என உச்ச நீதி மன்றம் வரை சென்று  போராடி வெற்றி பெற்று தந்தவர்.

அருந்ததியும் தன் வாழ்க்கையில் அசாதாரணமான சூழலில் கடந்து சென்றவர்.  உடன் படித்த தோழனை மணம் முடித்து சாப்பாடுக்கு வழியின்றி வீடற்று தெருவில் வசித்து, பின்பு விவாகரத்து பெற்று தற்போது கிறிஸ்தவர் அல்லாத ஒருவரை மணம் செய்து வாழ்ந்து வருபவர்.  தனது முதல் நாவலுக்கே புக்கர் பரிசு பெற்றவர்.http://en.wikipedia.org/wiki/The_God_of_Small_Things.அவர் எழுதும் செய்தி கூட வீட்டிலிருந்தோ குளிரூட்ட பட்ட அலுவலங்களிலோ இருந்து எழுதாது மக்களின் மக்களாக அவர்களில் ஒருவராக அவர்களுடன் தங்கி அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்தே எழுதியுள்ளார். ஒரு பெண்ணிடம் இதை விட என்ன அறிவாற்றல் துணிவு எதிர்  பார்க்க இயலும். தற்போதுள்ள பல பெண் ஊவியாளர்களில் இருந்தும் வித்தியாசமான பல கருத்துக்களை அவரின் கட்டுரையில் காணலாம். மக்களின் இதய துடிப்பை தனது எழுத்தால் கொண்டுவரும் அருந்ததியால் இந்தியாவுக்கு ஆபத்தா? அல்லது பணத்திற்க்காக அன்னிய நாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு நமது காட்டின் கனிம வளங்களை விற்க்க துடிக்கும் அதிகார வர்கத்தால் நாட்டுக்கு கேடா?
மேலும் அருந்ததி கிருஸ்தவர் என அறிக்கையிடுவது வழியாக இந்தியா நாடு மேல் இந்துக்களுக்கு மட்டுமே அக்கரையுள்ளது போல் காட்டி கொள்கின்றனர். சுதந்திரம் காந்தியின் கொழ்கையான சத்தியாகிரகத்தாலே கிடைத்தது என பரைசாற்றியது வழியாக மற்று மதஸ்தரின் பங்கை சுதந்திர போராட்டத்தில் இருந்து வசதியாக மறைத்து கொண்டனர். மேலும் ஆயுத போராட்டமான சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களுடைய பங்கை கூட காந்தி என்ற பெரிய போர்வயால் மறைத்து விட்டனர் என்பதே உண்மை. காந்தியின் பக்கமிருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் பெரும் மதவாதிவளாக இருந்துள்ளனர். மேலும் நேருவே வளர்ச்சி என்ற பெயரில் 'ஊழல்' என்ற பேய்க்கு முதல் அனுமதி சீட்டு கொடுத்துள்ளார். அருந்ததி கிருஸ்தவர் என நிலை நாட்டி கொள்ள விரும்பியிருந்தால் கிருஸ்தவரை திருமணம் செய்து ஊர் ஊராக போதனை செய்து கொண்டிருந்திருப்பார், அல்லாது பழங்குடியினருடன் தங்கியிருந்து செய்தி சேகரித்து கொண்டிருந்திருக்க மாட்டார். மேலும் கிருஸ்தவர்களும் மேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பட்டவர்களா?  அவர்களும் இந்திய மண்ணின் மைந்தர்களாக இருந்து தங்களுக்கான உரிமைகள் மதம் என்ற பெயரில் மறுக்க பட்ட போது ஒரு மதத்தை களைந்து தங்களை மதிக்கும் மதங்களை தாவி சென்றவர்களே.

 
மேலும் பெண்கள் என்றாலே பொதுத்தளத்தில் கூடஇளக்காரமாக பேச தயங்குவதில்லை என்பதையே காட்டுகின்றது இப்பிரச்சனை. காஷ்மீர் என்பது இந்தியாவுடையது என்பது அரை உண்மையே என அரசியில் எழுத்தாளர் கிருஷ்ணா ஆனந்த் இந்த வாரம் ஞாயிரு செய்திமலர் 31-10-10 P- 5 ல் கூறியுள்ளார்.  அரை பொய்யை பற்றி அருந்ததி போன்றோர் கூறும்போது மட்டும் ஏன் கோபம் வருகின்றது
இதே போன்று ஈழப்போருக்கு அவர் குரல் கொடுப்பதையும், புலிகள் செய்த கொடுமையை பற்றி ஏன் கூற வில்லை என எதிர் கேள்வி  கேட்டு கொண்டு வருகின்றனர்.  புலிகளை பற்றியும் அனிதா பிரதாப் என்ற பெண் பத்திரிக்கையாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டிருந்தார். அவரையும் இவ்விதமாகவே எதிர் கொண்டனர். களத்தில் சென்று செய்தி சேகரிக்க தொடைநடுங்கும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இது போன்ற பெண் பத்திரிக்கையாளர்களின் பணி மெச்ச கூடியதே போற்றா விட்டாலும் தூற்றாமலாவது இருக்கலாம்!