Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

11 Nov 2015

பெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்

படம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கியம் கொடுத்துள்ளமனர்.   இளைஞர்கள் மட்டுமல்ல இளமை கடந்து அனைவரும் தங்கள் இளமையை நினைக்க வைக்கும்  காதல் படம். எடுத்த விதம் கதை அமைப்பு தேர்ந்தெடுத்த இடம்(லொக்கேஷன்) இன்னும் அருமை. பாடல்கள் ஒவ்வொன்றும் மனதில் நிற்பவை.

என்ன கவர்ந்த விடையம் என்றால் படத்தில் வரும் மூன்று பெண் கதாப்பாத்திரப் படைப்பு தான் . முதல் கதாப்பாத்திரம் பள்ளிக்கூட மாணவி. ஊரை திரண்டு காதலுக்குகாக அவள் பின்னே ஓடுகின்றது. அவருக்கு காவல் வேலையாக இருக்கும் புள்டாக் என்று பொடியன்கள் பயத்துடன் அழைக்கும் அவள் அப்பா. அவள் பின்னால் பல விடலைகள் சுற்றினாலும் அவள் அலட்டி கொள்ளவே இல்லை. தமிழ் படக் கதாநாயகி போல் பயந்து அழது சாகவுமில்லை போராளியாக வெடித்து சாடவுமில்லை. மிகவும் லாவகமாக தைரியமாக புத்திசாலித்தனமாக கையாளுகுன்றார் பசங்களை. 


அடுத்தது கல்லூரி பேராசிரியை அதுவும் கொடைக்கானலில் இருந்து வரும் இளம் பேராசிரியாக சாய் பல்லவி என்ற நடிக்க தெரிந்த ஒருவர் நடித்துள்ளார். அந்த பெண் கதாப்பாத்திரமும் இளம் துடிப்பான சவாலான மாணவனை மிகவும் சாதுரியமாக கையாளுகின்றார் சில இடங்களில் ஏமாற்றுகின்றாதீகொஞ்சம் நெருடலாக இருந்தால் கூட). மாணவனுக்கு காதல் ஆசிரியையிடம் ஏன் வருகின்றது என்று கேள்விக்கு நியாயம் கற்பிக்காது; ஆசிரியை, அந்த மாணவனிடம் இருந்து சாதுரியமாக தப்பித்து கொள்வது அருமை.

அடுத்து கதாநாயகன் கைபிடிக்கும் தனக்கு கணவராக வரப்போகும் மனிதனின் எல்லா பக்கங்களையும் அறிந்து தன் வாழ்க்கையின் எல்லா பக்கஙகளையும் பகிர்ந்து பக்குவமாக ஏற்று கொள்ளும் இளம் பெண். சில கயவர்களால் பெண்கள் வாழ்க்கையில் வரும்; பெற்றோரால் தீர்க்க இயலாத பிரச்சினைகளைக் கூட கணவர்களால்  தீர்க்க வல்லது என்று ஒரு காட்சி ஊடாக சொல்கின்றது படம்.


இந்த மூன்று இயல்பான கதை அம்சம் கொண்ட கதாப்பாத்திரவும்  சாதாரண பெண்களை நினைவுப்படுத்துபவர்களாகவே இருந்தனர். சமீபத்தில் நான் பார்த்த "நானும் ரவுடி  தான் " படக்கதாநாயகி நயனும் மனதில் வந்து சென்றார். அணிவது எல்லாம் மாடன் உடை நடப்பது மாடேனாக; பேசுவது, செய்வது எல்லாம் முட்டாள் தனம் பைத்தியக்காரத்தம்! . 

இன்னும் ஒரு எடுத்து கூறவேண்டிய விடையம் மலையாளப்படத்தில் தமிழ் பெண் கதாப்பாத்திரம் என்றாலே பிச்சைக்காரி, வீட்டு வேலைக்காரி அல்லது வில்லனின் வைப்பாடி என்றபடியாகத்தான்  காட்டுவார்கள். இதில் ஒரு தமிழ் கல்லூரி பேராசிரியை; அவர் பின்னால் வழிந்து அலையும் ஒரு முரட்டு மாணவன் ஓர் வழிசல் பேராசிரியர். இவர்களை சிரித்த முகத்துடனே சமாளித்து, வாழ்க்கையில் தன் உறவினரை மணம் முடிக்கின்றார். அவர் தொழில் சார்ந்தும் திறமையானவர், எல்லா  மாணவர்களையும் ஒருங்கிணைத்து   முன்னேற செய்பவர்.  மொத்ததில் ஆளுமையான பெண் கதாப்பாத்திரம். ஒரு இடத்திலும் தமிழர்கள் மனதை புண் படுத்தும் படியான " ஒரு  வார்த்தையும் வரவில்லை.  80-90 மலையாளப்படங்களில் தமிழர்களை புண்படுத்தும் வார்த்தைகள் கருத்தாக்கங்கள் பரவி கிடந்துள்ளது கண்டுள்ளோம். அவ்வகையில் மலையாளிகள் தமிழர்கள் கலாச்சாரத்தை தனிதன்மையை மேலும் மதிக்க கற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. 

ரசிக்கும் படியான தமிழ் மல்லிகைப்பூ சென்றிமென்றில்   "நான் கோயிலுக்கு போடுவேன்" போன்ற தமிழ் உரையாடல்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் கொடுத்து சரி செய்திருக்கலாம்.  பொதுவாக தமிழ் படங்களில் கதாநாயகன் வாங்க நீங்க என பேசுவார் கதாநாயகி போடா வாடா என்பார். ஆனால் மலையாளப்பட தமிழ் நாயகி நீங்க வாங்க என கதைக்கின்றார் நாயகனோ ஆசிரியையாக இருந்தும் நீ ...உனக்கு என கதைக்கின்றார்.

என் மகன்,  படம் எப்படி இருக்கு என்று என்னிடம் கேட்டான். படம் எடுத்த விதம் நல்லா தான் இருக்கு ............ஆனால் காதலிக்க  ஆசிரியை தான் கிடைத்தாரா என்றேன். அவனும்  அவன் நண்பர்களிடம் என் கருத்தை கூறினானாம் அவர்கள் கூறினார்களாம் இது உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று. எது எப்படியோ கல்லூரி சாலை மாணவர் காதலில் ஆசிரியர்களையும் கதாபாத்திரமாக வர துவங்கினால் பெரிய அபாயக் குறி தான். மகாபாரத கதை தான் நினைவில் வருகின்றது. விராட மன்னரின் மகளுக்கு போர் புரிய  இரத ஓட்டியான அர்சுனனன் உதவியிருப்பார். போரில் வெற்றி கொண்ட போது மன்னர் தன் மகளை அர்சுனனுக்கு மணம் முடித்து கொடுக்க மகிழ்ச்சியுடன் முன் வருவார். ஆனால் அர்சுனனனோ நான் குரு இடத்தில் இருந்து வித்தையை கற்று கொடுத்தவன். ஒரு குரு மாணவியை மணம் முடிப்பது சாஸ்த்திரத்தால் ஆகாது உங்களுக்கு விருப்பம் எனின் என் மகனுக்கு மணம் முடித்து கொடுங்கள் என்பார். ஆனால் நியத்தில் பல ஆண் ஆசிரியர்கள் தங்களுடைய பல மாணவிகள் தற்கொலைக்கு காரணமானது கூட்டி கொண்டு ஓடி  தாலி கட்டினவர்கள் என பல வகையில் உண்டு. இது போன்ற ஈனச்செயல்களை கண்டு கொள்ளாத கலாச்சார உலகம் ஆசிரியைகளும் வேட்டையை ஆரம்பித்தத போது வெகுண்டு எழுந்தனர். 

ஆனால் படம் பார்க்க பார்க்க மனம் பதைபதைத்தது. ஆசிரியை பதவியின் மாண்பை  இந்த படம் காத்தது என்பதிலும் படக்குழுவுக்கு ஒரு வணக்கம்.  

மொத்தத்தில் எல்லோரையும் தங்கள் பள்ளி கல்லூரி வளாகத்திற்குள் அழைத்து செல்லும் படம். கடைசியாக காதல் பற்றிய ஒரு தத்துவம் சொல்லுவார்கள்   எல்லார் வாழ்க்கையிலும் பட்டாம்பூச்சி போல் வரும் பைத்தியம் போன்றது காதல் என்று. காதல் ஒரு பைத்தியம் தான். அதை வாழ்க்கைக்கு உதவுவதாக மாற்றும் தன்மை, அறிவான மனிதர்களிடம் உள்ளது என்று சொலியுள்ளார்கள். ஆட்டோகிராப் திரைப்படத்தை  நினைவுப்படுத்திய மொத்தத்தில் ரசிக்கும் படியான படம் பிரேமம்!.

27 Sept 2012

திலகனும் அம்மாவும்!

திலகன் என்ற மாபெரும் நடிகரை துயரில் ஆழ்த்தி அவரை விரைவில் கொல்ல காரணமாக இருக்க "அம்மா" என்ற மலையாள திரை உலக இயக்கம்  பங்கு மிக அளவில்  உண்டு. 

ஆனால் நான் சொல்ல வருவது திலகனுடைய பெற்ற தாய்-சேய் பற்றிய சிறிய தொகுப்பாகும். திலகனிடம் ஒரு செய்தியாளர் அம்மாவை பற்றி வினவிய போது அம்மா என்றால் ஒரு பந்தம் மட்டுமே. அது ஆத்ம உணர்வு  என்ற அளவிற்க்கு இல்லை என்றிருந்தார்.  அவருடைய வாழ்கை சொல்லிய ஆழமான பாடமாகும். 

திலகன் ஒரு எஸ்டேட் அதிகாரியின் 6 குழந்தைகளில் இரண்டாவது மகனாக பிறக்கின்றார். திலகனின் எதிர்ப்பு குணம் ஆரம்பித்ததே திலகனுடைய வீட்டில் இருந்து தான்.  தன் கீழ் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை ஆட்சி செய்யும் ஒரு அதிகாரியான அவர் அப்பா காங்கிரஸ்காரராக இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவருடைய மகனான திலகனால் தன்னுடைய கம்னீஸ்ட் சிந்தனையை வெறுக்க இயலவில்லை. தன் தகப்பன் அறிந்தால் பூட்ஸ்காலால் மிதிப்பார் என்று அறிந்தும் கம்னீஸ்ட்காரராக மட்டுமல்ல ஆட்சி செய்யும் போக்கை எதிர்க்கும் நாடகம் அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதில் குறியாக இருக்கின்றார்.

திலகன் தகப்பனார் மகன் கல்லூரியில் படித்து நல்லதொரு நிலையில் வர வேண்டும் என விரும்புகின்றார். ஆனால் மருத்துவ படிப்பில் ஒரு வருடம் படித்து தோல்வியுடன் திரும்பி வருகின்றார்.  தங்கள் ஜாதி மதம் சிந்தனையில் ஆழமான வேரூன்ன்றிய குடும்பத்தில் பிறந்த திலகன் இது போன்ற சுவர்களை உடைப்பவராகவே இருக்கின்றார்.

திலகனின் போங்கு பிடிக்காத தாய் திலகனுக்கு உணவு கூட கொடுக்க மறுத்து வீட்டுக்கு வெளியில் அடித்து துரத்துகின்றார். தோட்டத்திலுள்ள மரச்சீனி கிழங்கை உணவாக உண்டு பல நாட்கள் வாழ்ந்ததாகவும் பல நாட்கள் படியுடன் அழுது கொண்டே தோட்டத்தில் தூங்கி போனதகாவும் சொல்கின்றார். ஆனால் அவருடைய அம்மாவோ கிருஸ்தவர்கள் வீட்டில் உணவு உண்ணக்கூடாது. அவர்கள் பாத்திரங்களை சோப்பால் கழுவதால் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் தாய் உணவு கொடுக்காத போது ஒரு கிருஸ்த குடும்பத்தில் தான் உணவு உண்டதாக நினைவு கூறுகின்றார். 

 ஒரு முறை ஒரு நாடக வேலை முடிந்து தன்னுடன் நடித்த நடிகைகளை வழி அனுப்பி விட்டு வரும் மகனிடம் தாய் சந்தேகமாக நடந்து கொள்வது மட்டுமல்லாது வார்த்தைகளால் குத்தி பேசி  நோவடிக்கின்றார். சினம் கொண்ட திலகன் அயலை மீனுடன் சோற்றையும்  தூக்கி எறிந்து விட்டு போனவர் பின்பு 40 வருடம் கடந்தே தன் தாயை எதிரேற்க  வருகின்றார். தன் தாயும் தன்னை காண விளையாததை எண்ணி வருந்தும் திலகன் தாய் சேய் உறவுக்கு தேவைக்கு அதிகமாக கற்பனையான சில அவஸ்தைகள் சொல்லப்பட்டாலும் இதில் துளியும் உண்மை இல்லை என்பதாக தான் உணருவதாகவே சொல்கின்றார். இது போன்ற அடக்கு முறையில் வளர்ந்த திலகனின் தந்தை பல படங்களில் தனக்கு ரோல் மாடலாக இருந்ததாகவும் சொல்கின்றார். ஆனால் திலகன் தனது இரு ஆண்- பெண் குழந்தைகளுக்கு அன்பான அப்பாவாகவே தன் முடிவு மட்டும் இருந்துள்ளார் என்பதும் எடுத்து கொள்ள வேண்டிய தகவலாகும்.

 
இப்படியாக தான் பேசிய கருத்துக்களுக்காக வாழ்கை முழுதும் போராடி வாழ்ந்து காட்டி மரித்தவர் திலகன் என்றால் மிகையாகாது. மலையாள திரை உலகில் இவர் போன்ற பல ஆளுமைகளை கண்டு உணரலாம். அதில் தன் உருவத்தாலும் குரலாலும் மற்றவர்களுக்கு கவுரவமான கோபக்காரராக தெரிந்திருந்தாலும் நான் யாரையும் பின்னால் நின்று சதி செய்தது இல்லை, பிடிக்காததை முகம் நோக்கியே சொல்லியுள்ளேன். சொல்வதை சொல்லும் நேரம் சொல்ல வேண்டும். பிடிக்காத உண்மைகளும் உண்மை தான். மழுப்பல் நம் சமூக நம்பகதன்மையை அழித்து விடும். உண்மையை உண்மையாக முகம் நோக்கி பேச வேண்டும் என சொல்வது மட்டுமல்லாது வாழ்ந்தும் காட்டி சென்றுள்ளார்.

25 Sept 2012

திலகன் என்ற கலைஞனின் மரணம் !


 


திலகன் மலையாளத்திரையுலகில் எடுத்து சொல்லக்கூடிய அறிய நடிகர்.  நாடகத்தில் இருந்து சினிமாவுக்குள் பிரவேசித்தவர்.  தன் இயல்பான, ஆளுமையான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தவர். இன்றைய மலையாள சூப்பர் ஸ்டார்கள் மிளிர திலகன் நடித்த பல படங்கள் காரணமாகின.  அன்பான அப்பா, பொல்லாத தகப்பன், கண்டிப்பான  அப்பா என பல கதாபாத்திரங்களில் இழகி சேர்ந்து நடித்தவர்.
 கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் அய்ரூர் என்ற இடத்தில் பிறந்த சுரேந்திர நாத் திலகன் கேரளா எஸ்டேட்டில் வேலை செய்த ஒரு அதிகாரியின் கேசவன் -தேவயானி தம்பதிகளின்  6 மகனாவார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள்  உண்டு. பல விருதுகளுடன் பத்மஸ்ரீ விருதும் பெற்ற நடிகர் ஆவார்.


ஆனால் தன் வயது முதிர் காலத்தில் தனக்கு பிடித்த நடிப்புடன் வாழ வேண்டும் ஆசை கொண்டிருந்தவருக்கு பேரிடியாக வந்தது மலையாள திரை உலக இயக்கம் "அம்மா" வின் சில நடைவடிக்கைகள் .  ஒரு நல்ல நடிகனுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை தட்டி பறித்தது தயாரிப்பாளர்களிடம் திலகனுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என சட்டமிட்டது. அவர் சொல்லாத சில வார்த்தைகள் குற்றசாட்டுகளாக  கூறி வெளியேற்றியது.  இவருடன் பல படங்களில் நடித்த நெடுமுடி வேணு என்ற நடிகரே பல கோள்மூட்டல்களுக்கு காரணமாகி திலகனுடைய  சமநிலையை தகர்த்தனர்.  ஒரு கட்டத்தில்  போற்றுதல்குரிய நடிகரை அழ வைத்தனர்  சூப்பர் ஸ்டாருகளான மம்மூட்டி மோகன்லால் போன்றோர்.


இவர் மட்டுமல்ல கேப்டன் ராஜு, காமடி நடிகர் மாள அரவிந்தன், காலம் சென்ற கொச்சின் ஹனீபா போன்றோரும் இதே போல் துன்புறுத்த பட்டனர். கொச்சின் ஹனீபா மனைவி தன் கணவர் இறப்புக்கு பின்பு மம்மூட்டியை குற்றம் சாட்டியிருந்தார். மற்று நடிகர்கள் அமைதிகாத்து  தாங்களாக எரிந்து தீர்ந்த போது திலகன் தன் கருத்துக்களால் பத்திரிக்கையாளர் உதவியுடன் போராடினார். இயக்கம் கலைஞர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதை விடுத்து அச்சுறுத்தல் கொடுத்து கட்டுப்படுத்தி அழித்ததில் திலகனும் பலியானார்.

கருத்து சுதந்திரம், ஈர மனதினர் என நாம் எண்ணும் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் மம்மூட்டி மோகன்லால் போன்றோர் தமிழ் சினிமாவில் சிலதில் நடித்த பின்பு  அராஜகத்துடன் மலையாள சினிமா உலகு போங்கையும் மாற்றினர். இதில் சிரிப்பு நடிகர் 'இன்னசென்ற்' என்பவரில் கோமாளித்தனமான வில்லத்தனமான பங்கும் நிறையவே உண்டு.  பிரத்வி ராஜ் போன்ற சில இளம் நடிகர் போர் கொடி தூக்கினாலும் ஒன்றும் எடுபடவில்லை. மக்கள் பின் துணை திலகனுடன் இருந்ததால் அடக்கி வாசித்தனர் ஆனால் மறை முகமாக எல்லா தீங்கும் செய்தனர். திலகன் வார்தைகள்!


இந்த அராஜகமான ஆளுமை சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறையிலும் மலிந்து விட்டது. திரை உலகு என்றதும் எளிதில் வெளிச்சத்திற்க்கு வருகின்றது அவ்வளவே. நாம் காணும் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஏன் மதக்கூடாரங்கள் என இந்தியர்கள் சிறப்பாக தென் இந்தியர்கள் கூடும் இடம் குப்பை குளங்கள் தான். சமீபத்தில் கண்ட மலேஷியா தோழியும் இதைத் தான் சொன்னார், சீனா முதலாளியிடம் சீனாக்காரர்களுடம் வேலை பார்க்கலாம், தென் இந்தியர்கள் இருக்கும் இடமே கோள் மூட்டலும் கால் வாரலும் கொண்டு நிறைந்தே இருக்குமாம்.