19 Dec 2022

புத்தக விமர்சனம் - விலகி போகாத நினைவுகள்

 


மத நிந்தனை செய்ததாகக் கூறி 2010 ல் ஒரு ஜூலை மாதம் மத வெறியர்களால் கை துண்டிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் டி.ஜே.ஜோசப்பின் சுயசரிதை ஆகும் ’விலகி போகாத நினைவுகள்’(அற்று போகாத்த ஓர்மகள்)! இப்புத்தகம்   2021 ஆம் ஆண்டின் கேரள சாகித்ய அகாடமி விருதை பெற்றது. ஜோசப்பின் 'அற்று போகாத்த ஓர்மகள், மதத் தீவிரவாதத்தைப் பற்றிய சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவங்களின் தொகுப்பு மட்டுமல்ல, ஒரு தனி நபரின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களும் ஒன்றுக்கு பின் ஒன்றாக சந்தித்த  சோதனைகளும் அதை தொடர்ந்த  வலிகளும் இழப்புகளும் ஆகும்.  

 

மலையாளப் பாடம் தேர்வுத் தாளில் கேள்வி அமைத்ததில் (internal exam) ஒரு கேள்வியில் இருந்த ஒரு வார்த்தைக்காக குற்றவாளியாக மாற்றப்பட்டு ஜெயிலுக்கு சென்றவர்,  பிற்பாடு கை இழந்து, வேலை இழந்து கடைசியில் தனது மனைவியையும் இழந்தார்.

 

உயிருக்கு பயந்து வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பேராசிரியர், ஒரு நாள், தனது சுகவீனமான தாயார்  மற்றும் கிறிஸ்தவ சபை பெண் துறைவியான தனது சகோதரியுடன் ஞாயிறு காலை நேர ஆராதனைக்கு போய் விட்டு தனது காரில் திரும்புகிறார். சாலையின் ஒரு வளைவில் வைத்து, பேராசிரியரின்

காரை இன்னொரு வாகனத்தை வைத்து இடை மறித்து,  தாய் மற்றும் சகோதரியின் முன் வைத்து, கைக் கோடாலி மற்றும் மூன்று கத்திகளால் கை மொளி, கணங்கால் வெட்டப்பட்டு தெருவில் கிடக்கிறார்.

 

இச்சம்பவம் வீட்டினருகில் நடந்ததால், சத்தம் கேட்டு வந்த பொறியியல் கல்லூரி மாணவரான மகன் மற்றும் மனைவி துணையுடன் ஆம்புலன்ஸ் வருவித்து மருத்துவ மனையில் சேர்க்கப் படுகிறார். தனது நண்பனான பக்கத்து வீட்டு பேராசிரியரிடம் தன் அற்றுபோன கையை தேடி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கும் படி கேட்டு விட்டு  மருத்துவமனையை சென்று அடைகிறார் பேராசிரியர்.

 

18 மணி நேர நீண்ட அறுவை சிகிச்சைக்கு பின்பு கிடைத்த விரல்கள், கைகள் சேர்த்து வைத்து தைத்து சேர்க்கின்றனர்.  கவலை தோய்ந்த மகனை கண்டதும், அப்பாடா தலை தப்பித்தது, ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தோம் என ஆறுதல் படுத்துகிறார்.

 

இப்புத்தகம் வழியாக  கேரளாவில் நிலவும் இன்றைய மத சமூகம் எவ்விதம் தனிமனிதர்கள் உரிமைகளுக்கு எதிராக நிற்கிறது என காண்கிறோம்.  .

 

 

தன்னுடைய குற்றமின்மையை நிரூபிக்க நெடிய நான்கு வருட சட்டப் போராட்டம், பெரும் சிகிச்சை செலவுகள், வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதால் ஊதியம் இல்லா நிலை அத்துடன் வக்கீல் கட்டணம் பிள்ளைகள் படிப்புச் செலவு என்று ஆசிரியர் குடும்பம் கடும் வறுமைக்குள் விழ ஆரம்பிக்கிறது.

"ஆசிரியர் குற்றவாளி அல்ல' என்று கேரளா நீதிமன்றம் விடுவித்து இருந்தாலும்,பேராசிரியர் அங்கமாக கொண்ட "சீரோ மலபார் திருச்சபையின் தலைமையில் உள்ள கல்வி நிர்வாகம்". பேராசிரியரை வேலைக்கு திரும்பப் பெற அனுமதிப்பதில் தாமதப்படுத்திக் கொண்டு வருக்கிறது.

 

வேலையில் இருந்து கிடைக்க வேண்டிய ஊதியம், பல சலுகைகள் பெற இயலாது, கடன்கள் மத்தியில் ஊசலாடி கொண்டு இருக்கிறது ஆசிரியர் குடும்பம்.  ஆளும் கம்யூனிஸ்டு, பிற்பாடு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், எதிர்கட்சி கம்யூனிஸ்டு, மக்கள்நல வாழ்வு சங்கங்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு, சமூகத்தின் ஆளுமைகள் என எல்லா அமைப்பும் கல்லூரி நிர்வாகத்திடம் பேராசிரியரை திரும்பப் பெற வேண்டியும், கல்லூரி நிர்வாகம் மறுத்து வருகிறது.  ஆனால் பல உறுதி மொழிகளை கொடுத்து ஆசிரியரை தங்கள் பக்கம் வைப்பது போல பாசாங்கு செய்து, பேராசிரியர்  சட்டத்தை நாடாமல் இருக்கவும் தந்திரமாக செயல்படுகிறது. கடைசி வாய்ப்பாக கல்லூரி நிர்வாகம் விருப்ப ஓய்வு(voluntary retirement) என்ற ஒரு கருணையை பரிந்துரைக்கிறது.  நான்கு வருடங்களாக தொடர்ந்த  பிரச்சினைகள், வறுமை அத்துடன் மனைவியின் மனநிலை பிறழ் நோயுடனும் மல்லிடு கொண்டு இருக்கும் பேராசிரியர், வேலை திரும்ப பெற்றால் இழந்த வாழ்க்கையை  மீட்கலாம் என்று நம்பிக்கை கொள்கிறார்.

 

குடும்பம், ஜெபம் என்று மட்டுமே வாழ்ந்த வெளியுலகம் அத்தனை பரிசயம் இல்லாத பேராசிரியர் மனைவிக்கு, கிறிஸ்தவ சமூக விலக்கு நிலைகுலய வைக்கிறது . ஒரு கட்டத்தில் "மதங்களே இல்லாவிடில் எத்தனை நல்லது என்று புலம்ப ஆரம்பிக்கிறாள்", அத்துடன் பேராசிரியரை குற்றப்படுத்தவும் ஆரம்பிக்கும் மன அழுத்த நோய்க்குள்ளும் வீழ்கிறாள்.

 

ஆசிரியர் தனது மனைவியை முதன் முதலில் கண்டதை பற்றி இவ்வாறாக குறிப்பிடுகிறார். அரசு உதவி பெறும் கல்லூரியில் வேலை கிடைத்ததும் பெண் தேடும் படலம் ஆரம்பமாகிறது. கல்லூரி ஆசிரியரான ஜோசப்புக்கு  திருமணம் செய்து கொடுக்க அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலையிலுள்ள பல குடும்பங்கள் விரும்புகிறது. ஆனால் பேராசிரியருக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில், வெறும் 12 ஆம் வகுப்பு முடித்த, தகப்பன் இல்லா நிலையில் தாயின் அரவணைப்பில் வளரும் சலோமியை பிடித்துப்போய் விடுகிறது. தையல், அலங்காரம் போன்றவற்றில் பயிற்சி பெற்ற சலோமி தபால் வழியாக பட்டப்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை கொண்டவள். ஆனால்  நிறைவேறாத ஆசைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு குடும்பத் தலைவியாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு அமைதியாக வாழ்த்து வருகிறவள். இப்போதைய நிலையில் தினக் கூலி வேலைக்கு போகவும் சலோமி தயங்கவில்லை. ஏதாவது வேலைக்கு போக தன்னை அனுமதிக்க வேண்டுகிறாள். ஜோசப் என்ற பேராசிரியர் தனது மனைவி வீட்டை விட்டு வேலைக்கு போவதையும் விரும்பவில்லை. ஆனால் மனைவியின் மன நோயை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று பணிவிடை செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் சலோமிக்கு, தன் மகள் திருமணம் எப்படி நடக்கும், வீட்டை எப்போது கட்டுவது, கடனில் இருந்து எப்போது தப்பிப்பது என்ற கவலையும் மன அழுத்தமும் சேர்ந்து  நடமாட இயலாத வண்ணம் படுக்கையில் விழ வைக்கிறது.



ஒரு சூசையப்பர் திருநாள் அன்று, கோயிலுக்கு போய் வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள் சலோமி. ஆயிரம் வெட்டில் பதறாத பேராசிரியர், தனது மனைவி இறந்ததும் உடைந்து நிலைகுலைந்து போகிறார்.

ஆனால் சலோமியின் மகள், இத்தனை துன்பத்தின் இடையிலும் கல்வி கடனில் படித்து செவிலியர் படிப்பை முடித்து அயர்லாந்து நாடு செல்கிறாள். அங்கிருந்து தனது ஊதியத்தை அனுப்ப ஆரம்பிப்பதுடன் குடும்பம் வறுமையில் இருந்து கரையேறுகிறது. பிற்பாடு தெலுங்கானாவை சேர்ந்த பாலமுரளி என்ற இந்து மனிதரை திருமணம் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.

மகளுக்கு கல்வி கொடுத்த தைரியம், கல்வி பெற இயலாத சூழலில் வளர்ந்த சலோமிக்கு கிடைக்க வில்லை.

ஆசிரியரின் வழக்கில் எந்த வகையிலும் குற்றவாளியாக இல்லாத சலோமி; காக்கா, குருவி, அணிலுக்கு,  உணவு வைத்து மகிழும் சலோமி, தனது உயிரை ஈடு வைத்து தனது கணவருக்கு திரும்பவும் வேலை கிடைக்க தனது தற்கொலையை ஒரு ஆயுதமாக பாவிப்பதுடன் ’நிறுவன’ கொலைக்கு இரையாகிறாள்.

பேராசிரியர் ஜோசப்பின் வாழ்கை சரிதத்தில் ஆரம்பித்து சலோமி என்ற எளிய பெண்ணில் மரணத்துடன் வாசகர்களை நிலம் குத்தி நிற்க செய்கிறது புத்தகம்!.

 

சலோமியின் மரணத்தை தொடர்ந்து, சமூக அழுத்தத்தால், கல்லூரி நிர்வாகம் வேலையில் திரும்பப்பெற சம்மதிக்கிறது. வேலையில் தொடர ஆசை இருந்தும்; வெள்ளிக் கிழமை வேலையில் பிரவேசித்து, சனி, ஞாயிறு விடுமுறைக்கு அடுத்த நாள், திங்கள் அன்று வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் அவல நிலைக்கு தள்ள வைக்கிறது  கல்லூரி நிர்வாகம்.

10 வருடங்களுக்கு பின் கையை வெட்டியவன் பேராசிரியரிடம் மன்னிப்பு பெற்று விட்டார். பேராசிரியருக்கும் வெட்டியவன் மேல் எந்த ஆதங்கமும் இல்லை. ஆனால்  தான் நம்பின தனது மத நம்பிக்கையோடு இணைந்த, தன் சகோதரி துறவியாக சேவையாற்றும்  சபை தன்னை முற்றிலும் புரக்கணித்ததை பேராசிரியரால் இன்னும் ஜீரணிக்க, புரிந்து கொள்ள இயலவில்லை.  பேரா தி.ஜா. ஜோசப் தனது சர்ச்சைக்குரிய கேள்வியால் இஸ்லாத்தையும், முகமது நபியையும் மட்டுமல்ல  நம்முடைய பரிசுத்த திரித்துவத்தையும்  அவமதித்துள்ளார் என்று கிறிஸ்தவ கல்லூரி நிர்வாகம் கூறினது பேராசிரியரை அதிர்ச்சிக்குள் ஆக்குகிறது.  

 

 

கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளில் வாசிக்கும் சுற்றறிக்கை வழி ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை தனிமைப்படுத்துவதை கதையில் காண்கிறோம். பேராசிரியர் சிறையில் இருக்கையில், ​​தீபிகா என்ற கிறிஸ்தவ நாளிதழில்  பேராயர் மார் ஜோசப் பவத்தில் மதச்சார்பின்மை என்ற கட்டுரை வழியாக ”ஒரு கிறிஸ்தவப் பெயர் தாங்கிய ஒரு ஆசிரியரிடமிருந்து இந்தச் செயல் வந்திருக்கக் கூடாது” என்று கிறிஸ்தவ சபை மக்களை முழுதும் பேராசிரியருக்கு எதிராக அணி திரட்டும் பிரசாரங்களை முன்னெடுகும் போது ஒரு தனி மனிதராக எதிர் கொள்ளும் சூழலையும் விளக்கி உள்ளார் . தனக்கு எதிராக செயல்பட்டதால் கர்த்தர் கொடுத்த தண்டனை என கொக்கரிக்கும் உடன் பணியாற்றும் பெண் துறவியின் வார்த்தைகளையும் பகிர்ந்துள்ளார். ஒரு ஆசிரியராக எளீய வாழ்க்கை வாழ்ந்து வந்த பேராசிரியர், கதை, ஜெயில், காவல்னிலையம் வழக்காடு மன்றம் என்ற சட்ட அமைப்பில் சிக்கி தவிக்கும் நிலையையும் வாசிக்கிறோம்.

 

கேரளாவின் இட்டுக்கட்டின ’மேம்பட்ட சமூகம்’ என்ற முகத்திரையை கிழித்த புத்தகம் இது. ஆயிரம் தரம் வெட்டுப்பட்ட கைகால்களுடன் வாழ்ந்து வரும் பேராசிரியர் தற்போது  வலது கையால் எழுத இயலாத நிலையில்  இடது கையால் எழுத கற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு கேள்வியால், தான் சார்ந்த சபையின் எதிர்ப்பை சந்தித்து, தனிமையில் தள்ளப்பட்ட, அவரறியாதே  மத-அரசியல் போரில் இரையாகி மடிந்த பேராசிரியரின் சரிதை இப்புத்தகம் விருவிருப்பாக வாசிக்க வைக்கிறது. ஒரு ஆசிரியர், ஒரு நல்ல ஆசிரியராக மட்டும் இருந்தால் போதாது என்று உணர்த்திய புத்தகமும் கூட! ஆசிரியருக்கே உருத்தான பகடியுடன் கதையை நகத்தும் பாங்கு சுவாரசியமானது. ஒரு கிராமத்து பேராசிரியர் சர்வதேச மத விரோத அரசியலில் மாட்டுப்பட்ட கதை சொன்ன சுவாரசியமான எளிய மனிதனின் வாழ்க்கை துயரை மிகவும் இயல்பாக கொஞ்சம் பகடியாகவே சொல்லிய புத்தகம் இது. இதன் ஆங்கில மொழியாக்கம்  ‘ A Thousand cuts‘ என்ற பெயரில் பென்கிவின் பதிப்பகத்தால் வெளிவந்து விட்டது.

18 Oct 2022

நெல்லையப்பர் கோயில் பெயர் வரலாறு!

 

பெருவாரி தென் இந்திய கோயில்கள் கடல், மலை மற்றும் காடுகள் அருகில் இருப்பதாகவே உள்ளது. பழம் நாட்களில், மனிதர்கள் மரங்களில் கடவுள் இருப்பதாக எண்ணி மரங்களை வணங்கி வந்துள்ளனர்.  அதன் நீட்சியாகவே உயரமான கோயில்கள் உருவாகி இருக்கலாம் என்கின்றனர். பிற்காலம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரம், ஸ்தலவிருக்ஷங்கள்  ஆகின.

நெல்லையப்பர் ஆலயம் உருவான காலம் பற்றி ஒரு திட்டமான தகவல் இல்லை.  ஆனால்  ஒரு கோயிலின் காலதின் வரலாறு, இலக்கியம் மற்றும் பக்தி கிரந்தங்களில் உள்ளவையோ அல்லது கட்டிட கலையின் அமைப்பை வைத்தோ கண்டு பிடிக்க இயலும். அவ்வகையில் நெல்லையப்பர் கோயில் காலம் ஏழாம் நூற்றாண்டு எனக் கணக்கிடுகின்றனர்.

 

இக்கோயிலின் கற்பகிரகத்திலுள்ள சிறு விக்கிரகம்  மற்றும் அரை மண்டபம் , ஏழாம் நூற்றாண்டில் சேந்தன் மாறன் உருவாக்கியுள்ள ’மலையாண்டி குறிச்சி’ கோயில் மாதிரி இருக்கிறது என்கின்றனர். அதனால் இந்த இரு கோயில்களும் ஒரே காலயளவில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது..

நெல்லையப்பர் கோயில், காந்தியம்மை மற்றும் சிவனுக்கும் என  850 நீளம் 756 வீதி என்ற அளவில் சமமாக பிரிக்கப்பட்ட இரட்டை கோயில் ஆகும்.  இக்கோயிலில் ஏழாம் நூற்றாண்டில் வணங்கிய மூர்த்தி  மூல மகாலிங்கம் ஆக இருக்கவே வாய்ப்பு உள்ளது  என்கின்றனர்.

திருவிளையாடல் மற்றும் ரெட்டை புலவர் வென்பாவில், இக்கோயிலின் மூல மூர்த்தி மூங்கில்களின் முத்து  என்ற பொருளில் வெய்முத்தார் என்றே குறிக்கப்பட்டு உள்ளது.  இக்கோயில் மூர்த்திக்கு அரிகேசரி பராக்கிரம பாண்டியன் ஒரு தங்க கிண்ணம் கொடுத்தாக  குறிப்பு உள்ளது .

13 ஆம் நூற்றாண்டில் மூங்கில் காட்டுக்கு இடையில் இருந்து வந்தால் வெய்முத்தார் அல்லது வேணு வனநாதர் ன்றும் அழைக்கப்பட்டுள்ளார். 17 வது நூற்றாண்டில் எழுதப்பாட்டகிளை வீடு தோது’ என்ற குறிப்பிலும் வெய்முத்தார் என்றே குறிப்பிட்டு உள்ளனர்.

 

இன்று அழைக்கும்  நெல்லையப்பர் என்ற பெயர் சுந்தர பாண்டிய 1 குறிப்பில் மட்டுமே உள்ளது. மற்றய பல குறிப்புகளில் இம்மூர்த்தியை

 திருநெல்வேலி தேவர்

திருநெல்வேலியுடைய தம்புரான்

திருநெல்வேலியுடைய நாயனார்

வேணுவனனேஸ்வரர் ,  வ்ரிகிவரிஸ்வரர், மற்றும்

திருகம்மகொட்டடு ஆளுடைய நாச்சி என்றே அழைழைத்துள்ளனர்.

 

மாறவர்மன் கொனெரின்மை கொண்ட பெருமாள் சுந்தர பாண்டியன் குறிப்பில்பூசம் பிரண்ட திருனெல்வேலி பெருமால்என்று அழைத்துள்ளனர். 17 வது நூற்றாண்டில் ஆட்சி செய்த மாறவர்மன் பொன்னின் பெருமாள் என்றும் அழைத்துள்ளார். அவ்வகையில் நெல்லையப்பர் காந்திமதி என்ற கடவுள் பெயர்கள் பிற்பாடு கொடுக்கப்பட்டது என்றே முடிவாகுகிறது.

 

அதே போல கோவிலில் கட்டிட அமைப்பை அவதானிக்கையில் அரமணிமண்டம் வரைநிற சீர் நெடுமாறன்’ கட்டியிருக்க வேண்டும் என்கின்றனர். மணிமண்ட இசை தூண்கள் மற்றும் நாயகமன்னர்கள் காலத்தையது என்கின்றனர்.

 

எப்படி இருந்தாலும் ஒரு சிறு மூர்த்தியுடன் நிலைகொண்ட கோயில்  பாண்டிய காலம் துவங்கியே ஆரம்பிக்கப்பட்டாலும் நாயகக்க காலத்தில் நிறைவு பெற்றுள்ளது.

9 Oct 2022

இரண்டாம் பாண்டிய தலைநகரம், தென்காஞ்சி திருநெல்வேலி!

 


இரண்டாம் பாண்டிய தலைநகரம் திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில், சென்னைக்கு தெற்கே அறுநூற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 'திருநெல்வேலி' என்ற வார்த்தையின் பொருள் புனித நெல் வேலி என்பதாகும்

பாண்டியர் தலைநகராக மதுரை இருந்ததால், நாயக்கர்கள் காலத்தில் அவர்களின் தென் தலைநகராக திருநெல்வேலி விளங்கியது.
ஆற்காடு நவாப்பினால் 1801 ஆம் ஆண்டு திருநெல்வேலி கையகப்படுத்தப்பட்ட போது" திருநெல்வேலிச் சீமை" என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு ஆங்கிலேயர்கள் தின்னவெல்லி என்று பெயரிட்டனர்.
மாணிக்கவாசகரால் தென் பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்ட, திருநெல்வேலி நகரத்திலிருந்து 1912 ஆம் ஆண்டு வரை நூறு கல்வெட்டுகள் நகலெடுக்கப்பட்டுள்ளன
தேவார மூவர்களால் பாடப்பட்ட பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களில் ஒன்றாகும் திருநெல்வேலி .
முதலில் நெல்லின் ஊர் என்ற அர்த்தத்தில் சாலியூர் என அழைக்கப்பட்டது. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் திருநெல்வேலியை "தென்பொருணை புனைநாடு" என்று குறிப்பிடுகிறார். மனோன்மணியம் நாடகத்தில் சுந்தரம்பிள்ளை திருநெல்வேலியை "பீடுயர் நெல்லை" என்று குறிப்பிட்டு உள்ளார்.
திருநெல்வேலியைப் பற்றிய குறிப்புகள் உள்ள ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாடல்கள் உள்ளன.
திருஞானசம்பந்தர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிற்குவருகை தந்துள்ளார்.
திருநெல்வேலியைக் குறிக்கும் மற்ற சுருக்கமான பெயர்கள் நெல்லை, நெல்லையம்பதி மற்றும் நெல்லையம்பலம் போன்றவை ஆகும்.



திருநெல்வேலியை தென்காஞ்சி என்றும் அழைக்கின்றனர். திருநெல்வேலியின் முந்தைய பெயர் "வேணுவனம்" என்று ஸ்தலபுராணம் கூறுகிறது. வேணுவனநாதர் கோயிலை மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர் ’ நின்ற சீர்நெடுமாறன் இக்கோயில் கட்டினான் என்பது வரலாறு.
களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவார் இவர். கடுங்கோன். கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டார்.
அவரை தொடர்ந்து அவனி சூளாமணி கி.பி.600 முதல் - 625 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னராவார். அவனி சூளாமணியின் மகனான செழியன்சேந்தன் 620 முதல் 642 வரை ஆட்சி செய்துள்ளார். அதன் பின் அவருடைய மகன் அரிகேசரிமரவர்மன் 641 முதல் 670 வரை பாண்டிய மன்னராக அரியணை ஏறினார்.
இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்ற பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளார். 640 ஆம் ஆண்டளவில்.பி. 640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றுள்ளார். சைவ துறவியான திருஞானசம்பந்தர் இவருடைய சமகாலத்தவர் ஆவார். அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி வந்திருந்தாலும் திருஞானசம்பந்தரால் சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார். வீரவநல்லூருக்கு அருகில் அமைந்திருக்கும் கிராமம் இவரால் அரிகேசரிநல்லூர் எனப் பெயரிடப்பட்டது.
நெல்லையப்பர் கோயில் சுவர்களில் பிற்காலச் சோழர்கள் மற்றும், பிற்காலப் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன.நெல்லையப்பர் கோயிலில் உள்ள சிறிய சன்னதியின் மேற்குச் சுவர் மற்றும் மூலமஹாலிங்கர் சன்னதியின் மேற்குச் சுவரில் காணப்பட்டும் வீரபாண்டியரின் (கி.பி.961) கல்வெட்டு திருநெல்வேலியை கீழ்வேம்புநாடு என்று குறிப்பிடுகிறது.
பாண்டிய நாடு சோழர்களின் கீழ் ஆட்சிக்கு வந்த போது கி.பி 991 முதல் ராஜராஜ வளநாடு என அறியப்பட்டது. கி.பி 1012 இல் ராஜராஜ மண்டலமாக பெயர் மாற்றப்பட்டது. 1022 முதல் ராஜராஜபாண்டியநாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நாடு இரண்டாக வல்லநாடு, மற்றும் முடிகொண்டசோழ வளநாடு என்று பிரிக்கப்பட்டு உள்ளது. வல்லநாடு பகுதி தற்போது திருநெல்வேலி மாவட்டம் ஆக உள்ளது. வளநாடு பல நாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டு விட்டது.
பிற்கால பாண்டிய பேரரசு முதல் விஜயநகர காலம் வரை நிர்வாக அமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளும் மாற்றம் பெற்றுக் கொண்டே இருந்தன.

வேணாட்டை ஆட்சி செய்த ரவிவர்மன் திருநெல்வேலியில் சதுர்வேதிமங்கலத்தை நிறுவி உள்ளார். நெல்லையப்பர் கோயிலில் பூஜைகள் செய்யும் விதம் ,அக்ரஹாரம் நிறுவி பிராமணர்களை குடியமர்த்தி இருந்துள்ளனர்.


மதுரை விஸ்வநாத நாயக்கர் (1529 – 1564) காலத்தில் தென் மாகாணத்தின் தலைமையகம் திருநெல்வேலி ஆனது.
மதுரா கையெழுத்துப் பிரதிப்படி மதுரை விஸ்வநாத நாயக்கரின் தளவாய் ஆக இருந்த அரியநாதமுதலியார் தான் திருநெல்வேலி சீமை(நகரம்) உருவாவதற்கு காரணமாக இருந்தவர்.
ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801 இல் ஆங்கிலேயர்கள் கையகப்படுத்தினர்.
மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நெல்லையப்பர், மற்றும் காந்திமதி அம்மன் கோயிலைச் சுற்றி திருநெல்வேலி வளர்ந்து வந்துள்ளது

திராவிடக் கோவில்களின் கட்டுமானம் - நெல்லையப்பர் கோயில் ஓர் பார்வை !


இந்தியாவின் கோயில்களின் - கட்டிடக்கலைப் மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது.      அவை  நாகரா, வேசரா மற்றும் திராவிட கட்டிடக்கலை ஆகும். இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது. தென் பகுதிகளில் திராவிட பாணி கட்டிடக்கலை பின்பற்றப்பட்டது.  திராவிட கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது









திராவிட கோயில் கட்டிடக் கலைகளின் சிறப்பம்சம் ஆக கருதப்படுவது  கருவறையுடன் கட்டப்படும் கோயில்கள்,  அதன் செறிவான வளையங்கள் கொண்ட சுற்றுப் பாதைகள்(பிரதக்ஷிண பாதைகள்) மற்றும், நீண்டு செல்லும் தாழ்வாரங்கள்,  கோவில் குளம்(தெப்பக்குளம்), திறந்த வெளிகள் (நந்தவனம்) போன்றவை கும்.



ஆலய கட்டிட அமைப்பு என்பது, நிகழ்த்தப்படும்  சடங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.  மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும் இதில் உள்ளடங்கும்.


கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன.


நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர மேடு கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை.



நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர் ஆட்சியாளர்கள் உருவங்கள்  உள்ளன.


கிழக்கு தாழ்வாரத்தில் நந்தி, பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது..

கி.பி 1155 இல் கட்டப்பட்டது நந்தியும், கொடிமரமும். நந்திமண்டபத்திற்கு அருகில் சூரியதேவர் உருவம் நிறுவப்பட்டுள்ளது.


நந்திமண்டபத்திற்கு அடுத்தபடியாக வேணுவனநாதர் கோவிலின் தெற்கு மாடவீதியில்; நான்கு சைவ  சிற்பங்களின் திருவுருவங்கள் உள்ளன. சந்தனாச்சாரியார், சப்தமாதாக்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள், பொல்லாப் பிள்ளையாரும், கைலாசபர்வதத்தை கையிலேந்திய படி  ராவணனும் உள்ளனர்



பள்ளிகொண்டபெருமாள் சன்னதி

ராஜராஜ பள்ளிகொண்ட பெருமாள் சுயம்புலிங்கம் தெற்கு திசையில் சாய்ந்த நிலையில் கட்டப்பட்டு உள்ளதுஇதன் வாயிலில் வலம்புரிப்பிள்ளையார், சந்திரசேகரர் மற்றும் தட்சிணாமூர்த்தி, பிக்ஷாந்தர் வேடத்தில் சிவபெருமான், சண்டேஸ்வரர் ஆகியோரின் உருவங்களும் காணப்படுகின்றன.


மேலும் தொடர்ந்தால்,  இந்த கோவிலின் மூலவிக்கிரகம் என்று கூறப்படும் பிட்லிங்கம் அல்லது திருமூல நாதர் உருவங்களை காணலாம்.

ஊஞ்சல் விழா



இந்த அம்பாள் கோயிலின் மற்றொரு அழகிய அமைப்பு திருகல்யாணமண்டபம் அல்லது திருமண மண்டபம் ஆகும்இது 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்டது ஐப்பசி மாதத்தில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் திருக்கல்யாணத்திற்குப் பிறகு கொண்டாடப்படுவது  ஊஞ்சல் விழா.  எனவே இந்த மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் தீவிர பக்தரான சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையின் அன்பளிப்பாகும்



ஊஞ்சல் மண்டபத்திற்கு வடக்கே புனிதமான தொட்டி, அதன் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன. இக்கோயிலில் கருமன் குளம் என்ற மற்றொரு குளம் உள்ளது. பெரும்பாலான திராவிடக் கோவில்கள் போன்றே நெல்லையப்பர் கோயிலிலும் இரண்டு கோவில் குளங்கள் (தெப்பக்குளம்) உள்ளன. இவை தேவையான சடங்குகளுக்கு பயன்படுத்துகின்றனர்.  முக்கியமாக  காற்றின் திசையில் உள்ள  தெப்பக்குளம், லேசான காற்றை உருவாக்கி உள்ளூர் காலநிலையை மிதப்படுத்தி  மேம்படுத்தி வைத்துள்ளது. கோயில் தெப்பக்குளங்கள் வற்றாதவை மட்டுமல்ல  பல்வேறு தாவரங்களுக்கு  அடைக்கலம் கொடுக்கும் படி உள்ளது.  மேலும் மழைநீர் சேகரிப்புக்கும் பயன்படுகிறது.


அற்புதமான இசைக் குறிப்பு மூலம் 

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இசைத் தூண்கள் மணிமண்டபத்தில் உள்ளன. ஒற்றைக்கல் ஒத்ததிர்வு அமைப்பில் செதுக்கப்பட்ட இசைத் தூண்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இந்த இடத்தை நடனம் ஆடுவதற்கு நடனக் கலைஞர் அல்லது தேவதாசிகள் பயன்படுத்தி உள்ளனர். மணிமண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாற்பத்தெட்டு தூண்களின் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நடனம் ஆடும் தேவதாசியின் உருவம் உண்டு. இந்த மண்டபம் திறந்த வெளி நடன அரங்கத்துடன் அமைந்துள்ளனர்.





சங்கிலி மண்டபம்
இருவரும் இணைபிரியா தம்பதிகள் என்றாலும்  சுதந்திரமானவர்கள்        என்பதற்கு இணங்க நெல்லையப்பர் மற்றும் அம்மனுக்கு வெவ்வேறு சன்னதிக வளாகத்தில் உள்ளன.   இவையை சங்கிலி மண்டபம் இணைக்கிறது

திருமலைநாயக்கர் காலத்தில் கி.பி.1647ல் திருநெல்வேலியின் ஆளுநரும் சிறந்த சிவபக்தருமான வடமலையப்பப்பிள்ளை இந்த மண்டபத்தை கட்டினார்.  சங்கிலி மண்டபம் தூண்களின் மீது யாழிகளின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளதுபச்சை வடிவேல் காசிவிஸ்வநாதர், அனுமன், அர்ஜுனன் மற்றும் பீமன் வைத்துள்ளனர். 

குமரன் கோயில் சங்கிலி மண்டபத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.


சோமவர மண்டபம் அல்லது நவராத்திரி மண்டபம்.

 நவராத்திரி மற்றும் கார்த்திகை மாதங்களில் சோம வார திருவிழா கொண்டாடப்படுகிறது. கல்லாலால் ஆன பீம்களூம்  ரதி, குறவம் மற்றும் குறத்தி பிரதிகள் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கே வன்னியடிசத்தனாரின் உருவங்கள் மற்றும் பைரவரும், மற்றும் யாகம் செய்யும் திருத்தலமும் காணப்படுகின்றன. வீரபத்திரன், அர்ஜுனன், கர்ணன், விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரின் சிற்பங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தோற்றத்தை உருவாக்குகின்றன



கோவில் வண்டி வீதிகள்.

திராவிட கட்டிடக்கலைப்படி, வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது .நெல்லையப்பர் கோயிலின் மற்றொரு சிறப்பு, ஒளி வரும் சாளரங்களின் அமைப்பாகும்.  தேவைப்படும் இடங்களில்  தெளிவான சாளரங்கள் வழங்கப்பட்டுள்ளன. திறந்த நடைபாதைகள், உட்புற இடைவெளிகளில் ஒளி ஊடுருவ அனுமதிக்கிறது.  கோவிலின் மையப்பகுதியான  கற்பகிரகத்தின் அமைப்பு  சூரிய கதிர்வீச்சின் தீவிரத்தை வடிகட்டி குறைந்த ஒளியை மட்டுமே  நுழைய அனுமதிக்கும் முறையில்  உள்ளது.





ஒரு பக்கத்தில் தோட்ட இடைவெளிகளில் திறக்கும் ஜன்னல்கள் மற்றும் மறுபுறம் கோவில் குளங்கள். கருவறையைச் சுற்றிலும் நிரம்பிய நடைபாதைகள், நடன அரங்கம் (தாமிரசபை) என கலைப்படைப்பின் உச்சமாகும் நெல்லையப்பர் கோயில்.


பொது இடங்கள் கோயில் வளாகம் மொத்த பரப்பளவில் 72% கட்டப்பட்ட இடங்கள் மற்றும் 28% திறந்தவெளிகள் ஆகும். இவை திறந்தவெளிகள் தோட்ட இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மலர்கள் இந்தத் தோட்டத்தின் மண்டபத்தின் மறுபுறம் நன்கு பராமரிக்கப்பட்ட இன்பத் தோட்டத்தில் இருந்து பெருகின்றனர்இந்தத் தோட்டத்தை வடிவமைத்தவர் திருவேங்கட கிருஷ்ண முதலியார்



1756 இல் நூறு தூண்களுடன் கூடிய சதுர வசந்தமண்டபம் இதன் நடுவில் கட்டப்படுகிறது. இந்த வசந்த மண்டபத்தில் நீர் சொட்டும் சிவபெருமானின் திருவுருவங்கள், அகஸ்திய முனிவர் மற்றைய முனிவர்கள் உள்ளது சிறந்து விளங்கும்  கட்டிடக் கலைஞரின் பணித் திறனின்  எடுத்துக்காட்டுகள் ஆகும்

 

கோவில் யானை வடக்கு மாடவீதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது