Showing posts with label Crime. Show all posts
Showing posts with label Crime. Show all posts

7 Nov 2021

பிடிகொடுக்காத குற்றவாளி குறுப்பு!

ஜனவரி 21, 1984 நள்ளிரவு! ஆலப்புழாவை சேர்ந்த 30 வயதான திரைப்படப் சுருள் பிரதிநிதியான சாக்கோ, கெனி (தி ட்ராப்) என்ற திரைப்படச் சுருளை வழங்குவதற்காக டாக்கீஸில் வந்துள்ளார். கடைசிக் காட்சி சினிமா முடிந்ததும் ஹரி டாக்கீஸ் உரிமையாளரின் மகன் கே.ஸ்ரீகுமாருடன் தேநீர் அருந்துகின்றார்.   
 
சக்கோவை  இரவு  தங்கிவிட்டு காலையில் கிளம்பச் சொல்கிறார் கே.ஸ்ரீகுமார். ஆனால் தனது  ஆறு மாத கர்ப்பிணி மனைவியை மறுநாள் காலை தேவாலய விழாவிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளாதால் வீடு போய் சேரவேண்டும்  எனக்கூறி விடைபெற்று செல்கிறார். அதன்பின் அவரை யாரும்  கண்டதில்லை.

அன்று இரவு சாக்கோ  பேருந்திற்கு  தனியாக காத்து நிற்கிறார். ஒரு கறுப்பு அம்பாசடர் KLQ 7831 கார்  அவரை இரண்டு முறை கடந்து செல்கிறது.  அந்த காரில் சுகுமார குருப்பின் விசுவாசமான டிரைவர் பொன்னப்பன், அவரது மனைவியின் சகோதரியின் கணவர் மற்றும் அபுதாபியில் உள்ள குறுப்புடன் வேலை செய்யும்  சாபு உள்ளனர்.  KLY 5959 என்ற மற்றொரு காரில் குறுப்பு அவர்கள் பின்னால் பயணிக்கிறனர்.
குறுப்பு அந்த சிற்றூரில் உள்ள புதுபணக்காரர். அன்றே இரண்டு டாக்ஸி கார் வெளிநாட்டில் வேலையில் இருந்தவர். ஆறடி உயரமான குறுப்பு ஊருக்கு வந்தால் கறுப்பு கண்ணாடி, கோட் சூட்டுடன் காரில் தான் உலவுவாராம்.


கடந்த சில மாதங்களாகவே குறுப்பின் உருவ ஒற்றுமை கொண்ட ஒரு மனிதனை தேடி அலைகின்றனர்.  ஆரம்பத்தில் குறுப்பின் தோற்றமளிக்கும் ஒருவரின் உடலை பிணவறையில் இருந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தார்.  அந்த திட்டம் தோல்வியடைந்ததும், கல்லறைகளை கொள்ளையடிக்க நால்வரும் திட்டமிட்டனர்.. அப்படியும் ஆள் கிடைக்காது அலைந்து  திரிந்தவர்கள் கண்ணீல் தான் அந்த இரவு சாக்கோ கண்ணில் படுகிறார்.


குருப்பு விமானப்படையில்  வேலையில் இருந்த  மனிதன். அந்த ஆளுக்கு விரைவில் பெரும் புள்ளியாக மாற வேண்டும். அரசு வேலையை கைவிட்டு விட்டு சவுதியில் ஒரு வேலை தேடி செல்கிறார். மருத்துவ மனையில் நர்சாக பணிபுரிந்த பெண்ணையும் காதலித்து திருமணம் செய்துள்ளார். அப்பேண்ணும் மும்பையில் பின்பு இரண்டு குழந்தைகள் உடன் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். குறுப்பு அபுதாபியிலிருந்து கேரளாவுக்குச் செல்வதற்கு சற்று முன்பு, 3,01,616 திர்ஹாம்கள் (சுமார் ரூ.30 லட்சம்) மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்துள்ளார். குறுப்புக்கு  தான் வாகன விபத்தில் இறந்ததாக சாற்றிதழ் வழங்கினால் 30 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெறலாம் என்ற நற்பாசை வருகிறது. அப்படி விபத்தில் சாக வைக்க ஒரு ஆளை தேடும் போது தான் அப்பாவி சாக்கோ மாட்டுகிறார்  


சாக்கோவைப் பார்த்தபோது ஆறடி உயரம், குறுப்பின் தோற்ற ஒற்றுமையும் தெரிகிறது. லிப்டு தரலாம் என்று கூறி காரில் ஏற்றிய பாஸ்கரன் , பொன்னப்பன் மற்றும் சாபுவும் சாக்கோவிற்க்கு விஷம் கலந்த மதுவை வலுக்கட்டாயமாக ஊட்டி, கழுத்தை நெரித்து கொல்கின்றனர். பின்னர் பிள்ளையின் வீட்டில் சென்று சாக்கோவின் ஆடைகள், திருமண மோதிரம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றைக் கழற்றி விட்டு, குருப்பின் உடையை அவருக்கு அணிவித்து, அவரது முகத்தைக் அடையாளம் தெரியா வண்ணம் கரிக்கின்றனர். பின்னர் உடலை KLY 5959 எண் காரில் ஏற்றி   கொல்லக்கடவு என்ற இயற்கை எழில் கொஞ்சும் கிராம் அச்சன்கோவில் ஆற்றை ஒட்டிய நெல் வயல் அருகே சென்றதும் சாக்கோவின்   உடல் KLQ 7831 eண் காரின் ஓட்டுநர் இருக்கைக்கு மாற்றப்பட்டு 10 லிட்டர் பெட்ரோல் ஊற்றி காரை வயலில் தள்ளி தீ வைத்து எரிக்க விட்ட பின்பு அங்கிருந்து திரும்புகின்றனர். அந்த வயல் இப்போது சாக்கோ பாடம் (சாக்கோ வயல்) என்று அழைக்கப்படுகிறது.

இதனிடையில் பாஸ்கரன் கையில் அணிந்து இருந்த கையுறை , பத்து லிட் பெட்ரோல் கேனை அங்கே விட்டு விட்டு செல்கின்றனர்.  பாஸ்கரன் கையிலும் தீபடுகிறது. காரின் எண் வைத்து அடுத்த நாள் குறுப்பு வீட்டிற்கு செல்கின்றனர். குறுப்பு குறுப்பின் சகலன் பாஸ்கரன் குடும்பம் ஒன்றாக இருந்து கோழிக்கறி வைத்து உணவு அருந்தி கொண்டு இருக்கின்றனர். போலிஸ் மனதில் முதல் சந்தேகத்தை வரவைக்கிறது.
சக்கோவை கடைசியாக சந்தித்த ஸ்ரீகுமார், சாக்கோ தியேட்டருக்கு வராததால், கவலைப்பட்டு அவர் வீட்டுக்குச் சென்று விசாரிக்கிறார்.  சாக்கோவின் குடும்பம் அசாதாரணமான எதையும் உணரவில்லை, ஏனெனில் சாக்கோ தனது வேலை நிமித்தமாக அடிக்கடி பயணம் செய்வதால் வீட்டில் இருந்து விலகி இருப்பவர்.  ஆனாலும் காவல்துறையில் புகார் பதிவு செய்யும்படி உறவினர்களிடம் சொல்லி விட்டு திரும்புகிறார் ஸ்ரீகுமார்.


வயலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அதற்குள் புதைக்கப்படுது. பிப்ரவரி 1 ஆம் தேதி, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சூப்பர் இம்போசிஷன் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி (நாட்டில் இதைப் பயன்படுத்திய முதல் நிகழ்வுகளில் ஒன்று) உடல் சாக்கோவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம், ‘சுகுமார குறுப் கொலை வழக்கு’ அதிகாரப்பூர்வமாக ‘சாக்கோ கொலை வழக்கு’ என்று பெயர் மாற்றப்பட்டுகிறது.


அந்தக் குற்றப்பத்திரிகையில் கொலை, குற்றச் சதி, சாட்சியங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் இரண்டாவது குற்றவாளிகளாகப் பாஸ்கரன் பிள்ளை மற்றும் பொன்னப்பன் கைது செய்யப்படுகின்றனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாபூ, போலீஸ் அனுமதியாளராக மாறினார். 


சுகுமாரக் குருப் மற்றும் பாஸ்கரன் பிள்ளையின் மனைவிகள் சகோதரிகள் ஆவர். அவர்களும் இந்த திட்டத்தில் இருப்பதாக போலீசார் நம்பினர், எனவே அவர்களை மூன்றாவது மற்றும் நான்காவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப் பட்டனர்.
செஷன்ஸ் நீதிமன்றத்தால் பாஸ்கரன் பிள்ளை மற்றும் பொன்னப்பன் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிற்பாடு பொன்னப்பன் தற்கொலை செய்து கொண்டான். பாஸ்கரன் பிள்ளை 12 வருடங்களுக்கு பின்பு விடுதலையாகி வயது மூப்பு காரணமாக இறந்தும் போனார். இதனிடையில் குறுப்புக்கு சாராயத்தில் கலந்து கொடுக்க வேதிப்பொருள் கொடுத்த கல்லூரி பணியாளரான  மது என்ற நபரும் தற்கொலை செய்து      கொண்டார்.  

     
குறுப்பை கேரளா போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். இதனிடையில் தப்பி சென்ற குறுப்பு பீகார், கொல்கத்தா போன்ற இடங்களில் வசித்ததாகவும் மருத்துவமனையில் சிகித்சை பெற்றதாகவும் பின்பு இறந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும், எத்தனை வருடங்கள் கழிந்தாலும் குறுப்பை போலிஸ் கைது செய்யும் என நம்பும் மலையாளிகள் மனதை விட்டு மறையாத குறுப்பை பற்றி ”குறுப்பு“ என்ற பெயரில் நவம் 12 அன்று ஒரு திரைப்படம் வரவுள்ளது. மம்மூட்டியின் மகன் கதாநாயகனாக நடிக்கிறார்.


தந்தை முகம் காணாத சாக்கோவின் 38 வயது மகன் தனது தந்தையின் கொலையாளியை பற்றி படம் என்று எடுப்பதை எண்ணி வருந்தி படக்குழு மேல் ஒரு வழக்கு தொடுத்து இருந்தார். படம் ரிலீஸ் ஆகும் முன் மகனுக்கு படத்தின்  ரிவ்யூ காட்டி ஒப்புதல் வாங்கியுள்ளனர் படக்குழுவினர்.


சாக்கோவின் கொலைக்கு காரணமான சுகுமாரக் குறுப்பு அந்நேரம் ஊரே மெச்சும் படி ஒரு வீடு கட்ட ஆரம்பித்து இருந்தார். அந்த வீட்டை கட்டி முடிக்க பணம் பற்றக்குறை என்பதால் சாக்கோவை கொன்று காப்புறுதி பணத்தை எடுக்க இருந்ததாக செய்திகள் வெளியானது.
அந்த வீடு இதுவரை முடிக்கப்படாது பேய் வீடு மாதிரி கிடக்கிறது. சாக்கோவின் மரணத்தில் பங்கு பெற்றோர் அனைவரும் ஏதோ ஒரு வகையில் மரித்து போயினர். சுகுமார் குறுப்பை கண்டு பிடிக்க போலிஸ் ஏழு வருடம் குறுப்பு வீட்டு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து அவதானித்து வந்திருந்தது. சுகுமார் குருப்பை பிடிக்காது போனது கேரளா காவல்த்துறைக்கு பெரும் அவமானமாக இருந்தது.கொலையாளிகளில் ஒரு ஆளான பாஸ்கரன் பிள்ளை சாக்கோவின் மனைவியை கடந்து நான்கு வருடங்களுக்கு முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார். 


திரைப்படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என பார்க்கலாம். மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரம் வெளியாகும் படம் என அறியலாம். திரைக்கு வரும் முன்னே விவாதங்களில் சிக்கின இப்படத்தை  திரையில் காண இன்னும் ஒருவாரம் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

12 Feb 2011

ஒரு புலனாய்வு கதை!


ஆருஷிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாட்டம்.  நேற்று தான் சிங்கபூர் சுற்றலா சென்று விட்டு வந்திருந்தனர்.  அவள் நண்பர்களை அழைத்திருந்தார்கள். அவளுடைய பெற்றோர் மருத்துவர்கள் ஆனதால் அந்த ஊரிலுள்ள மருத்துவ நண்பர்கள் குடும்பம் குழந்தைகள் படை சூழ  வந்திருந்தனர். சிலர் அவர்கள் பணியாளர்களையும் கூட அழைத்து வந்திருந்தனர், அவர்கள்  குழந்தைகள் முரண்டு பிடித்தால் அடக்குவதற்க்கு  பயன்படும் என.

ஆருஷியின் அப்பா அவளுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு கணிணி வாங்கி தந்திருந்தார்! அவள் நண்பர்களை அழைத்து காட்டினாள். அவர்கள் இணைய முகவரியும் வாங்கி வைத்து கொண்டாள்.  எல்லா வசதியுடனான புது தொழில்நுட்பம் அடங்கிய கணிணியாக இருந்தது.
 அவள்  அப்பாவை தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவள் சாயல் கூட அப்பாவை ஒத்தே இருந்தது. அம்மா ஒரு “மாதிரி” மருத்துவராக இருந்தார் ஆனால் அம்மாவாக அல்ல.   அவள் பெற்றோர் கல்லூரியில் படித்தபோது காதல் திருமணம் புரிந்ததால் உறவினர்கள் விட நண்பர்களே அதிகம் இருந்தனர். ஆகையால் பாட்டி தாத்தா மாமா சித்தி சித்தப்பா போன்ற உறவுகள் அவளை சுற்றி இருக்க வில்லை. அப்பா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அம்மா என்ற பெரிய பணக்காரி மனைவி அமைந்ததால் குறுகிய காலத்துக்குள் பணக்காரர் ஆனாலும் உறவுகள் இல்லை என்ற ஏக்கம் அவருக்கும் இருந்தது. ஆருஷியே அவருக்கு எல்லாமாக இருந்தார். 
வேலைக்காரர் புக்கா சிங்கு தான் அவளுக்கு  உறவினர், வேலைக்காரர்   என எல்லாமாக இருந்தான்.  அவள் பேசுவதை கேட்பது  அவளுக்கு கதை சொல்லி கொடுப்பது என புக்கா சிங் ஆகவே இருந்தான்.  பள்ளி விட்டு வரும் போது புக்கா சிங்கு தான் புத்தக பைய்யை வாங்கி வைத்து விட்டு பழ ஜூஸ் அல்லது பிரடு டோஸ்டு ஓவனில் இருந்து எடுத்து தருவார்.


பல நாட்கள் அம்மாவும், அப்பாவுடைனே வீடு வந்து சேர்ந்தார். அவருக்கு வேலையுடன் இருந்த ஈடுபாடு வீட்டுடன் இருந்திருக்க வில்லை.  வீட்டிலுள்ள பொருட்கள், தன் மகள் ஆருஷியை கூட வேலைக்காரர்கள் தெரிந்த அளவில் அவள் அம்மா தெரிந்திருக்க வில்லை!  ஆருஷி யின் 13 வயது  பிறந்த நாள் சில நாட்கள் பின்பு அவர் அப்பா ஒரு முறை அம்மாவிடம் சொல்வது கேட்டது, ” நீ இனி பகுதி நேரம் மருத்துவ மனையில் வேலை செய்தால் போதும். நம் பெண் பள்ளி  விட்டு வரும் போது வீட்டில் இரு என” . ஆனால் அம்மாவோ அவ என்ன சின்ன குழந்தையா வேலைக்காரன் புக்கா சிங்கிடம் சொல்லியுள்ளேன் . அவன் பார்த்து கொள்வான் என பதில் கூறுவதும் கேட்டது.  
புக்கா சிங்கு பங்காள் தேச இன கலவரத்தின் போது இங்கு வந்து சேர்ந்தார். ஆருஷியின் தந்தையின் மருத்துவ மனையில் உதவியாளராக பணி எடுத்து கொண்டிருந்தார். அவரின் பொறுப்பாக பணி செய்வதை கண்டு வீட்டு வேலைக்கு என அமர்த்தினார் அவர் அம்மா!  உணவு தயாரிப்பது ஆருஷியை பள்ளிக்கு அனுப்புவது, பள்ளி விட்டு வந்தவுடன் உணவு கொடுப்பது. தூங்கும் முன் குடிக்க ஜூஸ் கொடுப்பது என சகலவும் அவரே பார்த்து கொண்டார். ஆண் வேலையாள் மேலும் முதியவர் என்பதால் ஆருஷி அம்மா எல்லா வகையிலும் தற்காப்பு என் எண்ணினார். அவரின் அறை ஆருஷியின் வீட்டின் மேல் மாடியில் இருந்தது. வீட்டுக்கு உள் வருவதற்க்கும்   வெளியில் செல்லவும் இரு கதகுகள்  இருந்தது. புக்கா சிங்கை தாத்தா என்றே கூறி வந்தாள் ஆருஷி. வீட்டில் தனியாக இருக்கும் போது நேரம், போக அவரிடமே பேசி கொண்டிருப்பாள் டிவி பார்க்காத போது. அவருக்கும் மகன், மகள் பேரபிள்ளைகள் என பெரிய குடும்பம் இருந்தது .

 புக்கா சிங்கின் மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரின் தூரத்து உறவினரான ஒரு வாலிபனுடம் காதலில் இருந்தார். அவனை திருமணம் செய்ய புக்கா சிங்கு அனுமதித்தாலும் வேலை இல்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது. அவன் செவிலியர் பயிற்ச்சி  பெற்றவனும் கூட. புக்கா  சிங்கு ஒரு முறை ஆருஷி அப்பாவிடம் தன் உறவினருக்கு வேலை தந்து உதவும் படி கேட்டிருந்தான். மருத்துவரும்  தேவை வரும் போது அழைப்பதாக சொல்லியிருந்தார். அவரிடம் வேலை பார்த்த  ஒரு நபர் திடீர் என வெளி- நாட்டில் வேலை கிடைத்து சென்றதால் வேலையாள் தேவை வந்தது. புக்கா சிங்கிடம் உறவினரை அழைத்து வர கூறினார். டாக்டருக்கு புக்கா சிங்கின் உறவினரை பார்த்தவுடனே பிடிக்க வில்லை.  அவன் பார்வை செயல் எல்லாவற்றிலும் ஒரு திமிர் தென்படுவதாக தோன்றியது. ஆனால் வேறு வழியில்லை. சில கன்டீஷனுடம் வேலைக்கு சேர்த்து கொண்டார்.


 டாக்டர் இல்லாத போது அரட்டையடிப்பது, வேலையின் கவனம் கொள்ளாது அசால்டாக இருப்பது  தொலை பேசியில் கதைத்து கொண்டிருப்பது என எரிச்சலையே கொடுத்தது அவருக்கு வரும் நாட்களில் . ஒரு முறை ஒரு நோயாளியின் பல்லை பிடிங்கி கொண்டிருந்த போது ஒரு கருவி கேட்டால் இன்னொன்று எடுத்து கொடுத்தவுடன் கோபத்தில் சென்னியில் ஒரு அடி கொடுத்துள்ளார்.  அவனுக்கு சுரீர் என கோபம் வந்து விட்டது. டாக்டரிடம் ஏதும் சொல்லி கொள்ளாது வீட்டிற்க்கு சென்று விட்டான்.  மறுபடியும் இரண்டு நாள் கடந்து வேலைக்கு வந்த  போது டாக்டரும் கொஞ்சம் திட்டி விட்டு வேலைக்கு மறுபடியும் எடுத்து கொண்டார்.


அவன் வேறு வழியல்லாது வேலைக்கு சேர்ந்தாலும் டாக்டரிடம்  மனதில் கோபமாக இருந்தது. டாக்டரும், அவர் நோயாளிகளிடம் வைத்து  இவனை தரக்குறைவாக திட்டுவது மனம் நோகவே செய்த்து. அவன் கோபத்தை தீர்த்து கொள்ள நண்பர்களிடம் சேர்ந்து குடித்து விட்டு டாக்டரையும் அவர் மனைவியையும் தரக்குறைவாக திட்டி தன் மனக் கவலையை தீர்த்து கொண்டான்.


ஒரு முறை டாக்டரின் பருவ வயது மகள்  ஆருஷியை மருத்துவ மனையில் வைத்து போது பார்த்துள்ளார். இப்போது குடித்தவுடன் டாக்டரை திட்டுவதற்க்கு பதிலாக அவன்  பேச்சு முழுக்க ஆருஷியை பற்றியே இருந்தது. 


பின்பு ஒரு செவிலியன் கிடைத்தவுடன் இவனை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார் ஆருஷியின் தந்தை. திடீர் என்று வேலை பறிக்க பட்டதால் அவன் திருமணவும் தள்ளி போய் விட்டது. அவன் காதலியும் உடன் திருமணம் வேண்டாம், ஒரு நிலையான வேலையாகட்டும் என கூறி விட்டாள். இருப்பினும் புக்கா சிங்கை சந்தித்தே வந்தான்.  இரவு நேரங்களில் அவன் , ஆருஷீயின் பெற்றோரின் நண்பர்கள் வீட்டில் வேலைக்கு இருந்த அவன் நண்பர்களுடன்  சேர்ந்து குடித்து கும்மாளம் இட்டு தன் கவலையை தீர்த்து கொண்டான். இவர்கள் வேலை பார்க்கும் வீட்டிலுள்ள எஜமானர்களின் பிள்ளைகளை பற்றியும் அவர்களின் தகாத உறவுகளை பற்றிமே பேசி சிரித்து கொண்டனர்.  ஆருஷியை பற்றிய பேச்சு கொஞ்சம் அதிகமாகவே ஓடியது. அவர்களுக்கு  அவளுடைய பேச்சு, உடை நடை மட்டுமல்ல உடல் அமைப்பை பற்றியும் கூட கேலி பேசி கொண்டிருந்தனர். 


டாக்டர் வீட்டிலுள்ள பிராந்தியை  இளைஞர்களுடன் பங்கிட்டு நட்பை மேன்ப்படுத்தி தானும் ஒரு இளைஞன்  போல் எண்ணி கொண்டு ஆட்டம் போட்டு வந்துள்ளான் புக்கா சிங்கும்.  ஆருஷி அவனிடம் கேட்கும் சில பேச்சுக்கள் கூட இவர்கள் மத்தியில் கேலி பேச்சாக இருந்துள்ளது.  
அன்றும் ஆருஷி புக்காஜியிடம் பூரியும் உருளை குழங்கு குறுமா கேட்டுள்ளாள். அவளுக்கு உணவு பரிமாறி விட்டு பாத்திரத்தை சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது அவள் பெற்றோர் வந்துள்ளனர். அவளுடைய அப்பா அவளுக்கு ஒரு புகைப்பட கருவி வாங்கி வந்துள்ளார்  இந்த வருட பிறந்த நாளுக்கு என. ஆருஷி சில புகைப்படங்கள் அவள் பெற்றோர்களை எடுத்து , மகிழ்ச்சியாக அவர்களிடம் பேசி கொண்டு இருந்து விட்டு தூங்க சென்றுள்ளாள்.  புக்கா சிங்கும் ஆருஷீ பெற்றோருக்கு உணவை கொடுத்துள்ளான். ஆருஷி அப்பா என்றும் குடிக்கும் பிராந்தியை எடுத்து கொடுக்க கூறியுள்ளார். ஆருஷி அம்மாவும் என்றும் போல் தன் பங்கு பிராந்தியையும் குடித்து விட்டு தூங்க சென்று விட்டார்.


புக்கா சிங் தூங்க  என மாடிக்கு சென்று விட்டான்.  12 மணிவாக்கில் அவன் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து விட்டனர்.  அப்போது அவர்களுடைய மூளையில் பூதம் வேலை செய்ய ஆரம்பித்தது. புக்கா சிங்குக்கு அளவுக்கு மீறி பிராந்தி  கொடுத்தனர்.  பின்பு  அவர்கள்   வீட்டுக்குள் வந்து ஆருஷி அறைக்கு சென்று அவளை  மானபங்க படுத்தும் நோக்குடன் நுழைந்துள்ளனர். தள்ளாடி வந்து புக்கா சிங் தடுத்துள்ளான்.  அதற்க்குள் ஆருஷியும் தூக்கத்தில் இருந்து விழித்து கத்தியுள்ளாள்.  குளிரூட்டபட்ட அறை என்பதால் சத்தமும் வெளிவரவில்லை. ஆருஷி காட்டி கொடுத்து விடுவாள் என பயந்து அவளை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு வேலைக்காரன் புக்கா சிங்கையும் மாடிக்கு இழுத்து சென்று கொன்று விட்டு ஓடி விட்டனர்.

ஆருஷி அம்மா இப்போது தான் வருந்தினாள்.  வேலை, பணம் என்று இருந்து தன் ஒரே மகளை பலி கொடுத்து விட்டேனே என அழுதாள் தன் பொறுபற்ற  செயலை நினைத்து. தன் குழந்தை காத்திருந்த நாட்களில் தனக்கு பேச நேரமில்லாதிருந்தது.  இன்றோ தன் குழந்தையும் போய் விட்டது என எண்ணி எண்ணி அழுதார்!!!

( போலிஸ் ஒரு கதையும் ஊடகம் சில கதைகளும், புலனாய்வுத் துறை வேறு விதமாகவும் கதைக்கின்றது. என் பங்குக்கு ஒரு புலனாய்வு சேவையும் செய்துளேன். உங்கள் புலனாய்வு கருத்துக்களும்  சொல்லுங்களேன்.)

10 Nov 2010

என்கவுண்டர் சிலருக்கு மட்டும் தானா?

 என்கவுண்டர் என்று கேள்விபட்டுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது.  இது ஒரு பாடமாக இருக்கும் என தோன்றியது. இந்த வருடம் மட்டுமே எவ்வளவு குழந்தைகள் கடத்தல், கொலை,  கற்பழிப்பு!!
நேற்றுள்ள பத்திரிக்கையிலும் ஒரு 10 வயது சிறுமி அடித்து கொல்ல பட்டதாக செய்தி இருந்தது.  இருப்பினும்  மோகன கிருஷனன் என்ற கேரளா, பாலகாட்டை சேர்ந்தவன் மட்டுமே எதிர்கொண்டுள்ளான் என்கவுண்டரை?

பல சிறுமிகள் சாவை எதிர்கொள்ளாவிட்டாலும் அதன் பக்கத்திலே போய் வ்ரும் சூழலுக்கு தள்ள படுகின்றனர். கும்பகோணத்தில் 94 குழந்தைகளை கொன்ற பள்ளி நிறுவாகத்திற்க்கு எப்போழுது என்கவுண்டர், மேலும் 3 கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்து கொன்றவர்களுக்கு  என்கவுண்டர் உண்டா? காம காதலுக்கென இரண்டு வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு எப்போழுது என்கவுண்டர்? கல்லூரிகளில் ராகிங் என்ற பெயரில்  நடமாடும்  கொலைகாரர்களுக்கு  எப்போது என்கவுண்டர்? புதுமண பெண்ணை கொடூரமாய் கொன்றவனுக்கு என்கவுண்டர்  எப்போது?

ஒரு அயோக்கியனை கொன்றவுடனையோ, புகைப்பட கருவிகளை  பள்ளிகளில் பொருத்தியது கொண்டோ, பள்ளி வாசலில் போலிஸ் அதிகாரிகளே நிறுத்தியது கொண்டோ இவ்விதம் நடவாது தடுக்க இயலுமா?

சுய ஒழுக்கம் என்ற நெறியை வறியவனில் இருந்து வலியவன் வரை, என்று தன்னகமாக்கி கொள்கின்றானோ அன்றே இவ்விதமான கொடிய செயல் முடிவுக்கு கொண்டுவர இயலும்!

பேருந்துக்களில் பகல் நேரங்களில் கூட பயணிப்பது சிக்கலாகின்றது.  சில குடிமகனுகள் காப்பி குடிப்பது போல் பேருந்து நிறுத்தங்களில் குடித்து விட்டு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.  பாலியல் தொழிலும் ரகசியமாக செய்ய பட்டது இன்று வெளிச்சத்தில் செய்யபடுகின்றது .  வெட்கம், நாணம் அற்ற ஒரு சமூகம் உருவாகி கொண்டிருக்கின்றது.

 கொத்தனார்கள்-வேலையிடங்களில் கேட்க்கபடும் கேளிக்கை பேச்சுக்கள் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் அது போலவே  கொச்சயாகவே ஒலிக்கின்றது.
பொதுவாக, அயோக்கியனை கண்டு ஒதுங்கி பயந்து  போகும் சூழலே  தற்போதுள்ள  சமூகத்தில் நிலவுகின்றது.

நியாயம் தர்மம் கடைபிடிப்பவர்கள் வாழதெரியாத முட்டாளாகவும், எவ்விதமாகிலும் பணம் சம்பாதிப்பவன்- ஏமாற்றுகாரனுகள் புத்திசாலியும் வாழத்தெரிந்தவனாகவும் தெரிவதும் இச் சமூக நடப்பாகி விட்டது!

திரைப்படம் என்ற பெயரில் நடிகர்கள் பேச்சும், களியாட்டவும் என்று மறையில்லாது திரையிடப்பட்டதோ அன்றே  ஆரம்பித்தது சமூக சீரழிவும்.
விஜய் போன்ற நடிகர்கள் கெட்ட வார்த்தைகள்  பேசினால் அது ஹீரோயிசமாகவும், வைரமுத்து எழுதும் மகா கெட்டவார்த்தை பாடல்கள் எல்லாம் கவிதையாகும் எண்ணும் போது அந்த பாட்டின் வரிகளில்  பின்பற்றுபவர்களுக்கு மட்டும் என்கவுண்டர் கொடுத்தால் நியாயம் ஆகுமா?

4 Nov 2010

ஒரு கொடூர கொலையும் அதை தொடந்த சில சிந்தனைகளும்!!!



கடந்த மூன்று- நாலு நாட்களாக மனதை உலுக்கிய சம்பவமே கோவை பள்ளி குழந்தைகள் கொடூர கொலை!  நாளுக்கு நாள் வரும் செய்தி இது மனித உலகமா என எண்ணம் கொள்ளும் அளவுக்கு சிந்தனை கொள்ள செய்தது.  இதே போன்றே டெல்லியே சேர்ந்த ஆருஷி என்ற சிறுமி கொல்லபட்டபோதும், ஒரு கட்டத்தில் போலிஸ் தந்தையே மகளை கொன்றது போல் மாயதோற்றம் உருவாக்கி பின்பு மீடியா வழியாக ஒரு விவாதமே நிகழ்த்த பட்டு கடைசியாக வேலைக்காரர்களால் கொல்ல பட்டதாக கண்பிடிக்க பட்டது. பெற்றோர்களுக்கு சில அறிவுரைகளை கூறுவதுடன் போலிஸ் தன் வேலையை முடித்து கொள்கின்றது. கோவையில் பாட்டியிடம் விடை பெற்று வாகனத்தில் சென்ற குழந்தைகளே கொல்லபட்டதும்!
கொலைகாரன் கொலையை நடத்திய விதம் காணும் போது பணம் பறிப்பது அல்ல நோக்கம் எனவும் தற்செயல் அல்லாது திட்டமிடபட்டு நிகழ்த்தபடுத்த பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.  யாருடைய தூண்டுதலோ, அல்லது தொழில் போட்டி, வேறு சில காரணங்களும் உண்டா எனவும் ஆராயபடவேண்டியுள்ளது.  காரணம் கொலைகாரன் ஒரு தடவை கூட பெற்றோரை பணத்திற்கென தொடர்பு கொண்டது போல் தெரியவில்லை. கயிரு, பிளாஸ்டிக் பை,சாணப்பொடி, பால் இவைகள் கருதி வைத்திருந்தது தெரிந்திருக்கின்றது.  கொலையாளியை பாட்டி பார்த்துள்ளதால் கண்டிப்பாக பிடிபடுவோம் என அவனுக்கும் தெரிந்திருக்கும்.  கூட்டாளியை தப்பிக்க வைக்க முயன்று அவன் மட்டும் போலிஸ் கைய்யில் சீக்கிரமாகவே மாட்டியுள்ளான்.  பத்திரிக்கை செய்தி பார்ப்பினும்  நாளுக்கு நாள் புது புதியதாக செய்தி வந்து கொண்டிருக்கின்றது.
பத்திரிக்கை செய்தி கூட கண்டிக்க தக்க விதமாகவே உள்ளது. கொடூரன் கூறியதை எல்லாம் வெளியிட தேவையில்லாததே.  வேறு சில காடனுகளுக்கும் பாடம் நடத்தவா?.  வாசிக்கும் பெற்றோரின் மனம் மேலும் நிலை குலைய செய்யவே இது உதவும் என ஊடகவியிளார்களுக்கு தெரியாதா!!
இதில் சிலவற்றை நாம் வசதியாக மறந்து போகின்றோம். கொலையாளியே உடனே கொலை செய்ய வேண்டும் எனதோன்றினாலும் அவனின் பின் புலன் பெற்றோர், வாழ்ந்த சூழல் ஆராயபட்டால் மேலும் இவ்விதமான காடையனுகளைஅடையாளம் காண வசதியாக இருக்கும். இக்கொலையில் கூட குழந்தை கொல்லபட்ட விதத்தை ஆராய்ந்து செய்திக்கு மேல் செய்தி வெளியிட்டு பெற்றோரின் மனநிலையை குலைக்கும் ஊடகம் கூட ஆக்க பூர்வமான கருத்தையோ செய்தியோ வெளியிட வில்லை.
சாதாரணமான ஒருவனால் இவ்விதம் செய்யவே இயலாது. அவன் பெற்றோர்களால் துண்புறுத்தபட்டு வளரபட்டிருக்க வேண்டும் அல்லது அவனுடைய தாயின் தகாத வாழ்க்கையை கண்டு வளரபட்டவனாக இருக்க வேண்டும் அல்லது குடிகார தந்தையிடம் வளர்ந்தவனாக இருக்க வேண்டும்.  சமீபத்தில் ஒரு அனாதை ஆசிரம் சென்ற போது பெரும் வாரியான குழந்தைகள் பெற்றோர்களின் காமக் களியாட்டத்தால் அனாதர்களாக மாற்றபட்டவர்களே, அல்லது இரண்டு பெரும் வேறு யாருடனும் ஓடிபோனவுடன் இக்குழந்தைகள் அனாதை ஆசிரமத்துக்கு வரப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் பிறந்தது முதல் எதிர்கொள்ளும் இரக்கமற்ற சூழல் வளர்ந்த பின்பு தான் பெறபட்டதே சமூகத்திடம் திருப்பி தரும்போது நம்மை போன்ற சாதாரண மக்களால் எதிர்கொள்ள முடியாமல் போகின்றது.  நியூட்டன் தியரியை பொருத்தி பார்க்க தோன்றுகின்றது.

 
முதலில் கள்ள காதலர்களே தண்டிக்கும் வழியாக மனித விஷங்கள் பூமியில் வருவதயே தடுக்க இயலும். மேலும் குழந்தைளை அனாதர்களாக்கும் பெற்றோரை சட்டத்தால் தண்டிக்காது இது போன்ற கொடூர நிகழ்ச்சிகள் வருவதை தடுக்க இயலாது.
இந்தியாவின் சமூகச் சூழலும் இதற்க்கு காரணம் ஆகின்றது. ஒரு பக்கம் பெரிய மனிதர்கள் என எண்ணும் அதிகாரம் படைத்த வர்கம் மக்களின் இரத்ததை ஊழல் என உறிச்சி குடிக்க படும் போது இதே பார்த்தே பழக்க பட்ட கீழ் எண்ணம் கொண்ட சில மனித மிருகங்கள் தன்னுடைய கொடூரத்தை இவ்விதம் நிகழ்த்துகின்றது.

 
ஒரு பக்கம் பணக்காரர்கள், படித்தவர்கள் ,கலாச்சாரம் முள்ள மக்கள் பெருகுவது போலவே மறுபக்கம் ஒரு பெரும் கூட்டம் மக்கள் மனிதனின் மான்பற்று வாழ்கின்றனர்,வாழதள்ளபடுகின்றனர்.  சமீபத்தில் 'இரக்கம்', 'சமூக நீதி' என்ற பெயரில் திரைப்படங்கள் வழியே பணக்காரர்கள் என்றால் கொடூரமானவர்கள் எனவும் ஏழைகள் பரம சாதுவாகவும், அல்லது அவ்ர்களின் அடாவடித்தனங்களுக்கு நியாயம் கொள்வது போலவும் பல திரைப்படங்களில் காட்டி மோசமான கலாச்சாரத்தை வளர்க்கின்றனர். விஜய் போன்ற முன்னனி நடிகர்கள் நடிக்கும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை பலவிதமாக சித்திரிகரிச்சு இவ்விதமான செயல்களே திரைகளில் காட்டி காட்டி எவ்விதமான கொடூரமன செயலையும் மக்களின் மனதில் ஒன்றுமில்லாததுபோல் பதியவைக்கின்றனர்.
பள்ளி குழந்தைகளுக்கு பேருந்து வசதி தற்போது இல்லை என்பதும் ஒரு பெரும் குறையே. கல்லூரி மாணவர்களுக்கு என அரசு பேருந்துகளே இயங்கும் போது தினம் தினம் பேருந்து பின்னால் ஓடியே களைத்து போய் தங்கள் பள்ளி படிப்பை தொடருகின்றனர். திருநெல்வேலியில் கூட சாப்டர் பள்ளி, சாரா தக்கர் பள்ளி அருகில் இருந்து பள்ளி குழந்தைகள் எவ்விதம் பேருந்து பயணம் செய்கின்றனர் என காணலாம்.
முதலில் எப்போழுதும் எங்கு வேண்டுமானாலும் சாராயம் வாங்கலாம் விற்க்கலாம் என்ற நிலை மாறினாலே நமது சமூகத்தின் பெரிய கலாச் சார சீரளிவை தடுக்கலாம். நெல்லையில் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலே டாஸ்க்கு மார்க்கு கடை உள்ளதை என்ன என சொல்ல!
பலபோதும் குழந்தைகள் கொல்லப்படும்போது கொள்ளும் பரபரப்பு அவர்கள் அரை உயிருடன் தாக்க பட்டு தப்பிக்கும் போது காணபடுவது இல்லை. சமீபத்தில் நெல்லை வண்ணார் பேட்டையில் ஒரு 8 வயது சிறுமி எதிர்  வீட்டு கொடியவனால் சீரளிக்க பட்டாள்.

சட்டங்களையும் கடுமைப்படுத்த வேண்டும். சிறுவர்களிடன் கொடுமையாக நடத்துபவர்களே ஒரு கை, கால் என வெட்டி எடுத்து விட்டால் இவ்விதமான கொடூரமானவர்களே அடையாளம் காணப்படவும் குறைந்த பட்சம் குழைந்தைகளுக்கு எளிதாக தப்பிக்கயாவது இயலும்.

 
என்னுடைய பள்ளித் தோழி 2 வகுப்பு படிக்கும் போது இவ்விதம்மாக ஒருவனால் தாக்க பட்டு தேயிலை தோட்டத்தில் குழிக்குள் உயிருடன் புதைக்க பட்டாள். அவளுடைய உயிரை காப்பாற்ற முடிந்தாலும் 8 வகுப்பு படிக்கும் போதும் அவளுடைய சரீரத்திலுள்ள மனதிலுள்ள தழும்புகள் மறையபடவில்லை. யாருடனும் பேச திராணியற்றவளாக , பதறும் மனதுள்ளவளாக ,பயம் கொண்ட கண்ணுடையளாகவே அவளுடைய வாழ்க்கை இருந்தது.

 
அரசும் காவல் துறையும் மக்களுக்கு தரும் உபதேசத்தை எண்ணி அழுவதா சிரிப்பதா என தெரிய வில்லை. பெற்றோரை பள்ளியில் கொண்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர். இரண்டு பெயரும் வேலைக்கு செல்லும் சூழலில் பல வீடுகளில் பெற்றோர்கள் அதிகாலையில் பஸ்ஸை பிடித்து ஓடுகின்றனர். பல வாகன ஓட்டுனர்கள் பல பொழுதும் மிகவும் பொறுப்பாகவே குழந்தைகளே பள்ளிக்கு கொண்டு சென்று கூட்டி வரும் மகத்தான பணியை சிறப்பாகவும் செய்கின்றனர்.

 
மேலும் ராபகலாக மக்களை கண் விழித்து பாது காக்கும் காவல் துறைக்கு இந்த கொலைக்கு காரணமான பொறுப்பு எந்த அளவு உள்ளது எனவும் ஆராய வேண்டியுள்ளது!!!!