22 Jun 2020

கத்திரிக்காய்

வீட்டருகில் வரும் கத்திரிக்காய் கிலோ 10 ரூபாய், வெண்டைக்காய் கால் கிலோ 10 ரூபாய், எலுமிச்சை கால் கிலோ 30 ரூபாய் வாங்கி விட்டு 100 கொடுத்தேன். காய்கறி வியாபாரி தன்னிடம் சில்லறை இல்லை நாளை மீதம் 50 ரூபாயை தருகிறேன் என்றார். அடுத்த நாள் காலையில் காய் கறி வாங்கக்க 50 ரூபாயை நினைவுப்படுத்தினால் உங்களுக்கு நான் தர வேண்டியது இல்லை. அந்த வீட்டு அம்மாவிற்கு தான் கொடுக்க இருந்தது என்றார்.
பயங்கர ஏமாற்றமாகி போய் விட்டது.
நான் என் கோபத்தைக் காட்டிக்கொள்ளாது, இல்லை நீங்கள் நினைவுப்படுத்தி பாருங்கோ, நீங்கள் 50 ரூபாய் தர வேண்டியுள்ளது என்றதும் இல்லை, எனக்கு நல்ல நினைவு உண்டு நீங்கள் நினைவுப்படுத்துங்கள் என்றார்.
நான் அன்றைய காய்கறி பணத்தை கொடுத்து விட்டு வீட்டிற்குள் வந்து, மகனாரிடம் 50 ரூபாய் ஏமாந்து விட்டேன் எனக்கூறி என் சோகத்தை தீர்த்துக்கொண்டேன்.
இன்று காலையில் கத்திரிக்கடைக்காரர் மன்னித்துக்கொள்ளுங்கள் . எனக்கு நினைவு வந்து விட்டது எனக்கூறி 50 ரூபாய்க்கு இன்று காய்கறிகள் தந்து விட்டார்.
...........இது படிக்காதவர்கள் உலகம். நினைவு வந்ததும் தங்களது தவறை உணர்ந்து சமரசப்பட்டுக் கொள்கின்றனர்.
இதே போன்று பணம் சம்பந்தமாக, படித்த மேதாவிகளிடம் பேணவேண்டிய சில இடபாடுகளில் எவ்வளவு எளிதா,எந்த கூச்சமும் இல்லாது நம்மை ஏமாற்ற துணிகின்றனர்.
இப்போதெல்லாம் கல்வி கற்றவன் , படித்து பதவிகளில் உள்ளவர்கள் என்றாலே தன்னுடன் ஆயிரம் திருடர்களையும், பதினாயிரம் நம்பிக்கை துரோகங்களையும் வைத்து கொண்டு தான் அலைகின்றனர்.
No photo description available.
Naren K Narendran, Subi Narendran and 78 others
32 comments
2 shares
Like
Comment
Share

கெ. டி எ கறுப்பத்துரை( K.D. (a) Karuppu Durai)


பாலுமகேந்திராவின் வீடு திரைப்படத்திலுள்ள தாத்தாவை நினைவுப்படுத்தியது இத்திரைப்படத்திலுள்ள கறுப்பதுரை கதாப்பாத்திரம்

இத்திரைப்படத்தில் நாம் சந்திக்கும் இரு கதாப்பாத்திரங்கள், மகன்களால் கொல்லப்பட இருக்கையில் தப்பித்து வீட்டைவிட்டு வெளியேறி, அனாதமாக சுற்றிக்திரிந்து கொண்டிருக்கும் கறுப்புத்துரை என்ற 80 வயது தாத்தா, பிறந்த போதே அனாதையாக புரக்கணிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் வளரும் குட்டி என்ற 8 வயது சிறுவன். இருவருக்குமான உண்ர்வு பூர்வமான உற்வைப்பற்றி சொல்லியத்திறைப்படம் தான் கெ. டி கறுப்பத்துரை ( K.D. (a) Karuppu Durai)

.

தாத்தா மதுரைப்பக்கம் இருந்து தப்பித்து தென்காசி , செங்கோட்டை வந்தடைகிறார் அங்குள்ள ஒரு கோயிலில் தஞ்சம் புகிர்கிறார். அங்கு தான் கரடுமுரடாக வளர்ந்து வரும்  குட்டியும், கறுப்பு துரையும் சந்திப்பதுடன் கதை ஆரம்பமாகிறது. சிறுவனின் துடுக்குத்தனமான பேச்சில் கறுப்பத்துரை ஆள்கொள்ளப்பட்டாலும் சிறுவனின் அடாவடிப்பேச்சை சற்று ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் பின்பும் ரசிக்கவும் ஆரம்பிக்கிறார்.

 

இருவரும் சேர்ந்து ஒரு குடிசையில் வசிக்க வேண்டிய சூழல் எழுகிறது. பின்பு இவர்களுக்கும் கூத்து கலைஞர் கோழிக்கடைக்காரருக்குமான நட்பு, கூத்துக்காண சிவகிரி போவது, குற்றாலம் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வது, தாத்தாவின் 10 விருப்பம் என கேட்டு எழுதி வைத்து விட்டு ஒவ்வொரு விருப்பமாக செய்து முடிக்க வைக்கும் சிறுவனின் கரிசனை , இப்படியாக கதை சுவாரசியமாக நகர்கிறது.

 

இரு தலைமுறையின் மனநிலை, ஒரே சூழலை இரு தலைமுறையும் எவ்வாறு எதிர்கொள்கிறது என சமகால சமூக சூழல் குழந்தைகள் மனநிலையுடன் கதை சொல்கிறார்கள்.  ஒரு இடத்தில், தாத்தா கேட்பார் "நீ குழந்தையா, இல்லை நான் குழந்தையா எனத் தெரியவில்லையே என்று. பல போதும் குழந்தைகளுடன் நட்பாக பழுகுகிறவர்கள் உணருவதும் இதுவே.

குழந்தைகள் பெரியவர்களை விட பிரச்சினைகளை கையாளுவதில் மிடுக்காக இருப்பார்கள். குட்டியும் அப்படித்தான். தாத்தாவிற்கு தன் பால்யகால ஸ்னேகிதியை காண வேண்டும் என ஆசை துளிர்கிறது. அங்கைய சுவாரசியமான நிகழ்வுகள், வயதாகும் தோறும் மனிதர்கள் தங்கள் பால்ய காலத்திற்குள் போகும் விருப்பம் இதை எல்லாம் கவனமாக அவதானித்து திரைக்கதையில் எழுதப்பட்ட விதம் அதை காட்சி மொழியாக பகிர்வது சிறப்பு.

 

வயதானவர்களை எக்காரணம் கொண்டும் ஒதுக்குதல் கூடாது, பெற்றவர்கள் முதியவர்கள் ஆகி விட்டார்கள் என கொல்லும் அதிகாரம் பிள்ளைகளுக்கு இல்லை, இவர்களால் தான் கிராம விவசாயம், பல மனித வாழ்வியிலுக்கான விழுமியங்களை, விவசாயத்திற்கான நுணுக்கங்களை கற்று தர இயல்கிறது. வயதானவர்கள் இளையவர்கள் வாழ்க்கையில் ஆற்றும் பங்கும் வயதானவர்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு இளையவர்களின் பங்கும், அதன் தேவையும் பற்றி சொல்லி நகர்கிறது கதை.

 

 

இப்படி இருக்க சிறுவனுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் கறுப்பதுரைக்கு சிறுவனை பிரிய மனமில்லை என்பதால் அவனை சென்னைக்கு அனுப்ப மனமில்லாது தவிக்கிறார்.  ஒரு பக்கம் சிறுவனை சென்னைக்கு அனுப்ப தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கின்றனர், அதே நேரம் முதியவரையும் கூலிக்கு ஆள் வைத்து சொத்தில் கையெழுத்து வாங்குவதற்கு என  மகன்களும் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

 

 

பெரியவரும் சிறுவனும் பிரிகையில் பெரும் துயர் காண்பவர்களையும் பற்றிக் கொள்கிறது.  யாரும் இல்லை என இருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவராக மாறினதும், அங்கு இரத்த உறவை விட அழகான நேசம் கொண்ட உறவு மலர்ந்ததும் நம்மை நெகிழ்ச்சி கொள்ளச் செய்பவை.

ஒரு வழியாக முதியவரை பிடித்து வீட்டுக்கு கொண்டு வருவார்கள். மகன்கள் உணர்வுப் பெருக்கான உரையாடல்களை நம்பாது, உங்களுக்கு என்ன தேவை சொத்து, கையெழுத்து போட்டு தருகிறேன் என்பார். கையெழுத்து வாங்கின பின்பு முதியவரை வைத்து பார்த்துக்கொள்வார்கள் என்றால், அப்போதும் கொலை செய்யத்தான் திட்டம் போட்டுக் கொண்டு இருப்பார்கள். முதியவர் தப்பித்து வீட்டைவிட்டு போய் விடுவார்.

 

வீட்டை விட்டு வெளியேறினாலும் அழகான வாழ்க்கை வெளியிலும் உண்டு என முதியவர்களுக்கும் நம்பிக்கையூட்டிய திரைப்படம் இது.

உறவுச்சிக்கலில் வீட்டில் அல்லல்ப்படும் முதியவர்களை வரவேற்கும் படி சமூக தேவை இருப்பதால், காத்திரமான வசதிகளை முதியவர்களுக்கு செய்யவேண்டியது சமூகத்தின் பாரிய கடமையாகும் என உணரவைத்த திரைப்படம் இது.

 

 

பல போதும் திருநெல்வேலியின் நகர்புறங்களை திரைப்படங்களில் கண்ட கண்களுக்கு, திருநெல்வேலியின் முதுகெலும்பான கிராமங்கள், திருநெல்வேலியின் அடையாளமான திருவிழாக்கள், கோயில்கள், கொண்டாட்டங்கள், விவசாய வயல்கள் என கிராமங்களை படம் பிடித்து காட்டிய அருமையான திரைப்படம் இது.

 

 

இது போன்ற படங்கள் தான் சமூகத்திற்கு தேவை. பாரம் போன்ற திரைப்படங்கள் வீட்டிலுள்ள 'முதியவர்கள் கொலை' பற்றிய கதையை மட்டும் சொல்லிய போது முதியவர்களுக்கு நல்ல வாழ்க்கை உண்டு, எப்படி கொலையில் இருந்து தப்பிப்பது, முதியவர்கள் மனநிலை எப்படியாக வகுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு பிரச்சினைக்கான தீர்வையும் முன் வைத்த திரைப்படம் இது.  உறவுகள் என்பது இரத்த பந்ததால் மட்டுமல்ல, அன்பாலும், நேசத்தாலும் புது உறவுகளை மலரச்செய்ய இயலும் எனக்கூறிய திரைப்படம்.

 

பல விருதுகள் பெற்றுள்ள திரைப்படம். இதன் இயக்குனர் சென்னையை பிறப்பிடமாக கொண்டு, சிங்கப்பூர் வாழ்விடமாக கொண்ட மதுமிதா என்ற பெண் என்பது மிகவும் சிறப்பு. இவருடைய நாலாவது படமாகும்.

Asian American International Film Festival மற்றும் Jagran Film Festival ல் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை நாக விஷால் பெற்றுள்ளார்.

UK Asian Film Festival மற்றும்

Indian Film Festival of Cincinnati ல் மதுமிதா சிறந்த இயக்குனர் என்ற விருதை பெற்றுள்ளார்.

Singapore South Asian Film Festival ல் சிறந்தத் திரைப்படம் என்ற விருது பெற்றுள்ளது.

New York Indian Film Festival சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திர விருதிற்கு தேர்வாகியுள்ளது.

கறுப்புதுரை கதாபபாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரபல நாடக செயல்பாட்டாளரும் நாடகத்துறை பேராசிரியருமான மு ராமசாமி என்பது சிறப்பு. கறுப்ப துரையாக நடித்த பேராசிரியர் ராமசாமியின் நடிப்பை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவிற்கு கதாப்பாத்திரமாகவே உருமாறியிருந்தார்.

இசை கார்த்திகேய மூர்த்தியால் படத்தின் கதைக்கு ஏற்ற முறையில் இசைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு மெய்யீந்திரன் மற்றும் கெம்புராஜ்.

நவம் 2019 ல் வெளியான சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்று இப்படம்.


சுபி அக்கா மல்லிகைச் செடி


நேற்று, சுபி அக்கா அனுப்பி தந்தார்கள் ஒரு மல்லிகைச்செடி படத்தை. பின்பு உற்சாகமாகி விட்டேன். செடியை கண்ட மகிழ்ச்சியில் நடை போனேன் , என் கல்லூரித் தோழியை கண்டேன், மகிழ்ச்சியாக துங்க போனேன்
இந்தச் செடிககும் எனக்குமான தொடர்பு 22 வருட கால பழக்கம். பூப்போன்ற மனதுடன் புதுப் பெண்ணாக, மனமெல்லாம் ஆசையுடன் மாமியார் வீடு புகுந்த காலம்.
நினைத்தது போல என்னை காத்துக் கிடக்கவில்லை மாமியார் வீட்டு வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள், விசர்கள்.... ஆனால் என்னை ஒவ்வொரு நாளும் புத்துணர்வாக வைத்தது இந்த மல்லிகைச் செடி தான்.
அது ஒரு காடு,கொடும் வனம். பல மாதங்கள் மழை, பனி தான். யார் நட்டு வைத்த மல்லிகையோ வீட்டு வேலியாக இந்த மல்லியை மூங்கில் கம்புகளால் கட்டி, நல்ல பலமான செடி வேலியாக வைத்திருந்தனர்.
பல மாதங்கள் பூக்கும். அதன் வாசனை ஆகா .....மறக்கவே ஏலாது. வசந்தகாலம் என எழுதிவைத்தது போல் ஊரே பூக்களை பார்த்து பார்த்து போகும்படி இருந்தது..
எனக்கு செடியில் பூவைப் பார்க்கதான் ஆசை. ஆனால் சில எளிய பெண்கள் வந்து "இந்த அம்மாவிற்கு பூக்கள் பிடிக்காது " எனக்கூறி பறித்து செல்வார்கள்.
யாராரோ பறித்து செல்கிறார்களே என்ற ஆதங்கத்தில், நானும் பறித்து பூக் கட்டினாலும்,ஒழுங்காக பூ கட்ட தெரியாததால் பூ நழுவி கீழை விழும் . வாழை நாரு வைத்து, துணி நூல் வைத்தும் கட்டிப்பார்த்தாச்சு. பூவைப் பறித்து ஊசி நூலால் கொருத்தாலும் ஐய்யோ.... அதன் காம்பு என்ன வேதனைப்பட்டிருக்கும் என அதையும் விட்டு விட்டேன்.
அதன் பின் வட்டப்பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, பூக்களை அதில் மெதக்கவிட்டு அழகு பார்த்துக்கொண்டு இருந்தேன்.
காலவும் ஓடினது. அந்த ஊரை விட்டு வெளியேற முடிவெடுத்தோம். இயற்கை, மலை, மழை , அருவிகள், என ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த ஊரை விட்டு விரட்டியது உலக மயமாக்கல். 2002 தூத்துக்குடி வந்து சேர்ந்தோம். பனியில் இருந்து தீயில் போட்டது மாதிரி ஆகி விட்டது அடுத்த வாழ்க்கை.
350 கிலோ மீட்டர் பயணித்து தெரியாத ஊர் வந்து சேர்ந்த போது மகனுடன் எடுத்து வந்தது இந்த மல்லிகைச்செடியையும் தான்.
பின்பு 8 வருடத்தில் 12 வாடகை வீடு மாறியிருப்போம். சில வீடுகளில் உப்பு தண்ணீர், சில வீடுகளில் செடி வைக்க இடமில்லை, சில வீடுகளில் செடி வைக்க அனுமதி இல்லை. இருந்தும் இந்தச் செடியும் எங்களுடனே பயணித்தது.
சொந்த வீடு வந்த பின்பு அதற்கும் நிலையான ஒரு இடம் கிடைத்தது. வீட்டுப்பிராணிகள் போன்றே செடிக்கும், அதை வளர்க்கும் மனிதர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு . சில வருடங்களாக நான் செடியை கவனிக்கவில்லை. பின்பு மறுபடியும் இணைந்துள்ளோம்.
சுபி அக்கா என்னிடம் பெற்றுக் கொள்ளும் ஒரே பொருள் செடி மட்டுமே. அப்படித்தான் இந்த செடியில் இரு கம்புகளை வெட்டி கொடுத்திருந்தேன். 7500 கி.மீ பயணம் செய்து லண்டனை அடைந்தது.
இந்த வெயில் பழகின செடி லண்டனில் வளருமா , பூக்குமா என பல அச்சப்பாடுகள் இருந்தாலும்; அக்கா பூவில்லாத செடியை கூட தனது அன்பால் பூக்க வைத்து விடுவார்கள்.
நேற்று முதல் பூவுடன் செடியின் படத்தை அனுப்பியிருந்தார்கள்.
அக்கா கை பட்டதும் செடி அதன் அழகிலும், நளினத்திலும் பூத்து நிற்பதை கண்டதும் மகிழ்ச்சிக்கு மட்டில்லை.
என் உலகம், பூக்களால் , இலைகளால் நிரம்ப ஆசைப்பட்ட உலகம்.
அக்காவை பற்றி கூறினால் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த கொரோனாக் காலத்தில் , எங்கள் இருவருக்கும் விடுமுறை என்பதால் வாரம் ஒரு முறை கதைக்க இயல்கிறது.
செடிகளை பற்றி,செடி வளர்ப்பை பற்றிக்கதைக்கிறோம். அக்காவின் ரோஜா பூந்தோட்டம் முன் ஊட்டி, மைசூர் ரோஜா தோட்டங்கள் அருகே வர இயலாது. "அக்கா, நீங்கள் இலை இல்லா பூக்களுக்காக என்ன மேஜிக் செய்கிறீர்கள் என்பேன்.
ஒவ்வொரு காலசூழலுக்கு இணங்க செடிகளை இடம் மாறி வைப்பது , செடிகளை வெட்டிக்கவனிப்பது, அக்காவை மாதிரி யாராலும் நேசிக்க இயலாது.
தமிழகம் வந்தாலும் நாங்கள் விரும்பிச்செல்லும் இடம் பூந்தோட்டங்களும் தான்.
அக்கா வீட்டில் பூத்த மல்லியை நினைத்து பூரித்து பூரித்து இன்னும் நிறைய எழுதலாம். செடி தரும் மகிழ்ச்சி அதிவல்லது‌.
Naren K Narendran, Gladwin Moses and 80 others
22 comments
1 share
Like
Comment
Share

Live Twice, Love Once


இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடும் வேளையில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையை பற்றி சொல்லியத்திரைப்படத்தை காண்போம்.
இந்ததிரைப்படம் 2019 ல்
Premios del Audiovisual Valenciano வின் சார்பில் ஆறு விருதுகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தில், 3 act திரைக்கதை பாஃர்முலா கையாண்டுள்ளது எடுத்துச்சொல்ல வேண்டும்.
எமிலோ ஓய்வு பெற்ற ஓர் கணித பேராசிரியர். கணக்கு விளையாட்டு, வாசிப்புடன், தனிமையில் தன் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர்.
ஒரு தெருவோரக்கடையில் காப்பி குடிப்பது, திரும்பி அதே வழியில் தன் வீடு வந்து சேர்வது என நாட்களை கடத்திக்கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் தனது நினைவாற்றல் குறைவதை கண்டு உணர்ந்து கொள்கிறார். உடன் மருத்துவ உதவியையும் நாடுகிறார். இருந்தாலும் தனது நோயை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இல்லை.
தனக்குள்ள நோய் யாருக்கும், மகள் கூட தெரியக்கூடாது என்று நினைக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக மருத்துவ மனையில் வைத்து சந்தித்த மகள் அறிந்து கொள்கிறார்.
தன் தந்தையை தன் வீட்டில் வைத்து பராமரிக்க விரும்புகிறார்.
பிடிவாதக்காரரான தந்தையோ அதை விரும்பவில்லை, மகள் குடும்பத்தை சந்தித்து விட்டு மாலைக்கு முன் தன் வீடு திரும்பும் மனநிலையில் தான் உள்ளார்.
குறிப்பாக எப்போதும் கைபேசியும் கையுமாக இருக்கும் ப்ளாங்காவை எமிலியோ தாத்தா விரும்பவில்லை, வெறுப்பாக பார்க்கிறார். அதை விட அந்த குழந்தைக்கு தன் தாத்தா தன் வீட்டில் தங்குவது பிடிக்கவில்லை.
தாத்தா தனது பால்ய கால ஸ்னேகிதியை பார்க்கப்போக ஒரு பயணம் மேற்க்கொள்ள போவதையும் அறிந்து கொள்கையில் தானாகவே எமிலியோவிற்கு உதவ வருகிறாள். பால்யகால ஸ்னேகிதி பெயரை மட்டும் அறிந்திருக்கும் தாத்தாவிடம் தகவல்களை பெற்று இணையத்தில் தேட ஆரம்பிக்கிறாள்.
ஒரு நாள் பாடசாலையில் வைத்து, தனது அப்பா இன்னொரு பெண்ணுடன் உறவு பேணுவதை கண்டு கொள்கிறாள்.
அன்று மாலை தன் வீட்டிற்கு போய் தன் தந்தையின் முகத்தில் விழிப்பதை விட தன் தாத்தா வீட்டிற்கு போக விரும்புகிறாள். அங்கு செல்கையில் தாத்தா ஒரு பயணத்திற்கு கிளம்புகிறார். தானும் வருகிறேன் என்று பிடிவாதமாக தாத்தாவுடன் பயணிக்கிறார். பின்பு தாத்தாவிற்கும் பேத்திக்குமான அன்பான உறவு சுவாரசியமாக நகருகிறது. சாலை பாதைகளை கண்டடைய நவீன தொழில்நுட்பத்தை பயண்படுத்தி தாத்தாவிற்கு உதவுகிறார். இருவருக்குமான நட்பு மலர ஆரம்பிக்கிறது. கண்க்கில் புலியான தாத்தா எமிலியோவும் புது தொழில்நுடப்த்தில் கரை கண்ட ப்ளாங்கா அன்பும் ரசிக்க தகுந்ததாகவும் இனிமையானதாகவும் உள்ளது.
பயணித்து கொண்டிருக்கையில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வேண்டி வருகிறது. அங்கு சென்றால் முதியவர் பணம் சுரண்டும் அட்டையில் எண்ணை மறந்திருப்பார். இது பிரச்சினையாக காவல்த்துறையால் கட்டுப்படுத்தப்பட்டு எமிலியோவின் மகள் ஜூலியாவை வருவித்து இரண்டு பேரையும் ஒப்படைப்பார்கள்.
வாழ்க்கையின் முரண், ஒரு காலத்தில் சிறந்த பேராசிரியாராக இருந்த அறிவாளியான எமிலியாவும் தற்போது 10 வயது ப்ளாங்காவும் ஒரே நிலையை அடைகின்றனர்.
நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஸ்னேகிதி வேலை செய்த இடத்தை கண்டு பிடிப்பதுடன் தாத்தாவிற்கும் கைபேசி பயண்படுத்தும் வித்தையும் கற்றுக்கொடுக்கிறாள் ப்ளாங்கா.
பின்பு முகநூல் வழியாக தாத்தாவின் ஸ்நேகிதிய தேட முயல்கிறாள் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டதால் தனது தாத்தா எமிலியோ மற்றும் பெற்றோருடன் தாத்தா எமிலியோவின் காதலி மாரகரித்தாவை தேடிய பயணம் தொடர்கிறது.
அங்கு சென்று சேருகையில் இவர்களுக்கு ஒரு துயரான செய்தி காத்து கிடக்கிறது. எமிலியோவின் தோழி மார்கரித்தா, வீட்டை விற்று விட்டு வேறு இடம் நோக்கி புலம்பெயர்வதை அறிந்து கொள்கிறார்கள்.
எமிலியோ மகள் ஜூலியா மற்றும் பேத்தியுடன் இன்னொரு பயணத்தில் மார்கரித்தாவை கண்டடைந்து விடுகிறார்.இருந்தாலும் மார்கரித்தாவும் அல்சைமர் நோயால் பாதித்திருப்பதால் எமிலியோவை அடையாளம் கண்டு பிடிக்க இயலவில்லை. இருந்தாலும் மர்கரித்தாவின் சில சங்கேத செயல்களால் மார்கரித்தாவும், எமிலியோவை சந்தித்த காலத்தில் தான் உள்ளார் என புரிந்து கொள்கிறார்.
நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகம் ஆகிறது. கடைக்கு போன வழியை மறந்து வீட்டுக்கு திரும்ப இயலாது இருக்கிறார்.
பின்பு மகள் வீட்டில் தங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். எமிலியோ தன் நிலையை எண்ணி வருந்து கோபம் கொள்கிறார். மகளை விட பேத்தி ப்ளாங்கா தாத்தாவை இன்னும் புரிந்து பரிவாக பார்த்து கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் வீட்டிலும் வைத்து பார்க்க இயலா சுழல். ஒரு முதியோர் மருத்துவ இல்லத்தில் சேர்க்கின்றனர். அங்கு மர்கரித்தாவை காண்கிறார். இருவரும் அவர்கள் பதின்ம வயதின் நினைவுகளுடன் அங்கு வாழ்க்கையை தொடர்கின்றனர்.
மகளான ஜூலியா அவர் கணவர் பிலிப் பேத்தி ப்ளாங்கா; மூவரும் வயோதிகரான அல்சைமர் நோயாளியான எமிலியாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நடித்துக்காட்டி சமூகத்திற்கு விழிப்புணர்வு நல்கிய திரைப்படம்.
ப்ளாங்காவாக மபல்மா கார்போநெல் திறம்பட நடித்துள்ளார்.
மரிய மினகசி எழுத்தில், மரிய றிப்போள் இயக்கத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய ஸ்பானிஷ் திரைப்படம் இது.
ஜனுவரி 2020 ல் வெளியாகி மனிதத்தை போதித்த திரைப்படம் இது.
முதுமையின் அதுவும் அல்சைமர் நோயின் தாக்கத்தாலுள்ள வயோதிக த்தின் நிலை துயருரைச்செய்தாலும் என்னுடைய பாட்டியாருக்கு அல்சைமர் நோய் பாதித்த நாட்களை நினைத்து பார்த்தேன்.
அப்பாவும் இதே போன்ற பார்க்கின்சன் நோயுடன் கடந்து போவதை கண்டேன்.
அப்பாவின் தன் நல்ல வயதில் கம்பீரமாக கல்லாவில் அமர்ந்து புத்தகம் படிப்பது, வியாபாரம் செய்வது பின்பு கல்லூரி விடுதிக்கு காண வந்து கண்ணீருடன் திரும்ப சென்றது, கல்யாண நேரம் நாங்கள் உடை நகை அலங்காரத்தில் திளைத்து நின்ற போது அப்பா ஓடி நடந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தது பின்பு என் வீட்டிற்கு இரு செடிகள் வாங்கி வந்து குழி தோண்டி நட்டு தந்தது , ஒரு முறை விடுமுறைக்கு சென்ற போது, இரு நடுங்கும் கைகளை காட்டி, என்ன இப்படி என பரிதபித்தது, அடுத்த விடுமுறைக்கு சென்ற போது நிலம் குத்தி விழுந்து அடிபட்ட காயங்களை காட்டினது , தங்கை வீட்டு நிகழ்ச்சியில் எங்குள்ளோம் எதைச் செய்கிறோம் என அறியாது கூட்டத்தை கண்டு பயந்து கூட்டத்தில் தொலைந்த குழந்தை போல் திருதிருவென முழித்து, அம்மாவை தேடிக்கொண்டு சோபாவின் கரைகள் பிய்த்து கொண்டு இருந்தது, இப்போது நடக்க இயலா படுக்கையில் என அறிகிறேன்.
அப்பாவின் நினைவை அப்பாவின் இயலாமையான முகத்தை எமிலியோ முகத்தால் கண்ட திரைப்பட