14 Aug 2019

இந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்


a.      புத்தமதம் ஆட்சியில் 2ஆம் நூற்றாண்டு வரையில்
b.      குருகுல கல்வி -இந்து மதம் ஆட்சியில் 2000 வருடங்கள்
c.      மெக்காலே ஆங்கிலக் கல்வி திட்டம்-1834 
d.      டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு-1948
e.      டாக்டர் லட்சுமணசாமி குழு-1952
f.        கோத்தாரி குழு திட்டம்-1964 
g.      புதிய தேசிய கொள்கை (1986 மே மாதத்தில் பிரதம மந்திரி ராஜீவ் காந்திஅரசாங்கங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது).
h.      தேசிய கல்வி கொள்கை (NPE) 1992 அதிரடி திட்டம் (PoA),
i.        யஷ்பால் கல்விக் குழு திட்டம்-2009
j.        மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019
புத்த மதம்இந்தியாவில் ஆட்சிசெய்தபோது நாலந்தாபோன்ற இடங்களில்பல்கலைக்கழகங்கள்சாதி பாகுபாடு இன்றிஅனைவருக்கும் கல்விஅளித்திருந்தது.(அந்தக் காலத்தில்கல்வி என்பது மதபோதனைதான்).தமிழகத்தில்சிதரால்,கழுகுமலையிலும் உண்டு -உறவிட கல்விகூடங்கள்இருந்ததிற்கான சான்றுகள் உள்ளன.

புத்தமதம் அழிக்கப்பட்டு இந்து மதம் தழைத்தோங்கிய பின்சமஸ்கிருத வழி குருகுல கல்வி வளர்ந்து அது உயர்சாதியினருக்கும் மட்டும் சென்றடைந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில்வர்ணாஸ்ரம முறை வலுவாக காலை ஊன்றி இருந்ததுஇதன்விளைவாக கல்வி என்பது மதத்தின் பெயரால்பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கபட்டு வந்தது.. அந்தஅதிகார வர்க்கம்கல்வி சாமனியரை சென்றடைவதைத்தடுத்துசிறு மற்றும் குறுநில மன்னர்கள் ,உயர் சாதியினரைமட்டும் உள்ளடக்கிய பெரிய அதிகார வர்க்கம் [JA1]  மட்டும்பயனடைய உதவி செய்தது.

மெக்காலே கல்வி முறை
இந்தச் சூழ்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனிஇந்தியாவில் சிறிது சிறிதாக காலூன்ற ஆரம்பித்ததுபிரிட்டன்பாராளுமன்றம்கிழக்கு இந்தியக் கம்பெனி கட்டாயமாகஇலட்சம் ரூபாயை இந்தியர் கல்விக்காக செலவிட வேண்டும்என்று உத்திரவிட்டதுஅந்த லட்சம் ரூபாயை எவ்வாறுசெலவிடுவது என்று கிழக்கிந்தியக் கம்பெனி சிந்தித்தபோதுஅப்போதைய கல்வியாளர்களால் இறுதி செய்யபட்டது இரண்டுமுறைகள்ஒன்று இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்த"தாய் மொழிவடிவில் கற்று கொடுக்கப்பட்டு வந்த கல்விமுறை.மற்றொன்று ஆங்கில் முறையில் மேற்கத்திய வழிக் கல்விஅந்தஇரண்டில் மெக்காலே தேர்ந்து எடுத்தது மேற்கத்திய முறைஅடிப்படையான ஆங்கில வழிக் கல்விஅது தான் இன்றையதேசியவாதிகளாலும்இந்து மத அடிப்படைவாதிகளாலும்சாடப்பட்டு வருகிறது.

அந்தக் கால தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்படுவதுசமஸ்கிருதம்அரேபிய மற்றும் பெர்சிய மொழி வழிக்கல்விதான்மெக்காலே பாரம்பரிய கல்வி முறையை மறுத்து மேற்கத்தைய கல்விக்கு ஆதரவாக மெக்காலே சொன்னகாரணங்கள் . ஆங்கிலம் என் ஒரு பகுதியும் சஸ்கிருதவும்அரபியும் என் இன்னொரு சாரார் வாதாடிய போது மெக்காலேபதில் இப்படியாக இருந்தது .
 I have no knowledge of either Sanscrit or Arabic.--But I have done what I could to form a correct estimate of their value. I have read translations of the most celebrated Arabic and Sanscrit works. I have conversed both here and at home with men distinguished by their proficiency in the Eastern tongues. I am quite ready to take the Oriental learning at the valuation of the Orientalists themselves. I have never found one among them who could deny that a single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia. The intrinsic superiority of the Western literature is, indeed, fully admitted by those members of the Committee who support the Oriental plan of education. 


மெக்காலேயின் கருத்துப்படி ஆங்கிலத்தில் தான் கலை,அறிவியல்வரலாறு என அனைத்துத் துறைகளிளும் அதிக அளவுபுத்தகம் உள்ளதுஅது மட்டுமன்றி கம்பெனியினரின் பணத்தைஅறிவியல் சார்ந்த கல்விக்காக செலவிடுவதை விடுத்து மதபோதனைகளை கற்றுத் தரும் இந்திய பாரம்பரிய ரீதியானகல்விக்கு செலவிடுவது வீண்இந்தியர்களின் அறிவுத் திறனைவளர்க்கும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தும் கல்வி முறைஇருக்க வேண்டும்எனவே இந்தியர்கள் ஆங்கிலத்தைப்படித்தால் அவர்களுக்கும் உலகில் உள்ள அனைத்து கலைபடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்அது உலகத்தரத்தில் இந்தியர்களது அறிவின் வளர்ச்சிக்கு உதவும்.

மெக்காலே ஆங்கிலக் கல்வி முறையைஅறிமுகப்படுத்தாமல் பாரம்பரிய கல்வியை சிபாரிசுசெய்திருந்தால் அன்றைய இந்திய ஆளும் அதிகாரவர்க்கத்தினரின் நன்மதிப்பைப் பெற்றிருப்பார் ஆனால் வருணாஸ்ரமம் சார்ந்த குருகுல கல்வி தான் வளர்ந்திருக்கும். ஆங்கிலக் கல்வி முறை தான் பிற்காலத்தில் பல்லாயிரம்இந்தியத் தலைவர்கள் சிந்தனாவாதியாக உருவாகியதுஎன்பதை மறுக்கல் ஆகாது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு
நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டேபல்கலைக்கழகக்கல்வியின் தரத்தை ஆராயஅப்போது ஆக்ஸ்போர்டுபல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர்ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல்கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு.  இந்தியப்பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது, உயர்கல்வியை நிறுவனமயமாக்கிதனியார் கல்லூரிகளை உள்ளூர்க்குழுமங்கள் உருவாக்கிமானியக் குழுவிடம் பணஉதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர்ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

டாக்டர் லட்சுமணசாமி - 1952
1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தடாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக்குழு அமைக்கப்பட்டது இதில் தந்தை பெரியார்ஜி.டி.நாயுடுஉட்பட பலர் நேரில் ஆஜராகிகல்வி குறித்து விவாதித்தனர்.பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத்தொடங்குதல்தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்றுமொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழுமுன் மொழிந்தது.
 கோத்தாரி கல்விக் குழு
டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கியஇந்தக் குழுவில் பிரிட்டன்அமெரிக்காரஷ்யா போன்றநாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்கல்வியாளர்கள்இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத்தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்கஅறிக்கையை 1966-ல் வழங்கியதுஇந்தியக் கல்விக்குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரிகல்விக் குழுதான்.

கோத்தாரி குழு  அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

1.14
(i)                 அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 % ஐக்கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரைசெய்தது
(ii)               வயது வரை கட்டாயக் கல்வி
(iii)             ஆசிரியர் கல்வி மற்றும் மதிப்பூதியம்
(iv)             மொழிகள் கற்றலில் தாய்மொழியுடன் கூடியமும்மொழிக் கொள்கை
(v)               சமமான கல்வி வாய்ப்பு
(vi)             சமூகத் தொண்டுடன் பணி அனுபவம்
(vii)           பகுதிநேர கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி
(viii)         இடைநிலைக் கல்வியைதொழிற்சார்புடையதாக்குதல்
(ix)             பெண்களுக்கான இடைநிலைக் கல்வி
(x)               அறிவியல் அடிப்படையிலும்வகுப்பறைச்செயல்முறையிலும் சீர்திருத்தம்.
(xi)              ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச்சாலைகளைக் கட்டமைத்தது.
(xii)           தறிப் பயிற்சிதோட்டக் கலைகுடிமைப் பயிற்சிஆகியவற்றை அறிமுகம் செய்தது.
(xiii)         விளையாட்டுநாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவைஇக்குழுவின் சாதனைகள்.

இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாகஅமல்படுத்தவில்லைஇப்படி இருக்க  பிரதம மந்திரி ராஜீவ்காந்தி அரசாங்கங்கத்தால், 1986 மே மாதத்தில் ஒரு புதிய தேசியகொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய கல்வி கொள்கை,

1.                    வேறுபாடுகளை அகற்றுதல் மற்றும் கல்விக்குசமமானதாகும் வாய்ப்பு
2.                  குறிப்பாக இந்திய பெண்கள்பழங்குடியினர் (ST)மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி (SC) சமூகங்களுக்குமுக்கியத்துவம் அளித்தது.
3.                  அத்தகைய ஒரு சமூக ஒருங்கிணைப்புக்கு,உதவித்தொகைகள்,
4.                  வயது வந்தோர் கல்வியை விரிவுபடுத்துதல்,
5.                  தாழ்த்தப்பட்டவா்களிடமிருந்து அதிகஆசிரியர்களை நியமித்தல்,
6.                  ஏழை குடும்பங்களுக்கான ஊக்கத்தொகைதங்கள்குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புதல்,
7.                  புதிய நிறுவனங்களை மேம்படுத்துதல்,
8.                  வீட்டுவசதி மற்றும் சேவைகளை வழங்குதல்ஆகியவற்றுக்கான கொள்கைகள்.
9.                  தேசிய கல்விக் கொள்கை தொடக்கக் கல்வியில்"குழந்தையை மையமாகக் கொண்டஅணுகுமுறைக்குஅழைப்புவிடுத்தது,
10.               மேலும் நாடு முழுவதும் ஆரம்பப் பள்ளிகளைமேம்படுத்துவதற்காக "கரும்பலகை திட்டம்"தொடங்கப்பட்டது.



1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி திறந்தவெளிபல்கலைக்கழகத்துடன் இந்த திறந்த பல்கலைக்கழக முறைவிரிவுபடுத்தப்பட்டது. 1986 நாட்டில் தொழில்சார் மற்றும்தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டங்களுக்குஅனுமதிக்கப்படுவதற்கான அனைத்து இந்தியஅடிப்படையிலான பொது நுழைவுத் தேர்வையும் நடத்ததிட்டமிட்டது.

தேசிய கல்வி கொள்கை (NPE) கீழ், 1992 ஆம் ஆண்டின் அதிரடிதிட்டம் (PoA),

பொறியியல் மற்றும் கட்டிடக்கலை / திட்டமிடல்நிகழ்ச்சிகளுக்கான சேர்க்கைக்குஅக்டோபர் 18, 2001 தேதியிட்டதீர்மானம்மூன்று நிலை தேர்வுத் திட்டம் (தேசிய அளவிலான JEEமற்றும் AIEEE மற்றும் மாநில அளவிலான பொறியியல் நுழைவுதேர்வுகள் நுழைவுத் தேர்வுகளின் பெருக்கம் காரணமாகமாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும்மேலோட்டப் பிரச்சினைகள் மற்றும் உடல்மன மற்றும் நிதிசுமையை குறைக்கிறது.


இக்கல்விக்கொள்கையை செயல்படுத்திட 23 சிறப்புப்பணிக்குழுக்களை அமைத்திருந்தது.

யஷ்பால் கல்விக் குழு
சாதிசமயவர்க்க வேறுபாடுகள் இன்றிஒரே மாதிரியான கல்விஎனும் நிர்ப்பந்தம் வந்தபோது 2009-ல் அமைக்கப்பட்டதுதான்பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக் குழு.
1.        தேர்வுகளுக்குப் பதிலாகமாற்றுக் கல்வித் தொடர் மற்றும்முழுமை மதிப்பீட்டை (சி.சி..) இக்குழு அறிமுகம் செய்தது.
2.      எட்டாம் வகுப்பு வரை தொடர் தேர்ச்சி என்பதை இக்குழுகொண்டுவந்ததுஇதனால் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் 100குழந்தைகளில் 76 பேரை எட்டாம் வகுப்பு வரை  தக்கவைக்கமுடிந்துது.


மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக்கொள்கைபல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது.யஷ்பால் குழு போன்ற பழைய கல்வி கொள்கைகளுக்குதொடர்ச்சியாக அறிவித்து இருக்க  வேண்டும்ஆனால் அதைசெய்யவில்லை.