Showing posts with label Personal. Show all posts
Showing posts with label Personal. Show all posts

12 Feb 2016

சுபி அக்காவும் நானும்

இணையத்தில் வாசிப்பினூடை எழுத்தினூடை அக்காவும் நானும் நண்பர்களாக இணைந்தோம். பின்பு எங்கள் நட்பு உடன் பிறவா சகோதரிகளாக பரிணமித்தது.  அக்கா இந்தியா வந்து செல்லும் போது எங்கள் சந்திப்பை பயணங்களாக மாற்றினோம். எங்கள் பாச நட்பு எங்கள் குடும்ப உறவுகளாக மாறின. 


முதல் முதலாக அக்காவை தூத்துக்குடி விமானநிலையத்தில் வைத்து சந்தித்த போது.  நெடுநாளாக  அயல்நாட்டில் இருந்து விட்டு  சொந்த வீட்டிற்கு வந்து சேரும் உடன் பிறந்த  சகோதரியாகவே தெரிந்தார். முதல் நாள் காணும் எந்த அன்னியவும் எங்களை அணுகவில்லை.  நரேன் அண்ணாவும் என்னவரும்  சில மணித்துளிகளுக்குள்ளில் எங்களை விட பாசமிகு சகோதரகளாக மாறிவிட்டனர். எங்கள் பிள்ளைகள் வருடம் ஒரு முறை அண்ணா-அக்கா  வருவதை எதிர் நோக்கி காத்திருக்க தொடங்கினர். 

உலகில் இரத்த  உறவுகளையும் கடந்து நல்ல பாசத்தின் அன்பின் நேசத்தின் உறவை பேண இயலும் என உணர்த்தியது.  இந்த முறை சூழல் சிக்கலால் நாங்கள் சிக்குண்டு இருந்த போது சுபி அக்கா இந்தியா வருகை   இருந்தது. நாங்கள் ஒரு மாற்றம் என கருதி சென்னையில் அக்காவுடன் நாட்களை கழித்தோம். 


அக்கா ஓர் சிறந்த வாசிப்பாளர் ஓர் பண்பான விமர்சகர். அவர் வாசிப்பதை மட்டுமெ விமர்சிப்பார். அதிலும் இசையில் மிகவும் ஈடுப்பாடு கொண்டவர். அக்கவிற்கு பழைய இளைய ராஜா பாடல்கள் என்றால் அதீத விருப்பம். எஙகள் பயணங்களில் அக்கா வருகையில் நேரம் அந்த பாடல்கள் தான் ஒலிக்க செய்வோம்.  அக்கா சிறந்த படகரும் கூட. திறமைகளை தன்னகை கொண்டு அதை வெளிக்காட்டாது வாழும் ஆழ்ந்த ஞானம் உடைய ஆளுமை. என் புத்தகமான " நன் தேடும் வெளிச்சங்கள்" அக்காவின் ஊன்றுதலில் தான் வெளி வந்தது. என் எழுத்தை என்னை நானாக நேசிக்கும் அக்காவாக சுபி அக்கா உள்ளார். 

எங்கள் பேச்சுக்கள் சமூகம், எழுத்து, பயணம் சார்ந்தே பல பொழுதும் அமையும். அக்காவின் அமைதி, நீடிய சாந்தத்தை அருகிலிருந்து கண்டு உணர்ந்து கற்று கொள்ள முயன்றுள்ளேன். வாழ்க்கையை அன்பு மயமாக, அழகியலாக நோக்கும் அக்காவை நான் எப்போதும் பின் தொடர முயல்வது உண்டு.   அக்காவிற்கு ஆலயம் தரிசனம் என்றால் விருப்பமானது. எங்கள் ஊருக்கு வந்த போது நெல்லையப்பர் கோவில், ஆழ்வாத்திருநகரி கோயில் , நாகர்கோவில் சுசீந்தரம் தாணுமாலயம் கோயில் சென்று வந்தது நல்ல நினைவுகள். 

இலங்கை போர் சூழலால் அக்கா இலண்டம் மாநகரில் குடியேறினாலும் அவர் உயிர் மூச்சு இலங்கை ஈழத்தில் நிலைபெற்றிருப்பதை காணலாம். அக்காவிற்கு பிடித்த பூஞ்செடி தோட்டம் காண நாகர்கோயில் செல்லும் போது நேரம் ஒதுக்குவது உண்டு. அக்கா வாங்கி தந்த செடியின் பூவில் அக்காவின் சிரிப்பை கண்டு நான் மகிழ்வது உண்டு.  


எவ்வித மனிதர்களையும் நேசிப்பதில் மதிப்பதில் நிகர் அக்காவிற்கு அக்கா மட்டுமே. சகமனிதனை மனித மாண்புடன் காணும் அவர் பார்வை அகலமானது.  நட்புகளை பேணுவதில் அக்கா எடுத்து கொள்ளும் சிரத்தை மனித அன்பால் நிறைந்தது. 


 செடி,  புத்தகம், பயணம் என எங்கள் பாச நட்பு அன்பு நிலைபெறுகின்றது. எங்கள் அன்பிற்கு உரு துணையாக எங்கள் குடும்பவுவும் உள்ளது.  எங்கள் வீட்டிலுலுள்ள ஒவ்வொரு பண்டிகையும் பிறந்த நாட்களும் அக்கா- அண்ணா வாழ்த்துதல் பெற்றே துவங்குகின்றது.  


அக்காவை ஒவ்வொரு நொடியும் தாங்கி அரவணைத்து நடத்தும் பாசமிகு அண்ணா நரேன் அண்ணாவையும் நினைத்துபார்க்கின்றேன் ஓர் கணவர் ஓர் மனைவிக்கு கொடுக்கும் அன்பு, மரியாதை, அளவிடக் கூடாதது இயலாதது.  ஓர் பெண் உண்மையாக மதிக்கப்படுவது நேசிக்கப்படுவது தன் குடும்பத்தில் அது துவங்குவது தன் கணவரில் இருந்து மட்டுமே. அவ்வகையில் நரேன் அண்ணா ஓர் எடுத்து காட்டு!  குழந்தைகள் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற நியதியே. ஆனால்  பெற்றோர் எவ்விதம் நம் குழந்தைகளை மதிக்க வேண்டும் கரிசனையாக நடத்த வேண்டும்  என  பிள்ளைகளாக வரம் பெற்ற அஷாந்த, ஆரணி  நடத்தும் விதத்தில் இருந்து அக்காவிடம் கற்று கொள்ளலாம். 
அக்காவை பற்றி எழுத நினைக்க நிறைய நிறைய உண்டு. அக்காவை இந்த பிறந்த நாள் அன்று என் ஓர் பதிவனூடாக வணங்குவதில் மகிழ்கின்றேன். இறைவன் எல்லா வளவும் நிறைவும் அக்கா- நரேன் அண்ணா குடும்பத்திற்கு வழங்க வேண்டும். வாழ்க வளமுடன். 

அன்பே சுபி அக்கா! 
அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. (கொரிந்தியர் 13:4-8),.அன்பு ஒருபோதும் ஒழியாது.  

11 Jul 2011

சாதாரணமானவளின் அசாதாரணமான நாள்!!!

இந்த வருடம் சாதாரணமானவளின் இந்த  நாளை அசாதாரணமாக்கி  தந்தனர்  என் முகநூல் உறவுகள் சிறப்பாக உளவியல் மன நிபுணரும் கணிணி மென் பொருள் வடிவமைப்பாளருமான பத்மன் அண்ணா!  பத்மன் அண்ணாவின் நட்பு தாமதமாக கிடைத்தாலும் ஆழமாக என் வாழ்க்கையில் பதிந்தது.                                                                                      2 நாட்களுக்கு முன்பே அத்தான் அவரின் விருப்பமான மாடலில் சுடிதார் வாங்கி தந்து விட்டார். கலர் தான் தோற்ற கட்சி திமுகவின் கொடிக்கலர் கருப்பும் சிவப்புமாக இருந்தது. ஆனால் டிசைன் அரிதானதும் அருமையாகவும்  இருந்தது. மேலும் கடந்த மாதம் சென்ற போது எனக்கு பிடித்த கலர் அவருக்கு பிடிக்கவில்லை அவருக்கு பிடித்த மாடல் எனக்கு பிடிக்க வில்லை  ஒரு மணிநேர போராட்டத்திற்க்கு பின்பு எதற்க்கு வம்பு என்று ஒரு சேலையுடன் வந்து விட்டேன்.  இந்த முறை கடைக்குள் சென்ற போதே போன முறை எடுத்து தந்த ஆள் கண்ணில் படக் கூடாது என்று நினைத்து கொண்டேன்.
பெரிய துணிக் கடைகளில் இப்போது பெரிய சோபாக்கள் கணவர்கள் உட்கார்ந்து தூங்க, குழந்தைகளுக்கு விளையாட ஒரு பகுதியும்  அமைத்து விடுகின்றனர்.  என்னவர் கூட அம்மா மஹாராணி  நான் அங்கு சென்று இருந்து கொள்கின்றேன் நீ எடுத்த பின்பு தெரிவித்தால் போதும் பணம் கொடுத்து விடுகின்றேன் என்பார்! முதலில் வரிசை வரிசையா அடுக்கி வைக்கப்  பட்டிருக்கும் துணிகளை காணும் போது எதை எடுக்க என்ற அங்கலாயிப்பு பின்பு கிட்ட நெருங்கினால் நமக்கு பிடித்த மாடல் ஒரு மாதம் உணவு செலவாக இருக்கும் அல்லது சுடிதார் தலை பக்கம் டிசைன் நன்றாக இருந்தால் கால் பக்கம்  துணி  அந்தளவு நல்லதாக இருப்பதில்லை.  இது இரண்டும் நன்றாக அமைந்து விட்டால் இடும் ஷால் சொதப்பி விடும். எல்லாம் பரவாயில்லை என்று எடுக்க சென்றால் இதன் கலர் கண்டாங்கி கலராக உள்ளது இது எனக்கு பிடிக்கவில்லை என்ற எதிர்ப்பு குரல் நம் வலது பக்கம் இருந்து வரும்!  அவர் விரும்பாது  அல்லது துணி எடுப்பிலும் அவரை நோகடிக்க வேண்டுமா என்ற நல்ல மனதில் அவர் கை காட்டும் சுடியில் இருந்து இரண்டு தள்ளி ஏதாவது ஒன்றை எடுத்து நகழ வேண்டியது தான்.



அவருக்கு பெண்டாட்டி எந்த கூட்டத்தில் நின்றாலும் தகதகவென்று மின்னி தெரிய வேண்டும் என எண்ணும் போது எனக்கோ யாரும் விரும்பாத /யாரும் எடுக்காத மாடலாக நான் தேடுவேன்; அதுவே எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பது என் கணக்கு!



சமீப நாட்களாக தோழிகளுடன் சென்று ஒரு முனிவரின் முகநூல் முற்றத்தில்  சென்று பஜனை பாடுவது  வழக்கமாக இருந்தது.  முனிவரும் பெரிய மனது கொண்டு பொறுத்து வந்ததால்; பஜனை பாட்டு, பின்பு கும்மியடியாக பரிமணித்து போனது. சுவாமிஜியும் தியானத்தில் இருந்து திடீரென விழித்தவராக அவருடைய சுவரில் ஒரு பாட்டை பதிய “அன்புள்ள காதலியே ஆசையில் ஓர் கடிதம்…” இதை கேட்டவுடன் இந்த குரங்குக்கு துள்ளி விளையாட ஆசை. சுவாமிஜி கடிதம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை என்று தன் குசும்பை ஆரம்பிக்க சுவாமிஜியும்  உனக்கு அந்த அருள் வாக்கு இல்லையம்மா என்று மறுவாக்கு தர அப்போ அந்த கடிதம் எங்கு சேர்ந்தது என்று எல்லா பெண் குரங்குகளும் ஒன்று சேர்ந்து கும்மியடிக்க கலியிளகிய முனிவர் ஆசிரமம் விட்டு கடற்கரை தேடி ஓடி போய் விடும் சூழல் உருவாக்கப்பட்டது.  முனிவரின் அன்பை கருணையை வேண்டுவதால்  சுவாமிஜி அடியேனின் பிழையை பொறுங்கள் என்று காலில் மண்டியிட்டு அவருக்கு மட்டும் ஒரு ரகசிய கடிதம் பிறப்பிக்கப்பட்டது. அடியேனுக்கு நாளை பிறந்த நாள் தங்களுடைய ஆசிர்வாதத்தை மறக்காமல் தந்து விடுங்கள் என்று.  மறு நாள் விடியும் முன்பே ஆசிர்வாதம் வருகின்றதா என்று காத்திருந்தாலும் சுவாமிஜி தியானத்தில் இருந்ததால் என்னமோ இன்னும் செய்தி வந்து சேரவில்லை.  அதற்க்குள் நோர்வேயிலுள்ள என் உடன்பிறவா சகோதரர் பத்மன் அண்ணா ஆளை அனுப்பி  பந்தல் கால் நட்டு பந்திக்கு ஏற்பாடு செய்து என் பிறந்த நாளுக்கான எல்லா  ஏற்பாடும் முடக்கி விட்டுள்ள  செய்தி வந்து சேர்ந்தது.


பண்பிலே சிறந்தவர் ..
படிப்பிலே உயர்ந்தவர்..
பாசத்திலே நிறைந்தவர் ..
இலங்கைத் தமிழரை ஆராய்ந்தார் ..
எமது வாழ்க்கையால் கவரப்பட்டார்…
எங்களை தனது சகோதரராக்கினார்..
அண்ணா என்னும் வார்த்தையால் அன்பூட்டும்
எங்கள் தமிழ்நாட்டுச் சகோதரிக்கு
யோசெபின் பாபாவுக்கு (J.P .Josephine Baba)
வாழ்வு மேலும் உயர்ந்திட ..
உங்கள் நற்சேவைகள் மேலும் பெருகிட
உங்கள் குடும்ப மகிழ்ச்சி மேலும் பெருகிட
அன்பான வாழ்த்துக்கள்…
ஆரவார வாழ்த்துக்கள் ..
மகிழ்வூட்டும் வாழ்த்துக்கள் ...
வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள்..


கொஞ்சம் நேரம் கொண்டு மண்டபத்திற்க்கு நண்பர்கள் வர ஆரம்பித்தனர் வருபவர்களுக்கு நன்றி வணக்கம் மகிழ்ச்சி என்று நான் கதைத்து கொண்டு இருக்கும் போதே என் சகோதரர் பத்மன் அண்ணா அவர்களுக்கு காப்பி, ஜூஸ், கேக் என பரிமாறி கொண்டிருந்தார்.  சுவாமிஜியும் தன் ஆசிர்வாதத்தை இப்படியாக “அண்ணா என்ற சொல்லைத் தன் மூச்சிற்குள் செருகிவைத்திருக்கும் பாபாவின் வழிப்போக்கருள் நானும் ஒருவன். உலகப்பந்தின் பல புள்ளிகளில் இருக்கும் நட்புக்களுக்குள் இவர் ஒரு பெரிய புள்ளி. அதனால் இவரை அடிக்கடி காண்கின்றேன். வாழ்க வளமுடன்” பதிந்து விட்டார் சிஷியைக்கு மனம் பேரானந்தம் ஆகி விட்டது.



கருத்துக்கு மறுகருத்து விருப்பத்திற்க்கு நன்றி என அந்த நாள் சூடு பிடித்தது.  மாயப் பெட்டியுடனே முழு நேரவும் போயன! அக்காள் விம் சிவ் அவர்கள் அம்பாள் ஆலயம் முழுநாள்  பூசைக்கு திறந்துள்ளது என தன் பங்கு கருத்தை பகிர்ந்து குடும்பமாக வாழ்த்து அனுப்பியிருந்தார். எதிர்பாராத நட்பு வட்டங்கள் வந்தது ஆச்சரியவும் மகிழ்ச்சியுமாக இருந்தது. அதில் ரஞ்சனி ராஜா,  ரஞ்சனி ஸ்ரீ போன்றோர் அடங்குவர்!  தோழி ரஞ்சனி ஸ்ரீயை பல பொழுதும் நான் செல்லும் முற்றங்களில் சந்தித்தாலும் சிறு புன் சிரிப்புடன் விலகி கொண்டோம்  அவரிடம் இருந்த வாழ்த்து பெற்ற போதுதான்  என் பார்வை அவர் மேல் இருந்தது போல் அவரும் என்னை உற்று நோக்கியுள்ளார் என்று புரிந்து கொண்டேன்.



பெரும் மதிப்பிற்க்குரிய விம் சிவ் அக்கா, தோழி பிரமிளா சுகுமார், சந்திரவதனா அக்காள், என் ஆராய்ச்சிக்கு உதவிய தோழி  கானடாவில் இருந்து வந்துள்ள தமிழ்நதி அவர்கள், தமிழக தோழியும் அக்காவுமான ரேவதி போன்ற அக்கா தோழிகள் விருந்துக்கு வந்தது  இன்ப அதிர்ச்சியாக இருந்தது.


என் பாசத்திற்க்கும் நேசத்திற்க்கும் உரிய சகோதரர் பத்மன் அண்ணா, தன் எல்லா வேலைக்கும்  விடுப்பு கொடுத்து விருந்தின் எல்லா நடைவடிக்கையிலும் முழுவீச்சில் ஏற்பட்டிருந்தார்.




வாழ்க்கை போராட்டத்தில் வழி தெரியாது தவித்து நின்று அழுது கொண்டிருந்த போது, என்  கண்ணீரை துடைத்து விட்டு தன் அனுபவம் என்ற விளக்கை  தந்து வழி காட்டிய சஞ்சயன் அண்ணா மீன் பிடிக்கும் வேலையில் மும்முரமாக இருந்ததால் விருந்துக்கு வராவிட்டாலும் அவர் வீட்டு சன்னல் பக்கம் இருந்தே ‘ஹாய் செல்லம்’ என்று கைகாட்டி அருள் பொழிந்ததும் மகிழ்ச்சியே!





மதியம் சாப்பாடை கையில் எடுத்த  வேளையில் பிரான்சில் இருந்து நண்பர் “தேவாதாசன் அவர்கள் 10 மணிக்கு(பிரான்ஸ் நேரம்) அவசர வேலையாக வெளியில் செல்ல வேண்டியுள்ளது. உங்கள் சுவரில்  தோரணத்தை கண்ட போது வந்தேன்” என்று கதைக்க ஆரம்பிக்க ½ மணி நேரம் போனதே தெரியவில்லை. பெண்களிடம் அரசியலா என்று இளக்காரமாக எண்ணும் சூழலில் பெண்கள் இன்னும் சம உரிமை பெற வேண்டியவர்கள்.  முகநூலில் தஞ்சம் அடையாது ஆக்க பூர்வமான செயலிலும் சிந்தனை செலுத்த வேண்டும் என்று என்னை எப்போதும் நினைவுறுத்துபவர் ஆண்களில் மாணிக்கம் போன்ற என் நண்பர் தேவாதாசன் அவர்கள்.





இதனிடயில் காலை  அவசரமாக கேரளாவில் இருந்து என் உடன் பிறந்த சகோதரர் ஜாண்சன் வந்து சென்றார். அவர் மனைவியும் கிளம்பியுள்ளதாகவும் வந்து சேருவார் என்றும் சொல்லி விட்டு சென்றார். தங்கை  தூத்துகுடியில் இருந்து மிகவும் அவசர அவசரமாக “அக்கா பிள்ளைகளை தூங்க வைத்து வந்துள்ளேன். எனக்கு ஐஸ்சிரீம் மட்டும் போதும்” என வந்த வேகத்தில் பறந்தார்.  என்னை பெற்ற என் பெற்றோர் பல வருடங்கள் ஆகியதால் மறந்து விட்டார்களோ அல்லது இனியும் இந்த கொண்டாட்டம் தேவையோ என்று எண்ணினார்களோ தெரியவில்லை, தம்பியிடம் கதைக்கும் போது ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று அம்மா பின்னால் நின்று வாழ்த்துவது மட்டும் கேட்டது!





நாகர்கோயில் சேர்ந்த அரசு அதிகாரியும் வலைப்பதிவர் சந்திப்பில் கண்டுகொண்ட நல்ல நண்பர் முருகன் தங்க சிவம், தம்பி பொன் பாண்டி, என் வகுப்பு தோழனாக இருந்த பிரகாஷ், என் ஆய்வு வழியாக சந்தித்த என் முதல் ஈழ சகோதர் கானா பிரபா அவர்கள், பாசமிகு சகோதரர் டோமினிக் சாவியோ, நண்பர் கண்ணன் சங்கர லிங்கம்,  நண்பர் குமார் குரு, நண்பர் கௌதம சின்னசாமி, என் வளர்ச்சியில் என்றும் அக்கரையுள்ள ஆனால் இதுவரையிலும் முகம் காணாத நெல்லை நண்பர் முனீஷ் குமார்,  சகோதரர் குருசாமி கனகராஜ், என் நண்பர் நடா சிவா தமிழ்க்கிறுக்கன், என் பாசத்திற்குரிய நண்பரும் சகோதருமான செல்வரஞ்சன் செல்லதம்பி அவர்கள் மனைவி குழந்தைகளுடன் வந்து சென்றது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் அனுப்பி தந்த சிவகாசியின் சொந்த மகளான ஜெயா வேல் அவர்கள், பத்திரிக்கையாளர் நண்பர் கன்னியப்பன் ஜெகதீஸ்வரன், ஸ்ரீஸ்கந்தராஜா, கூல் ஜோய் போன்றோரும் வருகை தந்தனர். விண்வெளி பயணம் மேற்கொண்டிருந்த பாசமிகு  தமிழக சகோரர் சி.பி. செந்தில் குமார் 2 நாட்களுக்கு முன்பே வாழ்த்து அனுப்பியிருந்தார்.  தமிழ்வாசி முதல் பந்திக்கு வந்து தன் வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
 


எனக்கு அரிய புத்தகங்கள் அனுப்பி தரும் ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து ரத்தின வேல் அய்யா அவர்கள் மனைவியார்  உமா அம்மாவுடன் வந்திருந்தார்.  என் வாசிப்பை எப்போதும் உற்சாகப் படுத்தும் மாற்று கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள்  என்னை சேர உதவும் குமரகுருபரன் அண்ணாவும் தன் வாழ்த்தை தந்து சென்றனர்.  



அன்பு கவிஞ்சி தங்கைகள் கல்பனா,  சிவமேனகை பாசக்கார தங்கை அனு, தம்பி வலைப்பதிவர் ஜெயந்து, எங்கள் துறை மாணவர் தம்பி ராம் குமார் சகோதரர் முத்து குமார், நண்பர் பேராசிரியர் சக்தி வேல் அவர்கள், நண்பர் வந்திய தேவன் சோமசுந்தரம், பத்திரிக்கையாளர் ஐயா குமரேசன் ஆசாக் அவர்கள், தோழி கிருபா, சென்னை நண்பர் சூரிய சுரேஷ் , தமிழ்க திரைப்பட பாடல் காதலர் பவல் ராஜதுரை, கார்த்திகேயன் சரவணன், நபர் செம்மலர் செல்வன், கண்ணன் சுந்தரலிங்கம், சுரேஷ் நைட்ச்கை, பfஹாட் இப்ராஹிம், சென்னை சுரேஷ் , இலங்கையை சேர்ந்த பத்திரிக்கையாளரும் என் ஆய்வுக்கு உதவிய என் இனிய சகோதரர் எம் ரிஷான் ஷாரிfபின் வரவும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. 



சகோதரர் ஸ்ரீதரன் கனகலிங்கம், சௌதியில் இருந்து அந்தோனி சேகர், மதுரை சிதம்பரம் காசிவிஸ்வநாதன் ஐயா, நெல்லையை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் எல்.வி பாலாஜி, நண்பர் பரணீதரன், நண்பர் சிங்கப்பூர் ராஜன், என் சொந்த தேசத்தில் இருந்து தற்போது டில்லியில் பத்திரிக்கையாளராக உள்ள பால் முருகன் அவர்கள் மலையாளத்தில் வாழ்த்து அனுப்பினார். மந்திரியின் அதிகாரி செல்வகுமார், சௌந்தர் பாண்டியன், தூத்துகுடி நண்பர் சாந்தகுமார், பிசாசு குட்டி, என் எழுத்தை எப்போதும் ஊக்கப் படுத்தும் நண்பர் ஜோசப் பொன்னுதுரை அவர்கள், புன்னகை அரசி சித்திரா சாலமன், என் நெடு நாளைய நண்பரும் நெல்லையின் மகனுமான ராம்ஜி யாஹூ அவர்கள் யாவரும் வந்து சென்றது வாழ்க்கையில் மறக்க இயலாத நெகிழ்ச்சியான சம்பவமாகின!




பத்மன் அண்ணா தோட்டம் வழியாக வந்த சகோதரர் பெண்களை மதிக்கும் சந்திரன் தர்மதேவி, தோழி வனஜா வேலாயுதம் பிள்ளை, ஐயா சுந்தர குமார் கனகசுந்தரம், மீரான் மொஹதீன், மாடசாமி சன்முகசாமி, நெல்லையை சேர்ந்த மலேசியாவில் வசிக்கும் என் சகோதரர் செந்தில் சுப்பு, மனோகரா மனோகர், நண்பர் ரவிசங்கர், பாடகர் ஹரிஹரனின் விசறி நண்பர் நாகா சிவா, ரஜி ரமா, நாகரத்தினம் போன்ற என் உயிரிலும் பெரும் உறவுகளான என் நண்பர்கள் வந்து சென்றனர்.


என் எழுத்தை எப்போதும்  உற்சாகப் படுத்துத்தும் இலங்கையின் பிரபல பதிவராம் பெரும் பாசத்திற்குரிய டொக்டர் சாப் M.K முருகானந்தம் அவர்கள்  என்னுடன் என்னவர் தன் மைத்துனரையும் வாழ்த்தி சென்றது மறக்க இயலாத மகிழ்வூட்டும் இன்பமகிழ்ச்சி!




ஜெயகுலராசா அவர் தோட்டத்திலுள்ள அழகிய பன்னீர் பூக்கள் அனுப்பினார். ஆசிரியர் சோ லிங்கம், நெல்லை வலைப்பதிவர் சங்கம் தலைவர் சங்கரலிங்கம் ராஜகோபால், என் பாசமிகு சகோதரர் என் ஆன்மீய வாழ்க்கையில் அக்கரையுள்ள சகோதரர் ஜெர்மெனியில் இருந்து தாவாவிஜய் அண்ணன், என் சமையல் குருவும் உலகின் பல முகங்களை பற்றி கதைக்கும்  தோழருமான பாடல் குறும்தட்டு அனுப்பி மகிழ்வித்த இங்கிலாந்திலுள்ள அன்பு நண்பர் பேட்ரிக் ஜூலியாஸ், மலேஷியாவில் இருந்து கேக்கு அனுப்பி மகிழ்வித்த தோழி ஜெயா நல்லப்பன், கவிஞர் ஐய்யப்ப மாதவன், நாகர்கோயில் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சிவராஜ மோகன், நண்பர் பத்திரிக்கையாளரும் உயர்நீதி மற்றம் வழக்கறிஞ்சருமான  சுந்தரராஜன், மலையாள கரயோர குமுதம் பத்திரிக்கையாளர் சிந்து




நல்ல நாளுமாக என் பேராசிரியர் முனைவர் கோவிந்த ராஜு அவர்கள் வீட்டுக்கு சென்று ஆசிர்வாதம் வாங்க சென்றிருந்தேன். அவர் அன்பு மனைவி கையால் இனிப்பு தேனீர் கிடைத்தது பாக்கியமாக இருந்தது.  கைகடிகாரம் பார்த்தால் 7.45 pm. ஆகா 8 மணிக்கு சுவிசில் இருந்து ஸ்ரீஅண்ணா 8 மணிக்கு வரவுள்ளாரே என்று பைக்கில் பறந்து வந்து வீடு சேர்ந்தோம். கடிகாரம் முள் தப்பலாம் நான் வாக்கு பாலிப்பவர் என்று அண்ணா 8.04 pm க்கு  காத்திரமாக வந்திருந்தார். "இவர் தான் மனித மனங்களின் உணர்வுகள் பற்றிய "ஆத்மலயம்" என்று நூலின் ஆசிரியர் Srikandarajah கங்கைமகன். என் மனதின் தோழனான ஆசானான  அண்ணாவின் கரிசனையான பாசமான அமைதியான இனிமையான வாழ்த்துக்கள் எனக்கு மட்டுமல்ல என் குழந்தைகள் அத்தானுக்கும் கிடைத்து.



மதிய உணவுடன் விருந்தை முடித்து கொள்ளலாம் என்று இருக்கும் தருவாயில் இனியும் நண்பர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிய வர இரவு டின்னரும் தயார் படுத்தி காத்திருந்தோம்.  ஜமுனாநதி நாகரத்தினம், ராணி  போன்ற தோழிகள் காலை 2.30 க்கு வந்திறங்கியவர்கள்  நடு நிசி 12மணி ஆகி விட்டது அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்ப. அவரை எங்கள் வீட்டில் தங்கி விட்டு செல்ல கூறினேன். அவர் குழந்தையை வீட்டில் விட்டு வந்து விட்டார் என்று விடைபெற்று சென்றுவிட்டார்!. 



பத்மன் அண்ணா, “போதும் அம்மா  விருந்து கொண்டாட்டங்கள் இனி நித்திரக்கு செல்லுங்கள் என உரிமையுடன் கொஞ்சம் கண்டிப்புடனே நினைவுப்படுத்தினார்”. பாசமிகு அண்ணா இன்றைய உதயம் முதல் உங்கள் தங்கையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கென நேரம், பொருள்,ஆவியும், செலவிட்டு பந்தியும் பரிமாறி விருந்துனர்களையும் வழி அனுப்பு மட்டும் என்னுடன் இவ்வளவும் நின்று நிகழ்ச்சிகளை சீறும் சிறப்புமாக நடத்திய என் பாசமிகு அண்ணா உங்களை வணங்குகின்றேன்.  அண்ணனின் அன்புக்கு அடுத்த ஜென்மத்திலாவது தங்கையாக பிறந்து கைமாறு செய்ய இயலும் என்றாக இருப்பினும் அவருக்காக ஒரு பாட்டு பாடி  தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே…………….!! http://www.youtube.com/watch?v=fsKk0g9P32Qபாடி நின்றேன்.





அம்மா தான் நான் சிறு குழந்தையாக இருக்கும் போது சொல்வார்கள் உன் உள்ளம் காலில் ஒரு மச்சம் உண்டு உலகு எல்லாம் சுற்றி வருவாய் என்று இந்த பிறந்த தினத்தில் உலகில் மிக முக்கிய நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்தேன் என் உடன்பிறவா சகோதரர்கள் என் அன்பு நெஞ்சங்கள் நண்பர்கள் தோழிகள், சகோதர்கள் எல்லோரையும் கண்டு வர.    நானும் இன்றய பயணக்களைப்பு, ஆடல் பாடல் கொண்டாட்டங்களால் வந்த அசதியில்  கண் மூடும் முன்பே தூங்கி விட்டேன். என் அன்பு பாச நெஞ்சங்களை என் கனவிலும் நினைவிலும் நீங்கள் மட்டுமே!   

6 Jun 2011

தொலைந்த இணையமும் வேட்டையாடிய நினைவுகளும்!


  
கடந்த சில நாட்கள் இணையம் இல்லாத சூழல். ஒரு பக்கம் நல்லதே  என்று எண்ணினாலும் அப்பாவுக்கு, தன் கவலையெல்லாம் மறக்க செய்த பிராந்தி குப்பி  என்பது போல்  இணையம் எனக்கு போதையாகியதோ என்றும் நம்ப வைத்தது என் நிலை. 

                                                                                                                                     நண்பகளை காணாது கதைக்காது இருந்தது சொல்லி கொள்ள இயலாத துன்பம் தந்தது மட்டுமல்ல இனம் தெரியாத ஒரு துயர் கூடவே ஒட்டிகொண்டதாகவும் உணரப்பட்டேன்.   ஒரு சூனியமான நிலையில் பயணிப்பது போன்று உணர்ந்த போது தான் இவை தரும் துயரம் அளவற்றது என்று புரிந்தது.


பல ஆக்க பூர்வமான வேலைகள் செய்து முடிக்க இணையம் தடையாக இருந்தது என்றால் அது பொய்யாகாது.    பல நாட்களில் நேரத்தோடு எடுக்க வேண்டிய உணவை மறக்க செய்தது,  நிம்மதியான தூக்கத்தை கெடுத்தது. இணையத்துடனே சங்கமித்து நடுநிசி பேய் போல் இணையத்துடன் பயணித்ததால் அதிகாலைகளும் குருவிகல் தரும் ஒலியும் தெரியாதே என்னை விட்டு மறைந்தது.                                                                                                                                                            நாம் நேசிக்கவும் நம்மை நேசிக்கவும் உறவுகள் உண்டு என்பது இன்பமானதும்  தன்னம்பிக்கை தருவதாகவும் இருந்தது.  தனிமையில் ஒரு அறையில் கணிணி முன் இருக்கும் போதும் ஒரு கூட்டத்தில் இருந்து அரட்டை அடித்து கொண்டு  மகிழ்ச்சியான நொடிகளாக இருந்தது. சில பொழுது சில கதைப்புகள் கருத்துரையாடல்கள் நினைத்து நான் தன்னை தானே சிரித்து மாட்டி கொண்டதும் உண்டு.                                                                                                                          


ஆனால் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு வழி கிடைக்க உதவியது.  இக்கட்டான வேளையில் நம் கவலைகளை பகிர்ந்து கொள்ளவும் சில பொழுது தெளிவு கிடைக்காத பிரச்சனைகளுக்கு தெளிவு பெறவும் உதவியது .  உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒருபோதும் சந்திக்க இயலாதவர்களிடம் நட்பில் இணை பிரியா உறவை பேணுவதும் மகிழ்ச்சியை தந்தது.  புதிய அறிவை நாம் பெறவும் நம் கருத்துரையாடல் சிந்தனைகளை பகரவும் வழிவகுத்தது என்றால் மிகையாகாது. 

ஆனால் இணையம் இல்லாத பொழுதுகள் மாதங்களாக செய்து முடிக்க இயலாத பல வேலைகளை முடிக்க நேரம் தந்தது என்றால் அதுவே மெய்.  செடிக்கு தேவையான அளவு தண்ணீர் நேரத்திற்க்கு, நிதானமாக ஊற்றவும், கருகிய இலைகள் தூத்து துப்புரவாக்கவும், தேவையான உரம் இட்டு அதன் அருகில் நின்று ரசித்து பார்த்து கதைக்கவும் நிறையவே நேரம் கிடைத்தது.  2 மாதம் முன்பே தறையிறக்கி வைத்திருந்த பிபிசி வரலாறு காணொளி காணவும் நேரம் கிடைத்தது.  அடுக்களை பாத்திரங்கள்  நேரா நேரம் கழுகி அடுக்கவும்,   வாசிக்க நேரம் கிடைக்காது;   2 மாதம் முன்பு வாங்கி வைத்திருந்த இரண்டு நாவல்கள், புத்தகங்கள் வாசிக்கவும்  நேரம் கிடைத்தது.

எல்லாவற்றிர்க்கும் உபரி குழந்தைகளுடன் இன்னும் பல நல்ல நேரங்கள் செலவிடவும் என்னவருடன் பேசி பேசியே சண்டை இழுக்கவும் நேரம் கிடைத்தது. மறந்து போன உறவினர்கள் வீடு போய் நலம் விசாரிக்கவும் நிறையவே நேரம் கிடைத்தது.

இருப்பினும் நேற்று மறுபடியும் இணைய இணைப்பு பெற்று  என் நண்பர்களிடம் கதைத்த பின்பு தான் போன ஜீவன் திரும்ப பெற்றது போல் உணர்ந்தேன்.  எப்படியாகிலும் இணையம் என் இணையற்ற நண்பர் தான் . இந்த பதிவு என் உயிரினும் மேலான  நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் சமர்ப்பணம்!  

25 Feb 2011

சாதாரண குடிமகனின் நிகழ்வுகள்!!!!!



இரண்டு மாதம் முன்பு எங்கள் 8 வயது மகனுடன் சென்னை சென்றிருந்தோம். அவனின் உயரம் 132 க்கு மேல் இருந்ததால் பிறப்பு சாற்றிதழும் கருதியிருந்தோம். சென்னை செல்லும் போது டிக்கட் தருபவர் அரை டிக்கட்டு தந்து விட்டார். மேலும் சட்டத்தையும் நினைவுபடுத்தி கொண்டார்.  திரும்பி வரும் போதும் சாற்றிதழ் இருக்கும் தைரியத்தில் பேருந்தில் இடம் பிடித்து இருந்து விட்டோம். பேருந்தும் கிளம்பி விட்டது. என்னவ்ரும் என் மகனும் இருவர் சீட்டில் இருந்து விட்டனர்.  நாகர்கோயில் சேர்ந்த ஒரு பெண் அருகில் நானும்.   நான் 25 கொடுத்து அப்போது தான் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி  குளிர் மாறுவதற்கென கையில் வைத்திருந்தேன்.  என் கையிலுள்ள தண்ணீர் பாட்டிலை பார்த்தவுடனே அப்பெண்ணுக்கு தாகம் வந்து விட்டது  கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன் என்று கேட்டார். ஒரு பாட்டில் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியது தானே என்று மனதில் நினைத்து கொண்டே கொடுத்தேன்.
பல பொழுதும் பயணங்களில் சிலர் நம்மை இளிச்சவாயர் ஆக்குவதை என்ன செய்ய என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே பேருந்து ஓட்டுனர் ஹான் அடித்து பேருந்து தயாராகி விட்டது என சிக்னல் கொடுத்தார்.   நல்ல வசதியான இருக்கை  இனி டிக்கட் எடுத்து விட்டு தூங்க வேண்டியது தான் என முடிவெடுத்து இருந்த போது நடத்துனர் அருகில் வந்து 3 டிக்கட் என்றார். நாங்கள் சாற்றிதழை கொடுத்தவுடன் அதை நான் ஏற்று கொள்ள இயலாது இச்சாற்றிதழில் இருக்கும் சிறுவனின் பெயரும் இச்சிறுவனும் ஒரே ஆள் என்று நான் எப்படி அறிந்து கொள்வது.   நீங்கள் என்னை ஏமாற்ற வேறு ஒரு சிறுவனின்  சாற்றிதழ் கொண்டு வந்திருந்தால் நான் தான் போலிஸில் மாட்ட வேண்டும் என என்னவெல்லாமோ புலம்புகின்றார்.  பையன் உயரம் கணக்கு பண்ணி டிக்கட் தர வற்புறுத்துகின்றார்.  நாங்களும் விடும் படி இல்லை. நாங்கள் வரும் போதும் அரை டிக்கட்டு தான் எடுத்துள்ளோம் அப்படி போலிஸ் கேஸ் என வந்தால் நாங்கள் வர தயார் என் சொல்லியும் வடபழனி அருகில் வந்த போது பேருந்தில் இருந்து உடனே இறங்க வேண்டும் என்று கட்டளை இடுகின்றார். நாங்களும் விடும் படியில்லை பேருந்தில் இருக்கும் பண்பானவர்கள் எல்லாம் அமைதியாக இருந்து காட்சியை பார்த்து கொண்டிருக்கின்றனர். ஒரு குரல் கூட ஆதரவாக இல்லை!  அதில் இருந்த ஒருவன்;  சினிமா டிக்கட்டு  அரை டிக்கட் என்று நீங்கள் வாங்குவது உண்டா பேருந்தில் மட்டும் அரை டிக்கட்டு கேட்கின்றீர்கள் என நடத்துனருக்கு வக்காலத்து வாங்குகின்றான்.   பேருந்தில் இரு காவலர்கள் கைதியுடன் பயணித்தனர்.  அவர்களாவது நியாயம் பேசுவார்கள் என்றால் நடத்துனர் பாவம் அவர் கோர்ட்டுக்கு அலைய இயலுமா,  நீங்க முழு டிக்கட் எடுங்கள் அல்லது பேருந்தை விட்டு இறங்குகள் எங்கள் பயண நேரத்தை கெடுக்காதீர்கள் என கூக்குரல் இடுகின்றனர்.  
இனி வேறு வழியில்ல என்று தெரிந்தவுடன் நாங்கள் ஏறிய  பேருந்து நிலையத்தில் கொண்டு விடுங்கள் என பிடிவாதமாக  இருந்து விட்டோம்.  நடத்துனர் பயமுறுத்தியும் கண்டுக்கவே இல்லை. வேறு வழியில்லாது ஒரு ஆட்டோவை பிடித்து பேருந்து நிலையத்திற்க்கு ஏற்றி விட்டான்.  பேருந்து நிலையம் வந்து புகார் கொடுக்கலாம் என்றால் அங்கு காவலர்கள் தற்போது  காப்பி குடிக்க சென்று விட்டதாகவும் திருநெல்வேலியில் முறையிடவும் கூறிவிட்டனர்.  இங்கு வந்து முறையிட்டு  2 மாதமாக காத்திருக்கின்றோம் ஒரு செய்தியும் தெரியவில்லை.   பேருந்து நடத்துனர் கூட அரசு கொடுக்கும் பிறப்பு சாற்றிதழை மதிக்கவில்லை என்றால் அரசு சார்ந்த சாற்றிதழ்கள் அவர்கள் அலுவலகர்களுக்கு லஞ்சம் பெறமட்டுமே உதவும் என்றே தோன்றியது.
 சமீபத்தில் கூட ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
நவம் 27 தியதி ரேஷன் கடைக்கு சென்று சீனி வாங்க சென்றிருந்தேன். ரேஷன் கடை எங்கள் வீட்டில் இருந்து 3 கி.மீ தள்ளி ஒரு ஒதுக்கு புறமான வீட்டில் நடத்துகின்றனர்.  என்னவர் உள்ளூரில் இருக்கும் போது அவருடன் செல்வதே சாத்தியமான வழி.  அவர் உள்ளூரில் இருக்கும் போது ரேஷன் கடை விடுமுறை நாட்களாக இருக்கும். செவ்வாய், வியாழன், சனி மட்டுமே ரேஷன் உள்ள நாட்கள், கடைசி சனியும்  விடுமுறை தான்.  10 துவங்கி 1 வரை  மதியம் 2 துவங்கி 6 மணி வரை நேரம் என குறிப்பிட்டிருந்தாலும் ரேஷன் கணக்கு எழுதுபவன் நிறுப்பவன் முனு முனுத்து கொண்டே தான் தருவர்.  5 மணி க்கு சென்றால் இனி கணக்கு பார்க்கும் நேரம் என்று திருப்பி அனுப்பி விடுவர்.  2மணிக்கு சென்றாலோ சாப்பாட்டு நேரம் இப்படி அவர்கள் வீட்டில் இருந்து மக்களுக்கு தருவது போல் தான் கவலைபட்டு கொள்வர்.    நான் இந்த மாதம் சீனி வாங்க  சென்ற போது உங்கள் ரேஷன் கார்டில் பக்கம் இல்லை ஏன் ஒட்டவில்லை, உங்களுக்கு தெரியாதா எல்லா தொலைகாட்சியிலும் இதை தானே சொல்கின்றார்கள் நீங்கள் என்ன பண்ணி கொண்டிருந்தீர்கள் என ஒரே கேலி கிண்டலுமான அறிவுரைகள். போதாத குறைக்கு  என்னை போல் சீனி வாங்க வந்தவனும் எங்கள் கார்டை பார்த்தீர்களா நீங்க மட்டும் எங்க போனீங்க என்ற கிண்டல் வேறு!!!  நான் 27 தியதி வந்த போது நீங்கள் தான் ஒட்டி தரவில்லை  நான் பொறுப்பல்ல  எனக்கு சீனி தந்தே தீர வேண்டும் என கதைத்து கொண்டு நின்றேன். ஆனால் சட்டத்திற்க்கு புறம்பே சீனி தர இயலாது வரும் செவ்வாய் வாருங்கள் பார்ப்போம் என திருப்பி அனுப்பினார். வரும் வழியில் ஒரு  'அம்மா' கட்சிகாரரை பார்த்து  ரேஷன் கார்டு  ஒட்டி வாங்கினோம்.  இப்படியாக   சாதாரண் மக்கள் வாழ்க்கையை கேலிகுரியதாகவே மாறுகின்றது.  மக்கள் என்ற ஒரு கூறுகெட்ட கூட்டம் வேறு இவ்வகையான சுரண்டலுக்கு குடைபிடிப்பதால் எம்மை போன்றோரும் ஏதாவது கட்சியில் சேராது வாழ இயலாது போலவே உள்ளது! 

23 Aug 2010

நல்ல கற்பனைகளும் கனவுகளும்





பதில் இடுகை வழியாக ஒரு பதிவரின் வலைப்பதிவை வாசிக்க பெற்றேன். 2035ல் ராஜபக்சே, பிராபகரன், சீமான் போன்றோரின் நிலையை பற்றி கற்பனையில் ஒரு பதிவு எழுதியிருந்தார். சில பகுதி ரொம்ப வன்மம் கொண்டதாக இருந்தது. இருப்பினும் ஈழப்போர் விடுத்த கடுமையான மனபோராட்டத்தை எண்ணியபோது அவர் எதிர் கொண்ட போரின் தாக்கத்தை வேறுவிதமாக கொட்டியுள்ளார் என எண்ணிகொண்டேன். அந்த பதிவிற்க்கு பதில் இடுகைதான் என்னை அதிற்ச்சி பெற செய்தது.  மறுஇடுகையில் ஒருவர் எழுதியுள்ளார் தென்தமிழகத்தில் பூமி அதிற்வு வந்து 3 லட்சம் பேர் மாண்டு போவார்ளாம் 2035! என்ன ஒரு கற்பனை வளம் என பாருங்கள் (26 -வருட ஈழ இன படுகொலையில் மாண்டுபோன மக்கள் 1 லட்சம் பேர்! )நம் மக்கள்,எதிற்மறையான கனவுகள் கற்பனைகளை விட நல்ல கனவுகள் காணலாம்.  யஹூத மக்கள் தங்கள் தேசம் ஒரு நாள் கிடைக்குமென தீர்க்கமாக கடவுளின் பெயரால் நம்பினர், எடுத்து காட்டாக ‘ஷிண்டேஸ் லிச்ட்டு’ ஸ்டிவன் ஸ்பீல் பெர்கின் திரைபடத்தில் அவர்களுடைய நிலையை சரியாக சித்தரித்திருப்பார்.  http://www.newsandentertainment.com/zMschindler.html.  இவ்வளவுத்துக்கும் தன் உடல் பலத்தைவிட மன பலத்தையே நம்பினர், அதே போல் தங்களுக்கு என ஒரு தேசத்தையும் பெற்று விட்டனர். சமீபத்தில் எனது பேருந்து தோழியிடன் ஈழ செய்தியை பற்றி கதைத்து கொண்டிருந்தபோது இவ்வாறே கூறினார், வாழ்க்கை ஒரு சுழற்சி ஆகையால் தோல்வியும், ஜெயவும் நிரந்தரமல்லை என;  இன்று தோற்றவன் நாளை ஜெயிப்பான் என நம்பிக்கை கொண்டோம்.




ஒரு வயதான பாட்டியும் நானும் நேரம் கொல்வதற்க்காய் கதைத்துகொண்டிருப்பது உண்டு. பாட்டி முழு பொழுதும் தொலைகாட்சி பெட்டி செய்தி பார்ப்பவர். பாட்டி வழி செய்திகளின் நேரடி ஒளிபரப்பு  எனக்கும் வந்தடையும். எனக்கும் க்ரயம்(crime) செய்தி மேல் நாட்டம் இருப்பதால் ஆற்வமுடன் கேட்பேன். வர வர பாட்டி க்ரயம் செய்தி மட்டுமே தரவேண்டும் என்ற பிடிவாதத்துடன் மகா மோசமான கொலை, கொள்ளை,தகாத உறவு,கற்பழிப்பு என எனக்கென்றே தணிக்கை செய்தது, செய்தி தர ஆரப்பித்துவிட்டார்.




சில வேளைகளில் இப்பாட்டியுடன் எங்கள் பகுதியில் உள்ள குன்றை நோக்கி நடைபயிற்ச்சி செல்வதுண்டு.  ஒரு முறை பாட்டி தன் கற்ப்பனை கதையை கட்டவழ்த்து விடுகிறார், பூமி மட்டும் குலுங்கிச்சு, இந்த பாறைகள் உருண்டு வந்து இங்கு இருக்கும் வீடுகள் எல்லாம் உடைந்து சுக்கு நூறாக்கி விடும்.(முதல் வீடு எங்களுடையது?),அதும் தீர்க்கமாக செல்கின்றார் 2012 ல் பெரியொரு அழிவு திருநெல்வேலிக்கு உள்ளதாம். அதிலும் பாட்டிக்கொரு மகிழ்ச்சி சொந்த வீடு வைத்துருப்பவர்களும் தெருவுக்கு வந்திடுவாங்களாம் அப்போழுது வாடகை வீடு, சொந்த வீடு என எல்லோரும் ஒரே மாதிரி ஆகிடுவாங்களாம். பாட்டியின் கம்னியூசம் இப்படியும் போகுதே என எண்ணி நொந்து கொண்டு இருந்துவிட்டேன்.




சமீபத்தில் குடிசை மாற்று வாரியம் 302 வீடு எங்கள் பகுதியில் கட்டியுள்ளது. பேருந்து ,கடைவசதிகள் பெருகும் என நான் நினைத்து கொண்டேன். மேலும் எங்கள் ஏரியா தலைவர் அசைவ சாப்பாட்டு சாப்பிடுவது இல்லை என்பதால் அசைவ கடைகள்(ஆடு,கோழி,மீன்) வருவதற்க்கும் தடை விதித்துள்ளார் . அவருடைய அதிகார மையம் செயல் இழக்கும் என்பதில் தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பாட்டியின் கூற்று படி தெருவின் அமைதி பறிபோயிடும்,மேலும் பூமி தண்ணீர் குறைந்து விடுமாம்.சுகாதாரம் கெட்டுவிடுமாம்.






இப்போழுது ஒரு தண்ணீர் தொட்டி கட்டி கொண்டுருக்கின்றனர். பாட்டி என்னை அழைத்து சொல்கின்றார், டாங்கு கட்ட நல்ல ஆழமாக தோண்டுகின்றார்கள். ஆஹா பாட்டியும் ஆக்க பூர்வ்மான சிந்தனை ஓட்டத்திற்க்கு வந்து விட்டார்களா என நிமிர்ந்து பார்த்தால், அடுத்த வார்தை தான் தூக்கி வாரி போட்டது; பயன்படுத்தும் கம்பி சரியில்லையாம்,கட்டி முடிக்கும் போது டாங்கு தலை குப்புற விழுமாம்,விழுவது மட்டுமல்ல எதிர்புறத்திலுள்ள வீட்டை அடித்து கொண்டு போய் விடுமாம். இப்போழுது பாட்டி என்னை பார்ப்பதற்க்குள்ளாகவே ஒளிந்துவிடுவேன். இதும் ஒரு போபியாவே.




சிறு வகுப்பில் படிக்கும் போது( 8-12 வயதுக்குள்)சண்டையிட்டு கொண்டால் உன் கண்ணை காக்கா கொத்தும், என வழக்கடித்து கொள்வதே நினைவு வந்தது. எங்கள் நெல்லை செய்தியும் இதற்க்கு ஒத்திருப்பது உண்டு சில வேளைகளின்,தன் குடும்பத்தில் இரண்டு கொலை விழுந்தது என்றால் அவன் குடும்பத்தில் குறைந்தது நாலாவது விழ வேண்டும் என அரிவாளோடு வாழ்பவர்களை பத்திரிக்கை மூலம் படித்துள்ளேன். எல்லாம் மனித மனம் நாம் பழக்க படுத்திகொள்வதே!.




எனது வாழ்க்கையில் இருந்து நான் கற்றது நல்ல கனவு(தூக்கத்தில் அல்ல) காண வேண்டும் என்பதே, நம்மை பற்றி மட்டும் அல்லாது மற்றவர்களை பற்றியும் அவ்வாறே. வெறும் கனவு கைக்கூட எள்ளளவும் சாத்தியமல்ல என்று அறிந்தும் கனவு கண்டேன்,ஆனால் கனவுப்படியே நடந்தது. குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்க்காகவே நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ‘கல்லூரி ஆசிரியை’ என்ற கல்லூரி நாட்கள் கனவு ஒரு புறம் இருந்து கொண்டே தான் இருந்தது அப்போழுது வெறும் பட்டதாரி!. ஒரு நாள் என் கணவர் என்னிடம் வினைவினார் கல்லூரியில் முழு நேர பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டால் படிக்கின்றாயா என. என்னவர் கேலி செய்கின்றார் எனவே எண்ணினேன். அப்போழுது பட்டபடிப்பு முடித்து சரியாக 10 வருடம். ஆனால் இப்போழுது நான் ஒரு இளம் ஆராய்ச்சியாளர்!


வாடகை வீட்டில் வாழ முடிவதில்லை வசிக்கவே முடியும் என வந்த போது நானும் எங்களது மகன்களும் பொழுது போக்காக துண்டு தாளுகளில் வீட்டின் வரைபடம் வரைந்து எங்கள் கனவே வளர்த்தோம். பின்பு கனவு நனவாகி சொந்த வீட்டிலும் குடி புகுந்தோம்.




தமிழ் படங்களின் தாக்கத்தால் கணவர் என்றாலே ஒரு பயம் இருந்தது. எங்கள் கேரளாவில் கல்லூரியிலும் மற்றும் எங்களுடன் படிக்கும், சந்திக்கும் ஆண் நபர்கள்(நண்பர்கள்) சிவப்பாக, தாடி வைத்து,பார்க்க மென்மையாக காட்சி தருவர். நாங்கள் கண்ட மலையாள திரைப்பட ஹீரோக்களும் மோகன் லால்,மம்மூட்டி போன்றவர்களே.திருமணம் என வந்தபோது பச்ச தமிழன்தான் வேண்டும் என விரும்பிய போது ஒரு பயம் உள் மனதில் இல்லாதில்லை.ஆனாலும் நல்ல கனவே கண்டேன்.நான் கண்ட கனவு போலவே ஆருயிர் தோழராகவே எனது கணவர் கிடைத்தார்.




இப்போழுது சில மகன்களின் அம்மாக்களிடம் கதைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் போது நான் கண்டது அவர்களின் கனவே மருமகள் வருவாள்,வந்தவுடன் இவர்களிடம் சண்டையிடுவாள், மகனை பிரித்து விடுவாள்,அதற்க்கு முன்பு அவளை தனியாக குடிபுகுத்த வேண்டும் அவளிடம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.ஒரு முன் கருதல் தேவையே,அதற்க்கு என எதிர்மறையான கனவுகள் அல்ல தீர்வு,ஏன் அம்மாக்கள் மருமக்களை பற்றி நல்ல கனவு காண கூடாது?நான் எனது மருமகளை பற்றியும் அழகான கனவு காண ஆரம்பித்துவிட்டேன்.(என் மகன்கள் படிப்பது 7,3 வகுப்புக்களில்.)சிறுகுறிப்பு, என்னவரிடன் என் கனவை பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன், பாபா- அத்தான் "என் மருமகள் நீல கண்ணுடன், வேற்று மொழி பெண்ணாக இருந்தால் எப்படி இருக்கும்" என  அவரிடம் கேட்ட போது, அவர் சொல்கின்றார் நல்லது தான் நீங்க இரண்டு பேரும் சண்டை போடது எங்களுக்கு புரியாது இருக்கும் என, அவருடைய கனவை பாத்தீங்களா?