Showing posts with label Social-Kudankulam-சமூகம். Show all posts
Showing posts with label Social-Kudankulam-சமூகம். Show all posts

6 Sept 2012

சிவகாசி விபத்து - ஏன் நிவாரண நிதி!


இன்று விபத்து என்றதும்  தமிழக அரசால் 2 லட்சம், பிரதமர் இரங்கல் தந்தி என சிவகாசி செய்தியில் இடம் பிடித்துள்ளது. ஆனால் உலகசந்தையில் பட்டாசுத் தேவையின்  40%உம், இந்தியா சந்தையின் 90% இடம் பிடித்து குட்டி ஜப்பான் என்று பெருமை சேர்க்கும் நகரமே சிவகாசி. ஒரு காலத்தில் ஜாதிய கொடுமைகள் மத்தியில் பஞ்சம் பிழைக்க வந்த நாடார் இன மக்கள் குடியேறி தங்கள் அயராத உழைப்பால் உயர்ந்ததே சிவகாசி. இன்றும் ஏற்றுமதிக்கு முதலிடத்திலும் இந்திய-தமிழக அரசுக்கு வரிகள் வழியாக வருமானம் ஈட்டுவதில் முன்னிலை வகிக்கும்  சிவகாசி தொழிலாளர்கள், ஒரு விபத்து என்றதும் அரசு தரும் ஆயிரங்களுக்கு கையேந்தும் நிலையில் இருக்க காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தன்னலம் கொண்ட சிவகாசி பணக்காரர்களுமே. அவசரநிலையில் மக்கள் சிகித்சை பெற போதிய மருத்துவ வசதி கூட இல்லை என்பது மிகவும் வருந்த தக்க செய்தி. உலகத்தரம் வாய்ந்த பல தொழில்சாலைகள் நிறுவிய ஊரில் ஏன் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மனை இல்லை என்றால் பணக்காரர்களுக்கு தங்கள் மருத்துவ தேவைக்கு என பிளேன் பிடித்து வெளிநாடுகளுக்கு பறந்து விடலாம், ஆனால் ஏழைகளுக்கு அரசு மருத்துவமனை போதும் என்ற இருமாப்பு  இகழ்ச்சியே! சிவகாசி பண முதலைகள் பணத்தில் எந்தளவு உயர்ந்தனரோ அந்த அளவு மனித நேயத்தில் தரம் இறங்கியதே இதை காட்டுகின்றது.

மூடவேண்டிய ஆலையை ஏன் மூடவில்லை என்றால் அங்கு அரசு அதிகாரிக்கு கையூட்டு லட்சங்கள் சென்றுள்ளது. இன்று  பல அரசு அலுவலங்களில் லஞ்சம் தங்கள் உரிமை போன்று இத்தனை ரூபா என கேட்டு வாங்கப்படுகின்றது. பாகுபாடு இல்லாது எல்லா அரசியல் கட்சிகளும்  கண்டும் காணாதது போல் தங்கள் இருப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அரசியல் அதிகாரிகளும் கையூட்டு கொடுத்து தங்களுக்கு லஞ்சம் வாங்க தகுந்த இடமாக மாற்றலாகி பணவேட்டையை ஆரம்பித்து விடுகின்றனர்.

இத்தருணங்களில் தேயிலை தோட்டங்களை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள் நினைவுக்கு வருகின்றனர். தங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு என மிகவும் சுகாதார வசதி கொண்ட மருத்துவ மனைகள் அமைத்திருந்தனர், தொழிலாளர்கள் பிள்ளைகளை பராமரிக்க பாலவாடிகள் கூட இருந்தது.  இதை ஆய்வகர்கள் மூலம் சரிபார்த்தும் வந்தனர். தற்போது இந்திய முதலாளியிடம் தேயிலத்தோட்ட உரிமைகள் வந்த போது  தரம் குறைந்திருந்தாலும் இன்றும் தொழிலாளிகளை பராமரிக்க என்று ஆஸ்பத்திரிகள் உண்டு. ஆங்கில ஆட்சியை பற்றி வரிந்து கதை எழுதும்ம் ஊடகவும் தற்போதைய இந்திய அரசின் மக்கள் எதிர்போக்கை கண்டு கொள்ளாது  பசையுள்ள பக்கமே சாய்ந்து நிற்கின்றது.

400மேல்  தொழில் நிறுவனங்கள் கொண்ட சிவகாசியில் 4000 மேல் ஆலைகளும் இயங்குகின்றன என கணக்குகள் தெரிவிக்கின்றன.  உலகத்தேவையின் 60 % அச்சு சார்ந்த தேவைக்கு சிவகாசியையே நம்பி இருக்கின்றனர். ஜெர்மனிக்கு அடுத்தபடியாக அச்சு சாலைகள் சிவகாசியில் தான் இடம் பிடித்துள்ளன். மழை இல்லாத வெட்பநிலை கொண்ட  இந்த நகரத்தை சுற்றியே பட்டாசு மற்று தீப்பெட்டி, அச்சு சார்ந்த தொழில்கள் கொடிகட்டி பறக்கின்றது. அரசுக்கு மிக பெரிய வருமானமாக சுங்கம்,  வருமான, விற்பனை வரியாக செலுத்தும் நகரங்களில் ஒன்றும் இது. ஆனால் சிவகாசியில் நடந்தது என்ன? ஏழைகள் இரத்ததை, உழைப்பை உறிஞ்சு பணம் சம்பாதிக்கும் ஆலை உரிமையாளர்கள் தங்கள் குழந்தைகள் கல்வி கற்க பல கல்வி நிறுவனங்கள் நிறுவியவர்கள் சிறந்த மருத்துவ மனைகள் நிறுவ ஏன் முன் வரவில்லை. தங்களுக்கு இருந்த  தார்மீக கடமையும் மறந்து விட்டனர்.  

நாய்க்கர் மன்னர்களால்  வ்ந்த இழிநிலையை தங்கள் உழைப்பால் விரட்டி தங்கள் அடையாளத்தை நாடார்கள் சிவகாசியில் மீட்டனர். சிவகாசியின் ஆளுமை  பணக்கார நாடார்கள் வசமே உள்ளது. ஆனால்  பணவெறி பிடித்த நாடார் முதலாளிகளால் மறுபடியும் சமூக வெறுப்புக்கு செல்ல உள்ளனர்.  இன்றும் திருமண பந்ததில் இணைய  மற்று பகுதியில் வசிக்கும் நாடார்களை தங்களுக்கு இணையாக மதிப்பதில்லை. இவர்களுக்கு என்ற தனி அந்தஸ்து பெற்று உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்க உதவிய தொழிலாளர்கள் நிலை பரிதாபமாகி விட்டது. கொள்ளைக்கார அரசை  நாம் விமர்சிக்கும் போதும் ஒரு சமூகத்தின் எல்லா வாய்ப்புகளையும் வசதிகளையும் சொந்தமாக்கி முன் வந்த ஒரு சாரார்  தங்கள் சக மனிதனையும் மனித நேயத்தோடு நடத்தியிருந்தால் இது போன்ற விபத்தில் அவர்கள் உயிரிழக்க நேர்ந்திருக்காது.

சிவகாசி என்று மட்டுமல்ல தமிழகத்திலுள்ள பெறும்வாரியான ஆலை முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை அடிமாடுகளாக வைத்து வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நியாமான சலுகைகளை கொடுக்காது, லஞ்சமாகவும் கையூட்டகாவும் அரசு அதிகாரிகளுக்கு கொடுத்து தங்கள் இருப்பை ஸ்தரப்படுத்தி கொள்கின்றனர்.

இன்றைய தினம் விபத்தை எண்களாக குறிப்பிட்டு தீயில் வெந்து போன பல குடும்பங்களை வசதியாக மறந்து விடுகின்றோம். பெற்றோர் இருவரும் வேலை செய்ய எத்தனை குழந்தைகள் இன்று அனாதமாகினதோ? அல்லது எத்தனை வயர்முதிர் பெற்றோர் அனாதமாகினரோ. இது தனி நபர் துக்கம் பாதிப்பு என எடுத்து கொண்டால் அரசு தரும் 2 இட்சம் என்பது  2 ரூபாய் மதிப்புக் கூட பெறாது. விளிம்பு நிலை மனிதனையே தேடி விபத்துக்கள் வருவதும் நாம் வாழும் சமூகத்தின் மனிதந்நேயத்தின் வீழ்ச்சியே. சிவகாசியில் நேற்று நடந்திருப்பது 85 வது விபத்து என்று அறியும் போது அரசியல் இயந்திரமும் அதிகார பணக்கார இயந்திரமும் இயந்திரன்மையோடு நடந்து கொள்வதையே காணப்போகின்றோம். இவர்களுக்கான வைப்பு நிதி, ஓய்வூதியம், காப்பீடு நிதி இருந்தா என்ற கேள்வி  மூடி மறைக்கவே நிவாரண நிதி என்பதே என் கருத்து!

உலகறிந்த சிவகாசிக்கே இந்த நிலை என்றால் கூடன்குளம்  அணு உலையால் என்ன நிகழபோகின்றது என்று பீதியுடன் நோக்க வேண்டியுள்ளது.

3 Dec 2010

Kudankulam-மரண கோட்டையின் மேல் தவழும் திருநெல்வேலி!!!!!

title தமிழகத்தின் வீர மண், புராதன கோயில்கள், கிருஸ்தவ ஆலயங்களின் இருப்பிடம், அறிவு ஜீவிகள், அறிஞர்கள் வீர புதல்வர்கள் பிறந்து, வாழ்ந்த மண் என பல சிறப்புகள் நெல்லைக்கு உண்டு.   தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் அபகரிப்பு என  தாமிரபரணி நதிக் கரையை கூவமாக்கும் அரசு, கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டாம் என முடிவெடுத்து; முழுவதுமாக அழிக்கும் நோக்குடன் கூடன்குளம் அணுமின் நிலையம் நிறுவி உள்ளது. இந்த நிலை திருநெல்வேலியை மரண பூமியாக உருவாக்கவே உதவும்.      

இந்தியாவில் இது போன்ற அணுமின் நிலையங்கள்  தாராப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேஷ், குஜராத், கன்னடா, தமிழகத்தில் சென்னை கல்பாக்கம் , மற்றும் கூடன்குளம்  என 8 இடங்களில் நிறுவியுள்ளனர்.  170 - 500 MW மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துடன் மற்று நிலையங்கள் நிறுவியுள்ளபோது,  1000 MW கொண்ட 6 ரியாக்டர்கள் அதாவது 6000 MW மின்சாரம் தயாரிக்கும் நோக்குடன் தமிழகம் கூடன்குளத்தில் நிறுவி தமிழக மக்களில் உயிரில் விலையை உலக அரங்குக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர் நமது மத்திய மாநிலை தலைமைகள். இந்த மின்சாரம் தமிழக தேவைக்கு தானா என்றால்; அது தான் இல்லை!  இது வெறும் லாப இச்சைகொண்டு விற்று சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிறுவியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை.யுராணியம் என்ற மூலப்பொருள் கொண்டு அணுவை வெடிக்க செய்யும் ஆற்றல் கொண்டு கடல் நீரை வெப்பமாக்கும் சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதே இதன் திட்டம். 1986 ல் ரஷியாவின் பகுதியான உக்ரைன் நாட்டில் சென்நோபில் என்ற இடத்தில் நடந்த மாபெரும் விபத்தால் பல ஆயிரம் மக்கள் உயிர் வாங்கியது.  80 ஆயிரம் மக்கள் இழப்பீட்டு பெற்றனர்.  ராஜிவ் காந்தி ஆட்சியில் ரஷீய அதிபருடன் கொண்ட ஒப்பந்தம் ஊடாக இத்திட்டம் நமது இந்தியாவில் தமிழகத்தில் துவங்கப்பட்டது. கேரளா போன்ற மாநிலங்கள் 'இயற்கைக்கு ஆபத்து' என விலக்கி தள்ளிய இத்திட்டம் நமது தன்னலம் கொண்ட அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் தமிழகத்தில் துவங்கப்பட்டது.பல சமூக ஆவலர்கள், அறிவு ஜீவிகள் எதிர்த்த இத்திட்டம்  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்ற பல்லவியுடன் சில மக்கள் மதத்தலைவர்கள் ஆதரவுடன் துவங்கப்பட்டது. திடீர் என விபத்து ஏற்பட்டால் இப்பிரேதசங்கள் எவ்வாறு பாதிக்கப்படும், எப்படி தற்காத்து கொள்வது அல்லது இழப்பீட்டு மறுவாழ்வு என்பது பற்றி ஒன்றும் விளக்காது அரசின் இரும்புக்கரம் கொண்ட திட்டத்தை நடத்த இருப்பதும் மாபெரும் துயராகும்.கூடன்குளம் ஒரு கடலோர பிரதேசமாகும். பின் தங்கிய வாழ்கை சூழலுள்ள, 40 ஆயிரம் ஜனத்தொகை  கொண்ட மக்களை வேலை வாய்ப்பு, தொழில் என ஆசை வார்த்தை கூறி அவர்கள் நிலங்களை கையகப்படுத்தி கூடன்குளம் அணுமின் நிலையம் நிறுவியுள்ளனர். இயற்கை விஞ்ஞானிகள், மற்றும் மக்களின் எதிர்ப்பையும் வகை வைக்காது 1988 ல் அற்றைய பிரதமர் ராஜிவ் காந்தியும் சோவியத் ரஷியாவின் அதிபர் மிக்கேல் கோர்பசேவ்வும் கையெழுத்திட்டு 2001ல் பணி துவங்க வேண்டும் என்ற நோக்குடன் 13 ஆயிரம் கோடி செலவில் துவங்கபட்டதுதான் கூடன்குளம் அணுமின் நிலையம்.  போபாலில் மக்கள் எதிர்ப்பை மறிகடந்து  இந்திரா காந்தியால் துவங்கப்பட்டு 4 லட்சதிற்க்கு மேலான மக்களின் வாழ்க்கையில் விளையாடியது போல் தான் தென் தமிழக மக்களின் வாழ்க்கையை பற்றி சிறிதும் எண்ணாது ராஜிவ் காந்தியால் 2 ரியாக்டருடன் துவங்கபட்ட ஆலை, மன்மோகன் சிங் அரசால் மேலும் 4 ரியாக்டருடன்  நிறுவப்பட்டுவருகின்றது.பெரும் அளவிலான இதன் உபகரணங்கள் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்டதே. போபால் ஆபத்துக்கு முன்பு அப்பிரதேச மக்கள், கல்வியாளர்கள், ஊடகவியாளர்கள் 'நாங்கள் ஆபத்து என்ற குன்றின் மேல் வசிக்கின்றோம் என கூக்குரலிட்டனர். ஆனால் விபத்தை நேர் கொண்ட மக்கள் குடும்பம் குடும்பமாக தெருவிலும் வீதிகளிலும் செத்து மடிந்தது ஒன்று தான் நடந்தேறியது. அந்நேரம் அவ்வழி சென்ற ரெயில்  ஜன்னல்களையும் வாசல்களையும் தட்டி தங்களை காப்பாற்ற கூறிய மக்களின் சத்தத்தை பொருட்படுத்தாது விரைந்து சென்றது. மக்கள் ஓடியும் நடந்தும் மூச்சு விட இயலாமல் தெருவில்  செத்து மடிந்தனர். நஷ்டயீடுக்காகவும் , நியாத்திற்க்காக போராடும் மக்களை மாக்கள் என்பதை போன்று விரட்டியடிக்கும் காவல் துறையை நாம் ஊடகம் வழி கண்டு வருகின்றோம்.         
   title
போபாலில் நடந்தது அழிவு என்றால், அணு ஆலையால் நடைபெற போவது பேரழிவு!! மனிதர்கள் தீயிலிடும் பிளாஸ்டிக் பைகள் போன்று உருக்கி கொல்லப்பட காத்திருக்கின்றனர். அரசு தரும் நஷ்டயீடு பெற மக்கள் உயிருடன் இருக்க போவதில்லை.  திரைப்படத் துறையினருக்கு வேண்டுமானால்  திரைப்படம் எடுக்க உதவப்படலாம்!
title


அணு ஆலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் போது இயற்கையை மாசுபடுத்தும் கார்பன் டயோக்சைடு மிகவும் குறைவாக வெளியிடுகின்றது , மேலும் குறைந்த நேரம் கொண்டும் நிறைய மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது. அணு பயன்பாட்டை யுத்ததிற்கு அல்லாது சமாதானமாக பயன்படுத்தபடுகின்றது என்ற கருத்தும் எடுத்துரைக்கபடுகின்றது. ஆனால் கார்பன் டயோக்சைடுக்கு பதிலாக வெளியாகும் ரேடியோ கதிர் வீச்சுகளால் உயிர் கொல்லி நோயான கான்சரில் பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற இயலாது என்பதை வசதியாக மறைக்கின்றனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்வது என்பதை இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை.  மேலும் மிக ஒரு பெரிய மூலதனம் கொண்டு உருவாக்கபடும் இவ்வகை ஆலைகளுக்கு தேவையான மைய பொருள் யுராணியம் மிகவும் அரிதான பொருளாகும். அவை 30 வருடத்திற்க்குள்ளாக கிடைக்காத சூழலுக்கு தள்ள படலாம். மேலும் விஞ்ஞானிகளின் கருத்துப்படியும் இதன் பாதுகாப்பு என்பது முழுவதுமாக வரையறுக்கப்பட்டதல்ல. மனிதனையும் இயற்கையும் ஒன்று சேர அழிக்கும் என்பதே மிகவும் கொடியதான செய்தி. சமூக விரோதிகள், மற்றும் தீவிர வாதிகளால் இலகுவாக தாக்கப்படும் இலக்காக மாறும் அபாயமும் உள்ளது.



titleஇதுவரை உலகில் 99 அணுஆலை விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் 1986ல் ஏப்ரல் 26 அன்று உக்ரைன் நாட்டில் நடந்த விபத்தை மிகவும் கொடியதாக கருத்தில் கொள்ளபட்டுள்ளது. செர்னோவில்(Chernobyl) என்ற இடத்தில் பிரியாட்(Pripyat) என்ற நதிக்கரையில் இவ்வாலை நிறுவபட்டிருந்தது. விபத்துக்கு பின்பு ஆலைக்கு 4 கி.மீ சுற்றளவு பகுதியிலுள்ள பைன் மர காடுகள் முற்றிலுமாக அழிந்தது.  6 கி.மீ சுற்றளவு பிரதேசமுள்ள மாடுகள், குதிரைகள் தைராய்டு சுரப்பியல் ஏற்பட்ட ரேடியோ கதிர்வீச்சால் பழுதாகி மரணத்தை தழுவியது.  அங்கு வேலை பார்த்த 20 நபர்களும் இறந்தனர் என்றும் மட்டுமல்ல அவர்களுக்கு சிகிச்சைகள் அளித்த மருத்துவர்கள், அவர்களின் உதவியாளர்களும் செத்து மடிந்தனர். அப்பகுதியை சுற்றியுள்ள 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் புற்று நோய் தாக்கி இறந்தனர். ரஷிய அரசு விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு 'ரஷியாவின் வீர புதல்வர்கள்' என்ற விருதை வழங்கி தன்னை ஆசுவாசபடுத்தியதுடன், இவ் விபத்தை மிகவும் ரகசியமாக கையாண்டது. இருப்பினும் திறமை மிக்க பத்திரிக்கையாளர்களால் பல செய்திகள் பின்பு வெளிகொணரப்பட்டது.                                                                                                                                                                                                                அபாயம் நிகழ்ந்த பணியிடத்தில் இருந்த ஒரு ஊழியர் தன் 6 மாதம் கர்ப்பிணியான மனைவியிடம் "ஜன்னல் கதவுகளை பூட்டி இருந்து கொள், நம் குழந்தையை காப்பாற்ற வேண்டும்" என கூறி சென்றுள்ளார். மிகவும் ஆரோக்கியமாக காணப்பட்டவரை, பின்பு அவருடைய மனைவி பெரும் போராட்டத்திர்கு பின் மாஸ்கோவிலுள்ள மருத்துவமனையில்  சென்று சந்தித்துள்ளார். இவருக்கும் பாதுகாப்பு கவசம் அணிவித்து கணவரை தொட்டு பேசக் கூடாது என்ற அறிவுறுத்தலுடன் அருகில் செல்ல அனுமதித்துள்ளனர். நண்பர்களுடன் சீட்டு விளையாடி கொண்டு மகிழ்சியாக மருத்துவ மனையில் காணபட்ட அவருடைய கணவர் நேரம் செல்லும் தோறும் கண்கள் நீல நிறமாக மாறி உடல் வீங்கி வெடித்து 14 வது நாளில் அவரின் எலும்புக்கள் தெரியும் வண்ணம் உரு மாறி உலகை விட்டு மறைந்து விட்டார். பின்பு இவருக்கு  பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. விபத்துக்கு பின்பு படிபடியாக பணியை நிறுத்தி 1991ல் முழுவதுமாக மூடி விட்டனர்.                                                                                                                                               ஆனால் நமது அரசியல் அரக்கர்கள் துணைகொண்டு நமது மண்ணில் கூடன்குளம் அணுமின் நிலையம் என்ற பெயரில் திறப்பு விழா நடத்தி விட்டது ரஷியா அரசு!                                                                                                    

கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 4 கி.மீ சுற்றளவுக்குள் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர் என்றால்  40 கி.மீக்கு உட்பட்ட பகுதியில் 40 லட்சம் மக்களும் வசிக்கின்றனர் என்பதே மிகவும் கொடியதான உண்மை!   ஒரே ஒரு ஆறுதல் 6000 MW உற்பத்தி என்பதால் கதிர்வீச்சின் அளவும் பன் மடங்காக இருப்பதால் உக்ரைன் நாட்டவரை போல் 14 நாட்கள் என்பது 14 விநாடியில் நமது அழிவு நம்மை வந்தடையும்நமது எலும்புக்களை ஆராய்ச்சி கூட பண்ண இயலாது ஆழமான குழிகளில்   மண்ணுக்குள் புதைத்து விடுவார்கள்!!!! எழுத்தாளர் சுஜாதாவின் கருத்துக்கள்! ஜப்பான் விபத்து http://josephinetalks.blogspot.com/2011/09/tirunelveli-kudankulam.html