27 May 2020

ஜார் அரச குடும்பம்

If I die or you desert me, you will lose your son and your crown within six months.- Rasputin.
ரஷியாவிற்கு சைபீரியாவில் இருந்து ரஸ்புடின் வராதிருந்தால் மன்னரின் மகனுக்கு ஹீமோபீலியா என்ற நோய் இல்லாதிருந்தால் 300 வருட ஜார் மன்னரை போல்ஷிவிக் படைகள் கொன்றிருக்க இயலுமா? முதல் கம்யூனிஸ்ட் தேசமாக மாறியிருக்கத் தான் செய்யுமா?
ஜார் அரச குடும்ப கொலையில் லெனினுடைய நேரடி தொடர்பு கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் குடும்பத்துடன் கொல்ல அனுமதித்திருக்க மாட்டார் என்ற ஊகவும் உண்டு‌ இருந்தாலும் லெனின் பற்றிய ரஷிய அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு அவர் பயங்கரவாதத்தை பயண்படுத்தினவர் , பொய் சொல்ல மிகவும் திறமையானவர், பெரும்பான்மை மனநிலையை உருவாக்க தெரிந்தவர், அவருக்கான ஒரு நன்றியுள்ள குழுவை கட்டமைக்க தெரிந்திருந்தார்.
உண்மையில் ரஷியாவில் ஒரு மக்கள் போர் ( civil war) மூண்டதை விரும்பாதவர். ஒரு கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் அதன் மூலம் ஒரு அச்சத்தை ராஜ பரம்பரைக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டுமே ஸ்டாலினுக்கு இருந்தது.
எதற்கு கிளர்ச்சியை ஏற்படுத்த
வேண்டும்? 300 வருஜார் ராஜ குடும்பத்திற்கும் அவருக்குமான பகை தான் என்ன?
தற்போதைய ஜார் மன்னரின் தாத்தாவின் கொலை வழக்கில் கைதாகி 1881 ல் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட Ulyanove குடும்பத்தை சேர்ந்த லெனினுடைய சகோதரன் அலெக்ஸ்சாண்டரில் இருந்து வர வேண்டும் வரலாறு.
ஜார் மன்னர் இறந்ததும் அவர் மகன் நிக்காளோஸ் III பதவிக்கு வந்தார். தனது 49 வது வயதில் சிறுநீரகப் பிரச்சினையால் இறந்து விட்டார். அடுத்து தந்தை வழி பதவி நிக்கோளஸ் II க்கு கிடைக்கிறது. அவர் அரசியல் அறிவில் பூஜ்ஜியமாக இருந்துள்ளார். ஜப்பானிடம் தோல்வியுற்றது மக்களின் நம்பிக்கையை இழக்க காரணமாகிறது.
நாலு மகள்கள் இருக்க ஐந்தாவதாக பிறந்த மகன் அலெக்ஸி ஹீமோபீலியா என்ற நோயுடன் மல்லிடுகிறார். இந்த காலயளவில் தான் ரஸ்புடின் அரண்மனை குடும்பத்திற்கு அறிமுகம் ஆகிறார். எப்படி என்று தெரியாது சிறுவனை குணப்படுத்தினார் அதுவே உண்மை.
தாயாரான மகாராணிக்கு மகன் சுகம் பெற்றதால் ரஸ்புடின் மேல் அளவு கடந்த மரியாதை அன்பு வருகிறது. இது மற்றைய ராஜகுடும்ப உறுப்பினர்களுக்கு கண்டபடி பேச வழிவைக்கிறது.
ஒரு கட்டத்தில் ராணிக்கும் மாந்திரீக சாமியாருக்கும் உறவு என்ற பரப்புதல் ராஜகுடும்பம் மேல் மக்களுக்கு இருந்த மரியாதையை இழக்க செய்கிறது. ( இந்தியாவில் நேரு குடும்பத்தை குறிப்பிட்ட அரசியல் கட்சி அவமதிப்பது அவதூறு பரப்புவது போல).
சாமியார் ஜெர்மனி தரகர் என்பது வர செய்திகள் பரவுகிறது. 1916 ல் சாமியார் அரச குடும்ப ஆட்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்.
மக்கள் புரட்சியில் ஆளும் தற்காலிக அதிகார அரசும் மன்னரும் ஒரு பக்கம், படையும் மக்களும் எதிர்பக்கம்.
வெளிநாட்டு பயணத்தில் இருந்த ஸ்டாலின் ஓடோடி வருகிறார்.
மன்னர் குடும்பத்தை பாதுகாப்பதாக கூறியே ஆறு மாதங்களுக்கு மேலாக மாஸ்கோவில் இருந்து பல மைல்கள் பயணிக்க வைத்து பல வீடுகளிலாக தங்க வைக்கின்றனர்.
கடைசி நாள் 1917 வருகிறது. உங்களுக்கு பாதுகாப்பு என்று கூறி, மேல் மாடியில் இருந்தும் கீழ் மாடிக்கு வர வைத்து வரிசையாக நிற்க வைத்து சுட்டு கொல்கின்றனர்.
மன்னரின் உறவினர்கள் இங்கிலாந்து , ஜெர்மெனி ராஜகுடும்பத்தில் இருந்தனர்.
பல வருடங்கள் அவர் கொல்லப்பட்டதையே பலரும் நம்பவில்லை . பின்பு அவர்கள் உடலை புதைத்திருந்த சுரங்கத்தில் இருந்து எடுத்து மரியாதையாக புதைக்கின்றனர். அதிலும் மன்னரின் மகன், மரியா என்ற மகளுடைய உடல் கிடைத்ததாக தகவல்கள் இல்லை.
அப்படியாக ஒரு conspiracy theory இந்த ஆட்சி மாற்றத்தில் பெரிதும் பங்கு பெற்றது. இத்துடன் 300 வருட ஜார் மன்னராட்சி முடிவிற்கு வந்தது. உலகின் முதல் கம்யூனிஸ்ட் தேசம் உருவாகிறது.
1917 ல் ஆட்சியை பிடித்த ஸ்டாலினும் 1924 ல் நோய்வாய்பட்டு இறந்து விட்டார். அடுத்து தான் கொடும் கோலன் ஜோசப் ஸ்டாலின் ஆட்சி மலருகிறது.
இந்த நூற்றாண்டில் மக்கள் உயிரை பறித்த, பல மில்லியன் மரணங்களுக்கு காரணமான மாவோ, ஹிட்லர், ஜோசஃப் ஸ்டாலின் பற்றி பின்னொரு பதிவில் காண்போம்.

0 Comments:

Post a Comment