29 Aug 2023

லதாவின் கழிவறை இருக்கை!

 








 


கழிவறை இருக்கை’ என்ற புத்தகம் லதா எழுத்தில் முதல் பதிப்பாக

நவம்பர் 2020ல் நோரப் இம்பிரின்ட்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது..

224 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் விலை 225 ரூபாய் மற்றும் புத்தக

அட்டை வடிவமைப்பை சந்துரு செய்துள்ளார்.


எழுத்தாளர் முனைவர் தமிழ்மணவாளன் முன்னுரை வழங்கி உள்ளார்.

பெண்ணிய பார்வையில் இருந்து முனைவர் நா நளினி தேவி தனது

விளக்கத்தையும் கொடுத்துள்ளார். எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி

பவா செல்லதுரை, குங்குமம் தோழி துணை ஆசிரியர் மகேஸ்வரி

நாகராஜன் போன்றோர் தமிழில் காமம் பற்றி வந்த முதல் புத்தகம்

என்ற வகையில் பின் அட்டையில் கருத்து பகிர்ந்துள்ளனர்.


ஆண்கள் காமத்தை பொதுவில் பேசுவது அங்கீகரிக்கப்படுகிறது.

ஆனால் ஒரு பெண் காமத்தைப் பற்றி பேசினால், சாதாரணஅடிப்படை

விஷயமாக இருந்தாலும் , அவள் யாருடனும் படுக்கைக்கு செல்ல

தயங்க மாட்டாள் என்ற நோக்கிலேயே பார்க்கப்படுகிறாள் என்று

எழுத்தாளர் லதா முன்னுரையில் குறிப்பிடுகிறார்.


நன்றாக கலவிக் கொள்வதற்கான வழிமுறைகளோ வாழ்வதற்கான

குறிப்புகள் அடங்கியதும் அல்ல இப்புத்தகம், என் அனுபவங்களில்

இருந்து, என் சுற்றுச்சூழலில் நான் பார்த்தவர்களில் இருந்து

மற்றவர்களிடம் கேட்டு தெரிந்தவைகளில் இருந்து எளிமையான

முறையில் ஆராய்ந்து பார்க்கும் ஒரு சிறு முயற்சியே என்று

குறிப்பிடும் கட்டுரையாளர், உடல் ரீதியான நெருக்கம் என்

பெற்றோரிடமோ, உறவுகளிடமும் அக்கம்பக்கத்தாரிடமும் கண்டதே

இல்லை என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கிறார். காமத்தின் மேலுள்ள

தனது ஆச்சரியங்கள், தாக்கங்கள், அதிர்ச்சிகள், வெறுப்புகள்

கோபங்கள், அன்பு, காதல் தன்னுடைய கேள்விகளுக்கு கிடைத்த

பதில்களின் தொகுப்பு தான் இப்புத்தகம் என தொடர்கிறார் லதா.

கட்டுரையாளரின் பல கருத்துக்கள் வெளிநாட்டு எழுத்தாளர்கள் டேவ்

சேவேஜ் மற்றும் கால்கோ போலோ வின் பாதிப்பும் உள்ளதாக கருத

வேண்டியுள்ளது.

பாலியல் சார்ந்த தன்னுடைய முதல் அனுவவம் வாழ்க்கையில்

முதன் முதலில் பார்த்த திரைப்படத்துடன் சம்பந்தப்பட்டது என்பதுடன்;

மாமா என்று அழைக்கப்படும் நபரிடம் தியேட்டரில் தான் எதிர்கொண்ட

கசப்பான அனுபவம் மற்றும் அண்ணன் என்று அழைக்கப்படும் நபரிடம்

தான் எதிர்கொண்ட பாலியல் அத்து மீறல் என்ற தளத்தில் நின்று

புத்தகத்தை விளக்க ஆரம்பிக்கிறார்.


வெவ்வேறு தலைப்பில் 32 அத்தியாயங்களாக இப்புத்தகம்

தொகுக்கப்பட்டுள்ளது. . அவை முக்கியமாக, வாழ்வின் அடிப்படைத்

தேவைகள், பெண்ணும் சமூகமும், கழிவறை இருக்கை, திருமணம்

தாண்டிய உறவுகள், காதலின் வெளிப்பாடாக காணும் காமம், உணவும்

உடலுறவும், சுய இன்பம் போன்ற தலைப்பில் பிரிக்கப்பட்டுள்ளது.

” கலவியினால் ஏற்படும் இன்பத்தைத்தான் நாவின் ருசிக்கு முன்னமே

உணர்ந்திருப்பார் ஆதி மனிதன்” என்ற எழுத்தாளரின் முரண்பட்ட

கருத்துடன் துவங்குகிறது இப்புத்தகம். இக்கருத்து சிக்மண்டு

பிராயிடு கோட்பாடோடு இணைக்க முயன்றாலும் அக்கருத்தை அதன்

பின் வந்த பல ஆராய்சியாளர்கள் கடந்து போனது அறிந்தது தான்.

கட்டுரையாளரின் தோழி சொல்லி அழுதது, சில புத்தக வாசிப்பு, தனது

நண்பர்களுடன் உரையாடியது, இவருக்கு தெரிந்த நண்பர்கள் கூறினது

என தனக்கு தோன்றியதை, தோன்றியது போல எழுதி உள்ளார்.

திருமணமான சில பெண்களிடம் கட்டுரையாளர் பேசிப் பார்த்தாராம்,

கணவர்கள் முத்தம் கூட கொடுக்கவில்லை போன்ற கருத்தாக்கங்கள்

இந்த புத்தகத்தில் நிரப்பி வழிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் அதன்

தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் பொருத்தம் இல்லாது ஒரே

கருத்தை பல இடங்களில் திரும்ப திரும்ப ஒரே கருத்தையே சொல்லி

இப்புத்தகத்தின் ஒரு குறை ஆகும். இந்த கருத்துக்கள் வலுசேர்க்கும்

விதம் ஏதாவது ஆராய்ச்சி நடத்தி நம்பகத்தக்கதான தரவுகள் இல்லை

என்பதும் பெறும் குறை ஆகும். கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து



அனுபவம் பொது சமூகத்திற்கு பொதுமைப்படுத்தி தர இயலாது. அதை

கட்டுரையாளர் தனது சுயவரலாறு மாதிரி தான் எழுதிக் கொள்ள

வேண்டும்.

சிலர் தான் பிறந்த இடத்திலேயே கடைசி வரை வாழ விருப்பம்

உள்ளவர்களாக இருப்பர், சிலருக்கு ஒவ்வொரு நொடியும்

வித்தியாசமாக வாழ பிடிக்கும். புது மனிதர்கள் புதுவகை உணவுகள்

என பலவற்றையும் பார்க்க வேண்டும் அனுபவிக்க வேண்டும் என

என்னை சில ஆண்களுக்கு பெண்களுக்கும் புதுப்புது உறவுகளின்

நாட்டம் ஏற்படும். இவர்களுக்கு திருமணம் ஆனதும் ஆகாததும்

பொருட்டல்ல. தனக்கு பிடித்ததை செய்து வாழ்வது மட்டுமே என

நினைப்பவர்கள் இவர்கள் ஒரு ஆணோ பெண்ணோ தான் மணந்தவரை

தாண்டி வேறு யாராலும் ஈர்க்கப்பட மாட்டார்கள் என யார் சொன்னது?

இப்படி மற்றவர்களால் ஈர்க்கப்பபடுகிறது அவர்களின் தவறு இல்லை

என்றும் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர். அவள் என்னை

காதலிக்கிறாள், என் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறாள்,

ஆனாலும் இன்னொருவரையும் காதலிக்கிறாள். ஓரிரு முறை அவனை

பார்ப்பதிலும் அவனுடன் செலவழிப்பதிலும் அவள் மகிழ்வுறுகிறாள்.

அந்த மகிழ்ச்சி அதுவாக எங்கள் வீட்டிலும் பரவுகிறது என்று ஒரு

கணவன் கட்டுரையாளரிடம் பகிர்கிறார்.

திருமண பந்தம் தாண்டி ஏதோ காரணத்துக்காக திருமணனத்திற்கு

மீறிய உறவுகள் பேணுகிறவர்கள், பிற உறவுகள் பாலான ஈடுபாட்டால்


தங்களுடைய குடும்பத்திற்கு தேவையான அன்பையும் ஆதரவையும்

தராமல் இருக்க எவருக்கு உரிமை இல்லை. தனக்கு முக்கியமானது

வெளியில் கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் தன் குடும்பத்தின்

மகிழ்ச்சியும் முக்கியம் அதனால் எந்த பங்கம் வராமல் பார்த்துக்

கொள்ள வேண்டும் போன்ற வழிமுறைகள் தருகிறார் கட்டுரையாளர்.

திருமணத்திற்கு மீறின உறவால் நிகழும் பாதிப்புக்களை பற்றி, இதன்

சட்ட மீறல்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.


எதிர்காலம் இருட்டாகி விடுமோ என்ற அச்சத்தில் நிகழ்காலத்தில்

இன்பத்தை தவிற்க தேவை இல்லை. ஒருவருக்கு மேல் அன்பு

வைத்திருப்பதன் அறிகுறி என்னவென்றால்; இடைவெளி தேவைப்படும்

நேரம் ஒதுங்கி இடம் கொடுப்பதும் அருகாமையை விரும்பும் நேரம்

அணைத்து கொள்வதும் ஆகும் என்ற புதிய கட்டளையை பிறப்பித்து

உள்ளார் கட்டுரையாளர்.

திருமணம் ஆனதால் ஒருவருடன் மட்டுமே காதல் வரும் என்பது

இயற்கைக்கு புறம்பானது. திருமணங்களில் மேலோட்டமான

விஷயங்களான சடங்குகள் தாலி போன்றவை தான் மனித

உணர்வுகளை விட அதிகமாக மதிக்கப்படுகின்றன. தங்கள் கணவரின்

சடலத்தின் மீது விழுந்து புரண்டு அழும் பெண்கள்; தங்கள் கணவர்

இறந்துவிட்டார் என்பதை விட, தான் பூவும் பொட்டும் இழந்து ஓர்

அமங்கலி என்ற பட்டத்துடன் வாழ வேண்டி வருமே என்ற கவலை


மேலோங்கி நிற்பதால் மட்டுமே என்ற கருத்து பகிரும் கட்டுரையாளர்;

கணவன்பால் கொண்டுள்ள அன்பின் வெளிப்படையாய் அமைந்தது

அல்ல சுய இரக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே என்று பொதுமைப்படுத்தி

குறிப்பிடும் தகவலுக்கான ஆதாரம் என்ன என்பதையும்

குறிப்பிடவில்லை.


என் வலிமையான உணர்வுகளின் தன்னிச்சையான வெளிப்பாடாகும்.

அத்தனை கருத்துக்களும் அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லாமல்

இருக்கலாம். ஏற்க கூடியதை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லாததை

இன்னும் ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் விவாதிப்போம் விளங்கிக்

கொள்வோம் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை

யாராலும் மறுக்க இயலாது என்று முடிக்கிறார் கட்டுரையாளர்.


வாழும் கலையை பாலியல் கல்வியை எத்தனை பள்ளிகள்,

கல்லூரிகள், குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றன என்று

கேள்வியை எழுப்பியுள்ளார் கட்டுரையாளர். தமிழ் மரபு,

சமூகம் கல்வி மற்றும் இலக்கியத்துடன் காமத்தையும்

கலவியையும் நயம்பட கடத்திய தமிழ் மரபை பற்றி

கட்டுரையாளருக்கு தெரியவில்லை தான். தமிழ் சமூகம்

கலவி காமம் பற்றி எதுவும் தெரியாது என்ற

கட்டுரையாளரின் வாசிப்பைத் தான் கேள்விக்கு உள்ளாக்கும்.


கேட் மில்லெட்டின் பாலியல் அரசியல் சார்ந்த புத்தகம் 1968

களில் வந்தது நினைவில் கொள்ள வேண்டி உள்ளது.

கலவி என்பதை முக்கிய கருத்தாக்கமாக வைத்துள்ள கட்டுரையாளர்

கலவிக்கான இந்திய பார்வை, காமசூத்திரா போன்றவை பற்றி எங்கும்

உரையாடவில்லை. கி.மு 3 ஆம் நூற்றாண்டாண்டு எழுதப்பட்ட

தொல்காப்பியம் பொருளாதிகாரம் வாழ்க்கை கல்வி மற்றும் கலவி

பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் இலக்கியமாக

பன்பாடாக கற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். நல்லொழுக்கம் ,

நெறிகள், ஆளுமை போன்ற பாட பகுதியில் மாணவர்கள் கற்றுக்

கொண்டு தான் உள்ளனர்.


பெண்கள் தொடைகளை ஆண்கள் ‘கழிவறை இருக்கை’ போன்று

பயன்படுத்துகின்றனர் என்ற பொருள் கொண்ட கழிவறை இருக்கை

தலைப்பு, மனித உடல் உறவை பற்றி எத்தனை அருவருப்பான

பொருளில் மனித மனநிலையில் கடத்துகின்றனர் என்பதை

அவதானிக்க வேண்டி உள்ளது.

இந்த புத்தக கருத்தும் எழுதிய காலமும் எடுத்துக்கொண்டால்,

வெறும் ஒரு புத்தகமாக கடந்து செல்ல இயலாது. இது ஒரு

இட்டுகட்டின பரப்புரையாகவே இப்புத்தகத்தில் அடங்கி இருக்கும்

கருத்தியலை எடுக்க இயலும். சமூகத்தின் அடிப்படையான குடும்பம்


என்ற நிறுவனம் எத்தனை பழுது பட்டாலும் அதன் உள்ளில் இருந்து

அதை சரி செய்ய பல ஆளுமைகள் முயலும் போது, அதை சில

அரசியல் நோக்கங்களூக்காக வெளியில் இருந்து உடைக்கும்

இப்புத்தகத்தை வன்மையாக கண்டிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

கேட் மில்லெட்டின் பாலியல் அரசியல் சார்ந்த புத்தகம் 1968 களிலே

வந்தது நினைவில் கொள்ள வேண்டியது கட்டுரையாளர் மனப்பாங்கை

நோக்கத்தை புரிந்து கொள்ள உதவும்.

பெண்ணியம் என்பது கழிவறைகளை பற்றி புலம்புவதோ காமத்தை

கொண்டாடுவது தான் என்று குறுக்குவது போல் உள்ளது,

பெண்ணியத்தில் இயல்பாக இருக்க வேண்டிய ஆளுமை மற்றும்

அதிகார பரவல் பற்றியோ பெண்களின் சமூக பொறுப்புணர்ச்சி

பற்றியோ எதுவும் பேசப்படவில்லை, மாறாக பெண்ணியம் என்கிற

பேரில் பொறுப்பற்ற உதிரிகளை உருவாக்க முற்படுகிறாரோ இந்த

முற்போக்கு பேர்வளி என்றும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை