Showing posts with label பிரான்சிஸ் சேவியர். Show all posts
Showing posts with label பிரான்சிஸ் சேவியர். Show all posts

8 Aug 2025

பிரான்சிஸ் சேவியர், இயேசுவின் சபையின் பொதுச் செயலாளரான அருட்தந்தை இக்னேஷியஸ் லொயோலாவிற்கு எழுதிய கடிதம்- கொச்சி, ஜனவரி 14, 1549


ரோம்

இயேசுவின் சமூகத்தின் பொதுச் செயலாளரான
#அருட்தந்தை இக்னேஷியஸ் லொயோலா
அவர்களுக்கு,.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் கிருபையும் அன்பும் எப்பொழுதும் எங்களோடு இருப்பதாக! ஆமென்.

 

என் சொந்தமும், கிறிஸ்துவின் இருதயத்தில் ஒரே பிதாவுமான அருட்தந்தையே,

சமீபத்தில் இந்த இடத்திலிருந்து ரோமுக்குச் சென்ற பல கடிதங்கள், உங்கள் ஜெபங்களாலும் தேவனுடைய நன்மைகளாலும் இங்குள்ள மதப்பணிகள் எவ்வளவு சிறப்பாக நடைபெறுகின்றன என்பதை உங்களுக்கு அறிவித்திருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால், ரோமிலிருந்து இவ்வளவு தொலைவில் உள்ள இந்தப் பகுதிகள் குறித்து நான் நேரடியாக உங்களிடம் கூற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். எனவே, இவ்விடங்களைச் சில அம்சங்களைச் சுருக்கமாகத் அனுப்புகிறேன்.

முதலில், என் பார்வைக்கு வந்தவரையில், இந்தியர்களின் முழு இனமும் மிகவும் காத்தனமுடையவர்கள். தங்கள் சொந்த பழக்கவழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் விரோதமான எதையும் கேட்க அவர்கள் விரும்புவதில்லை; அந்த மரபுகள், நான் கூறியபடி, காட்டுமிராண்டித்தனமானவையே.

 

தெய்வீக விஷயங்கள், இரட்சிப்புக்கான விஷயங்கள் குறித்தும் அவர்கள் பெரிதாகக் கற்றுக்கொள்ள விருப்பம் கொள்வதில்லை. பெரும்பாலான இந்தியர்கள் தீய இயல்புடையவர்கள்; நல்லொழுக்கத்திற்கு விரோதமானவர்கள். அவர்கள் மனதின் நிலையின்மை, அசட்டுத்தனம், நிலைத்தன்மையின்மை ஆகியவை நம்ப முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. பாவமும் மோசடியும் நிறைந்த பழக்கவழக்கங்களால், நேர்மையெனும் குணம் அவர்களிடம் அரிதாகவே காணப்படுகிறது.

இங்குள்ள கிறிஸ்தவர்களை நல்வழியில் நிலைநிறுத்துவதிலும், இன்னும் விசுவாசிக்காதவர்களை விசுவாசத்திற்கு அழைப்பதிலும் எங்களுக்கு கடினமான உழைப்பு தேவை இருக்கிறது.

 

இந்த நாடு கோடையில் கடும் வெப்பத்தாலும், குளிர்காலத்தில் அதிக காற்று, மழையாலும் வசிப்பதற்கே கடினமானது. சொகோத்ரா, மொலுக்காஸ், குமரிப் பகுதியில் உணவு, பொருட்கள் மிகவும் குறைவு; மக்களின் மனப்போக்கினால் உடல், மன உழைப்புகள் நம்ப முடியாத அளவு கடினமானவை.

இந்த மக்களின் மொழிகளும் கற்றுக்கொள்ள சுலபமல்ல; உடலுக்கும் ஆன்மாவுக்கும் ஆபத்துக்கள் அதிகம்.
ஆனாலும், தேவனின் கிருபையால், இங்கு உள்ள எங்கள் சங்கத்தார் அனைவரும் ஆவி, உடல் இரண்டிற்கும் பாதிப்பில்லாமல், போர்த்துகீசர்களாலும், (அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும்), இந்தியர்களாலும் (கிறிஸ்தவர்களும் புறமதத்தாரும்) நேசிக்கப்படுகிறோம் என்பதே விசித்திரமானது.

 

மீண்டும் சொல்கிறேன், இந்தியர்கள்  புறமதத்தாராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் மிகுந்த அறியாமையில் உள்ளவர்கள் என்று நான் கண்டுள்ளேன்.  ஆகவே, இங்கு சுவிசேஷத்தைப் பரப்ப வருவோர் கல்வியை விட நல்லொழுக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்  அதுவும் கீழ்ப்படிதல், மனோத்திடம், பொறுமை, அன்பு, பாவத்துக்கு எதிரான விசேஷமான தூய்மை; மேலும், விவேகம், புத்திசாலித்தனம், வலிமையான உடல், மன உறுதி வேண்டும், உழைப்பையும் துன்பங்களையும் தாங்குவதற்காக வேண்டும்.

 

இதனால், இனி இந்தியாவுக்கு வருவோரின் நல்லொழுக்கங்களைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டிய அவசியம் உண்டு என நினைக்கிறேன்.
நம்பிக்கையுடன் அனுப்பக்கூடிய ஆட்கள் தேவை  விசேஷ தூய்மையும் தாழ்மையும் உடையவர்கள், பெருமையோ, அகம்பாவமோ இல்லாதவர்கள் ஆக இருக்க வேண்டும்..

 

கோவா கல்லூரி முதல்வராக வருபவருக்கு, பொதுவாக முதல்வருக்கு தேவையான பண்புகளுடன் இரண்டு விசேஷ குணங்கள் அவசியம் .

1.  முதலில், கீழ்ப்படிதலில் சிறந்தவரும் , அரசாங்க அதிகாரிகளின், மதத் தலைவர்களின் மனதை வெல்ல வேண்டும்.
இங்கு அவர்கள் கட்டளைகளை நாங்கள் கடைப்பிடிப்பதைப் பார்த்தால், எங்களை அன்போடு நடத்துவார்கள்; இல்லையெனில், முற்றிலும் விரோதமாக மாறுவார்கள்.

2.  இரண்டாவது, அவர் எளிமையான, நயமுள்ள நடத்தை உடையவராக இருக்க வேண்டும்; மாணவர்களையும், சகோதரர்களையும் பயமுறுத்தாமல், அன்பால் இணைக்க வேண்டும்.

 

வலுக்கட்டாயமாக யாரையும் குழுவில் வைக்க வேண்டாம்; விருப்பமில்லாதவர்கள் வெளியேறட்டும். ஆனால், தகுதியானவர்களை அன்பின் பிணைப்பால் வைக்க வேண்டும். சங்கத்தார் அன்பு, ஒற்றுமையால் நிறைந்த ஒன்றாகும்; கசப்போ, அடிமைத்தனமான பயமோ அதற்கு முற்றிலும் வேறானவை.

எனது அனுபவத்தில், இங்கு உள்ளூர் மக்களால் சபை நிலைநிறுத்த முடியாது; நாங்கள் இல்லாமல் போனால் கிறிஸ்தவம் இங்கும் குறைந்து போகும்.
ஆகவே, ஐரோப்பாவில் இருந்து தொடர்ந்து எங்கள் குழுவினரை அனுப்பப்பட வேண்டும்.

இப்போது எங்கள் சங்கத்தினர்  இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ளனர் .  மொலுக்காஸ் 4, மலாக்கா 2, குமரி முனை 6, குலம் 2, பசாயின் 2, சொகோத்ரா 4.
இவ்விடங்களின் தூரங்கள் மிகப் பெரியவை — மொலுக்காஸ் கோவாவிலிருந்து ஆயிரம் லீக், மலாக்கா 500, குமரி 200, குலம் 120, பசாயின் 60, சொகோத்ரா 300.
ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு மேற்பார்வையாளர் இருக்கிறார்; அவர்கள் சிறந்த புத்திசாலித்தனம், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆவார்கள்.

 

போர்த்துகீசர்கள் கடலும், கடற்கரையும் மட்டுமே கட்டுப்படுத்துகின்றனர்; உள்நாட்டில் தாங்கள் வசிக்கும் நகரங்கள் மட்டுமே இவர்களிடம் உள்ளது.
உள்நாட்டு மக்கள் தீய பழக்கங்களில் ஆழ்ந்திருப்பதால், கிறிஸ்தவத்தை ஏற்க விரும்புவதில்லை.
புதிய மாற்றுமதத்தாரை போர்த்துகீசர்கள் அன்போடு நடத்தினால், பலர் கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்வார்கள்; ஆனால், அவர்கள் இகழப்பட்டதைப் பார்த்து, பலரும் ஏற்க விரும்புவதில்லை.

 

இந்தக் காரணங்களால், நான் இங்கு உழைப்பதை விட, சீனாவிற்கு அருகில் உள்ள, முஸ்லிம்களோ யூதர்களோ தொட்டுப் பார்க்காத, தெய்வீக, இயற்கை அறிவு அறிய ஆர்வமுள்ள ஜப்பான் நாட்டுக்கு போக முடிவு செய்துள்ளேன். அந்த மக்களிடையே உழைப்பது நல்ல, நிலையான பலனைத் தரும் என நம்புகிறேன்.

 

கோவா கல்லூரியில் மூன்று ஜப்பான் மாணவர்கள் உள்ளனர்; அவர்கள் கடந்த ஆண்டு மலாக்காவில் இருந்து என்னுடன் வந்தனர்.
அவர்கள் நல்வழி உடையவர்கள், கூர்மையான புத்தி உடையவர்கள்; குறிப்பாக பவுல், இவர் உங்களுக்கு ஒரு நீண்ட கடிதம் அனுப்புகிறார்.
அவர் எட்டு மாதங்களில் போர்த்துகீசு மொழியை வாசிக்க, எழுத, பேச நன்றாகக் கற்றுள்ளார். இப்போது கிறிஸ்தவ போதனையில் நன்றாக பயிற்சி பெற்றுள்ளார். தேவனின் உதவியால், ஜப்பானில் பலர் கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்வார்கள் என எனக்கு நம்பிக்கை உள்ளது.

 

முதலில் அந்நாட்டின் மன்னரிடம் சென்று, பின்னர் பல்கலைக்கழகங்களிலும், கற்றல் மையங்களிலும் போதிக்க எண்ணுகிறேன்.
பவுல் கூறுவதாவது, ஜப்பானில் உள்ள மதங்கள் ‘சிங்சிங்குவோ’ என்ற நகரத்தில் இருந்து வந்தவை; அது சீனா, கதாய் நாடுகளுக்கு அப்பால், ஜப்பானிலிருந்து ஆண்டு பாதி பயணம் தூரத்தில் உள்ளது. ஜப்பானை அடைந்தவுடன், அங்குள்ள மக்களின் பழக்கங்கள், இலக்கியம், மதம், சிங்சிங்குவோவின் போதனைகள் ஆகியவற்றை உங்களுக்கு எழுதுகிறேன்.

சீனப் பேரரசிலும் கதாயிலும், அங்குள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தின் போதனைகள் மட்டுமே பரவலாக உள்ளன எனப்படுகிறது.   அவற்றை நன்கு அறிந்த பின், உங்களுக்கும், பாரிஸ் பல்கலைக்கழகத்துக்கும் எழுதுவேன், அங்கேயிருந்து ஐரோப்பாவின் பல்கலைக்கழகங்களுக்கு இவற்றின் செய்தி சென்றடையும்.

இங்கு இருந்து நான், ஒரே ஒரு ஐரோப்பியரை — வலென்சியாவின் கோஸ்மோ டோரஸ்,  மற்றும் அந்த மூன்று ஜப்பான் இளைஞர்களை மட்டுமே அழைத்துச் செல்கிறேன்.

 

இந்தியாவின் இப்பகுதிகளில், போர்த்துகீசர்களுக்குச் சொந்தமான நகரங்கள் பதினைந்து உள்ளன. அவற்றில், மன்னர் பொதுத் தொகையில் இருந்து ஆரம்ப நிதியைக் கொடுத்தால், எங்கள் சபையின் பல இல்லங்களைத் தொடங்கலாம். இதைப் பற்றிக் கடிதத்தில் மன்னரிடம் ஏற்கனவே சொன்னேன். மேலும், எல்லாவற்றையும் சைமன் ரொட்ரிக்சிடம் தெரிவித்தேன்; அவர், உங்களின் அனுமதியுடன், அதிக அளவில் எங்கள் சங்கத்தினரையும், ஒரு பெரிய போதகர் குழுவையும் கொண்டு இங்கே வருமானால், மன்னரின் ஆதரவுடன் எங்கள் பையின் பலக் கல்லூரிகளை நிறுவ முடியும்; இது மதத்தின் நலனுக்கே மிக உகந்ததாக இருக்கும் என்று கூறினேன்.

 

எனக்குத் தோன்றுவது, மன்னரின் சிறப்பு நம்பிக்கையில் உள்ள சைமனின் இந்தியா வருகை மிகவும் ஏற்ற காலத்தில் நடைபெறும். அவர், மன்னரின் அதிகாரத்துடன், கல்லூரிகளை நிறுவவும், கிறிஸ்தவர்களுக்கு உதவவும் வருவார் .  ஏற்கனவே உள்ளவர்களுக்கு  அவர்களுக்கு அன்பு காட்டினால் கிறிஸ்தவம் ஏற்கத் தயாராக இருப்பவர்களுக்கும் உதவும்.

இந்த விவகாரத்தில் நீங்கள் சைமனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எழுதி அனுப்பினால் நலம்; ஏனெனில் ஆண்டோனியோ கோமேஸ் கூறியதாவது, சைமன் கோயம்ப்ராவில் இருந்து எங்கள் பலரையும் கூட்டிக் கொண்டு இந்தியா வர முடிவு செய்துவிட்டார்.

 

ரோமிலும், வேறு இடங்களிலும், போதனைக்கும் இலக்கியத்திற்கும் அதிகமாக ஈடுபடாத எங்கள் குழுவினர் உங்களிடம் குறைவில்லை. இவர்கள், போதுமான அனுபவத்துடன், புறமதத்தாருக்கு உதவும் தேவையான நல்லொழுக்கங்களுடன், குறிப்பாக விசேஷமான தூய்மையுடன், வலுவான உடல்-மன உறுதியுடன் வந்தால், இங்கு மதப்பணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பார்கள். ஆகவே, உங்களுக்குச் சிறந்தது என்று தோன்றும் வகையில், எங்களுக்கு அப்படிப்பட்ட உழைப்பாளர்களை அனுப்புங்கள்.

மேலும், எங்கள் சபையினர் அனைவருக்கும், உங்களின் ஆன்மிக உபதேசங்களால் நிறைந்த ஒரு கடிதத்தை உங்கள் பிள்ளைகளுக்கு தந்தை விட்டுச் செல்லும் சாசனமாக அனுப்பினால், நாங்கள் உங்களை நேரில் காண முடியாத தூரத்தில் இருந்தாலும், தேவன் உங்களுக்கு கொடுத்த ஆன்மிகச் செல்வங்களைப் பெறுவோம். இதை உடனே செய்ய வேண்டிய அவசியமில்லை; ஆனாலும் எப்போது ஒருநாளாவது இந்த அருளை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

என்ரிக்கோ என்ரிக்கெஸ் என்ற போர்த்துகீசு ஆசாரியர், எங்கள் குழுவை சேர்ந்தவர், மிகச் சிறந்த நல்லொழுக்கம் உடையவர்; தற்போது குமரிக்குப் பகுதியில் இருக்கிறார். அவர் மலபார் மொழியை மிக நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவர். தனியாகவே பலரின் உழைப்பைச் செய்துவிடுகிறார். அவரின் பிரசங்கங்களாலும் தனிப்பட்ட உரையாடல்களாலும் அங்குள்ள கிறிஸ்தவர்கள் அவரை மிகுந்த பாசத்துடனும் மரியாதையுடனும் நேசிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவருக்கு “நாளின் வெப்பத்தையும் சுமையையும் சுமக்கிற அவருக்கு ” (மத்தேயு 20:12) — நீங்கள் தனிப்பட்ட ஒரு கடிதம் எழுதி அனுப்பி அவருக்கு ஆறுதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

கொச்சியிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில், போர்த்துகீசர்களுக்குச் சொந்தமான “கிரங்கனூர்” என்ற ஊர் உள்ளது. அங்கு மிகப் புனிதமான செயின்ட் பிரான்சிஸ் சமய ஒழுங்கைச் சேர்ந்த, மற்றும் கோவா மறைமாவட்ட ஆயரின் துணையாக உள்ள, எங்கள் குழுவிற்கு மிக உண்மையான நண்பரான பிதா வின்சென்சோ, ஒரு மிக அழகான செமினாரியை நிறுவியுள்ளார். அதில் நூறு மாணவர்கள் தங்கவைக்கப்பட்டு, பக்தியிலும் கல்வியிலும் பயிற்சி பெறுகிறார்கள்.

 

எங்கள் சங்கத்திற்கான அவரது அன்பில், பிதா வின்சென்சோவையும் விட கோவா ஆயர் தாமே முன்னிலையிலிருக்கிறார்; இந்தியா முழுவதிலும் அவர் ஆட்சிச் சிறப்பும், எங்கள் சங்கத்துடன் அன்பும் கொண்டவர். அவர் உங்கள் நட்பையும் விரும்புகிறார்.  ஆகவே, அவருக்கும் நீங்கள் கடிதம் எழுதினால் நலம்.

 

மீண்டும் பிதா வின்சென்சோவுக்குத் திரும்புகிறேன். எங்கள் நட்பினால், அவர் தனது செமினாரியை எங்கள் சங்கத்திடம் ஒப்படைக்க விரும்புவதாகவும், அங்குள்ள மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிக்கவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பண்டிகை நாட்களிலும் மக்களுக்கும் செமினாரி வாசிகளுக்கும் போதனை செய்யவும் எங்கள் சங்கத்திலிருந்து ஒரு ஆசாரியரை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

 

ஏனெனில் அப்பகுதியில் போர்த்துகீசர்கள் மட்டுமல்ல, சுமார் அறுபது கிராமங்களில், புனிதர் செயின்ட் தோமா கிறிஸ்தவமாக்கியவர்களின் சந்ததியினர் வாழ்கிறார்கள். செமினாரி மாணவர்கள் உயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அந்த ஊரில் செயின்ட் தோமாவிற்கும் செயின்ட் ஜேம்ஸிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு ஆலயங்கள் உள்ளன. பிதா வின்சென்சோ, இவ்விரு ஆலயங்களுக்கும் ஆண்டுதோறும் ஒருமுறை முழு தண்டவிலக்கு (Plenary Indulgence) பெறும்படி, அத்துடன் பண்டிகை நாள் மற்றும் அதற்குப் பின் ஏழு நாட்களுக்கு, அருட்த் தந்தையிடம் தொடர்பு கொள்ள நீங்கள் முயற்சி செய்வீர்கள் என நம்புகிறேன். இது, செயின்ட் தோமாவின் மற்றும்  மாற்றுமதத்தாரின் சந்ததியினரின் பக்தியை அதிகரிக்கும். மேலும், அவர், அப்பகுதிக்கு ஒரு ஆசாரியரை போதகராகவும் கற்பிக்கவும் அனுப்புமாறு எதிர்பார்க்கிறார். இந்த ஆசிகள், அவர் எங்களை வாழ்நாளும், மரணத்திற்குப் பின்னும் எங்கள் நண்பராக வைத்திருப்பார். இதைப் பற்றிய பொறுப்பை அவர் மிகக் விருப்பமாக எனக்கு ஒப்படைத்துள்ளார். இந்த தண்டவிலக்குகளுக்காக அவர் எவ்வளவு ஆவலாக உள்ளாரோ, சொல்ல முடியாது.

 

எனக்காக ஒரு விஷயத்தை கேட்டுக் கொள்கிறேன் ரோமிலுள்ள செயின்ட் பியெத்ரோ இன் மொண்டோரியோ ஆலயத்தில், தூதர் செயின்ட் பேதுரு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் புனிதத் தலத்தில், எங்கள் ஆசாரியர்களில் ஒருவரால் ஆண்டுதோறும் மாதத்திற்கு ஒருமுறை திருப்பலி நடத்தப்பட வேண்டும்.

மேலும், ரோமில் உள்ள எங்கள் சங்கக் கல்லூரிகள், தொழில்முறை ஆசாரியர்கள், அவர்களின் கடமைகள், சங்கத்தின் பணி மற்றும் அதன் பலன்கள் ஆகியவற்றைப் பற்றித் தொடர்ந்து முழுமையான தகவல்களை எங்களுக்கு அனுப்ப எவரையாவது பொறுப்பேற்கச் செய்யவும்.

கோவாவில் இருந்து, ரோமில் இருந்து வரும் கடிதங்கள் மலாக்காவுக்கு அனுப்பப்படவும், அங்கிருந்து அவை பல பிரதிகளாகக் காப்பி எடுக்கப்பட்டு, ஜப்பானில் உள்ள எனக்கு அனுப்பப்படவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

 


என் ஆத்துமாவின் தந்தையே, உங்களை முழு மனதுடன் வணங்குகிறேன்; நான் முழங்காலில் மண்டியிட்டு எழுதுகிறேன் .  உங்களை முன்னிலையில் வைத்துக் கொண்டு, என் வாழ்நாளெல்லாம் தேவனின் மிகப் புனிதமான சித்தத்தைத் தெளிவாக அறிந்து, அதை முழுமையாக நிறைவேற்றும் கிருபையை அவர் எனக்குக் கொடுக்கும்படி, உங்கள் புனித பலிகளிலும் ஜெபங்களிலும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். எங்கள் மற்ற சகோதரர்களையும், எனக்காக இதேபோல் ஜெபிக்கச் சொல்லுங்கள்.

இப்படிக்கு
உங்கள் மிகச் சிறியதும் பயனற்ற பிள்ளை,
பிரான்சிஸ் சேவியர்

கொச்சி, ஜனவரி 14, 1549

 


21 Jul 2025

பிரான்சிஸ் சேவியர் இயேசு சபை நிறுவனர் இஞ்ஞாசியர் லொயோலாவிற்கு எழுதிய கடிதம் கொச்சி, ஜனவரி 20, 1548


 உறுப்பினர் பிரான்சிஸ் சேவியர் இயேசு சபை  நிறுவனர்  இஞ்ஞாசிய
ர் லொயோலாவிற்கு  எழுதிய கடிதம்

 கொச்சி, ஜனவரி 20, 1548

எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையும் அன்பும் எப்போதும் எங்களுக்கு துணையாக இருக்கட்டும்! ஆமேன்.

என் மிக அன்புடைய தந்தையே,
 இந்த வாழ்நாளிலேயே உங்களை பார்க்கும் ஆசை எனக்கு மிகவும் இருக்கிறது. ஏனெனில் உங்களுடன் பல முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து ஆலோசிக்க வேண்டும், அதற்காக உங்கள் உதவி தேவைப்படுகிறது. இடைவெளி எவ்வளவாக இருந்தாலும் அது கீழ்ப்படிதலுக்குப் தடையாக இருக்க முடியாது.

இப்போது இந்தியாவில் நம்முடைய சமூகம் பலராக இருக்கிறது, ஆனால் நம்முடைய ஆத்மாக்களுக்கு ஒரு உண்மையான மருத்துவர் தேவைப்படுகிறார். எனவே என் மிக அன்புடைய தந்தையே, தயவுசெய்து உங்கள் குழந்தைகளான எங்களை, இந்தியாவிலுள்ளவர்களையும், மற்ற இடங்களில் இருப்பவர்களைப் போலவே கவனியுங்கள். மிக உயர்ந்த தகுதி மற்றும் பரிசுத்தம் கொண்ட ஒருவரை எங்களிடம் அனுப்புங்கள். அவர், எம் சோம்பேறித் தனத்தையும் மந்த நிலையையும் சீர்செய்யும் ஆற்றல் கொண்டவராக இருக்க வேண்டுகிறேன்.

இந்தியாவில் நம்முடைய சமூகம் மிக்க அவசரமாகக் தேவையென விரும்புவது பிரசங்கிக்கத் தகுந்த பாதிரியார்கள். தற்போது சிமோன் அனுப்பியவர்களில் ஒருவர் கூட பிரசங்கக் கடமைக்கு தகுந்தவராக இல்லை எனத் தெரிய வருகிறது.

இந்தியாவில் உள்ள போர்த்துகீசியர்கள் நம்மை மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொள்கிறார்கள், அவர்களுக்கும் நம்முடைய சமூகம் சார்ந்த நல்ல பிரசங்கிகள் தேவை. அதற்காக உங்கள் கவனத்தையும் பரிசுத்த பக்தியையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், போகப்போக மதமற்ற பகுதிகளில் நற்செய்தியை எடுத்துச் செல்ல, மிகுந்த பரிசுத்தம் மற்றும் உறுதி கொண்டவர்களை அனுப்ப வேண்டும். அவர்கள் ஒருவராகவோ, குழுவாகவோ, தேவையின் அடிப்படையில் சென்று பணியாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக, மொலுக்கா தீவுகள், சீனா, ஜப்பான் ஆகிய இடங்களுக்கு அனுப்பியது போல.

இந்த கடிதத்துடன், சீனாவையும் ஜப்பானையும் பற்றிய விளக்கங்களையும் அனுப்புகிறேன். அதை நீங்கள் பார்த்தவுடன், அங்குப் பணியாற்ற வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும் என்பது உங்களுக்குப் புரியும்.

புனித பிதாவிடமிருந்து (போப்) அனுகூலங்கள், நமது கல்லூரியின் முக்கிய வேதிகைக்கு உரிமைகள், பிஷப்பின் அவசியமின்றி எண்ணெய் ஆசீர்வாதங்களை வழங்குவதற்கான அனுமதிகள் ஆகியவை வருவதை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

முன்னர் அனுப்பிய கடிதங்களில் நான் இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். உபவாச நேரத்தை மாற்றுவது அவசியமில்லை என எனக்குத் தெரிகிறது. இந்தியாவில் போர்த்துகீசியர்கள் பரந்து வாழ்கிறார்கள். எல்லோருக்கும் பொருத்தமாக இருக்க மாற்றம் தேவையில்லை.


ஒரு வருடம் அல்லது பத்து மாதங்களுக்கு பிறகு, நான் எனது சகோதரர்களில் ஒருவரோ இருவரோ ஜப்பான் செல்வதா அல்லது அவர்களை மட்டும் அனுப்புவதா என்ற முடிவுக்கு வரவேண்டும். நான் இன்னும் யோசனையில் இருக்கிறேன், ஆனால் தற்போது என் விருப்பம் நான் சென்றடையச்செய்யும் போல் இருக்கிறது. இறைவன் தன் விருப்பத்தை தெளிவாக எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

மொலுக்கா தீவுகளுக்கு சென்று பணியாற்றும் மூவரில் ஒருவரை, மற்றவர்களுக்கு மேலாளராக நியமித்துள்ளேன். ஜோவான் பெயிரா என்பவரைத் தேர்ந்தெடுத்தேன். அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். இதே மாதிரியான ஏற்பாடு குமரிக்கோடி மற்றும் பிற பகுதிகளிலும் செய்ய எண்ணுகிறேன்.

இந்த பாரபரிய நிலைகளில் பணியாற்றும் எங்களுக்காக நீங்கள் ஜெபியுங்கள். உங்கள் வழியாகவும், பரலோகத்தின் உதவி எங்களுக்கு தேவை என்பதை ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்துவாராக!

உங்கள் ஆழ்ந்த கீழ்ப்பணியாளர்,
 பிரான்சிஸ் சேவியர்
 கொச்சி, ஜனவரி 20, 1548

பிரான்சிஸ் சேவியர் எழுதிய கடிதம் – ஜனவரி 20, 1548, கொச்சியில் இருந்து போர்ச்சுகீசிய மன்னர் ஜான் மூன்றாவது

 

பிரான்சிஸ் சேவியர் மற்றும் மன்னர் ஜானுக்கான(111) கடிதம் – ஒரு வரலாற்றுப் பின்னணி

கிழக்கு கடற்கரையில் தென்றல் வீசிக்கொண்டிருந்தது..  சரியாக வாச்கோடி காமா வந்து சென்ற 1498 ஆண்டு கணக்கிட்டால் 50 வருடங்கள் பின்னுட்டு இருந்து. 1548 ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி பிரான்சிஸ் சேவியர் கொச்சியில் தரையிறங்கினார்.

அந்த நாட்களில் கோவாவின் வயதான பிஷப் ஒருவர், தனது பரந்த ஆயர் மாநிலத்தில் உள்ள நகரங்களை பார்வையிட கொச்சி  வந்திருந்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடவுளின் திட்டமெனவே, அந்த நாள் அவர்களுக்குள் நேரில் சந்திப்பாக அமைந்தது. ஒருவருக்கொருவர் முகமறியும் அந்த நிமிடங்களில், ஒரு ஆறுதலையும் ஆனந்தத்தையும் இருவரும் பெற்றனர்.

இந்த சந்திப்பு, பிரான்சிஸ் சேவியருக்கு சில நினைவுகளைத் திரும்பக் கொண்டு வந்தது. காற்றில் கலந்த ஒரு உந்துதல் போலவே, அவர் விரைந்து ஒரு பேனைவை மைதீட்டி ஒரு முக்கியமான கடிதத்தை எழுத ஆரம்பித்தார். அந்த கடிதம் போர்ச்சுகீசிய மன்னர் கிங் ஜானுக்கானது.

ஆனால் இப்போது, இந்தப் புதிய கடிதத்தில் அவர் காட்டிய மொழிநடை, ஏதோ ஒரு இன்னொரு தீவிர மாற்றத்தைக் எதிர்நோக்கியது ஆகும். இது ஒரு துறவி மன்னனுக்கு எழுதும் சாதாரண  கடிதமல்ல. இதில், மன்னரின் செயற்பாடுகளின் பின்புலத்தில் உள்ள குழப்பங்களைப் பற்றிய தீவிரக் கவலை இருந்தது.

மன்னர் ஜான் 3, இந்தியாவில் உள்ள போர்ச்சுகீசிய அதிகாரிகளின் அடக்கமற்ற ஆசைகளையும் கொடுமைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற துவனி  இருந்திருந்து.  அதிகாரிகள் பெரும்பாலும் கிறித்தவப் பரப்புப் பணியை புறக்கணித்தனர். அவர்களது கவனம் எல்லாம் வர்த்தகம் மற்றும் யுத்த முயற்சிகளில்தான் இருந்தது என்று கவலை பட்டிருந்தார்  சேவியர்,

மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களான மக்கள், மீண்டும் பழைய மதத்திற்கு திரும்பாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற முக்கியக் கோரிக்கை வைத்து இருந்தார்.  மதம் மாறிய இந்திய கிறிஸ்தவர்கள், கீழ்மட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற புகார் இருந்திருந்தது.

 கோஸ்மோ டி பய்வா போன்றவர்கள், யுத்தத்தில் திறமையானவர்கள் என்பதால் மதமாற்றவர்களை கண்டு கொள்ளாமல் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெற்றுவிட்டனர். இதனை மாற்றவேண்டும். மதம் மாறிய கிறிஸ்தவர்கள், பிறமத மக்கள் அனுபவித்த உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்கவேண்டும்.  மன்னர் அளித்த புதிய உத்தரவுகளில் ஒன்றில், கிறிஸ்தவர்கள் தவிர மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் போர்ச்சுகீசிய கடற்படையில் கட்டாயமாக சேர்க்கப்படலாம் என்ற புதிய விதிமுறை சேர்க்கப்பட்டு இருந்தது.

#################################################################### 


பிரான்சிஸ் சேவியர் எழுதிய கடிதம் – ஜனவரி 20, 1548, கொச்சியில் இருந்து

உயர்திரு மன்னர் அவர்களுக்கு"போர்ச்சுகீசிய மன்னர் ஜான் மூன்றாவது அவர்களுக்கு"

அரசரே,

தங்கள் உயர்திரு பெருமைக்கு, மலாக்கா மற்றும் மொலுக்கா பகுதிகளில், மதம் மற்றும் நம் ஆண்டவர் தேவனின் ஆராதனை மற்றும் சேவை சம்பந்தமான விஷயங்களை பற்றி மிக விரிவாகவும் தெளிவாகவும், நான் ஐரோப்பாவிலுள்ள எங்கள் சபைக்குத் (சொசைட்டி ஆஃப் ஜீசஸ்) அனுப்பியுள்ள கடிதங்களின் மூலம் தெரியவரும் என்று நம்புகிறேன்.

அதோடு, தங்கள் உயர்திரு பெருமையிடமிருந்து இங்கு வந்த கடிதங்களுக்கு எனது பதில்களையும் அனுப்பியுள்ளேன். தங்களை, எங்கள் இயேசு சமுதாயத்தின் தலைவனாகவும் உண்மையான பாதுகாவலனாகவும் எங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் எங்களுக்கு காட்டும் அன்பும் உதவிகளும், இந்தப் பட்டத்துக்கு உரிய பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுகின்றன.

இந்தியாவில் மத நிலைமைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்த விஷயங்களை, இங்கிருந்து கடவுளின் சேவைக்காக செல்கின்ற பக்தியுள்ளவர்களும் தங்கள் உயர்திருவிடம் விரிவாக அறிமுகப்படுத்துவார்கள். மேலும், தெய்வீக பணியில் அனுபவமிக்க தந்தை ஜோம் டி வில்லா கொண்டே, இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய விஷயங்களை தங்களிடம் எழுதுகிறார். அவர் கூறும் விஷயங்கள், தங்களின் மனச்சாட்சி மற்றும் அவருடைய உள்ளார்ந்த அக்கறைக்கும் உதவியாக இருக்கின்றன.

இந்த விஷயங்களை அவர் மிக வெளிப்படையாகவும் உண்மையுடன் கூறுகிறார் — உங்கள் உயர்திருவுக்கு நேரடியாக எழுதிய கடிதம், கூடுதல் குறிப்புகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றில். இவை அனைத்தும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வளவு நம்பகத்தன்மையுள்ள தகவல்களைக் கொண்டு, தங்கள் உயர்திரு, பிற விடயங்களில் காட்டும் ஞானத்தைப் போலவே, இவற்றிலும் சரியான முடிவுகளை எடுத்து தேவையான கட்டளைகளை விரைவில் வழங்கினால், அது மிகவும் உரியதாக இருக்கும்.

இப்போது, என்னைச் சேர்ந்த விஷயத்திற்குச் செல்லலாம்.

நான் இந்தக் கடிதத்தை எழுதவேண்டுமா வேண்டாமா என்று மனதுள் பல நாள்கள் எண்ணி அலசினேன். இங்கு நடப்பவற்றைப் பார்த்து, இதே நேரத்தில், நம் பரிசுத்த விசுவாசம் இங்கு பரவவும் நிலைபெறவும் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனமாக சிந்தித்தேன்.

ஒருபுறம், நான் கடவுளைச் சேவிக்கவும், அவர் மகிமைக்காகப் பணியாற்றவும் வேண்டும் என்ற ஆவலால் எழுதி விடவேண்டும் என்று எண்ணினேன்; மற்றொரு புறம், நான் கூறும் யோசனைகள் செயல்படுத்தப்படுமா என்பதில் நம்பிக்கையில்லாததால், இதை எழுதுவதிலும்  தயங்கினேன்.

ஆனால், இந்த யோசனைகள் என் மனதில் உறுதியாக பதிந்திருப்பதைக் காணும்போது, கடவுளுடைய படைப்புத்திட்டத்திலேயே இவை ஒன்றாக இருக்கின்றன என்ற நம்பிக்கையுடன், இதை மறைத்து விடுவது எனது கடமையை புறக்கணிப்பதாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது.

இந்த உண்மைகளை எனக்கு கடவுள் காண்பித்ததற்கான காரணம், தங்களிடம் நான் இவை தெரிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்ற நம்பிக்கையும் வந்தது. ஆனால், அதே நேரத்தில், இந்தக் கடிதம், தங்கள் மனதைப் பாரிய சுமையாக்கி, கடைசி தீர்ப்பு நாளில் தங்களை கடவுளின் முன் குற்றம் சாட்டும் காரணமாக இருக்கக் கூடும் என்ற பயமும் என்னைத் தடுக்க முயன்றது.

இந்த யோசனைகள் எனக்கு எவ்வளவு வலியை ஏற்படுத்தியுள்ளன என்பதை, தயவு செய்து தாங்கள் உணர வேண்டும்.

எனது உள்ளார்ந்த மனச்சாட்சி கூறுகிறது — இங்குள்ள மனித ஆத்மாக்களின் இரட்சிப்புக்காக, என் வாழ்வையே அர்ப்பணிக்கவும், என் உடலை வேலைக்காக சிதைக்கவும் நான் இங்கே வந்தேன்.

இது, தங்களின் மீது பொறுப்பாக இருக்க வேண்டிய ஒரு கடமையின் ஒரு பகுதியை, நான் மேற்கொள்வதன் மூலம், தங்களின் மனச்சாட்சிக்கான சுமையை குறைப்பதற்காகவும், இறுதித் தீர்ப்பு நாளில் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு அளிப்பதற்காகவும் இருந்தது.

தாங்கள் எங்கள் குழுவின்  மீது காட்டும் மிகப்பெரிய அன்பு, இந்த தியாகத்தை நான் செய்வதற்கான உந்துசக்தியாக இருக்கிறது. எனவே, என் துன்பமும் உழைப்பும் இவற்றுக்காக அர்ப்பணிக்கத் தயங்கவில்லை.

சத்தியமாகச் சொல்கிறேன் அரசரே, இரு விதமான கவலைகள் காரணமாக என் மனம் மிகுந்த குழப்பத்தில் சிக்கி, மிகுந்த வலி மற்றும் குழப்பத்துடன் இருந்தேன். ஒரு பக்கத்தில் என் கடமையை தவற விடக்கூடாது என்ற பயமும், மறுபக்கத்தில் உங்கள் மேல் ஆபத்துகள் அதிகரித்து விடக்கூடாது என்ற பயமும் எனை பின்தொடர்ந்தன. இந்த இரு எண்ணங்களும் என்னை இழுத்துச் சென்றன.

இறுதியில், நான் என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து, என் மனச்சாட்சியைத் துடைத்துவிட்டு, நீண்ட நாட்களாக உங்கள் உயர் பதவிக்கு நான் சொல்ல வேண்டியிருந்ததைக் கூறுகிறேன்.

இந்தியாவில், மலாக்கா, மொலுக்கா போன்ற பகுதிகளில் நான் நேரில் அனுபவித்த நிகழ்வுகள் என் உள்ளத்தைக் காயப்படுத்தி, என் மனதை வாட்டுகின்றன.

உங்கள் உயர் பதவிக்கு நான் உறுதியாக கூற விரும்புவது – இங்கே கடவுளின் சேவைக்காக செய்ய வேண்டிய பல காரியங்கள், செய்தல் வேண்டியவை செய்தப்படாமல் விட்டுவிடப்படுகின்றன. இதற்குக் காரணம் – பதவியாளர்களுக்கிடையே உள்ள போட்டி மற்றும் பொய்யான பெருமைகள்.

ஒருவர் சொல்வார்: "இது என் பொறுப்பு, மற்றவர்களுக்கு புகழ் செல்ல விடமாட்டேன்."

மற்றொருவர் சொல்வார்: "நான் இதைச் செய்யவில்லை, அதனால் நீங்களும் செய்யக்கூடாது."

மற்றொருவர் கூறுவார்: "நான் தான் வேலை செய்தேன், ஆனால் புகழ் மற்றவர்களுக்கு போய்விட்டது."

அதனால் அடிக்கடி சண்டைகள், மனக்கசப்புகள், தாமதங்கள் ஏற்படுகின்றன. இதனால் கடவுளின் மகிமை வளரவேண்டிய சந்தர்ப்பங்கள் வீணாகின்றன. இதே காரணத்தால், உங்கள் இந்திய ஆட்சி பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுகிறது.

இது போன்ற சூழ்நிலைகளை மாற்ற, ஒரு மட்டுமே தீர்வு எனக்குத் தோன்றுகிறது:

அந்த தீர்வு என்னவென்றால் – மதம் பரப்பும் செயலை அதிகாரப் பதவியிலுள்ள ஆட்சி அதிகாரிகள் தான் முன்னெடுக்கவேண்டும் என்பது பற்றிய உங்களின் உரிய உத்தரவை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அதாவது:

  • இந்தியாவில் உள்ள ஆளுநர் அல்லது கட்டளை அதிகாரிக்கு நீங்கள் நேரடியாகப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
  • மத பரப்புக்கான முயற்சிகளை மடாதிபதிகள் அல்லது குருக்களை விட ஆளுநரிடம் தான் நீங்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள் என தெளிவாக அறிவிக்க வேண்டும்.
  • மத பரப்பில் வெற்றி அல்லது தோல்வி, அந்த அதிகாரியின் செயலில் உள்ளது என்பதையும், அவருக்கு வெகுமதியாகவோ, தண்டனையாகவோ பதிலளிக்கப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், ஆளுநர் அல்லது அதிகாரி ஒருவர் உங்களிடம் எழுதிய கடிதத்தில்:

  • எவ்வளவு மக்கள் கிறிஸ்தவராக மாறினார்கள்,
  • எத்தனை பேர் மதத்திற்கு வந்தனர்,
  • என்ன வழிகள் இருந்தன,
  • எதிர்காலத்தில் என்ன வாய்ப்புகள் உள்ளன,

 

என அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து வேறு எவரின் அறிக்கையையும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று கூற வேண்டும்.

மேலும், உங்கள் ஆட்சிக்காலத்தில் ஏதேனும் அதிகாரி தன் ஆட்சி காலத்தில் மத பரப்பில் பின்விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றால், அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதையும் உறுதியாகக் கூற வேண்டும்.

இது உறுதியாக நிகழும் என்பதை விளக்க, நீங்கள் கடவுளின் பெயரில் ஒரு உறுதிமொழி செய்ய வேண்டும்:

  • அந்த அதிகாரி போர்த்துக்கேஸுக்குத் திரும்பும் போது,

o    அவரது சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்

o    அது வறியோர் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்

o    அவரே சிறையில் அடைக்கப்பட வேண்டும், போன்ற கட்டுகள் கட்டப்பட வேண்டும்

மறுபடியும், அவர்களுக்கு எந்தவொரு உரிமையும், தயவும் அளிக்கப்பட மாட்டாது என்பதை முன்னதாகவே கூறிவைக்க வேண்டும். அவர்களுக்கு ஒரே வழி – தங்கள் ஆட்சிக்காலத்தில் அதிகமான கிறிஸ்தவர்களை உருவாக்க வேண்டும் என்பதே.,

இந்தியாவில், உலக நலன்களுக்காக வாழும் சிலர், உங்கள் சபைக்கு எதிராக மிக்கேல் வாஸ் என்பவரது மரணத்தைக் காரணமாகக் கொண்டு  ஒரு வியாபாரி மீது தவறான சந்தேகங்களை பரப்புகிறார்கள். அவர்கள் இந்த நிந்தையை உங்களிடமும் எழுத்தாக அனுப்பக்கூடும் என்றும் எனக்குத் தெரிகிறது. ஆனால், இவ்விஷயத்தில், உண்மையும் நேர்மையையும் வைத்து நான் அவருக்காக சாட்சி கூறுகிறேன். இது எனது கடமை என நம்புகிறேன்.

நான் உறுதியுடன் கூறுகிறேன் – எவ்வாறு எனக்கு இந்த அறிவு வந்தது என்பதை எழுதவோ சொல்லவோ முடியாது என்றாலும் – அந்த மரணத்தில் அவர்கள்  சாட்டுவது போல அவர் குற்றவாளி இல்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்துள்ளேன். அது எப்படியென்றால், அந்த நேரத்தில் நான் மொலுக்காசில் இருந்தேன் – இந்தியாவிலிருந்து மிகவும் தொலைவில்.

எனவே, உங்கள் தூய மனசையும், கடவுளை மகிழ்விப்பதற்கான உங்கள் முயற்சியையும் நினைவில் வைத்துக் கொண்டு, அவருக்குத் தொந்தரவு தரக்கூடிய எதையும் செய்ய வேண்டாம், எதையும் ஆணையிட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், உங்கள் உயர்திரு இந்த பொய்யான பழிக்கு நம்பிக்கை கொடுத்ததுபோல் தோன்றும்; இதனால் அவனை விமர்சிக்கிறவர்கள் மேலும் வலிமை பெறலாம்.

மேலும், கோச்சியின் விகாரியான பெட்ரோ கோன்சால்வெஸை நீங்கள் உங்கள் அரண்மனையின் மதிப்புக்குரிய பட்டதாரியாக நியமித்துள்ளீர்கள்.. இது நமக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. ஏனெனில், அவர் நமது ஜெசுவிட் சமுதாயத்திற்கு அளித்துள்ள பெரும் உதவிகள் காரணமாக, நாங்கள் அவருக்குப் பெரும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.

கொச்சியின் பிஷப்பின் விகாரியின் வீடு நமது ஜெசுவிட் சமுதாயத்தின் இருப்பிடமாகவும் உள்ளது. அவருடைய நல்லிணக்கம், சாதாரண நட்போ அல்லது சுமூக ஆசிர்வாதமோ அல்ல; அவருடைய தனிப்பட்ட சொத்துக்களை நமக்காக செலவழித்த பிறகும், மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கி நமக்காக மேலும் செலவழிக்கின்ற அளவிற்கு அவர் தாராளமுள்ளவராக உள்ளார்.

எனவே, அவருக்கும், அவருடைய ஊழியர்களுக்கும், அவர்கள் சம்பளங்கள் முறையாக வழங்கப்படுவதற்கான கடிதங்களை போர்த்துகல்லில் இருந்து அனுப்ப உங்களின் ஆணையை நாங்கள் வேண்டுகிறோம். இருவரும் இந்த உதவிக்குத் தகுதியானவர்கள் – விகாரி, உங்கள் ر நம்பிக்கையாளர்களின் ஆத்ம நலனுக்காக உழைப்பவர்; மற்றும் அவரது வீரர்கள், உங்களின் கொடியின் கீழ் இராணுவத்தில் சேவை செய்யும் வீரர்.

இப்போது முடிவில், நான் இதனைக் கூறுகிறேன்:

உங்கள் மரண நேரத்தில், "இவை எல்லாம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!" என்று மனதார மகிழ்வதுபோல், அதை இப்போதே தெளிவாக உணரவும், உடனே செயல்படுத்தவும் ஆண்டவர் உங்களுக்கு அருள் செய்வாராக.

உங்கள் உயர்திருவின் வீண்( useless ( பணியாளர்,

புனித பிரான்சிஸ் சேவியர்

கொச்சி, ஜனவரி 20, 1548

 #####################################################################

 போர்ச்சுகலின் ஜான் III, 1502 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, போர்ச்சுகல் மன்னர் மனுவேல் I மற்றும் அரகோனின் மாரியா ஆகியோருக்கு பிறந்தார். பிறக்கும் போதே அவர் ஸ்பெயின் இளவரசராக இருந்தார்.

1521ல், தனது 36 ஆண்டு நீண்ட ஆட்சியைத் தொடங்கிய அவர், ஸ்பெயின் அரசி ஜுவானா I மற்றும் சாள்ஸ் I ஆகியோரிடம் அரசியல் திருமணத்திற்கான யோசனை வைத்தார். இதன் விளைவாக, அவர் ஜுவானாவின் சகோதரி கத்தரினாவை திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில், அவரது சகோதரி இசபெல்லா, சாள்ஸுடன் திருமணம் செய்யப்பட்டது.

முன்னைய அரசர்களைப் போலவே, ஜான் III ஒரு முழுமையான அதிகாரத்துடன் ஆட்சி செய்தார்.  1527ஆம் ஆண்டு, அவரது ஒரே மகளாக மரியா பிறந்தார். அவரை விரைவில் இங்கிலாந்தின் ஹென்றி IX உடன் நிச்சயித்தனர்.

ஜான் III தனது ஆட்சியில், தென்அமெரிக்காவில் தனது மாமனாரின் (சாள்ஸ்) பேரரசுக்கு அடுத்தபடியாக தனது சொந்த பேரரசை அமைத்தார்.  அதேசமயம், மொரோக்கோவில் இருந்த போர்ச்சுகீசிய நிலங்களை ஓரளவிற்கு கைவிட்டார். பின்னர், 1537ல், அவர் ஒரு இளவரசர் ஜானைப் பெற்றார். ஆனால் விரைவில் மரணமடைந்தார்; அதன் காரணம் இதுவரை நிச்சயமாகத் தெரியவில்லை. சிலர், இளவரசரை ஹென்றி IX கொன்றதாக நம்புகிறார்கள்.

அவரது ஆட்சிக் காலத்தில், சில லூதரர்கள் (மறுமதச் சிந்தனையாளர்) போர்ச்சுகலுக்குள் நுழைந்தனர். இதை எதிர்த்து, அவர் போப் அலெக்சாண்டர் VII-னிடம் பரிசுத்த விசாரணை (Inquisition) நடத்த அனுமதி கேட்டார்.

1550 ஆம் ஆண்டு, ஜான் III அமெரிக்காவுக்குச் சென்று ஸ்பெயினியர்களைச் சந்தித்தார். அங்கு மலேரியா நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் அவருக்கு பெரும் பிரச்சனையாக்கி மாறியது. அப்போது ஹென்றி IX,  தனது மனைவி மரியாவை அரசியாக்க விரும்பினார். ஆனால் ஜான், மரியாவைத் துரத்தி, இங்கிலாந்தின் அதிபரிடம் அந்த சிம்மாசனம் செல்வதைத் தவிர்க்க, தனது சகோதரர் லூயிசை அரசராகத் தேர்ந்தெடுத்தார்.