27 May 2020

கிளாடீஸ் ட்யூஷன் டீச்சர் வீடு!

கிளாடீஸ் ட்யூஷன் டீச்சர் வீடு!
நேற்றைய பொழுதுகளை பலதும் மறந்திருப்பேன், இருந்தாலும் நான்கு வயது ட்யூஷன் வகுப்பு நினைவுகள் பலதும் அழியாதே என்னிடம் உண்டு.
அப்படியான பல நினைவுகளை தருவது தான் இந்த தெருவு குடிநீர் பைப்பும், அதன் பின் இருக்கும் கிளாடிஸ் டீச்சர் வீடும்.
மெலிந்து உயரமான எப்போதும் இருமிக்கொண்டிருக்கும் டீச்சருடைய கணவர், ஷேர்லிச் சேச்சி, ஷிபு அண்ணா, ஜெய்ம்ஸ் சார் , உயரமான அழகான எப்போதும் சிரித்த முகத்துடனுள்ள மேரி டீச்சர், துணி தைத்து கொண்டிருக்கும், குடை பிடித்து நடக்கும் டீச்சரின் தங்கை, அந்த வீட்டில் ஒரு வாகன விபத்தை தொடர்ந்து நெடு நாளாக படுக்கையில் கிடந்த தங்கச்சன் சேட்டன் , சட்டையும் முண்டும் அணிந்து கோழிகளை பராமரிக்கும் இவர்களுடைய அம்மா , வல்யம்மச்சி( பாட்டி).
எங்க ஊரில் அப்போதிருந்த ஒரே ஒரு ட்யூஷன் பள்ளி இது தான். சொல்லப்போனால் எங்கள் பள்ளியை விட கட்டுக்கோப்பாக வகுப்புகள் நடந்தது இங்கு தான். நான் என் வீட்டில் இருந்ததை விட இந்த வீட்டில் வளர்ந்ததுதான் நிறைய பொழுதுகள்.
மேக்கப் போட்டு, அழகான உடுப்புகள் உடுப்பித்து, கல் ஸ்லேட்டும்( பலகையும்), குச்சியுடன் காலை 10 மணிக்குள்ளாக கடையிலுள்ள உதவியாளர் பையன்களுடன் அனுப்பி விடுவார்கள்.
காலை தமிழ் படிக்க வேண்டும், மதியம் முதல் மாலை வரை மலையாளம். மாலை என்னை அழைத்து போக பையன்கள் வருவார்கள். அதற்குள் மதியமே நான், டீச்சர் தலை தப்பி வீடு வந்து சேர்ந்திடுவேன்.
வீட்டு கதவு அரைக்கதவு. அந்த கதவை திறக்கும் உயரவுமில்லை , வலுவுமில்லை.
அம்மா என்னை கண்டதும் எப்படி வந்தாய் , ஏன் தனியாய் வந்தாய்,என திட்ட ஆரம்பிப்பார்கள்.
கதவை திறக்காதே.... கடை பசங்களிடம் இவளை வகுப்பில் கொண்டு விடு என்று கட்டளை பிறக்கும்.
நானும் போக விருப்பமில்லை, தூக்கம் வருது,வயிற்று வலி என்ற சகல வித்தைகளையும் துணைக்கு அழைத்து போராடினாலும் அம்மாவின் மனம் இறங்காது.
சோம்பேரி, பொய் பேசாதே, வீட்டில் இருந்து என்ன செய்ய போறாய், இந்த சின்னப் பிள்ளைகளுடன் வம்பு சண்டை பிடிக்க தானே? போய் படி என்பார்.
கண்ணீர் மாலை மாலையாக விழும். கடைசி ஆயுதத்தை எடுப்பேன். 'போண்டா' வாங்கி தந்தால் பள்ளிக்கு போறேன்.
உடனே போண்டாய் வாங்கி தந்து , கையில் மிட்டாயும் சொருகி அனுப்பி விடுவார்கள்.
நாலு மணி எப்போது வரும் என காத்திருப்பேன். வீடு போய் சேர.
என் வீட்டில் பொறுப்பான மூத்த பிள்ளை,ட்யூஷன் வீட்டில் தான் நான் செல்லப்பிள்ளை !. டீச்சர் வீட்டில் உப்பிலிட்ட நெல்லிக்காய், மாங்காய் தின்ற ஞாபகம் உண்டு.
ஒருக்கா மாங்காய் பங்கு தருகையில் எனக்கு குறைத்து தந்தார்கள் என்று கையிலிருந்த ஸ்லேட்டை வைத்து அடுத்தவன் மண்டையில் ஒரு அடி. ஏன் அடித்தாய்? என விசாரித்து தண்டனையாக கூட்டத்தில் இருந்து தனித்து இருத்தி வைக்கப்பட்டேன். அங்கிருந்து அழுததும் நினைவிலுள்ளது.
தமிழ் குட்டி என்பதால் சத்ததில் தான் சண்டை இடுவதும் ஏன் கதைப்பதும் கூட. உள் அறையில் இருந்து தங்கச்சன் சேட்டன் என் பெயரை அழைத்தும் கப்- சிப் ஆகிடுவது வழமை.....
இந்த படி வழியே ஏறிச் சென்றால் என் துவக்கப் பள்ளியை அடைந்து விடலாம்.
இப்போதும்; அன்றைய என் நண்பர்கள் சபீர் ,
Abbas Abbas
, ராஜன், பஃமீஜா, பிந்து, லதா, ஜெயா நினைவிற்கு வருகின்றனர்.
ഗ്ലാഡിസ് ട്യൂഷൻ ടീച്ചർ വീട് !
ഞാൻ ഇന്നലെത്തെ കാര്യം പലതു മറക്കും, പക്ഷേ നാല് വയസുള്ളപ്പോലുള്ള ട്യൂഷൻ ക്ലാസിന്റെ നിരവധി ഓർമ്മകളുണ്ട് എനിക്ക്.
തെരുവ് കുടിവെള്ള പൈപ്പും പിന് ഭാഗത്തുള്ള ഗ്ലാഡിസ് ടീച്ചറുടെ വീടും ആണ്.
മെലിഞ്ഞതും എപ്പോഴും ചുമക്കുന്നതുമായ ടീച്ചറുടെ ഭർത്താവ്, ഷേർളി ചേച്ചി , ഷിബു ചേട്ടൻ , ജെയിംസ് സർ, ഉയരവും സുന്ദരവുമായ പുഞ്ചിരിക്കുന്ന മുഖംമുള്ള മേരി ടീച്ചർ, വസ്ത്രം തുന്നുന്ന , കുടയുമായി നടക്കുന്ന ടീച്ചറുടെ സഹോദരി, വീട്ടിൽ ഒരു വാഹനാപകടത്തെ തുടർന്ന് കിടക്കയിൽ കിടക്കുന്നു തങ്കച്ചൻ ചേട്ടൻ, കോഴികളെ വളർത്തുന്ന ആ വീട്ടിലെ , അമ്മ, വാല്യമ്മച്ചി (മുത്തശ്ശി).
ഞങ്ങളുടെ പട്ടണത്തിലെ ഏക ട്യൂഷൻ സ്കൂൾ ഇതാണ്. വാസ്തവത്തിൽ, ഞങ്ങളുടെ സ്കൂളിനേക്കാൾ കൂടുതൽ അച്ചടക്കമുള്ള ക്ലാസുകൾ ഇവിടെയുണ്ടായിരുന്നു . എന്റെ വീട്ടിലേക്കാൾ കൂടുതൽ സമയം ഞാൻ ഈ വീട്ടിൽ വളർന്നു.
ഒരുങ്ങി കെട്ടി , മനോഹരമായ വസ്ത്രം ധരിച്ചു , കല്ല് സ്ലേറ്റ് (ബോർഡ്) എം കല്ല് പെന്സിലുമായ് കടയിലെ ജോലിക്കാരായ ചേട്ടന്മാരോടൊത്തു രാവിലെ 10 ന് മുൻപേ ക്ലാസിൽ എത്തും .
രാവിലെ തമിഴ്, ഉച്ച മുതൽ വൈകുന്നേരം വരെ മലയാളം പഠിക്കുകയായിരുന്നു പതിവ് . കടയിലെ ജോലിക്കാരായ ചേട്ടൻ വൈകുന്നേരം എന്നെ വിളിച്ചു കൊണ്ടു പോകാൻ വരും. ഉച്ചകഴിഞ്ഞ് ഞാൻ ടീച്ചറുടെ കണ്ണും വെട്ടിച്ചു വീട്ടിലെത്തും.
വീട്ടു വാതിൽ അരക്കതവ് ആണ് . ആ വാതിൽ തുറകാനുള്ള ഉയരമോ ശേഷിയോ ഇല്ലാ. അമ്മ എന്നെ കാണുപ്പോൾ തന്നെ , നീ എങ്ങനെ വന്നു, എന്തിനാണ് ഒറ്റയ്ക്ക് വന്നത്, ഇന്നിങ്ക്നേ വഴക്കു പറയാൻ തുടങ്ങും, വാതിൽ തുറക്കാതെ തന്നേ കട ചേട്ടൻമാറോടു 'ഇവളെ കൊണ്ടു വിടൂ' എന്ന് ആവശ്യയപ്പടും.
ഞാൻ പോകില്ലാ, ഉറക്കാം വരുന്നു, വയറു വേദന എന്ന പല പല നുണ കഥകളുടെ അകമ്പടിയാണ് പിന്നീട് . പക്ഷേ അമ്മ സമ്മതിക്കില്ലാ.
മടിച്ചി, നുണ പറയരുത്, നീ വീട്ടിൽ നിന്ന് എന്തുചെയ്യും?
കണ്ണുനീർ ധാര ധാരയായി വീഴുന്നു. ഞാൻ അവസാന ആയുധം എടുക്കും. നിങ്ങൾ 'പോണ്ട' വാങ്ങി തരുമെങ്കിൽ , സ്കൂളിൽ പോകാം .
ഉടൻ പോണ്ടാ വാങ്കി തന്നു, മിഠായി കൈയിൽ വച്ച് അയക്കും.
.
ഞാൻ പിന്നീട് ആ നാല് മണികായ് കാത്തിരിപ്പാണ് . വീട്ടിൽ ചുമതലയുള്ള മൂത്ത കുട്ടി, ഞാൻ ട്യൂഷൻ സ്‌കൂളിൽ ഇഷ്ട മകളാണ്
ട്യൂഷൻ വീട്ടിൽ ഉപ്പിട്ട നെല്ലിക്കയും മാങ്ങയും ടീച്ചരിൽ നിന്ന് വാങ്ങിച്ചു കഴിച്ചത് ഓർമ്മിക്കുന്നു.
ഒരിക്കേ എനിക്ക് ഉപ്പിലിട്ട മാങ്ങ തരാൻ കളിപ്പിച്ചതിനാൽ സ്ലേറ്റ്ട്ടു കൊണ്ട് ഒറ്റ അടി. . നീ എന്തിനാണ് അടിച്ചത്? എന്ന് ചോദിച്ചു ശിക്ഷയായി എന്നെ കൂട്ടത്തിൽ നിന്ന് മാറ്റി നിർത്തി. അവിടെ നിന്ന് കരഞ്ഞതും ഞാൻ ഓർക്കുന്നു.
ശബ്ദത്തിൽ സംസാരിക്കുകയും വഴക്കു കൂടുകയും ചെയ്യുന്നതിന് . അകത്തെ മുറിയിൽ നിന്ന് തങ്കച്ചൻ ചേട്ടൻ എന്റെ പേര് വിളിക്കുന്നതും
പിന്നെ പേടിച്ചു മിണ്ടാതിരിക്കും.
ഈ പടികളിലൂടെ കയറി ചെന്നാൽ എന്റെ പ്രാഥമിക വിദ്യാലയത്തിൽ എത്താൻ കഴിയും.ഇപ്പോൾ; അന്നത്തെ എന്റെ സുഹൃത്തുക്കൾ സഫീർ, അബ്ബാസ് അബ്ബാസ്, രാജൻ, ഫാമിജ, ബിന്ദു, ലത, ജയ എന്നിവരെ ഓർക്കുകയാണ്. .

0 Comments:

Post a Comment