15 Sept 2026

கால்டுவெல் திருநெல்வேலி வரலாறு

 கால்டுவெல் திருநெல்வேலி வரலாறு (The History of Tinnevelly), திருநெல்வேலிச் சாணார்கள் (The Tinnevelly Shanars, 1849) என்னும் நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.

(1856) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் ஆங்கிலத்தில் எழுதி பல பாராட்டுக்கள் பெற்றார்.
கி.பி. 1857 - இல் திருநெல்வேலிச் சமயப் பணிகள் பற்றிய விரிவுரைகள் (Lectures on the Tinnevelly Mission) என்ற நூலையும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் செய்த அகழ்வாராய்ச்சிக்காகவும், மொழி ஆராய்ச்சிக்காகவும் ஆங்கிலேயர் ஆட்சியில் உயர் பட்டங்களைப் பெற்றார்.
சென்னைப் பல்கலைக்கழகம் , கல்வி மற்றும் தமிழ் மொழியியல் ஆய்வுத் துறைகளில் அவர் ஆற்றிய விரிவான பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில், 1879ஆம் ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் 22ஆம் பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற அவரை அழைத்தது.
கிளாஸ்கோ பல்கலைக்கழகப் பட்டம்: இவரது முக்கியமான படைப்பான A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages (திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்) என்ற நூலின் மூலம் ஆற்றிய குறிப்பிடத்தக்க மொழியியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கிளாஸ்கோ பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ LL.D. (சட்ட முனைவர்) பட்டம் வழங்கியது.
நீண்டகாலமாக அவர் மேற்கொண்ட சமயப் பணிகள், கிறித்தவ மறைப்பணி மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், டர்ஹாம் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ Doctor of Divinity (D.D.) பட்டம் வழங்கியது.
ஆயினும் முரண்பாடான சமய வரலாற்றுப் பண்பாட்டுப் பதிவுகளின் மூலம் நாடார்களின், குறிப்பாக நிலைமைக்கார நாடார்களின் எதிர்ப்புகளுக்கும் கிறித்தவ சமயத்தினர் சிலரின் எதிர்ப்புகளுக்கும் ஆளானவர்.
கால்டுவெல் குத்தகைக்கு எடுத்துத் தங்கிய ஊரின் பெயர் இடையன்குடி. இடையன்குடியைச் சுற்றிலும் நிலைமைக்கார நாடார்கள் வாழும் ஆனைக்குடி, குட்டம், அச்சம்பாடு, படுகாப்பற்று, செட்டியாப்பற்று, கொம்மடிக்கோட்டை, காரிகோவில் போன்ற ஊர்கள் இருந்தன.
பிற நாடார்களிடையிலும் நிலைமைக்காரர்களிடையிலும் முரண்பாடுகளை உருவாக்கி, சாதாரணக் குடிகளுக்கு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைப் பெருமளவில் மதமாற்றம் செய்யத்தொடங்கினார்.
நிலைமைக்காரர்களின் குடிகளிடம் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்பகுதி நிலைமைக்காரர்களின் குடிகளிடம் ஜோடி வரி என்ற Quit Rentஐ வசூலிக்கும் உரிமை குட்டத்து மார்தாண்ட நாடாருக்கு உரியதாக இருந்தது.
இதிலும் கால்டுவெல்லுக்கும் நிலைமைக்கார நாடார்களுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டன.
கால்டுவெல் தாம் வாழ்கின்ற பகுதியில் ஏழ்மை நிலையிலிருந்த நாடார்களின் வாழ்வாதாரங்களைக் குறித்து எழுதிய திருநெல்வேலிச் சாணார்கள் என்ற ஆங்கில நூல் பெரும் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டிருந்தது.
இக்கிளர்ச்சிக்கு முதல் காரணமாக அமைந்தவர் கிறித்தவரான அருமைநாயகம் என்ற சட்டாம்பிள்ளை ஆவார்.
அதைத்தொடர்ந்து கால்டுவெல் மற்றும் கிறித்தவ சமயப் போதகர்களான சில வெளிநாட்டவர்களாலும் வெளியேற்றப்பட்ட கிறித்தவர்கள் சேர்ந்து நாட்டார் வேதம் என்ற கிறித்தவ சபையைத் தோற்றுவித்தனர்.
அத்துடன் 'நாடார்கள் கால்டுவெல் கருதுவதுபோன்று தகுதி குறைந்தவர்கள் அல்லர்; தகுதி உடையவர்கள்' என்ற அடிப்படையில் ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள், வெளியீடுகள், பத்திரிகைச் செய்திகள் வெளிவரக் காரணமாகச் சட்டாம்பிள்ளை போன்றோர் அமைந்தனர்.
சட்டாம்பிள்ளையைத் தொடர்ந்து அவருடைய மகன்களாலும் அவ்வட்டார நிலைமைக்கார நாடார்களின் தகுதிகள் வெளிவரலாயின.
சட்டாம்பிள்ளையின் இரு மகன்களான ரபி பாண்டியன், பி.ஜே.எம். குலசேகரராஜ் போன்றோரும் நாடார்களின் வரலாறுகளை எழுதிவெளியிட்டனர்.
முன்னவரான ரபி பாண்டியன் என்பவர் #எட்கர் தர்ஸ்டனுக்குத் தம் குறிப்புகளை அனுப்பியிருந்தார். பின்னவரான குலசேகரராஜ் கி.பி. 1918இல் #நாடார்குல வரலாறு என்ற நூலை வெளியிட்டார்.
கால்டுவெல்லின் சமகாலத்திலேயே #எஸ். வின்பிரெட், #எச். வின்பிரெட் ஆகியோரால்
📍சான்றோர் மரபு,
📍சான்றோர் மரபு காத்தல் எனும் இருநூல்கள் வெளிவந்தன.
சாமுவேல் சற்குணர் 1880ல் திராவிடச் சத்திரியர் என்ற நூலும் 1883 கால்டுவெல் (திருநெல்வேலிச் சாணார்கள் என்று ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலை தமிழில் வெளியிட்டார்.
சாமுவேல் சற்குணருக்குப் பிற இனத்தவராலும் சமயத்தவராலும் எதிர்ப்புகள் ஏற்பட்டன. அவருக்குத் தண்டனையும் கிடைத்தது. ஆயினும், நிலைமைக்கார நாடார்களின் தகுதிபற்றிப் பரவலாக அறிந்துகொள்ளும் வகையிலும் மேலும் அவர்கள் பற்றி ஆராய்ச்சிகள் பெருகும் வகையிலும் சற்குணருடைய நூல்கள் அமைந்தன.
📍தடை செய்யப்படட கால்டு புத்தகம் இன்றும் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கிறது. ஆனால் உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய புத்தகம் அல்லது அவர்கள் புகைப்படங்கள் மறைக்கப்பட்டு உள்ளது..
ஆங்கிலேயர்கள் மிகவும் நுட்பமாக நா டார் இனத்தை மதம் மாற்றி உள்ளனர். அதற்கு என ஒரு திட்டம் வகுத்து உள்ளனர். வரலாற்றை வாசித்து அறிந்து
நாடார்கள் வாழ்வியலில் சிக்கலை உருவாக்குவது, மற்றைய இனவுமாக மோத விடுவது, வழியில்லாமல் சொத்தையும் உயிரையும் காப்பாற்ற தஞ்சம் புகிர வைத்து மதம் மாற்றம் நிகழ்த்தப் பட்டுள்ளது.
எதனால் நாடார் இனத்தை குறி வைத்தனர்.! நாடார்கள் நிலத்தில் பணத்தில் கட்டமைப்பை உருவாக்கி உள்ளனர்.
நாடார்கள் மத மற்றம் என்பது நாய்கரிடம் போராடி மறவர்கள், பிள்ளைமார்களில் இருந்து தங்கள் நிலத்தை காப்பாற்றவும் ஆங்கிலேயர் உதவி நாடி உள்ளனர்.

இதில் கால்டுவெல்லின் நரித்தனம் மிகவும் பிரயோசனமாக இருந்து உள்ளது. அதனால் ஆங்கிலேயர்கள் பட்டப் படிப்பு முடிக்காது இறையியல் கல்வியுடன் இந்தியா வந்த மிஷநரிக்கு பல பட்டங்கள் கொடுத்து ஆதரித்து உள்ளது


கால்டுவெல், 1849இல் எழுதிய நூலுக்குப் பின்பாக, நாடார்கள் பற்றி 15 நூல்களும் பிற குறிப்புகளும் வெளியிடப் பெற்றுள்ளது.

📍சற்குணரைத் தொடர்ந்து, 📍ஞானமுத்துநாடார் கால்டுவெல் நாடார்களைப் பற்றிக் குறைவாக மதிப்பிட்டு எழுதிய நூலைத் திரும்பப் பெறவேண்டும்' என இங்கிலாந்தின் அப்போதைய பிரதமருக்கும் பிறருக்கும் கடிதம் எழுதினார்.
1871-ம் #வருஷத்தில் சென்னை இராஜதானியில் எந்த எந்த சாதியார் இருக்கிறார்கள் என்றும், அந்த அந்தச் சாதியார் தங்கள் தங்கள் குலத்தைப் பற்றிய ஆதி பூர்வ விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும், அந்தப்படி தெரிவியாதவர்கள் தங்கள் தங்கள் குலமேன்மையை இழந்து போவார்கள் என்றும் இங்கிலீஷ் அரசு உத்தரவு பிறப்பித்தார்கள்.
முதன்முதலில், 📍சாரடக்கர் அம்மையார் எழுதிய தென் இந்தியன் ஸ்கெச்சஸ் (South Indian Sketches) என்ற நூலில் நிலைமைக்காரர்பற்றி எழுதியுள்ளார்.
கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடி ஆவணங்களின் அடிப்படையில்
நிலைமைக்கார நாடார்களைப் பற்றி , 📍பி.ஜே.எம். குலசேகரராஜ் 1918இல் எழுதிய நாடார்குல வரலாறு குறிப்பிடத்தக்கது ஆகும்.
📍கார்னிலியஸ் நாடார் என்பவர் அமரர் புராணத்தை (1901) எழுதி, நாடார்கள் பற்றிய தொன்மங்களை வெளியிட்டார்.
அதே ஆண்டில் 📍அரசகுமார நாடாரும் 📍கண்ணாயிர நாடாரும் இணைந்து தமிழ் சத்திரியகுல விளக்க வினா விடை என்ற நூலை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்ப்பேராசிரியர் 📍தா. மாசில்லாமணி நாடனால் 1931இல் பாண்டிய தேச ஆதித்தவம்ச வரலாறு எனும் நூல் வெளியிடப்பெற்றது. முழுக்க முழுக்க இந்நூல் காயாமொழி ஆதித்த நாடார்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் 1930 வரையிலான ஆதித்த நாடன்களின் வமிசாவளிப் பட்டியலையும் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. (இந்நூல் தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தால் 1997லும் 2006லும் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது.)
நாடார்களைப் பற்றிய வரலாற்று ஆவணங்கள் மிகுந்திருந்தாலும், சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியல் காரணமாக நாடார்கள் அவற்றிலிருந்து ஒதுங்கித் தம் தொழில்களிலும் கல்வியிலுமே கருத்தைச் செலுத்தி வந்துள்ளனர்.
கி.பி. 1937 ஆம் ஆண்டில், பெருநாழியிலிருந்து காயாமொழிக்கு வந்த 📍கவிராயர் வெ.ஆ. குமரய்ய நாடன் என்பவர் காயாமொழி ஆதித்தன் திருமுகவிலாசம் எனும் தலைப்பில் எழுதி உள்ளார்.
மேலும் 📍வெ.ஆ. குமரய்ய நாடான் 📍 இராமலிங்கக் குருக்களுடன் இணைந்து 1937-ஆம் ஆண்டில் நாடார் மன்னரும் நாயக்க மன்னரும் எனும் நூலை வெளியிட்டார்.
📍👆ஆங்கிலேயர்களின் ஜாதி வழி ஆட்சி -1871-ம் ஆண்டு சென்னை இராஜதானியில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு.
இந்தியாவில் சாதிகளின் வரலாறு, அடையாளம் மற்றும் மக்கள்தொகை விவரங்களை முறையாகவும் விரிவாகவும் பதிவு செய்ய பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் மேற்கொண்ட முதல் முயற்சியாக இது அமைந்தது.
இந்த உத்தரவு தென்னிந்தியாவில் மிகப்பெரிய சமூக–அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமாக அமைந்து, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சாதி இயக்கங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு செயல்முறையை உருவாக்கியது.
உள்ளூர் நிர்வாகத்தில் கணக்கெடுப்பு கண்காணிப்பாளராக (Census Superintendent)📍 W. R. Cornish செயல்பட்டார்.
ஆயிரக்கணக்கான உள்ளூர் உட்சாதிகள் (ஜாதிகள்) கொண்டிருந்த மிகப்பெரிய மக்கள்தொகையை நிர்வாக ரீதியாக வகைப்படுத்தி, அரசு ஆவணங்களில் பதிவு செய்வதே பிரிட்டிஷ் நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது. இந்த சிக்கலான சாதிப் பிரிவுகளை வகைப்படுத்துவதற்காக, ஒவ்வொரு சமூகத்தினரின் தலைவர்களும் தங்கள் சமூகத்தின் பாரம்பரிய தோற்றம், தொழில், குலவரலாறு மற்றும் வம்சாவளி குறித்த தகவல்களை உள்ளடக்கிய மனுக்கள், நூல்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
📍1871-க்கு முன்னர் தென்னிந்தியாவில் சாதி அடையாளங்கள் பல இடங்களில் நெகிழ்வானதாகவும், பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபட்டதாகவும் இருந்தன.
ஆனால், இந்தச் சமூகங்கள் அளித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அரசு அறிக்கைகளில் முறையாகப் பதிவு செய்து வகைப்படுத்தியதன் மூலம், பிரிட்டிஷ் நிர்வாகம் அக்காலத்திய சமூகப் படிநிலைகளை ஒரு குறிப்பிட்ட நிர்வாக வடிவத்தில் நிலைப்படுத்தியது.
இதன் மூலம் குறிப்பிட்ட சாதிகள் குறிப்பிட்ட தொழில் குழுக்களுடனும், சமூக அந்தஸ்துடனும், சில சமயங்களில் சட்டரீதியான உரிமைகளுடனும் வெளிப்படையாக இணைக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வகைப்பாடுகள், பின்னாளில் தென்னிந்தியாவின் சாதி அடையாளங்கள் மற்றும் சாதி அரசியலின் வளர்ச்சியிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தின.

சட்டாம்பிள்ளை அருமைநாயகம் குடும்பம் கி.பி. 1642ஆம் ஆண்டில் கொற்றகையை அடுத்த 📍வெள்ளக்கோயில் என்ற ஊரில் குடிகளுடன் பெரும் நிலக்கிழாராக வாழ்ந்துவந்த #வலங்கை உய்யக்கொண்டார்கள் ஆவர்.
திருமலைநாயக்கரின் பிரதானி #வடமலையப்ப பிள்ளையின் நடவடிக்கைகள் காரணமாகத் தமது நிலங்களைக் கொற்றகைக் காணியாளரான வேளாளர்கள் வசம் விற்றுவிட்டுக் குடிபெயர்ந்து ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ராஜாவின் கோயில் என்ற ஊரில் குடியேறினர்.
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாசரேத் நகரம் உருவாக்கப்பட்டபின், அவ்வூரை ஒட்டி அமைந்துள்ள #பிரகாசபுரம் 📍மூக்குப்பேரியில் குடியேறினர்.
தம் சான்றோர் குல கல்வியறிவு பிரிவுகளைச் சேர்ந்த பலரிடமும் கால்டுவெல்லின் மேற்படி நூலின் பிரதியைக் கொடுத்துப் படிக்கச் சொல்லியும், பிரச்சாரம் செய்த சட்டாம்பிள்ளை, 📍சான்றோர் சமூகத்தவர் பலர் மத்தியில் ஒரு கொந்தளிப்பினை உருவாக்கினார்.
📍கால்டுவெல்லின் இந்நூலைத் தமிழாக்கம் செய்து அச்சிட்டு, ஆங்கிலம் அறியாத சான்றோர் சமூகத்தவர் மத்தியிலும் பரப்பினார்.
இதன் விளைவாக 1857 ஆம் ஆண்டில் Hindu Church of Jesus (📍இந்து ஏகரட்சகர் சபை) அல்லது 'நாட்டார் வேதம்' (Native Church) என்ற தனிப்பிரிவே இவ்வூரை மையமாக வைத்து உருவாகினார். பிரகாசபுரம் மூக்குப்பேரியைச் சுற்றியுள்ள உய்யாங்குடி, குளத்துக்குடி, சாலைப்புதூர், வாழையடி, பாட்டக்கரை, வகுத்தான்குப்பம் முதலிய ஊர்களைச் சேர்ந்த சான்றோர் குலக் கிறிஸ்தவர் அனைவரும் 'நாட்டார் வேதம்' எனப்பட்ட இச்சபையில் இணைந்தனர்.
சான்றோர் குலத்தவர் பற்றிய கால்டுவெல்லின் அவதூறுகள் தளர்ச்சியின்றித் தொடர்ந்து நடந்துவந்த நிலையில் செல்வாக்கு மிகுந்த சான்றோர் குலத்தவர் சிலரும் சட்டாம்பிள்ளையுடன் சேர்ந்து செயல்படத் தொடங்கினர்.
1855ஆம் ஆண்டில் நாசரேத்தையடுத்த பிரகாசபுரம் என்ற ஊரைச் சேர்ந்த மதுரநாயகம் என்ற மூக்கந்தர் பிரிவுச் சான்றோர்,சர்ச் மிஷனரி சொசைட்டி பிரச்சாரக் குழுவின் சார்பில் தாமஸ் கஜெடன் ராக்லாண்டு மிஷனரியுடன் இரண்டு மாதங்கள் தம்முடைய சொந்தச் செலவில் ஊழியம் புரிந்துவந்தவர்.
பிற்பாடு மதுரநாயகமும் விரைவில் சி.எம்.சி. திருச்சபையிலிருந்து விலகிச் சட்டாம்பிள்ளை ஐயாவின் நாட்டார் வேதத்தில் இணைந்தார்.
ஐரோப்பிய உயர்வு மனப்பான்மைக்கு எதிரான தன்மான உணர்ச்சியும் மிகுந்த
குலப் பெருமிதமும் கொண்ட கிறிஸ்தவச் சான்றோர்கள் ஐரோப்பிய மிஷனரிமார்களின் அடாவடி நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டுச் சுயேச்சையாகச் செயல்படத் தொடங்கினர். இதனால் இவர்களின்மீது ஆத்திரங்கொண்ட கால்டுவெல் முதலானோர் குற்றவியல் நடவடிக்கைகள் உட்பட அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொண்டு இவர்களை மிரட்ட முயன்றனர்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சான்றோர் சமூகத்தவருள் பெரும்பாலானோர் கால்டுவெல்லை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
இவர்களுள் சிலர்
கால்டுவெல்லின் வக்கிரச் செயல்களையும், அடாவடித்தனத்தையும் பற்றி இங்கிலாந்துக்கே புகார் தெரிவித்தனர்.
1883ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி, #ஓய். ஞானமுத்து நாடார் என்பவர்
கால்டுவெல்லின் நூலினை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையுடன் இங்கிலாந்துப் பிரதமர் டபிள்யூ.பி. #கிளாட் ஸ்டோனுக்கு மனு ஒன்றை அனுப்பினார். இவர் சட்டாம்பிள்ளையின் நாட்டார் வேதத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய எதிர் நடவடிக்கைகளுக்குப் பின்னரும் கால்டுவெல் தம்முடைய செயல்பாட்டை மாற்றிக் கொள்ளாததால் தன்மான உணர்ச்சி மிக்க நாடார் குலத்தவர்கள் மத வேறுபாடு கருதாமல் ஒன்றிணைந்தனர். கால்டுவெல்லுக்கு எதிரான பகிரங்கமான 📍கொலை முயற்சிகளும் நடந்தேறத் தொடங்கின. ஆனால் அம்முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில் ,உயிருக்கு அஞ்சிய கால்டுவெல் நெல்லையை ( இடயங்குடியை ) விட்டு கொடைக்கானலுக்குக் குடிபெயர்ந்தார்.
தனது குற்றத்தை உணராத கால்டுவெல், நாடார் இன மக்களிடம் நல்லுறவை பேணி வந்த நாசரேத் மர்க்காஷிஸ் ஐயருக்கு பல துன்பங்களை விளைவிக்க ஆரம்பித்தார். மர்க்காஷிஸ் ஐயர் நாடார்களுக்கு உதவுதாக சந்தேகம் கொண்டார். மார்காஷிஸ் ஐயர் நடத்தின பள்ளியை மூட வைத்தார். சபை தலைமைகளிடம் மார்க்கஷிஸ் ஐயர் பற்றி பல புகார்களை செய்தார்.
யூத இனத்தவரும், திருமணம் செய்யாது சமயப் பணியை சமூகத் தொண்டாக செய்துவந்த மர்காஷிஸ் ஐயர் கால்டுவெல்லால் மன துன்பத்திற்கு ஆளானார்...
கொடைக்கானில் தஞ்சம் அடைந்த கால்டுவேல், இறந்த பின்பு தான் இடையங்குடிக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்..
இடையக்குடியின் தந்தை என நினைத்து கொண்டு பணி செய்த பிஷப் கால்டுவெல்லை விட நாசரேத் ஊருக்கு பல முன்னேற்ற பாதையை அமைத்தவர் மர்க்காஷிஸ் ஐயர்.இனம் மதம் வேற்றுமை பார்க்காது மக்கள் பணி செய்து நாசரேத் மக்களின் வருமானம் பெருக ரெயில்வே போன்றவை வர முயற்சித்தவர் மர்க்கஷிஸ் ஐயர்.
வன்மத்தின் உச்சத்தில் செயல்பட்ட கால்டுவெல்லை திராவிட தந்தை என்பதால் உயத்தி எழுதும் கட்டாயத்தில் கூலி வரலாற்று ஆசிரியர்கள் சட்டாம்பிள்ளையை குறைத்து எழுதி வருவதும் மர்காஷிஸ் ஐயர் பற்றி பதியாது வருவதிம் கண்டு வருகிறோம். இடையங்குடியில் ஆலயத்தை விட பெரிய மாளிகை கட்டி குடியிருந்தவர் கால்டுவெல்.
ஆனால் நாசரேத்தின் தற்போதையை தூய யோவான் ஆலயத்தின் விரிவுப்படுத்திய கட்டிட அமைப்பிற்கு மர்க்காஷிஸ் ஐயர் பங்காற்றி உள்ளார். நாசரேத் ஊரின் மக்கள் குடியிருப்பு கட்டமைப்பை சுகாதாரமாக உருவாக்கினவர் மர்காஷிஸ் ஐயர். ( தற்போது நாசரேத் குப்பை கூடமாக இருப்பது தற்போதைய சபை அமைப்பின் தன்மை, நோக்கம், மற்றும் அவ்வூர் அரசியல் சமூக தலைமைகள் திராவிட கட்சிகளுடன் இணைந்து தங்கள் குடும்பங்களை தங்கள் அடையாளத்தை மட்டும் வளர்த்து கொண்ட சுயநலம் தான்.) சீர் திருத்த சபைகள் உருவாக்கின குடியிருப்புகள் 15 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் குடியிருப்புக்ளை உருவாக்கினா கத்தோலிக்க பாதிரிகளை விட மக்கள் நலம் சார்ந்ததாக விசாலமான பாதைகள் இயற்கை மாறாத்த மரங்கள் கொண்டு உருவாக்கியிருந்தனர்.. ( கத்தோலிக்க்க குடியிருக்கும் தூத்துக்குடி, கடற்கரை பகுதிகள் ஸ்ரீவைகுண்டம். கவனிக்க. )
சட்டாம்பிள்ளை வாரிசுகள் மற்றும் நாடார் இனம் எதிர்வினை ஆற்றவில்லை என்பது கவலைக்குறிய விடயம்.
---_---=======-=-----------------======
11 தற்கால வரலாற்று ஆணிகள் கருத்து 😌
"🤣நீ என்ன பெரிய சட்டம்பிள்ளையா?"_
இந்து கிறிஸ்துவ ஏக இரட்சகர் சபை,
மூக்குப்பீறி
அருமைநாயகம், இந்து கிறிஸ்துவ ஏக ரட்சகர் சபையைத் தோற்றுவித்து, அதை யூத-தமிழ் பாரம்பரியப்படி வழிநடத்தியது வரலாறு.
... அருமை நாயகம், இந்து கிறிஸ்துவ ஏக ரட்சகர் சபையைத் தோற்றுவித்து, அதை யூத-தமிழ் பாரம்பரியப்படி வழிநடத்தியது வரலாறு. இந்து-கிறிஸ்தவ ஏக இரட்சகர் சபை எவ்வாறு இந்திய ஏக இரட்சக சபையாக மாறியது என்பது புரியவில்லை.(😂 அதை கேட்டு விசாரித்து கேட்டு புரிந்து எழுதுவது தான் வரலாற்று ஆசிரியர் பணி 🙏)
ஒரு சமயம் மூக்குப்பீறியில் இரு குடும்பத்தாருக்கு இடையே நேர்ந்த சண்டையில் தலையிட்டு, சமரசம் செய்த அருமை நாயகத்தின் பணியை ஊர் மக்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். '🤣ஆவியின் கிருபை' இருந்ததால் அவரால் இந்தச் சிக்கலை சரிசெய்ய முடிந்தது எனவும் நினைத்தார்கள். கால்டுவெல்லின் திருநெல்வேலி சாணார்கள் புத்தகத்தை தனக்கு 🤣சாதகமாக்கிக் கொள்ள முடிவெடுத்த சட்டாம்பிள்ளை, அதை மூக்குப்பீறி, பிரகாசபுரம் பகுதி நாடார்களிடம் வாசித்தே கொண்டுசேர்த்தார். அங்கு மிஷனரிகளுக்கு எதிரான அலை வீசியது. புதிய ஏற்பாட்டிலிருந்து மக்களை திருப்பி, பழைய ஏற்பாடே சிறந்தது எனவும் அதன் யூத முறைப்படி வழிபாடு செய்வதே கடவுளுக்கு உகந்தது எனவும் சட்டாம்பிள்ளை மக்களுக்கு போதித்தார்.
சனிக்கிழமை ஓய்வு - சாபத் (Shabbat), பாஸ்கு, மாதப்பிறப்பு போன்றவை கொண்டாட வேண்டிய பண்டிகைகள் என மக்களின் மனதை மாற்றினார்.
தங்களைப் போன்ற ஒருவர், அறிவில் சிறந்தவர், மிஷனரிகளையே எதிர்த்துக் கேள்விகேட்டவர் 😁என சட்டாம்பிள்ளையின் சொல்லுக்கு அம்மக்கள் கட்டுப்பட்டார்கள். 1857ம் ஆண்டு இந்தியாவே ஆங்கிலேயருக்கு எதிராகத் தன் முதல்.....
1867ம் ஆண்டு கலெக்டருக்கு விண்ணப்பித்தார்கள். இதனால் சந்தை செவ்வாயன்று நாசரேத்திலும், வெள்ளிக்கிழமை மூக்குப்பீறியிலும் கூட்டுவது என ஆணை கிடைத்தது. தங்கள் ஓய்வு நாளுக்கு ஏற்றவாறு சந்தையையே மாற்றி அமைக்கும் அளவுக்கு இந்த மக்கள் அதிகாரம் மிக்கவர்களாக அப்போதே இருந்திருக்கின்றனர்.🤪
1883ம் ஆண்டு சட்டாம்பிள்ளைக்கும் சங்கத்தினருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு இருந்துள்ளதாகத் தெரிகிறது. கோயிலுக்குள் பிரசங்கம் செய்யும்போது தலைப்பாகை அணிவது, தன் வீட்டு 😌ஆண் பிள்ளைகளை மட்டும் உயர்கல்வி கற்கவைத்தது, பலியாடு, போக்காடு என இரண்டு ஆடுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில்🙊 ஒன்றை பலியிட்டும் மற்றதை😭 கண்களைத் தோண்டி காட்டில் அலையவிட்டார் எனவும், வீட்டுக்கிணற்றில் பொது மக்கள் தண்ணீர் எடுக்கத் தடையாக அதைச் சுற்றி சுவர் எழுப்பினார் எனவும் இவர்மேல் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் சபை மீண்டும் பிளவுபட்டது.
பிரிந்து போன மக்கள் பிரகாசபுரம் தேவ ஈசாக்கு நாடார் தலைமையில் 1883ம் ஆண்டு முதல், 15 ஆண்டுகளுக்கு அவரது வீட்டு முற்றத்தில் ஆராதனை நடத்தினார்கள். பின்னர் மூக்குப்பீறி மாடுமந்தை கூடிய இடத்தில் ஓலைவேய்ந்த கோயில் ஒன்றைக் கட்டி வணங்கினார்கள். 28.09.1886 ( இது உண்மையா கட்டுக்கதையா என்று ஊர் மக்கள் தான் சொல்ல வேண்டும். அருமைநாயகம் சட்டாம் பிள்ளையின் வாரிவுகள் பதில் சொல்ல வேண்டும்

1 Aug 2026

மோர்தெகாய் - எஸ்தர்

 தமிழ் அரசியல் பேச்சுகளில்( சபாநாயகர் உரையில் )அடிக்கடி குறிப்பிடப்படும் #மோர்தெகாய் யார்? #எஸ்தர் என்ற பெயரில் பரப்பப்படும் பரப்புரையின் தார்மீகம் பின்புலம் என்ன?

ஒரு வரலாற்று பார்வை!
மோர்தெகாய் ஒரு யூதன். வாழ்வாதாரம் இல்லாத காரணத்தால் தனது குடும்பத்துடன் அண்டை நாட்டிற்கு அகதியாகச் சென்று வாழ்ந்தவன் . அங்கு மன்னனின் அரண்மனைக்கு வெளியே அரசு அலுவலராகப் பணியாற்றினான்.. அதே நேரத்தில் ஹாமான் என்பவர் மன்னனுக்கு மிகவும் நெருக்கமான, அரண்மனைக்குள் உயர்பதவியில் இருந்த அதிகாரி.
ஹாமானுக்கு , மோர்தெகாய் தன்னைக் கண்டவுடன் வணங்கி மரியாதை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மோர்தெகாய், "நான் யூதன்; யாருக்கும் தலைவணங்க மாட்டேன்" என்ற நிலைப்பாட்டில் இருகிறான் . இதனால் ஆத்திரமடைந்த ஹாமான், மோர்தெகாய் மட்டுமல்லாமல் அனைத்து யூதர்களையும் அழிக்கச் சதி திட்டமிடுகிறான்.
அதே காலகட்டத்தில், மன்னன் அகாஸ்வேரு (செர்க்சீஸ்) தனது ஆணவம் மற்றும் குடிவெறியின் காரணமாக, தனது மனைவி ராணி வஸ்தியை பதவியில் இருந்து நீக்கிவிடுகிறான். பின்னர் புதிய ராணியைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறான்.
இந்தச் சூழலை மோர்தெகாய் பயன்படுத்திக் கொண்டு, தனது வளர்ப்பு மகளான எஸ்தரை, தனது யூத அடையாளத்தை மறைத்து அரண்மனைக்கு அனுப்புகிறான். பின்னர் எஸ்தர் ராணியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள் .
அதன்பிறகு நிகழும் சம்பவங்கள் பைபிளின் எஸ்தர் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. எஸ்தரின் வேண்டுகோளின் பேரில் மன்னன் ஹாமானைத் தூக்கிலிட ஆணையிடுகிறார். மேலும், யூதர்கள் தங்களைத் தாக்க வந்த எதிரிகளை எதிர்த்துப் போராட அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் விளைவாக குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகிறார்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பின்னர் ஹாமான் வகித்த உயர்பதவி மோர்தெகாய்க்கு வழங்கப்படுகிறது.
சிலர் எஸ்தரை தமது மக்களை காப்பாற்றிய போராளியாக கருதுகின்றனர்; மற்றவர்கள் இந்த நிகழ்வுகளை அரசியல் தந்திரத்தின் வெற்றியாகப் பார்க்கின்றனர். பெண்ணை பயன்படுத்தி அதிகாரத்தை தக்க வைக்கும் ஆணின் (மோர்தெகாயின்) இழி குணத்தையும் வெளிப்படுத்துகிறது.
எஸ்தர் ஆகட்டும், பெற்றோர் இல்லா நிலையில் வளரும் பெண்கள், பாதுக்காவலர்கள் என்ற நிலையில் உள்ள ஆண்களால் அச்ச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அவல நிலையும், அச்சவாலையும் பயத்துடன் தன் உடலால் எதிர்கொண்டு அதிகாரத்தை அடையும் பெண்களையும் நினைவுப்படுத்துகிறாள்
ராணி வஸ்தி குறித்து நவீன பெண்ணியக் கண்ணோட்டம் வேறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. மன்னனின் அவமானகரமான கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்ததால் பதவியை இழந்தாலும், தனது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் காத்த பெண்ணாக அவர் இன்று பலரால் நினைவுகூரப்படுகிறார். அதனால் வஸ்தி பெண் சுதந்திரம், சுயமரியாதை மற்றும் நேர்மையின் அடையாளமாகவும் பேசப்படுகிறார்.
இந்த வரலாற்றை எவ்வாறு மதிப்பிடுவது என்பது ஒவ்வொருவரின் மதநம்பிக்கை, வரலாற்றுப் பார்வை மற்றும் மனசாட்சியைப் பொறுத்து மாறுபடுகிறது

உண்மை நின்றிட வேண்டும்- பத்திரிக்கையாளர் மாலன்

 🔥உண்மை நின்றிட வேண்டும்🔥

பாரதி பற்றிய புனைவுகளை, கட்டுக்கதைகளைத்
தரவுகளோடு தவிர்க்கும் நூல். இதன் ஆசிரியர் பத்திரிக்கையாளர் மாலன் அவர்கள். புஸ்தகா பதிப்பகம் ஊடாக வெளியான நூல். தரமான அட்டை, பக்க அமைப்பு, சிறந்த எழுத்துருருவுடன் 2025 ல் வெளிவந்த நூல். விலை ரூ 290. அனைவரும் , முக்கியமாக இளம் தலைமுறை வாசிக்க வேண்டிய புத்தகம். இந்தியாவை பற்றிய ஒரு உன்னத உண்மையான தேசியப் பார்வை கிடைக்கும்.
பல வரலாற்று சம்பவங்களை நினைவுப் படுத்துகிறது. பல அறிந்த அறியாத ஆளுமைகளை அடையாளப்படுத்தி உள்ளது. முக்கியமாக பாரதியாரின் உண்மையான வரலாற்று அடையாளத்தை காட்டித்தருகிறது.

பாரதியார் பல மொழிகள் கற்றவர், பல மாநிலங்களில் வாழ்ந்தவர்.. தாய் மொழி கல்வியைப் பற்றிய அவருடைய கருத்தாக்கம் இன்னும் கவனிக்காமல் இருந்து நமது தலைமுறையை சிந்தனை இல்லா படைப் பாற்றல் இல்லா நிலையில் உருவாக்கி வருகிறோம் என்பதை மறுபடியும் சிந்திக்க வைக்கிறார்.
🙏 தேசிய கல்வி என்ற கட்டுரையில் பாரதி எழுத்துகிறார்.
தாய்மொழிக் கல்வியே தரமான கல்வி. இத்தேசத்து ஜனங்களின் #கல்வி வித்து , சத்தாக இருக்க வேண்டுமையானால் மக்கள் தங்கள் தாய்மொழியிலே கல்வி தானம் பெற வேண்டும். அதுவே சகல வளர்ச்சியின் விஸ்பரூபத்திற்கும் வேராகும்

இப்புத்தகம் ஊடாக நாம் அறியும் முக்கிய ஆளுமையாகும் ஜி. சுப்பிரமணிய ஐயர். உழைப்பையும் செல்வத்தையும் கொண்டு உருவாக்கியது ஆகும் இந்து நாளிதழ்.
இந்த #ஆசார சீர்திருத்த சபையைப் போல சுப்பிரமணிய ஐயர் சம்மந்தப்பட்டிருந்த இன்னொரு அமைப்பு திருவல்லிக்கேணி #இலக்கிய சங்கம். ஜி. சுப்பிரமணிய ஐயர் சிறந்த பத்திரிகையாளன் ஆவர். ஜி. சுப்பிரமணிய ஐயர் . அரசியல் மேடைகளில் தமிழில் பேச வேண்டும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் . மதப் பிரசாரர்கள் ஊர் ஊராய்ப் போய் பிரசாரம் செய்வதைப் போல அரசியல் ஆர்வலர்களும் தலைவர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் மேலும் ஊராட்சி, நகராட்சி அமைப்புகளில் பங்கு பெற வேண்டும் என்பதைத் தமிழில் கேள்வி–பதில் வடிவத்தில் விளக்கிக் கையேடு வெளியிட்டவரும் இவர்தான். இவற்றின் நீட்சி அல்லது இன்னொரு வடிவம்தான் அவரது #பத்திரிகைகள்.

#ஜி. சுப்பிரமணிய ஐயர்,
#எம். வீரராகவாச்சாரியார்,
#டி.டி. ரங்காச்சாரியார்,
#பி.வி. ரங்காச்சாரியார்,
#கேசவராவ்,
#என். சுப்பாராவ் ஆகிய திருவல்லிக்கேணியை சேர்ந்த அறுவர் தான் 1878-ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று, முதன் முதலாக வெள்ளையர் அல்லாத ஒரு இந்தியர் -முத்துசாமி ஐயர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பிற்கு பதில் கூற இந்துவைத் தொடங்கினர்.
அப்போது ஜி. சுப்பிரமணிய ஐயருக்கு 23 வயது. இவர்களில் ஜி. சுப்பிரமணிய ஐயர், வீரராகவாச்சாரியார் ஆகியோர் ஆசிரியர்கள்.
மற்ற நால்வரும் சட்டம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள். அவர்கள் படிப்பு முடிந்ததும் வக்கீல் தொழிலிலே கவனிக்கப் போய் விட்டனர்.
ஜி. சுப்பிரமணிய ஐயர், வீரராகவாச்சாரியார் இருவர் மட்டுமே பத்திரிகையை நடத்த வேண்டிய நிலை. சுப்பிரமணிய ஐயர் ஆசிரியர் பொறுப்பைக் கவனிப்பது என்றும், வீரராகவாச்சாரியார் நிர்வாக இயக்குநராக பத்திரிகையின் விற்பனை, நிதி விஷயங்களைக் கவனிப்பது என வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வாரப்பத்திரிகையாகத் தொடங்கிய பின் வாரம் மும்முறையாக வளர்ந்தது. 1887-ஆம் ஆண்டு சென்னையில் முதன்முறையாக காங்கிரஸ் மாநாடு நடந்த பின் 1889-ஆம் ஆண்டு மாலை நாளிதழாக மலர்ந்தது.
சமூக சீர்திருத்த ஆர்வலராகவும் இருந்தார். இந்து மதத்தில் இருந்த #தீண்டாமை, #குழந்தைத் திருமணம், கூட்டுக் குடும்பம் போன்ற வழக்கங்களைக் கடுமையாக எதிர்த்தவர். அதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்து ஆசார சீர்திருத்த சபையின் நிறுவுனர்களில் ஒருவரும் ஆவார்.

பாரதியின் இந்த அறச்சீற்றம், ஜி. சுப்பிரமணிய ஐயரின் கட்டுரை ஒன்றின் தாக்கத்தில் எதிரொலித்து.

ஜி. சுப்பிரமணிய ஐயர் சமூக சீர்திருத்தத்தைப் பேசுபவரில் நிறுத்திக் கொண்டவர் அல்ல. தன் வாழ்க்கையிலும் மேற்கொண்டுக் காட்டியவர். அவரது மூத்த மகள் சிவப்பிரியையை 13 வயதில் விதவையானபோது அவருக்கு மறுமணம் செய்து வைத்தவர். அதன் காரணமாக ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் என எச்சரிக்கப்பட்டும், அதைப் பொருட்படுத்தாமல் அவர் அந்தத் திருமணத்தை 31-12-1889 அன்று பம்பாயில் முதல் காங்கிரஸ் மாநாடு கூடியபோது நடத்தினார்.

வேறு ஒரு சமயம், திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் மரணம் நேர்ந்த போது, இந்தவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்து #அந்தணர்களும் #உறவினர்களும் புறக்கணித்தனர். காரணம், இந்தவர் இளம் வயதில் விதவையான தன் குழந்தைக்குத் மறுமணம் செய்து வைத்திருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட #ஜி. சுப்பிரமணிய ஐயர், அந்த வீட்டிற்குச் சென்று உறவினர்களுடன் பேசி, இறுதிச் சடங்குகள் நடைபெறச் செய்தார்.

தீண்டாமைக்கு .எதிராக எழுப்பப்பட்ட தலையங்கங்கள் காரணமாகப் பத்திரிகை பல வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருந்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. விரைவில் அவர் தீண்டாமை பற்றி எழுதிய ஒரு கூர்மையான விமர்சனத்தால் பிளவாக மாறியது.

மதத்தின் மீது நாம் கொண்டிருக்கும் எத்தகைய மதிப்பும் இந்த தீண்டத்தகாத ஏழை மக்களுக்கு விடுதலை கொண்டுவராது” என்று எழுதினார்.

ஜி. சுப்பிரமணிய ஐயர் தீண்டாமைக்கு எதிரான தன் குரலை, எழுத்துக்களை மட்டுப்படுத்திக் கொள்ள எண்ணவில்லை. அதனால் பிரபல வழக்கறிஞர் நார்ட்டன் முன் இந்துவை விட்டு சுப்பிரமணியம் விலகி விடவேண்டும் என்றும், வீரராகவாச்சாரியாரே ஆசிரியர் பொறுப்பைக் கவனிப்பார் என்றும் முடிவாயிற்று. தன் உழைப்பாலும் எழுத்தாலும் அறிவுக் கூர்மையாலும் வளர்த்த ஹிந்து பத்திரிகை விட்டு விலகினார்.

இன்னொரு சம்பவம் பிரச்சினை ஜி. சுப்பிரமணிய ஐயரின் எழுத்தின் மூலம் வந்தது மதுரையில் வெங்கோபாச்சாரியார் என்பவர் ஒரு பள்ளித் தலைமையாசிரியராக இருந்தார்.
ஒரு நாள் காலையில் மாணவர்களின் பள்ளியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வழக்கமான பிரார்த்தனைப் பாடல்களுக்குப் பின் #வந்தேமாதரம்❤️ பாடலைப் பாடினர். வெங்கோபாச்சாரியார் ஒன்றரை மணி நேரம் மாணவர்களைப் பேச்சின் மேல் நிற்க வைத்து, "மிரட்டி, இதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர் யார் எனக் கண்டுபிடித்து அந்த நான்கு பேரையும் பிரம்பால் விளாசிவிட்டார்.
அவர்களில் ஒருவருக்குப் மணிக்கட்டு பிசகிவிட்டது. #சுப்பிரமணிய ஐயர் சுதேசமித்திரனில் செய்தியும் வெளியிட்டு தலைமையாசிரியர் மீதும் எழுதியிருந்தார்.
அதில் ஒரு வரி: "ஹிந்து பிள்ளைகள் ஹிந்துக்களே நடத்தும் ஸ்தாபனங்களில் கல்வி தேசாபிமானம் என்கிற நல்லுணர்ச்சியைக் கற்பது., அப்படி ஹிந்து பிள்ளைகள் தேசாபிமானம் கற்பத்தால் வெங்கோபாச்சாரிக்கு கோபம் உண்டாகுமானால் இவரை விட கிறிஸ்தவ மதத்தைத் தழுவின குரங்கு மூஞ்சித் தொப்பிக்காரன் ஒருவன் பிரின்சிபலாக இருக்கலாமே?"பக்கம் 68.


தேசிய தலைவர்களை பற்றி ட்தனித்துவமான தகவல்கள் அடங்கிய புத்தகம் இது. இப்புத்தகம் ஊடாக பல தலைவர்களை பற்றி அறிகிறோம். அவர்களோடு பாரதிக்கு இருந்த தொடர்புகளை வைத்து இப்புத்தகம் ஒவ்வொரு பகுதியாக சான்றுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த மிகமுக்கியமான சம்பவங்களை தரவுகளுடன் பகுந்தாய்வு செய்து உள்ளது.

பாரதியார் தனது ஐந்து வயதில் தாயையும் பதின்ம வயதில் தந்தையையும் இழந்தவர். கடைசி காலத்தில் உ இவருடைய சித்தர் நம்பிக்கை, ஆன்மீக பயணம் இதன் தாக்கமாக அல்லது தொடர்ச்சியாக படுகிறது,

சித்தர்களின் தொடர்பு அவரிடம் மூன்று தாக்கங்களை ஏற்படுத்தியது.
#ஏற்கனவே வேத நூல்கள் வாசிப்பு வழி அவருள் இருந்த ‘எல்லா உயிர்களுக்கும் இறைவன் இருக்கிறார்’ என்ற கருத்தை வலுப்படுத்தியது.

​மரணத்தை வெல்வது எப்படி என்ற சிந்தனையில் ஆழமாக இறங்குகிறார். இது குறித்து விரிவாகத் தனியே ஓர் அத்தியாயம் எழுதியிருக்கிறேன்.

​அவருடைய உள்முகப் பயணம் புதிய திசையில் திரும்பி வேகம் கொண்டதெனினும் அவர் இந்த சித்தர்களின் கூட்டுறவால், குறிப்பாகக் குள்ளச்சாமியினால் போதைப் பொருட்கள் பழக்கத்திற்கு உள்ளாகினார்.
​குள்ளச்சாமியுடன் சேர்ந்து அவர் கஞ்சா போன்ற பொருட்களைப் பயன்படுத்தியதை அவர் மீது அன்பு கொண்ட வ.உ.சி, வ.வே.சு ஐயர் போன்றவர்கள் கவலையுடன் பதிவு செய்து உள்ளனர். பண்டாரங்களுடன்"பழகத் தொடங்கிய பின் அவருடைய மற்ற நட்பུக்கள் நலியத் தொடங்கியது. பாரதியின் மீதும் அவர் எழுத்தின் மீதும் அபிமானம் என்பதையும் தாண்டி மாமா என்று அழைக்கும் அளவிற்கு நெருக்கமும் அளவற்ற அன்பும் கொண்டிருந்த வ.உ.சி.யே கூட பாரதிக்கு குள்ளச்சாமியோடு இருந்த கூடா நட்பை வெறுத்தார். போதைப் பழக்கத்தினால் மட்டுமல்ல, அவர் குள்ளச்சாமியை மட்கு என்றே கருதினார்.

​ ​இத்துடன் வருமானம் குறைந்த காலம், பொருளாதார நெருக்கடி, குடும்பத்திலும் சச்சரவு, போதும் போதாதற்கு புகையிலை பழக்கத்தால் ஏற்பட்ட உடல் உபாதைகள், எல்லாமாகச் சேர்ந்து 1915 வாக்கில் பாரதி பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

.மனவேற்றுமைகள் பெருக திடீரென்று
பாரதியிடம் ஏதும் சொல்லாமல், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனது தாய்வீட்டுக்குப் போய்விட்டார் செல்லம்மா. செல்லம்மா தன்னை விட்டுப் போய்த் திரும்பி வந்த ஒரு மாத காலம் பாரதி ஒருவரையும் சந்திக்காமல், பேசாமல் மெளன விரதம் இருந்துள்ளார்.
​ஊருக்குப் போன செல்லம்மா தன் சகோதரர்களை மட்டும் அழைத்துக் கொண்டு புதுச்சேரி திரும்பின செல்லம்மா; புதுச்சேரியை விட்டுக் கடையத்திற்கே திரும்பி விடலாம் என வற்புறுத்துகிறார். செல்லம்மாவின் சகோதரரும் முதல் உலக யுத்தம் முடிந்த பின்பு தமிழ் நாட்டில் பிரிட்டிஷாரின் கெடுபிடி குறைந்து விட்டதாகச் சொல்கிறார். முதலாம் உலகப் போர் முடிவு ஒப்பந்தம் கையெழுத்தான சூழலில் புதுவையை விட்டு வெளியேறினார் ஆனால் அவர் புதுச்சேரி எல்லையைக் கடந்ததும் 1918 நவம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டு கடலூரில் சிறை வைக்கப்பட்டார்.

எந்த தமிழ் மொழிக்கு ஒளியும் உயிரும் கொடுத்தாரோ அந்தத் தமிழ் மொழியின் புலவர்கள், அறிஞர்கள், எவரும் கைதைக் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை . எந்த மக்களுக்காக எழுதியும் பேசியும் வந்தாரோ அந்த மக்கள் கொந்தளித்து எழவில்லை.

அன்னிபெசன்றும் பாரதியும் நட்புறவு கொண்டிருந்தாலும் அன்னி பெசண்டின் சில தேசிய கருத்து ஒவ்வாததாக உள்ளது. "கிழப் பெண் நரி" என்றும் ஜே.கிருஷ்ண மூர்த்தியைப் பற்றி "இளம் கழுதைக் குட்டி"என்றும் கடுமையான விமர்சனங்களை எழுதி உள்ளார்.

தஞ்சாவூர் காங்கிரஸ் கமிட்டி, ஹோம் ரூல் இயக்கம் ஆகியவை மாத்திரம் இணைந்து கைது "விரும்பத்தக்கதாக இல்லை" என்று பொதுவாக ஒரு தீர்மானம் இயற்றின.

அநேகமாக எல்லோராலும் கைவிடப்பட்டு நிராதரவாக இருந்த பாரதியை சிறைமீட்க முயற்சிகள் மேற்கொண்டவர்கள் இரு பத்திரிகையாளர்கள்.

ஒருவர் சுதேசமித்ரன் ஆசிரியர் ஏ.ரங்கசாமி ஐயங்கார், நியூ இந்தியா, காமன்வீல் பத்திரிகைகளின் ஆசிரியரான அனி பெசண்ட்.

டிசம்பர்-17 1918 வாக்கில் விடுதலை ஆகி உள்ளார்.

யானைச் சம்பவத்திற்குப் பின் உடல் தேறி, 1921-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதி ஈரோட்டிற்கு அருகில் உள்ள கருங்கல்பாளையம் என்ற இடத்தில் அமைந்திருந்த வாசகசாலை ஒன்றின் ஐந்தாம் ஆண்டு விழாவில் மனிதனுக்கு மரணமில்லை என்ற பாரதியின் இறுதிப் பேருரை அமைந்து உள்ளது.
​அதைக் குறித்து அதற்கு அடுத்த வாரம், (4.8.1921) எனது ஈரோடு யாத்திரை என்று காளிதாசன் என்ற பெயரில் சுதேசமித்திரனில் எழுதியுள்ளார்.

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் பாரதியின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது.



பாரதியின் உடல் தகனம் செய்யப்பட்ட அதே நாளில் வெளிவந்த தி ஹிண்டு நாளிதழ், “His premature death the country has lost a born poet and a sincere patriot” என்று தலையங்கம் எழுதியது.
​அவரது மறைவுச் செய்தி பரவியதும் சென்னையிலும் காரைக்குடியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடந்த இரங்கல் கூட்டங்கள் பற்றிய செய்திகளும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் கடிதங்களும் கவிதைகளும் மித்திரனில் தொடர்ந்து ஒரு வார காலம் வெளிவந்து கொண்டேயிருந்தன