13 Feb 2026

எமிலியும் , சுபாஷ் மற்றும் அவர்களின் காதல் பிரபஞ்சம்

 

பேராசிரியர் டி.கே. சோமசேகரன் பிள்ளை எழுதிய "எமிலியும் , சுபாஷ் மற்றும் அவர்களின் காதல் பிரபஞ்சம்" என்ற புத்தகம்.அக்டோபர் 2024 ல் வெளியிடப்பட்டுள்ளது. நேதாஜியின் ஆத்ம தோழியும் , மனைவியுமான எமிலியின்  ஆஸ்திரியா வியன்னாவில் வாழ்ந்தாலும்  சுபாஷ் சந்திரபோஸை உரிமை கொண்டாட முடியாமல் வாழ்ந்த  வலியின் வாழ்க்கையைப் பற்றி அறியும் முயற்சியாகும் இப்புத்தகம்.


சுபாஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த புரட்சியாளர்,  புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர். இந்தியா மக்கள்  சுதந்திரத்தை விலைக்கு வாங்கக்கூடாது, போராடி வெல்ல   வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் சுதந்திர போராட்டக்களத்தில் செயல்பட்டவர். 


பேராசிரியர் டி.கே. சோமசேகரன் தனது புத்தகத்தின் மூலம் ஒரு சிறந்த புரட்சியாளரின் அறியப்படாத பக்கமான அவருடைய  காதல் வாழ்க்கைக்கு அழைத்து செல்கிறார். இதன் மூலம், இந்த வரலாற்று ஆசிரியர் தனது நிபுணத்துவத்துடன் நடத்திய ஆராய்ச்சிகளும் , அடைந்த தகவல்களும்   இந்த புத்தகத்தின் முக்கிய அம்சங்களாகும், இது  ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு கொடுக்கிறது. 



காதல் மிகவும் அழகானது, ஏனென்றால் அது இதயத்திலிருந்து வருகிறது. அது ஒரு வகையான அக்கறையும் கூட.  அன்பும் காதலும் ஒன்றாக மலர்ந்த சுபாஷ் சந்திர போஸ் மற்றும் எமிலியின்  திருமண வாழ்க்கையை பகிர்வதாக உள்ளது இப்புத்தகம். 


எமிலி ஷெங்கல் ஆஸ்திரியாவின் தலைநகரம் வியன்னாவில்  1910 ஆம் ஆண்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். எமிலியும் சுபாஷாவும் முதன்முதலில் 1934 ஆம் ஆண்டு வியன்னாவில் வைத்து சந்தித்தனர்.  


சந்திர போஸ் 1934 ஐரோப்பாவில்  இருந்து நாடுகடத்தப்பட்டபோது, ​​அவர் "இந்திய போராட்டம்" என்ற புத்தகத்தை எழுதத் தொடங்கினார். சுபாஷுக்கு தட்டச்சு செய்யக்கூடிய மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஒரு செயலாளர் ஆக பணியில் அமந்தவர் தான் எமிலி ஷெங்கல் . பிற்பாடு அவர்கள் ஆஸ்திரியாவில் உள்ள ஒரு அழகான கிராமமான பேட்ஹாஸில்  வைத்து டிசம்பர் 26, 1937 அன்று திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் உள்ளது. 



நேதாஜிக்கு  எமிலிக்கு தனது முதல் கடிதம் நவம்பர் 1934 இல் ரோமில் இருந்து அனுப்பி உள்ளார். பிற்பாடு சுபாஷ் தனது பயணங்களின் போதும் எமிலிக்கு கடிதங்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். 1934 முதல் 1942 வரை காலகட்டத்தில்  சுபாஷ் 162 கடிதங்களை எமிலிக்கு அனுப்பி உள்ளார்.


சுபாஷ் இவ்வாறு  எழுதுகிறார்,  உங்களுக்கு எழுத நான் சிறிது காலமாக மிகவும் பதட்டமாக இருக்கிறேன். உங்கள் மீது எனக்குள்ள அபரிமிதமான அன்பை அளவிடுவதும் அதைப் பற்றி எழுதுவதும் எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களைப் பற்றி எப்படி நினைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் என் எண்ணங்களில் இருக்கிறீர்கள். என் வாழ்க்கையில் நான் உங்களைப் பற்றி நினைக்காத ஒரு நாள் கூட இல்லை. நீங்கள் தொலைவில் இருந்தாலும், உங்கள் இருப்பை நான் எப்போதும் உணர்கிறேன். உங்களைப் போல நேசிக்க இந்த உலகில் வேறு யாரும் இல்லை. நீங்கள் இல்லாத நேரத்தில், நான் பல நாட்களாக கடுமையான தனிமையை உணர்ந்திருக்கிறேன்.\


ஜனவரி 4, 1938 அன்று, சுபாஷ் எழுதியுள்ளார்: "நான் ஒரு குழுவாக இரவும் பகலும் கடினமாக உழைத்தாலும், நான் எப்போதும் தனிமையின் சிறையில் இருக்கிறேன்."


சுபாஷ் 1941 இல் ஜெர்மனிக்கு வந்தார், 1942 வரை, அவரும் எமிலியும் கிழக்கு பெர்லினில் உள்ள சோஃபின் சென்ட்ரல் சென்ட்ரிசிட்டியில் உள்ள அவர்களின் வீட்டில் ஒரு குடும்பமாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அவர்களின் மகள் அனிதா 1942 நவம்பர் 29 அன்று வியன்னாவில்  பிறந்துள்ளார்.

டிசம்பர் 1942 இல், சுபாஷ் தனது அன்பு மகளைப் பார்க்க வந்துள்ளார். பிப்ரவரி 8, 1943 அன்று, ஜெர்மனியிலிருந்து கடல் பயணம் தொடங்கியது. அதன் பிறகு, எமிலியும் சுபாஷும் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை



சிலர், குறிப்பாக வங்காளிகள், சுபாஷின் காதலையும் திருமணத்தையும் ஏற்றுக்கொள்ள தயங்கினர். 1947 ஜூன் 22 அன்று, டாக்டர் அகமது, சுபாஷுக்கு  எமிலிக்குமான உறவின் சான்றுகள் இருப்பதாகவும், அவர்களுக்கு நான்கரை வயதுடைய ஒரு மகள் இருப்பதாகவும், அந்தக் குழந்தை தோற்றத்தில் சுபாஷைப் போலவே இருப்பதாகவும் குறிப்பிட்ட தகவல்களைக் நேருவுக்கு அனுப்பினார். ஜவஹர்லால் நேரு கிடைத்த தகவலை உடனே சர்தார் வல்லபாய் படேலிடம் தெரிவித்து, இந்த விஷயத்தை மேலும் விசாரிக்க தனது நம்பகமான நண்பர் நாதலால் பரிக்ஷாவை நியமிக்கிறார்.   

ஆனால் சுபாஷின் சகோதரர் சரத் போஸ் இந்த திருமணச் செய்தியைப் புறக்கணித்தது மட்டுமல்லாது, திருமணச் செய்தியை நம்பவில்லை என்றார். அதுமட்டுமின்றி, நாதலாலை தகவல்கள் சேகரிக்க  தனது அனுமதி இல்லாது அனுப்பியது  தவறான நடவடிக்கை என்றும், எச்சரித்தார்.



ஆனால் எமிலி மற்றும் வனிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பரீத்தை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்து படேலுக்கு ஏற்கனவே ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 1951 ஆம் ஆண்டு சுபாஷின் திருமணம் தொடர்பான சர்ச்சைகள் நாடு முழுவதும் பரவின. 



தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுபாஷின் வாழ்க்கையே  தனது வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கும் என்றும், அதை ஒரு மதிப்பாக நிலைநிறுத்துவேன் என்றும் சுபாஷ் முடிவு செய்ததை குறிப்பிட்டு சுபாஷின் நண்பர்கள் ஹேமந்த் குமார்  மற்றும் சுபாஷின் சகோதரர்களுக்கு சுபாஷ் திருமணம் முடித்துள்ளார் என்று ஏற்பதற்கு கடினமாக இருந்தது. 24 வயது இளைஞன் சுபாஷுக்கு எழுதிய கடிதத்தில், பிரம்மசரிய கொள்கையே தனது உலகக் கண்ணோட்டத்திற்கு அடிப்படை மதிப்பாக இருக்கும் என்று தெளிவாகக் கூறி உள்ளார். அவ்ரின் கொள்கையான  ஒருபோதும் மது அருந்தாதே, இரவு விடுதிகளுக்குச் செல்லாதே, ஒரு பெண்ணுடன் நடனமாடாதே, இந்த மூன்று விஷயங்களை அவருடைய நண்பர்கள் ஆன  திலீப் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பின்பற்றியுள்ளனர். 


ஆங்கிலப் பெண்களை காதல் செய்து இந்தியாவின் செல்வத்தையும், அதிக திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வீணாக்க வேண்டாம் என்று சுபாஷ் இந்திய மாணவர்களை எச்சரித்ததாகவும், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்கான திறன்களைப் பெற இங்கிலாந்து வந்ததாகவும் திலீப் கூறியுள்ளார்.சுபாஷின் ஆளுமை உருவாக்கத்தில் சிறு வயதிலிருந்தே ஆன்மீகம் ஒரு முக்கிய சக்தியாக இருந்துள்ளது . இந்திய இளைஞர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் குறிப்பிடத்தக்க ஒன்றைச் சொன்னார்: நமது சகோதரிகள் சமூகத்தில் அனைத்து சுதந்திரத்துடனும் பணியாற்றும் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு பெண்ணையும், செயல் அல்லது வேறுவிதமாகவோ துன்புறுத்தவோ அல்லது சித்திரவதை செய்யவோ துணிபவர்களைக் கைது செய்து, அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். .

1972 அன்று வீக்லியில் வெளியிடப்பட்ட, ஷரத்தின் மருமகள் கிருஷ்ணபோஸ் எழுதிய ஒரு கட்டுரையில், எமிலி சுபாஷின் திருமணம் நடந்த ஆண்டு 1942 என்றும், திருமணம்  இந்து சடங்குகளின்படி நடந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.





1960 சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா இந்தியா வந்தார். 1960 இல் அனிதா இந்தியா வந்தபோது, ​​நேதாஜியின் சகோதரர்கள் பலர் இறந்துவிட்டனர். உயிருடன் இருந்த நேதாஜியின் சகோதரர்களில் ஒருவரான  சுரேஷ் போஸ்,  சுபாஷ் சந்திர போஸின் மகளின் இந்திய வருகையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனா டெல்லியில் பிரதமர் நேரு தன்னுடன்  தங்குமாறு அனிதாவை அழைத்தார். அனிதா அழைப்பை ஏற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அனிதாவை இளம் ராஜீவ் காந்தி வரவேற்று அழைத்து வந்துள்ளார். 


"எனது முதல் காதலும், எனது அன்பும் என் நாட்டிற்கானவையே என்று சுபாச் தனது மனைவி எமிலிக்கு எழுதினது வருத்ததை தந்தாலும் எமிலி ஒரு தேசியவாதியை போராளியை இணையாக பெற்றதில் பெருமை கொள்கிறார். சுபாஷில் விடுதலைப்போராட்ட வாழ்க்கைக்கு எங்கும் தடையாகவோ, சுபாஷை தனக்கான ஒருவராக மட்டும் இருக்க ஒரு போதும் எமிலி கேட்டுக் கொள்ளவும் இல்லை. எமிலி அவர்கள் காந்தர்வ முறையில் திருமணம் செய்து கொண்டதை சொல்ல  தயங்கவில்லை, சோர்வடையவில்லை, வாதிடமில்லை. இலட்சிய அரசியலின் உருவகமாக இருந்த சுபாஷின் வாழ்க்கையின் நோக்கம் இந்தியாவின் சுதந்திரத்திற்காக மட்டுமே என்பதை எமிலி சரியாகவே  அறிந்திருந்தார். 


நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நெருங்கிய தோழியாக துணைவியாக இருந்த  அவர் ஒரு துணிச்சலான பெண்மணி ஆகவும், சிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரருக்கு புரட்சிகர உற்சாகத்தை ஊட்டியவராகவும்  "எனது அன்பு முழுவதும் என் இந்தியாவுக்காகவே" என்று கூறிய நேதாஜிக்கு உத்வேகமாகவும் இருந்துள்ளார். சுபாஷின் ஜப்பானில் இருக்கும் பஸ்மம் இந்தியா கொண்டு வரவேண்டும் என்பது அவருடைய வேண்டுதலாக இருந்தது. நரசிம்ஹ அமைச்சரவை முயன்றாராலும் கடைசி நேரம் அது இயலாது போனதில் எமிலி சங்கல் மிகவும் வருந்தி உள்ளார். 




சுபாஷும் நாடு மேல் தான் என் முதல் அன்பு என்று சொல்லியிருந்தாலும் இவர்கள் திருமணம் பற்றி 1942 ல் சகோதரனுக்கு கடிதம் ஊடாக தெரிவித்து உள்ளார். தங்கள் சகோதரனின் அடையாளம் ஒரு தனி மனித பிரம்மசரிய போராளியாக இருக்க வேண்டும் என்பது அவரது சகோதரர்கள் குடும்பத்தினர் விருப்பமாகவும் இருந்து உள்ளது.

 


அதை தனது வாழ்க்கையால் நிரூபித்தும் ஆஸ்திரியாவில் ஒரு இந்திய பண்பாட்டு ஈர்ப்பிலே சுபாஷின் ஈர்ப்பில் வாழ்ந்து வந்த எமிலி மார்ச்சு 1996 இல் மறைந்தார்.


4 Feb 2026

பாரபாஸ்' (Barabbas)

 

சமீபத்தில் ஸ்வீடன் நாட்டு எழுத்தாளர் பெர் லாகர்கிவிஸ்ட் (Pär Lagerkvist) எழுதிய 'பாரபாஸ்' (Barabbas) நாவலை வாசித்தேன். 1951-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற நாவல் இது. மனிதகுலம் எதிர்நோக்கும் நித்திய கேள்விகளுக்கான பதில்களைத் தனது நாவலின் ஊடாகக் கண்டறிய அவர் மேற்கொண்ட கலைத்திறனுக்காகவும், உண்மையான சுதந்திரச் சிந்தனைக்காகவும் அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

லாகர்கிவிஸ்ட் தனது இருபதுகளின் தொடக்கத்திலிருந்து எழுபதுகளின் இறுதி வரை கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான அடிப்படைப் போராட்டமே அவரது படைப்புகளின் மையக் கருப்பொருளாகத் திகழ்கிறது.

கதைக்களம்: வெறும் 144 பக்கங்களை மட்டுமே கொண்ட இந்தச் சிறு நாவல், மிகப்பெரிய தத்துவப் பாரத்தைச் சுமந்து நிற்கிறது. திருச்சபை கற்றுக்கொடுக்கும் கோட்பாடுகளையும் கடந்து, விவிலியப் பின்புலத்தில் கிறிஸ்தவ மரபிலிருந்து பாத்திரங்களையும் உருவகங்களையும் அவர் கையாண்டுள்ள விதம் சிறப்பானது.

கிறிஸ்துவின் சிலுவை மரண விசாரணையின்போது, இயேசுவுக்குப் பதிலாக விடுதலை செய்யுமாறு யூதர்கள் வேண்டியவன்தான் பாரபாஸ். கூட்டத்தினரின் விருப்பத்தால் இயேசு சிலுவைக்கு அனுப்பப்பட, மரண தண்டனையிலிருந்து தப்பித்த குற்றவாளியான 'பாரபாஸ்' வழியாகக் கிறிஸ்தவம், கடவுள் நம்பிக்கை போன்றவற்றை ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார்.

இயேசுவைச் சிலுவையில் அறையக் கொண்டு செல்லும்போது, அவர் துன்புறுத்தப்படுவதையும், பின்பு அவர் உயிர்த்தெழுந்ததாகப் பெண்கள் கூறுவதையும் மறைந்திருந்து பார்க்கிறான் பாரபாஸ். விடுதலையான போதிலும், அவனால் கிறிஸ்துவின் நினைவுகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை; ஏதோ ஒரு வகையில் கிறிஸ்துவுடன் பிணைக்கப்பட்டே இருக்கிறான்.

பாரபாஸின் ஊசலாட்டம்: கிறிஸ்துவால் ஈர்க்கப்பட்டாலும், அவரைக் கடவுளின் மகனாகவோ, இரட்சகராகவோ அவனால் நம்ப முடியவில்லை. விடுதலை வேண்டித் தன்னைப் பின்தொடர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறந்தள்ளி, மௌனமாக மரணத்தைக் கடந்துபோன கிறிஸ்து அவனுக்கு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றார். கிறிஸ்து சீடர்களுக்காக மரிக்கவில்லை, தனக்காகவே மரித்தார் என்று அவன் நம்புகிறான்.

கிறிஸ்துவின் சிலுவை மரணம் பற்றி அவன் இவ்வாறு சிந்திக்கிறான்: "அவர் பட்ட கஷ்டங்களையும் சிலுவையையும், அந்தப் பரிதாபகரமான பிரிவையும் அவர்கள் போற்றிப் புகழ்ந்தார்கள். அதில் பரிதாபமும் துயரமும் மட்டுமே நிறைந்திருந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லையா? அவர்கள் சாவையுமா வணங்கினார்கள்? அது மிகவும் பயங்கரமானது; கொடூரமானது." இது அவனுக்கு அருவருப்பையும் வெறுப்பையும் தந்தது. கிறிஸ்தவர்களின் உளவியலைச் சரியான இடத்தில் கேள்விக்குள்ளாக்குகிறான் பாரபாஸ்.

கிறிஸ்துவைக் கடவுளாக நம்புகிறவனும், நம்பாத பாரபாஸும் கழுத்தில் ஒரே அடையாளச் சின்னத்தை (பதக்கத்தை) அணிந்து திரிவது சிந்திக்க வைக்கிறது. கிறிஸ்து சிலுவையில் உயிர் நீத்ததை நேரில் கண்ட பாரபாஸால் அவரை நம்ப முடியவில்லை. ஆனால், பாரபாஸ் மூலமாக அங்கு நடந்த நிகழ்வைக் கேட்டறிந்தவன், ஆழமாகவும் உருக்கமாகவும் கிறிஸ்துவை நம்புகிறான்.

துணைக் கதாபாத்திரங்கள்: பாரபாஸோடு தொடர்புடைய 'முயல் உதடு' (hare-lipped) கொண்ட ஒரு பெண், கிறிஸ்துவை ஆழமாக நேசிக்கிறாள். பின்னர், அவள் சீசரை நிந்தனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கல்லெறிந்து கொல்லப்படுகிறாள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாத கிறிஸ்துவுக்காக அவள் கொல்லப்படுவதை நினைத்து அவள் மேல் இரக்கம் கொள்கிறான் பாரபாஸ். கண்பார்வை இல்லாவிட்டாலும், செவிவழிச் செய்தியை வைத்து அவளைக் காட்டிக்கொடுத்த குருடனை அவன் கத்தியால் குத்திக் கொல்கிறான். அவள் உயிரோடு இருந்தபோது அவள் காட்டிய அன்பைப் புறக்கணித்தவன், அவள் இறந்த பின்பு அவள் மீதான மரியாதை மற்றும் மறைத்து வைத்திருந்த பிரியத்தின் நிமித்தம் அவளது உடலை எடுத்து அடக்கம் செய்கிறான்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, சங்கிலியால் பிணைக்கப்பட்ட மற்றொரு அடிமையான சஹாக் (Sahak) என்ற தீவிர கிறிஸ்தவ விசுவாசியுடன் பாரபாஸ் வாழும் சூழல் உருவாகிறது. இருவரும் கழுத்தில் ஒரே பதக்கத்தை அணிந்திருந்தாலும், அதன் பொருளை இருவரும் வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றனர். ஒரு பக்கம் 'கிறிஸ்துவின் அடையாளம்' என்றும், மறுபக்கம் 'சீசரின் அடையாளம்' என்றும் பாராட்டி மதிக்கிறான் சஹாக். ஆனால் பாரபாஸுக்கோ அத்தகைய உணர்வு ஏதுமில்லை. அதிகாரிகள் அவர்களைச் சீசரின் முன் கொண்டு நிறுத்தும் போது, கிறிஸ்துவின் சாட்சியாக நண்பன் சஹாக் உயிர் விடுகிறான்; ஆனால் பாரபாஸ் கிறிஸ்துவை மறுதலித்துத் தப்பித்துக்கொள்கிறான்.

முடிவும் தத்துவமும்: இறுதியாக, ரோமானிய ஆளுநரின் நம்பிக்கைக்குரியவனாக ரோம் செல்கிறான். அந்தப் பட்டணத்தில் நடந்த பெரும் தீ விபத்திற்குக் காரணமான கிறிஸ்தவர்களுடன் பாரபாஸும் கைது செய்யப்படுகிறான். கிறிஸ்து உலகை மறுசீரமைக்க வருகிறார் என்று தவறாக எண்ணி, அவனும் தீ வைப்பதில் இணைகிறான். இறுதியில் கிறிஸ்தவர்களோடு சேர்த்து அவனும் சிலுவையில் அறையப்படுகிறான்.

"சீசர்தான் தீயிட்டுவிட்டு, கிறிஸ்தவர்கள் மீது அநியாயமாகக் குற்றம் சாட்டினார்; கிறிஸ்துவுக்கு அல்ல, சீசருக்குத்தான் நான் உதவினேன்" என்கிறான் பாரபாஸ். 

"எங்கள் குருநாதர் ஆத்துமாவுக்குப் புனிதத் தீ இடுவாரே தவிர, நகரங்களுக்குத் தீ இடமாத்தார்" என்ற ஆன்மீகச் சிந்தனையை விட்டுச் செல்கிறது

இந்த நாவல் கடவுளின் கிருபை, கடவுள் மேலுள்ள நம்பிக்கையின் தெளிவற்ற நிலை மற்றும் தியாகம் போன்ற கருப்பொருள்களைக் கையாள்கிறது. இது ஒரு "தலைகீழ் நற்செய்தி" (upside-down gospel) போன்றது. மீட்பிற்குப் பதிலாக மறுப்பையும், தெளிவிற்குப் பதிலாகக் குழப்பத்தையும் பாரபாஸ் அனுபவிக்கிறான்.

ஆரம்பகாலக் கிறிஸ்தவர்கள் பொதுவான நம்பிக்கை காரணமாகக் குழுக்களாகச் சேர்ந்தே காணப்பட்டனர். தங்களைச் சாராதவர்கள் யாரையும் அருகில் விட அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் சகோதரத்துவம் பாராட்டி, அன்பு விருந்துகள் நடத்தி, ஒரே குடும்பம் போல வாழ்ந்தனர். "ஒருவரை ஒருவர் நேசியுங்கள்" என்று போதிக்கும் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தங்களைச் சாராதவர்களை அவர்கள் நேசித்தார்களா என்று சொல்வது மிகவும் சிரமமான காரியம் என்கிறான் பாரபாஸ்.

நவீனப் பொருத்தம்: வாழ்க்கையின் இருத்தலியல் (Existentialism) சார்ந்த அபத்தங்களுக்கும், சீரற்ற நிலைக்கும் இடையே ஒரு நோக்கத்தைக் கண்டறிய பாரபாஸ் போராடுகிறான்.

  • சிலுவையிலிருந்து தப்பித்தாலும், தான் உயிர் பிழைத்ததற்காக அவன் அடையும் குற்ற உணர்வு (survivor's guilt) மற்றும் அதிர்ச்சி அவனைச் சிதைக்கிறது.

  • ஒரு அடக்குமுறை கொண்ட அரசியல் அமைப்பு, மனிதர்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் எப்படிச் சிதைக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. உதாரணமாக, ஒருவன் நான்கு படி மாவைத் திருடித் தின்றான் என்பதற்காக, அவனது ஒரு கண்ணைத் தோண்டி எடுத்துவிட்ட கொடூரத்தைச் சான்றாகக் கூறலாம்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நாவலாக இருந்தாலும், இது இன்றும் நவீனமாகச் சிந்திக்க வைக்கிறது. தனிமை, வன்முறை, அரசியல் ஒடுக்குமுறை மற்றும் அடையாளத் தேடல் போன்ற இன்றைய சிக்கல்களையும் இது பேசுகிறது.

சஹாக்கைச் சித்திரவதை செய்ய ஆளுநர் உத்தரவிடவில்லை எனினும், அதிகாரிகள் வழக்கமாகச் செய்வது போலவே சித்திரவதை செய்துதான் அவனைச் சிலுவையில் ஏற்றினார்கள். இறுதியில், பாரபாஸ் தனியாகச் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தான். இன்னமும் அவனுக்கு உயிர் இருந்தது. வாழ்நாள் முழுவதும் தான் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும், அவன் தன்னைச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து, அதனிடம் பேசுவது போலச் சொன்னான்: "உன்னிடமே என் ஆத்துமாவை ஒப்படைக்கிறேன்." யாருடைய மரணத்தால் அவனுக்கு விடுதலை கிடைத்ததோ, அதே மரணத்தை அவனும் தழுவுகிறான்.

விமர்சனம்: க.நா. சுப்ரமணியம் அவர்களின் மொழிபெயர்ப்பில், அகஸ்த்துமத்தாக, ருசுக்கள், ருசுவித்து, துரியம் போன்ற வழக்கொழிந்த சொற்கள் மலிந்து கிடக்கின்றன; இது வாசிப்புக்குத் தடையாக உள்ளது. பல இடங்களில் வார்த்தை அமைப்பு தமிழ் இலக்கிய நடையில் இல்லை என்பதும் ஒரு குறைதான். மற்றபடி, சிந்திக்க வைக்கும் சுவாரசியமான வாசிப்பை இது தருகிறது. மதம், சமூகம் ஆகியவற்றில் மனிதனின் இடம் என்ன என்பதை மதங்களை விமர்சிப்பவர்கள் இன்றும் இந்நூல் வாயிலாகப் புரிந்துகொள்ளலாம். சந்தியா பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பியக் கிறிஸ்தவர்களால் சுதந்திரமாகத் தங்கள் மதத்தை, நம்பிக்கையை, கடவுளைப் பகுத்தாய்வு செய்து எழுத முடிகிறது. ஆனால், அரைகுறை இந்தியத் தமிழகக் கிறிஸ்தவர்கள் சிந்தனையே அற்ற மதவாதிகளாகவும், மத அடிமைகளாகவும் மாறி வருவதைச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் தமிழகக் கிறிஸ்தவ மதகுருக்கள், "அவர் நம்மோடு இருப்பது போல, நாம் அவரோடு..." போன்ற அடுக்குமொழிகள் ஊடாகத் தங்களை ரோமானிய ஆளுநர்களாகவே தற்போதும் நிரூபித்து வருகின்றனர்.

'எம்டி ஸ்பேஸ்-(Empty Space)

தீதி தாமோதரன் மற்றும் எச்முக் குட்டி ஆகியோர் இணைந்து எழுதி, 2026-ல் வெளியான புத்தகம் 'எம்டி ஸ்பேஸ்: பாஷ்பீகிருதயுடெ ஆறாம் விரல்' (Empty Space: Bashpeekruthayude Aaram Viral). புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் முதல் மனைவியான பிரமிளா நாயரை மையமாகக் கொண்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது


இரண்டாவது மனைவியின் மகள் இப்புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் தடை செய்யக்கூடிய அளவில் புத்தகத்தில் ஒன்றுமில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்து, திருமணமான ஒரு ஆணின் வாழ்க்கையில் மற்றொரு பெண் நுழைந்ததால், முதல் மனைவியும் மகளும் எவ்விதம் துன்பத்திற்கு உள்ளானார்கள் என்று நேர்மையாக எழுதும்போது, அது மறைமுகமாக  மனுதாரரின் தாயின் பிம்பத்தை பாதிக்கக்கூடும் என்பதே காரணமாக இருக்கலாம்.

மகளின் மனநலம் கருதி ஊரை விட்டு வெளியேறும் சூழலுக்கு முதல் மனைவி தள்ளப்படுகிறார். அவர்கள் ஆசையாகக் கட்டிய வீட்டில், மற்றொரு மனைவி மற்றும் மகளுடன், சமூக அந்தஸ்து, இலக்கிய விருதுகள், அரசு மரியாதையுடன் கணவன் வாழ்கிறார். முதல் மனைவியும் மகளும் சமூகத்தில் தனித்து விடப்பட்டதை இப்புத்தகம் விவரிக்கிறது.

இது வெறும் ஒரு குடும்பக் கதை மட்டுமல்ல. பிரபலமான ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை எவ்விதம் ஒடுக்குகின்றனர், அவர்களுக்கு இருக்கும் இடைவிடாத குடி மற்றும் கெட்ட பழக்க வழக்கங்களை எவ்விதம் ஆண்மையின் அடையாளமாக காட்டுகின்றனர், ஆண் தன் சுய இன்பத்திற்காக புதிய உறவை உருவாக்கும்போது, ஏற்கனவே உடன் வாழ்ந்த பெண்ணின் ஆளுமையை ஒடுக்க எவ்விதம் செயல்படுகின்றனர் என்பதை இப்புத்தகத்தில் உதாரணங்களுடன் விவரித்துள்ளனர். கணவன் எவ்வித சமூக அழுத்தமும் இல்லாது சுதந்திரமாக வாழும்போது, கணவன் உயிருடன் இருக்கும்போதே, தனது மகளின் நல்வாழ்க்கையைக் கருதி பெண் தனித்து வாழும் சூழலுக்குத் தள்ளப்படும் நிலையையும் இது விவரிக்கிறது.


எம்.டி தனது கதைகளில் தார்மீகமான ஆண்மையுள்ள ஆண் கதாபாத்திரங்களைப் படைத்தாலும், நிஜ வாழ்க்கையில் தனது சொந்த மனைவியை ஒடுக்க அவர் கையாண்ட பல யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் மிகவும் தரம் தாழ்ந்தவையாக உள்ளன.

தனது சொந்த மகளின் கல்லூரிப் படிப்புக்கு உதவாமலும், சுயசரிதை எழுதாமல் மற்றொரு நபரை வைத்து வாழ்க்கை வரலாற்றை எழுதச் செய்தும்; முதல் மனைவிக்கு வீடு, ஜீவனாம்சம் கொடுத்தேன், மனைவியின் மரணச் சடங்கில் பங்கு பெற்றேன் என்ற பொய்களை எழுதி நிறுவியுள்ளார்.


கேன்சர் நோயால் இறக்கும் தருவாயில் எம்.டியைக் காண வேண்டும் என விரும்பியும், மனைவியைச் சந்திக்காத எம்.டி, மரணத்தின் கடைசிச் சடங்குகளைச் செய்யாத எம்.டி, ஆண்களின் மிக மோசமான பக்கத்தின் உச்ச நிலையில் உள்ளார். 

ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த எம்.டி, எம்.ஜி.ஆர் குடும்பத்தில் பிறந்த, வசதி வாய்ப்பும் நல்ல கல்வியும் பெற்று வேலையில் இருந்த ஒரு பெண்ணை, பெற்றோரின் அனுமதியின்றி தன் விருப்பத்திற்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்த நிலையில், தனது இலக்கிய வாழ்க்கையின் முதல் பகுதியில், தனது புத்தகங்களை ஆங்கில மொழியாக்கம் செய்ய வைத்து உலக இலக்கியத்தில் நுழையப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் இலக்கியவாதியாகவும், சினிமா கதை ஆசிரியராகவும், ஊடகச் செயல்பாட்டாளராகவும் ஆன பின்பு முதல் மனைவியை முற்றும் புறக்கணித்த பக்கங்கள் வருத்தத்தைத் தருகின்றன.


பெண்ணிய எழுத்தாளராக இருந்த பிரமிளா நாயரின் வார இதழ்களில் வந்த நாவலை நிறுத்தியதுடன், பிரமிளா எழுத்துலகத்திற்கு வரவே கூடாது என்பதில் அவரின் ஆண் இலக்கிய நண்பர்களும் நிறையவே உதவியுள்ளனர். பெண் எழுத்தாளர்களான மாதவிக்குட்டி போன்றவர்கள் கூட எம்.டியின் பகையைக் கருதி பிரமிளா பெயரை உச்சரிக்காமல் விட்டுவிட்டனர்.

அப்படி வாழ்க்கையிலும் இலக்கிய உலகிலும் தண்ணீரைச் சூடு செய்து ஆவியாக்குவது போல அவர்களை 'பாஷ்பிகரித்து' விட்டனர்.


பிரமிளா பிற்பாடு ஒரு பள்ளி ஆசிரியையாக வாழ்ந்து முடித்துள்ளார். அவருடைய செலவில் இரு நாவல்கள் வெளியிட்டுள்ளார். அவையும் நூலகங்களில் இல்லாத வண்ணம் எம்.டியின் தலையீடு இருந்துள்ளது. ஆனால் எம்.டி சினிமாவில் படைக்கும் பெண் கதாபாத்திரங்களில் பிரமிளா நாயரை முன்னிறுத்தி, அவர் மேல் சேற்றை வாரி இறைத்துள்ளார்.

மிகவும் ஏழைப் குடும்பத்தில் இருந்து வந்த, எம்.டி மகளுக்கு நடனம் கற்பிக்க வந்த சரஸ்வதி, பிற்பாடு எம்.டிக்கு மனைவி என்ற அங்கீகாரம் பெற்று, கேரளா கலாமண்டலம் நடனப்பள்ளியில் முதல்வராகவும் தனது வாழ்க்கையை ஒரு மகளுடன் நிறைவாக முடித்துக் கொண்டார். ஆனால், எம்.டிக்கு அடையாளமும் பணமும் புகழும் அற்ற காலத்தில், எம்.டியை நம்பி வந்த நிலையில், ஒரு இளம் பெண் கிடைத்ததும் 45 வயதை நெருங்கிய பிரமிளாவின் வாழ்க்கையை வெறுமையிலும், துயரிலும், அவமானத்திலும், சூனியத்திற்குள்ளும் தள்ளிய சம்பவங்களைச் சொல்கிறது இப்புத்தகம்.


பிரமிளா பிற்பாடு தன் குடும்பத்தை சார்ந்து நின்று மகளை வளர்த்து, பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்தார்.  மகள் ஒரு இலக்கியவாதியின் மனைவியாக கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார். அதே போன்று மகள் அமெரிக்காவில் பெரும் வணிக நிறுவனத்தில்  அதிகாரியாகப் பணியாற்றினார்.  பிரமிளா, கேன்சரால் கேரளா திரும்பியபோது சகோதரர்களும் தாயும் பக்கபலமாக இருந்துள்ளனர்.

இருப்பினும், காதலில் உருகி நேசித்தவன் தனக்கு இழைத்த துரோகத்தை மறக்க இயலாமல் வாழ்க்கை முழுவதும் போராடிய பிரமிளா, மரணத்தின் கடைசி நாட்களில் ஒரு முறை கண்டுவிட்டாவது மரிக்க வேண்டும் என விரும்பிய ஆசையைக் கூட நிறைவேற்றாத எம்.டி, ஒரு சாதாரண ஆணை விடக் கீழ்மட்டத்தில் இருந்துள்ளார்.

சினிமாவில் வரலாற்றுப் பாத்திரமான உண்ணியாச்சையைத் தவறாகவும், பாஞ்சாலியை விகாரமாகவும், குந்தி தேவியைக் கேலியாகவும் சித்தரித்து இலக்கியம் படைத்து பிரமிளா மேலிருந்த வன்மத்தைத் தீர்த்துக் கொண்டார். அதே மாதிரி சினிமாவிலும் மம்மூட்டி போன்ற அழகான ஆண் கதாபாத்திரங்களை வைத்து, அறிவான அழகான பெண்களை அன்பிற்காகப் பிச்சை எடுப்பவர்களாக மாற்றினார். கணவன் நண்பர்களுடன் குடித்துக் கூத்தாடி வந்தாலும் கைநீட்டி அன்பு செலுத்தும் பெண்களைக் கதாபாத்திரமாகப் படைத்து தன் மேட்டிமையை நிலைநாட்டிக் கொண்டார். நடிகை சீமா போன்ற தைரியமான பெண்மைக்கு அடையாளமான பெண் கதாபாத்திரங்களைக் கூட மம்மூட்டிக்கு வைப்பாட்டியாக வைத்து, மம்மூட்டி கதாபாத்திரத்திற்குப் பணிவிடை செய்ய வைத்திருப்பார். இவை பற்றியும் சில குறிப்புகள் இப்புத்தகத்தில் உண்டு

வாசிப்பவர்களுக்குச் சலிப்பைத் தராது விறுவிறுப்பாக நகர்த்திய புத்தகம். எடிட்டிங்கில் (பிழைத் திருத்தம்) இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சொன்ன விஷயங்களே மறுபடியும் வராமல் தடுத்திருக்கலாம்.

மற்றபடி, இரண்டாம் மனைவியின் மகளுக்குத் தன் தந்தையின் முதல் மனைவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய புத்தகத்தைத் தடை செய்யச் சொல்ல என்ன உரிமை இருக்க இயலும்?

பிரமிளா நாயர் உயிரோடு இருக்கும்போதே இப்புத்தகம் வெளிவந்திருக்க வேண்டும். அல்லது எம்.டி இருக்கும்போதாவது புத்தகம் வெளியிட்டிருக்கலாம். எம்.டியைப் பற்றி வெளிவந்த வரலாற்றுப் புத்தகம் தான் இப்புத்தகம் வெளிவரக் காரணமாக அமைந்தது. அதிலுள்ள பிழைகளை இதில் சுட்டிக் காட்டியுள்ளனர்.


ஆனாலும் எம்.டி என்ற இலக்கியவாதிக்குப் பதில் சொல்ல வாய்ப்புக் கொடுக்காது இப்புத்தகம் தாமதமாக வெளிவந்தது பெரும் குறைதான். எம்.டி எப்போதும் தன் மேல் வரும் விமர்சனங்களுக்குத் தனது ஆழ்ந்த தீர்க்கமான மௌனம் மூலமாகப் பதில் கொடுத்து வந்துள்ளார். வார்த்தைப் பதிலை விடச் செயலில் மும்முரமாக இருக்கக் கூடியவர். ஒருவேளை அவர் இருந்திருந்தால் இப்புத்தகத்தை வெளியிட அனுமதிக்கமாட்டார் என்ற பயமும் இருந்திருப்பதை அவதானிக்கலாம்.


ദീദി ദാമോദരനും എച്ച്‌മു കുട്ടിയും ചേർന്ന് എഴുതി 2026-ൽ പുറത്തിറങ്ങിയ പുസ്തകമാണ് 'എംപ്റ്റി സ്പേസ്: ബാഷ്പീകരിക്കപ്പെട്ടവരുടെ ആറാം വിരൽ'. പ്രശസ്ത സാഹിത്യകാരൻ എം.ടി. വാസുദേവൻ നായരുടെ ആദ്യ ഭാര്യയായിരുന്ന പ്രമീള നായരെ കേന്ദ്രീകരിച്ചുള്ള സംഭവങ്ങളെ ആസ്പദമാക്കിയാണ് ഈ പുസ്തകം രചിച്ചിരിക്കുന്നത്.

രണ്ടാം ഭാര്യയുടെ മകൾ ഈ പുസ്തകം നിരോധിക്കണമെന്ന് ആവശ്യപ്പെട്ടിട്ടുണ്ട്. എന്നാൽ നിരോധിക്കാൻ മാത്രം ഒന്നുമില്ല. ഒരു സ്ത്രീയുടെ ജീവിതം തകർത്ത് മറ്റൊരു സ്ത്രീ വിവാഹിതനായ പുരുഷന്റെ ജീവിതത്തിലേക്ക് കടന്നുവന്നപ്പോൾ ആദ്യഭാര്യയും മകളും അനുഭവിച്ച വേദനകൾ സത്യസന്ധമായി എഴുതുമ്പോൾ, അത് പരാതിക്കാരിയുടെ അമ്മയുടെ പ്രതിച്ഛായയെ ബാധിച്ചേക്കാം എന്നതാവാം കാരണം.

മകളുടെ മാനസികാരോഗ്യം കണക്കിലെടുത്ത് നാടുവിടേണ്ട സാഹചര്യത്തിലേക്ക് ആദ്യഭാര്യ തള്ളപ്പെടുന്നു. അവർ ആഗ്രഹിച്ചു പണിത വീട്ടിൽ മറ്റൊരു ഭാര്യയ്ക്കും മകൾക്കുമൊപ്പം, സാമൂഹിക പദവിയും സാഹിത്യ പുരസ്കാരങ്ങളും സർക്കാർ ബഹുമതികളുമായി ഭർത്താവ് ജീവിക്കുന്നു. ആദ്യഭാര്യയും മകളും സമൂഹത്തിൽ ഒറ്റപ്പെട്ടുപോയതിനെക്കുറിച്ചാണ് പുസ്തകം പറയുന്നത്.

ഇതൊരു കുടുംബകഥ മാത്രമല്ല. പ്രശസ്തരായ പുരുഷന്മാർ തങ്ങളുടെ വീട്ടിലെ സ്ത്രീകളെ എങ്ങനെ അടിച്ചമർത്തുന്നു, അവരുടെ മദ്യപാനത്തെയും ദുശ്ശീലങ്ങളെയും എങ്ങനെ പൗരുഷത്തിന്റെ ലക്ഷണങ്ങളായി ചിത്രീകരിക്കുന്നു, സ്വന്തം സുഖത്തിനായി പുതിയ ബന്ധങ്ങൾ ഉണ്ടാക്കുമ്പോൾ കൂടെയുള്ള സ്ത്രീയുടെ വ്യക്തിത്വത്തെ എങ്ങനെ ഇല്ലാതാക്കുന്നു എന്ന് ഉദാഹരണസഹിതം പുസ്തകത്തിൽ വിവരിക്കുന്നു. ഭർത്താവ് യാതൊരു സാമൂഹിക സമ്മർദ്ദവുമില്ലാതെ സ്വതന്ത്രമായി ജീവിക്കുമ്പോൾ, ഭർത്താവ് ജീവിച്ചിരിക്കെത്തന്നെ, മകളുടെ നല്ല ഭാവി കരുതി സ്ത്രീക്ക് ഏകയായി ജീവിക്കേണ്ടി വരുന്ന സാഹചര്യവും ഇതിൽ വിവരിക്കുന്നുണ്ട്.

എം.ടി തന്റെ കഥകളിൽ ധാർമ്മികബോധമുള്ള പുരുഷ കഥാപാത്രങ്ങളെ സൃഷ്ടിച്ചെങ്കിലും, യഥാർത്ഥ ജീവിതത്തിൽ സ്വന്തം ഭാര്യയെ ഒതുക്കാൻ അദ്ദേഹം സ്വീകരിച്ച പല തന്ത്രങ്ങളും നടപടികളും വളരെ തരംതാണതായിരുന്നു.

സ്വന്തം മകളുടെ കോളേജ് പഠനത്തിന് സഹായിക്കാതിരിക്കുക, ആത്മകഥ എഴുതാതെ മറ്റൊരാളെക്കൊണ്ട് ജീവചരിത്രം എഴുതിച്ച് - ആദ്യഭാര്യയ്ക്ക് വീടും ജീവനാംശവും നൽകി, മരണാനന്തര ചടങ്ങുകളിൽ പങ്കെടുത്തു എന്നൊക്കെയുള്ള നുണകൾ സ്ഥാപിച്ചെടുക്കുകയാണ് ചെയ്തത്.

ക്യാൻസർ ബാധിച്ച് മരണക്കിടക്കയിൽ എം.ടിയെ കാണാൻ ആഗ്രഹിച്ചിട്ടും ഭാര്യയെ കാണാൻ കൂട്ടാക്കാത്ത, മരണാനന്തര ചടങ്ങുകൾ പോലും ചെയ്യാത്ത എം.ടി, പുരുഷന്മാരുടെ ക്രൂരമായ മുഖത്തിന്റെ ഉദാഹരണമാണ്. ഒരു സാധാരണ കുടുംബത്തിൽ നിന്നു വന്ന എം.ടി, എം.ജി.ആറിന്റെ കുടുംബത്തിൽ ജനിച്ച, നല്ല വിദ്യാഭ്യാസവും ജോലിയുമുള്ള ഒരു പെൺകുട്ടിയെ മാതാപിതാക്കളുടെ സമ്മതമില്ലാതെ വിളിച്ചിറക്കി കൊണ്ടുവന്നു. സാഹിത്യജീവിതത്തിന്റെ ആദ്യഘട്ടത്തിൽ തന്റെ പുസ്തകങ്ങൾ ഇംഗ്ലീഷിലേക്ക് വിവർത്തനം ചെയ്യിച്ച് ലോകസാഹിത്യത്തിൽ ഇടംനേടാൻ എം.ടി ഇവരെ ഉപയോഗിച്ചു. എന്നാൽ പിൽക്കാലത്ത് സാഹിത്യകാരനും സിനിമാ തിരക്കഥാകൃത്തും മാധ്യമപ്രവർത്തകനുമായി മാറിയപ്പോൾ ആദ്യഭാര്യയെ പൂർണ്ണമായും അവഗണിച്ചത് വേദനാജനകമാണ്.

സ്ത്രീപക്ഷ എഴുത്തുകാരിയായിരുന്ന പ്രമീള നായരുടെ വാരികയിൽ വന്നിരുന്ന നോവൽ നിർത്തിവയ്പ്പിച്ചു. പ്രമീള എഴുത്തുലോകത്തേക്ക് വരരുത് എന്ന കാര്യത്തിൽ അദ്ദേഹത്തിന്റെ ആൺ സാഹിത്യ സുഹൃത്തുക്കളും സഹായിച്ചു. മാധവിക്കുട്ടിയെപ്പോലുള്ള പെൺ എഴുത്തുകാർ പോലും എം.ടിയുടെ പക ഭയന്ന് പ്രമീളയുടെ പേര് പരാമർശിക്കാൻ മടിച്ചു.

അങ്ങനെ ജീവിതത്തിലും സാഹിത്യലോകത്തിലും വെള്ളം തിളപ്പിച്ച് ഇല്ലാതാക്കുന്നതുപോലെ അവരെ 'ബാഷ്പീകരിച്ചു' കളഞ്ഞു.

പ്രമീള പിന്നീട് ഒരു സ്കൂൾ അധ്യാപികയായി ജീവിച്ചു. സ്വന്തം ചെലവിൽ രണ്ട് നോവലുകൾ പ്രസിദ്ധീകരിച്ചു. അവ ലൈബ്രറികളിൽ പോലും എത്താതിരിക്കാൻ എം.ടി ശ്രദ്ധിച്ചു. എന്നാൽ എം.ടി സിനിമയിൽ സൃഷ്ടിച്ച പല സ്ത്രീ കഥാപാത്രങ്ങളിലും പ്രമീള നായരെ മുൻനിർത്തി, അവരുടെ മേൽ ചെളിവാരിയെറിയുകയായിരുന്നു.

വളരെ സാധാരണ കുടുംബത്തിൽ നിന്ന്, എം.ടിയുടെ മകൾക്ക് നൃത്തം പഠിപ്പിക്കാൻ വന്ന സരസ്വതി പിന്നീട് എം.ടിയുടെ ഭാര്യയായി, കേരള കലാമണ്ഡലം പ്രിൻസിപ്പലായി, ഒരു മകളോടൊപ്പം സംതൃപ്തമായ ജീവിതം നയിച്ചു. എന്നാൽ എം.ടിക്ക് പണവും പ്രശസ്തിയും ഇല്ലാതിരുന്ന കാലത്ത് അദ്ദേഹത്തെ വിശ്വസിച്ചു കൂടെ വന്ന പ്രമീളയെ, 45-ാം വയസ്സിൽ ഒരു യുവതിയെ കിട്ടിയപ്പോൾ എം.ടി ശൂന്യതയിലേക്കും അപമാനത്തിലേക്കും തള്ളിയിട്ടു.

പിന്നീട് പ്രമീള സ്വന്തം കുടുംബത്തെ ആശ്രയിച്ച് മകളെ വളർത്തി. മകൾ ഒരു സാഹിത്യകാരന്റെ ഭാര്യയാകരുത് എന്നതിൽ അവർക്ക് നിർബന്ധമുണ്ടായിരുന്നു. മകൾ അമേരിക്കയിലെ ഒരു വലിയ കമ്പനിയിൽ ഉദ്യോഗസ്ഥയായി. പ്രമീള ക്യാൻസർ ബാധിച്ച് കേരളത്തിൽ തിരിച്ചെത്തിയപ്പോൾ സഹോദരങ്ങളും അമ്മയും തുണയായി നിന്നു.

എങ്കിലും, താൻ ഉരുകി സ്നേഹിച്ച പുരുഷൻ ചെയ്ത ചതി മറക്കാനാവാതെ ജീവിതകാലം മുഴുവൻ പ്രമീള നീറിപ്പുകഞ്ഞു. മരണത്തിന് മുൻപ് ഒരു തവണയെങ്കിലും കാണണമെന്ന ആഗ്രഹം പോലും സാധിച്ചുകൊടുക്കാത്ത എം.ടി സാധാരണ പുരുഷന്മാരേക്കാൾ താഴെയാണ്.

സിനിമയിൽ ചരിത്ര കഥാപാത്രമായ ഉണ്ണിയാർച്ചയെ മോശക്കാരിയായും, പാഞ്ചാലിയെ വികൃതമായും, കുന്തിയെ പരിഹാസ്യമായും ചിത്രീകരിച്ച് പ്രമീളയോടുള്ള പക എം.ടി തീർത്തു. അതുപോലെ സിനിമയിൽ മമ്മൂട്ടിയെപ്പോലുള്ളവരുടെ കഥാപാത്രങ്ങൾക്കുവേണ്ടി, അറിവും സൗന്ദര്യവുമുള്ള സ്ത്രീകളെ സ്നേഹത്തിനായി യാചിക്കുന്നവരായി മാറ്റി. ഭർത്താവ് കൂട്ടുകാരോടൊപ്പം മദ്യപിച്ച് കൂത്താടി വന്നാലും കൈനീട്ടി സ്വീകരിക്കുന്ന സ്ത്രീകളെ സൃഷ്ടിച്ച് അദ്ദേഹം തന്റെ ആണ്മാപ്പ് നിലനിർത്തി. നടി സീമയെപ്പോലുള്ള ധീരരായ സ്ത്രീ കഥാപാത്രങ്ങളെപ്പോലും മമ്മൂട്ടി കഥാപാത്രത്തിന് സേവ ചെയ്യുന്നവളായി (അവിഹിത ബന്ധത്തിൽ) അദ്ദേഹം അവതരിപ്പിച്ചു. ഇവയെക്കുറിച്ചുള്ള പരാമർശങ്ങളും ഈ പുസ്തകത്തിലുണ്ട്.

വായനക്കാർക്ക് മടുപ്പുളവാക്കാതെ ആവേശത്തോടെ വായിക്കാവുന്ന പുസ്തകമാണിത്. എഡിറ്റിംഗിൽ കുറച്ചുകൂടി ശ്രദ്ധിച്ചിരുന്നെങ്കിൽ ആവർത്തനങ്ങൾ ഒഴിവാക്കാമായിരുന്നു.

അതല്ലാതെ, തന്റെ പിതാവിന്റെ ആദ്യഭാര്യയുടെ ജീവിതകഥ പറയുന്ന പുസ്തകം നിരോധിക്കാൻ രണ്ടാം ഭാര്യയുടെ മകൾക്ക് എന്ത് അവകാശമാണുള്ളത്?

പ്രമീള നായർ ജീവിച്ചിരിക്കുമ്പോൾ തന്നെ ഈ പുസ്തകം പുറത്തുവരേണ്ടതായിരുന്നു. അല്ലെങ്കിൽ എം.ടി ഉള്ളപ്പോഴെങ്കിലും. എം.ടിയുടെ മരണശേഷം അദ്ദേഹത്തെക്കുറിച്ച് വന്ന ചരിത്രപുസ്തകമാണ് (ജീവചരിത്രം) ഈ പുസ്തകമെഴുതാൻ പ്രേരണയായത്. അതിലെ പിശകുകൾ ഇതിൽ ചൂണ്ടിക്കാണിക്കുന്നുണ്ട്.

എങ്കിലും എം.ടി എന്ന സാഹിത്യകാരന് മറുപടി പറയാൻ അവസരം നൽകാതെ ഈ പുസ്തകം വൈകി വന്നത് വലിയൊരു കുറവാണ്. വിമർശനങ്ങൾക്ക് മൗനം കൊണ്ടാണ് എം.ടി മറുപടി നൽകിയിരുന്നത്. വാക്കുകളേക്കാൾ പ്രവർത്തിയിലായിരുന്നു അദ്ദേഹത്തിന് വിശ്വാസം. ഒരുപക്ഷേ അദ്ദേഹം ജീവിച്ചിരുന്നെങ്കിൽ ഈ പുസ്തകം വെളിച്ചം കാണാൻ അനുവദിക്കില്ലെന്ന ഭയം ഉണ്ടായിരുന്നിരിക്കാം




18 Jan 2026

எக்கோ ஒரு மர்ம த்ரில்லர் மலையாள திரைப்படம்.

 


எக்கோ ஒரு மர்ம த்ரில்லர் மலையாள திரைப்படமாகும்.

இப்படத்தை தின்ஜித் அய்யத்தன் இயக்கியுள்ளார், பாகுல் ரமேஷ் திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.ஆர்.கே. ஜெயராம் 'ஆராத்யா (Aaradyaa Studios) ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாகும். இப்படத்தில் சந்தீப் பிரதீப், வினீத், நரேன், பினு பப்பு மற்றும் பியானா மோமின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2025 ஏப்ரலில் தொடங்கி, ஜூன் நடுப்பகுதியில் நிறைவடைந்தது. படப்பிடிப்பு பெரும்பாலும் கேரளாவின் மூடுபனி சூழ்ந்த இடுக்கி மாவட்டம் பீர்மேடு மற்றும் வாகமண் பகுதி உட்படும் இயற்கை சூழ்ந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நாய்கள், குறிப்பாக இந்தியாவின் சொந்த இனமான தமிழ்நாட்டை சேர்ந்த கோம்பை (Kombai) நாய்கள் , கதையை நகர்த்தும் முக்கியமான பாத்திரங்களாகவே இடம்பெற்றுள்ளன.
திரைப்படம் நம்ப முடியாத கதை சொல்லல் (unreliable narrative), நேர்மறையற்ற (non-linear) கதை அமைப்பு, மற்றும் ஒலி–சுற்றுச்சூழல் மீது கொண்ட கவனம் ஆகியவற்றை பயன்படுத்தி, பார்வையாளர்களை ஆழமாக இழுத்துச் செல்லும் அனுபவத்தை உருவாக்கி உள்ளது.
இந்த திரைப்படம், சுற்றுச்சூழல், த்ரில்லர் பின்னணியில், நாய்களின் யஜமானோடுள்ள விசுவாசம், புத்திசாலித்தனம், தங்களது பகுதியை பாதுகாக்கும் இயல்பு ஆகியவற்றை கதைப்பின்னலாக கொண்டு கதையை நடத்தும் விதம் விருவிருப்பானது.
காணாமல் ஆன குரியச்சனை தேடும் பயணம், மனிதன்–விலங்கு உறவு , சிக்கலான கடந்த காலத் துரோகம், மற்றும் பரஸ்பர இணைப்புகள் ஆகியவற்றை மெதுவாக காட்சியூடாக வெளிப்படுத்துகிறது
நாய்களை பாதுகாப்பிற்காகவும் அதே நேரத்தில் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம் என்ற படத்தின் மையக் கருத்தையும் உட்படுத்தி உள்ளனர்
எளிமையான ஒரு கதை தான். . . காணாமல் போன நாய் வளர்ப்பாளர் குரியனின் மலேஷியா மனைவி ம்லாத்தி, தனது பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தி, குரியச்சனை மலைப்பகுதிகளில் எங்கோ சிறைபிடித்து வைத்திருக்கிறாள் என்ற கதை முடிவை, பார்வையாளர்களுக்கு எல்லாவற்றையும் நேரடியாக சொல்லாமல் சிந்திக்க வைக்கும் விதமாக பார்வையாளர்களிடமே கொடுத்துள்ளனர்.
நாய் பயிற்சியாளர் ஜிஜேஷ் எஸ் (Jijesh S) ஒன்பது கோம்பை நாய்களையும் ஒரு ஹஸ்கி நாயையும் பயிற்சி அளித்து, திரைப்படப் படப்பிடிப்பு தளத்தின் அறிமுகமற்ற சூழலில் நாய்களை நடிக்க தயார்படுத்தியுள்ளார். , அவற்றின் நடிப்பு திரைப்படத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Eko (2025) என்ற திரைப்படத்தின் தலைப்பு “Eko” என்பது “எதிரொலி (echo)” அல்லது “முதல் குழந்தை” என்ற அர்த்தங்களை கொண்டது. மனிதர்களின் செயல்களின் எதிரொலி, அடிப்படை உறவுப் பிணைப்புகள் போன்ற கருப்பொருள்களை இது பிரதிபலிக்கிறது.
இதில் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களும் சேர்ந்து, மறைந்த கடந்தகாலத்தின் நீட்சியான உண்மைகளை மெதுவாக ஒன்றிணைக்க முயல்கிறார்கள்.


எக்கோபெமினிசம் (Ecofeminism) என்பது பெண்களின் ஒடுக்குமுறையும் இயற்கையின் ஆதிக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று வாதிடும் ஒரு கோட்பாடும் இயக்கமும் ஆகும்.
ஆணாதிக்க அமைப்புகள் பெண்களையும் இயற்கையையும் கட்டுப்படுத்த வேண்டிய வளங்களாக பார்க்கின்றன; கலாச்சார ரீதியாக உருவாக்கப்பட்ட வனவிலங்குகளின் ஒடுக்குமுறையும் பெண்களின் ஒடுக்குமுறையும் இடையிலான ஒப்பீடுகளின் அரசியல் விளைவுகளை ஆராய்கின்றன. பெண்களையும் இயற்கையையும் சொத்தாகக் காண்பது, கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாக ஆண்களையும், இயற்கையின் பாதுகாவலர்களாக பெண்களையும் கருதுவது, பெண்களை ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவது போல மனிதர்கள் இயற்கையை ஆதிக்கம் செலுத்துவது ஆகியவை அடங்கும்.
ஈகோபெமினிசம், பெண்களுக்கும் இயற்கைக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இதுவும் இத்திரைப்படத்தில் காணலாம். ஒரு பெண்ணின் கணவனை சட்டசிக்கலில் சிக்க வைத்து , அவளை காப்பாற்றுவது போல சிறைப்படுத்தி வைத்து அவளுக்கு அன்பு பாராட்டி வந்தாலும் அதன் முடிவு அவளின் கட்டுபாட்டில் அந்த மனிதனின் வாழ்க்கை சிறப்படுகிறது என்பதாக முடித்துள்ளது தனித்துவமாகுகிறது .
கதாநாயக பிம்பம் தேவையற்ற பாடல் ஆடல் இல்லாமல், கவர்ச்சி பெண்கள் என்ற மாயாசாலம் எதுவும் இல்லாது சுவாரசியமான கதை , சிறப்பான திரைக்கதை ஊடாக சிறப்பான ஒரு திரைப்படம் தரலாம் என நிரூபித்து உள்ளனர்.
இப்படம் 2025 நவம்பர் 21 வெளியானது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் என இருதரப்பிலிருந்தும் பெரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
₹5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் ₹50 கோடிக்கும் மேல் வசூல் செய்து வணிக ரீதியான பெரும் வெற்றியைப் பெற்றது.
பாகுல் ரமேஷின் 'விலங்கு முத்தொகுப்பின்' (Animal Trilogy) மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியாக 'எகோ' திரைப்படம் அமைகிறது. இந்தத் தொடரின் முந்தைய படங்கள்: கிஷ்கிந்தா காண்டம் (Kishkindha Kaandam - 2024) கேரளா க்ரைம் ஃபைல்ஸ் 2 (Kerala Crime Files 2 - 2025)
தமிழகத்தின் கோம்பை நாய்கள் என்று அறியப்படுவையின் பூர்வீகம் மலேஷியா என்று கட்டமைக்கும் போதும் தமிழக கோம்பை நாய் வரலாற்றை குறிப்பிடாமல் கதை முடிக்கப்பட்டது எதனால் என்ற கேள்வியும் மனதில் தங்குகிது,
#

எக்கோபெமினிசம்
Eco Faminism!
பெண்களும் இயற்கையும் ஒன்று. இயற்கைக்கு கொடுப்பது போன்ற மரியாதை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை எக்கோ பெமினிசம் வலியுறுத்துகிறது
இரு அன்னிய ஆண்களை வீட்டுக்கு அழைத்து வருகிறான் கணவன், தன் மனைவியை மகள் போல நேசிக்கிறேன் என்கிறான் வந்தவர்களிடம்.
ஏன் மனைவியை மனைவியாக நேசிக்க கூடாதா என்கிறான் வந்தவன்.
வந்தவன் இருவரும் இப்பெண்னை கடத்தி கொண்டு போக மோகம் வருகிறது. முதலில் நுட்பமாக உன் கணவனுக்கு உன்னை விட அவன் தொழில் மேல் தான் விருப்பம் என்று கூறி அவள் கணவன் மேல் வெறுப்பை உருவாக்குகின்றனர்.
அவளை போராடி காப்பாற்றுவது போல அவளுக்கு இயல்பாகவே அமைத்து வைத்து இருந்த பாதுகாப்பை உடைத்து அவன் பகுதிக்கு கொண்டு வந்து அவனுக்கு மட்டும் என்று சிறைப்படுத்துகிறான். அதை தெரிந்து கொள்ளும்போது அவள் வயோதிகத்தையும் அடைகிறாள். .
அவளை காப்பாற்றுவது போல சிறைப்படுத்தி வைத்து இரு மகன்களையும் கொடுத்து அங்கும் அவளை தனது தனித்த அன்பு அன்பு போல பாராட்டி வந்ததும் அவளைச் சிறப்படுத்தவே என்று அறிந்த போது அவள் கவலை கொள்கிறாள்.
முடிவு அவளின் கட்டுபாட்டில் அந்த மனிதனின் வாழ்க்கை முழுதும் சிறப்படுகிறது என்பதாக முடித்துள்ளது
மலையாளம் திரைப்படம் எடுக்க இளைஞர்கள் மேனக்கெடுகின்றனர் . சினிமா என்ற கலைத் தன்மையை சரியான வகையில் பயன்படுத்துகின்றனர். காட்சி ஊடகமான சினிமா காட்சிகள் ஊடவே பார்வையாளர்களில் சேர்க்கின்றனர். உரையாடல்கள் மிகவும் குறைவாக பயன்படுத்துகின்றனர்.
ஒரே பெண் கதாப்பாத்திரம் கதை அத்தனை விருவிருப்பாக நகத்தும் உத்தி தெரிந்து வைத்துள்ளனர்.
எக்கோ.பெமினிசக் கருத்தை மிகவும் நுட்பமாக கதையில் வைத்துள்ளனர்.தங்களது சுய லாபங்களுக்காக இயற்கையும் இயற்கை வழங்களையும் அழிப்பது போல பெண்களை அழிப்பதற்கும் தயங்குவது இல்லை.
இயற்கை தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வருவது போலவே பெண்களுக்கு அன்பு ஆதரவு விடுதலை கொடுப்பதாக தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க துணியும் ஆண்கள் இயற்கையின் சீற்றம் போன்றே அதே இயற்கையால் அழிகின்றனர்.
இந்த ஆண்கள் யார் என்றால் நாயர்களாக பாதுகாவலர்களாக அதிகாரிகளாக பாவலாகாட்டும் ஆண்களே.

அம்ம வீடுகள்!

 

திருவனந்தபுரத்தில் உள்ள அம்ம(அம்மா) வீடுகள்
திருவாங்கூர் மரபு மற்றும் நினைவுகளை தன்னகத்தே தாங்கி நிற்கும் இடங்களாக உருவெடுத்திருந்தன.
அம்ம வீடுகள் என்பது திருவாங்கூர் அரசர்களின் மனைவிகள் வசித்த இல்லங்கள் ஆகும்.
முக்கியமான நான்கு அம்ம வீடுகள்:
அருமன,
வடசேரி,
திருவட்டாறு மற்றும் நாகர்கோவில் அம்ம வீடு ஆகும்.
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நான்கு அம்ம வீடுகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. பின்பு இவை கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இடம்பெயர்க்கப்பட்டன.
கார்த்திக திருநாள் (1758–1798) மகாராஜா அருமன, வடசேரி, திருவட்டாறு மற்றும் நாகர்கோவில் குடும்பங்களில் இருந்து வெவ்வேறு காலங்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து இருந்தார். அவர்களுக்காக திருவனந்தபுரத்தில் அம்ம வீடுகளை கட்டினார்.
அம்ம வீடுகள் உருவானது, அரசர்களும் சமூகத்தில் செல்வாக்கு கொண்ட குழுக்களும் இடையே நல்லுறவை நிலைநாட்டும் அரசியல் தந்திரமாகவும், அரச அதிகாரமும் சொத்துகளும் அரச குடும்பத்திற்குள் தக்க வைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
திருவாங்கூர் அரசர்கள் மருமக்கத்தாய முறை (சகோதரி மகன் ஆளும் முறை) பின்பற்றியதால், அரச வாரிசு அரசரின் சகோதரியின் பிள்ளைகளுக்கே உரியது.
அரசர்கள் திருமணம் செய்த பெண்கள் பெரும்பாலும் செல்வாக்கு கொண்ட நாயர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்
முன்னர் முதலியார் மற்றும் சைவ வேளாளர் பிள்ளை சமூகங்களும் இருந்தன;
ஸ்ரீ மூலம் திருநாள் காலத்திற்குப் பிறகு அனைவரும் நாயர் சமூகத்திலிருந்து வந்தனர். இவர்கள் ராணிகளாக அல்ல, “அம்மச்சிகள்” என அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தனி இல்லம் உட்பட பல சிறப்புரிமைகள் வழங்கப்பட்டன.
சமூக ஆதிக்கம் கொண்ட குழுக்களின் ஆதரவைப் பெற அரச குடும்பம் மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகளே அம்ம வீடுகள் உருவாகவும் வளரவும் காரணமாகின.
திருவனந்தபுரத்தின் மேற்கு கோட்டை வளாகத்தைச் சுற்றி நான்கு முக்கியன அமைந்துள்ளன.
அவை:
அருமன அம்மா வீடு
நாகர்கோவில் அம்ம வீடு
வடசேரி அம்ம வீடு
திருவட்டாறு அம்ம வீடு
இவை அனைத்தும் கார்த்திகை திருநாள் இராம வர்மா ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை.
கார்த்திகை திருநாளின் முதல் மனைவி காளி அம்மா நாகமணி அம்மா நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.
இரண்டாம், மூன்றாம், நான்காம் மனைவிகள் முறையே வடசேரி, அருமன, திருவட்டாறு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு அம்ம வீடு தஞ்சாவூர் அம்ம வீடு (அல்லது வடசேரி படிஞ்ஞரே அம்மா வீடு) ஆகும். இதில் ஒரு பழைய எட்டுக்கட்டு மற்றும் ஒரு பெரிய இரு மாடிக் கட்டிடம் என இரண்டு கட்டிடங்கள் உள்ளன. தஞ்சாவூர் அம்ம வீடு தனித்துவம் கொண்டதாகத் தோன்றினாலும், அது வடசேரி வளாகத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.
காலப்போக்கில் அரச மரபு மங்கியபோதும், மேற்கு கோட்டையின் ஆறாற்று சாலையை ஒட்டி அமைந்துள்ள இக்கட்டிடங்கள் இன்றும் , திருவாங்கூர் வரலாற்றின் ஒரு பகுதியை அமைதியாக எதிரொலிக்கின்றன.
மேற்கண்ட முக்கிய அம்மா வீடுகளுக்கு அப்பால், அரசரின் சகோதரர்களின் மனைவிகள் வசித்த சிறிய அம்ம வீடுகளும் உள்ளன.
அவை:
இரணியல் (அல்லது புளிமூட்டில்) அம்மவீடு
பங்களாவில்
அம்ம வீடு
கரமன புத்துமன அம்ம வீடு
கல்லடா அம்ம வீடு
கல்லம்பள்ளி அம்ம வீடு
ஸ்ரீவராகம் தளகுளத் அம்ம வீடு
முப்படிக்க அம்ம வீடு
இவற்றில் பெரும்பாலானவை இன்று சிதிலமடைந்தோ அல்லது நவீன தேவைகளுக்கேற்ப மறுகட்டமைக்கப்பட்டோ, தங்கள் மூல கட்டிடக்கலை வடிவத்தை இழந்துள்ளன.
அருமன, வடசேரி, திருவட்டாறு, நாகர்கோவில் மற்றும் தஞ்சாவூர் அம்மா வீடுகள் தங்கள் கட்டிடக் கம்பீரமும், திருவாங்கூர் வரலாற்றுடன் உள்ள தொடர்பும் காரணமாக, கேரள அரசு அங்கீகரித்த மாவட்ட வாரியான பாரம்பரியக் கட்டிடப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 2008 பிப்ரவரி மாதத்தில் நகர மற்றும் கிராமத் திட்டமிடல் துறை தயாரித்த ஆவணங்களிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
அருமன அம்ம வீடு,
முக்கிய அம்ம வீடுகளில் ஒன்றான அருமண அம்ம வீடு, கார்த்திகை திருநாள் இராம வர்மா (1758–1798), அவிட்டம் திருநாள் பாலராம வர்மா (1798–1810) மற்றும் ஸ்ரீ விஷாகம் திருநாள் இராம வர்மா (1880–1885) ஆகியோரின் துணைவியர் வசித்த இல்லமாக இருந்தது.
பெயரில் குறிப்பிட்டு இருப்பது போல, அருமன அம்ம வீடு கன்னியாகுமரி மாவட்டம், விளவன்கோடு தாலுகா, ஆற்றூர் பகுதியில் உள்ள அருமன குடும்பத்தைச் சேர்ந்தது. மற்ற அம்மா வீடுகளிலிருந்து அருமன அம்ம வீடு தனித்துவம் பெறுவதற்கு காரணம், வரலாற்று நபர்களைத் தெய்வமாக வழிபடும் மரபு ஆகும். இங்கு இரவிக்குட்டி பிள்ளை என்பவரின் சிலை இருந்தது; அவரை இளங்கத்து அப்புப்பன் என வழிபட்டனர்.
இரவிக்குட்டி பிள்ளை, கல்குளத்தை ஆட்சி செய்த ரவி வர்ம குலசேகரரின் மகன் என நம்பப்படுகிறது.
ஆவிகளை அழைக்கும் வேச்சுப்பூஜை மரபு, அருமன அம்ம வீட்டைத் தவிர வேறு எந்த அம்ம வீட்டிலும் இல்லை என்கின்றனர். விளவன்கோடு தாலுகாவில் இருந்த பழைய அம்ம வீடு விற்றபோது, அந்தச் சிலைகள் பெருந்தண்ணியில் உள்ள அருமன அம்ம வீடு வளாகத்திலுள்ள கணபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன” என
கூறப்படுகிறது.
கணபதி கோவில் 1078 கி.பி.-இல் பூஞ்சாட்டுடைய பெருமாள் பாண்டிய பூபதி என அறியப்பட்ட ராம வர்ம வலிய கோயி ராஜா அவர்களால் கட்டப்பட்டது. மடத்தில் கணபதி என்றும் அழைக்கப்படும் இக்கோவில், அருமன அம்மா வீட்டிற்கு இணையான பழமையைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள அருமன அம்ம வீட்டை “பெருந்தண்ணி மடம்” எனவும் குறிப்பிடுகின்றனர்.
மேற்கு கோட்டைக்கு அருகிலுள்ள பெருந்தண்ணியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம், ஆறாட்டு சாலையை நோக்கி நிற்கும் மூன்று மாடி மையக் கட்டிடத்துடன் தன் தனித்துவ தோற்றத்தை இன்றும் காத்திருக்கிறது.
வளைவான நுழைவாயில்களுடன் கூடிய மையக் கட்டிடம் காலனித்துவ (பிரிட்டிஷ்) பாணியில், ஓடு கூரையுடன் உள்ள இணைப்புக் கட்டிடம் பாரம்பரிய கேரள கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இவ்வாறு, அருமண அம்ம வீடு பிரிட்டிஷ் மற்றும் கேரள கட்டிடக்கலை பாணிகளின் கலவையாக விளங்குகிறது.
1858 ஆம் ஆண்டில் இளவரசர் விசாகம் திருநாள் ராம வர்மர் அவர்கள் தனது மனைவி பாரதி லக்ஷ்மி பிள்ளை அம்மச்சி அவர்களுக்காக மறுசீரமைக்கப்பட்டது. அருமன அம்மவீட்டின் கட்டிடக்கலை, மகாராஜா விசாகம் திருநாளின் வாசஸ்தலமான அனந்த விலாசம் அரண்மனையின் பாணியை பிரதிபலிக்கிறது. தூண்கள் மற்றும் வரண்டாவில் காணப்படும் தனித்துவமான பொறிப்புகள் இதற்குச் சான்றாகும்.
ஆட்சியிலிருந்த மகாராஜாக்களின் திருமணங்கள் பெரும்பாலும் அம்மவீடுகளில் ஒன்றைச் சேர்ந்த மணமகள்களுடன் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகும், அந்த மனைவிகள் அரசரின் மெருகுடனும் வைபவத்துடனும் தங்கள் குடும்பங்களைச் சந்திக்க வருகை தந்தனர். முக்கியமான பண்டிகை காலங்களில் அருமன அம்மவீட்டில் பிரமாண்டமான விழாக்களும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டிருந்தன.
சுதந்திரத்திற்குப் பிந்தையும் அரசாட்சி முடிவடைந்த பின்னரும், அம்மவீடு குடும்பத்தைச் சேர்ந்த பல சிறப்பு பெற்ற ஆளுமைகள் நீண்ட ஆண்டுகள் அருமன அம்மவீட்டில் வசித்து வந்தனர்.
இன்றைக்கு, தனது மிளிரும் புதிய வடிவில் வில்லா மாயாவாக விளங்கும் இந்த இடம், பாரம்பரிய கட்டிடக்கலையையும் பண்பாட்டு பாணி உணவுப் பண்பாட்டையும் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இதிலிருந்து உருவான நுட்பமான வாழ்வியல் பாணி, ஒரு மகத்தான வரலாற்று மரபை பிரதிபலிக்கிறது.
தற்போது
முத்தூட் பாப்பச்சன் குழுமம் நடத்தும் உயர்தர உணவகம் வில்லா மாயா, ஆக மாறி அமைதியின் உலகுக்குள் அழைத்துச் செல்லும் வகையில் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட, ருசியான உணவு வழங்கும் இடமாக திகழ்கிறது.
மாயா வில்லாஸ் (Maya Villas)” என்ற பெயர் பல இடங்களை குறிக்கக்கூடும். ஆனால் அதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது இந்தியாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ‘வில்லா மாயா (Villa Maya)’ ஆகும்.