4 Feb 2026

பாரபாஸ்' (Barabbas)

 

சமீபத்தில் ஸ்வீடன் நாட்டு எழுத்தாளர் பெர் லாகர்கிவிஸ்ட் (Pär Lagerkvist) எழுதிய 'பாரபாஸ்' (Barabbas) நாவலை வாசித்தேன். 1951-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற நாவல் இது. மனிதகுலம் எதிர்நோக்கும் நித்திய கேள்விகளுக்கான பதில்களைத் தனது நாவலின் ஊடாகக் கண்டறிய அவர் மேற்கொண்ட கலைத்திறனுக்காகவும், உண்மையான சுதந்திரச் சிந்தனைக்காகவும் அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

லாகர்கிவிஸ்ட் தனது இருபதுகளின் தொடக்கத்திலிருந்து எழுபதுகளின் இறுதி வரை கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான அடிப்படைப் போராட்டமே அவரது படைப்புகளின் மையக் கருப்பொருளாகத் திகழ்கிறது.

கதைக்களம்: வெறும் 144 பக்கங்களை மட்டுமே கொண்ட இந்தச் சிறு நாவல், மிகப்பெரிய தத்துவப் பாரத்தைச் சுமந்து நிற்கிறது. திருச்சபை கற்றுக்கொடுக்கும் கோட்பாடுகளையும் கடந்து, விவிலியப் பின்புலத்தில் கிறிஸ்தவ மரபிலிருந்து பாத்திரங்களையும் உருவகங்களையும் அவர் கையாண்டுள்ள விதம் சிறப்பானது.

கிறிஸ்துவின் சிலுவை மரண விசாரணையின்போது, இயேசுவுக்குப் பதிலாக விடுதலை செய்யுமாறு யூதர்கள் வேண்டியவன்தான் பாரபாஸ். கூட்டத்தினரின் விருப்பத்தால் இயேசு சிலுவைக்கு அனுப்பப்பட, மரண தண்டனையிலிருந்து தப்பித்த குற்றவாளியான 'பாரபாஸ்' வழியாகக் கிறிஸ்தவம், கடவுள் நம்பிக்கை போன்றவற்றை ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார்.

இயேசுவைச் சிலுவையில் அறையக் கொண்டு செல்லும்போது, அவர் துன்புறுத்தப்படுவதையும், பின்பு அவர் உயிர்த்தெழுந்ததாகப் பெண்கள் கூறுவதையும் மறைந்திருந்து பார்க்கிறான் பாரபாஸ். விடுதலையான போதிலும், அவனால் கிறிஸ்துவின் நினைவுகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை; ஏதோ ஒரு வகையில் கிறிஸ்துவுடன் பிணைக்கப்பட்டே இருக்கிறான்.

பாரபாஸின் ஊசலாட்டம்: கிறிஸ்துவால் ஈர்க்கப்பட்டாலும், அவரைக் கடவுளின் மகனாகவோ, இரட்சகராகவோ அவனால் நம்ப முடியவில்லை. விடுதலை வேண்டித் தன்னைப் பின்தொடர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறந்தள்ளி, மௌனமாக மரணத்தைக் கடந்துபோன கிறிஸ்து அவனுக்கு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றார். கிறிஸ்து சீடர்களுக்காக மரிக்கவில்லை, தனக்காகவே மரித்தார் என்று அவன் நம்புகிறான்.

கிறிஸ்துவின் சிலுவை மரணம் பற்றி அவன் இவ்வாறு சிந்திக்கிறான்: "அவர் பட்ட கஷ்டங்களையும் சிலுவையையும், அந்தப் பரிதாபகரமான பிரிவையும் அவர்கள் போற்றிப் புகழ்ந்தார்கள். அதில் பரிதாபமும் துயரமும் மட்டுமே நிறைந்திருந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லையா? அவர்கள் சாவையுமா வணங்கினார்கள்? அது மிகவும் பயங்கரமானது; கொடூரமானது." இது அவனுக்கு அருவருப்பையும் வெறுப்பையும் தந்தது. கிறிஸ்தவர்களின் உளவியலைச் சரியான இடத்தில் கேள்விக்குள்ளாக்குகிறான் பாரபாஸ்.

கிறிஸ்துவைக் கடவுளாக நம்புகிறவனும், நம்பாத பாரபாஸும் கழுத்தில் ஒரே அடையாளச் சின்னத்தை (பதக்கத்தை) அணிந்து திரிவது சிந்திக்க வைக்கிறது. கிறிஸ்து சிலுவையில் உயிர் நீத்ததை நேரில் கண்ட பாரபாஸால் அவரை நம்ப முடியவில்லை. ஆனால், பாரபாஸ் மூலமாக அங்கு நடந்த நிகழ்வைக் கேட்டறிந்தவன், ஆழமாகவும் உருக்கமாகவும் கிறிஸ்துவை நம்புகிறான்.

துணைக் கதாபாத்திரங்கள்: பாரபாஸோடு தொடர்புடைய 'முயல் உதடு' (hare-lipped) கொண்ட ஒரு பெண், கிறிஸ்துவை ஆழமாக நேசிக்கிறாள். பின்னர், அவள் சீசரை நிந்தனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கல்லெறிந்து கொல்லப்படுகிறாள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாத கிறிஸ்துவுக்காக அவள் கொல்லப்படுவதை நினைத்து அவள் மேல் இரக்கம் கொள்கிறான் பாரபாஸ். கண்பார்வை இல்லாவிட்டாலும், செவிவழிச் செய்தியை வைத்து அவளைக் காட்டிக்கொடுத்த குருடனை அவன் கத்தியால் குத்திக் கொல்கிறான். அவள் உயிரோடு இருந்தபோது அவள் காட்டிய அன்பைப் புறக்கணித்தவன், அவள் இறந்த பின்பு அவள் மீதான மரியாதை மற்றும் மறைத்து வைத்திருந்த பிரியத்தின் நிமித்தம் அவளது உடலை எடுத்து அடக்கம் செய்கிறான்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, சங்கிலியால் பிணைக்கப்பட்ட மற்றொரு அடிமையான சஹாக் (Sahak) என்ற தீவிர கிறிஸ்தவ விசுவாசியுடன் பாரபாஸ் வாழும் சூழல் உருவாகிறது. இருவரும் கழுத்தில் ஒரே பதக்கத்தை அணிந்திருந்தாலும், அதன் பொருளை இருவரும் வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றனர். ஒரு பக்கம் 'கிறிஸ்துவின் அடையாளம்' என்றும், மறுபக்கம் 'சீசரின் அடையாளம்' என்றும் பாராட்டி மதிக்கிறான் சஹாக். ஆனால் பாரபாஸுக்கோ அத்தகைய உணர்வு ஏதுமில்லை. அதிகாரிகள் அவர்களைச் சீசரின் முன் கொண்டு நிறுத்தும் போது, கிறிஸ்துவின் சாட்சியாக நண்பன் சஹாக் உயிர் விடுகிறான்; ஆனால் பாரபாஸ் கிறிஸ்துவை மறுதலித்துத் தப்பித்துக்கொள்கிறான்.

முடிவும் தத்துவமும்: இறுதியாக, ரோமானிய ஆளுநரின் நம்பிக்கைக்குரியவனாக ரோம் செல்கிறான். அந்தப் பட்டணத்தில் நடந்த பெரும் தீ விபத்திற்குக் காரணமான கிறிஸ்தவர்களுடன் பாரபாஸும் கைது செய்யப்படுகிறான். கிறிஸ்து உலகை மறுசீரமைக்க வருகிறார் என்று தவறாக எண்ணி, அவனும் தீ வைப்பதில் இணைகிறான். இறுதியில் கிறிஸ்தவர்களோடு சேர்த்து அவனும் சிலுவையில் அறையப்படுகிறான்.

"சீசர்தான் தீயிட்டுவிட்டு, கிறிஸ்தவர்கள் மீது அநியாயமாகக் குற்றம் சாட்டினார்; கிறிஸ்துவுக்கு அல்ல, சீசருக்குத்தான் நான் உதவினேன்" என்கிறான் பாரபாஸ். 

"எங்கள் குருநாதர் ஆத்துமாவுக்குப் புனிதத் தீ இடுவாரே தவிர, நகரங்களுக்குத் தீ இடமாத்தார்" என்ற ஆன்மீகச் சிந்தனையை விட்டுச் செல்கிறது

இந்த நாவல் கடவுளின் கிருபை, கடவுள் மேலுள்ள நம்பிக்கையின் தெளிவற்ற நிலை மற்றும் தியாகம் போன்ற கருப்பொருள்களைக் கையாள்கிறது. இது ஒரு "தலைகீழ் நற்செய்தி" (upside-down gospel) போன்றது. மீட்பிற்குப் பதிலாக மறுப்பையும், தெளிவிற்குப் பதிலாகக் குழப்பத்தையும் பாரபாஸ் அனுபவிக்கிறான்.

ஆரம்பகாலக் கிறிஸ்தவர்கள் பொதுவான நம்பிக்கை காரணமாகக் குழுக்களாகச் சேர்ந்தே காணப்பட்டனர். தங்களைச் சாராதவர்கள் யாரையும் அருகில் விட அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் சகோதரத்துவம் பாராட்டி, அன்பு விருந்துகள் நடத்தி, ஒரே குடும்பம் போல வாழ்ந்தனர். "ஒருவரை ஒருவர் நேசியுங்கள்" என்று போதிக்கும் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தங்களைச் சாராதவர்களை அவர்கள் நேசித்தார்களா என்று சொல்வது மிகவும் சிரமமான காரியம் என்கிறான் பாரபாஸ்.

நவீனப் பொருத்தம்: வாழ்க்கையின் இருத்தலியல் (Existentialism) சார்ந்த அபத்தங்களுக்கும், சீரற்ற நிலைக்கும் இடையே ஒரு நோக்கத்தைக் கண்டறிய பாரபாஸ் போராடுகிறான்.

  • சிலுவையிலிருந்து தப்பித்தாலும், தான் உயிர் பிழைத்ததற்காக அவன் அடையும் குற்ற உணர்வு (survivor's guilt) மற்றும் அதிர்ச்சி அவனைச் சிதைக்கிறது.

  • ஒரு அடக்குமுறை கொண்ட அரசியல் அமைப்பு, மனிதர்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் எப்படிச் சிதைக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. உதாரணமாக, ஒருவன் நான்கு படி மாவைத் திருடித் தின்றான் என்பதற்காக, அவனது ஒரு கண்ணைத் தோண்டி எடுத்துவிட்ட கொடூரத்தைச் சான்றாகக் கூறலாம்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நாவலாக இருந்தாலும், இது இன்றும் நவீனமாகச் சிந்திக்க வைக்கிறது. தனிமை, வன்முறை, அரசியல் ஒடுக்குமுறை மற்றும் அடையாளத் தேடல் போன்ற இன்றைய சிக்கல்களையும் இது பேசுகிறது.

சஹாக்கைச் சித்திரவதை செய்ய ஆளுநர் உத்தரவிடவில்லை எனினும், அதிகாரிகள் வழக்கமாகச் செய்வது போலவே சித்திரவதை செய்துதான் அவனைச் சிலுவையில் ஏற்றினார்கள். இறுதியில், பாரபாஸ் தனியாகச் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தான். இன்னமும் அவனுக்கு உயிர் இருந்தது. வாழ்நாள் முழுவதும் தான் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும், அவன் தன்னைச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து, அதனிடம் பேசுவது போலச் சொன்னான்: "உன்னிடமே என் ஆத்துமாவை ஒப்படைக்கிறேன்." யாருடைய மரணத்தால் அவனுக்கு விடுதலை கிடைத்ததோ, அதே மரணத்தை அவனும் தழுவுகிறான்.

விமர்சனம்: க.நா. சுப்ரமணியம் அவர்களின் மொழிபெயர்ப்பில், அகஸ்த்துமத்தாக, ருசுக்கள், ருசுவித்து, துரியம் போன்ற வழக்கொழிந்த சொற்கள் மலிந்து கிடக்கின்றன; இது வாசிப்புக்குத் தடையாக உள்ளது. பல இடங்களில் வார்த்தை அமைப்பு தமிழ் இலக்கிய நடையில் இல்லை என்பதும் ஒரு குறைதான். மற்றபடி, சிந்திக்க வைக்கும் சுவாரசியமான வாசிப்பை இது தருகிறது. மதம், சமூகம் ஆகியவற்றில் மனிதனின் இடம் என்ன என்பதை மதங்களை விமர்சிப்பவர்கள் இன்றும் இந்நூல் வாயிலாகப் புரிந்துகொள்ளலாம். சந்தியா பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பியக் கிறிஸ்தவர்களால் சுதந்திரமாகத் தங்கள் மதத்தை, நம்பிக்கையை, கடவுளைப் பகுத்தாய்வு செய்து எழுத முடிகிறது. ஆனால், அரைகுறை இந்தியத் தமிழகக் கிறிஸ்தவர்கள் சிந்தனையே அற்ற மதவாதிகளாகவும், மத அடிமைகளாகவும் மாறி வருவதைச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் தமிழகக் கிறிஸ்தவ மதகுருக்கள், "அவர் நம்மோடு இருப்பது போல, நாம் அவரோடு..." போன்ற அடுக்குமொழிகள் ஊடாகத் தங்களை ரோமானிய ஆளுநர்களாகவே தற்போதும் நிரூபித்து வருகின்றனர்.

'எம்டி ஸ்பேஸ்-(Empty Space)

தீதி தாமோதரன் மற்றும் எச்முக் குட்டி ஆகியோர் இணைந்து எழுதி, 2026-ல் வெளியான புத்தகம் 'எம்டி ஸ்பேஸ்: பாஷ்பீகிருதயுடெ ஆறாம் விரல்' (Empty Space: Bashpeekruthayude Aaram Viral). புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் முதல் மனைவியான பிரமிளா நாயரை மையமாகக் கொண்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது


இரண்டாவது மனைவியின் மகள் இப்புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் தடை செய்யக்கூடிய அளவில் புத்தகத்தில் ஒன்றுமில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்து, திருமணமான ஒரு ஆணின் வாழ்க்கையில் மற்றொரு பெண் நுழைந்ததால், முதல் மனைவியும் மகளும் எவ்விதம் துன்பத்திற்கு உள்ளானார்கள் என்று நேர்மையாக எழுதும்போது, அது மறைமுகமாக  மனுதாரரின் தாயின் பிம்பத்தை பாதிக்கக்கூடும் என்பதே காரணமாக இருக்கலாம்.

மகளின் மனநலம் கருதி ஊரை விட்டு வெளியேறும் சூழலுக்கு முதல் மனைவி தள்ளப்படுகிறார். அவர்கள் ஆசையாகக் கட்டிய வீட்டில், மற்றொரு மனைவி மற்றும் மகளுடன், சமூக அந்தஸ்து, இலக்கிய விருதுகள், அரசு மரியாதையுடன் கணவன் வாழ்கிறார். முதல் மனைவியும் மகளும் சமூகத்தில் தனித்து விடப்பட்டதை இப்புத்தகம் விவரிக்கிறது.

இது வெறும் ஒரு குடும்பக் கதை மட்டுமல்ல. பிரபலமான ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை எவ்விதம் ஒடுக்குகின்றனர், அவர்களுக்கு இருக்கும் இடைவிடாத குடி மற்றும் கெட்ட பழக்க வழக்கங்களை எவ்விதம் ஆண்மையின் அடையாளமாக காட்டுகின்றனர், ஆண் தன் சுய இன்பத்திற்காக புதிய உறவை உருவாக்கும்போது, ஏற்கனவே உடன் வாழ்ந்த பெண்ணின் ஆளுமையை ஒடுக்க எவ்விதம் செயல்படுகின்றனர் என்பதை இப்புத்தகத்தில் உதாரணங்களுடன் விவரித்துள்ளனர். கணவன் எவ்வித சமூக அழுத்தமும் இல்லாது சுதந்திரமாக வாழும்போது, கணவன் உயிருடன் இருக்கும்போதே, தனது மகளின் நல்வாழ்க்கையைக் கருதி பெண் தனித்து வாழும் சூழலுக்குத் தள்ளப்படும் நிலையையும் இது விவரிக்கிறது.


எம்.டி தனது கதைகளில் தார்மீகமான ஆண்மையுள்ள ஆண் கதாபாத்திரங்களைப் படைத்தாலும், நிஜ வாழ்க்கையில் தனது சொந்த மனைவியை ஒடுக்க அவர் கையாண்ட பல யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் மிகவும் தரம் தாழ்ந்தவையாக உள்ளன.

தனது சொந்த மகளின் கல்லூரிப் படிப்புக்கு உதவாமலும், சுயசரிதை எழுதாமல் மற்றொரு நபரை வைத்து வாழ்க்கை வரலாற்றை எழுதச் செய்தும்; முதல் மனைவிக்கு வீடு, ஜீவனாம்சம் கொடுத்தேன், மனைவியின் மரணச் சடங்கில் பங்கு பெற்றேன் என்ற பொய்களை எழுதி நிறுவியுள்ளார்.


கேன்சர் நோயால் இறக்கும் தருவாயில் எம்.டியைக் காண வேண்டும் என விரும்பியும், மனைவியைச் சந்திக்காத எம்.டி, மரணத்தின் கடைசிச் சடங்குகளைச் செய்யாத எம்.டி, ஆண்களின் மிக மோசமான பக்கத்தின் உச்ச நிலையில் உள்ளார். 

ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த எம்.டி, எம்.ஜி.ஆர் குடும்பத்தில் பிறந்த, வசதி வாய்ப்பும் நல்ல கல்வியும் பெற்று வேலையில் இருந்த ஒரு பெண்ணை, பெற்றோரின் அனுமதியின்றி தன் விருப்பத்திற்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்த நிலையில், தனது இலக்கிய வாழ்க்கையின் முதல் பகுதியில், தனது புத்தகங்களை ஆங்கில மொழியாக்கம் செய்ய வைத்து உலக இலக்கியத்தில் நுழையப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் இலக்கியவாதியாகவும், சினிமா கதை ஆசிரியராகவும், ஊடகச் செயல்பாட்டாளராகவும் ஆன பின்பு முதல் மனைவியை முற்றும் புறக்கணித்த பக்கங்கள் வருத்தத்தைத் தருகின்றன.


பெண்ணிய எழுத்தாளராக இருந்த பிரமிளா நாயரின் வார இதழ்களில் வந்த நாவலை நிறுத்தியதுடன், பிரமிளா எழுத்துலகத்திற்கு வரவே கூடாது என்பதில் அவரின் ஆண் இலக்கிய நண்பர்களும் நிறையவே உதவியுள்ளனர். பெண் எழுத்தாளர்களான மாதவிக்குட்டி போன்றவர்கள் கூட எம்.டியின் பகையைக் கருதி பிரமிளா பெயரை உச்சரிக்காமல் விட்டுவிட்டனர்.

அப்படி வாழ்க்கையிலும் இலக்கிய உலகிலும் தண்ணீரைச் சூடு செய்து ஆவியாக்குவது போல அவர்களை 'பாஷ்பிகரித்து' விட்டனர்.


பிரமிளா பிற்பாடு ஒரு பள்ளி ஆசிரியையாக வாழ்ந்து முடித்துள்ளார். அவருடைய செலவில் இரு நாவல்கள் வெளியிட்டுள்ளார். அவையும் நூலகங்களில் இல்லாத வண்ணம் எம்.டியின் தலையீடு இருந்துள்ளது. ஆனால் எம்.டி சினிமாவில் படைக்கும் பெண் கதாபாத்திரங்களில் பிரமிளா நாயரை முன்னிறுத்தி, அவர் மேல் சேற்றை வாரி இறைத்துள்ளார்.

மிகவும் ஏழைப் குடும்பத்தில் இருந்து வந்த, எம்.டி மகளுக்கு நடனம் கற்பிக்க வந்த சரஸ்வதி, பிற்பாடு எம்.டிக்கு மனைவி என்ற அங்கீகாரம் பெற்று, கேரளா கலாமண்டலம் நடனப்பள்ளியில் முதல்வராகவும் தனது வாழ்க்கையை ஒரு மகளுடன் நிறைவாக முடித்துக் கொண்டார். ஆனால், எம்.டிக்கு அடையாளமும் பணமும் புகழும் அற்ற காலத்தில், எம்.டியை நம்பி வந்த நிலையில், ஒரு இளம் பெண் கிடைத்ததும் 45 வயதை நெருங்கிய பிரமிளாவின் வாழ்க்கையை வெறுமையிலும், துயரிலும், அவமானத்திலும், சூனியத்திற்குள்ளும் தள்ளிய சம்பவங்களைச் சொல்கிறது இப்புத்தகம்.


பிரமிளா பிற்பாடு தன் குடும்பத்தை சார்ந்து நின்று மகளை வளர்த்து, பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்தார்.  மகள் ஒரு இலக்கியவாதியின் மனைவியாக கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார். அதே போன்று மகள் அமெரிக்காவில் பெரும் வணிக நிறுவனத்தில்  அதிகாரியாகப் பணியாற்றினார்.  பிரமிளா, கேன்சரால் கேரளா திரும்பியபோது சகோதரர்களும் தாயும் பக்கபலமாக இருந்துள்ளனர்.

இருப்பினும், காதலில் உருகி நேசித்தவன் தனக்கு இழைத்த துரோகத்தை மறக்க இயலாமல் வாழ்க்கை முழுவதும் போராடிய பிரமிளா, மரணத்தின் கடைசி நாட்களில் ஒரு முறை கண்டுவிட்டாவது மரிக்க வேண்டும் என விரும்பிய ஆசையைக் கூட நிறைவேற்றாத எம்.டி, ஒரு சாதாரண ஆணை விடக் கீழ்மட்டத்தில் இருந்துள்ளார்.

சினிமாவில் வரலாற்றுப் பாத்திரமான உண்ணியாச்சையைத் தவறாகவும், பாஞ்சாலியை விகாரமாகவும், குந்தி தேவியைக் கேலியாகவும் சித்தரித்து இலக்கியம் படைத்து பிரமிளா மேலிருந்த வன்மத்தைத் தீர்த்துக் கொண்டார். அதே மாதிரி சினிமாவிலும் மம்மூட்டி போன்ற அழகான ஆண் கதாபாத்திரங்களை வைத்து, அறிவான அழகான பெண்களை அன்பிற்காகப் பிச்சை எடுப்பவர்களாக மாற்றினார். கணவன் நண்பர்களுடன் குடித்துக் கூத்தாடி வந்தாலும் கைநீட்டி அன்பு செலுத்தும் பெண்களைக் கதாபாத்திரமாகப் படைத்து தன் மேட்டிமையை நிலைநாட்டிக் கொண்டார். நடிகை சீமா போன்ற தைரியமான பெண்மைக்கு அடையாளமான பெண் கதாபாத்திரங்களைக் கூட மம்மூட்டிக்கு வைப்பாட்டியாக வைத்து, மம்மூட்டி கதாபாத்திரத்திற்குப் பணிவிடை செய்ய வைத்திருப்பார். இவை பற்றியும் சில குறிப்புகள் இப்புத்தகத்தில் உண்டு

வாசிப்பவர்களுக்குச் சலிப்பைத் தராது விறுவிறுப்பாக நகர்த்திய புத்தகம். எடிட்டிங்கில் (பிழைத் திருத்தம்) இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சொன்ன விஷயங்களே மறுபடியும் வராமல் தடுத்திருக்கலாம்.

மற்றபடி, இரண்டாம் மனைவியின் மகளுக்குத் தன் தந்தையின் முதல் மனைவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய புத்தகத்தைத் தடை செய்யச் சொல்ல என்ன உரிமை இருக்க இயலும்?

பிரமிளா நாயர் உயிரோடு இருக்கும்போதே இப்புத்தகம் வெளிவந்திருக்க வேண்டும். அல்லது எம்.டி இருக்கும்போதாவது புத்தகம் வெளியிட்டிருக்கலாம். எம்.டியைப் பற்றி வெளிவந்த வரலாற்றுப் புத்தகம் தான் இப்புத்தகம் வெளிவரக் காரணமாக அமைந்தது. அதிலுள்ள பிழைகளை இதில் சுட்டிக் காட்டியுள்ளனர்.


ஆனாலும் எம்.டி என்ற இலக்கியவாதிக்குப் பதில் சொல்ல வாய்ப்புக் கொடுக்காது இப்புத்தகம் தாமதமாக வெளிவந்தது பெரும் குறைதான். எம்.டி எப்போதும் தன் மேல் வரும் விமர்சனங்களுக்குத் தனது ஆழ்ந்த தீர்க்கமான மௌனம் மூலமாகப் பதில் கொடுத்து வந்துள்ளார். வார்த்தைப் பதிலை விடச் செயலில் மும்முரமாக இருக்கக் கூடியவர். ஒருவேளை அவர் இருந்திருந்தால் இப்புத்தகத்தை வெளியிட அனுமதிக்கமாட்டார் என்ற பயமும் இருந்திருப்பதை அவதானிக்கலாம்.


ദീദി ദാമോദരനും എച്ച്‌മു കുട്ടിയും ചേർന്ന് എഴുതി 2026-ൽ പുറത്തിറങ്ങിയ പുസ്തകമാണ് 'എംപ്റ്റി സ്പേസ്: ബാഷ്പീകരിക്കപ്പെട്ടവരുടെ ആറാം വിരൽ'. പ്രശസ്ത സാഹിത്യകാരൻ എം.ടി. വാസുദേവൻ നായരുടെ ആദ്യ ഭാര്യയായിരുന്ന പ്രമീള നായരെ കേന്ദ്രീകരിച്ചുള്ള സംഭവങ്ങളെ ആസ്പദമാക്കിയാണ് ഈ പുസ്തകം രചിച്ചിരിക്കുന്നത്.

രണ്ടാം ഭാര്യയുടെ മകൾ ഈ പുസ്തകം നിരോധിക്കണമെന്ന് ആവശ്യപ്പെട്ടിട്ടുണ്ട്. എന്നാൽ നിരോധിക്കാൻ മാത്രം ഒന്നുമില്ല. ഒരു സ്ത്രീയുടെ ജീവിതം തകർത്ത് മറ്റൊരു സ്ത്രീ വിവാഹിതനായ പുരുഷന്റെ ജീവിതത്തിലേക്ക് കടന്നുവന്നപ്പോൾ ആദ്യഭാര്യയും മകളും അനുഭവിച്ച വേദനകൾ സത്യസന്ധമായി എഴുതുമ്പോൾ, അത് പരാതിക്കാരിയുടെ അമ്മയുടെ പ്രതിച്ഛായയെ ബാധിച്ചേക്കാം എന്നതാവാം കാരണം.

മകളുടെ മാനസികാരോഗ്യം കണക്കിലെടുത്ത് നാടുവിടേണ്ട സാഹചര്യത്തിലേക്ക് ആദ്യഭാര്യ തള്ളപ്പെടുന്നു. അവർ ആഗ്രഹിച്ചു പണിത വീട്ടിൽ മറ്റൊരു ഭാര്യയ്ക്കും മകൾക്കുമൊപ്പം, സാമൂഹിക പദവിയും സാഹിത്യ പുരസ്കാരങ്ങളും സർക്കാർ ബഹുമതികളുമായി ഭർത്താവ് ജീവിക്കുന്നു. ആദ്യഭാര്യയും മകളും സമൂഹത്തിൽ ഒറ്റപ്പെട്ടുപോയതിനെക്കുറിച്ചാണ് പുസ്തകം പറയുന്നത്.

ഇതൊരു കുടുംബകഥ മാത്രമല്ല. പ്രശസ്തരായ പുരുഷന്മാർ തങ്ങളുടെ വീട്ടിലെ സ്ത്രീകളെ എങ്ങനെ അടിച്ചമർത്തുന്നു, അവരുടെ മദ്യപാനത്തെയും ദുശ്ശീലങ്ങളെയും എങ്ങനെ പൗരുഷത്തിന്റെ ലക്ഷണങ്ങളായി ചിത്രീകരിക്കുന്നു, സ്വന്തം സുഖത്തിനായി പുതിയ ബന്ധങ്ങൾ ഉണ്ടാക്കുമ്പോൾ കൂടെയുള്ള സ്ത്രീയുടെ വ്യക്തിത്വത്തെ എങ്ങനെ ഇല്ലാതാക്കുന്നു എന്ന് ഉദാഹരണസഹിതം പുസ്തകത്തിൽ വിവരിക്കുന്നു. ഭർത്താവ് യാതൊരു സാമൂഹിക സമ്മർദ്ദവുമില്ലാതെ സ്വതന്ത്രമായി ജീവിക്കുമ്പോൾ, ഭർത്താവ് ജീവിച്ചിരിക്കെത്തന്നെ, മകളുടെ നല്ല ഭാവി കരുതി സ്ത്രീക്ക് ഏകയായി ജീവിക്കേണ്ടി വരുന്ന സാഹചര്യവും ഇതിൽ വിവരിക്കുന്നുണ്ട്.

എം.ടി തന്റെ കഥകളിൽ ധാർമ്മികബോധമുള്ള പുരുഷ കഥാപാത്രങ്ങളെ സൃഷ്ടിച്ചെങ്കിലും, യഥാർത്ഥ ജീവിതത്തിൽ സ്വന്തം ഭാര്യയെ ഒതുക്കാൻ അദ്ദേഹം സ്വീകരിച്ച പല തന്ത്രങ്ങളും നടപടികളും വളരെ തരംതാണതായിരുന്നു.

സ്വന്തം മകളുടെ കോളേജ് പഠനത്തിന് സഹായിക്കാതിരിക്കുക, ആത്മകഥ എഴുതാതെ മറ്റൊരാളെക്കൊണ്ട് ജീവചരിത്രം എഴുതിച്ച് - ആദ്യഭാര്യയ്ക്ക് വീടും ജീവനാംശവും നൽകി, മരണാനന്തര ചടങ്ങുകളിൽ പങ്കെടുത്തു എന്നൊക്കെയുള്ള നുണകൾ സ്ഥാപിച്ചെടുക്കുകയാണ് ചെയ്തത്.

ക്യാൻസർ ബാധിച്ച് മരണക്കിടക്കയിൽ എം.ടിയെ കാണാൻ ആഗ്രഹിച്ചിട്ടും ഭാര്യയെ കാണാൻ കൂട്ടാക്കാത്ത, മരണാനന്തര ചടങ്ങുകൾ പോലും ചെയ്യാത്ത എം.ടി, പുരുഷന്മാരുടെ ക്രൂരമായ മുഖത്തിന്റെ ഉദാഹരണമാണ്. ഒരു സാധാരണ കുടുംബത്തിൽ നിന്നു വന്ന എം.ടി, എം.ജി.ആറിന്റെ കുടുംബത്തിൽ ജനിച്ച, നല്ല വിദ്യാഭ്യാസവും ജോലിയുമുള്ള ഒരു പെൺകുട്ടിയെ മാതാപിതാക്കളുടെ സമ്മതമില്ലാതെ വിളിച്ചിറക്കി കൊണ്ടുവന്നു. സാഹിത്യജീവിതത്തിന്റെ ആദ്യഘട്ടത്തിൽ തന്റെ പുസ്തകങ്ങൾ ഇംഗ്ലീഷിലേക്ക് വിവർത്തനം ചെയ്യിച്ച് ലോകസാഹിത്യത്തിൽ ഇടംനേടാൻ എം.ടി ഇവരെ ഉപയോഗിച്ചു. എന്നാൽ പിൽക്കാലത്ത് സാഹിത്യകാരനും സിനിമാ തിരക്കഥാകൃത്തും മാധ്യമപ്രവർത്തകനുമായി മാറിയപ്പോൾ ആദ്യഭാര്യയെ പൂർണ്ണമായും അവഗണിച്ചത് വേദനാജനകമാണ്.

സ്ത്രീപക്ഷ എഴുത്തുകാരിയായിരുന്ന പ്രമീള നായരുടെ വാരികയിൽ വന്നിരുന്ന നോവൽ നിർത്തിവയ്പ്പിച്ചു. പ്രമീള എഴുത്തുലോകത്തേക്ക് വരരുത് എന്ന കാര്യത്തിൽ അദ്ദേഹത്തിന്റെ ആൺ സാഹിത്യ സുഹൃത്തുക്കളും സഹായിച്ചു. മാധവിക്കുട്ടിയെപ്പോലുള്ള പെൺ എഴുത്തുകാർ പോലും എം.ടിയുടെ പക ഭയന്ന് പ്രമീളയുടെ പേര് പരാമർശിക്കാൻ മടിച്ചു.

അങ്ങനെ ജീവിതത്തിലും സാഹിത്യലോകത്തിലും വെള്ളം തിളപ്പിച്ച് ഇല്ലാതാക്കുന്നതുപോലെ അവരെ 'ബാഷ്പീകരിച്ചു' കളഞ്ഞു.

പ്രമീള പിന്നീട് ഒരു സ്കൂൾ അധ്യാപികയായി ജീവിച്ചു. സ്വന്തം ചെലവിൽ രണ്ട് നോവലുകൾ പ്രസിദ്ധീകരിച്ചു. അവ ലൈബ്രറികളിൽ പോലും എത്താതിരിക്കാൻ എം.ടി ശ്രദ്ധിച്ചു. എന്നാൽ എം.ടി സിനിമയിൽ സൃഷ്ടിച്ച പല സ്ത്രീ കഥാപാത്രങ്ങളിലും പ്രമീള നായരെ മുൻനിർത്തി, അവരുടെ മേൽ ചെളിവാരിയെറിയുകയായിരുന്നു.

വളരെ സാധാരണ കുടുംബത്തിൽ നിന്ന്, എം.ടിയുടെ മകൾക്ക് നൃത്തം പഠിപ്പിക്കാൻ വന്ന സരസ്വതി പിന്നീട് എം.ടിയുടെ ഭാര്യയായി, കേരള കലാമണ്ഡലം പ്രിൻസിപ്പലായി, ഒരു മകളോടൊപ്പം സംതൃപ്തമായ ജീവിതം നയിച്ചു. എന്നാൽ എം.ടിക്ക് പണവും പ്രശസ്തിയും ഇല്ലാതിരുന്ന കാലത്ത് അദ്ദേഹത്തെ വിശ്വസിച്ചു കൂടെ വന്ന പ്രമീളയെ, 45-ാം വയസ്സിൽ ഒരു യുവതിയെ കിട്ടിയപ്പോൾ എം.ടി ശൂന്യതയിലേക്കും അപമാനത്തിലേക്കും തള്ളിയിട്ടു.

പിന്നീട് പ്രമീള സ്വന്തം കുടുംബത്തെ ആശ്രയിച്ച് മകളെ വളർത്തി. മകൾ ഒരു സാഹിത്യകാരന്റെ ഭാര്യയാകരുത് എന്നതിൽ അവർക്ക് നിർബന്ധമുണ്ടായിരുന്നു. മകൾ അമേരിക്കയിലെ ഒരു വലിയ കമ്പനിയിൽ ഉദ്യോഗസ്ഥയായി. പ്രമീള ക്യാൻസർ ബാധിച്ച് കേരളത്തിൽ തിരിച്ചെത്തിയപ്പോൾ സഹോദരങ്ങളും അമ്മയും തുണയായി നിന്നു.

എങ്കിലും, താൻ ഉരുകി സ്നേഹിച്ച പുരുഷൻ ചെയ്ത ചതി മറക്കാനാവാതെ ജീവിതകാലം മുഴുവൻ പ്രമീള നീറിപ്പുകഞ്ഞു. മരണത്തിന് മുൻപ് ഒരു തവണയെങ്കിലും കാണണമെന്ന ആഗ്രഹം പോലും സാധിച്ചുകൊടുക്കാത്ത എം.ടി സാധാരണ പുരുഷന്മാരേക്കാൾ താഴെയാണ്.

സിനിമയിൽ ചരിത്ര കഥാപാത്രമായ ഉണ്ണിയാർച്ചയെ മോശക്കാരിയായും, പാഞ്ചാലിയെ വികൃതമായും, കുന്തിയെ പരിഹാസ്യമായും ചിത്രീകരിച്ച് പ്രമീളയോടുള്ള പക എം.ടി തീർത്തു. അതുപോലെ സിനിമയിൽ മമ്മൂട്ടിയെപ്പോലുള്ളവരുടെ കഥാപാത്രങ്ങൾക്കുവേണ്ടി, അറിവും സൗന്ദര്യവുമുള്ള സ്ത്രീകളെ സ്നേഹത്തിനായി യാചിക്കുന്നവരായി മാറ്റി. ഭർത്താവ് കൂട്ടുകാരോടൊപ്പം മദ്യപിച്ച് കൂത്താടി വന്നാലും കൈനീട്ടി സ്വീകരിക്കുന്ന സ്ത്രീകളെ സൃഷ്ടിച്ച് അദ്ദേഹം തന്റെ ആണ്മാപ്പ് നിലനിർത്തി. നടി സീമയെപ്പോലുള്ള ധീരരായ സ്ത്രീ കഥാപാത്രങ്ങളെപ്പോലും മമ്മൂട്ടി കഥാപാത്രത്തിന് സേവ ചെയ്യുന്നവളായി (അവിഹിത ബന്ധത്തിൽ) അദ്ദേഹം അവതരിപ്പിച്ചു. ഇവയെക്കുറിച്ചുള്ള പരാമർശങ്ങളും ഈ പുസ്തകത്തിലുണ്ട്.

വായനക്കാർക്ക് മടുപ്പുളവാക്കാതെ ആവേശത്തോടെ വായിക്കാവുന്ന പുസ്തകമാണിത്. എഡിറ്റിംഗിൽ കുറച്ചുകൂടി ശ്രദ്ധിച്ചിരുന്നെങ്കിൽ ആവർത്തനങ്ങൾ ഒഴിവാക്കാമായിരുന്നു.

അതല്ലാതെ, തന്റെ പിതാവിന്റെ ആദ്യഭാര്യയുടെ ജീവിതകഥ പറയുന്ന പുസ്തകം നിരോധിക്കാൻ രണ്ടാം ഭാര്യയുടെ മകൾക്ക് എന്ത് അവകാശമാണുള്ളത്?

പ്രമീള നായർ ജീവിച്ചിരിക്കുമ്പോൾ തന്നെ ഈ പുസ്തകം പുറത്തുവരേണ്ടതായിരുന്നു. അല്ലെങ്കിൽ എം.ടി ഉള്ളപ്പോഴെങ്കിലും. എം.ടിയുടെ മരണശേഷം അദ്ദേഹത്തെക്കുറിച്ച് വന്ന ചരിത്രപുസ്തകമാണ് (ജീവചരിത്രം) ഈ പുസ്തകമെഴുതാൻ പ്രേരണയായത്. അതിലെ പിശകുകൾ ഇതിൽ ചൂണ്ടിക്കാണിക്കുന്നുണ്ട്.

എങ്കിലും എം.ടി എന്ന സാഹിത്യകാരന് മറുപടി പറയാൻ അവസരം നൽകാതെ ഈ പുസ്തകം വൈകി വന്നത് വലിയൊരു കുറവാണ്. വിമർശനങ്ങൾക്ക് മൗനം കൊണ്ടാണ് എം.ടി മറുപടി നൽകിയിരുന്നത്. വാക്കുകളേക്കാൾ പ്രവർത്തിയിലായിരുന്നു അദ്ദേഹത്തിന് വിശ്വാസം. ഒരുപക്ഷേ അദ്ദേഹം ജീവിച്ചിരുന്നെങ്കിൽ ഈ പുസ്തകം വെളിച്ചം കാണാൻ അനുവദിക്കില്ലെന്ന ഭയം ഉണ്ടായിരുന്നിരിക്കാം




18 Jan 2026

எக்கோ ஒரு மர்ம த்ரில்லர் மலையாள திரைப்படம்.

 


எக்கோ ஒரு மர்ம த்ரில்லர் மலையாள திரைப்படமாகும்.

இப்படத்தை தின்ஜித் அய்யத்தன் இயக்கியுள்ளார், பாகுல் ரமேஷ் திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.ஆர்.கே. ஜெயராம் 'ஆராத்யா (Aaradyaa Studios) ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாகும். இப்படத்தில் சந்தீப் பிரதீப், வினீத், நரேன், பினு பப்பு மற்றும் பியானா மோமின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2025 ஏப்ரலில் தொடங்கி, ஜூன் நடுப்பகுதியில் நிறைவடைந்தது. படப்பிடிப்பு பெரும்பாலும் கேரளாவின் மூடுபனி சூழ்ந்த இடுக்கி மாவட்டம் பீர்மேடு மற்றும் வாகமண் பகுதி உட்படும் இயற்கை சூழ்ந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நாய்கள், குறிப்பாக இந்தியாவின் சொந்த இனமான தமிழ்நாட்டை சேர்ந்த கோம்பை (Kombai) நாய்கள் , கதையை நகர்த்தும் முக்கியமான பாத்திரங்களாகவே இடம்பெற்றுள்ளன.
திரைப்படம் நம்ப முடியாத கதை சொல்லல் (unreliable narrative), நேர்மறையற்ற (non-linear) கதை அமைப்பு, மற்றும் ஒலி–சுற்றுச்சூழல் மீது கொண்ட கவனம் ஆகியவற்றை பயன்படுத்தி, பார்வையாளர்களை ஆழமாக இழுத்துச் செல்லும் அனுபவத்தை உருவாக்கி உள்ளது.
இந்த திரைப்படம், சுற்றுச்சூழல், த்ரில்லர் பின்னணியில், நாய்களின் யஜமானோடுள்ள விசுவாசம், புத்திசாலித்தனம், தங்களது பகுதியை பாதுகாக்கும் இயல்பு ஆகியவற்றை கதைப்பின்னலாக கொண்டு கதையை நடத்தும் விதம் விருவிருப்பானது.
காணாமல் ஆன குரியச்சனை தேடும் பயணம், மனிதன்–விலங்கு உறவு , சிக்கலான கடந்த காலத் துரோகம், மற்றும் பரஸ்பர இணைப்புகள் ஆகியவற்றை மெதுவாக காட்சியூடாக வெளிப்படுத்துகிறது
நாய்களை பாதுகாப்பிற்காகவும் அதே நேரத்தில் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம் என்ற படத்தின் மையக் கருத்தையும் உட்படுத்தி உள்ளனர்
எளிமையான ஒரு கதை தான். . . காணாமல் போன நாய் வளர்ப்பாளர் குரியனின் மலேஷியா மனைவி ம்லாத்தி, தனது பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தி, குரியச்சனை மலைப்பகுதிகளில் எங்கோ சிறைபிடித்து வைத்திருக்கிறாள் என்ற கதை முடிவை, பார்வையாளர்களுக்கு எல்லாவற்றையும் நேரடியாக சொல்லாமல் சிந்திக்க வைக்கும் விதமாக பார்வையாளர்களிடமே கொடுத்துள்ளனர்.
நாய் பயிற்சியாளர் ஜிஜேஷ் எஸ் (Jijesh S) ஒன்பது கோம்பை நாய்களையும் ஒரு ஹஸ்கி நாயையும் பயிற்சி அளித்து, திரைப்படப் படப்பிடிப்பு தளத்தின் அறிமுகமற்ற சூழலில் நாய்களை நடிக்க தயார்படுத்தியுள்ளார். , அவற்றின் நடிப்பு திரைப்படத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Eko (2025) என்ற திரைப்படத்தின் தலைப்பு “Eko” என்பது “எதிரொலி (echo)” அல்லது “முதல் குழந்தை” என்ற அர்த்தங்களை கொண்டது. மனிதர்களின் செயல்களின் எதிரொலி, அடிப்படை உறவுப் பிணைப்புகள் போன்ற கருப்பொருள்களை இது பிரதிபலிக்கிறது.
இதில் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களும் சேர்ந்து, மறைந்த கடந்தகாலத்தின் நீட்சியான உண்மைகளை மெதுவாக ஒன்றிணைக்க முயல்கிறார்கள்.


எக்கோபெமினிசம் (Ecofeminism) என்பது பெண்களின் ஒடுக்குமுறையும் இயற்கையின் ஆதிக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று வாதிடும் ஒரு கோட்பாடும் இயக்கமும் ஆகும்.
ஆணாதிக்க அமைப்புகள் பெண்களையும் இயற்கையையும் கட்டுப்படுத்த வேண்டிய வளங்களாக பார்க்கின்றன; கலாச்சார ரீதியாக உருவாக்கப்பட்ட வனவிலங்குகளின் ஒடுக்குமுறையும் பெண்களின் ஒடுக்குமுறையும் இடையிலான ஒப்பீடுகளின் அரசியல் விளைவுகளை ஆராய்கின்றன. பெண்களையும் இயற்கையையும் சொத்தாகக் காண்பது, கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாக ஆண்களையும், இயற்கையின் பாதுகாவலர்களாக பெண்களையும் கருதுவது, பெண்களை ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவது போல மனிதர்கள் இயற்கையை ஆதிக்கம் செலுத்துவது ஆகியவை அடங்கும்.
ஈகோபெமினிசம், பெண்களுக்கும் இயற்கைக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இதுவும் இத்திரைப்படத்தில் காணலாம். ஒரு பெண்ணின் கணவனை சட்டசிக்கலில் சிக்க வைத்து , அவளை காப்பாற்றுவது போல சிறைப்படுத்தி வைத்து அவளுக்கு அன்பு பாராட்டி வந்தாலும் அதன் முடிவு அவளின் கட்டுபாட்டில் அந்த மனிதனின் வாழ்க்கை சிறப்படுகிறது என்பதாக முடித்துள்ளது தனித்துவமாகுகிறது .
கதாநாயக பிம்பம் தேவையற்ற பாடல் ஆடல் இல்லாமல், கவர்ச்சி பெண்கள் என்ற மாயாசாலம் எதுவும் இல்லாது சுவாரசியமான கதை , சிறப்பான திரைக்கதை ஊடாக சிறப்பான ஒரு திரைப்படம் தரலாம் என நிரூபித்து உள்ளனர்.
இப்படம் 2025 நவம்பர் 21 வெளியானது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் என இருதரப்பிலிருந்தும் பெரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
₹5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் ₹50 கோடிக்கும் மேல் வசூல் செய்து வணிக ரீதியான பெரும் வெற்றியைப் பெற்றது.
பாகுல் ரமேஷின் 'விலங்கு முத்தொகுப்பின்' (Animal Trilogy) மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியாக 'எகோ' திரைப்படம் அமைகிறது. இந்தத் தொடரின் முந்தைய படங்கள்: கிஷ்கிந்தா காண்டம் (Kishkindha Kaandam - 2024) கேரளா க்ரைம் ஃபைல்ஸ் 2 (Kerala Crime Files 2 - 2025)
தமிழகத்தின் கோம்பை நாய்கள் என்று அறியப்படுவையின் பூர்வீகம் மலேஷியா என்று கட்டமைக்கும் போதும் தமிழக கோம்பை நாய் வரலாற்றை குறிப்பிடாமல் கதை முடிக்கப்பட்டது எதனால் என்ற கேள்வியும் மனதில் தங்குகிது,
#

எக்கோபெமினிசம்
Eco Faminism!
பெண்களும் இயற்கையும் ஒன்று. இயற்கைக்கு கொடுப்பது போன்ற மரியாதை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை எக்கோ பெமினிசம் வலியுறுத்துகிறது
இரு அன்னிய ஆண்களை வீட்டுக்கு அழைத்து வருகிறான் கணவன், தன் மனைவியை மகள் போல நேசிக்கிறேன் என்கிறான் வந்தவர்களிடம்.
ஏன் மனைவியை மனைவியாக நேசிக்க கூடாதா என்கிறான் வந்தவன்.
வந்தவன் இருவரும் இப்பெண்னை கடத்தி கொண்டு போக மோகம் வருகிறது. முதலில் நுட்பமாக உன் கணவனுக்கு உன்னை விட அவன் தொழில் மேல் தான் விருப்பம் என்று கூறி அவள் கணவன் மேல் வெறுப்பை உருவாக்குகின்றனர்.
அவளை போராடி காப்பாற்றுவது போல அவளுக்கு இயல்பாகவே அமைத்து வைத்து இருந்த பாதுகாப்பை உடைத்து அவன் பகுதிக்கு கொண்டு வந்து அவனுக்கு மட்டும் என்று சிறைப்படுத்துகிறான். அதை தெரிந்து கொள்ளும்போது அவள் வயோதிகத்தையும் அடைகிறாள். .
அவளை காப்பாற்றுவது போல சிறைப்படுத்தி வைத்து இரு மகன்களையும் கொடுத்து அங்கும் அவளை தனது தனித்த அன்பு அன்பு போல பாராட்டி வந்ததும் அவளைச் சிறப்படுத்தவே என்று அறிந்த போது அவள் கவலை கொள்கிறாள்.
முடிவு அவளின் கட்டுபாட்டில் அந்த மனிதனின் வாழ்க்கை முழுதும் சிறப்படுகிறது என்பதாக முடித்துள்ளது
மலையாளம் திரைப்படம் எடுக்க இளைஞர்கள் மேனக்கெடுகின்றனர் . சினிமா என்ற கலைத் தன்மையை சரியான வகையில் பயன்படுத்துகின்றனர். காட்சி ஊடகமான சினிமா காட்சிகள் ஊடவே பார்வையாளர்களில் சேர்க்கின்றனர். உரையாடல்கள் மிகவும் குறைவாக பயன்படுத்துகின்றனர்.
ஒரே பெண் கதாப்பாத்திரம் கதை அத்தனை விருவிருப்பாக நகத்தும் உத்தி தெரிந்து வைத்துள்ளனர்.
எக்கோ.பெமினிசக் கருத்தை மிகவும் நுட்பமாக கதையில் வைத்துள்ளனர்.தங்களது சுய லாபங்களுக்காக இயற்கையும் இயற்கை வழங்களையும் அழிப்பது போல பெண்களை அழிப்பதற்கும் தயங்குவது இல்லை.
இயற்கை தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வருவது போலவே பெண்களுக்கு அன்பு ஆதரவு விடுதலை கொடுப்பதாக தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க துணியும் ஆண்கள் இயற்கையின் சீற்றம் போன்றே அதே இயற்கையால் அழிகின்றனர்.
இந்த ஆண்கள் யார் என்றால் நாயர்களாக பாதுகாவலர்களாக அதிகாரிகளாக பாவலாகாட்டும் ஆண்களே.

அம்ம வீடுகள்!

 

திருவனந்தபுரத்தில் உள்ள அம்ம(அம்மா) வீடுகள்
திருவாங்கூர் மரபு மற்றும் நினைவுகளை தன்னகத்தே தாங்கி நிற்கும் இடங்களாக உருவெடுத்திருந்தன.
அம்ம வீடுகள் என்பது திருவாங்கூர் அரசர்களின் மனைவிகள் வசித்த இல்லங்கள் ஆகும்.
முக்கியமான நான்கு அம்ம வீடுகள்:
அருமன,
வடசேரி,
திருவட்டாறு மற்றும் நாகர்கோவில் அம்ம வீடு ஆகும்.
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நான்கு அம்ம வீடுகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. பின்பு இவை கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இடம்பெயர்க்கப்பட்டன.
கார்த்திக திருநாள் (1758–1798) மகாராஜா அருமன, வடசேரி, திருவட்டாறு மற்றும் நாகர்கோவில் குடும்பங்களில் இருந்து வெவ்வேறு காலங்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து இருந்தார். அவர்களுக்காக திருவனந்தபுரத்தில் அம்ம வீடுகளை கட்டினார்.
அம்ம வீடுகள் உருவானது, அரசர்களும் சமூகத்தில் செல்வாக்கு கொண்ட குழுக்களும் இடையே நல்லுறவை நிலைநாட்டும் அரசியல் தந்திரமாகவும், அரச அதிகாரமும் சொத்துகளும் அரச குடும்பத்திற்குள் தக்க வைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
திருவாங்கூர் அரசர்கள் மருமக்கத்தாய முறை (சகோதரி மகன் ஆளும் முறை) பின்பற்றியதால், அரச வாரிசு அரசரின் சகோதரியின் பிள்ளைகளுக்கே உரியது.
அரசர்கள் திருமணம் செய்த பெண்கள் பெரும்பாலும் செல்வாக்கு கொண்ட நாயர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்
முன்னர் முதலியார் மற்றும் சைவ வேளாளர் பிள்ளை சமூகங்களும் இருந்தன;
ஸ்ரீ மூலம் திருநாள் காலத்திற்குப் பிறகு அனைவரும் நாயர் சமூகத்திலிருந்து வந்தனர். இவர்கள் ராணிகளாக அல்ல, “அம்மச்சிகள்” என அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தனி இல்லம் உட்பட பல சிறப்புரிமைகள் வழங்கப்பட்டன.
சமூக ஆதிக்கம் கொண்ட குழுக்களின் ஆதரவைப் பெற அரச குடும்பம் மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகளே அம்ம வீடுகள் உருவாகவும் வளரவும் காரணமாகின.
திருவனந்தபுரத்தின் மேற்கு கோட்டை வளாகத்தைச் சுற்றி நான்கு முக்கியன அமைந்துள்ளன.
அவை:
அருமன அம்மா வீடு
நாகர்கோவில் அம்ம வீடு
வடசேரி அம்ம வீடு
திருவட்டாறு அம்ம வீடு
இவை அனைத்தும் கார்த்திகை திருநாள் இராம வர்மா ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை.
கார்த்திகை திருநாளின் முதல் மனைவி காளி அம்மா நாகமணி அம்மா நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.
இரண்டாம், மூன்றாம், நான்காம் மனைவிகள் முறையே வடசேரி, அருமன, திருவட்டாறு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு அம்ம வீடு தஞ்சாவூர் அம்ம வீடு (அல்லது வடசேரி படிஞ்ஞரே அம்மா வீடு) ஆகும். இதில் ஒரு பழைய எட்டுக்கட்டு மற்றும் ஒரு பெரிய இரு மாடிக் கட்டிடம் என இரண்டு கட்டிடங்கள் உள்ளன. தஞ்சாவூர் அம்ம வீடு தனித்துவம் கொண்டதாகத் தோன்றினாலும், அது வடசேரி வளாகத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.
காலப்போக்கில் அரச மரபு மங்கியபோதும், மேற்கு கோட்டையின் ஆறாற்று சாலையை ஒட்டி அமைந்துள்ள இக்கட்டிடங்கள் இன்றும் , திருவாங்கூர் வரலாற்றின் ஒரு பகுதியை அமைதியாக எதிரொலிக்கின்றன.
மேற்கண்ட முக்கிய அம்மா வீடுகளுக்கு அப்பால், அரசரின் சகோதரர்களின் மனைவிகள் வசித்த சிறிய அம்ம வீடுகளும் உள்ளன.
அவை:
இரணியல் (அல்லது புளிமூட்டில்) அம்மவீடு
பங்களாவில்
அம்ம வீடு
கரமன புத்துமன அம்ம வீடு
கல்லடா அம்ம வீடு
கல்லம்பள்ளி அம்ம வீடு
ஸ்ரீவராகம் தளகுளத் அம்ம வீடு
முப்படிக்க அம்ம வீடு
இவற்றில் பெரும்பாலானவை இன்று சிதிலமடைந்தோ அல்லது நவீன தேவைகளுக்கேற்ப மறுகட்டமைக்கப்பட்டோ, தங்கள் மூல கட்டிடக்கலை வடிவத்தை இழந்துள்ளன.
அருமன, வடசேரி, திருவட்டாறு, நாகர்கோவில் மற்றும் தஞ்சாவூர் அம்மா வீடுகள் தங்கள் கட்டிடக் கம்பீரமும், திருவாங்கூர் வரலாற்றுடன் உள்ள தொடர்பும் காரணமாக, கேரள அரசு அங்கீகரித்த மாவட்ட வாரியான பாரம்பரியக் கட்டிடப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 2008 பிப்ரவரி மாதத்தில் நகர மற்றும் கிராமத் திட்டமிடல் துறை தயாரித்த ஆவணங்களிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
அருமன அம்ம வீடு,
முக்கிய அம்ம வீடுகளில் ஒன்றான அருமண அம்ம வீடு, கார்த்திகை திருநாள் இராம வர்மா (1758–1798), அவிட்டம் திருநாள் பாலராம வர்மா (1798–1810) மற்றும் ஸ்ரீ விஷாகம் திருநாள் இராம வர்மா (1880–1885) ஆகியோரின் துணைவியர் வசித்த இல்லமாக இருந்தது.
பெயரில் குறிப்பிட்டு இருப்பது போல, அருமன அம்ம வீடு கன்னியாகுமரி மாவட்டம், விளவன்கோடு தாலுகா, ஆற்றூர் பகுதியில் உள்ள அருமன குடும்பத்தைச் சேர்ந்தது. மற்ற அம்மா வீடுகளிலிருந்து அருமன அம்ம வீடு தனித்துவம் பெறுவதற்கு காரணம், வரலாற்று நபர்களைத் தெய்வமாக வழிபடும் மரபு ஆகும். இங்கு இரவிக்குட்டி பிள்ளை என்பவரின் சிலை இருந்தது; அவரை இளங்கத்து அப்புப்பன் என வழிபட்டனர்.
இரவிக்குட்டி பிள்ளை, கல்குளத்தை ஆட்சி செய்த ரவி வர்ம குலசேகரரின் மகன் என நம்பப்படுகிறது.
ஆவிகளை அழைக்கும் வேச்சுப்பூஜை மரபு, அருமன அம்ம வீட்டைத் தவிர வேறு எந்த அம்ம வீட்டிலும் இல்லை என்கின்றனர். விளவன்கோடு தாலுகாவில் இருந்த பழைய அம்ம வீடு விற்றபோது, அந்தச் சிலைகள் பெருந்தண்ணியில் உள்ள அருமன அம்ம வீடு வளாகத்திலுள்ள கணபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன” என
கூறப்படுகிறது.
கணபதி கோவில் 1078 கி.பி.-இல் பூஞ்சாட்டுடைய பெருமாள் பாண்டிய பூபதி என அறியப்பட்ட ராம வர்ம வலிய கோயி ராஜா அவர்களால் கட்டப்பட்டது. மடத்தில் கணபதி என்றும் அழைக்கப்படும் இக்கோவில், அருமன அம்மா வீட்டிற்கு இணையான பழமையைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள அருமன அம்ம வீட்டை “பெருந்தண்ணி மடம்” எனவும் குறிப்பிடுகின்றனர்.
மேற்கு கோட்டைக்கு அருகிலுள்ள பெருந்தண்ணியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம், ஆறாட்டு சாலையை நோக்கி நிற்கும் மூன்று மாடி மையக் கட்டிடத்துடன் தன் தனித்துவ தோற்றத்தை இன்றும் காத்திருக்கிறது.
வளைவான நுழைவாயில்களுடன் கூடிய மையக் கட்டிடம் காலனித்துவ (பிரிட்டிஷ்) பாணியில், ஓடு கூரையுடன் உள்ள இணைப்புக் கட்டிடம் பாரம்பரிய கேரள கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இவ்வாறு, அருமண அம்ம வீடு பிரிட்டிஷ் மற்றும் கேரள கட்டிடக்கலை பாணிகளின் கலவையாக விளங்குகிறது.
1858 ஆம் ஆண்டில் இளவரசர் விசாகம் திருநாள் ராம வர்மர் அவர்கள் தனது மனைவி பாரதி லக்ஷ்மி பிள்ளை அம்மச்சி அவர்களுக்காக மறுசீரமைக்கப்பட்டது. அருமன அம்மவீட்டின் கட்டிடக்கலை, மகாராஜா விசாகம் திருநாளின் வாசஸ்தலமான அனந்த விலாசம் அரண்மனையின் பாணியை பிரதிபலிக்கிறது. தூண்கள் மற்றும் வரண்டாவில் காணப்படும் தனித்துவமான பொறிப்புகள் இதற்குச் சான்றாகும்.
ஆட்சியிலிருந்த மகாராஜாக்களின் திருமணங்கள் பெரும்பாலும் அம்மவீடுகளில் ஒன்றைச் சேர்ந்த மணமகள்களுடன் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகும், அந்த மனைவிகள் அரசரின் மெருகுடனும் வைபவத்துடனும் தங்கள் குடும்பங்களைச் சந்திக்க வருகை தந்தனர். முக்கியமான பண்டிகை காலங்களில் அருமன அம்மவீட்டில் பிரமாண்டமான விழாக்களும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டிருந்தன.
சுதந்திரத்திற்குப் பிந்தையும் அரசாட்சி முடிவடைந்த பின்னரும், அம்மவீடு குடும்பத்தைச் சேர்ந்த பல சிறப்பு பெற்ற ஆளுமைகள் நீண்ட ஆண்டுகள் அருமன அம்மவீட்டில் வசித்து வந்தனர்.
இன்றைக்கு, தனது மிளிரும் புதிய வடிவில் வில்லா மாயாவாக விளங்கும் இந்த இடம், பாரம்பரிய கட்டிடக்கலையையும் பண்பாட்டு பாணி உணவுப் பண்பாட்டையும் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இதிலிருந்து உருவான நுட்பமான வாழ்வியல் பாணி, ஒரு மகத்தான வரலாற்று மரபை பிரதிபலிக்கிறது.
தற்போது
முத்தூட் பாப்பச்சன் குழுமம் நடத்தும் உயர்தர உணவகம் வில்லா மாயா, ஆக மாறி அமைதியின் உலகுக்குள் அழைத்துச் செல்லும் வகையில் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட, ருசியான உணவு வழங்கும் இடமாக திகழ்கிறது.
மாயா வில்லாஸ் (Maya Villas)” என்ற பெயர் பல இடங்களை குறிக்கக்கூடும். ஆனால் அதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது இந்தியாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ‘வில்லா மாயா (Villa Maya)’ ஆகும்.

14 Jan 2026

அ. மாதவையாவின் கிளாரிந்தா நாவல்!

  

அ. மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் ,1872-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி பிறந்தவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர்.இளமைப் பருவத்தில் அவர் காலனித்துவ ஆங்கிலக் கல்வியையும், தமிழில் ஒரு பண்டிதரிடம் பாரம்பரிய கல்வியையும் பெற்றிருந்தார். தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டு வருவதில் நம்பிக்கை உடையவர். 1914 ஆம் ஆண்டில் ‘இந்திய கும்மி’ என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது .

மாதவையர் தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். 1924-ல் பஞ்சாமிருதம் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவற்றை 1924 முதல் 1925 வரை வெளியிட்டு வந்தார் .
நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் இவர் எழுதிய ‘சாவித்திரியின் கதை’ என்ற தொடர் 1903 ஆம் ஆண்டு ‘முத்துமீனாக்ஷி’ என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.
ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஒத்தெல்லோ எனும் வெனிசு மோரியன் நாடகம் , உதயலன் என்னும் கொற்கைச் சிங்களவன் என்ற பெயரில் தமிழாக்கம் பெற்று 1903 ல் வெளிவந்தது.
ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.
மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் (1892) படிக்கும் காலத்தில், பிரிட்டிஷ் மிஷனரிகளுடனும் இந்திய கிறிஸ்தவ மதமாற்றம் பெற்றவர்களுடனும் நெருக்கமான அறிவுசார் உறவுகளை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
அவர் வாழ்நாள் முழுவதும் இந்துவாகவே இருந்தபோதிலும், அவரது முதல் ஆங்கில நாவலான Thillai Govindan (1903) சில மிஷனரிகளின் உயர்ந்த ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் பாராட்டுகிறது; குறிப்பாக மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியின் முதல்வராக இருந்த வில்லியம் மில்லர் (1838–1923) அவர்களைப் பற்றி புகழ்ந்து குறிப்பிட்டு இருந்தது. அதே நேரத்தில், அதே நாவலில் பெயர் குறிப்பிடப்படாத சில மெட்ராஸ் மிஷனரிகள் ஆடம்பர வாழ்க்கை நடத்துவதாகவும் விமர்சிக்கப்பட்டிருந்தனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியப் பெண்கள் சீர்திருத்த இயக்கங்கள் ஊடாக விதவை மறுமணம், குழந்தைத் திருமண ஒழிப்பு, பெண்கள் கல்வி போன்றவற்றில் மாதவையா ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவ்வகை சீர்திருத்தங்களை ஆதரித்த பிரிட்டிஷ் மிஷனரிகளுடன் அவர் பல நேரங்களில் கருத்து ஒற்றுமை கொண்டிருந்தார். ஆனால் அவரது ஆரம்பகால நாவல்கள், குறிப்பாக கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மதமாற்றப் பிரசார நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிக்கின்றன.
அவரது தமிழ் நாவலான Padmavati Carittiram (1898, 1899) மற்றும் ஆங்கில நாவலான Satyananda (1909) ஆகியவற்றில், ஒரு இளம் மாணவனின் அனுபவக் குறைபாட்டைப் பயன்படுத்தி அல்லது மாணவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் இடையிலான முரண்பாட்டைச் சாதகமாக்கி மதமாற்றத்தை ஏற்படுத்த முயன்ற மிஷனரி நடவடிக்கைகளை மாதவையா வெளிப்படுத்தி இருந்தார்.
இதற்கு மாறாக, அவரது இறுதி ஆங்கில நாவலான Clarinda: A Historical Novel (1915), அவரது படைப்புகளில் இந்திய கிறிஸ்தவ மதமாற்றத்தை மிக நேர்மறையாக சித்தரிக்கும் நாவலாக விளங்குகிறது.


தஞ்சாவூரில் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மராத்தா பிராமணப் பெண் மதமாற்றம் ஊடாக வாழ்க்கையை மறுஆக்கமாக (reimagination) உருவாக்கும் இந்த வரலாற்று நாவலில், இளம் கிளாரிண்டாவுக்கான கிறிஸ்தவ மதமாற்றம் ஒரு விடுதலையான முடிவாகக் காட்டப்படுகிறது.
அவளது மதமாற்றம், விதவையாகிய அவளை, கணவரின் குடும்பத்தின் தந்தைமையாதிக்க (patriarchal) கட்டுப்பாட்டிலிருந்தும் கொடுமையிலிருந்தும் விடுவித்து, சமூகத்திற்கு சேவை செய்யும் ஒரு நன்கொடையாளர் மற்றும் ஆரம்பகால சமூக சீர்திருத்தவாதியாக உருவாக அனுமதிக்கிறது.

சில மதமாற்ற உத்திகள் ஒழுக்க வரம்புகளை மீறக்கூடும் என்பதில் மாதவையா விமர்சன மனப்பாங்கைக் கொண்டிருந்தபோதிலும், பெண்களின் சமூக நிலையை மேம்படுத்தும் மிஷனரி நோக்கங்கள் தனது சொந்த நம்பிக்கைகளுடன் பல இடங்களில் ஒத்துப்போகின்றன என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

காலனித்துவ மிஷன்களுக்கு எதிரானதும் ஆதரவானதும் கலந்த இந்த அணுகுமுறை, பல பண்பாடுகள், மத மரபுகள், மொழிகள் ஆகியவற்றுக்கிடையில் பயணிக்கக் கூடிய (shuttle between) ஒரு காலனித்துவ வாழ்க்கையை அறிந்த இந்திய அறிவுஜீவியாக மாதவையாவின் திறனை வெளிப்படுத்துகிறது.

அவருடைய நூல்களில் வரலாற்று நாவலான “கிளாரிந்தா” ஒரு முக்கிய எழுத்தாகும்.

யாரிந்த கிளாரிந்தா

சதி செய்யத் தயாராக இருந்த வேளையில், ஹென்றி லிட்டில்டன் என்ற ஆங்கில அதிகாரி அவளின் அவல நிலையை கண்டு, உயிருடன் எரிக்கப்படுவதிலிருந்து அவளை மீட்டார். லிட்டில்டன் அவளுக்கு கிறிஸ்தவ வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தினார்.
அவள் கிறிஸ்தவத்தை முழுமையாக தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ்க்கையையும் நடத்தத் தொடங்கியிருந்தாள். கிறிஸ்தவ போதனையின்படி ஏதோ ஒரு வடிவிலான திருமுழுக்கு (பாப்திஸம்) அவசியமானதாகக் கருதப்படுவதால், 1774ஆம் ஆண்டில், அந்தப் பகுதிகளில் பணியாற்றி வந்தும் அவளுக்கு தெரிந்தவருமான பிரித்தானிய CMS (Church Mission Society) மிஷனரியான மதகுரு. சி. எப். ஷ்வார்ட்ஸ் அவர்களிடம் தனக்கு திருமுழுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டாள்.

ஆனால், அவள் சட்டபூர்வமற்ற உறவுடன் கூடிய பாவமான வாழ்க்கை நடத்துகிறாள் என்று கருதிய ஷ்வார்ட்ஸ், அந்த வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். இதற்கிடையில், லிட்டில்டன் கௌட் (gout) நோயால் திடீரென இறந்தார்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு (1778), தனது துணைவர் இறந்துவிட்டதால், கடந்தகால வாழ்க்கை இனி திருமுழுக்கிற்கு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி, கிளாரிண்டா மீண்டும் ஒருமுறை ஷ்வார்ட்ஸிடம் திருமுழுக்கு கோரிக்கை வைத்தாள். இந்த முறை, அவளின் பக்தி நிறைந்த வாழ்க்கையையும் தன்னலமற்ற சேவையையும் கருத்தில் கொண்டு, ஷ்வார்ட்ஸ் மறுப்பில்லாமல் அவளுக்கு திருமுழுக்கு அளித்தார் (1778) என்று சொல்லப்படுகிறது. அப்போது அவளின் பெயரும் கிளாரிண்டா என மாற்றப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய முதல் நபர் கிளாரிண்டா ஆவாள்.
திருமுழுக்குக்குப் பிறகு விரைவிலேயே, கிளாரிண்டா தன்னை முழுமையாக மிஷனரி பணிக்காக அர்ப்பணித்தாள். அவள் பாளையங்கோட்டைக்கு இடம்பெயர்ந்து, குறிப்பாக பெண்கள் மத்தியில் விதவைகள், அநாதைகள், மற்றும் பின்தங்கிய மக்களிடையே ஆன்மிக மற்றும் சேவைப் பணிகளை மேற்கொண்டாள் என்று கூறப்படுகிறது.

இன்றும் பாளையம்கோட்டையில் அமைதியான இடம் தேடி கிளார்ண்டா ஆலயம் சென்று வாசிப்பில் ஆழ்ந்து இருப்பதை காணலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 அ. மாதவையாவின் கிளாரிந்தா நாவல் சார்ந்து பல விவாதங்கள் விரைவுரைகள் நடந்தது. அவையில் சிலவை வாசிக்கலாம்.


1888ஆம் ஆண்டு Madras Christian College Magazine இல் வெளியான கட்டுரையில், அந்தக் கல்லூரியின் முதல்வரும் ஸ்காட்டிஷ் மிஷனரியுமான வில்லியம் மில்லர், இந்து சமூகங்களில் உள்ள ஒழுக்கக் குறைகளை கிறிஸ்தவ இலக்கணங்களுடன் ஒப்பிட்டு, இந்துமதத்தை “பொய் மதம்” என நிரூபிக்க முயலும் மிஷனரிகளை விமர்சித்திருந்தார்.
மேலும் “இத்தகைய ஒப்பீடுகள் அநியாயமானவை மட்டுமல்ல; அழிவையும் ஏற்படுத்தும்,” என அவர் எச்சரிக்கிறார். “இலக்கணங்களை இலக்கணங்களுடனே, நடைமுறைகளை நடைமுறைகளுடனே ஒப்பிட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
“பகுத்தறிவில்லாத மதங்களும்” “கிறிஸ்தவ உலகமும்” ஒழுக்க ரீதியாக சிக்கலான வரலாறுகளை கொண்டவையே; ஆனால் கடவுளைத் தேடுபவர்களுக்கு அவர் எங்கும் தூரத்தில் இல்லை என்றும் மில்லர் கூறிப்பிடுறார்.

மாதவையாவின் முதல் ஆங்கில நாவலான Thillai Govindan இல், மில்லரை அவர் பெயரிட்டே பாராட்டுகிறார்; அவரது “தன்னலமற்ற தியாகமும் தானமும் நிறைந்த வாழ்க்கை, மாணவர்களுக்கு ஒரு பிரகாசமான விளக்காக ஒளிர்ந்தது” என்று கூறிப்பிடுகிறார். மாதவையா, மில்லரின் கொள்கை அல்ல; அவரது நெறி வாழ்க்கையையே முக்கியமாகக் காட்டுகிறார். “அனைத்து மறைநூல்களும் ஒரே நெறியையே போதிக்கின்றன” என்றும் தனது நாவலின் குறிப்பிட்டுள்ளார்.

எம். குப்புசாமி செட்டி, தன்னை “இந்துவும் தூய ஒரே இறைவன் நம்பிக்கையாளனும்” என வரையறுத்து, “தூய மத உண்மைகளை” போதிக்கும் எந்த நிறுவனத்தையும், சமூக சீர்திருத்தத்திற்காக வெவ்வேறு மதங்களையும் சாதிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளையும் ஆதரித்துள்ளார் .

1890ஆம் ஆண்டு ஹெச். நாராயண ராவ் என்ற இந்து மாணவர் எழுதிய கட்டுரையில், கல்லூரியில் சேர்ந்தபோது “கிறிஸ்தவத்தை நொடியில் சிதைத்துவிடலாம்” என்ற பெருமிதத்துடன் வந்ததாகவும், ஆனால் கல்வியின் மூலம் இப்போது “முன்பு நம்ப முடியாத கிறிஸ்தவர்களின் நேர்மையைப் பாராட்டத் தயாராக இருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டு உள்ளார். அவர் கிறிஸ்தவத்தின் கொள்கைகளைவிட, அதன் பின்பற்றுவோரின் நேர்மையையே மதிக்கிறார். மேலும், அவர் கலந்து கொள்கிற தியிஸ்டிக் சோமாஜ் இயக்கத்தில் பைபிள் வாசிப்பும் இடம்பெறுகிறது என்பதையும் குறிப்பிட்டு, கிறிஸ்தவ சிந்தனைகள் பிற இந்து இயக்கங்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளன எனக் குறிப்பிடுகிறார்.

இதனால், செட்டியும் ராவும், மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியின் மதங்களுக்கு இடையேயான கல்வி அணுகுமுறையுடன் ஒற்றுமை காட்டி, பெண்கள் கல்வி உட்பட சமூக சீர்திருத்தங்களில் பல மதத்தவர்கள் இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான இடத்தை உருவாக்குகின்றனர்.

சாஸ்கா எபெலிங் , ஆரம்ப கால தமிழ் நாவல் குறித்த தனது ஆய்வில் , நாவல் என்ற இலக்கிய வடிவம், “உண்மையான சமூக பிரச்சினைகளுக்கு கற்பனையான தீர்வுகளை ஆராயும் வாய்ப்பை” வழங்கியதால் இந்திய ஆரம்பகால எழுத்தாளர்களுக்கு ஈர்ப்பாக இருந்தது என்று கூறுகிறார். . சமூக சீர்திருத்தவாதியாக இருந்த மாதவையா, ஆங்கில நாவலை மதமும் பண்பாடும் வேறுபட்ட சமூகங்களுக்கு இடையிலான நடுவர் தளமாகக் கற்பனை செய்கிறார்.

பிந்தைய விக்டோரிய காலத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் சீர்திருத்தவாதியான இந்திய தேசியவாதத்தையும் ஆதரித்தவர் அன்னி பெசண்ட். வேதகாலக் கற்பனையான பெண்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, இந்தியப் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்விக்காக வாதிட்டார். கல்வி பெற்ற இந்துப் பெண்கள், மேற்கத்திய “நியூ வுமன்” போன்று வீட்டுக்கு வெளியே தொழில் பயிற்சி பெறும் பெண்களாக இல்லாமல், இந்து புராணங்களில் வரும் ஆதுரவான மனைவிகள், தாய்மார்கள் அல்லது திருமணம் செய்யாத பெண் அறிஞரான பிரம்மவாதினி போன்றவர்களாக இருக்கலாம் என்று அவர் வலியுறுத்தினார் .

ஆனால், இந்த உயர்சாதி இந்துப் பெண், வீட்டுக்குள் ஆன்மிகத்தின் தாங்குதளமாகவும், விக்டோரிய “ஏஞ்சல்” போல இல்லறத் திறன்களும் தோழமைத் திருமணமும் கொண்டவளாக இருந்தாலும், அவள் தெளிவாக கிறிஸ்தவள் அல்ல. மதமாற்றம் நிகழ்ந்தால், உயர்சாதிப் பெண்ணை இல்லற ஆன்மிகத்தின் மையமாகக் காணும் கருத்து குலைந்துவிடும்; மேலும், மதமாற்றம் செய்த பெண் தன் குடும்பத்திலிருந்தும் சாதி சமூகத்திலிருந்தும் புறக்கணிக்கப்படுவதால், அவளது திருமணமும் இல்லற வாழ்வும் அடிப்படையாகப் பாதிக்கப்படும்.

மிஷனரி பள்ளிகளில் கல்வி கற்று வந்த , குறிப்பாக உயர்சாதிப் பெண்கள், வேறு மதத்திற்கு மாறக்கூடும் என்ற அச்சம், இந்தியப் பெண்களின் நிலையை மேம்படுத்த விரும்பிய பிரிட்டிஷ் மிஷனரிகளுக்கும் இந்து சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. பார்த்த சாட்டர்ஜி குறிப்பிட்டபடி, வங்காளத்தில் உயர்சாதி இந்து குடும்பங்கள், தங்கள் மகள்கள் மதமாற்றம் செய்து விடுவார்கள் என்ற பயத்தால், புதிதாகத் திறக்கப்பட்ட மிஷனரி பள்ளிகளுக்கு அவர்கள் பிள்ளைகளை அனுப்ப தயங்கினர்; இந்து பள்ளிகள் உருவான பிறகே பெண்கள் கல்வி சீர்திருத்தத்திற்கு அவர்கள் ஆதரவு அளித்தனர் .

மேலும், 1893ஆம் ஆண்டு பூனாவில், கிறிஸ்தவ மதமாற்றம் பெற்றவரான பண்டிதா ரமாபாய் நிறுவிய பிராமண விதவைகளுக்கான பள்ளிகளில் ஏற்பட்ட சர்ச்சை, மத சீர்திருத்த முயற்சிகள் எவ்வாறு மத சமூகங்களைப் பிளவுபடுத்தக் கூடும் என்பதற்குச் சான்றாக அமைந்தது. கேசரி பத்திரிகை, ரமாபாய் மாணவிகளை கிறிஸ்தவத்திற்கு மாற்றுகிறார் என்ற வதந்தியை வெளியிட்டதன் பின்னர், 25 மாணவிகள் அந்தப் பள்ளியிலிருந்து திரும்பப் பெறப்பட்டனர் (Forbes ).

குமாரி ஜெயவர்தனே கருத்துப்படி, கிறிஸ்தவத்தை விட புத்தமதம் அல்லது இந்துமதத்தில் ஆர்வம் கொண்ட தியோசபி அல்லது ஓரியண்டலிஸ்ட் மேற்கத்திய பெண்கள் சீர்திருத்தவாதிகள், பாரம்பரிய மதிப்புகளை உறுதிப்படுத்தியதால், இந்தியப் பெண்களுடன் சகோதரத்துவ உறவை உருவாக்க அதிக வாய்ப்பு பெற்றனர் .

கொள்கை ரீதியில், பிரிட்டிஷ் மிஷனரிகளும் ரமாபாய் போன்ற கிறிஸ்தவ மதமாற்றம் பெற்றவர்களும், பெண்கள் கல்வியில் ஒரே மாதிரியான இலக்குகளை ஆதரித்தாலும், நடைமுறையில் அவர்கள் எப்போதும் ஒன்றுபட்டவர்கள் அல்ல என்பதாகவே இருந்தது.

இத்தகைய விமர்சனங்கள், குறிப்பாக மேலைநாட்டுக் கல்வி பயின்ற இந்துக்களிடையே, இந்து மரபுகளை மறுவாக்கம் செய்யவும் சீர்திருத்தவும் தூண்டுகோலாக அமைந்தன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கக்கால இந்தியச் சீர்திருத்தவாதியான ராம்மோகன் ராய் போன்றவர்கள், வேதாந்தங்கள் மற்றும் உபநிடதங்கள் உருவான காலத்தை இந்தியாவின் "பொற்காலம்" என்று போற்றினர். இந்த இலக்கியங்களிலிருந்து - பெண்களை மேம்பட்ட முறையில் நடத்துவது உள்ளிட்ட - உயரிய லட்சியங்களை அவர்கள் முன்வைத்தனர். இவற்றைச் நடைமுறைப்படுத்தினால் நவீன இந்தியச் சமூகத்தைச் சீர்திருத்த முடியும் என்று அவர்கள் கருதினர்

ஏ. மாதவியாவின் இந்திய ஆங்கில நாவலான கிளாரிந்தாவில் (1915) இந்து மற்றும் கிறிஸ்தவ நெறிமுறைகளை ஒருங்கிணைத்தல் - ஏ. மாதவய்யா மற்றும் 'கிளாரிந்தா': ஒரு பகுப்பாய்வு

Clarinda நாவலில், பிராமண மற்றும் புராட்டஸ்டண்ட் சமூகங்களில் உள்ள ஒருங்கிணையும் நெறி மதிப்புகளை முன்வைத்து, இந்தியப் பெண்கள் கல்வி மற்றும் சீர்திருத்தப் பணிகளில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்பதைக் வலியுறுத்துகிறார். காலனித்துவ அதிகாரச் சமநிலையற்ற சூழலிலும், இத்தகைய படைப்புகள், மதங்களுக்கு இடையேயான ஒழுக்கப் பொதுத்தளத்தை உருவாக்கி, சமூக சீர்திருத்தத்திற்கான புதிய ஒத்துழைப்புகளை சாத்தியமாக்கும் என்பதைக் காட்டியுள்ளன என்கிறார்.


வெவ்வேறு மொழிகளில் எழுதும் திறனும், தனது படைப்புகளுக்குப் பலதரப்பட்ட வாசகர்களை எதிர்பார்க்கும் மாதவய்யாவின் போக்கும், புரோட்டஸ்டன்ட் மிஷனரிகள் போன்ற காலனித்துவத் திட்டங்கள் குறித்து அவர் கொண்டிருந்த பன்முகத்தன்மை கொண்ட நிலைப்பாட்டுடன் தொடர்புடையது என்று நான் வாதிடுவேன். குறிப்பாக 'கிளாரிந்தா' (Clarinda) நாவலில், அதன் நாயகியின் மத மாற்றத்தை மாதவய்யா சித்தரித்துள்ள நுணுக்கமான விதம், பல கலாச்சாரங்களுக்கும் அவற்றின் விழுமியங்களுக்கும் இடையே "இருக்கை லாவகத்துடன்" (ambidextrously) இயங்கும் அவரது திறனைப் பிரதிபலிக்கிறது.

கிளாரிந்தாவின் மத மாற்றக் கதையாடல், மாதவய்யா தனது இளங்கலை படிப்பின் போது பயின்ற அதே மிஷனரி கல்வி நிறுவனத்தில் பின்பற்றப்பட்ட ஒப்பீட்டு மத அணுகுமுறைகளை அவரே சுவீகரித்துக் கொண்டதைக் காட்டுகிறது. கிளாரிந்தா நாவல், இந்து மற்றும் கிறிஸ்தவ மரபுகளுக்கிடையே பொதுவான அறப்பண்புகளை நிறுவுவதற்காக, மிஷனரி அணுகுமுறைகளை - குறிப்பாக விக்டோரியன் காலத்தின் பிந்தைய 'நிறைவேற்ற இறையியல்' (fulfillment theology) - திட்டமிட்டே மறுஆக்கம் செய்கிறது. மிஷனரிகள் இத்தகைய உரையாடல்களை மக்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு ஈர்ப்பதற்கான உத்திகளாகப் பயன்படுத்தியிருக்கலாம்; ஆனால் மாதவய்யாவின் நாவலோ, கொடைத்தன்மை மற்றும் நற்பண்பு மிக்க பெண்மை குறித்த இந்து மற்றும் புரோட்டஸ்டன்ட் சமூகங்களின் ஒத்த அற விழுமியங்கள், இந்தியப் பெண்களின் கல்விச் சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்கான பொதுவான நோக்கத்திற்காக அவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

கிளாரிந்தாவின் மத மாற்றத்தை ஒரு புதிய அடையாளத்தை ஏற்றுக்கொள்வதாகப் பார்ப்பதை விட, அவரது அந்த மாற்றச் செயல்பாட்டை, ஒரு உயர்குடி பிராமணப் பெண் என்ற அவரது பழைய அடையாளத்தை ஒரு புதிய சமூக மற்றும் மதச் சூழலுக்குள் நிகழ்த்தப்பட்ட 'கலாச்சார அல்லது அறநெறி மறுகட்டமைப்பாகவே எழுத்தாளர் கருதுகிறார். . 


ரண்டு சமய மரபுகளின் பிரதிநிதித்துவம்

மாதவய்யாவின் கிளாரிந்தா (Clarinda) நாவல், காலனித்துவ இந்தியாவில் ஒரு நூற்றாண்டு காலமாக நடந்த பெண்களுக்கான சமூக சீர்திருத்தங்களை 'வரலாற்று காதல்-சாகச' (historical romance) வகைமையின் ஊடாகப் பிரதிபலிக்கிறது. 

'கிளாரிந்தா' நாவலின் அடிப்படை அமைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் வரலாற்று நாவல்களுக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது. மாதவய்யா நன்கு அறிந்திருந்த வால்டர் ஸ்காட் (Walter Scott) மற்றும் ஜார்ஜ் எலியட்டின் ரோமோலா (Romola - 1862–63) ஆகிய படைப்புகளைப் போலவே, 'கிளாரிந்தா' நாவலும் வரலாற்றுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று மாந்தர்களையும் கற்பனைப் பாத்திரங்களையும் இணைத்துக் கதை சொல்கிறது.

மாதவய்யாவின் கிளாரிந்தா , மதமாற்றத்திற்கு முன்பு அவள் பெயர் காவிழுந்தா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞராகச் சித்தரிக்கப்படுகிறாள். பண்டிதரான அவளது தாத்தா அவளுக்குப் பல மொழிகளில் எழுதவும் படிக்கவும் கற்றுத் தந்திருக்கிறார். தாத்தாவின் மறைவுக்குப் பிறகு, காவிழுந்தா வயதான ஒரு 'திவானுக்கு' அவசரமாகத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். அவர் அவளைக் கொடுமைப்படுத்துவதோடு, அவளது அறிவாற்றலையும் மதிக்கவில்லை. திவான் இறந்த பிறகு, காவிழுந்தா கட்டாய உடன்கட்டை ஏறுதலில் (Sati) இருந்து நூலிழையில் தப்புகிறாள்.

லிட்டில்டன் (Lyttelton) எனும் பிரிட்டிஷ் அதிகாரி அவளைச் சிதையில் இருந்து மீட்டு, அவளது கணவர் குடும்பத்தினரிடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறார். ஒரு பிரிட்டிஷ் அதிகாரி உடன்கட்டை ஏறும் பெண்ணைக் காப்பாற்றுவது என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல 'கீழைத்தேயக் காதல்' (Orientalist romances) கதைகளில் வரும் ஒரு உத்தியாகும். அதேசமயம், இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளும் மிஷனரிகளும் ஈடுபட்ட சமூக சீர்திருத்த விவரணங்களை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறது.

லிட்டில்டனும் கிளரிண்டாவும் காதலிக்கிறார்கள். லிட்டில்டனின் சமயப் போதனைகளால் ஈர்க்கப்பட்டு கிளரிண்டா கிறிஸ்தவ மதத்தைத் தழுவி தனது பெயரை மாற்றிக்கொள்கிறாள். லிட்டில்டனுக்கு ஏற்கனவே இங்கிலாந்தில் ஒரு (மனநலம் பாதிக்கப்பட்ட) மனைவி இருப்பதால், அவனால் கிளரிண்டாவைச் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்ய முடியாது. எனவே, அவன் ஒரு பொய்த் திருமணத்தைச் செய்து அவளை ஏமாற்றுகிறான். இந்த ஏமாற்று வேலை, சார்லோட் ப்ரோன்டேயின் ஜேன் ஐயர் (Jane Eyre - 1847) போன்ற விக்டோரியன் கதைகளின் தாக்கத்தைக் காட்டுகிறது. இந்த உத்தியின் மூலம், கிளாரிந்தா தன் விருப்பத்தின் பேரில் முறைதவறி வாழவில்லை என்பதை மாதவய்யா உறுதி செய்கிறார். இதன் மூலம், அவள் ஒரு ஒழுக்கமான பெண்ணாகவும், அதே சமயம் லிட்டில்டனுடனான அவளது வரலாற்றுப்பூர்வமான உறவுக்கு உண்மையானவளாகவும் காட்டப்படுகிறாள்.

இந்த ஏமாற்று வேலை, ஜெர்மன் மிஷனரியான ஃப்ரெடெரிக் ஸ்வார்ட்ஸ் (Frederick Schwartz) என்பவருக்குத் தெரியவரும்போது அம்பலமாகிறது. அவர் கிளாரிந்தாவிற்கு ஞானஸ்நானம் (Baptism) வழங்க மறுக்கிறார். லிட்டில்டனின் துரோகத்தால் கிளாரிந்தா நிலைகுலைந்தாலும், அவனது இறுதிக்காலத்தில் அவனுக்குப் பணிவிடை செய்கிறாள். லிட்டில்டனின் மறைவுக்குப் பிறகு, அவள் பாளையங்கோட்டை கிறிஸ்தவ சமூகத்தில் ஒரு சிறந்த கொடையாளியாகவும் தலைவராகவும் மாறுகிறாள். இறுதியில் ஸ்வார்ட்ஸ் திரும்பி வந்து கிளாரிந்தாவிற்கும், அவளது  தத்தெடுக்கப்பட்ட மகனுக்கும் ஞானஸ்நானம் வழங்குகிறார்.

வரலாற்றுப் பின்னணியும் கலாச்சாரச் சந்திப்பும்

கிளாரிந்தாவின் கதை பதினெட்டாம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனையில் நடக்கிறது. தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களை முறியடித்து, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு சமஸ்தானங்களில் ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிய காலம் அது. இந்த இடைக்காலத் தேர்வினூடாக, கிறிஸ்தவம் மற்றும் பிரிட்டிஷ் கலாச்சாரத் தாக்கங்கள் ஏற்படுவதற்கு முன்னிருந்த பிராமணச் சமூகத்தை மாதவைய்யாவால் கற்பனை செய்ய முடிந்தது.

மாதவய்யாவைப் பொறுத்தவரை, கிளாரிந்தா - லிட்டில்டன் இடையிலான காதல் என்பது இரண்டு வெவ்வேறு நாகரிகங்களுக்கு இடையிலான முதல் சந்திப்பைக் குறிக்கிறது. நாவலின் தொடக்கத்தில் வரும் 'பிரார்த்தனை' பகுதி, லிட்டில்டன் மற்றும் கிளாரிந்தாவின் கல்லறைகளை "கிழக்கும் மேற்கும் அருகருகே துயில் கொள்ளும் இடம்" என்றும், "இரண்டு பெரும் நாகரிகங்களின் பிரதிநிதிகள் ஓய்வெடுக்கும் இடம்" என்றும் வர்ணிக்கிறது.

மாதவய்யா சில சமயங்களில் பிராமண மரபுகளை ஒட்டுமொத்த "இந்து மதமாகவும்", இந்து மதத்தை ஒட்டுமொத்த "இந்திய நாகரிகமாகவும்" பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இருப்பினும், கிளாரிந்தாவின் மதமாற்றம் என்பது இந்து அறநெறிகளுக்குப் பதிலாகப் பிரிட்டிஷ் முறையை வைப்பது அல்ல; மாறாக, இது இந்து/பிராமண விழுமியங்களுக்கும் பிரிட்டிஷ் புராட்டஸ்டன்ட் விழுமியங்களுக்கும் இடையிலான ஒரு ஒருங்கிணைப்பாக (synthesis) மாதவய்யாவால் பார்க்கப்படுகிறது.

கிளாரிந்தா ஒரு கொடையாளியாகவும், தன்னைத் தியாகம் செய்யும் அன்பான மனைவியாகவும் திகழ்கிறாள். இந்த இரண்டு பண்புகளும் இரு கலாச்சாரங்களிலும் மதிக்கப்படுபவை என்று மாதவய்யா வாதிடுகிறார். கிளரிண்டாவின் ஆழ்ந்த கல்வி அறிவு அவளுக்குத் தனது சமூகத்தை விமர்சிக்கவும், ஒரு தொடக்ககாலச் சமூகச் சீர்திருத்தவாதியாக மாறவும் உதவுகிறது. மதங்களுக்கு இடையிலான ஒப்பீட்டின் மூலம் சில இடங்களில் வேறுபாடுகள் ஆழமாகத் தெரிந்தாலும், பெண்கல்வி மற்றும் பெண்கள் நல மேம்பாடு போன்ற பொதுவான விழுமியங்களை முன்னிறுத்தி இரு சமூகங்களையும் இணைப்பதே மாதவய்யாவின் நோக்கமாக உள்ளது.

சகுந்தலை, ஏவாள் மற்றும் இந்து-புரொட்டஸ்டன்ட் மரபுகளில் நிலவும் பெண் வெறுப்புச் சிக்கல்கள்

மாதவய்யா தனது நாவலில் இளம் கிளாரிந்தாவை அறிமுகப்படுத்தும் போது, பெண்களின் அறிவாற்றல் குறித்த, பெண் வெறுப்பு (misogynist) பார்வைகளை விமர்சிக்கிறார். இத்தகைய பார்வைகள் இந்து மற்றும் யூத-கிறிஸ்தவ மரபுகள் இரண்டிலுமே வேரூன்றியுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சமஸ்கிருதத்தில் ஏற்கனவே புலமை பெற்ற கிளாரிந்தா, காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தில் வரும் சில வரிகளைக் கண்டு ஆத்திரமடைகிறாள். அந்த வரிகள், பெண்களின் நுணுக்கமான தந்திரங்களைக் குயில் பறவையின் தந்திரத்துடன் ஒப்பிடு கிளாரிந்தா தனது தாத்தாவிடம் இப்படிக் குமுறுகிறாள்:

"ஆண்கள் அனைவரும் நற்பண்புக்கும் கள்ளமின்மைக்கும் பாதுகாவலர்கள் என்பது போலவும், பெண் பாலினம் மட்டும் ஏன் இழிவுபடுத்தப்பட வேண்டும்? முட்டாள்தனமாக குயில் குஞ்சுகளைப் பொரித்து வளர்க்கும் அந்த அப்பாவிப் பறவைகளைச் சொல்லாமல், ஏன் பெண் குயிலை மட்டும் பெண் இனத்திற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும்? இது அநீதியானது; முற்றிலும் ஒரு ஆணின் சிந்தனை." (Clarinda 55)


பெண்கள் ஏமாற்றுக்காரர்கள் என்றும், தங்களைச் சுற்றியுள்ள ஆண்களைத் தங்கள் தந்திரத்தால் கையாள்பவர்கள் என்றும் கட்டமைக்கும் ஒரு ஆணாதிக்கச் சொல்லாடலின் வெளிப்பாடாகவே இந்த வரிகளை கிளாரிந்தா பார்க்கிறாள்.

 அவளது தாத்தா முதலில் அவளது கோபத்தைத் திசைதிருப்ப முயல்கிறார். "இது ஒரு நாடகம்... ஒரு கவிஞன் தனது கதாபாத்திரங்களின் வாயிலாகச் சொல்லும் கருத்துக்களுக்கெல்லாம் அவனையே பொறுப்பாக்கக் கூடாது" என்று அவர் கூறுகிறார்.

அந்த நாடகத்தின் சூழலில், தன் கணவனால் அநியாயமாக ஏமாற்றுக்காரி என்று குற்றம் சாட்டப்படும் சகுந்தலையின் மீதே வாசகர்களின் அனுதாபம் இருக்கும் என்று தாத்தா கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால், அவரே தொடர்ந்து ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் இருந்து இதர உதாரணங்களைக் காட்டி, சீதையும் திரௌபதியுமே இந்தியப் புராண வரலாற்றில் பெரும் போர்களுக்குக் காரணமாக இருந்தனர் என்று கூறி தனது வாதத்தை நிலைநாட்ட முயல்கிறார்.

இருப்பினும், இந்தியப் பாரம்பரிய நூல்கள் பெண் வெறுப்பு கருத்துக்களை மட்டுமே கொண்டிருக்கின்றன என்ற தாத்தாவின் வாதத்தை ஏற்காமல், அந்த இரண்டு பெண் கதாபாத்திரங்களின் கதைகளுக்கும் கிளரிண்டா ஒரு மாற்று விளக்கத்தை (counter-interpretation) முன்வைக்கிறாள்:

  • திரௌபதி: தனது கணவர்களை விடவும் மேலான மான உணர்வு கொண்டவள் என்றும், அவர்களைக் கடமை மற்றும் புகழின் பாதையில் இட்டுச் சென்றவள் என்றும் திரௌபதியை கிளரிண்டா பார்க்கிறாள்.

  • சீதை: ராமனை விடவும் கள்ளங்கபடம் அற்றவள் சீதை; உண்மையில் அவள் இறுதிவரை ஒரு குழந்தையைப் போலவே இருந்து, ராமனின் கைகளால் தன் வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவித்தவள் என்று கூறுகிறாள்.

ஆணாதிக்கச் சமூகம் பெண்களின் "தந்திரம்" என்று எள்ளி நகையாடுவதைத் தாண்டி, பெண்கள் தங்கள் அறிவாற்றலை அறநெறி சார்ந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதைத் திரௌபதியின் கதையின் மூலம் கிளாரிந்தா வெளிப்படுத்துகிறார். அதே சமயம், சீதை மற்றும் சகுந்தலை போன்ற ஆதர்சப் பெண்கள், கற்புக்கரசிகளாகவும் அன்பான மனைவிகளாகவும் இருந்தபோதிலும் எவ்வளவு தனிப்பட்ட துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதையும் அவள் சுட்டிக்காட்டுகிறாள். கிளாரிந்தாவின் பார்வையில், ஆண்கள் தங்களின் தந்திரத்தையும் உயர்ந்த சமூக அந்தஸ்தையும் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும்போதுதான் பெண்கள் அதிகம் துன்பப்படுகிறார்கள்.

கிளாரிந்தாவைப் பொறுத்தவரை, இந்து மத நூல்கள் எப்போதுமே பெண்களைச் சதிகாரர்களாகச் சித்தரிப்பதில்லை; மாறாக, ஆணதிக்கப் போக்குடைய சில விளக்கங்களே அத்தகைய பிம்பங்களை வலுப்படுத்துகின்றன. சீதை மற்றும் திரௌபதி குறித்த தனது விளக்கங்களின் மூலம், "இந்து நூல்கள் பெண்களின் அடிமைத்தனத்தை மட்டுமே வலியுறுத்துகின்றன" என்று கருதிய ஆரம்பகால மிஷனரிகளுக்கும் கீழைத்தேய அறிஞர்களுக்கும் கிளாரிந்தா பதிலடி கொடுக்கிறாள்.

மிக முக்கியமாக, கிளாரிந்தா முன்வைக்கும் இந்த விமர்சனம் மேலைநாட்டுக் கல்வியின் விளைவாகப் பிறந்ததல்ல; மாறாக அது அவளது பாரம்பரிய சமஸ்கிருதக் கல்வியின் விளைவாகும். ஒரு பெண் தனது அறிவாற்றலைப் பயன்படுத்திப் பாரம்பரியக் கருத்துக்களையே கேள்வி கேட்க முடியும் என்பதை இந்தப் பகுதி நிரூபிக்கிறது.

கிளரிண்டா தனது கல்வியின் மூலம் அறிவை மட்டும் பெறவில்லை, அதனுடன் தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் திறனையும் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் "மேற்கத்தியக் கல்வியைப் பெறாமலேயே, ஒரு 'மறுமலர்ச்சிக்குப் பிந்தைய' (post-Enlightenment) அறிவுசார் மனப்பக்குவத்தை எட்டுகிறார்" . கிளாரிந்தாவின் முழுமையான பாரம்பரிய மற்றும் சமஸ்கிருத அடிப்படையிலான கல்வி, இந்திய மரபுகளுக்குள்ளேயே பொதுவான சமூக சீர்திருத்தத்திற்கான ஆற்றல் உள்ளது என்பதற்குச் சான்றாகச் சில சமகால இந்திய வாசகர்களால் பார்க்கப்பட்டது.

மாதவய்யாவின் நண்பர் சீனிவாச சாஸ்திரி, கிளரிண்டாவின் இச்சித்தரிப்பைப் பின்வருமாறு பாராட்டியுள்ளார்:

"ஆங்கிலக் கல்வி இல்லாமலேயே, புராணக் கதாபாத்திரங்கள் மற்றும் அவளைச் சுற்றியுள்ள வாழ்வின் சிக்கலான பிரச்சினைகள் குறித்து ஒரு புதிய கண்ணோட்டத்தை அவளால் கொண்டு வர முடிந்தது என்பது, உள்நாட்டுப் பண்பாட்டின் மிகச்சிறந்த கூறுகளில் - தைரியம், புதிய பார்வை மற்றும் நோக்கத்தின் உறுதிப்பாடு - ஆகியவை இன்றும் இருப்பதை எனக்கு நிரூபிக்கிறது. முன்னேற்றத்திற்கு இவை மிகவும் அவசியமானவை" (292).

பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலச் சூழலில், இலக்கிய விளக்கங்களில் உள்ள ஆணாதிக்கப் போக்கை கிளாரிந்தா விமர்சிப்பது ஒரு 'கால முரண்பாடாக' (anachronism) தோன்றினாலும், அவளது இந்தத் தொடக்க கால பெண்ணிய விளக்கங்கள், இந்து நூல்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் ஒழுக்கக் குறைபாடுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டிய 'கீழைத்தேய அறிஞர்களின்' (Orientalists) சொல்லாடல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன. கிளாரிந்தாவின் இந்த மறுப்பு, உள்நாட்டு மரபுகளுக்குள்ளேயே சமூக முன்னேற்றத்திற்கான தார்மீக மற்றும் அறிவுசார் அடிப்படை உள்ளது என்ற நாவலின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

அதே சமயம், மேற்கத்திய மரபுகளில் பெண்களைச் சிறுமைப்படுத்தும் போக்குகளையும் மாதவய்யா விமர்சிக்கத் தவறவில்லை. பெண்களின் தந்திரத்தால் ஏற்படும் ஆபத்துகளை வாதிடும் முயற்சியில், அந்தப் பண்டிதர் கிளாரிந்தாவிடம் கூறுகிறார்: "முதல் பெண் (ஏவாள்) முதல் ஆணைத் தூண்டி, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்ய வைத்தாள் என்றும், அதன் மூலமே 'உலகிற்கு மரணமும் நமது அனைத்துத் துயரங்களும் வந்தன' என்று யூதர்கள் கூறுகிறார்கள்" (Clarinda 57).

இங்கே மாதவய்யா, இந்து மற்றும் யூத-கிறிஸ்தவக் கதைகளை அருகருகே வைத்து, இரு மரபுகளிலும் பெண்கள் எவ்வாறு இழிவுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை ஒப்பிடுகிறார். மில்டனின் (Milton) 'பாரடைஸ் லாஸ்ட்' (Paradise Lost) காவியத்தில் வரும் மனித வீழ்ச்சி குறித்த வரிகளைப் பண்டிதர் மேற்கோள் காட்ட அனுமதிப்பதன் மூலம், புனித நூல்கள் மட்டுமன்றி கிறிஸ்தவ இலக்கியங்களிலும் பெண் தந்திரம் குறித்த விமர்சனம் ஊடுருவியிருப்பதை மாதவய்யா காட்டுகிறார்.


பெண்களின் அறிவுத்திறன் ஆண்களுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானது என்ற பொதுவான நம்பிக்கையைக் கொண்டிருப்பதால், இரண்டு மரபுகளுமே "சீர்திருத்தப்பட" வேண்டியவை என்பது அவரது கருத்து. இருப்பினும்,
நாவல் நகர நகர, கிறிஸ்தவ மரபு வலியுறுத்தும் சமூக சமத்துவம் மற்றும் கருணையை மாதவய்யா பெரிதும் பாராட்டுகிறார். இந்தியப் பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இந்த விழுமியங்கள் வலுசேர்க்கும் என்று அவர் கருதுகிறார்.

சில பாரம்பரிய இந்து மற்றும் கிறிஸ்தவ நூல்கள் (முக்கியமாக அவற்றின் விளக்கங்கள்) பெண்களின் அறிவுத்திறன் குறித்து ஒருவிதப் பெண் வெறுப்பு கலந்த சந்தேகத்தைப் பிரதிபலித்தாலும், இந்திய சமூக சீர்திருத்த முயற்சிகளை ஊக்குவிக்கக்கூடிய சிறந்த விழுமியங்கள் இரு கலாச்சார மரபுகளுக்குள்ளும் பொதிந்துள்ளன என்பதை கிளாரிந்தாவின் கதாபாத்திரம் உணர்த்துகிறது.


மதமாற்றம்: கொடையாளர் மற்றும் கிறிஸ்தவ 'பதிவிரதை'

கிளாரிந்தா தனது ஆரம்பகால 'சாகுந்தலம்' வாசிப்பின் மூலம் இந்து மரபிற்குள் இருக்கும் முற்போக்கான அல்லது தொடக்ககால பெண்ணியத் திறனை வலியுறுத்திய போதிலும், அவளது பிற்கால மதமாற்றத்தை இந்து மதத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாகக் கருதிவிடத் தோன்றும். லிட்டில்டன் கிளாரிந்தாவிற்கு வழங்கிய கிறிஸ்தவப் போதனைகளின் உள்ளடக்கம், கிறிஸ்தவ மற்றும் இந்து சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளில் கண்ட பலம் மற்றும் பலவீனங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், ஆரம்பத்தில் கிறிஸ்தவம் ஒரு தர்க்கரீதியான உதாரணமாக இல்லாவிட்டாலும், ஒரு 'ஒழுக்க நெறி' உதாரணமாகவே உருவெடுக்கிறது.

"வாழ்க்கை மற்றும் அதன் சிக்கல்களுக்கான ஒரு தர்க்கரீதியான விளக்கமாகவோ அல்லது ஒரு தத்துவமாகவோ பார்த்தால் கிறிஸ்தவம் எல்லாப் பக்கங்களிலும் பலவீனமாகவே உள்ளது; அது கிளாரிந்தாவைப் போன்ற ஒரு கூர்மையான அறிவாற்றல் கொண்டவரைத் திருப்திப்படுத்த முடியாது" என்று லிட்டில்டன் தனக்குள் ஒப்புக்கொள்கிறார். எனவே, அவர் கோட்பாட்டு ரீதியான விஷயங்களை குறிப்பாகக் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை குறித்த விவாதங்களை பெரும்பாலும் தவிர்த்துவிட்டு, கிறிஸ்துவின் போதனைகளை மட்டும் முன்னிறுத்துகிறார்.

கிளாரிந்தாவின் அறிவாற்றலை மதிக்கும் லிட்டில்டன், அவளிடம் மதத்தைத் திணிக்காமல், அதன் அறநெறிகளை மட்டும் முன்வைக்கிறார்.

மாதவய்யா கிளாரிந்தாவை ஒரு 'கிறிஸ்தவ பதிவிரதையாக' சித்தரிப்பதன் மூலம், ஒரு பெண் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும் தனது இந்தியப் பண்பாட்டு விழுமியங்களை (கணவன் மீதான பற்று, சேவை மனப்பான்மை) கைவிட வேண்டியதில்லை என்பதை உணர்த்துகிறார்.

கிறிஸ்துவின் பண்புகளைப் போற்றும் லிட்டில்டன், அவரது "எல்லையற்ற கருணை மற்றும் துன்பப்படும் மனிதகுலத்தின் மீதான அன்பு" ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறார் (Clarinda 210).  லிட்டில்டன் விவரிக்கும் கிறிஸ்து, "வாழ்க்கையில் துயரப்படுபவர்களுக்கும் துரதிர்ஷ்டவசமானவர்களுக்கும் ஒரு சிறப்புச் செய்தியைக் கொண்டிருக்கிறார்"; மேலும் அவர் "கடவுளின் தந்தைமையையும், கடவுளின் பார்வையில் மிகத் தாழ்ந்தவர் முதல் உயர்ந்தவர் வரை அனைத்து மனிதர்களும் சமம் என்ற சகோதரத்துவத்தையும்" போதிக்கிறார் 

சாதி அமைப்பை விமர்சிப்பதன் மூலம், கிறிஸ்துவின் போதனைகளை ஒரு சிறந்த மாற்றாக ஏற்குமாறு கிளாரிந்தாவை லிட்டில்டன் தயார் செய்கிறார். சமூகத்தில் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது கிறிஸ்து காட்டும் கருணை, கிளாரிந்தாவின் அறிவு சார்ந்த மனதை விட, அவளது அன்பான இதயத்தையே முதலில் ஈர்க்கிறது. இவ்வாறு, உள்ளூர் சாதிய மரபுகளில் உள்ளார்ந்த சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யக்கூடிய ஒரு தீர்வாக லிட்டில்டன் கிறிஸ்தவத்தைக் கட்டமைக்கிறார்.

பாரம்பரிய இந்து தர்மமும் கிளரிண்டாவின் அறப்பணிகளும்

இருப்பினும், தனது இந்து வாழ்விலிருந்து கிறிஸ்தவ வாழ்விற்கு மாறும்போது, சமூகத்தில் நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும் மற்றும் அறப்பணிகள் மூலம் தனது சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற ஆவலைக் கிளாரிந்தா  தன்னுடன் எடுத்துச் செல்கிறாள். கிளாரிந்தாவின் சொத்துக்காகவே அவளைத் திருமணம் செய்துகொண்ட முதல் கணவர் திவான், அவளதுசொத்துக்களைத் தனது மருமகனுக்கு உயிலாக எழுதித் தருமாறு அவளை வற்புறுத்துகிறார். சட்டப்படி ஒரு பெண் தனது திருமணத்தின் போது கொண்டு வரும் சொத்து  அவளது முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கிளாரிந்தாவின் வசம் சில வீடுகளும், இரண்டு கிராமங்களின் வருவாயும் இருந்தன.

தனது கல்வி அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, திவானுக்கு மராத்திய மொழியில் ஒரு கடிதம் எழுதும் கிளாரிந்தா, ஒரு கிராமத்தின் வருவாயைக் கொண்டு அறக்கட்டளைகளை நிறுவ வேண்டும் என்ற தனது தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்றப்போவதாக உறுதிபடக் கூறுகிறாள். இந்த அறச்செயலைத் தனது தாத்தாவின் "புனித நினைவுக்குச் செய்யும் கடமை" என்று அவள் குறிப்பிட்டாலும், அது அவளது குடும்ப வட்டத்தைத் தாண்டிப் பிறருக்கு உதவ வேண்டும் என்ற வளர்ந்து வரும் ஆசையையும் வெளிப்படுத்துகிறது.

திவானின் மறைவுக்குப் பிறகு, அவளது கணவர் குடும்பத்தினர் மீண்டும் அந்தச் சொத்துக்களைப் பறிக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றவுடன், கிளாரிந்தா உடனடியாகப் பின்வரும் பணிகளைச் செய்கிறார்:

  • அனைத்துச் சாதியினரும் தங்குவதற்காக ஒரு 'சத்திரம்'.

  • 108 சமஸ்கிருத அறிஞர்களுக்கு உணவும் இருப்பிடமும் அளிக்கும் ஒரு 'பாடசாலை'.

  • தொடர்ச்சியாகப் பல கிணறுகள்.

தனது வாழ்வாதாரத்திற்காக மிகக் குறைந்த தொகையை மட்டும் வைத்துக்கொண்டு மீதி அனைத்தையும் தர்மத்திற்காகச் செலவிடுகிறாள். இந்த அறப்பணிகள் அனைத்தும் வசதியுள்ள இந்துக்களின் பாரம்பரியத் தொண்டு நடைமுறைகளுக்கு (Traditional Philanthropy) இணங்கவே இருந்தன.

கிளாரிந்தாவின் ஆரம்பகால அறப்பணிகள், தனது சமூகத்தின் ஆன்மீக, கல்வி மற்றும் பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பாரம்பரிய மனப்போக்கைப் பிரதிபலிக்கின்றன. பாரம்பரிய இந்து நடைமுறைகளில் அவளுக்கு ஏற்கனவே ஒரு வலுவான தார்மீக அடிப்படை இருந்ததை இது காட்டுகிறது. "சமூகச் சீர்திருத்தம் என்பது மேற்கத்திய மற்றும் கிறிஸ்தவ கலாச்சாரங்களுக்கு மட்டுமே உரியது" என்று வாதிடும் மிஷனரி சொல்லாடல்களுக்கு, மாதவய்யாவின் இந்தச் சித்தரிப்பு ஒரு சவாலாக அமைகிறது. இந்து மரபுகளுக்குள்ளேயே கருணையும் அறப்பணிகளைச் செய்வதற்கான தூண்டுதலும் ஏற்கனவே உள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.


மதமாற்றம்: 'கிறிஸ்தவ பதிவிரதை' மற்றும் சமூகத் தொண்டர்

மதமாற்றம் என்பது உயர்குடி பிராமணப் பெண்களின் நற்பண்புகளைச் சிதைத்துவிடுமோ என்று அஞ்சிய சீர்திருத்தவாதிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, மாதவய்யா கிளாரிந்தாவின் மதமாற்றத்தை ஒரு 'மறூருவாக்கமாக சித்தரிக்கிறார். அதாவது, பிராமணப் பண்பாட்டின் உன்னதமான 'பதிவிரதை' எனும் லட்சியப் பெண் பிம்பத்தை அப்படியே சிதைக்காமல், ஒரு கிறிஸ்தவச் சூழலுக்கு அவர் மாற்றுகிறார்.

நாவலில்  கிளாரிந்தா ஒரு  பதிவிரதையாகவே விவரிக்கப்படுகிறாள். "உயர்குடியில் பிறந்த ஓர் இந்து மனைவிக்கு அவளது கணவன் வெறும் தலைவன் மட்டுமல்ல, அவன் அவளது தெய்வமும் கூட; அவனுக்குச் செய்யும் கடமைகளே அவளுக்கு ஒரு வகை வழிபாடு" என்று உரை கூறுகிறது. இந்த லட்சியப் பிம்பம் கைம்பெண்களைக் கொடுமைப்படுத்துவதற்கும் உடன்கட்டை ஏறுவதற்கும் வழிவகுக்கலாம் என்று எழுத்தாளர் ஒப்புக்கொண்டாலும்,  கிளாரிந்தாவின் கணவர் மீதான அசைக்க முடியாத பக்தியை அவர் வியந்து பாராட்டுகிறார்.

லிட்டில்டனுடனான அவளது வாழ்க்கை அவளது 'பிராமணப் பெண்' என்ற அடையாளத்தை அழித்துவிடவில்லை. மாறாக, அவளது இயல்பிலேயே ஊறியிருந்த அந்தப் பதிவிரதை குணம், லிட்டில்டனுடனான காதலில் முழுமையான வெளிப்பாட்டை அடைகிறது. லிட்டில்டன் அவளது அர்ப்பணிப்பை மதித்து, அவளுக்கு ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகளை அள்ளித் தந்து அன்பு செலுத்துகிறான்.

மதங்களைத் தாண்டிய அறநெறி

ராபர்ட் ஹெஃப்னர் (Robert Hefner) என்பவரின் கூற்றுப்படி, மதமாற்றம் என்பது ஒரு புதிய அடையாளத்தை ஏற்பதாகும். ஆனால்  கிளாரிந்தாவின் விஷயத்தில் இது தலைகீழாக நடக்கிறது. அவர் தனது பழைய அடையாளங்களையே (கொடையாளர், பதிவிரதை) ஒரு புதிய மதச் சட்டகத்திற்குள் உருமாறுகிறார்.  கிளாரிந்தா ஒரு கிறிஸ்தவ மதமாறியாக இருந்தபோதும் பதிவிரதையாகத் தொடர்வது, "இந்துப் பண்பாடு என்பது வீட்டுக்குள் இருக்கும் பெண்ணின் மதச் சடங்குகளில் மட்டுமே உள்ளது" என்று வாதிடும் இந்து தேசியவாதச் சொல்லாடல்களுக்கு ஒரு சவாலாக அமைகிறது.

இதன் மூலம் மாதவய்யா ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார்: தியாகம் மற்றும் அன்பு நிறைந்த பெண்மை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ கலாச்சாரத்திற்கோ மட்டும் சொந்தமானது அல்ல; அது அனைத்து மதங்களும் போற்றும் ஒரு பொதுவான அறநெறியாகும்.

கணவர்களின் தோல்வியும்  கிளாரிந்தாவின் வெற்றியும்

நாவலில் கிளரிண்டாவின் இரண்டு கணவர்களும் ஒருவர் இந்து, மற்றொருவர் கிறிஸ்தவர்  தத்தமது மதங்களின் லட்சியங்களைச் செயல்படுத்தத் தவறிவிடுகின்றனர்:

  • திவான் (இந்து கணவர்): அவளைத் தாழ்வாக நடத்தி, அவளது அறிவாற்றலையும் அன்பையும் புறக்கணிக்கிறார். இது இந்து மதத்தில் பெண்களுக்கு இடமில்லை என்ற எதிர்மறைச் சித்திரத்தை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.

  • லிட்டில்டன் (கிறிஸ்தவ கணவர்):  கிளாரிந்தா மீது உண்மையான அன்பு கொண்டிருந்தாலும், தனது ஆசையைத் தீர்த்துக்கொள்ள ஒரு 'பொய்த் திருமணம்' மூலம் அவளை ஏமாற்றுகிறான். இது காலனித்துவ பிரிட்டிஷ் ஆட்சியின் வஞ்சகமான போக்கைப் பிரதிபலிக்கிறது (பாதுகாப்பு தருவதாகக் கூறி வளங்களைச் சுரண்டுவது).

ஆனால், இந்த ஆண்கள் தோல்வியடைந்த இடத்தில்  கிளாரிந்தா வெற்றி பெறுகிறாள். லிட்டில்டன் செய்த துரோகம் தெரிந்த பிறகும், அவனது நோய்வாய்ப்பட்ட காலங்களில் அவனுக்குப் பணிவிடை செய்ய அவள் முடிவெடுக்கிறாள். இது அவளை ஒரு 'கிறிஸ்துவைப் போன்ற' (Christ-like) பிம்பமாக மாற்றுகிறது. அவனது உடலுக்குச் செவிலியராகவும், அவனது ஆன்மாவைக் காக்கும் இரட்சகராகவும் அவள் மாறுகிறாள். "நீயே எனது உண்மையான இரட்சகி" என்று லிட்டில்டன் மரணப்படுக்கையில் கூறுவது இதையே உணர்த்துகிறது.

சமூகச் சீர்திருத்தவாதியாக  கிளாரிந்தா

லிட்டில்டனின் மறைவுக்குப் பிறகு,  கிளாரிந்தா இந்து மற்றும் கிறிஸ்தவ லட்சியங்களை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான சமூகத் தொண்டராக உருவெடுக்கிறார்:

  • ஏழைச் சிறுவர்களுக்காகத் தனது வீட்டிலேயே ஒரு பள்ளியைத் தொடங்கி, அவர்களுக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுத்தருகிறார்.

  • வறுமையை ஒழிக்க நிதி உதவி செய்கிறார்.

  • கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் பிரிவுகளுக்கு இடையே விவாதங்களை ஊக்குவித்து, கிறிஸ்தவக் கொள்கைகளின் திறமையான விளக்கவுரையாளராக மாறுகிறார்.

இந்தச் செயல்பாடுகளில் அவர் புகழ்பெற்ற பண்டித ரமாபாயை (Pandita Ramabai) நினைவூட்டுகிறார். ரமாபாயும் ஒரு பிராமணக் கைம்பெண் மற்றும் சமஸ்கிருத அறிஞர்; அவர் உயர்குடி கைம்பெண்களுக்காகப் பள்ளிகளைத் தொடங்கியவர்.

இறுதியாக,  கிளாரிந்தாவின் கதாபாத்திரம் மதம் மாறுபவர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து  பெண்களுக்குமான ஒரு முன்மாதிரியாக அமைகிறது. சீனிவாச சாஸ்திரி குறிப்பிட்டது போல, செல்வம் மற்றும் குடும்பப் பொறுப்புகள் இல்லாத இந்தியக் கைம்பெண்கள் தங்களைச் சமூகத் தொண்டுக்காக அர்ப்பணித்து "கருணையின் சகோதரிகளாக" (Sisters of Mercy) மாற முடியும் என்பதற்கு  கிளாரிந்தா  ஒரு சிறந்த உதாரணம்.


கிளரிண்டா, 1912-ல் சென்னையில் உயர்குடி இளம்பெண் கைம்பெண்களை ஆசிரியர்களாகப் பயிற்றுவிக்க ஒரு உறைவிடப் பள்ளியைத் தொடங்கிய சகோதரி சுப்பலட்சுமியை (Sister Subbalakshmi) நமக்கு நினைவூட்டுகிறார். கிளரிண்டா தனது பள்ளி மாணவர்களுக்குப் புராணங்களையும் பைபிளையும் வாசித்துக் காட்டுகிறார். இதன் மூலம், அடுத்த தலைமுறைக்கான அவரது மரபு என்பது வெறும் புராட்டஸ்டன்ட் மதப்போதனை மட்டுமல்ல, மாறாக அது பிரிட்டிஷ்/கிறிஸ்தவ மற்றும் இந்து/பிராமண கலாச்சார விழுமியங்களின் ஒரு ஒருங்கிணைப்பு (synthesis) என்பதை மாதவய்யா உணர்த்துகிறார்.

'கிளாரிந்தா'வின் வகைப்பாடும் வாசகர் பரப்பும்

பதினெட்டாம் நூற்றாண்டு பின்னணியில் இருந்தாலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால சமூகச் சீர்திருத்தங்களில் ஈடுபடும் ஒரு லட்சிய நாயகியாக கிளாரிந்தாவைச் சித்தரிப்பதன் மூலம், இந்த நாவல் ஒரே நேரத்தில் பல இலக்கிய வகைமைகளுக்குள் (genres) இயங்குகிறது. 

ஜார்ஜ் எலியட்டின் 'ரோமோலா' நாவலைப் போலவே, இதுவும் ரொமான்ஸ் (romance) மற்றும் 

யதார்த்தவாதம் (realism) ஆகிய இரண்டையும் கலந்துள்ளது. இந்து மற்றும் கிறிஸ்தவ ஆண் அதிகார அமைப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக, தனது தனிப்பட்ட தார்மீக மற்றும் அறிவுசார் விவேகத்தை கிளரிண்டா முன்வைப்பது அவளை 

ஒரு 'ரொமான்டிக்' நாயகியாகக் காட்டுகிறது. இருப்பினும், 

பெண் கல்வி, குழந்தை திருமணம் மற்றும் கைம்பெண்களின் நிலை போன்ற சமூகச் சிக்கல்கள் குறித்து நாவலில் விவாதிக்கப்படுவது, இதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நிலவிய சமூக யதார்த்தவாத (social realism) நாவல்களின் வரிசையில் வைக்கிறது.

கிளாரிந்தாவின் கதைக்களம் - உடன்கட்டை ஏறுதலில் இருந்து மீட்கப்படுதல் மற்றும் ஓர் இந்தியப் பெண்ணுக்கும் பிரிட்டிஷ் ஆணுக்கும் இடையிலான காதல் - போன்றவை பிலிப் மெடோஸ் டெய்லரின் 'சீதா' (1872) போன்ற ஆரம்பகால ஆங்கிலோ-இந்திய காதல் கதைகளை நினைவூட்டுகின்றன. இருப்பினும், அக்காலத்திய பிற நாவல்களைப் போலல்லாமல், இது வெறும் கவர்ச்சிகரமான 'கீழைத்தேயக் காதலாக' (Orientalist romance) மட்டும் நின்றுவிடாமல், ஆழமான சமூகக் கருத்துக்களைக் கொண்டுள்ளது.

1914-ல் லண்டனில் அச்சிட முயற்ச்சி செய்த போது ,  ஜே.சி. மலோனி என்பவர் மாதவய்யாவிற்கு எழுதிய கடிதத்தில், லண்டன் பதிப்பாளர்கள் இன்னும் அதிக "காரசாரமான" (highly spiced) கதைகளையே எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். இது 'கிளாரிந்தா' நாவல் அதன் காலத்து வணிகரீதியான காதல் நாவல்களிலிருந்து தனித்து நின்றதைக் காட்டுகிறது. 

லண்டனில் இந்தப் புத்தகத்தைப் பதிப்பிப்பதில் ஏற்பட்ட சவால்கள், இந்த நாவல் யாருக்காக எழுதப்பட்டது என்ற கேள்வியை எழுப்புகின்றன. 

அக்காலத்தில் தோரு தத், சரோஜினி நாயுடு போன்றோரின் படைப்புகளைப் பிரிட்டிஷ் வாசகர்கள் ரசித்த போதிலும், மாதவய்யாவின் படைப்பு ஒரு சீர்திருத்தக் கருவியாகவே முதன்மையாகத் திகழ்ந்தது.



https://www.cambridge.org/core/services/aop-cambridge-core/content/view/E8BFFEDB9572B78602195445709B6D5F/S1060150317000419a.pdf/div-class-title-synthesizing-hindu-and-christian-ethics-in-a-madhaviah-s-indian-english-novel-span-class-italic-clarinda-span-1915-div.pdf