2 Sept 2025

கத்தோலிக்க திருச்சபை (நிழல் அரசு) – குருத்துவ கட்டமைப்பில்














குருத்துவம் என்பது கடவுளுக்கான முழுமையான அர்ப்பணம். கடவுள் பணிக்காக, கடவுளின் மக்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, அதற்காக தன் முழு ஆற்றலையும் கொடுப்பது.. குருத்துவம்  கடவுள் அருளின்றி யாரும் வாழ்ந்துவிடவும் முடியாது. அதன் மகிமை போற்றப்பட வேண்டும்.  அந்த பணியை ஏற்றிருக்கிறவர்களுக்கு, நமது முழு ஒத்துழைப்பையும்,  அதன் மாண்பு காப்பாற்றப்படுவதற்கு உதவியையும் செய்ய வேண்டும். அதன் புனிதத்தன்மை உணர்த்தப்பட வேண்டும்  இப்படியான கோட்பாடுகளை கூறி முழு அதிகாரத்தையும் ஆண் தலைமையினால் கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும் குருத்துவ நிறுவனம் .


அவ்வகையில்  திருச்சபை என்ற கட்டமைப்பின் நிறுவனத்தில் தலைமையில் இருப்பது கிறிஸ்து.  இதற்கு  அப்போஸ்தலர் பவுலின் கூற்று கவனிக்க வேண்டும்.  சபை என்பது  கிறிஸ்துவின் உடல்என்பன விவிலிய வசனங்கள் . 1 கொரிந்தியர் 12- அதேபோல் ரோமர் 12, எபேசியர் 1 மற்றும் கொலோசெயர் 1- என  உருவகத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.  


ஆனால் இன்னும் வேறுபட்டு சிலர் இயேசு கிறிஸ்துவையே தலைவனாகவும் இதயமாகவும் கொண்ட ஒரு ஆன்மீக நிறுவனம் என்றும் இன்னொரு  விளக்கமும் தருகின்றனர்.  இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஒட்டுமொத்தமாக கிறிஸ்துவின் உடலாக உள்ளனர்; ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பங்கு உண்டு. உடலில் பல அங்கங்கள் உள்ளன; அவற்றில் ஒவ்வொன்றும் உடலின் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அதன் சிறந்த செயல்பாடுக்கும் அவசியமானது போலவே, திருச்சபையும் அப்படித்தான். இந்த உருவகத்தில் எவருக்கும் உயர்வு  தாழ்வு கிடையாது; ஆனால் தலை (இயேசு கிறிஸ்து) மட்டும் மிகவும் கௌரவமான இடத்தில் உள்ளார். மற்ற எல்லா அங்கங்களும் சமமாக அவசியமானவை; அவையில்லாமல் முழுமை நிகழாது என்றும் வரையறைத்துக் கொள்கின்றனர்.


இந்த தத்துவ விசாரங்களை புரிந்து கொள்ள இயலாத உலகப்பிரகாரமான ஆட்டு குட்டிகளுக்கு இன்னொரு கதையும் சொல்கின்றனர்.

  1. 1.    திருச்சபை மனித நிறுவனம் என்பதும் உண்மை.
  2. 2.    அது தன்னைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும்;
  3. 3.    சமூக வாழ்வின் அடிப்படை அம்சங்களைப் பேண வேண்டும்;
  4. 4.    தனது போதனைகள், பணி குறித்து முடிவுகள் எடுக்க வேண்டும்;
  5. 5.    தனது செயல்களுக்கு நிதியளிக்க வேண்டும்;
  6. 6. அந்தச் செயல்களை மேற்கொள்ளும் நபர்களின் பயிற்சி மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

 இந்த கடைசி இரண்டும்  கத்தோலிக்க திருச்சபையின் மக்களின் ஆதரவு வேண்டும். எப்படி என்றால் அது தான் பணம் ஆதரவு.

 

பணம் கொடுத்து விட்டு அதிகாரம் பேண இருமாப்பு கொண்டால் அதற்கும் ஒரு பதில் உண்டு அது தான்  படிநிலைக் கட்டமைப்பு (hierarchy). இந்த படிநிலையில் பணம் கொடுக்கும் மக்கள் எங்கு உள்ளார்கள் என்பதற்கு முதலாக இங்குள்ள பணிகள் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

எல்லா மனித நிறுவனங்களிலும் போல,

இங்கும் வழிநடத்தல்,

திட்டமிடல்,

ஒருங்கிணைப்பு அவசியம்.

அதற்காகவே அதிகாரம் தெளிவாகக் காணப்பட்டுமுடிவுகள் எளிதில் எடுக்கப்படுவதற்காக ஒரு படிநிலைக் கட்டமைப்பு (hierarchy) தேவையாக உள்ளது.

 

இது பவுலின் "உடல்" என்ற உருவகத்துக்கு முரண்போலத் தோன்றினாலும், அவரது போதனைகளிலிருந்தே இதுவும்  உருவானது தான் . 1 கொரிந்தியர் 12 மற்றும் எபேசியர் 4-ல், திருச்சபையின் அமைப்புகள் மற்றும் பணி ஒழுங்குகள் பற்றி நாம் வாசிக்கிறோம்; அவற்றில் ஒவ்வொன்றும் திருச்சபையின் வாழ்வுக்கும் பணி நோக்கத்துக்கும் தனித்தனி பங்களிப்பு செய்கின்றன.

 

திருச்சபையின் அமைப்பு பொதுவாக ஒரு பிரமிட் வடிவிலான படிநிலை (hierarchy) ஆகக் காணப்படுகிறது

  1. அதன் உச்சியில் போப்,
  2. கரிதுனாலுகள்
  3. பின்னர் ஆயர்கள்,
  4. குருக்கள்,
  5. அரசியல்வாதிகள்(சக்கரவர்த்திகள் (diacons))
  6. பெண் துறவியர்,
  7. இறுதியில் பொதுமக்கள் (laity)

 

இயேசு கிறிஸ்துவின்அடிமைத் தலைமை” (servant-leadership) (யோவான் 13 எடுத்துக்காட்டாக இருப்பதால், திருச்சபையில் தலைமை வகிப்பவர்கள், உலகின் தலைவர்கள் நடப்பது போன்று நடக்கக்கூடாது . (மத்தேயு 20:24–26). இயேசுவிடம் வந்த யாக்கோபும் யோவானும், தங்கள் தாயின் மூலம், அவருடைய இராச்சியத்தில் அதிகாரம் மிக்க இடத்தில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு அமர்த்தும்படி யேசுவிடம் கேட்கிறார்கள்அதற்கு இயேசு, "இராச்சியங்களில் பெரியவனாகிறவன் உங்களைச் சேவிக்கிறவனாக இருக்க வேண்டும்; முதன்மையாகிறவன் உங்களை அடிமையாயிருக்கிறவனாக இருக்க வேண்டும்" என்று கூறி, பெரியவர்களாக இருக்க மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்

 

திருச்சபை தனது தலைவனான கிறிஸ்துவின் போதனைகளுக்கு உண்மையாக இருந்தால், அந்தப் பிரமிட் தலைகீழாக  (inverted pyramid) இடம் பெறுகிறதாம்.   அதில் பொதுமக்கள் (laity) மேலே இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் உலகில் சென்று சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டவர்கள். அவர்களை ஆதரித்து சேவையாற்றும் பணியில் துறவியர், சக்கரவர்த்திகள், குருக்கள், ஆயர்கள், போப் ஆகியோர் கீழே இருக்கிறார்கள். இது பணம் கொடுப்பவர்களை அப்பப்போ குஷிப் படுத்த சொல்லும் பொய் ஜோக்குகள்.

 

சரி இந்த  நிலைகள் செயல்பட அடிப்படை உறுப்பினர்கள் உருவாக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம்.  முதலில் ஒரு குழந்தை பிறந்ததும் அதன் பெற்றோர் 30 நாட்களுக்கு முன்னால் கரித்தரின் முன் வைத்து பாப்டிசம் (Baptism) மூலம், திருச்சபையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.  

தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபை 18 மறைமாவட்டங்களாக இயங்கிவருகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் ஆயர் (bishop) அல்லது பேராயர் (archbishop) தலைமையில், குருக்களின் நேரடி ஒத்துழைப்போடு நடத்தப்படுகிறது. குருக்களுள், இயேசு சபை,கப்புச்சின் சபை,சலேசிய சபை போன்ற துறவறசபைக்குருக்கள் மறைப்பணி,கல்விப்பணி,சமூகப்பணி போன்ற பணிகளை ஆற்றிவருகின்றனர்.

 


ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் அருட்சகோதரிகள் என்று அழைக்கப்படும் பெண்துறவியர் பலர் பல துறவற  பிரிவுகளாக இயங்கி வருகின்றனர். கல்விக்கூடங்களை நடத்துவதோடு, மருத்துவ மனைகள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்ற பிறரன்புப்பணி நிறுவனங்களையும் இவர்கள் நடத்துகின்றனர்.

 

 

  1. மதுரை உயர்மறைமாவட்டம்
  2. கோட்டாறு மறைமாவட்டம்
  3. திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்
  4. தூத்துக்குடி மறைமாவட்டம்
  5. பாளையங்கோட்டை மறைமாவட்டம்
  6. சிவகங்கை மறைமாவட்டம்
  7. திண்டுக்கல் மறைமாவட்டம்
  8. குழித்துறை மறைமாவட்டம்
  9. சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்
  10. வேலூர் மறைமாவட்டம்
  11. செங்கல்பட்டு மறைமாவட்டம்
  12. உதகை மறைமாவட்டம்
  13. கோவை மறைமாவட்டம்
  14. புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்
  15. குடந்தை மறைமாவட்டம்
  16. சேலம் மறைமாவட்டம்
  17. தர்மபுரி மறைமாவட்டம்
  18. தஞ்சை மறைமாவட்டம்

மேற்கூறிய 18 இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க மறைமாவட்டங்கள் தவிர, கீழ்வரும் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க மறைமாவட்டங்களும் தமிழகத்தில் செயல்படுகின்றன. அவை:

 

  1. சீரோ-மலபார் தக்கலை மறைமாவட்டம்
  2. சீரோ-மலபார் இராமநாதபுரம் மறைமாவட்டம்
  3. சீரோ-மலங்கரை மார்த்தாண்டம் மறைமாவட்டம் உள்ளன.

மறைமாவட்டம் பாரிஷ் அல்லது பங்கு என பிரிக்கப்பட்டு பாதிரியார் மற்றும் உதவி பாதிரியார் தலைமையில் செயல்படுகிறது. பாரிஷின் கண்காணிப்பில் பல நிறுவனங்கள் செயல்படும்.

 

பங்கையும் அன்பியல் என பல பிரிவுகளாக பிரித்து அப்பகுதி குடும்பங்களை இணைக்கின்றனர்.

 

அன்பியம் என்பது ஒர்  ........................

  • இறை வாழ்வு.
  • உறவு வாழ்வு
  • அன்பு வாழ்வு
  • பகிர்வு வாழ்வு
  • குணமளிக்கும் வாழ்வு
  • ஆறுதல் தரும் வாழ்வு
  • ஒற்றுமை தரும் வாழ்வு
  • மகிழ்ச்சி தரும் வாழ்வு
  • இன வாழ்வு

அன்பியக் கூட்டங்களில் கலந்து கொள்வது குடும்பங்களுக்கு நல்லது. உங்கள் இல்லங்களில் அன்பியக் கூட்டம் நடத்த முன்வருவது உங்கள் இல்லங்களுக்கு சிறந்த ஆசீர்வாதம் என்பதை அறிந்து கொள்ளவும். உங்கள் இன்பம், துன்பம் அனைத்தையும் அன்பியத்தில் பகிர்ந்து கொள்வது என்பது உங்களுக்கு அன்பும், சமாதானமும் மற்றும் உதவிகளும் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளவும். அன்பியம் ஒரு கோயில், நமது சாட்சிய வாழ்வின் வெளிப்பாடு, அன்பின் உறைவிடம், தியாகத்தின் அடையாளம். தூய அன்னை மரியா அவர்கள் நெடுந்தூரம் நடந்தே பயணம் செய்து எலிசபெத்துக்கு கடவுளின் அன்பைக் காட்டி பணிவிடை செய்தார்கள். இதுபோல் நாம் நெடுந்தூரம் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றாலும், உங்கள் தெருவில் உள்ள அன்பிய குடும்பங்களை அறிந்து, அன்பின் மூலம் உதவிகளை பகிர்ந்து, வாழ்ந்து தூய அன்னை மரியாவின் பிள்ளைகள் என்பதை மற்ற பிரிவினை சபைகளுக்குக் காட்டுவோம். உங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் உறவுகளை அழைப்பது போல அன்பிய உறவுகளையும் சேர்த்து அழைப்பது என்பது மிகவும் நல்லது. இது கிறிஸ்தவ வாழ்வுக்கு உகந்தது. இயேசுவிற்கு பிடித்தது. இதுவே உறவு வாழ்வு!! 

 



அன்பியங்கள் திருஅவையின் வாழ்வில் இன்றியமையாத அமைப்பாகும். ஆதித் திருச்சபையில் நாம் காணும் ஒன்றிப்பும், சகோதரத்துவமும், பகிர்வும்இன்று நமது காலத் திருச்சபையிலும் வளர வேண்டும் என்னும் உயரிய எண்ணத்தோடு உருவாக்கப்பட்டவை தான் அன்பியங்கள். பொதுநிலையினரிடையே விசுவாச வாழ்வில் புது உத்வேகத்தைக் கொணரவும், நாம் வாழும் சமுதாயத்திற்கு உண்மையான கிறிஸ்தவ சாட்சிகளாக வாழ்வதற்கும் அன்பியங்களே சிறந்த வழி. அன்பியம் சக்தி வாய்ந்த இறை இயக்கம். அன்பியம் சிறந்த வேளாண்மை விளை நிலம். அன்பியத்தினால் கடவுளைச் சந்திக்கவும், உண்மையான அன்புறவில் வளரவும், சமத்துவம்சகோதரத்துவத்திலும் மலரவும், அறிதலும், புரிதலும், மன்னிப்பும், பகிர்வும் செயல் வடிவம் பெறுகிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் இறைமக்கள் ஒன்றுகூடி உறவில் இணைந்து இறைவேண்டலில் ஈடுபட்டு ஒருவரோடு ஒருவர் தோழமையில்  பகிர்ந்து வாழும் அடித்தள உறவு வாழ்வுதான் அன்பியத்தின் சிறப்பு.







 





ராபர்ட் கால்ட்வெல் - மதம் பரப்ப வந்த அன்னிய நாட்டு ஏஜன்று.

#போர்துகீஸ் நாட்டினர் கடலோடிகளுக்கு உதவுவது மாதிரி நமது நிலப்பரப்பை கையடக்கினர். அதை தக்க வைக்க பின்னால் பாதிரிகளை அனுப்பி மதம் மாற்றமும் செய்தனர்.

#ஆங்கிலேயன் East Indian நிறுவனம் ஊடாக நமது நாட்டில் வியாபாரம் என்ற பெயரில் நுழைந்து பின்பு அரசியல் அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டதுடன் தங்கள் திட்டம் தெரியாமல் இருக்க முற்போக்கு மதம் என்று நிரூபிக்க கால்டுவெல் போன்றோரை அனுப்பினர்.
இதில் எவனும் #போரிட்டு வரவில்லை.
மதம் பரப்ப வந்த கால்டு வெல் எதற்காக இனங்களின் குணம் தன்மைகளை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்?

கால்டுவெல் வாழ்ந்த காலத்திலே அருமைநாயகம் சத்தம்பிள்ளை நாடார் பதில் கொடுத்து விட்டார். சொல்லப்போனால் கால்டுவெல்லால் சாகும் வரை நெல்லையில் கால் வைக்க இயலவில்லை. கால்டுவெல்லின் பணம் கையாடல் பற்றி கால்டுவெல் காலமே புத்தகங்கள் வந்து விட்டது. கால்டுவெல் எத்தகையா பொறாமைக்காரர் என்பது நாசரேத் தந்தை என அறியப்படும் #மார்காசிஸ் ஐயர் வாழ்க்கையை வாசித்தால் விளங்கும்.
நெல்லையில் மதமாற்றம் செய்ய என்ன வித்தைகள் எல்லாம் கையாண்டனர் என்பதை #டோனாவூர் கார்மைக்கேல் அம்மையார் புத்தகங்களில் இருந்து அறியலாம்.


நாடார் பெண்கள் சுவாரசியமான கதை கேட்க விரும்புகிறவர்கள். வெள்ளைகாரிகள் வந்ததும் கதை கேட்பது அவர்கள் வழக்கம். அதே நேரம் மற்றைய இனப் பெண்கள் முக்கியமாக பிராமண பெண்கள் தங்கள் குடியிருப்புக்குள் விடவே இல்லை.
எளிய நாடார் ஆண்களுக்கு வேலை தருகிறோம் பெண்களுக்கு கல்வி தருகிறோம் எனக் கூறி மதம் மாற்றினர். அதன் தாக்கம் ஆசிரியை பணியில் இருக்கும் பெண்கள் மற்றும் அரசு பணிகளில் வர முடிந்த ஆண்கள் எண்ணம் வைத்து கணக்கில் கொள்ளலாம்.
முக்கியமாக கன்யாகுமாரி பகுதியில் வேணாட்டு மன்னர்கள் ஆட்சியின் கீழ் சமூுக ஒடுக்குதலில் இருந்த பனையேறிகள் மற்றும் மதுரை நாய்க்கர்கள் கொடுமையால் தேரிக்காட்டில் பஞ்சம் பிழைக்கும் சூழலில் தள்ளப் பட்ட திருநெல்வேலி ,தூுத்துக்குடி , திருச்செந்தூர் பகுதி சாணார் என்று விளிக்கப்பட்ட நாடார்கள் மதம் மாற்றத்திற்கு உந்தபட்டனர்.
#சிவகாசி விருது நகர் , நாடார்களில் இது போன்ற மத மாற்றம் நடை பெற வில்லை.
அதாவது 14 ஆம் நூற்றாண்டு முன்புள்ள நாடார் சமூுக நிலையை ஆராய்ச்சி செய்யாது கால்டுவெல் சொன்ன நாடார் வரலாறு கதையை இன்றைய அரசியல் தேவைக்காக நிறுவ பார்க்கின்றனர்.
மதம் மாற்ற அன்னிய சக்திகள் #நமது பண்பாட்டை, #பின்பற்றியிருந்த மதத்தை, இனமக்களின் குணநலங்களை பற்றிய மிகவும் கீழ்மையாக புகுத்தி ஒரு தாழ்வு நிலையை புகுத்தி மதம் மாற்றினார்.
மதம் மாற்றத்திற்கு இன அடையாளம் மிகவும் தடையாக இருக்கிறது என்றதும் கிறிஸ்தவர்களுக்கு ஜாதி இல்லை என்றனர்.
மத மாற்றத்தால் நாடார் இனத்தின் வியாபாரத் தொழில் நலிந்தது. ஒற்றுமை இல்லாமல் போனது, குடும்ப உறவுகள் குடும்ப கட்டமைப்பு இல்லாமல் போனது.
பத்திரகாளி அம்மனையும் சிவனையும் தெய்வமாக வழி பட்டவர்களுக்குள் கிருபை, சாத்தான் போன்ற பெயரில் பிரிவினை உருவானது..
#நாடார்கள் பொதுவாக ஒரு கூட்டுக் குடும்பமாக தொழில்களை நடத்துக்கிறவர்கள். அவர்கள் வேதக்காரர்கள், பெண் கொடுக்க மாட்டோம் பெண் எடுக்க மாட்டோம் என்று சொல்லி பிரியும் அளவிற்கு பிரிவினையை உருவாக்கினர்.
நாடார்கள் பொதுவாக #ஆண்கள் உழைப்பில் பெண்கள் வீட்டிலிருந்து குடும்பத்தையும் கவனித்து வியாபாரத்திற்கு முதுகு எலும்பாக இருக்கும் தன்மை கொண்டவர்கள்.
பிற்பாடு பெண்கள் வேலைக்கு போய் நாடார் ஆண்கள் இருசக்கிற வாகனத்தில் பெயருக்கு ரியல் எஸ்டேட் செய்கிறோம் என்ற நிலை வரை வந்து விட்டது. இன்று புது தலைமுறை ஆண்களுக்கு உழைப்பு என்பது எட்டாகனியாகி உள்ளது.
@தமிழகத்தில் உள்ள #ஊழியக்காரர்கள் என்ன இனம் என விசாரித்து பாருங்கள். உழைப்பு சவுடால் பேச்சில் முடிந்த அவலம் காணலாம்.
#வைகுண்ட சாமிகள் மட்டும் கன்யாகுமரியில் இல்லாமல் போயிந்தால் மொத்தமும் இன்று கிறிஸ்தவர்கள் ஆகி இருப்பார்கள்.
இன்று கன்னியாகுமாரி மலைகள் கேள்வியே அற்று காணாமல் போக மதமாற்ற மனநிலையும் ஒரு காரணம் தான். #கிறிஸ்தவர்களுக்கு உலக வாழ்க்கை என்பது கர்த்தரை துதித்து ஆடம்பரமான வாழ்க்கைக்கு மட்டும் தான். அவர்கள் நிரந்தர வாழ்க்கை பரலோகம் தான்.
மதம் என்பதை வெறும் கடவுளோடு மட்டும் இணைத்து பார்க்க இயலாது. நமது பண்பாடு வாழ்வியல் எல்லாம் மாற்றி விடும்.
இன்றைய கிறிஸ்தவ கல்யாண வீடுகள் கண்டால் தெரியும். அவர்களுக்கு மாமன் மச்சான், பங்காளி குடும்பம் எவரும் தேவையில்லை. பணம் இருந்தால் #பாதிரிகள் வந்து கல்யாணத்தை முடித்துப் கொடுப்பார்கள்.
#ஒரு இளைஞர் நாடார் இனம் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்து கட்டுரை வெளியிட்டுள்ளார் . நாடார்கள் வாழ்வியல் பண்பாடு எல்லாவற்றுக்கும் #கால்டுவெல் குறிப்பிட்ட மேற்கோளை குறிப்பிடுகிறார்.

கால்டுவெல் கோட்பாடு மத மாற்றம் சார்ந்தது அடிமை மன நிலை உருவாக்குவது.
திருநெல்வேலியில் மற்றைய இனங்கள் முக்கியமாக #சைவப் பிள்ளைகள், தேவர் இனம், மற்றைய மண்ணின் இனம் பற்றி எதனால் ஆராய்ச்சி செய்து கதை விடவில்லை.
வெள்ளைகாரர்களுக்கு தேவையான நெளிவு சுழிவு உழைக்கும் #அடிமைகள் நாடார் இனம் தான் என கண்டு கொண்டது தான். தேயிலை தோட்ட அதிகாரிகள் ஆக பெருவாரி நாடார்களை கன்யகுமரி பக்கம் இருந்து பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் ஆங்கிலேயர்களின் டாம் , சாலைகள் போன்ற கட்டுமானப் பணிக்கும் நாடார்களை இடம் பெயர்த்தி உள்ளனர்.
ஆனால் கால்டுவெல் சொல்லிய நாடார் வரையறையை அன்றே உடைத்து எழுதியதில் முக்கியமானவர் #அருமைனாயகம் சட்டாம் பிள்ளை என்பதை இன்றைய தலைமுறை மறக்க கூடாது.
ராபர்ட் கால்ட்வெல்லின் நாடார்கள் பற்றிய விளக்கம்:
அவர்கள் #உழைப்பாளிகள், எளிய மனம் கொண்டவர்கள், ஆனால் #நாகரிகத்தில் குறைந்தவர்கள், #திறமையற்றவர்கள், உடம்பிலும் பழக்கவழக்கங்களிலும் கொஞ்சம் கடினமானவர்கள். இருந்தாலும் அவர்கள் #புத்திசாலித்தன மற்றவர்களாகவும், அன்பை உணராதவர்களாகவும் இல்லை. #பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள். பொதுவாக அவர்கள் ஏழைகள் தான்; ஆனால் அந்த ஏழ்மை அளவுக்கு அதிகமில்லை. அவர்களில் சிலர் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவர்களும் ஆவர். அந்தக் குடியின் ஒரு பிரிவினரிலிருந்து ஒருவர் சமீந்தாராகவும் உள்ளார்.
எனது பார்வையில், சாணார்கள் அவர்கள் பங்கு கிடைத்த #மணற்பாலைவன நிலங்களை வைத்து விரக்தியடையாமல், மாறாக அவற்றை பயனுள்ள பனைமரங்களாலும் அழகும் பயனும் கொண்ட வாழைமரங்களாலும் நிரப்பியதற்காகப் பெரிதும் பாராட்டத்தக்கவர்கள்.”

கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை. @#########🙊🥹

#பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி, திருவிதாங்கூர் இராச்சியத்திலும் #மதராஸ் பிரெசிடென்சியிலும் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவசபை வளர வழி செய்தது.

இவை, சர்ச் மிஷனரி CMS சொசைட்டி மற்றும் லண்டன் மிஷனரி சொசைட்டி (LMS) ஆகிய மிஷனரிகளின் பணிகளின் மூலம் வளர்க்கப்பட்டன.
கிறிஸ்தவத்தில்
1.ரோமன் கத்தோலிக்க தேவாலயம் (லத்தீன் சடங்கு),
2. தென்னிந்திய சபை (Church of South India),
3.லண்டன் மிஷன் காங்கிரகேஷனல் தேவாலயங்கள் (L.M.S.),
4.இந்திய அசெம்பிளிஸ் ஆப் காட்,
5.இந்திய பெந்தெக்கொஸ்து தேவாலயம்,
6.தி பெந்தெக் கொஸ்தல் மிஷன்,
7.தி சால்வேஷன் ஆர்மி தேவாலயம்,
8.சீரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம்,
9.யாக்கோபைட்
10.சிரியன் கிறிஸ்தவ சபை,
11.சீரோ-மலங்கர கத்தோலிக்க தேவாலயம்,
12.மலங்கர என பல பிரிவுகள் உள்ளன.
1818 ஆம் ஆண்டில், சுமார் 3,000 நாடார் சமூகத்தினர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள், மொத்த மக்கள் தொகையில் சுமார் 6% ஆக சிறுபான்மை சமூகமாக இருக்கின்றனர் என்கிறது தரவு.
ஆனால் கத்தோலிக்கர் மட்டுமே 6 சதவீதம் உள்ளனர் . மற்றைய பிரிவுகள் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் அல்லேலூயா கிறிஸ்தவர்களையும் கணக்கில் சேர்த்தால் 12 சதவீதத்திற்கு மேல் வரும் என்கின்றனர். கிரிப்டோ கிறிஸ்வர்களையும் சேர்த்தால் இன்னும் சதவீதம் உயர வாய்ப்பு உண்டு.
கேரளாவுக்குப் அடுத்தபடியாக இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
2011-ஆம் ஆண்டு கணக்குப்படி, தமிழ்நாட்டில் 44 லட்சம் கிறிஸ்தவர்கள், (கேரளாவில் 61 லட்சம் கிறிஸ்தவர்கள்) உள்ளனர் என்கிறது தரவு.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் வசித்து வருகின்றனர் .
2011 சென்சஸ் படி கிறிசஸ்தவ மக்கள் தொகையின்
கன்னியாகுமரி 47.7%,,
தூத்துக்குடி 19%, மற்றும்
திருநெல்வேலி 15% கிறிஸ்தவர்கள் உள்ளனர் .
உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய பிரிவு தென்னிந்திய சபை (CSI) ஆகும்.
இதில் 10 சதவீதம் நாடார் இன மக்கள் கிறிஸ்தவத்தை தழுவியவர்கள் ஆவர்.
மூன்றாவது இடத்தில் பெந்தெக்கொஸ்து பிரிவினர்கள் உள்ளனர்.இவர்கள் தரவுகள் கிடைப்பது அத்தனை எளிது அல்ல. அமீபா மாதிரி ஒவ்வொரு தலைமையின் கீழ் பெருகிக் கொண்டே போகும்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில், நாடார் மற்றும் பறையர் சமூகங்களில் பெரிய அளவில் மதமாற்றங்கள் நடைபெற்றன.
எதனால் நாடார்கள் இனம் மதம் மாறினது என்பதர்கான பதில் வேலை, கல்வி என்பன ஆகும்.ஆனால் அது மட்டுமல்ல. நாடார் இனமும் எளிய நாடார்களான பனை தொழில்களை நடத்திய விதமும் உள்ளடங்கும்.
அத்துடன் மத வியாபாரிகளும் திட்டமிட்டு
நாடார்களுடன் பனையை பொருத்தி தாழ்வு மன நிலையை உருவாக்கிய கால்டுவெல் போன்ற மிஷனரிகள் நாடார்கள் மதம் மாறுவதிலும் காரணமாக இருந்ததுடன் நாடார் என்ற அடையாளம் பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். நாடார் மக்களை அடிமை நிலையில் வைத்திருந்தார் என அருமைனாயகம் சட்டாம்பிள்ளை நாடார் கால்டுவெல் மேல் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்ததும் இல்லாமல் பிரிந்து போய் புது கிறிஸ்தவ சபையை உருவாக்கினார்.
#நாடார்கள் ஆண்ட பரம்பரை என்பதில் வரலாறு பூர்வமாக சான்றுகள் மிகவும் குறைவு. அதை சொல்லி வெற்று பேச்சில் இருமாப்பு கொள்வதில் அர்த்தமும் இல்லை. ஆனால் சிறுநாடுகளின் தலைவராக இருந்து இருக்கலாம்.
தொழில் அதிபர்களாக வியாபாரத்தில் தனித்துவம் மிக்கவர்களாக உழைப்பை மட்டுமே நம்பி பிழைத்த குடி. வில் வித்தை கற்றுக் கொடுத்த ஆசான்கள் , கடல் கடந்து பயணம் செய்து சொத்துகள் ஈட்டினவர்கள் என்பதற்கு நிறையவே சான்றுகள் உள்ளன. நாடார் இனத்திலுள்ள எளிய மக்கள் பனத்தொழிலில் இருந்தனர். அதே போல சாராய தொழிலில் அப்காரிகளாக இருந்து ஆங்கிலேயர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த #பொறையார் நாடாரும் இருந்துள்ளனர்.
இத்தனை இருந்தும் நாடார்களை பற்றி கால்டுவெல் எழுதி வைத்துள்ளவை நாடார் குடியை ஏதோ நலிந்த குடியாகவே அடையாளப்படுத்தி வைத்துள்ளது..
தமிழகம் போன்றே
கேரளாவில் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பல வகை ஜாதி பிரிவுகள் உண்டு. ரோமன் லாட்டின்,சிரியன்,
கினாயா,
சீரோ மலபார், யாகோபா கிறிஸ்தவர்கள், இதில் ரோமன் லாட்டின் கிறிஸ்தவர்கள் வரிசையில் அடிமட்ட கத்தோலிக்கர்கள் ஆவர்.
இவர்களுக்குள் கலப்பு திருமணங்களுக்கு வரவேற்பு இல்லை. முக்கியமான கினாயாகாரர்கள் மற்றைய பிரிவுடன் உள்ள திருமண பந்தங்களை கடுமையான சட்டங்கள் ஊடாக தடுத்து வைத்துள்ளனர்.
அரசில் சிறப்பு சலுகை கிடைக்கும் என்ற ஆசையை காட்டி, நாடார் கிறிஸ்தவர்களை லாட்டின் கிறிஸ்தவர்கள் என குறிப்பிட பாதிரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். சில கிறிஸ்தவ நாடார்கள் பணிந்தும் விட்டனர்.
தமிழ்நாட்டில்
சீர் திருத்த கிறிஸ்தவத்தில் நாடார்கள் எண்ணிக்கை முதல் இடத்தில் என்றாலும் கத்தோலிக்கத்தில் எண்ணத்தில் பறவர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
பொதுவாக எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் நாடார் இனம் பின் தள்ளபட்டு விட்டது. அதிகாரத்தில் இருந்து பிய்த்து எறியப்பட்டுள்ளனர்.
இதில் பெருவாரியாக உள்ள தலித் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவத்தை தழுவி இத்தனை வருடமாகியும் சமூுக நீதி மற்றும் மனித நேயம் பேசும் பாதிரி கும்பலால் நல்லது செய்ய இயலவில்லை. அரசிடம் தலித் என்ற பெயரில் கிடைக்க வேண்டிய சிறப்பு உரிமை மைனாடிட்டி என்ற பெயரில் பறி போனது ஒரு புறம் இருக்க, அரசு கிறிஸ்தவ மக்கள் உரிமைக்கு என கொடுத்த மைனாரிட்டி உரிமைகளையும் தங்கள் சபை நிறுவன வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டு தனிநபர் கிறிஸ்தவ வாழ்க்கையை அடிமைகள் போன்று தான் நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்விக்கு இடம் கொடுக்க சொல்லி அரசு , சபை நிறுவனத் தலைமைகளை பரிந்துரைத்து வருகிறது , சட்டம் ஊடாக கட்டாயப்படுத்துகிறது. 50 சதவீதம் மைனாரிட்டிகளுக்கு கல்வி கொடுக்கும் நிலையில் இல்லை என்கின்றனர் மத தலைமைகள்.
கிறிஸ்தவ மக்கள் உரிமையும் மைனாரிட்டி உரிமைக்குள் இருக்க இலவச கல்வியோ, சலுகை கல்வியோ கிடைக்க இயலாத சூழலில் தான் கிறிஸ்தவர்கள் உள்ளனர். கிருஸ்த பள்ளிகளில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி சலுகைகளோ கட்டண சலுகைகளோ கிடைப்பது இல்லை.
இதில் தலித் கிறிஸ்தவர்கள் அரசிடம் இருந்து பெறக் கூடிய சலுகைகளும் கிடைக்க இல்லாது போக இவர்களின் கிறிஸ்தவ மதமாற்றம் ஒரு காரணமாக உள்ளது. தந்திர சாலிகள் ஆன பாதிரிகள் தங்கள் கடமையை உதறிக் கொண்டு ,மதம் மாறின தலித்துகள் மற்றும் பழக்குடியினரை உதவ தற்போது அரசை கேட்டு வருகின்றனர். அதுவும் மக்களுக்கான கேள்வி அல்ல, மக்கள் கிறிஸ்தவ மதத்தை விட்டு போனால் மைனாடிட்டி அதிகாரங்களை வைத்துக் கொண்டு மிரட்டி பிழைக்க இயலாது.
கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்தவ பாதிரிகள் சொல்கிறவர்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும் வரை கிறிஸ்தவ தலைமைக்கு கொண்டாட்டம் தான்.
16 ஆம் நூற்றாண்டு முதல் மதம் மாற்றம் என்ற ஆயுதத்தை வைத்து ஆதிக்கம் செலுத்தி
300 வருடங்களாக ஆங்கிலேய அரசின் உதவியுடனும் மதம் மாற்ற வைத்தும் தற்போதும் நிழல் அரசாங்கம் நடத்தி வரும் கிறிஸ்தவம் யாருக்கானது என்ற கேள்வி உண்டு.
பலர் பதில் கிடைக்காது அல்லேலூுயா கும்பலில் சேர்ந்து விட்டனர். அங்கு இங்கைய வாழ்க்கையை பற்றி கவலை கொள்ள இடம் இல்லை. பரலோகத்தில் கர்த்தருடன் ஆடிப் பாடி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் பேயை விரட்டிக் கொண்டு வேறு உலகத்தில் வாழ்கின்றனர்.
ஆனால் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை கூடுவதன் காரணம் ரொட்டி ஜாதீய அடுக்குகள் தீண்டாமை என்பன மட்டுமல்ல.
இந்திய அரசு மக்களின் வாழ்வியல் மனித உரிமை நலன் சார்ந்து இயங்க துவங்கினால் மதமாற்றம் இனியாவது தொடராது, உயராது .
ஆனால் அரசும் கிறிஸ்தவ மக்கள் பற்றி சரியான தகவல்கள் திரட்டவோ அம்மக்கள் வாழ்வியல் பற்றி படிக்கவோ அக்கறை இல்லாமலே இருப்பதால் மதமாற்றம் அதை தொடந்த நிழல் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆக்கம் கூடுகிறது.
கிறிஸ்தவத்தின் நிழல் அரசை பற்றி அடுத்து பார்ப்போம்.