21 Jul 2025

பிரான்சிஸ் சேவியர் எழுதிய கடிதம் – ஜனவரி 20, 1548, கொச்சியில் இருந்து போர்ச்சுகீசிய மன்னர் ஜான் மூன்றாவது

 

பிரான்சிஸ் சேவியர் மற்றும் மன்னர் ஜானுக்கான(111) கடிதம் – ஒரு வரலாற்றுப் பின்னணி

கிழக்கு கடற்கரையில் தென்றல் வீசிக்கொண்டிருந்தது..  சரியாக வாச்கோடி காமா வந்து சென்ற 1498 ஆண்டு கணக்கிட்டால் 50 வருடங்கள் பின்னுட்டு இருந்து. 1548 ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி பிரான்சிஸ் சேவியர் கொச்சியில் தரையிறங்கினார்.

அந்த நாட்களில் கோவாவின் வயதான பிஷப் ஒருவர், தனது பரந்த ஆயர் மாநிலத்தில் உள்ள நகரங்களை பார்வையிட கொச்சி  வந்திருந்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடவுளின் திட்டமெனவே, அந்த நாள் அவர்களுக்குள் நேரில் சந்திப்பாக அமைந்தது. ஒருவருக்கொருவர் முகமறியும் அந்த நிமிடங்களில், ஒரு ஆறுதலையும் ஆனந்தத்தையும் இருவரும் பெற்றனர்.

இந்த சந்திப்பு, பிரான்சிஸ் சேவியருக்கு சில நினைவுகளைத் திரும்பக் கொண்டு வந்தது. காற்றில் கலந்த ஒரு உந்துதல் போலவே, அவர் விரைந்து ஒரு பேனைவை மைதீட்டி ஒரு முக்கியமான கடிதத்தை எழுத ஆரம்பித்தார். அந்த கடிதம் போர்ச்சுகீசிய மன்னர் கிங் ஜானுக்கானது.

ஆனால் இப்போது, இந்தப் புதிய கடிதத்தில் அவர் காட்டிய மொழிநடை, ஏதோ ஒரு இன்னொரு தீவிர மாற்றத்தைக் எதிர்நோக்கியது ஆகும். இது ஒரு துறவி மன்னனுக்கு எழுதும் சாதாரண  கடிதமல்ல. இதில், மன்னரின் செயற்பாடுகளின் பின்புலத்தில் உள்ள குழப்பங்களைப் பற்றிய தீவிரக் கவலை இருந்தது.

மன்னர் ஜான் 3, இந்தியாவில் உள்ள போர்ச்சுகீசிய அதிகாரிகளின் அடக்கமற்ற ஆசைகளையும் கொடுமைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற துவனி  இருந்திருந்து.  அதிகாரிகள் பெரும்பாலும் கிறித்தவப் பரப்புப் பணியை புறக்கணித்தனர். அவர்களது கவனம் எல்லாம் வர்த்தகம் மற்றும் யுத்த முயற்சிகளில்தான் இருந்தது என்று கவலை பட்டிருந்தார்  சேவியர்,

மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களான மக்கள், மீண்டும் பழைய மதத்திற்கு திரும்பாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற முக்கியக் கோரிக்கை வைத்து இருந்தார்.  மதம் மாறிய இந்திய கிறிஸ்தவர்கள், கீழ்மட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற புகார் இருந்திருந்தது.

 கோஸ்மோ டி பய்வா போன்றவர்கள், யுத்தத்தில் திறமையானவர்கள் என்பதால் மதமாற்றவர்களை கண்டு கொள்ளாமல் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெற்றுவிட்டனர். இதனை மாற்றவேண்டும். மதம் மாறிய கிறிஸ்தவர்கள், பிறமத மக்கள் அனுபவித்த உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்கவேண்டும்.  மன்னர் அளித்த புதிய உத்தரவுகளில் ஒன்றில், கிறிஸ்தவர்கள் தவிர மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் போர்ச்சுகீசிய கடற்படையில் கட்டாயமாக சேர்க்கப்படலாம் என்ற புதிய விதிமுறை சேர்க்கப்பட்டு இருந்தது.

#################################################################### 


பிரான்சிஸ் சேவியர் எழுதிய கடிதம் – ஜனவரி 20, 1548, கொச்சியில் இருந்து

உயர்திரு மன்னர் அவர்களுக்கு"போர்ச்சுகீசிய மன்னர் ஜான் மூன்றாவது அவர்களுக்கு"

அரசரே,

தங்கள் உயர்திரு பெருமைக்கு, மலாக்கா மற்றும் மொலுக்கா பகுதிகளில், மதம் மற்றும் நம் ஆண்டவர் தேவனின் ஆராதனை மற்றும் சேவை சம்பந்தமான விஷயங்களை பற்றி மிக விரிவாகவும் தெளிவாகவும், நான் ஐரோப்பாவிலுள்ள எங்கள் சபைக்குத் (சொசைட்டி ஆஃப் ஜீசஸ்) அனுப்பியுள்ள கடிதங்களின் மூலம் தெரியவரும் என்று நம்புகிறேன்.

அதோடு, தங்கள் உயர்திரு பெருமையிடமிருந்து இங்கு வந்த கடிதங்களுக்கு எனது பதில்களையும் அனுப்பியுள்ளேன். தங்களை, எங்கள் இயேசு சமுதாயத்தின் தலைவனாகவும் உண்மையான பாதுகாவலனாகவும் எங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் எங்களுக்கு காட்டும் அன்பும் உதவிகளும், இந்தப் பட்டத்துக்கு உரிய பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுகின்றன.

இந்தியாவில் மத நிலைமைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்த விஷயங்களை, இங்கிருந்து கடவுளின் சேவைக்காக செல்கின்ற பக்தியுள்ளவர்களும் தங்கள் உயர்திருவிடம் விரிவாக அறிமுகப்படுத்துவார்கள். மேலும், தெய்வீக பணியில் அனுபவமிக்க தந்தை ஜோம் டி வில்லா கொண்டே, இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய விஷயங்களை தங்களிடம் எழுதுகிறார். அவர் கூறும் விஷயங்கள், தங்களின் மனச்சாட்சி மற்றும் அவருடைய உள்ளார்ந்த அக்கறைக்கும் உதவியாக இருக்கின்றன.

இந்த விஷயங்களை அவர் மிக வெளிப்படையாகவும் உண்மையுடன் கூறுகிறார் — உங்கள் உயர்திருவுக்கு நேரடியாக எழுதிய கடிதம், கூடுதல் குறிப்புகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றில். இவை அனைத்தும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வளவு நம்பகத்தன்மையுள்ள தகவல்களைக் கொண்டு, தங்கள் உயர்திரு, பிற விடயங்களில் காட்டும் ஞானத்தைப் போலவே, இவற்றிலும் சரியான முடிவுகளை எடுத்து தேவையான கட்டளைகளை விரைவில் வழங்கினால், அது மிகவும் உரியதாக இருக்கும்.

இப்போது, என்னைச் சேர்ந்த விஷயத்திற்குச் செல்லலாம்.

நான் இந்தக் கடிதத்தை எழுதவேண்டுமா வேண்டாமா என்று மனதுள் பல நாள்கள் எண்ணி அலசினேன். இங்கு நடப்பவற்றைப் பார்த்து, இதே நேரத்தில், நம் பரிசுத்த விசுவாசம் இங்கு பரவவும் நிலைபெறவும் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனமாக சிந்தித்தேன்.

ஒருபுறம், நான் கடவுளைச் சேவிக்கவும், அவர் மகிமைக்காகப் பணியாற்றவும் வேண்டும் என்ற ஆவலால் எழுதி விடவேண்டும் என்று எண்ணினேன்; மற்றொரு புறம், நான் கூறும் யோசனைகள் செயல்படுத்தப்படுமா என்பதில் நம்பிக்கையில்லாததால், இதை எழுதுவதிலும்  தயங்கினேன்.

ஆனால், இந்த யோசனைகள் என் மனதில் உறுதியாக பதிந்திருப்பதைக் காணும்போது, கடவுளுடைய படைப்புத்திட்டத்திலேயே இவை ஒன்றாக இருக்கின்றன என்ற நம்பிக்கையுடன், இதை மறைத்து விடுவது எனது கடமையை புறக்கணிப்பதாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது.

இந்த உண்மைகளை எனக்கு கடவுள் காண்பித்ததற்கான காரணம், தங்களிடம் நான் இவை தெரிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்ற நம்பிக்கையும் வந்தது. ஆனால், அதே நேரத்தில், இந்தக் கடிதம், தங்கள் மனதைப் பாரிய சுமையாக்கி, கடைசி தீர்ப்பு நாளில் தங்களை கடவுளின் முன் குற்றம் சாட்டும் காரணமாக இருக்கக் கூடும் என்ற பயமும் என்னைத் தடுக்க முயன்றது.

இந்த யோசனைகள் எனக்கு எவ்வளவு வலியை ஏற்படுத்தியுள்ளன என்பதை, தயவு செய்து தாங்கள் உணர வேண்டும்.

எனது உள்ளார்ந்த மனச்சாட்சி கூறுகிறது — இங்குள்ள மனித ஆத்மாக்களின் இரட்சிப்புக்காக, என் வாழ்வையே அர்ப்பணிக்கவும், என் உடலை வேலைக்காக சிதைக்கவும் நான் இங்கே வந்தேன்.

இது, தங்களின் மீது பொறுப்பாக இருக்க வேண்டிய ஒரு கடமையின் ஒரு பகுதியை, நான் மேற்கொள்வதன் மூலம், தங்களின் மனச்சாட்சிக்கான சுமையை குறைப்பதற்காகவும், இறுதித் தீர்ப்பு நாளில் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு அளிப்பதற்காகவும் இருந்தது.

தாங்கள் எங்கள் குழுவின்  மீது காட்டும் மிகப்பெரிய அன்பு, இந்த தியாகத்தை நான் செய்வதற்கான உந்துசக்தியாக இருக்கிறது. எனவே, என் துன்பமும் உழைப்பும் இவற்றுக்காக அர்ப்பணிக்கத் தயங்கவில்லை.

சத்தியமாகச் சொல்கிறேன் அரசரே, இரு விதமான கவலைகள் காரணமாக என் மனம் மிகுந்த குழப்பத்தில் சிக்கி, மிகுந்த வலி மற்றும் குழப்பத்துடன் இருந்தேன். ஒரு பக்கத்தில் என் கடமையை தவற விடக்கூடாது என்ற பயமும், மறுபக்கத்தில் உங்கள் மேல் ஆபத்துகள் அதிகரித்து விடக்கூடாது என்ற பயமும் எனை பின்தொடர்ந்தன. இந்த இரு எண்ணங்களும் என்னை இழுத்துச் சென்றன.

இறுதியில், நான் என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து, என் மனச்சாட்சியைத் துடைத்துவிட்டு, நீண்ட நாட்களாக உங்கள் உயர் பதவிக்கு நான் சொல்ல வேண்டியிருந்ததைக் கூறுகிறேன்.

இந்தியாவில், மலாக்கா, மொலுக்கா போன்ற பகுதிகளில் நான் நேரில் அனுபவித்த நிகழ்வுகள் என் உள்ளத்தைக் காயப்படுத்தி, என் மனதை வாட்டுகின்றன.

உங்கள் உயர் பதவிக்கு நான் உறுதியாக கூற விரும்புவது – இங்கே கடவுளின் சேவைக்காக செய்ய வேண்டிய பல காரியங்கள், செய்தல் வேண்டியவை செய்தப்படாமல் விட்டுவிடப்படுகின்றன. இதற்குக் காரணம் – பதவியாளர்களுக்கிடையே உள்ள போட்டி மற்றும் பொய்யான பெருமைகள்.

ஒருவர் சொல்வார்: "இது என் பொறுப்பு, மற்றவர்களுக்கு புகழ் செல்ல விடமாட்டேன்."

மற்றொருவர் சொல்வார்: "நான் இதைச் செய்யவில்லை, அதனால் நீங்களும் செய்யக்கூடாது."

மற்றொருவர் கூறுவார்: "நான் தான் வேலை செய்தேன், ஆனால் புகழ் மற்றவர்களுக்கு போய்விட்டது."

அதனால் அடிக்கடி சண்டைகள், மனக்கசப்புகள், தாமதங்கள் ஏற்படுகின்றன. இதனால் கடவுளின் மகிமை வளரவேண்டிய சந்தர்ப்பங்கள் வீணாகின்றன. இதே காரணத்தால், உங்கள் இந்திய ஆட்சி பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுகிறது.

இது போன்ற சூழ்நிலைகளை மாற்ற, ஒரு மட்டுமே தீர்வு எனக்குத் தோன்றுகிறது:

அந்த தீர்வு என்னவென்றால் – மதம் பரப்பும் செயலை அதிகாரப் பதவியிலுள்ள ஆட்சி அதிகாரிகள் தான் முன்னெடுக்கவேண்டும் என்பது பற்றிய உங்களின் உரிய உத்தரவை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அதாவது:

  • இந்தியாவில் உள்ள ஆளுநர் அல்லது கட்டளை அதிகாரிக்கு நீங்கள் நேரடியாகப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
  • மத பரப்புக்கான முயற்சிகளை மடாதிபதிகள் அல்லது குருக்களை விட ஆளுநரிடம் தான் நீங்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள் என தெளிவாக அறிவிக்க வேண்டும்.
  • மத பரப்பில் வெற்றி அல்லது தோல்வி, அந்த அதிகாரியின் செயலில் உள்ளது என்பதையும், அவருக்கு வெகுமதியாகவோ, தண்டனையாகவோ பதிலளிக்கப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், ஆளுநர் அல்லது அதிகாரி ஒருவர் உங்களிடம் எழுதிய கடிதத்தில்:

  • எவ்வளவு மக்கள் கிறிஸ்தவராக மாறினார்கள்,
  • எத்தனை பேர் மதத்திற்கு வந்தனர்,
  • என்ன வழிகள் இருந்தன,
  • எதிர்காலத்தில் என்ன வாய்ப்புகள் உள்ளன,

 

என அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து வேறு எவரின் அறிக்கையையும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று கூற வேண்டும்.

மேலும், உங்கள் ஆட்சிக்காலத்தில் ஏதேனும் அதிகாரி தன் ஆட்சி காலத்தில் மத பரப்பில் பின்விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றால், அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதையும் உறுதியாகக் கூற வேண்டும்.

இது உறுதியாக நிகழும் என்பதை விளக்க, நீங்கள் கடவுளின் பெயரில் ஒரு உறுதிமொழி செய்ய வேண்டும்:

  • அந்த அதிகாரி போர்த்துக்கேஸுக்குத் திரும்பும் போது,

o    அவரது சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்

o    அது வறியோர் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்

o    அவரே சிறையில் அடைக்கப்பட வேண்டும், போன்ற கட்டுகள் கட்டப்பட வேண்டும்

மறுபடியும், அவர்களுக்கு எந்தவொரு உரிமையும், தயவும் அளிக்கப்பட மாட்டாது என்பதை முன்னதாகவே கூறிவைக்க வேண்டும். அவர்களுக்கு ஒரே வழி – தங்கள் ஆட்சிக்காலத்தில் அதிகமான கிறிஸ்தவர்களை உருவாக்க வேண்டும் என்பதே.,

இந்தியாவில், உலக நலன்களுக்காக வாழும் சிலர், உங்கள் சபைக்கு எதிராக மிக்கேல் வாஸ் என்பவரது மரணத்தைக் காரணமாகக் கொண்டு  ஒரு வியாபாரி மீது தவறான சந்தேகங்களை பரப்புகிறார்கள். அவர்கள் இந்த நிந்தையை உங்களிடமும் எழுத்தாக அனுப்பக்கூடும் என்றும் எனக்குத் தெரிகிறது. ஆனால், இவ்விஷயத்தில், உண்மையும் நேர்மையையும் வைத்து நான் அவருக்காக சாட்சி கூறுகிறேன். இது எனது கடமை என நம்புகிறேன்.

நான் உறுதியுடன் கூறுகிறேன் – எவ்வாறு எனக்கு இந்த அறிவு வந்தது என்பதை எழுதவோ சொல்லவோ முடியாது என்றாலும் – அந்த மரணத்தில் அவர்கள்  சாட்டுவது போல அவர் குற்றவாளி இல்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்துள்ளேன். அது எப்படியென்றால், அந்த நேரத்தில் நான் மொலுக்காசில் இருந்தேன் – இந்தியாவிலிருந்து மிகவும் தொலைவில்.

எனவே, உங்கள் தூய மனசையும், கடவுளை மகிழ்விப்பதற்கான உங்கள் முயற்சியையும் நினைவில் வைத்துக் கொண்டு, அவருக்குத் தொந்தரவு தரக்கூடிய எதையும் செய்ய வேண்டாம், எதையும் ஆணையிட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், உங்கள் உயர்திரு இந்த பொய்யான பழிக்கு நம்பிக்கை கொடுத்ததுபோல் தோன்றும்; இதனால் அவனை விமர்சிக்கிறவர்கள் மேலும் வலிமை பெறலாம்.

மேலும், கோச்சியின் விகாரியான பெட்ரோ கோன்சால்வெஸை நீங்கள் உங்கள் அரண்மனையின் மதிப்புக்குரிய பட்டதாரியாக நியமித்துள்ளீர்கள்.. இது நமக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. ஏனெனில், அவர் நமது ஜெசுவிட் சமுதாயத்திற்கு அளித்துள்ள பெரும் உதவிகள் காரணமாக, நாங்கள் அவருக்குப் பெரும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.

கொச்சியின் பிஷப்பின் விகாரியின் வீடு நமது ஜெசுவிட் சமுதாயத்தின் இருப்பிடமாகவும் உள்ளது. அவருடைய நல்லிணக்கம், சாதாரண நட்போ அல்லது சுமூக ஆசிர்வாதமோ அல்ல; அவருடைய தனிப்பட்ட சொத்துக்களை நமக்காக செலவழித்த பிறகும், மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கி நமக்காக மேலும் செலவழிக்கின்ற அளவிற்கு அவர் தாராளமுள்ளவராக உள்ளார்.

எனவே, அவருக்கும், அவருடைய ஊழியர்களுக்கும், அவர்கள் சம்பளங்கள் முறையாக வழங்கப்படுவதற்கான கடிதங்களை போர்த்துகல்லில் இருந்து அனுப்ப உங்களின் ஆணையை நாங்கள் வேண்டுகிறோம். இருவரும் இந்த உதவிக்குத் தகுதியானவர்கள் – விகாரி, உங்கள் ر நம்பிக்கையாளர்களின் ஆத்ம நலனுக்காக உழைப்பவர்; மற்றும் அவரது வீரர்கள், உங்களின் கொடியின் கீழ் இராணுவத்தில் சேவை செய்யும் வீரர்.

இப்போது முடிவில், நான் இதனைக் கூறுகிறேன்:

உங்கள் மரண நேரத்தில், "இவை எல்லாம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!" என்று மனதார மகிழ்வதுபோல், அதை இப்போதே தெளிவாக உணரவும், உடனே செயல்படுத்தவும் ஆண்டவர் உங்களுக்கு அருள் செய்வாராக.

உங்கள் உயர்திருவின் வீண்( useless ( பணியாளர்,

புனித பிரான்சிஸ் சேவியர்

கொச்சி, ஜனவரி 20, 1548

 #####################################################################

 போர்ச்சுகலின் ஜான் III, 1502 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, போர்ச்சுகல் மன்னர் மனுவேல் I மற்றும் அரகோனின் மாரியா ஆகியோருக்கு பிறந்தார். பிறக்கும் போதே அவர் ஸ்பெயின் இளவரசராக இருந்தார்.

1521ல், தனது 36 ஆண்டு நீண்ட ஆட்சியைத் தொடங்கிய அவர், ஸ்பெயின் அரசி ஜுவானா I மற்றும் சாள்ஸ் I ஆகியோரிடம் அரசியல் திருமணத்திற்கான யோசனை வைத்தார். இதன் விளைவாக, அவர் ஜுவானாவின் சகோதரி கத்தரினாவை திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில், அவரது சகோதரி இசபெல்லா, சாள்ஸுடன் திருமணம் செய்யப்பட்டது.

முன்னைய அரசர்களைப் போலவே, ஜான் III ஒரு முழுமையான அதிகாரத்துடன் ஆட்சி செய்தார்.  1527ஆம் ஆண்டு, அவரது ஒரே மகளாக மரியா பிறந்தார். அவரை விரைவில் இங்கிலாந்தின் ஹென்றி IX உடன் நிச்சயித்தனர்.

ஜான் III தனது ஆட்சியில், தென்அமெரிக்காவில் தனது மாமனாரின் (சாள்ஸ்) பேரரசுக்கு அடுத்தபடியாக தனது சொந்த பேரரசை அமைத்தார்.  அதேசமயம், மொரோக்கோவில் இருந்த போர்ச்சுகீசிய நிலங்களை ஓரளவிற்கு கைவிட்டார். பின்னர், 1537ல், அவர் ஒரு இளவரசர் ஜானைப் பெற்றார். ஆனால் விரைவில் மரணமடைந்தார்; அதன் காரணம் இதுவரை நிச்சயமாகத் தெரியவில்லை. சிலர், இளவரசரை ஹென்றி IX கொன்றதாக நம்புகிறார்கள்.

அவரது ஆட்சிக் காலத்தில், சில லூதரர்கள் (மறுமதச் சிந்தனையாளர்) போர்ச்சுகலுக்குள் நுழைந்தனர். இதை எதிர்த்து, அவர் போப் அலெக்சாண்டர் VII-னிடம் பரிசுத்த விசாரணை (Inquisition) நடத்த அனுமதி கேட்டார்.

1550 ஆம் ஆண்டு, ஜான் III அமெரிக்காவுக்குச் சென்று ஸ்பெயினியர்களைச் சந்தித்தார். அங்கு மலேரியா நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் அவருக்கு பெரும் பிரச்சனையாக்கி மாறியது. அப்போது ஹென்றி IX,  தனது மனைவி மரியாவை அரசியாக்க விரும்பினார். ஆனால் ஜான், மரியாவைத் துரத்தி, இங்கிலாந்தின் அதிபரிடம் அந்த சிம்மாசனம் செல்வதைத் தவிர்க்க, தனது சகோதரர் லூயிசை அரசராகத் தேர்ந்தெடுத்தார்.


17 Jul 2025

நரிவேட்டை சில அரசியல் மனித உரிமை கேள்விகள் !

திரைப்படத்தின் தலைப்பு நரி வேட்டை என்று வைத்துள்ளனர். நரவேட்டை /நரநாயாட்டு -மனிதவேட்டை என்று தானே வந்து இருக்க வேண்டும். நரி என்பது நரியாக குறிப்பிட்டால் இந்த அரசியல் அதிகாரத்தை நரிகள் வேட்டையாடுகின்றனர் என்று குறிப்பிடுகிறார் என புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

 'நரிவேட்டை’ கேரளாவில் 20 வருடங்களுக்கு முன்பு 2003ஆம் ஆண்டு நடைபெற்ற  வயநாடு, முத்தங்கா என்ற இடத்தில் நடந்த பழங்குடி (ஆதிவாசிகளின்) மக்களின் சொந்த நிலம் வேண்டி செய்த   போராட்டம் அதை தொடர்ந்து போலிஸ், அரசின் கட்டளைக்கு அடங்கி அம்மக்களை மனிதமற்ற முறையில் ஒடுக்கியதை பற்றிய உண்மை சம்பவத்தை ஆதாரமாக கொண்டு எடுக்கப்பட்ட  திரைப்படம் ஆகும்.  இத் திரைப்படம் தற்போது கேரளா முழுவதும் வெளியிட்டு  விமர்சன பாராட்டுகளை பெற்றுக்கொண்டு வருகிறது.


முத்தங்கா போராட்டம் நடந்த போது, 2003ஆம் ஆண்டு பிப்ரவரியில்,  பத்தாம் வகுப்பு மாணவராக இருந்த இயக்குனர்,  பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதே சம்பவத்தை ஆதாரமாக கொண்டு இயக்கியுள்ளார்.   “போலீசார் 18 முறை துப்பாக்கிச் சூடு நடத்தின இக்கலவரத்தில் ஒரு போலிசும், ஒரு பழங்குடி இளைஞனும் கொல்லப்பட்டதாக அரசு கணக்கு இருந்தாலும் நான்கு பழங்குடி இனத்தினரின் மரணம்,  பலர் துன்புறுத்தப்பட்டு காயப்பட காரணமான கலவரம் இது. 
 
முத்தங்கா சம்பவத்தின் கைரளி தொலைக்காட்சி  கேமெராமேன் ஷாஜி மரத்தில் ஏறி ரகசியமாக எடுத்த சுமார் ஆறு நிமிடத்து முப்பது வினாடி காட்சிகள் மட்டுமே  பதிவாகியுள்ளது.  


மூன்று மணி நேர பீதி, நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மை மற்றும் அதன் கலை வடிவம், இவற்றின் கலவையாக உருவானது ‘நரிவேட்டை திரைப்படம். அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உண்மை சம்பவங்களையும் புனைவையும் கலந்துரைத்த சினிமா நடையில், ஒரு பரபரப்பான மையக்கருத்து இத்திரைப்படத்துன் ஊடாக பேசப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக சிந்திக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு திரைப்பயணம். ஆவணப்படமல்ல இது ஒரு புனைவு படைப்பு என்பதினால்   சில விஷயங்களை விட்டு விட்டு, சிலவற்றைச் சேர்த்தே எழுதியுள்ளோம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை எழுதும்போது, படைப்பாற்றலான கற்பனையும் இயல்பாகவே கலந்திருக்கும்.” என்ற தகவலை இதன் இயக்குநர் அனுராஜ் மனோஹர் பகிர்ந்துள்ளார்.   

முத்தங்கா போராட்டம், பழங்குடியின மக்களுக்கு நில உரிமையை கோரி ஆதிவாசி கோத்ர மகா சபா (AGMS) நடத்தியது. அந்தப் போராட்டம் துரதிருஷ்டவசமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதற்குள் சென்றது. “பல ஊடகவியலாளர்களும், தனியார் விசாரணைகளும் பல ஆண்டுகள் முயற்சி செய்தாலும், உண்மையில் என்ன நடந்தது என்பதை உறுதியாக கண்டறிய முடியவில்லை. போராட்டக்காரர்கள், எதிர்ப்பாளர்கள் – எல்லோருக்கும் தங்கள் தனித்துவமான பக்கவாதக் கதைகள் இருந்தன. அதனால் படம் முழு உண்மையைவே இருக்க முடியாது என்றும் படக்குழுவினர்  குறிப்பிட்டு உள்ளனர்

திரைக்கதை எழுதியவர் அபின் ஜோசப். விருவிருப்பான திரைக்கதையாக உள்ளது.  தமிழ் நாட்டைச் சேர்ந்த விஜய் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.  கேரளா இயற்கை காட்சிகளுடன் போராட்ட களமும்  அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இழந்த நிலத்தை  மீட்கும் போராட்டத்தில் கொட்டப்பட்ட ரத்தத்திற்குமான உணர்வுகளை சரியாகவே  காட்சிப்படுத்தியுள்ளனர்.   ஒரு திரைப்படத்தின் உள்ளார்ந்த உணர்வுடன் கூடிய இசையை  ஜேக்ஸ் பிஜாய்  கொடுத்துள்ளார். 'நரவேட்டை சினிமாவின்  வெற்றிக்கு  ஒரு முக்கிய காரணம் இசை எனலாம்.

“மலையாள சினிமாவும்  வணிக வெற்றிக்கு என ஓடிக்கொண்டு இருக்கிற இக்கால சூழலில், மலையாள சினிமாவின் இயல்பான பாணியான கலைத்துவத்துடன் அரசியலை பேசுவது, அரசியல் பின்புலம் கொண்ட கதைகளுடன் கலைத்துவமாக  மக்களிடம் அரசியல் உரையாடல் நடந்துள்ளது பாராட்டுதலுக்குறியது.  முக்கியமாக கேரளா போலிஸ் நிலை, உயர் அதிகாரிகள் மத்திய படை அரசியல்வாதிகளின் கூட்டு எவ்விதம் எளிய மக்களை ஒடுக்கியுள்ளது என இப்படத்தில் காணலாம்.   இளம் இயக்குனர்கள்,  பழைய மலையாள  இயக்குனர் வரலாற்றிலிருந்தே ஊக்கம்கொண்டு வந்துள்ளனர் என்பதும் பெரிமைக்குறிய விடயமே . 

முத்தங்கா போராட்ட குழுவுடன் போராட்டம் துவங்கி 40 நாட்களுக்கு பின்பு தான் முதலமைச்சர் பேச முன் வந்தார். பழங்குடிகளின் உரிமையை ஆதரித்த, கேரளா அரசின் பூமி பகுந்தளிக்கலில் நிகழ்ந்த ஊழலின் எதிரொலி தான் இக்கலவரம் என்று அன்றைய இடதுசாரி தலைவி கவுரிஅம்மா சொல்லியிருந்தார். முத்தங்கா நிலத்தை தனியாருக்கு சுற்றுலா வளர்ச்சிக்காக கொடுக்கும் ஒரு நோக்கமும் அரசிற்கு இருந்தது என்கின்றனர்.   காங்கிரஸ் கட்சியின் , ஏ.கே ஆண்டணியின் ஆட்சியில் நிகழ்ந்த,   20 வருடங்கள் ஆன நிலையில்   எளிய பழம்குடி மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்த போராடிய மக்களை ஒடுக்க  அரசு கைகொண்ட நரித்தனம் பற்றி பேசிய திரைப்படம் இது. நரிவேட்டை’ திரைப்படம், மறக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத உண்மைகளை இளைய தலைமுறைக்கும், கடந்த தலைமுறைக்கும் நினைவூட்டி உள்ளது.  அப்போதைய ஊடகத்தல் ஆந்திரா நக்சல்கள் ஈழப்புலிகள் இந்த போராட்ட குழுவினருடன் கலந்து உள்ளனர் என ஊடகவியாளர்களை வைத்து எழுதியும் தவறான செய்தியையும் பரவவிட்டனர்.  .

 

“முத்தங்கா போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கீதானந்தன் போன்றவர்கள், படத்தில் தங்களை காட்டியிருப்பதை பற்றி விமர்சனங்கள் முன்வைத்துள்ளனர். இருப்பினும் இது பொதுவாக மக்களிடையே விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.  கூடுதல் உண்மைகளை வெளிவரவும் இத்திரைப்படம் காரணமாகலாம். பழங்குடிகளின் உரிமை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு வரலாம். இவர்களுக்கான நிலம் மற்றும் உரிமைகள் பெறா வண்ணம் இவர்களின் மதமாற்றத்திற்கு உற்சாகப்படுத்துவதும் அரசின் உள்நோக்கம் கொண்ட செயலாகும். 


ஆர்யா சலீம் பழங்குடி தலைவியாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார், மேலும் பழங்குடி மக்களில் போராளியாக சி. கே. ஜனுவை நினைவூட்டியதற்காக  சிறப்பு பாராட்டுக்குரியவர். 


திரைப்படத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள வர்கீஸ் பீட்டர் என்னும் கதாபாத்திரம், உண்மையைச் சொல்ல முயலும் ஒரு இளைஞனின் உருவகமாக உள்ளது. நிஜத்தில்  இதுவரை உண்மையைச் சொல்ல யாரும் தைரியமாக முன்வரவில்லை என்பதே உண்மை.


டோவினோ தாமஸின்,  வர்கீஸ் பீட்டர் என்ற கதாப்பாத்திரப் பெயர் போலிஸால் கொலை செய்யப்பட்ட வயநாட்டை செர்ந்த வர்கீஸ் என்ற உண்மை நக்சலையும் நினைவுப்படுத்தியது. வர்கீஸ் ஒரு ஏழைத்தாயின் மகன். நன்றாக படித்து பட்டதாரியான இளைஞன். தான் விரும்பும் அரசு வேலைக்கு வர வேண்டும் என ஆசை கொண்டு பல அரசுத் தேர்வுகள் எழுதி வரும் இளைஞர். இந்நிலையில் போலிஸ் வேலைக்கு தேர்வு ஆகிறான். ஆனால் பிடிக்காத போலிஸ் வேலையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவனுடைய வாழ்க்கை சூழல் உந்துகிறது. காதலி வங்கியில் பணி செய்து வரும் சூழலில் அவளை திருமணம் முடிக்க இந்த வேலையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.  முதல் பணி இடமாகவே ஆதிவாசி போராட்ட களம் அமைகிறது. அங்கு தனது நண்பன் போலிஸ் பஷீர் கொல்லப்படுகிறார். அந்த மரணம் ஆதிவாசிகள் செய்தது என சந்தேகப்பட்டாலும் அதன் உண்மையை கண்டு பிடிக்கும் போது அதிற்சிக்கு உள்ளாகிறான். போலிஸ்காரர்கள் மிகவும் நம்பின மிகவும் மதித்த தமிழன்  உயர் அதிகாரி தான் இதன் பின்னால் என அறிந்து கொள்கிறான். இயக்குனர் சேரன் உயர் தமிழ் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். (எப்போதும் போல மலையாள திரையுலகின் தமிழ் இனம் மேலுள்ள வன்மமாகவும் தெரிகிறது இப்பாத்திரப்படைப்பு. கேரளாவில் ஏற்கனவே லக்‌ஷ்மணா, ஜயராம் படிக்கல் போன்ற கொடும் போலிஸ் அதிகாரிகள் இருக்கும் போது தமிழன் போலிஸ் உயர் அதிகாரியை கொடிய, வில்லத்தனம் பிடித்த கொடும் கோலன் அதிகாரியாக காட்டினது நெருடலாகத்தான் உள்ளது. சேரன் உயரமும் போலிஸ் அதிகாரியாக நடிக்க போதவில்லை என்றே தோன்றினது. ஆனால் வில்லனாக சிறப்பாக நடித்து இருந்தார் என்பதையும் மறுக்க இயலாது.)  



பிற்பாடு வர்கீஸால் போலிஸ்காரர்களால்  ஆதிவாசிகள் மேல் செய்த வன்முறையை மறைத்து போலிஸ் அதிகாரியாக தொடர மனம் அனுமதிக்கவில்லை.  நடந்த உண்மையை நீதிமன்றத்திற்கு எட்ட வைக்கிறார். கொடும்கோலனான போலிஸ் அதிகாரி நீதி விசாரணைக்கு உள்படுத்தபடுவதுடன் கதை முடிகிறது. வேடனின் பாட்டை கடைசி பாடலாக சேர்த்துள்ளனர். பெரும் போராட்டத்தை பற்றி சொல்லிய கதையில் ஜானு போன்ற பழங்குடி பெண் தலைமை தாங்கிய,  இந்திய அரசின் அரசியல்மைப்பு மீறலை,  தங்கள் உரிமையை தேசிய சர்வதேச அளவிற்கு கொண்டு சென்ற கதாப்பாத்திரங்களை கண்டு கடைசியில் வேடன் பாடல் அப்படி பெரிய தாக்கத்தை உணர்வு ரீதியாக ஏற்படுத்தவில்லை. உண்மையான போராட்டங்களை வேடன் போன்ற கலைஞர்களின் வேடத்திற்குள் ஒளித்து வைக்கும் தற்கால அரசியல் சூழ்சியை மட்டுமே நினைவுப்படுத்தியது.  1.3 சதவீதம் வரும் பழங்குடி மக்களின் உரிமை பற்றி எந்த அரசிற்கும் அக்கறை இல்லை. தற்கால பிரணாய் அரசு இது போன்ற போராட்டம் வராது இருக்க வேடன் போன்ற வேடம் போடும் பாடகர்களை  மக்களிடம் கடத்தி போராட்டத்தை பாடல் கஞ்சா பாவனை என மடை மாற்றி விடுவதில் வெற்றியும் கண்டுள்ளனர். 





பாதேரி (வயநாடு) அருகே நடத்தப்பட்ட சில பிரமாண்ட காட்சிகளில், 1800-க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் பங்கேற்றுள்ளனர். ”சினிமா ஒரு கலையும் , ஆனால் அதே சமயம் ஒரு தொழிலும் ஆக இருக்கையில் இது போன்ற திரைப்படங்கள் பெரும் நம்பிக்கையை தருகிறது. 



 அரசியல் கேள்விகளை நமது திரைப்படங்கள் எடுத்து உரைப்பது மகிழ்ச்சிக்குரியது. அந்த அர்த்தத்தில், ‘நரிவெட்ட’ ஒரு தைரியமான, தீவிரமான முயற்சி. சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்ல, சவால் விடுக்கும் ஒரு மீடியம் ஆகவும் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், புதிய தலைமுறையை சிந்திக்க வைக்கும் இப்படைப்பு காலந்தோறும் நமக்குத் தேவை.

3 Jul 2025

"சட்டத்திற்கு பார்வையில்லை, நாம் அதன் வலுவான கண்கள் ஆக வேண்டும்" "The law doesn't see, and we have to be its strong eyes .F. V அருள் IG

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வாழையடி பூர்வீகமாக கொண்ட   

F. V அருள் (பிரெடெரிக் விக்டர் அருள்)  1917 நவம்பர் 24 அன்று யாங்கூனில் (ரங்கூன்) பர்மாவில் பிறந்தார்.  

In 1970, Frederick Victor Arul, also called as F.V.Arul IPS became the first Indian to serve the interpol as the vice president of Asia.— at Tamilnadu Police Museum.

  

யோலா மற்றும் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரிகளில் படித்த இவர்  பிரிட்டிஷ் ஆட்சி காலம் 1942 ஆம் ஆண்டு இந்திய போலீசில் தேர்ச்சி பெற்றார்.    F.V அருள் ஹாக்கி விளையாட்டு வீர ராகவும் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

 

1968 மே 31 முதல் 1971 மே 6 வரை மத்திய விசாரணை பணியகத்தின் (CBI) இயக்குநராக பணியாற்றியுள்ளார்.  CBI-யில் பணியாற்றும் காலத்திலேயே, இவர் இண்டர்போல் அமைப்பின் செயற்குழுவில் ஆசியாவிற்கான துணைத் தலைவராக பதவி வகித்து, அந்த உலக அமைப்பில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியராகவும் இருந்தார்

1973 முதல் 1976 வரை  மாநில காவல்துறையில் கடைசி இன்ஸ்பெக்டர் ஜெனரல் IG  பதவியை வகித்தவர். 1976-ல் அவரின் ஓய்வுவிற்கு  பிறகு, அப் பதவி டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (DGP) என மாற்றப்பட்டது.

பிரெடெரிக் விக்டர் அருளின் போலிஸ்  காவல் பணிகள் குறித்த அவரின் அறிவு அளவிட முடியாதது. அவருடைய கொள்கைகள்  ஆளும் அரசியல் வசதிக்கேற்ப அமையவில்லை, அரசியல்  விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் அவரிடம் இருந்தது.

அவர் சிலருக்கு 'விருப்பமானவர்' என்று சொல்லப்படும் வகையிலோ சலுகைகள் நாடுபவர்களுக்கு அவர் எளிதில் அணுகக்கூடியவராக இல்லாமல் இருந்தார். அருளின் வாழ்க்கை இந்திய காவல் துறையினருக்கு ஒரு பேருதாரணம் ஆகும்.

 

சிறந்த உடற்தகுதி, நீண்டநேர திடமான பணி, தூய்மையான வாழ்க்கைமுறை ஆகியவற்றால் அவர் தனக்கென ஒரு முத்திரை பதித்திருந்தார். 1956ல் சென்னை துறைமுக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 1965ல் ஆங்கில எதிர்ப்பு இயக்கம் போன்ற நிகழ்வுகளை அவர் தைரியமாக கையாண்டார்.  சட்ட ஒழுங்கு காவலாளி ஆக செயல்பட்டுள்ளார்


இரண்டு முக்கிய வழக்குகள் அருளுடன் நெருக்கமாக தொடர்புடையவை
யாக இருந்தன

1. 1950
களில் நடந்த நியூயார்க் காடன் சூதாட்டம்: மதராசில் ஒரு கும்பல் காடன் விலைகள் அடிப்படையில் சூதாடி, போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து பாதுகாப்பு பெற்றனர். அருள் விசாரணை செய்து பலரை குற்றவாளிகளாள் என  நிரூபித்தார்.

2. 1959
ல் கோயம்புத்தூரில் நடந்த ரூ.100 கள்ளநோட்டு வழக்கு: சுமார் ஒருவர் – கோயம்புத்தூரின் துணியதொழில் முதலாளி கிருஷ்ணன் – பணச் சிக்கல்களை சமாளிக்க கள்ளநோட்டுகள் அச்சடிக்க திட்டமிட்டதாக அவர் கண்டுபிடித்தார். நேரடி விசாரணைகள், சாட்சிகள் என்று மிகவும்  காத்திரமான எச்சரிக்கையுடன் விசாரணையை  மேற்கொண்டவர்.


இந்த வெற்றிகள் அவரை 1968-ல் CBI இயக்குராக உயர்த்தின.
அங்கு 3 ஆண்டுகள் பணியாற்றியபின், Interpol-இன் செயற்குழுவில் ஆசியாவுக்கான துணைத் தலைவராக (Vice-President) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆனார். அவரது அறிவும், பண்பும், மற்றும் சர்வதேச குற்றவியல் விசாரணைத் துறையில் நிபுணத்துவமும் பெரும் மதிப்பை பெற்றன.


Interpol  செயலாளர் ரேமண்ட் கெண்டல் இவரை பற்றி உருக்கமாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.

”தொழில்நுட்பம் இன்று வளர்ந்திருந்தாலும், அவரது தொழில் நிபுணத்துவம் என்றும் நினைவில் இருக்கும்." அருளுடன் எனது முதல் சந்திப்பு 1965ல், IPS பயிற்சியை முடித்தபின் சென்னை காவல் தலைமையகத்தில் நடந்தது. அவர் நேரத்தையும், வார்த்தையையும் வீணாக்காதவர். அடக்கம் மற்றும் ஆளுமையுடன் பேசுவார்.  மாவட்ட காவல் பணிக்கேற்றவர் நான் இல்லை என உணர்ந்ததும், நேரடியாக டெல்லிக்கு, உளவுத்துறை பணிக்கு என்னை அனுப்பிவைத்தார்”.


அருள் பேசுவதில் குறைவாக இருந்தாலும் ஒரு போலிஸ் அதிகாரியாக  செயலில் ஆளுமை கொண்டவராக இருந்துள்ளார்.  இயற்கையே நின்று ‘இது தான் ஒரு மனிதன்’ என்று சொல்வது போல்.”  அவரின் வாழ்வு மேன்மையாகவும், இயற்கையின் அனைத்து கூறுகளும் ஒன்றாகச் சேர்ந்ததுபோல் இருந்துள்ளது.

இந்திய காவல்த் துறையில் நேர்மை கொண்டவராக பெயர் பெற்றவர் எப். வி. அருள். இந்தியாவின் மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) தலைவராக இருந்த காலத்திலும், அதற்கு முன்னர் அவர் கொண்டிருந்த  பணிக்காலத்திலும், பல முக்கிய விசாரணைகளில் அவரது பங்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவருடன் பணியாற்றியவர்கள், அவர் மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு செயல்படுத்துபவராக இருந்தார் என்கின்றனர்.  நீதிக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அவர் வழிநடத்திய முக்கியமான விசாரணைகளில் தெளிவாக இருந்தது என்கின்றனர்.  எப்போதும் நேர்மையானவராக இருந்த எப். வி. அருள், "சட்டத்திற்கு பார்வையில்லை, நாம் அதன் வலுவான கண்கள் ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகள், எவருக்கும் பயமின்றி, தைரியமாக நியாயத்தை நிலைநாட்ட அவருக்கு இருந்த உறுதியைக் காட்டுகின்றன.

தனிப்பட்ட விசாரணைகளைத் தவிர, CBI-யின் தலைவராக இருந்தபோது அவர் புதிய புலனாய்வு முறைகளை உருவாக்கவும், மற்றும் முறையான பணிச்சூழலை வளர்க்கவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்.


எஃப். வி. அருள்  சிக்கலான  தருணங்களில் கூட  மிகவும் விரைவாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்துள்ளார்.  அவருடைய வேலையின்  அடிப்படைத் தன்மைகளாக நேர்மைக்கும்  நியாயத்திற்கு உறுதி அளித்துள்ளார். பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்ச்சியாக நல்ல  தொடர்பாடலுடனும் இருந்துள்ளார்.


அவரது பணியின் பாங்கு  மிகுந்த ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.  மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) முன்னாள் இயக்குநராக இருந்தபோது, இந்தியாவின் சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் விசாரணை முறைகளில் பெரிதும் முன்னேற்றம் காணப்பட்டு இருந்துள்ளது.

 

 

" Mr F.V. Arul, IP, Director CBI and Mr. E.L. Stracey, IP, Chief of Tamil Nadu Police, Prof Dr P. Chandra Sekhara


துறைக்கு செய்த பங்களிப்பு

மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) முன்னாள் இயக்குநராக இருந்தபோது, இந்தியாவின் சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் விசாரணை முறைகளில் பெரிதும் முன்னேற்றம் காணப்பட்டது. அவரது பதவிக்காலத்தில்  CBI-யின் விசாரணைத் திட்டங்கள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

அவர் அனைத்து நிலைகளிலும் ஊழலை எதிர்க்கும் தனது அர்ப்பணிப்பு காரணமாக, பல முக்கிய வழக்குகள் வெற்றிகரமாக நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டன. அவரது தலைமையின்போது, CBI-யில் நேர்மை மற்றும் நியாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, அது காவல் அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

மேலும், புலனாய்வு முறைகளை மேம்படுத்த அவர் வலியுறுத்தினார். அதில் நவீன தொழில்நுட்பங்களும், நீதிக்கான விஞ்ஞானம் (forensic science) பற்றிய ஆதரவும் அடங்கும். இந்தியாவிற்குள் மட்டுமல்லாது, உலகளாவிய பாதுகாப்புத் துறைகளுடனான ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் பணி அவரால் முன்னெடுக்கப்பட்டது.

இதேபோல், CBI அதிகாரிகளின் பயிற்சி முறைகளையும் மேம்படுத்தினார். சிக்கலான குற்றங்களை எதிர்கொள்ள தேவையான திறன்கள் மற்றும் அறிவைப் பெறும்படி அதிகாரிகளை தயார்படுத்தும் பணியும் இவர் வழிநடத்தினார்.

 

மத்திய புலனாய்வு இயக்கத்தின் இயக்குநராக இருந்த போது, விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் வழியாக நியாயத்தை நிலைநாட்ட அவரால் முக்கிய பங்களிப்பு செய்யப்பட்டது. இது சட்ட அமைப்பை வலுப்படுத்தவும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநாட்டவும் உதவின

 

இவருடைய மனைவி எவி தாமசின் மகள் ஆவார்.  மைக்கேல் என்ற ஒரு மகன் மற்றும் டேவிட் என்ற பேரன் உண்டு. கிறிஸ்தவ நாடார் இனத்தில் பிறந்து ஒரு போலிஸ் அதிகாரியாக பெயர் பெற்று விளங்கியவர்.  

இதே இனத்தில் தற்போது உள்ளவர்கள் போலிஸ் அதிகாரிகளாக மக்கள் விரோத செயல்களுக்கு பெயர் எடுத்து மக்களின் வெறுப்பிற்கும் இனதுவேஷத்திற்கு காரணமாகும்  போது இவரை போன்ற போலிஸ் அதிகாரிகளை வரலாற்றில் பதிவது அவசியம் ஆகிறது.

இவர் 2006 ஆம் ஆண்டு மறைந்தார். ஆனால் இன்றும் மக்கள் மனதில் உள்ள போலிஸ் அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


1 Jul 2025

தி சில்ட்ரன்ஸ் டிரெயின் (The Children's Train)

 ட்ரெயின் ஆஃப் சில்ட்ரன் திரைப்படத்தை ட்ரெனோ டீ பாம்பினி மற்றும்  கிறிஸ்டினா கொமென்சினி இணைந்து எழுதி,  கிறிஸ்டினா கொமென்சினி  இயக்கி உள்ளார்.  இது வயோலா ஆர்டோனின்  2019 ஆம் ஆண்டு  வெளியான நாவலை அடிப்படையாகக்  கொண்டது.  தற்போது திரைப்படமாக நெட்ஃபிக்ஸ் தளத்தில் உலகளவில் கிடைக்கிறது.

 

தாய்மை,  தாய்க்கும் மகனுக்குமான  உறவு, அவர்களில் உருவாகும் மோதல் இவையை மையமாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. wஆட்டின் வறுமை, குடும்ப நிலை  குழந்தைகளின் குணநலத்தை எவ்விதம் நிர்ணயிக்கிறது என ஆராய்கிறது  இச்சினிமா. போர் காரணத்தால் வறுமையில் ஆன நிலத்திலுள்ள பெண்களின் உரிமைகள்  மற்றும்  அவர்ள் எதிர்கொள்ளும்   பிரச்சினைகளில்   பற்றி சொல்லும்  படமாகும்  இது .

 

ஆண்டு 1946, போரினால் பேரழிவிற்குள்ளான நேபிள்ஸிலில்  குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானர்.  பசியால் எலிகளை  உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டனர். , கொடுமையான  இச்சூழலில் இருந்து குழந்தைகளை மீட்கும் விதம், கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதியான இத்தாலிய பெண்கள் சங்கம் ஊடாக  ஒரு சமூகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.   இந்தத் திட்டத்தின் ஊடாக  தெற்கு இத்தாலியில் உள்ள  70,000 ஏழைக் குழந்தைகளை வடக்கில் உள்ள பணக்கார குடும்பங்களுடன் குளிர்காலத்தைக் கழிக்க அங்கு அவர்கள் வரவேற்கப்பட்டு, உணவளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு,  சில காலம் கழிந்து  தங்கள் சொந்த  வீடுகளுக்குத் திரும்பும் நம்பிக்கையுடன் வளர்கின்றனர். அமெரிகோவும் இச்சிறுவர்களில் ஒருவன்.

 


அவது உயிரியல் தாய், பல சிரமங்கள் இருந்தபோதிலும், அவனைத் தானே வளர்க்க முயற்சிக்கிறாள்,  ஆனால் தன்னால் வறுமையற்ற வாழ்க்கை வழங்க முடியாத நிலைய்யில்  தனது மகனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னொரு ஊருக்கு அனுப்பவும்  ஒப்புக்கொள்கிறாள். அங்கு அவனுக்கு ஒரு அன்பான தாய் , வளர்ப்பு தாயின் சகோதரர் குடும்பம் கிடைக்கிறது.

  வளர்ப்புத் தாய் ஆரம்பத்தில் "தாய்மை" பாத்திரத்தை தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாள், ஆனால் இறுதியில் அவரது வாழ்க்கையை மாற்றும் குழந்தையாக அமெரியாவுடன்  ஒரு ஆழமான பிணைப்பு உருவாகுகிறது. வளர்ப்பு மகனை பிரிய மனமில்லாது திரும்ப அனுப்புகிறாள்.

 


மறுபடியும் சொந்த தாயுடன் வாழும் சூழல் வந்தாலும் தாய்க்கும் மகனுக்குமான உறவு மிகவும் தொலைவாகி விடுகிறது. தனது தாய் தான் ஒரு இசைக் கலைஞனாக இருப்பதை தடை செய்ததும் தன்னை ஒரு குழந்தை தொழிலாளியாக வேலைக்கு அனுப்பியதும் அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. குறிப்பாக தனது இசைக்கருவி வயலினை தாய் விற்று விட்டார் என அறிந்தும்  அவளை மிகவும் வெறுக்கிறான்.  தப்பித்து மறுபடியும் வளர்ப்பு தாயிடம் சேர்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.

 

வறுமை குழந்தைகளின் குணத்தில் வருவிக்கும் மாற்றத்தை மிகவும் தெளிவாக சொல்கிறது இப்படம். எலிக்கு கூட வண்ணம் பூசி விற்று பணம் ஈட்டும் இடத்தை எட்டுகிறது குழந்தை வாழ்க்கை. மற்றொரு நிலைப்பகுதிக்கு  இடம் பெயரும் போது அவர்களுக்கு உருவாகும் அடையாளச் சிக்கல், மற்றவர்கள் தங்களை துன்புறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் தொடர்ந்து பயணிக்கிறது.  

 

தனது தந்தை  அமெரிகோவின் மேல் கொள்ளும் பாசத்தைப் பார்த்து பொறாமைப்படும் லூசியோவுடன் முதலில் அமெரிகோ மோதலில் ஈடுபடுகிறான். பிற்பாடு நண்பர்களாக இணைகின்றனர்.

 

அல்சைடின் குடும்பத்தினர் அமெரிகோவை அடுப்பில் ரொட்டி சுட அழைக்கும்போது, ​​அவர்கள் தன்னை அடுப்பில் வைத்து  சமைக்க போகிறார்கள் என்று அஞ்சுகிறான். பிற்பாடு நம்பிக்கை கொண்டு அக்குடும்பத்துடன் மகிழ்ச்சியில் வாழ ஆரம்பிக்கிறான்.  அவனது வளர்ப்பு தாய்  கோதுமை அறுவடையின் முடிவில் வீட்டிற்குச் செல்வதாக உறுதியளிப்பது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுக்கிறது.  


 

உங்கள் கருணை தேவை இல்லை என ஒரு பெண் குழந்தை வளர்ப்பு பெற்றோரிடம் சொல்வதும்,  எங்களை  உங்கள் இரக்கத்தால் தான் தத்து எடுத்து வளர்க்கிறீர்களா என்று கேட்பதும் மிகவும் முக்கிய பகுதி. தன்மானமுள்ள குழந்தைகள் இரக்கம், கருணையை விட  மனித நேயம், மனித உரிமையே விரும்புகின்றனர் எனச் சொல்லும் திரைப்படம் இது.

 

அமெரிகோ பள்ளியில் படிக்கிறார், அங்கு அவன் தெற்கத்தியன் என்பதால்  கேலிக்கு உள்ளாகிறான், அதே நேரத்தில் லூசியோவால் பாதுகாக்கப்படுகிறான்.  ஒரு மே தின விழாவில், லூசியோ தனது தாயைப் பற்றி கேலி செய்தான் என்பதாl  அமெரிகோ, இதனால் அமெரிகோ லூசியோவுடன் மல்லுக்கட்டி சண்டையிடுகிறான், இந்நிலையில் தனது வலர்ப்பு தாயை தேடி வரும் போது ஆணாதிக்கவாதியான சக ஊழியரால் டெர்னா தாக்கப்படுவதைக் ண்டு கலங்குகிறான். தனது தாய் என்றால் திரும்ப அடித்து இருப்பாள் என்று தைரியம் சொல்கிறான்.

 

1994 ஆம் ஆண்டில், தற்போது வெற்றிகரமான வயலின் கலைஞராக இருக்கும் ஒரு வயது வந்த அமெரிகோவுக்கு தனது தாய் அன்டோனியெட்டாவின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. சொந்த ஊர் நேபிள்ஸுக்கு வந்த அவர், தனது பழைய வயலின் தனது வீட்டில் இருப்பதை  கண்டுபிடித்து, வளர்ப்பு தாயிடம் போக அனுமதித்த தாயை எண்ணி கண்ணீர் விடுகிறான்.


இதில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகார்களூம் சிறப்புற தத்துவரூபமாக நடித்துள்ளனர்.  
இந்தப் படம் அக்டோபர் 20, 2024 அன்று 19வது ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  இது டிசம்பர் 4, 2024 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியிடுள்ளது.