3 Jul 2025

"சட்டத்திற்கு பார்வையில்லை, நாம் அதன் வலுவான கண்கள் ஆக வேண்டும்" "The law doesn't see, and we have to be its strong eyes .F. V அருள் IG

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வாழையடி பூர்வீகமாக கொண்ட   

F. V அருள் (பிரெடெரிக் விக்டர் அருள்)  1917 நவம்பர் 24 அன்று யாங்கூனில் (ரங்கூன்) பர்மாவில் பிறந்தார்.  

In 1970, Frederick Victor Arul, also called as F.V.Arul IPS became the first Indian to serve the interpol as the vice president of Asia.— at Tamilnadu Police Museum.

  

யோலா மற்றும் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரிகளில் படித்த இவர்  பிரிட்டிஷ் ஆட்சி காலம் 1942 ஆம் ஆண்டு இந்திய போலீசில் தேர்ச்சி பெற்றார்.    F.V அருள் ஹாக்கி விளையாட்டு வீர ராகவும் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

 

1968 மே 31 முதல் 1971 மே 6 வரை மத்திய விசாரணை பணியகத்தின் (CBI) இயக்குநராக பணியாற்றியுள்ளார்.  CBI-யில் பணியாற்றும் காலத்திலேயே, இவர் இண்டர்போல் அமைப்பின் செயற்குழுவில் ஆசியாவிற்கான துணைத் தலைவராக பதவி வகித்து, அந்த உலக அமைப்பில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியராகவும் இருந்தார்

1973 முதல் 1976 வரை  மாநில காவல்துறையில் கடைசி இன்ஸ்பெக்டர் ஜெனரல் IG  பதவியை வகித்தவர். 1976-ல் அவரின் ஓய்வுவிற்கு  பிறகு, அப் பதவி டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (DGP) என மாற்றப்பட்டது.

பிரெடெரிக் விக்டர் அருளின் போலிஸ்  காவல் பணிகள் குறித்த அவரின் அறிவு அளவிட முடியாதது. அவருடைய கொள்கைகள்  ஆளும் அரசியல் வசதிக்கேற்ப அமையவில்லை, அரசியல்  விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் அவரிடம் இருந்தது.

அவர் சிலருக்கு 'விருப்பமானவர்' என்று சொல்லப்படும் வகையிலோ சலுகைகள் நாடுபவர்களுக்கு அவர் எளிதில் அணுகக்கூடியவராக இல்லாமல் இருந்தார். அருளின் வாழ்க்கை இந்திய காவல் துறையினருக்கு ஒரு பேருதாரணம் ஆகும்.

 

சிறந்த உடற்தகுதி, நீண்டநேர திடமான பணி, தூய்மையான வாழ்க்கைமுறை ஆகியவற்றால் அவர் தனக்கென ஒரு முத்திரை பதித்திருந்தார். 1956ல் சென்னை துறைமுக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 1965ல் ஆங்கில எதிர்ப்பு இயக்கம் போன்ற நிகழ்வுகளை அவர் தைரியமாக கையாண்டார்.  சட்ட ஒழுங்கு காவலாளி ஆக செயல்பட்டுள்ளார்


இரண்டு முக்கிய வழக்குகள் அருளுடன் நெருக்கமாக தொடர்புடையவை
யாக இருந்தன

1. 1950
களில் நடந்த நியூயார்க் காடன் சூதாட்டம்: மதராசில் ஒரு கும்பல் காடன் விலைகள் அடிப்படையில் சூதாடி, போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து பாதுகாப்பு பெற்றனர். அருள் விசாரணை செய்து பலரை குற்றவாளிகளாள் என  நிரூபித்தார்.

2. 1959
ல் கோயம்புத்தூரில் நடந்த ரூ.100 கள்ளநோட்டு வழக்கு: சுமார் ஒருவர் – கோயம்புத்தூரின் துணியதொழில் முதலாளி கிருஷ்ணன் – பணச் சிக்கல்களை சமாளிக்க கள்ளநோட்டுகள் அச்சடிக்க திட்டமிட்டதாக அவர் கண்டுபிடித்தார். நேரடி விசாரணைகள், சாட்சிகள் என்று மிகவும்  காத்திரமான எச்சரிக்கையுடன் விசாரணையை  மேற்கொண்டவர்.


இந்த வெற்றிகள் அவரை 1968-ல் CBI இயக்குராக உயர்த்தின.
அங்கு 3 ஆண்டுகள் பணியாற்றியபின், Interpol-இன் செயற்குழுவில் ஆசியாவுக்கான துணைத் தலைவராக (Vice-President) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆனார். அவரது அறிவும், பண்பும், மற்றும் சர்வதேச குற்றவியல் விசாரணைத் துறையில் நிபுணத்துவமும் பெரும் மதிப்பை பெற்றன.


Interpol  செயலாளர் ரேமண்ட் கெண்டல் இவரை பற்றி உருக்கமாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.

”தொழில்நுட்பம் இன்று வளர்ந்திருந்தாலும், அவரது தொழில் நிபுணத்துவம் என்றும் நினைவில் இருக்கும்." அருளுடன் எனது முதல் சந்திப்பு 1965ல், IPS பயிற்சியை முடித்தபின் சென்னை காவல் தலைமையகத்தில் நடந்தது. அவர் நேரத்தையும், வார்த்தையையும் வீணாக்காதவர். அடக்கம் மற்றும் ஆளுமையுடன் பேசுவார்.  மாவட்ட காவல் பணிக்கேற்றவர் நான் இல்லை என உணர்ந்ததும், நேரடியாக டெல்லிக்கு, உளவுத்துறை பணிக்கு என்னை அனுப்பிவைத்தார்”.


அருள் பேசுவதில் குறைவாக இருந்தாலும் ஒரு போலிஸ் அதிகாரியாக  செயலில் ஆளுமை கொண்டவராக இருந்துள்ளார்.  இயற்கையே நின்று ‘இது தான் ஒரு மனிதன்’ என்று சொல்வது போல்.”  அவரின் வாழ்வு மேன்மையாகவும், இயற்கையின் அனைத்து கூறுகளும் ஒன்றாகச் சேர்ந்ததுபோல் இருந்துள்ளது.

இந்திய காவல்த் துறையில் நேர்மை கொண்டவராக பெயர் பெற்றவர் எப். வி. அருள். இந்தியாவின் மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) தலைவராக இருந்த காலத்திலும், அதற்கு முன்னர் அவர் கொண்டிருந்த  பணிக்காலத்திலும், பல முக்கிய விசாரணைகளில் அவரது பங்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவருடன் பணியாற்றியவர்கள், அவர் மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு செயல்படுத்துபவராக இருந்தார் என்கின்றனர்.  நீதிக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அவர் வழிநடத்திய முக்கியமான விசாரணைகளில் தெளிவாக இருந்தது என்கின்றனர்.  எப்போதும் நேர்மையானவராக இருந்த எப். வி. அருள், "சட்டத்திற்கு பார்வையில்லை, நாம் அதன் வலுவான கண்கள் ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகள், எவருக்கும் பயமின்றி, தைரியமாக நியாயத்தை நிலைநாட்ட அவருக்கு இருந்த உறுதியைக் காட்டுகின்றன.

தனிப்பட்ட விசாரணைகளைத் தவிர, CBI-யின் தலைவராக இருந்தபோது அவர் புதிய புலனாய்வு முறைகளை உருவாக்கவும், மற்றும் முறையான பணிச்சூழலை வளர்க்கவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்.


எஃப். வி. அருள்  சிக்கலான  தருணங்களில் கூட  மிகவும் விரைவாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்துள்ளார்.  அவருடைய வேலையின்  அடிப்படைத் தன்மைகளாக நேர்மைக்கும்  நியாயத்திற்கு உறுதி அளித்துள்ளார். பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்ச்சியாக நல்ல  தொடர்பாடலுடனும் இருந்துள்ளார்.


அவரது பணியின் பாங்கு  மிகுந்த ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.  மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) முன்னாள் இயக்குநராக இருந்தபோது, இந்தியாவின் சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் விசாரணை முறைகளில் பெரிதும் முன்னேற்றம் காணப்பட்டு இருந்துள்ளது.

 

 

" Mr F.V. Arul, IP, Director CBI and Mr. E.L. Stracey, IP, Chief of Tamil Nadu Police, Prof Dr P. Chandra Sekhara


துறைக்கு செய்த பங்களிப்பு

மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) முன்னாள் இயக்குநராக இருந்தபோது, இந்தியாவின் சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் விசாரணை முறைகளில் பெரிதும் முன்னேற்றம் காணப்பட்டது. அவரது பதவிக்காலத்தில்  CBI-யின் விசாரணைத் திட்டங்கள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

அவர் அனைத்து நிலைகளிலும் ஊழலை எதிர்க்கும் தனது அர்ப்பணிப்பு காரணமாக, பல முக்கிய வழக்குகள் வெற்றிகரமாக நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டன. அவரது தலைமையின்போது, CBI-யில் நேர்மை மற்றும் நியாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, அது காவல் அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

மேலும், புலனாய்வு முறைகளை மேம்படுத்த அவர் வலியுறுத்தினார். அதில் நவீன தொழில்நுட்பங்களும், நீதிக்கான விஞ்ஞானம் (forensic science) பற்றிய ஆதரவும் அடங்கும். இந்தியாவிற்குள் மட்டுமல்லாது, உலகளாவிய பாதுகாப்புத் துறைகளுடனான ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் பணி அவரால் முன்னெடுக்கப்பட்டது.

இதேபோல், CBI அதிகாரிகளின் பயிற்சி முறைகளையும் மேம்படுத்தினார். சிக்கலான குற்றங்களை எதிர்கொள்ள தேவையான திறன்கள் மற்றும் அறிவைப் பெறும்படி அதிகாரிகளை தயார்படுத்தும் பணியும் இவர் வழிநடத்தினார்.

 

மத்திய புலனாய்வு இயக்கத்தின் இயக்குநராக இருந்த போது, விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் வழியாக நியாயத்தை நிலைநாட்ட அவரால் முக்கிய பங்களிப்பு செய்யப்பட்டது. இது சட்ட அமைப்பை வலுப்படுத்தவும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநாட்டவும் உதவின

 

இவருடைய மனைவி எவி தாமசின் மகள் ஆவார்.  மைக்கேல் என்ற ஒரு மகன் மற்றும் டேவிட் என்ற பேரன் உண்டு. கிறிஸ்தவ நாடார் இனத்தில் பிறந்து ஒரு போலிஸ் அதிகாரியாக பெயர் பெற்று விளங்கியவர்.  

இதே இனத்தில் தற்போது உள்ளவர்கள் போலிஸ் அதிகாரிகளாக மக்கள் விரோத செயல்களுக்கு பெயர் எடுத்து மக்களின் வெறுப்பிற்கும் இனதுவேஷத்திற்கு காரணமாகும்  போது இவரை போன்ற போலிஸ் அதிகாரிகளை வரலாற்றில் பதிவது அவசியம் ஆகிறது.

இவர் 2006 ஆம் ஆண்டு மறைந்தார். ஆனால் இன்றும் மக்கள் மனதில் உள்ள போலிஸ் அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


0 Comments:

Post a Comment