21 Jul 2025

பிரான்சிஸ் சேவியர் எழுதிய கடிதம் – ஜனவரி 20, 1548, கொச்சியில் இருந்து போர்ச்சுகீசிய மன்னர் ஜான் மூன்றாவது

 

பிரான்சிஸ் சேவியர் மற்றும் மன்னர் ஜானுக்கான(111) கடிதம் – ஒரு வரலாற்றுப் பின்னணி

கிழக்கு கடற்கரையில் தென்றல் வீசிக்கொண்டிருந்தது..  சரியாக வாச்கோடி காமா வந்து சென்ற 1498 ஆண்டு கணக்கிட்டால் 50 வருடங்கள் பின்னுட்டு இருந்து. 1548 ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி பிரான்சிஸ் சேவியர் கொச்சியில் தரையிறங்கினார்.

அந்த நாட்களில் கோவாவின் வயதான பிஷப் ஒருவர், தனது பரந்த ஆயர் மாநிலத்தில் உள்ள நகரங்களை பார்வையிட கொச்சி  வந்திருந்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடவுளின் திட்டமெனவே, அந்த நாள் அவர்களுக்குள் நேரில் சந்திப்பாக அமைந்தது. ஒருவருக்கொருவர் முகமறியும் அந்த நிமிடங்களில், ஒரு ஆறுதலையும் ஆனந்தத்தையும் இருவரும் பெற்றனர்.

இந்த சந்திப்பு, பிரான்சிஸ் சேவியருக்கு சில நினைவுகளைத் திரும்பக் கொண்டு வந்தது. காற்றில் கலந்த ஒரு உந்துதல் போலவே, அவர் விரைந்து ஒரு பேனைவை மைதீட்டி ஒரு முக்கியமான கடிதத்தை எழுத ஆரம்பித்தார். அந்த கடிதம் போர்ச்சுகீசிய மன்னர் கிங் ஜானுக்கானது.

ஆனால் இப்போது, இந்தப் புதிய கடிதத்தில் அவர் காட்டிய மொழிநடை, ஏதோ ஒரு இன்னொரு தீவிர மாற்றத்தைக் எதிர்நோக்கியது ஆகும். இது ஒரு துறவி மன்னனுக்கு எழுதும் சாதாரண  கடிதமல்ல. இதில், மன்னரின் செயற்பாடுகளின் பின்புலத்தில் உள்ள குழப்பங்களைப் பற்றிய தீவிரக் கவலை இருந்தது.

மன்னர் ஜான் 3, இந்தியாவில் உள்ள போர்ச்சுகீசிய அதிகாரிகளின் அடக்கமற்ற ஆசைகளையும் கொடுமைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற துவனி  இருந்திருந்து.  அதிகாரிகள் பெரும்பாலும் கிறித்தவப் பரப்புப் பணியை புறக்கணித்தனர். அவர்களது கவனம் எல்லாம் வர்த்தகம் மற்றும் யுத்த முயற்சிகளில்தான் இருந்தது என்று கவலை பட்டிருந்தார்  சேவியர்,

மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களான மக்கள், மீண்டும் பழைய மதத்திற்கு திரும்பாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற முக்கியக் கோரிக்கை வைத்து இருந்தார்.  மதம் மாறிய இந்திய கிறிஸ்தவர்கள், கீழ்மட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற புகார் இருந்திருந்தது.

 கோஸ்மோ டி பய்வா போன்றவர்கள், யுத்தத்தில் திறமையானவர்கள் என்பதால் மதமாற்றவர்களை கண்டு கொள்ளாமல் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெற்றுவிட்டனர். இதனை மாற்றவேண்டும். மதம் மாறிய கிறிஸ்தவர்கள், பிறமத மக்கள் அனுபவித்த உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்கவேண்டும்.  மன்னர் அளித்த புதிய உத்தரவுகளில் ஒன்றில், கிறிஸ்தவர்கள் தவிர மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் போர்ச்சுகீசிய கடற்படையில் கட்டாயமாக சேர்க்கப்படலாம் என்ற புதிய விதிமுறை சேர்க்கப்பட்டு இருந்தது.

#################################################################### 


பிரான்சிஸ் சேவியர் எழுதிய கடிதம் – ஜனவரி 20, 1548, கொச்சியில் இருந்து

உயர்திரு மன்னர் அவர்களுக்கு"போர்ச்சுகீசிய மன்னர் ஜான் மூன்றாவது அவர்களுக்கு"

அரசரே,

தங்கள் உயர்திரு பெருமைக்கு, மலாக்கா மற்றும் மொலுக்கா பகுதிகளில், மதம் மற்றும் நம் ஆண்டவர் தேவனின் ஆராதனை மற்றும் சேவை சம்பந்தமான விஷயங்களை பற்றி மிக விரிவாகவும் தெளிவாகவும், நான் ஐரோப்பாவிலுள்ள எங்கள் சபைக்குத் (சொசைட்டி ஆஃப் ஜீசஸ்) அனுப்பியுள்ள கடிதங்களின் மூலம் தெரியவரும் என்று நம்புகிறேன்.

அதோடு, தங்கள் உயர்திரு பெருமையிடமிருந்து இங்கு வந்த கடிதங்களுக்கு எனது பதில்களையும் அனுப்பியுள்ளேன். தங்களை, எங்கள் இயேசு சமுதாயத்தின் தலைவனாகவும் உண்மையான பாதுகாவலனாகவும் எங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் எங்களுக்கு காட்டும் அன்பும் உதவிகளும், இந்தப் பட்டத்துக்கு உரிய பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுகின்றன.

இந்தியாவில் மத நிலைமைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்த விஷயங்களை, இங்கிருந்து கடவுளின் சேவைக்காக செல்கின்ற பக்தியுள்ளவர்களும் தங்கள் உயர்திருவிடம் விரிவாக அறிமுகப்படுத்துவார்கள். மேலும், தெய்வீக பணியில் அனுபவமிக்க தந்தை ஜோம் டி வில்லா கொண்டே, இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய விஷயங்களை தங்களிடம் எழுதுகிறார். அவர் கூறும் விஷயங்கள், தங்களின் மனச்சாட்சி மற்றும் அவருடைய உள்ளார்ந்த அக்கறைக்கும் உதவியாக இருக்கின்றன.

இந்த விஷயங்களை அவர் மிக வெளிப்படையாகவும் உண்மையுடன் கூறுகிறார் — உங்கள் உயர்திருவுக்கு நேரடியாக எழுதிய கடிதம், கூடுதல் குறிப்புகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றில். இவை அனைத்தும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வளவு நம்பகத்தன்மையுள்ள தகவல்களைக் கொண்டு, தங்கள் உயர்திரு, பிற விடயங்களில் காட்டும் ஞானத்தைப் போலவே, இவற்றிலும் சரியான முடிவுகளை எடுத்து தேவையான கட்டளைகளை விரைவில் வழங்கினால், அது மிகவும் உரியதாக இருக்கும்.

இப்போது, என்னைச் சேர்ந்த விஷயத்திற்குச் செல்லலாம்.

நான் இந்தக் கடிதத்தை எழுதவேண்டுமா வேண்டாமா என்று மனதுள் பல நாள்கள் எண்ணி அலசினேன். இங்கு நடப்பவற்றைப் பார்த்து, இதே நேரத்தில், நம் பரிசுத்த விசுவாசம் இங்கு பரவவும் நிலைபெறவும் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனமாக சிந்தித்தேன்.

ஒருபுறம், நான் கடவுளைச் சேவிக்கவும், அவர் மகிமைக்காகப் பணியாற்றவும் வேண்டும் என்ற ஆவலால் எழுதி விடவேண்டும் என்று எண்ணினேன்; மற்றொரு புறம், நான் கூறும் யோசனைகள் செயல்படுத்தப்படுமா என்பதில் நம்பிக்கையில்லாததால், இதை எழுதுவதிலும்  தயங்கினேன்.

ஆனால், இந்த யோசனைகள் என் மனதில் உறுதியாக பதிந்திருப்பதைக் காணும்போது, கடவுளுடைய படைப்புத்திட்டத்திலேயே இவை ஒன்றாக இருக்கின்றன என்ற நம்பிக்கையுடன், இதை மறைத்து விடுவது எனது கடமையை புறக்கணிப்பதாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது.

இந்த உண்மைகளை எனக்கு கடவுள் காண்பித்ததற்கான காரணம், தங்களிடம் நான் இவை தெரிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்ற நம்பிக்கையும் வந்தது. ஆனால், அதே நேரத்தில், இந்தக் கடிதம், தங்கள் மனதைப் பாரிய சுமையாக்கி, கடைசி தீர்ப்பு நாளில் தங்களை கடவுளின் முன் குற்றம் சாட்டும் காரணமாக இருக்கக் கூடும் என்ற பயமும் என்னைத் தடுக்க முயன்றது.

இந்த யோசனைகள் எனக்கு எவ்வளவு வலியை ஏற்படுத்தியுள்ளன என்பதை, தயவு செய்து தாங்கள் உணர வேண்டும்.

எனது உள்ளார்ந்த மனச்சாட்சி கூறுகிறது — இங்குள்ள மனித ஆத்மாக்களின் இரட்சிப்புக்காக, என் வாழ்வையே அர்ப்பணிக்கவும், என் உடலை வேலைக்காக சிதைக்கவும் நான் இங்கே வந்தேன்.

இது, தங்களின் மீது பொறுப்பாக இருக்க வேண்டிய ஒரு கடமையின் ஒரு பகுதியை, நான் மேற்கொள்வதன் மூலம், தங்களின் மனச்சாட்சிக்கான சுமையை குறைப்பதற்காகவும், இறுதித் தீர்ப்பு நாளில் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு அளிப்பதற்காகவும் இருந்தது.

தாங்கள் எங்கள் குழுவின்  மீது காட்டும் மிகப்பெரிய அன்பு, இந்த தியாகத்தை நான் செய்வதற்கான உந்துசக்தியாக இருக்கிறது. எனவே, என் துன்பமும் உழைப்பும் இவற்றுக்காக அர்ப்பணிக்கத் தயங்கவில்லை.

சத்தியமாகச் சொல்கிறேன் அரசரே, இரு விதமான கவலைகள் காரணமாக என் மனம் மிகுந்த குழப்பத்தில் சிக்கி, மிகுந்த வலி மற்றும் குழப்பத்துடன் இருந்தேன். ஒரு பக்கத்தில் என் கடமையை தவற விடக்கூடாது என்ற பயமும், மறுபக்கத்தில் உங்கள் மேல் ஆபத்துகள் அதிகரித்து விடக்கூடாது என்ற பயமும் எனை பின்தொடர்ந்தன. இந்த இரு எண்ணங்களும் என்னை இழுத்துச் சென்றன.

இறுதியில், நான் என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து, என் மனச்சாட்சியைத் துடைத்துவிட்டு, நீண்ட நாட்களாக உங்கள் உயர் பதவிக்கு நான் சொல்ல வேண்டியிருந்ததைக் கூறுகிறேன்.

இந்தியாவில், மலாக்கா, மொலுக்கா போன்ற பகுதிகளில் நான் நேரில் அனுபவித்த நிகழ்வுகள் என் உள்ளத்தைக் காயப்படுத்தி, என் மனதை வாட்டுகின்றன.

உங்கள் உயர் பதவிக்கு நான் உறுதியாக கூற விரும்புவது – இங்கே கடவுளின் சேவைக்காக செய்ய வேண்டிய பல காரியங்கள், செய்தல் வேண்டியவை செய்தப்படாமல் விட்டுவிடப்படுகின்றன. இதற்குக் காரணம் – பதவியாளர்களுக்கிடையே உள்ள போட்டி மற்றும் பொய்யான பெருமைகள்.

ஒருவர் சொல்வார்: "இது என் பொறுப்பு, மற்றவர்களுக்கு புகழ் செல்ல விடமாட்டேன்."

மற்றொருவர் சொல்வார்: "நான் இதைச் செய்யவில்லை, அதனால் நீங்களும் செய்யக்கூடாது."

மற்றொருவர் கூறுவார்: "நான் தான் வேலை செய்தேன், ஆனால் புகழ் மற்றவர்களுக்கு போய்விட்டது."

அதனால் அடிக்கடி சண்டைகள், மனக்கசப்புகள், தாமதங்கள் ஏற்படுகின்றன. இதனால் கடவுளின் மகிமை வளரவேண்டிய சந்தர்ப்பங்கள் வீணாகின்றன. இதே காரணத்தால், உங்கள் இந்திய ஆட்சி பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுகிறது.

இது போன்ற சூழ்நிலைகளை மாற்ற, ஒரு மட்டுமே தீர்வு எனக்குத் தோன்றுகிறது:

அந்த தீர்வு என்னவென்றால் – மதம் பரப்பும் செயலை அதிகாரப் பதவியிலுள்ள ஆட்சி அதிகாரிகள் தான் முன்னெடுக்கவேண்டும் என்பது பற்றிய உங்களின் உரிய உத்தரவை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அதாவது:

  • இந்தியாவில் உள்ள ஆளுநர் அல்லது கட்டளை அதிகாரிக்கு நீங்கள் நேரடியாகப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
  • மத பரப்புக்கான முயற்சிகளை மடாதிபதிகள் அல்லது குருக்களை விட ஆளுநரிடம் தான் நீங்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள் என தெளிவாக அறிவிக்க வேண்டும்.
  • மத பரப்பில் வெற்றி அல்லது தோல்வி, அந்த அதிகாரியின் செயலில் உள்ளது என்பதையும், அவருக்கு வெகுமதியாகவோ, தண்டனையாகவோ பதிலளிக்கப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், ஆளுநர் அல்லது அதிகாரி ஒருவர் உங்களிடம் எழுதிய கடிதத்தில்:

  • எவ்வளவு மக்கள் கிறிஸ்தவராக மாறினார்கள்,
  • எத்தனை பேர் மதத்திற்கு வந்தனர்,
  • என்ன வழிகள் இருந்தன,
  • எதிர்காலத்தில் என்ன வாய்ப்புகள் உள்ளன,

 

என அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து வேறு எவரின் அறிக்கையையும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று கூற வேண்டும்.

மேலும், உங்கள் ஆட்சிக்காலத்தில் ஏதேனும் அதிகாரி தன் ஆட்சி காலத்தில் மத பரப்பில் பின்விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றால், அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதையும் உறுதியாகக் கூற வேண்டும்.

இது உறுதியாக நிகழும் என்பதை விளக்க, நீங்கள் கடவுளின் பெயரில் ஒரு உறுதிமொழி செய்ய வேண்டும்:

  • அந்த அதிகாரி போர்த்துக்கேஸுக்குத் திரும்பும் போது,

o    அவரது சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்

o    அது வறியோர் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்

o    அவரே சிறையில் அடைக்கப்பட வேண்டும், போன்ற கட்டுகள் கட்டப்பட வேண்டும்

மறுபடியும், அவர்களுக்கு எந்தவொரு உரிமையும், தயவும் அளிக்கப்பட மாட்டாது என்பதை முன்னதாகவே கூறிவைக்க வேண்டும். அவர்களுக்கு ஒரே வழி – தங்கள் ஆட்சிக்காலத்தில் அதிகமான கிறிஸ்தவர்களை உருவாக்க வேண்டும் என்பதே.,

இந்தியாவில், உலக நலன்களுக்காக வாழும் சிலர், உங்கள் சபைக்கு எதிராக மிக்கேல் வாஸ் என்பவரது மரணத்தைக் காரணமாகக் கொண்டு  ஒரு வியாபாரி மீது தவறான சந்தேகங்களை பரப்புகிறார்கள். அவர்கள் இந்த நிந்தையை உங்களிடமும் எழுத்தாக அனுப்பக்கூடும் என்றும் எனக்குத் தெரிகிறது. ஆனால், இவ்விஷயத்தில், உண்மையும் நேர்மையையும் வைத்து நான் அவருக்காக சாட்சி கூறுகிறேன். இது எனது கடமை என நம்புகிறேன்.

நான் உறுதியுடன் கூறுகிறேன் – எவ்வாறு எனக்கு இந்த அறிவு வந்தது என்பதை எழுதவோ சொல்லவோ முடியாது என்றாலும் – அந்த மரணத்தில் அவர்கள்  சாட்டுவது போல அவர் குற்றவாளி இல்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்துள்ளேன். அது எப்படியென்றால், அந்த நேரத்தில் நான் மொலுக்காசில் இருந்தேன் – இந்தியாவிலிருந்து மிகவும் தொலைவில்.

எனவே, உங்கள் தூய மனசையும், கடவுளை மகிழ்விப்பதற்கான உங்கள் முயற்சியையும் நினைவில் வைத்துக் கொண்டு, அவருக்குத் தொந்தரவு தரக்கூடிய எதையும் செய்ய வேண்டாம், எதையும் ஆணையிட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், உங்கள் உயர்திரு இந்த பொய்யான பழிக்கு நம்பிக்கை கொடுத்ததுபோல் தோன்றும்; இதனால் அவனை விமர்சிக்கிறவர்கள் மேலும் வலிமை பெறலாம்.

மேலும், கோச்சியின் விகாரியான பெட்ரோ கோன்சால்வெஸை நீங்கள் உங்கள் அரண்மனையின் மதிப்புக்குரிய பட்டதாரியாக நியமித்துள்ளீர்கள்.. இது நமக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. ஏனெனில், அவர் நமது ஜெசுவிட் சமுதாயத்திற்கு அளித்துள்ள பெரும் உதவிகள் காரணமாக, நாங்கள் அவருக்குப் பெரும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.

கொச்சியின் பிஷப்பின் விகாரியின் வீடு நமது ஜெசுவிட் சமுதாயத்தின் இருப்பிடமாகவும் உள்ளது. அவருடைய நல்லிணக்கம், சாதாரண நட்போ அல்லது சுமூக ஆசிர்வாதமோ அல்ல; அவருடைய தனிப்பட்ட சொத்துக்களை நமக்காக செலவழித்த பிறகும், மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கி நமக்காக மேலும் செலவழிக்கின்ற அளவிற்கு அவர் தாராளமுள்ளவராக உள்ளார்.

எனவே, அவருக்கும், அவருடைய ஊழியர்களுக்கும், அவர்கள் சம்பளங்கள் முறையாக வழங்கப்படுவதற்கான கடிதங்களை போர்த்துகல்லில் இருந்து அனுப்ப உங்களின் ஆணையை நாங்கள் வேண்டுகிறோம். இருவரும் இந்த உதவிக்குத் தகுதியானவர்கள் – விகாரி, உங்கள் ر நம்பிக்கையாளர்களின் ஆத்ம நலனுக்காக உழைப்பவர்; மற்றும் அவரது வீரர்கள், உங்களின் கொடியின் கீழ் இராணுவத்தில் சேவை செய்யும் வீரர்.

இப்போது முடிவில், நான் இதனைக் கூறுகிறேன்:

உங்கள் மரண நேரத்தில், "இவை எல்லாம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!" என்று மனதார மகிழ்வதுபோல், அதை இப்போதே தெளிவாக உணரவும், உடனே செயல்படுத்தவும் ஆண்டவர் உங்களுக்கு அருள் செய்வாராக.

உங்கள் உயர்திருவின் வீண்( useless ( பணியாளர்,

புனித பிரான்சிஸ் சேவியர்

கொச்சி, ஜனவரி 20, 1548

 #####################################################################

 போர்ச்சுகலின் ஜான் III, 1502 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, போர்ச்சுகல் மன்னர் மனுவேல் I மற்றும் அரகோனின் மாரியா ஆகியோருக்கு பிறந்தார். பிறக்கும் போதே அவர் ஸ்பெயின் இளவரசராக இருந்தார்.

1521ல், தனது 36 ஆண்டு நீண்ட ஆட்சியைத் தொடங்கிய அவர், ஸ்பெயின் அரசி ஜுவானா I மற்றும் சாள்ஸ் I ஆகியோரிடம் அரசியல் திருமணத்திற்கான யோசனை வைத்தார். இதன் விளைவாக, அவர் ஜுவானாவின் சகோதரி கத்தரினாவை திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில், அவரது சகோதரி இசபெல்லா, சாள்ஸுடன் திருமணம் செய்யப்பட்டது.

முன்னைய அரசர்களைப் போலவே, ஜான் III ஒரு முழுமையான அதிகாரத்துடன் ஆட்சி செய்தார்.  1527ஆம் ஆண்டு, அவரது ஒரே மகளாக மரியா பிறந்தார். அவரை விரைவில் இங்கிலாந்தின் ஹென்றி IX உடன் நிச்சயித்தனர்.

ஜான் III தனது ஆட்சியில், தென்அமெரிக்காவில் தனது மாமனாரின் (சாள்ஸ்) பேரரசுக்கு அடுத்தபடியாக தனது சொந்த பேரரசை அமைத்தார்.  அதேசமயம், மொரோக்கோவில் இருந்த போர்ச்சுகீசிய நிலங்களை ஓரளவிற்கு கைவிட்டார். பின்னர், 1537ல், அவர் ஒரு இளவரசர் ஜானைப் பெற்றார். ஆனால் விரைவில் மரணமடைந்தார்; அதன் காரணம் இதுவரை நிச்சயமாகத் தெரியவில்லை. சிலர், இளவரசரை ஹென்றி IX கொன்றதாக நம்புகிறார்கள்.

அவரது ஆட்சிக் காலத்தில், சில லூதரர்கள் (மறுமதச் சிந்தனையாளர்) போர்ச்சுகலுக்குள் நுழைந்தனர். இதை எதிர்த்து, அவர் போப் அலெக்சாண்டர் VII-னிடம் பரிசுத்த விசாரணை (Inquisition) நடத்த அனுமதி கேட்டார்.

1550 ஆம் ஆண்டு, ஜான் III அமெரிக்காவுக்குச் சென்று ஸ்பெயினியர்களைச் சந்தித்தார். அங்கு மலேரியா நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் அவருக்கு பெரும் பிரச்சனையாக்கி மாறியது. அப்போது ஹென்றி IX,  தனது மனைவி மரியாவை அரசியாக்க விரும்பினார். ஆனால் ஜான், மரியாவைத் துரத்தி, இங்கிலாந்தின் அதிபரிடம் அந்த சிம்மாசனம் செல்வதைத் தவிர்க்க, தனது சகோதரர் லூயிசை அரசராகத் தேர்ந்தெடுத்தார்.


0 Comments:

Post a Comment