27 May 2020

ஆண்- பெண் குடிகாரர்கள்

கொரோனா காலத்தில் மக்களுக்கு அரிசி கிடைக்கிறதா இல்லையா என்பதை விட டாஸ்மாக் திறப்பார்களா இல்லையா என்பதை உற்று நோக்கி கொண்டிருந்தனர்.
டாஸ்மாக்கை அடைக்க வேண்டும் என்பது குடிகாரர்கள் செத்து போய் விடக்கூடாது என்பதை விட கொரோனா இடரில் அரசை முடக்கும் ஒரு வார்த்தையாகவும் முன்வைக்கப்பட்டது. ஒரு நாள் வியாபாரம் 180 கோடி என்பது அதன் மார்க்கட் நிலையும் கண்டு உணர்ந்தோம்.
குழந்தைகள் பிறந்த நாள் துவங்கி கல்யாணம், தேர்வில் வெற்றி , வேலை உயர்வு என எல்லா நிகழச்சிகளிலும்
மதுவும் விருந்தாக ஊற்றப்படுகிறது .
இதன் பயண்பாடு என்பதை உடல் பராமரிப்பு, ஆரோக்கியம், மனிதனின் தோற்றப் பொலிவையும் முன்நிறுத்தி விழிப்புணர்வு கொடுத்தால் இளம் தலைமுறையாவது தப்பிக்கும்.
இன்றைய தினம் , 10 ஆம் வகுப்பு மாணவன் துவங்கி பல்லு போன கிழவன் வரை குடிக்கிறார்கள் என்பதே உண்மை.
மதமோ,கலையோ, கலாச்சாரமோ, கல்வியோ எதுவும் கட்டுப்படுத்த இயலா வண்ணம் மது பழக்கம் பெருகி விட்டது.
மதுபானங்களால் என்ன தீமை என்னவென்று தெரியாதவர்களா? குடிக்கிறார்கள் அதுவுமில்லை.
மதுவால் உடல் நீர் சத்து குறைந்து
கிட்னி,
லிவர்,
ஈரல்,
பான்கிரியாஸ்,
நரம்பு மண்டலம்,
செமிப்பு தன்மை
உடல் இயக்கம்,
உளவியல்
என எல்லா வகையிலும் பாதிக்கப்படுவார்கள். மேலும் உடலுக்கும் மூளைக்குமான தொடர்பாடல் தடை , பல வகை கேன்சருக்கு காரணம் என தெரிந்தே குடிக்கிறார்கள்.
மதுக்கடையை மூடுவது சாத்தியமா என்றால்; மது தயாரிப்பில் தரம் பேணுக , விற்பதில் ஐரோப்பிய நாடுகளில் என்பது போன்று வயது நோக்கி கொடுக்குக, அளவை குறைத்து, விலையை கூட்டுதல் மட்டுமே சாத்தியம்.
இன்று குடிப்பது என்பது கர்வத்தின், பணக்காரத்தனத்தின், சமூக அங்கீகாரத்தின் , நாகரிகத்தின், பாகமாக விளம்பரம் ஊடாக இளம் தலைமுறை தலையிலும் புகுத்தியுள்ளார்கள்.
இளம் தலைமுறைக்கு புரிதல் தருவது மட்டுமே தீர்வாகலாம்.
அவ்வகையில் அதன் அளவு சார்ந்து தெரிவிப்பது காலத்தின் அவசியமாகும்.
ஒரு ஆணின் ஒரு நாளைய குடி அளவாக " 1 ட்ரிங்( 1 drink) என்கிறார்கள்.
ஒரு ட்ரிங்
12 அவுன்ஸ் பீர்
5 அவுன்ஸ் வைன்
ஒன்றரை அவுன்ஸ் ஸ்பிரிட்( விஸ்கி, ஜின்)
ஒரு அவுன்ஸ் என்பது 14 மில்லி.
இன்றைய ஆண்கள் ஒரு நேரம் குறைந்தது 500 மிலி குடிப்பதாக அறிகிறோம். 21 மி.லிக்கும் 500 மி.லி க்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் போன்றதே.
குடியின் காரணமாக ஏதேதோ சொல்கிறார்கள். மனச்சோர்வாம், கெத்தாம், சமூக நிர்பந்தமாம், பலர் ஐரோப்பியா நாட்டை பின்பற்றுவதாக சொல்கிறார்கள். ஐரோப்பியா காலநிலை தான் என்ன? -மைனஸ் () டிகிரிக்கு மேல் இங்கு + 35 டிகிரிக்கு மேல்.
குடியை குடிகார்கள் தானாக நிறுத்த வேண்டும். கொரோனா நேரம் மிகவும் சிக்கலான நேரம் குடிகாரர்களை விடுத்து வாழ வேண்டிய குழந்தைகள், ஏழை தொழிலாளர்களை நினைத்து உதவுவோம்.


ஆண்கள் குடியை பற்றி எழுதிவிட்டு பெண்கள் குடியை பற்றி எழுதாவிடில் சமத்துவம் இல்லை என்றாகி விடும்.
பெண்கள் குடியை ஒழுக்க, நெறிகளுடன் பலர் பார்த்து தடுக்க பார்க்கையில் விற்பனையாளர்கள் கவரவத்தின், பெண் ஆளுமையின் , சுதந்திரத்தின்,ஆண் சமத்துவத்தின், துணிவின் தன்னம்பிக்கையின், அடையாளமாக பார்க்கிறோம் என க்கூறி மோமி டைம்ஔட், மாட் ஹவுஸ் வைஃப் போன்ற செல்ல பெயருகளில் லேபல் செய்து சந்தைப்படுத்துதலை பெருக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
18 வயதிற்கு கீழ் உள்ள பெண் பிள்ளைகள் குடிக்கும் படி இனிப்பு பீர், சிவப்பு வைன் போன்றவை சின்ன சின்ன பெட்டிக்கடையில் கூட வாங்கும் படி வசதி செய்து கொடுத்துள்ளனர்.
அதிக அளவு குடியால் ஆண்களுக்கு என்னன்ன பிரச்சினை வருமோ, அதே பிரச்சினைகள் ஒரு படி மேலே பெண்களை பாதிக்கும். காரணம் ஆண்களை விட தண்ணீர் சத்து குறைந்தது பெண்கள் உடல்வாகு. அதனால் குடிக்குகையில் ஆண்களை விட உடல் நீர் சத்து குறைந்து இருப்பதால் கறக்கம் மயக்கம் என பாதிப்பு அதிமாகவே பாதிக்கும் .
ஒவ்வொரு 96 நிமிடத்திற்கு ஒராள் குடியால் சாகிறதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தலைநகரம் தில்லியில் மட்டும் 15 லட்சம் பெண் குடிகாரிகள் உண்டாம். இதில் பெருவாரி பெண்கள் ஒரே நேரம் 5 டிரிங்ஸ் எடுப்பவர்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதில் 5000 வழக்கு பதிவாயுள்ளது.
20 சதவீதம் பெண்கள் சமூக நிர்பந்தம், 44 சதவீதம் தங்கள் விருப்பத்தால், 42 சதவீதம் தொழில் நிமித்தமாக,53 சதவீதம் தங்கள் உணர்வு தேவையால் எனக்கூறுகிறது சர்வே.
ஆக மொத்தம் தேசத்தில் 57 சதவீதம் ஆண் குடிகாரர்கள் ஒன்றால் 28 சதவீதம் பெண் குடிகாரிகள்.
குடியில் குடிக்கும் அளவு தான் பிரதானம். ஒரு நாள் ஒரு டிரிங்க் அதுவே கணக்கு எனக்கூறுகிறது ஆரோக்கிய த்துறை.
பெண்கள் குடிப்பதால் ஆண்களை போன்றே கேன்சர்,லிவர், கிட்னி , மூளை பாதிப்பபிற்கு ஆளாகுவார்கள்.
அதையும் கடந்து
குழந்தைகளை போன்று பாலியலாக துன்புறுத்தும் சூழலில் எதிர்க்க வலுவற்று போக வாய்ப்பு.
பெண்கள் மூளை ஆண்கள் மூளையை விட சென்சிட்டிவ் என்பதால் பாதிப்பும் அதிகம்.
பெண்கள் குடியையும் நோயாக கணக்கிலெடுத்து உளவியல் சிகித்சைக்கு, கவுன்சிலிங் கொடுக்க வேண்டியதும் அவசியம்.
கலாச்சாரம் நெறியோடு இணைத்து பார்ப்பது அறிவீனம்.
இதை உடல் ஆரோக்கியத்துடன் இணைத்து பார்ப்பதே அவசியம்..

திரைப்படம் Escape from Sobibor


போலந்தில் இருந்து யூதர்களை சோபிபோர் என்ற இடத்திற்கு கொண்டு வருவதுடன் திரைப்படம் Escape from Sobibor ஆரம்பிக்கிறது. 1987 ல் வெளிவந்த திரைப்படம்.
குடும்பம் குடும்பமாக வந்திறங்கிய யூதர்களில் இருந்து தொழில் தெரிந்த திறமையான (சிறுவர்களையும் முதியவர்களையும் தவிர்த்து) நல்ல வேலை செய்ய திராணியுள்ள பெண்களும் ஆண்களுமாக 600 பேரை தேர்ந்தெடுத்து நாசிகளின் வதைமுகாமில் அடைத்து வேலை வாங்குகின்றனர்.
மீதமுள்ள குழந்தைகள், பெண்கள் முதியவர்களை கொன்று எரிப்பதை தூரத்தில் இருக்கும் தங்கள் முகாமில் இருந்து பார்த்து நொறுங்குகின்றனர். இந்த வதை முகாமில் ( Auschwitz-Birkenau and Treblinka ) மட்டுமே 3 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
அப்படியான கொடும் வதை முகாமில் இருந்து ஒரு முறை 2 பேர் தப்பித்து செல்கின்றனர். பிடிபட்ட 13 பேரை உன்னுடன் ஜோடியாக சாவதற்கு ஆட்களை நீயாகவே தேர்ந்து கொள் என கொடுமையான நாசி அதிகாரி கட்டளை இடுவான். வேறு வழியற்று அவர்கள் தங்களுக்குள்ளே தேர்ந்தெடுத்து 26 பேர் கொல்லப்படுவார்கள். இந்த நிகழ்வு அவர்களுக்குள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. லியோன் தலைமையில் தப்பித்து போக ஆலோசித்து கொண்டிருப்பார்கள். அந்த காலயளவில் ரஷியாவில் இருந்து யூதர்களை கொண்டு வந்திருப்பார்கள். அந்த கூட்டத்தில் இருந்த சாஷி என்ற ராணுவ வீரனின் வழிகாட்டுதலில் 11 நாசி அதிகாரிகளை கொலை செய்து விட்டு 600 பேர் தப்பிக்க முயன்று 300 பேர் தப்பித்து காட்டுக்குள் ஓடி மறைவார்கள்.
இந்த திரைப்படம் ஜாக் கோல்டால் இயக்கப்பட்டது. படம்பிடிப்பு யுகோஸ்லாவியாவில் அவலாவில் நடந்துள்ளது. ரிச்சார்டு றாஷ்கீயின் புத்தகத்தை(Richard Rashke's 1983) ஆதாரமாக கொண்டு இதன் திரைக்கதை ரெஜினாட்டு ரோஸால் எழுதப்பட்டது.
இந்தப்படத்தில் சிறந்த நடிப்பிற்கு என க்ளோபன் கோல்டு விருது Hauer க்கு கிடைத்துள்ளது. இந்த வதை முகாமில் இருந்து தப்பித்த Esther Raab இக்கதை வடிவமைப்பிற்கு பெரிதும் உதவியுள்ளார்.
தப்பித்த வரலாறு முதலும் கடைசியுமாக இருந்ததால் ஜெர்மென் அதிகாரிகளுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. தலைமை அதிகாரியாக இருந்த Heinrich Himmler கட்டளைப்படி வதை முகாமை உடைத்து தறைமட்டமாக்கி, மண்ணிட்டு மூடி அதன் மேல் மரங்களை நட்டு வளர்த்தி, கைதிகள் தப்பித்து போன நிகழ்வை மறக்க முயன்றனர் ஜெர்மன் அதிகாரிகள்.
இந்த வதை முகாமில் தான் மிகவும் கொடூர குணம் கொண்ட சென்னாய் என்று அழைக்கப்பட்ட Wagner பணியாற்றி வந்துள்ளான்.போருக்கு பின்னால் வாக்னர் ஆயுள் தண்டனை பெறப்பட்டாலும், பெல்ஜியம் தப்பித்து போய் ஒரு பணக்காரர்கள் வீட்டில் வேலைக்காரனாகவும் , பின்பு பைத்தியக்காரனாகவும் தலைமறைவாக தெருவில் வாழ்ந்து வந்த இவன் தனது 60 வது வயதில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் உண்டு.
இந்த படத்தின் தேவையும் முக்கியவும் யூத மக்களின் ஆக்கபூர்வமான நம்பிக்கையான மனநிலையாகும்.
மரணத்தின் பிடியிலும் உழைப்பாளிகளாக சிந்தனை தெளிவுள்ளவர்களாக இருப்பார்கள். தங்களுக்குள் ஒற்றுமையை பேணும் படி இருப்பார்கள். தங்களுக்குள்ளான மகிழ்ச்சிக்கும் பாடலுக்கும் நடனத்திற்கும் இடம் கொடுத்திருப்பார்கள்.
ஒருவருடைய மனைவியும் குழந்தைகளும் கொல்லப்பட்டு விடுவார்கள். தான் தப்பிப்பதே எதிராளிக்கு செய்யும் பகைமீட்டல் எனக்கூறி தங்கள் உயிரை தற்காத்து கொள்ள தன் குடும்பம் குழந்தைகள் கணவரை இழந்த பெண் நம்பிக்கை கொடுத்து உணவை உண்ண நிர்பந்திப்பாள்.
ஒரு இடத்தில் தானே தன்னுடன் கொல்லப்பட ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சூழல் வரும். முதலில் மறுப்பார்கள். மரணத்தின் பிடியில் கூட அடுத்த குடும்பங்களை ஈடாக்காது தங்கள் குடும்பத்தினரை தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு முக்கிய பெண் பாத்திரம். தப்பிக்கும் திட்டத்தில் சாஷிக்கு காதலியாக நடிக்க வேண்டும். உண்மையாகவே காதலில் ஆட்பட்டு விடுவார். ஆனால் சாஷியோ தனக்கு மனைவி, மகள் உண்டு எனக்கூறி அக்காதலை ஏற்க இயலாதவராக இருப்பார்.
அப்பெண் அவருக்கு பரிசளித்த சட்டை தற்போதும் வதைமுகாம் நினைவாக ம்யூசியத்தில் உண்டாம்.
வதை முகாமிலுள்ள தையல் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெண் தன் கைக்குழந்தையை காப்பாற்ற பெரும்பாடு படுவார். அக்குழந்தையும் தாயும் கண்டுபிடிக்கப்பட்டு வாகனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
வதைமுகாம் கைதிகள தப்பிக்க தலைமை தாங்கிய லியோன் பெஃட்ஹென்லெரின் சாதுரியம் இப்படத்தில் லியோனாக நடித்த நடிகர் அலனின் நடிப்பும் இயல்பானது.
அலன் தப்பித்து போலண்டு சென்று, மறைவு வாழ்க்கையின் போது இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு முன்பே தன் நாட்டு எதிர் அரசியல்வாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார் என்ற செய்தி துயரை தருகிறது.
இப்படியாக பெற்றோரை இழந்து காதலர்களை இழந்து தன் குழந்தை, குடும்பம் மனைவியை இழந்த துயர்களை சந்தித்து மீளாத்துயரிலும் மீண்டு எழுந்த யூதர்களை நினைத்து பார்ப்பது நமது வாழ்க்கைக்கும் அர்த்தம் தருவதே.
படத்தின் சிறப்பே அதை எடுத்த விதம் தான். இயல்பு மாறாது இரண்டாம் உலகப்போர் வதைமுகாமுக்குள் நம்மை சென்று விட்டனர். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம். சிறப்பாக, போர் மேல் தீராத மோகம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம். பல அறன்களை போதிக்கும் படவும் கூட.
https://www.youtube.com/watch?v=_A-_Q68fKGIQ68fKGIhttps://www.youtube.com/watch?v=_A-_Q68fKGIQ68fKGI



ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி ராஜா

தமிழகத்தில் கடைசியாக பட்டம் கட்டப்பட்டு 21 நூற்றாண்டில் வாழ்ந்து வந்த கடைசி ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி ராஜா இன்று காலம் சென்றார்.
முதலாமது பட்டம் கட்டப்பட்டவர் ஆபோதாரணத்தேவர், 31 ஆவது பட்டம் திருமிகு டி என் எஸ் முருகதாஸ் தீர்த்தபதிக்கு அருளப்பட்டது. சங்கர தீர்த்தபதி மகாராஜா, இராணி வள்ளிமயில் நாச்சியாருக்கும் மகனாய் 29-09-31 ல் பிறந்தார்.
இவருடைய தந்தையை சிறுவயதில் இழந்ததால் ஆங்கிலேய அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சிறுவர் காப்பாளர் நீதிமன்றத்தின் பராமரிப்பில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பு பாளையம்கோட்டை புனித இன்னாசியார் பள்ளியிலும், உயர் கல்வி சேலம் ஏற்காடு மான்பாட் பள்ளியிலும், மேற்படிப்பு இலங்கை கண்டியிலுள்ள டிரினிட்டி கல்லூரியிலும் முடித்துள்ளார்.
கி. பி1100 வருடங்களுக்கு பின்பு ஆயிரம் வருடம் குறுநில மன்னர்களாகவும், (சிற்றரசர்களாக), பாளையக்காரர்களாகவும், ஜமீன்களாகவும் வாழ்ந்து வந்தவர்கள் சிங்கம்பட்டி ஜமீன்கள்.
பாண்டிய மன்னர்கள் ஆட்சியை வீழ்த்திய நாகநாயக்கர்கள், நிலத்தை 72 பாளையங்களாக பிரித்தனர். அதில் ஒன்று தான் சிங்கம்பட்டி ஜமீன்.
இவர்கள் வீரபராக்கிரமங்களை கண்ட மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் தென்னாட்டு புலி என பட்டம் சூட்டி மகிழ்ந்தார். சேரநாட்டு மார்த்தாண்ட வர்மாவிற்கு ஆட்சியை பிடிக்க உதவி புரிந்ததால் சிங்கம்பட்டியாரின் மகன் நெஞ்சில் அம்பு பாய்ந்து இறந்தால் நன்றி கடனாக சேரநாட்டு உமையம்மை ராணி கொடுத்த பட்டம் தான் 'நல்ல குட்டி'.
சேரநாட்டு மன்னர் எங்களுக்காக உங்கள் இளவரசர் வீரமரணம் அடைந்து விட்டார். ஒரு காட்டை தருகிறேன் என்று மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியும், 5 கிராமங்களும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளடங்கிய 8 கோயில்கள், 5000 ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய் அடங்கிய பகுதியும் கொடுத்துள்ளார்.
ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை சிங்ஙம்பட்டி ஜமீன் இதை அனுபவித்து வந்துள்ளது. இவர்களுக்கு கிடைத்த 80 ஏக்கர் நிலப்பரப்பில் தாமிரபரணி நதி, துணை நதிகளான மணிமுத்தாறு, பச்சையாறு, பாணதீர்த்தம் கல்யாணதீர்த்தம் அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி போன்றவைக்கு அதிபதியான சிங்கம்பட்டி ஜமீனை தீர்த்தபதி என்றும் அழைத்து வந்தனர்.
30 வது ஜமீன் திருமிகு சங்கர சிவ சுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா; சென்னையில் கல்வி கற்கும் வேளையில் ஒரு கொலைக்குற்றத்தில் மாட்டுப்பட்டார். இந்த வழக்கில் ஏற்பட்ட பணவிரயம் ஜமீனை ஆடச்செய்தது . 8000 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாம்பே பர்மா டிரேடேஸ் கம்பனிக்கு குத்தகைக்கு கொடுத்தனர் அதுவே மாஞ்சோலை எஸ்டேட்.
குத்தகை காலம் முடிந்தாலும் ஆங்கிலேய அரசிற்கு கட்ட பணம் இல்லாததால் எஸ்டேட்டை ஆங்கிலேயர்களிடம் கொடுத்து விட்டார், தற்போது காலம் சென்ற ஜமீன்தார்.
இவர் 50 ஆண்டு காலமாக ஆன்மீக பணியில் இருந்தவர். எல்லா மக்களோடும் அன்பாகவும் கருணையோடும் பழகத் தெரிந்தவர்.
இவருக்கு தென்பொதிகை சித்தர், இந்து ஆலய பாதுகாவலர், சிவஞானச் சித்தர், சித்தாந்த சிகாமணி, சித்தாந்த சிந்தாமணி, மூதறிஞர் போன்ற பட்டங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
முகவை மன்னரும், தாய் மாமாவுமான அப்போதைய காமராசர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து திரு சண்முக இராஜேஸ்வர சேதுபதியின் மகள் இராணி சேதுபர்வதவர்த்தினி இவர் மனைவி ஆவார். இரு ஆண் 3 பெண் பிள்ளைகள்.
எளிமையின் உருவாக வாழ்நது வந்த மன்னர் மக்களின் நேசத்திற்கு உரியவராக 'வாழும் சித்தர்' என அறியப்பட்டு இருந்தார். தமிழும் சைவவும் இரு கண்களாக இருந்தாலும் ஆங்கிலத்தில் தான் மிகவும் சரளமாக கதைப்பார்.
ஒரு முறை, திருநெல்வேலி புகைப்பட குழுமம்
Nellai Weekend
தலைமையில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர்களுடன் சிங்கம்பட்டி அரண்மனையின் ராஜாவை சந்தித்திருந்தோம்.
எங்களின் ஆவலான பல கேள்விகளுக்கு, சிலரின் ஆர்வக்கோளாறான கேள்விகளுக்கு கூட பொறுமையாக பதிலளித்தார்.
அதில் ஒரு கேள்வி இப்போது நினைவில் உண்டு. எதனால் மன்னராட்சி வீட்சியடைந்தது எனக்கேட்ட போது பெண்களுககு செய்த தீங்கிற்கும் துரோகங்களுக்கும் என பதிலளித்தார். எங்களுக்கு பிஸ்கட் காப்பி வழங்கினார்.
அடுத்த முறை சொறிமுத்து ஐய்யனார் கோயிலுக்கு மாணவர்களுடன் சென்ற போது தன் தனிச்செயலரை அனுப்பி எங்களுக்கான எல்லா வசதிகளையும் வழங்கினார்.
12 புத்தக ஆசிரியர்களில் ஒருவரான என்னுடைய இரண்டாவது புத்தகத்தையும் வெளியிட்டது, ஜமீன் என்பது எனக்கு பெருமை.
கண்ணில் குடிகொள்ளும் நேசவும், கருணையும், நடவடிக்கையில் உள்ள எளிமையும் மேன்மையும் நினைவில் உள்ளது.
தன்னுடைய வாழ்நாளில் மன்னராகவும் பின்பு ஜமீனாகவும், பின்பு அதையும் இழந்து சாதாரண பிரஜையாகவும், ஆனால் மக்கள் மனதில் எப்போதும் மன்னராக வாழ்ந்து மறைந்த ராஜாவிற்கு வணக்கங்களும் அஞ்சலிகளும்.
Photo courtesy: Nellai weekend clickers members,
Madhan Sundhar
,
Muthu Kumar
,
Monsoon Monk
,
Bless Boss
Naren K Narendran, Madhan Sundhar and 130 others
25 comments
37 shares
Like
Comment
Share

13 May 2020

'இரண்டு போப்கள்'- The Two Popes

உண்மை சம்பவங்களை பின்புலனாக எடுக்கப்பட்ட திரைப்படம் 'இரண்டு போப்புகள்' ( The Two Popes)எனச் சொல்லப்பட்டது.  சபை மேலுள்ள மக்கள் நம்பிக்கை, இரு மனிதர்களின் முரண்களையும் மீறிய நட்பு, சபைத் தலைமையின் அதிகாரம் இப்படியாக மூன்று அடுக்கு கதையை கொண்டது இத்திரைப்படம்.

 

போப் பெனடிக்ட் ஜெர்மனியை சேர்ந்தவர், ஆழமான அறிவாற்றல் உள்ளவர், பேராசிரியர். பாரப்மபரிய கலாச்சார கருத்தக்களால் ஆளப்பட்டவர்.  அர்ஜென்றீனா கர்தினலான( பிஷப்பிற்கும் மேலுள்ள அதிகார நிலை) பிரான்ஸ்,   போப் பெனடிக்டை சந்திக்க வந்திருக்கிறார்.  அவர் ஒரு யேசு துறவியும் கூட.  அவர் போப்பை சந்திக்க வந்திருப்பதின் காரணம் தனக்கு கர்தினால் பதவி வேண்டாம், தன்னை ஒரு சாதாரண பாதிரியாராக பணியாற்ற அனுமதி தர வேண்டும் என்பதே.இருவரும் வெவ்வேறு கருத்தாக்கம் கொண்டோர் iருந்தாலும்  தங்களால் ஏற்று கொள்ள இயலாததையும்,  தங்களுடைய புரிந்துணர்வால் மதித்து புரிந்து கொள்கிறார்கள்.  இரு வித்தியாச ஆளுமைகளான கர்தினால் பிரான்ஸ் மற்றும்  போப் பெனடிக்டுக்கு இருவரும் தங்களுடைய கருத்தில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்..

 

அர்ஜென்டீனாவில் இருந்து வந்த கர்தினால் பிரான்சிசுக்கு கிறிஸ்தவ நெறிகள் அனுமதிக்காத ஓரினச்சேர்க்கை , பாதிரிகள் திருமணம் , கடவுள் பற்றிய கருத்தாக்கத்தில்   என தன் அனுபவம் சார்ந்த சுதந்திரமான பல கருத்துகள் வைத்துள்ளார், இத்துடன் கிறிஸ்தவத்தின் அடிப்படையான விவிலிய கருத்துக்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக  இருக்கிறார். இருவருடைய நீண்ட உரையாடல்கள், படமாக்கியிருக்கும் விதம், பார்ப்பவர்களை விரசப்படுத்தாது அறிவான தளத்திற்கு நகத்தியிருக்கிறது.
 
கர்தினலாக இருக்க விரும்பவில்லை என்றவரை, போப்பாக இருக்க கேட்டு கொள்வார் பழைய போப் பெனடிக்ட். கத்தோலிக்க கிறிஸ்தவம் வழக்கப்படி, நம்பிக்கைப்படி போப் என்பவர் பீட்டரின் மறுபதிப்பு. சபையின் அதிகாரம் என்பது உலகின் வல்லரசுகக்களையும் தாக்கம் கொடுப்பது . தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு,  அந்த அதிகாரம் தனக்கு வேண்டாம் பதவி துறக்கிறேன் ஒன்று முடிவெடுக்கிறார் போப் பெனடிக்ட்.
பொதுவாக சபையின் சட்டப்படி போப்பாக இருப்பாவர் தானாக  பதவி துறப்பது சாத்தியமானது அல்ல.   இருந்தாலும்  பதவியே துறக்க முடிவு எடுத்திருந்திருப்பார்.  இது போன்று உயிருடன் இருக்கையில் தன்னுடைய பதவியை துறந்த நிகழ்வு  700 வருடங்களுக்கு முன்பு நடந்தது.
அர்ஜன்றீனா கர்தினால் பிரான்சிஸ் பதவி ஏற்பதற்கு மிகவும் தயங்குவார்.  தன்னுடைய அரசியல் தன்னுடைய நிலைபாடு, அர்ஜன்றீனாவின் போராட்ட தளத்தில் தான் எடுத்த தந்திரமான முடிவுகள்,  இவைக்கும் மத்தியில் தனக்கு போப் ஆகும் தகுதி உண்டா என அச்சப்படுவார . பாவ மன்னிப்பு வழி இருவரும் தங்களின் மறுபக்கத்தை பற்றி நேர்மையாக விவாதித்துக் கொள்வது மிகவும் சுவாரசியம், மட்டுமால்ல ரசிக்க தகுந்ததாகவும் இருந்தது.             ” தகுதியற்ற இடத்தில் கடவுள் தன் தகுதியை அருளுவார்” எனக்கூறிய போப் பெனடிக்ட், கர்தினால் பிரான்சிஸுக்கு  போப்பாக பதவி பிரமாணம் செய்து வைப்பதுடன் கதை முடிகிறது.

 

அந்தோணி ஹோப்கின் மற்றும் ஜோனாத்தன் ப்ரைஸ் நடிப்பு அபாரம். இரு போப்பை பார்த்து கொண்டு இருந்தது போலவே இருந்தது.  இயக்கியவர் பெர்னான்டோ ( Fernando Meirelles) காட்சி மொழியை அழகியலுடன் தந்திருப்பது அருமை.   திரைக்கதை அந்தோணி மாக்கார்டென் (Anthony McCarten) , "The Pope" என்ற புத்தகத்தில் இருந்து திரைக்கதைக்கான கருவை உருவாக்கியுள்ளார்.

 
வத்திக்கான் லீக்ஸ் , என சபையில் நடந்த எல்லா நல்ல, கெட்ட பக்கங்களையும் விவாதிப்பார்கள்.  இது போன்ற படங்களை ஏற்கும் மனப் பக்குவம் கத்தோலிக்க சபைக்கும் உள்ளது என்பதையும் பாராட்ட வேண்டும். பெண்கள்( பெண் துறவிகள்) வெறும் சமையல் காப்பி /தேத்தண்ணீர் பகிரும்  சேவகர்களாக உள்ளனர். ஆனால் அதிகாரக் கதிரையில் ஒரு பெண் கூட இல்லாது இருப்பது மிகவும் நுணுக்கமாக காட்டப்பட்டுள்ளது.
 
ஆனால் திரைப்படத்திற்காக திணிக்கப்பட்ட பல பொய்மைகளும், பொய்களை அழுத்தி கூறி உண்மையாக மாற்றிய விதவும் அறிவோம்..
அந்த பிரதான பொய்மைகளை பார்ப்போம்.
 

1. போப் பெனடிக்ட் சிரிக்க மாட்டார்,தனியாகவே இருந்து உணவு அருந்துவார், ஒரு ஹக்( hug) கூட ஏற்க இயலாத அளவிற்கு பழமைவாதி.  தன்முகத்தன்மை ( introvert) கொண்டவர், லத்தீன் மொழியை மட்டுமே விரும்புகிறவர் , கோபக்காரர் நடனம் ஆட தெரியாதவர்.

 

உண்மையில் தூய பீட்டர் அரங்கில் தற்போதைய போப் பிரின்சிஸை விட அதிகம் மக்களை சந்தித்தவர் போப் பெனடிக்ட்.  பல மொழி விற்பன்னர், இசைக்கருவி மீட்டுவதில் வல்லுனர்.

அடுத்து தான் ரிசைன் செய்ய போவதை முன் கூட்டியை தெரிவித்திருந்தார் , பிரான்சிஸை போப் ஆக அழைத்தார் என்றதும் புனைவு.  2012 ல் பிரான்ஸிஸ் தன்னுடைய பணி குறைத்தல் நிமித்தமாக ரோம் வந்திருக்கவுமில்லை, போப்பை சந்தித்திக்கவும் இல்லை.
 
Change and comprising பற்றிய உரையாடல்கள்:
பிரான்சிஸ்: சுவருகள் உடைக்கப்பட வேண்டும்

போப் பெனடிக்ட் : சுவரில்லாது எப்படி வீடு உருவாகும்

பிரான்சிஸ்: தீமையின் சுவர்கள் பாலமாக மாற வேண்டும்...

 

இதில் பிரான்ஸிஸ் போப்பை நவநாகரீக மாற்றம் காண்பவராகவும், சுதந்திர மனிதனாகவும் , தெருவு கடையில் உணவருந்தி, சோசர் விளையாட்டு பார்த்து கொண்டு இருக்கும் நவீன மனிதனாகவும் , போப்பின் சிவப்பு ஷூவை புரக்கணிக்கும் புரட்சிவாதியாகவும் பிரகடனப்படுத்துகின்றனர்.  இப்படியாக இத்திரைப்படம் போப் பிரான்ஸிஸ் பக்கசார்பாக இருப்பதாக உள்ளது திரைப்படம்.

முக்கியமாக,  பிரான்ஸிஸ் போப்புக்கு இளம் பாதிரியாராக இருக்கையில் அமல்யா டெமோனி என்ற காதலி இருந்ததாக காட்டுவார்கள்.  அது போப்பின் 12 வது வயதில் உடன் படித்த அதே வயது பள்ளித் தோழி,  12 வயது பள்ளி பாலர் காதல் கதையை ஒரு பாதிரியின் காதலியாக காட்டியிருப்பது கத்தோலிக்க பாதிரியார்கள் மேற்கொள்ளும் பிரம்மச்சரியத்திற்கு( celibacy) மிகவும் எதிரானது.  இந்த பொய்மையை சேர்க்க தேவையே இல்லை.

 

அடுத்து 1200 வருடங்களுக்கு பின்பு கிடைத்த ஐரோப்பியர் அல்லாத போப், போன்றவைகள் எல்லாம் ஒரு வகை 'சிவப்பாக இருக்கிறவன் பொய் பேச மாட்டான், கறுப்பானவன் ஏழை' என்பது போன்ற வரட்டு பிரசார உக்தி.