9 Apr 2016
3 Apr 2016
என் கதைப்புகள் !
உங்களை கல்லறைக்கு அனுப்பும் மட்டும் உங்கள் அம்மா பண ஆசை ஓய்ந்த பாடில்லை. ஒரு வகையில் நீங்க நிம்மதியாக இறைவன் சன்னதியை அடைந்து விட்டீர்கள் என்று தான் தோன்றுகின்றது. உங்கள் ஏக்கம் உங்க குடும்ப பாசத்தை குறித்தே இருந்தது. நானும் எவ்வளவோ உங்களுக்கு சொல்லி பார்த்து விட்டேன் பாபா அத்தான். உங்களுக்கு சொந்த வீடு உண்டு உங்களுக்கு என பிழைப்பு உண்டு உங்களுக்கு அருமையான மகன்கள் உண்டு உங்களை எப்போது நினைத்து கொண்டிருக்கு நான் உண்டு. இருந்தும் உங்க தாய் பாசம் -ஏக்கம் வலிமையானது. ஏன் என்னை ஒதுக்கி விட்டனர் ஏன் என்னை மதிப்பதில்லை என வருந்தி கொண்டே இருந்தீர்கள்.
ஒரு பிள்ளை முதன்முதலாக மதிக்கப்பட வேண்டியது அதன் குடும்பத்தில் தான். ஆனால் உங்கள் தாய் உங்களை ஒன்றரை வயதிலே உங்க பாட்டி வீட்டில் கொண்டு விட்டது பெரும் வடுவை உருவாக்கி விட்டது, ஓர் ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டது உங்களுக்கு.. அங்கிருந்த அத்தை, அம்மா பாட்டி வளர்ப்பிலே வளர்க்கப்பட்டவர் நீங்கள். தனக்கு மாமா பெரியப்பா போன்ற உறவுகள் வேண்டும் என ஏங்கினீர்கள். ஆனால் உங்க தம்பியை நாலு வயதினிலே விடுதியில் விட்டதால் பாசத்தை விட மனிதர்களிடம் வெறுப்பு பொறாமையை மேலோங்கி இருந்தது.
உங்கள் குடும்பம் என்றால் பெரியதும், வலியது என நம்பினீர்கள். அத்தான் இந்த குணம் தான் உங்களை வளர விடாது தடுத்தது என நான் நினைக்கின்றேன். ஆனால் உங்களை தூக்க ஒரு உறவினர்கள் கூட அருகில் இல்லை. உங்களை உண்மையில் நேசித்தது உங்க நண்பர்களாக தான் இருக்க வேண்டும். உங்களை தூக்கினதும் உங்க நண்பர்கள், என் மாணவர்கள் சாம் நண்பர்கள். உங்க உடன் பிறந்த தம்பி கூட விபத்தில் நீங்கள் இறந்து விட்டீர்கள் என அறிந்த பின்பும் வந்து சேர தாமதித்துள்ளான் நீங்கள் ஏற்பாடு செய்து கொடுத்து செந்திலுடன் வியாபாரம் பேசி கொண்டு இருந்துள்ளான். உங்க தம்பி திருமணம் அன்று செருப்பு தூக்க என்னிடம் கொடுத்தது போல் இன்றும் செருப்பாக நடத்துகின்றனர். என்னை கேலி பேசுவது என்னை விமர்சிப்பது எல்லாம் என் காதுக்கு எட்ட வைக்கின்றனர். நீங்க இருந்திருந்தால் உங்களிடம் எல்லாம் கதைத்திருப்பேன். இன்று என் வலைப்பதிவு வழியாக உங்களிடம் சேர்க்கின்றேன்.
அத்தான் நான் நினைவில் குறித்து வைத்தவை எல்லாம் நீங்கள் டயறியில் குறித்து வைத்திருந்தீர்கள். நாம் தூத்துக்குடி நெல்லைக்கு வந்து குடியேறினதே மிகப்பெரிய தவறு. ஆனால் அந்த தவறை பற்றி 15 வருடம் முன்பே கூறியிருந்தேன். நீங்க வேலை தேடி எஸ்டேடில் இருந்து வெளியேற வேண்டும் என நினைத்த போதே நான் குறிப்பிட்டிருந்தேன். நாம் கோயம்பத்தூர் செல்லலாம் என்று. உங்க குடும்ப ஆட்கள் தொல்லை வேண்டாம் நாம் இக்கட்டான சூழலில் இருப்பதை அவர்கள் காணக்கூடாது என்று மட்டுமே நான் விரும்பினேன். ஆனால் நீங்களோ தூத்துக்குடி திருநெல்வேலி என்றால் உங்கள் வீட்டில் இருக்கலாம் என்று கனவு கண்டீர்கள். அந்த கனவு இருந்ததால் தான் உங்க அம்மா அப்பா கட்டின புது வீட்டின் பக்கத்தில் இருந்த பழைய மண் வீட்டை உங்களுக்கு தரக் கூறினீர்கள். அதற்கு தான் உங்க அப்பா உங்க தம்பி திருமணம் நாள் அன்று நம்மை திட்டி விரட்டி விட்டார். பொதுவாக மௌனம் காக்கும் நீங்கள் அன்று என் பெற்றோர் இருந்ததால் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி கத்தி அழுது ஆற்பாட்டம் செய்து உங்க வீட்டை விட்டு அவமானப்பட்டு வந்தீர்கள். அன்றைய உங்க துயரை போக்க என என் நகைகளை வலுக்கட்டாயமாக உங்களிடம் கொடுத்து உடன் இடம் வாங்குங்கள் நாமும் வீடு கட்டலாம் என்றேன். அது போலவே நாமும் நம் சக்திக்கு இணங்க அழகான ஓர் வீடு கட்டினோம் அந்த வீட்டில் ஒன்பது வருடமாக இருந்தோம்.
உங்க வீட்டிற்கு தறை கல் இட்ட போதோ உங்க தம்பிக்கு பெண் பார்க்கவோ உங்க தம்பிக்கு குழந்தை பிறந்த போது உங்களை அழைக்கவோ இல்லை. உங்க துயரை கண்டு நான் உங்க அம்மாவிடம் தொலைபேசியில் வினைவிய போது நீங்க தனியார் நிறுவனத்தால் வேலை பார்ப்பதால் லீவ் கிடைக்காது என நினைத்தோம் என்றார்.
தூத்துக்குடியில் கில்பர் அத்தான் வீட்டு மாடியில் குடியிருந்த போது நம்மை சந்திக்க வந்த உங்க பெற்றோர் உங்களையும் என்னையும் மிகவும் அவமரியாதையாக கேலியாக பேசின போது உங்களுக்கு தெரியாது உங்க அப்பாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன். அந்த கடிதத்தை உங்க அப்பா உங்களிடம் வாசித்து காட்டவும் எனக்கு தெரியாது உங்க மருமகள் எழுதியுள்ளாள் என்று கூறி தப்பித்து வந்து நான் எழுதினதை என்னிடம் பாராட்டினீர்கள். அந்த கடிதத்தில் என் மாமனாரிடம் நான் வேண்டி கொண்டது உங்க மகனை மகனாக நடத்துங்கள் கேவலப்படுத்தாதீர்கள். உங்கள் மகன் தோல்விக்கு நீங்களும் தான் காரணம் என்று எழுதியிருந்தேன். அதன் பின் நம் விடையத்தை பேசுவதை நிறுத்தி விட்டு நம்மை ஒதுக்கினர்.
அத்தான் இதுவெல்லாம் பொதுத்தளத்தில் பதிய வேண்டிய விடையமல்ல. ஆனால் உங்கள் உழைப்பு, உங்கள் ஆசைகள் எல்லாம் அகாலத்தில் பொலிந்து விட்டதே. இன்று உங்கள் அன்பைக்கூட நினையாது ஒதுக்குகினர். உங்களுக்கு ஒருவேளை புதியதாக இருக்கலாம். நீங்க இல்லாவிடில் நான் சந்திக்க வேண்டிய துயர் எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் இல்லாத போது உங்களை மறுபடியும் அவர்கள் அவமதிப்பதை என்னால் தாங்கி கொள்ள இயலவில்லை. இவை எல்லாம் உண்மையான மனிதர்களின் வரலாறு. இதில் கற்பனையில்லை பொய்மை இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அன்பு இல்லாத குடும்பங்களில் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் என புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கணவனும் தான் உயிருடன் இருக்கும் போது என்பது போலவே, தன் காலம் பின்பும் தன் மனைவியின் நிலை என்ன என்று புரிந்து அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனக்கு அத்தான் அளித்த கல்வி உதவியுள்ளது. நான் அத்தான் மதிப்பிற்காக படித்தேன் ஆனால் அத்தான் பணம் சார்ந்து எடுத்த முடிவுகள் அவர்கள் தாய் சகோதரனை நம்பி எடுத்த முடிவுகள் என்னையும் எங்கள் மகன்களையும் நடுத்தெருவில் கொண்டு வந்திருக்கும். என்னிடம் யார் கதைப்பதையும் நான் விரும்பவில்லை அத்தான் உங்கள் அன்பால் மட்டுமே எனக்கு ஆறுதல் தர இயலும்.
நம் மகன்கள் வேதனை!
பாபா அத்தான் சில எச்சில் கணக்குகளை மனதில் வைப்பதே தவறு. இருப்பினும் நம்மை பெரிதும் சங்கடத்திற்குள்ளாக்கியது உங்களை பண்ணையார் என்று கேலி செய்ய வைத்தது என்பதால் இதை பதியுகின்றேன். மேலும் நீங்கள் இறந்த போது உங்களை பற்றி பேச்சு எழுந்த போது உங்கள் வீட்டிற்கு என நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. எப்போதாவது 500 ரூபாய் தந்துள்ளான் என்றார் உங்கள் அம்மா!?
உங்கள் அப்பா மருத்துவமனையில் இறந்த பின்பு தான் உங்களுக்கு செய்தி அனுப்பினார் உங்கள் அம்மா! நாம் நாசரேத் வந்தடையும் முன்னே உங்கள் அப்பா உடலை வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டார் உங்கள் தாயார். அன்றைய தினம் ஜூன் 5 2015. அன்றே உங்கள் மரண தினவும் குறிக்கப்பட்டது என நினைக்கின்றேன். உங்கள் தம்பிக்கு செய்தி அனுப்பியும் அவன் வருகிறான், வரலாம்,வரவில்லை போன்ற செய்திகள் தான் வந்து கொண்டிருந்தன. உங்கள் அப்பா இறந்து விட்டார் என்று அறிந்ததும் நீங்கள் செய்த முதல் வேலை ”ஜோஸ் என்னுடன் வருவாயா” என்று என்னிடம் கேட்டு விட்டு பணம் புரட்டி கொண்டிருந்தீர்கள். பல ஆயிரங்கள் கைகளில் சேர்ந்த உடன் நாசரேத் புறப்பட்டோம். உங்க அம்மா சோகத்தில் கதைத்து கொண்டு நின்றார். நீங்க உங்கள் பையில் இருந்து பணத்தையும் காசையும் அள்ளி எறிந்து கொண்டு இருந்தீர்கள். எனக்கோ ஆச்சரியம் அத்தானிடன் எப்படி இவ்வளவு பணம் என்று. இருந்தும் நான் காதில் கூறினேன் பணத்தை கவனமாக கையாளுங்கள்.உங்கள் அம்மா தன் வங்கி கணக்கை திறக்கவே இல்லை. சோகமாக இருப்பது போல் இருந்து கொண்டார். நம் இருவரிடமும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. நீங்கள் கடமையில் கண்ணாக இருந்தீர்கள். நான் உங்களுக்கு உதவியாக நின்று கொண்டிருந்தேன். உங்கள் சகோதரன் காலையில் வந்து சேர்ந்ததும் உங்கள் தாயார் மகன்- மருமகளை கட்டி பிடித்து ‘ஆமோஸ் தாத்தா “ போயிட்டாருடா என்று அழுது கொண்டார். ஏழு மணிக்கு அடக்கம். பெட்டியை வீட்டை விட்டு எடுக்கும் முன் சொந்த பந்தங்கள் கேட்கும் படி உங்க அம்மா உங்க அப்பாவின் உதவியாளரை பார்த்து ”சாத்திராக் சார் போயிட்டாருடா, சார் கேட்டது மாதிரியை எல்லாம் செய்து விட்டாய் நன்றிப்பா என உருகி கொண்டு இருந்தார். எனக்கோ நேற்றைய காலை முதல் இன்று காலை இந்நேரம் வரை நீங்கள் தான் கை திறந்து பணம் கொடுத்து கொண்டிருந்தீர்கள் என உள் நெஞ்சில் குத்தியது.
மூன்றாம் நாள் ஜெபக்கூட்டம். அப்பா விரும்பி சாப்பிடும் ஆட்டு இறச்சி தான் வேண்டும் என்றான் உங்கள் தம்பி. நீங்களும் சரி என்றீர்கள். ஆட்டிறச்சி ஏற்பாடானது. பணத்தை உங்களிடம் இருந்து வாங்கி அடுத்த நாள் பணம் வாங்க வந்த கடைக்காரனிடம் பட்டுவாட மட்டும் செய்து கொண்டான். மாலை நான் உங்க அம்மாவிடம் இனி மாமா இல்லை. இருக்கும் வரை நாங்கள் ஒன்றும் கேட்டதில்லை. உங்களை நம்பி பணம் உண்டா, எங்கள் வீட்டிற்கு வருகிறீர்களா என்றதும் நான் என் வீட்டில் தான் இருப்பேன். செலவுக்கு தரவேண்டும் என்றார். உங்கள் சகோதரனோ ஏன் இதை எல்லாம் கேட்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டு கொண்டான். அடுத்து செலவு கணக்கை உங்கள் அம்மாவிடம் காண்பித்த போது எழுதி கொடுத்த லிஸ்டை அப்படியே உங்களிடமே கொடுத்தார். உங்க தம்பி வீடு தனக்கு வேண்டும் என்றும் தன் பிறந்தது இறந்த குழந்தையை புதைத்துள்ளதால் தனக்கு தான் வீடு என்றான். உங்க அப்பா வாங்கி போட்டிருக்கும் நாலு பிளாட்டு தனக்கு கிடைக்கலாம் என்ற நோக்கில் உங்க அம்மாவிடம் கேட்ட போது அந்த இடம் வாங்கி போட்டதை அப்பா கூறினர்களோ? எனக்கு மருத்துவ செலவுக்கு வேண்டும் என்றார். நீங்க அமைதியாக என் முகத்தை பார்த்தீர்கள். திரும்பி காரில் வரும் போது நான் கூறினேன் விரும்பி தராத சொத்து நிலைக்காது அத்தான் நீங்க அதற்காக சச்சரவுக்கு போக வேண்டாம். நீங்கள் இப்போது செலவழித்த பணத்தின் ஒரு பங்கை மட்டும் தரக்கூறுங்கள் என்றேன். உங்க தம்பி இங்கு இருக்கும் வரை சென்னையில் சென்றதும் அனுப்பி தருகிறேன் என்றவன் சென்னையில் இருந்து கதைக்கும் போது என்னிடம் பணம் இல்லை நான் கொடுக்கவும் தேவை இல்லை என ஒதுங்கி கொண்டான்.
மூன்றாம் நாள் ஜெபக்கூட்டம். அப்பா விரும்பி சாப்பிடும் ஆட்டு இறச்சி தான் வேண்டும் என்றான் உங்கள் தம்பி. நீங்களும் சரி என்றீர்கள். ஆட்டிறச்சி ஏற்பாடானது. பணத்தை உங்களிடம் இருந்து வாங்கி அடுத்த நாள் பணம் வாங்க வந்த கடைக்காரனிடம் பட்டுவாட மட்டும் செய்து கொண்டான். மாலை நான் உங்க அம்மாவிடம் இனி மாமா இல்லை. இருக்கும் வரை நாங்கள் ஒன்றும் கேட்டதில்லை. உங்களை நம்பி பணம் உண்டா, எங்கள் வீட்டிற்கு வருகிறீர்களா என்றதும் நான் என் வீட்டில் தான் இருப்பேன். செலவுக்கு தரவேண்டும் என்றார். உங்கள் சகோதரனோ ஏன் இதை எல்லாம் கேட்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டு கொண்டான். அடுத்து செலவு கணக்கை உங்கள் அம்மாவிடம் காண்பித்த போது எழுதி கொடுத்த லிஸ்டை அப்படியே உங்களிடமே கொடுத்தார். உங்க தம்பி வீடு தனக்கு வேண்டும் என்றும் தன் பிறந்தது இறந்த குழந்தையை புதைத்துள்ளதால் தனக்கு தான் வீடு என்றான். உங்க அப்பா வாங்கி போட்டிருக்கும் நாலு பிளாட்டு தனக்கு கிடைக்கலாம் என்ற நோக்கில் உங்க அம்மாவிடம் கேட்ட போது அந்த இடம் வாங்கி போட்டதை அப்பா கூறினர்களோ? எனக்கு மருத்துவ செலவுக்கு வேண்டும் என்றார். நீங்க அமைதியாக என் முகத்தை பார்த்தீர்கள். திரும்பி காரில் வரும் போது நான் கூறினேன் விரும்பி தராத சொத்து நிலைக்காது அத்தான் நீங்க அதற்காக சச்சரவுக்கு போக வேண்டாம். நீங்கள் இப்போது செலவழித்த பணத்தின் ஒரு பங்கை மட்டும் தரக்கூறுங்கள் என்றேன். உங்க தம்பி இங்கு இருக்கும் வரை சென்னையில் சென்றதும் அனுப்பி தருகிறேன் என்றவன் சென்னையில் இருந்து கதைக்கும் போது என்னிடம் பணம் இல்லை நான் கொடுக்கவும் தேவை இல்லை என ஒதுங்கி கொண்டான்.


என்னிடமும் கூறியிருந்தார் ”சாரை அந்த கிழவியிடம் அனுப்பாதீர்கள் சூனியக்காரக்கிழவி”. அந்த பெண்மணி ஏன் அப்படி கூறினார் என நான் சிந்திக்க போகவில்லை. எனக்கு பதிலாக இரவில் என் மாமியாரை கவனித்தார் என்பதால் தான் அந்த பெண்ணின் மகன் திருமணத்திற்கு இரண்டாயிரம் கேட்ட போது கொடுத்தேன். மரண சாற்றிதழ், சாகும் முன் உங்க அப்பா கோர்ட்டில் வைத்திருந்த வீட்டு பத்திரம் மீட்க. வாரிசு சாற்றிதழ் வாங்கி கொடுக்க என அலைந்து உங்கள் அலுவலகம் வேலையாட்கள் கவனிக்கப்படியான சூழல் உருவானது.
இப்படியான சூழலில் தான் உங்க தம்பிக்கு வேலை கிடைக்க முன் பணம் கட்ட உங்களிடம் பணம் கேட்க; கையிலிருந்த இரு லட்சத்திற்கு மேல் வங்கியில் இருந்தும் கடனாக எடுத்து கொடுத்துள்ளீர்கள். இதனிடையில் கத்தார் என்ற ஆசையை உங்களில் புகுத்திய உங்க தம்பி ஆபீஸ் மேல் இருந்த முழு அக்கறையும் போக்க செய்து மார்ச் 1 கத்தாரில்; பணியில் சேரப்போகிறேன் என்று கூறியிருந்த நீங்கள் மேலுலகமே சென்று விட்டீர்கள். நீங்கள் இருக்கும் போது 10 லட்சம் தாரேன் விடுதலை பத்திரத்தில் கை எழுத்து போடுகின்றாயா என கேட்டு கொண்டிருந்தனர்.
பாபு அத்தான் நான் இப்போது கேட்பது உங்கள் தம்பிக்காக எடுத்து கொடுத்த கடனை திருப்பி அடைக்க கூறுங்கள். தாய் , தம்பி பாசத்திற்கு என ஏங்கிய நீங்கள் பணத்தை கொடுத்தாவது உங்கள் அன்பை மீட்க பார்த்தீர்களோ? நீங்கள் கத்தார் சென்றால் உங்கள் அலுவலகத்தில் இருந்து 10 ஆயிரம் வரும் என்றீர்கள். பத்து பைசா உங்க உதவியாளர்களால் எனக்கு தர இயலவில்லை. அலுவலகத்தை இழுத்து பூட்டி விட்டனர். அத்தான் விபத்து நம் வாழ்க்கையை மாற்றி மறித்து போய் விட்டது. நான் கலங்குவது: உங்கள் பிரிவு இன்னொன்று உங்க சிந்தனையற்ற செயல்கள் அதை தொடர்ந்து நான் பொறுப்பு ஏற்க வேண்டி வந்த உங்க கடன்கள். எனக்கு உங்களிடம் கோபம் இல்லை வருத்தமும் இல்லை ஐந்து லட்சத்தை கொடுத்து தாய் பாசத்தை வாங்கி விட்டு எனக்கும் உங்கள் மகன்களுக்கும் உங்கள் நினைவுகளை தந்து கிளம்பி விட்டீர்கள். சாம் இன்று விடுமுறை ஆரம்பமாகி விட்டது. உங்கள் நினைவால் மிகவும் சோற்வுற்று அவன் காலையில் இருந்து மாலை வரை ஒன்றும் சாப்பிடவில்லை. உங்கள் மகன்கள் இனி வளர வேண்டுமென்றால் உங்களை நினைத்து அழுது புரள்வதை நான் நிறுத்த வேண்டும். உங்கள் வசம் தான் நல்ல யுக்திகள் வைத்திருப்பீர்களே. எங்களுக்கு வாழ வழி காட்டுங்கள்.
பெண்களை அதும் மனைவிகளை குறை கூறவே இந்த சமூகம் துணியும். அன்பின் பெயராலும் நேசத்தின் பெயராலும் ஏமாற்றப்படுவது பெண்களே. உங்க அம்மா கூட உங்க சித்தியிடம் சொல்லி விட்டுள்ளார். பொம்மை மாதிரி இருந்து கொண்டு நல்ல ஊர் சுற்றியுள்ளாள். இனி நல்ல அனுபவிக்கட்டும் என்று. நான் எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் தற்போது இல்லை. எனக்கு கிடைத்த பல அறிவுரைகள் தான் என்னை அழ வைத்தது. நான் நானாக இருப்பேன். உங்கள் ஆசை போல் உங்கள் எண்ணம் போல் வாழுவேன். காதல் குருடு என்பது போல் நாம் மற்றவர்களிடம் வைக்கும் நம்பிக்கையும் ஓர் வகை குருட்டு போக்கு தான் பெற்றோர்கள் மேல் பெற்ற தாய் மேல் வைத்த உங்கள் நம்பிக்கை உங்களுக்கு சொர்க வாசலை திறந்து விட்டுள்ளது என நினைக்கின்றேன். யார் யாருக்கோ என்ன என்னமோ செய்தீகள். உங்க பிள்ளைகள் உங்களை நினைத்து ஏங்குவது தான் என்னால் சகித்து கொள்ள இயலவில்லை. உங்கள் மேலுள்ள நம்பிக்கை வீணாகாத வண்ணம் நான் வளர்க்க வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமாக இருக்கும் அத்தான் உங்க சக்தியை உங்க அன்பை உங்க கரிசனையை எங்களிடம் திருப்புங்கள். இனி உங்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையை நம் மகன்களுக்காக வாழ உள்ளேன். சாம் நொடிந்து விட்டான். கனவிலாவாது வந்து அவனிடம் கதையுங்கள்.
31 Mar 2016
மயங்கினேன் உங்களில் அத்தான்.- 41 வது தின நினைவு நாள்!
அத்தான் நம் உலக
பிரகாரமான பிரிவின் 41 வது நாள்!
திருமணம் நமக்கு நிச்சயம் ஆகியதுமே உங்களிடம் கேட்டேன் எனக்கு
சமைக்க தெரியாது, நீங்க
சொன்னீங்க நான் பார்த்து கொள்ளுகின்றேன் என்று. உங்கள்
அப்பா ஒரு நாள் கேட்டார் இந்த கல்யாணத்தால் எனக்கு என்ன லாபம்? உனக்கு
நகை கிடைத்து விட்டது, என் மகனுக்கு உன்னை கிடைத்துள்ளது. எனக்கு ஆயிரங்கள் செலவாகியுள்ளது. அன்று தான்
நான் இந்த திருமணத்தால் என்ன லாபம் என்று சிந்திக்க துவங்கினேன். என் பாசமான குடும்பத்தை, வீட்டை பிரிந்தேன், மகள் என்ற உரிமையை
இழந்தேன், ஆனால் எனக்கு கிடைத்த ஒரே லாபம், என்
சொந்தம் என் வரம் எல்லாம் நீங்க தான். நீங்க விளையாட்டாக கூறுவீர்கள் உனக்கு
விளையாட உங்க அப்பா என்னை வாங்கி
கொடுத்துள்ளார் என. ஆம் அத்தான் நம் வாழ்க்கையே விளையாட்டாகத் தான்
இருந்தது. அது எதிர்பாராத விளையாட்டில் முடிந்து விட்டது.
இன்று உங்க கல்லறைக்கு சென்றேன். சில
மெழுவத்திகள் பற்ற வைத்து அந்த தீபத்தில் உங்க அணையாத
அன்பை நினைத்து கொண்டு இருந்தேன். நம் மகன்களிடம் கடைசி சில மாதங்களில் நீங்க அதீதமாக
கோபப்பட்டீர்கள். என்னிடம் நீங்கள் குறை
கூறும் போது நான் கூறுவேன் அப்பாவை என்னிடம் குறை கூற வேண்டாம். அவர்
அப்படி தான். அவர் கோபப்படும் போது நீ கட்டிப்பிடித்து ஒரு முத்தம்
கொடு அவர் சாந்தமாகி விடுவார். அதே போன்று தான் நீங்கள் நம் பிள்ளைகளை குறை கூறும் போதும் நான் கூறியுள்ளேன்.
அத்தான் உங்களுக்கு உங்க பெற்றோர்களிடம் கிடைத்த அடி, வேதனையின் கால் பங்கை நம்ம பிள்ளைகளுக்கு
கொடுக்காதீர்கள். அவர்களை உங்க நெஞ்சோடு அணைத்து முத்தமிடுங்கள்.
அப்படி தான் நம் நான்கு பேரின் வாழ்க்கையும் ஓடியது. நாம் மாறி மாறி அரவணைத்து கொண்டோம். இரண்டு நாள் முன்பு
நான் தூக்கத்தில் இருந்து எழுந்து அவர் எங்கே எங்கே என தேடியுள்ளேன்.
அம்மா தான் தூங்க கூறியுள்ளார்கள். நினைத்தால் மறைந்து போன
தெளிவற்ற கனவு போல் தான் உள்ளது.
நீங்கள் போனதாக என்னால் நம்ப இயலவில்லை அத்தான்.
மாலை 4.30 க்கு
உங்க ஆப்பிள் போன் என்னிடம் கதைக்க ஆரம்பித்து விடும். சுபி அக்கா நரேன்
அண்ணாவை நாங்கள் அழைத்து வர கிளம்பி கொண்டு இருந்த
போது நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தீர்கள். ஆப்பிள் போன்
சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தது.
அத்தான் உங்களூக்கு நாம்
தனிக்குடித்தனம் சென்ற போது சாதத்தை கஞ்சாக வைத்து தந்தது முதல்
கடைசியாக வெள்ளி இரவு தக்காளி சாதம்- துவையல் வைத்து தந்தது
வரை ஞாபகம் வருகின்றது. பொதுவாக
நான் அரைத்து வைத்திருக்கும் துவையலை மறுபடியும் அரைக்க கூறும் நீங்கள் அன்று சாப்பாடு, துவையல் எல்லாம் நன்றாக உள்ளது என்று என்னிடம் கூறினீர்கள். பொதுவாக தேங்காய்
துருவித்தரும் நீங்கள் இடியாப்பம் பிழிந்து தரும் நீங்கள்
சனிக்கிழமை நான் கைவலி என்று கூறியும் எனக்கு எந்த உதவியும் செய்து தரவில்லை. அன்று நீங்கள் பாட்டும் கேட்கவில்லை. நீங்கள்
வீட்டில் இருந்து கிளம்பும் போது வலது தோள்பட்டை
கடினமாக வலித்து கொண்டிருந்தது. அதனால் தான் வெளியே வராது
வாசலில் நின்றே உங்களை பார்த்து கொண்டு நின்றேன். அன்றைய
விபத்தில் என்னை எப்போதும் தாங்கும் துங்க, தலை வைக்க தரும் உங்க தோள் பட்டை உடைந்து விட்டதாம் அத்தான்.

உங்களுக்கு விபத்து என்றதுமே என் உடன் பணிசெய்யும்
பேராசிரியர்களுக்கு தெரிவித்தேன். டவ்லஸ் மற்றும்
விஜய் சார் உங்களுடன் மருத்துவ மனையிலும் சந்தோஷ் சார் நம் வீட்டிலும்
வந்து உதவினர்.
என்னவர் தலைக்கவசம் அணிந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே என்றேன்; ‘இல்லை
மேம் இன்னும் 10 நாள்
இருந்து வேதனைப்பட்டு போயிருப்பார்’ என்றார். நீங்க உடனே அந்த
கடவுளிடம் போய் விட்டீர்கள். நாம் எப்போதும் பற்றி நடக்கும் உங்கள் கையை தொடத்தான் ஆசை கொண்டேன். யாரும்
அனுமதிக்கவில்லை. கடைசியாக என் கண்ணை மூடி கொண்டாவது உங்கள் கையை
மட்டும் தொடவேன்டும் அந்த விரல்களில் என் விரல்களை ஊடுரவ வேண்டும்
என்றது. அதற்கும் அனுமதிக்கவில்லை. உங்களை
வீட்டில் கொண்டு வந்த போதும் உங்க கைவிரல்களை துணீயால் மூடியிருந்தனர்.
பார்க்ககூட இயலவில்லை அத்தான். உங்க கண் விழிகள் நீங்க வீட்டில் இருந்து கிளம்பிய போது
என்னை பார்த்தது போலவே இருந்தது.
அத்தான் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சி, எதிர்பார்ப்புகள் கொண்டதாக தான்
இருந்தது. உங்கள் அன்பு எங்களை பரவசப்படுத்தியது. எங்க மூன்று பேருக்கும் என்ன என்ன தேவையோ அதை வாங்கி
தந்தீர்கள். எனக்கு என சில பலகாரங்களை கொண்டு அந்து
தனியாக தந்தீர்கள். சமீபமாக
நான் என் அப்பாவிடம் எதிர்பார்ப்பது போல் வாசலில் நின்றே எனக்கு
என்ன கொண்டு வந்திருப்பீர்கள் என தேட துவங்கினேன்
. கடைசியாக நாகர்கோயிலில் இருந்து எனக்காக வாங்கி வந்த இனிப்பு பன் நினைவில் வருகிறது.
யார் உங்களை குறை கூறீனாலும்
என் மனதிற்குள் செல்லவே இல்லை. எதோ ஒரு மயக்க நிலையில் தான்
இருந்துள்ளோம். நீங்களும் வீட்டு வாசல்
வரும் போதே நான் வாசலில் நின்று வரவேற்க வேண்டும், உங்க
வாகனம் வர வாசல் திறந்து விட வேன்டும் என எதிர்பார்த்தீர்கள் நானும்
செய்து வந்தேன். வெள்ளி இரவு நீங்கள் வரும் வரை நான் வாசலில்
தான் நின்று கொண்டு இருந்தேன். வந்ததும் குளித்து
விட்டு சாப்பிட கூறியும் எனக்கு பசிக்குது என்று நேராக அடுக்களையை தேடி
வந்தீர்கள். நீங்க முட்டை வாங்கி வருவீர்கள் என
வெட்டி வைத்த வெங்காயத்துடன் இருந்தேன். மறுபடியும்
வாங்கி வரவா என்றதும் வேண்டாம் துவையல் உள்ளது என வெங்காயத்தை குளிர்சாதனைப்பெட்டியில் வைத்தேன்.
அத்தான் அந்த மயக்கம் தான் நம்மை வாழ வைத்தது. நம் இருவர் குறையும்
நம்மை காணாது மறைக்க வைத்தது. உங்களை
பிரிந்து லயோலா அருகிலுள்ள செர்வெய்ர்ட் விடுதியில் சேர்த்து விட்டு நீங்கள் சென்ற போது நான் அந்த கட்டிலில் இருந்து உங்களை
நினைத்து அழுதது நினைவு வருகின்றது. அத்தான் தற்போது அந்த
அழுகையுடன் தான் நிதம் நிதம் புரளுகின்றேன். நீங்க உங்க
ஜாதகத்தை பற்றி என்னிடம் கூறியதில் ஏதோ பிழை உள்ளது. ஆனால்
10 வருடம் முன்பு
ஒரு வீட்டில் ஜெபிக்க செல்லுவோமே உங்க
மகனுக்கு 18 வயது
ஆகும் போது பெரும் கவலையை சந்திப்பீர்கள் என்றதும்
அந்த ஜெப கூட்டத்திற்கு போவதை நான் நிறுத்தி கொண்டது
இப்போது தான் நினைவில் வந்தது.

30 Mar 2016
விபத்தும் அதை தொடரும் சிக்கல்களும்!
இன்றுடன்
என்னவர் விடைபெற்று 40 நாட்கள்!இன்னும் மனம் ஆறுதல் அடையவில்லையே? சிலர் நியதி என்கின்றனர்,
சிலரோ அவரின் விதி முடிந்து விட்டது என்கின்றனர். சிலர் இந்த துயரில்
இருந்து கரையேற அவர் வெளீ ஊருக்கு சென்றிருப்பதாக கருதக் கூறுகின்றனர்.
ஆறுதல் பட அறீவு துணிந்தாலும் அவரை நினைத்து அழாத நாட்களில்லை. அவரை நினையாத
கணங்கள் இல்லை. ஒரு குடும்பத்தை வழி நடத்தியவர். நாங்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதமாக பாதிக்கப்பட்டு கரையேற இயலாது துயருற்று கலங்குகின்றோம். 18 வயதை எட்டாத பெரிய மகன் சின்னவர் 14 வது வயது அவருடைய சோகத்தை
அன்பான அப்பாவின் இழப்பை சரிகட்ட தெரியாது கலங்கும் வயது. என் நிலையோ
இன்னும் நிஜத்தை ஏற்று கொள்ள இயலாது தவிக்கும் மனநிலை.
நேற்று
வரை கார், கணவர் நிறுவனம், என்றிருந்த நிலையில் இருந்து இன்று
யாருமற்ற யாதுமற்ற நிலை. இவை எல்லாம் விளங்க மறுக்கின்றது, ஏதேதோ காரணம்
கூறி மனம் சமாதானம் அடைய துனீயும் போது இடித்த கார் பற்றிய தகவல்கள் பல
வேதனையான வருத்தப்படும் உண்மைகளை தருகின்றது.

ஒரு
விபத்தால் ஒரு நல்ல கணவர் , பாசமான தகப்பன் பாசமுள்ள மகன் மருமகன், நல்ல நண்அர் இழப்பு என பல இழப்புகள், ஒரு
நாளும் என்னால் இதை நம்ப இயலவில்லை. படைத்த இறைவனிடம் தான் கோபித்து
கொள்கின்றேன். . அத்தானிடம், அல்லது என்னிடம் குறை கண்ட தெய்வமே ஒரு கை காலையாவது
எடுத்து விட்டு அத்தானை தந்திருக்கக் கூடாதா? அவர் ஓடி வரும் வீட்டுப்படி ,
அவருடைய அழகிய பார்வை, நடை அவர் செயல்கள் எல்லாம் நினைக்க நினைக்க முள்ளாக
குத்துகின்றது. அவர் இனி இல்லை இனி அவர் வர மாட்டார் என்ற உண்மை என் வாழ்க்கையின் நம்பிக்கையை இருள் அடையச் செய்து விட்டது. இனி ஒவ்வொரு நாளும் கடமையை முடிக்கும் பயணமாகவே என் வாழ்க்கை அமையபோகின்றது. இனி மிஞ்சிய என் வாழ்க்கை உயிர்ப்பான ஒரு வாழ்க்கைக்கு ஒப்பாகாது.
சாலை விபத்தில் இந்தியாவை போன்றூ மோசமான நாடு இருக்க போவதில்லை. நான்கு வழிச்சாலையில் சில குறீப்பிட்ட இடங்களீல் தொடர்ந்து விபத்து நடைபெறூவது ரோடுகள் தரத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. நான்குவழிச்சலையில் மக்களீடம் இருந்து பெறூம் சுங்க வரி நாட்களூக்கு நாள் அதிகமாகி கொண்டேபோகின்றது. டிரவிங் சாற்றீதழ் முறயாக யாரும் வேண்டுவதில்லை. ரோட்டிலுள்ள பயணத்தை உல்லாசமாக மாற்ற நினைக்கும் போது பலருடைய வாழ்க்கை அர்த்தமற்றூ அனாதமாக மாறூகின்றது.
கிடைத்த ஓர் தரவுப்படி வருடம் ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள் மரணீக்கின்றனர். இந்தியாவின் குற்றவியல் சட்டப்படி பிரிவு 304 ப்படி இந்திய சட்டத்தால் விபத்தால் பாதிப்படைந்தவர்களூக்கு 4600 டாலர் அபராதவும் ஏழு வருட சிறய் தண்டனை என்பதை 780 டாலர் அபராதம் ஒரு வருட சிறய் தண்டனை என குறத்து விதித்துள்ளனர். நமது நாட்டை பொறூத்த வரை சட்டம் ஆள் ஆளூக்கு மாறூபடுகின்றது. காரில் வருபவர்கள் கவனமாக ஓட்டியிருந்தால் ஒரு குடும்பம் அனாதமாகியிருக்காது. நாங்கள் அத்தானின் நினைவுகளீல் இருந்து வெளீவர இன்னும் 5 வருடம் ஆகலாம்.
எங்கள் ஆதரவு, பாசம், தலைமையாக இருந்தவரின் பிரிவு எங்களய் உருக்குலைய செய்து விட்டது. மேலும் தேவையான . சாற்றீதழ்கள் பெற பல பல சிக்கல்கள். ; அரசு பக்கம் இருந்து மக்களூக்கு உதவும் வண்ணம் எந்த திட்ட செயல் பாடுகளூம் இல்லை. முழுமையான பிரேத பரிசோதனைக்கு கூட ஒரு மாதம் மேல் ஆகும் என்கின்றனர். இப்படியாக எங்கள் வாழ்க்கை நாளூக்கு நாள் சுமையாக மாறூகின்றது
\
13 Mar 2016
பயணங்கள் நிறைவு பெறுவது இல்லை!
![]() |
எங்கள் கடைசி செல்ஃபி ஃபெப் 14 2016.
|
அத்தான் ஞாயிறு வந்து விட்டது. நம் சந்தோஷ நாள் இந்த ஞாயிற்று கிழமைகள். அன்று தான் நாம் இருவரும் நம் வேலைகளில் இருந்து விடுதலை பெற்று நம் பிள்ளைகளுடன் பிரியாணி செய்து சாப்பிடுவோம் ஆலயம் செல்வோம், பிடித்த இடத்திற்கு பயணம் செல்வோம். நான்கு பேரும் கட்டிலில் படுத்து கொண்டே கதைகள் கதைத்து கொண்டிருப்போம்.
நீங்கள் பிப் 20 அன்று விடை தரும் முன் அந்த 8 மற்றும் 14 அன்று மணப்பாடு சிலுவைக்கோயில் சென்றோம். முதல் நாள் பயணம் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பார்க்க வேண்டும் என்றிருந்தது. நாம் சென்ற நேரம் திமிங்கலம் யாவும் புதைத்து விட்டனர். அப்போது மீன்சந்தை நடை பெற்றதால் மீன் வாங்கும் ஆர்வத்தில் நீங்கள் இருந்தீர்கள். அங்கு இருந்த ஒரு ஆளிடம் மீன் விலையை பற்றி வினவியதும் இந்த மீன்களை சில்லறையாக கொடுப்பதில்லை நீங்கள் தேவையான மட்டும் எடுத்து செல்லுங்கள் என்று பெரிய மனதுடன் கூறினார். நீங்களோ நீங்கள் கடலில் சென்று உழைத்து கொண்டு வந்ததை நான் எப்படி இனாமாக பெற இயலும் நீங்க சிறிய விலை போட்டு தாங்கள் என்றதும் 50 ரூபாய் கொடுத்து விட்டு மகிழ்ச்சியாக மீனை பெற்று வருவது இன்றும் கண் முன் நிற்கின்றது . அத்தான். சில போது உங்கள் சில விருப்பங்களில் குழந்தைத்தனம் மேலோங்கி இருக்கும் குழந்தைகளை போல் கள்ளமில்லா சிரிப்பீர்கள். அந்த மீனை நீங்கள் உண்டீர்களா என்று எனக்கு நினைவு இல்லை ஆனால் அதை வாங்கி வந்து கத்திரிக்கோலால் வெட்டி சுத்தம் செய்து தந்தது பசுமை நினைவாக மனதில் உள்ளது. நான் மீன் வெட்ட படித்து விட்டேன் இனி எவ்வளவு மீன் வாங்கினாலும் கழுவி சுத்தம் செய்து விடலாம் என பெருமை கொண்டீர்கள்.
அன்று நான் வைத்த இரால் கூட்டு கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தாலும் ரசித்து உண்டீர்கள். மீதம் இருந்த இராலை வறுத்து பல்லாரியுடன் தர வேண்டும் என்றிருந்த நான் இராலை பல்லாரியுடன் சேர்த்ததும் நான் நினைத்தது மாதிரி வரவில்லை என கவலை கொண்டேன். நீங்களோ, நன்றாக உள்ளது என்று ரசித்து சாப்பிட்டீர்கள்.
அதன் அடுத்த ஞாயிறு கடல் விளையாட்டுகளை கண்டு கழிக்க சென்றோம். நம் பிள்ளைகள் ஒருவர் டுயூஷன் போக வேண்டும் என்றும், இளையவன் ஆலயம் செல்ல வேண்டும் என கூறி நம்முடன் வர மறுத்து விட்டனர். நீங்களும் நானும் அன்றைய வாலன்றையன்(காதலர்) தினத்தை கடற்கரையில் கழித்தோம். நாம் எடுத்த கடைசி செல்ஃபி கூட அன்றையது தான். அன்றும் ஆலையத்தில் சென்று பிரார்த்தனை செய்தோம். வரும் போது உடன்குடியில் இறங்கி சில மளிகை சாமான்களும் வாங்கி வந்தோம். நாசரேத் கடக்கும் போது உங்க அம்மாவை பார்க்க போவோமா என்றதும் வேண்டாம் என சொல்லி விட்டீர்கள்.
அத்தான் இப்போது நான் நினைத்து பார்க்கின்றேன். நமது பல ஆசைகள், பொழுது போக்குகள், விருப்பங்கள் ஒத்து போனது. காரில் பயணிக்கும் போது கையை பற்றி கொள்ளுவது நம் இருவர் வழக்கமாக இருந்தது, பேசி கொண்டே அல்லது பாட்டு கேட்டே பயணிப்பது, புகைப்படம் எடுப்பது என எல்லாவற்றிலும் நம் விருப்பங்கள் கலந்திருந்தது. அத்தான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சி இது போன்ற நம் பயணங்களாக தான் இருந்தது. நான் பெரிய ஆடம்பரமான வீடு கேட்கவில்லை அணிய நகை கேட்கவில்லை, ஆனால் உங்களுடனான பயணங்களை பெரிதும் விரும்பினேன். கடந்த நான்கு வருடங்களில் நம் விடுமுறை நாட்கள் பயணங்களுடன் தான் இணைந்து இருந்தது.
எனக்கு பிடித்த புத்தகங்கள், வனிதா போன்ற மலையாள புத்தகங்கள் வாங்கி தந்து அசத்துவது என நீங்கள் எப்போதும் உற்சாகமாக இருந்தீர்கள். சில போது நாம் பவுண்டர் மேடு வாழ்க்கையை பற்றி கேட்டால் பெண்கள் தான் நினைத்து கொண்டு இருப்பீர்கள் ஆண்களுக்கு நினைத்து கொண்டிருக்க நேரம் இல்லை என்பீர்கள். அத்தான் அந்த பயணங்கள் முடிவுற்றதோ? அது போன்ற நிமிடங்கள் இனி இல்லை தானே. கடக்கரையில் நீங்கள் என்னை அழகாக படம் பிடித்ததும் ஏ ,,,,,,,,,,,,,,ஜோஸ் இங்க வா.. என கத்தி அழைத்ததும் நினைவு வருகிறது.
போட்டி நடக்கும் இடத்திற்கு போகும் போது நமது கார் மாதா கோயில் அருகில் போடுங்கள் என்று நான் கூறினதை கண்டு கொள்ளாமல் காரை மணலில் இறக்க, மணலில் கார் மாட்டினதும் நான் சிரிக்க உங்களுக்கு கோபம் வந்ததை பார்க்க வேண்டுமே. "நீ போ எனக்கு காரை கொண்டு வரத்தெரியும் என்னை கேலி செய்து சிரிக்கின்றாய்" என கோபப்பட்டு விரட்டி விட்டதும் நினைவில் வருகிறது. அங்கு சென்றதும் ஒரு சிறிய பாக்கட் மஸ்கோத் அல்வா, கடலை மிட்டாயுடன் வந்து சேர்ந்தீர்கள். நாம் கொஞ்சம் முன்பு ஊடல் கொண்டதை மறந்து, அல்வா கடலை, முட்டாய் தின்று கொண்டே கடல் விளையாட்டுகளை கண்டு ரசித்தோம். அடுத்த முறை நம் பிள்ளைகளையும் அழைத்து வர வேண்டும். இன்று நாம் அழைத்தும் வர வில்லையே என்று நீங்கள் வருந்தி கூறினதும் நினைவு வருகிறது.
போட்டி நடக்கும் இடத்திற்கு போகும் போது நமது கார் மாதா கோயில் அருகில் போடுங்கள் என்று நான் கூறினதை கண்டு கொள்ளாமல் காரை மணலில் இறக்க, மணலில் கார் மாட்டினதும் நான் சிரிக்க உங்களுக்கு கோபம் வந்ததை பார்க்க வேண்டுமே. "நீ போ எனக்கு காரை கொண்டு வரத்தெரியும் என்னை கேலி செய்து சிரிக்கின்றாய்" என கோபப்பட்டு விரட்டி விட்டதும் நினைவில் வருகிறது. அங்கு சென்றதும் ஒரு சிறிய பாக்கட் மஸ்கோத் அல்வா, கடலை மிட்டாயுடன் வந்து சேர்ந்தீர்கள். நாம் கொஞ்சம் முன்பு ஊடல் கொண்டதை மறந்து, அல்வா கடலை, முட்டாய் தின்று கொண்டே கடல் விளையாட்டுகளை கண்டு ரசித்தோம். அடுத்த முறை நம் பிள்ளைகளையும் அழைத்து வர வேண்டும். இன்று நாம் அழைத்தும் வர வில்லையே என்று நீங்கள் வருந்தி கூறினதும் நினைவு வருகிறது.
இது போன்ற நம் பயண நினைவுகள் இனிமையான பல பொழுதுகளை நினைவில் நிறுத்தினாலும் இனி இந்த பயணம் நம் சிரிப்பு பேச்சு இல்லையே என்பது வேதனை அளிக்கின்றது.
Subscribe to:
Posts (Atom)