10 Jun 2020

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்"



ஒரு இரண்டு மணிநேரம், லாஜிக் மூளையை களற்றி பரணியில் வைத்து விட்டு பார்த்தால் சுவாரசியமான திரைபப்படம் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்".

தேசிங் 8 வருடம் மெனக்கெட்டு உருவாக்கின படைப்பு என்கிற போது நாம் ஆதரிக்க வேண்டிய திரைப்படம் தான்.
திரைவசனம், கதை , கதையை நகத்தும் விதம் சிறப்பு . கதை சொல்லத்தெரிந்த இயக்குனர். நம்மை விரசப்படுத்தவில்லை.
இரண்டு ஏமாற்று பேர்வழி ஆண்கள், இரண்டு ஏமாற்று பெண்கள். இவர்கள் நால்வரும் சேர்ந்து கொள்ளையிடுகிறார்கள்.
இளம் படைப்பாளிளுடைய சில மனநிலை , பார்வை தான் கதையை உதைக்கிறது. கோடியை சம்பாதித்து வைத்துள்ள பணக்காரன் ஏமாளி, பல வழக்குகள் சந்தித்த போலிஸ் அதிகாரி முட்டாள் தாங்கள் மட்டுமே புத்திசாலி என்ற நினைப்பு , மெதப்பு.....
அது ஏன் அனாத ஆசிரம பெண்களை திருடி கதாபாத்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும். திருடிய கோடியை எடுத்துக்கொண்டு தாய்லான்டில் போய் வாழப்போகிறார்களாம். உங்க நினைப்பு பொழைப்பை கெடுக்காதிருந்தா சரி தான்...
தொலைக்காட்சி புகழ் ரக்ஷனின் உரையாடல்கள் timing மற்றும் வெளிப்படுத்தும் விதம் அருமை. இந்த நடிகருடைய தொலைக்காட்சி ஜோடி ஜாக்குலின் ஒரே ஒரு காட்சியில் வந்த போனது. எதற்கு என்று தான் இன்னும் புரியவில்லை.

துல்கரின் எப்போதும் போலய துள்ளலான அலட்டிக்கொள்ளாத நடிப்பு அருமை. கவுதம் மேனன் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் இயக்குவதை விட நன்றாகவே நடிக்கிறார்.
இணையம் ஊடாக தவறு இழப்பது, வயதான ஆண்கள் சமீப காலமாக இரையாகும் honey trap பற்றி பேசியுள்ளது. இளம் பெண்கள் தங்கள் உடல் வளப்பால், முதுமையான ஆண்களின் இயலாமையை அறிந்து ஏமாற்றுவதையும் அதை எந்த உளுப்பும் இல்லாது நியாயமாக்குவது தான் நெருடல்.

தனக்கான வெற்றிக்காக, எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம், யாரையும் பயண்படுத்தலாம் அந்த மனநிலை சாதாரணமாகவே பரவி வரும் வேளையில், அதில் ஒரு தப்புமில்லை உன்னை ஏமாற்ற வந்தால் அதே நாணயத்தால் திருப்பி கொடு என்பது திரையில் சுவாரசியமே. நிஜத்தில் பல சிக்கல்களை வருவித்து விடும்.

நம்மை கொஞ்ச நேர மகிழ்ச்சி மனநிலையில் வைத்திருந்த திரைப்படம்.
சில இடங்களில் தடுமாறியது. இருந்தாலும் பார்க்க கூடிய திரைப்படம். பார்க்க வைத்த திரைப்படம். ஆனால் நினைவில் ஒட்டாத திரைப்பபடம்.

0 Comments:

Post a Comment