27 May 2020

தல்வார்/ கில்ட்( guilt) -திரைப்படம்

2008 ல் தில்லி நொய்டாவில் ஒரு பல் மருத்தவ தம்பதி வீட்டில் தனது 14 வயது மகளும், 45 வயது வேலைக்காரனும் கொல்லப்படுகின்றனர். போலிசின் அஜாக்கிரதை, பொறுப்பற்ற விசாரணை முறையால் குற்றவாளியை கண்டு பிடிக்க இயலாது போகிறது.
14 வயது பெண் , பெற்றோர்கள் வாழ்க்கை முறை , இவை காவல்த்துறை அதிகாரிகளை தங்கள் கட்டுக்கதைகளால் நிரம்பி வழிய செய்கிறது. மீடியாவால் மிகவும் பேசப்பட்ட வழக்கு.
புலனாய்வுத்துறைக்கு மாற்றியும் அங்குள்ள அதிகாரிகளின் துறைக்குள் இருக்கும் போட்டி பொறாமையால், காழ்ப்புணர்ச்சியால் வழக்கின் திசை மாறி, பெற்றவர்களை ஜெயிலுக்குள் ஆயுள் தண்டனை கைதிகளாக தள்ளி விடுகிறது.
இருப்பினும் உண்மையான குற்றவாளிகள், வங்காள அகதிகளாக வந்த பணக்கார வீடுகளில் வேலை செய்யும் இரு நபர்கள் தான் இக்கொலை செய்தார்கள் என விசாரணையில் அறிந்தும்; அகதிகள் , சிறுபான்மையினர் என்ற நிலையில் இதுவரை தண்டனை கிடைக்கவில்லை.
இந்த படத்தில் புலனாய்வு அதிகாரியாக( கடந்த வாரம் மரித்த) இர்ஃபான் கான் நடித்துள்ளார். கங்கனா சென் குழந்தையின் தாயாராக, நீரஜ் கபி தகப்பனாகவும் , தபுவும் நடித்துள்ளார்.
மீடியா விசாரணை அதிகாரிகளின் போட்டி சாதாரண பெற்றோர்களின் வாழ்க்கையை 9 வருடம் ஜெயிலுகுள் தள்ளியது. காவல் த்துறை புனைந்த கதைகளும் மீடியா பொறுப்பற்று வெளியிட்ட செய்திகளும் கொல்லப்பட்ட சிறு பெண்ணின் மான்பை கெடுத்ததுடன் பெற்றோரை எவ்விதம் பிரச்சினைக்கு உள்ளாக்கினது என காணலாம்.
ஷுப்ஹ்ரா குப்தா எழுத்தில், திரைக்கதை விஷால் பரத்வாஜ், இயக்கம்.மேகனா குல்சார்.
இந்தியாவில் தல்வார்(வாள்) என்ற பெயரிலும் சர்வதேச அளவில் கில்ட்( guilt) என்ற பெயரிலும் வெளியிட்டனர்.
இந்த படம் வெளியானது 2015 ல் அப்போது பெற்றோர் சிறைச்சாலையில் தான் இருந்தனர். தங்கள் ஒரே மகளை இழந்ததுடன் மகளின் கொலைப்பழியையும் சுமந்தனர் . 2017 ல் இந்திய நீதி மன்றம் குற்றம் நிரூபிக்கவில்லை எனக்கூறி விடுதலை செய்தது.
தற்போது ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கை இத் தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர்.
நுபுர் தல்வார் சமூக சேவையிலும் மருத்துவர் ராஜேஷ் தன்னுடைய மருத்துவ தொழிலை மறுபடியும் சீரமைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளார்.
குற்றவாளிகள், இந்திய சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பித்ததும், தங்கள் வீட்டு வேலைக்காரனை முழுதுமாக நம்பி தங்கள் ஒரே மகளை இழந்த பெற்றோரை நினைத்த போது வருத்தமே.
இந்த இரட்டை கொலையை பின்புலமாக கொண்டு திரைப்படவும் ஒரு நாவலும் வெளி வந்துள்ளது.
இத்திரைப்படம் தேசிய அளவில் பின்னனி குரல் அமைப்பு , திரைக்கதைக்கு, சிறந்த வாழ்க்கை சரிதை படததிற்கான விருது பெற்றுள்ளது.

0 Comments:

Post a Comment