10 Jun 2020

'45 Years

2016ல் சிறந்த நடிப்பிற்கு ஆஸ்கார் விருது வாங்கிய திரைப்படம் '45 Years'.
ஒரு குழந்தைகளற்ற தம்பதிகள் தங்கள் 45 வது வருட கல்யாண நாளை கொண்டாடும் திட்டத்தில் உள்ளனர். அதற்கான வேலையில் மும்முரமாக இருக்கையில் ; ஜெப்ன் 50 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்த காதலியின் உடல் சுவிஸ் மலைகளில் கிடைத்தாக தகவல் வருகிறது.
பெரியவருக்கு காதலியை போய் பார்க்க வேண்டும் , தனக்கு பணிவிடை புரியும் தன் மனைவியை மறந்து காதலி நினைவில் ஆழ்ந்து விடுகிறார். அவரை திருமணம் முடித்திருப்பேன் என்று வரை மனைவியிடம் கதைக்கிறார். அதன் பின்னுள்ள அந்த 6 நாட்களை பற்றியது தான் கதை.
பெரியவர் வீட்டிலே முடங்கி கிடக்க, காதலி நினைவாகவே இருக்கும் கணவரை ஆறுதல்ப்படுத்த கதைகள் கேட்ட மனைவி, ஒரு கட்டத்தில் காதலி பெயரையே சொல்லாதீர்கள் என சொல்லி விடுகிறார். கணவரின் அன்பை இழக்கிறோம் என்ற இயலாமையில் உருவான பொறாமையும் பீடிக்க ஆரம்பிக்கிறது.
இருந்தாலும் முதலில் வயோதிகத்தால் மலை ஏற இயலாது என சுவிஸ் மலைக்கு போவதை தடுத்த மனைவி, கணவர் மகிழ்ச்சிக்காக சுவிஸ் பயணத்திற்கு உதவ முன் வருகிறார்.
ஜெப் தன் மனைவியின் மனநிலையை புரிந்து, தன் தவறை உணர்ந்து பழைய படியும் மனைவிக்கு காலை காப்பி இட்டு தருகிறார், நாயை அழைத்து வெளியே போய் வருகிறார்.
பிரதானமாக தங்கள் திருமண நாளை கொண்டாட மனதில்லாது இருந்தவர் விழாவை சிறப்பாக கொண்டாடியதுமில்லாது தன் மனைவியின் தியாகம், நட்பை, அன்பை பாராட்டி ஒரு உரையும் நிகழ்த்துகிறார்.
நடனம் முடியும் தருவாயில் இருவரும் தங்கள் வாழ்க்கை வெற்றி பெற்றதாக கையை உயர்த்த கேய்ட் கையை இறக்கி விடுகிறார்.
அரை நூற்றாண்டு வாழ்ந்தும் திருமண பந்ததிற்குள் இருந்த ஆழமின்மை , கணவரின் காதலி மேலுள்ள அதீத காதலால் மனைவியின் பாசத்தை புரக்கணித்தது எல்லாம் நினைவிற்கு வர கேய்ட் மனம் ஒரு வகையான வருத்தம், வாழ்க்கையில் கண்ட அர்த்தம் இன்மைக்குள் இட்டு செல்கிறது.
முதிர்ந்த தம்பதிகளின் வாழ்க்கை, பரஸ்பர நம்பிக்கை, மரியாதை , கரிசனை, அவர்களுக்குள் இருக்கும் காதல் , அற்ப மனதால் எழுந்த பிரிவு, கடைசியில் கணவர் தன் தவறை உணர்வது , பெண்கள் திருமணம் என்ற பந்தத்தில் கணவர்களால் எதிர்கொள்ளும் நம்பிக்கை துரோகத்தை ஏற்கவும், மறக்கவும் இயலாது துன்புறுவது என நிதானமாக, ஆழமான கருத்துடன் எளிய நடையில் எடுத்துள்ளார்கள்.
நமது இயக்குனர்களும் முதிர் வயது மனதர்களின் உணர்வுகளையும் துல்லியமாக உணரக்கூடிய மெல்லிய அன்பை போதிக்கும் படங்கள் எடுப்பது நமது சமூகத்திற்கு தேவை.
நமது சமூக துர்பாக்கியம் ஆங்கிலேயர்கள் 70 வயதுக்கும் மேலுள்ளவர்களின் அழகான காதலை மையமாக வைத்து கதை எடுக்குகையில் இங்கு 60 வயது முதியவர்கள் கருணை கொலை செய்வதை பற்றி படம் எடுத்து மிரட்டுகின்றனர்.
இப்படம் பல விருதுகள் பெற்றுள்ளது.

0 Comments:

Post a Comment