27 May 2020

தாமிரபரணி நாகரீகம்


தாமிரபரணி நாகரீகம் 10,000 ஆண்டுக்கு முந்தையது. உலக நாகரிகத்தின் தொட்டில். உலக நாகரீகம் ஆற்றம்கரையில் வளர்ந்தது போல தமிழர் நாகரீகம் வளர்ந்தது தாமிரபரணிக்கரையில் என்கின்றனர்.
இலங்கைக்கும் திருநெல்வேலி தாமிரபரணிக்கும் உறவு இருப்பதாக கதை சொல்கிறது.
குமரி கண்டம் இருந்த போது தமிழ்நாடும் இலங்கையும் ஒன்றாக இருந்துள்ளது. அந்த காலத்தில் இலங்கை வரை அன்றைய தாமிரபருணி ஓடியதாம். அசோகர் காலத்து கல்வெட்டில் இலங்கையை குறிக்கும் வண்ணம் தாமிரபரணி என்ற பெயர் உள்ளதாம். தாமிரபரணி இலங்கையில் ஓடியதாக மார்கண்டேய புராணவும் கூறுகிறது.
மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை இலங்கை தீவு புத்த பிக்குக்களால் தம்பர பன்னி என அழைக்கப்பட்டதாம்.
(அழகான தீவு என்ற அர்த்ததில் லங்கா ஒன்றும் அழைத்துள்ளனர். சங்கு என்பதற்கு மற்றொரு பொருளும் சிலோன் என்கிறார் கால்டுவெல்).
தம்பா பன்னி என்ற பெயரை தாம்ரபரணி என இலங்கையில் குடியேறிய விஜயன் குழுவினர் அழைத்ததாக மகாவம்சத்தில் குறிப்பிட்டு உள்ளதாக சொல்கின்றனர்.
கி.பி80 ல் இலங்கையின் பெயர் தாப்ரோபணி என்கிறார் பெரிப்ளூஸ்.
இந்த குடியிருப்பு சிலோன் மேற்குக் கடற்கரையிலுள்ள புட்லம் என்ற உஊரின் அருகே உள்ளது என்பது தெரிகிறது.
இது எங்க ஊர் முக்கிய ஆறு தாமிரபரணி கூடுதுறைக்கு எதிரே அமைந்துள்ளதாம்.
விஜயன் வீரர்கள் பாண்டியர்களுடன் திருமண உறவு ஏற்படுத்தி இருந்ததாகவும் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள சில இனங்களுக்கு சிங்கள தொடர்பை நினைவுப்படுத்தும் மறபுகளும் பெயர்களும் உண்டு என்கின்றார் கால்டுவெல்.
இவர்களால் தான் இந்த நதிக்கு தாமிரபரணி என்ற பெயர் வந்திருக்க வேண்டும் என்கின்றனர்.
தாலமியில் காலத்தில் இந்த ஆற்றை கிரேக்கர்கர்கள் சோலன் என குறிப்பிட்டுள்ளனர். அதே நேரம் கிரேக்கர்கள் சிலோனை தப்ராபன்னி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கும் முன்னைய மகாபாரதத்தில் தாமிரபரணி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தில் மகாநதி எனக்குறிப்பிட்டுள்ளனர்.
தாமிரபரணியை தமிழ் நூல்கள் பொருநை எனக்கூறுகிறது.
( இந்த சில குறிப்புகள் இப்புத்தகத்திலும் காணலாம்Book The Vijayan Legend and The Aryan Myth - Gunasekaram S.J பக்கம் 26-27, 40 )

0 Comments:

Post a Comment