23 Oct 2015

மதங்கள் போதிக்க வேண்டியது மனித நேயம் மட்டும் தான்!

சமீபத்தில் வீட்டிற்கு விருந்தாளியாக ஒரு பாட்டியம்மா வந்திருந்தார்கள்.  பாட்டி போகிற போக்கில் வீட்டில் செடி கொடிகள் பராமரிப்பதில் யாருக்கு விருப்பம், பராமரிப்பு இன்னும் சரியாக இருக்க வேண்டும் என கூறி சென்றார். அத்துடன் உங்களுக்காக  ஜெபிக்கின்றேன் என்ற பெயரில் மகனுக்காக பேசும் திறனிலுள்ள குறைபாட்டை பெரிய குறையாக கூறி ஜெபித்ததை எனக்கு எரிச்சலை வருவித்தாலும் மகன் மனதைக்கருதி நான் அதை ஒரு பொருட்டாக மதித்தாகவே காட்டி கொள்ளவில்லை. 

என் மகன் பல துறைகளில் சிறந்தவன். இருப்பினும்  சில குறைபாடுகள் என்பது, இயற்கையின் நியதி, நம் வளர்ப்பில் உள்ல குறைபாடு, சிறு குழந்தையாக இருக்கும் போதுள்ள தாக்கம், பரம்பரையான சில குறைபாடுகள் என பல காரணங்கள் உண்டு. இதற்கு என ஒரே காரணமாக இறைவன் கிருபை, சாபம், தயை என்ற பெயரில் கதையளப்பதை நான் பெரிதாக எடுத்து கொள்வதே இல்லை.

இது ஒரு வகையான கிருஸ்தவ மனவியாதி. யாரை பார்த்தாலும் அவர்களில் குற்றம் கண்டு பிடிப்பது, அவர்கள் இயலாமையை சுட்டி காட்டுவது அவர்களுக்காக தான் ஜெபிக்கின்றேன் என்ற பெயரில் தேவையில்லாத குடும்ப விஷங்களில் தலை இடுவது.  இந்த வியாதி திருநெல்வேலி கிருஸ்தவர்களை பொறுத்து பெரிதாகவே தாக்கியுள்ளது. 

ஒரு முறை மகன் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற குறைபாட்டுடன் அவன் தலைமை ஆசிரியரை சந்தித்த போது பெற்றோர்கள் ஜெபியுங்கள் என்றதும் எனக்கு பள்ளி மேலுள்ள மதிப்பே அற்று போனது. இன்னும் சில பள்ளிகளில் குழந்தைகள் செய்யும் இயல்பான சேட்டைகளை குசும்புத்தனங்களை சாத்தானின் செயல் என்று சொல்வார்கள்.  


பேருந்தில் பயனிக்கும் போது இது போன்ற மனவியாதி பிடித்தவர்களை இனம் கண்டு ஒதுங்கி கொள்வது உண்டு. சிறிதாக சிரிப்பார்கள் நாமும் உறவினர்களோ, மறந்து போன  தெரிந்தவர்களோ என் திரும்ப சிரித்து விட்டால் நம்மை பற்றிய சிறு விசாரணைக்கு பின் அவர்கள் வல்லமையை கொட்ட ஆரம்பித்து விடுவார்கள். 


ஒரு முறை ஒரு உறவினர் வீட்டில் தங்கின போது அவர் ஒரு தினஏட்டை காட்டி தந்து "ஒவ்வொரு மாதவும் ஒரு குறிப்பிட்ட சிலருக்காக ஜெபித்தாகவும் இந்த மாதம் உன் பெயரை குறித்து ஜெபிக்கிறேன் நீ சபை மாறி ஜெபித்தால் நிறைய வசதியாகி விடலாம்" என கூறினார். பணக்காரர் ஆவது செல்வ செழிப்புடன் வாழ்வது என்பது ஒரு மனிதனின் லட்சியமாக மாறும் போதே அங்கு தீமைகளின் அணிவகுப்பு  ஆரம்பமாகி விடுகின்றது. எனது லட்சியம் என் ஆசைகள் எனக்கு தெரிவதால் அவர் பேசின பேச்சை ஒரு பொருட்டாக நான் எடுக்கவில்லை என்றதும் அவர் என்னை  மதித்து உறவினராக சேர்த்து கொள்வது இல்லை என புரிந்து கொண்டேன். இது போன்ற மனிதர்களை விட்டு விலகியிருப்பது எவ்வளவோ மேல். ஒரு மனிதனுக்கு தேவை, அமைதி அது பணத்தால் வசதியால் வராது என்பது தெள்ள தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

இன்னும் சில கிறிஸ்தவ விஞ்ஞானிகள்; உங்கள் குடும்பத்தில் ஒரு சாபம் உள்ளது, அது உங்கள் கொள்ளு தாத்தா செய்த பாவம் என்ற தோரணையில் கதை ஆரம்பித்து விடுவார்கள். 

இது போன்ற நடவடிக்கை எல்லாம் அவர்களில் வாழ்க்கையிலுள்ள ஏமாற்றத்தை வெறுப்பை மறைத்து அதே நிலைக்கு இன்னும் சில மனிதர்களை எட்ட வைக்கும் யுக்தியாகும். 

பலர் இன்று செல்வ செழிப்பு சமூக அந்தஸ்து என கருதுவது; ஒரு அரசு பதவியில் இருப்பது நோகாமல் நொங்கு எடுப்பது என்பது போல் எளிதாக் சம்பாதிப்பது என அர்த்தம் கொள்கின்றனர். ஆனால் இதே கொள்கையில் வாழ்ந்து இன்று 70 வயதை கடந்து வீட்டின் ஓரமாக உட்காந்து கடந்த வாழ்க்கையை எண்ணி நிராசையுடன் தவிக்கும் பல வயோதிகர்களை கண்டுள்ளேன் ..   

சமீபத்தில் ஒரு எழுத்தாளர் நண்பரை சந்தித்து பேசி கொண்டிருந்த போது; அவருடைய கிறிஸ்தவ உறவினர் இவர் எழுத்து விருப்பத்தை எடுத்து கூறி "நீங்கள் ஆண்டவரிடம் திரும்புங்கள் புகழ்ச்சிகாக அலையாதீர்கள்" என கூறி அவரை வார்த்தையால் துன்புறுத்தியதை கூறி வருத்த பட்டு கொண்டார். 

இன்று முகநூல் போன்ற பக்கங்களிலும் சில நண்பர்கள்; கிறிஸ்தவர்களை  விமர்சித்து வருகின்றனர். இது போன்ற செயலை மதத்துடன் பார்க்காது அவர்கள்  மனநலனுடன் பார்ப்பதே சிறந்தது. வாழ்க்கை மேலுள்ள ஒரு வகையான வெறுப்பு அடுத்தவர்களை காணும் போதுள்ள பொறாமை போன்றவற்றை வெளிப்படுத்த கடவுளை துணைக்கு சேர்த்து கொள்கின்றனர். 
 

நான் குறிப்பிட்ட சில பக்தி குழுவுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதில்லை. இவர்கள் ஆத்மீகம் என்பதை ஏதோ  வசதி வாய்ப்பு கிடைப்பதையும்' பதவி' வேலை' வீடு கிடைப்பதாகவுமே பார்க்கின்றனர். வருடம் ஒரு முறை வரும் கிறிஸ்துமஸ் குழுவைக் கூட நான் கடமைக்கு என்றே வரவேற்பது. ஒவ்வொரு முறை வரும் போது நம் பெயரை கேட்பது பார்க்கும் வேலையை கேட்பது' அதற்கு தகுந்தது போல் அறச்செயலுக்கு என பணம் கேட்பது எல்லாம் வெறுப்பையே தருகின்றது. 

வீடு என்றதும் அவர்கள் நினைப்பது பெரிய  பங்களா போன்ற வீடுகள் வீட்டிற்கு முன் கார் வசதி போன்றவையாகும். குடும்ப சொத்து போன்றவை இல்லாது நியாமாக சம்பாதிக்கும் ஒருவனால் சராசரி வாழ்க்கை தான் சாத்தியம். இதை கடவுள் அருள் கிருபை என முடிச்சு போடுவது அப்பட்ட ஏமாற்று தனவும் திமிறுமாகும். இது போன்ற மனநிலை பெருகி வருவதை விடுத்து குறைவாதாக தெரியவில்லை.  அரசு அதிகாரியாக இருந்து லஞ்சம் வாங்கி சேர்த்து அதில் தசம பாகம் கொடுப்பதையோ அல்லது சொந்த சகோதரனையை ஏமாற்றி சொத்து, சேர்த்து அதன் ஒரு பாகத்தை நாலுமாவடிக்கு கொடுத்தால் பாவ நிவர்த்தி ஆகி விடும் என்று நினைப்பதை எல்லாம் பக்தி, கடவுள் வணக்கம், என எடுத்து கொள்ள இயலாது.


பொதுவாக கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் என்ற பொருள் தான் தகும். இதில் கொள்கை வழி பாட்டு முறை, மற்றும் அதிகார மோகத்தால் உருவாகினது பல ஆயிரம் சபைகள். இந்த சபைகள் எல்லாம் நிலை நிற்க வேண்டும் என்றால் மனவியாதி பிடித்த சில மக்களும் தேவை. 

பொதுவாக கிறிஸ்தவம் என்பது கத்தோலிக்க மதமாகத்தான் இருந்தது. இந்த சபை ஒரு தலைமை கட்டுபாட்டில் கோட்பாட்டுடன்  இயங்குவது ஆகும். ஒரு குறிப்பிட்ட நபரின் கருத்தை கிறிஸ்தவம் என்ற பெயரில் எடுத்து கொள்ள அனுமதிப்பது இல்லை.   ஒன்பது வருடம் துவங்கி பனிரெண்டு வருடங்கள் மட்டும் படித்தவர்களால் மட்டுமே மத நூலை பற்றி  போதிக்க இயலும். போதனையில் மாறுபாடு இருந்தாலும் கேள்வி கேட்க, தடுக்க வதளம் உண்டு, 

இன்று புற்றீசல் போல் பெருகிய பல தனி நபர் சபைகள் தங்கள் வாய்க்கு வந்ததை தங்கள் மனநிலைக்கு தங்கள்  ஆற்றல் அறிவின் அளவில் உபதேசிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் உபதேசிப்பது என்றால் மக்களை வசப்படுத்துவது அடிமைப்படுத்துவது அவர்கள் கருத்தை வலுகட்டாயமாக நிறுவது என்று மாற்றி விட்டனர். இவர்களை போன்றோரை முன்நிறுத்தி கிறிஸ்தவம் என்றாலே இது தான் கிறிஸ்தவர்கள் இவர்கள் தான் என முத்திரைகுத்தி குற்றம் சாட்டுவதையும் தவிற்க வேண்டும்.



மதம் என்பது மனதை பண்படுத்த என்றில்லாமல் மற்ற மனிதர்களை குற்றம் சுமத்தை வழிப்படுத்த என்று விளைந்தால் அது ஆபத்தில் தான் முடியும். எல்லாம் மதங்களும் போதிக்க வேண்டியது மனித நேயவும் உலகின் மேலுள்ள கருதலும் தான். கடவுள் நம்பிக்கை நேசம் என்பது ஒரு வகையான கற்பனை உலகை கடந்து தங்களுடன் வாழும் மக்களை நேசிக்கும் மனநிலைக்கு எட்ட வைக்க வேண்டும்.  இன்று பல கிறிஸ்தவ குடும்பங்களில் அவர்களால் தங்கள் கணவரை அல்லது மனைவியை நேசிக்க இயலாது ஆனால் கடவுளை கடுமையாக வணங்குவார்கள். கடவுள் மேலுள்ள பிரியம் என்பது சிலருக்கு தங்களுடன் உள்ள மனிதர்களை வெறுக்க செய்கின்றது. ஒரு மனிதர் மணிக்கூர் கணக்காக தான் செய்த அற்புத கிரியையை பற்றி பேசி கொண்டிருந்தார். பேச்சின் மத்தியில் அவர் கடைசியாக சிரித்த படம் அவர் கல்யாண ஆல்பத்தில் இருப்பதாக கூறினார். கடவுளின் அரிய செயல்கள் என்று பேசுபவரால் தன்னுடன் வசிக்கும் மனைவியை பற்றி பெருமையாக எண்ண ஒன்றுமில்லை. ஆனால் இது நடிப்பு.  

இவர்களை பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தெரிந்ததால்  தான் யேசு நாதர் கூறினார் "நீ மற்றவர்களை விதிப்பது போல் நீ விதிக்கப்படுவாய்", "உன்னை போல் உன் அயலானே நேசி" , காணப்படும்  உன் சகோதரனை நேசிக்காது காணப்படாத இறைவனை எவ்வாறு நேசிக்க இயலும். மதவாதிகளால் தான் யேசு நாதர் கொல்லப்பட்டார் இப்போதும் மதவாதிகளால் தான் அவர் வார்த்தைகளும் நோக்கங்களும் மாற்றப்படுகின்றது.

27 Sept 2015

போட்டி மனோபாவம் தோல்வியே

வெற்றி என்பது மகிழ்ச்சி, தன்ன்னம்பிக்கை கொடுப்பதை விடுத்து ஒரு மனிதனை தற் பெருமை, "தான்" என்ற அகம்பாவம் கொள்ளவைப்பது  அல்லது  "தான் மட்டுமே" சிறந்தவர் என்ற மனநிலைக்கு ஆட்படுத்தினால்  அது ஒரு மாபெரும் தோல்வி நிலை ஆகும்.

ஒரு மனித பிறப்பின் அடிப்படை கொள்கை , நோக்கம் என்பது அகத்தை தேடி அறத்தை எட்டுவதாகும்., இன்றைய பல போட்டிகள் மனிதர்களை வெற்றி களிப்பில் அறத்தை மறப்பவர்களாகவும்,  வெற்றி என்பதை மற்றவர்களை கேலிக்குள்ளாக்கும் செயலுக்கு ஆக்கமாக அமைக்கின்றனர்.  ஒரு ஆசிரியர் வகுப்பில் முதல் இடத்தை பிடிக்கும் மாணவனை புகழும் போது,  அவன் சராசரி மாணவர்கள் உலகில் இருந்து தனித்து பயணித்து மற்று மாணவர்களை கீழ்த்தரமாக நோக்கும் மனநிலையை அடைகின்றான். வெற்றியை தவற விட்டவனும் தனித்துவமான தன்னை எவ்வகையிலும் தன்னுடன் ஒப்பிட்டு பார்க்க இயலாத இன்னொருவனுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்து தாழ்வு மனநிலைக்கு  எட்டுகின்றான்.


வெற்றி என்பது தோல்வியை மூடி மறைக்கும் முயற்சி என்று ஓர் அறிஞர் கூறுகின்றார். வெற்றி என்பதை சாற்றோர்களால் தன்னை தானே அழித்து கொள்ளும் ஓர் நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இன்று பல பரீட்சை, விளையாட்டு,கலை போட்டிகளில் வெற்றி களிப்பில் திளைத்தைவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் தோல்வியை தழுவியவர்களாகவும், மனநிலை பிளர்வு கொண்டவர்களாகவும் சில பொழுது தற்கொலை ஊடாக தன்னை மாய்த்து கொண்டவர்களாகவும்  இருக்கின்றார்கள். 

ஆனால் மற்று சிலரோ  இந்த வெற்றி-மாய உலகில் தன்னை விடுதல் ஆக்கி கொள்ளவே தனிமையை தேடும் மனநிலையையும் அடைகின்றனர்.  வெற்றிக்கான போட்டி பல மனிதர்களை அழிவுக்கு கொண்டு சென்றுள்ளது. பைபிள் கதை வழியாக  நாம் அறிவது  கடவுளிடம் போட்டி போட முதல் மனிதர்களாம் ஆதம் ஏவாள் துணிந்த போது பெரும் துயரை-தோல்வியை சந்தித்தனர்.  முதல் சகோதரன் காயேன் தன் சகோதரனிடம் போட்டி கொண்ட போது அவனை கொலை  செய்யவும் தயங்கவில்லை. ஜேக்கப் என்ற சகோதரன் ஏசா என்ற சகோதரனிடம் மோசமான வழியூடாக போட்டி போட்டு வெற்ற் கொள்ள முயன்ற போது பல  வருடங்கள்  அடிமையாக  தன் மாமனார் வீட்டில் அகப்படுகின்றான். 

 மகாபாரத கதையை எடுத்து கொண்டாலும் தன் சகோதர்களான பாண்டவர்களிடம் போட்டி இட்ட கவுரவர்கள் ஒரு போதும் நிம்மதியாக வாழவில்லை. போட்டி அழிவை எட்டுகின்றனர்.மற்றவர்களையும் அழிக்கின்றது.

Image result for trophy images ஒவ்வொரு ஆசிரியனும் தங்கள் மாணவர்களை போட்டியாளர்களாக உருவாக்குவதை விட வெற்றியாளர்களாக உருவாக்கவேண்டும். வெற்றி என்பது நிறைய பணம் ஈட்டுவது, அதிகாரம் பெறுவது என்ற உலக செல்வங்கள் என்பதை  விட அழியாத உள-உள்ள நலனுடன் மனத்தூய்மை கொண்டு  அமைதியுடன் வாழ்வதாகும் என்று உணர வைக்க வேண்டும். வாழ்க்கையின் க்‌ஷணத்தில் வாழாது பிற்கால- முற்காலத்தை எண்ணி எண்ணி வதைப்படாது வாழ  புதிய தலைமுறைக்கு கற்று கொடுக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் நான் கண்ட சில காட்சிகள் என்னை இந்த புதிய தலைமுறையை பற்றி எண்ணி துண்புற செய்தது. இரண்டாம் இடத்தில் வரும் குழு தன்னால் முதல் இடத்தில் வர இயலவில்லை என்ற துயரில் தன் இரண்டாம் நிலையை எண்ணி மகிழ்ச்சி அடையாது நிராசையாக திரும்பியது.  மூன்றாம் நிலையை அடைந்தவர்களோ தீர்ப்பை மாற்றி எழுது என்ற பிடிவாதத்தில் தன்னை முழுதுமாக புரக்கணித்து  வெறுப்பு, கவலை,எதிர்ப்பு மனநிலையில் பிரிந்தனர். இந்த மூன்று நிலையிலும் எட்டாதவர்கள் தான் பங்கு பெற்றோம் தன்னால் இயன்ற அளவு போராடினோம் என்ற மனநிலையில் நிம்மதியாக  மகிழ்ச்சியாக  இருந்தனர்.

இந்த வாழ்க்கையை ஆழமாக நோக்கினால் எது வெற்றி எது தோல்வி? மகிழ்ச்சியாக நாம் இருப்பதே வெற்றி. வெற்றிக்காக சரியான வழியில் பயணித்து அந்த வெற்றியை சூடிக்கொள்வது தான் மாபெரும் வெற்றி. அசோக சக்கரவர்த்தி எதை வெற்றியாக கண்டான் தான் வெற்றி என நினைத்து பல மக்களை கொன்று அழித்து கைபற்றிய நாட்டை துறந்ததையே வெற்றியாக கண்டான். 

நம் புதிய தலைமுறையின் மனோபாவத்தை கெடுப்பதில் அவர்கள் கற்கும் கல்வி சூழல், பெற்றோர் வளர்ப்பு முறை இந்த சமூக நிலைபாடுகள் பெரிதும் காரணமாகின்றது. இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக கற்று வர அனுப்பதில்லை எல்லோரையும் மிஞ்சி முதல் இடத்தில் வரவேண்டும் என்ற வெறியையே ஊட்டி வளர்க்கின்றனர். ஒரு நிலையில் இந்த தலைமுறை தான் நினைத்தை அந்த இடத்தை எட்ட இயலாது வரும் போது பெரும் கட்டிடங்களின் முகப்பில் இருந்தும், ஓடும் இரயில் முன் பாய்ந்தும் தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கின்றது. ஒரு தாய் பெருமிதத்துடன் கூறினார் "என் மக நினைத்ததை வெறியாக பின்தொடர்ந்து கண்டடைந்து விடுவாள்" என்று. ஆனால் மகள் பின் பற்றும் வழியை பற்றி தாய் பேதையாகவே இருந்தார். 

இன்றைய தலைமுறையின் சமூக வாழ்க்கை தனிநபர் வாழ்க்கை போட்டி என்ற மனநிலையின் பிடியில் சிக்குண்டு நிலைதடுமாறுகின்றது. வாழ்க்கை தன் நிலையில் தன் போக்கில் நிர்ணயிக்காது தான் வாழும் அடுத்தவர்  தரும் அளவுகோலில் அளந்து அதன் பிடியில் உழலுகின்றனர். 

தூய உள்ளத்தின் நிலையே படைப்பாற்றல்!   இன்றைய நிலையில் படைப்பாற்றல் பெரிதும் குறைந்து வருவதின் காரணமும் இது போன்ற  மனநிலை தான். 'தான் வெற்றி வாகை சூடவில்லை', என்றால் என்னை சுற்றியுள்ள மனிதர்கள் என்னை ஏமாற்றி விட்டனர், இந்த இயக்கமே சரி இல்லை என்ற மனநிலையை விடுத்து; தான் எவ்வாறு அடுத்த நிலைக்கு எட்ட இயலும் என்ற நேர்மறை எண்ணத்தை விடுத்து ;தன்னை ஒடுக்கும் தன்னை அழிக்கும் மனநிலைக்கு எட்டுகின்றனர். இவர்களது இது போன்ற மனநிலைக்கு சில மனபிளர்வு கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலம்விரும்பிகள் காரணமாகின்றனர். தன்னை அறிந்து தன்னை சுயபரிசோதனை செய்து தானாக முடிவெடுக்கும் நிலையை எட்டும் வரை இன்றைய இளம் தலைமுறை அடிமைகள் தான். 


6 Sept 2015

ஒரு கொலையும் அதன் பிண்ணனியும்

Indrani Mukherjee. (Photo: Twitter)நாட்டின் வறுமை, நலம் சார்ந்து பல செய்திகள் மக்களுக்கு கொண்டு சேர்க்க இருக்க; ஊடகம் இந்திராணி-போரா கொலை வழக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம்  பலரை  கோபம் கொள்ள வைக்கும்  வேளையில் ஒரு நாட்டின், சமூகத்தின் அடிப்படை குடும்பம் என்பதால் குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள், உறவு சில்லல்கள்  பல பொழுதும் பல குற்றங்களுக்கு காரணமாகின்றது  அரசு கொலைகளை தடுக்க பெரிய பெரிய திட்டங்கள் தீட்டும் போது  குடும்பங்களை நெறிப்படுத்த சில முயற்சிகள் எடுக்க தேவையாக உள்ளது என்றே  இச்சம்பவங்கள்  உணர்த்துகின்றன.  

கடந்த தலைமுறையின் செயல்பாடுகளை ஏதோ ஒரு வகையில் குடும்பங்கள் வழி நடத்தியிருந்தது, நெறிப்படுத்தியிருந்தது, கட்டுப்படுத்தியிருந்தது. உலகலாவியல், விவசாயம், நவீய மக்கள் வேலை, பிழைப்பு என குடும்ப உறவுகளை விட்டு தனியாக வாழும் சூழலில் குடும்பத்தின் அமைப்பு  அதன் தாக்கம் கெள்விக் குறியாக மாறுகின்றது.

சமூக வலைத்தளத்தில், ஊடகங்களில் எவ்விதமெல்லாம் இந்திரா முகர்ஜியை அவமதிக்க வேண்டுமோ; அவ்வளவு செய்திகள் வந்து விட்டது. அவருக்கு பல கணவர்கள், பண ஆசை கொண்டவர் என பல பல குற்றச்சாடுகளுக்கு மத்தியில் அவரை பற்றி கொஞ்சம் கருத்தாக ஆராயும் போது தன் குடும்பத்தில் சொந்த  தாயின் கணவராலே அல்லது தனது சித்தாப்பா மூலமே பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய பெண்களின் பிரதி நிதியாகவும் தெரிகிறார்.

Photo of Indrani's parents - Upen and Durga Rani Bora - three years before Mikhail Bora came back to live with them..  அவர் மகள் ஷீனா 87ல் பிறந்துள்ளதாக அவர் முதல்  பாட்னர் என குறிப்பிடும் தாஸ் கூறுகின்றார்.  1989 என பள்ளி சாற்றிதழில் பதியப்பட்டுள்ளது.  இவர்  இந்திராணி உடன் இந்திராணியின் பெற்றோருடனே  86 முதல் 89 ஆம் ஆண்டுவரை வசித்திருந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது அவர் கல்லூரி படிப்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.  ஆகையால் அந்த நபருக்கு 19 முதல் 21 வயது இருந்திருக்க வேண்டும்.  இந்தாராணியின் பிறப்பு 1972 என்று சொல்லப்பட்டுள்ளதால் அந்நேரம் இந்திராணிக்கு 14 முதல் 16 வயது தான் இருந்திருக்க வேண்டும். அவர் பள்ளிப் படிப்பை முடித்து உயர் பள்ளிப்ப டிப்பிற்கு அல்லது ஜூனியர் கல்லூரியை எட்டியிருக்கவே இயலும். 

indrani-family tree-update
தற்போது நவீனத்துவத்தின் அடையாளமாக லிவிங் டுகதர் வாழ்க்கையை  பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில். இந்திராணிக்கு, அவர் பெற்றோர் 1986 காலயளவிலலிது போன்ற சூழலை அமைத்து கொடுத்துள்ளனர்.  பெண் குழந்தைகளுக்கு திருமண வயது 18 என்றிருக்க ஒரு குழந்தையான இந்திராணி பெற்றோராலே மோசமான வாழ்க்கை சூழலுக்கு இட்டு செல்லப்பட்டுள்ளார்.  இந்திராணியின் அம்மா தன் கணவர் ஓடிப்போன நிலையில் தன் கணவர் தம்பியுடன் வாழ்ந்துள்ளார். அந்நிலையில் தன் மகளை சரியான முறையில் கவனிக்காத வளர்க்காத;  பாசப்பரிவுடனோ நடத்தாது தன் சுகம் மட்டுமே எதிர் நோக்கிய தாயாகத்தான் இருந்திருக்க கூடும் இந்திராணியின் கூற்றை எடுத்து கொண்டால்.


இந்திராணி வீட்டில் ஒன்றாவது கணவராக /பாட்னராக வாழ்ந்த தாஸ்;  சமூக அங்கீகாரவும் பெறாத சூழலில்  குறிப்பிட்ட வேலைவாய்ப்பு  வருமானம் கூட அற்ற நிலையில் ஒரு மாணவராக இருக்கும் பருவத்தில் இரண்டு குழந்தைகளை இந்திராணிக்கு கொடுத்துள்ளார். இவர் இந்திராணி பெற்றோருக்கு எடுபிடியாகத்தான் இருந்திருக்க வேண்டும். சட்டப்படி வயதுக்கு வராத பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்த சித்தார்த்த தாஸும் தண்டிக்கப்பட வேண்டியவரே.


இந்த  சூழலை இந்திராணியின் வளர்ப்பு தகப்பனார், தனக்கு சாதகமாகவும் பயண்படுத்தி இருக்க பெரும் வாய்ப்பு உண்டு. இந்திராணி கூற்றுப்படி கூட ஷீனா என் மகளும் என் தங்கையும் தான் என்று கூறியுள்ளார். இந்திராணி தாயார் பெரும் செல்வ செழிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவராக இருந்துள்ளார் என தகவவல்கள் தெரிவிக்கின்றன, இருந்தும் தன் பதின்ம வயது மகளுக்கு பாதுகாவலராக இருக்க தவறி உள்ளார்.  அவ்வகையில் அவரும் தண்டிக்கப்பட வேண்டியவரே. மேலும் இந்திராணிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு தகப்பன் தாய் இடத்தில் தங்கள் பெயர்களை பதிந்து அரசையும் ஏமாற்றியுள்ளனர் இந்திரா முகர்ஜியின் பெற்றோர்..


இந்நிலையில் இந்திராணி இரு பிள்ளைகளையும் தன் தாய் தந்தையிடம் விட்டு விட்டு ஊரை விட்டே ஓடி வந்தவர்    கல்வி அறிவு, பேச்சு வல்லமை, அதீத துணிவு  இருந்திருந்தால் மேலும் கல்வி கற்று . குறிப்பிட்ட நாட்களுக்குள் நல்ல வேலைக்கு வருகின்றார்.  93 ல் அப்போது 21 வயது இருந்திருக்க வேண்டும்      ஒருவரை திருமணம் செய்துள்ளார். 1997ல் மகள் பிறக்கின்றார். மகளுக்கு 5 வயது இருக்கும் நிலையில் பெரும் பணக்காரரரை;  மூன்றாவதாக  மணம் புரிகின்றார்.  ஊடகங்கள் புகழாரவம் சூடி பெரும் சமூக அந்தஸ்துடன் வலம் வந்தவர் தனது முதல் இரண்டு பிள்ளைகளை தன்னுடன் இணைத்து கொள்ளும் சூழலில், சிக்கல்கள் வர ஆரம்பிக்கின்றது. 


இந்திராணியின் இரண்டாவது கணவரால் பிறந்த மகள்; தன் தாய் பாசமுள்ளவர் என்றே கூறியுள்ளார். ஆனால் இந்திராணி தனது பதின்ம வயதில் பிறந்த குழந்தைகளை தன் பிள்ளைகளகாவே ஏற்று கொள்ள இயலாத மனநிலையில் தான் இருந்திருக்க வேண்டும்.

ஒருவரின் ஆளுமை; குழந்தைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கும் படுகின்றது என்பதிற்கு இணங்க இந்திரா தனது குழந்தைப்பருவத்தில் எதிர்கொண்ட எதிர்மறையான வாழ்க்கை பிற்காலத்தில் எந்த வழியையும் கையாண்டு தனக்கு சுற்றி ஒரு ஆளுமையை உருவாக்கி ஆட்சி செய்து தனது வீழ்ச்சியையும் அதை விட வேகமாக அமைத்து கொண்டு விட்டார். . இந்திராணிக்கு பின்பற்ற தகுந்த நல்ல ஆளுமைகள் வீட்டிலும் பெறவில்லை. ஒரு வித அச்ச உணர்வுடன் தான் குழந்தைப்பருவம் கடந்திருக்க வேண்டும்

இந்திராணி மோசமான தந்தையால் வளர்க்கப்பட்டவள் , தாஸ் என்ற பொறுப்பற்றவனுக்கு இரு பிள்ளைகளை பெற்றவர். தன் வாழ்க்கையை எல்லா நெறிகளையும் அச்சத்தையும் மீறி உருவாக்க விளைய சீட்டு கெட்டுபோல் வீழ்ந்து நொறுங்கி சின்னா பின்னமாக கிடக்கின்றது அவர் வாழ்க்கை!. 


இன்று தொழில் , வெற்றி, பதவி அதிகாரம் என்ற நிலையில் நெறிகளை மீறுவதை ஒரு பொருட்டாகவே பல பெண்கள் எடுத்து கொள்வதில்லை. அழகும்  திறமையும் இருந்தால் எந்த காரியவும் கைகூடி விடலாம் என்ற மிதப்பில் திரியும்  பல பெண்களுக்கான பாடம் தான் இந்திரா முகர்ஜி.   பீட்டர் முகர்ஜி போன்றோர். வேலைக்கு வந்த பெண்ணை மனைவியாக்கி தன் பெற்ற பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும்  நிம்மதிக்க்கும்  பங்கம் விளைவிக்கின்றனர். 

இந்திரா முகர்ஜி தன்னை யாரும் மிஞ்ச இயலாது என இருமாப்பு கொண்டிருக்க தன் மகள் தனக்கு போட்டியாக வருகின்றாள் என்றதும் கொலைக்கு  துணிந்து உள்ளார் . இந்திராணி ஒரு மோசமான சமூக அமைப்பின் இரையாகி பலரை இரையாக்கும் தருணத்தில் சட்டத்தின் பிடியில் மாட்டியுள்ளார். எவ்வளவு வேகமாக வாழ்க்கை என்ற ஏணிப்படியில் ஏறினாரோ அதை விட வேகமாக சறுக்கி அகலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றார். ஆனால் இவரை பகடையாக அல்லது இரையாக அனுபவித்த இவர் வளர்ப்பு தகப்பன், முதல் கணவன்,  இவர் தாய், போன்றோருக்கும் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்  இச் சட்டங்கள். 

இந்திரா மகனும் தனது வீட்டில் மோசமாக சில நடைவடிக்கைகளில்  ஈடுபட்டு இருப்பதாகத்தான்  அயல்வீட்டு ஜனங்கள் கூறியுள்ளனர்.  மோசமான பால்ய குழந்தைப்பருவம் இந்திராணி போன்றோரை ஜெயில் வரை எட்ட வைக்கின்றது. அவர்கள் நடைவடிக்கைகளில் மனித இயல்பு குறைந்த மிருக இயல்பே மேல் ஓங்கி வருகின்றது. தனக்கு இடைஞ்சலாக வருபவர் மகளாக இருந்தால் கூட அவர்களை இல்லாது செய்யவே துணிந்துள்ளார். ஷீனாவும்  தாறுமாறான வழியை தேர்ந்தெடுத்து பரிதாபமான முடிவை அடைந்தவர் என்றே புலன்படுகின்றது/.

தேசிய குற்றவியல் தரவுகள் கூட உணர்த்துவது இதையே ஆகும். இந்தியாவில் தினம் 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 94% பெண்களும் தங்களுக்கு மிகவும் தெரிந்து அறிமுகம் ஆனவர்களாகவே பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர்.  குழந்தைப்பருவம் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான காலமாக உள்ளது. ஆனால் அந்த காலயளவில் தான் பல குழந்தைகள் புரக்கணிக்கப்ப்டுகின்றனர் பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர். இவர்கள் கொண்டதை  திரும்பி தர ஆரம்பித்தால் சமூகம் இது போன்ற அவலங்களுக்கு தான் சாட்சியாக மாறும்..இந்திராணி கூட அவ்வித அவலத்தின் பிரதிபலிப்பு தான்.

3 Sept 2015

ஆறாத சோகங்கள் கொண்ட சில மரணங்கள்!

என் மாணவர் மனம் குமுறி அழுதது இன்று மறக்க இயலாத துக்கமாக மாறி விட்டது. அந்நேரம் அவரை ஆறுதல்ப்படுத்தி அவர் கவலையை துலைப்பதை தடுப்பதை  விட அவர்  அழுது தீர்க்கட்டும் என விட்டு விட்டேன். பார்க்க தெனாவட்டாக எதையும் சந்திக்கும் துணிவுள்ளவர்கள் போல் காட்டி கொள்ளும் இளம் குழந்தைகள் மனதில் கிடக்கும் துக்கங்கள் என்னை ஆச்சரியத்தில்,ஆழ்த்தியது, மறுபுறம் சிந்திக்க வைத்தது. .

அவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் வேளையில் ஓர் புது தோழன் கிடைத்துள்ளான். ஏதோ சில காரணங்களுக்காக அவர் நண்பரிடம் சில நாட்களாக பேசவில்லை. நண்பன் பேருந்து பயணத்தின் போது பேச முயன்றுள்ளார்.  இவரோ தவிர்த்து விட்டார்.   ஏமாற்றமடைந்த நண்பன் பேருந்து படிக்கட்டில் நின்று  பயணிக்க நினைக்க, தவறுதலாக கீழை விழுந்து இறந்து விட்டார்.  நண்பனின் தாய் அழுதது, நண்பன் இறந்து கிடந்த கோர  காட்சி மறக்க இயலாது என் மாணவனை ஆறுதல் கொள்ளாத வண்ணம் கவலையில் ஆழ்த்தி விட்டது.   ஒரு வேளை நண்பனிடம் தான் பேசியிருந்தால் நண்பன் தன் அருகில் நின்றிருப்பானோ, விபத்து நடந்திருக்காதோ என்ற சிந்தனை அவர் மனதை குத்தி நோகடிக்கின்றது. அவர் குமுறி அழுத போது வகுப்பு தோழர்கள் இனி பேச வேண்டாம் என தடுத்தும் அவர் தன் சோகத்தை கொட்டி தீர்த்து விட்டு சென்றாலும் தன் இருக்கையில் சென்றும் அழுது கொண்டிருந்தார்.

அவர் நண்பர் இறந்தது  நண்பனின் கவனக்குறைவான பயண முறையால் மட்டுமே. ஆனால் பேசக்கூடாது என்ற தன் பிடிவாதம் தன் நண்பனின் மரணத்திற்கு காரணமாகி விட்டது என்று எண்ணி இப்போதும் அழுது புலம்புவது மனதை கனக்க செய்வதாகத்தான் இருந்தது.

என் மாணவனின் நிலைவிட்ட அழுகை என் 20 வருடங்களுக்கு முன் என்னுடன் படித்த  தோழிகளை நினைவுப்படுத்தியது. ஒல்லியான அழகானவள் என் தோழி. அவள் பெயர் 'ரஞ்சனி' என்றிருந்தது . எப்போது சிரித்து கொண்டிருக்கும் போலுள்ள அவள் முகம் இன்று நினைவில் உள்ளது. அவள் சுருண்ட முடிகள் சுருளுகளாக அவள் கழுத்தை ஒட்டிய வண்ணமே இருக்கும். ஒரு நாள் வீட்டிற்கு அருகிலுள்ள சுற்று மதிலற்ற குணற்றில் கால் வழுதி இறந்து கிடந்தாள் என அறிந்தோம்.   இனி அவள் வர மாட்டாள் என்ற உண்மையை புரிந்து கொள்ள  மிகவும் கடிமனபட்டோம். 

ஜெயாவை நினைத்தால் இன்றும் ஆச்சரியம். அவள் ஆண்களை போன்று தைரியமான பெண்.  நடப்பதில், பேசுவதில், அவள் செயல்களில் ஒரு வீரம் இருக்கும். உயரம் குறைந்து இருந்தாலும் ரவுடி பசங்களை அடித்து விடுவாள். செம்பட்டை  நிறத்திலுள்ள கூந்தலை குத்தலாக கட்டியிருப்பாள். அவள் சகோதரி ஒரு சம்மனசு போல் தோற்றம் கொள்ளும் முகம். நீளமான கால் எட்டும் வரையுள்ள முடி கொண்ட பெண். அவள் என் சகோதரர் வகுப்பு தோழி என்பதால் சிரித்து கொண்டே செல்லும் முகம் நிதம் கண்டுள்ளேன்.  .அவர்கள் சகோதரர்கள் பள்ளிக்கு வருவதே ஓர் அழகு. அவளுடைய இளைய  தம்பி புத்தககட்டை இவளே சுமந்து வருவாள்.  அவர்கள் பள்ளிக்கு சேர்ந்தே வருவார்கள். தம்பியும் தங்கையும் ஆங்கில பள்ளியில் படித்தனர். இவள் அரசு பள்ளியிலும் எங்களுடன் படித்தாள். அவளும் அவள் சகோதரிகள் மூன்று பெயரும் ஒரே நாள் தற்கொலை செய்து இறந்தது  இன்றும் நடுக்கும் நினைவுகளாகவே உள்ளது.  ஒரு தாயிமன் மேலுள்ள கோபம் இந்த நிலைக்கு இவர்கள் நாலு பேரையும் எட்ட வைத்தது  மகா துயரே!

அந்த எஸ்டேற்றில் இருந்த பாசனவசதிக்கான குளத்தில் சாடும் முன் அவர்கள் உடைகள் விலகாத வண்ணம் செப்டி பின்னால்(ஊக்கால்) உடையை சரி செய்து வைத்திருந்தனர்.  இருந்தும் அவர்கள் இறந்த போது அவர்களை கரையில் கொண்டு இட்டு பரிசோதித்ததும் அவர்கள் அணிந்த உடைகள் பற்றி பின்பு சிலர் கதைத்த கேட்டு அவர்கள் மரணப்பட்டதை விட வருந்தினேன். பல காரணங்கள் கொண்ட பல மரணங்கள் நம் வாழ்க்கையில் கண்டிருந்தாலும் நம் பள்ளிப் பருவத்திலுள்ள சில மரணங்கள் அழுத்தமான சில நினைவுகளை நமக்கு தந்து தான் செல்கின்றது.  நினைவுகளுடன் சில குற்ற உணர்ச்சியும் சேர்ந்து தத்தளிக்கும் என் மாணவரை தேற்ற வழியற்று நானும் துன்புறுகின்றேன்  இன்று !

30 Aug 2015

கின்னி கோழி முட்டையும் ரத்னா பாய் பாட்டியும்



என் அப்பா வழி பாட்டிக்கு தன் 65 வயது என்பது,  தன் நினைவாற்றலை இழந்து வரும் காலமாக இருந்தது. யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்ற கொள்கை உடையவரான தாத்தா பாட்டியை தாத்தாவின் பராமரிப்பில் வைத்து தனியாகவே கவனித்து வந்த காலம் அது.  பாட்டிக்கு ஒரே  ஒரு வேலை அதுவும் பிடித்த வேலை கின்னி கோழியை வளர்ப்பதாக  தான் இருந்தது. அவரால் மண்ணெய், சமையல் எண்ணையை வேற்படுத்தி பார்க்கும் தெளிவு இல்லை. எப்போதும்  கோழிகளை விரட்டுவதற்கு என கரண்டியை கையில் வைத்திருப்பார் . பாட்டி வாய் திறந்து பேசினதே நினைவில்லை. ஆனால் கோழிகளுடன் கதைப்பதை திட்டுவதை கண்டுள்ளேன். எப்போது பார்க்க சென்றாலும் பாட்டி கோழியின் பின்னால் நடந்து கொண்டே இருபார். கின்னி கோழி தன் முட்டைகளை காட்டில் இடும் வழக்கம் உள்ளது. பாட்டி அதை தேடி சென்று எடுத்து வருவதுடன் ஒவ்வொரு முட்டையும் அழகாக ஒரு கண்ணாடி  பெட்டியில் அடுக்கி வைத்திருபார். வீட்டு வழி,  நடைபாதை,   படிகட்டுகள்  என நடக்கும் இடங்களில் எல்லாம் அதன் எச்சத்தால் நிரப்பி இருந்தது.  

அவர்கள் தங்கி இருந்த வீடு ரோட்டு ஓரத்தில் இருந்தது. முன் பக்கத்தை 4 கடைகளாக வாடகைக்கு விட்டிருந்ததால் வீட்டிற்கு செல்ல பின் வழியாக ஒரு குறுகிய பாதையில் இறக்கத்தில் நடந்து சென்று சில படிகள் இறங்கி இன்னும் 20  படிகள்  ஏறி வீட்டிற்குள் செல்ல வேண்டும்.  எங்கள் ஊரோ எப்போது மழையும் வழுக்கும் பாதைகளாக இருந்ததால் தாத்தா வீட்டிற்கு செல்வதை தடை விதைத்திருந்தார் அம்மா! அம்மாவின் தடை என்பது அது 144 தடைசட்டம் போன்றது. ஆனால் கின்னி கோழி முட்டை ஆசை என்னை விட்டு வைப்பதில்லை. சில நேரம் அம்மாவின் அனுமதி இல்லாதும், தங்கை தம்பியை அழைத்து சென்றால் காட்டி கொடுத்து அடி வாங்கி தருவார்கள்; என்பதால் தோழி ஒருவரை துணைக்கு அழைத்து சென்றுள்ளேன்.

முட்டையை கண் வைத்தே அங்கு செல்வது  பாட்டிக்கும் தெரியும். முட்டையை பார்க்க பெட்டிக்கு அருகில் சென்றதுமே "எடுத்து விடாதே தாத்தாவிற்கு" என கட்டளை பறந்து வரும்.  பாட்டி பெட்டி அருகிலே மிகவும் கவனமாக நோட்டமிட்டு கொண்டே அமர்ந்திருப்பார்.

பாட்டியின் உலகம் முழுக்க தாத்தா தான் இருந்தார். ஆனால் ஒவ்வொரு பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் நேசித்து இருக்க வேண்டும்.  பெரியப்பா காதல் மணம் முடித்தார் என  பெரியப்பா பிள்ளைகள் வீட்டிற்கு வரத் தடை இருந்தது. தாத்தா இல்லாத நேரம் நோக்கி அங்கு செல்லும் என் பெரியப்பா மகன்களுக்கு   பழம் கஞ்சி கொடுத்துள்ளார் என கூறியுள்ளனர். என் பாட்டி எப்போது ஒரு மயான அமைதியில் பைபிள் வாசிப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்தார். அவர் முகத்திலோ கண்களிலோ எந்த உணர்வையும் காட்டி கொள்வதில்லை. கண்கள் மட்டுமே சலித்து கொண்டிருக்கும்.  அவர் உணர்வுகள் என்பது, வெத்தலை இடிக்கும் கல் ஓசையுடன் முடித்து இருந்தது.


தாத்தாவிற்கு நான் மிகவும் பிடித்தமான பேத்தி. அவருடைய துணிமணிகளை அவராக தைத்து அணிவது தான் பிடிக்கும். வெள்ளை சட்டை,  அரைகை வைத்த உள் பனியன் தைத்து அணியுவார். வயதாகிய வேளையில் நூல் கொருப்பது, உண்ணிப்பாக கவனித்து தைப்பது சிரமம் என்பதால் அவர் வெட்டி வைத்திருக்கும் துணியை தாத்தாவின் கட்டளைக்கு இணங்க தைத்து கொடுப்பது என் வேலையாக இருந்தது.   


கின்னி கோழி முட்டை சாதாரண கோழி முட்டையை விட மஞ்சள் நிறத்தில் சிறிதாக இருக்கும்.  4-5 முட்டைகளை ஒரே பாத்திரத்தில் உடைத்து போட்டு தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் மிளகும் உப்பும் போட்டு  ரொட்டி போன்று சுட்டு தருவார். நான் பல போதும் முட்டை சாப்பிட்டதை வீட்டில் சொல்வது கிடையாது. ஒவ்வொரு முறை கின்னி கோழிகளை பார்க்கும் போது பாட்டி நினைவு வராது இருப்பதில்லை.



தாத்தா வேட்டைக்கு போகும் வழக்கம் இருந்ததால் காட்டு இறச்சி சமைத்து எனக்காக கொண்டு கொடுப்பார். கொல்லாண்டி சீசனில் ஒரு சின்ன பையில் எனக்கான பங்கு வந்து சேரும்.  அதை தீயில் சுட்டு எடுப்பதே தனிக்கலை. கங்கு தீயில் இட வேண்டும். அதன் பால் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... என்ற சத்ததுடன் எரிந்து போன பின்பு கொல்லம் கொட்டயை லாவகமாக குறுக்கலாக வைத்து கொண்டு உடைக்கவேண்டும்.  கொஞ்சம் அசந்தால் கையில் கருப்பு அடையாளங்களுடன்  பல போதும் சுட்டு விடும். பொதுவாக வியாபாரி வீடுகளில் நல்ல காயை விற்று விடுவதால் பொக்கு தான் வீட்டு தேவைக்கு வரும். சுடும் போது சில நேரம் பருப்பு இல்லை என்றால் அம்மா திட்டி கொண்டே எடுத்து தந்தாலும் தாத்தா கொண்டு வந்து கொடுத்த கொல்லாண்டி நினைவுகள் தான் தற்போது ஆக்கிரமித்துள்ளது.  

Image result for grandparents painting
பாட்டி இறந்து 28 வருடங்கள் ஆகி விட்டன.  தாத்தா இறந்தும் 20 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் என்னுடன் முட்டை தின்று வந்த   தோழி அம்மாவிடம் சென்று வந்த கதைகளெல்லாம் கூறி உள்ளார் என்று அறிந்த போது இனி அம்மாவிடம் அடிபடப்போவதில்லை என அறிந்தாலும் என்னை அறியாத பயம் தொற்றியது. 

தாத்தாவின் அன்பை கூறும் போது என் மகன்கள்  கேட்பார்கள் "ஜோசப் தாத்தா இப்போது எங்கு இருப்பார்"  அம்மா என்று. அப்போதெல்லாம் நான் வானத்தை காட்டி அங்க பார் ஓர் நச்சத்திரம் நம்மை பார்த்து நின்று கண் சிமிட்டுகின்றது  என காட்டி கொடுப்பேன்.சமீபத்தில் என் மகன்களின் தாத்தா இறந்தார். என் மகன்கள் அவர் எங்கு இருபார்  என கேட்டதே இல்லை. என் மகன்களுக்கு என்னுடைய தாத்தாவின் நினைவுகள் போல் ஏதோ சில நினைவுகளை இட்டு சென்றுள்ளனரா என்று எனக்கு தெரியாது.