26 Jan 2011

மலையாளத் திரைப்படம் - நீலத் தாமரை



இன்று “நீலத் தாமரை”  என்ற மலையாளப்படம் காணும் வாய்ப்பு கிட்டியது. லால் ஜோசின் இயக்கத்தில் எம்.டி வாசுதேவன் நாயர் திரைக்கதையில் 1976-80 காலகட்டத்திய தளத்தில் கதை அழகாக சென்றது. கேரளத்தவரின்  பழைமையான வீடு, அவர்கள் கோயில்(அம்பலம்), கோயில் குளம் , காயல் என பார்க்க பரவசம் ஊட்டும் இடமாக தேர்வு செய்து படம் பிடித்திருந்தனர். மைனா படம் நாயகி இரண்டு காட்சிகளில்  வந்து போனார்.
படம் தளம், கதை விருவிருப்பாக மட்டுமல்ல அமைதியாக செல்கின்றது. கதாபாத்திர தேற்வு, கதாபத்திரங்களின் உடை நடையிலுள்ள நளினம், சுத்தம் மலையாள கலாச்சாரத்தின் எடுத்துகாட்டாக உள்ளது.   சமீப காலமாக மலையாளப் படங்களும் நம் தமிழ் மற்றும் ஹிந்தி படத்தை பார்த்து அதன் தனி தன்மை இழந்து இருந்தது.  இப்படம் அதற்க்கு மாறாக 90 களில் பார்த்த மலையாளப் படத்தை நினைவு கூற செய்தது
படம் இப்படியாக தொடங்குகின்றது. அந்த வீட்டு வயோதிக தாயாரை பார்க்க அவருடைய இறந்த மகனுடைய மனைவி, அவருடைய பழைய வீட்டு பணிப்பெண்ணும் (மகனுடைய காதலி) வருகின்றனர். மகனுடைய பழைய மனைவியும் வேலைக்காரியும் ஒருவருக்கொருவர் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்கின்றனர்.  வேலைக்காரியின் பழைய நினைவுகளோடு கதை செல்ல துவங்குகின்றது.
ஒரு  பழைமை வாய்ந்த பணக்கார வீட்டிற்க்கு ஒரு வண்ணார் குலத்தை சேர்ந்த பெண் வேலைக்கு வருகின்றாள். பொறுப்பாக ஒவ்வொரு வேலையும் செய்கின்றாள். அவ்வீட்டு மகன் வக்கீல் படிப்பு முடிந்து வீட்டிற்க்கு வருகிறான்.  பெண்ணை பார்த்த உடனே அவளை ஆள் கொண்டு விட  வேண்டும் என துடிக்கின்றான். அவளுக்கும் அவன் மேல் ஒரு அதீத காதல் தான். அவளுக்கு அவனிடம் சரணகதி ஆகி விடுவதா வேண்டாமா என இரு மனத்தில் உள்ளார். கோயில் குளத்தில் அதிசயமான ஒரு நீலக்கலர் தாமரை உள்ளது .அது  உண்மையான பக்தியுடன் பக்தர்கள்  பிரார்த்தனை பண்ணினால் பூக்கின்றது.  அவளை தினம் அழைக்கும் வீட்டு யஜமானியின் மகனின் ஆசைக்கு போகவா வேண்டாமா என அறிய பிரார்த்தனை செய்கின்றாள். நீலத் தாமரையும் பூக்கின்றது.(?) அவனுடம் போய் உறவு வைத்து கொள்கின்றாள் பணிபெண்ணும்!. கதாநாயகனோ பெண்ணை வெறும் மாம்ச-பிண்டமாக பார்ப்பவனாக இருக்கின்றான். அவன் படிக்கும் பொழுதே பழகிய பணக்கார மற்றும் அவன் சமுதாய பெண்ணை மணந்த பிறகும் வேலைகாரியிடம்  வலுகட்டாயமாக உறவை பேணுகின்றான். அவன் மனைவி இவர்கள் உறவை கண்டு பிடித்து விடுகின்றாள்.  அம்மா தான் வெறும் டம்மி அம்மாவாக உள்ளார்! மகன், துணி துவைப்பது, காலில் அடிபட்டவுடன் எண்ணை தேய்த்து விடுவது, மகனுக்கு விருப்பமான உணவு பரிமாறுவது என சிறு வயது பணியாள் பெண்ணை எல்லை இல்லாது அனுமதிக்கின்றார். எல்லாம் சோம்பல் செய்யும் வேலைதானோ!
பின்பு வேலைக்காரி அவள் முறை மாப்பிளையை மணந்து, தன்  பெண்ணையும் டாக்டருக்கு படிப்பித்து வாழ்க்கையில் ஒரு நல் நிலையில் வந்து விடுகிறார். இங்கோ கதாநாயகன்  சிறுவயதிலே இறந்து போய் விடுகின்றான் அவன் மனைவி அவனுடைய மகளை தன் மாமியாரிடம் கொடுத்து விட்டு வேறு ஒருவரை மணம் முடித்து இரு குழந்தைகளுடன் வாழ்கின்றார்.

பல இடங்களில் படத்தின் கதையில் ஓட்டையுள்ளதை காணமுடிந்தது. காமிரா கையாளுபவர் எவ்வளவு தான் தன் ஒளிப்பதிப்பால் கதையிலுள்ள குறையை  களைய நினைத்தாலும் அங்கங்கு கதையிலுள்ள பொய் முடிச்சு தெரியத்தான் செய்கின்றது. வேலைக்காரிகள் ஏமாறுவதும் யஜமானர்களின் பணக்காரத்தனம் எல்லாம் அதே போல் காட்டியிருந்தாலும் கடைசி காட்சியில் அநியாயத்திற்க்கு வீட்டு யஜமான பாட்டியை நல்லவராக காட்டுவதும் வேலைக்காரி இன்று டாக்டர் மற்றும் ஆசிரியர்  ஆகிய குழந்தைகளின் அம்மாவாக இருப்பினும் தன்னை ஏமாற்றிய கதாநாயகனிடம் கோபம் கொள்ளாதிருப்பதும் யஜமான அம்மாவிடம் கொள்ளும் பக்தியும் கொஞ்சம் ஓவராகவே தெரிகின்றது. மேலும்  கோயில் குளத்தில் பூக்கும் பூ காண்பவர்களின் காதில் பக்தி என்ற பெயரில் நல்ல பூ சுற்றவே பயன்படுகின்றது அதையே படத்தின் தலைப்பாகவும் தேர்ந்துள்ளனர்!!!. சாதி பேய் மலையாளிகளிடமும் இருப்பது ஓர் சில காட்சியில் காணலாம். வண்ணார்களை பயணம் செல்லும் போது விழிக்கல் ஆகாது மேலும் ஏழைகளை எப்படியும் கையாளலாம் என்ற மிதப்பும் நல்கின்றது இப்படம் வழியாக. அதே போல் தன் அம்மா இரண்டாம் திருமணம் முடித்தார் என்ற காரணத்தால் அம்மாவை மகள் வெறுப்பதும்  சகிக்க முடியாது தான் உள்ளது. மலையாள கலாச்சாரம் நம்மைவிட 20 வருடமாவது முந்தியுள்ளது என எண்ணம் கொள்ளும் போது இவ்வகையான படங்கள்  அப்படியல்ல என்று சொல்ல வருகின்றதோ? எப்படியோ படம் நம்மை இருக்கையை விட்டு எழாது பார்க்க தூண்டுகின்றது என்பதில் ஐயமில்லை.
  

20 Jan 2011

மரணம் கொண்டு வந்த சில சிந்தனைகள்!!!


  பிறப்பது எங்கு, எப்போது, யாருக்கு, என்று அறியாதிருப்பது போல் மரணவும் புதிராகவே உள்ளது.

உயிர் இருக்கும் வரை பைபிளும் வெத்தலை பெட்டியுமாக இருந்த பாட்டி இறக்கும் தருவாயில் உயிர் ஊடலாடிய வாயில் பாலை ஊற்றி கொண்டே "அம்மா, உங்களை எங்கு அடக்கம் செய்ய வேண்டும்" என கேட்ட போது அய்யாவிடம் கேட்டு கொள்ளுங்கள் என கூறி உயிரை விட்டார். அவர் பெற்றோர், சகோதரர்களுக்கு 385 மைலுக்கு அப்பால் ஆனால் பாட்டியோ கேரளாவில் தாத்தாவின் தோட்டத்தின் ஒரு கரையில் அடக்கம் செய்யபட்டார். 

தாத்தா 50 வருடங்களாக கேரளாவில் வாழ்க்கையை திருவிழா போன்று கொண்டாடி வாழ்ந்தவர். நிழலுக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்காதவர். சொந்த ஊரில் துயில் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அவர் பிறந்த ஊர் அழகம்பாறையருகில்  தான் உயிரோடு இருக்கும் போதே ஒரு வீடு கட்டி அதன் அருகில் கல்லறையும் கட்டி வைத்திருதார். 50 வருடம் முன்பு கண்ட உறவுகள் அல்ல தற்போது என கண்ட போது மறுபடியும் கேரளா நோக்கியே வந்து விட்டார். தாத்தா யாருக்கும் அன்பால் கூட கட்டுபடாது நானே ராஜா நானே மந்திரி என குடி, கூத்தோடு அவர் 95 வயதிலும் இன்பமாக வாழ்ந்தவர். திடீர் என ஒரு நாள் பக்க வாதத்தால் பாதிக்கபட்டு சரிந்து; அவர் ஆசையாய் நம்பிய மகனும் அவரை பாசமுடன் நோக்கவில்லை, அவர் கேலி பேசி விரட்டிய மகன்களும் கைவெடிந்த நிலையில் ஒரு நாள் இறந்தார். சகல கிருஸ்தவ மரியாதையுடன், பாதிரியாரின் ஜெபத்துடன் அவரை பாட்டியின் பக்கமே அடக்கம் செய்தனர். 

மரணத்தை பற்றி ஒரு போதும் நினையாத, தாத்தாவின் மரணத்தை கேலி பேசிய பெரியப்பாவும் இடி விழுந்து அடுத்த வருடமே கல்லறை சென்றார். பெரியப்பாவுக்கு 5 ஏக்கர் மேல் இடம் இருந்தும் அவர் மகன்கள் தாத்தா, பாட்டி பக்கம் இடம் தர கேட்டனர். அது அவர்களுக்கு ஒரு மான பிரச்சனையாகவும் இருந்தது.  காதல் திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்க்காக 40 வருடங்களுக்கு மேல் பெரியப்பா கால் படாது தடுத்திருந்த குடும்ப தோட்டத்தில் பெரியப்பாவில் உயிர் இல்லாத உடலையாவது அடக்கம் செய்து விட வேண்டுமென துடித்தனர் மகன்கள். சித்தப்பவோ, இதை சாக்காக வைத்து சொத்து கேட்டு வந்து விடுவார்கள் என கருதி இடம் தர மறுத்து விட்டார்! 

அடுத்த வருடம் மே மாதம் இளைய சித்தப்பா அவர் மகள் திருமணம் முடிந்து 5 வது நாள் தனது 44 வது வயதில் கல்லறையை தேடி போய் விட்டார்.  பணம் சேர்க்க கருத்தாக இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவருக்கு நல்ல நாளாகவே இருந்தது சித்தப்பாவுக்கு.  அன்று மாலை சித்தப்பாவை ஒரு பாயில் கட்டி கொண்டு வந்தார்கள் மருத்துவமனையில் இருந்து. நாங்கள் உறவினர்கள் அழ தெரியாது  நின்ற போது ஊர்காரர்கள் ஒப்பாரியிட்டு அழுது உருண்டனர். சித்தப்பா இறந்த போது அழுது காணப்படாத அப்பாவும், அழுததை அன்று கண்டேன். அத்தைமார்கள் எறிகின்றவன் கையில் ஆண்வர் கல்லை கொடுக்கவில்லையே என ஏங்கி ஏங்கி அழுதனர். இறந்த பின்பு பல நாட்கள் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு வந்துகொண்டே இருந்தார் என் கனவில்! 

ரஞ்சனி என்ற ஒரு தோழி எங்களுடன் 8 ம் வகுப்பில் படித்தாள். அவள் வெகுதூரமுள்ள காட்டு பகுதியில் இருந்து பள்ளிக்கு வருகின்றாள் என்று மட்டும் தெரியும். எப்போதும் சிரித்த வெளிறிய முகத்துடன் காணப்படும் அவள் முடி நூடில்ஸ் போன்று சுருண்டு இருந்தது. அவளுடைய உடை கூட அவளுடைய மெலிந்த தேகத்தை ஒட்டியே இருந்தது. ஒரு நாள் செய்தி வந்தது கரையில்லாத கிணற்றில் தண்ணீர் எடுக்க போன போது கால் வழுதி விழுந்து செத்து விட்டாள் என்று. 
ஜெயா என்ற தோழி எங்களுடன் படித்தாள். அவள்  சுழன்று வரும் ஒரு பெண் ஜாக்கி ஜான் போல் இருந்தாள். அவளை கண்டால் எங்கள் வகுப்பு மாணவர்கள் கூட பயந்து நடுங்கி ஓடுவார்கள். அவளுக்கு 18 வயதுள்ள போது  அவளுடைய இரு அக்காகள் , 10வது வகுப்பில் படிக்கும் ஒரு தங்கை என 4 பேரும் தங்கள் இடுப்பில் கல்லை கட்டி குளத்தில் தாவி தற்கொலை செய்துகொண்டனர்.

ஹரிகரன் சார் எங்களுக்கு 7 வது வகுப்பு கணித ஆசிரியராக இருந்தார். அவருக்கு இரு மகன்கள் இருந்தனர். என்னை அவருடைய மகளை போன்றே நேசித்தார். எங்கள் பகுதி குளிர் பிரதேசமாக இருந்ததால் எப்போதும் மழை அல்லது குளிர் இருந்து கொண்டே இருக்கும். நான் குளிருக்கு அணியும் ஸ்வறருடைனே பள்ளிக்கு தினம் செல்வேன். வெயில் அடித்தால் கூட எனக்கு குளிராகவே தெரியும். இப்படி சுகம் கேட்டால் வாழ்கையில் முன்னேற முடியாது என கூறி  பிரம்பால் எனக்கு அடிவிழும். ஒரு முறை என் அம்மாவிடம் உங்கள் மகளை மலையாளிக்கு தான் மணம் முடித்து கொடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார். அந்த வருடம் எங்கள் பள்ளியின் நடந்த மாவட்ட அளவு போட்டியில் மோகினியாட்டம் என்ற நடனத்தில் பங்கு பெற்றிருந்தேன். என் நடன நிகழ்ச்சியை ரசித்து கைதட்டி உற்சாகபடுத்தினார். அடுத்த வருடம் 8 வகுப்புக்கு என நாங்கள் உயர்நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்த போது ஹரிகரன் சார் மஞ்சகாமாலை நோயால் இறந்து விட்டார் அதுவும் என்னுடைய பிறந்த நாளாக இருந்தது. என்னை ஒரு ஆசிரியர் என்பதையும் கடந்து பெற்றோரை விட நேசித்த என் ஆசிரியரின் நினைவு ஒவ்வொரு பிறந்த நாளும் என்னை தேடி வரும். 

இப்படியாக ஒவ்வொரு மரணமும் வேதனை மட்டுமல்ல வாழ்க்கையை பற்றி வேறு சில சிந்தனைகளையும் தந்தது.

 

 

 

18 Jan 2011

கல்லறைகளும் கதைக்கின்றது…………….



 
மரணம் என்பது பிறந்தால் வரும் என்பதால் அதை பற்றி ஒரு போதும் பயம் தோன்றியது கிடையாது. ஆனால் மனிதன் அழுகி புழுவாக மாறி கடைசியில் எலும்பு கூடு ஆவதை நினைத்தே பயம் வருகின்றது. இப்போது கூட அந்த பயம் இல்லாதில்லை. எலும்பு கூடுகளை பல ஆராய்ச்சி கூடங்களில் அந்தரங்கத்தில் தொங்கவிட்டிருப்பார்கள். கண்ணாடியில் ஒவ்வொரு முறை முகத்தை காணும் போது எலும்புகூடு முகம் பயம் முறுத்துகின்றது! வாழ்க்கைக்கு பல அர்த்தங்களை தருகின்றது! 

என்னவரிடம் ஒரு முறை விளையாட்டாக என்பது போல் உண்மையாகவே சொன்னேன் "ஹிந்து சகோதரர்கள் இறந்தால் எரித்து சாம்பலாக்கி கடலில் நதியில் கரைக்கும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என. அவருக்கு கோபமே வந்து விட்டது. ஏன் சாவை பற்றி பேசி கொண்டிருக்கின்றாய் என அடிக்கவே வந்துவிட்டார். ஆனால் ஒரு முறை இறந்த மனிதனை எரிக்கும் போது அவ்வழி கடக்க நேரிட்டபோது அதன் புகை நெடி கொடியதாக தான் இருந்தது , மேலும் ஒரு வித பயத்தை கொடுத்தது. நதிக்கரைகள் மாசுபடவும் காரணமாகின்றதே என்ற கவலையும் இல்லாதில்லை. மயானங்களில் எரிக்கும் பிணங்கள் எழாதிருக்க கம்பு வைத்து அடிப்பதாக கேள்வி பட்டுள்ளேன். பிரதமர் நேருவை எரித்த போது கூட அவருடைய எலும்பு எழுந்ததாக கதைகள் உண்டு. மின் மயானங்கள் உள்ளதால் நகர்புறங்களிள் வசிக்கும் நபர்களுக்கு இறந்த பின்பும் அடி வாங்கும் கவலை இல்லை! (நொடியில் பொடியாக வந்து விடுவார்களாம்)

நாங்கள் முதல் நிலை பள்ளியில் படிக்கும் போது இஸ்லாமியர்கள் இறந்தவர்களை புதைக்க எங்கள் பள்ளி அருகிலுள்ள வழியில் கொண்டு செல்லும் காட்சியை கண்டுள்ளோம். ஒரு பெரிய பெட்டியில் பச்சை துணியை கொண்டு மூடி " இலாஹிலாஹா இல் அல்லா" என்று பாடிகொண்டே செல்வது மரணத்துக்கு ரொம்ப கனம் உள்ளதாக தோன்றியுள்ளது. 

ஹிந்துக்கள் மரண வீடு தான் பயங்கரமாக இருக்கும். அழாவிட்டால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தியாகாது என்பதால் அழுவதை ஒரு சடங்காக வைத்து நடத்துவார்கள். பெரியகுளம் கல்லூரியில் படிக்கும் போது ஒலிபெருக்கி வழியே அழும் ஒப்பாரி பாடல்களில் அர்த்தமுள்ள ரசனையான வரிகள் மற்றும் நல்ல ராகம் உள்ளதையும் காணலாம். 

நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்த போது மரணத்தை கொண்டாடும் ஒரு பொடியன் இருந்தான். அவனை, அவனுடைய பெற்றோர் சிறு வயதில் கேரளாவில் வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளார்கள். சில மோசமான நபர்களால் பாதிப்படைந்ததால் சிந்தனை செயல் ஒத்துபோகல் குறைவுள்ளவனாக இருந்தான். அவன் முகம் குழந்தை போல் இருந்தாலும் மயக்கு மருந்து போன்றவற்றின் பயன்பாட்டால் களையற்றே காணப்பட்டான். ஆனால் யாராவது இறந்து விட்டால் அடுத்த சில நாட்கள் மிகவும் உற்சாகமாக சிரித்தமுகத்துடன் காணப்படுவான். ஆடி பாடி இடுகாட்டுக்கு கொண்டு செல்வதை ரொம்ப அழகாக கதைப்பான். மரணத்தை பற்றி நினையும் போது அவன் நினைவுகளும் வந்து செல்வதுண்டு. 

நம்பிக்கை "கடவுள் தந்தார் கடவுள் எடுத்து கொண்டார்" என்ற கிறிஸ்தவ கோட்பாடு உள்ளதால் மரண வீட்டில் அழுகையை யாரும் வரவேற்பதில்லை, இருப்பினும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இறந்த வீட்டில் சட்டத்தையும் மீறி அழுவதை காணலாம். பொதுவாக கிருஸ்தவ மரண வீடுகள், பிரத்தியேக மரண பக்தி பாடல்கள், ஜெபம் பின்புலனில் அன்று பயணிக்கும். வசதி வாய்ப்புள்ளவர்கள், படித்தவர்கள் வீட்டில் சிறிய சத்ததில் ஒலி நாடாவால் பாடலை ஒலிக்க விட்டிருப்பார்கள். ஆலய பாடல் குழுகூட அங்கு குழுமியிருந்து சோக பாடல்கள் பாடி கொண்டிருப்பார்கள்..
கன்னியாஸ்திரிகள் இறந்தால் அடக்கம் செய்யும் வரை பக்கத்தில் எரியும் மொழுகுவத்தி, கமகம எரியும் பத்தியுடன் பிரார்த்தனைகள் தச்சுக்கு என்பது ஒலித்து கொண்டே இருக்கும். இறந்த பின்பு ஆத்துமா 8 மணி நேரம் உணர்வுடன் இருக்கும் என்ற எண்ணம் இருப்பதால் இறந்தவர்களை மகிழ்வுடன் வழியனுப்பும் வழிதான்!
கேரளாவில் மரண வீட்டையும் விசேஷ வீடு போன்று வீடியோவில் பதிவு செய்வார்கள். பின்பு அதை எந்த மன நிலையில் பார்பார்கள் என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை பல குடும்பங்களில் வெளி நாடுகளில் உறவினர்கள் உள்ளதால் அனுப்பி கொடுக்க எடுக்கபடலாம்!
கேரளா ஹிந்து மக்கள் அவர்கள் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்தில் புதைக்கபடுவதையே பெருமையாக கருதுகின்றனர். மலையாளம்
நடிகர் முரளி
தன் கடைசி துகில் கொள்ள என அழகான அமைதியான இடம் தேர்வு செய்து வாங்கி வாழை, தென்னை நட்டு பராமரித்ததாகவும் அங்கே அவரை தகனம் செய்ததாகவும் ஊடகம் வழி நேரடி ஒளிபரப்பு செய்திருந்தனர். ஆனால் தமிழர்கள் புதைப்பதற்கென மரண பயம் பற்றி கொள்ளும் இடு காடுகள் தான் தேடுகின்றனர்.
பொதுவாக கிறிஸ்தவர்கள் இறந்தால் அடக்கம் பண்ண படுவது ஆலய வளாகத்திலுள்ள கல்லறை தோட்டத்தில் தான். கோவாவிலுள்ள கல்லறை தோட்டத்தின் அழகை கண்ட போது ஒருவருக்கு சாகுவதற்க்கு ஆசையாக இருந்ததாம். ஆனால் திருநெல்வேலி கல்லறை தோட்டத்தை காணும் போது சாகவே பயமாக உள்ளது! ஆலயவளாகத்தில் அல்லாது ஒதுக்குப்புறமாக களையற்று காணப்படுகின்றது.கிறிஸ்தவர்களுக்கு கல்லறை திருநாள் என்ற ஒரு நாள் உண்டு. கத்தோலிக்க சபையாருக்கு ஒரு சில மனிதர்கள், மரித்தவுடன் நேராக சொர்கமோ நரகமோ செல்வதில்லை என்றும் இடைபட்ட உத்திரிகிறிஸ்துஸ்தலம் என்ற இடத்தில் சென்றடையுவதாகவும் இவர்கள் சுத்திகரிக்கபட்ட (ஜெபத்தால்) பின்பே சொர்கம் சேருவதாகவும் ஒரு நம்பிக்கை இருப்பதால் வருடத்திற்க்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மரித்தவர்களை நினைத்து பிரார்த்தனை செலுத்துவது உண்டு. மேலும் உறவுகளுடன் உள்ள அன்பை வெளிப்படுத்தவும் இந்நாளை பயன்படுத்துவர். காடு பிடித்து கிடக்கும் கல்லறை மாடங்களில் செடி கொடிகளை வெட்டி வெள்ளையடித்து மெழுகு வத்தி பத்தவைத்து அழுத கண்களுடன் உருகி பிரார்த்தனை செய்வதை கண்டுள்ளேன்.
எனது அம்மாவின் தகப்பனார் மரிய செபாஸ்டியன் அவருடைய 31 வது வயதில் இருதய கோளாரால் திடிர் என இறந்து விட்டார். மயானத்திற்க்கு பெண்கள் செல்லாதிருப்பதால் பாட்டிக்கு எங்கு அடக்கம் செய்தனர் என தெரிந்திருக்க வில்லை. மேலும் பாட்டியின் திருமணம் காதல் திருமணம் என்பதால் தாத்தாவின் மரணம் அவருடைய குடும்பத்தாருக்கு பெரிய சம்பவமாக இருக்க வில்லை போலும். பாட்டி 16 வது நாளில் சென்ற போது பக்கத்தில் இன்னொரு கல்லைறையும் இருந்துள்ளது. பின்பு தாத்தாவின் உண்மையான குழி மாடம் ஏது என்பது பாட்டிக்கு தெரியாதே போய் விட்டது. அப்படி தாத்தாவுக்கு சொத்தில் மட்டுமல்ல கடைசியில் துகில் கொள்ளும் கல்லறை கூட சொந்தம் இல்லாதாகி விட்டது!
மலையாளத்து சகோதரர்கள் அவர்கள் முன்னோரை நினைத்து, அவர்கள் உயிரோடு இருக்கும் போது விரும்பி உண்ணும் உணவே நண்பர்களுக்கும் உறவுகாரர்களுக்கும் விருந்தாக தருவார்கள். ஆப்பம்- தாறா(வாத்து)கறி, பொரோட்டா- மாட்டு கறி குழம்பு ருசியாக சாப்பிட்டுள்ளோம். எனது அம்மா அவர்கள் பெரியப்பாவை எண்ணி ஒரு கைலி(லுங்கி), சட்டை, துண்டு, ஆட்டு கொழம்புடன் ஒருவருக்கு ஒரு நேர சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்..

 
1000 திற்க்கு மேற்பட்ட ஜனங்கள் உள்ள ஆலயமாக இருந்தும் எங்களுடைய வண்டிபெரியார் ஆலயத்தில் ஒரு அழகான ஆனால் மிக சிறிய கல்லறை தோட்டமே உள்ளது. கோயிலோடு சேர்ந்த காப்பி தோட்டத்தை பயன் படுத்த கூறியும் பாதிரியார்கள் செவி கொள்ளாது, மழை நேரம் அடித்தோடும் தண்ணிரில் எலும்புகளை குப்பை போன்று தள்ளி விட்டனர் என கூறி கொஞ்சம் மக்கள் வேறு சபை ஆலயம் தேடி சென்று விட்டனர். அதே போல் குழியில் இடம் இல்லாத போது மக்காத உடல்களை கல்லறை பக்கத்திலுள்ள ஒரு பெட்டி போன்ற சிமன்று தொட்டியில் இடுவதாகவும் சொல்லப்படுவது உண்டு. இதை துப்பு எடுக்க 'ஜெயிம்ஸ் பாண்டு 007' எங்கள் ஊரில் இன்னும் பிறக்காததால் தப்பி பிழைத்து போகின்றனர் எங்கள் ஆலய அதிகாரிகள்! கிறிஸ்தவர்கள் தாங்கள் கடைசி துயில் கொள்ளும் அவர்களுக்கு என 6 அடி சொந்த மண்ணுக்கு ஆயுசுக்கு பணம் செலுத்த வேண்டும் அல்லது செத்த பிறகும் உறவினர்கள் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்த இயலாத மக்கள் பாடு தான் அடித்து செல்லும் தண்ணீரும் சிமன்று பெட்டியுமாக இருக்கலாம்!
குதிரைக்கு கடிவான் என்பது போல் சபையின் மக்கள் மேலுள்ள ஒரு கடிவானமும் கல்லறை தோட்டம் தான். சில கிறுஸ்தவர்கள் கல்லறைக்காகவே கோயிலுக்கு வருடத்திற்க்கு ஒரு முறையாவது சென்று காணிக்கை கொடுத்து வருவார்கள். ரொம்ப கேள்வி கேட்கும், மாற்று கருத்துள்ள, தற்கொலை செய்து கொள்ளும் கிருஸ்தவர்களுக்கு என தெம்மாடி குழியும் (கெட்டவர்கள் குழிமாடம்) உண்டு. கம்னிஸ்டுகள் மற்றும் சில முற்போக்கு கிருஸ்தவர்களின் எதிர்ப்பால் தெம்மாடி குழி என ஒன்று கடைபிடிக்கா விட்டாலும் தற்கொலை செய்தவர்களின் அடக்கம் பாதிரியாரின் தலைமையில் பிரார்த்தனையுடன் நடை பெற சட்டம் அனுமதிப்பது இல்லை.
கல்லறை என்ற பெயரில் வெறும் காங்கிரீட் மேடையுடன் காணப்படுவதை விட ஒரு குழிக்கும் ஒரு மரத்தை வைத்து தோப்பாக மாற்றினால் சுற்றுப் புறம் மட்டுமல்ல காணும் மனங்களுக்கும் ஆறுதலாக இருக்கும். வாழ்வே இடம் இல்லாத சூழலில் மரித்தவர்களுக்கு என இடத்தை பராமரிக்கும் போது சில பொது நன்மைகளையும் மனதில் கொண்டு கல்லறைகளை அழகாக
பேண முன் வர வேண்டும். தற்போது 18, 19. நூற்றாண்டு கல்லைரை போல் அழகுணர்வுடன் கல்லறைகள் கட்டபடுவதும் கிடையாது.
சமீபத்தில், சீர் திருத்த கிருஸ்தவர்கள் குடியயேறிய முதல் ஊரான "முதலூருக்கு" சென்றிருந்தோம். 18 நூற்றாண்டிலுள்ள கல்லறைகள் கலை நயத்துடன் கட்டிபட்டிருந்தது, அவர்களை பற்றிய கதைகள் கல்லறைகள் சொல்லியது. மரிப்பவர் ஒரு பாடகராக இருந்தால் அவர் கல்லறை மேல் பாட்டு உபகரணங்கள் போன்ற சிற்பங்கள் வைக்க பட்டிருக்கும். அவர்கள் காலத்திலுள்ள தமிழ் எழுத்துக்களில் அவர்கள் பிறப்பு இறப்பு அவர்களை பற்றி எழுதியவை எல்லாம் இன்று பராமரிபற்று அழிந்துகொண்டிருக்கின்றது. பல மிஷனரிகளின் குழந்தைகள் கல்லறை (இங்குள்ள இயற்கை சீற்றத்தாலும் மற்றும் தொற்று நோயால் இறந்த போது) சிறிய தேவதைகளின் சிற்பங்களுடன் அழகாக வடிவமைத்திருந்தனர். மேலும் கிருஸ்தவ சபையில் பதவியில் இருந்த நபர்களின் கல்லறைகள் அழகாக பராமரிக்கபடுகின்றது மட்டுமல்ல ஆலயத்திற்க்குள் கூட குடி கொள்கின்றது.
சிலருடைய கல்லைறைகள் அவர்கள் உயிரோடு பெறபட்டதை விட அதிகம் மதிப்பு பெறுவதாகவும் நாம் கண்டுள்ளோம். பல ஆயிரம் மக்கள் 50 சென்றுக்குள் ஒரே அடுக்குமாடியில் குடியிருக்க வேண்டிவரும்போது ஒரு மனிதனின் கல்லறைக்கு என ஏக்கர் கணக்கு இடம் இருப்பதும் சிந்திக்க தான் வைக்கின்றது. கல்லறையிலும் பதவிக்கும் பணத்திற்க்கும் மதிப்பு கொஞ்சம் அதிகம் தான் போல!!!!
(புகைப்படங்களாக பதிவு செய்தாலும் எனது துறையிலுள்ள கல்லறையின் மேல் கோபமுள்ள ஒருவரால்அழிக்க பட்டதால் மேலும் அவ்விடத்திற்க்கு செல்லும் சூழல் அமையாததாலும் புகைப்படங்களை பகிரை இயலாததில் கவலையாகவே உள்ளேன். கூடி விரைவில் படங்களுடன் வருகின்றேன்.)

15 Jan 2011

விபத்து யாரால்? சவாலான சபரிமலை பயணம்!


துயரான நாளாகி விட்டது !   எனது பிறந்த ஊர் வண்டிபெரியார் அருகில் நடந்த மிக கொடுமையான விபத்து செய்தியே அது.  இன்று இரவு 8.30 மணிக்கு நடந்துள்ளது,100 பேருக்கு மேல் இறந்ததாகவும் அறிவித்துள்ளனர்.   ஒரு ஜீப் ஆட்கள் கூட்டத்தில் புகுந்ததால் மக்கள் நெரிசலில் சிக்கி இறந்ததாகவும் கூறியுள்ளனர்.

ஐயப்பா சாமிமார்  சீசன் மிகவும் மகிழ்ச்சியளிக்கும்  எங்கள் பகுதி மக்களுக்கு. அங்கு வசிக்கும் மக்கள் ஒரு எதிர் பார்ப்புடனே ஒவ்வொரு வருடவும் எதிர்நோக்கி காத்திருப்போம் இச்சீஸனை. ஏன் என்றால்   எங்கள் பகுதி மக்கள் பல விதத்தில் வருமானம் தருவது தான்!  எங்கள் பகுதி மலை பிரதேசம் என்பதால் எப்போதும் ஆள் அரவம் அற்றே இருக்கும். மூணார் போன்று உல்லாச பயணிகளின் சொர்கபுரியாகவும் விளம்பரம் பெற்று  இருந்ததில்லை.   சில வெள்ளகாரர்கள் மட்டுமே எங்கள் பிரதேசத்திற்க்கு வருவர்.  அருகில் இருக்கும் தமிழகம் சேர்ந்த பயணிகள் கூட தேக்கடி வரை வந்து விட்டு திரும்பி விடுவர். 

சபரிமலை பயனம் மேற்கொள்ளும் போது எருமேலி வழியை தேர்வு செய்யாத சாமியார்கள் தான் எங்கள் பகுதியே தேர்வு செய்வர் தங்கள் பயணத்திற்கு என . உணவில் இருந்து தலைக்கு தேய்க்கும் எண்ணை, சோப்பு அவர்கள் விரும்பும் குருமிளகு, தேயிலை, ஏலகாய்  விற்கும் கடைகள் இந்த சீசனில் காளான் செடிபோல் முளைத்து வரும்.  இதிலும் 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் ஜீப் ஜீப் என கூவி அழைத்து பயணிகளை ஏற்றி செல்லும் சாரதிகள் சாமிமார் சீஸனில் கொண்டாட்டம் தான். ஒரு ஜீப்புள்ளவன் 2 ஜீப் வாங்கும் அளவுக்கு சம்பாதித்து விடுவார்கள். அதுவரை விற்ற பொருட்கள் எல்லாம் பதின் மடங்கு லாபத்தில் விற்பனை நடத்து கொண்டு இருக்கும். , பக்தி என குமியும் தமிழகம், ஆந்திரா, கர்னாடகா சாமிகள் எங்கள் பொருள் வாங்க வந்த வாடிக்கையாளர்களாகவே தெரிவார்கள் எங்கள் பகுதி மக்களுக்கு!

எல்லா வருடமும் ஒரு சாமியாராவது எங்கள் பெரியார் நதியால் காவு வாங்கபடுவார். அழகான நதியில் குளிக்க இறங்கும் சாமிகள் வெளியூர் என்பதால் தண்ணீரிலுள்ள சுழியை தெரிந்து கொள்ள தவறி விடுவர்.  உள்ளூர் மக்கள் நதியில் முனி இருப்பதாகவும் காலைபிடித்து இழுத்து ஆழத்திற்கு இழுத்து விடுவதாகவும் கதைப்பதை கேட்டுள்ளோம். 

இருப்பினும் இன்று வரை இது போல் கொடூரமான விபத்து நிகழ்ந்ததாக கேள்வி பட்டதில்லை . ஒரு முறை தமிழக சாமிமார் வந்து திரும்பிய பேருந்து குமளிக்கும் லோயர்கேம்புக்கும் இடையிலுள்ள பாதாளத்தில் விழுந்து பேருந்தில் இருந்த பெரும் பகுதி சாமியார்கள் இறந்துள்ளனர். அதே போல் ஒரு முறை பக்தர்களின் காணிக்கையான தேங்காய்-நெய் கொண்டு எரியும் தீயில் விழுந்து சில பக்தர்கள் மரணத்தை சென்றடைந்துள்ளனர்.

இன்று விபத்து நடந்த பகுதி மின் விளக்குகள் இல்லாததும், தற்காப்பு வசதியற்ற, சிறப்பாக காவல்துறை உதவி அற்ற பகுதியாகவே இருந்துள்ளது. இதிலும் எடுத்துகொள்ள படவேண்டியது மகர ஜோதிக்கென 2 லட்சம் சாமியார்கள் சங்கமித்திருக்கும் இடத்தில் ஒரு ஆம்புலன்ஸ் தான் இருந்துள்ள தாம்? பொதுவாக எங்கள் பகுதியின் தரமான மருத்துவ வசதி கூட இல்லை. எப்போதும் 3 மணிநேரம் பயணம் சென்று கோட்டயம் என்ற பட்டணத்தை நோக்கியே செல்ல வேண்டியுள்ளது. மேலும் நெளிவும் குறுகலுமான ரோடு வழியுள்ள பயணம் எப்போதும் சவாலானதே!


கடந்த ஒரு மாதமாக கேரளா ஊடகம் ஏஷிய நெட், அமிர்தா தொலைகாட்சிகள் போன்றவை ரோட்டின் நிலைபற்றியும் , சாமியார்களுக்கு செய்து கொடுக்கப்படவேண்டிய வசதிகளின் குறைபாடுகளை பற்றியும் கதறி சொல்லிகொண்டு தான் இருந்தனர். இருந்தும் தேவையான பாதுகாப்பு வசதி கொடுக்காது கேரளா அரசு பல உயிர்களை பறித்து விட்டது. கேரளா அரசு வாய் சவுடாலில் முந்தும் அளவுக்கு செயலில் இல்லை என்பதே இது மறுபடியும் எடுத்து காட்டுகின்றது. 


தேவஸியம் போர்டு என்ற குழு தான் சபரிமலை பயணிகளுக்கு வேண்டிய வசதி செய்து கொடுக்க அரசால் நிறுவபட்ட சட்டபூர்வமான குழு. இவர்கள் சாமிகளுக்கு விற்கும் நைவேதியத்தில் இருந்தே ஊழலில் முங்கி நீச்சல் அடிப்பதை கடந்த சில நாட்களாக ஊடகம் சொல்லி கொண்டே தான் இருந்தது தமிழக ஊடகம் போல் அல்லாது ஆக்கபூர்வமான கருத்துரையாடல்கள் கொண்ட கேரளா ஊடகம், சாமிமார்கள் சிறப்பாக வெளிமாநில பக்தர்கள் எதிர் கொள்ளும் துயரம் பற்றி சொல்லி கொண்டே இருந்தும் அரசின் மெத்தன போக்கால் இவ்வளவு பெரிய விபத்துக்கு தளம்  அமைத்து கொடுத்து விட்டனர் என எண்ணும் போது அரசின் கையாலக தன்மையை எண்ணி சினம் கொள்ளாது   வேறு வழியில்லை.

கேரளாகாரர்கள் அறிவாளிகள் பழக இனிமையானவர்கள் பார்க்க அழகானவர்கள் என பல சிறப்பு இருந்தாலும் அவர்கள் மட்டும் கடவுளின் தேசத்தின் பிள்ளைகள் என்ற ஒரு அகங்காரவும் உண்டு.  மற்றவர்களின் துன்பத்தை கூட ஏதாவது தத்துவம் பேசி மழுப்பி விடுவார்கள்.

பூமி பந்தில் சிறப்பான, ஏன் கடவுள் அருகாமையுள்ள இடமாக சபரிமலை இருக்கலாம். ஒரு சீஸனில் மட்டும் 133 கோடி ரூபாய் லாபம் இட்டும் தலமாக உயர்ந்துள்ளது.  ஆனால் பக்தி என்ற பெயரில் ‘மகரஜோதி’ என்ற பெயரில் செய்யும் தில்லு முல்லு கணக்கில் எடுக்க தவறுகின்றனர் !  நான் பள்ளியில் 7 வது வகுப்பு படிக்கு வேளையில் காங்கிரஸ் ஆட்சி நாட்களில் கம்னிஸ்டுகள், ஊடகவியாளர்களையும் அழைத்து சென்று மகர ஜோதி என்ற மகா சம்பவத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தியுருந்தனர். தற்போது கேரளாவின் வருமானத்திற்க்கு பெரும் பங்கு இது சார்ந்த நம்பிக்கை வகிப்பதால் சிலவற்றை "கண்ணை மூடி பூனை பால் குடிப்பதுபோல்" இருந்து கொள்கின்றனர். பொதிகை தொலைகாட்சியில் உயிரைவிடுத்து தற்சமய ஒளிபரப்பில் சிலர் உணர்ச்சி வசபடுவதை காணும் போது அழுவதா சிரிப்பதா நாம் அறியாது நிற்கும் சூழலுக்கு தள்ளபடுகின்றோம். பக்தி சம்பந்தமான கருத்துக்கள் மற்றோர் மனதை பெரிதும் துன்பப்படுத்திவிடும் என எண்ணும் போது துணிவாக சில சம்பவங்களை சொல்லவும் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும் நம் பாதுகாப்பு நம் கையில் மட்டும் அல்ல என உணரும் போது சில தற்காப்புக்கள் பக்த பயணம் மேற்கொள்ளுபவர்கள் எடுத்தல் நலமாக இருக்கும்.

மகரஜோதி அன்றே அங்கு இருக்க வேண்டும் என பிடிவாதம் கொள்ளாது கடவுளுக்கு உகுந்த விதத்தில் பக்தியான பயணமாக மேற்கொள்ள பக்தர்கள் முன் வர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையின் மேலுள்ள பயணம், உலகில் உயரமான பிரதேசங்களின் மேலுள்ள பயணம் சுத்தமான காற்று, வெள்ளம், வனமத்தியிலுள்ள பயணம் என எல்லா விதத்திலும் ரசிச்சு மேற்கொள்ளும் பயணம் இனிதாகவும் முடிய வேண்டும்.

ஐய்யப்ப ஆலய தலைமை குருக்கள் சினிமா நடிகை ஜெயமாலாவுடன் சேர்ந்து அடித்த கோமாளி கூத்து நாம் தெரிந்தே. இந்த விபத்து சோகம் கூட பலரில் பல விதமாக பிரதிபலிப்பதை நாம் காண உள்ளோம். பழுத்த பக்கதர்கள் என சொல்லி கொள்பவர்கள் ஐய்யப்பா சாமிக்கு பிடிக்காத பெண்கள் வந்தது அல்லது அவருக்கு பிடித்தமான காடுகளை அழித்து சிமின்று கட்டிடம் கட்டியது என சொல்ல போகிறார்கள். கடவுள் இல்லை என கூறுபவர்கள் ஒரு படி மேலை போய் ஐய்யப்பனிடமே கேள்வி வைப்பார்கள். எதிர் கட்சியோ, ஆளும் கட்சியின் அசட்டுதனம் நாங்க இருந்தா எல்லாம் நல்லபடி சென்றிருக்கும் என கதை விடுவார்கள். பாதிக்க பட்ட குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு தாயும், மனைவியும், பெற்றோரும், குழந்தைகள் கடைசியாக தான் தெரிவார்கள் என்பதே துர்பாக்கியமான உண்மை!!!!

12 Jan 2011

பள்ளிபடிப்புக்கு ஆப்பு வைக்கும் அரசு…..

தமிழக அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடத்திட்டம் அறிமுகபடுத்தியுள்ளது.என்னுடைய சகோதரி மகன்  இத்திட்டத்தில் மாட்டியுள்ளான். இத்திட்டத்தின் கீழ்உள்ள பாடத்திட்டம்  கேரளா மற்றும் கர்னாடகா  மாநில பாடத்திட்டங்களை விட தரம் அற்று இருப்பதாக  கூறுகின்றனர்.  கல்வி தரம்  எல்லா மாநிலங்களிலும் சமச்சீர் பெற்றிருக்க வேண்டும் . இவ்விதம் உள்ள சீர் திருத்தால் நம் மாநில மாணவர்கள் தேசிய அளவில்  தரம் தாழ்த்த படும் சூழல் உள்ளது. உலகமயமாக்கல்  சூழல் கல்வி மட்டும் கல் யுகத்தை நோக்கீ சென்று கொண்டுருக்கின்றது. ஏற்கனவே தமிழ்நாடு  SSLC கேரளா SSLC  க்கு சமமாக மதிப்பது கிடையாது. நமது மாணவர்ளுக்கு பட்டபடிப்பு முடித்திருந்தால் கூட வங்கி க்கு சென்றால் ஒரு படிவம் வாசித்து நிரப்ப தெரிவது கிடையாது, பிழை இல்லாது எழுத தெரிவது கிடையாது ஏன்  ஒழுங்காக ஆங்கிலம் போகட்டும் தமிழில்  கூட பேச தயங்குகின்றனர்.(கடலையல்லா-loose talk).

ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தி தரமான கல்வி தருவதை விடுத்து மாணவர்களின் எதிர்காலத்தையே வீணடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பெறும் ஊதியம் ரு 1500  துவங்கி 4000 த்துக்கு உள்ளாகவே.கொத்தனார் (400* 30) கூட இவர்களை விட பல மடங்கு ஊதியம் பெருகின்றனர். தற்போது அரசு பள்ளி ஆசிரியரின் ஊதியத்தை கணக்கிட்டு  தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கற்று கொடுக்கும் ஆற்றலை குறைத்து ஏனோ தானோ என்று கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தனியார் பள்ளி  மாணவர்களும் tution போய் தான் தங்கள் படிப்பை சரிபடுத்திகொள்கின்றனர்.
 tதுவக்கபள்ளீ படிப்புக்கு  ஒரூ வருடத்திற்க்கு  குறைந்தது 20 ஆயிரம்  ரூபாய்  கொடுக்க நேரிடுகின்றது.  பள்ளி வாகன கட்டணமும்  அசுரனை போன்றுள்ளது.
 அரசு பள்ளிக்கு அனுப்பலாம் என்றால் ஒரு வகுப்பில் 100க்கும் அதிகம் மாணவர்கள், ஆசிரியர்கள்( ஆண் பெண் இருபாலரும்) வகுப்பறையே விட பக்கத்து தேனிர் கடை மற்றும் அரட்டை அரங்த்தில் காலம் தள்ளுகின்றனர்.இன்னும் சில  ஆசிரியைகள் தங்கள் தலையில் உள்ள பேன் எடுக்கவும் மாணவிகளையே பயண்படுத்துகின்றனர். பள்ளி வளாகம், கழிப்பறை எங்கு செல்லினும் சுத்தம் பராமரிப்பது கிடையாது.ப்ள்ளிக்கு தேவையான தண்ணீர்  எடுப்பதற்க்கும் மாணவர்களையே பயன்படுத்துகின்றனர்.
இதில் பணக்கார வீட்டு குழந்தைகள், அரசு அதிகாரிகளின் குழந்தைகள் central board ல் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். ஆக   சமச்சீர் கல்வியில் படித்து படித்த  ஏழைகளாக தமிழ் நாட்டுக்குள்ளயே இருக்க  வேண்டியது தான்.http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9413:2010-06-06-19-51-35&catid=1126:10&Itemid=393

தில்லியில் படிக்கும் ராமதாஸ் பேரபிள்ளைகள் வெளிநாடுகளில் படித்த கலாநிதி சகோதர்கள் இருக்கும் போது ந்மக்கு ஏன் கவலை.கல்வி தந்தையர்களுக்கு வாழ்வு அளித்து விட்டு மானாட மயிலாட கண்டு நம் கவலையை களையுவோம். இத்ற்க்கு ஒரே வழி கல்வியை மத்திய அரசின் திட்டத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும்.http://www.blogger.com/post-edit.g?blogID=8803242748745605782&postID=508094286872031209

26 Dec 2010

என் பொண்ணு வயசுக்கு வந்துட்டா!!!!





















இன்று பக்கத்து வீட்டு பூர்ணிமாவின்  பூப் புனித விழா வுக்கு சென்றிருந்தோம்.  சிறு பெண் என்பதை விட குழந்தையாக இருந்தாள்.  அவளுக்கு அவளை விட கனமான மாலை அணிவித்து கை நிறைய வளையல்கள் 10 விரலுக்கும் 20 க்கு மேல் மோதிரங்கள், கழுத்து தெரியாத வண்ணம் தங்க கல்லு மாலைகள், ஒட்டியாணம் என அணிவித்து அதிலும் சிறப்பாக ஒரு சேலையை உடுத்தி அல்ல சுற்றி, முகத்தில் சந்தனம் பூசி அதன் நடுவில் ஒரு பெரிய குங்கும் பொட்டு இட்டு அமர வைத்திருந்தனர்.

 
உறவினர்கள், பெற்றோர் நண்பர்கள் என வரிசை கட்டி வீடியோவுக்கு தலைகாட்டி பணத்தை சாட்சியத்துடன் கொடுத்து செல்கின்றனர். சே, சே என அலுத்து கொண்டு எப்படா தப்பிபோம் என உதட்டை பிதற்றி கொண்டு எரிச்சலுடன்  நின்று கொண்டிருந்தாள் பூர்ணிமா.  அவள் தோழர்கள் வந்தவுடன் தலையை தட்டி விளையாடுகின்றாள், முகத்தில் அவளறியாது சிரிப்பு கொப்பளித்து கொண்டு வருகின்றது.  குழந்தையின் அம்மா ஒட்டியாணம் அணிந்து குழந்தைக்கு விஷேசமா அல்லது அம்மாவுக்கா என தோன்றும் விதம் அழகாக தோரணையாக வீடியோவுக்கு  நின்று கொண்டிருந்தார்.

 
ஒவ்வொரு நிகழ்சிக்கும் ஒரு அர்த்தம் கற்பிப்பது போல் இந்த நிகழ்சிக்கும் என சில கதைகள் சொல்லத்தான் செய்கின்றார்கள். ஒரு நண்பி சொல்லி கொண்டிருந்தார் இந்த நிகழ்ச்சி வச்சா தான் வரன் வருவார்களாம்!  பெண் படிப்பது 6 ம் வகுப்பில்!  சிரிப்பு தான் வந்தது எனக்கு. பழைய காலங்களில் பெரும்வாரியாக பெண் பெரியவள் ஆவது 9,10 வகுப்பு படிக்கும் போது தான் நடக்கும்.  பெண்களின் படிப்பை விட வரன் பார்க்கும் கடமை உணர்வுள்ள பெற்றோர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முறை மாமனுக்கு திருமணம் செய்து கொடுக்கும் காலம் அது.

 



இது மனித உடல் வளர்ச்சியின் ஒரு பாகம் என்பதாக இருக்கும் போது ஏன் பெண்களுக்கு மட்டும் கொண்டாடுகின்றனர்.   ஆண்கள் வயதிற்க்கு வரும் நிகழ்ச்சியை ஏன் கொண்டாடுவதில்லை என கேட்டு கொண்டேன்.  மாலா அக்கா மகன் மோகனுக்கும் 12 வயது இருக்கும்.   குரல் மாறி மூக்கு பக்கம் மீசை எட்டி பார்க்க ஆரம்பித்து விட்டது. . அதும் சந்தோஷமான நிகழ்வு தானே ஏன் கொண்டாடவில்லை என கேட்டு கொண்டேன். மனிதன் கருவில் உருவாகுவதில் இருந்தே அவனுடைய வளர்ச்சியும் பல கட்டமாக நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.  பெரியவள் ஆகின்றாள் என்பதே அவள் இனப் பெருக்கத்திற்க்கு தயார் ஆகி விட்டார் என்பது மட்டுமே.  இதற்க்கு என ஊராரை அழைத்து சொல்ல தான் வேண்டுமா? இப்படி கேள்விகள் நிறையவே வந்தது.

 
  பூர்ணிமா அம்மா தான் 
மண்டபம் நிறைந்து நின்றார். என் கண் முழுக்க அவர் முடி அலங்காரத்தில் இருந்தது. இடுப்பில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் இன்னும் என்னை ரொம்ப கவர்ந்தது. பூர்ணிமா அப்பாவுடன் நாணத்தில் போட்டோவுக்கு முகம் காட்டுவதிலே மும்மரமாக இருந்தார். ஏனோ அவ அப்பா ரொம்பவும்  வெட்கத்தில் நெளிவது  பல பொழுதும் தெரிந்தது.
 
பூர்ணிமாவுக்கு கடந்த வாரமாக  சத்தான ஆகாரம் கிடைத்ததோ தெரியவில்லை. உடல் சுகாதாரம் பற்றியுள்ள  வழிமுறைகள் சொல்லி கொடுத்தார்களோ என்னமோ. நேற்று வரை தெருவில் சிறு பெண்ணாக விளையாடி கொண்டிருப்பவளுக்கு அவளுக்கே பொருந்தாத ஆடை அணிகலங்கள் அணிவித்து பதட்டமான, நெருக்கடியான சூழலில் நிற்கவைத்துள்ளது மட்டும் தெரிந்தது. சில வயதான கிழவி இப்போதை தங்கள் மனம் போன போக்கில் கருத்தை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர்.நல்ல காலம் நேரம் பார்த்ததில் அவள் அப்பாவுக்கு வியாபாரத்தில் ஏற்முகம் தானாம்!   
 
இனி தமிழ் சினிமா பார்க்க பார்க்க  ஒரு சடங்கு நிகழ்ச்சியை வைத்து
பொல்லாத காதல் கத்திரிக்கா என கற்பனையில் பறக்க போகிறாள் என்று மட்டும் எனக்கு விளங்கியது.  முன் வாசல் பக்கவாட்டில் உட்கார வைத்து வரிசையாக பலர் போய் தண்ணீரை குடம் குடமாக ஊற்றுவது தான் எனக்கு ரொம்ப நெருடலான நிகழ்ச்சியாக இருந்தது. தாய் மாமன் பொண்டாட்டி என்று பூர்ணிமா அத்தை மல்லிகா அடித்த காமடி என்ற கெட்ட பேச்சு   கொஞ்சம் நெளிய வைப்பதாக தான்  இருந்தது. இதில் யார் யாரோ வந்து நெத்தியில் சந்தனம் வைத்து கொண்டிருந்தனர்.  குடும்ப சண்டையால் நெருங்கிய உறவினர்களை அழைக்கவில்லையாம்!

 

இதிலும் அக்குழந்தையின்  உறவினர்கள் , அம்மாவின் நட்பு வட்டாரம் என சம்பந்தம் இல்லாத யார் யாரோ ஒழுக்கம் சொல்லி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.  அடங்கி இரு, ஓடாதே, பேசாதே, பார்க்காதே என ஆயிரம் உபதேசங்கள்!   இந்த மாதிரி உடை வாங்கி கொடுக்காதை, பாட்டு, நடன வகுப்புக்கு அனுப்ப வேண்டாம் என பல பல... பார்வையே போலிஸ் கள்ளனை பார்ப்பது போன்று  தான் இருக்கும். 
 
 
மாமா, சித்தப்பா, அண்ணா என பாசமாக பழகியவர்கள் எல்லாம் தள்ளி நிற்பது போல் தோன்றிய காலம் தான் நினைவிற்க்கு வந்தது.  "நீந்த தெரியாதவளை கடலில் தள்ளி விடுவது போல் தான் இருந்தது" நிகழ்ச்சிகளை பார்க்க பார்க்க.

 

எப்படியோ ஒரே நாள் நிகழ்ச்சி ஊடாக  சடை பின்னுவதில் இருந்து உடை அணிவதில் வர பாவாடை சட்டையில் இருந்து தாவணி என சின்ன பெண் பூர்ணிமாவை உடன் காப்பி போல் "உடன்  பெண்ணாக" உருவாக்கி விட்டார்கள்.  



 

 
ஒரு பெண் படிப்பில் முதலாவது வருவது, நல்ல வேலை கிடைப்பது இதற்க்கு என ஒரு பாராட்டு விழா வைப்பது போல் இன்றுவரை கேள்விபட்டதில்லை. வயசுக்கு வந்து விட்டாள் என்பது அப்படி கொட்டடித்து சொல்ல என்ன அசாதாரணமான நிகழ்வா என சிந்தித்து பார்க்க வேண்டும். 
மேலும் பழைய காலம் கூட்டு குடும்பத்தில், சொந்த ஊரில் சொந்த பந்தங்களோடு வாழும் சூழல்.  ஒவ்வொரு காரணம் சொல்லி எல்லோரும் ஒன்று கூடி மகிழ்ந்து உண்டு குடிக்க ஒரு நிகழ்ச்சி தேவைபட்டிருக்கலாம். இன்று தனி குடும்பம்,  இன்று அதுவும் மாறி  'அணு' குடும்பமாக மாறியுள்ளது.  பல குடும்பம் சொந்த ஊரை விட்டு வெளி ஊர்களில் வாழும் சூழலில் இவ்வகையான நிகழ்ச்சியின் நோக்கம்,தாக்கம் என்னவாக இருக்கும்?
நாங்கள் வளர்ந்த கேரளாவில் இது போன்ற நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. வயசுக்கு வருவது பெற்றோருக்கு மட்டும் தான் தெரியும். இலைமறை காயாகத்தான் அறிவிப்பார்கள்.  ஆர்வகோளாறு உள்ளவர்கள் கூட நம் ஊரில் நடப்பது போல் பொண்ணு வயசுக்கு வந்திட்டாளா என கேட்க மாட்டார்கள்.   நாடுகளுக்கே ரகசியம், ராணுவ ரகசியம் என இருக்கும் போது பெண்ணிற்கு  தான் கூடாதா?ஒரு குழந்தை சத்தான சாப்பாடு, பாரம்பரியம் என சீக்கிரமே உடலளவில் வளர்ந்து விட்டாலும் மனதளவில் அவள் குழந்தைய்  பருவத்தில் தான் இருப்பாள்.  பல அம்மாக்களும் இதை அணுக வேண்டிய முறையில் அணுகுவது கிடையாது, அறிவியல் நோக்குடன் இதை காண்பது இல்லை.  சில ரசாயன மாற்றங்களால் உடலில் மட்டுமல்ல சிந்தையிலும் எண்ணங்களிலும் சில மாற்றம் நிகழ்வதையும் அதை எவ்வாறு கையாளுவது என சொல்லி கொடுப்பது இல்லை. திருமணத்திற்க்கு வரனை அழைக்க முன்னோட்டம் என்று கூறினால் கூட 12 வயதில் இருந்து  மேலும் 10-15  வருடங்கள் காக்க வைப்பது போல் ஆகாதா?இன்னும் வேறுவிதமாக நினைத்தால் கல்யாண சந்தையில் பெண்ணை கொண்டு நிறுத்தும் முதல் நிகழ்ச்சி தானோ இது என தோன்றியது.

மாதாவிடாய் பற்றிய அருமையான பதிவு! 

24 Dec 2010

மயக்கத்தில் தமிழகம்……..


         தமிழக அரசால் சிரம்பட திட்டமிடபட்டு மக்கள் துயரில் வியாபரம் பண்ணும் இடமே டாஸ்மாக் என செல்லமாக அழைக்கப் படும் மதுபானக்கடைகள். கடந்த தீபாவளி அன்று மட்டுமே 150 கோடி விற்க்கப் படவேண்டுமென்று அரசால் திட்டமிடப் பட்டு 200 கோடி ரூபாய்க்கு விற்பனை நடத்தி பெரும் சாதனை படைத்துள்ளனர் நவீன வள்ளுவர் முதல்வர் தலைமை தாங்கும் தமிழக அரசு!

மதுவகைகள்,  தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் வேறுபட்டிருந்தாலும்  பல வகை பெயர்களில் பண்டை காலம் துவங்கியே மனிதர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை வரலாறு, இலக்கியம் வழியே நாம்  தெரிந்து கொள்ள இயலும்.

தமிழகத்தில் 6740 மதுபான கடைகள் உள்ளன. சென்னையில்  மட்டும்  500 கடைகள் உள்ளது என கணக்கிடபட்டுள்ளது. பள்ளிகள் தனியாரிடம் ஒப்படைத்த போதும் மதுக்கடைகள் அரசு வசம் வைத்து பெரும் லாபம் தரும் தொழிலாக அதாவது வருடம் 10 ஆயிரம் கோடி அல்லது தினம் 45 முதல் 60 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பெரும் தொழிலாக வளர்க்கபட்டுள்ளது.  பல கிராம மக்களின் வருமான மார்கமாயிருந்த பனை மரத்தில் இருந்து எடுக்கும் கள்ளைக் கூட தடை செய்து அமோகமாக வெற்றி நடை போட்டு கொண்டிருக்கின்றது  அரசின் டாஸ்மாக் !
மதுபானங்களை அதன் உற்பத்தியை பொறுத்து பீர், வைன், பிராந்தி(ஸ்பிரிட்) என வகைப்படுத்தியுள்ளனர். பார்லி, கோதுமை, சோளம் போன்றவையுடன் சர்க்கரை சேர்த்து பீர் தயாரிக்கபடும் போது; திராட்சை, செரி, ஆப்பிள், பிளம் போன்ற பழங்களில் இருந்து வைன் தயாரிக்குகின்றனர். ஆல்கஹோல் அல்லது 20% ஸ்பிரிட் கலவையுடன் பிராந்தி தயாரிக்கபடுகின்றது.

100 க்கு மேற்பட்ட நாடுகளில் இதன் பயன்பாடு  பல சட்ட திட்டங்களால் வகையறுக்கபட்டு வருகின்றது. 16 அல்லது 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கே மதுபானம் விற்கலாம் பயன்படுத்தலாம் என சட்டம் உள்ளது. பொது இடங்களில் பயன்படுத்துவதை தடை செய்தும் பல நாடுகளில் சட்டம் உள்ளது. மதுபானங்களின் பயன்பாட்டை தடைசெய்ய பல நாடுகள் சிறப்பாக நார்வே, பின்லான்று போன்ற ஐரோப்பிய நாடுகள் கூட ஆக்கபூர்வமான செயலில் உள்ள போது கலாசாரம் பண்பாடு வள்ளுவர், பெரியார் வழிதோன்றல்கள் என பீற்றி கொள்ளும் தமிழக மக்கள் பயன்பாட்டை அதிகப்படுத்தும் திட்டத்த விட குறைத்து கொள்ள அல்லது முற்றிலும் ஒழிக்க என ஒரு ஆக்கபூர்வமான செயலிலும் இறங்க மனம் வராது உள்ளது தமிழக அரசு.

 எம்.டி ராமாராவின் ஆட்சியில் ஆந்திராவில் மதுபானத்தை  முற்றிலுமாக ஒழித்தாலும் அவரின் ஆட்சிக்கு பின்பு அது தோல்வியில் தான் முடிந்தது. 1996-98 காலயளவில் ஹரியான மாநிலத்தில் தடை நிலவில் இருந்தது. தற்போது மிஸோராம், மற்றும் குஜராத்  மாநிலங்களில் மட்டுமே தடை பூர்ணமாக பின் பற்றபடுகின்றது.  மோடியை இதற்க்கு என்பதற்க்காவது நம் நாட்டில் பிரதம மந்திரியாக பரிந்துரைக்கலாம்.
குடும்பத்திற்க்கு, குழந்தைகளுக்கு என துணியாகவும் உணவாகவும் வாங்கி கொடுக்க வேண்டிய பணம்; ஆண்கள் உயிரை குடிக்கும் மேலும்  குடும்பங்களை அழிக்கும் சூழலுக்கு தள்ளப்படுவது பரிதாபத்திற்க்குரியதே.  பல வாகன விபத்துக்கும் கொலை கொள்ளை கற்ப்பழிப்பு போன்ற இளிவு செயல்களுக்கும்  மதுபானம் காரணம் என்றால் மறுக்க இயலாது. பத்திரிக்கையில் விமான ஓட்டிகள் கூட மதுபானம் அருந்தி விமானம் ஓட்டுவதை கண்டு பிடிக்க பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதில் பள்ளி மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகி வருவதும், கல்லூரி மாணவர்கள் அவர்கள் பேராசிரியர்களுடன் 'சியேர்ஸ்' கூறி மது அருந்துவதும், பல கணவர்கள் தங்கள் மனைவிகளையும் மது பழக்கத்துக்கு அடிமையாக்குவதும் வெளிச்சத்திற்க்கு வருகின்றது. பொது இடத்தில் குடிப்பது இந்தியாவில் சட்டத்தால் குற்றம் என்றாலும் பேருந்து நிலையங்களில்  மதுபான கடைகளை வைப்பது வழி  மக்களை மதுவுக்கு அடிமையாக்குகின்றர் என்பது தான் உண்மை. தென்காசி பேருந்தில் நெல்லை புதிய பேருந்து நிலையம் வரும் போது பல குடிமகன்கள் குடி போதையில் தங்கள் மகள் போன்ற கல்லூரி மாணவிகளை சில்மிஷம் செய்வதை  கண்டுள்ளோம். மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டே கை, கால் நீட்டி பெண்களை உரசி இன்பம் காணும் குடிமகன்களும் உண்டு தான்.

கடும் குளிர் பிரேதச மக்கள் குளிரில் இருந்து தப்பிக்கவும், கடும் உழைப்பால் வந்த உடல் வலியை மறந்து தூங்கவும் பயன்படுத்தி வந்த மதுபானங்கள் இன்று விருந்து வைபங்களிலும் ஆண்மையின் அடையாளமாகவும் மாற்ற பட்டது துரதிஷ்டமே. பல பெண்கள் கூட அடிமையாகின்றனர் என்பதும் குடித்து விட்டு வீட்டிற்க்கு வரும் கணவர்கள் ஒரு பங்கு மதுபானம் மனைவிக்கும் வாங்கி கொடுத்து சரி கட்டுகின்றனர் என்பது திரைமறைவில் கசியும் உண்மை.

என் அப்பாவுக்கு அறிமுகமுள்ள குடும்பம், தெற்கு தமிழகம் ஒரு குக்கிராமத்தில் இருந்து கேரளாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், வசதி வாய்ப்புடன் 5 குழந்தைகளுடம் நல்ல நிலையில் வாழ்ந்து வந்தனர். அக்குடும்ப தலைவர் கடை, வியாபாரம் என பொறுப்பாக இருந்தவர் இரவானால் ஒரு குப்பியுடன் வீட்டு படியை மிதிக்க ஆராம்பித்தார். தினம் கால் குப்பி மது அருந்தி தூங்க கூடியவர், போக போக தன் மனைவிக்கு ஒரு குண்டு வாங்கி கொடுக்க ஆரம்பித்தார். அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த பெண் தன் 18 வது வயதில் பெற்றோர் குடித்துவிட்டு ஆட்டம் போடுவதை கண்ட மன உளச்சலில் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அத்தாயும் மனம் உடைந்து ஒரு வருடத்திற்க்குள் இறந்து விட்டார். மற்றும் ஒரு பெண் அம்மா, அக்காவின் முடிவை உள் வாங்க இயலாது மன நோயாளி ஆகி விட்டார். பேச்சும் சிரிப்புமாக இருந்த வீடு இன்று சுடு காடு போல் ஆகி விட்டது.

நாங்கள் இரண்டாம் வகுப்பு படித்த போது ரஷீதா, ரகுமத் என்ற இரு சகோதரிகள் எங்களுடன் படித்தனர்.  அவர் அப்பா குடிகாரர் என்பதால் அவர் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரும் சண்டையாக இருந்தது. பல வேளைகளில் அவர்கள் அப்பா குடி போதையிலே பள்ளியில் வந்து அவர்களுக்கு தின் பண்டம் வாங்கி கொடுத்து ஆசையாக கட்டியணைத்து முத்தம் கொடுத்து செல்வார். அவர்கள் அப்பா குடிகாரர் என்றிருந்தாலும் கூட அத்தா, அத்தா என்று தன் அப்பாவை பற்றி ஆயிரம் கதைகள் எங்களிடம் கதைப்பார்கள்.  ஒரு நாள் அவர்கள் அப்பா, பள்ளி பக்கத்திலுள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  ரஷீதாவால் தன் அப்பாவின் பிரிவை தாங்கி கொள்ள இயலாது திடீர் திடீர் என மயக்கம் போட்டு விழும் நோயால் பீடிக்க பட்டார் அதன் பின்!

அதே போல் எங்களுக்கு 5,6,7 வகுப்புகளில் அறிவியல் பாடம் நடத்தும் 'மத்தாய்' என்ற ஆசிரியர் இருந்தார்.  அவரின் அழகான மனைவியும் மூன்று குழந்தைகளும் கண்ணீரும் கதம்பலுமாக தங்கள் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தனர். பள்ளி மணியடித்தவுடன் நாங்கள் புத்தக பையை கொண்டு ஓடி வீடு வருவதற்குள் மத்தாயி சார் மதுபான கடைக்கு வந்து விடுவார். பின்பு கல்வி அதிகாரியின் கூறி அவரின் சம்பள கவர் நேராக அவர் மனைவி கைக்கு சென்றது,  பிள்ளைகளை  நல்ல படிப்பு, வசதி வாய்ப்புடன் வளர்த்தார் அவர் மனைவி.  பின்பு தங்கள் மாணவர்களிடமே 10, 20 ரூபாய் என கையேந்த ஆரம்பித்தார் மத்தாயி சார்!  அவர் மனைவியோ வேலைக்கு போகாத அரசு அதிகாரியாகி 'ஹீரோயின்' ஆகி கொண்டிருந்தபோது மத்தாய் சார் 'சீரோ' ஆகிகொண்டே இருந்தார். எங்கள் ஊர் கம்னிஸ்ட் கட்சிகாரர்கள் அவர் மனைவியை அணுகி "சேச்சி எங்க பார்ட்டிக்கு வந்து சமூக சேவைசெய்க" என அழைப்பு விடுத்தனர். அவரும் கட்சி உறுப்பினர் ஆகி சிந்தாபாத் முழக்கியே தலைவியாகிய பின்பு மத்தாய் சாருக்கு சோறு வைத்து கொடுப்பதே ஒரு பெரும் வேலையாகி விட்டது. அவர் மனைவியும் நேதாக்களிடம் சொல்லி அவரை தண்ணியில்லா காட்டுக்கு மாற்றம் வாங்கி கொடுத்து விட்டார். மத்தாய் சாருக்கு மதுவினால் சம்பள கவர் மட்டுமல்ல தனக்கு இருந்த ஒரே ஒரு மாதுவையும் கட்சிக்கு தாரை வார்த்து விட்டு புலம்பி அலைவதாக கேள்வி பட்டோம்.

மாலட்டு தன்மை, சிறுநீரக கோளாறு, மூச்சு திணறல் போன்ற நோய்க்களுக்கு குடி ஒரு காரணம் என அறிந்தும் குடியை விட பல ஆண்கள் தயங்குகின்றனர் என்பது தான் புரியாத புதிராக உள்ளது!


அளவாக மது அருந்துவதை கிறிஸ்தவ(கத்தோலிக்க), ஹிந்து, புத்த மதங்கள் போன்றவை கூட ஆதரிக்கின்றது.  'அளவு' என்பது தான் இங்கு  பெரும் பிரச்சனையே. மேல் நாடுகளில் ஒரு குவளை, இரண்டு குவளை என பயன்படுத்தும்போது நம்மவர்கள் கால் குப்பி அரை குப்பி, முக்கால் குப்பி என மது பானத்தை தண்ணீர் போன்று மொந்தி தள்ளுகின்றனர்.  பல வீட்டில் குடிக்கும் அப்பாக்களை பிள்ளைகள், அவர்கள் பெற்றோர் ஏன் கட்டின மனைவி கூட மதிக்காது ஒரு சிலரை கல்லைபோட்டும் கட்டிவைத்தும் அடித்து கொல்லுகின்றனர்.

கிறுஸ்துமஸ் நாட்களில் கிறிஸ்தவர்கள் வீட்டில் விருந்துடன் வைன் பங்கிடுவது உண்டு. அதற்கென சிறு பீங்கான் கோப்பையில் சாப்பாடுக்கு பின்பு கேக்குடம் அருந்தும் வைன் சுவையானது தான்!  கேரளாவில் பல வீடுகளில் வீட்டு அம்மாக்களை 45 நாட்களுக்கு முன்பே ஒரு கூஜாவில் வைன்(திராட்சை,நெல்லி)  செய்வார்கள். எங்களுக்கு ஆலயத்திலும் சிறு அளவு பிராசாதம் போன்று வைன் கிடைக்கும்.  திராட்சை வைன் அளவான அளவு அருந்துவது இதயத்திற்க்கு நல்லது என சொல்ல படுகின்றது. அளவுக்கு மீறி குடித்த பல மனிதர்களை பற்றியும் அவர்கள் நேர் கொண்ட பல துயர் பற்றியும் பைபிளில் கதைகள் உண்டு.

பிராந்தி வகை சேர்ந்த முக்கால் குப்பி மதுபானத்திற்க்கு 230 ரூபாய் துவங்கி 520 ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளது. வைனுக்கு 235 ரூபாயும், விஸ்கி போன்றவை 1030-1760 வரை விற்க படுகின்றது.  பீர் 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை செலவாகின்றது.

அரசு மக்களை கேள்வி கேட்காத சமூகமாக மாற்ற, ஒரு விதமான மயக்க சூழலிலே தள்ள, சிறப்பாக வருமானம் ஈட்ட மதுபான கடைகள் அவர்களுக்கு உரிய வழிமுறை தான். இதில் அரசு அதிகாரிகள் கைகூலி(லஞ்சம்) பணத்தில் மற்றும் இனாமாக கிடைக்கும் பணத்தில் குடிக்கும் போது ஏழைகள் தங்கள் உழைப்பின் பெருமொரு பகுதியை மதுபானத்திற்க்கு என செலவிடுகின்றனர். போன மாதம் மழையால் தொழிலாளர்கள் வேலையில்லாது இருந்ததால் மதுபானக் கடை வியாபாரவும் மந்தமாக இருந்தது என தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் டாஸ்மாக் அதிகாரிகள். கலவரம், சமூக பிரச்சைனை எதுவாகட்டும் பாதிக்கபடும் ஏழைகளை மது அடிமைக்கும் பலியாக்கபடுகின்றனர் என்பது தான் மறுக்க முடியாத துயர்.

19 Dec 2010

கோயில்களும் மனித நலனும்……



இன்று ஜெய மோகனின் வலைப்பதிவை கடந்து போகும் வாய்ப்பு கிட்டியது. அதில் கிருஷ்ணாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாதிருநகரி போன்ற ஊர் கோயிலுகளை பற்றி கூறியிருந்ததை கண்டு ஒரு ஆர்வத்தில் உள்ளே சென்றேன். அதில் கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு என் கணவருடன் பார்வையிட சென்றுள்ளேன். மற்று இரண்டு கோயில்கள் என்னவருக்கு மிக பரிசயமான கோயிலுகள். அவருடைய ஊர் நாசரேத்தாக என்பதாலும் அவருடைய நண்பர்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருந்ததாலும், மேலும் அவருடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கோயில், அங்குள்ள ஏரிகள் என சுற்றித் திரிந்துள்ளதாலும் கோயிலுகளுடன் ஒரு உணர்வு பூர்வமான தொடர்புகள் உள்ளது.
நாங்கள் அங்கு சென்ற போது எங்கள் பகுதியிலுள்ள ஒரு ஹிந்து சகோதரரும், அவருடைய அலுவலக நண்பர்கள் மற்றும் மேலதிகாரியுடன் வந்திருந்தார். நாங்கள் அவர்களுடன் சேர்ந்தே நடந்தோம் நாம் அறியாத பல கருத்துக்கள் கிடைக்கும் என்ற ஆர்வமே. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது, காரணம் அவர்களும் பல அரிய தகவலுகளுக்காக சுற்று முற்றும் நோக்கினர். ஆனால் ஆலயவளாகத்தில் பெயருக்கு கூட மனித நிழல் இல்லை.
திருச்செந்தூர் செல்லும் பாதை- யாத்திரை பயணிகள் கோயில் முன்புள்ள ரோடு ஓரம், சிலர் கோயில் வளாகத்திலும் படுத்து ஓய்வு எடுத்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு என ஒரு வசதியும் செய்து கொடுக்க படவில்லை. கோயில் நிலைகொள்ளும் கிராமம் கூட சுனாமி பாதிக்க பட்ட பிரதேசம் போன்று எந்த ஒரு வளர்ச்சியும் அற்று வெறிச்சோடி காணப்பட்ட்து. கோயிலை சுற்றி குப்பையாக இருந்தது. சிறப்பாக கோயில் உள் பக்கம் குப்பையாக சுத்தம் செய்ய படாது அசுத்தமாக காணபட்டது. கற்பக கிரகத்தில் எண்ணைய் வழிந்தோடிய நிலையிலே இருந்தது.
ஜெயமோகனில் வலைப்பதிவுக்குள் வருகின்றேன். சிற்பங்களை பற்றி விரிவாக விவரித்திருந்தார். ஜெயமோகன் குளிரூட்ட பட்ட அறையில் தூங்கி, வாடகை கார் பிடித்து சென்றதாக கூறியுள்ளார். எழுத்தாளர்களுக்கும் அரசியல்வாதிகள் போல் என்ன ஒரு சொகுசு வாழ்க்கை! எழுத்தாளர்கள், சமூகத்தின் பிரதிபலிப்பாளர்கள், சமூகத்தின் கண்ணாடி என கூறுவது உண்டு. ஜெயமோகன் ஒரு வேளை சென்னையிலிருந்து சாதாரண மக்கள் பயணம் செய்யும் பேருந்தில் வந்து நெல்லையில் இருந்து லோக்கல் பேருந்தில் கிருஷ்ணாபுரம் சென்றிருந்தால் கோயில் சென்றடைய பக்தர்கள் மேற்கொள்ளும் சிரமவும் துன்பவும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. கோயிலை சுற்றியுள்ள பிரதேசத்தின் வளர்ச்சியை நோக்கினாலும் நம்மை அதிர்ச்சி கொள்ள செய்யும். மக்களின் சீரான வாழ்க்கையில் கோயிலுகள் பங்களிப்பு கிடையாதா?. மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாதே இருக்கின்றனர். தமிழக பல அமைச்சர்கள் கனிமொழி சகிதம் இங்கு வருகை தந்துள்ளனர். வாஸ்துப்படி இங்கு வருவது பதவி காக்க சிறந்தது எனவும் ஒரு பத்திரிக்கை செய்தியும் கண்டுள்ளேன்.
அடுத்து ஆழ்வாத்திருநகரி பற்றி குறிப்பிடும் போதும் அழகான சூழல் இதமான காற்று என வர்ணித்துள்ளார். ஒரு வேளை கார் கண்ணாடியை திறக்காது கண்ணாடி வழி பார்த்து கொண்டிருந்திருப்பார் போலும். உண்மையில் ஆழ்வாத்திரு நகரி ரோடு எப்போதும் குண்டும் குழியும் தான். நம்மை வரவேற்ப்பது கூட வீட்டு முன் பக்க வாட்டிலுள்ள கழிவு நீர் கான்கள் தான். எங்கும் துர்கந்தம், பன்றிகளின் விளையாட்டு மைதானமாகவே ஆழ்வாத்திரு நகரி தெருவோரங்கள் காட்சியளிக்கின்றது. கோயில் அழகை மறைக்கும் விதம் அங்கு குப்பை கூளமாக தான் எப்போதும் இருக்கும். பழைய கால அருமையான வீடுகள் இருப்பினும் பாதுகாக்கபடாத சோகநிலையிலே காணப்ப்டுகின்றது.
இனி ஸ்ரீவைகுண்டத்தை பற்றி சொல்லியிருந்தார், ஏதோ தாமிர பரணி வழமையில் இருப்பது போல்? இவர்களை போன்ற எழுத்தாளர்கள் எழுதும் வரலாற்றை படிக்க போகும் நம் பின் தலைமுறையும் ஆகா தமிழ்நாடா இப்படியல்லவா இருக்க வேண்டும்! என கொட்டாவி விட்டு கொள்ளலாம். ஆனால் உண்மை நிலைவரம் அதுவல்ல.
மேலும் ஜெயமோகன் எழுத்துக்களில் கிருஸ்தவம் மேல் ஒரு தாக்கு இருந்து கொண்டே இருக்கும். என்னதான் சொன்னாலும் கிருஸ்வர்களும் ஹிந்துக்களும் பிரிக்க முடியாதளவு உறவாலும் உணர்வாலும் ஒன்று சேர்க்க பட்டுள்ளனர். எங்கள் எதிர் வீட்டில் ஒரு பாட்டி குடியிருக்கின்றார். பாட்டி கிருஸ்தர் அவருடைய கணவர் ஹிந்து. அவருக்கு 3 மகன்கள் ஒருவர் கிருஸ்தவராக இருக்கும் போது ஒருவர் ஹிந்துவாக இருப்பதையே பெருமையாக எண்ணுகின்றார். மற்றொரு மகனோ கடவுள் உண்டா இல்லையா என தேடி கொண்டிருக்கின்றார்.
எங்கள் தோழிகளில் சிலர் பாதுகாப்பாளரின் வற்புறுத்தல் மற்றும் தண்டனைக்கு பயந்து பல் விளக்காது கூட ஆலயத்திற்க்கு வரும் மத்தியில் என்னுடைய தோழியும் மற்றும் சில எங்கள் தோழிகளும் யாருடைய வற்புறுத்தல்கள் அல்லாது சொந்த மனசாட்சியின் தூண்டுதலாக தினம்(கிருஸ்தவ கோயிலுகளில் தினம் ஆராதனை உண்டு) கோயிலுக்கு செல்லும் கூட்டத்தில் உள்ளவர்கள்.  வாழ்க்கை என வந்த போது அவர் காதல் கணவர் ஹிந்து என்பதால் அவருடைய விருப்பத்திற்க்கு இணங்கும் சூழலில் வாழவேண்டி வந்ததால் வீட்டில் பூஜை அறை, மணி அடித்து, விபூதியிட்டு, குங்குமம் வைத்து பூச்சூடி மாலை ஜெபம் என வாழ்கின்றார். அவர் பெற்றோர் கிருஸ்தவர்கள் தான்.
ஒரு குடும்பவுவும் முழுவதுமாக இந்துக்கள் உள்ளடங்கியதாக இருப்பது அரிதிலும் அரிது! தற்போது மதம் என்ற வேஷம் கலைந்து மக்கள் மக்களை மக்களாக ஏற்று கொள்ளும் கால கட்டத்தில் அவருடைய எழுத்துக்கள் பல போதும் மற்று மதத்தினரை துன்புறுத்தும் நோக்கில் நுட்பமாக ஒரு வார்த்தையாவது எழுதாது இருக்க மாட்டார். அவருடைய எழுத்தில் தற்கால மதம் என்ற பெயரில் மனிதன் கொள்ளும் துவேஷத்தை பற்றி எழுதுகின்றாரா என்றால் இல்லை என்பதை.
மதம் என்ற பெயரில் மதம் பிடித்து அலைவதை விட மதத்தின் பெயரால் நிலைகொள்ளும் ஆலயங்களுக்கு மக்கள் நலனிலுள்ள பங்கைபற்றி எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலுள்ள கோவிலுகள் அந்த அந்த பகுதியிலுள்ள நீர் நிலைகளுக்கு ஒரு பாதுகாவல் என இருந்தாலே மனிதர் வாழ்வு வளம் பெரும்.
நெல்லையை சுற்றியுள்ள கோயிலுகளை மழை நேரங்களில் சுற்றி வந்தால் தெரியும். தெருவு கழிவு நீர் ஆலய வளாகம் மட்டுமல்ல ஆலயம் உள் புறங்களில் கூட செல்கின்றது. ஹிந்து மதத்தின் காவலர்கள் என காட்டி கொள்ளும் மதவாதிகள் சுத்தமான பரிசுத்தமான சூழலில் மக்கள் கடவுளை வணங்கவும் வழி செய்வதே உகந்தது. தண்ணீர் என்பதிற்க்கு பல உவமைகளால் அதன் பெருமையை போற்றுகின்றனர். சிறப்பாக சிவனின் மனைவி கங்காவின் முடி கெட்டில் இருந்து நதி வருவதாக எடுத்து செல்ல பட்டுள்ளது. மேலும் தண்ணீர் அற்ற ஒரு சடங்கும் இந்து மதத்தில் இருப்பது இல்லை. ஆனால் கோயிலை சுற்றியுள்ள தண்ணீரின் நிலைகளின் நிலைதான் என்ன?
களக்காடு ஊருக்கு ஒரு முறை  மக்களை சந்திக்க சென்றிருந்தோம். களக்காடு மிக அருமையான பகுதி, மேற்க்கு தொடர்ச்சி மலையோடு சேர்ந்து அழகாக காட்சியளிக்கின்றது. மேற்க்கு தொடர்ச்சி மலை தண்ணீரின் ஊற்று என்பதால் எங்கு நோக்கினும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆனால் அங்குள்ள மக்களுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைப்பது இல்லை.
வீட்டு களிவு நீர் நேராக நதிகளில் கலக்கிகின்றனர். இதிலும் அங்குள்ள மருத்துவமனை களிவுகள் கூட நதிக்கரையிலே கொட்ட படுகின்றது.  ஆலய வளாகத்தில் ஒரு பெரிய குளம் உள்ளது. அதை மீன் வளர்ப்பதற்க்கு என குத்தகைக்கு கொடுத்துள்ளனர். மீன் வளர்ப்பவர்கள் பன்றி கழிவுகள்இடுவதால் அக்குளம் பாசம் பிடித்து நாற்றம் கொண்டு காணப்படுகின்றது.


அதே போல் நெல்லையிலுள்ள சிவன், மற்றும் நெல்லையப்பர் கோயில்கள் தாமிரைபரணி நதிக்கரயில் தான் உள்ளது. தாமிரைபரணி நதியின் பாதுகாப்பில் கோயிலுக்கும் மிக பெரிய பங்கு உண்டு என அறிய வேண்டும்.
ஆலயத்திற்க்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி மற்றும் இறந்து போகும் நபர்களை நதிக்கரயில் எரிப்பதை விடுத்து மின் அடுப்புகள் பயன்படுத்துவது வழியும் நதி கரைகளை சுத்தமாக பராமரிப்பது வழியாகவே உண்மையான கடவுள் பக்தியை பேண இயலும்.
அல்லது வரும் தலைமுறை நதிகளை ஆசார அனுஷ்டானங்களுக்கு கூட காண இல்லாதாகி விடும். கோயில் நிறுவனங்கள் வெறுமொரு கல்மண் கலவையல்லாது மக்கள் நலனை பேணும் உயிருள்ள இயக்கமாக உருவாக வேண்டும் என்பதை உண்மையான பக்தனினின் வேண்டுதலாக இருக்க முடியும்!!

3 Dec 2010

Kudankulam-மரண கோட்டையின் மேல் தவழும் திருநெல்வேலி!!!!!

title தமிழகத்தின் வீர மண், புராதன கோயில்கள், கிருஸ்தவ ஆலயங்களின் இருப்பிடம், அறிவு ஜீவிகள், அறிஞர்கள் வீர புதல்வர்கள் பிறந்து, வாழ்ந்த மண் என பல சிறப்புகள் நெல்லைக்கு உண்டு.   தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் அபகரிப்பு என  தாமிரபரணி நதிக் கரையை கூவமாக்கும் அரசு, கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டாம் என முடிவெடுத்து; முழுவதுமாக அழிக்கும் நோக்குடன் கூடன்குளம் அணுமின் நிலையம் நிறுவி உள்ளது. இந்த நிலை திருநெல்வேலியை மரண பூமியாக உருவாக்கவே உதவும்.      

இந்தியாவில் இது போன்ற அணுமின் நிலையங்கள்  தாராப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேஷ், குஜராத், கன்னடா, தமிழகத்தில் சென்னை கல்பாக்கம் , மற்றும் கூடன்குளம்  என 8 இடங்களில் நிறுவியுள்ளனர்.  170 - 500 MW மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துடன் மற்று நிலையங்கள் நிறுவியுள்ளபோது,  1000 MW கொண்ட 6 ரியாக்டர்கள் அதாவது 6000 MW மின்சாரம் தயாரிக்கும் நோக்குடன் தமிழகம் கூடன்குளத்தில் நிறுவி தமிழக மக்களில் உயிரில் விலையை உலக அரங்குக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர் நமது மத்திய மாநிலை தலைமைகள். இந்த மின்சாரம் தமிழக தேவைக்கு தானா என்றால்; அது தான் இல்லை!  இது வெறும் லாப இச்சைகொண்டு விற்று சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிறுவியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை.யுராணியம் என்ற மூலப்பொருள் கொண்டு அணுவை வெடிக்க செய்யும் ஆற்றல் கொண்டு கடல் நீரை வெப்பமாக்கும் சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதே இதன் திட்டம். 1986 ல் ரஷியாவின் பகுதியான உக்ரைன் நாட்டில் சென்நோபில் என்ற இடத்தில் நடந்த மாபெரும் விபத்தால் பல ஆயிரம் மக்கள் உயிர் வாங்கியது.  80 ஆயிரம் மக்கள் இழப்பீட்டு பெற்றனர்.  ராஜிவ் காந்தி ஆட்சியில் ரஷீய அதிபருடன் கொண்ட ஒப்பந்தம் ஊடாக இத்திட்டம் நமது இந்தியாவில் தமிழகத்தில் துவங்கப்பட்டது. கேரளா போன்ற மாநிலங்கள் 'இயற்கைக்கு ஆபத்து' என விலக்கி தள்ளிய இத்திட்டம் நமது தன்னலம் கொண்ட அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் தமிழகத்தில் துவங்கப்பட்டது.பல சமூக ஆவலர்கள், அறிவு ஜீவிகள் எதிர்த்த இத்திட்டம்  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்ற பல்லவியுடன் சில மக்கள் மதத்தலைவர்கள் ஆதரவுடன் துவங்கப்பட்டது. திடீர் என விபத்து ஏற்பட்டால் இப்பிரேதசங்கள் எவ்வாறு பாதிக்கப்படும், எப்படி தற்காத்து கொள்வது அல்லது இழப்பீட்டு மறுவாழ்வு என்பது பற்றி ஒன்றும் விளக்காது அரசின் இரும்புக்கரம் கொண்ட திட்டத்தை நடத்த இருப்பதும் மாபெரும் துயராகும்.கூடன்குளம் ஒரு கடலோர பிரதேசமாகும். பின் தங்கிய வாழ்கை சூழலுள்ள, 40 ஆயிரம் ஜனத்தொகை  கொண்ட மக்களை வேலை வாய்ப்பு, தொழில் என ஆசை வார்த்தை கூறி அவர்கள் நிலங்களை கையகப்படுத்தி கூடன்குளம் அணுமின் நிலையம் நிறுவியுள்ளனர். இயற்கை விஞ்ஞானிகள், மற்றும் மக்களின் எதிர்ப்பையும் வகை வைக்காது 1988 ல் அற்றைய பிரதமர் ராஜிவ் காந்தியும் சோவியத் ரஷியாவின் அதிபர் மிக்கேல் கோர்பசேவ்வும் கையெழுத்திட்டு 2001ல் பணி துவங்க வேண்டும் என்ற நோக்குடன் 13 ஆயிரம் கோடி செலவில் துவங்கபட்டதுதான் கூடன்குளம் அணுமின் நிலையம்.  போபாலில் மக்கள் எதிர்ப்பை மறிகடந்து  இந்திரா காந்தியால் துவங்கப்பட்டு 4 லட்சதிற்க்கு மேலான மக்களின் வாழ்க்கையில் விளையாடியது போல் தான் தென் தமிழக மக்களின் வாழ்க்கையை பற்றி சிறிதும் எண்ணாது ராஜிவ் காந்தியால் 2 ரியாக்டருடன் துவங்கபட்ட ஆலை, மன்மோகன் சிங் அரசால் மேலும் 4 ரியாக்டருடன்  நிறுவப்பட்டுவருகின்றது.பெரும் அளவிலான இதன் உபகரணங்கள் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்டதே. போபால் ஆபத்துக்கு முன்பு அப்பிரதேச மக்கள், கல்வியாளர்கள், ஊடகவியாளர்கள் 'நாங்கள் ஆபத்து என்ற குன்றின் மேல் வசிக்கின்றோம் என கூக்குரலிட்டனர். ஆனால் விபத்தை நேர் கொண்ட மக்கள் குடும்பம் குடும்பமாக தெருவிலும் வீதிகளிலும் செத்து மடிந்தது ஒன்று தான் நடந்தேறியது. அந்நேரம் அவ்வழி சென்ற ரெயில்  ஜன்னல்களையும் வாசல்களையும் தட்டி தங்களை காப்பாற்ற கூறிய மக்களின் சத்தத்தை பொருட்படுத்தாது விரைந்து சென்றது. மக்கள் ஓடியும் நடந்தும் மூச்சு விட இயலாமல் தெருவில்  செத்து மடிந்தனர். நஷ்டயீடுக்காகவும் , நியாத்திற்க்காக போராடும் மக்களை மாக்கள் என்பதை போன்று விரட்டியடிக்கும் காவல் துறையை நாம் ஊடகம் வழி கண்டு வருகின்றோம்.         
   title
போபாலில் நடந்தது அழிவு என்றால், அணு ஆலையால் நடைபெற போவது பேரழிவு!! மனிதர்கள் தீயிலிடும் பிளாஸ்டிக் பைகள் போன்று உருக்கி கொல்லப்பட காத்திருக்கின்றனர். அரசு தரும் நஷ்டயீடு பெற மக்கள் உயிருடன் இருக்க போவதில்லை.  திரைப்படத் துறையினருக்கு வேண்டுமானால்  திரைப்படம் எடுக்க உதவப்படலாம்!
title


அணு ஆலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் போது இயற்கையை மாசுபடுத்தும் கார்பன் டயோக்சைடு மிகவும் குறைவாக வெளியிடுகின்றது , மேலும் குறைந்த நேரம் கொண்டும் நிறைய மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது. அணு பயன்பாட்டை யுத்ததிற்கு அல்லாது சமாதானமாக பயன்படுத்தபடுகின்றது என்ற கருத்தும் எடுத்துரைக்கபடுகின்றது. ஆனால் கார்பன் டயோக்சைடுக்கு பதிலாக வெளியாகும் ரேடியோ கதிர் வீச்சுகளால் உயிர் கொல்லி நோயான கான்சரில் பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற இயலாது என்பதை வசதியாக மறைக்கின்றனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்வது என்பதை இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை.  மேலும் மிக ஒரு பெரிய மூலதனம் கொண்டு உருவாக்கபடும் இவ்வகை ஆலைகளுக்கு தேவையான மைய பொருள் யுராணியம் மிகவும் அரிதான பொருளாகும். அவை 30 வருடத்திற்க்குள்ளாக கிடைக்காத சூழலுக்கு தள்ள படலாம். மேலும் விஞ்ஞானிகளின் கருத்துப்படியும் இதன் பாதுகாப்பு என்பது முழுவதுமாக வரையறுக்கப்பட்டதல்ல. மனிதனையும் இயற்கையும் ஒன்று சேர அழிக்கும் என்பதே மிகவும் கொடியதான செய்தி. சமூக விரோதிகள், மற்றும் தீவிர வாதிகளால் இலகுவாக தாக்கப்படும் இலக்காக மாறும் அபாயமும் உள்ளது.



titleஇதுவரை உலகில் 99 அணுஆலை விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் 1986ல் ஏப்ரல் 26 அன்று உக்ரைன் நாட்டில் நடந்த விபத்தை மிகவும் கொடியதாக கருத்தில் கொள்ளபட்டுள்ளது. செர்னோவில்(Chernobyl) என்ற இடத்தில் பிரியாட்(Pripyat) என்ற நதிக்கரையில் இவ்வாலை நிறுவபட்டிருந்தது. விபத்துக்கு பின்பு ஆலைக்கு 4 கி.மீ சுற்றளவு பகுதியிலுள்ள பைன் மர காடுகள் முற்றிலுமாக அழிந்தது.  6 கி.மீ சுற்றளவு பிரதேசமுள்ள மாடுகள், குதிரைகள் தைராய்டு சுரப்பியல் ஏற்பட்ட ரேடியோ கதிர்வீச்சால் பழுதாகி மரணத்தை தழுவியது.  அங்கு வேலை பார்த்த 20 நபர்களும் இறந்தனர் என்றும் மட்டுமல்ல அவர்களுக்கு சிகிச்சைகள் அளித்த மருத்துவர்கள், அவர்களின் உதவியாளர்களும் செத்து மடிந்தனர். அப்பகுதியை சுற்றியுள்ள 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் புற்று நோய் தாக்கி இறந்தனர். ரஷிய அரசு விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு 'ரஷியாவின் வீர புதல்வர்கள்' என்ற விருதை வழங்கி தன்னை ஆசுவாசபடுத்தியதுடன், இவ் விபத்தை மிகவும் ரகசியமாக கையாண்டது. இருப்பினும் திறமை மிக்க பத்திரிக்கையாளர்களால் பல செய்திகள் பின்பு வெளிகொணரப்பட்டது.                                                                                                                                                                                                                அபாயம் நிகழ்ந்த பணியிடத்தில் இருந்த ஒரு ஊழியர் தன் 6 மாதம் கர்ப்பிணியான மனைவியிடம் "ஜன்னல் கதவுகளை பூட்டி இருந்து கொள், நம் குழந்தையை காப்பாற்ற வேண்டும்" என கூறி சென்றுள்ளார். மிகவும் ஆரோக்கியமாக காணப்பட்டவரை, பின்பு அவருடைய மனைவி பெரும் போராட்டத்திர்கு பின் மாஸ்கோவிலுள்ள மருத்துவமனையில்  சென்று சந்தித்துள்ளார். இவருக்கும் பாதுகாப்பு கவசம் அணிவித்து கணவரை தொட்டு பேசக் கூடாது என்ற அறிவுறுத்தலுடன் அருகில் செல்ல அனுமதித்துள்ளனர். நண்பர்களுடன் சீட்டு விளையாடி கொண்டு மகிழ்சியாக மருத்துவ மனையில் காணபட்ட அவருடைய கணவர் நேரம் செல்லும் தோறும் கண்கள் நீல நிறமாக மாறி உடல் வீங்கி வெடித்து 14 வது நாளில் அவரின் எலும்புக்கள் தெரியும் வண்ணம் உரு மாறி உலகை விட்டு மறைந்து விட்டார். பின்பு இவருக்கு  பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. விபத்துக்கு பின்பு படிபடியாக பணியை நிறுத்தி 1991ல் முழுவதுமாக மூடி விட்டனர்.                                                                                                                                               ஆனால் நமது அரசியல் அரக்கர்கள் துணைகொண்டு நமது மண்ணில் கூடன்குளம் அணுமின் நிலையம் என்ற பெயரில் திறப்பு விழா நடத்தி விட்டது ரஷியா அரசு!                                                                                                    

கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 4 கி.மீ சுற்றளவுக்குள் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர் என்றால்  40 கி.மீக்கு உட்பட்ட பகுதியில் 40 லட்சம் மக்களும் வசிக்கின்றனர் என்பதே மிகவும் கொடியதான உண்மை!   ஒரே ஒரு ஆறுதல் 6000 MW உற்பத்தி என்பதால் கதிர்வீச்சின் அளவும் பன் மடங்காக இருப்பதால் உக்ரைன் நாட்டவரை போல் 14 நாட்கள் என்பது 14 விநாடியில் நமது அழிவு நம்மை வந்தடையும்நமது எலும்புக்களை ஆராய்ச்சி கூட பண்ண இயலாது ஆழமான குழிகளில்   மண்ணுக்குள் புதைத்து விடுவார்கள்!!!! எழுத்தாளர் சுஜாதாவின் கருத்துக்கள்! ஜப்பான் விபத்து http://josephinetalks.blogspot.com/2011/09/tirunelveli-kudankulam.html