10 Jul 2010

சிங்கார சென்னையா? இல்லை,இல்லை அசிங்க சென்னையா?

சென்னை பட்டினம் மேல் ஒரு போதும் மதிப்பு-ஆசை இருந்தது இல்லை. ஆகினும் வேலை வாய்ப்பு அங்கு கொட்டி கிடக்கின்றது என அறியும் போது சென்னையை வெறுக்கவும் முடியவில்லை. கடந்த முறை நேர்முக  தேர்வுக்கு வந்த போது என் கல்லூரி தோழியின் வீட்டில் தங்கியிருந்தேன்.அருமையான அடுக்குமாடி குடியிருப்பு. அவர்கள் சொந்தமாகவே வாங்கி குடியிருப்பதால் மட்டுமல்ல , காற்றோட்டமான வீடு, வீட்டுக்கு சுற்றுபுறவும் தூய்மை,குடியிருப்பு பகுதியும் நகரத்தின் அமர்க்களம் அற்று அமைதியாக காட்சி அளித்தது. வீடு இருக்கும் பகுதியோ அம்பத்தூர், எனக்கு செல்ல வேண்டியதோ  தாம்பரம் பக்கத்திலுள்ள கல்லூரிக்கு! காலை 7.30 க்கு  புறப்பட்டு 9.45  ஆகியும் செல்லும் இடம் சென்றடைய முடியவில்லை. பேருந்தில் இருந்து ஒரு நிறுத்ததில் இறங்கி ஆட்டோவில் சென்றோம் ரூ.300 கொடுக்க வேண்டியிருந்தும்
நேரம் தவறாது நேர்முகத் தேர்வுக்கு சென்றதில் திருப்த்தி அடைந்தோம்  .

இம்முறை (கடந்த திங்கள் ) நேர்முக தேர்வு வேளச்சேரியாக இருந்ததாலும், அமெரிக்காவில் இருந்து வந்த  கணவருடைய சகோதரியை பார்க்கவும், குடும்ப உறவுகளையும் பலப்படுத்த வேண்டும் என்ற பன்முக தேவை இருந்ததால் வேளச்சேரியில் உள்ள சகோதரியின் வீட்டில் தங்க முடிவு செய்யும் சூழலுக்கு தள்ளபட்டோம்.
கடந்த இரண்டு நாட்களாக அங்கு மழை ,சிங்கார சென்னை என்று துணை முதல்வர் மட்டுமே அழைக்க வேண்டும்.வெறும் தூறல் மழைக்கே  எங்கு நோக்கினும் தண்ணீர் தேங்கி அசிங்க சென்னையாக காட்சி தருகின்றது. நடபாதைமக்கள்   சர்க்கசில் கோமாளி கயற்றின் மேல் நடப்பது போல் தான்
நடக்க வேண்டியுள்ளது.
நெல்லையை மழைக்காலங்களில் காணும் போது கொதிச்சு போவது உண்டு ஆனால்  சுத்தம் என வரும் போது பட்டணம்,  பட்டினம் என பாகுபாடில்லாது எல்லா ஊர்களுமே அசுத்தமாக இருப்பதில் ஒற்றுமையாக உள்ளது.
அரசு துறை சிறப்பாக கார்ப்பரேஷனின் பணி மக்களிடம் வரி வசூலிப்பதில் மட்டும் தான் இயங்குகின்றது போலும்.
பன்றி ,டெங்கு போன்ற காய்ச்சல்கள்  வரும் போது மட்டும் சுத்தம் சுகாதாரத்தை
பற்றி சிந்திப்பது உகந்ததா?
என்னுடைய வகுப்பு தோழன் பத்திரிக்கையாளராக பணிபுரிகின்றார். அவர்   கதை கருவுக்காய் மிகவும் சிரமபடுவதை காணும் போது சில பிரச்சனைகளை நாங்கள் பகிர்வது உண்டு. ஒரு முறை , வீட்டு முற்றத்தில் குழந்தைகளை மலம் கழிக்க பழக்கும் அம்மாக்களை பற்றி கூறிய போது, இது தமிழர்களின் அடையாளம்  என வாதிட்டார்.
எனது முதுகலை  செயல்முறை பாடத்திட்டத்தின்  காரணமாக பல கிராமங்கள் செல்லும் அரிய வாய்ப்பு ஏற்பட்டது.பல வீடுகளின் வாசல் படியோடு சேர்ந்து கழிவு நீர் செல்லும்  வழி (கால்வாய்) காணலாம். பல அம்மாக்கள் அக்-கழிவு நீர் கால்வாய்களில் தன் குழந்தைகளை  காலைக்கடன் செய்ய அனுமதிக்கின்றனர்.

இச்சுகாதார  சூழலை எண்ணியே  எங்களுடைய வீடு கட்டும் நிலம் புறநகர் பகுதியாக இருக்க வேண்டும் என விரும்பினோம். எப்போழுதும் சுத்தமான காற்று ,வீட்டை சுற்றி மரம் என கனவுகளோடு குடிபுகுந்தோம். 6 மாதங்களுக்கு முன்பிலிருந்து  ஒரு குடும்பம் வாடகைக்கு குடி வந்தது.அவர்கள் வீட்டு இரண்டு சிறு குழந்தைகள்  ஒவ்வொரு  முறையும் சாப்பிட்டு முடித்தவுடன் "அம்மா ஆய் வருது" என கூறி தெருவுக்கு வந்து விடுவார்கள். காலையில் எழுந்த உடன் கோலம்,சூரியனுக்கு காலையும் மாலையும் வணக்கம் என இயற்க்கையும் வணங்குகின்றனர்.
பைபிளில், மலம் கழிக்க ஒரு செயல் விளக்கம் கொடுத்துள்ளார்கள். மலம் மனித குடியிருப்பிலாகாது. கையில் ஒரு கம்பு போன்ற ஆயுத்தால் குழி எடுத்து  அதை உபயோக படுத்தி விட்டு மூட சொல்லபட்டுள்ளது. நம்மவர்களூம் பின் பற்றலாம்.
சிலருக்கு இயற்க்கை உபாதை இயற்க்கையோடு இருந்தால் தான் வரும் என கேள்வி பட்டுள்ளேன்.  அரசு ஊழியராக பணிபுரியும் ஒரு நபர் காலையில் அவருடைய இரு சக்கர வாகனத்தில் காலைக்கடன் செலுத்த செல்வார். அவருடைய மனைவியும், அவருடைய தாயாரும் நடந்து பின்பே செல்வர். எனது கற்பனை இவ்விதமாக செல்லும்  , நான்கு சக்கரவாகனம் வாங்கினால் எல்லோரும் குடும்பத்துடன் செல்லுவார்கள் போலும்!.
   

1 Jul 2010

சிங்கம்

சிங்கம் திரைப்படம்  என்னுடைய குழந்தையின்  வற்புறுத்தலால் நேற்று பார்க்க நேர்ந்தது.மேலும் சில காட்சிகள் எங்ளுடைய குடியிருப்புக்கு பக்கத்திலுள்ள நான்கு வழிச்சாலையில் எடுக்கபட்டது. படத்தில் வரும் பாட்டை பார்த்துடனே தரம் தெரிந்தது.(பாட்டு: எட்டி உதைப்பேன், மிதிப்பேன்.  பொலிஸ் என்றாலே அடிக்கணும், உதக்கனும் என  சட்டமா? காட்டுமிராண்டியா மாறியிட்டிருக்கோம்  எனதான்  இத்திரைபடங்கள் காட்டுகின்றது.


அதிலும் சூர்யா கொடுக்கும்  பாவனைகள் இருக்கே, கண்ணை உருட்டது,காலை தூக்குவது என எந்த நாகரிகவும் பின் பற்றாத படம். சமீப காலமா ஹீரோ பாத்திரங்களுக்கு  என்றே விவேக் ,வடிவேல் போன்ற எடுபிடிகள் போல், அவுஙக திட்டினாலும் அடிச்சாலும் வாங்கும் ஒரு தன்மான அற்ற,நாணம் அற்ற  ஒரு சமூகத்தை உருவாக்க துணிகின்றனர். பேருந்திலும் சரி பொதுஇடங்களில் இந்த நாகரிகம் அற்ற மொழிகளை தயக்க மின்றி வயது வித்தியாசம் இல்லாம பேச கத்து கொடுக்காங்க!இப்படங்கள் வழியாக!.
போன வாரம் சென்னை அம்பத்துரில் இருந்து தாம்பரத்திர்க்கு நெரிசாலான பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. படியில் நின்று பயணித்துகொண்டே விடலை பசங்கள் அடிக்கும் கூத்தும் பேச்சும், அதற்க்கு ஈடு கொடுத்து  பெட்டை பெண்கள்  தமாஷ் ,அடி,கிள்ளுன்னு நெருக்கத்தில் பயணம் செய்த அலுப்பு தெரியாது என்னுடைய நிர்த்ததில் வந்து சேர்ந்தேன். ஒரு பைய்யன் கேட்கிறான் ஏய் மீணா, என் கூட வாரீயா,இடுப்புல வச்சு தூக்கிட்டு போறேன்,அதற்க்கு மீணா கூறும் பதில் ,டே உன்னால்  என்னை தூக்க முடியாது. இப்படி அப்படி சலிக்காம  நிர்த்தாம மாறி மாறி கொக்கி பொட்டு பேசி கிட்டே வாறாங்க.

அம்மாக்களும் சளச்சவங்க இல்லை, எங்க தெருவு பெண்கள் எல்லாம் இரவான கூட்டம் கூடி 10,11 மணிவரை பேசிகிட்டு இருப்பாங்க. எனக்கு ஒரு ஆர்வர் என்னவாக இருக்கும் பேச்சுன்னு. நானும் ஒரு மூன்று நாட்கள் போய் கூட்டத்தோடு உட்கார்ந்தேன். எல்லாம் படுக்கையறை, பக்கத்து வீட்டு பெண்களை பற்றியுள்ள தகாத கதைகள்.
விடலை பசங்க பேச்சை கேட்டு சிரிக்கலாம், இவுங்க பேச்சு ஒரே அருவருப்பாக இருந்தது.


தமிழ் படத்தை பார்ப்பதற்க்கு பதில் அழகான ஆங்கிலம் ,அரபி போன்ற வெளிநாட்டு திரைபடங்களை பார்க்க நமது மக்களை  உற்சாக படுத்தலாம்.ஆங்கில படம் என்றாலே பெண்கள் அணியும் ஆடைகளை நினைத்து சில அம்மாங்களுக்கு பயம் உண்டு.ஆனால் தேர்ந்து எடுத்து  பார்த்தால் மிகவும் நல்ல படங்கள் பிற மொழிகளில் தான் உண்டு .ஹிந்தி படங்ள் கூட நம்மவர் படங்ளை விட பரவாயில்லை.லொக்கேஷன் ,கதை என முன்னேறியுள்ளது.முத்த காட்சியை பற்றியும் அச்சம் கொள்ள தேவை இல்லை சுபம் என்று எழுதி கண்பிப்பதற்க்கு பதில் கடைசி காட்சியாக சேர்க்க பட்டிருக்கும். தமிழ் படத்தில கதாநாயகன்,நாயகி வரும்போது எல்லாம் இக்காட்சியால் நிறைக்க பட்டுள்ளது. பாடல் காட்சிகள் வரும் தமிழ் படம் கதாநாயகிகளை வைத்து பார்க்கும் போது  பயப்பட ஒன்றுமே இல்லை என தோன்றுகின்றது. சிங்கம் படத்தில் பாருங்க சூரியாவுக்கு சட்டக்கு மேல் ஒரு மேல் சட்டை. நிஜத்தில் நம் தமிழக ஆண்கள்  சட்டயே போடுவது கிடையாது பெரும் நேரங்களில். கதாநாயகிகளுக்கு உள் பாவாடை ,பனியன் தான் உடை!. தமன்னா, அனுஷ்கா  இவளுங்களுக்கு என்று தன்மானம்,சுரணை  இல்லயோ. பணம் பத்தும் செய்யும் தானே? அனுக்ஷா நடிக்கவா செய்யுது,ஒரே முறைப்பு தான். நார்னியா படத்தை தமிழில் எடுத்து நடிக்க வைக்கலாம்.பெண்களையும் ஒரு மனிதப்பிறவியா பார்க்காது அவர்களையும் மேஜை,கோப்பை,போன்ற ஜடப்பொருளாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.


சமூக புரட்சியாளர்களா ஆக விரும்பும்  ரஜினி, விஜயகாந்து, விஜய், சூர்யா என எல்லா நடிகர்களுக்குமே ஆடயற்றை பெண்களை தான் பிடித்துள்ளது போலும்
மேலும் ஈழபோருக்கு பின்பு சிங்கத்தை நினைத்தால் ராஜபட்சே தான் வருகின்றான்.தமிழ் சினிமாவிலோ சிங்கத்திடம் பாசப்பொழிவில்,சிங்கம்,பெண்சிங்கம்,இப்ப குட்டி சிங்க கதையை தாத்தா எழுதியிட்டு இருப்பாரோ? 



திரைப்படம் ஒரு மிக பெரிய கலை, கலைஞசர்கள் உருவாக்காது பணக்கார மூடனுகளிடம் இருந்தால் இப்படி தான் இருக்கும்.
முடிந்தால் இரான் படங்கள் Children Of Heaven, Baloon,Baran,Hindi movie-Tharee Zameen Par,Paa,English-Mighty Heart,Vertical limit,God Father,போன்ற திரைபடங்கள் பாருங்கள்.மக்கள் திருந்தாது மகேசர்கள் திருந்தபோவது சாத்தியமில்லை.

28 Jun 2010

செம்மொழி

செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை பகிர்ந்த  வலைப்பதிவை பார்த்த போது தமிழ் சினிமா காமடி மாதிரி இருந்தது. தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டுமாம்.  தமிழகத்திலயே வழியே காணும். நம்மை அறிவாளின்னு காட்டிக்க ஆங்கிலம் தெரியாவிடிலும் தங்லிஷிலாவது  பேச வேண்டியுள்ளது. தண்ணிர் பிடிக்கும் பம்படியில் கூட அக்கா, மறைந்து மேடம் போட்டு பேசும் வழக்கம் வந்து வெகுநாளாகிவிட்டது. இதிலும் இந்த தமிழங்க இருக்காங்ளே வரட்டு கவுரவ பார்டீங்க!


என் மகனின் பள்ளி தோழனின் அம்மா என்னை மேடம் என அழைத்து பேசினாலும் நான் அக்கா என்று அழைக்கவே விரும்புவேன். அதனாலயே அவுங்க அவ்வளவாக என்னிடம் பேசமாட்டாங்க.  இதில் தொலைகாட்சியின் பங்கும் பெரிதுள்ளது. மலையாள சானலை பாருங்க சேச்சி (அக்கா),அம்மச்சி(அம்மா),சேட்டா(அண்ணா) என்ற சொற்களை தான் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விரும்பி பயன்படுத்துவர். நம் தமிழ் மொழி சானல்  தொகுப்பாளிகள் தான்  மேடம்,சேர்,என்ற பதங்களை குப்பம்மாவுக்கும் சுப்பம்மாவுக்கும் அறிமுக படுத்தி கொடுத்து கொண்டிருப்பவர்கள்.


சமீபத்தில் ஒரு நேர் காணலுக்கு செல்ல வேண்டியிருந்தது, என்னுடைய புத்திசாலித்தனத்தை விட ஆங்கிலத்தில் உரையாடும் தகுதியால் மட்டுமே அளக்கபட்டேன்.


இந்த மாநா(னா)டு தீருமானமெல்லாம் போடுவதர்க்கு பதிலாக தமிழை எளிய முறையில், சுவாரசியமுடன் கற்ப்பிக்கும் முறைகளை கையாள  வேண்டும், கணிதம், அறிவியல் போன்ற பாடஆசிரியர்களை விட தமிழ் ஆசிரியைதான் என் குழைந்தைகள் பயப்படுவார்கள். பொதுவாக தமிழ் கற்ப்பிக்க ஆண்
 ஆசிரியர் கிடைத்தால்  ஓரளவு தப்பித்து விடலாம், பெண் வாத்தியாருங்க
 பேச்சு செயல் எல்லாமே  வெறுப்பை/சலிப்பை கொடுக்கும்.  வார்த்தைகள் அடாவடித்தனம்  நிறைந்ததாக  இருக்கும்.  மாணவர்களை மாடுகளை போன்று கையாளுவார்கள். பள்ளியில் பாருங்க தமிழ் ஆசிரியை தான் எண்ணை வடிஞ்ச முகத்துடன் கடுகு வெடிப்பது மாதிரி, அழகு ரசனை அற்ற உடை அலங்காரத்துடன் வருவர். கோபம் வந்தால் வாயில் இருந்து வரும் வார்த்தை எருமை,நாய்,மாடு ,சனியன் என்றே இருக்கும்..


நாங்க கேரளாவில் பிறந்து கேரளாவிலே வளர்க்கபட்டோம். பொது இடங்களில் தமிழ் பேசினால் மதிப்பை பெற இயலாது. ஆகையால் பேச்சு மொழியாக மலையாளத்தையும் கற்று கொண்டோம்.வீட்டில் பெற்றோரிடம் ,உறவினர்களிடமும் தமிழில் பேசியே மகிழ்ந்தோம். ஆனால் சில          தமிழர்கள் சிறப்பாக  பீர்மேடு,குட்டிகானம்,ஏலப்பாறை,போன்ற இடத்தை சேர்ந்த தமிழர்கள் மூக்கு வழியாக மலையாளத்தில் தான் முக்கி முக்கி பேசுவாங்க. தமிழ் பேசும் தமிழ்ர்களை பச்சை மலையாளியை விட கேவலமாக பார்ப்பார்கள்.


இன்னும் வேரு ரக தமிழர்கள்,சாத்தான்குள்ம், திருநெல்வேலியை சேர்ந்தவங்க  மலையாள மொழியை சுட்டு போட்டாலும் பேச மாட்டேன் என்று அடம் பிடிப்பாங்க..மலையாளிங்க கேணைன்னு கிண்டல் அடித்தாலும் பாண்டினு அழைத்து கேலி செய்தாலும் கண்டுக்காம நடந்துக்குவாங்க.ஏன்னா அவர்கள் மொழி பரிச்சயம் இல்லாததால் பேச இயலாத மையாகிவிடுவார்கள்.எங்களை போன்ற தமிழர்களுக்கு அவர்கள் மொழியும் படித்துள்ளதால் கிண்டல் அடித்தாலும் பதில் வழக்காடி அவர்களுக்கு இணையாக வாழ,பேச பழகியிருந்தோம்.பாண்டினு அழைத்தால் உங்க கொள்ளு தாத்தா தமிழர் தானே,உங்க மலையாளமொழியின்  தாய் மொழியே தமிழ்தான்னு கூறி தமிழையும் கத்து கொடுத்துடுவோம்.



எந்த மொழியானாலும் தெரிந்திருதால் பலம் தான். 
ஆனால் மலையாளமும் தமிழும் அற்ற களியாக்காவிளை போன்ற இடைத்தை சேர்ந்த தமிழர்களை என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.மலையாளமும் பேசாது, தமிழும் பேசாது  கலவரம் கொண்டு அலையுவாங்க.  எங்க பல்கலைகழகத்தில் ஆசிரியர், மாணவர்கள் என பெரும் பகுதி இவர்களால் ஆக்கிரமிக்க பட்டுள்ளது. இளுத்து அழுது ஒரு மலையாளம் அல்லாத தமிழ் பேசி அறிவாளின்னு  படம் காட்டியே பொழைச்சு போறாங்க. செம்மொழி மாநாட்டிலே இவங்களுக்கு தமிழ் பேச கத்து கொடுக்க ஒரு தீருமானம்  போட்டிருந்தால் வரவேற்று இருக்கலாம்.
அவர் அவருக்கு அவர் மொழிதான் செம்மொழி! 




சதான் ஹுசைன் சொல்லியுள்ளார்,என்னடா இங்கிலிஷ், புஷ்,தஷ்ன்னு நம்ம அரபி மொழி போல்வருமா? ஆக கையாள தெரிந்த மொழியெல்லாம் அவரவருக்கு செம்மொழியே!

13 Jun 2010

ஜாஸ்மின் வெற்றி-குஷ்புவின் கருத்து?

 ஜாஸ்மின் இந்தவருட 10 ம் வகுப்பு தேற்வில் முதல் இடம் பெற்ற நெல்லை மாநகர பள்ளி மாணவி ஆவார். சமீபத்தில் குஷ்பு பேசிய போது தமிழக முதல்வரின் சாதனையாக  இதை குறிப்பிட்டார். மேலும் ஒரு தகவல் கூறினார்,ஜாஸ்மினுடைய தகப்பனார் வீடு வீடாக சென்று துணிவிற்ப்பவர் என்றும் , இப்படியுள்ள சூழலில் படித்த ஜாஸ்மின் முதல் இடம் பெற்றது முதல்வரின் சாதனை என்று.



ஜாஸ்மினுடைய அறிவாற்றலை கேலி செய்வதாகவே உள்ளது. என்ன முதல்வர் ஜாஸ்மினுக்காக பரிட்சை எழுதினாரா?. ஜாஸ்மின் படித்த பள்ளியை நோக்கின் த்மிழக அரசின் சாதனை புரியும். மாநகர பள்ளி ஆக இருந்தும் போதுமான வசதியற்ற பள்ளி இது. பழைய பேட்டையில்  குற்றாலம் செல்லும் ரோட்டு ஓரம் அமைந்துள்ளது.பள்ளியின் வாசல் துர்நாற்றம் வீசும் பொது ஓடை, போதுமான இடவசதியற்ற முற்றம் என அரசு பள்ளியின் முகமுத்திரயுடன் காட்சி  அளிக்கின்றது.பெண்கள் பள்ளியாக இருந்தால் 5 முதல் 8 ஏக்கர் சுற்றளவு இருக்க வேண்டும். இப்பள்ளியின் சுற்றளவு ஒரு ஏக்கர் கூட இருக்க வாய்ப்பு இல்லை.அங்கு படித்த ஒரு மாணவி  மூலமாக  அறியபட்டது சுகாதாரமுள்ள கழிப்பிட வசதி கூட இல்லை என்பதே. ஜாஸ்மின் பெயரில் விளம்பரம் பெரவேண்டும் என விரும்பும் அரசு   செய்யவேண்டியது மாணவியின்  இனியுள்ள பள்ளி  செலவை ஏற்ப்பது, வேலைக்கு உத்திரவாதம் அளிப்பது என்பதுதான்.

பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்து வழங்கும் பாராட்டு விருதுகள் எல்லாம் மாணவர்கள் நலனுக்கு உதவுகின்றதா என்றால் கேழ்விக்குறியே.பல்கலைகழக விருதுகள்(gold medal) வழங்கும் நிகழ்வுகளை   மாணவர்களுக்கு வழங்கும் ஒரு பாராட்டு விழா என்றால் கிடையாது என்பதுதான் உண்மை. அமைச்சர்களுக்கு மதிப்புவழங்குவதற்க்கும் ,அமைச்சர்கள்  தங்கள் கருத்துக்களை உரைக்கும் தளம் ஆகவே உள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்களை கண்டு ரசிக்கலாம்.

விருது என்ற பெயரில்  அளிக்கப்படும் மெடலுடன் வேலைவாய்ப்பும் அளித்தால் சிறப்பாக கருதலாம்.  இல்லாவிடில் மெடல் மட்டும் பெறபடுவது கேலிகூத்தாகவும் சிலவேளைகளில் உணரபடுவதும் உண்டு. நான் பெற்ற  மெடலை  என் வகுப்பு தோழனிடம் காண்பித்தபோது இதுக்கு 50 ரூபாய் மதிப்பு வரும்.  தங்கம் அல்ல தங்கம் பூசிய தகரம் என கூறினான் . எனக்கு  அதிர்ச்சியை  கொடுத்தது. ஒரு வேளை ஒரு வேலை வாய்ப்பு கொடுக்க பட்டால் விருதுக்கு பதின் மடங்கு மதிப்பு கூடியிருகும். முயற்ச்சியுடன் படிப்பவர்களுக்கு  ஒரு உற்ச்சாகத்தையும் கொடுத்திருக்கும்.

குஷ்புவிடம் மறுபடியும் வரவேண்டியுள்ள  காரணம் ,ஜாஸ்மின் சாதனையை கலைஞரின் சாதனையாக கூறியுள்ளார். ப்ள்ளி வாசலை காண இயலாத பெண்கள்,தெருவோரங்களில் பிச்சை எடுக்கும் பெண்கள்,  குப்பை பெருக்கும் பெண்கள் யாருடைய சாதனை. குஷ்புவின் கணவருக்கு கலைமாமணி விருது கொடுத்து குஷ்புவை  அரசுவின் ஊதுகுழல் ஆக்கியுள்ளார்கள் போலும்.  சுந்தர் தனது படங்ளில் பெண்களை பயன்படுத்துவது  பரிதாபத்துக்குரியதே. கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, காதல் காட்சிகளில் கூட  முரட்டு பயலிடம் பம்பரம் கிடைத்துள்ளது போல் கைய்யாளுவதை கண்டுள்ளோம்.குஷ்பு போன்றோர் நாய்க்கு எலும்பு துண்டு கிடைத்தால் வாலை ஆட்டி நிற்ப்பது போல் நன்றாகவே மனப்பாடம் படித்து ஒப்பிக்குகின்றனர். பெண்கள் நாயகி போல் பொது மேடைகளில் காட்சி தருகின்றார் பேசுகின்றார். தண்டு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்பது இது தானோ?

8 Jun 2010

அலுப்பூட்டும் உரையாடல்கள்!

ஒருவரை ஒருவர் தொடர்பு படுத்திகொள்ள பேசுதல் பயன்படுகின்றது. எவ்வாறு பேச வேண்டுமென்று சிலருக்கு வரையரை கிடையாது. நாக்குதான் இலவச தொண்டு செய்கின்றதே என சிலர் பேசியே தொடர்பை முறித்து கொள்வார்க்ள்.
எங்க திருநெல்வேலியில் பேச துவங்கும் முன்பே ஒரு தேர்வு வைப்பின்,நீங்க என்னாளு, சொந்த ஊர்  ஏது, அப்புறம் பேசும் பகுதி முழுதும் எங்க ஆளுங்க இப்படி, எங்களிலே இதான் முறை, உங்க ஆளுங்களே இப்படித்தான் இப்படி அப்ப்டி திருநெல்வேலி நா-வாளாலேயை வகுந்துடுவாங்க.
இன்னும் கொஞ்ச வாத்தியார் பெண்டாட்டிக, எங்க வீட்டு சார் சொன்னாங்க ,எங்க சார் வந்தாங்கனு  பச்சபுள்ளயாட்டும் அழுவாங்க.
வேறு சில மனுஷாங்களை பார்த்தாலே நீங்க ஆஸ்பத்திரியில  சேர்ந்தது மாதிரி ஆயிடுவீங்க. என்ன மெலிஞ்ட்டே ,சொகமில்லயா, கறுத்து போயிறே அடையாளமே  தெரியலே, , சே ஏன் இப்படி இருக்கே சாப்பாட்டுக்கே வழியில்லையான்னு மாதிரி கேட்டுடுவாங்க. அவ்வளுவு நேரம்  நன்னா feel  பண்ணுன நம்மளே சோர்ந்திடுவோம்.
சரி சரி கல்வி அறிவு பத்தாத மக்கள்னு வடிவேல் மாதிரி மண்டயில அடிச்சுகிட்டு  சில மெத்தபடிச்ச   மேதைகள் பேசதை பாருங்க.
இவுங்க என்னுடன் MPhil  கற்க்கும் தோழி
ஜோசபின் நமக்கு வேலை கிடைக்குமா?
எனக்கு நம்பிக்கையே இல்லை.
வேலை கிடைகலனா என்ன பண்ணுவது?
வேலை கிடைத்தாலும் ரூ 6500  கிடைக்குமாம்.
இதை வைத்து  என்ன பண்ண்?
நீங்க முயற்ச்சி பண்ணுகின்றீர்களா?
எங்க ஊரில உங்களுக்கு கிடைக்காது!ஏன்ன எங்களுக்கு கொடுத்த பிறகு தான் நீங்க எதிர் பார்க்க முடியும்....
நீங்க முயர்ச்சி  பண்ணின college ல அவளெ எடுத்துட்டாங்களாம்..... அவ இருக்குத கல்லூரியில் நான் போகமாட்டேன்.
நீங்க தேர்வுக்கு படிச்சிட்டீங்களா? என்ன எழுதே?  4 பக்கம் எழுதனுமோ? நான் ஒற்றும் படிக்கலே......என்னத்தை படிச்சு......

சரி போதும் போதும்  என்று எண்ணி முணைவர் மாணவி ஒரு பேராசிரியரின் விடைபெறும் (sentoff)   மீட்டிங்ல பேசுகிறதை கவனித்தால்,  "நம் பேராசிரியர் சிரிப்புக்கு பெயர் பெற்றவர்   சிலரை பார்த்தவுடன் சிரித்து பேசுவார், பேசும் நபர் நகர்ந்தவுடன் அவன்கெடக்கான்  என கூறுவார் !"........எப்படியிருக்கு வாழ்த்துரை?
ஒரு இளம் முனைவர் ஆசிரியை  எப்படி பேசுகின்றார் என பாருங்கள், "பேராசிரியருக்கு ஒவ்வொரு செட்ல ஒருத்தரை தான் பிடிக்கும் , என்னைதான் எங்க  செட்ல பிடிக்கும் என்னை செல்லம் தான் கூப்பிடுவாங்க. (நாங்களும் அவருடைய மாணவர்கள் தான் நாங்க மட்டும் என்ன  தொல்லையா?)

சமச்சீர் கல்வி

தமிழக அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடத்திட்டம் அறிமுகபடுத்தியுள்ளது.என்னுடைய சகோதரி மகன்  இத்திட்டத்தில் மாட்டியுள்ளான். இத்திட்டத்தின் கீழ்உள்ள பாடத்திட்டம்  கேரளா மற்றும் கர்னாடகா  மாநில பாடத்திட்டங்களை விட தரம் அற்று இருப்பதாக  கூறுகின்றனர்.  கல்வி தரம்  எல்லா மாநிலங்களிலும் சமச்சீர் பெற்றிருக்க வேண்டும் . இவ்விதம் உள்ள சீர் திருத்தால் நம் மாநில மாணவர்கள் தேசிய அளவில்  தரம் தாழ்த்த படும் சூழல் உள்ளது. உலகமயமாக்கல்  சூழல் கல்வி மட்டும் கல் யுகத்தை நோக்கீ சென்று கொண்டுருக்கின்றது. ஏற்கனவே தமிழ்நாடு  SSLC கேரளா SSLC  க்கு சமமாக மதிப்பது கிடையாது. நமது மாணவர்ளுக்கு பட்டபடிப்பு முடித்திருந்தால் கூட வங்கி க்கு சென்றால் ஒரு படிவம் வாசித்து நிரப்ப தெரிவது கிடையாது, பிழை இல்லாது எழுத தெரிவது கிடையாது ஏன்  ஒழுங்காக ஆங்கிலம் போகட்டும் தமிழில்  கூட பேச தயங்குகின்றனர்.(கடலையல்லா-loose talk).

ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தி தரமான கல்வி தருவதை விடுத்து மாணவர்களின் எதிர்காலத்தையே வீணடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பெறும் ஊதியம் ரு 1500  துவங்கி 4000 த்துக்கு உள்ளாகவே.கொத்தனார் (400* 30) கூட இவர்களை விட பல மடங்கு ஊதியம் பெருகின்றனர். தற்போது அரசு பள்ளி ஆசிரியரின் ஊதியத்தை கணக்கிட்டு  தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கற்று கொடுக்கும் ஆற்றலை குறைத்து ஏனோ தானோ என்று கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தனியார் பள்ளி  மாணவர்களும் tution போய் தான் தங்கள் படிப்பை சரிபடுத்திகொள்கின்றனர்.
 tதுவக்கபள்ளீ படிப்புக்கு  ஒரூ வருடத்திற்க்கு  குறைந்தது 20 ஆயிரம்  ரூபாய்  கொடுக்க நேரிடுகின்றது.  பள்ளி வாகன கட்டணமும்  அசுரனை போன்றுள்ளது.
 அரசு பள்ளிக்கு அனுப்பலாம் என்றால் ஒரு வகுப்பில் 100க்கும் அதிகம் மாணவர்கள், ஆசிரியர்கள்( ஆண் பெண் இருபாலரும்) வகுப்பறையே விட பக்கத்து தேனிர் கடை மற்றும் அரட்டை அரங்த்தில் காலம் தள்ளுகின்றனர்.இன்னும் சில  ஆசிரியைகள் தங்கள் தலையில் உள்ள பேன் எடுக்கவும் மாணவிகளையே பயண்படுத்துகின்றனர். பள்ளி வளாகம், கழிப்பறை எங்கு செல்லினும் சுத்தம் பராமரிப்பது கிடையாது.ப்ள்ளிக்கு தேவையான தண்ணீர்  எடுப்பதற்க்கும் மாணவர்களையே பயன்படுத்துகின்றனர்.
இதில் பணக்கார வீட்டு குழந்தைகள், அரசு அதிகாரிகளின் குழந்தைகள் central board ல் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். ஆக   சமச்சீர் கல்வியில் படித்து படித்த  ஏழைகளாக தமிழ் நாட்டுக்குள்ளயே இருக்க  வேண்டியது தான்.http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9413:2010-06-06-19-51-35&catid=1126:10&Itemid=393

தில்லியில் படிக்கும் ராமதாஸ் பேரபிள்ளைகள் வெளிநாடுகளில் படித்த கலாநிதி சகோதர்கள் இருக்கும் போது ந்மக்கு ஏன் கவலை.கல்வி தந்தையர்களுக்கு வாழ்வு அளித்து விட்டு மானாட மயிலாட கண்டு நம் கவலையை களையுவோம். இத்ற்க்கு ஒரே வழி கல்வியை மத்திய அரசின் திட்டத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும்.http://www.blogger.com/post-edit.g?blogID=8803242748745605782&postID=508094286872031209

31 May 2010

My Home Town-Vandiperiyar.


வண்டிப்பெரியார்   ஏழு  தேயிலை தோட்டங்கள்   நடுவில்  அமைதியான தேவதை போல் காட்சியளிக்கும் அழகான சிறு வியாபார ஊர் ஆகும்.  பெரியார் என்ற நதி  இக்கரை, அக்கரை என இந்த சிற்றூரை பிரித்து  ஊடே ஓடுகின்றது.

பாலம் கட்டுவதற்க்கு முன்பு நதியின் இரு  கரையிலும்  வாகனஙகளை  நிறுத்தி   பொருட்களை வள்ளம் (தோணி) மூலம் மாற்றியுள்ளனர்.  ஆகயால் எங்க ஊருக்கு வண்டி (வாகனம்)+பெரியார்) என பெயர் வந்துள்ளது.

வண்டிப்பெரியார் பாலம் ஆங்கிலேயர்களால் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.  பெரிய வாகனங்கள் செல்லும் போது சிறிய அதிற்வை தற்போது  உணரலாம். முல்லைப்பெரியார் டாம்(dam)  உடைந்தால் முதல் முதலாக  வண்டிபெரியார் அழியும் என கூறி நடைபெரும்  அரசியல் போராட்டத்தின் முக்கிய தளவும் இதுவே.

மழை காலத்தில்  இந் நதியே   பார்க்க திரளும் கூட்டம் பெரும் அளவு உண்டு.
AVT, ABT, Malayalam Plantation,Michel Manarkadu  போன்ற தேயிலை தோட்டங்கள் இருப்பதால்     அரசியலுக்கும் பஞ்சம் இருந்தது கிடையாது.

பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உடபட்ட இப்பிரதேசம் கவனிப்பாரற்ற காடாகவே இருந்துள்ளது. அரச தண்டனை பெற்று தலைமறைவாக வாழ்ந்த பூமி என்றே சொல்கின்றனர். பின்பு ஆங்கிலேயர் திருவனந்தபுர ராணியின் வேண்டுதலுக்கு இணங்க ஏலம் பயிறிட குட்டிக்கானம் பக்கம் வந்து குடியேறியுள்ளனர். லண்டனுக்கு உகுந்த காலநிலை உள்ளதால் பல வெள்ளக்காரர்கள் விரும்பி தேயிலை தோட்டவும் பயிறிட ஆரம்பித்து விட்டனர்.    காமராசர் ஆட்சியில் கன்னியகுமரியை தமிழகம் வைத்து கொண்டு இப்பிரதேசத்தை  கேரளா இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதியுடன் இணைத்து கேரளாவுடன் இணைத்தது. ஆங்கிலேய காலத்தில் தேயிலை தோட்ட வேலைக்கு என ராமநாதபுரம், சங்கரன்கோவில், குடியேறிய தமிழகர்களும் வியாபாரம் தேயிலை தோட்ட அதிகாரிகளாக வந்த தென் தமிழக மக்களும் இங்கு குடியேறியதால் 70  சதவீததிலும் மேலுள்ள மக்கள் தமிழர்களே. வண்டிபெரியார்  டவுணில் உள்ள வியாபாரிகளும் சாத்தான்குளம், கம்பம் போன்ற ஊர்களிலுள்ள தமிழர்கள் தான்.



10 ஆண்டுகளுக்காளாக மக்கள் பெருக்கம் அதிகரித்து வருகின்றது.  வேலை வாய்ப்பு தேவைக்காக மலையாளிகளும் குடியேற ஆரம்பித்து விட்டனர். . முன் காலங்களில் இடம் கொடுத்தும், இங்கு குடிபுகிர தயங்கிய மலையாளிகள் தற்போதைய வசதி வாய்ப்பு கண்டு குவிய ஆரம்பித்துள்ளனர். இருந்தும் இயற்கையின் அழகுக்கு எந்த  குறைவும்  இல்லாது அழகாக பராமரிக்கின்றனர்.                                                                                              
நாங்க படிக்கும் காலங்களில் (25 வருடத்திற்க்கு முன்பு)  கல்விக்கு என அரசு பள்ளி மட்டும் சார்ந்து இருக்கும் சூழல் இருந்தது. தொடக்க கல்விக்கூடம் கிழக்கு பக்கம்  இருக்கும் மலையின் மேலும்  மேல்நிலைப்பள்ளி மேற்கு பக்கம் இருக்கும் மலைக்கு மேல் இருந்தது. உயர்நிலை பள்ளி வண்டிபெரியார் டவுனில் இருந்து 1.5 மைல் தள்ளி பாதையோரம் அமைந்திருந்தது. உலக பிரசித்தி பெற்ற தேக்கடி, சபரிமலை அய்யப்ப சாமி கோவில் மிக அருகாமையில் அமைந்துள்ளதால் சுற்றலா பயணிகளுக்கு பஞ்சம் இருப்பது இல்லை.

தேக்கடியை முன்நிறுத்தி வரும் சுற்றுலா பயணிகளால் வண்டிபெரியாரின் முக்கியம் மங்கி காணப்படுகின்றது. ஒருவேளை கேரளா அரசுவின் திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம். தேக்கடியே சுற்றி இருப்பது மலையாளிகளே, ஆனால் வண்டிபெரியார் தமிழர்களின்  பிரதேசம் என கூறலாம்.  உண்மையில் தேக்கடி(குமளி)யை விட வண்டிபெரியாரில் சாப்பாடு, தங்குமிடம் மலிவாக கிடைக்கும்.  மதுரையிலிருந்து  குமளிக்கு 4 மணி நேரப்பயணம் செய்ய வேண்டும். குமுளியிலிருந்து 1/2 மணிமணி நேரம் பயணம் வண்டிபெரியார் சேர போதுமானது. வண்டிபெரியாரில் லாட்ஜில் தங்க ரூ.350ல் இருந்து 1000 வரை செலவு வரும்.  சாப்பாடும் கேரளா, தமிழ் நாடு சாப்பாடு என ருசியாக சாப்பிடலாம்.
பயணிகளை அழைத்து செல்வதெற்கென, மலைகளில் பயணம் செய்ய உதவும்  ஜீப்புகளும் எளிதாக கிடைக்கும். பல தரப்பட்ட கலாச்சார சூழலுள்ள மக்களாக இருப்பினும் உலகமயமாக்கலின் தாக்கம் எட்டாத எளிமையான மக்கள்.

பொதுவாக மக்கள் இணையத்தில் தரவுகள் சேகரித்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி பார்த்து திரும்புகின்றனர். பருந்தன் பாறை புல்லு மேடு , மவுண்டு, வள்ளக்கடவு போன்ற இடங்களூம் இயற்கை பிரியர்களுக்கு விருந்தாகும் இடமாகும்.  நமது சொந்த வாகனத்தில் சென்றால் கூட வாகனத்தை பாதுகாப்பாக வண்டிப்பெரியார் பஞ்சாயத்து மைதானத்தில் அல்லது பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு உள்ளூர் வாகனங்களில் செல்வதாகும் பாதுகாப்பு.  குறுகிய கல் மண் நிறைந்த பாதையில் பயணம் செய்தாலும் அந்த பயணத்திலுள்ள சவால்  நம் மனதில் என்றும் நினைவாக நிற்கும்.

நான் எனது ஊருக்கு செல்லும் போது இக்கரையிலிருந்து அக்கரை செல்லும் வரை நல்லாயிருக்கிறேயா,சுகமானோ(are you fine in Malayalam) என்ற விசாரிப்பு  கேட்டு கொண்டே இருக்கும். கல்வி மற்றும் வசதி வாய்ப்பு பெறுவதில் சுரண்டபடும் மக்களாகவே என் மக்கள் இன்றும் இருக்கின்றனர்.