10 Aug 2025

9ஆம் -17ஆம் நூற்றாண்டு -

 9ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில், அசோக மன்னனின் பிரசாரகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட #பௌத்தம் முழு கேரளத்திலும் பரவலாகவும் முக்கியமான மதமாக இருந்தது. இம் மதம், பெருமாள்களில் ஒருவரை உட்படப் பெருமளவிலான மக்களை மாற்றச் செய்யும் அளவுக்கு வெற்றி பெற்றது.

ஆனால், #சங்கரரின் போதனைகள், மதத்தின் தன்மையில் ஏற்பட்ட நிலைமாற்றம் ஆகிய காரணங்களால், இந்தியாவின் பிற பகுதிகளிலும் போலவே, ம்லபாரிலும் பௌத்தம் விரைவில் வீழ்ச்சியடைந்தது.
பௌத்தத்தை ஒதுக்கி #பிராமணியத்தின் செல்வாக்கு அதிகரித்தது. , முன் காலத்தின் தந்தை வழித் தமிழர்கள் ஆட்சியான #சேர மன்னராட்சிககுளுக்கு எதிராகத் தாய் வழி மரபை பின்பற்றிய #நாயர்களின் முக்கியத்துவம் அதிகரித்தது. சேர மன்னராட்சி முடிவுற்றதும் , அதன் அமைச்சர்கள் மற்றும் ஆட்சி வம்சத்தில் இருந்தவர்கள் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்வது என்பது, நம்பூதிரிகள் ஆதிக்கம் நாட்டிலும் மக்களிலும் ஒரு #மதஅரசை (theocracy) நிறுவ முயற்சித்தது.
இவை அனைத்தும் 9ஆம் நூற்றாண்டின் முக்கிய அம்சங்களாக, ஒரு பழைய ஒழுங்கின் முடிவையும், புதியதொன்றின் துவக்கத்தையும் குறிக்கின்றன. உண்மையில், இது கேரளத்தில் இருண்ட காலத்திலிருந்து #மத்தியக்காலத்துக்கான மாற்றக் கட்டமாகும்.
#நாயர் குடியினரின் அதிகாரத்தை திருவிதாங்கூரில் மார்த்தாண்ட வர்மாவும், மலபாரிலும் கொச்சியிலும் #ஹைதர் அலியும் டீப்பூ சுல்தானும் முறியடிக்கும் வரை, குடியாட்சி மற்றும் இராணுவ அமைப்பின் அடிப்படையாக நிலத்துடைமைக் கோட்பாடு (Feudalism) தொடர்ந்து கொண்டு இருந்தது.
அந்நியர்கள் இந்தியக் கடல்பரப்பில் வந்தது கேரள அரசியல் வரலாற்றில் நிச்சயமாக பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது; ஆனால் அது மக்களின் வாழ்க்கையில் எந்தத் மாற்றத்தையும் கொண்டுவராததால், அதனை ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாகக் கருத முடியாது.
இந்த காலகட்டத்தில் #அந்நியர்கள் வந்தது அரசியல் வரலாற்றின் முகத்தை முற்றிலும் மாற்றியது; ஆனால் அது நவீன காலத்தின் தொடக்கமாகக் கருதப்பட முடியாது. ஒரு மக்களின் வாழ்க்கையில் நிகழும் தனித்துவமான மாற்றங்களே காலப்பிரிவின் அடிப்படையாக இருக்க வேண்டும். வாஸ்கோட காமாவும் அவரது தொடர்வார்களும் மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. #போர்ச்சுகீசர் பீரங்கிகளின் முன் தங்கள் எளிய வாள்களால் தடுக்க முயன்ற வீர நாயர் படைவீரர்களிள், ஒருவருடனொருவர் இடைவிடாமல் சண்டையிட்டு அழிய காரணமானது.
மத்தியக்காலத்தின் பிரிக்கமுடியாததும் நிலத்துடைமை ஆட்சியும் மதஅரசும் முக்கியமானவை. மத்தியக்காலம் 1792 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புவரை கேரள அரசியலில் பெரும் செல்வாக்கைச் செலுத்தின. ஆகவே, மலபாரில் மத்தியக்காலம் #பொதுவாக 825 முதல் 1800 வரை நீடித்தது.
மத்தியகாலக் கேரளத்தின் வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது
#முதல் பகுதி (சுமார் கி.பி. 825–1500) போர்த்துகீசர் வருகையோடு முடிவடைந்தது;
#இரண்டாவது பகுதி (1500–1800) மத்தியகாலத்தின் முடிவோடு நிறைவடைந்தது.
முதல் பகுதியில், #சேரமான் பெருமாளின் ஆதிக்கத்திலிருந்து விலகி, அவரது கீழமைப் பிரபுக்கள் தன்னாட்சியைப் பெற்றனர்; சாமூதிரிகளின் எழுச்சி உச்சம் பெற்றது;
#அரபு வணிகர்களும் மாப்பிள்ளை படையினரும் அளித்த உதவியால், சாமூதிரிகள் விரைவாக அதிகாரம் பெற்றனர். மாமாங்கத்தின் பாதுகாவலர் அல்லது ரக்ஷாபுருஷர் என்ற நிலையை அடைந்த சாமூதிரி, இந்தக் காலப்பகுதியில் கேரள வரலாற்றின் மையப் பாத்திரமாக உயர்ந்தார்.
சேரமான் பெருமாள் ம்றைந்த பின் தன்னாட்சி அனுபவித்த பல குடியரசுத் தலைவர்களும் பிரபுக்களும், அவரது மேன்மையையும் ஆட்சியையும் ஒப்புக்கொண்டு, சாமூதிரிக்கு கட்டணம் செலுத்தத் ஆரம்பித்தகனர்.
#திருவிதாங்கூரின் ரவி வர்ம குலசேகரனின் வீரச் செயல்கள் அவரின் புகழார்ந்த சாதனைகள், ரவி வர்மாவின் ஆட்சியை மத்தியகால திருவிதாங்கூரின் மிகச் சிறப்பான காலமாக மாற்றினாலும், அது மொத்தக் கேரள வரலாற்றில் பெரிதும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. ரவி வர்மா, சாமூதிரிகளையோ கோலத்திரிகளையோ விட, பாண்டியர்களுடனான தொடர்புகளிலேயே அதிகம் ஈடுபட்டிருந்தார்.
15ஆம் நூற்றாண்டில், சாமூதிரியின் கேரளத்தின் தெற்கு பகுதி — கொச்சி மற்றும் திருவிதாங்கூர் நோக்கி — தடையின்றி முன்னேற்றம், கேரளத்தின் அரசியல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அவரது இந்த முன்னேற்றம் திடீரெனவும் எதிர்பாராத விதமாகவும் போர்த்துகீசர் வருகையால் தடுக்கப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் மதத்தின் மூலம் அரசியலைப் பாதுகாத்த நம்பூதிரிமார்களின் எழுச்சியும் நடைபெற்றது. ஆனால் பெருமாள் ஆட்சியின் காலத்தில் நம்பூதிரிமார்கள் அரசியலில் இருந்த தாக்கத்தை சில அளவில் இழந்தனர். ஆனால் 9ஆம் நூற்றாண்டில், சங்கராச்சாரியரின் ஆன்மிக வெற்றியின் விளைவாக , மீண்டும் தங்கள் முக்கியத்துவத்தைப் பெற்றனர். தாங்கள் கடைப்பிடித்த கடுமையான, தனித்துவமான சடங்குகள் சங்கராச்சியர் வகுத்தவையெனக் கூறினர். நடுக்கால முழுவதும் அரசியலில் அவர்கள் பெரும் செல்வாக்கைச் செலுத்தினர்.
இந்தக் காலம் மற்றொரு காரணத்தாலும் முக்கியமானது — கேரளமும் தமிழ்நாட்டும் இடையிலிருந்த நெருங்கிய தொடர்பு இத்துடன் முடிவடைந்திருந்தது. கேரளம் அண்டை நாடுகளிலிருந்து சில தனித்துவமான அம்சங்களால் வேறுபட்டது. காணம் முறை நில உரிமை, சிதறிய குடியிருப்புகள் கொண்ட கிராமங்கள், மருமக்கத்தாயம் எனும் மரபுவழி உரிமைமுறை ஆகியவை நடுக்காலக் கேரளத்தின் சிறப்பம்சங்களாக இருந்தன. இந்தக் கலாச்சார ஒருமைப்பாடு படிப்படியாக பல ஆண்டுகளில் உருவாகி, இக்கால முடிவில் முழுமையடைந்தது.
இரண்டாம் பகுதி கேரள வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வொன்றால் தொடங்குகிறது — போர்த்துகீசர்கள் காலிக்கட்டில் வந்தடைதல். அவர்கள் சாமூതിരியின் விரிவாக்கக் கொள்கையைத் தடுத்து, கொச்சின் ராஜாவின் உதவியுடன் சாமூதிரியின் பிரதேசங்களைத் தாக்குவதாகவும் மிரட்டினர். ஆரம்பத்தில் இந்நாட்டில் வாழ்வதற்கு, வர்த்தகம் செய்வதற்கான உரிமைக்கே போராடிய போர்த்துகீசர்கள், ஆஃபோன்சோ டி அல்புகெர்க் ஆட்சி காலத்தில் ஆற்றலும் புகழும் பெற்றனர். கடலின் ஆதிக்கம் மற்றும் மலബாரின் பல அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் மேலான ஒரு வகை பொது கட்டுப்பாடு தங்களுக்கு உண்டு எனக் கோரினர். இந்தக் கோரிக்கைகளை சாமூதிரி எதிர்த்ததால், இரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலப் போர் ஏற்பட்டது. இதன் முடிவில் போர்த்துகீசர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை கைவிட்டனர்.
சாமூதிரி கடலில் போர்த்துகீசர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஐரோப்பாவில் இருந்து புதியவர்கள் டச்சுக்காரர்கள் போர்த்துகீசர்களின் வர்த்தக ஏகாதிபத்தை சவாலிட்டனர்.
17ஆம் நூற்றாண்டில் மலபார், இந்த இரு ஐரோப்பிய சக்திகளின் போர்க்களமாகி, அதன் விளைவாக போர்த்துகீசர்களின் வீழ்ச்சி ஏற்பட்டது
1729ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் மார்த்தாண்ட வர்மர் ஆட்சிக்கு வந்தது, கேரள அரசியலின் மையத்தை வடபக்கத்திலிருந்து தெற்கிற்கு மாற்றியது. அவருடைய ஆட்சி, மத்தியக்காலத்தின் முடிவின் தொடக்கமாக அமைந்தது.
சக்திவாய்ந்த நாயர் செல்வந்தர்களை முற்றிலும் அழித்தல், வலுவான மத்திய அரசை நிறுவல், அண்டை நாடுகளையும் சிற்றரசுகளையும் இணைத்தல் ஆகியவை இந்த திறமையான மன்னரின் குறிப்பிடத் தகுந்த சாதனைகளாகும்.
கேரளத்தை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்க வழிவகுத்திருக்கும்; ஆனால் மைசூர் படையெடுப்பு இந்த விருப்பத்தை முறியடித்தது. இதுபோலவே, இரு சந்தர்ப்பங்களிலும் வெளிநாட்டவர்களின் தலையீடு கேரளத்தின் ஒருங்கிணைப்பைத் தடுத்தது.
மைசூர் படையெடுப்பு சாமூதிரி மற்றும் கோலத்திரி வம்சங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக, மலபாரில் நாயர்களின் இராணுவ மற்றும் குடியாட்சி அமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. பின்னர், பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு நாயர் செல்வந்தர்களுக்கும் மத்தியகாலத்துக்கும் இறுதியான அழிவை வழங்கியது.

பயணம் பேச்சி பாறை நீர்த்தேக்கம்!

8 Aug 2025

பிரான்சிஸ் சேவியர், இயேசுவின் சபையின் பொதுச் செயலாளரான அருட்தந்தை இக்னேஷியஸ் லொயோலாவிற்கு எழுதிய கடிதம்- கொச்சி, ஜனவரி 14, 1549


ரோம்

இயேசுவின் சமூகத்தின் பொதுச் செயலாளரான
#அருட்தந்தை இக்னேஷியஸ் லொயோலா
அவர்களுக்கு,.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் கிருபையும் அன்பும் எப்பொழுதும் எங்களோடு இருப்பதாக! ஆமென்.

 

என் சொந்தமும், கிறிஸ்துவின் இருதயத்தில் ஒரே பிதாவுமான அருட்தந்தையே,

சமீபத்தில் இந்த இடத்திலிருந்து ரோமுக்குச் சென்ற பல கடிதங்கள், உங்கள் ஜெபங்களாலும் தேவனுடைய நன்மைகளாலும் இங்குள்ள மதப்பணிகள் எவ்வளவு சிறப்பாக நடைபெறுகின்றன என்பதை உங்களுக்கு அறிவித்திருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால், ரோமிலிருந்து இவ்வளவு தொலைவில் உள்ள இந்தப் பகுதிகள் குறித்து நான் நேரடியாக உங்களிடம் கூற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். எனவே, இவ்விடங்களைச் சில அம்சங்களைச் சுருக்கமாகத் அனுப்புகிறேன்.

முதலில், என் பார்வைக்கு வந்தவரையில், இந்தியர்களின் முழு இனமும் மிகவும் காத்தனமுடையவர்கள். தங்கள் சொந்த பழக்கவழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் விரோதமான எதையும் கேட்க அவர்கள் விரும்புவதில்லை; அந்த மரபுகள், நான் கூறியபடி, காட்டுமிராண்டித்தனமானவையே.

 

தெய்வீக விஷயங்கள், இரட்சிப்புக்கான விஷயங்கள் குறித்தும் அவர்கள் பெரிதாகக் கற்றுக்கொள்ள விருப்பம் கொள்வதில்லை. பெரும்பாலான இந்தியர்கள் தீய இயல்புடையவர்கள்; நல்லொழுக்கத்திற்கு விரோதமானவர்கள். அவர்கள் மனதின் நிலையின்மை, அசட்டுத்தனம், நிலைத்தன்மையின்மை ஆகியவை நம்ப முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. பாவமும் மோசடியும் நிறைந்த பழக்கவழக்கங்களால், நேர்மையெனும் குணம் அவர்களிடம் அரிதாகவே காணப்படுகிறது.

இங்குள்ள கிறிஸ்தவர்களை நல்வழியில் நிலைநிறுத்துவதிலும், இன்னும் விசுவாசிக்காதவர்களை விசுவாசத்திற்கு அழைப்பதிலும் எங்களுக்கு கடினமான உழைப்பு தேவை இருக்கிறது.

 

இந்த நாடு கோடையில் கடும் வெப்பத்தாலும், குளிர்காலத்தில் அதிக காற்று, மழையாலும் வசிப்பதற்கே கடினமானது. சொகோத்ரா, மொலுக்காஸ், குமரிப் பகுதியில் உணவு, பொருட்கள் மிகவும் குறைவு; மக்களின் மனப்போக்கினால் உடல், மன உழைப்புகள் நம்ப முடியாத அளவு கடினமானவை.

இந்த மக்களின் மொழிகளும் கற்றுக்கொள்ள சுலபமல்ல; உடலுக்கும் ஆன்மாவுக்கும் ஆபத்துக்கள் அதிகம்.
ஆனாலும், தேவனின் கிருபையால், இங்கு உள்ள எங்கள் சங்கத்தார் அனைவரும் ஆவி, உடல் இரண்டிற்கும் பாதிப்பில்லாமல், போர்த்துகீசர்களாலும், (அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும்), இந்தியர்களாலும் (கிறிஸ்தவர்களும் புறமதத்தாரும்) நேசிக்கப்படுகிறோம் என்பதே விசித்திரமானது.

 

மீண்டும் சொல்கிறேன், இந்தியர்கள்  புறமதத்தாராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் மிகுந்த அறியாமையில் உள்ளவர்கள் என்று நான் கண்டுள்ளேன்.  ஆகவே, இங்கு சுவிசேஷத்தைப் பரப்ப வருவோர் கல்வியை விட நல்லொழுக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்  அதுவும் கீழ்ப்படிதல், மனோத்திடம், பொறுமை, அன்பு, பாவத்துக்கு எதிரான விசேஷமான தூய்மை; மேலும், விவேகம், புத்திசாலித்தனம், வலிமையான உடல், மன உறுதி வேண்டும், உழைப்பையும் துன்பங்களையும் தாங்குவதற்காக வேண்டும்.

 

இதனால், இனி இந்தியாவுக்கு வருவோரின் நல்லொழுக்கங்களைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டிய அவசியம் உண்டு என நினைக்கிறேன்.
நம்பிக்கையுடன் அனுப்பக்கூடிய ஆட்கள் தேவை  விசேஷ தூய்மையும் தாழ்மையும் உடையவர்கள், பெருமையோ, அகம்பாவமோ இல்லாதவர்கள் ஆக இருக்க வேண்டும்..

 

கோவா கல்லூரி முதல்வராக வருபவருக்கு, பொதுவாக முதல்வருக்கு தேவையான பண்புகளுடன் இரண்டு விசேஷ குணங்கள் அவசியம் .

1.  முதலில், கீழ்ப்படிதலில் சிறந்தவரும் , அரசாங்க அதிகாரிகளின், மதத் தலைவர்களின் மனதை வெல்ல வேண்டும்.
இங்கு அவர்கள் கட்டளைகளை நாங்கள் கடைப்பிடிப்பதைப் பார்த்தால், எங்களை அன்போடு நடத்துவார்கள்; இல்லையெனில், முற்றிலும் விரோதமாக மாறுவார்கள்.

2.  இரண்டாவது, அவர் எளிமையான, நயமுள்ள நடத்தை உடையவராக இருக்க வேண்டும்; மாணவர்களையும், சகோதரர்களையும் பயமுறுத்தாமல், அன்பால் இணைக்க வேண்டும்.

 

வலுக்கட்டாயமாக யாரையும் குழுவில் வைக்க வேண்டாம்; விருப்பமில்லாதவர்கள் வெளியேறட்டும். ஆனால், தகுதியானவர்களை அன்பின் பிணைப்பால் வைக்க வேண்டும். சங்கத்தார் அன்பு, ஒற்றுமையால் நிறைந்த ஒன்றாகும்; கசப்போ, அடிமைத்தனமான பயமோ அதற்கு முற்றிலும் வேறானவை.

எனது அனுபவத்தில், இங்கு உள்ளூர் மக்களால் சபை நிலைநிறுத்த முடியாது; நாங்கள் இல்லாமல் போனால் கிறிஸ்தவம் இங்கும் குறைந்து போகும்.
ஆகவே, ஐரோப்பாவில் இருந்து தொடர்ந்து எங்கள் குழுவினரை அனுப்பப்பட வேண்டும்.

இப்போது எங்கள் சங்கத்தினர்  இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ளனர் .  மொலுக்காஸ் 4, மலாக்கா 2, குமரி முனை 6, குலம் 2, பசாயின் 2, சொகோத்ரா 4.
இவ்விடங்களின் தூரங்கள் மிகப் பெரியவை — மொலுக்காஸ் கோவாவிலிருந்து ஆயிரம் லீக், மலாக்கா 500, குமரி 200, குலம் 120, பசாயின் 60, சொகோத்ரா 300.
ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு மேற்பார்வையாளர் இருக்கிறார்; அவர்கள் சிறந்த புத்திசாலித்தனம், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆவார்கள்.

 

போர்த்துகீசர்கள் கடலும், கடற்கரையும் மட்டுமே கட்டுப்படுத்துகின்றனர்; உள்நாட்டில் தாங்கள் வசிக்கும் நகரங்கள் மட்டுமே இவர்களிடம் உள்ளது.
உள்நாட்டு மக்கள் தீய பழக்கங்களில் ஆழ்ந்திருப்பதால், கிறிஸ்தவத்தை ஏற்க விரும்புவதில்லை.
புதிய மாற்றுமதத்தாரை போர்த்துகீசர்கள் அன்போடு நடத்தினால், பலர் கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்வார்கள்; ஆனால், அவர்கள் இகழப்பட்டதைப் பார்த்து, பலரும் ஏற்க விரும்புவதில்லை.

 

இந்தக் காரணங்களால், நான் இங்கு உழைப்பதை விட, சீனாவிற்கு அருகில் உள்ள, முஸ்லிம்களோ யூதர்களோ தொட்டுப் பார்க்காத, தெய்வீக, இயற்கை அறிவு அறிய ஆர்வமுள்ள ஜப்பான் நாட்டுக்கு போக முடிவு செய்துள்ளேன். அந்த மக்களிடையே உழைப்பது நல்ல, நிலையான பலனைத் தரும் என நம்புகிறேன்.

 

கோவா கல்லூரியில் மூன்று ஜப்பான் மாணவர்கள் உள்ளனர்; அவர்கள் கடந்த ஆண்டு மலாக்காவில் இருந்து என்னுடன் வந்தனர்.
அவர்கள் நல்வழி உடையவர்கள், கூர்மையான புத்தி உடையவர்கள்; குறிப்பாக பவுல், இவர் உங்களுக்கு ஒரு நீண்ட கடிதம் அனுப்புகிறார்.
அவர் எட்டு மாதங்களில் போர்த்துகீசு மொழியை வாசிக்க, எழுத, பேச நன்றாகக் கற்றுள்ளார். இப்போது கிறிஸ்தவ போதனையில் நன்றாக பயிற்சி பெற்றுள்ளார். தேவனின் உதவியால், ஜப்பானில் பலர் கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்வார்கள் என எனக்கு நம்பிக்கை உள்ளது.

 

முதலில் அந்நாட்டின் மன்னரிடம் சென்று, பின்னர் பல்கலைக்கழகங்களிலும், கற்றல் மையங்களிலும் போதிக்க எண்ணுகிறேன்.
பவுல் கூறுவதாவது, ஜப்பானில் உள்ள மதங்கள் ‘சிங்சிங்குவோ’ என்ற நகரத்தில் இருந்து வந்தவை; அது சீனா, கதாய் நாடுகளுக்கு அப்பால், ஜப்பானிலிருந்து ஆண்டு பாதி பயணம் தூரத்தில் உள்ளது. ஜப்பானை அடைந்தவுடன், அங்குள்ள மக்களின் பழக்கங்கள், இலக்கியம், மதம், சிங்சிங்குவோவின் போதனைகள் ஆகியவற்றை உங்களுக்கு எழுதுகிறேன்.

சீனப் பேரரசிலும் கதாயிலும், அங்குள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தின் போதனைகள் மட்டுமே பரவலாக உள்ளன எனப்படுகிறது.   அவற்றை நன்கு அறிந்த பின், உங்களுக்கும், பாரிஸ் பல்கலைக்கழகத்துக்கும் எழுதுவேன், அங்கேயிருந்து ஐரோப்பாவின் பல்கலைக்கழகங்களுக்கு இவற்றின் செய்தி சென்றடையும்.

இங்கு இருந்து நான், ஒரே ஒரு ஐரோப்பியரை — வலென்சியாவின் கோஸ்மோ டோரஸ்,  மற்றும் அந்த மூன்று ஜப்பான் இளைஞர்களை மட்டுமே அழைத்துச் செல்கிறேன்.

 

இந்தியாவின் இப்பகுதிகளில், போர்த்துகீசர்களுக்குச் சொந்தமான நகரங்கள் பதினைந்து உள்ளன. அவற்றில், மன்னர் பொதுத் தொகையில் இருந்து ஆரம்ப நிதியைக் கொடுத்தால், எங்கள் சபையின் பல இல்லங்களைத் தொடங்கலாம். இதைப் பற்றிக் கடிதத்தில் மன்னரிடம் ஏற்கனவே சொன்னேன். மேலும், எல்லாவற்றையும் சைமன் ரொட்ரிக்சிடம் தெரிவித்தேன்; அவர், உங்களின் அனுமதியுடன், அதிக அளவில் எங்கள் சங்கத்தினரையும், ஒரு பெரிய போதகர் குழுவையும் கொண்டு இங்கே வருமானால், மன்னரின் ஆதரவுடன் எங்கள் பையின் பலக் கல்லூரிகளை நிறுவ முடியும்; இது மதத்தின் நலனுக்கே மிக உகந்ததாக இருக்கும் என்று கூறினேன்.

 

எனக்குத் தோன்றுவது, மன்னரின் சிறப்பு நம்பிக்கையில் உள்ள சைமனின் இந்தியா வருகை மிகவும் ஏற்ற காலத்தில் நடைபெறும். அவர், மன்னரின் அதிகாரத்துடன், கல்லூரிகளை நிறுவவும், கிறிஸ்தவர்களுக்கு உதவவும் வருவார் .  ஏற்கனவே உள்ளவர்களுக்கு  அவர்களுக்கு அன்பு காட்டினால் கிறிஸ்தவம் ஏற்கத் தயாராக இருப்பவர்களுக்கும் உதவும்.

இந்த விவகாரத்தில் நீங்கள் சைமனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எழுதி அனுப்பினால் நலம்; ஏனெனில் ஆண்டோனியோ கோமேஸ் கூறியதாவது, சைமன் கோயம்ப்ராவில் இருந்து எங்கள் பலரையும் கூட்டிக் கொண்டு இந்தியா வர முடிவு செய்துவிட்டார்.

 

ரோமிலும், வேறு இடங்களிலும், போதனைக்கும் இலக்கியத்திற்கும் அதிகமாக ஈடுபடாத எங்கள் குழுவினர் உங்களிடம் குறைவில்லை. இவர்கள், போதுமான அனுபவத்துடன், புறமதத்தாருக்கு உதவும் தேவையான நல்லொழுக்கங்களுடன், குறிப்பாக விசேஷமான தூய்மையுடன், வலுவான உடல்-மன உறுதியுடன் வந்தால், இங்கு மதப்பணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பார்கள். ஆகவே, உங்களுக்குச் சிறந்தது என்று தோன்றும் வகையில், எங்களுக்கு அப்படிப்பட்ட உழைப்பாளர்களை அனுப்புங்கள்.

மேலும், எங்கள் சபையினர் அனைவருக்கும், உங்களின் ஆன்மிக உபதேசங்களால் நிறைந்த ஒரு கடிதத்தை உங்கள் பிள்ளைகளுக்கு தந்தை விட்டுச் செல்லும் சாசனமாக அனுப்பினால், நாங்கள் உங்களை நேரில் காண முடியாத தூரத்தில் இருந்தாலும், தேவன் உங்களுக்கு கொடுத்த ஆன்மிகச் செல்வங்களைப் பெறுவோம். இதை உடனே செய்ய வேண்டிய அவசியமில்லை; ஆனாலும் எப்போது ஒருநாளாவது இந்த அருளை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

என்ரிக்கோ என்ரிக்கெஸ் என்ற போர்த்துகீசு ஆசாரியர், எங்கள் குழுவை சேர்ந்தவர், மிகச் சிறந்த நல்லொழுக்கம் உடையவர்; தற்போது குமரிக்குப் பகுதியில் இருக்கிறார். அவர் மலபார் மொழியை மிக நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவர். தனியாகவே பலரின் உழைப்பைச் செய்துவிடுகிறார். அவரின் பிரசங்கங்களாலும் தனிப்பட்ட உரையாடல்களாலும் அங்குள்ள கிறிஸ்தவர்கள் அவரை மிகுந்த பாசத்துடனும் மரியாதையுடனும் நேசிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவருக்கு “நாளின் வெப்பத்தையும் சுமையையும் சுமக்கிற அவருக்கு ” (மத்தேயு 20:12) — நீங்கள் தனிப்பட்ட ஒரு கடிதம் எழுதி அனுப்பி அவருக்கு ஆறுதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

கொச்சியிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில், போர்த்துகீசர்களுக்குச் சொந்தமான “கிரங்கனூர்” என்ற ஊர் உள்ளது. அங்கு மிகப் புனிதமான செயின்ட் பிரான்சிஸ் சமய ஒழுங்கைச் சேர்ந்த, மற்றும் கோவா மறைமாவட்ட ஆயரின் துணையாக உள்ள, எங்கள் குழுவிற்கு மிக உண்மையான நண்பரான பிதா வின்சென்சோ, ஒரு மிக அழகான செமினாரியை நிறுவியுள்ளார். அதில் நூறு மாணவர்கள் தங்கவைக்கப்பட்டு, பக்தியிலும் கல்வியிலும் பயிற்சி பெறுகிறார்கள்.

 

எங்கள் சங்கத்திற்கான அவரது அன்பில், பிதா வின்சென்சோவையும் விட கோவா ஆயர் தாமே முன்னிலையிலிருக்கிறார்; இந்தியா முழுவதிலும் அவர் ஆட்சிச் சிறப்பும், எங்கள் சங்கத்துடன் அன்பும் கொண்டவர். அவர் உங்கள் நட்பையும் விரும்புகிறார்.  ஆகவே, அவருக்கும் நீங்கள் கடிதம் எழுதினால் நலம்.

 

மீண்டும் பிதா வின்சென்சோவுக்குத் திரும்புகிறேன். எங்கள் நட்பினால், அவர் தனது செமினாரியை எங்கள் சங்கத்திடம் ஒப்படைக்க விரும்புவதாகவும், அங்குள்ள மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிக்கவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பண்டிகை நாட்களிலும் மக்களுக்கும் செமினாரி வாசிகளுக்கும் போதனை செய்யவும் எங்கள் சங்கத்திலிருந்து ஒரு ஆசாரியரை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

 

ஏனெனில் அப்பகுதியில் போர்த்துகீசர்கள் மட்டுமல்ல, சுமார் அறுபது கிராமங்களில், புனிதர் செயின்ட் தோமா கிறிஸ்தவமாக்கியவர்களின் சந்ததியினர் வாழ்கிறார்கள். செமினாரி மாணவர்கள் உயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அந்த ஊரில் செயின்ட் தோமாவிற்கும் செயின்ட் ஜேம்ஸிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு ஆலயங்கள் உள்ளன. பிதா வின்சென்சோ, இவ்விரு ஆலயங்களுக்கும் ஆண்டுதோறும் ஒருமுறை முழு தண்டவிலக்கு (Plenary Indulgence) பெறும்படி, அத்துடன் பண்டிகை நாள் மற்றும் அதற்குப் பின் ஏழு நாட்களுக்கு, அருட்த் தந்தையிடம் தொடர்பு கொள்ள நீங்கள் முயற்சி செய்வீர்கள் என நம்புகிறேன். இது, செயின்ட் தோமாவின் மற்றும்  மாற்றுமதத்தாரின் சந்ததியினரின் பக்தியை அதிகரிக்கும். மேலும், அவர், அப்பகுதிக்கு ஒரு ஆசாரியரை போதகராகவும் கற்பிக்கவும் அனுப்புமாறு எதிர்பார்க்கிறார். இந்த ஆசிகள், அவர் எங்களை வாழ்நாளும், மரணத்திற்குப் பின்னும் எங்கள் நண்பராக வைத்திருப்பார். இதைப் பற்றிய பொறுப்பை அவர் மிகக் விருப்பமாக எனக்கு ஒப்படைத்துள்ளார். இந்த தண்டவிலக்குகளுக்காக அவர் எவ்வளவு ஆவலாக உள்ளாரோ, சொல்ல முடியாது.

 

எனக்காக ஒரு விஷயத்தை கேட்டுக் கொள்கிறேன் ரோமிலுள்ள செயின்ட் பியெத்ரோ இன் மொண்டோரியோ ஆலயத்தில், தூதர் செயின்ட் பேதுரு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் புனிதத் தலத்தில், எங்கள் ஆசாரியர்களில் ஒருவரால் ஆண்டுதோறும் மாதத்திற்கு ஒருமுறை திருப்பலி நடத்தப்பட வேண்டும்.

மேலும், ரோமில் உள்ள எங்கள் சங்கக் கல்லூரிகள், தொழில்முறை ஆசாரியர்கள், அவர்களின் கடமைகள், சங்கத்தின் பணி மற்றும் அதன் பலன்கள் ஆகியவற்றைப் பற்றித் தொடர்ந்து முழுமையான தகவல்களை எங்களுக்கு அனுப்ப எவரையாவது பொறுப்பேற்கச் செய்யவும்.

கோவாவில் இருந்து, ரோமில் இருந்து வரும் கடிதங்கள் மலாக்காவுக்கு அனுப்பப்படவும், அங்கிருந்து அவை பல பிரதிகளாகக் காப்பி எடுக்கப்பட்டு, ஜப்பானில் உள்ள எனக்கு அனுப்பப்படவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

 


என் ஆத்துமாவின் தந்தையே, உங்களை முழு மனதுடன் வணங்குகிறேன்; நான் முழங்காலில் மண்டியிட்டு எழுதுகிறேன் .  உங்களை முன்னிலையில் வைத்துக் கொண்டு, என் வாழ்நாளெல்லாம் தேவனின் மிகப் புனிதமான சித்தத்தைத் தெளிவாக அறிந்து, அதை முழுமையாக நிறைவேற்றும் கிருபையை அவர் எனக்குக் கொடுக்கும்படி, உங்கள் புனித பலிகளிலும் ஜெபங்களிலும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். எங்கள் மற்ற சகோதரர்களையும், எனக்காக இதேபோல் ஜெபிக்கச் சொல்லுங்கள்.

இப்படிக்கு
உங்கள் மிகச் சிறியதும் பயனற்ற பிள்ளை,
பிரான்சிஸ் சேவியர்

கொச்சி, ஜனவரி 14, 1549