1642 ஆம்
ஆண்டில் கொற்கையை அடுத்த வெள்ளக்கோயில் என்ற ஊரில் குடிபடைகளுடன் பெரும் நிலக்கிழாராக வாழ்ந்து வந்தவர்கள். திருமலைநாயக்கரின் பிரதிநிதியாக திருநெல்வேலியின் கவர்னராக
நியமிக்கப்பட்ட வடமலையப்ப பிள்ளையின் நடவடிக்கைகள் காரணமாகத் தமது நிலங்களைக் கொற்கைக் காணியாளரான, நற்குடி வேளாளர்களிடம் விற்றுவிட்டுக் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ராஜாவின் கோயில் என்ற ஊரில் குடியேறினர். 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாசரேத் நகரம்
உருவாக்கப்பட்டபின், அவ்வூரை ஒட்டி
அமைந்துள்ள பிரகாசபுரம் மூக்குப்பேரியில் குடியேறினர்
சாயர்புரத்திலிருந்த எஸ்.பி.ஜி.
(Society for the Propagation of the Gospel)யைச் சேர்ந்த செமினரியில்
இறையியல் கற்று போதகர் (Catechist) தேர்வில் முதலிடம் பெற்றவர். சம்ஸ்கிருதம், ஹீப்ரு, லத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளும் கற்றுத் தேர்ந்தவர் ஆக இருந்தார்.
18 ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கள் மிஷன்
நிறுவனங்களை நிறுவத் தொடங்கினர். முதலில் முதலூரில், அதைத் தொடர்ந்து பெத்லஹேம் மற்றும் நாசரேத் ஊரில் 1803ல் நிறுவினர். அக்கால அளவில் 5000 க்கும் அதிகமான நாடார் இன மக்கள் கிறித்தவர்களாக மாறினர்.
சாயபுரத்தைச் சேர்ந்த உள்ளூர் மத போதகரான, பள்ளர் இனத்தை சேர்ந்தவர் டேவிட்
. இவர் நாடார் இனமக்களை இளப்ப ஜாதி என்று அழைத்தார் என்ற ஒரு பிரச்சினை உருவானது. கோபம் கொண்ட நாடார் மக்கள், ஹக்ஸ்டேபில்() வெள்ளைக்கார
மிஷினரியிடம் முறையிட்டனர். டேவிட் மன்னிப்புகோரி பின் வேலையில் தொடர்ந்தார். பள்ளியின்
கண்காணிப்பாளராக இருந்த சட்டம் பிள்ளையோ டேவிடை பள்ளியில் இருந்து வெளியேற்ற முயன்றார்.
அதை கேமரெரர் அனுமதிக்கவில்லை. இதனால் கேமரெராருக்கும் சட்டம் பிள்ளைக்கும் ஒரு பிணக்கு
உருவானது. இந்நிலையில் அருமைநாயகத்திற்கு முடிவான
பெண்ணை மணமுடிக்க கேமரெரர் அனுமதிக்கவில்லை. தனக்கு நிச்சயமாயிருந்த பெண்ணை தானே இறைவழிபாடு செய்து 1850 ல் திருமணம் செய்து கொண்டார்
போதகராக இருந்த சட்டம்பிள்ளை. இந்த நிலையில் மிஷினரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டார் அருமைநாயகம்.
மறுபடியும் போதகராக வேலையில் சேரும் முயற்சியாக
மேலதிகாரிகளான வெள்ளைக்கார மிஷினரிகள் அனுமதி பெறும் எண்ணத்துடன் அருமைநாயகம் நாடார் என்கிற சட்டம்பிள்ளை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது கால்டுவெல் வெளியிட்ட
கையெழுத்து பிரதியான ”தின்னவெல்லி ஷானர்கள்: மதம் மற்றும் அவர்களின் தார்மீக நிலை மற்றும்
பண்புகள் பற்றிய ஒரு எழுத்து” என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. புத்தகத்தின் உள்ளடக்கத்தை கண்டு கொதித்து போனார். நாசரேத்துக்கு திரும்பி வந்த சட்டம்பிள்ளை, சில நண்பர்களையும் இணைத்து
ஆங்கிலத்திலுள்ள கால்டுவெல்லின் கையெழுத்து பிரதியை தமிழில் மொழியாக்கம் செய்து தமிழகம்,
இந்தியா, மற்றும் மலேசியா பர்மாவில் இருந்த முக்கியமான நாடார்களுக்கு அனுப்பினார்.
ஐரோப்பாவின்
வாழ்ந்த
கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மக்களிடையே இந்திய மக்கள் கொடிய காட்டுமிராண்டி நிலையில் வாழ்கிறார்கள் என்பது போன்ற
மிகையான தோற்றத்தினை உருவாக்கும் நோக்கிலும், இத்தகைய காட்டுமிராண்டி மக்களிடையே கல்வியறிவையும் ஒழுக்கத்தையும் பரப்புகிற உன்னதமான தியாகம் செறிந்த பணியினைப் பாதிரிமார்களாகிய தாங்கள் மேற்கொண்டிருப்பது போன்ற ஒரு
மாயையைத் தோற்றுவிக்கிற வகையிலும் எழுதிப் பணம் வசூலிக்க ஏதுவாகவே அவதூறு நிறைந்த இந்நூலினைக் கால்டுவெல் எழுதியுள்ளார் எனச்
சட்டாம்பிள்ளை
உரிய ஆதாரத்துடன் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.
இவரும் சில ஆதரவாளர்களும் சேர்ந்து பிரகாசபுரத்தில் தங்களுக்கு தனி ஆலயம் நிறுவினர். இந்நிலையில் கேமெரெரர் 20 வருடம் நாசரேத்தில் சேவை செய்த இவர் தஞ்சாவூருக்கு 1858 ல் மாற்றப்பட்டார்.
கால்டுவெல்லின் தின்னவெல்லி
ஷானர்கள் என்ற நூலைத் தமிழாக்கம் செய்து அச்சிட்டு, ஆங்கிலம் அறியாத தமிழக
நாடார்கள் மற்றும் பர்மா, சிலோன் நாடார் சமூகத்தவர் மத்தியிலும் பரப்பினார். கால்டுவெல் பரப்பும் அவதூறுகளுக்கு பதில் உரைக்க 40 புத்தகங்கள், சில கைப்பிரதிகளும் வெளியிட்டார்.
கால்டுவெல்லில் எழுத்தால் அவமதிப்பிற்கு உள்ளான
நாடார் இன மக்கள் குரலாக தமிழ் பாதிரியாக இருந்த மார்டின் வின்ஃபிரட் என்பவர் ’சான்றோர்
குல மரபு’ என்ற புத்தகத்தை 1871 ல் எழுதினார். அவருடைய தந்தை வின்பிரட் 1875 ல் ’சான்றோர்
குல மரபு கட்டளை’ என்ற இன்னொரு புத்தகத்தை எழுதினார். சாமுவேல் சர்குணனார் என்பவர்
’திராவிட சத்திரியா’ என்ற கையெழுத்து பிரதியை 1880 ல் எழுதினார். சர்குணனார் கையெழுத்து
பிரதிக்கு பதில் இலங்கையை சேர்ந்த செந்திநாத ஐயரிடம் இருந்து ’சாணார்கள் சத்திரியர்கள்
அல்ல’ என்ற தலைப்புடன் ஒரு புத்தகம் வந்தது.
சாணார்களுக்கு இடுப்பில் வேஸ்டி கட்ட கூட தெரியாது, கால்டுவெல்லால் தான் முன்னேறினர்
என்று எழுதி இருந்தார். ”செந்திநாத ஐயருக்கு செருப்படி” என்ற பதில் கையெழுத்து பிரதியை
வினியோகித்த குற்றத்திற்காக சர்குணனார் கைது செய்யப்பட்டார். ஞானமுத்து நாடார் மற்றும்
விஜய் துரைசாமி கிராமணி போன்றோர் நாடார்கள் சத்திரியர்கள் என்பதற்கான சான்றுகளுடன்
1919துவங்கி 1020 வரை மாதாந்திர பத்திரிக்கைகள்
வெளியிட்டனர்
கால்டுவெல் ஸ்காட்லான்டு சென்றதும் அவர் திருநெல்வேலிக்கு
திரும்பி வராது இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல புகார்கள் ஐரோப்பிய தலைமையான பிஷப்
சென்றர்பரிக்கு அனுப்பினர் சட்டம்பிள்ளை குழுவினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பிரதமர்
கிளாட்ஸ்டோனுக்கும் அனுப்பினர். ஆனால் பிரதமரான தன்னால் உள் நாட்டு பிரச்சினையில் தலையிட
இயலாது என்று கூறி ஒதுங்கி கொண்டார்.
இந்து-கிறிஸ்துவ தேவாலயம்
1857 இல் சட்டம்பிள்ளையால் சட்டம்பிள்ளை 1857
இல் திருநெல்வேலி மாவட்டம் பிரகாசபுரத்தில் மிஷனரி அதிகாரத்தைத் தகர்க்க இந்து-கிறிஸ்தவ
மதத்தை நம்பிக்கையாகக் கொண்ட தனது புதிய தேவாலயமான இந்து-கிறிஸ்தவ இந்து தேவாலயத்தை
நிறுவினார். "இந்து" என்ற வார்த்தையை மதத்தை விட புவியியல் என்று விளக்கினார்.
ஒரே கலாச்சார சூழலில் வாழும் பொருளில் தனது ஆலயத்தை துவங்கினார். இந்தியாவில் மதம்
மாறிய கிறித்தவர்கள் தங்கள் உள்ளார்ந்த சமூக, சமய மற்றும் கலாச்சார வகைகளைப் பயன்படுத்தி
கிறிஸ்தவத்தை விளக்கவும் வெளிப்படுத்தவும் தொடங்கினர்.
1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் ஒரு
பகுதியாக பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான எழுச்சி ஏற்கனவே வட இந்தியாவில் நிகழ்ந்து
கொண்டிருந்தது. சட்டம்பிள்ளை தனது தேவாலயங்களில் மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக
இரு மடங்கு உத்தியைப் பயன்படுத்தி கிளர்ச்சி செய்தார். கிறிஸ்துவை ஐரோப்பிய தேவாலயத்திலிருந்து
பிரித்து, பூர்வீக மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை கிறித்துவத்திற்கு இடமளித்து, மேற்கத்திய
மிஷனரிகளின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதில் வெற்றி பெற்றார். பிரிட்டிஷ்
ராஜ் ஆதரவுடன் புதிய ஏற்பாட்டை நோக்கி நகரும் மேற்கத்திய மிஷனரிகளுக்கு எதிரான மாற்று
மருந்தாக புதிய ஏற்பாட்டை விட பழைய ஏற்பாட்டை ஆதரிக்கும் எபிரேய வேதங்களையும் யூத பழக்கவழக்கங்களையும்
அவர் திருச்சபையில் கையகப்படுத்தினார்.
இந்து கலாச்சார நடைமுறைகள் யூத கலாச்சார நடைமுறைகளை
ஒத்ததாக இருக்கிறது என்ற கருத்துக் கொண்டவர் சட்டம்பிள்ளை. அவரது அணுகுமுறையும்
"இந்து கலாச்சாரம்” என்று கருதப்படும் இந்திய கலாச்சாரங்களை" அவரது நாட்டு
சபை வழிப்பாடில் இணைத்துக்கொள்ள வைத்தது. உள்நாட்டு கலாச்சார பழக்கவழக்கங்கள் மிகவும்
வரவேற்கப்பட்டன. ஐரோப்பிய பழக்கவழக்கங்கள் என்று தோன்றிய அனைத்தையும் நிராகரித்தனர்,
மேலும் அவர்களின் தேவாலயம் மற்றும் மத சேவைகளை உள்நாட்டு வழிகளில் ஏற்பாடு செய்தனர்.
சாஷ்டாங்கம், தியானம், சாம்பிராணி பயன்படுத்துதல், தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்யும்
போது கைகளை மடக்குதல், வைனுக்கு பதிலாக புளிக்காத திராட்சை சாறு பயன்படுத்துதல் மற்றும்
தரையின் உட்கார்ந்து திருச்சபையின் சடங்குகள் செய்வதை கிறிஸ்தவ ஆராதனையில் நடைமுறைப்படுத்தினார்.
பழைய ஏற்பாட்டு சடங்குகளான இந்து மத சடங்குகளில் இருப்பது போன்ற "பெண்கள் சார்ந்த
சடங்கு அசுத்த நடைமுறைகளும் இந்த தேவாலயத்தில்
பின்பற்றுகின்றனர். ஆங்கிலிகன் தேவாலயத்தில் மணிகளைப் பயன்படுத்துவது போலல்லாமல், தேவாலய
கோபுரத்திலிருந்து ஒரு எக்காள சத்தம் விசுவாசிகளை வழிபாட்டிற்கு அழைக்க பயன்படுத்துகின்றனர்.
மேலும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் கைகளையும் கால்களையும் கழுவுகிறார்கள்,
பொதுவாக வழிபாடு சனிக்கிழமை நாட்களில் நடைபெறும். இந்த தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள்
சனிக்கிழமை வேலை செய்ய மாட்டார்கள். சனிக்கிழமைக்கான உணவு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு
முன் செய்யப்படுகிறது. பழைய ஏற்பாட்டு நாட்களில் பின்பற்றப்பட்ட பண்டிகை நாட்களைக்
கொண்டாட யூத நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றனர்.
கான்ஸ்டன்டைன் மற்றும் தியோடோரஸ் போன்ற ரோமானிய
மன்னர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, புனித திருச்சபையின் சட்டங்களில் திருமணம் தொடர்பான
அவர்களின் சொந்த ஒழுக்கக்கேடான விதிகளை அறிமுகப்படுத்தினர்; அதை, உண்மையான பாதையில்
இருந்து விலகிய ஐரோப்பியர்கள் பின்பற்றினர் என்றும் சட்டம்பிள்ளை எழுதினார்.
எபிரேய பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள சட்டங்களை
ஏற்க வேண்டும் என்று சட்டம்பிள்ளை பிரசங்கித்தார். சத்தம்பிள்ளையின் கூற்றுப்படி, ஆங்கிலிக்கன்
சபை என்பது ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் பல தார்மீக குறைபாடுகள் மற்றும் மீறல்களில் ஒன்றாகும்.
ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் கிறிஸ்தவத்தின் அசல் வடிவத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட சிதைவுகளைச்
சரிசெய்ய சட்டம்பிள்ளை முயன்றார்.
வை.
ஞானமுத்து நாடார் திருநெல்வேலி நீதிமன்றத்தில் பணி செய்த ஒரு தமிழ் கிறிஸ்தவ எழுத்தர்.
பழங்கால மற்றும் நாடார் இனத்தின் பிரதிநிதி ஆக இருந்தார். பிரிட்டிஷ் அரசு கால்டுவெல்லைத்
கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் புண்படுத்தும் புத்தகத்தை அகற்ற வேண்டும் என்று கோரினார்.
1880 மற்றும் 1885 க்கு இடையில் மதம் பரப்ப கிராமங்களுக்குச் சென்ற பிஷப்புகளுக்கு
இடையூறு விளைவித்தார். மிஷினரிகளின் சாதி பற்றிய அவதூறான அறிக்கைகளை திரும்பப் பெறக்
கோரி, SPG மிஷனரிகளுக்கு எதிராக ஞானமுத்து தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். ஞானமுத்து
தொடர்ந்து ஐரோப்பிய மிஷினரிகளுக்கு எதிராக எழுதினார்.
ஐரோப்பிய மிஷனரிகள் தங்கள் மதம் மாறியவர்களை
அவர்கள் உணர்வு நிலையை புரிந்து கொள்ளாது மரியாதை இல்லாது நடத்துகின்றனர். ஆனால் பரலோக
ராஜ்யத்திற்கு சமமான உரிமைகோரல்களைக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்வது போல் நடிக்கின்றனர்.
மேற்கத்திய திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சி செய்த படித்த நாடார்கள் அடங்கிய சட்டம்பிள்ளை இயக்கம், கால்டுவெல்லுக்கு எதிராக ”தின்னவேலி ஷானர்கள் “ என்ற புத்தகத்தை நீக்கக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கால்டுவெல்லின் ஷானர்களின் சித்தரிப்புக்கு எதிரான, அவர்களின் கூற்றுகளை நிரூபிக்க நாடார்கள் தொடர்ச்சியான வாதங்களை முன்வைத்தனர், தெரு முனையில் சொற்பொழிவு செய்து, துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டனர், மேலும் 1880 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் ராஜாவிடம் அதிகாரப்பூர்வ மனுவை தாக்கல் செய்தனர். கேவலமான Tinnevelly Shanars வெளியீட்டை திரும்பப் பெறவும் மற்றும் ராபர்ட் கால்டுவெல்லை கண்டிக்கவும் பரிந்துரைத்தனர்.இதன் விளைவாக பிப்ரவரி 1880 ஆம் ஆண்டு CMS பதிவில் அச்சிடப்பட்ட ஒரு கடிதத்தில், குறிப்பாக ஷனர்கள் "இந்துக்கள் அல்ல" என்ற அவரது மதிப்பீட்டை அறிக்கைகளை ஓரளவு திரும்பப் பெற்றதாகத் தெரிகிறது.
1881ஆம்
ஆண்டில் கால்டுவெல்லின் History of Tennevelli என்ற
நூல் சென்னை அரசினர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்நூலிலும் நாடார் குலத்தவர் பற்றிய அவருடைய கருத்து எந்த
மாற்றமுமின்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகச் சான்றோர் சமூகத்தவர்கள் கால்டுவெல்லுக்குக் கொலை
மிரட்டல்கள் விடுத்தனர்.
அந்த ஆண்டிலேயே அவர் திருநெல்வெலிப் பகுதியில் நிம்மதியாக வாழ முடியாத நிலை தோன்றியதால் கோடைக்கானலில் குடியேற நேர்ந்தது. 1891ஆம்
ஆண்டில் கோடைக்கானலிலேயே மரணமடைந்த பிறகுதான் அவரது உயிரற்ற உடல்
இடையன்குடிக்குத் திரும்ப நேர்ந்தது
மேலும் வங்காள மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சியை
மையமாகக் கொண்டு மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமயப்படுத்தப்பட்ட தேவாலயங்களுக்கு
எதிராகப் போராட வழிவகுத்தது மட்டுமல்ல அன்று முதலே கிறிஸ்தவத்தின் இந்தியமயமாக்கல்
என்பது ஆரம்பமானது.
செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தின் துவக்கம்
இந்திய சூழலில், சமூக, கலாச்சார மற்றும் மத
ரீதியாக தென்னிந்தியாவில் முதல் செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தை நிறுவுவதற்கு
மறைமுகமாக பொறுப்பானவராகவும் சட்டம்பிள்ளை இருந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
1893 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த
உலக மதங்களின் பாராளுமன்றத்தில் செவன்த் டே அட்வென்டிஸ்ட் பிரதிநிதி ஆற்றிய சொற்பொழிவு
அடங்கிய சிறு புத்தகத்தின் நகலைப் பெற்றார். அதன்வழி பல்வேறு மதங்களில் உள்ள உண்மைகள்
மற்றும் பொதுவான தன்மைகளை வெளிக் கொணர்ந்தார். ஏழாவது நாளை ஓய்வுநாளாகக் கடைப்பிடிப்பது
யூதர்கள் மட்டுமே என்று நம்பிய சட்டாம்பிள்ளை, ஓய்வுநாளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும்
ஆர்வத்தில் நியூயார்க்கு மிச்சிகனில் உள்ள பேட்டில் க்ரீக்கில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட்
அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். பதிலாக F. M. Woolcox என்பவர் ஒரு சில புத்தகங்கள்
மற்றும் பத்திரிகைகளை பதில் அனுப்பினார்.
1906 இல், ஜே.எஸ். மினசோட்டாவைச் சேர்ந்த ஜேம்ஸ்
தென்னிந்தியாவில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதன்படி, அவர் தனது மனைவி மற்றும்
இரண்டு மகன்களுடன் பெங்களூருக்கு அட்வென்டிஸ்ட் மிஷனரியாக அனுப்பப்பட்டார். 1908 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் ஜி.எஃப். ஏனோக் மற்றும்
ஜே.எல். ஷாவுடன் சேர்ந்து ரயிலில் திருநெல்வேலிக்கு வருகை தந்தனர், மாட்டு வண்டியில்
நாசரேத்தை அடைந்தவர்களை சட்டம்பிள்ளையின் இந்து
ஏக இரட்சகர் தேவாலயத்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான
மக்கள் கலந்துகொண்டு அற்புதமான சடங்குகளுடன் வரவேற்றனர். அவர்கள் ஒரு உள்ளூர் பள்ளியில்
பத்து நாட்கள் தங்க வைக்கப்பட்டனர், ஜூலை 2, 1908 அன்று, ஜேம்ஸ் பெங்களூரை விட்டு வெளியேறி
நாசரேத்தில் தங்க முடிவு செய்ததால், தேவாலயம்;
ஜேம்ஸுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது.
தென்னிந்தியாவில் செவன்த்-டே அட்வென்டிஸ்ட்களின்
முதல் தேவாலயம் 50 உறுப்பினர்களுடன் 30 ஜனவரி 1915 அன்று பிரகாசபுரத்தில் முறையாக துவங்கப்பட்டது,
இருப்பினும், அது உண்மையில் 1908 ஆம் ஆண்டிலேயே ஜேம்ஸ் மற்றும் சி.ஜி. லோரி தலைமையில்
சமய வழிபாட்டுடன் செயல்பட்டது. பின்னர், பிரகாசபுரத்தில்
ஜேம்ஸ் மெமோரியல் பள்ளி என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தையும் தொடங்கியது அட்வென்டிஸ்ட்
சர்ச்.
0 Comments:
Post a Comment