14 Aug 2019

மத்திய அரசின் புதிய கல்வி திட்டம்-2019


மனிதமேம்பாட்டு துறையின் மேற்பார்வையில் முனைவர் கெ.கஸ்தூரி ரங்கன் அவர்களால் 2017 ல் பணியப்பட்டு 2019 ல் முடிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் கல்வியில் ஸ்திரதன்மை, சமதர்மம், நியாயமான  கட்டணம், தரம், பொறுப்பு தன்மை ஆகியவை உருவாக்குவது ஆகும்.

தேசிய வருமானத்தில் 6% கல்விக்காக செலவிட வேண்டும் என 1964 ல் கல்வி திட்டம் கொண்டு வந்த கோத்தாரி குழு கூறியுள்ளது. 2019 லும் கஸ்தூரி ரங்கன் குழுவும் அதே 6% பணம் கல்விக்காக செல்விட பணிந்துள்ளது.

தற்போது கல்விக்கு என 3.8 % செல்விடுகின்றனர். அது உலகாலாவிய சராசரி அளவு 4.7% விட குறைவு தான். நம்  நாட்டின்  பாதுகாப்பு-ராணுவ பணிக்குக்கு என 6.4% நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்விக்காக செலவிடுதல் என்பது இலவச கல்வி கூடம், இலவச புத்தகம், லாபுகள், தொழில்நுட்பம், விளையாட்டு அரங்கம், கலை பண்பாட்டு வளர்ச்சி என்பவையாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் 4 வது, 5, 6,7 வது பரிந்துரை என அரசு, கல்வி ஆசிரியர்கள் ஊதியம் உயர்ந்ததை தவிர கல்விக்கான வாய்ப்புகள் உயரவில்லை. 25% மாணவர்கள் மட்டுமே 12 ஆம் வகுப்பு முடிந்து கல்லூரி படிப்பை நோக்கி வருகின்றனர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மீதம் 75 % பேர் 12 ஆம் வகுப்புக்கு உள்ளாகவே கல்வி சூழலில் இருந்து பின் வாங்கி விடுகின்றனர் என்பதே நிஜம்.

The Right to Education Act, 2009 (RTE Act): Currently, the RTE Act provides for free and compulsory education to all children from the age of six to 14 years.
The draft Policy recommends extending the ambit of the RTE Act to include early childhood education and secondary school education. This would extend the coverage of the Act to all children between the ages of three to 18 years.
6-14 வயது குழந்தைக்ளுக்கு முற்றிலும் இலவசமாக கல்வி கொடுக்க வேண்டிய தேவையை சட்டம் பரிந்துரைத்துள்ளது. 70 வருடம்  ஆகியும் நடைமுறைப்படுத்த இயலாத அரசு; வயது 3 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கல்வி திட்டம் வகுத்துள்ளது.  கல்வி பெறுவது இலவசமாக   என்பதல்ல, பதிலாக பள்ளிகளின் கூட்டமைப்பு என் குறிப்பிட்டுள்ளது..

கல்வி திட்ட்டத்த 5-3-3-4 எனப்பிரித்துள்ளது. முதல் ஐந்து வருடம் அதாவது 3 வயது முதல், ¼,1/2  , ¾, ஒன்றாம் வகுப்பு , இரண்டாம் வகுப்பு பிரீ பைமரி என, அடுத்து3-5 வகுப்புகள், அடுத்த நிலை 6 முதல் 8, கடை நிலையாக 9 ஆம் வகுப்பு முதல் +2.Curriculum framework  5 -3-3-4 கல்வி திட்டம் - five years of foundational stage (three years of pre-primary school and classes one and two), (ii) three years of preparatory stage (classes three to five), (iii) three years of middle stage (classes six to eight), and (iv) four years of secondary stage (classes nine to 12).

எல்கெஜி , யுகெஜி பள்ளிகளை தேவையற்றது. இதில் மழலை பள்ளியை 3 வருடம். 3 வயது குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு, பெற்றவர்களின் அன்பு தான் தேவை.
குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் கற்க போகும் பாடசாலையில் பரப்பளவு, விளையாட்டு மைதானம், கட்டிட அமைப்பு மாண்டிசோரி கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மழலை மருத்துவர், இவயை பற்றி எதுவும் கருத்துரைக்கவில்லை. வெறுமெனே சில கற்பனையான கற்பிதங்களை விளம்புகிறது கல்வி திட்ட வரை.
இன்றுவரை முதலாம் வகுப்பு சேர்க்க மழலையர் பள்ளி சாற்றிதழ் தேவை இல்லை . இனி தேவைப்படலாம். மூன்று வயது குழந்தையை பள்ளிக்கு விட பெற்றோர்கள் விரும்பாவிடிலும் விட்டே தீர வேண்டும் என நிர்பந்தம் செலுத்தலாம்.  இனி மத்திய அரசின் ஆதரவுடன்  தனியார்கள் கல்வி வியாபாரத்தில் இரண்டு வருடம் என்பதை மூன்று வருடமாக சம்பாதிக்கலாம்.

ஆசிரியர்களின் தரத்தை பற்றி அங்கலாய்க்கும் மத்திய அரசு அங்கன்வாடி என்பதை பற்றி குறிப்பிடுகின்றனர். 3 வருட கல்வி வழங்க போகும் அங்கன்வாடி ஆசிரியர்களின் அடிப்படை கல்வி தகுதி +2 அல்லது 10 ஆம் வகுப்பு என கொடுக்கப்பட்டுள்ளது.  வயது தகுதி 18 முதல் 40 என அரசு இணையத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதை விட குழந்தைகள் வளர்ச்சி மோசமாகும் சூழல் தான் வரப்பொகிறது. கற்பிப்பதிலில் பிரத்தியேகம் பயிற்சி எடுத்திருக்கும் மாண்டிசரி, டிடிசி அல்லது பிஎட் என்ற கல்வி தகுதியை கேட்கவில்லை.
இப்படியாக அடிப்படை தேவை, தற்போதைய சமூக நிலை, கடந்த கல்வி திட்டங்களில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை எதுவும் நினைத்து பார்க்காது புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள்.

மோடியின் கல்வி திடத்தின் பல கூறுகள் கோத்தாரி திட்ட அறிக்கையில் இருந்து எடுத்தவை தான். கோத்தாரி திட்டக்குழு பரிந்துரைத்துள்ள அடிப்படை வசதிகளை நடைமுறைப்படுத்தி விட்டு புது கல்வி கொள்கையை நடப்பாக்க முன் வந்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும்.
கோத்தாரி திட்டக்குழு பரிந்துரைகள் என்னவென்று பார்த்தால்

(i)
அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 % ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது 
(ii)
வயது வரை கட்டாயக் கல்வி
(iii)
ஆசிரியர் கல்வி மற்றும் மதிப்பூதியம்
(iv)
மொழிகள் கற்றலில் தாய்மொழியுடன் கூடிய மும்மொழிக் கொள்கை
(v)
சமமான கல்வி வாய்ப்பு
(vi)
சமூகத் தொண்டுடன் பணி அனுபவம்
(vii)
பகுதிநேர கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி
(viii)
இடைநிலைக் கல்வியை தொழிற்சார்புடையதாக்குதல்
(ix)
பெண்களுக்கான இடைநிலைக் கல்வி
(x)
அறிவியல் அடிப்படையிலும், வகுப்பறைச் செயல்முறையிலும் சீர்திருத்தம்.
 (xii)
தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. 
(xiii)
விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் 
(xiv)
ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைப்பது ஆகியவை இக்குழுவின் சிறப்பம்சமாகும்.
இதை எதையும் நடைமுறைக்கு கொண்டுவராது கோத்தாரி திட்ட அறிக்கையில் இருப்பவையுடன் மோடியின் கல்வி திட்டவும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளவை.

புதிதான சில பரிதுரைகள் பலர் அச்சுத்துடன் பார்க்கும் பரிந்துரைகள் இவை தான்
1.பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு ஆகியவற்றிலிருந்து உயர்கல்வி தொழிற்கல்வி ஆகிய அனைத்திற்கும் இனி அனைத்திந்திய நுழைவுத் தேர்வு உண்டு, அதற்கு தேசிய தேர்வு முகமை (national Testing Agency-NTA) உருவாக்கப்படும். 
2.
மாநில கல்வி ஆணையத்திற்கு தனித்து முடிவெடுக்கும் அதிகாரம் எதுவுமில்லை . (18.4.2)
3.
கல்வி, பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்க, பொதுக் கல்விக் குழு (General Educational Council) என்ற ஒன்று நிறுவப்படும்.(இப்போது யுஜிசி உண்டு)
4.
மேல் ஆராய்ச்சி படிப்புகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அமைப்பாக தேசிய ஆய்வு நிறுவனம் அமைக்கப்படும். இனி நிறைஞர் படிப்பு (M.Phil) கிடையாது, மேல் ஆராய்ச்சி படிப்பு (Post Doctoral Fellow) மட்டுமே உண்டு, இதற்கு மாணவர்களை தேர்வு செய்வது தேசிய ஆய்வு நிறுவனத்தின் பணி.
5.
தனியார் கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளையும் சமமாக அணுகுதல் போன்ற பரிந்துரைகளை வரைவு அறிக்கை முன்வைத்துள்ளது..


இந்தியாவில் இதுவரை இருந்துள்ள  கல்வி திட்டங்கள்


Indian Education Policies


மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக் கொள்கை, பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது. யஷ்பால் குழு போன்ற பழைய கல்வி கொள்கைகளுக்கு தொடர்ச்சியாக அறிவித்து இருக்க  வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. 

இதன் முக்கிய அம்சங்கள்
1.        கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் புதிய கல்விக் கொள்கை, இதைச் சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடி மத்தியப் பட்டியலுக்குக் கல்வி வரவேண்டும் என்கிறது. ஆனால், இது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.
2.      அடுத்து, நான்காம் வகுப்பின் முடிவிலிருந்தே தேர்ச்சி / தோல்வி என மாணவர்களைச் சலித்தெடுக்க வேண்டும் என்கிறது. இது பழையபடி பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்குத்தான் வழிவகுக்கும்.
3.      திறன்களை, குறிப்பாக வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது; வேலைக்குத் தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்துவிட்டது என்று சொல்லும் புதிய கொள்கை, இதைச் சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து, பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது.

மேலும், கல்வி முழுமை பெறும் முன்னமே வேலைத் தகுதிச் சான்றிதழ் மூலம் (மாணவர்கள் விரும்பினால்) ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்கிறது. இது குலக் கல்விமுறையை நினைவுபடுத்துவதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
4.      இந்திய அளவிலான கல்வியின் தரத்தை மேம்படுத்த, தரமேம்பாட்டுக் குழு போல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். தேசிய அளவிலான பள்ளிக் கல்வி தரச்சான்று ஆணையம் என அது அழைக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
5
ஆசிரியர்களின் தரம் ஆசிரியர்கள் திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் வண்ணம் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தரச்சான்றுத் தேர்வுகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது.
6.      மதிய உணவுத் திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கிறது இந்தப் புதிய கொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்கு அரசு நேரடியாக உணவு தராது. அதற்குப் பதிலாக அவற்றைத் தனியார் ஒப்படைத்துவிடும். அரசின் நலத்திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி இது.
7.  கோத்தாரிக் குழு இந்தியாவைச் சமூகம் என்று அழைத்தது. இந்த ஆவணமோ இந்தியப் பொருளாதாரம் என்றே அழைக்கிறது.
8

கோத்தாரிக் குழு கல்வியை சேவை என்று அழைத்தது. மோடியின் புதிய கல்விக் கொள்கை ஆவணமோ கல்வியை முதலீடு என்கிறது.
o     மூன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி ஒன்றை விருப்பப் பாடமாக எடுப்பதும், ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாம் மொழி ஒன்றை கட்டாயமாகக் கற்பதுவும் திருத்தப்பட்ட வரைவிலும் (4.5.9) வலியுறுத்தியுள்ளது.
o    முன்மழலை (Pre KG) வகுப்பிலிருந்து பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக் கல்வி, உயராய்வு நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் தேசிய கல்வி ஆணையம் (National Education Commission)- இராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் (Rashtriya Shiksha Aayoung) என்ற அதிகார கட்டமைப்பின் கீழ் இந்தக் கல்விக் கொள்கை கொண்டு செல்கிறது. (2.3.1) ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதலமைச்சர் தலைமையில் மாநிலக் கல்வி ஆணையம் என்ற அமைப்பு இருந்தாலும், அது தேசிய கல்வி ஆணையத்தின் முகவாண்மை அமைப்பாக மட்டுமே செயல்படும். (8.1.3.).
o    பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு ஆகியவற்றிலிருந்து உயர்கல்வி தொழிற்கல்வி ஆகிய அனைத்திற்கும் இனி அனைத்திந்திய நுழைவுத் தேர்வு உண்டு, அதற்கு தேசிய தேர்வு முகமை (national Testing Agency-NTA) உருவாக்கப்படும்.
o    இந்திய அரசின் அதிகாரத்தை கல்லூரி-பல்கலைக்கழகக் கல்வியில் நிலை நிறுத்துவதற்காக தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம் (National Higher Educational Regulatory Authority-NHERA) என்ற ஒன்றை இந்தக் கல்விக் கொள்கை முன்வைக்கிறது. (பத்தி 18.1.2)
o    மாநில கல்வி ஆணையத்திற்கு தனித்து முடிவெடுக்கும் அதிகாரம் எதுவுமில்லை . (18.4.2)
o    கல்வி, பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்க, பொதுக் கல்விக் குழு (General Educational Council) என்ற ஒன்று நிறுவப்படுமாம். இந்தக் குழு கல்லூரி மட்டுமின்றி, பள்ளியின் பாடத் திட்டத்தையும் முடிவு செய்யும்(18.3.2).
o    மேல் ஆராய்ச்சி படிப்புகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அமைப்பாக தேசிய ஆய்வு நிறுவனம் அமைக்கப்படும். இனி நிறைஞர் படிப்பு (M.Phil) கிடையாது, மேல் ஆராய்ச்சி படிப்பு (Post Doctoral Fellow) மட்டுமே உண்டு, இதற்கு மாணவர்களை தேர்வு செய்வது தேசிய ஆய்வு நிறுவனத்தின் பணி.
o    தனியார் கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளையும் சமமாக அணுகுதல் போன்ற பரிந்துரைகளை வரைவு அறிக்கை முன்வைத்துள்ளது..

நமது கேள்வி எந்த் திட்டங்களையும் செம்மையாக நடைபடுத்த முயற்சி எடுக்காது புதிய கருத்தாக்கங்களுடன் அதே தேவைகள் இன்றும் இருக்க புதிய கல்வி கொள்கையை மோடி அரசு அவசர அவசரமாக ஏன் கொண்டு வர வேண்டும். பல பரிந்துரைகள் சிறப்பாகவே உள்ளது, ஆனால் போதிய அரசு பள்ளிகள் இல்லை,வசதிகள் மேம்படுத்தி கொடுக்கவில்லை. ஒரே திட்ட த்தில் கல்வி பெறும் சூழல் கூட இல்லை. புதிய திட்டம் அடிப்டை இல்லாது மேலோட்டமாக புகுத்தும் கொள்கை போல் உள்ளது.


source




 [J

22 May 2019

சூப்பர் டீலக்ஸ்- Super Deluxe


சமீபத்தில் கண்ட திரைப்படம்.  சராசரி தமிழ் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான கதைத்தளம், கருத்து, உருவம் என தனித்து நிற்கும்  படம்.
ஹைப்பர் இணைப்பு(Hyper link) என்ற வகையை சேர்ந்து. ஒன்று ஒன்றோடு தொடர்பில்லா நாலுகதைகள், ஒரு  புள்ளிகளில் சந்தித்து கொள்ளுகின்றன.

முதல் கதை:
ஒரு புதுமண தம்பதி. கணவர் வெளியே போயிருக்கும் வேளையில் தன் கல்லூரி காதலனை வீட்டிற்கு அழைக்கும் வேம்பு என்ற கதாப்பாத்திரம். அவன் வந்த இடத்தில் செத்து போய் விடுகிறான். இனி அவன் உடலை மறைக்க வேண்டும். கணவருக்கும்  தெரிந்து விடுகிறது.  அந்த உடலை என்ன செய்தார்கள். இவர்களை துரத்தும் போலிஸ் அதிகாரி என்ன ஆனான். பிரிய முடிவெடுத்த தம்பதிகள் பிரிகின்றனரா? போலிஸ் அதிகாரியிடம் இருந்து வேம்பு(சமந்தா) கதாப்பாத்திரம் தப்பித்தாரா  இல்லையா?

இரண்டாம் கதை:
ஐந்து பதினமபருவ பள்ளி மாணவர்கள். பள்ளிக்கு  போகாது வீட்டில் ஒளிந்திருந்து பாலியல் படம் பார்த்து கொண்டு இருப்பதுடன் கதை ஆரம்பமாகிறது. படத்தில் வரும் பெண், அதில் ஒரு பையனின் தாய்! அத்துடன் கதை நகருகிறது. தாயை கொலை செய்ய ஓடி வருகையில் அவன் கொண்டு வந்த கத்தியால் காயத்திற்கு உள்ளாகி மரணத்திற்கு போராட, தாய் மகன் உயிரை காப்பாற்ற முயல்கிறார். தகப்பன் திடீர் கிறிஸ்தவனாக மாறின ஆள். அந்த நபரின் உலகம் தனி  உலகமாக நகர்கிறது. அங்கு மூன்று பெயருக்கு மட்டுமே இடம்!  அந்த நபர்,  அந்த நபரை மாற்றிய சுனாமி, புதிதாக கண்டு பிடித்த கடவுள், என நகருகிறது.

மூன்றாவது கதை:
பழைய ஆசாரம் கொண்ட ஒரு வீடு.  வீடு நிறைய மனிதர்கள்.  அந்த வீட்டில் பொறுப்பாக இருக்க வேண்டிய மகன் திருமணம் முடிந்து, குழந்தை இருந்த நிலையில்  வீட்டை விட்டு போய்விடுகிறவன்; ஏழரை வருடம் கடந்து திரும்பி வருகிறான்.  அவனாக அல்ல பாலினம் மாறிய அவளாக. கணவனை காத்திருந்த மனைவி நிலை என்ன? அப்பா என்ற பிம்பத்தை எதிர் பார்த்த மகன் நிலை என்ன? மூன்றாம் பாலினமாக மாறிய அப்பா -மகன் உறவு எவ்வாறு நகர்கிறது. அந்த வீட்டிலுள்ள மற்ற நபர்கள் இந்த சூழலை எப்படி பார்க்கின்றனர். அந்த நபரின் மனைவியும் மகனும் ஏற்றுகொள்கின்றனரா? இப்படியாக கதை நகர….

நாலாவது கதை:
ஐந்து பள்ளி சிறுவன்கள். தொலைக்காட்சி பெட்டி உடைந்து போய் விடுகிறது. அந்த பெட்டியை தன் தகப்பன் வேலைக்கு போய் வரும்முன் வீட்டில் கொண்டு வைக்க வேண்டும். அந்த அவசரத்தில் அவர்களை சந்திக்கும் நபர்கள் யார்? செட்டியார் வீட்டில் திருட போனவர்கள் என்னவானார்கள். ஒரு பெண் ஏலியனை சந்திக்கின்றனர். மாணவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி கிடைத்ததா ?    பெண் என்பதை பற்றிய அவர்கள் பார்வை மாறினதா இல்லையா?

நாலு கதையையும் இணைக்கும் ஒரே புள்ளியாக மனிதனின் அடிப்படை தேவையான பாலியல் இச்சை உள்ளது.  Buttefly theory, Darwin Sex theory அவதானிக்க கூறிகின்றனர் சினிமா வல்லுனர்கள்.


  • வேம்பு/ சமந்தாவை துன்படுத்தும் போலிஸ் அதிகாரி,  மூன்றாவது பாலினமாக மாறின விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தையும் சித்திரவதை செய்யும். இவாஞ்சலிக்கன் யேசு பக்தரான அப்பா கதாப்பாத்திரவும் விஜய் சேதுபதி கதாப்பாத்திரவும் சுனாமியில் தப்பித்த நபர்கள்.
  • முதல் கதையில் சமந்தா/வேம்பு , விஜய்சேதுபதி, பதின்மவயது பையனுகள்,வயதான போலிஸ் அதிகாரி போன்ற கதாப்பாத்திரங்கள் பல அளவிலுள்ள பல உருவத்திலுள்ள பாலியல் பிரச்சினையை எதிர்கொள்வார்கள், உள்பட்டவர்கள்.

 பெண்களின் தெரிவு முக்கியப்படுத்தியுள்ளார்கள்.

  • · கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா? என கனத்த முடிவுகளை எடுக்கும் விஜய் சேதுபத் மனைவி கதாப்பாத்திரம்.
  • ·   காதலனை அழைத்த சமந்தா கதாப்பாத்திரம்,  கணவனுடன் இணையுவாரா? இல்லையா? போலிஸ் அதிகாரியின் விருப்பத்திற்கு உடன்படுவாரா? இல்லையா?
  • ·         அம்மா கதாப்பாத்திரம், யேசு பைத்தியத்திலுள்ள கணவன் கதாப்பாத்திரத்தை கேள்வி எழுப்பும். மகனின் அச்சத்திற்கு தயங்காது பதிலளிக்கும்.  இப்படியாக பெண்கள் தெரிவு செய்யும், தங்கள் செயலுக்கு பொறுப்பேற்கும்  இடத்திற்கு நகர்கின்றனர்.

உருகி உருகி வாடா…. உன்னை பெட்டரா பீஃல் பண்ண வைக்கேன்னு சொல்லிய  பெண் கதாப்பாத்திரம், அவன் இறந்ததும்….. அந்த கணவன் கதாப்பாத்திரம் கூட அவனை சக மனிதனாக நினைத்து பேசிக்கொண்டு இருக்கையில் அவனை மிகவும் பயத்துடன் கேவலமாக அது இது என அழைக்கும் காட்சிகள், தேவை முடிந்ததும் பெண்கள் இப்படி தான் என்ற மனநிலையை பற்றி சொல்ல வருகின்றனரா? .

காதலன் காதலி வீட்டில் வந்து சாவுவது அவனை பிரிட்ஜில் வைத்திருப்பது , மெத்தையில் கட்டி கீழை போட்டு எடுத்து செல்வது, இவர்களை போலிஸ் அதிகாரி துரத்துவது இவை லாஜிக்கை இடிக்கிறது.

இந்த சமூகத்திலுள்ள ஆண்களின் மனநிலை. தன் மனைவி என்பவர், தன் வீடு, தன் அறை, தன்  கட்டில், போன்ற ஓர் உடமை என நினைத்திருப்பது. வரம்பு மீறி போய் விட்டாள் என அறிந்ததும் புலம்பும் ஒவ்வொரு வார்த்தைகள் எல்லா வார்த்தைகளையும் சகித்து கொள்வார், ஆனால் கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க தன்னிடம் பணிய வேண்டும் என போலிஸ் அதிகாரி கூறும் போது பெண் தயங்குவாள். செக்ஸ் தேர்வு என்பது விருப்பம் சார்ந்த, அன்பு கரிசனை சார்ந்த  தேர்வு, அதில் அதிகாரம் வஞ்சகம், கண்டிப்பு புகிரும் போது உயிர் போனாலும் பெண் விரும்ப மாட்டாள் என அடிவரை இட்டு சொல்லும் விதம் அருமை.

ஒரு மனைவிக்கு பிரச்சினை என்றதும் அது தன்னை மட்டுமல்ல தன் குடும்ப கவுரவத்தையும் பாதிக்கும் என்ற மனநிலை ஒருபுறம். மனைவிக்கு ஒரு பிரச்சினை என்றதும் அவளை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற கணவனின் தவிப்பு. கணவன் மனைவியின் உத்தமான உறவின் பக்கத்தை விளக்கியுள்ளனர்.

கணவன் மனைவியாக  சேர்ந்து இருந்த போது, இருந்த இறுக்கம் ’நாம் பிரிகிறோம்’ என்றதும் அது நட்பாக,புரிதலாக கரிசனையாக மாறி விடும். அதுவரை பயம் கொண்டு பேசின மனைவி பின்பு நட்பில் பேச ஆரம்பித்து விடுவார். கடைசியில் கணவன் கதாப்பாத்திரம் கொஞ்சம் வண்மமாக கிண்டல் அடிக்கும். ”உன்னை போட்டவன் செத்து விட்டான், போட நினைத்தவனும் செத்து விட்டான், நான் உயிர் போனாலும் நெருங்கவே மாட்டேன்”  என்கிற போது கூட… காதலின் பார்வையில் சிரித்து கொண்டு கடந்து விடுவார் மனைவி. கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் மனைவியின் சில சிறுமையையும் உள்கொண்டு, எதிர்கொள்ள துணை புரிந்து  நகர்வதே உண்மையான கணவனாக இருக்க இயலும்  என்ற கோணத்தில் சில காட்சிகள் அமைந்துள்ளது பாராட்டுதல்க்குறியது. கற்பு என்ற மனநிலை கடந்து உண்மையான புரிதலுடன் இணைவர்.

மேட்டர் படம் இருக்கா  மேடம்? ’சர்’ என ஆண்களை அழைப்பதற்கு இணையான ’மேடம்’ என்ற வார்த்தை மரியாதையான சொல்லாடல். பயண்படுத்திய விதம் திகக்கை வைக்கிறது. ’மேடம்’ என்றதும் பையா, பயப்படலாம் கூச்சப்படக்கூடாது        என்ற விளக்கத்துடன் மாணவர்களுக்கு சிடி விற்கும் அம்மா வயதான பெண்; அக்கா என்றதும் மாணவர்களை திட்டுவார்.  சில நாடுகளில் மேடம் என்ற வார்த்தைக்கும் பாலியல் தொழிலாளியை அழைக்கும் வார்த்தை என்றும் கேட்டுள்ளேன்.  அக்கா…. மேடம் லாஜிக் விளங்கவில்லை!

அவன் கவலையில் இருந்தான்,  எப்படி ஆறுதல் படுத்துவது. அவனுக்கு  மிட்டாயா கொடுக்க இயலும்?,  நான் ஐட்டம் இல்லை…. போன்ற ஒரு திரை வசனங்கள்  உண்டு . இது போன்ற வசனங்கள் தான் படம் ‘அடல்ட்’ படம் ’மோசமான படம்’, குடும்பத்துடன் பார்க்க இயலாது என கொக்கரிக்க வைத்தது. ஆனால் கணவன் மனைவி இணைந்து இருந்து பார்க்க வேண்டிய படம் இது. கண்டிப்பா ஆண்கள் ஈகோவை உடைக்கும். அதனாலோ மனைவிகள் இது போன்ற படங்களை பார்க்கக்கூடாது என கணவன் விரும்புவார்.

ஒவ்வொருவரும் அவரவர் கதாப்பாத்திரம் ஏற்று மிகவும் சிறப்பாக நடித்தி இருந்தனர். விஜய்சேதுபதியின் நடிப்பை எடுத்து சொல்லாது இருக்க இயலாது. பகத் தனது இயல்பான நடிப்பில் அசத்தியுள்ளார். குட்டி பையன் நடிப்பு மிகவும் சிறப்பு. ஒரு அப்பாவின் இழப்பை அந்த குழந்தை எப்படி எடுக்கிறது ஆனால் அந்த வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் என்ன பார்வை. அந்த நபர் பெண்ணாக திரும்பி வந்ததை மற்றவர்கள் எப்படி எடுக்கின்றனர். தகப்பன் இல்லா குழந்தைகள் நிலையை ஒரே காட்சியில் சொல்லியிருப்பார்கள். வீடு நிறைய நபர்கள்; ஆனாலும் அந்த குட்டி பையன் சாப்பிடுவதும் அவன் மனைவி கூட யாரோடும் ஒட்ட இயலாது தனிமையில் தான் உழலுகிறார்கள். தாய் மாமியார் என யாரெல்லாமோ இருந்தாலும் அம்மாவிற்கு மகனும், மகனுக்கு அம்மாவும் மட்டுமே இருப்பார்கள். சேதுபதி கதாப்பாத்திரத்தை எல்லாரும் கேள்வி எழுப்பும் போதும், தாக்கும் போதும் மகனும் மனைவியும் அந்த நபரை அதே போன்று ஏற்க கொள்ளும் மனநிலைக்கு வருகின்றனர்.  மாற்று பாலினத்தார் முதலில் மதிக்கப்பட வேண்டியது ’தனது குடும்பத்தில் தான்’ என குறிப்பிடுகின்றனர்.

மனைவி மற்றொருவருடன் தனது  படுக்கையை பகிர்ந்தார் என்பது கணவனுக்கு  எவ்வளவு துயரோ அதே போன்று தான் ஒரு மகனுக்கு அம்மா பாலியல் படத்தில் நடித்தாள் என்பதும்.  அம்மாவின் விளக்கம் ஏற்று கொண்டதாக தெரியவில்லை.  நண்பனிடம் பின்பும் கேட்கிறான் எல்லாரும் பார்த்திருப்பார்களோ? பெண் என்பவள் தனது கணவனின் கேள்விக்கு மட்டுமல்ல மகனின் கேள்விகளுக்கும் பதில் கொடுக்க வேண்டிய நிர்பந்தத் நிலையில் தான் உள்ளனர். ”போடி தேவிடியா மோளே” என மகனிடவும் திட்டு வாங்கும் நிலையில் தான் தாய்மை உள்ளது. இருந்தாலும் மகன் உயிரை காப்பாற்றவும் தன் நிலையை புரிய வைக்கவும் பிரயத்னம் எடுக்கும்.

”நீ சுனாமியில ஜீசசு சிலையை பிடித்து தப்பித்ததால் கிறிஸ்தவனாக மாறின கரடியை பிடித்து தப்பித்தா எதா மாறியிருப்ப”? இந்த கேள்வி தற்கால ஹிந்துத்துவா அரசின் மதமாற்றத்தை முன் நிறுத்திய கேள்வியாகத்தான் படுகிறது. இருப்பினும் இவாஞ்சலிக்கன் மதவாதிகளின் குருட்டு பக்தியையும் கோட்பாடுகளையும் நம்பிக்கையையும் சரியான பார்வையில் கேள்வி எழுப்பி உள்ளதையும் மறுக்க இயலாது.

நீலன் கெ சேகர், மிஷ்கின் நளன் குமரசாமி,மூன்று பேரும்சேர்ந்து அவரவர் பகுதிக்கு  திரைவசனம் எழுதியுள்ளனர்.  இது ஒரு புது யுக்தியாக இருப்பதால் சிறப்பாகவும் திரை வசனம் பல அடுக்கு உருவகம் அர்த்தங்கள் கொண்டு விளங்குகிறது,  தெளிவும் உள்ளது. 

தம்பதிகள் பேசின உரைகள்  மிகவும் இயல்பானது. அதை மிகவும் ஆழமான புரிதலுடன் மனித உளவியலை அறிந்து நீலன் கே சேகர் எழுதியுள்ளார். ’நாம் சேர்ந்தே இருந்தோம்’ ஏன் ஒட்டவில்லை,…… மிஷ்கின் பகுதியான மூன்றாம் பாலினம்  சார்ந்த வசனங்கள் எடுத்து சொல்லக்கூடியது. அவரே சொல்லியுள்ளார் அவர் நேரிட்டு கண்டு உணர்ந்த அவருடைய நண்பர் வாழ்க்கையை போன்று இருந்ததால் வசனங்கள் அமைப்பது எளிதாக இருந்தது என்று. இவாஞ்சலிக்கன் கிறிஸ்தவ திரைவசனங்கள் நெடியதும் திரும்ப திரும்ப வருவதாக இருந்தது. முதலில் ’நான் கிறிஸ்தவன் இல்லை’ என்பதும் கடைசியில் மனைவியின், கிறிஸ்தவ மதமாற்றம் சார்ந்து கேள்வி எழுப்பும் போது பதிலில்லாது தலையாட்டுவதும் முரண்களை எழுப்புகிறது.
ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் காட்சி தொகுப்பிற்கும் மெனக்கெட்டுருப்பது  படத்தின் அழகை கூட்டுகிறது.

பார்ப்பவர்களை விட்டு விட்டு நடிப்பவர்களை குற்றம் சொல்கின்றனர் , போன்ற சில டயலோக்குகள் நெருடலாக இருந்தாலும் அர்த்த செறிவுள்ளதாக இருந்தது.  இது போன்று நேரடியாக  மகனிடம் கூற இயலும் சமூக சூழலிலா உள்ளோம்.

திரைப்படம் வாழ்க்கையில் காணும் முரண்கள், மனிதனின் இயல்புகளை , நாடகத்தன்மையான வாழ்வியலை சொல்கிறது. இந்த படத்தில் நான் காணும் குறைபாடு மனித உறவிலுள்ள சிக்கல்கள், மறக்கவேண்டிய இயல்பாக நடக்கக்கூடிய குற்றங்களை கூறும் படம் பல விடையங்களுக்கு தீர்வு அல்லது மாற்று வழி கொடுத்துள்ளதா?

பாலியல் படங்களில் நடிப்பது என்பது மற்று தொழில்களுக்கு இணையான தொழிலா?  மகன் தாயை கொலை செய்ய துரத்தும் சீன் அந்த அளவிற்கு தீவிரமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன? நவீன தலைமுறை மனநிலை அதே 19 நூற்றாண்டு மனநிலையில் தான் உள்ளதா?  சி. டி தேடி அலையும் பாலியல் வரட்சியில் தான் உள்ளனரா? போலிஸ் அதிகாரியிடம் கதறி அழும் நிலையில் தான் வேம்பு கதாப்பாத்திரம், மூன்றாம் பாலின பெண் கதாப்பாத்திரம் உள்ளதா? பெண்களின் வுலுவை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் தான் வளர்க்கும்? பாலியல் படம் எடுப்பவர்களை குறை சொல்லாது நடிப்பவர்களை குறை சொல்கின்றனர், படத்தில் நடிக்கும் அம்மாவை தவறாக பார்க்கும் மகனுக்கு தான் பார்ப்பது என்ன் தவறாக தெரியவில்லை. எதுவும் தவறில்லை என்பது திரைப்படங்களின் நோக்கமாக இருக்கலாமா? ஒரு தெளிவான முடிவு இல்லை. அதுவே இந்த படத்தின் பலவும் பலவீனவுமாக காண்கிறேன். முடிவு காண்பவர்களின் மனநிலையை பொறுத்து அமையும்.


இயக்கம் தியாகராஜா குமரராஜா.  திரை இசை யுவன் சங்கர் ராஜா.