21 Aug 2022

இரவின் ஆன்மா,நிறமில்லா மனிதர்கள்,சலனச் சித்திரங்களில் சமூகம்




 அன்பு தோழி Kala Sriranjan ஊடாக என் புத்தகங்கள் இலங்கை தீவை அடைந்தது மட்டுமல்ல ஈழத்து ஆளுமைகளிடம் என் புத்தகங்கள் 'இரவின் ஆன்மா ' மற்றும் சலனச் சித்திரங்களில் சமூகம் ' சென்று சேர்கிறது.

அவ்வகையில் ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஊடகவியாளர் Karunakaran Sivarasa அவர்களிடம் புத்தகம் சேர்ந்ததில் பெருமை கொள்கிறேன்.
அன்பும் நன்றியும் தோழி! பிறப்பால் இரு தேசம் என்றாலும் நட்பால் ஒரே வீடு என உணர்கிறேன்.
புத்தகத்தை பெற்று கொண்ட நண்பருக்கு வணக்கமும் நன்றிகளும். புத்தகம் பெற்றதும் ஓரிரு வார்த்தைகளில் கதைக்க இயன்றது. நான் எழுதியுள்ள திரைப்படங்களை பார்த்துள்ளார், ஒரு சில படங்களின் இயக்குனர்களிடம் உரையாடலில் உள்ளார் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன் நண்பர்.
இன்னும் இருவருக்கு என் புத்தகம் சேர வேண்டியுள்ளது.ஒன்று உடன் பிறவா சகோதரர், இப்புத்தகம் உருவாக்கத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அன்பு சகோதரர். இன்னொருவர் இலங்கை சினிமா எழுத்து உலகின் ஆளுமை ஐயா அவர்கள்.
தோழி ஜோவின் ‘இரவின் ஆன்மா’, எனது ‘நிறமில்லா மனிதர்கள்’ நூல்கள் இரண்டும், தோழர் சுகனிடம் கையளிக்கப்பட்ட போது!




0 Comments:

Post a Comment