21 Aug 2022

சலனச் சித்திரங்களில் சமூகம்- Athi Narayanan

 


"சலனச் சித்திரங்களில் சமூகம்" ஊடகவியல் பேராசிரியரான மதிப்பிற்குறிய ஜோஸபின் பாபா அவர்களால் எழுதப்பட்டு சமீபத்தில் வெளிவந்திருக்கும் அருமையான புத்தகம். காட்சிகளால் மனதை கட்டிப்போடும், தக்கப்படி சமூகங்களை கட்டியமைக்கும் சினிமா ஊடகங்களில், சமூகங்கள், சமூகத்தின் பிரதான அங்கமான பெண்களின் பாத்திரங்கள் எவ்வாறு எடுத்தாளப் பட்டிருக்கிறது என்பதை அழகாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்...!

சில இடங்களில் ஒரு பேராசிரியரின் அணுமுறையோடும் பல இடங்களில் அபத்தங்களை கண்டித்து திருத்தம் சொல்லும் தலைமை பண்புடனும், தாயின் அக்கறை உடனும் அணுகி திரைப்படங்களை மதிப்பீடு செய்திருப்பது கவர்வதாக அமைந்திருக்கிறது. தமிழ், மலையாளம் மற்றும் இந்திய திரைத்துறையின் முக்கிய இயக்குநரான சத்யஜித் ரேய்யின் படைப்புகள் என்று எடுத்து ஆய்வு செய்திருப்பது அவருடைய பரந்துபட்ட சமூக பார்வையை வெளிப்படுத்துகிறது.

பல திரைப்படங்களை மதிப்பீடு செய்திருந்தாலும் சமூகத்தால் கொண்டாடப்பட்ட சில திரைப்படங்களை அவர் அணுகியிருந்த விதம் என்னை மிகவும் ஈர்த்தது, அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பரியேறும் பெருமாள், 96, அவள் அப்படித்தான், சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி, பிக்கூ, மளையாள திரைப்படங்களான ஐயப்பனும் கோஷியும், செல்லுலாய்ட் போன்ற திரைப்படங்களின் மதிப்புரை என்னை மிகவும் கவர்ந்தது, இவை அனைத்திலும் ஒரு யூனிக்னஸ் அழகாக வெளிப்பட்டிருப்பதை கவனிக்க முடிந்தது....!!
பரியேறும் பெருமாளில் படித்து உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என்ற கருதுகோளை உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு எதுவுமே செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஒரு பாத்திரம் பேசுவதை அழகாக சுட்டிக்காட்டி இருப்பதோடு அந்த சித்தாந்தம் எவ்வளவு வீக்காக இருக்கிறது என்பதை பொட்டில் அரைந்தார் போல் சொல்லியிருப்பார், யதார்த்தங்களை ஐடியாலஜிகளுக்கு தக்கப்படி தினிக்க நினைப்பது எவ்வளவு அபத்தம் என்பது அங்கே அழகாக வெளிப்பட்டிருக்கும். அதேபோல் 96 திரைக் கதையையெல்லாம் யாரும் இவ்வளவு கலாய்த்திருப்பார்களா என்று தெரியவில்லை, மனிதர்களின் மன வக்கிரங்களை கவர்ச்சிப் பொருளாக்கி பணம் பன்னும் புத்திக்கு பாடமே நடத்தியிருக்கிறார். அதேபோல ஐயப்பனும் கோஷியும் சமூக பொறுப்போடு நடந்திருக்கலாம் என்கிறது இவரது மதிப்புரை. செல்லுலாய்ட், பிக்கூ, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவை சற்றே தேரினார் போல் தெரிகிறது....!!
கருத்தாக்கமும், காட்சியமைப்பும் எத்தகைய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை உணராமல் தனது எண்ணங்களில் உதித்ததையெல்லாம் படமாக்கி பணம் சம்பாதிக்க நினைப்பது எவ்வளவு அவலமான சமூக சூழலை உருவாக்கும் என்பதை போகிற போக்கில் சொல்லியிருக்கும் விதம் நம்மையும் பொறுப்புடன் நடந்துகொள்ள எச்சரிக்கிறது....!
புத்தகத்தின் முகப்புரையில் இயக்குநர் மதியழகன் சுப்பையா அவர்கள் ஒன்றை சொல்லியிருப்பார், திரைப் படங்களை விமர்சனம் செய்ய ரசிக்கும் திறனும் படைப்பாற்றலும் அமையப் பெற்றிருக்க வேண்டும் என்றிருப்பார், அது பேராசிரியர் ஜோஸபின் பாபா அவர்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது....!!!
நெல்லை புத்தக திருவிழா நடக்கும் நாட்களிலேயே இதை பதிவு செய்துவிட வேண்டும் என்று நினைத்தேன், செய்தாயுற்று, மகிழ்ச்சி. புத்தகத்தை அனுப்பி வாசிக்கும் வாய்ப்பை கொடுத்த பேராசிரியர் அவர்களுக்கு நன்றி....💐💐💐
நீங்களும் வாசித்துப் பாருங்கள்..

0 Comments:

Post a Comment