9 Aug 2022

காட்டுத்தனம்-அழகுமித்ரன் -Novel

 

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி பிறப்பிடமாக கொண்ட அழகு மித்ரன் இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர். நாடகம், கவிதைகள், கதைகள் எழுதி வருபவர். ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார். தற்போது வனத்துறையில் பணியாற்றி வருகிறார்.

காட்டுத்தனம் என்ற நாவல்,  காட்டின் பாதுக்காப்பை மையமாக கொண்டு எழுதுப்பட்ட நாவல். கதை நடக்கும் காலம் 1980-2000  வரை உள்ள காலம்.  தீ-தடுப்பு காவலர் குடும்பத்தை கதாப்பாத்திரங்களாக கொண்டு கதை நகர்கிறது.  அக்குடும்பத்திலுள்ள தனலக்‌ஷ்மி கதை சொல்லும் பாணியில் கதையை அமைத்துள்ளார் ஆசிரியர்.

 

20 வருடம் கடந்த நிலையில், தனது சித்தப்பா மற்றும் தம்பி அர்ஜுன் குடும்பத்துடன் சொந்த ஊர் காண வருகிறார் தனலட்சுமி. இரயில் பயணத்தின் இடையில்  நினைவாக கதை விரிய ஆரம்பிக்கிறது.

காட்டின் அழகு, அங்கு இருக்கும் பறவைகள் உயிரினங்கள் அதன் பழக்க வழக்கங்கள், காட்டு பழங்கள், காட்டின் இயல்பு, பற்றி பல இடங்களில் விவரிக்க படுகிறது சுவாரசியமகா உள்ளது.  வயிற்று பிழைப்பிற்காக காட்டை நம்பி இருக்கும் காட்டின் அருகில் வசிக்கும் ஏழை மக்கள், அதே காட்டில் சாராயம் காய்ச்சும், கள்ளக்கடத்தல் செய்யும் அடாவடி சனங்கள், பெண்களை பாலியலாக துன்புறுத்தும் மக்கள், காடு கொள்ளைக்கு  துணை போகும் அதிகாரிகள் என்ற நிலையும் விவரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நல்ல அதிகாரிகள் காட்டை  காக்க வரும் போது  நிகழும் மாற்றங்கள் என கதை நகர்கிறது.

 

தனது தம்பி அம்மா அப்பா அடங்கிய குடும்பம். பாசமான அம்மா கலகலப்பான தினம் தினம் கதை சொல்லும்  அப்பா,  அனுசரனையான தம்பி என்று போய் கொண்டு இருந்த வீட்டில்;   திடீர் என தகப்பனார் இறப்பதுடன் தனலட்சுமியின் கல்வியும் தடை படுகிறது. தாயாரும் சுகவீனமாக மாறி விட்ட சூழலில், தனது தம்பியை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு பாக்கியம் மற்றும் மற்றும் தனத்துடன் காட்டில் விறகு மற்றும் நெல்லிக்கா பெறுக்கி விற்று வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். தனத்திற்கு வன விலங்குமேல் இருக்கும் உணர்வுபூர்வமான  பிரியம் காடு தீ பிடிக்காது காப்பதுடன் தீ பிடித்தால் தடுக்க, தீயை அணைக்க என்று முனைப்புடன் செயல்படுகிறாள்.

 

இப்படி இருக்க செல்லன் என்ற ஒருவன் காட்டுக்கு செல்லும் பெண்களை பாலியலாக வல்லுறவு செய்யும் வழக்கம் உள்ளவனாக உள்ளான். செல்லன் வழியாக பண்ணையாரால் தான் தனது தந்தை தள்ளி விடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என தெரிந்து கொள்கிறாள்.  பண்ணையார் தனலட்சிமியின் அம்மாவிடம் தவறாக நடக்க ஒரு போது முயல்கிறான்,  அதை தனது அப்பாவிடம் அம்மா சொன்னதையும் தனலட்சுமி கேட்டு உள்ளாள். பண்னையாருக்கும் தனத்தின் அப்பாவிற்கும் நடந்த சண்டையில் தனலட்சிமியின் அப்பா இறந்து இருக்கலாம் என்று நம்பும் சூழல் வருகிறது.  தனது தகப்பனாரை செல்லன் அல்லது பண்ணையார் கொன்று இருக்கலாம் என்று நம்புகிறாள் தனம். செல்லன் ஒரு நாள் தனலட்சிமியை பாலியலாக துன்புறுத்த முயல்கிறான். தனக்கு நடந்த பாலியல் அச்சுறுத்தலையும் தனது தாயிடம் சொல்லாது தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வருகிறாள்.  ஆனால் அதில் இருந்து தாயின் வார்த்தை மீட்கிறது தனத்தை.  

இன்னிலையில் தனலட்சிமியின் சித்தப்பா வந்து தனது அண்ணன் குடும்பத்தை சென்னை தன்னுடன் அழைத்து செல்கிறார் . அங்கு சென்ற மூன்றாம் வருடத்தில் தாயும் இறந்து போகிறாள்.

எல்லாம் முடிந்து இருபது வருடம் கடந்த நிலையில் தனியாளாக  தொழிலில் பிரகாசிக்கும் தனலட்சுமி தன் தோழிகளை  சந்திப்பதுடன் குழந்தை குட்டிகளுடன் வாழும் தனது தோழிகளுக்கு   நிறைய பணம்  தந்தும் உதவுகிறாள்.

தற்போது செல்லன் பாறையில் வழுதி விழுந்து இறந்ததை  அறிகிறாள். போலிசால் விசாரிக்கப்பட்ட பண்ணையார் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிறான். தனலட்சுமியிடம் கல்வி கற்ற கணபது தற்போது  வனத்துறை அதிகாரியாக உள்ளான்.

 

இந்த நாவலில் கடவுள் கண்டிப்பார், சட்டத்தை அணுகுவதை கதாப்பாத்திரங்கள் விரும்பாது இருப்பது, ஆண்களீன் பாலியல் வன்முறைக்கு பெண்கள் எளிதாக இலக்காகுவது என்ற வகையிலுள்ள சில இடங்களீல் உள்ள கதைப் பின்னல் காலச் சக்கிரத்தில் பெண்களை 19 நூற்றாண்டின் துவக்கத்திற்கு தள்ளுவதை அரசு ஊழியரான கதாசிரியர் தடுத்து இருக்கலாம்.

காட்டுத்தனம் குணம் கொண்ட தன லட்சுமி, யானைகள் கூட பணியும் தனலட்சுமியை காட்டுத் தனம் என்று புனைந்துள்ளார். தன் சகோதரன் திருமணம் செய்து குழந்தை குட்டிகளுடன் வாழ தனத்தை மட்டும் திருமணம் செய்ய விடாது தனி ஆளாக விட்டுள்ளது இயல்பயும் கடந்த  பெண் பரிசுத்தம் அல்லது பெண் விடுதலையா என்ற கேள்வி மனதில் மிஞ்சாது இல்லை.

 

 

 

 

  

0 Comments:

Post a Comment