9 Jan 2026

ஒரு சங்கீர்த்தனம் போல

 

ஒரு சங்கீர்த்தனம் போல

The Gambler எனப் புகழ்பெற்றதாக மாறிய படைப்பின் கைப்பிரதியை ஒப்படைக்க தஸ்தயேவ்ஸ்கிக்குக் கணக்கிட்ட சில நாட்களே மீதமிருந்த காலகட்டத்தில். காலக்கெடுத்தைக் கடக்க முடியாவிட்டால், அவரது பதிப்பாளர் ஸ்டெல்லோவ்ஸ்கி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பார் என்ற அச்சம் அவரை வாட்டுகிறது. அந்த மனஅழுத்தத்தில், எழுதுவதற்கே அவர் போராடுகிறார். அக்டோபர் 15ஆம் தேதி, குறுக்கெழுத்து (ஸ்டெனோகிராபி) உதவிக்கு ஒரு ஆள் உதவி தேவை என நண்பருக்கு தஸ்தயேவ்ஸ்கி வேண்டுகிறார். நண்பரான பேராசிரியர் அவரது சிறந்த மாணவியான அன்னா கிரிகோர்யேவ்னா ஸ்னிட்கினா என்ற இளம் பெண்ணை பரிந்துரைக்கிறார்.

இருபது வயதான அன்னா, உயர்நிலைப் பள்ளி முடித்த உடனே தன் உழைப்பின் மூலம் பொருளாதார சுயநிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கெழுத்தைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெற்றிருந்தவள்.

சமீபத்தில் மறைந்த அவளது தந்தையின் மிக விருப்பமான எழுத்தாளர் ஆவார் தஸ்தயேவ்ஸ்கி; அவருடைய கதைகளை வாசித்தபடியே அவள் வளர்ந்தவள் . அவரை நேரில் சந்திப்பதோடு மட்டுமல்லாமல், அவரது பணியில் உதவப் போகிறேன் என்ற எண்ணமே அவளை மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது. இந்த வாய்ப்பு கிடைத்ததும் அவள் பேரானந்தமடைந்து அடுத்த நாளே எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் வீட்டை அடைகிறார்.
,

அடுத்த இருபத்தி ஐந்து நாட்களுக்குப் , அன்னா தினமும் மதியம் பன்னிரண்டு மணிக்கு தஸ்தயேவ்ஸ்கியின் வீட்டிற்கு வந்து மாலை நான்கு மணி வரை தட்டாச்சு செய்து கொடுக்கிறாள். அவர்களின் தேநீர் மற்றும் சிறிய உரையாடல்களுக்கான இடைவெளிகளுடன் வேலை தொடர்கிறது .

அவளது வேலையிலுள்ள ஈடுபாடு, எடுத்த வேலையை முடிக்கும் அவளுடைய தீவிரமான முயற்சி, அவளின் புரிதல் கொண்ட ஆழமான அன்பால், அவரின் மேலுள்ள புரிதலால் தஸ்தயேவ்ஸ்கியின் மிக இருண்ட மனநிலைகளையும் அகற்றி, பிடிவாதமான எண்ணங்களில் இருந்து தன்னை விடுவிப்பதை உணரும் போது அவர் மனமார அவளை மதிக்க ஆரம்பித்திருந்தார்.
அவளோ, அவரது கனிவு, அவளுக்குக் காட்டிய மரியாதை, பாராட்டின நட்பால் ஈர்க்கப்பட்டு ஆகியவற்றால் மனம் நெகிழ்ந்து போகிறாள்.

ஆனால் அவர்கள் இருவரும் ஆழமான இந்த பரஸ்பர அன்பும் மதிப்பும், எதிர்காலத்தில் புகழ்பெறும் ஒரு மகத்தான காதலின் விதையாக மாறப்போகிறது என்பதை, அப்போது இருவரும் உணர்ந்திருக்கவில்லை.


“ஒருவரை நாம் ஏன் நேசிக்கிறோம்?
‘யாரையாவது அல்லது எதையாவது நேசிக்க வேண்டும் என்பது , வாழ்க்கைக்கு அவசியமா?’
“ஆன்மீகத் தனிமையின் துயரத்தை மறக்கவே நாம் நேசிக்கிறோம்.”
“ஆன்மீகத் தனிமையா?”
“ஆம். ஆன்மீகத் தனிமை. அது தரும் துயரத்தை அதனால் உருவாகும் வலியை தாங்கக்கூடிய வலிமை தருகிறது என்பதால் தான் நாம் நேசிக்கிறோம். அந்த வலியைத் தாங்கவே மனிதர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

மனிதர்கள் எப்போதும் தோல்வியிலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறவர்கள்.

ஆன்மீகத் தனிமையில் இருந்து தான் துன்பம், இன்பம் இரண்டும் தோன்றுகிறதா?”
“ஆம். துன்பம், இன்பம் இரண்டுமே ஆன்மீகத் தனிமையிலிருந்து தான் தோன்றுகின்றன. இன்பம் என்பது துன்பத்தின் மற்றொரு வடிவம் மட்டுமே. அவை பிரிக்க முடியாதவை. அதுதான் உண்மை.”
அப்படியானால், ஆன்மீகத் தனிமை தான் படைப்பை இயக்குகிறதா?
. தொடக்கத்தில், கடவுள் பூமியைப் பார்த்தபோது அது வெறுமையாகவும் உருவமற்றதாகவும் இருந்தது. அவர் தனக்குள்ளும் அதே வெறுமையை உணர்ந்தார். அந்த உள்ளார்ந்த வெற்றிடத்தைத்தான் நாம் ஆன்மீகத் தனிமை என்கிறோம்.
கடவுள் ஏன் வானத்தையும், பூமியையும், ஒளியையும், நீரையும், மனிதர்களையும், பிற உயிரினங்களையும் படைத்தார்?
ஆன்மீகத் தனிமையின் காரணமாகத்தான்அதைப் போக்குவதற்காக தான்.”
மனிதர்கள் அந்தத் தனிமையை மறக்க பல வழிகளில் முயன்றார்கள்.
சிலர் பிரார்த்தனை மூலம் தேடினார்கள்.
சிலர் சேவையின் மூலம்.
சிலர் கலை மூலம்.
சிலர் காதல் மூலம்.
சிலர் அறிவின் மூலம்.
ஆனால் இவற்றில் எதுவுமே அதை உண்மையாக அழிக்கவில்லை. ஆன்மீகத் தனிமை ஒருபோதும் மறைவதில்லை. அது வடிவத்தை மட்டுமே மாற்றிக்கொள்கிறது.
மதம் அதை விளக்க முயன்றது.
தத்துவம் அதை விவரிக்க முயன்றது.
அறிவியல் அதை அளவிட முயன்றது.
கலை அதை வெளிப்படுத்த முயன்றது.
ஆயினும் எதனாலும் அதை அழிக்க முடியவில்லை.
அந்தத் தனிமை மனித ஆன்மாவின் ஆழத்தில் மறைந்தே இருக்கிறது.
படைப்பே அந்தத் தனிமையிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு முயற்சிதான்.

வாழ்க்கை என்பது அதை மறப்பதற்கான ஒரு முடிவற்ற போராட்டம். அதனால்தான் காதல், போர், கலை, நம்பிக்கை, மற்றும் கடவுள் கூட ஒரே மூலத்திலிருந்து பிறக்கிறார்கள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பிறகு, அன்னா கேட்டாள்
“அப்படியானால், கடவுளும் துன்பப்படுகிறாரா?”
“இல்லை, அவர் துன்பப்படுவதில்லை. ஆனால் தான் தனியாக இருக்கக்கூடாது என்பதற்காக, துன்பப்படக்கூடிய உயிரினங்களை அவர் படைத்தார்.”
“அப்படியானால் இந்த பிரபஞ்சம் முழுவதும் கடவுளின் தனிமையின் நீட்சி தானா?”
“ஆம். நாம் அவருடைய தனிமையில் இருந்து பிறந்தவர்கள். அந்தத் தனிமையில் இருந்துதான் துக்கமும் மகிழ்ச்சியும் எழுகின்றன.
படைப்பு என்று நாம் அழைப்பது அந்தத் தனிமையின் எதிரொலியைத் தவிர வேறில்லை.”


அதற்குள் அவர்கள் மடாலயத்திற்கு அருகில் வந்து சேர்ந்தார்கள்.
அன்னா உள்ளே சென்று பிரார்த்தனை செய்தார். தஸ்தயேவ்ஸ்கி (Dostoevsky) வெளியே ஓரிடத்தில், ஒரு ஆலமரத்தின் அடியில் காத்து நின்றார்.
பலிபீடத்திற்கு அருகில் வந்து நின்று பிரார்த்தனை செய்ய அன்னா அவரை அழைத்தார்.
தஸ்தயேவ்ஸ்கி அதைத் தவிர்த்து விட்டார்.

பிரார்த்தனை முடிந்து வெளியே வந்தபோது அன்னா கேட்டார்:
“ஏன் பிரார்த்தனை செய்ய வரவில்லை?”

தஸ்தயேவ்ஸ்கி கூறினார்: பிரார்த்தனை செய்யும்போது அவர் தனியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு கூட்டுப் பிரார்த்தனையில் எனக்கு எந்த ஒரு மன ஒருமைப்பாடும் கிடைக்காது.
அப்படி கூட்டமாக தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்யும் பழக்கமும் எனக்கு இல்லை. பிரார்த்தனை எல்லாம் சொந்த இதயத்திற்குள் தான் இருக்கிறது.
அல்லது தேவாலயத்திற்குச் செல்லும்போது அங்கே யாரும், பாதிரியார் கூட இருக்கக்கூடாது. . கடவுளுக்கும் தனக்கும் இடையில் மற்றொருவரின் இருப்பு சிரமத்தை உண்டாக்கும். நான் அப்படி முறையாக தேவாலயத்திற்குச் செல்லவோ பிரார்த்தனை செய்யவோ மாட்டேன்.”
“அப்போ, முன்பு ஒரு நாள் புனித மாதாவின் தேவாலயத்திற்குப் போனதாகச் சொன்னீர்களே?”
“அப்போது அப்படித் தோன்றியது. அங்கே அவ்வளவு அழகான ஒரு சிற்பம் இருக்கிறது. அதைப் பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாளைய ஆசையாக இருந்தது.”
“இல்லை, பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாததாலோ?”
சொந்த இதயம் தான் முக்கியம். தேவாலயத்தில் பிசாசை ஆட்சி செய்ய விடுபவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்வதால் என்ன பயன்?
கடவுளுக்கு இந்த ஏமாற்றுவேலை புரியாது என்று நினைக்கிறார்களா? இதையெல்லாம் சொன்னாலும், ஒரு தத்துவம் என்ற நிலையில் எனக்கு பிரார்த்தனை பிடிக்கும்.

நவம்பர் 10ஆம் தேதி அன்னாவின் உதவியுடன், தஸ்தயேவ்ஸ்கி வெறும் இருபத்தாறு நாட்களில் ஒரு முழு நாவலை அவர் முடித்திருந்தார். அவர் அன்னாவின் கையைப் பிடித்து குலுக்கி, முன்பே கூறியிருந்தது போல 50 ரூபிள்களை வழங்கி, மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.

அடுத்த நாள், தஸ்தயேவ்ஸ்கியின் நாற்பத்தைந்தாவது பிறந்தநாள். நாவலை பதிப்பகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். இந்த இரட்டை நிகழ்வையும் கொண்டாடும் விதமாக ஒரு உணவகத்தில் சிறப்பு விருந்து அளிக்க அவர் தீர்மானித்தார். அன்னாவையும் அழைத்தார். அவள் இதற்கு முன்பு ஒருபோதும் உணவகத்தில் உணவருந்தியதில்லை; அதனால் மிகுந்த பதற்றத்தில் செல்லாமல் திரும்பி விடலாமென்று கூட நினைத்தாள். ஆனால் இறுதியில் சென்றாள் அந்த மாலை முழுவதும் தஸ்தயேவ்ஸ்கி அவள்மீது அன்பும் மரியாதையும் பொழிந்தார்.
ஆனால் அந்தப் பெரும் சாதனையின் கொண்டாட்டம் முடிய துவங்கும் போது , அன்னாவுடன் கொண்டிருந்த அந்த இணைப்பு தான் தனது வாழ்க்கையின் ஒளியாக மாறிவிட்டதை அவர் திடீரென உணர்ந்தார்; இனி அவளை ஒருபோதும் பார்க்க முடியாமல் போகுமோ என்ற எண்ணம் அவரை ஆழமாக வேதனைப்படுத்தியது. அன்னாவுக்கும் அதேபோல், வழக்கமான உற்சாகம் மறைந்து, சொல்ல முடியாத ஒரு வெறுமை மனதை அழுத்த, அவள் சோகமும் ஆனந்தமற்றவளுமாக மாறினாள்.
கடைசியில் 20 வயதான அன்னாவும் 45 வயதான தஸ்தயேவ்ஸ்கிyஉம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். தோல்வியில் துவண்டு போயிருந்த தஸ்தயேவ்ஸ்கி அடுத்த 7 வருடங்களில் சூதாட்டம் என்ற பிடியில் இருந்து விலகி எழுத்தில் தன் கவனத்தை செலுத்தி வெற்றியாளராக மாறுகிறார். அவருடைய மரணம் வரை அவர்கள் காதல் வாழ்க்கை நான்கு குழந்தைகளுடன் ஜொலித்தது .

ஒரு எழுத்து என்பது வாசகர்களுக்கு தரும் உணர்வு அதுவே இந்த நாவலின் பலம் வெற்றி.. அதன் பின்னர் தஸ்தயேவ்ஸ்கி மற்றும் அன்னா இடையே உருவாகும் நெருங்கிய உறவையே இந்த நூல் மையமாகக் கொண்டு விரிகிறது. அவர்களுடைய உறவைப் பற்றித் தெரிந்துள்ள வரலாற்றுத் தகவல்களுக்கு மேலாக, அந்த பிணைப்பின் ஆழத்தையும் மனித உணர்வுகளையும் இந்நூல் மேலும் செறிவூட்டிக் காட்டுகிறது.எங்கும் மிகயும் இல்லை. எல்லாம் இயல்பாக ஒரு அருவி போல, ஒரு நீர்சாலில் அருகில் இருந்து பூக்கும் பூக்களை போல நமது இதயத்தையும் பூரிப்படைய செய்கிறார் எழுத்தாளர்.

அன்பு என்பதின் எல்லா பொருளும் அடங்கிய அன்பு என்பது சகிப்பது , மதிப்பது, புரிந்து கொள்வது எதையும் எதிர்பார்க்காதது, முக்கியமாக ஒரு மனிதனை வெற்றிக்கு இட்டு செல்வது ஒருவனின் இருள் கொண்ட உலகில் இருந்து நம்பிக்கையின் வாழ்க்கைக்கு முக்கியமாக பொறுப்பாக வாழ்க்கையை அணுகும் மந்திரம் என இக்காதல் கதை செல்கிறது. ஒரு இடத்தில் கூட உன்னை காதலிக்கிறேன் நேசிக்கிறேன் என ஒரு உரையாடல்கள் இல்லை என்றாலும் ஒரு இசை போல ஒரு இதமான தென்றல் போல ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் தழுவி சென்ற விவிலியத்தில் உள்ள கடவுளை போற்றி பாடும் சங்கீதம் போல கதை முடிகிறது.

பெரும்படவம் ஸ்ரீதரனின் இந்த நாவல் 1993ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவல், மலையாள வெளியீட்டு உலகில் சாதனைகளை முறியடித்தது. 2 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, 100க்கும் மேற்பட்ட பதிப்புகளை எட்டியது. வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது என்ற கருத்தை இது முற்றிலும் தவறானது என்று நிரூபித்தது.
தமிழ் மற்றும் மலையாள மொழியில்
“ஒரு சங்கீர்த்தனம் போல” என்ற தலைப்பில் வந்தது. அதன் பொருள் “ஒரு புனிதப் பாடல் போல” அல்லது “ஒரு கீதம் போன்றது” என்பதாகும்..
இந்த நாவல் ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, அரபி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பும் பல புத்தக விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது;
இந்த நாவல் ஒரு பண்பாட்டுச் சாகசமாக மாறியது. மலையாள வாசகர்களை ரஷ்ய இலக்கியத்துடனும், இணைத்ததும் அல்லாமல் அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் போன்ற பாரம்பரிய கருப்பொருள்களுடனும் இணைத்த ஒரு முக்கியமான படைப்பாக இது விளங்கியது.
பெரும்படவம் ஸ்ரீதரன் (பிறப்பு: 12 பிப்ரவரி 1938) கேரளாவைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் கேரள சாகித்ய அக்காதமியின் முன்னாள் தலைவர். பல நாவல்கள் மற்றும் குறுநாவல்களை எழுதியுள்ளார்.
அவரது மிகவும் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான “ஒரு சங்கீர்த்தனம் போல” (1993) என்ற படைப்புக்காக, 1996ஆம் ஆண்டுக்கான வயலார் விருது பெற்றது.
அஷ்டபதி என்ற நாவலுக்காக கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்றுள்ளார்.
மேலும், 2006ஆம் ஆண்டு நாராயணம் என்ற நாவலுக்காக மலையாளத்தூர் விருது வழங்கப்பட்டது.

0 Comments:

Post a Comment