8 Mar 2014
27 Feb 2014
பெண்ணே உன் நிலை தான் என்ன?
இப்பெண் காணாமல்
போய் விட்டார் என்ற போது காவலர்கள் காதலர்களை தேடவும் அலுவலம் உடன்பணியாற்றுபவர், தெரிந்தவர் தான்
செய்திருக்க கூடும் என பல ஊகாபோகங்களுடன் ஒரு இளம் பெண்ணை சந்தேகப் பார்வையும் இளக்கார தொனியிலும் தான் நோக்கினர். ஒரு மதிப்பு மிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறவர்; தந்தையில் புகார் பெற்றும் போலிஸ் துரிதமான
தேடுதலை முடுக்கவில்லை. அவர்கள் சந்தேகம் முழுதும் இளம் பெண், அதுவும் வேலைக்கு போகும்
பெண், திருமணம் ஆகாதவர் என்ற குறுகிய பார்வையிலே இருந்தது. குற்றத்தை தடுக்க
இயலாது போயிருந்தாலும் அந்த உடலைக்கூட கண்ணியமான முறையில் பெற்று கொடுக்க இயலவில்லை என்பது நம் சமூக பாதுகாப்பு அற்ற தன்மையை தான் காட்டுகின்றது.
எல்லாம் முடிந்து 10 நாட்களாகி விட்ட நிலையில் இவர்கள் புலணாய்வு திறமையை பறக்கும்
ஆளில்லா விமானம், ஏடிம் வங்கி என புல்லரிக்கும் கதைகளை அவிழ்த்து விட்டு கொண்டு இருக்கின்றனர். பெற்றோருள்ள, கல்வியறிவு பெற்ற
வேலையிலுள்ள பொறியாளரான பெண் நிலையை இவ்வகை என்றால் சாதாரண தெருவோர பெண்கள் நிலை என்னவாக
இருக்கும்!
இரவு நேரம் தனியாக பாதுகாப்பாக செல்ல தகுந்த வழியா? என்று சிந்தித்து அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்று கிளம்பி இருக்கலாம். அல்லது இவர் நண்பர்களிடமோ பெற்றோரிடமோ தன் நிலத்தகவலை சரியான நேரம் அறிவித்திருந்தால்
தேவையற்ற ஊகங்களை தவிர்த்து தேட இயன்றிருக்கலாம். இளம் வயதில் வேலைக்கு போகும் இவ்வித பொறியாளர்
பெண்களுடன் சில காலம் தங்கியிருந்து அவர்கள் தினசரி வாழ்க்கையை காணும் சூழல் எனக்கிருந்ததால் என்னை இச்சம்பவம் மிகவும் நிலகுலைய செய்தது.
பொறியாளர்
படிப்பே மிகவும் கடினமானது. மிகவும் அறிவாற்றலுள்ள பெண்கள் குழைந்தைகளை, பொறியாளர்களாக உருவாக நேரடியான
விருப்பம் இவர்களுக்கு உள்ளதோ இல்லையோ காளான் போன்று முளைத்த பொறியல் கல்லூரியில் இவர்களை
சேர்த்து கொள்ளவும் குடும்ப கவுரவத்திற்கு என பெற்றோரும் படிப்பிக்க ஆவல் கொள்கின்றனர்.
பல பெண் குழந்தைகளால் இந்த படிப்பை எளிதாக படித்து கரையேற முடிவதில்லை. மேலும் இவர்கள் பாடத்திட்டத்திலும்
இவர்களை சிறந்த இயந்திர மனிதர்களாக மாற்ற கொடுக்கும் உற்சாகம் அவர்கள் உடல் உளவியல்
நலனில் கொடுப்பதில்லை. பல பொறியாளர் பெண்களுக்கு சமூகத்தை பற்றிய பெரிய புரிதல் இல்லை.
இதனால் தான் பாட்டு பாடி கிண்டல் அடித்தவன் அவன் தரம் என்ன எச்சூழலில் வாழ்பவன் என பார்க்காது
செருப்பை கழற்றி அடிக்கும் உளவியல் கொடுத்ததும். என்ன தான் பொறியியல் வல்லுனர்கள்
ஆகினும் சாதாரண மனிதர்களுடன் வாழ தகுந்த சில பாட திட்டங்கள் அவர்களுக்கு புகுத்துவதும்
நல்லது.
உற்றோர் உறவினர்
இல்லாத இந்த சென்னை பட்டிணத்தில் அவர்களுக்கு ஒரே பொழுது போக்கு சரவண ஸ்டோரில் போய்
பர்சேஸ் பண்ணுவது இன்னும் பல பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது. . வயதில் திருமணம் என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்கா இயலாத அளவிற்கு
சூழலின் விதியில் தள்ளப்படுகின்றனர்.
ஒரு காலம் 6 மணிக்கு
மேல் வீட்டிற்கு வெளியில் அனுமதிக்காத பெற்றோர் இன்று சமூக அந்தஸ்து கருதி ”என் பொண்ணும் வேலைக்கு போறா”, ”அதும்
சென்னையில் வேலையில் இருக்கிறா” என்பதை பெருமையான உள்ளத்துடன் ஏற்று கொள்கின்றனர். இங்கோ
வேலையிடத்தில் நெருக்கம், தங்கும் இடத்தில் நெருக்கம், தனிப்பட்ட மனப்போராட்டம் என பாலாவில் படத்தில் காணும் தேயிலை தோட்ட கல்வியறிவு அற்ற பெண்களை விட கொடும் துயரில்
இக்கட்டில் வாழ்கின்றனர்.
இந்த கொலையை நிகழ்த்தியிருக்கும்
அன்னிய மாநில அந்த மனித மிருகங்கள் வாழ்க்கை அதை விட கொடுமையானது. தொழிலுக்காக தன்
சொந்தம் பந்தம் வீடு உறவு எல்லாம் விட்டு வந்த இவர்கள் சென்னையிலுள்ள 50 ஆயிரம் தெருவோர
மனிதர்களுடன் இவர்களும் சென்னையை நிரப்பி விடுகின்னர்.
கேரளாவில் தமிழனை நடத்துவதையும் ஈழத்தை நம் சகோதர்கள் நடத்தப்படுவதையும் கண்டு இரத்த
கண்ணீர் வடிக்கும் மனித நேயர்கள் கொண்ட மாநிலத்தில் பீகார், வங்காளக்காரர்களை மனிதர்களாகவே
பார்ப்பதே இல்லை. மற்று மாநிலத்தான் வீட்டில் வளர்க்கும் நாயை விட கேவலமாக நடத்தப்படுகின்றான். பல உணவங்களில் இதே மாற்று மாநில சிறுவர்கள் வேலை செய்கின்றனர். இந்தியனுக்கு
துபாய் போல தமிழகம் துபாயாக தெரிவதால் வந்து சேரும் இந்த மனிதர்கள் இங்கு மனிதர்களாக
நடத்தப்படாது மிருங்களாக நடத்தி மிருகமாகவே மாறி போனவர்கள். சென்னையில் நடக்கும் கட்டிடப்பணியில்
ஏற்பட்டிருக்கும் இவர்கள் வேலை நேர விபத்தில் இறந்தால் சொந்த தேசத்தை திரும்ப காண முடியாதவர்கள்
என்று மட்டுமல்ல இங்கே அனாதை பிணங்களாக புதக்கப்படுகின்றவர்கள்.வழியோரங்களிலும் ஒதுக்குபுறங்களிலும் தங்கி தங்களுக்கான ஜீவனை நடத்துவர்கள்.
ஒன்று தமிழக அரசு
இவர்களுக்கான மனித உரிமைகளை பெற்று தந்து சகமனிதனாக
வாழ வழி செய்ய வேண்டும். அல்லது இவர்கள் எல்லோரையும்
தமிழக எல்கையை விட்டு விரட்ட வேண்டும். அல்லாது இது போன்ற துயருக்கு முடிவில்லை. இங்குள்ள
தமிழர்கள் அனாதமாக அன்னிய நாட்டில் வேலை செய்ய எங்கோ இருந்து இங்கு அகதியாக இன்னும்
சில மனிதர்கள் வேலை செய்ய என்பது முதளித்துவ சுரண்டல் மட்டுமே நாம் காணும் சமூகமெங்கும். அரசியல், சமூக, பொருளாதார
என எல்லா சுரணலும் ஒன்றாய் ஆட்டிப்படைக்க பாவம் ஒன்றுமறியா பெண்கள் உயிர்கள் அநியாயமாக கொல்லப்படுகின்றன.Migrated labour
9 Feb 2014
உலக திருமண நாள்-Feb 9
உலக திருமண நாள்-Feb 9; திருமண பந்ததை
உறுதிப்படுத்த அதன் தேவையை உணர, பலப்படுத்த இந்நாளை சிறப்பாக கொண்டாட வேண்டியது அவசியமாக
உள்ளது. கடவுள் செய்த முதல் பணியே இரு மனிதர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கி மகிழ்ந்து
வாழச் வழி செய்தது தான்.
திருமணம் என்ற
பந்தத்தை நிலை நாட்ட எல்லா மதங்களும் போட்டி போட்டு செயலாற்றுகின்றது. துறவறம் போன்றவை
மனிதனால் உருவாக்க பட்டிருப்பினும் திருமணம் மட்டுமே இயற்கையால்/ கடவுளால் நிறுவப்பட்டது.
இரு வெவ்வேறு மனிதரின் எல்லா நிலையிலுமான வகையிலுமான சங்கமமாக பார்க்கப்படுகின்றது.
இந்திய காலாச்சார
சூழலில் திருமணம் என்ற நிகழ்ச்சிக்கு பெரும் பணம் செலவழித்து நடத்தினால் கூட; அதை சிறப்பாக
நடத்தி செல்ல தகுந்த வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை. பல மனிதர்கள் காதல் அளவுக்கு
திருமண வாழ்க்கையை ரசிக்காது போனதற்கு காரணவும் இதுவே. திருமணம் என்பதை
ஒருவர் இன்னொருவரை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள துணியும் போது உறவின் சுவாரசியம்
மறைந்து போகிறது. காதலில் இருக்கும் ஈர்ப்பும்
சுதந்திரவும் திருமணத்தில் பறி போகும் போது மனிதன் திருமணம் என்ற பந்ததை பல வகையாக
குறை கூறி அதில் இருந்து தப்பி ஓடப் பார்க்கிறான்.
ஆனால் சரியாக புரிந்து,
அணுகுபவர்களுக்கு இது போன்ற ஒரு மகிழ்ச்சியாக சுதந்திரமான இயல்பான, பாதுகாப்பான வாழ்க்கை
முறை இல்லை என்றே கூற வேண்டும். காலங்கள் மாறியிருப்பினும் ஆண்-பெண் உறவில் பாரிய மாற்றமில்லை. குஷ்வந்த் சிங் சொல்லியுள்ளார் வீட்டிலுள்ள மாமியாருக்கு எப்போது
பேரப்பிள்ளை தேவையோ அப்போது தான் மகனை மனைவி பக்கம் அணுக அனுமதிப்பார்களாம். இன்று
நவ நாகரீக வாழ்க்கையில் அவ்விதமான அடிமத்த பிடியில் இருந்து தப்பித்து நகரத்தில்
தனிக்குடித்தனம் நடத்தும் குடும்பத்திலும் மனைவியை பற்றி கணவர் கூறுகின்றார் “சினிமாவுக்கு
அழைத்தால் கூட வருவதில்லையாம். காரணம் தினம் வேலைக்கு போகும் பெண் அந்த ஒரு நாள் அடுத்த
வார அலுவல் வேலைக்காக தன்னை தயார்ப்படுத்தும் போது தங்கள் திருமண உறவை மறந்து போகின்றனர்.
ஆண் பெண் சமம்,
போன்ற கருத்தியலும் திருமண பந்ததின் சுவையை குறைக்கின்றது. வெற்றிகரமான திருமண உறவை நாடுபவர்கள் நானும் நீயும்
சமம் என்பதை நிலைநாட்ட முயலாது இருவரும் வேறுபாட்டில் தங்களை சமரசப்படுத்தி கொள்ளும் வாழ்க்கையாக காண வேண்டும்.
சிலரோ, எளிதாக பாலியல் உறவை
வைத்து கொள்ளும் இயக்கமாகவும் காண்கின்றனர். வெறும் ஊதியம் பெறும் அலுவலகத்தில் மற்று
மனிதர்களுடன் அனுசரித்து போக பழகிய மனிதர்கள் ஒரே வீட்டில் வசிக்கும் இருவர்ன் ஆரோக்கியமான
உறவை பற்றி எண்ணி பார்ப்பதில்லை. அன்பு பாசம் என்பதை அடித்தளமாக எடுத்து கொள்ளும் போது அங்கு ஆள, ஆளப்பட வாய்ப்பில்லை.
பல திருமணம் பந்தம்
பணத்தாலும் வசதி வாய்ப்பு எண்ணத்தாலும் உருவாகுவதால்; வேலை, அழகு, பணம் கவுரவம் நுழையும் போது உண்மையான மகிழ்ச்சி கிடைக்கபெறாது இவ்வுறவின் சாரம் அற்று போகின்றது.
பல கணவர்கள் தங்கள் மனைவியை பற்றி புறம் பேசுவதும் பெண்களோ தன்னை சார்ந்திருப்பவர்களிடம்
கணவரை குறை கூறி தங்களை தியாக பிம்பங்களாக பறைசாற்றவதையும் சலித்து கொள்வதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
பெண் எப்போதும்
ஆணிடம் இருந்து கருதல், புரிதல், மதிப்பு,
ஆராதனையை எதிர் பார்க்கின்றாள். அதுபோலவே ஆண் பெண்ணிடம் இருந்து நம்பிக்கை, ஏற்று கொள்ளுதல்,
பாராட்டுதல், உற்சாகப்படுத்துதல் எதிர் பார்க்கின்றான். இந்த பந்ததில் நீ கொடுத்ததை
நான் திரும்பி தருவேன், நீ இப்படி என்றால் நான் அப்படி என்று இல்லாது இருவரும் போட்டி
போட்டு கொண்டு அன்பை காதலை கொடுக்கவும் பெறவும் கடமைப்பட்டுள்ளனர்.
29 Dec 2013
பாவத்தை போக்கும் பாபநாசம் !
பல மாதங்களுக்கு பின்பு ஒரு பயணம். பயணங்கள் நம் மனச்சுமையை நீக்க வல்லது.
பாபநாசம் நோக்கிய பயணவும் எப்போதும் போல் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கிய பயணம் போன்றது
தான். பிறந்ததும் வளர்ந்ததும் மேற்கு தொடர்ச்சி மலை என்பதாலோ என்னவோ அடர்ந்த காடுகளும்
அதன் ஊடே பாயும் நதிகளும் ஏதோ ஒரு வகையில் குழைந்தைப்பருவத்திற்கு அழைத்து செல்வது
போன்ற உணர்வு. எங்கள் குழந்தைப்பருவத்தில்
பாடச்சாலைக்கு செல்வது, விளையாட செல்வது, என எல்லாம் மேற்கு தொடர்ச்சி மலையுடன் கலந்த
வாழ்க்கை தான்.
பாபநாசம் திருநெல்வேலியில் இருந்து 30 கிமீ பயணித்தால் பாபநாசம் எட்டலாம்.
நாகர்கோயிலில் இருந்து என்றால் 100 கிமீ பயணிக்க வேண்டும். சிவ பார்வதி, இந்திரன்
போன்ற கடவுளுகளுடன் இணைத்து பல பக்தி கதைகளும் உள்ளது. மருத்துவ குணம் கொண்ட
பொதிகை மலையில் இருந்து வரும் வெள்ளம் இங்கு ஓடுவதால் நோய் நிவாரணியாக இத்தலம் பார்க்கப்படுகின்றது.
மேலும் வன எல்கை வழி கடந்து சென்றால் 1942-ஆம்
ஆண்டு மேற்கு தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்ட அணைக்கட்டு, புலிகள் சரணாலையம், காரையார் வானதீர்த்தம் போன்ற சுற்றுலா
தலங்களும் சுற்றி வரலாம். மாலை 5.30 க்குல் மலையை விட்டு இறங்க வீண்டும் என்பதால் காரையார் செல்ல அனுமதிக்க வில்லை காவலர்கள். இருப்பினும் அணைக்கட்டில் மின்சாரம் தயாரிப்பதை பற்றிய சில தகவல்களை பயணிகளுடன் பகிர்வது கொண்டனர் . படம் எடுக்க தடைசெய்யப்பட்ட பகுதி என்றும் எடுத்துரைத்து படம் பிடிக்க தடுத்தனர்.
சிவபெருமானும் பார்வதி தேவியும் அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய
இடமாக இது கருதப்படுவதால், இது ஒரு புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. இதற்கு மரியாதை செய்யும்
விதமாக இங்கே நிறுவப்பட்டதுதான் அகஸ்தியர் கோயில்.
மலையில் இருந்து கீழ் நோக்கி வரும் போது வன மத்தியில் பாவநாச சிவன் கோயில் தெரிகின்றது. வரும் வழி யாவும் செடிகள் அபூர்வ மரங்கள் என காட்சி தரும் மலைக்கு மஞ்சள் போட்டு வைத்தது போன்று சிவன் கோ யில் ந ம் பார்வைக்கு தெரிகின்றது. பாண்டிய மன்னன் விக்ரமசிங்கத்தால் கட்டப்பட்ட ஏழு கோபுரம் கொண்ட கோ யிலாகும் இது.
பாபா நாசநாதர் கோயில்
பெயர்க்காரணம்: அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது. கட்டுரை
இப்படியாக
சிறப்பு பெற்ற கோயிலிலிருந்து ஓடும் நதியை காணும் வண்ணமாக மண்டபம், ஆற்றிவழிபாடு மற்றும் நீராட்டுக்கு என அருகில் செல்ல கலைநயத்துடனான அழகிய படிகட்டுகள் என காலத்தால் அழியாத கட்டிடக்கலையுடன் விளங்கி நிற்கின்றது. தண்ணீரையும் இறைவன் இருப்பிடத்தையும்
பிரித்து பார்க்காத தமிழர் மத நம்பிக்கைக்கு எடுத்து காட்டும் விதம் அழகுடன் நிர்மாணித்து வைத்துள்ள
ஆலய வளாகம் தற்காலம் வியாபார தளமாகவும், அடிப்படை பண்பாட்டை மறந்த மக்களின் ஆசாரம், நம்பிக்கை மட்டும் சார்ந்து இருப்பதால்
தூய்மையாக பராமரிக்கும் தேவையை உணராது உள்ளது
துயரை தருகின்றது.
எல்லா சிந்தனை மத்தியிலும் மறுபடியும்
நதியை நோக்கிய போது மனது சுமை நீங்கி அமைதி தளும்புவதை உணர்கின்றோம். ஒரு போதும் வற்றாத
நதி தன் புண்ணிய
தன்மையை வாரி வழங்கி கொண்டு எந்த பிரதிபலனும் எதிர் பார்க்காது காலத்தை மறந்து ஓடி கொண்டிருக்கின்றது
இயந்திர
தன்மையான வாழ்க்கை சூழலில் சிக்கி கொண்டிருக்கும் இக்காலயளவில் இயற்கையின் கொடையான
இவ்வித இடங்களை சுத்தமாகவும் தூய்மையாகவும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாக உள்ளது. இத்தளங்கள் மத அடையாளங்களையும் கடநது நம் பண்பாட்டை உலகம் ஒட்டும் எடுத்து செல்லும் அடையாளங்களாகவும்
திகழ்கின்றது என்பதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டியுள்ளது. பண்பாட்டு தளங்களை சுத்தமற்ற வகையில் கையாளும் பொறுப்பற்ற சமூகமாக மாறும் அவலம் வருத்ததிற்குரியது .
Subscribe to:
Posts (Atom)