27 Feb 2011
26 Feb 2011
கதையல்ல உண்மை காதல்.......
நான் பொதுவே காதல் கதைகளை கதைப்பது கிடையாது. காரணம் காதல் நபருக்கு நபர் வேறுபடும். ஒரு பொது தத்துவத்துக்குள் காதலை கொண்டு வர இயலாது என நான் அறிவேன். காதன் தினம் அன்று என் கல்லூரி பொது பலகைக்கு என ஒரு குறிப்பு தயார் செய்திருந்தேன். வாசித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கற்பித்து விமர்சித்தனர். சிலர் கோபத்தில் நான் ஒட்டியிருந்த சில படங்களை கூட கிழித்து போட்டனர். நான் எழுதியதை முழுதும் வாசிக்காது “நீங்கள் இப்படிபட்டவர் என்று நான் நினைக்க வில்லை” என ஒரு திருமணம் ஆகாத ஆராய்ச்சி மாணவி கடிந்து கொண்டாள். காதலை வேலையற்றவர்கள் கொள்ளும் விளையாட்டாக ஒருவர் அபிப்பிராயம் கொண்ட போது சிலர் அது பணம் பறிக்கும் குறுக்கு வழி அல்லது உடல் சுகம் தேடும் தளம் என சொல்லினர்.
நான் மதிக்கும் காதல் என்னுடைய பாட்டி மரியாகம்மாவின் காதல் தான், ஆனால் அதே காதலை என் அம்மா இன்றளவும் வெறுத்தார். 60 வருடம் முன்பு ஏதோ ஒரு தேசத்தில்( மிளகுமூடு, நாகர்கோவில்) இருந்து வந்தவனிடம் காதல் கொண்டு பெற்றோர் சகோதரர்கள் எல்லோரையும் பகைத்து திருமணம் செய்து இரு பிள்ளைகள் பிறந்த சூழலில் வெறும் மூற்றே வருடத்தின் தாத்தாவை பறி கொடுத்தார் என் பாட்டி!. ஆனால் அதே காதலுடன் வாழ்ந்து வருகின்றார். பாட்டியின் ஒவ்வொரு செயலும் தன் மகள் படிப்பு ஆகட்டும் திருமணம் ஆகட்டும் எல்லாம் தாத்தா வாழ்ந்த நாளில் ஆசையுடன் கதைத்தது போலவே இருந்தது. அம்மா ஒரு போதும் தங்கம் அல்லாத நகை அணிய கூடாது, தேயிலை தோட்ட வேலைக்கு செல்லக்கூடாது அம்மாவை வசதி-வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்ற தாத்தாவின் கனவை நனவாக்குவது போலவே இருந்தது பாட்டியின் வாழ்க்கை .
ஒரு கேரளா பத்திரிக்கையில் வந்த செய்தியில் ஒரு இந்து மத பெண்ணும் இஸ்லாம் ஆணும் காதலித்துள்ளனர். பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு. அப்பெண்ணும் அவர் பெற்றோர் சம்மதத்திற்க்கென காத்திருந்தார் 45 வயது கடக்கும் வரையிலும்! அதற்க்குள் அப்பெண்ணின் அப்பா ஒரு சகோதரர் இறந்து விட்டனர், தன் சகோதரிகளுக்கும் திருமணம் ஆகி பிள்ளை குட்டி ஆகி விட்டது இனி யாருக்கும் தன்னால் பிரச்சனையில்லை ,இனி காதலருடன் இணையலாம் என்று எண்ணி கொண்டிருந்த போது அந்த காதலர் ஒரு விபத்தில் மரித்து போனார். ஆனாலும் அப்பெண் தளரவில்லை மிச்சமுள்ள நாட்கள் அவர் வீட்டில் அவர் மனைவியாக இருந்து கொள்கிறேன் என்று அவர் வயதான அம்மாவையும் கவனித்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
நான் பிறவியிலே கேள்வி கேட்கும் கொள்கை கொண்டதால் காதலைக் கூட கேள்வியோடு தான் அணுக முடிந்தது. அதனால் யாருடனும் காதலும் வரவில்லை . என்னவரை எனக்கு என என் பெற்றோர்கள் பேசி முடித்த போதும் 1 வருடம் வரை சரி வருமா, அவர் எப்படி பட்டவர், அவர் சம்பளம் வாழ்க்கை தேவைக்கு தகுந்தாக இருக்குமா, அவர் பெற்றோர் எப்போதும் என்னை உண்மையாக நேசிப்பார்களா என்று பல வித கேள்வியுடனே இருந்தேன்.
காதல் பற்றி கொண்டது எப்போது என்று தெரியவில்லை , ஆனால் ஒரு கட்டத்தில் அவர் பெற்றோர்கள் இத்திருமணத்தை பணம் பறிக்கும் கருவாக காண்கின்றனர் என்று அறிந்து என் பெற்றோர் பின் வாங்க நினைத்த போது, இல்லை, நான் அவரை விரும்பி விட்டேன் நான் பணம் பறிக்கும் கேடயமாக இருக்க மாட்டேன் என சொல்லி எனக்கும் காதல் வந்து விட்டது என அறிவித்து விட்டேன். என்னை வைத்து பணம் ஈட்ட இயலாது என்று எப்போது முடிவெடுத்தாரோ என் மாமியார் அப்போதே என்னை மட்டுமல்ல என்னவரையும் சேர்த்தே ஒதுக்கி தள்ளி விட்டார்!
என் முதல் மகன் 7 வது மாதம் கருவுற்றிருக்கும் போது என் மாமியார் தன் கடைசி ஆயுதத்தை பயண்படுத்த நினைத்தார்! உன் அப்பா வீட்டில் நாங்கள் கேட்கும் முறை செய்யாவிட்டால் நீ எங்கள் வீட்டிற்கு வர தேவையில்லை என கட்டளையிட்டார். என் அம்மாவும் நம்ம அப்படி எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல; அப்படி அம்மா பேச்சு கேட்கின்றவன் மனைவியாக நீ அடிமையாக இருக்க வேண்டாம். இனி அங்கு போனால் இங்கு பிரசவத்திற்கு கூட வர வேண்டாம் என பிடிவாதமாக இருந்தார். ஒரு நாள் என்னவர் வசிக்கும் வீட்டுக்கு நானே வந்து சேர்ந்தேன்.
அதன் பின்பும் இந்த பணம் பேராலுள்ள போராட்ட வாழ்க்கையை வேண்டாம் பிள்ளையை அம்மாவிடம் கொடுத்து விட்டு படித்து வேலை பார்த்து பிள்ளையை வளர்த்து கொள்ள வேண்டியது தான் என எண்ணி கொண்டிருந்த போது அவர் வந்து அழைத்த உடன் அவர் பின்னே ஒன்றும் சொல்லாது சென்றதும் எங்களிடம் இருந்த காதல் தான்!
மறுபடியும் வேலை மாற்றம், வேலை இல்லை என தவித்த போது அம்மா உனக்கு இந்த தரித்திர வாழ்க்கை தேவையா நான் பார்த்து கொள்வேன் என கூறிய போதும் வெறும் தயிர் சாதம் உண்டு அவர் பக்கம் இருக்க என்னை தூண்டியதும் எங்களுள் இருந்த காதல் தான்!
25 Feb 2011
சாதாரண குடிமகனின் நிகழ்வுகள்!!!!!
இனி வேறு வழியில்ல என்று தெரிந்தவுடன் நாங்கள் ஏறிய பேருந்து நிலையத்தில் கொண்டு விடுங்கள் என பிடிவாதமாக இருந்து விட்டோம். நடத்துனர் பயமுறுத்தியும் கண்டுக்கவே இல்லை. வேறு வழியில்லாது ஒரு ஆட்டோவை பிடித்து பேருந்து நிலையத்திற்க்கு ஏற்றி விட்டான். பேருந்து நிலையம் வந்து புகார் கொடுக்கலாம் என்றால் அங்கு காவலர்கள் தற்போது காப்பி குடிக்க சென்று விட்டதாகவும் திருநெல்வேலியில் முறையிடவும் கூறிவிட்டனர். இங்கு வந்து முறையிட்டு 2 மாதமாக காத்திருக்கின்றோம் ஒரு செய்தியும் தெரியவில்லை. பேருந்து நடத்துனர் கூட அரசு கொடுக்கும் பிறப்பு சாற்றிதழை மதிக்கவில்லை என்றால் அரசு சார்ந்த சாற்றிதழ்கள் அவர்கள் அலுவலகர்களுக்கு லஞ்சம் பெறமட்டுமே உதவும் என்றே தோன்றியது.
நவம் 27 தியதி ரேஷன் கடைக்கு சென்று சீனி வாங்க சென்றிருந்தேன். ரேஷன் கடை எங்கள் வீட்டில் இருந்து 3 கி.மீ தள்ளி ஒரு ஒதுக்கு புறமான வீட்டில் நடத்துகின்றனர். என்னவர் உள்ளூரில் இருக்கும் போது அவருடன் செல்வதே சாத்தியமான வழி. அவர் உள்ளூரில் இருக்கும் போது ரேஷன் கடை விடுமுறை நாட்களாக இருக்கும். செவ்வாய், வியாழன், சனி மட்டுமே ரேஷன் உள்ள நாட்கள், கடைசி சனியும் விடுமுறை தான். 10 துவங்கி 1 வரை மதியம் 2 துவங்கி 6 மணி வரை நேரம் என குறிப்பிட்டிருந்தாலும் ரேஷன் கணக்கு எழுதுபவன் நிறுப்பவன் முனு முனுத்து கொண்டே தான் தருவர். 5 மணி க்கு சென்றால் இனி கணக்கு பார்க்கும் நேரம் என்று திருப்பி அனுப்பி விடுவர். 2மணிக்கு சென்றாலோ சாப்பாட்டு நேரம் இப்படி அவர்கள் வீட்டில் இருந்து மக்களுக்கு தருவது போல் தான் கவலைபட்டு கொள்வர். நான் இந்த மாதம் சீனி வாங்க சென்ற போது உங்கள் ரேஷன் கார்டில் பக்கம் இல்லை ஏன் ஒட்டவில்லை, உங்களுக்கு தெரியாதா எல்லா தொலைகாட்சியிலும் இதை தானே சொல்கின்றார்கள் நீங்கள் என்ன பண்ணி கொண்டிருந்தீர்கள் என ஒரே கேலி கிண்டலுமான அறிவுரைகள். போதாத குறைக்கு என்னை போல் சீனி வாங்க வந்தவனும் எங்கள் கார்டை பார்த்தீர்களா நீங்க மட்டும் எங்க போனீங்க என்ற கிண்டல் வேறு!!! நான் 27 தியதி வந்த போது நீங்கள் தான் ஒட்டி தரவில்லை நான் பொறுப்பல்ல எனக்கு சீனி தந்தே தீர வேண்டும் என கதைத்து கொண்டு நின்றேன். ஆனால் சட்டத்திற்க்கு புறம்பே சீனி தர இயலாது வரும் செவ்வாய் வாருங்கள் பார்ப்போம் என திருப்பி அனுப்பினார். வரும் வழியில் ஒரு 'அம்மா' கட்சிகாரரை பார்த்து ரேஷன் கார்டு ஒட்டி வாங்கினோம். இப்படியாக சாதாரண் மக்கள் வாழ்க்கையை கேலிகுரியதாகவே மாறுகின்றது. மக்கள் என்ற ஒரு கூறுகெட்ட கூட்டம் வேறு இவ்வகையான சுரண்டலுக்கு குடைபிடிப்பதால் எம்மை போன்றோரும் ஏதாவது கட்சியில் சேராது வாழ இயலாது போலவே உள்ளது!
13 Feb 2011
பள்ளிகூடங்களும் மாணவர்கள் வாழ்கையும்!
7 வகுப்பு என்பது மகிழ்ச்சியான மட்டுமல்ல என் வாழ்கையை நிர்ணயித்த வருடமானது! ஒவ்வொரு வருடமும் தலைவி பதவி என்னை தேடி வந்தது. காரணம் ஒரே வகுப்பின் 100க்கு மேல் மாணவர்கள் படிப்பதால் வகுப்பு தலைவர் பதவி என்பது ஒரு ஆசிரியர் ஒத்தே மிகவும் தேவையானதும் இன்றிமையாதகாகவும் அவர்களுக்கு உதவுவதாகவும் இருந்தது. மேஜையில் ஒரு கம்பால் அடித்து ஒரு ஹால் மாணவர்களை அமைதியாக இருத்த பழக்கப்பட்டேன். எப்போதும் ‘மாதிரியாக’, ஒரு கண் பார்வைக்குள் இருப்பதால் மற்று மாணவர்கள் அனுபவிக்கும் சுதந்திரம் பறி போனது இருப்பினும் கிடைக்கும் அங்கிகாரம், பொறுப்பு ஏற்க்கும் சூழல் என்னை வளர்த்து கொள்ள பலவிதத்தில் உதவியது அதில் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது.. என் வகுப்பு தோழர்களின் மார்க்கு அவர்கள் நலன், குறைவு கண்டுபிடிப்பதில் ஒரு பங்கு இருந்து கொண்டே இருந்தது. நம்மை சுற்றி ஒரு ஆதரவு பட்டாளம் இருப்பது போலவே எதிரி கூட்டமும் சேர்ந்து கொண்டே தான் இருந்தது. 100 மாணவர்கள் இருப்பினும் 10 பேரை எல்லா பாடத்திற்க்கும் ஜெயிப்பவராக இருந்துள்ளோம் எங்கள் வகுப்பில்! அவர்கள் நேரத்திற்க்கு பள்ளி வந்து சேருவதே ஒரு போராட்டமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கை சூழல் எதிற்மறையாக இருந்தாலும் வேலை வாய்ப்புக்கள் அவர்களை சுற்றி எப்போதும் இருந்ததாலும் போட்டி போட்டு படிக்கும் சூழலுக்கு தள்ளப்படவில்லை. மட்டுமல்ல அதை எண்ணி கவலை கொள்ளும் போல் ஒருவரும் இருக்கவில்லை. என் வகுப்பு தோழி என எங்கள் பள்ளி ஆசிரியரின் மகள் மோன்சி, ஒரு மாட்டு வியாபாரியின் மகள் ஷீபா, ஓட்டத்தில் விருது வாங்கும் சாலி , அன்னம்மா டீச்சரின் மகள் அனி, தேயிலை எஸ்டேட் ஊழியரின் மகள் வினிதா, தொழிலாளர்களின் மகளான பிந்து, ரஜனி என ஒரு பெரிய பட்டாளம் இருந்தோம். இதில் மோன்ஸிக்கு என்னிடம் ஒரு பொறாமை இளக்கார மனோபாவமாகவே இருந்தாள். அவள் அம்மாவும் என் அம்மாவை காணும் போது “நிங்களே கண்டால் தமிழர் என்னே பறயத்தில்லா, விர்த்தியில்லாத துணியும் நாற்றம் பிடிச்ச தலை முடியுமல்லே தமிழர்” என முகத்தை பார்த்தே கதைப்பார். மோன்ஸிக்கு அவள் அம்மாவை அவ்வளவாக பிடிப்பதில்லை. அவளின் கருத்துக்கள் அவளுடைய கம்னிஸ்டு வாத்தியார் அப்பா ஒத்தே இருந்தது. அவர் அப்பா கூட எங்களுக்கு கணித பாடம் எடுத்தாலும் எனக்கு ஆங்கிலம் கத்து கொடுக்கும் ஷம்சுதின் சார் வழிகாட்டி, ஜிகெ புத்தகம் என அவர் ஊர் கோட்டயத்தில் இருந்து வாங்கி தருவதில் கொஞ்சம் எரிச்சல் கொண்டே இருந்தார். ஷம்சுதின் சார் இஸ்லாம் என்பதால் தொழுகைக்கு தண்ணீர் எடுத்து கொடுப்பது என் பணியாக இருந்தது. மலை மேல் பள்ளி யிருந்தாலும் தேயிலை தோட்டத்தில் தண்ணீர் எங்கு இருக்கும் என எங்களுக்கு அத்து பிடியாக இருந்தது. தொழிலாளர் பிள்ளைகள் அன்புக்கு கட்டுப்படுவதால் அவர்கள் உதவி ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பதில் எளிதாகவே இருந்தது.
எங்களுக்கு தினம் காலையில் வேலை இருக்கும். எங்கள் பள்ளி வராந்தாவில் தான் தொழிலாளர்களின் மாடுகள் தூயில் கொள்ளும் இடம்! காலையில் சென்றவுடன் சாணியை சுத்தம் செய்யும் வேலை எங்களை சார்ந்தே இருக்கும். எப்போதும் தண்ணிர் எடுத்து கொடுக்கும் பணியை நான் செய்து வருவதை கண்ட ஹரிகரன் சர் “எடி ஒரு திவஸம் நின்னே சாணம் வாரிப்பிம்” என கலாயிப்பார். நான் டவுணில் வசிப்பதால் சாணி மணம் கொஞ்சம் அன்னியமாகவே இருந்தது. ஆனால் என் எஸ்டேட் தோழிகள் “ஞங்கள் தூத்தோளாம்” என விளக்கு மாரை பிடிங்கி கொள்வர். நானும் “ஞான் செய்யாம்” என படம் காட்டியே காலத்தை தள்ளி வந்தேன்.
அவ்வருடம் பள்ளி தலைவி ஆகும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. என் எதிராளி நிர்மலை ஒரு ஓட்டுக்கு தோற்கடித்து நான் தலைவியானேன். (நிர்மல் பட்டப்படிப்பு முடித்த வருடம் இதய நோயால் இறந்து விட்டான்) ஸ்பீக்கர் பதவி தமிழ் மாணவனுக்கு (பெயர் மறந்து விட்டது) கிடைத்து. அவனுக்கு வர வர என்னிடம் ஒரு ‘அதீத’ பாசம். ஒரு கடிதம் கொடுத்து விடட்டுமா என அவன் நண்பியிடம் கேட்டு விட்டிருந்தான். நானும் “ஆ பட்டியோடு போகான் பற” என பதில் சொல்லி அனுப்பினேன். அவன் நண்பர்கள் எப்படிடா ஒரு மலையாளம் மீடியம்காரி நம்மை பட்டி(நாய்) ன்னு கூப்பிடுவது என அவனை உசுப்பி விட்டு "அவ எங்களை பட்டி ன்னு கூப்பிட்டா" என மட்டும் சொல்லி விட்டான் வாத்தியாரிடம்!. ஜோர்ஜ் ஜோண் சார் என்னை அழைத்து மேரி குஞ்ஞே ஆண்குட்டிகளை அங்கனை விளிக்கருது, தமிழ், மலையாளம் என்னு வழக்கு வரும் என அறிவுரை கூறினார். பத்து முடியும் போதும் அவனிடம் ஒரு கடுப்பு எனக்கு இருந்து கொண்டே தான் இருந்தது.
நாங்கள் பள்ளிக்கு செல்வதும் வருவதும் தேயிலை தோட்டம் ஊடையுள்ள வழியாகவே இருந்தது. படைசூழ பள்ளிக்கு சென்று வருவது தான் வழக்கம். இதில் பாதுகாப்பு, பந்தா எல்லாமே அடங்கி இருந்தது. ஒரு முறை எங்கள் தோழி செல்லும் பேருந்து வந்து விட்டது அவள் நிறுத்தம் வரும் முன். நாங்கள் கூட்டமாக சேர்ந்து குரல் எழுப்பி கொண்டே மலையில் இருந்து தாவி ஓடி வந்தோம். பேருந்துகாரனும் மாணவர்கள் ஸ்ரைக் போல் என எண்ணி பேருந்தை நிற்த்தினார். எங்களுக்கு போரில் வென்ற திருப்தி. அவளை பேருந்து ‘கிளியும் ஓட்டுனரும்’ சேர்ந்து கலாயித்தது வேறு கதை. (பேருந்தில் மணியடிப்பவரை எங்கள் ஊரில் கிளி என்று அழைப்போம்)
உயர்நிலை பள்ளி மாணவர்கள் எங்கள் வழியே தான் அவர்கள் பள்ளிக்கு செல்வர். அதில் புத்தக பை கொண்டு வராது கையில் ஸ்டைலாக புத்தகம் கொண்டு வரும் 4- 5 மாணவர்களுக்கு எதிரில் நடந்து வரும் எங்கள் பள்ளி மாணவிகளை கட்டி பிடிப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். மாணவிகள் அலறியடித்து ஓடுவதை காண அவனுகளுக்கு ஒரு ஆனந்தம். ஒரு நாள் எங்கள் குழுவை குறிவைத்து வந்தாங்க. நாங்க ஏற்கனவே கருதி வைத்திருந்த பின்னை(ஊக்கு) வைத்து கீச்சி விட்டு விட்டோம். அவனுகள் பயந்து ஓடி போய் விட்டான்கள். ஆனால் எங்கள் பள்ளி மாணவர்கள் ராஷேஸ்,சபீர் போன்றோர் எங்கள் ஆசிரியர்களின் இச்சம்பவத்தை பற்றி சொல்லியுள்ளனர். மாணவர் தலைவியாக இருந்தும் எங்களிடம் ஏன் முறையிடவில்லை என கடுந்து கொண்டனர். இருப்பினும் எங்கள் வீரத்தை சில ஆசிரியர்கள் பாராட்டாதும் இருக்கவில்லை. எங்கள் ஆசிரியர்கள் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை லக்ஷ்மி குட்டியிடம் தெரிவித்துள்ளர். அம்மாணவர்கள் அவர்கள் தான் எங்களை ‘காம்பஸ்’ எடுத்து குத்த வந்தார்கள் என கதைத்துள்ளனர்.
அம்மாணவர்களுக்கு சூரல் வைத்து இரண்டு அடியை கொடுத்து திருத்தியிருக்கலாம் அதை விடுத்து 10 நாள் சஸ்பென்ஷன் என கலவரமாக்கிவிட்டனர் உயர்கல்வி ஆசிரியர்கள். அதில் ஒருவன் ஆ தமிழச்சியா இதினு காரணம் அவளை ஞான் கெட்டி(திருமணம் செய்து) அவளுடை புறம் பொளிக்கும் என வீறாப்பு பேசி நடந்துள்ளான்.
பின்பு 7 வகுப்பு முடிந்து உயர்நிலை பள்ளிக்கு சென்ற போது லக்ஷ்மி குட்டி அம்மா ஏதோ கத்தியெடுத்து குத்த சென்றது போல் என்னிடம் கேள்வி கேட்டார். நான் 10 முடியும் வரையிலும் நான் அவருக்கு நோட்ட புள்ளியாகவே இருந்தேன். போதாத குறைக்கு அவர் மகன், அவன் தெரு பொறுக்கி நண்பர்களிடம் எனக்கு ‘காம்பஸ் ஜோசபின்’ என்ற பெயர் நிலைக்க செய்தான்.
.
12 Feb 2011
ஒரு புலனாய்வு கதை!
ஆருஷிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாட்டம். நேற்று தான் சிங்கபூர் சுற்றலா சென்று விட்டு வந்திருந்தனர். அவள் நண்பர்களை அழைத்திருந்தார்கள். அவளுடைய பெற்றோர் மருத்துவர்கள் ஆனதால் அந்த ஊரிலுள்ள மருத்துவ நண்பர்கள் குடும்பம் குழந்தைகள் படை சூழ வந்திருந்தனர். சிலர் அவர்கள் பணியாளர்களையும் கூட அழைத்து வந்திருந்தனர், அவர்கள் குழந்தைகள் முரண்டு பிடித்தால் அடக்குவதற்க்கு பயன்படும் என.
ஆருஷியின் அப்பா அவளுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு கணிணி வாங்கி தந்திருந்தார்! அவள் நண்பர்களை அழைத்து காட்டினாள். அவர்கள் இணைய முகவரியும் வாங்கி வைத்து கொண்டாள். எல்லா வசதியுடனான புது தொழில்நுட்பம் அடங்கிய கணிணியாக இருந்தது.
அவள் அப்பாவை தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவள் சாயல் கூட அப்பாவை ஒத்தே இருந்தது. அம்மா ஒரு “மாதிரி” மருத்துவராக இருந்தார் ஆனால் அம்மாவாக அல்ல. அவள் பெற்றோர் கல்லூரியில் படித்தபோது காதல் திருமணம் புரிந்ததால் உறவினர்கள் விட நண்பர்களே அதிகம் இருந்தனர். ஆகையால் பாட்டி தாத்தா மாமா சித்தி சித்தப்பா போன்ற உறவுகள் அவளை சுற்றி இருக்க வில்லை. அப்பா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அம்மா என்ற பெரிய பணக்காரி மனைவி அமைந்ததால் குறுகிய காலத்துக்குள் பணக்காரர் ஆனாலும் உறவுகள் இல்லை என்ற ஏக்கம் அவருக்கும் இருந்தது. ஆருஷியே அவருக்கு எல்லாமாக இருந்தார்.
வேலைக்காரர் புக்கா சிங்கு தான் அவளுக்கு உறவினர், வேலைக்காரர் என எல்லாமாக இருந்தான். அவள் பேசுவதை கேட்பது அவளுக்கு கதை சொல்லி கொடுப்பது என புக்கா சிங் ஆகவே இருந்தான். பள்ளி விட்டு வரும் போது புக்கா சிங்கு தான் புத்தக பைய்யை வாங்கி வைத்து விட்டு பழ ஜூஸ் அல்லது பிரடு டோஸ்டு ஓவனில் இருந்து எடுத்து தருவார்.
பல நாட்கள் அம்மாவும், அப்பாவுடைனே வீடு வந்து சேர்ந்தார். அவருக்கு வேலையுடன் இருந்த ஈடுபாடு வீட்டுடன் இருந்திருக்க வில்லை. வீட்டிலுள்ள பொருட்கள், தன் மகள் ஆருஷியை கூட வேலைக்காரர்கள் தெரிந்த அளவில் அவள் அம்மா தெரிந்திருக்க வில்லை! ஆருஷி யின் 13 வயது பிறந்த நாள் சில நாட்கள் பின்பு அவர் அப்பா ஒரு முறை அம்மாவிடம் சொல்வது கேட்டது, ” நீ இனி பகுதி நேரம் மருத்துவ மனையில் வேலை செய்தால் போதும். நம் பெண் பள்ளி விட்டு வரும் போது வீட்டில் இரு என” . ஆனால் அம்மாவோ அவ என்ன சின்ன குழந்தையா வேலைக்காரன் புக்கா சிங்கிடம் சொல்லியுள்ளேன் . அவன் பார்த்து கொள்வான் என பதில் கூறுவதும் கேட்டது.
புக்கா சிங்கு பங்காள் தேச இன கலவரத்தின் போது இங்கு வந்து சேர்ந்தார். ஆருஷியின் தந்தையின் மருத்துவ மனையில் உதவியாளராக பணி எடுத்து கொண்டிருந்தார். அவரின் பொறுப்பாக பணி செய்வதை கண்டு வீட்டு வேலைக்கு என அமர்த்தினார் அவர் அம்மா! உணவு தயாரிப்பது ஆருஷியை பள்ளிக்கு அனுப்புவது, பள்ளி விட்டு வந்தவுடன் உணவு கொடுப்பது. தூங்கும் முன் குடிக்க ஜூஸ் கொடுப்பது என சகலவும் அவரே பார்த்து கொண்டார். ஆண் வேலையாள் மேலும் முதியவர் என்பதால் ஆருஷி அம்மா எல்லா வகையிலும் தற்காப்பு என் எண்ணினார். அவரின் அறை ஆருஷியின் வீட்டின் மேல் மாடியில் இருந்தது. வீட்டுக்கு உள் வருவதற்க்கும் வெளியில் செல்லவும் இரு கதகுகள் இருந்தது. புக்கா சிங்கை தாத்தா என்றே கூறி வந்தாள் ஆருஷி. வீட்டில் தனியாக இருக்கும் போது நேரம், போக அவரிடமே பேசி கொண்டிருப்பாள் டிவி பார்க்காத போது. அவருக்கும் மகன், மகள் பேரபிள்ளைகள் என பெரிய குடும்பம் இருந்தது .
புக்கா சிங்கின் மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரின் தூரத்து உறவினரான ஒரு வாலிபனுடம் காதலில் இருந்தார். அவனை திருமணம் செய்ய புக்கா சிங்கு அனுமதித்தாலும் வேலை இல்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது. அவன் செவிலியர் பயிற்ச்சி பெற்றவனும் கூட. புக்கா சிங்கு ஒரு முறை ஆருஷி அப்பாவிடம் தன் உறவினருக்கு வேலை தந்து உதவும் படி கேட்டிருந்தான். மருத்துவரும் தேவை வரும் போது அழைப்பதாக சொல்லியிருந்தார். அவரிடம் வேலை பார்த்த ஒரு நபர் திடீர் என வெளி- நாட்டில் வேலை கிடைத்து சென்றதால் வேலையாள் தேவை வந்தது. புக்கா சிங்கிடம் உறவினரை அழைத்து வர கூறினார். டாக்டருக்கு புக்கா சிங்கின் உறவினரை பார்த்தவுடனே பிடிக்க வில்லை. அவன் பார்வை செயல் எல்லாவற்றிலும் ஒரு திமிர் தென்படுவதாக தோன்றியது. ஆனால் வேறு வழியில்லை. சில கன்டீஷனுடம் வேலைக்கு சேர்த்து கொண்டார்.
டாக்டர் இல்லாத போது அரட்டையடிப்பது, வேலையின் கவனம் கொள்ளாது அசால்டாக இருப்பது தொலை பேசியில் கதைத்து கொண்டிருப்பது என எரிச்சலையே கொடுத்தது அவருக்கு வரும் நாட்களில் . ஒரு முறை ஒரு நோயாளியின் பல்லை பிடிங்கி கொண்டிருந்த போது ஒரு கருவி கேட்டால் இன்னொன்று எடுத்து கொடுத்தவுடன் கோபத்தில் சென்னியில் ஒரு அடி கொடுத்துள்ளார். அவனுக்கு சுரீர் என கோபம் வந்து விட்டது. டாக்டரிடம் ஏதும் சொல்லி கொள்ளாது வீட்டிற்க்கு சென்று விட்டான். மறுபடியும் இரண்டு நாள் கடந்து வேலைக்கு வந்த போது டாக்டரும் கொஞ்சம் திட்டி விட்டு வேலைக்கு மறுபடியும் எடுத்து கொண்டார்.
அவன் வேறு வழியல்லாது வேலைக்கு சேர்ந்தாலும் டாக்டரிடம் மனதில் கோபமாக இருந்தது. டாக்டரும், அவர் நோயாளிகளிடம் வைத்து இவனை தரக்குறைவாக திட்டுவது மனம் நோகவே செய்த்து. அவன் கோபத்தை தீர்த்து கொள்ள நண்பர்களிடம் சேர்ந்து குடித்து விட்டு டாக்டரையும் அவர் மனைவியையும் தரக்குறைவாக திட்டி தன் மனக் கவலையை தீர்த்து கொண்டான்.
ஒரு முறை டாக்டரின் பருவ வயது மகள் ஆருஷியை மருத்துவ மனையில் வைத்து போது பார்த்துள்ளார். இப்போது குடித்தவுடன் டாக்டரை திட்டுவதற்க்கு பதிலாக அவன் பேச்சு முழுக்க ஆருஷியை பற்றியே இருந்தது.
பின்பு ஒரு செவிலியன் கிடைத்தவுடன் இவனை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார் ஆருஷியின் தந்தை. திடீர் என்று வேலை பறிக்க பட்டதால் அவன் திருமணவும் தள்ளி போய் விட்டது. அவன் காதலியும் உடன் திருமணம் வேண்டாம், ஒரு நிலையான வேலையாகட்டும் என கூறி விட்டாள். இருப்பினும் புக்கா சிங்கை சந்தித்தே வந்தான். இரவு நேரங்களில் அவன் , ஆருஷீயின் பெற்றோரின் நண்பர்கள் வீட்டில் வேலைக்கு இருந்த அவன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து கும்மாளம் இட்டு தன் கவலையை தீர்த்து கொண்டான். இவர்கள் வேலை பார்க்கும் வீட்டிலுள்ள எஜமானர்களின் பிள்ளைகளை பற்றியும் அவர்களின் தகாத உறவுகளை பற்றிமே பேசி சிரித்து கொண்டனர். ஆருஷியை பற்றிய பேச்சு கொஞ்சம் அதிகமாகவே ஓடியது. அவர்களுக்கு அவளுடைய பேச்சு, உடை நடை மட்டுமல்ல உடல் அமைப்பை பற்றியும் கூட கேலி பேசி கொண்டிருந்தனர்.
டாக்டர் வீட்டிலுள்ள பிராந்தியை இளைஞர்களுடன் பங்கிட்டு நட்பை மேன்ப்படுத்தி தானும் ஒரு இளைஞன் போல் எண்ணி கொண்டு ஆட்டம் போட்டு வந்துள்ளான் புக்கா சிங்கும். ஆருஷி அவனிடம் கேட்கும் சில பேச்சுக்கள் கூட இவர்கள் மத்தியில் கேலி பேச்சாக இருந்துள்ளது.
அன்றும் ஆருஷி புக்காஜியிடம் பூரியும் உருளை குழங்கு குறுமா கேட்டுள்ளாள். அவளுக்கு உணவு பரிமாறி விட்டு பாத்திரத்தை சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது அவள் பெற்றோர் வந்துள்ளனர். அவளுடைய அப்பா அவளுக்கு ஒரு புகைப்பட கருவி வாங்கி வந்துள்ளார் இந்த வருட பிறந்த நாளுக்கு என. ஆருஷி சில புகைப்படங்கள் அவள் பெற்றோர்களை எடுத்து , மகிழ்ச்சியாக அவர்களிடம் பேசி கொண்டு இருந்து விட்டு தூங்க சென்றுள்ளாள். புக்கா சிங்கும் ஆருஷீ பெற்றோருக்கு உணவை கொடுத்துள்ளான். ஆருஷி அப்பா என்றும் குடிக்கும் பிராந்தியை எடுத்து கொடுக்க கூறியுள்ளார். ஆருஷி அம்மாவும் என்றும் போல் தன் பங்கு பிராந்தியையும் குடித்து விட்டு தூங்க சென்று விட்டார்.
புக்கா சிங் தூங்க என மாடிக்கு சென்று விட்டான். 12 மணிவாக்கில் அவன் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து விட்டனர். அப்போது அவர்களுடைய மூளையில் பூதம் வேலை செய்ய ஆரம்பித்தது. புக்கா சிங்குக்கு அளவுக்கு மீறி பிராந்தி கொடுத்தனர். பின்பு அவர்கள் வீட்டுக்குள் வந்து ஆருஷி அறைக்கு சென்று அவளை மானபங்க படுத்தும் நோக்குடன் நுழைந்துள்ளனர். தள்ளாடி வந்து புக்கா சிங் தடுத்துள்ளான். அதற்க்குள் ஆருஷியும் தூக்கத்தில் இருந்து விழித்து கத்தியுள்ளாள். குளிரூட்டபட்ட அறை என்பதால் சத்தமும் வெளிவரவில்லை. ஆருஷி காட்டி கொடுத்து விடுவாள் என பயந்து அவளை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு வேலைக்காரன் புக்கா சிங்கையும் மாடிக்கு இழுத்து சென்று கொன்று விட்டு ஓடி விட்டனர்.
ஆருஷி அம்மா இப்போது தான் வருந்தினாள். வேலை, பணம் என்று இருந்து தன் ஒரே மகளை பலி கொடுத்து விட்டேனே என அழுதாள் தன் பொறுபற்ற செயலை நினைத்து. தன் குழந்தை காத்திருந்த நாட்களில் தனக்கு பேச நேரமில்லாதிருந்தது. இன்றோ தன் குழந்தையும் போய் விட்டது என எண்ணி எண்ணி அழுதார்!!!
( போலிஸ் ஒரு கதையும் ஊடகம் சில கதைகளும், புலனாய்வுத் துறை வேறு விதமாகவும் கதைக்கின்றது. என் பங்குக்கு ஒரு புலனாய்வு சேவையும் செய்துளேன். உங்கள் புலனாய்வு கருத்துக்களும் சொல்லுங்களேன்.)
6 Feb 2011
குடியரசு தலைவர் உரை!
நம் நாடு சுதந்திரம் அடைந்து வல்லரசு ஆக போகின்றேம் என்று பீற்றி கொண்டாலும் 80 % மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தான் உள்ளார்கள் என எண்ணும் போது கவலையாக தான் உள்ளது. 2008 ல் நான் பேச வந்த போது விட ஊழல், லஞ்சம் பெருகியுள்ளதை அறிவேன். மத்திய அரசு, மாநில அரசு என பாகுபாடு இல்லாது “ஊழலே எங்கள் கொள்கை” என தலைவர்களும், அரசு அதிகாரிகளும் களம் இறங்கி இருப்பதை எண்ணி வருந்துகின்றேன். ஸ்பெக்ரம் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி ஊழல், ஆசிய விளையாட்டு ஊழல் என எங்கு பார்த்தாலும் ஊழல் என்பதை என்னால் ஜீர்னித்து கொள்ளவே இயலவில்லை. நான் கூட 3 படை அதிகாரிகள், என் குடும்பத்தார்கள் என கோயில் குளம் போய் வந்தும் பலன் இல்லையே என எண்ணும் போது என்னையே வருந்தி கொள்கின்றேன். ஆகையால் பணி ஓய்வுக்கு பின்பு கிடைக்கும் மாதம் 50 ஆயிரம் ஓய்வு ஊதியம் வேண்டாம் என சொல்லி விட்டேன்.
அரசியல் அமைப்பு சட்டம், நாட்டு நலன், ஒருமைப்பாடு என்ற பெயரில் மக்களின் கருத்து சுதந்திரதை நெரிப்பதை நிர்த்தி கொள்ள வேண்டும்! ‘மக்கள் கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் ஊடகங்கள் நடத்தும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளை புரக்கணிக்குமாறும் கேட்டு கொள்கின்றேன். மக்கள் துன்பத்திற்க்குள்ளாகும் விலைவாசி ஏற்றம், கள்ள சந்தையால் வெங்காயம் விலை கூடியது பற்றி விவாதிக்காது கணவர் மனைவிக்குள் சண்டை மூட்டி விடுவதும், தனி குடும்பமா கூட்டு குடும்பமா என குடும்பத்தை பிரிப்பதும் சொட்ட தலை வழுக்க தலை என பேசி மக்களை அவமானப்படுத்துவதும், கல்லூரி மாணவி மாணவர்களை படிப்பு, வேலை விடுத்து ஆக்கம் கெட்ட கேழ்வி கேட்டு குழப்பி கொண்டிருக்கும் கோபி நாத் தலைமையில் கச்சேரி நடத்துபவர்களை அந்தமானுக்கு கடத்த சட்டம் தீட்ட வேண்டும்.
மேலும் மானாட மயிலாட என்ற ஆட்டத்தை குடும்பத்துடன் பார்த்து ஜொள்ளுவிடும் தமிழக கலாச்சாரம் பற்றி ஆராயவும் உத்தரவு இட்டுள்ளேன். நடந்து என்ன, குற்றம் என்ற பெயரில் பேய் கதைகள் பரப்பும் சேனலுகளையும் ஒழிக்க திட்டம் இட்டுள்ளேன். பழைய அரச சபையிலுள்ள கவிஞசர்கள் போல் புகழ்மாலை- கவிஞசர் வாலி போன்றோரை பேணாவை இல்லாத காட்டில் கடத்தவேண்டும்! இந்த வருடம் தமன்னா அனுஷ்காவுக்கு கொடுத்த கலைமாமணி விருதுவிலும் ஊழல் உள்ளதாக கேள்வி பட்டதால் விசாரணை நடத்த திட்டம் இட்டுள்ளேன். மச்சான் நடிகை நமிதாவுக்கு அடுத்த வருட விருது புக் செய்த்தாகவும் கேள்விப்பட்டேன்.
அடிப்படை தேவையை நிவர்த்தி செய்ய வக்கில்லாத அரசு ஏன் விண் வெளிக்கு ராக்கட் செலுத்தி பணத்தை கரியாக்குகின்றது என்ற கேள்வி என்னில் எழாதில்லை. கடை வீதியிலும் வீட்டு முற்றத்திலும் ஓடும் சாக்கடையை சுத்தம் செய்ய வழியற்ற நமக்கு நிலாவில் வசிக்க ஆசை வரலாமா? நிறைய கேள்வி கேட்க துவங்கினால் என் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்ற எச்சரிக்கை என்னை மௌனிக்க செய்கின்றது.
மேலும் தமிழக பெண்களை சுய உதவி குழு என்ற பெயரில் வட்டி முதலாளிகளாகவும் பெண் தாதாக்களாகவும் உருவாக்குவதாகவும் செய்தி வந்துள்ளது. சீட் கிடைத்தால் இந்திய ஒருமைப்பாடு, இல்லை என்றால் தனி நாடு கோரிக்கை என பண்பற்ற அரசியல் நடத்தி வரும் அரசியல்வாதிகள், மக்களுக்கு 1 ரூபாய்க்கு மோசமான அரிசி 80 ரூபாய்க்கு வெங்காயம் என ஏமாற்று அரசியல் நடத்துவதும், செம்மொழி என கூறி கொண்டே தமிழை சென்னை தமிழ், அமெரிக்க தமிழ் என தமிழை அழிப்பதும் தெரிந்ததே!
இருப்பினும் இந்த கொடிய செயல்களுக்கு முடிவுகட்டுவது உங்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில் நான் வகிப்பது வெறும் அலங்காரப் பதவி தான் என்பது உங்கள் யாவருக்கும் தெரிந்ததே.
போராளிகள் என்ற பெயரில் நம் அண்டை நாட்டவரான ஈழ தமிழர்களை கொல்ல வழி சொல்லி கொடுத்த நாம், நம் சொந்த மக்களான ஏழைகளை நக்சல்கள் என கூறி பழி தீர்த்து கொள்வதை என்னால் ஏற்று கொள்ள இயலவில்லை.
நம் நாட்டை, டாடா, ரிலயன்ஸ் போன்ற பணம் முதலைகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். முதன்மையாக முதுகு தண்டுவடம் அற்ற உபதேசி- பிரதமரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நாட்டு பற்ற அற்ற சோனியா ராகுலிடம் நம்பிக்கை கொள்ள வேண்டாம். ஒருவன் ஒரு முறையே தேர்தலில் போட்டியிட முடியும் என சட்டம் திருத்தவேண்டும். பள்ளி கல்லூரிகளை பொது உடமையாக்குவோம்.
வீட்டுக்கு வீடு செடி நட உற்சாகப்படுத்த வேண்டும். பச்சை புரட்சி என கூறி மண்ணையும் மக்களையும் கான்சர் போன்ற கொடிய நோய் தாக்க காரணம் இனி ஆகலாகது. குடிசை இல்லாத நாட்டை உருவாக்குவோம் எனக் கூறி குடிசை மக்களை ஊரை விட்டு துரத்தும் அவலத்தையும் களைய வேண்டும்.
நம் நாடு தன் நிறைவு அடைந்து விட்டது வல்லரசு ஆகி விட்டது என என்னால் பொய் சொல்ல இயலாது . சுதந்திரமான இந்திய, குடியரசு இந்தியா என்ற பெயரில் நம் நாட்டில் நிகழும் கொடிய செயல்கள் ஒழிந்து உண்மையான மக்களாட்சி மலரட்டும் என்று ஆசி கூறி விடை பெறுகின்றேன். எகிப்து போன்று மக்கள் புரட்சி வெடிக்கும் முன் பதவியை விலக வேண்டும் என்ற ஆசையுடன் உங்களிடம் விடை பெற்று கொள்கின்றேன்.
ஜெய் ஹிந்த்!!!!!!!
4 Feb 2011
இளைஞர்கள் தற்கொலையும் காதலும்……………..
ஒவ்வொரு 4 மணி துளிகளிலும் ஒரு தற்கொலை நிகழ்வதாக தேசிய குற்றம் அறிக்கை சொல்கின்றது. இதில் 69 % பேர் 15- 40 வயதிற்க்கு மத்தியிலுள்ள இளைஞசர்களே. கடந்த வருடம் தற்கொலையால் 1 லட்சத்து, 27 ஆயிரத்து 151 பேர் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். இதில் தென் இந்தியாவே சேர்ந்த கேரளா, தமிழக, கர்னாடக ஆந்திராவே சேர்ந்தவர்கள் வருடத்திற்க்கு 50 ஆயிரத்திற்க்கு மேல் சாகின்றனர். மேலும் 32% பேர், கல்வியறிவில் முந்தியுள்ள கேரளத்தவர்களே! இன்னும் ஆச்சரியமான விஷயம் கல்வியறிவில் பின் தங்கியுள்ள பீகார் போன்ற மாநிலங்களில் தற்கொலை எண்ணிக்கை 2 % மட்டுமே !
பலபோதும் தற்கொலைக்கு, காதலும் அதை தொடர்ந்த சில பிரச்சைனைகளும் காரணமாகி விடுகின்றது. சமீப காலமாக இளைஞர்கள் பார்த்தவுடன் காதல் என பல பிரச்சனைகளுக்கு ஆளாகுன்றனர்.
காதல் வருவது சினிமாவில் காட்டுவது போல வினோதமாகவே உள்ளது. எனக்கு தெரிந்த ஒரு பெண் அவளின் சித்திக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுத்துள்ளாள். பேசும் நபரின் சத்தம் இனிமையாகவும் பெயர் ‘அஜித்’ என்று இருந்ததாலும் காதல் வந்து விட்டதாம்.
9 வருடம் முன்பு அப்போது தான் “காதலுக்கு மரியாதை’ படம் வந்த நேரம். அப்படத்தின் கதாநாயகன் போலவே தன் காதலனும் இருப்பான் என எண்ணி வசதி வாய்ப்பான வீட்டில் பிறந்து வளர்ந்த, மெட்ரிகுலேஷன் பள்ளி படிப்பு பெற்ற ஒரு பெண் தன் வீட்டின் பணியாளர்கள் போல் இருந்தவர்களின் பையனுடன் வந்து விட்டாள். பையனின் அக்கா சந்தனம் இட்டு அம்மா குங்குமம் வைத்து வாழ்த்தி; வீட்டிலுள்ள எல்லோர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பெண்ணை கடத்தி வர சென்றுள்ளான் அவன்! இதை காதல் என்பதை விட திட்டமிட்ட பெண் கடத்தல் என்றே கூற இயலும்.
சாதி ஒழிப்பு கூட்டத்தில் ஒருவர் இவ்வாறாக பேசினார். அவர் முதுகலை பட்டத்திற்க்கு சேர்ந்ததே உயர் ஜாதி பெண்ணை காதல் புரிந்து மணக்க வேண்டும் என்றாம். அவ்வாறே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் புரிந்துள்ளார் என்றும் பெருமையுடன் கூறினார். இதில் கொள்கை இருந்தாலும் காதல் இருப்பதாகவும் தெரியவில்லை.
அதே போல் சமீபத்தில் அறிமுகமான ஒரு கல்லூரி மாணவி உயர் அரசு பதவியில் இருப்பவரின் மகள். 18 வயது வந்த உடனே பக்கத்துவிட்டு பையனின் பெற்றோர் உதவியுடன் ரஜிஸ்தர் திருமணம் புரிந்து கொண்டு பெற்றோர் வீட்டிலிருந்தே முதுகலை பட்டமும் பெற்று விட்டாள். எடுத்த தீருமானம் சரி தானா என்று இன்று கலங்கினாலும் தப்பி வர இயலாது மனக்குழப்பத்தில் உள்ளார்.
மனித வாழ்வில் இனிமையான இளைமைப் பருவம் கூட இவர்களை பொறுத்தவரை பாரமாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 3 வருடமாக இளம் மாணவர்களுடன் பயணிப்பது அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டியது. பலர் கர்ண குண்டலம் என்பது போல் அலை பேசியுடனே வாழ்ந்து வருகின்றனர். ஒரே நாளில் 100 க்கு மேல் SMS, அலைபேசி கதைப்பு என நாட்களை கடத்தி செல்கின்றனர். என் பயணம் 1 மணி நேரம் என்பதால் பல பொழுதும் அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்க பட்டேன்!. முதலில் சிரித்து பேசி பின்பு போடா நாயே என்று அன்பு மழை பொழிந்து பின்பு சண்டையிட்டு கண்ணீர் வடித்து பல்கலைகழகம் வந்து சேர்வார்கள். ஒரு மணிநேரம் தொடர்ந்து அலைபேசி வழியாக கதைப்பவர்களும் உண்டு. அவர்கள் குடும்பம் அவர்கள் குணம் ,பின் புலன் என எல்லாமே ஒரு பயணத்தில் அடுத்து, இருப்பது வழியாகவே தெரிந்து கொள்ளலாம். இவர்களுக்கு சேவை செய்ய என்றே நண்பர்களும் உண்டு. பல வேளைகளில் ஓட்டுனர் தன் கவனத்தை இவர்கள் பேச்சில் திருப்பி நமட்டு சிரிப்பில் வருவதை கண்டுள்ளேன். சுயமரியாதை, மதிப்பு என்பது இனி வரும் காலங்களில் பொருட்களுக்கு மட்டுமே என்றும் தோன்றாது இருந்தது இல்லை.
இதே இளைஞர்களிடம் எங்கள் பயிற்ச்சி பத்திரிக்கை செய்திக்கு என வினா எழுப்பினால் பதில் சொல்லாது நழுவி விடுவார்கள். பார்க்க பெரிய அறிவாளிகளாக காட்டி கொண்டாலும் ஆழமான கருத்தாக்கம் சிந்தனை வளம் இருப்பது இல்லை; வளர்க்க முயல்வதும் இல்லை என்றே உணர இயலும். ஒரு விதமான பந்தா கொண்டே காலம் கழிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.. எப்போதும் ஒலி எழுப்பிகளாகவே இருந்து வருகின்றனர்.
காதலை ஒரு உண்மையான நோக்கில் இன்று பல இளைஞர்கள் அணுகவது இல்லை என்பதே உண்மை. காதலிக்கும் போதே உடை, பொருட்கள் என வாங்கி கொள்ள பல பெண்கள் தயாராக உள்ளனர். பல பெற்றோர்கள் கூட இதை பொருள் ஈட்டும் வாய்ப்பாக எடுத்து கொள்கின்றனர்.
ஊடகம் கூட காதல், பெண் ஆண் உறவுக்கு அசாதாரணமான பல அர்த்தங்களை கற்பித்து பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. படிக்கும் போதுள்ள காதல் ஏதோ இன்றிமயையாதது போன்று தோற்றம் உருவாக்குகின்றனர். படிக்கும் தருவாயில் காதல் விட நட்பே நன்மை பயிற்க்கின்றது என்பதை மறந்து போகின்றனர் பல பொழுதும்.
எங்கள் ஒரு பேராசிரியர், சில மாணவி மாணவர்களை உடை நடையை கவனித்து கலாயிப்பார். வாய்ப்பு கிட்டிய போது அவரிடம் ஒரு கேள்வி வைத்தோம். உங்களுக்கு பள்ளி, கல்லூரி காதல் வந்துள்ளதா என. அவரின் வார்த்தை ரொம்ப சிந்திக்கவே வைத்தது. படிப்பு, பண தட்டுபாடு மத்தியில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற சூழலில் இருந்ததால் படித்து ஒரு வேலை, நல்ல வாழ்க்கை என்று மட்டுமே இருந்ததால் காதலுக்கு என நேரம் இல்லாது இருந்தது என கூறினார். இப்போது மாணவர்கள் பெரும் பகுதி நேரம் ஆக்கபூர்வமான செயலுக்கு என்பதை விட வெட்டி பேச்சு, பார்ட்டி என செலவிடுகின்றனர்.
மேலும் முன் நாட்கள் போல் பெற்றோர்களுடனும் ஒரு உணர்வு பூர்வமான உறவு பேணுவதும் குறைந்துள்ளது. சமூக சூழல் காரணமாக வசதி வாய்ப்பாக வாழ வேண்டிய சூழலில்; ஆசையில் பெற்றோர் இருவரும் வேலை என அதி காலையில் ஓட துவங்கி இரவு தான் பல வீடுகளில் வந்து சேருகின்றனர். பிள்ளைகளுக்கு தன் உணர்வுகளை பகிந்து கொள்ள வெளி உலகம் தேடுகின்றனர். இதன் தாக்கம் அவர்கள் வாழ் நாள் முழுக்க அனுபவிக்க நேரிடுகின்றது. ஒரு போதும் தீர்வு காண இயலாத வண்ணம் பிரச்சனைகளின் சங்கிலி தொடரில் அவர்கள் மாட்டி கொள்கின்றார்கள்.
இருப்பினும் எவ்வாறாக தங்களை அபாயப்படுத்தி கொள்ளாது தப்பித்து வாழ்வது என்று அவர்களே வழி காண முன் வர வேண்டும். இளைமைப் பருவத்தை கொண்டாட்டங்களுடன், மனதை பண் படுத்தி வாழ்க்கையை வளமாக்க பயன்படும் காலம். அல்லாது உணர்வுகள், ஆசைகளின் அடிமை நாட்கள் அல்ல!!
29 Jan 2011
சூத்திரம் போன சுப்பன்!
எங்க ஊரில் நல்ல காதல் ஜோடியை விட கள்ள காதல் ஜோடி பெருகியிருந்தது.
எளிய மனிதர்களுக்கு உணவு, உறவிடம், கல்வி என தேவையுள்ளவை எல்லாம் மிக இக்கட்டான; போராட்டமான சூழலில் பெறபட்டபோது ‘காதல்’ தான் மிக எளிதாக மலிவாக பெறப்படுவதாக இருந்தது .
எளிய மனிதர்களுக்கு உணவு, உறவிடம், கல்வி என தேவையுள்ளவை எல்லாம் மிக இக்கட்டான; போராட்டமான சூழலில் பெறபட்டபோது ‘காதல்’ தான் மிக எளிதாக மலிவாக பெறப்படுவதாக இருந்தது .
மேலும் ஆண்கள் சம்பாதித்து பெண்களை காப்பாறும் சூழல் இருக்கவில்லை. பெண்களும் ஆண்களை போன்றே பல பொழுதும் அவர்களை விட ஊதியம் பெறும் நபராகவே இருந்தனர். வீட்டு சண்டையில் கூட தன்னை அடிக்கும் ஆண்களுக்கு மறு கன்னத்தை காட்டாது, அடிக்கும் கணவனின் மறு கன்னத்தை பதம் பார்க்கும் பெண்களும் இருந்தனர். கள்ள காதலிலும் பொது உடமை கொள்கையை பின்பற்றும் சுதந்திரமும் இருந்தது. காங்கிரஸ்காரர்கள் பெண்களை விற்று பெண் வியாபாரம் செய்தபோது, கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியிலுள்ள பெண்களை தங்கள் பொது உடமையாகவே நோக்கினர் என்பதும் ஒரு சொல்லப்படாத உண்மையாக இருந்தது.
`சில கேரள தமிழ் தொழிலாளரகளான ஆண்கள், தங்கள் ஊர் சென்று திரும்பும்போது ஒரு புது பெண்ணுடன் அதாவது அடுத்தவன் மனைவியையும் கொண்டு வந்து விடுவதும் உண்டு. கேரளா உடை, நடை, பாவனை கண்டு பல பெண்கள் தங்கள் வீடு வசதி மட்டுமல்ல மூன்றும் நாலு குழந்தைகளை கூட விட்டு விட்டு கையில் கிடைத்த நகை நட்டுடன் வந்து விடுவார்கள்.
எங்கள் வீட்டிற்கு பெயின்டு அடித்த, காலை இழுத்து இழுத்து நடக்கும் கந்தன் நினைவிற்கு வருகின்றார். அவர் அடுக்களை பெட்டியின் கதவில் வரைந்த ஒரு சித்திரம், ஓடும் நதியும் அதன் கரையில் முயல் காரட்
தின்பதும், இருவர் அதன் கரையில் இருந்து மீன் பிடிப்பதும் ஒரு பெண் புல்லு
கட்டுடன் அவ்வழியாக நடந்து போய் கொண்டிருப்பது போலவும் பல கோடுகளை அங்கும் இங்குமாக இட்டு சேர்த்து வரைந்த படம் இன்றும் நினைவில் நிற்கிறது.
அவருக்கு ஒரு மனைவியும் ஒரு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் மனைவி எப்போதும் இஞ்சி தின்ற குரங்கை போன்ற முகத்துடன் இருந்தாலும், நல்ல வேலை செய்யும் உழைப்பாளி மட்டுமல்ல அழகான பெண்மணியும் கூட! கந்தன் வேலைக்கு போகாது டிமிக்கி கொடுப்பதற்கு சண்டையிட்டு கொள்வதும் கண்ட மேனிக்கு திட்டுவதும் அக்காவின் சகஜமான குணம். ஒரு முறை கந்தன் தன் மனைவியிடம் பெயின்ட் அடிக்க என கம்பத்திற்கு சென்று விட்டார். அக்காவும் பெரிதாக ஒன்றும் நினைக்க வில்லை. வேலை முடிந்தவுடன் பணத்துடன் வருவார் என்று ஒரு வருடம் அல்ல இரண்டு வருடம் காத்திருந்தார்.
ஒரு நாள் பொங்கலுக்கு வந்த ஐய்யப்பன், புது பெண்டாட்டி, இரண்டு பெண் குழந்தைகளுடன் பொங்கல் படியுடன் பம்மி பம்மி தன் வீடு வந்து சேர்ந்தார். அதிற்சியடைந்த மனைவி ஐயப்பனிடம் அதன்பின் பேசவே இல்லை, மட்டுமல்ல முகத்தில் கூட முழிக்கவே இல்லை. ஆனால் அக்குழந்தைகளை தன் குழந்தைகள் போன்று ஏற்று கொண்டார் எல்லா விடுமுறைக்கும் கம்பத்தில் இருந்து எஸ்டேட் வந்து விடுமுறை நாட்களை கழிக்கவும் அனுமதித்தார். இதுவும் ஒரு விந்தையான உண்மையாக தான் இருந்தது .
அதே போல் தான் “சூத்திரம் போன சுப்பன்”னின் தம்பி தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்கு வந்து திருப்பிய போது, மூன்று குழந்தைகளின் தாயையும் தள்ளி கொண்டு வந்து விட்டான். நகை எல்லாம் விற்று தீர்ந்ததும், தேங்கி இருந்த காதலும் நீர்ந்து போனது. தன் தம்பி வீட்டிற்கு வந்த சுப்பன்; வாடி வதங்கிப் போன இப்பெண்ணின் நிலையை கண்டு கலங்கி, “கவலைப்படாதே என் தம்பி உன் வாழ்க்கையை கெடுத்து விட்டான் என கவலைப்படாதே என்னுடன் வா, உனக்கு நான் வேலை வாங்கி தாரேன்” என சுப்பன் தான் வேலை பார்த்த எஸ்டேட்டுக்கு அழைத்து வந்து; தன் வீட்டு வராந்தாவில் தங்க இடம் கொடுத்து வேலையும் வாங்கி தந்துள்ளான்.
ஒரு நாள் ஆசை வார்த்தை கூறி "சினிமாவுக்கு போவோம்" என டவுணுக்கு அழைத்து வந்தவன், அவள் மனம் குளிர ஆசை ஆசையாக சேலை வாங்கி கொடுத்து சினிமாவுக்கும் அழைத்து சென்றுள்ளான். உச்ச கட்ட அன்பில் தேயிலை காட்டுக்குள் இருந்து பேசிவிட்டு செல்லாம் என அழைத்துள்ளான். ஏற்கனவே சூடு பட்டவளாக இருந்தவள் தன் பாதுகாப்பிற்கு என ஒரு கத்தியும் தன் வசம் வைத்திருந்துள்ளாள். இதை எதிர் பார்க்காத சுப்பனின் “அதை” அறுத்து அவனிடமே கொடுத்துவிட்டு அவள் போலிஸ் ஸ்டேஷனுக்கு மிக லாவகமாக நடந்து வந்து சேர்ந்தாள்.
ஒரு நாள் ஆசை வார்த்தை கூறி "சினிமாவுக்கு போவோம்" என டவுணுக்கு அழைத்து வந்தவன், அவள் மனம் குளிர ஆசை ஆசையாக சேலை வாங்கி கொடுத்து சினிமாவுக்கும் அழைத்து சென்றுள்ளான். உச்ச கட்ட அன்பில் தேயிலை காட்டுக்குள் இருந்து பேசிவிட்டு செல்லாம் என அழைத்துள்ளான். ஏற்கனவே சூடு பட்டவளாக இருந்தவள் தன் பாதுகாப்பிற்கு என ஒரு கத்தியும் தன் வசம் வைத்திருந்துள்ளாள். இதை எதிர் பார்க்காத சுப்பனின் “அதை” அறுத்து அவனிடமே கொடுத்துவிட்டு அவள் போலிஸ் ஸ்டேஷனுக்கு மிக லாவகமாக நடந்து வந்து சேர்ந்தாள்.
உயிர் வலியில் துடித்த சுப்பனோ, தன் சூத்திரத்தையும் எடுத்து கொண்டு ஓட்டமாக வந்து காவலர்களிடம் கொடுத்து விட்டு மயங்கி விழுந்து விட்டான். பின்னால் நடந்து வந்த அப்பெண் போலிஸிடம் நடந்தவற்றை மிக தெளிவாக கூறியுள்ளாள். அதிற்சியில் உறைந்து போன மலையாள போலிஸ், சுப்பனை ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி நான்கு மணி நேரத்தில் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் சேர்த்துள்ளனர்.
பல பெண்கள் அப்பெண்ணின் செயலை பாராட்டினாலும் ‘சூத்திரம் போன சுப்பன்’ என்ற பத்திரிக்கை செய்தி பல மலையாளிகள் கேலிக்கு தமிழர்களை கொண்டு சென்றது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் சுப்பன் இனி வருவானா வரமாட்டானா என்ற விவாதவும் விட்டபாடில்லை . ஆனால் சுப்பன் 2-3 மாதம் பின்பு உயிர் அங்கு இல்லை என கண்டுபிடிக்க நான் உதவியாக இருந்தேன் என பெருமையாக கூறி, தான் மருத்துவ உலகிற்கு ஆற்றிய சேவையை சொல்லி மலையாளி டாக்டர்ஸ் தன்னை அருமையாக கவனித்து கொண்டார்கள் என பூரிப்புடன் வந்து சேர்ந்தான்.
26 Jan 2011
மலையாளத் திரைப்படம் - நீலத் தாமரை
இன்று “நீலத் தாமரை” என்ற மலையாளப்படம் காணும் வாய்ப்பு கிட்டியது. லால் ஜோசின் இயக்கத்தில் எம்.டி வாசுதேவன் நாயர் திரைக்கதையில் 1976-80 காலகட்டத்திய தளத்தில் கதை அழகாக சென்றது. கேரளத்தவரின் பழைமையான வீடு, அவர்கள் கோயில்(அம்பலம்), கோயில் குளம் , காயல் என பார்க்க பரவசம் ஊட்டும் இடமாக தேர்வு செய்து படம் பிடித்திருந்தனர். மைனா படம் நாயகி இரண்டு காட்சிகளில் வந்து போனார்.
படம் தளம், கதை விருவிருப்பாக மட்டுமல்ல அமைதியாக செல்கின்றது. கதாபாத்திர தேற்வு, கதாபத்திரங்களின் உடை நடையிலுள்ள நளினம், சுத்தம் மலையாள கலாச்சாரத்தின் எடுத்துகாட்டாக உள்ளது. சமீப காலமாக மலையாளப் படங்களும் நம் தமிழ் மற்றும் ஹிந்தி படத்தை பார்த்து அதன் தனி தன்மை இழந்து இருந்தது. இப்படம் அதற்க்கு மாறாக 90 களில் பார்த்த மலையாளப் படத்தை நினைவு கூற செய்தது
படம் இப்படியாக தொடங்குகின்றது. அந்த வீட்டு வயோதிக தாயாரை பார்க்க அவருடைய இறந்த மகனுடைய மனைவி, அவருடைய பழைய வீட்டு பணிப்பெண்ணும் (மகனுடைய காதலி) வருகின்றனர். மகனுடைய பழைய மனைவியும் வேலைக்காரியும் ஒருவருக்கொருவர் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். வேலைக்காரியின் பழைய நினைவுகளோடு கதை செல்ல துவங்குகின்றது.
ஒரு பழைமை வாய்ந்த பணக்கார வீட்டிற்க்கு ஒரு வண்ணார் குலத்தை சேர்ந்த பெண் வேலைக்கு வருகின்றாள். பொறுப்பாக ஒவ்வொரு வேலையும் செய்கின்றாள். அவ்வீட்டு மகன் வக்கீல் படிப்பு முடிந்து வீட்டிற்க்கு வருகிறான். பெண்ணை பார்த்த உடனே அவளை ஆள் கொண்டு விட வேண்டும் என துடிக்கின்றான். அவளுக்கும் அவன் மேல் ஒரு அதீத காதல் தான். அவளுக்கு அவனிடம் சரணகதி ஆகி விடுவதா வேண்டாமா என இரு மனத்தில் உள்ளார். கோயில் குளத்தில் அதிசயமான ஒரு நீலக்கலர் தாமரை உள்ளது .அது உண்மையான பக்தியுடன் பக்தர்கள் பிரார்த்தனை பண்ணினால் பூக்கின்றது. அவளை தினம் அழைக்கும் வீட்டு யஜமானியின் மகனின் ஆசைக்கு போகவா வேண்டாமா என அறிய பிரார்த்தனை செய்கின்றாள். நீலத் தாமரையும் பூக்கின்றது.(?) அவனுடம் போய் உறவு வைத்து கொள்கின்றாள் பணிபெண்ணும்!. கதாநாயகனோ பெண்ணை வெறும் மாம்ச-பிண்டமாக பார்ப்பவனாக இருக்கின்றான். அவன் படிக்கும் பொழுதே பழகிய பணக்கார மற்றும் அவன் சமுதாய பெண்ணை மணந்த பிறகும் வேலைகாரியிடம் வலுகட்டாயமாக உறவை பேணுகின்றான். அவன் மனைவி இவர்கள் உறவை கண்டு பிடித்து விடுகின்றாள். அம்மா தான் வெறும் டம்மி அம்மாவாக உள்ளார்! மகன், துணி துவைப்பது, காலில் அடிபட்டவுடன் எண்ணை தேய்த்து விடுவது, மகனுக்கு விருப்பமான உணவு பரிமாறுவது என சிறு வயது பணியாள் பெண்ணை எல்லை இல்லாது அனுமதிக்கின்றார். எல்லாம் சோம்பல் செய்யும் வேலைதானோ!
பின்பு வேலைக்காரி அவள் முறை மாப்பிளையை மணந்து, தன் பெண்ணையும் டாக்டருக்கு படிப்பித்து வாழ்க்கையில் ஒரு நல் நிலையில் வந்து விடுகிறார். இங்கோ கதாநாயகன் சிறுவயதிலே இறந்து போய் விடுகின்றான் அவன் மனைவி அவனுடைய மகளை தன் மாமியாரிடம் கொடுத்து விட்டு வேறு ஒருவரை மணம் முடித்து இரு குழந்தைகளுடன் வாழ்கின்றார்.
பல இடங்களில் படத்தின் கதையில் ஓட்டையுள்ளதை காணமுடிந்தது. காமிரா கையாளுபவர் எவ்வளவு தான் தன் ஒளிப்பதிப்பால் கதையிலுள்ள குறையை களைய நினைத்தாலும் அங்கங்கு கதையிலுள்ள பொய் முடிச்சு தெரியத்தான் செய்கின்றது. வேலைக்காரிகள் ஏமாறுவதும் யஜமானர்களின் பணக்காரத்தனம் எல்லாம் அதே போல் காட்டியிருந்தாலும் கடைசி காட்சியில் அநியாயத்திற்க்கு வீட்டு யஜமான பாட்டியை நல்லவராக காட்டுவதும் வேலைக்காரி இன்று டாக்டர் மற்றும் ஆசிரியர் ஆகிய குழந்தைகளின் அம்மாவாக இருப்பினும் தன்னை ஏமாற்றிய கதாநாயகனிடம் கோபம் கொள்ளாதிருப்பதும் யஜமான அம்மாவிடம் கொள்ளும் பக்தியும் கொஞ்சம் ஓவராகவே தெரிகின்றது. மேலும் கோயில் குளத்தில் பூக்கும் பூ காண்பவர்களின் காதில் பக்தி என்ற பெயரில் நல்ல பூ சுற்றவே பயன்படுகின்றது அதையே படத்தின் தலைப்பாகவும் தேர்ந்துள்ளனர்!!!. சாதி பேய் மலையாளிகளிடமும் இருப்பது ஓர் சில காட்சியில் காணலாம். வண்ணார்களை பயணம் செல்லும் போது விழிக்கல் ஆகாது மேலும் ஏழைகளை எப்படியும் கையாளலாம் என்ற மிதப்பும் நல்கின்றது இப்படம் வழியாக. அதே போல் தன் அம்மா இரண்டாம் திருமணம் முடித்தார் என்ற காரணத்தால் அம்மாவை மகள் வெறுப்பதும் சகிக்க முடியாது தான் உள்ளது. மலையாள கலாச்சாரம் நம்மைவிட 20 வருடமாவது முந்தியுள்ளது என எண்ணம் கொள்ளும் போது இவ்வகையான படங்கள் அப்படியல்ல என்று சொல்ல வருகின்றதோ? எப்படியோ படம் நம்மை இருக்கையை விட்டு எழாது பார்க்க தூண்டுகின்றது என்பதில் ஐயமில்லை.
20 Jan 2011
மரணம் கொண்டு வந்த சில சிந்தனைகள்!!!
பிறப்பது எங்கு, எப்போது, யாருக்கு, என்று அறியாதிருப்பது போல் மரணவும் புதிராகவே உள்ளது.
உயிர் இருக்கும் வரை பைபிளும் வெத்தலை பெட்டியுமாக இருந்த பாட்டி இறக்கும் தருவாயில் உயிர் ஊடலாடிய வாயில் பாலை ஊற்றி கொண்டே "அம்மா, உங்களை எங்கு அடக்கம் செய்ய வேண்டும்" என கேட்ட போது அய்யாவிடம் கேட்டு கொள்ளுங்கள் என கூறி உயிரை விட்டார். அவர் பெற்றோர், சகோதரர்களுக்கு 385 மைலுக்கு அப்பால் ஆனால் பாட்டியோ கேரளாவில் தாத்தாவின் தோட்டத்தின் ஒரு கரையில் அடக்கம் செய்யபட்டார்.
தாத்தா 50 வருடங்களாக கேரளாவில் வாழ்க்கையை திருவிழா போன்று கொண்டாடி வாழ்ந்தவர். நிழலுக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்காதவர். சொந்த ஊரில் துயில் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அவர் பிறந்த ஊர் அழகம்பாறையருகில் தான் உயிரோடு இருக்கும் போதே ஒரு வீடு கட்டி அதன் அருகில் கல்லறையும் கட்டி வைத்திருதார். 50 வருடம் முன்பு கண்ட உறவுகள் அல்ல தற்போது என கண்ட போது மறுபடியும் கேரளா நோக்கியே வந்து விட்டார். தாத்தா யாருக்கும் அன்பால் கூட கட்டுபடாது நானே ராஜா நானே மந்திரி என குடி, கூத்தோடு அவர் 95 வயதிலும் இன்பமாக வாழ்ந்தவர். திடீர் என ஒரு நாள் பக்க வாதத்தால் பாதிக்கபட்டு சரிந்து; அவர் ஆசையாய் நம்பிய மகனும் அவரை பாசமுடன் நோக்கவில்லை, அவர் கேலி பேசி விரட்டிய மகன்களும் கைவெடிந்த நிலையில் ஒரு நாள் இறந்தார். சகல கிருஸ்தவ மரியாதையுடன், பாதிரியாரின் ஜெபத்துடன் அவரை பாட்டியின் பக்கமே அடக்கம் செய்தனர்.
மரணத்தை பற்றி ஒரு போதும் நினையாத, தாத்தாவின் மரணத்தை கேலி பேசிய பெரியப்பாவும் இடி விழுந்து அடுத்த வருடமே கல்லறை சென்றார். பெரியப்பாவுக்கு 5 ஏக்கர் மேல் இடம் இருந்தும் அவர் மகன்கள் தாத்தா, பாட்டி பக்கம் இடம் தர கேட்டனர். அது அவர்களுக்கு ஒரு மான பிரச்சனையாகவும் இருந்தது. காதல் திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்க்காக 40 வருடங்களுக்கு மேல் பெரியப்பா கால் படாது தடுத்திருந்த குடும்ப தோட்டத்தில் பெரியப்பாவில் உயிர் இல்லாத உடலையாவது அடக்கம் செய்து விட வேண்டுமென துடித்தனர் மகன்கள். சித்தப்பவோ, இதை சாக்காக வைத்து சொத்து கேட்டு வந்து விடுவார்கள் என கருதி இடம் தர மறுத்து விட்டார்!
அடுத்த வருடம் மே மாதம் இளைய சித்தப்பா அவர் மகள் திருமணம் முடிந்து 5 வது நாள் தனது 44 வது வயதில் கல்லறையை தேடி போய் விட்டார். பணம் சேர்க்க கருத்தாக இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவருக்கு நல்ல நாளாகவே இருந்தது சித்தப்பாவுக்கு. அன்று மாலை சித்தப்பாவை ஒரு பாயில் கட்டி கொண்டு வந்தார்கள் மருத்துவமனையில் இருந்து. நாங்கள் உறவினர்கள் அழ தெரியாது நின்ற போது ஊர்காரர்கள் ஒப்பாரியிட்டு அழுது உருண்டனர். சித்தப்பா இறந்த போது அழுது காணப்படாத அப்பாவும், அழுததை அன்று கண்டேன். அத்தைமார்கள் எறிகின்றவன் கையில் ஆண்வர் கல்லை கொடுக்கவில்லையே என ஏங்கி ஏங்கி அழுதனர். இறந்த பின்பு பல நாட்கள் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு வந்துகொண்டே இருந்தார் என் கனவில்!
ரஞ்சனி என்ற ஒரு தோழி எங்களுடன் 8 ம் வகுப்பில் படித்தாள். அவள் வெகுதூரமுள்ள காட்டு பகுதியில் இருந்து பள்ளிக்கு வருகின்றாள் என்று மட்டும் தெரியும். எப்போதும் சிரித்த வெளிறிய முகத்துடன் காணப்படும் அவள் முடி நூடில்ஸ் போன்று சுருண்டு இருந்தது. அவளுடைய உடை கூட அவளுடைய மெலிந்த தேகத்தை ஒட்டியே இருந்தது. ஒரு நாள் செய்தி வந்தது கரையில்லாத கிணற்றில் தண்ணீர் எடுக்க போன போது கால் வழுதி விழுந்து செத்து விட்டாள் என்று.
ஜெயா என்ற தோழி எங்களுடன் படித்தாள். அவள் சுழன்று வரும் ஒரு பெண் ஜாக்கி ஜான் போல் இருந்தாள். அவளை கண்டால் எங்கள் வகுப்பு மாணவர்கள் கூட பயந்து நடுங்கி ஓடுவார்கள். அவளுக்கு 18 வயதுள்ள போது அவளுடைய இரு அக்காகள் , 10வது வகுப்பில் படிக்கும் ஒரு தங்கை என 4 பேரும் தங்கள் இடுப்பில் கல்லை கட்டி குளத்தில் தாவி தற்கொலை செய்துகொண்டனர்.
ஹரிகரன் சார் எங்களுக்கு 7 வது வகுப்பு கணித ஆசிரியராக இருந்தார். அவருக்கு இரு மகன்கள் இருந்தனர். என்னை அவருடைய மகளை போன்றே நேசித்தார். எங்கள் பகுதி குளிர் பிரதேசமாக இருந்ததால் எப்போதும் மழை அல்லது குளிர் இருந்து கொண்டே இருக்கும். நான் குளிருக்கு அணியும் ஸ்வறருடைனே பள்ளிக்கு தினம் செல்வேன். வெயில் அடித்தால் கூட எனக்கு குளிராகவே தெரியும். இப்படி சுகம் கேட்டால் வாழ்கையில் முன்னேற முடியாது என கூறி பிரம்பால் எனக்கு அடிவிழும். ஒரு முறை என் அம்மாவிடம் உங்கள் மகளை மலையாளிக்கு தான் மணம் முடித்து கொடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார். அந்த வருடம் எங்கள் பள்ளியின் நடந்த மாவட்ட அளவு போட்டியில் மோகினியாட்டம் என்ற நடனத்தில் பங்கு பெற்றிருந்தேன். என் நடன நிகழ்ச்சியை ரசித்து கைதட்டி உற்சாகபடுத்தினார். அடுத்த வருடம் 8 வகுப்புக்கு என நாங்கள் உயர்நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்த போது ஹரிகரன் சார் மஞ்சகாமாலை நோயால் இறந்து விட்டார் அதுவும் என்னுடைய பிறந்த நாளாக இருந்தது. என்னை ஒரு ஆசிரியர் என்பதையும் கடந்து பெற்றோரை விட நேசித்த என் ஆசிரியரின் நினைவு ஒவ்வொரு பிறந்த நாளும் என்னை தேடி வரும்.
இப்படியாக ஒவ்வொரு மரணமும் வேதனை மட்டுமல்ல வாழ்க்கையை பற்றி வேறு சில சிந்தனைகளையும் தந்தது.
18 Jan 2011
கல்லறைகளும் கதைக்கின்றது…………….
மரணம் என்பது பிறந்தால் வரும் என்பதால் அதை பற்றி ஒரு போதும் பயம் தோன்றியது கிடையாது. ஆனால் மனிதன் அழுகி புழுவாக மாறி கடைசியில் எலும்பு கூடு ஆவதை நினைத்தே பயம் வருகின்றது. இப்போது கூட அந்த பயம் இல்லாதில்லை. எலும்பு கூடுகளை பல ஆராய்ச்சி கூடங்களில் அந்தரங்கத்தில் தொங்கவிட்டிருப்பார்கள். கண்ணாடியில் ஒவ்வொரு முறை முகத்தை காணும் போது எலும்புகூடு முகம் பயம் முறுத்துகின்றது! வாழ்க்கைக்கு பல அர்த்தங்களை தருகின்றது!
என்னவரிடம் ஒரு முறை விளையாட்டாக என்பது போல் உண்மையாகவே சொன்னேன் "ஹிந்து சகோதரர்கள் இறந்தால் எரித்து சாம்பலாக்கி கடலில் நதியில் கரைக்கும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என. அவருக்கு கோபமே வந்து விட்டது. ஏன் சாவை பற்றி பேசி கொண்டிருக்கின்றாய் என அடிக்கவே வந்துவிட்டார். ஆனால் ஒரு முறை இறந்த மனிதனை எரிக்கும் போது அவ்வழி கடக்க நேரிட்டபோது அதன் புகை நெடி கொடியதாக தான் இருந்தது , மேலும் ஒரு வித பயத்தை கொடுத்தது. நதிக்கரைகள் மாசுபடவும் காரணமாகின்றதே என்ற கவலையும் இல்லாதில்லை. மயானங்களில் எரிக்கும் பிணங்கள் எழாதிருக்க கம்பு வைத்து அடிப்பதாக கேள்வி பட்டுள்ளேன். பிரதமர் நேருவை எரித்த போது கூட அவருடைய எலும்பு எழுந்ததாக கதைகள் உண்டு. மின் மயானங்கள் உள்ளதால் நகர்புறங்களிள் வசிக்கும் நபர்களுக்கு இறந்த பின்பும் அடி வாங்கும் கவலை இல்லை! (நொடியில் பொடியாக வந்து விடுவார்களாம்)
என்னவரிடம் ஒரு முறை விளையாட்டாக என்பது போல் உண்மையாகவே சொன்னேன் "ஹிந்து சகோதரர்கள் இறந்தால் எரித்து சாம்பலாக்கி கடலில் நதியில் கரைக்கும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என. அவருக்கு கோபமே வந்து விட்டது. ஏன் சாவை பற்றி பேசி கொண்டிருக்கின்றாய் என அடிக்கவே வந்துவிட்டார். ஆனால் ஒரு முறை இறந்த மனிதனை எரிக்கும் போது அவ்வழி கடக்க நேரிட்டபோது அதன் புகை நெடி கொடியதாக தான் இருந்தது , மேலும் ஒரு வித பயத்தை கொடுத்தது. நதிக்கரைகள் மாசுபடவும் காரணமாகின்றதே என்ற கவலையும் இல்லாதில்லை. மயானங்களில் எரிக்கும் பிணங்கள் எழாதிருக்க கம்பு வைத்து அடிப்பதாக கேள்வி பட்டுள்ளேன். பிரதமர் நேருவை எரித்த போது கூட அவருடைய எலும்பு எழுந்ததாக கதைகள் உண்டு. மின் மயானங்கள் உள்ளதால் நகர்புறங்களிள் வசிக்கும் நபர்களுக்கு இறந்த பின்பும் அடி வாங்கும் கவலை இல்லை! (நொடியில் பொடியாக வந்து விடுவார்களாம்)
நாங்கள் முதல் நிலை பள்ளியில் படிக்கும் போது இஸ்லாமியர்கள் இறந்தவர்களை புதைக்க எங்கள் பள்ளி அருகிலுள்ள வழியில் கொண்டு செல்லும் காட்சியை கண்டுள்ளோம். ஒரு பெரிய பெட்டியில் பச்சை துணியை கொண்டு மூடி " இலாஹிலாஹா இல் அல்லா" என்று பாடிகொண்டே செல்வது மரணத்துக்கு ரொம்ப கனம் உள்ளதாக தோன்றியுள்ளது.
ஹிந்துக்கள் மரண வீடு தான் பயங்கரமாக இருக்கும். அழாவிட்டால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தியாகாது என்பதால் அழுவதை ஒரு சடங்காக வைத்து நடத்துவார்கள். பெரியகுளம் கல்லூரியில் படிக்கும் போது ஒலிபெருக்கி வழியே அழும் ஒப்பாரி பாடல்களில் அர்த்தமுள்ள ரசனையான வரிகள் மற்றும் நல்ல ராகம் உள்ளதையும் காணலாம்.
நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்த போது மரணத்தை கொண்டாடும் ஒரு பொடியன் இருந்தான். அவனை, அவனுடைய பெற்றோர் சிறு வயதில் கேரளாவில் வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளார்கள். சில மோசமான நபர்களால் பாதிப்படைந்ததால் சிந்தனை செயல் ஒத்துபோகல் குறைவுள்ளவனாக இருந்தான். அவன் முகம் குழந்தை போல் இருந்தாலும் மயக்கு மருந்து போன்றவற்றின் பயன்பாட்டால் களையற்றே காணப்பட்டான். ஆனால் யாராவது இறந்து விட்டால் அடுத்த சில நாட்கள் மிகவும் உற்சாகமாக சிரித்தமுகத்துடன் காணப்படுவான். ஆடி பாடி இடுகாட்டுக்கு கொண்டு செல்வதை ரொம்ப அழகாக கதைப்பான். மரணத்தை பற்றி நினையும் போது அவன் நினைவுகளும் வந்து செல்வதுண்டு.
நம்பிக்கை "கடவுள் தந்தார் கடவுள் எடுத்து கொண்டார்" என்ற கிறிஸ்தவ கோட்பாடு உள்ளதால் மரண வீட்டில் அழுகையை யாரும் வரவேற்பதில்லை, இருப்பினும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இறந்த வீட்டில் சட்டத்தையும் மீறி அழுவதை காணலாம். பொதுவாக கிருஸ்தவ மரண வீடுகள், பிரத்தியேக மரண பக்தி பாடல்கள், ஜெபம் பின்புலனில் அன்று பயணிக்கும். வசதி வாய்ப்புள்ளவர்கள், படித்தவர்கள் வீட்டில் சிறிய சத்ததில் ஒலி நாடாவால் பாடலை ஒலிக்க விட்டிருப்பார்கள். ஆலய பாடல் குழுகூட அங்கு குழுமியிருந்து சோக பாடல்கள் பாடி கொண்டிருப்பார்கள்..
கன்னியாஸ்திரிகள் இறந்தால் அடக்கம் செய்யும் வரை பக்கத்தில் எரியும் மொழுகுவத்தி, கமகம எரியும் பத்தியுடன் பிரார்த்தனைகள் தச்சுக்கு என்பது ஒலித்து கொண்டே இருக்கும். இறந்த பின்பு ஆத்துமா 8 மணி நேரம் உணர்வுடன் இருக்கும் என்ற எண்ணம் இருப்பதால் இறந்தவர்களை மகிழ்வுடன் வழியனுப்பும் வழிதான்!
கேரளாவில் மரண வீட்டையும் விசேஷ வீடு போன்று வீடியோவில் பதிவு செய்வார்கள். பின்பு அதை எந்த மன நிலையில் பார்பார்கள் என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை பல குடும்பங்களில் வெளி நாடுகளில் உறவினர்கள் உள்ளதால் அனுப்பி கொடுக்க எடுக்கபடலாம்!
கேரளா ஹிந்து மக்கள் அவர்கள் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்தில் புதைக்கபடுவதையே பெருமையாக கருதுகின்றனர். மலையாளம்
நடிகர் முரளி
தன் கடைசி துகில் கொள்ள என அழகான அமைதியான இடம் தேர்வு செய்து வாங்கி வாழை, தென்னை நட்டு பராமரித்ததாகவும் அங்கே அவரை தகனம் செய்ததாகவும் ஊடகம் வழி நேரடி ஒளிபரப்பு செய்திருந்தனர். ஆனால் தமிழர்கள் புதைப்பதற்கென மரண பயம் பற்றி கொள்ளும் இடு காடுகள் தான் தேடுகின்றனர்.
நடிகர் முரளி
தன் கடைசி துகில் கொள்ள என அழகான அமைதியான இடம் தேர்வு செய்து வாங்கி வாழை, தென்னை நட்டு பராமரித்ததாகவும் அங்கே அவரை தகனம் செய்ததாகவும் ஊடகம் வழி நேரடி ஒளிபரப்பு செய்திருந்தனர். ஆனால் தமிழர்கள் புதைப்பதற்கென மரண பயம் பற்றி கொள்ளும் இடு காடுகள் தான் தேடுகின்றனர்.
பொதுவாக கிறிஸ்தவர்கள் இறந்தால் அடக்கம் பண்ண படுவது ஆலய வளாகத்திலுள்ள கல்லறை தோட்டத்தில் தான். கோவாவிலுள்ள கல்லறை தோட்டத்தின் அழகை கண்ட போது ஒருவருக்கு சாகுவதற்க்கு ஆசையாக இருந்ததாம். ஆனால் திருநெல்வேலி கல்லறை தோட்டத்தை காணும் போது சாகவே பயமாக உள்ளது! ஆலயவளாகத்தில் அல்லாது ஒதுக்குப்புறமாக களையற்று காணப்படுகின்றது.கிறிஸ்தவர்களுக்கு கல்லறை திருநாள் என்ற ஒரு நாள் உண்டு. கத்தோலிக்க சபையாருக்கு ஒரு சில மனிதர்கள், மரித்தவுடன் நேராக சொர்கமோ நரகமோ செல்வதில்லை என்றும் இடைபட்ட உத்திரிகிறிஸ்துஸ்தலம் என்ற இடத்தில் சென்றடையுவதாகவும் இவர்கள் சுத்திகரிக்கபட்ட (ஜெபத்தால்) பின்பே சொர்கம் சேருவதாகவும் ஒரு நம்பிக்கை இருப்பதால் வருடத்திற்க்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மரித்தவர்களை நினைத்து பிரார்த்தனை செலுத்துவது உண்டு. மேலும் உறவுகளுடன் உள்ள அன்பை வெளிப்படுத்தவும் இந்நாளை பயன்படுத்துவர். காடு பிடித்து கிடக்கும் கல்லறை மாடங்களில் செடி கொடிகளை வெட்டி வெள்ளையடித்து மெழுகு வத்தி பத்தவைத்து அழுத கண்களுடன் உருகி பிரார்த்தனை செய்வதை கண்டுள்ளேன்.
எனது அம்மாவின் தகப்பனார் மரிய செபாஸ்டியன் அவருடைய 31 வது வயதில் இருதய கோளாரால் திடிர் என இறந்து விட்டார். மயானத்திற்க்கு பெண்கள் செல்லாதிருப்பதால் பாட்டிக்கு எங்கு அடக்கம் செய்தனர் என தெரிந்திருக்க வில்லை. மேலும் பாட்டியின் திருமணம் காதல் திருமணம் என்பதால் தாத்தாவின் மரணம் அவருடைய குடும்பத்தாருக்கு பெரிய சம்பவமாக இருக்க வில்லை போலும். பாட்டி 16 வது நாளில் சென்ற போது பக்கத்தில் இன்னொரு கல்லைறையும் இருந்துள்ளது. பின்பு தாத்தாவின் உண்மையான குழி மாடம் ஏது என்பது பாட்டிக்கு தெரியாதே போய் விட்டது. அப்படி தாத்தாவுக்கு சொத்தில் மட்டுமல்ல கடைசியில் துகில் கொள்ளும் கல்லறை கூட சொந்தம் இல்லாதாகி விட்டது!
மலையாளத்து சகோதரர்கள் அவர்கள் முன்னோரை நினைத்து, அவர்கள் உயிரோடு இருக்கும் போது விரும்பி உண்ணும் உணவே நண்பர்களுக்கும் உறவுகாரர்களுக்கும் விருந்தாக தருவார்கள். ஆப்பம்- தாறா(வாத்து)கறி, பொரோட்டா- மாட்டு கறி குழம்பு ருசியாக சாப்பிட்டுள்ளோம். எனது அம்மா அவர்கள் பெரியப்பாவை எண்ணி ஒரு கைலி(லுங்கி), சட்டை, துண்டு, ஆட்டு கொழம்புடன் ஒருவருக்கு ஒரு நேர சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்..
1000 திற்க்கு மேற்பட்ட ஜனங்கள் உள்ள ஆலயமாக இருந்தும் எங்களுடைய வண்டிபெரியார் ஆலயத்தில் ஒரு அழகான ஆனால் மிக சிறிய கல்லறை தோட்டமே உள்ளது. கோயிலோடு சேர்ந்த காப்பி தோட்டத்தை பயன் படுத்த கூறியும் பாதிரியார்கள் செவி கொள்ளாது, மழை நேரம் அடித்தோடும் தண்ணிரில் எலும்புகளை குப்பை போன்று தள்ளி விட்டனர் என கூறி கொஞ்சம் மக்கள் வேறு சபை ஆலயம் தேடி சென்று விட்டனர். அதே போல் குழியில் இடம் இல்லாத போது மக்காத உடல்களை கல்லறை பக்கத்திலுள்ள ஒரு பெட்டி போன்ற சிமன்று தொட்டியில் இடுவதாகவும் சொல்லப்படுவது உண்டு. இதை துப்பு எடுக்க 'ஜெயிம்ஸ் பாண்டு 007' எங்கள் ஊரில் இன்னும் பிறக்காததால் தப்பி பிழைத்து போகின்றனர் எங்கள் ஆலய அதிகாரிகள்! கிறிஸ்தவர்கள் தாங்கள் கடைசி துயில் கொள்ளும் அவர்களுக்கு என 6 அடி சொந்த மண்ணுக்கு ஆயுசுக்கு பணம் செலுத்த வேண்டும் அல்லது செத்த பிறகும் உறவினர்கள் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்த இயலாத மக்கள் பாடு தான் அடித்து செல்லும் தண்ணீரும் சிமன்று பெட்டியுமாக இருக்கலாம்!
குதிரைக்கு கடிவான் என்பது போல் சபையின் மக்கள் மேலுள்ள ஒரு கடிவானமும் கல்லறை தோட்டம் தான். சில கிறுஸ்தவர்கள் கல்லறைக்காகவே கோயிலுக்கு வருடத்திற்க்கு ஒரு முறையாவது சென்று காணிக்கை கொடுத்து வருவார்கள். ரொம்ப கேள்வி கேட்கும், மாற்று கருத்துள்ள, தற்கொலை செய்து கொள்ளும் கிருஸ்தவர்களுக்கு என தெம்மாடி குழியும் (கெட்டவர்கள் குழிமாடம்) உண்டு. கம்னிஸ்டுகள் மற்றும் சில முற்போக்கு கிருஸ்தவர்களின் எதிர்ப்பால் தெம்மாடி குழி என ஒன்று கடைபிடிக்கா விட்டாலும் தற்கொலை செய்தவர்களின் அடக்கம் பாதிரியாரின் தலைமையில் பிரார்த்தனையுடன் நடை பெற சட்டம் அனுமதிப்பது இல்லை.
கல்லறை என்ற பெயரில் வெறும் காங்கிரீட் மேடையுடன் காணப்படுவதை விட ஒரு குழிக்கும் ஒரு மரத்தை வைத்து தோப்பாக மாற்றினால் சுற்றுப் புறம் மட்டுமல்ல காணும் மனங்களுக்கும் ஆறுதலாக இருக்கும். வாழ்வே இடம் இல்லாத சூழலில் மரித்தவர்களுக்கு என இடத்தை பராமரிக்கும் போது சில பொது நன்மைகளையும் மனதில் கொண்டு கல்லறைகளை அழகாக
பேண முன் வர வேண்டும். தற்போது 18, 19. நூற்றாண்டு கல்லைரை போல் அழகுணர்வுடன் கல்லறைகள் கட்டபடுவதும் கிடையாது.
பேண முன் வர வேண்டும். தற்போது 18, 19. நூற்றாண்டு கல்லைரை போல் அழகுணர்வுடன் கல்லறைகள் கட்டபடுவதும் கிடையாது.
சமீபத்தில், சீர் திருத்த கிருஸ்தவர்கள் குடியயேறிய முதல் ஊரான "முதலூருக்கு" சென்றிருந்தோம். 18 நூற்றாண்டிலுள்ள கல்லறைகள் கலை நயத்துடன் கட்டிபட்டிருந்தது, அவர்களை பற்றிய கதைகள் கல்லறைகள் சொல்லியது. மரிப்பவர் ஒரு பாடகராக இருந்தால் அவர் கல்லறை மேல் பாட்டு உபகரணங்கள் போன்ற சிற்பங்கள் வைக்க பட்டிருக்கும். அவர்கள் காலத்திலுள்ள தமிழ் எழுத்துக்களில் அவர்கள் பிறப்பு இறப்பு அவர்களை பற்றி எழுதியவை எல்லாம் இன்று பராமரிபற்று அழிந்துகொண்டிருக்கின்றது. பல மிஷனரிகளின் குழந்தைகள் கல்லறை (இங்குள்ள இயற்கை சீற்றத்தாலும் மற்றும் தொற்று நோயால் இறந்த போது) சிறிய தேவதைகளின் சிற்பங்களுடன் அழகாக வடிவமைத்திருந்தனர். மேலும் கிருஸ்தவ சபையில் பதவியில் இருந்த நபர்களின் கல்லறைகள் அழகாக பராமரிக்கபடுகின்றது மட்டுமல்ல ஆலயத்திற்க்குள் கூட குடி கொள்கின்றது.
சிலருடைய கல்லைறைகள் அவர்கள் உயிரோடு பெறபட்டதை விட அதிகம் மதிப்பு பெறுவதாகவும் நாம் கண்டுள்ளோம். பல ஆயிரம் மக்கள் 50 சென்றுக்குள் ஒரே அடுக்குமாடியில் குடியிருக்க வேண்டிவரும்போது ஒரு மனிதனின் கல்லறைக்கு என ஏக்கர் கணக்கு இடம் இருப்பதும் சிந்திக்க தான் வைக்கின்றது. கல்லறையிலும் பதவிக்கும் பணத்திற்க்கும் மதிப்பு கொஞ்சம் அதிகம் தான் போல!!!!
(புகைப்படங்களாக பதிவு செய்தாலும் எனது துறையிலுள்ள கல்லறையின் மேல் கோபமுள்ள ஒருவரால்அழிக்க பட்டதால் மேலும் அவ்விடத்திற்க்கு செல்லும் சூழல் அமையாததாலும் புகைப்படங்களை பகிரை இயலாததில் கவலையாகவே உள்ளேன். கூடி விரைவில் படங்களுடன் வருகின்றேன்.)
15 Jan 2011
விபத்து யாரால்? சவாலான சபரிமலை பயணம்!
துயரான நாளாகி விட்டது ! எனது பிறந்த ஊர் வண்டிபெரியார் அருகில் நடந்த மிக கொடுமையான விபத்து செய்தியே அது. இன்று இரவு 8.30 மணிக்கு நடந்துள்ளது,100 பேருக்கு மேல் இறந்ததாகவும் அறிவித்துள்ளனர். ஒரு ஜீப் ஆட்கள் கூட்டத்தில் புகுந்ததால் மக்கள் நெரிசலில் சிக்கி இறந்ததாகவும் கூறியுள்ளனர்.
ஐயப்பா சாமிமார் சீசன் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் எங்கள் பகுதி மக்களுக்கு. அங்கு வசிக்கும் மக்கள் ஒரு எதிர் பார்ப்புடனே ஒவ்வொரு வருடவும் எதிர்நோக்கி காத்திருப்போம் இச்சீஸனை. ஏன் என்றால் எங்கள் பகுதி மக்கள் பல விதத்தில் வருமானம் தருவது தான்! எங்கள் பகுதி மலை பிரதேசம் என்பதால் எப்போதும் ஆள் அரவம் அற்றே இருக்கும். மூணார் போன்று உல்லாச பயணிகளின் சொர்கபுரியாகவும் விளம்பரம் பெற்று இருந்ததில்லை. சில வெள்ளகாரர்கள் மட்டுமே எங்கள் பிரதேசத்திற்க்கு வருவர். அருகில் இருக்கும் தமிழகம் சேர்ந்த பயணிகள் கூட தேக்கடி வரை வந்து விட்டு திரும்பி விடுவர்.
சபரிமலை பயனம் மேற்கொள்ளும் போது எருமேலி வழியை தேர்வு செய்யாத சாமியார்கள் தான் எங்கள் பகுதியே தேர்வு செய்வர் தங்கள் பயணத்திற்கு என . உணவில் இருந்து தலைக்கு தேய்க்கும் எண்ணை, சோப்பு அவர்கள் விரும்பும் குருமிளகு, தேயிலை, ஏலகாய் விற்கும் கடைகள் இந்த சீசனில் காளான் செடிபோல் முளைத்து வரும். இதிலும் 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் ஜீப் ஜீப் என கூவி அழைத்து பயணிகளை ஏற்றி செல்லும் சாரதிகள் சாமிமார் சீஸனில் கொண்டாட்டம் தான். ஒரு ஜீப்புள்ளவன் 2 ஜீப் வாங்கும் அளவுக்கு சம்பாதித்து விடுவார்கள். அதுவரை விற்ற பொருட்கள் எல்லாம் பதின் மடங்கு லாபத்தில் விற்பனை நடத்து கொண்டு இருக்கும். , பக்தி என குமியும் தமிழகம், ஆந்திரா, கர்னாடகா சாமிகள் எங்கள் பொருள் வாங்க வந்த வாடிக்கையாளர்களாகவே தெரிவார்கள் எங்கள் பகுதி மக்களுக்கு!
எல்லா வருடமும் ஒரு சாமியாராவது எங்கள் பெரியார் நதியால் காவு வாங்கபடுவார். அழகான நதியில் குளிக்க இறங்கும் சாமிகள் வெளியூர் என்பதால் தண்ணீரிலுள்ள சுழியை தெரிந்து கொள்ள தவறி விடுவர். உள்ளூர் மக்கள் நதியில் முனி இருப்பதாகவும் காலைபிடித்து இழுத்து ஆழத்திற்கு இழுத்து விடுவதாகவும் கதைப்பதை கேட்டுள்ளோம்.
இருப்பினும் இன்று வரை இது போல் கொடூரமான விபத்து நிகழ்ந்ததாக கேள்வி பட்டதில்லை . ஒரு முறை தமிழக சாமிமார் வந்து திரும்பிய பேருந்து குமளிக்கும் லோயர்கேம்புக்கும் இடையிலுள்ள பாதாளத்தில் விழுந்து பேருந்தில் இருந்த பெரும் பகுதி சாமியார்கள் இறந்துள்ளனர். அதே போல் ஒரு முறை பக்தர்களின் காணிக்கையான தேங்காய்-நெய் கொண்டு எரியும் தீயில் விழுந்து சில பக்தர்கள் மரணத்தை சென்றடைந்துள்ளனர்.
இருப்பினும் இன்று வரை இது போல் கொடூரமான விபத்து நிகழ்ந்ததாக கேள்வி பட்டதில்லை . ஒரு முறை தமிழக சாமிமார் வந்து திரும்பிய பேருந்து குமளிக்கும் லோயர்கேம்புக்கும் இடையிலுள்ள பாதாளத்தில் விழுந்து பேருந்தில் இருந்த பெரும் பகுதி சாமியார்கள் இறந்துள்ளனர். அதே போல் ஒரு முறை பக்தர்களின் காணிக்கையான தேங்காய்-நெய் கொண்டு எரியும் தீயில் விழுந்து சில பக்தர்கள் மரணத்தை சென்றடைந்துள்ளனர்.
இன்று விபத்து நடந்த பகுதி மின் விளக்குகள் இல்லாததும், தற்காப்பு வசதியற்ற, சிறப்பாக காவல்துறை உதவி அற்ற பகுதியாகவே இருந்துள்ளது. இதிலும் எடுத்துகொள்ள படவேண்டியது மகர ஜோதிக்கென 2 லட்சம் சாமியார்கள் சங்கமித்திருக்கும் இடத்தில் ஒரு ஆம்புலன்ஸ் தான் இருந்துள்ள தாம்? பொதுவாக எங்கள் பகுதியின் தரமான மருத்துவ வசதி கூட இல்லை. எப்போதும் 3 மணிநேரம் பயணம் சென்று கோட்டயம் என்ற பட்டணத்தை நோக்கியே செல்ல வேண்டியுள்ளது. மேலும் நெளிவும் குறுகலுமான ரோடு வழியுள்ள பயணம் எப்போதும் சவாலானதே!
கடந்த ஒரு மாதமாக கேரளா ஊடகம் ஏஷிய நெட், அமிர்தா தொலைகாட்சிகள் போன்றவை ரோட்டின் நிலைபற்றியும் , சாமியார்களுக்கு செய்து கொடுக்கப்படவேண்டிய வசதிகளின் குறைபாடுகளை பற்றியும் கதறி சொல்லிகொண்டு தான் இருந்தனர். இருந்தும் தேவையான பாதுகாப்பு வசதி கொடுக்காது கேரளா அரசு பல உயிர்களை பறித்து விட்டது. கேரளா அரசு வாய் சவுடாலில் முந்தும் அளவுக்கு செயலில் இல்லை என்பதே இது மறுபடியும் எடுத்து காட்டுகின்றது.
தேவஸியம் போர்டு என்ற குழு தான் சபரிமலை பயணிகளுக்கு வேண்டிய வசதி செய்து கொடுக்க அரசால் நிறுவபட்ட சட்டபூர்வமான குழு. இவர்கள் சாமிகளுக்கு விற்கும் நைவேதியத்தில் இருந்தே ஊழலில் முங்கி நீச்சல் அடிப்பதை கடந்த சில நாட்களாக ஊடகம் சொல்லி கொண்டே தான் இருந்தது தமிழக ஊடகம் போல் அல்லாது ஆக்கபூர்வமான கருத்துரையாடல்கள் கொண்ட கேரளா ஊடகம், சாமிமார்கள் சிறப்பாக வெளிமாநில பக்தர்கள் எதிர் கொள்ளும் துயரம் பற்றி சொல்லி கொண்டே இருந்தும் அரசின் மெத்தன போக்கால் இவ்வளவு பெரிய விபத்துக்கு தளம் அமைத்து கொடுத்து விட்டனர் என எண்ணும் போது அரசின் கையாலக தன்மையை எண்ணி சினம் கொள்ளாது வேறு வழியில்லை.
கேரளாகாரர்கள் அறிவாளிகள் பழக இனிமையானவர்கள் பார்க்க அழகானவர்கள் என பல சிறப்பு இருந்தாலும் அவர்கள் மட்டும் கடவுளின் தேசத்தின் பிள்ளைகள் என்ற ஒரு அகங்காரவும் உண்டு. மற்றவர்களின் துன்பத்தை கூட ஏதாவது தத்துவம் பேசி மழுப்பி விடுவார்கள்.
பூமி பந்தில் சிறப்பான, ஏன் கடவுள் அருகாமையுள்ள இடமாக சபரிமலை இருக்கலாம். ஒரு சீஸனில் மட்டும் 133 கோடி ரூபாய் லாபம் இட்டும் தலமாக உயர்ந்துள்ளது. ஆனால் பக்தி என்ற பெயரில் ‘மகரஜோதி’ என்ற பெயரில் செய்யும் தில்லு முல்லு கணக்கில் எடுக்க தவறுகின்றனர் ! நான் பள்ளியில் 7 வது வகுப்பு படிக்கு வேளையில் காங்கிரஸ் ஆட்சி நாட்களில் கம்னிஸ்டுகள், ஊடகவியாளர்களையும் அழைத்து சென்று மகர ஜோதி என்ற மகா சம்பவத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தியுருந்தனர். தற்போது கேரளாவின் வருமானத்திற்க்கு பெரும் பங்கு இது சார்ந்த நம்பிக்கை வகிப்பதால் சிலவற்றை "கண்ணை மூடி பூனை பால் குடிப்பதுபோல்" இருந்து கொள்கின்றனர். பொதிகை தொலைகாட்சியில் உயிரைவிடுத்து தற்சமய ஒளிபரப்பில் சிலர் உணர்ச்சி வசபடுவதை காணும் போது அழுவதா சிரிப்பதா நாம் அறியாது நிற்கும் சூழலுக்கு தள்ளபடுகின்றோம். பக்தி சம்பந்தமான கருத்துக்கள் மற்றோர் மனதை பெரிதும் துன்பப்படுத்திவிடும் என எண்ணும் போது துணிவாக சில சம்பவங்களை சொல்லவும் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும் நம் பாதுகாப்பு நம் கையில் மட்டும் அல்ல என உணரும் போது சில தற்காப்புக்கள் பக்த பயணம் மேற்கொள்ளுபவர்கள் எடுத்தல் நலமாக இருக்கும்.
மகரஜோதி அன்றே அங்கு இருக்க வேண்டும் என பிடிவாதம் கொள்ளாது கடவுளுக்கு உகுந்த விதத்தில் பக்தியான பயணமாக மேற்கொள்ள பக்தர்கள் முன் வர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையின் மேலுள்ள பயணம், உலகில் உயரமான பிரதேசங்களின் மேலுள்ள பயணம் சுத்தமான காற்று, வெள்ளம், வனமத்தியிலுள்ள பயணம் என எல்லா விதத்திலும் ரசிச்சு மேற்கொள்ளும் பயணம் இனிதாகவும் முடிய வேண்டும்.
ஐய்யப்ப ஆலய தலைமை குருக்கள் சினிமா நடிகை ஜெயமாலாவுடன் சேர்ந்து அடித்த கோமாளி கூத்து நாம் தெரிந்தே. இந்த விபத்து சோகம் கூட பலரில் பல விதமாக பிரதிபலிப்பதை நாம் காண உள்ளோம். பழுத்த பக்கதர்கள் என சொல்லி கொள்பவர்கள் ஐய்யப்பா சாமிக்கு பிடிக்காத பெண்கள் வந்தது அல்லது அவருக்கு பிடித்தமான காடுகளை அழித்து சிமின்று கட்டிடம் கட்டியது என சொல்ல போகிறார்கள். கடவுள் இல்லை என கூறுபவர்கள் ஒரு படி மேலை போய் ஐய்யப்பனிடமே கேள்வி வைப்பார்கள். எதிர் கட்சியோ, ஆளும் கட்சியின் அசட்டுதனம் நாங்க இருந்தா எல்லாம் நல்லபடி சென்றிருக்கும் என கதை விடுவார்கள். பாதிக்க பட்ட குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு தாயும், மனைவியும், பெற்றோரும், குழந்தைகள் கடைசியாக தான் தெரிவார்கள் என்பதே துர்பாக்கியமான உண்மை!!!!
Subscribe to:
Posts (Atom)